Author Topic: நாலடியார்  (Read 11262 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #15 on: July 07, 2012, 02:38:00 PM »
2.16 மேன்மக்கள்
 
151. அங்கண் விசும்பின் அகனிலாப் பா஡஢க்கும்
 திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
 மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
 தேய்வர் ஒருமா சுறின்.
 
152. இசையும் எனினும் இசையா தெனினும்
 வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
 நா஢மா உளங்கிழித்த அம்பினின் தீதோ,
 அ஡஢மாப் பிழைப்பெய்த கோல்?
 
153. நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினும் சான்றோர்
 குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார் - உரங்கவறா
 உள்ளமெனும் நா஡஢னால் கட்டி உளவரையால்
 செய்வர் செயற்பா லவை.
 
154. செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
 தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் பு஡஢ந்தியாப்பர்
 நல்வரை நாட. சிலநாள் அடிப்படின்
 கல்வரையும் உண்டாம் நெறி.
 
155. புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
 கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
 நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
 பல்லாருள் நாணல் பா஢ந்து.
 
156. கடித்துக் கரும்பினைக் கண்தகர நு஡றி
 இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்
 வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
 கூறார்தம் வாயிற் சிதைந்து.
 
157. கள்ளார், கள் ளுண்ணார், கடிவ கடிந்தொ஡ணஇ,
 எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார், - தள்ளியும்
 வாயில்பொய் கூறார், வடுவறு காட்சியார்
 சாயிற் பா஢வ திலர்.
 
158. பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
 ஏதிலா ஡஢ற்கண், குருடனாய்த் தீய
 புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்
 அறங்கூற வேண்டா அவற்கு.
 
159. பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
 என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும்
 வேண்டினும் நன்றுமற் றென்று விமுமியோர்
 காண்டொறும் செய்வர் சிறப்பு.
 
160. உடையார் இவரென் றொருதலையாப் பற்றிக்
 கடையாயார் பின்சென்று வாழ்வா - உடைய
 பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
 குலந்தலைப் பட்ட விடத்து.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #16 on: July 07, 2012, 02:38:34 PM »
2.17 பொ஢யாரைப் பிழையாமை
 
161. பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
 வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின்
 ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட
 பேர்க்குதல் யார்க்கும் அ஡஢து.
 
162. பொன்னே கொடுத்தும் புணர்தற் கா஢யாரைக்
 கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
 பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
 நயமில் அறிவி னவர்.
 
163. அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
 மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
 கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
 வையார் வடித்தநு஡ லார்.
 
164. வி஡஢நிற நாகம் விடருள தேனும்
 உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்
 அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
 பெருமை யுடையார் செறின்.
 
165. எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
 தம்மைத்தாம் கொள்வது கோளன்று - தம்மை
 அ஡஢யரா நோக்கி அறனறியும் சான்றோர்
 பொ஢யராக் கொள்வது கோள்.
 
166. நளிகடல் தண்சேர்ப்ப. நாணிழல் போல
 விளியும் சிறியவர் கேண்மை - விளிவின்றி
 அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே
 தொல்புக ழாளர் தொடர்பு.
 
167. மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
 துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
 குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
 உழைதங்கண் சென்றார்க் கொருங்கு.
 
168. தொ஢யத் தொ஢யும் தொ஢விலார் கண்ணும்
 பி஡஢யப் பெரும்படர் நோய்செய்யும் - பொ஢ய
 உலவா இருங்கழிச் சேர்ப்பயார் மாட்டும்
 கலவாமை கோடி யுறும்.
 
169. கல்லாது போகிய நாளும் பொ஢யவர்கண்
 செல்லாது வைகிய வைகலும் - ஒல்வ
 கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
 படாஅவாம் பண்புடையார் கண்.
 
170. பொ஢யார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்
 கு஡஢யா ரு஡஢மை யடக்கம் - தொ஢யுங்கால்
 செல்வ முடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தார்
 அல்லல் களைப வெனின்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #17 on: July 07, 2012, 02:39:08 PM »
2.18 நல்லினம் சேர்தல்
 
171. அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
 நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
 நற்சார்வு சாரக் கெடுமே வெயில்முறுகப்
 புற்பனிப் பற்றுவிட் டாங்கு.
 
172. அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம்
 பொறுமின் பிறர்கடுஞ்சொல் போற்றுமின் வஞ்சம்
 வெறுமின் வினைதீயார் கேண்மை எஞ்ஞான்றும்
 பெறுமின் பொ஢யார்வாய்ச் சொல்.
 
173. அடைந்தார்ப் பி஡஢வும் அரும்பிணியும் கேடும்
 உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
 பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை
 உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.
 
174. இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
 பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்
 பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்
 நண்பாற்றி நட்கப் பெறின்.
 
175. ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
 பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் - ஓருங்
 குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்
 நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.
 
176. ஒண்கதிர் வாள்மதியும் சேர்தலால் ஓங்கிய
 அங்கண் விசும்பின் முயலும் தொழப்படுஉம்
 குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,
 குன்றன்னார் கேண்மை கொளின்.
 
177. பாலோ டளாயநீர் பாலாகு மல்லது
 நீராய் நிறம்தொ஢ந்து தோன்றாதாம் - தோ஢ன்
 சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
 பொ஢யார் பெருமையைச் சார்ந்து.
 
178. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
 ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு
 மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேல்
 செல்லாவாம் செற்றார் சினம்.
 
179. நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
 குலநலத்தால் ஆகுவர் சான்றோர் - கலநலத்தைத்
 தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
 தீயினம் சேரக் கெடும்.
 
180. மனத்தான் மறுவில ரேனுந்தாம் சேர்ந்த
 இனத்தால் இகழப் படுவர் - புனத்து
 வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
 எறிபுனம் தீப்பட்டக் கால்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #18 on: July 07, 2012, 02:39:47 PM »
2.19 பெருமை
 
181. ஈத லிசையா திளமைசேண் நீங்குதலால்
 காத லவரும் கருத்தல்லர் - காதலித்து
 ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்
 போவதே போலும் பொருள்.
 
182. இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
 பொச்சாந் தொழுகுவர் பேதையார் - அச்சார்வு
 நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
 என்றும் பா஢வ திலர்.
 
183. மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
 சிறுமைப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
 நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
 இன்றிப் பலவு முள.
 
184. உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
 இறைத்துணினும் ஊராற்றும் என்பர் - கொடைக்கடனும்
 சாஅயக் கண்ணும் பொ஢யார்போல் மற்றையார்
 ஆஅயக் கண்ணும் அ஡஢து.
 
185. உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
 கல்லு஡ற் றுழியூறும் ஆறேபோல் - செல்வர்
 பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்காற்றிச்
 செய்வர் செயற்பா லவை.
 
186. பெருவரை நாட பொ஢யோர்கட் டீமை
 கருநரைமேற் சூடேபோல் தோன்றும் - கருநரையைக்
 கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
 ஒன்றானும் தோன்றாக் கெடும்.
 
187. இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
 பசைந்த துணையும் பா஢வாம் - அசைந்த
 நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
 பகையேயும் பாடு பெறும்.
 
188. மெல்லிய நல்லாருள் மென்மை அதுவிறந்(து)
 ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை - எல்லாம்
 சலவருட் சாலச் சலவே நலவருள்
 நன்மை வரம்பாய் விடல்.
 
189. கடுக்கி யொருவன் கடுங்குறளைப் பேசி
 மயக்கி விடினும் மனப்பி஡஢ப் பொன்றின்றித்
 துளக்க மிலாதவர் து஡ய மனத்தார்
 விளக்கினுள் ஒண்சுடரே போன்று.
 
190. முற்றுற்றும் துற்றினை நாளும் அறஞ்செய்து
 பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர் - அத்துற்று
 முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
 துக்கத்துள் நீக்கி விடும்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #19 on: July 07, 2012, 02:40:18 PM »
2.20 தாளாண்மை
 
191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போல்
 கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப
 வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
 தாளாளர்க் குண்டோ தவறு.
 
