FTC Forum
தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Global Angel on November 07, 2012, 04:59:12 AM
-
Movie name: அடிமைப்பெண்
Music:
Singer(s): டி.எம்.எஸ்
Lyrics:
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்
தாயில்லாமல் நானில்லை
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
தாயில்லாமல் நானில்லை
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்
தாயில்லாமல் நானில்லை
ஆதி அந்தமும் அவள்தான்
நம்மை ஆளும் நீதியும் அவள்தான்
அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்...
-
Movie name: ராம்
Music: யுவன் ஷங்கர் ராஜா
Singer(s): கே.ஜே.யேசுதாஸ்
Lyrics: சிநேகன்
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே
(ஆராரிராரோ )
வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்
( ஆராரிராரோ )
தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில்
மேலே சுழலாத பூமி நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற...
-
Movie name: தளபதி (1991)
Music: இளையராஜா
Singer(s): S.ஜானகி
Lyrics: வாலி
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் வேண்டாம் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே...
-
Movie name: என்ன பெத்த ராசா
Music: இளையராஜா
Singer(s): இளையராஜா
Lyrics:
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா
தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்
வேறுங்கைய வீசிக்கொண்டு
விறகு சுமந்து வித்து
இரவா பகல்ல தினம் தினம் உளைச்சதும்
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிட்துத்தந்ததும்
பசியெ தெரியா மகனா வளத்ததும்
எத்தன தாயுங்க நம்ம தமிழ் நாட்டிலெ
என் தாயும் அவளப்போல் யாரு இந்த ஊரிலெ
தியாகி யாரு தியாகி யாரும் இல்ல போடா
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா
அவதன் கோயில் அவதன் உலகம் - பெத்த மனசு
மண்ணில் வரும் செடிகொடிகள்
எவளவு வகைகள் தான்
மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒன்றே தான்
பலவித ம்மரங்கள் என்ன மரத்தில் பழங்கள் என்ன
நிறத்தில் ருசியில் ஒவ் ஒன்ரும் வேறதான்
பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா
காயாய் இருப்பதல் கொய்ய கசக்குமா
நல்ல வயிற்றில் பிறந்தா நல்லவனே தாண்டா
கெட்டது செய்ய மாட்டான் வல்லவனெ தாண்டா
அவனே மனிதன் அதை நீ உணரு
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா
தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்...
-
Movie name: நியூ
Music: AR ரஹ்மான்
Singer(s): உன்னி கிருஷ்ணன் , சாதனா சர்கம்
Lyrics: வாலி
காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கைதொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா
அம்மா.....
இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதைவிட
வானம் பூமி யாவும் சிறியது
(காலையில்)
நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள்மீது தூங்கடி கண்மணி கண்மணி
(காலையில்)
ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலைப் போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலேலோ
அதிசய பூவே தாலோ பொன்மணி தாலேலோ
நிலவே நிஜத்தில் இறங்கி
உனை கொஞ்ச எண்ணுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட...
-
Movie name: வியாபாரி
Music: தேவா
Singer(s): ஹரிஹரன்
Lyrics:
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா?
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..
(ஆசைப்பட்ட..)
பட்டினியா கிடைந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி தீர்ப்பா
இளவட்டம் ஆட பின்னும் எண்ணை தேச்சி குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை உச்சி கோதி மகிழ்ட்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவை பிடிக்க வைப்பா
பிஞ்சி விரல் நகம் கடிப்பா
பிள்ளை எச்சில் சோறு தின்பா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..
மண்ணில் ஒரு செடி முளைச்சா
மண்ணுக்கு அது பிரசவம்தான்
உன்னை பெற துடி துடிச்சா
அன்னைக்கு பூகம்பம்தான்
சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா
பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா
கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பெத்தை போல் அவள் இருப்பா மெத்தையாய் உன்னை வளர்ப்பா
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு...
-
Movie name: பாட்டுக்கு னான் அடிமை
Music: இளையராஜா
Singer(s): மனோ
Lyrics: கங்கை அமரன்
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு – நம்
தாய் போலே இங்கு வேறாரு
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
ஆவாரங் காடெல்லாம் நீரோடும் தோப்பெல்லாம்
யாராரு வேலை செய்வதாரு
பூவாரம் கேட்டானா பொன்னாரம் கேட்டானா
சோறுக்கு வேண்டி நிக்கும் பேரு
பொன் மின்ன வெள்ளி மின்ன வைரங்கள் மின்ன
தொழிலாளி கைகள் படத்தான் வேண்டும்
தாய் உண்ண சேய்யும் உண்ண நாமென்றும் உண்ண
விவசாயி தான் உழைக்க வேண்டும்
ஏழை அவர் பாடு அது காற்றோடு போயாச்சு
ஏரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு
சோற்கேட்டு போவானே அவன் பாடும் பாட்டு
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை….
