Author Topic: AalayaMani (ஆலயமணி)  (Read 2755 times)

Offline gab

AalayaMani (ஆலயமணி)
« on: October 28, 2012, 11:08:03 PM »
திரைப்படம்: ஆலயமணி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1962



பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொ்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

Offline gab

Re: AalayaMani (ஆலயமணி)
« Reply #1 on: October 28, 2012, 11:09:03 PM »
திரைப்படம்: ஆலயமணி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1962


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா
தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

Offline gab

Re: AalayaMani (ஆலயமணி)
« Reply #2 on: October 28, 2012, 11:10:05 PM »
திரைப்படம்: ஆலயமணி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1962



கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
ஆஹாஹா.. ஆஹாஹா..
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா?
மின்னல் இடையல்லவா?
ஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

ஆ..ஆ ஆ ஆ.. ஆ..ஆ ஆ ஆ..

கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி ஆ..ஆ..

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
ஆ..

Offline gab

Re: AalayaMani (ஆலயமணி)
« Reply #3 on: October 28, 2012, 11:11:32 PM »
திரைப்படம்: ஆலயமணி
பாடியவர்: எஸ். ஜானகி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1962



தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

காலையில் நான் ஓர் கனவு கண்டேன் - அதை
கண்களில் இங்கே எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்
கொடுத்து விட்டேன் உன்தன் கண்களிலே
கண்களிலே கண்களிலே

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

ஆஹஹஹாஹஹா ஆஹஹஹா
அஹஹஹஹாஹா ஹாஹஹஹா

Offline gab

Re: AalayaMani (ஆலயமணி)
« Reply #4 on: October 28, 2012, 11:13:23 PM »
படம் : ஆலயமணி
இசை:விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்:   கண்ணான கண்ணனுக்கு அவசரமா
குரல்:   சீர்காழி கோவிந்தராஜன், பி சுஷீலா
வரிகள்:   கண்ணதாசன்


வானம்பாடி...
ஆஹாஹஹா...

கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா (2)
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா

(கன்னான)

பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா (2)
கண்ணழகை நான் காணக் கூடாதா கல்யாணத் தேரோடக் கூடாதா

(பொன்னான)

உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா (2)
ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ

(உள்ளத்தில்)

கன்னத்தில் முத்தமிட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா (2)

(கண்ணான)

மஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா (2)
அந்தமலர் வாடுமென்று சொந்தமலர் வண்ணம் கண்டு
இந்தமலர் வேண்டுமென்று நான் பாடவா (2)

(கண்ணான)

"வானம்பாடி
நீ ஒரு விசித்திரமான பொண்ணு
நீ என்னைக் காதலிக்கிறியா இல்ல வௌளயாடறியா
எனக்கு ஒண்ணுமே புரியல"

Offline gab

Re: AalayaMani (ஆலயமணி)
« Reply #5 on: October 28, 2012, 11:15:25 PM »
திரைப்படம்: ஆலயமணி
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1962


மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ண தேராட்டம்
தாலாட்டும் மங்கை சதிராட்டம்… கண்டு
தேனோடும் எங்கும் நதியாட்டம்
மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ண தேராட்டம்
தாலாட்டும் மங்கை சதிராட்டம்… கண்டு
தேனோடும் எங்கும் நதியாட்டம்

செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதை
கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும்
செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதை
கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும்
சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும்
இன்ப துணை இருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்
மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ண தேராட்டம்
தாலாட்டும் மங்கை சதிராட்டம்… கண்டு
தேனோடும் எங்கும் நதியாட்டம்

பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்து வரும் தலை
சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்து வரும்
பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்து வரும் தலை
சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்து வரும்
ஆடி வரும் வெள்ளம் பாடிவரும் பெண்ணை
தேடி வரும் இன்பம் கோடி பெரும்
மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ண தேராட்டம்
தாலாட்டும் மங்கை சதிராட்டம்… கண்டு
தேனோடும் எங்கும் நதியாட்டம்