Author Topic: சவாலே சமாளி !!!  (Read 4942 times)

Offline Dragon Eyes

  • Jr. Member
  • *
  • Posts: 59
  • Total likes: 136
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: சவாலே சமாளி !!!
« Reply #15 on: October 17, 2020, 09:53:38 PM »
romba interesting ah poguthu  story avagu seruvagala mathagala nu therinjika arvama iruku. waiting for ur next episode. very nice story

Offline Jack Sparrow

  • Jr. Member
  • *
  • Posts: 72
  • Total likes: 166
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: சவாலே சமாளி !!!
« Reply #16 on: October 17, 2020, 10:33:32 PM »
:)Arumai Sago

Offline Darth Vader

  • Jr. Member
  • *
  • Posts: 50
  • Total likes: 73
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ''Do or Do Not There is No Try''
Re: சவாலே சமாளி !!!
« Reply #17 on: October 18, 2020, 09:58:41 PM »
இக்காதயில் வரும் பெண்ணை போன்றே பல கைம்பெண்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகத்தான் உள்ளது. கைம்பெண்கள் மறுமணம் செய்வது கொள்வதை கூட ஏற்றுக்கொள்ளாத சமுதாயத்தில் தான் நாம் வாழந்தது கொண்டு இருக்கிறோம் என்பதை நினைக்கயில் இன்னும் எத்தனை சீர்திருத்த வாதிகள் வந்தாலும் இந்த சமுதாயம் திருந்துமா என்ற கேள்வி தான் எழுகிறது. மனிதர்களின் இயல்பே மற்றவர்களின் குறையை ஆராய்வதில் தான் இருக்கிறது. எப்போது மனிதன்  தான் குறையை ஆராய்ந்து தன்னை சீர் திருத்தி பொதுநலத்தோடு வாழகிரானோ அப்போதுதான் இந்த மனித சமுதாயம் சீர் பெற முடியும். உங்கள் கதையின்  இருதி பகுதியை ஆர்வமுடன் எதிர் பார்த்து இருக்கிறேன் ஜோ.

Offline Hari

  • Jr. Member
  • *
  • Posts: 82
  • Total likes: 206
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: சவாலே சமாளி !!!
« Reply #18 on: October 19, 2020, 07:27:04 AM »
அருமை அருமை ஸ்வீட்டி , உங்கள் கதை ரொம்ப சுவாரசியமாக செல்கிறது இது வரை ஸ்வீட்டி  ஓரு கவிதாயினி என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் இப்போது நீங்கள் ஓரு நல்ல கதை ஆசிரியை என்பதை வெளிப்படுத்தி இருக்கீங்க, வாழ்த்துக்கள் நீங்கள் இந்த பதிப்பில் கூறியதுபோல் ஆண்கள் ஏதாவது காரணம் கூறி சிலர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள் ஆனால் பெண்கள் தன் வாழ்க்கையை பெற்ற பிள்ளைகளுக்காக அவர்களின் ஏதிர்காலத்தை நினைத்து  தியாகம் செய்கிறார்கள் அதனால் தான் தாயை தெய்வத்திற்கு மேல் முதல் இடத்தில் வைத்து போற்றி வணங்குகிறோம், தாய்க்கு நிகர் இவுலகில் எதுவும் இல்லை, வாழ்த்துக்கள் தோழி அடுத்த பதிப்பிற்காக காத்துகொண்டு இருக்கிறோம்...
« Last Edit: October 19, 2020, 07:30:25 AM by Hari »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: சவாலே சமாளி !!!
« Reply #19 on: October 19, 2020, 10:54:08 AM »


அன்பு சுவீட்டி sis  !
இந்த  சமுதாயத்தின் சாப கேடுகளில் ஒன்றான கொந்தளிப்பை தங்கள் வரிகள் பிரதிபலிக்கின்றது..மிகவும் அழகான உங்கள் எழுத்து நடை மேலும் அழகு சேர்கின்றது ! தொடரட்டும் உங்கள் எழுத்து பணி!வாழ்த்துக்கள் ! 

