என்னவனே....
மாலை கதிரவன் மறையும் வேளையில்..
சில்லென வீசும் தென்றலில்..
அழகிய மணல் பரப்பில்..
அமர்ந்து நாம் அலைகளை ரசித்தோம்...
என் விரல் கோர்த்து பிடித்து..
நீ உதிர்த்த வார்த்தைகள்..
ஓயாத இந்த அலைகளை போல..
நம் காதலும் ஓய போவதில்லை...
வாழ்நாள் எல்லாம் என்றாய்..
இன்று கை கோர்த்து நடக்கும்..
காதல் ஜோடிகளைய் பார்த்து கொண்டு..
ஓயாத அலைகளையும் ரசித்து கொண்டு..
நான் தனிமையில்....
அலைகள் மட்டும் அல்ல..
இன்று வரை எனக்குள் இருக்கும்..
உன் நினைவுகளும் ஓயவில்லை...
உன் வரவை எண்ணி..
காத்துக்கொண்டிருக்கும்..
உன்னவளின் இதயம்...
உனக்காய்......
Deepali