FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: சாக்ரடீஸ் on August 13, 2018, 01:47:29 PM

Title: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 13, 2018, 01:47:29 PM
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்

நாம் அறிந்த விளக்கம் :

மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையின் தன்மை நம்மையும் நம் குடும்பத்தையும் அதே நன்மையின் தன்மை கொண்டு உயர்த்தும் என்பது இதன் உண்மை விளக்கம் அல்ல.

விளக்கம் :

ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும். அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில் அவளை அவள் கணவன் நல்ல முறையில் பராமரிப்பான் எனில் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன் வளரும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 14, 2018, 10:56:57 AM
ஏறச் சொன்னால் எருது கோபம்இ இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்

நாம் அறிந்த விளக்கம் :

கால் ஊனமான ஒருவன் ஏர் பூட்டி உழவுத்தொழிலை மேற்கொள்ளும் போது அவனையும் மாடையும் இணைப்பது ஏர். கால் ஊனமானவனால் ஏரைத் தள்ளிக் கொண்டே நடக்க முடியாது. அவனை ஏரில் ஏற்றினால் மாடு எடை தாளாமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் அவன் கோவித்துக் கொள்வான். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவது ஏர்தான் என்பது நமக்கு விளங்கும். ஆக ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம். இறங்க சொன்னால் நொண்டிக்கு கோபம் என பழமொழியின் அர்த்தம் விளங்குகிறது

விளக்கம் :

ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும் மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும்இ இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம்இ அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள்இ தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல்இ ஏறினால் எருதுவுக்கு வலிக்கும்இ ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. ஆக மொத்தம் இந்த பழமொழியின் மூலம்இ நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும்இ சிலருக்கு தீமையும் பயக்கும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 15, 2018, 10:56:50 AM
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி  

நாம் அறிந்த விளக்கம் :

பேச்சு பெருசா இருக்கும் செயல்ல ஒண்ணும் இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான் இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.

விளக்கம் :

ஓட்டைக் கப்பலும் ஒன்பது மாலுமிகளும் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள் அது நாம்தான். குழப்பமாக இருக்கிறதா ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது. எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த ஓட்டை வழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள்.

Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 16, 2018, 10:55:58 AM
புல் தடுக்கிப் பயில்வான் போல  

நாம் அறிந்த விளக்கம் :

புல் தடுக்கி எங்கேயாவது யாரேனும் விழுந்திருப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சில நேரங்கள் சில பதங்கள் இவ்வாறு பழமொழிகளில் கலந்து விடுகிறது. புல் தடுக்கி என்பதை நம்பவே முடியாது. வேண்டுமானால் சிலவகை காட்டுப் புல்கள் அடர்ந்து புதராய் இருக்கும் இடத்தில் புல் இடறி வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். அப்படி ஒரு சம்பவத்தால் வந்ததுதான் இந்த பழமொழி. ஆனால் இதன் உண்மை விளக்கம் அல்ல
 


விளக்கம் :

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான். ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர் உடனே அதை வேரோடு பிடுங்கி எரித்து சாம்பலாக்கி - கரைத்துக் குடித்தாராம். எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது. இது தான் உண்மை விளக்கம்.

Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 17, 2018, 11:00:14 AM
பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ

நாம் அறிந்த விளக்கம் :

விருந்து நடக்கும் இடங்களில் சாப்பாட்டுக்கு முதல் வரிசையும் போரில் கடைசியாளாக இருப்பின் தற்காப்பதற்கு நல்லதும் என நேரிடையாக பொருள் கொள்ளப்படும் அதிக உலக வழக்கில் உள்ள பழமொழியாக இது அறியப்படுகிறது.
 


விளக்கம் :

இந்த பழமொழியின் உண்மையான வடிவம் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்பதாகும். இந்தப் பழமொழியை சாதாரணமாக உட்பொருள் கொண்டால் பந்திக்கு அமர்ந்து சாப்பிடுகையில் கை முந்தும். போர்க்களத்தில் வேலோஇ வாளோஇ வில்லுக்கோ கை பிந்தும். எவ்வளவு கை பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப் படை முந்தும். இதல்லாது இன்னொரு பொருளையும் இதனூடே சொல்வார்கள். அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளைப் பற்றி பாடி வைக்கையில் நமது வலது கையைப் பற்றி சொல்லும்போது பயன்படுத்தப்பட்ட வாக்கியமே இந்த பழமொழி. வில் அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் வில்லில் அம்பு வைத்து நான் இழுக்க கை பின்னே போகும். அதே கை உணவருந்தையில் முன்னே போகும். இதை அர்த்தம் கொண்டே இந்த பழமொழி பயன்படுத்தப்பட்டது.

Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 18, 2018, 05:21:57 PM
ஆறு கெட நாணல் விடுஇ ஊரு கெட நூல விடு  

நாம் அறிந்த விளக்கம் :

நேரடியாய் பழமொழியைப் பொருள் கொள்ளப் பார்த்தோமானால் ஆற்றை பாழாக்குவதற்கு நாணல் விட்டும் ஊரைக் கெட்டுப் போக செய்ய நூலை விடு என்பதாகவும் வரும். ஆனால் இந்த விளக்கம் உண்மை அல்ல.

 


விளக்கம் :

நூல் விட்ட ஊரும் நாணலற்ற ஆற்றுக்கரையும் பழுதாய் போகும் என்பதாய் அர்த்தம் கொள்ள வேண்டும். அதாவது படிப்பறிவில்லாத அதில் ஆர்வம் காட்டாத ஊர் எந்த வித முன்னேற்றமும் அடையாது. நாணல் போன்ற தாவர வகைகள் அதிகம் அடர்ந்திருக்கும் கரைப்பகுதி பலமுள்ளதாக இருக்கும். சீக்கிரம் ஆற்றினால் அரிக்கப்பட்டு கரைகள் பாதிக்கப்படாது என்பதாய் சொல்லப்பட்ட பழமொழி முன்னுக்கு பின் மாறி மருகி இவ்விதம் வந்து விட்டது.


Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 19, 2018, 10:57:08 AM
அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான்இ வாங்கவும் மாட்டான்  

நாம் அறிந்த விளக்கம் :

அரை குறையாய் கல்வி கற்றவனால் சந்தையில் எந்த பொருளையும் வணிகம் செய்திட இயலாது. அவனால் எந்த பொருளையும் திறமையாக வாங்கி வரவும் முடியாது. விற்று வரவும் முடியாது. நாம் இந்த பழமொழிக்கு நேரிடையாக உணரும் பொருள் இதுதான். ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.

விளக்கம் :

அரப்படிச்சவன் என்பது வழக்கு மொழியில் மாறிப்போன வார்த்தையாகி விட்டது. அந்தப் பழமொழியின் சரியான வாக்கியம்[highlight-text] அறம் படித்தவன் [/highlight-text]என்றிருக்க வேண்டும். அதாவது இலக்கிய நூல்கள் அல்லது வேதங்கள் சொல்லும் அறங்களை முழுமையாக கற்றவன் எல்லா வணிகமும் ஒழுங்காக செய்திட முடியாது. சில வியாபாரத்துக்கு சில நெளிவு சுளிவுகள் அறத்தைப் பொறுத்தவரை தவறாகப்படும். அதிகம் படித்த மேதாவி படித்து முடித்த பின் வணிகம் செய்ய நினைத்தான். அவன் சென்ற இடமோ தூத்துக்குடி. அங்கே மீன் வணிகம் செய்தால் பிழைக்கலாம். மீனைப் பிடிப்பதும் வெட்டுவதும் பாவம் என நினைத்தான். மீன் வியாபாரம் செய்யவில்லை. முத்து விற்க நினைத்தான். சிப்பிகளை கொன்றல்லவா முத்து எடுக்க வேண்டும். முத்து வியாபாரமும் செய்யவில்லை. உப்பு விற்கலாம் என்று நினைத்தான். உப்பளம் சென்று பார்க்கையில் ஆண்களும் பெண்களும் வெயிலில் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்ததும் யாரையும் வருத்திப் பொருள் சேர்த்தல் பாவம் என்று ஒரு நூலில் படித்தது நினைவுக்கு வந்தது. இப்படியாக எண்ணும் மேதாவிகளுக்கு சொல்லப்பட்ட பழமொழியே இது.
[/color][/b]
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 20, 2018, 11:28:21 AM
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்   

நாம் அறிந்த விளக்கம் :

வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்க கூடும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுஇ அவ்விதமே இன்று வரை விளக்கப்பட்டு கொண்டிருக்கிற பழமொழி இது. ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.


விளக்கம் :

இந்த பழமொழியில் அடி என்பது இறைவனின் திருவடியை குறிக்கிறது. துன்பங்கள் நேரும்போதுஇ எல்லாம் அவனே என இறைவனை நினைத்துக் கொண்டோர்க்கு எவ்வித துன்பமுமில்லை. அந்த இறைவனின் அருள் உதவுவது போல் யாரும் உதவ முடியாது என்பதை குறிக்கும் விதமாகவே சொல்லப்பட்ட பழமொழி இது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.


Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 21, 2018, 11:07:50 AM
உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு   

நாம் அறிந்த விளக்கம் :

மிக அழகான பெண்கள் பக்கம் திருப்பி விடப்பட்ட பழமொழிகளில் இதுவும் ஒன்று. உணவு நிறைய சாப்பிட்டால் பெண்கள் உடல் பெருத்து அழகற்றவர்களாகி விடுவார்கள் என்று பயந்தோ என்னவோ பழமொழியையே மாற்றி விட்டார்கள். இந்தப் பழமொழியின் உண்மையான வடிவமும் சொல்லப்படும் நீதியும் ஆண்களுக்குத் தான் என அறியும்போது இதில் உள்ள அறிவியல் தத்துவமும் ஆச்சரியத்தை தருகிறது.


விளக்கம் :

இந்த பழமொழியின் உண்மையான வடிவம் உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு என வந்திருக்க வேண்டும். பண்டி என்பது பெண்டீர் என மறுகி பெண்களுக்கு நல்லது என அறிவுறுத்தலாய் வந்துவிட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை குடல் இறக்க நோய் ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள். ஆக உண்டி சுருக்க பொதுவாய் சொல்லித் தரப்பட்ட பழமொழி பெண்களுக்கு மட்டும் என்றாகி விட்டது.



Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 22, 2018, 11:12:17 AM
அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது   

நாம் அறிந்த விளக்கம் :

ஊருக்கு ஊர் இனத்துக்கு இனம் வெவ்வேறு வார்த்தைகளால் பிணைத்து பயன்படுத்தப்படுகிறது. அதிகம் படிச்ச நாய் வேட்டைக்கு உதவாது என்பார்கள். இன்னும் சில இடங்களில் எல்லாம் தெரிஞ்சவர்தான் கழனிப் பானைக்குள்ளே கைய விட்டாராம் என்பார்கள். ஆக இதெல்லாம் குறிப்பது ஒன்றே ஒன்றுதான் ஆர்வகோளாறில் தெரியாத ஒன்றை செய்யப் போக அது வேறுவிதமான முடிவைத் தரும் என்பதே. ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.



விளக்கம் :

இந்த பழமொழி இந்த விளக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். அதாவது அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது என்பதுதான் சரியான பழமொழி. வட்டார வழக்கில் மருவி அது மேற்கண்டவாறு திரிந்தது. அதன் பொருள் ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் ஒரு சில பருக்கைககள் கஞ்சிக்குள் விழவே செய்யும். ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் விழுகின்றன. இதனை குறிக்கும் பழமொழி அறவடிச்ச என்பது அறப்படிச்ச என்றாகி முன் சோறு- மூஞ்சூறு ஆகிவிட்டது.



Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 23, 2018, 10:57:15 AM
ஆறிலும் சாவு நூறிலும் சாவு  

நாம் அறிந்த விளக்கம் :

மரணம் வருவதற்கு எந்த வயதும் ஒரு பொருட்டல்ல. ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.

விளக்கம் :

இந்த பழமொழிக்கான சம்பவம் மஹாபாரதத்திலிருந்து உதாரணம் காட்டப்படுகிறது. கர்ணணை குந்தி தேவி (போர் நிகழும்போது) தம் தார்மீக வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள். அதற்கு கர்ணன் தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள் ஆறு பேருடன் இருந்தாலும் சரி அல்லது கௌரவ சகோதரர்கள் நூறு பேர்களுடன் இருந்தாலும் சரி மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து செத்துப்போகிறேன் என்கிறான் கர்ணன். இதுவே இதன் விளக்கம் ஆகும்.



Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 24, 2018, 10:40:29 AM
வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்   

நாம் அறிந்த விளக்கம் :

மாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை. மருமகளை எப்போதாவது அடி கழுதையே என வர்ணிக்கப்படுவதுண்டு. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.
விளக்கம் :

பழமொழியில் [highlight-text]கழுதை என்பது கயிதை [/highlight-text]என வரவேண்டும். கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறி அவ்வப்போது துன்புறுத்துவது போல் மாமியார்கள் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருந்து பின் வம்பாய் வளர்ந்து கடைசியில் வேம்பாய் கசப்பது என்பது போல் வந்ததாலேயே இந்த பழமொழி தோன்றியது.


