Author Topic: குரு‌ப் பெயர்ச்சி ரா‌சி பல‌ன்க‌ள்! (28.5.2013 முதல் 12.6.2014 வரை)  (Read 3225 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
மங்களகரமான விஜய வருடம், வைகாசி மாதம் 14 - ம் தேதி செவ்வாய் கிழமை (28.05.2013) கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில், ஏழாம் ஜாமத்தில் பஞ்ச பட்சியில் கோழி துயில் கொள்ளும் நேரத்திலும், உத்தராயணப் புண்ய கால வசந்த ருதுவில் இரவு மணி 9.15க்கு பிரகஸ்பதி எனும் குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார்.

12.06.2014 வரை இங்கமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார். எந்த ஒரு கிரகமும் நீசம் அடையாத அனைத்து கிரகங்களும் நட்பு பெறும் நடுநிலை வீடான புதன் கிரகத்தின் மிதுனத்தில் குருபகவான் அமர்வதால் அனைத்து ராசியினருக்கும் மத்திப பலன்களே கிடைக்கும். அதாவது நற்பலன்கள் பெறப் போகும் ராசிக்காரர்களுக்கும் அளவாகவே நல்லது நடக்கும். அதேப்போல் கெடு பலன் ஏற்படப் போகும் ராசிக்காரர்களுக்கும் குறைவாகவே பாதிப்புகள் இருக்கும்.

இ‌ந்த குரு‌ப் பெய‌‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குருப் பெயர்ச்சி ராசி பலன் : மேஷம்!

நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து செல்வாக்கையும், பணவரவையும் தந்தார். வெளிவட்டாரத்திலும் உங்கள் கை ஓங்கியிருந்தது. பலரும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் விரய-பாக்ய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை இனி நம்ப வேண்டாம். பல வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

உரிமையில் மனைவி, சகோதரர் உங்களின் குறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்களும் இருக்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். திடீரென்று புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம்.

நண்பர்கள், உறவினர்களில் யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை கண்டுபிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும். அசைவ மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மூச்சு திணறல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்துப் போகும். மருத்துவரை ஆலோசித்து மருந்து உட்கொள்வது நல்லது.

மனைவிவழி உறவினர்களால் செலவினங்களும், அலைச்சலும் இருக்கும். ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வரும். அன்பும், அன்யோன்யமும் குறையாது. விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கவனக்குறைவால் இழக்க வேண்டி வரும். திருட்டு பயம் வந்து நீங்கும்.

குருபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஓரளவு பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்னையால் நிம்மதியிழப்பீர்கள். தந்தையாருடன் இருந்த கருத்து மோதல்கள் குறையும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். குருபகவான் 11-ம் வீட்டைப் பார்ப்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். மூத்த சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியாக இருந்த அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் திறமைகள் வெளிப்படும்.

எதிரிகளும் நண்பர்களாவார்கள். சொத்துகள் மூலம் திடீர் பணவரவு உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சகோதரங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனம் வாங்குவீர்கள்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போங்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும். வேற்றுமொழிப் பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் பாக்ய-விரையாதிபதியான குருவின் சாரத்திலேயே குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் ஓரளவு கைக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு புது வேலைக் கிடைக்கும். திருமணம், கோவில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். மகனின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பாதியில் நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும்.

வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகள் கொள்முதல் செய்யும் போது கவனம் தேவை. சந்தை நிலவரத்தை தெரிந்து செயல்படப்பாருங்கள். தள்ளுபடி, சலுகைகளை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சிலர் தன் பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள். அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.


உத்‌தியோகத்தில் விமர்சனங்களும், வீண் பழியும் வந்துச் செல்லும். திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும். அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டாம்.

கன்னிப்பெண்களே! புதிய நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். காதல் கசந்து இனிக்கும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதிப்பாருங்கள். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். கட்டுரை, பேச்சு, இலக்கிய போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் போராடி இடம் பிடிப்பீர்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவுக் கிட்டும். போட்டிகள் இருக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் உழைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரை தகுந்த ஆதாரமில்லாமல் தாக்கிப் பேச வேண்டாம். சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். அக்கம்-பக்கம் நிலத்தாரை அனுசரித்துப் போங்கள். மரப்பயிர் லாபம் தரும்.

இந்த குரு மாற்றம் ஏமாற்றங்களையும், எதிலும் தாமதத்தையும் ஏற்படுத்தினாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தால் மகிழ்ச்சியை தரும்.

பரிகாரம்:

முருகன்.
« Last Edit: February 22, 2014, 12:10:14 PM by Maran »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : ரிஷபம்!

விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்கள். அடுத்தத்தடுத்து வேலைகள் வந்தாலும் அசராமல் முடிப்பவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்குள் உட்கார்ந்துக் கொண்டு எப்போதும் மருந்து, மாத்திரையுமாக உங்களைப் பாடாய்ப்படுத்தினாரே! குருபகவான் குடும்பத்தில் சாதாரணமாக பேசினாலும் சண்டையில் முடிந்ததே! அவமானங்களாலும், பணப்பற்றாக்குறையாலும் ஓடி, ஒதுங்கினீர்களே! திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்பட்டீர்களே!

சந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிந்தீர்களே! ஈகோவால் சில நல்ல வாய்ப்புகளை இழந்தீர்களே! தாழ்வுமனப்பான்மையால் தள்ளியிருந்தீர்களே! இப்படி உங்களை சிக்க வைத்து வேடிக்கைப் பார்த்த குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் புயல் வீசிய வீட்டில் அமைதி திரும்பும்.

எப்போது பார்த்தாலும் முக வாட்டத்துடனும், ஒருவித பதட்டத்துடனும் வலம் வந்தீர்களே! இனி அந்த பயம் நீங்கும். முகம் மலரும். தோற்றப் பொலிவுக் கூடும். பெரிய நோய் இருப்பதை போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். அவர்களின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள், கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களிடமிருந்து விலகுவீர்கள். முன்கோபத்தால் நல்ல நண்பர்கள், வி.ஐ.பிகளையெல்லாம் இழந்தீர்கள்! இனி கனிவாக பேசுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள்.

குரு பகவான் ஆறாவது வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற பயம் நீங்கும். எதிர்ப்புகள் அடங்கும். வழக்கு சாதகமாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தோலில் இருந்த நமைச்சல், தேமல், முடி உதிர்தல் நீங்கும். குருபகவான் எட்டாவது வீட்டை பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மூச்சுத் திணறல், மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவுகள் நீங்கும்.

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழடைவீர்கள். புது வேலைக் கிடைக்கும். சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களை தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் சப்தம-விரையாதிபதியான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சகோதரர் உதவுவர்.