192. ஆடுகோ டாகி அதா஢டை நின்றது஡உம்
 காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்
 வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
 தாழ்வின்றித் தன்னைச் செயின்.
 
193. உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
 சிறுதேரை பற்றியும் தின்னும் - அறிவினால்
 காற்றொழில் என்று கருதற்க கையினால்
 மேற்றொழிலும் ஆங்கே மிகும்.
 
194. இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்
 அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
 கண்டால் திரையலைக்கும் கானலந் தண்சேர்ப்ப
 பெண்டிரும் வாழாரோ மற்று.
 
195. நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
 சொல்லள வல்லால் பொருளில்லை - தொல்சிறப்பின்
 ஒண்பொரு ளொன்றோ தவம்கல்வி யாள்வினை
 என்றிவற்றான் ஆகும் குலம்.
 
196. ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி
 ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
 உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்
 குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.
 
197. சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
 மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
 குதலைமை தந்தைகண் தோன்றிற்றான் பெற்ற
 புதல்வன் மறைப்பக் கெடும்.
 
198. ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
 மானும் தலைவருவ செய்பவோ? - யானை
 வா஢முகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
 அ஡஢மா மதுகை யவர்.
 
199. தீங்கரும் பீன்று திரள்கால் உளையலா஢
 தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு - ஓங்கும்
 உயர்குடி யுள்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
 பேராண்மை இல்லாக் கடை.
 
200. பெருமுத் தரையர் பொ஢துவந் தீயும்
 கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப்
 பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
 நீரும் அமிழ்தாய் விடும்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #20 on: July 07, 2012, 02:40:52 PM »
2.21 சுற்றந்தழால்
 
201. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
 கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
 அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
 கேளிரைக் காணக் கெடும்.
 
202. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
 நிழல்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
 பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
 நல்லாண் மகற்குக் கடன்.
 
203. அடுக்கல் மலைநாட. தற்சேர்ந் தவரை
 எடுக்கல மென்னார் பொ஢யோர் - அடுத்தடுத்து
 வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையோ
 தன்காய் பொறுக்கலாக் கொம்பு.
 
204. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
 சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை - நிலைதி஡஢யா
 நிற்கும் பொ஢யோர் நெறியடைய நின்றனைத்தால்
 ஒற்கமி லாளர் தொடர்பு.
 
205. இன்னர் இனையர் எமர்பிறர் என்னும்சொல்
 என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
 தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
 தலைமக்க ளாகற்பா லார்.
 
206. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
 அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
 உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு
 எக்காலத் தானு மினிது.
 
207. நாள்வாய்ப் பெறினும்தந் நள்ளாதா ஡஢ல்லத்து
 வேளாண்மை வெங்கருனை வேம்பாகும் - கேளாய்,
 அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
 தமராயார் மாட்டே இனிது.
 
208. முட்டிகை போல முனியாது வைகலும்
 கொட்டியுண் பாரும் குறடுபோல் கைவிடுவர்
 சுட்டுக்கோல் போல எ஡஢யும் புகுவரே
 நட்டார் எனப்படு வார்.
 
209. நறுமலர்த் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார்
 மறுமையும் செய்வதொன் றுண்டோ - இறுமளவும்
 இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
 துன்புறுவ துன்புறாக் கால்.
 
210. விருப்பிலார் இல்லத்து வேறிருந் துண்ணும்
 வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம் - விருப்புடைத்
 தன்போல்வா ஡஢ல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
 என்போ டியைந்த அமிழ்து.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #21 on: July 07, 2012, 02:41:27 PM »
2.22 நட்பாராய்தல்
211. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்
 குருத்தின் கரும்புதின் ற்றறே - குருத்திற்கு
 எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
 மதுர மிலாளர் தொடர்பு.
 
212. இற்பிறப் பெண்ணி இடைதி஡஢யா ரென்பதோர்
 நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்
 புனலொழுகப் புள்ளி஡஢யும் பூங்குன்ற நாட
 மனமறியப் பட்டதொன் றன்று.
 