« Last Edit: October 19, 2020, 10:55:39 AM by AgNi »

Offline SweeTie

Re: சவாலே சமாளி !!!
« Reply #20 on: October 19, 2020, 08:25:39 PM »

 
(தொடற்சி ........_)

  "நிம்மி  என்ன பதிலையே காணோம்"   என்றான் மோகன்
" என்னிடம்   பதில் இல்லை " என்றேன்
“அப்படி என்ன நடக்காத விஷயத்தை கேட்டுவிட்டேன், அப்படியானால்   இப்போ நேரடியாகவே   கேட்கிறேன்   என்னை திருமணம் செய்துகொள்கிறாயா" என்றான்
எனக்கு மயக்கமே வந்துவிட்டது.   
" என்னது  உங்களையா"   என்றேன்.
" ஏன்  நான் உனக்கு ஏற்றவன் இல்லையா?"
" மோகன்  நடக்கிற விஷயமாக பேசுங்கள்.  நீங்கள் வாழவேண்டியவர்."  என்றேன்.
" வாழ்வதற்காவே தான்   கேட்கிறேன்:"  என்றான். 
 
       “நிம்மி   நான் மிகவும் நன்றாக  யோசித்துதான்   இந்த முடிவுக்கு  வந்தேன்
இருவரும்  காதலர்களாக  இருந்தோம்  ஒரு காலம்.     .திருமணம் செய்ய தவறி விட்டோம். ஆனால்  இன்னும் உன் நினைவுகள் என் கூடவே .இருக்கின்றன.    வேறு  யாரையும்   கட்டிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை  மனசுக்குள்   ஒருத்தியுடன்  வாழ்ந்துகொண்டு   வெளியில்   மற்றவர்களுக்காக  வேறொருத்தியுடன்    வாழ்வதில்  எனக்கு  இஷ்டமில்லை.   அதனாலேயே நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.    உனக்கு பிடித்தால்  எனக்கு  பிடித்தவளுடன்   வாழ்ந்துவிட்டு போகிறேன்.    இல்லையென்றால்  இப்படியே  இருந்துவிட்டு போகிறேன்”    என்றான். 

           என் காதுகளையே என்னால் நம்பமுடியவில்லை .  என்  உடம்பில்   ஒரு பதற்றம்   தெரிந்தது.  பதற்றம் என்பதை விட  குற்ற உணர்வு என்றுகூட சொல்லலாம்.  இப்படியும் ஆண்கள்   இருப்பார்களா?       ஆண்களைப்பற்றிய  என் தப்பான  அபிப்பிராயம்   என்னை குத்திக்காட்டியது. 
   
        ‘ சில நேரங்களில்   மற்றவர்களை  சந்தோசப்படுத்துவதற்காக   சில தப்பான முடிவுகளை  எடுத்து  நம்மை நாமே  சீரழித்துவிடுகிறோம் .   நமது வாழ்க்கை யை  நாம்தான் வா.ழவேண்டும். மற்றவர் நம்  வாழ்க்கையை  வாழ  அனுமதித்தால்  ஆபத்து நமக்குத்தான்' எங்கோ  படித்த வரிகள் என் ஞாபகத்தில் வந்தன 
 
எங்கிருந்தோ வந்த விஜி   போனை பறித்து  பேச தொடஙிவிட்டான் 
"அங்கிள்  ஏன் நீங்க வரல  நாங்க மிஸ் பண்றோம்"
"அம்மாவிடம்தான்  கேட்கவேண்டும் "  என்றான் மோகன்
விஜியிடம்  இருந்த போனை  பறித்து  நான்  பேசலானேன்.   
"மோகன்  அவர்கள் குழந்தைகள்.  எதற்கு   அவனிடம்  இதெல்லாம் " என்றேன்.
சரி சரி   குழந்தைகளோடு  பேசி   ஒரு முடிவுக்கு வாங்க "  மோகன்  போனை வைக்கும்  சத்தம்   கேட்டது.  அவனது குரலில்  ஒரு ஏக்கம்  தெரிந்தது .