உங்களின் பலவீனத்தை சரி செய்துக் கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மாமனார், மாமியார் உதவுவார்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக முடியும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை விலகும்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. மறைமுக எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். சொத்து சேரும். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வாகனம் வாங்குவீர்கள்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் அஷ்டம-லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் ஓய்வெடுக்கமுடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். புது பொறுப்புகள், பதவிகளை ஏற்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பயணங்கள், வீண் செலவுகள், ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் வந்துச் செல்லும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.

வியாபாரத்தில் உப்பு விற்கப் போய் மழை வந்ததே! ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! இடைத்தரகர்களை நம்பி ஏமாந்தீர்களே! கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட நட்டங்களை சரி செய்வீர்கள். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையாட்களை நீங்கி விட்டு தகுதியான, அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். சந்தையில் மதிப்புக் கூடும். ரியல் எஸ்டேட், கணினி உதிரி பாகங்கள், கட்டிடம், கெமிக்கல் வகைகளால் லாபம் கூடும்.

உத்‌தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டீர்கள், பழி வாங்கப்பட்டீர்களே! இனி இதுவரை இருந்து வந்த அவமானங்கள், ஏமாற்றங்கள் நீங்கும். உங்களின் கடின உழைப்பை அதிகாரிகள் புரிந்துக் கொள்வார்கள். வேலையில் ஆர்வம் பிறக்கும். சக ஊழியர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். சம்பளம் உயரும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். வருமானம் பெருகும்.

கன்னிப்பெண்களே! நல்லவர்களின் நட்பு கிட்டும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். உங்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் கணவர் அமைவார். சிலருக்கு வேற்றுமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மாணவ-மாணவிகளே! கணக்குப் பாடத்துடன் இருந்த பிணக்கு நீங்கும். இனி நினைவாற்றல் கூடும். முன்வரிசையில் அமருவீர்கள். படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்று எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள்.

கலைத்துறையினரே! மாறுபட்ட சிந்தனை பிறக்கும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மூத்த கலைஞர்களின் ஆதரவால் உங்களின் புது முயற்சிகள் வெற்றியடையும். வசதி, வாய்ப்புகள் பெருகும். கிசுகிசுத் தொல்லை நீங்கும்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நீங்கள் நெருக்கமாக இருந்தாலும், மாவட்டமும், வட்டமும் விரித்த வலையில் சிக்கினீர்களே! இனி பெரிய பொறுப்புகள் தேடி வரும். தேர்தலில் வெற்றி கிட்டும்.

விவசாயிகளே! மாற்றுப்பயிர் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். மகளின் திருமணத்தை விமர்சையாக முடிப்பீர்கள்.

இந்த குரு மாற்றம் சமுகத்தில் பெரிய அந்தஸ்தையும், வீடு, மனை, வாகன யோகத்தையும் அள்ளித் தரும்.

பரிகாரம்:

ஸ்ரீமுருகன்
« Last Edit: February 22, 2014, 12:08:15 PM by Maran »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : மிதுனம்!

மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக்கூடியவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண் அலைக்கழிப்பையும், செலவினங்களையும், தூக்கமின்மையையும் தந்த குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாக தொடர இருப்பதால் ஆரோக்‌கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

தலைச் சுற்றல், காய்ச்சல், யூரினரி இன்பெக்ஷன், மஞ்சள் காமாலை, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல் வரக்கூடும். காய்ச்சிய தண்ணீரை அருந்துங்கள். காய், கனி, கீரை வகைகளை ஒதுக்காதீர்கள். சுண்ணாம்பு, நார் சத்துள்ள காய்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ‘‘ஜென்மத்தில் சீதையை ராமர் சிறை வைத்தது போல்’’ என்ற பாடல்படி கணவன்-மனைவிக்குள் பனிப்போர் அதிகரிக்கும். ஒரே வீட்டில் இருந்துக் கொண்டே ஒருவருக்கொருவர் சில நாட்களில், சில நேரங்களில் மௌனமாக இருக்க வேண்டி வரும். பெரிய நோய் இருப்பதைப் போல் பயம் வந்துப் போகும்.

மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வங்கி கணக்கில் போதிய பணம் இருக்கிற என பார்த்து காசோலை தருவது நல்லது. அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

குடும்பத்திலும் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். மனைவி உரிமையுடன் எதையாவது பேசினால் அதை லென்ஸ் வைத்து பார்த்து தப்புக் கண்டு பிடிக்காதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து பேசுவது நல்லது. உங்கள் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள்.

ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அடிக்கடி மனஅழுத்தங்களும் வரக்கூடும். குரு பகவான் 7-ம் வீட்டையும் பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்பு குறையாது. திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

குரு பகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் புத்திர பாக்யம் உண்டு. பிள்ளைகளின் உயர்கல்வி, உத்‌தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக அமையும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். பூர்வீக சொத்துப் பங்கு கைக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சகோதரங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

குரு உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பிதுர்வழி சொத்து பிரச்னை நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உயர்ரக ஆபரணம் வாங்குவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை இக்காலகட்டங்களில் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் செலவுக் கூடும்.

ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். மறைமுக எதிர்ப்பு, சிறுசிறு அவமானம் வந்துச் செல்லும். கை, காலில் அடிப்படக் கூடும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். சகோதரங்களால் சங்கடங்கள் வரும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சின்ன சின்ன மனசஞ்சலங்கள், வீண் டென்ஷன், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்துச் செல்லும். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். உங்கள் இளமைக் காலத்துடன் அவர்களை ஒப்பட்டுப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். உறவினர்களுடன் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. இக்காலக்கட்டத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு யூரினரி இன்பெக்ஷன், செரிமானக் கோளாறு, தோல் நோய் வந்து நீங்கும்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் சப்தம-ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மனைவியுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தாக இடமாற்றம் வரும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். இன்காலக்கட்டத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்‌கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வீண் பழி, ஏமாற்றம், பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கடையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்களால் விரையம் ஏற்படும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து அறிமுகமில்லா தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களுடன் சச்சரவுகள் வரும். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி, எரி பொருள் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.


உத்‌தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் திறமையை சோதிப்பார்கள். வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். அலுவலகத்தில் அநாவசியப் பேச்சு வேண்டாமே. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். நீங்கள் செய்து முடித்த வேலைக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உயரதிகாரிகளால் அவ்வப்போது அலைக்கழிக்கப்பட்ட பின்னர் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! மாதவிடாய்க் கோளாறு, மூச்சுத் திணறல் வந்து நீங்கும். காதல் விவகாரங்களில் சிக்காதீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரை தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம். வேலைத் தாமதமாக கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதி பாருங்கள். சிலர் விடுதியில் தங்கி படிக்க வேண்டி வரும். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தகவல் தருவது நல்லது. உட்கட்சி பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ளவேண்டாம். சகாக்கள் சிலர் உங்கள்மீது அதிருப்தியடைவார்கள்.

கலைத்துறையினரே! புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.

விவசாயிகளே! எலித் தொல்லை அதிகமாகும். கரும்பு, தேக்கு லாபம் தரும். குறுகிய காலப் பயிர்களால் நட்டம் வரும்.