நாடாலும் பேரென்ன மாடோட்டும் பேரென்ன
யாராரு உன்னை பெத்ததாரு
விஞ்ஞானி ஆனாலும் மெஞ்ஞானி ஆனாலும்
தாய்தானே பெத்து போட்டா கூறு
பகலென்ன இரவும் என்ன என்றென்றும் இங்கே
ஆணுக்கு பெண்ணின் துணை வேணும்
வெயிலென்ன மழையும் என்ன காலங்கள் தோறும்
அன்புக்கு தாயும் இங்கு வேணும்
தாய்தான் படும் பாடு அதை உணர்வாயே கண்மணி
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு – நம்
தாய் போலே இங்கு வேறாரு...
-
Movie name: அரண்மனை கிளி
Music: இளையராஜா
Singer(s): இளையராஜா
Lyrics:
என் தாய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே
என் தாய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே
என்னை தொட்டாலும் பார்த்தாலும்
தோஷமடி கிளியே
எனக்கு ஏழேழு ஜென்மத்திலும்
மோட்சமில்லை கிளியே
என் தாய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே………..
புத்திமதி சொல்லையிலே
தட்டிச் சென்ற பாவியடி….
விட்டுவிட்டு போன பின்னே
வேகுது என் ஆவியடி…..
புத்திமதி சொல்லையிலே
தட்டிச் சென்ற பாவியடி….
விட்டுவிட்டு போன பின்னே
வேகுது என் ஆவியடி…..
ஓடோடி பாடுபட்டேன்
நாளெல்லாம் யார் யாருக்கோ
சேராமல் போனதடி
சேர்த்தது தாய் யாருக்கோ
பெத்த மனம்
என்னவென்று தோணலையே
போகையிலே
சொல்லிவிட்டு போகலையே
இனி ஆற்றிடவும்
தேற்றிடவும் அன்னை போல யாரு
என் தாய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே………..
தன் வயிறை பட்டினி போட்டு
என் உயிர வளர்த்தவளே……
தன்னந்தனியா இருந்து
என்னை கரை சேர்த்தவளே……
தன் வயிறை பட்டினி போட்டு
என் உயிர வளர்த்தவளே
தன்னந்தனியா இருந்து
என்னை கரை சேர்த்தவளே
நோயாலே நான் படுத்தா
நோன்பிருக்கும் ஆத்தா
தீமுண்டு தீர்ந்திடுமா
நம் கணக்கு ஆத்தா
பெத்தவள தள்ளி வச்ச பாவத்துக்கே
பக்கம் வந்து கொல்லி வைக்க கூடலையே
என்னை ஆற்றிடவும்
தேற்றிடவும் அன்னை போல யாரு
என் தாய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே
என்னை தொட்டாலும் பார்த்தாலும்
தோஷமடி கிளியே
எனக்கு ஏழேழு ஜென்மத்திலும்
மோட்சமில்லை கிளியே...
-
Movie name: M குமரன் S/O மகாலெட்சுமி
Music: ஸ்ரீகாந்த் தேவா
Singer(s): கே கே
Lyrics:
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
ஏப்ரல் மே வெயிலும் நீயே
ஜூன் ஜூலை தென்றலும் நீயே
ஐ லைக் யூ
செப்டம்பர் வான் மழை நீயே
அக்டோபர் வாடையும் நீயே
ஐ தேங்க் யூ
உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க
You are the love of my life and my dreams forever
You are the love of my life and my dreams forever
என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நீ கொஞ்சும் வண்ணக் குயில் நாந்தானே
நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட
One அ Two அ Three அ Four அ
வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறௌ என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு...
-
Movie name: தாய்க்கு ஒரு தாலாட்டு
Music: இளையராஜா
Singer(s): கே.வி.யேசுதாஸ்
Lyrics: வைரமுத்து
ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா
ஆராரிரோ பாடியதாரோ யாரோ….