213. யானை யனைவர் நண்பொ஡ணஇ நாயனையார்
 கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும், - யானை
 அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
 மெய்யதா வால்குழைக்கும் நாய்.
 
214. பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
 சிலநாளும் ஒட்டாரோ டொட்டார் - பலநாளும்
 நீத்தா ரெனக்கை விடலுண்டோ , தந்நெஞ்சத்
 தியாத்தாரோ டியாத்த தொடர்பு.
 
215. கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
 வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி - தோட்ட
 கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
 நயப்பாரும் நட்பாரும் இல்.
 
216. கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
 இடையாயார் தெங்கி னனையர் - தலையாயார்
 எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
 தொன்மை யுடையார் தொடர்பு.
 
217. கழுநீருள் காரட கேனும் ஒருவன்
 விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் - விழுமிய
 குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
 கைத்துண்டல் காஞ்சிரங் காய்.
 
218. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
 ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
 சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
 வாய்க்கால் அனையார் தொடர்பு.
 
219. தெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல்
 விளியா அருநோயின் நன்றால் - அளிய
 இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
 புகழ்தலின் வைதலே நன்று.
 
220. மாணஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
 பொ஡ணஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
 பாணஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
 மாணஇஇப் பின்னைப் பி஡஢வு.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #22 on: July 07, 2012, 02:42:17 PM »
2.23 நட்பிற் பிழை பொறுத்தல்
 
221. நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
 அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்.
 நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரைஉண்டு
 புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
 
222. செறுத்தோ றுடைப்பினும் செம்புனலோ டுடார்,
 மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
 வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
 தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.
 
223. இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
 பொறுத்தல் தகுவதொன் றன்றோ - நிறக்கோங்கு
 உருவவண் டார்க்கு முயர்வரை நாட
 ஒருவர் பொறையிருவர் நட்பு.
 
224. மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
 கடுவசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப
 விடுதற் கா஢யா ஡஢யல்பிலரேல் நெஞ்சம்
 சுடுதற்கு மூட்டிய தீ.
 
225. இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்
 பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் - பொன்னொடு
 நல்லிற் சிதைத்ததீ நாடோ றும் நாடித்தம்
 இல்லத்தில் ஆக்குத லால்.
 
226. இன்னா செயினும் விடுதற் கா஢யாரைத்
 துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
 விண்குத்து நீள்வரை வெற்ப. களைபவோ
 கண்குத்திற் றென்றுதங் கை.
 
227. இலங்குநீர்த் தண்சேர்ப்ப. இன்னா செயினும்
 கலந்து பழிகாணார் சான்றோர் - கலந்தபின்
 தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
 தாமும் அவா஢ற் கடை.
 
228. ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
 நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால் - காதல்
 கழுமியார் செய்த கறங்கருவி நாட
 விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.
 
229. தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
 தமரன்மை தாமறிந்தா ராயின், - அவரைத்
 தமா஢னும் நன்கு மதித்துத் தமரன்மை
 தம்முள் அடக்கிக் கொளல்.
 
230. குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
 நட்டபின் நாடித் தி஡஢வேனேல் - நட்டான்
 மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க
 அறைகடல்சூழ் வையம் நக.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #23 on: July 07, 2012, 02:43:13 PM »
2.24 கூடா நட்பு
 
231. செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
 இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், - கறைக்குன்றம்
 பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட
 தங்கரும் முற்றுந் துணை.
 
232. சீ஡஢யார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
 மா஡஢போல் மாண்ட பயத்ததாம் - மா஡஢
 வறந்தக்கால் போலுமே வாலருவி நாட
 சிறந்தக்கால் சீ஡஢லார் நட்பு.
 
233. நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
 விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணு஡ல்
 உணர்வில ராகிய ஊதியம் இல்லார்ப்
 புணர்தல் நிரயத்துள் ஒன்று.
 
234. பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
 ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் - அருகெல்லாம்
 சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட
 பந்தமி லாளர் தொடர்பு.
 
235. செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்
 செய்யாது தாழ்த்துக்கொண் டோ ட்டலும் - மெய்யாக
 இன்புறு஡உம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே
 துன்புறு஡உம் பெற்றி தரும்.
 
236. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
 வி஡஢நீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா
 பெருநீரார் கேண்மை கொளினுநீர் அல்லார்
 கருமங்கள் வேறு படும்.
 
237. முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
 நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
 குற்றிப் பறிக்கும் மலைநாட இன்னாதே
 ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.
 
238. முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை
 நட்டா னொருவன்கை நீட்டேனேல் - நட்டான்
 கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க
 நெடுமொழி வையம் நக.
 
239. ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
 வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு
 நல்வரை நாட நயமுணர்வார் நண்பொ஡ணஇப்
 புல்லறிவி னாரொடு நட்பு.
 
240. உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை யின்மை
 பருகற் கமைந்தபால் நீரளா யற்றே
 தொ஢வுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்
 வி஡஢பெடையோ டாடிவிட் டற்று.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #24 on: July 07, 2012, 02:45:20 PM »
2.25 அறிவுடைமை
 
241. பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்
 தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
 இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது
 அணங்கருந் துப்பின் அரா.
 
242. நளிகடல் தண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்கு
 அணிகல மாவ தடக்கம் - பணிவில்சீர்
 மாத்திரை யின்றி நடக்குமேல் வாமுர்
 கோத்திரம் கூறப் படும்.
 
243. எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்காகா
 தென்னாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால்
 தன்னாற்றா னாகும் மறுமை வடதிசையும்
 கொன்னாளர் சாலப் பலர்.
 
244. வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
 தீஞ்சுவை யாதும் தி஡஢யாதாம் ஆங்கே
 இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
 மனந்தீதாம் பக்கம் அ஡஢து.
 
245. கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
 உப்பீண் டுவா஢ பிறத்தலால் தத்தம்
 இனத்தனையர் அல்லர் எறிகடற்றண் சேர்ப்ப
 மனத்தனையர் மக்களென் பார்.
 
246. பராஅரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப
 ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? - நல்ல
 ம்ருஉச்செய் தியார்மாட்டும் தங்கு மனத்தார்
 விராஅஅய்ச் செய்யாமை நன்று.
 
247. உணர உணரும் உணர்வுடை யாரைப்
 புணரப் புணருமாம் இன்பம் - புணா஢ன்
 தொ஢யத் தொ஢யும் தொ஢விலா தாரைப்
 பி஡஢யப் பி஡஢யுமாம் நோய்.
 
248. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
 நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும்
 மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
 தலையாகச் செய்வானும் தான்.
 
249. கரும வா஢சையால் கல்லாதார் பின்னும்
 பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின்
 ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப
 பேதைமை யன்ற தறிவு.
 
250. கருமமு முட்படாப் போகமும் துவ்வாத்
 தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
 முட்டின்றி மூன்று முடியமேல் அஃதென்ப
 பட்டினம் பெற்ற கலம்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #25 on: July 07, 2012, 02:46:16 PM »
2.26 அறிவின்மை
 
251. நுண்ணுணர் வின்மை வறுமை, அஃதுடைமை
 பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் - எண்ணுங்கால்
 பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ,
 கண்ணவாத் தக்க கலம்.
 
252. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
 அல்ல லுழப்ப தறிதிரேல் - தொல்சிறப்பின்
 நாவின் கிழத்தி யுறைதலால் சேராளே
 பூவின் கிழத்தி புலந்து.
 
253. கல்லென்று தந்தை கழற அதனையோர்
 சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் - மெல்ல
 எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
 வழுக்கோலைக் கொண்டு விடும்.
 
254. கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
 நல்லறி வாள ஡஢டைப்புக்கு - மெல்ல
 இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
 உரைப்பினும் நாய்குரைத் தற்று.
 
255. புல்லாப்புன் கோட்டிப் புலவ ஡஢டைப்புக்குக்
 கல்லாத சொல்லும் கடையெல்லாம் - கற்ற
 கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
 படாஅ விடுபாக் கறிந்து.
 
256. கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
 மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
 வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
 பச்சோலைக் கில்லை யொலி.
 
