வணக்கம் சகோ ...
சற்று வலிகள் நிறைந்த
அழகான கவிதை ...
வாழ்க்கையில் மறுக்கவும் மறக்கவும்
இயலாத விஷயங்களில் முதல் காதலும்
ஒன்று ...
வரிகள் அனைத்தும் அருமை ...
''வாழ்க்கையில் அனுபவம் ஆயிரம்
கற்றுத் தந்தாலும்
முற்றுப்புள்ளி இல்லாமல்
கேள்விகள் மட்டும்
மனதிற்குள் ஏராளம்...''
வாழ்க்கையில் அனுபவம்
பல பாடங்கள் கற்று தந்தாலும் ...
இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களாகவே
இருந்து மீண்டும் கேள்விகள்
மட்டுமே எழுகிறது ...
முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்தால்
அடுத்த கேள்வி தோன்றுவதற்கோ ...
பதில் கொடுப்பதற்கோ ..நாம் இருப்போமா
என்பது சந்தேகமே ...மனிதனின் வாழ்க்கை
கேள்விகள் நிறைந்ததுதான் ...
மன்னிக்கவும் தங்களின் இந்த வரிகள்
காதலை மட்டுமின்றி
வாழ்க்கையின் பயணத்தையும்
சேர்த்து சிந்திக்க வைத்தது ...
தோன்றிய எண்ணத்தைப்
பகிர்த்தேன் ..தவறுகள் இருந்தால்
மன்னிக்கவும் ....
அழகான கவிதை ..
தொடரட்டும் கவிப்பயணம் ...
வாழ்த்துக்கள் ...
நன்றி !!!