இந்த குரு பெயர்ச்சி எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தையும், கேள்விக்குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதன் மூலமாக ஓரளவு சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:

மேத்தா தட்சிணாமூர்த்தி.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : கடகம்!

தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படும் நீங்கள், வாக்கு சாதுர்யத்தால் வாதங்களில் வெல்வீர்கள். பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளை தந்த குருபகவான் இப்போது 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் விரைய ஸ்தானமான 12-ம் வீட்டில் நுழைவது ஒரு வகையில் நல்லது தான். உங்களின் பாதக ஸ்தானமான 11-ம் வீட்டை விட்டு குரு விலகுவதால் உங்களுக்கு பணவரவு குறையாது. ஷேர் மூலமும் பணம் வரும்.

ஆனால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுபச் செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய நண்பர்களால் உதவியுண்டு. இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில் நெடுந்தூரம் பயணிப்பதை தவிர்க்கப்பாருங்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.

நீண்ட நாட்களாக போக நினைத்த புகழ் பெற்ற அண்டை மாநிலப் புண்ணிய‌‌த் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும்.

முன்பின் அறியாதவர்கள் நயமாகப் பேசுகிறார்கள் என்று நம்பி குடும்ப அந்தரங்க விஷயங்களையோ, தன் சொந்த விஷயங்களையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து கடந்த கால சுகமான அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். பழைய நூல்கள் படிப்பதில் ஆர்வம் பிறக்கும். பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள்.

தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கனவுத் தொல்லை அதிகரிக்கும். குரு பகவான் உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் புதுசு வாங்குவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில், அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். புது பொறுப்புகள், பதவிகள் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, வேலை கிடைக்கும். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். என்றாலும் தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். தங்க நகைகளை கவனமாக கையாளுங்கள்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் சஷ்டம-பாக்யாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புகழ், கௌரவம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி கிடைக்கும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஆனால் செலவுகளும் காத்துக் கொண்டிருக்கும். சொத்து வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களை தெரிந்துக் கொள்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். துணி, மின்னணு, மின்சார சாதனங்கள், புரோக்கரேஜ், துரித உணவு வகைகளால் லாபமடைவீர்கள். வேலையாட்கள் சில சமயங்கள் பொறுப்பில்லாமல் நடந்துக் கொள்வார்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்ளள். வேற்றுமாநிலம், வெளிநாட்டிலிருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.


உத்‌தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருந்தாலும் இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உங்களை சிலர் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. சில சலுகைகள் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். காதல் கைக்கூடும். சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வேலை நிமித்தம் காரணமாக பெற்றோரை விட்டு பிரிந்து வெளிநாடு செல்வீர்கள். கூடுதல் மொழி கற்பீர்கள். திருமணம் தடைப்பட்டு முடியும்.

மாணவ-மாணவிகளே! கெட்ட நண்பர்களை தவிர்க்கப்பாருங்கள். எல்லாம் தெரிந்தது தானே என்று இருந்துவிடாதீர்கள். விடைகளை எழுதி பாருங்கள். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களை கேட்டறிவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். சின்ன சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள். வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ள வேண்டாம். தொகுதி மக்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொண்டு நெருக்கமாவீர்கள்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். பக்கத்து நிலத்தை வாங்குவீர்கள்.

இந்த குரு மாற்றம் புதிய திட்டங்களை நிறைவேற்ற உதவுவதுடன் ஓரளவு வசதி, வாய்ப்புகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

சிவன்-தட்சிணாமூர்த்தி.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : சிம்மம்!

எறும்புபோல் அயராது உழைத்து, தேன்போல் சேமிக்கும் இயல்பு உடைய நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ல் அமர்ந்திருந்த குருபகவான் உங்களை பல பிரச்னைகளில் சிக்க வைத்து, பல வகையிலும் பாடாய்படுத்தினர். உங்களுக்கு வர வேண்டிய பணம் வராமல் போனதால் நீங்கள் வாங்கியிருந்த இடத்தில் திருப்பித் தர முடியாமல் திண்டாடினீர்களே! இது நாள் வரை காப்பாற்றி வைத்திருந்த கௌரவத்தை இழக்க வேண்டி வந்ததே! குடும்பத்தில் உள்ளவர்களும், உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் போனார்களே! சொந்த-பந்தங்களெல்லாம் பார்த்தும் பார்க்காமலும் சென்றார்களே!

பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதையாக எல்லாம் தலைக்கீழாக மாறியதே! பிள்ளைகளாலும் சிரமப்பட்டீர்களே! தலைக்குனிவையும், வீண் பழியையும் ஏற்படுத்திய குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் அமர்வதால் பட்டுப் போன மரம் மீண்டும் துளிர்ப்பது போல இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். திக்கு திசையறிந்து இருட்டிலிருந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள்.

இனி தொட்ட தெல்லாம் துலங்கும். சின்ன வேலையை கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! பல மாதங்களாக அரைக்குறையாக இருந்த காரியங்களையெல்லாம் உற்சாகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து உயரும். மற்றவர்களின் தயவின்றி தீர்க்கமாக யோசித்து தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க அதிகாரிகள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும்.

பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். மூத்த சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். உங்களின் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். கனிவான பேச்சால் வி.ஐ.பிகள் மனதில் இடம் பிடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

வழக்கில் வெற்றி உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மெச்சும்படி மகளின் திருமணமத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். இனி பொறுப்பாக நடந்துக் கொள்வார். குடும்பத்துடன் குலதெய்வக் கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்துவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் சுக-பாக்யாதிபதியான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தாயாருக்கு இருந்த மூட்டு வலி, முதுகு வலி நீங்கும்.


அவருடன் இருந்த மனஸ்தாபம் விலகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். கடன் பிரச்னையை தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர் ஆதரவாக இருப்பார்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பெரிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்கள் பூர்வ புண்ய-அஷ்டமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் மருத்துவரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வதந்திகளை நம்பி உறவுகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். திடீர் பயணங்கள், செலவுகள் வரும். வாகனத்தில் செல்லும் போது கவனத்தை சிதற விடாதீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஓய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டி வரும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். காய்ச்சல், யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். ஆனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்குக் கூடும். யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம்.

வியாபாரத்தில் இதுவரை முடங்கிக் கிடந்தீர்களே! பாக்கிகள் வசூலாகாமல் தவித்தீர்களே! வேலையாட்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் இருந்ததே! இனி எல்லாம் மாறும். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வேலையாட்கள் உங்கள் மனநிலையைப் புரிந்துக் கொண்டு உங்கள் வேலைச்சுமையை குறைப்பார்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். வியபார சங்கத்தில் முக்கிய பொறுப்பில் அமர்வீர்கள். கடையை உங்கள் ரசனைக் கேற்ப மாற்றுவீர்கள். பழைய பாக்கிகள் வேகமாக வசூலாகும். பங்குதாரர்களால் இருந்த பிரச்னைகள் ஓயும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். கம்யூனிகேஷன், புத்தகம், ஷேர், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் லாபம் பெருகும்.