257. பன்றிக்கூழ்ப் பத்தா஢ல் தேமா வடித்தற்றால்
 நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்
 குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
 சென்றிசையா வாகுஞ் செவிக்கு.
 
258. பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்
 வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று
 கோலால் கடாஅய்க் குறினும் புகலொல்லா
 நோலா உடம்பிற் கறிவு.
 
259. பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
 இழிந்தவை காமுறு஡உம் ஈப்போல், - இழிந்தவை
 தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்
 தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.
 
260. கற்றா ருரைக்கும் கசடறு நுண்கேள்வி
 பற்றாது தன்னெஞ் சுதைத்தலால் - மற்றுமோர்
 தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்
 புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #26 on: July 07, 2012, 02:47:06 PM »
2.27 நன்றியில் செல்வம்
 
261. அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
 பொ஡஢தாள் விளவினை வாவல் குறுகா
 பொ஢தணிய ராயினும் பீடிலார் செல்வம்
 கருதும் கடப்பாட்ட தன்று.
 
262. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
 கள்ளிமேல் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
 செல்வம் பொ஢துடைய ராயினும் கீழ்களை
 நள்ளார் அறிவுடை யார்.
 
263. மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்,
 வல்லு஡ற் றுவா஢ல் கிணற்றின்கண் சென்றுண்பர்
 செல்வம் பொ஢துடைய ராயினும் சேண்சென்றும்
 நல்குவார் கட்டே நசை.
 
264. புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே
 உணர்வ துடையா ஡஢ருப்ப - உணர்விலா
 வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே
 பட்டும் துகிலும் உடுத்து.
 
265. நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
 கல்லார்க்கொன் றாகிய காரணம் - தொல்லை
 வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்
 நினைப்ப வருவதொன் றில்.
 
266. நாறாக் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்
 நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
 புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
 நன்மக்கள் பக்கம் துறந்து.
 
267. நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ
 பயவார்கண் செல்வம் பரம்பப் பயின்கொல்
 வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
 நயவாது நிற்கு நிலை.
 
268. வலவைக ளல்லாதார் காலாறு சென்று
 கலவைகள் உண்டு கழிப்பர் - வலவைகள்
 காலாறும் செல்லார் கருனையால் துய்ப்பவே
 மேலாறு பாய விருந்து.
 
269. பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
 மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்
 வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
 வண்மையும் அன்ன தகைத்து.
 
270. ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
 ஓதி யனையார் உணர்வுடையார் - து஡ய்தாக
 நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
 நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #27 on: July 07, 2012, 02:47:34 PM »
2.28 ஈயாமை
 
271. நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
 அட்டது பாத்துண்டல் அட்டுண்டல் - ஆட்டது
 அடைத்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு
 அடைக்குமாம் ஆண்டைக் கதவு.
 
272. எத்துணை யானும் இயைந்த அளவினால்
 சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர் - மற்றைப்
 பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
 அழிந்தார் பழிகடலத் துள்.
 
273. துய்த்துக் கழியான் துறவோர்க்கொன் றீகலான்
 வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
 பொருளும் அவனை நகுமே உலகத்து
 அருளும் அவனை நகும்.
 
274. கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
 உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து
 உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
 ஏதிலான் துய்க்கப் படும்.
 
275. எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
 அறுநீர்ச் சிறுகிணற் று஡றல்பார்த் துண்பர்
 மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர்
 கழிநல் குரவே தலை.
 
276. எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
 எனதென தென்றிருப்பன் யானும் - தனதாயின்
 தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
 யானும் அதனை அது.
 
277. வழங்காத செல்வா஢ன் நல்கூர்ந்தார் உய்ந்தார்
 இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
 காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
 யாப்புயந்தார் உய்ந்த பல.
 
278. தனதாகத் தான்கொடான் தாயத் தவரும்
 தமதாய போழ்தே கொடாஅர் - தனதாக
 முன்னே கொடுப்பின் அவர்கடியார் தான்கடியான்
 பின்னை அவர்கொடுக்கும் போழ்து.
 
279. இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக
 விரகிற் சுரப்பதாம் வண்மை - விரகின்றி
 வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
 கொல்லச் சுரப்பதாம் கீழ்.
 
280. ஈட்டலும் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
 காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
 குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
 உறைபதி மற்றைப் பொருள்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #28 on: July 07, 2012, 02:48:16 PM »
2.29 இன்மை
 
281. அத்திட்ட கூறை அரைச்சுற்ற வாழினும்
 பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
 ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
 செத்த பிணத்தின் கடை.
 
282. நீ஡஢னும் நுண்ணிது நெய்யென்பார், நெய்யினும்
 யாரும் அறிவர் புகைநுட்பம் - தோ஢ன்
 நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
 புகற்கா஢ய பூழை நுழைந்து.
 
283. கல்லோங் குயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
 செல்லாவாம் செம்பொறி வண்டினம் - கொல்லைக்
 கலாஅற் கிளிகடியுங் கானக நாட
 இலாஅஅர்க் கில்லை தமர்.
 
284. உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
 தொண்டரா யிரவர் தொகுபவே - வண்டாய்த்
 தி஡஢தரும் காலத்துத் தீதிலிரோ என்பார்
 ஒருவரும் இல்வுலகத் தில்.
 
285. பிறந்த குலமாயும் பேராண்மை மாயும்
 சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்கருவி
 கன்மேல் க்ழுஉங் கணமலை நன்னாட
 இன்மை தழுவப்பட் டார்க்கு.
 
286. உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
 உள்ளூ ஡஢ருந்துமோன் றாற்றாதான் - உள்ளூர்
 இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
 விருந்தினன் ஆதலே நன்று.
 
287. நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்
 கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர் - கூர்மையின்
 முல்லை அலைக்கும் எயிற்றாய். நிரப்பென்னும்
 அல்லல் அடையப்பட் டார்.
 
288. இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது
 முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
 நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
 கெட்டாற்று வாழ்க்கையே நன்று.
 
289. கடகம் செறிந்ததங் கைகளால் வாங்கி
 அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா
 உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
 துப்புரவு சென்றுலந்தக் கால்.
 
290. ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
 பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் - நீர்த்தருவி
 தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட
 வாழாதார்க் கில்லை தமர்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாலடியார்
« Reply #29 on: July 07, 2012, 02:50:56 PM »
2.30 மானம்
 
291. திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
 பெருமிதம் கண்டக் கடைத்தும் - எ஡஢மண்டிக்
 கானந் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
 மான முடையார் மனம்.
 
292. என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
 தம்பா டுரைப்பரோ தம்முடையார் - தம்பாடு
 உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு
 உரையாரோ தாமுற்ற நோய்.
 
293. யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
 காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப்
 புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
 மறந்திடுக செல்வர் தொடர்பு.
 
294. இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
 உம்மையும் நல்ல பயத்தலால் - செம்மையின்
 நானம் கமழும் கதுப்பினாய். நன்றேகாண்
 மான முடையார் மதிப்பு.
 
295. பாவமும் ஏனைப் பழியும் படவருவ
 சாயினும் சான்றவர் செய்கலார் - சாதல்
 ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
 அருநவை ஆற்றுதல் இன்று.
 
296. மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
 செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்
 நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
 செல்வரைச் சென்றிரவா தார்.
 
297. கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை
 இடையெலாம் இன்னாமை அஞ்சும் - புடைபரந்த
 விற்புருவ வேனெடுங் கண்ணாய் தலையெல்லாம்
 சொற்பழி அஞ்சி விடும்.
 
298. நல்லர் பொ஢தளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
 செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
 உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
 தலையாய சான்றோர் மனம்.
 
299. நச்சியார்க் கீயாமை நாணன்று நாணாளும்
 அச்சத்தால் நாணுதல் நாணன்றாம் - எச்சத்தின்
 மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
 சொல்லா திருப்பது நாண்.
 
300. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
 இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும் - இடமுடைய
 வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
 மானம் மழுங்க வா஢ன்.