கடன் என்னும் சூரிய கதிர்களை கண்டு கண் விழித்து ,
வயல் என்னும் ஒற்றைசொல்லை உணவாக்கி ,
வியர்வை என்னும் நீரில் நீராடி,
பசி என்னும் கனவு போர்வைக்குள் புகுந்து கொள்ளும் விவசாயியே ,
நீ கடவுளுக்கு சமம்,
காடும் மேடும் நிலமாக்கி,
வெயிலும் பசியும் சொர்கமே என்று நினைத்து ,
ஏரும் தன் குழந்தைகளில் ஒன்றாக நினைத்து,
நீ விதைக்கும் ஒவ்வொரு நெல் கதிரும் இறைவனுக்கே சமம்,
ஆனால் அந்த கடவுளுக்கு கூட உன் கஷ்டம் புரியவில்லை,
தண்ணீர் என்னும் பொக்கிஷத்தை உனக்கு கொடுக்காமல்,
எவன் வீட்டு குழாயிலோ தருகிறான்,
வீடு தேடி வருபவனுக்கு பசி ஆற்றும் உன்னை,
பசியோடு நடு வீதியில் மறியல் செய்ய வைத்தது எவனோ?
நிர்வாணம் என்னும் ஒற்றை சொல்லை கொடுமையாய் நினைக்கும் நமது
சமுதாயம்,
சோறு போடும் கடவுளை அரைநிர்வாணமாக வீதியில் படுக்க வைத்து
ஏனோ?
நீ நடும் நெல் கதிர்கள் கூட வாடிவிட கூடாதென
நினைக்கும் நீ,
உன்னையே மரித்து கொள்வது ஏனோ ?
நீ தரும் அரிசியில் கூட கலப்படம் இல்லை,
ஆனால் கலப்படம் மிஞ்சிய நஞ்சை உண்டு
உன் வாழ்க்கையை மரித்து கொள்வது யாருக்காக?
எங்கோ நீ போடும் பிச்சையை உண்டு சோம்பல் முறித்து உன்னையே
மட்டம் தட்டுகிறான் ஒருவன்,
அதைக் கண்டு நொந்து செத்து போகிறான் இன்னொருத்தன் ,
ஆட்சி என்னும் மிருகத்தை நீ கையில் ஏந்தி நீ செய்யும் அராஜகம்,
நீ உன் அம்மாவை பிணமாக்குவதற்கு சமம்,[/color]
முட்டாள் மானிடனே மறவாதே,
நீ இப்போது விவசாயம் என்னும் சொர்க்கத்தை காக்கா விடில்,
உன் தலைமுறை குப்பையைத்தான் உணவாக்கி கொள்ளவேண்டும்,
இதை ஏற்க மறுக்கும் முட்டாள் மனிதனே ,
விழித்தெழுக ,விவசாயி என்னும் பொக்கிஷத்தை வாழவை,
விவசாயம் என்னும் கவிதையை நீ எழுதாமல் இருந்தால்,
விரைவில் இவ்வுலகம் சுடுகாடாகி விடும்,
மறவாதே !!!!