அண்ணனையும் தம்பியையும்
அப்பனையும் ஆத்தாளையும்
வம்புக்கிழுத்து வசைபொழிந்து
போனதனால் , சிறுக்கி மகள்
கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!
பத்து சவரன் நகை கேட்டா
சொத்த வித்தா வாங்குறது?
பத்து நாளு பொறுடி என்றேன்
பாதகத்தி கேட்கலையே!
பணம் புரட்டி திரும்பும் முன்னே
சிறுக்கி மகள்கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!
அன்பான தங்கை ஒன்று
அருமருந்தாய் எனக்கிருக்க
அவளுக்கு சீர் செனத்தி
செய்வதெல்லாம் கண்ணுறுத்தி
கோபம் கொப்பளிக்க ,
சிறுக்கிமகள் கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!
மணமான என் மாமா பொண்ணு
குணமான என் குரங்கு பார்க்கையிலே
நலமான்னு கேட்டாளே! அய்யா
நான் வீடுவந்து சேரும்முன்னே
சிறுக்கிமகள் கிறுக்கி அவள்,
எனைக்கிழித்துப்போட்டாளே!
கோபத்தில் கிழித்ததெல்லாம்
குப்பைக்கு போனாலும்
சாந்தமாக இப்போவெல்லாம்
சிறுக்கிமகள் கிறுக்கி அவள்,
முத்தம் தினம் தாராளே!