உத்‌தியோகத்தில் பலவிதங்களிலும் அசிங்கப்பட்டீர்களே! தகுதியற்றவர்களிடமெல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருந்ததே! அலுவலகத்தில் இனி மதிக்கப்படுவீர்கள். மூத்த அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். உங்களைப் புரிந்துக் கொள்ளும் புது அதிகாரி வந்து சேருவார்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப்பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். அழகு, ஆரோக்யம் கூடும். தோழிகளுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே, நமக்கில்லையே என்று கலங்காதீர்கள். தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக முடியும். வேலைக் கிடைக்கும்.

மாணவ--மாணவிகளே! இனி நினைவாற்றல் கூடும். வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஸ்பெஷல் கோச்சிங்க் கிளாசஸ் சென்று வருவீர்கள். நுழைவுத் தேர்விலும் வெற்றி கிடைக்கும்.

கலைத்துறையினர்களே! புதிதாக யோசிப்பீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். அரசு கவுரவிக்கும். மூத்த கலைஞர்கள் உங்களுக்காக பரிந்து பேசுவார்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

அரசியல்வாதிகளே! செல்வாக்குக் கூடும். புது பொறுப்புகள் ஏற்பீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். சகாக்கள் மத்தியில் ஆதரவுக் கூடும். தேர்தலில் வெற்றி உண்டு.

விவசாயிகளே! அடகிலிருந்த பத்திரத்தை மீட்பீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். விளைச்சல் அதிகரிப்பதால் சந்தோஷமடைவீர்கள். அரசாங்க சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன் அடுத்தடுத்து வெற்றிகளையும் பணப்புழக்கத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்:

சிவன்-தட்சிணாமூர்த்தி.
« Last Edit: February 22, 2014, 12:23:54 PM by Maran »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : கன்னி!

எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் போக்கு உடையவரான நீங்கள் நல்லது கெட்டது தெரிந்து செயல்படுபவர்கள். கடந்த ஓராண்டு காலமாக 9-ம் வீட்டில் அமர்ந்திருந்த குரு ஏழரைச் சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவு குறைத்ததுடன் சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி தந்த குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் 10-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் நீங்கள் கொஞ்சம் நிதானித்து செயல்பட வேண்டும். சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.

உத்‌தியோகம், பதவி, கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்றெல்லாம் கலங்க வேண்டாம்! உங்கள் ராசிநாதனான புதனின் மற்றொரு வீடான மிதுனத்தில் குரு அமர்வதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வி.ஐ.பிகளின் ஆதரவுக் கிட்டும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை அமையும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை பார்க்க வேண்டி வரும். சில சமயங்களில் எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் மனஇறுக்கத்திற்கு ஆளாவீர்கள்.

தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். அவ்வப்போது ஆழ்மனதில் ஒருவித பயம் வந்து நீங்கும். குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் சமயோஜித புத்தி வெளிப்படும். சாதுர்யமாகவும், இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மழலை பாக்யம் கிடைக்கும். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

குரு ஏழாம் பார்வையால் சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவருக்கு இருந்த நோய் குணமாகும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

குரு 9-ம் பார்வையால் 6-ம் வீட்டை பார்ப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல பெண் அமையும். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயம் பேசப் போய் பெயர் கெடும். ஆன்மிக பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். சகோதரங்களுக்கு இருந்த பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் திருதியாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப்பற்றாக்குறை அதிகரிக்கும்.

சிறுசிறு விபத்துகள், முன்கோபம், திடீர் பயணங்களால் செலவுகள், பாகப்பிரிவினை, சொத்துப் பிரச்னைகள் வந்துச் செல்லும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். யாருக்காவும் சாட்சி, கேரண்டர் கையப்பமிட வேண்டாம். அலைப்பேசியில் பேசிக் கொண்டே சாலைகளை கடக்க வேண்டாம்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பூர்வீக சொத்தை விற்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பார்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் சுக-சப்தமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால் உத்‌தியோகத்தில் வீண் பழி, அடிக்கடி இடமாற்றம் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துப் போகும். எந்த சூழ்நிலையிலும் மனைவியை மரியாதைக் குறைவாக பேச வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, பைப்ராய்டு பிரச்னைகள் வந்துச் செல்லும். சிலர் உங்களைப் பற்றி அவதூறுப் பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். சிறுசிறு அவமானம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். தாயாருடன் மனத்தாங்கல் வரும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் பணவரவு, சொத்து சேர்க்கை உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வேற்றுமதத்தவர் வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலமும் பணம் வரும். புது வேலைக் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள்.

வியாபாரத்தில் பெரியளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடிரென்று பணியை விட்டு விலகுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். புது முதலீடுகள் வேண்டாம். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் சம்பாதிப்பீர்கள்.

10-ம் வீட்டில் குரு அமர்வதால் உத்‌தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். விரும்பத்தாக இடமாற்றமும் இருக்கும். பாராட்டுகள் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளுடன் பணிந்துப் போங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள சற்று தாமதமாகி கிடைக்கும். சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டி வரும். வேலைக் கிடைக்கும். தள்ளித் தள்ளி போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக முடியும். பெற்றோரை பகைத்துக் கொள்ள வேண்டாம். காதல் விவகாரங்கள் வேண்டாமே! வெளி நாட்டில் வேலை, மேற்கல்வி அமையும்.

மாணவ-மாணவிகளே! கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலால் பதவியை இழக்க வேண்டி வரும். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள். உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும்.

கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். எதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும்.

விவசாயிகளே! தோட்டப் பயிர்களால் லாபமடைவீர்கள். பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்துப் போவது நல்லது.

இந்த குருமாற்றம் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிய வைப்பதாகவும், சாதிக்க வேண்டுமெனில் சகிப்புத் தன்மையையும், விடாமுயற்சியும் அவசியம் என்பதை அறிய வைக்கும்.

பரிகாரம்:

சிவன்-தட்சிணாமூர்த்தி.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : துலாம்!

நல்ல நிர்வாகத் திறனும், பரந்த அறிவும் கொண்ட நீங்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியும் அசாத்தியத் திறனுள்ளவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8-ல் மறைந்து வரவுக்கு மிஞ்சிய செலவுகளை ஏற்படுத்தினாரே! ஏகப்பட்ட மனஇறுக்கங்களையும், கவலைகளையும் குருபகவான் கொடுத்தாரே! சேமிப்புகளை எல்லாம் கரைத்தாரே! மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட்டு சிக்கினீர்களே! தேனொழுக பேசி உங்களைப் பயன்படுத்திக் கொண்டு கறிவேப்பிலையாக தூக்கி எறிந்தார்களே! ஒருவரையும் இந்த உலகில் நம்ப முடியவில்லையே என்று தனியாக உட்கார்ந்து புலம்பினீர்களே!