      இந்த   கைத்தொலைபேசி   ஒரு தொல்லைபேசியாகி விட்டது.  மனதுக்குள் திட்டிக்கொண்டேன் . மோகன்  கூறிய  வார்த்தைகள்  என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.  அப்படியானால் மோகன் இன்னும்  என்னை காதலிக்கிறானா?   எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஏன் எனக்கும்தான்  அவனை  மறக்க முடியவில்லையே!      இருந்தாலும்   இப்பொது   நான்  இரண்டு குழந்தைகளுக்கு   தாய்.   அத்துடன் ஒரு விதவை.    இதையெல்லாவற்றையும் தாண்டி  மோகன் என்மீது  அதே  காதலுடன்  இருக்கிறானென்றால்    ........என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.   முன்னர் இருந்த காதலைவிட   இன்னும்   பல  மடங்கு   அவன்மேல்  மதிப்பு  அதிகரித்தது.    பிள்ளைகள்  பெறுவதற்காகவே  திருமணம் செய்த  தங்கராசுவை விட    மற்றவன் பிள்ளைகளை  தனது  பிள்ளைகளாக  வளர்க்க முன் வந்த  மோகன்   பல படிகள்  உயரத்தில்  நிற்பதை   எண்ணி   என் கண்களில்   ஆனந்த கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.      கடவுள் எதிரே  வந்தது போல்  உணர்ந்தேன். 
   
  அன்று  தூங்கும்போது   குழந்தைகளிடம்  " நாம  ஒரு புதிய  அப்பா  வாங்குவோமா"  என்று கேட்டேன்
"வேணாம் வேணாம்"  என்று கத்தினார்கள்     எனக்கு   திக்   என்றாகி விட்டது
  குழந்தைகளுக்கு   பிடிக்கவில்லைபோல்  தெரிகிறது.    அப்படியானால்    எனக்கும்   வேண்டாம்.   எனக்கு அவர்கள் வாழ்க்கைதான் முக்கியம்      என்று நினைத்தேன்   .  ஆனால்  அவர்களின்   அடுத்த    கோரிக்கை  என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
" அம்மா  மோகன்   அங்கிளை  வாங்குவோமே " என்றான்  விஜி. எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
" எங்களுக்கு  அவரதான் பிடிச்சிருக்கு:  என்றார்கள்.
மோகன்  என் பிள்ளைகள் மனதில்  குடியேறிவிட்டான்  என்பதை நினைக்கும்போது எனக்கு சந்தோசம் இரட்டிப்பாகியது.   விடிந்ததும் மோகனுக்கு  ஒரு அதிர்ச்சி கொடுக்கவேண்டும் .  அன்று சுகமான தூக்கம் தழுவிக்கொண்டது.

        காலை 7 மணி வரை காத்திருந்து   என் சம்மதத்தை தெரிவிக்க   போன் செய்தேன்,   போன்   "சுவிட்ச்  ஆப்"  இல்  இருந்தது.    பலமுறைகள் போன் செய்தேன்   முடியவில்லை.     எனக்கு  ஓவென்று   அழவேண்டும் போல் இருந்தது.     மோகனின்  வீட்டை  நோக்கி  ஓடினேன்.   வீட்டின் வெளி வாயிலில்    பூட்டு போடப்பட்டிருந்தது.    கடவுளே   இது என்ன சோதனை . 
பக்கத்து வீட்டில் விசாரித்தபோது     காலையில் அவன்  வீட்டை  பூட்டிவிட்டு   ஊருக்கு போவதாக   ரயில்வே  ஸ்டேஷன்   சென்றதாக கூறினார்கள்.    ஓடிச்சென்று   ரயில்வே  ஸ்டேஷனை   அடைந்தபோது   அங்கு  நின்றுகொண்டிருந்த   ரயிலில்   மோகன்   எற  ஆயத்தமாய் நிற்பதை பார்த்தேன்.   என்னையுமறியாமல்   
:"மோகன்......:”.. என்று கூச்சலிட்டபடியே   பாய்ந்து சென்று   அவனை  தடுத்து  நிறுத்தி  அவனைக் கட்டிகொண்டேன்.   ரயில் ..கூ....வென்று கூவிக்கொண்டு    புறப்பட்டு சென்றுவிட்டது.   எனக்கோ  மேல்மூச்சு  கீழ்மூச்சு  வாங்கியது.   