[/color][/b]
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 25, 2018, 10:46:59 AM
கோத்திரம் அறிந்து பெண் கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு  

நாம் அறிந்த விளக்கம் :

நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மருமகளாக்கி கொள்வதற்கும் அல்லது நல்ல குடும்பமா என ஆராய்ந்து பெண் கொடுப்பதற்கும்இ அடுத்து தானம் தந்தால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்காகவும் பொருள் தரும்படி இருப்பதாக சிலர் கருதுகின்றனர்.

விளக்கம் :

ஆனால் இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது. கோ என்பது அரசன் எனப் பொருள்படும். திறம் என்பது திறன் அல்லது திறமை. அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாகப் பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும் என்பதை இது குறிக்கிறது. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும். அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் என வரவேண்டும். புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும். இதுவே இதன் விளக்கம் ஆகும்.




Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 26, 2018, 10:39:41 AM
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே  

நாம் அறிந்த விளக்கம் :

பழமொழி கொஞ்சம் வஞ்சப் புகழ்ச்சியாக பெண்கள் மீது இடப்பட்ட கருத்தாக உலக வழக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. புராணங்களில் படிக்கும் போது அசுரனுக்கு வரம் தந்து வாழ்வளிக்கும் பெண் தெய்வங்கள் பின் அந்த அசுரனையே அழிக்க நேரிட்டதால் இப்பழமொழி வந்திருக்க கூடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

விளக்கம் :

இப்பழமொழியில் இரண்டு விஷயங்கள் நளினமாய் மறைக்கப்பட்டுள்ளன. [highlight-text]நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே[/highlight-text] என்று வந்திருக்க வேண்டும். அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவைஇ தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்துவிட்டது.



[/color][/b]
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 27, 2018, 12:00:24 PM
போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை.
வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை   


நாம் அறிந்த விளக்கம் :

நிறைய பேர் இதை அறிந்திருக்க கூடும். உண்மையான விளக்கமும் தெரிந்திருக்கலாம். அதாவது சாதாரணமாய் படிக்கையில் போக்கிடம் இல்லாதவன் அல்லது வெட்டித்தனமாய் சுற்றுபவன் காவல் துறை அதிகாரிக்கும்இ எந்தவித பின்புலமும்இ செல்வமும் இல்லாதவன் வாத்தியார் வேலைக்கும் ஏற்றவர்கள் என்று அர்த்தம் கொள்ளும்படி ஆகி விட்டது. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.

விளக்கம் :

வார்த்தைகளை சற்று பிரித்து பொருள் கொண்டோமேயானால் இந்த உட்பொருள் சொல்ல வந்த விளக்கத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம். போக்கத்தவன் ஸ்ரீ [highlight-text]போக்கு + கற்றவன்[/highlight-text] அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு தகுதியானவன். வாக்கத்தவன் ஸ்ரீ[highlight-text] வாக்கு + கற்றவன்[/highlight-text]இ வாக்கு என்பது சத்தியம்இ அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் படித்தவன்இ அறிவு பெற்றவன் போன்ற தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன். இதைக் கொண்டே சொல்லப்பட்ட பழமொழி மருகி திரிந்து மேற்கண்ட முறையில் வந்துவிட்டது.




Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 28, 2018, 10:46:39 AM
ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது

நாம் அறிந்த விளக்கம் :

ஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த வீடு அழிவை நோக்கி போகும் அல்லது கெடுதல்கள் நிகழும். அமீனா என்பவர் நீதி மன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி (டவாலி என்பார்கள்). நீதிமன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம்இ நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர். எனவே அவர் வீட்டுக்கு வந்தால்; ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பதற்காக மேற்சொன்ன பழமொழி விளக்கம் தருகிறது.


விளக்கம் :

இந்த பழமொழியில் ஆமை எனும் சொல் மூன்று விதமான ஆமைகளை உணர்த்துகிறது. [highlight-text]கல்லாமை இயலாமை முயலாமை.[/highlight-text] அதாவது கல்வி இல்லாதஇ சோம்பேறித்தனம் கொண்டஇ முயற்சிகளற்ற தன்மைகள் எந்த வீட்டில் உள்ளனவோ அந்த வீடு முன்னேறாது என்பதை இப்பழமொழி அறிவுறுத்துகிறது. அடுத்து இரண்டாம் பாதியாக உள்ள அமீனா புகுந்த வீடு என்பது ஒரு எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்டது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
[/color]
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 29, 2018, 11:24:17 AM
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 

நாம் அறிந்த விளக்கம் :

நல்ல மனிதனாக இருந்தால் ஒரு தடவை சொன்னதுமே புரிஞ்சுகிட்டு நடந்துக்கணும்இ இந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.


