நான் நாத்திகன் கிடையாது. எனக்கும் நிறைய கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் கடவுள் வழிபாட்டிற்காக இத்தனை செலவு செய்வதை என்னால் ஒத்துகொள்ள முடியவில்லை .இதற்காக உலகம் முழுவதும் ஒரு சில கோடி ரூபாயை அனைவரும் வீண் செய்வதாக எனக்கு படுகிறது.
உலகில் பல கோடி மக்கள் உண்ண உணவின்றி பட்டினியில் வாடும் பொது விநாயகர் இதை ஏற்றுகொள்வார.
எனது நண்பன் ஒருவன் கடவுளை கடலில் கரைக்க கொண்டு செல்லும் பல்லக்கை 25000 ரூபாய் செலவு செய்துள்ளான். அந்த 25000 பல பேரின் வருட வருமானம். அதை விநாயகர் ஏற்றுகொள்வார என்று நீங்கள் தான் சொலவேண்டும்
வெறும் களிமண்ணில் சிலை செய்து வழிபாடு செய்தாலே அவர் ஏற்று கொள்வரே அதற்கு இத்தனை ஆடம்பரம் தேவையா?
செலவு மட்டும் என்றில்லாமல் சுற்றுபுறத்தையும் மாசு படுத்தும் விஷயமாக இது உள்ளது. வழிபாடிற்காக பாடல் என்று அருகில் உள்ளவர்களின் துக்கம் கெடுக்கிறார்கள்,
நோயாளிகளின் நிலைமை இன்னும் மோசம்
கண்டிப்பாக இதனை கடவுள் மன்னிக்கமாட்டார். நல்ல நாளில் கடவுள் அருள் பெற முயற்சிப்போம் சுற்றுசுழலை பாதுகாத்து மக்களுக்கு உதவி செய்து
By
Arya