நமக்கேன் வம்பு என்று சில இடங்களில் மௌனமாக இருந்த போதெல்லாம் தலைக்கனம் பிடித்தவன் என்று பட்டம் சூட்டப்பட்டீர்களே! 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் பாக்ய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால் இனி தொலை நோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிரச்சனைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வு தேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணருவீர்கள். 'ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு' என்ற பழமொழிக்கேற்ப திடீர் சொல்வாக்கையும், வசதி, வாய்ப்புகளையும் தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள்.

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இருவரும் மனம் விட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபம் தெரிந்து இனி நடந்துக் கொள்வீர்கள். சகோதரங்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணருவார்கள்.

குரு பகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் கௌரவப் பதவிகள் வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். ஊர் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நெடுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். இளைய சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் அறிவுப் பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள்.

பணவரவு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். என்றாலும் மனைவியுடன் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள். அவருக்கு கர்பப்பை கட்டி, மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். வாயுக் கோளாறு, தலைச் சுற்றல், யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். முன்னேற்றம் தடைபடாது. எதிர்பார்த்த பணம் வரும்.

29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் திருதியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். என்றாலும் வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அடுத்தடுத்து வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும். யாரும் தன்னை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை, தன்னை யாரும் மதிக்கவில்லை என்றெல்லாம் சில நேரங்களில் நினைப்பீர்கள். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர்களில் சிலர் நன்றி மறந்துப் பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆடர்கள், ஏஜென்டுகள் வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் பணிந்து வருவார். உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரக்கூடிய பங்குதாரரும் அறிமுகமாவார். இரும்பு, ரியல் எஸ்டேட், சிமெண்ட், அழகு சாதனப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும்.


உத்‌தியோகத்தில் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இழந்த பொறுப்புகளை மீண்டும் பெறுவீர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். பழைய சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ற நல்ல மணமகன் அமைவார். ஆரோக்யம் கூடும். புது வேலைக் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

மாணவ-மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள். ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணர்வர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சகாக்களின் ஆதரவுக் கிட்டும். தொகுதி மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கற்பனைத் திறன் வளரும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள். ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். நெல், வாழை, காய்கறி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

இந்த குரு மாற்றம் சிதறிக் கிடந்த உங்களை சீராக்குவதுடன் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.

பரிகாரம்:

சிவன், நந்தி.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : விருச்சிகம்!

கடல் போல் விரிந்த மனசும், கலகலப்பாக பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுபவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சியையும், ஓரளவு பணவரவையும் தந்த குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை 8-ம் வீட்டில் மறைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பழைய நண்பர்கள், உறவினர்களுடன் சின்ன சின்ன மோதல்கள் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் சில இடங்களில் வாக்குத் தவற வேண்டி வரும்.

தங்க நகைகள் களவுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்த்துவிடுங்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். தகுதியில் குறைந்தவர்கள், வயதில் குறைந்தவர்களையெல்லாம் அனுசரித்துப் போக வேண்டி வரும். உங்களின் இலக்கை போராடி பிடிக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். என்றாலும் வீண் சந்தேகத்தால் அவ்வப்போது விவாதங்கள் வரும். எந்த பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசுவது நல்லது.

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பாதீர்கள். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். ஸ்திர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் உபய வீட்டில் மறைவதால் அவ்வப்போது நல்லது நடக்கும்.

குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் சாணக்கியத் தனமாகப் பேசி பல நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். இழுபறியாக இருந்த அரசு காரியங்கள் விரைந்து முடியும். தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் அசதி, சோர்வு, டென்ஷன் விலகும். தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தாய்வழி சொத்துப் பிரச்னை தீரும். பழைய வாகனத்தை விற்று புதிதாக வாங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள்.

குரு உங்கள் 12-ம் வீட்டையும் பார்ப்பதால் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். பூர்வீக சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாங்குவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.


அழகு, இளமைக் கூடும். பேச்சில் கம்பீரம் தெரியும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். தூக்கம் குறையும். காலில் அடிப்படும். புது வேலைக் கிடைக்கும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். எதிலும் வெற்றி கிட்டும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்‌தியோகம் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கூடாப்பழக்க வழக்கங்கள் நீங்கும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றிவிடுவீர்கள். உங்களிடம் இருக்கும் சின்ன சின்ன பலவீனங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவி, பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். இளைய சகோதரியின் திருமணத்தை நடத்துவீர்கள்.

குரு 8-ல் மறைவதால் வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். மக்களின் ரசனையை அறிந்து செயல்படுங்கள். சில சூட்சுமங்களைத் தெரிந்துக் கொள்வீர்கள். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களுக்கு அதிக முன் பணம் தர வேண்டாம். அவர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக நடத்துங்கள். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். சந்தை நிலவரத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை தாமதித்து செலுத்த வேண்டி வரும். பங்குதாரர்களால் இருந்த கெடுபிடிகள் விலகும். இனி உதவிகரமாக இருப்பார்கள். மூலிகை, தேங்காய் மண்டி, எலக்ட்ரிக்கல், துரித உணவகங்கள், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள்.


உத்‌தியோகத்தில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலதிகாரியிடம் கொண்டு செல்ல வேண்டாம். கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். முன்பு உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி இப்போது உங்களை ஆதரிப்பார். உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதிதாக அறிமுகமாகும் ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். புது சலுகைகளும், பதவிகளும் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே! யதார்த்தமாகப் பேசி எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். திருமணம் தாமதமாகி முடியும். வேலைக் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். கணக்கும் கொஞ்சம் கசக்கும். அரட்டைப் பேச்சை தவிருங்கள். சந்தேகங்களை கேட்பதில் தயக்கம் வேண்டாம். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு பெறுவீர்கள். ஆசிரியரின் ஆதரவு உண்டு.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு வேறுசிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு.

அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி சாதிப்பீர்கள். சகாக்களுடன் உரிமையாகப் பேசி கோஷ்டிப் பூசலை சரி செய்வீர்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும்.

விவசாயிகளே! தக்காளி, வெண்டை, பீன்ஸ், எள் வகைகளால் லாபம் உண்டு. கிணறை மேலும் ஆழப்படுத்துவீர்கள். நீர் சுரக்கும்.

இந்த குரு மாற்றம் கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.

பரிகாரம்:

ஸ்ரீஹயக்ரீவர்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : தனுசு!

வீரத்துடன் விவேகமாகவும் செயல்படும் நீங்கள், செய்நன்றி மறவாதவர்கள். கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பீர்கள். ஏறக்குறைய கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து ஆறாக்கி, வேறாக்கி உங்களை கூறு போட்டு பார்த்த குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆள இருக்கிறார். முதலில் உங்கள் செல்போனின் ரிங்க் டோனை மாற்றுங்கள். குளியலறைப் பாடகராக இருந்த நீங்கள், கடந்த ஓராண்டு காலமாக முணகிக் கொண்டும், முகம் வாடியும் இருந்தீர்களே! இனி பாட ஆரம்பிப்பீர்கள்.