நீ முந்தி போனது நியாயம் இல்லையே
நான் முந்தி போகவே யோகம் இல்லையே
கூண்டை விட்டு தாய் கிளி பறந்ததிங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே
என் தேவியே நானும் செய்த குற்றம் என்ன கூறு
ஒரு பார்வை பாரு
—
ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
பொழுதாகி போனதே இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது தாயே நியாயமா
உயிர் தந்த தேவிக்கு உயிரில்லையோ
பாலூட்டி பார்த்தியே பாலூற்றலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு அரிசி போட வந்தேன்
எனை நானே நொந்தேன்
ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா
ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ...
-
Movie name: அடிமைப்பெண்
Music: கே.வி.மகாதேவன்
Singer(s): ஜெயலலிதா
Lyrics: வாலி
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
அன்னையைப் பிள்ளை பிள்ளையை அன்னை
அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்னையைப் பிள்ளை பிள்ளையை அன்னை
அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
பத்துத் திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை
பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்துத் திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை
பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்தியமிருந்துக் காப்பாள் தன்
ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுப்பாள்
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம்
பொதுவாய் வைத்திட வேண்டும்
இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம்
பொதுவாய் வைத்திட வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்
ஒருவருக்காக மழையில்லை
ஒருவருக்காக நிலவில்லை
ஒருவருக்காக மழையில்லை
ஒருவருக்காக நிலவில்லை
வருவதெல்லாம் அனைவருக்கும்
வகுத்தே வைத்தால் வழக்கில்லை
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு
விழிகள் ஆகும் என்று
மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு
விழிகள் ஆகும் என்று
உணரும் போது உனக்கும் எனக்கும்
நன்மை என்றும் உண்டு
உணரும் போது உனக்கும் எனக்கும்
நன்மை என்றும் உண்டு
வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும்
வகுத்து வைப்பது பாவம்
வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும்
வகுத்து வைப்பது பாவம்
கருணை கொண்ட மனிதரெல்லாம்
கடவுள் வடிவம் ஆகும்
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்...
-
Movie name: அன்னை ஒரு ஆலயம்
Music: இளையராஜா
Singer(s): TM.சௌந்தரராஜன்
Lyrics: வாலி
அம்மா....
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
அன்னை சொன்ன வார்தய் என்
நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வழியில் வந்தது
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
மீண்டும் இந்த மண்ணில் வந்து
தொன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த வேண்டுமே
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்...
-
Movie name: உழைப்பாளி
Music: இளையராஜா
Singer(s): எஸ். பி.பாலசுப்ரமணியம்
Lyrics: வாலி
அம்மா அம்மா...
எந்தன் ஆருயிரே....
கண்ணின் மணியே...
தெய்வம் நீயே...
ஓ....ஓ....ஓ...ஓ..
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே-இரு
கண்ணின் மணியே
ஓ...ஓ....ஓ...ஓ...
தெய்வம் நீயே
ஓ...ஓ...ஓ...ஓ...
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே
பூவிழி ஓரம் ஓர் துளி நீரும்
நீ வடித்தால் மனம் தாங்காது
பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும்
நான் துடிப்பேன் வலி தாளாது
பத்து மாசம் சுமந்து-பட்ட
பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க-அள்ளிக்
கையில் எடுத்த
தாயும் நீயே...
தவமிருந்தாயே...
வாடுதம்மா பிள்ளையே.......
வாட்டுவதோ.. என்னை நீ..யே.!
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே
பாதைகள் மாறி ஓடிய கன்றை
தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா
கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால்
தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா
நல்ல காலம் பிறக்க-உன்னை
நானும் அறிந்தேன்
உந்தன் கண்கள் திறக்க-இங்கு
பாடல் படித்தேன்
போதும் போதும்...
பிரிந்தது போதும்....
வாடுதம்மா பிள்ளையே...
வாட்டுவதோ என்னை நீ..யே...
-
Movie name: மன்னன் (1992)
Music: இளையராஜா
Singer(s): கே. ஜே. ஜேசுதாஸ்
Lyrics: வாலி
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...
-
அம்மா அம்மா ஆசை அம்மா
நன்றி சொல்ல ஒரு வார்த்தை இல்லை
நிலவாக நான் விளையாட
வானாக வந்தவள் நீயே என் தாயே
அலையாக நான் விளையாட
நதியாக வந்தவள் நீயே என் தாயே
உந்தன் விரல்கள் பிடித்து நடந்தேன்
உந்தன் விழியின் நிழலில் வளர்த்தேன்....♥♥♥