"மோகன்  ஏன் இப்படி செய்தீங்க"   என்று கேட்டேன் கொஞ்சம் கோபத்துடன்
"இரவு முழுவதும் உனது  கால்  வரும் வரும் என்று காத்திருந்தேன்.   வரவில்லை.  உனக்கு சம்மதம் இல்லை என்று நினைத்து    ஊருக்கே சென்றுவிடலாம்  என்று நினைத்தேன்"  என்றான்  மிகுந்த வருத்தத்துடன்
" அதுக்குள்ள   அவ்வளவு அவசரசமா .   விடிந்ததும்  என்   சம்மதத்தை   சொல்ல போன் பண்ணினேன்.  உங்கள் போன் தொடர்பில்  இருக்கவில்லை : .எவ்வளவு   பதறிப்போனேன் தெரியுமா?" என்றேன்.
மோகன் என்னை  உற்று பார்த்தபடி   நின்றான் .  அவன் கண்களில் தெரிந்தது  காதலா?  கருணையா ?  ஆதங்கமா?
"வாங்க  வீட்டுக்கு போகலாம் "  என்று அவனையும்  அழைத்துக்கொண்டு   எங்கள் வீட்டுக்கு சென்றோம்.  குழந்தைகள்   மோகன்  பெட்டியுடன்  வந்ததை கண்டதும்  ஆனந்தமாய்  துள்ளி குதித்தார்கள். 
:" அங்கிள்   இனி எங்க வீட்டுல   இருக்கட்டும் அம்மா”  என்றார்கள்.    ,மோகனின் முகத்தில் மகிழ்ச்சி  கோடுகள்  தெரிந்தன.   மனதுக்கு பிடித்தவர்கள்   உடன்  இருந்தால்    என்றுமே    மகிழ்ச்சிதான்    அதே  மகிழ்ச்சியுடன்   ரெஜிஸ்ட்ரார்    ஆபிஸ்  சென்று      பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.

                                                                        ( முற்றும் ...)   
 
« Last Edit: October 19, 2020, 08:34:08 PM by SweeTie »

Offline Stranger

  • Newbie
  • *
  • Posts: 14
  • Total likes: 29
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: சவாலே சமாளி !!!
« Reply #21 on: October 20, 2020, 08:45:24 PM »
 nanraka irukinrathu miga miga arumai ponkalu nadakira soozhnilai loves irukira soozhnilai patri nanrkala eluthi ulleerkal jo

Offline Hari

  • Jr. Member
  • *
  • Posts: 82
  • Total likes: 206
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: சவாலே சமாளி !!!
« Reply #22 on: October 21, 2020, 07:27:35 AM »
Super super sweetie kadhai romba  suvaarasiyamaga irundhathu super 😎😎😎 congrats....
« Last Edit: October 21, 2020, 07:18:02 PM by Hari »

Offline Dragon Eyes

  • Jr. Member
  • *
  • Posts: 59
  • Total likes: 136
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: சவாலே சமாளி !!!
« Reply #23 on: October 21, 2020, 09:47:02 PM »
Nice climax epadiyo rendu perum serthutagu

Offline Jack Sparrow

  • Jr. Member
  • *
  • Posts: 72
  • Total likes: 166
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: சவாலே சமாளி !!!
« Reply #24 on: October 21, 2020, 09:55:29 PM »
Arumai Sago.....Subamana Mudivu., Ithu pola pala Kadhaikal Ezhutha En Vaazhthukkal

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: சவாலே சமாளி !!!
« Reply #25 on: October 22, 2020, 03:46:53 AM »
Beautiful ending. Thank you for the story Anni.