எதிலும் ஆர்வமில்லாமல் எதையோ இழந்ததைப் போல் சோர்ந்து, வதங்கியிருந்தீர்களே! இனி உற்சாகம் பிறக்கும். பெற்ற பிள்ளையிடம் கூட பேசுவதற்கு பயந்து நடுங்கினீர்களே! உறவினர், நண்பர்களெல்லாம் வெற்றிலை, பாக்கிற்கு பதிலாக உங்கள் வீட்டு விஷயங்களை தானே மென்றார்கள். பலரால் பகடைக்காயாக உருட்டப்பட்டீர்களே! எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததைப் போல ஒரு வெறுமையை உணர்ந்தீர்களே! கொடுத்தப் பணத்தை கேட்கப் போய் பொல்லாப்பானதே! அடிக்கடி விபத்துகளையும் சந்தித்தீர்களே! வழக்குகளால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! இனி இந்த அவல நிலையெல்லாம் மாறும். வீட்டிற்கு ஏன் வருகிறோம் என்ற நிலை மாறி வீட்டிற்கு சீக்கிரம் செல்லலாம் என்ற நிலை இனி வரும்.

ஈகோவாலும், உப்புக்கு பிரயோஜனம் இல்லாத பிரச்னையாலும் கணவன்-மனைவி பிரிந்து இருந்தீர்களே! இனி சச்சரவு முடிந்து ஒன்று சேர்வீர்கள். மனம் விட்டுப் பேசுவீர்கள். தாம்பத்யம் இனிக்கும். முடங்கிக் கிடந்த வாகனம் ஓடும். இரண்டு, மூன்று முறை முயன்றும் முடியாமல் போன விஷயங்கலெல்லாம் இனி சாதகமாக உடனே முடியும். எதிரியைப் போல் பார்த்த பிள்ளைகள் இனி பாசமாக இருப்பார்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையால் பிரிந்துச் சென்று எதிர் முகாமில் இணைந்த உறவினர், நண்பர்கள் தன் தவறை உணர்ந்து வலிய வந்துப் பேசுவார்கள்.

குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சங்கம், டிரஸ்டில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நண்பர்களாவார்கள்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருந்து, மாத்திரை இனி குறையும். எளிய உடற்பயிற்சி, இயற்கை உணவு மூலமாகவே ஆரோக்யம் கூடும். மற்றவர்களைக் குறைக் கூறும் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.

குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதரங்களால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்களால் நன்மை உண்டு.

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் எங்குச் சென்றாலும் மதிக்கப்படுவீர்கள். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வசதிக் கூடும்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரையாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்யம் உண்டாகும்.


வீடு மாறுவீர்கள். தூரத்து சொந்தம் தேடி வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னை சுமூகமாகும்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிக் கிடைக்கும். நவீன ரக கேமரா செல்போன் வாங்குவீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் ராசிநாதனும்-சுகாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு கட்ட அப்ரூவல் கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தாயாருக்கு இருந்த முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். புது வேலைக் கிடைக்கும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் நினைத்தது நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் கடன் பிரச்னையாலும், பணப்பற்றாக்குறையாலும் புது முதலீடுகள் செய்ய முடியாமல் தவித்தீர்களே! இனி பண உதவி கிடைத்து தொழிலை விரிவுப்படுத்துவீர்கள். ஆர்வம் பிறக்கும். அதிரடி லாபம் உண்டு. பெரிய வாய்ப்புகளும் வரும். பாக்கிகளும் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பணியாட்களிடம் கறாராக இருங்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்புக் கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் ஓயும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். பெட்ரோல், மருந்து, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி, பண்ணை வகைகளால் ஆதாயம் உண்டு.


உத்‌தியோகத்தில் உயரதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் ஓரங்கட்டப்பட்டீர்களே! இனி மரியாதைக் கிடைக்கும். வேலைச்சுமை குறையும். உங்களை குறை சொன்னவர்களெல்லாம் இனி புகழ்வார்கள். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரமும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பனிப்போர், ஈகோ பிரச்னைகள் நீங்கும். நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்த இடம் மாற்றம் கேட்ட இடத்திற்கே கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி வரும்.

கன்னிப் பெண்களே! உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். விரக்தி, சோம்பலில் இருந்து மீள்வீர்கள். காதல் கனியும். திருமணமும் வெகு விமர்சையாக முடியும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! வகுப்பறையில் முதல் வரிசையில் அமருங்கள். நினைவாற்றல் கூடும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். சக மாணவர்களின் சந்தேகத்தை தீர்க்குமளவிற்கு முன்னேறுவீர்கள். இசை, இலக்கியம், ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுவீர்கள். வேற்றுமொழிகளில் பிரபலமாவீர்கள். உங்களின் கலை மற்றும் படைப்புத் திறன் வளரும். மூத்த கலைஞர்களை மதிப்பீர்கள். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! வேறு அணிக்கு மாற வேண்டி வரும். தொகுதி மக்கள் மத்தியில் புகழடைவீர்கள். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.

விவசாயிகளே! சூரிய காந்தி, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துகளால் ஆதாயம் உண்டு. பழைய கடன் தீரும்.

இந்த குரு பெயர்ச்சி பதுங்கியிருந்த உங்களை பளீச்சென முன்னேற வைப்பதுடன் காசு, பணம் சொத்து சுகத்தையும் தரும்.

பரிகாரம்:

பெருமாள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : மகரம்!

தென்றலாய் காணப்பட்டாலும் அவ்வப்போது புயலாய் மாறும் நீங்கள் பேச்சிலும், செயலிலும் வேகத்தைக் காட்டுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து வீடு, மனை சேர்க்கையையும், குழந்தை பாக்யத்தையும், ஓரளவு அடிப்படை வசதிகளையும் தந்த குருபகவான் இப்போது 28.05.2013 முதல் 12.06.2014 வரை 6-ம் வீட்டில் மறைவதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு கடுமையாகப் பேச வேண்டி வரும். நீங்கள் மாறிவிட்டதாக சிலர் சொல்லிக் கொள்வார்கள். முன்கோபம் அதிகமாகும்.

வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீட்டிலும் கழிவு நீர் குழாய் அடைப்பு, குடி நீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் அவ்வப்போது பழுதாகும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். மகனுக்கு, மகளுக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். பிள்ளைகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். எதிர்காலம் குறித்த முக்கிய விஷயங்களில் பிள்ளைகள் உங்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கக்கூடும்.

பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறையாகி வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சண்டை வரும். கணவன்-மனைவிக்குள் ஒளிவு, மறைவில்லாமல் பழகுவது நல்லது. வீண் சந்தேகமும், ஈகோ பிரச்னையாலும் பிரிவு வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். குடும்பத்தில் மாற்றி மாற்றி மருத்துவச் செலவுகள் வரும். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி குறைவாகவும், தாழ்வாகவும் நினைப்பதாக எண்ணுவீர்கள் அந்த தாழ்வுமனப்பான்மை வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். இதுநாள் வரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்றெல்லாம் நினைப்பீர்கள். போலியானவர்களை கண்டுபிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும். உறவினர்களுக்காக நாம் எவ்வளவு கொடுத்து உதவினாலும் நமக்கு நல்ல பெயர் இல்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.

குருபகவான் உங்களின் தனஸ்தானத்தை பார்ப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. சில இடங்களில் வளைந்துப் பேசி காரியத்தை முடிப்பீர்கள். 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் புது வேலை அமையும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வேலைச்சுமையை எளிதாக சமாளிப்பீர்கள். 12-ம் வீட்டையும் குரு பார்ப்பதால் வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். சாதுக்கள், சன்னியாசிகளின் ஆசி கிட்டும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு மாறுவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் சுக-லாபாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் பழைய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.


முக்கிய பதவி, பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வழக்கில் வெற்றி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். வீடு, வாகன வசதிப் பெருகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எப்போதும் மருந்தும், மாத்திரையுமாக இருந்த தாயார் சற்றே குணமடைவார். அவருடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். பக்கத்து வீட்டுக்காரருடன் மனத்தாங்கல் வரும்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நட்பு வட்டம் விரியும். கடனாக கேட்ட இடத்தில் பணம் வரும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். திருமணம் கூடி வரும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை, விரும்பத்தகாத இடமாற்றம் வந்துச் செல்லும்.

29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் திருதியாதிபதியும்-விரையாதிபதியும் குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் அலைச்சலும், செலவினங்களும் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம், விலை உயர்ந்த நகையை கவனமாக கையாளுங்கள். அரசு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சொத்து வகையில் வழக்கு வந்து நீங்கும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். இழுபறியாக இருந்த அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள்.

வியாபாரத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் செல்ல வேண்டாம். அப்படிப்பட்டவர்களின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். தள்ளுபடி விற்பனை மூலமாகவும், விளம்பர யுக்திகளை கையாண்டும் லாபம் அதிகரிக்க செய்வீர்கள். அக்கம்-பக்கம் கடைக்காரருடன் சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும். வேலையாட்களை விரட்டாதீர்கள். தொழில் ரகசியங்களை சொல்ல வேண்டாம். அரசாங்கத்தை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். மர வகைகள், ஸ்டெஷனரி, பதிப்பகங்களால், கமிஷன் லாபமடைவீர்கள். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் என செல்லாமல் முடிந்தவரை பேசி தீர்ப்பது நல்லது.


உத்‌தியோகத்தில் வீண் பழிகளை சுமக்க வேண்டி வரும். பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆனால் மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதலடைவீர்கள். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள பாக்கியையும் போராடி பெறுவீர்கள். பதவி உயர்வு தாமதமாக வரும்.

கன்னிப் பெண்களே! பெற்றோரை பகைத்துக் கொள்ளாதீர்கள். காதல் கசந்து இனிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் போராடி வெற்றி பெற்று புது வேலையில் அமர்வீர்கள். திருமணம் தாமதமாகி சிறப்பாக முடியும்.

மாணவ-மாணவிகளே! விளையாடும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படியுங்கள். விடைகளையும் எழுதி பாருங்கள். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும்.

கலைத்துறையினரே! உங்கள் படைப்பிற்கு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். கிசுகிசு தொல்லைகளால் டென்ஷனாவீர்கள்.

அரசியல்வாதிகளே! உங்கள் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவார்கள். கோஷ்டி பூசலாலும், எதிர்கட்சியினராலும் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
விவசாயிகளே! அகலக் கால் வைத்து கடன் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். காட்டு வெள்ளாமை வீட்டிற்கு வரும் வரை எதுவும் நிலையில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

இந்த குரு மாற்றம் நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக் கொடுப்பதுடன், பணத்தின் அருமையை புரிய வைப்பதாகவும் சகிப்புத் தன்மையால் கொஞ்சம் வளர்ச்சியையும் தரும்.

பரிகாரம்

சிவன்-தட்சிணாமூர்த்தி.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : கும்பம்!

மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் கொண்ட நீங்கள், துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங்கிகள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலா விதத்திலும் சின்னாபின்னமாக்கிய குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால் இனி நல்லதே நடக்கும். கடந்த ஓராண்டு காலமாக மருத்துவர்களே உங்கள் விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் மயங்கினார்களே! மருந்து, மாத்திரையால் வயிறும் புண்ணானதே! உருகுலைந்து போயிருக்கும் நீங்கள், இனி அழகு, ஆரோக்‌கியமடைவீர்கள்.

பெற்றவர்களே ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் நெய் என்று நடந்துக் கொண்டார்களே! அடிக்கடி தொல்லை தரும் வாகனத்தையும் மாற்றுவீர்கள். காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவாக இருந்ததே! இனி அமைதி திரும்பும். சிலர் பணம் கொடுத்து உதவுவார்கள் என்று நம்பி வீடு கட்டத் தொடங்கி முடிக்க முடியாமல் தவித்தீர்களே! இனி கட்டி முடித்து கோலாகலமாக கிரகப்பிரவேசம் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினை சுமூகமாகும். பூனையும், எலியுமாக இருந்த கணவன்-மனைவி இனி நகமும், சதையுமாக மாறுவீர்கள்.

குழந்தை இல்லாமல் கோவில், குளமென்றும் என்று சுற்றிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். தாயாருக்கு இருந்த நோய் குணமடையும். அவருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். அவ்வப்போது தூக்கம் வராமல் அவதிபட்டீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும்.

பிள்ளைகளின் உயர்கல்வி, உத்‌தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உறவினர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் அசிங்கப் பட்டீர்களே! இனி ஊரே மதிக்கும்படி பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

குரு பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் ரசனை மாறும். சுருங்கியிருந்த உங்கள் முகம் மலரும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். புது வீட்டில் குடிப்புகுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

குரு ஐந்தாம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் தந்தையுடனான மனத்தாங்கல் நீங்கும். இருவரும் மனம் விட்டு பேசுவீர்கள். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வெளிநாடு சென்று வருவீர்கள்.

பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சங்கம், டிரெஸ்ட் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் திருதியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.


வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். சகோதரங்கள் உறுதுணையாக இருப்பார்கள். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். என்றாலும் வேலைச்சுமை அதிகரிக்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பழைய கடனை நினைத்து சில நேரங்களில் அஞ்சுவீர்கள். வேற்றுமொழியினர் உதவிகரமாக இருப்பார்கள். காய்ச்சல், சளித் தொந்தரவு, நெஞ்சு எரிச்சல் வந்துப் போகும். என்றாலும் வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டும் முயற்சிகள் பலிதமாகும். அவசரத்திற்கு கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் தன-லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். மகளுக்கு வேலைக் கிடைக்கும். திருமணமும் கூடி வரும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வந்துச் செல்லும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வதந்திகளும் வரக்கூடும். முக்கிய சொத்துப் பத்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வையுங்கள். சில சமயங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். வருமான வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம்.