விளக்கம் :

இங்கு [highlight-text]சூடு[/highlight-text] எனும் சொல் [highlight-text]சுவடு[/highlight-text] என வந்திருக்க வேண்டும். சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 30, 2018, 11:14:28 AM
உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?

நாம் அறிந்த விளக்கம் :

உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன்இ முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டவா போகிறான் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

உடையார்பாளையம் என்பது வன்னியகுல சத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பதே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on August 31, 2018, 05:34:32 PM
சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?

நாம் அறிந்த விளக்கம் :

சோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு உண்ண இயலாதவன் எப்படி ஞானம் என்பது என்னவென்று அறியமுடியும் என்பது நாம் அறிந்த விளக்கம்.


விளக்கம் :

சோற்றில் உள்ள சின்னக் கல்லுக்கும் ஞானத்துக்கும் என்ன தொடர்பு. சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும்இ தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத் துன்பம். அதை முழுவதும் நீக்க வேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் உள்ள கற்களை நன்றாக பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்க வேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக் கூட நீக்காமல் சோற்றை முழுங்கும் ஒருவன்இ சோற்றில் இருக்கும் கல் போலஇ அவனது தினசரி வாழ்வில் வரவழைத்துக் கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தையும் அறிந்து அதனைத் தடுக்கும் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழி பிறக்கும் என்பதே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 01, 2018, 11:11:03 AM
கல மாவு இடித்தவள் பாவி கப்பி இடித்தவள் புண்ணியவதியா?

நாம் அறிந்த விளக்கம் :

ஒரு கலம் மாவினை ஒருவள் இடித்துச் சலிக்க மற்றொருவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்து விட்டு நல்ல பேர் வாங்கிக் கொள்கிறாள். இது நாம் அறிந்த விளக்கம்.


விளக்கம் :

தன் நாத்தனார் குறித்த ஒரு மருமகளின் குறை தான் இது. வீட்டில் கல்யாணம் என்றால் எல்லா வேலைகளையும் செய்வது மருமகளே. ஆனால் மேம்போக்காக வேலைகளை செய்துவிட்டு தன் அம்மாவிடம்இ அதாவது இவள் மாமியாரிடம் பேர்வாங்கிக் கொள்வதென்னவோ அந்த நாத்தனார் தான். இதுவே இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 02, 2018, 05:16:10 PM
கொடுக்குறதோ உழக்குப்பால்இ உதைக்கிறதோ பல்லுப்போக 

நாம் அறிந்த விளக்கம் :

ஒரு உழக்குப்பால் மட்டுமே கொடுக்கும் பசுஇ ஆனால் அது உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

ஒரு உழக்கு என்பது கால் படி. கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான யஜமானைக் குறித்து அவன் வேலையாள் சொன்னது தான் இந்த பழமொழி.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 03, 2018, 11:25:54 AM
ஒற்றைக் காலில் நிற்கிறான்

நாம் அறிந்த விளக்கம் :

விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

ஒற்றைக் காலில் என்றது அர்ஜுனன் கையால மலை சென்று சிவனைக் குறித்து ஒற்றைக்காலில் பாசுபத அஸ்திரம் வேண்டித் தவம் செய்ததைக் குறிக்கிறது என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 04, 2018, 10:54:32 AM
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார் 

நாம் அறிந்த விளக்கம் :

சாத்திரங்கள் பொய்யென்று நீ கருதினால்இ கிரகணத்தைக் கவனி என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

சாஸ்த்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள் - நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வதுஇ சாஸ்த்திரங்களின் உண்மைக்குச் சான்று. ஜோதிடம் என்பது ஆறு வேதங்கங்களில் ஒன்றாகி வேதத்தை விளக்குவதால்இ அது சுருதி ஸ்தானத்தைப் பெறுகிறது என்பது இதன் உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 05, 2018, 11:17:28 AM
இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது

நாம் அறிந்த விளக்கம் :

இமையின் குறைபாடுகளை அதனுள் இருக்கும் கண்ணால் பார்க்க முடியாது. இது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

நம்முடைய மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக் கொண்டிருந்தாலும்இ அதன் குற்றங்கள் நமக்குத் தெரிவதில்லை. அதுபோலஇ தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது. தன் முதுகு தனக்குத் தெரியாது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 06, 2018, 11:26:00 AM
கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்

நாம் அறிந்த விளக்கம் :

ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவதுஇ கழுதைக்குப் புனித யாத்திரை போவது போல. இதுவே நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 07, 2018, 11:38:47 AM
ஒரு குருவி இரை எடுக்கஇ ஒன்பது குருவி வாய் திறக்க

நாம் அறிந்த விளக்கம் :

இரை தேடி வருவது ஒரு தாய்க் குருவிதான். அந்த இரைக்காக ஒன்பது குருவிக் குஞ்சுகள் வாயைத் திறக்கின்றன. இது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது தான் இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 08, 2018, 11:28:09 AM
கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்

நாம் அறிந்த விளக்கம் :

கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்லஇ அந்த விடாமுயற்சிக்கு மிகுந்த உடல்வலிமைஇ மனவலிமை வேண்டும் என்பது தான் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.

Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 09, 2018, 11:16:12 AM
உங்கள் உறவிலே வேகிறதைவிடஇ ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்

நாம் அறிந்த விளக்கம் :

சுற்றமும் நட்பும் தாங்க முடியாத தொல்லைகள் ஆகும் போது பாதிக்கப்பட்டவன் சொன்னதுஇ உங்கள் உறவைவிட மரணமே மேல் என்று. இதுவே நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

மிகுந்த உரிமைகள் எடுத்துக்கொண்டு செலவும் துன்பமும் வைக்கும் சுற்றமும் நட்பும் மரணத்தில் உடல் நெருப்பில் வேகுவதைவிடத் தாளமுடியாதது என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 10, 2018, 11:43:17 AM
வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்

நாம் அறிந்த விளக்கம் :

வீட்டில் காசுக்கு வழியில்லை, அதிகாரமோ வேலூர் நவாப் போல. இது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

வீட்டுச் செலவுகளுக்குக் கொஞ்சம் பணமே கொடுப்பது வழக்கமாக இருக்க விருந்துணவு கேட்டு அதிகாரம் செய்யும் கணவன் குறித்து மனைவி சொன்னது தான் இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 11, 2018, 06:33:56 PM
நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல

நாம் அறிந்த விளக்கம் :

கிணறே நேற்றுதான் வெட்டியதுஇ அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம். இதுவே நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

சமீபத்தில் தெரிந்து கொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவருக்காக கூறுவது தான் இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 12, 2018, 11:17:58 AM
இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்

நாம் அறிந்த விளக்கம் :

இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா? என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்

விளக்கம் :

பசியால் வாடிய சிவனடியார் ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின் வழியே சென்றபோது அங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொண்டு சென்றார்இ பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால் கிடைக்கவில்லை அந்த ஏமாற்றத்தால் அவர் சொன்ன சொல் பழமொழியாகி விட்டது.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 13, 2018, 01:36:00 PM
இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்

நாம் அறிந்த விளக்கம் :

ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல என்று சொல்லப்பட்ட பழமொழியாக நாம் கருதுகிறோம்.


விளக்கம் :

மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்சம்பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவதுஇ எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். அதுபோலத் திறமையுள்ளவர்கள் தாம் நினைத்ததை எளிதாகஇ சிக்கனமாக முடிப்பார்கள் என்பது இந்தப் பழமொழியின் மூலம் அறியும் உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 14, 2018, 11:33:07 AM
ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று

நாம் அறிந்த விளக்கம் :

பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல என்பது இந்த பழமொழியின் நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

இருவருமே நிலையாக ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள் என்பது தான் இத உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 15, 2018, 11:15:25 AM
கோல் ஆடஇ குரங்கு ஆடும் 

நாம் அறிந்த விளக்கம் :

எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

நல்லொழுக்கங்களையும்இ நல்ல பண்புகளையும் வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது கையிலும் கண்டிப்புக் காட்டவேண்டும். அப்போது தான் அதனை கடைபிடிப்பார்கள் என்பது இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 16, 2018, 11:12:17 AM
குப்பையும் கோழியும் போல குருவும் சீடனும்

நாம் அறிந்த விளக்கம் :

கோழி குப்பையைக் கிளறித் தான் உண்ணுவதைத் தேடுவதுபோலஇ சீடன் குருவிடம் விசாரணை மூலம் தன் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

சீடன் கோழியென்றால் குரு குப்பை என்று பொருளல்ல. கோழி குப்பையை கிளறும் உவமை சீடனுக்காகக் கூறப்பட்டதுஇ குருவுக்காக அல்ல. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் குப்பை போன்றதாகையால் தகுந்த குருவை அணுகி அவர் மூலம் தன் குப்பையை கிளறி உண்மையை அறியவேண்டும் என்பது இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 17, 2018, 11:17:46 AM
அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்

நாம் அறிந்த விளக்கம் :

ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகுஇ உப்புஇ கடுகுஇ தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர்இ நெருப்புஇ விறகு. இது அனைத்தும் இருந்தால் சமையல் அறியாத பெண்கூட சமையல் கற்றுக் கொள்வாள் என்பது பொருள் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 19, 2018, 11:20:49 AM
கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தட்சிணையா? 