Offline Darth Vader

  • Jr. Member
  • *
  • Posts: 50
  • Total likes: 73
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ''Do or Do Not There is No Try''
Re: சவாலே சமாளி !!!
« Reply #26 on: October 22, 2020, 03:40:01 PM »
கதையின் முடிவு மகிழ்ச்சிகாரமானதாக அமைந்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இக்கதையில் இருந்து நான் பெற்று கொண்ட கருத்து இக்கதையில் வரும் பெண்ணை போன்று எத்தனையோ கைம்பெண்கள் வாழ்க்கையை இழந்து செய்வதறியாது விழி பிதுங்கி நிற்க்கிறார்கள். அவர்களுக்கும் நல்ல வாழ்க்கை  அமைய வேண்டும் அதற்க்கு இந்த சமுதாயம் மாற வேண்டும். இந்த இருபத்தி ஓராம்  நூற்றாண்டிலும் விதவை மருமணங்களை எதிர்க்க கூடிவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிபட்ட குறுகிய மனம் படைத்தவர்கள் பொதுநலத்துடன் சிந்திக்க துவங்கும் போது விதவை மருமணங்கள்  மட்டுமல்ல இன்னும் சமுதாயத்தின் சாப கேடாக இருக்கும் எத்தனையோ மூட பழக்க வழக்கங்களும் மறைந்து போகும். அப்படிபட்ட ஒரு சமுதாயம் நாம் வாழ்நாளில் ஏற்படா விட்டாலும் நிச்சயம் என்றாவது ஒரு நாள் இந்த பூமியில் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.

இன்னும் பல நல்ல கருதுள்ள மக்களின் சிந்தனையை தூண்ட கூடிய கதைகளை எழுத என் வாழ்துக்கள் ஜோ.
« Last Edit: October 22, 2020, 03:45:55 PM by Darth Vader »

Offline JoKe GuY

  • Jr. Member
  • *
  • Posts: 97
  • Total likes: 112
  • Karma: +0/-0
  • Gender: Male
  • The best of friends must part.
Re: சவாலே சமாளி !!!
« Reply #27 on: October 23, 2020, 08:36:39 PM »
Good.. Keep it up
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline SweeTie

Re: சவாலே சமாளி !!!
« Reply #28 on: October 26, 2020, 05:52:21 AM »
நன்றி  தோழமைகளே.    நீங்கள் தரும்   ஊக்கம் என்னை  மேலும்  எழுத தூண்டுகிறது.   
« Last Edit: October 26, 2020, 08:37:32 AM by SweeTie »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: சவாலே சமாளி !!!
« Reply #29 on: October 27, 2020, 04:39:50 PM »
அருமையான தொடர் கதை ஜோ சிஸ் . I agree with Darth bro comments. எல்லாமே அவர் கரெக்ட்டா சொல்லி இருக்காரு. பெண்களுக்கு இந்த சமூகம் கொடுக்கும் அழுத்தம் ஏராளமானது. அதுவும் விதவை பெண்களுக்கும், விவாகரத்தான  பெண்களுக்கும் இந்த சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடுகளும், வேலிகளும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத நிலைமையில் உள்ளது. வெகு சிலர் மட்டுமே இந்த மூடத்தனத்திலும், பிற்போக்குவாதத்தில் இருந்தும் மாறுபட்டு முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றனர். உங்களின் கதை மாந்தர்களும் அப்படி அமைந்திருப்பது தான் இந்த கதையின் சிறப்பு.தொடர்ந்து இதுபோன்ற முற்போக்கு கதைகளையும், ஊக்கமளிக்கும் கதைகளையும் எழுதுங்கள் ஜோ சிஸ்