FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on December 03, 2019, 02:24:03 AM
-
காலம் உன் கையில் இல்லை
ஆறாத காயங்கள் யாதும் இல்லை
மீளாத துயரங்கள் எதுவும் இல்லை
மீட்டினால் இசைக்காத வீணை இல்லை
தாலாட்டு பாடாத தாயுமில்லை
காலையில் கூவாத குயிலும் இல்லை
தொலைந்த கணங்கள் மீள்வதில்லை
நிழல்களை நிஜங்கள் தொடர்வதில்லை
சோதனையில் வீழாத மானிடர்கள்
சாதனைகள் எதுவும் படைப்பதில்லை
சங்கடங்கள் கண்டு விலகி நின்றால்
சன்மார்க்கம் என்றுமே புரிவதில்லை
ஒரு கரம் நீட்டி ஈகை செய்தால்
இரு கரம் கூப்பி தொழ தேவையில்லை
வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொண்டால்
வாழ்க்கையில் என்றுமே துன்பம் இல்லை
-
[ yES Sweety all the probloms are temporary ..not permanent
[/]