நாம் அறிந்த விளக்கம் :

ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைத்திருந்த கொழுக்கட்டையைக் கவ்விச் சென்ற நாய்க்குஇ குறுணியில் மோரும் கொடுத்து குரு தட்சிணை செய்வார்களா என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

குறுணி என்பது எட்டுப்படி கொண்ட பழைய முகத்தல் அளவை. தண்டனைக்குரிய செயல் செய்த ஒருவனைப் பாராட்டுவது தகுமோ என்பது இதன் உண்மையான விளக்கம் ஆகும்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 20, 2018, 11:40:28 AM
சாகிற வரையில் வைத்தியன் விடான் செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன் 

நாம் அறிந்த விளக்கம் :

வைத்தியன் தன் முயற்சியை ஒருவனது மரணம் வரையில் கைவிடமட்டான். ஆனால் பஞ்சாங்கம் பார்த்துத் திதி சொல்லும் பிராமணனோ ஒருவன் செத்த பின்னரும் விடமாட்டான் என்பது இந்தப் பழமொழியின் நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

வைத்தியரின் வருமானம் சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு சாவுக்கும் இவன் வாழ்நாள் முழுவதும் வரும் என்பது சுட்டப்படுகிறது என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.


Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 21, 2018, 10:55:05 AM
பருவத்தே பயிர்செய்

விளக்கம் :

பருவம் என்பது குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கிறது. உரிய காலத்தில் எந்தச் செயலையும் செய்தல் வேண்டும். இல்லையென்றால்இ எதிர்பார்த்த பலன் கிடைக்காது. படிக்கிற பருவத்தில் செம்மையாக படிக்க வேண்டும். அதேபோல அந்தந்தப் பருவத்தில் பயிர்களை விதைத்துஇ மழைஇ காற்றில் வீணாகாமல் பருவத்தே அறுவடை செய்ய வேண்டும். இது போன்ற காலம் தவறாமல் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.

Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 22, 2018, 11:52:14 AM
காலம் பொன் போன்றது

விளக்கம் :

உடல் வலிமையும்இ செல்வமும் மட்டும் மனிதனுக்கு வெற்றியைத் தேடித் தந்து விடாது. செய்யும் செயல்தான் வெற்றிக்கு அடிப்படை. காலம் கருதி செய்வதே வெற்றியை கொடுக்கும். ஏனெனில் காலத்தை தவறவிட்டால் மீண்டும் பெற முடியாது. எனவேதான் காலம் பொன் போன்றது என்றனர் நமது சான்றோர்கள்.


Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 23, 2018, 01:03:46 PM
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை 


விளக்கம் :

இளமையில் நல்லவற்றை கற்பதுஇ மழைக் காலத்தில் நாற்று நடுவது போன்றதாகும். மாணவப் பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்டவன்இஇளமைப் பருவத்தில் வெற்றிகளைக் குவிக்க முடியும். பருவம் தவறி விதைத்தால்இ பயனைப் பெற முடியாது. இளம் பருவத்தில் வேரூன்றும் பழக்கங்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும். தீய பழக்கங்களும் அப்படிப்பட்டவையே. அது ஆபத்தானது என்பதை வலியுறுத்தத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்றார்கள்.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 25, 2018, 12:07:35 PM
எறும்பு ஊர கல்லும் தேயும் 


விளக்கம் :

முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்போ நுண்ணியது. கற்களின் வலிமைக்கு முன் எறும்பின் பலம் குறைவானதுதான். ஆனால் எறும்பு ஊர்ந்து ஊர்ந்துஇ தொடர்ந்து பயணிப்பதால் வலிமையான கல்லிலும் தேய்மானம் உண்டாகும். அதுபோலவே தொடர்ந்து முயற்சித்தால் மிகக் கடினமான செயலாக இருந்தாலும் எளிமையாக கூடி வரும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 26, 2018, 11:17:51 AM
ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி


விளக்கம் :

ஆல் என்பது ஆலமரம். வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும்இ வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல் துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை கொண்டு பல் துலக்க பல்வளம் சிறக்கும். இப்போது இரண்டாவது அடியான நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்பதில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன. நாலு என்பது நல்லது கெட்டது நாலும் என்றும் இரண்டு என்பது உண்மையான விஷயங்களை பேசுதல் நன்மையான விஷயங்களை பேசுதல் என்பதைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து. மற்றொரு கருத்து நாலு என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கின்றது.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 28, 2018, 02:00:47 PM
குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா?