வியாபாரத்தில் கலையிழந்துப் போயிருந்த கடை இனி அதிக வாடிக்கையாளர்களின் வருகையால் கலைக்கட்டும். தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள். புது முதுலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள்.


உத்‌தியோகத்தில் நிலைப்போமோ, நிலைக்க மாட்டோமோ என்ற பயம் இனி நீங்கும். உங்களை அலைக்கழித்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் இனி உண்டு. புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் கனவு நனவாகும். அடி வயிற்றிலிருந்த வலி, தூக்கமின்மை விலகும். காதல் கனியும். விடுபட்ட பாடத்தில் தேர்ச்சி பெறுவீர்கள். திருமணம் தள்ளிக் கொண்டே போனதே! உங்கள் ஆசைப்படி கல்யாணம் முடியும்.

மாணவ-மாணவிகளே! நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். ஆசிரியரின் அன்பை பெறுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு பரிசு, பாரட்டு கிட்டும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கதவை தட்டும். வீடு வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளே! எதிலும் வெற்றி பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். கட்சியில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உங்களை மதித்துப் பேசுவார்கள். முக்கிய விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை இனி குறையும். பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும். மகசூல் பெருகும். கடன் தீரும்.

இந்த குரு மாற்றம் வாடிப் போயிருந்த உங்களை வளம் பெற வைப்பதுடன், மதிப்பு, மரியாதையையும், வசதி, வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்:

சிவன்-குருபகவான்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : மீனம்!

மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்து பார்ப்பதில் வல்லவர்களான நீங்கள் எங்கும், எதிலும் அழகுணர்வையே விரும்புவீர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிநாதனான குருபகவான் எந்த ஒரு வேலையையும் முழுமையாக முடிக்க விடாமல் தடுத்தார். சின்ன சின்ன வேலைகளைக் கூட போராடி முடித்தீர்கள். நாலாவிதத்திலும் யோசித்து குழம்பினீர்கள். இளைய சகோதரரால் செலவுகளும், அலைச்சலும் தான் மிஞ்சியது. சொந்த-பந்தங்களுக்காக செலவு செய்தும் நன்றியில்லாமல் போனதே!

இப்போது குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உள்ள காலக்கட்டம் வரை 4-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் ஓரளவு நீங்கும். இதுவரை தோல்வி என்றால் துவண்டீர்களே! இனி மாற்று வழி யோசிப்பீர்கள். நட்பு வட்டம் மாறும். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள். என்றாலும் நீங்கள் கொஞ்சம் முன்எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் 4-ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும், நடத்தை கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்.

திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும். மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும். குடும்பத்தில் பனிப்போர், ஈகோப் பிரச்னையால் போட்டா, போட்டிகள் அதிகரிக்கும். உத்‌தியோகத்தின் பொருட்டு அல்லது மனத்தாங்கலின் பொருட்டு கணவன்-மனைவி பிரிய வேண்டி வரும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி தாமதமாக கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் அல்லாதவர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்வீர்கள்.

தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கும் அவ்வப்போது நெஞ்சு வலி, கை, கால் வலி, அசதி வந்துப் போகும். தாயாருடன், தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். ஒரு பக்கம் பணவரவு இருந்தாலும் மறுபுறம் செலவினங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். வாகனத்தின் இன்சூரன்ஸ் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

விபத்துகள் வந்துப் போகும். கடந்த கால வெற்றிகளை நினைத்து அவ்வப்போது ஆறுதலடைவீர்கள். அதே நேரத்தில் நழுவிப் போன நல்ல வாய்ப்புகளையும் நினைத்து வருத்தப்படுவீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். புதிதாக சொத்து வாங்குவதற்கு முன்பாக தாய்பத்திரத்தை சரி பார்க்கவும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.


அரசாங்க அதிகாரிகள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்த மோதல்கள் விலகும். தந்தைவழி சொத்தை பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள்-. வேற்றுமதத்தவர்கள், மொழியினர்களால் ஆதாயமடைவீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரி செய்யாதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயம் பேசப் போய் பெயர் கெடும். கூடாப்பழக்கமுள்ளவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்.

29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும். பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வீட்டில் தள்ளிப் போன சுப காரியங்கள் ஏற்பாடாகும். தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்‌தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அரைக்குறையாக நின்ற கட்டி பணியை தொடங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். என்றாலும் பண விஷயத்தில் ஏமாந்துவிட வேண்டாம். ஷேர் மூலமாகவும் பணம் வரும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்களின் வசதி, வாய்ப்புகள் ஓரளவு பெருகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். மனைவிவழி உறவினர்கள் முக்கியத்தும் தருவார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சில நேரங்களில் எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள்.

வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசிக்க தவறாதீர்கள். அவசர முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்ளும் அறிவாற்றலைப் பெறுவீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். புது ஏஜென்சி யோசித்து எடுங்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள். உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக், ஆட்டோ மொபைல் வகைகளால் ஓரளவு லாபம் வரும்.

உத்‌தியோகத்தில் உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். வேலை நிலைக்குமோ, நிலைக்காதோ என்ற ஒரு பயம் இருந்துக் கொண்டேயிருக்கும். சம்பளம் உயரும். விரும்பத்தகாத இடமாற்றம் உண்டு. உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். ஆனால் சக ஊழியர்களுடன் பிரச்னைகள் வரும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும்.

கன்னிப் பெண்களே! தாயாருடன் மோதல் வரும். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. காதல் விவகாரத்தை தள்ளி வைத்து உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள்.

மாணவ-மாணவிகளே! லட்சியப்போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம். விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். போலியான நண்பர்களிடமிருந்து விடுபடுங்கள். உண்மையான நண்பர்களை உணர்ந்துக் கொள்ளுங்கள். சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள்.

கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள் வரக்கூடும். பரபரப்பாக இருப்பீர்கள். ஆனால் பணவரவு சுமார்தான். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும், எதிர்கட்சியினராலும் அமுக்கப்பட்டாலும் அனைத்தையும் முறியடித்து முன்னேறுவீர்கள். உண்ணா விரதம், ஊர் வலங்களை முன்னின்று நடத்தி புகழடைவீர்கள்.

விவசாயிகளே! மரப்பயிர் லாபம் தரும். பம்பு செட் அவ்வப்போது பழுதாகும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டையை பெரிது படுத்தாதீர்கள்.

இந்த குரு மாற்றம் உங்களை நாலாவிதத்திலும் சிரமப்பட வைத்தாலும், புதிய பாதையில் பயணித்து எதிர்நீச்சலில் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்:

ஸ்ரீபிரத்யங்கரா தேவி.