விளக்கம் :

எங்கிருந்தாலும் உயர்ந்த விஷயங்கள் உயர்ந்த விஷயங்களாகவே இருக்கும். இடத்தைப் பொருத்து அதன் தன்மையோஇ தரமோ மாறாது என்பதற்காக சொல்லப்பட்ட விஷயம்தான் இது. ஆனால் இங்கு சரியாக சொல்லப் போனால் இந்தப் பழமொழியின் வடிவம் குப்பையில் கிடந்தாலும் குன்றி மணி நிறம் போகுமா என்று வரவேண்டும். உச்சரிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பழமொழியின் அந்த குறிப்பிட்ட வார்த்தை வடிவம் மாறி விட்டது. இருப்பினும் குண்டுவோ குன்றியோ இங்கு பழமொழி தரும் விளக்கம் மாறிப்போக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 29, 2018, 10:53:12 AM
பிள்ளையார பிடிக்கப்போயி குரங்க பிடித்த கதையாயிடுச்சி 


விளக்கம் :

களிமண்ணில் பிள்ளையார் சிலை செய்ய எண்ணி நம் கைகளால் பிடித்து சிலையை செய்து பார்த்தால் அது குரங்கு போல் இருக்கிறது. நாம் செய்ய நினைத்ததோ பிள்ளையார் சிலை. ஆனால் இறுதியில் கிடைத்ததோ குரங்கு சிலை. இதைப்போலதான் வாழ்க்கையிலும் நல்லது செய்ய எண்ணி ஒரு செயலை செய்தால் கடைசியில் அது தீயதாக வந்து முடிகிறது.

Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on September 30, 2018, 10:57:43 AM
கழுதை கெட்டால் குட்டிச் சுவர் 


விளக்கம் :

கழுதையின் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது புண் போன்று ஏதாவது வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை விட பாதி சேதமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை அதன்மேல் தேய்த்துக் கொள்ளும். காரணம் நல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது. எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சேதமடைந்த சுவர்களையே நாடும். இங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம். இதுவே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.



Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on October 01, 2018, 11:48:01 AM
தனி மரம் தோப்பாகாது   


விளக்கம் :

பல மரம் சேர்ந்து நின்றால் தான் அதை தோப்பு என்பார்கள். ஒற்றை மரத்தை தோப்பு என்று சொல்ல முடியாது. அது எப்போதுமே ஒற்றை மரம்தான். அதே போல சமூகத்தில் மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்தால் தான் அதை சமூகம் என்று சொல்ல முடியும். தனிமையாக வாழும் ஒருவரது வாழ்க்கை நிறைவு பெறாது. ஒற்றுமை குடும்பத்திலும் சமூகங்களிலும் மிக மிக அவசியமான ஒன்று. சமூகத்தில் ஒருவராக தனிமையில் வாழ முயற்சி செய்தால் அது பெரும் வெற்றி அடைவதில்லை. ஆனால் பலரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் அவர்கள் பெரும் வெற்றி அடைந்துவிடுவார்கள். இதுதான் இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.





Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on October 02, 2018, 11:10:41 AM
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?


விளக்கம் :

உண்ண உணவு தந்தவர்கள் வீட்டிலேயே திருடுவது மிகப்பெரிய தவறான செயலாகும். உணவு தந்த வீட்டுக்கு கேடு தரும் செயலை நினையாமல் இருக்க வேண்டும். அவர்கள் நம்மை நல்லவர்கள் என நம்பி போற்றி உணவும் தந்தால் அவருக்கே கேடு செய்வது நம்பிக்கை துரோகமாகும். உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா என்ற பழமொழி போல நன்றி மறக்கலாகாது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழியின் பொருள்.





Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on October 03, 2018, 01:12:27 PM
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் 


விளக்கம் :

ஒருவரது மனநிலையை அவரது முகத்தைக் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். மனிதருக்கு முகபானைகள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும் என்பது இதன் விளக்கம் ஆகும்.




Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on October 06, 2018, 11:26:36 AM
உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு


விளக்கம் :

கடம்பு என்பது இங்கே கடம்ப மரத்தையும் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலையும் குறிக்கிறது. கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்தால் உடல் நிலை எப்போதும் சீராக இருக்கும் என்பதே இதன் விளக்கம் ஆகும்.



Title: Re: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
Post by: சாக்ரடீஸ் on October 07, 2018, 10:57:02 AM
இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு


விளக்கம் :

எள் கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும்இ பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால்இ உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.