Author Topic: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!  (Read 3198 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!



விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம் பிறக்கிறது. 14.4.2014 திங்கட்கிழமை காலை மணி 6.06க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம், கன்னி ராசி மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம் வணிசை நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம், நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் முதல் சாமத்தில் காகம் நடைப் பயிலும் நேரத்தில் சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது.



ஜய வருட ரா‌சி பல‌ன்களை ஜோ‌திட‌‌ ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.


« Last Edit: April 15, 2014, 06:58:50 PM by Maran »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #1 on: April 15, 2014, 07:00:47 PM »
ஜய வருட ராசி பலன்கள் - மேஷம்


வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், ஏமாற்றங்கள், அவமானங்களை கண்டு அஞ்சமாட்டீர்கள். இந்த ஜய வருடம் உங்களுக்கு 6வது ராசியில் பிறப்பதால் அடிக்கடி வேலை விஷயமாகவோ, வெளியூர்களுக்கோ சென்று வரவேண்டியிருக்கும். சிலருக்கு வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை கிடைக்கும்.
 
வருடம் பிறக்கும் போது உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் வக்ரமாகி நிற்பதால் ஒவ்வாமை, உடலில் சோர்வும் களைப்பும் வந்து நீங்கும். வெளியூர்களுக்குச் செல்லும்போதும் சுயமாக வாகனத்தை ஓட்டும்போதும் கவனம் தேவை. சகோதர வகையில் பிரச்னைகள் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மனத்தாங்கல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது எதுவாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். 
 
ஜூன் 12 வரை உங்கள் யோகாதிபதியான குருபகவான் 3ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதனால் காரியத் தடைகளும், உறவினர், நண்பர் பகையும் வந்துபோகும். இளைய சகோதர வகையில் செலவுகளும், பிரிவுகளும் வந்து நீங்கும். ஜூன் 13ந் தேதி முதல் குரு 4ம் வீட்டில் சென்று அமர்வதால் ஓரளவு பணவரவு அதிகரிக்கும். ஆனால், தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். உறவினர்களில் சிலர் கண்டும் காணாமல் சென்று கொண்டிருப்பார்கள்.
 
பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். பங்குச் சந்தையில் பணம் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். பேருந்து, புகை வண்டியில் படிகட்டுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. சாலைகளை கடக்கும்போதும் அவசரம் வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் புகழடைவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகம், உயர் கல்வியின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டியிருக்கும்.

 ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசியிலேயே நீடிப்பதால் தனக்கு ஏதோ பெரிய நோய் இருப்பதைப்போல பிரமை வந்து நீங்கும். முன்கோபம் அதிகமாகும். உணர்ச்சி வேகத்தில் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். உறவினர்களிடம் எல்லா விஷயங்களிலும் தலையிடும் அளவுக்கு அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஜூன் 21ந் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு கேதுபகவான் விலகுவதால் மனச் சலனங்கள், படபடப்பு, டென்ஷன் போன்றவை குறையும். ஆரோக்யமும் அழகும் கூடும். இதமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தோல் நோய், தலைவலி விலகும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடிவரும்.
 
டிசம்பர் 15 வரை கண்டகச் சனி நடைபெறுவதாலும், ஜூன் 20 வரை ராகு-சனியுடன் சம்பந்தப்பட்டிருப்பதாலும் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அறுவை சிகிச்சை வந்துபோகும். வீண் சந்தேகங்களாலும், ஈகோ பிரச்னையாலும் பிரியும் நிலைக்கு சிலர் தள்ளப்படுவீர்கள். சின்னச் சின்ன பிரச்னைகளை பெரிதாக்காமலும், பழைய பிரச்னைகளை பேசாமலும் இருப்பது நல்லது. டிசம்பர் 15ந் தேதி வரை உங்கள் ராசியை சனி பார்ப்பதால் மறதி, மனஇறுக்கம், வீண் சந்தேகம் வந்து நீங்கும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 14.7.2014 முதல் 3.9.2014 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாய் சனியுடன் சேர்ந்து பலவீனமாவதால் அந்த காலகட்டத்தில் விபத்துகள், பணயிழப்பு, ஏமாற்றங்கள் வந்துபோகும். டிசம்பர் 16 முதல் அஷ்டமத்துச் சனி தொடங்குவதால் எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை, சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது.
 
ஐப்பசி மாதம் முதல் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவடைவதால் அதுமுதல் மனதில் நிம்மதி, சகோதர வகையில் இருந்து வந்த பகையும் நீங்கும். சொத்துப் பிரச்னை தீரும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். 25.9.2014 முதல் 18.10.2014 வரை சுக்கிரன் வலுவிழந்து காணப்படுவதால் அந்தக் காலகட்டத்தில் பல் வலி, பார்வைக் கோளாறு, ஆபரண இழப்பு, வாகன விபத்து, வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். ஆவணி, தை, மாசி மாதங்களில் பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். திருமணம் கூடி வரும். சிலர் வீடு கட்டி புது வீட்டிற்கு மாறுவீர்கள்.   
 
வியாபாரத்தில் நவீன விளம்பர யுக்திகளை கையாளுவது நல்லது. பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்னை தருவார்கள். ஆனாலும், சில நாட்களிலேயே சரியாகும். வேலையாட்களிடம் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

 நன்கு ஆராய்ந்து பின்னர் புதிய பங்குதாரர்களை சேர்ப்பது நல்லது. வெளிமாநில வேலையாட்களை நம்பகமான சிபாரிசு இல்லாமல் சேர்த்துக் கொள்ள வேண்டாம். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், டிராவல்ஸ், உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். அனுபவமில்லாத புதிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டாம். வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் வரும். செய்யும் தொழிலுக்கு இணையாக வேறொரு தொழிலைச் செய்யவும் முயற்சிப்பீர்கள்.
 
உத்தியோகத்தில் உயரதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை சக ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டாம். தனி நபர் விமர்சனத்தை அலுவல கத்தில் தவிர்த்து விடுங்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலையுண்டு என்று இருங்கள். அன்றைய வேலைகளை அன்றே முடித்து விடுவது நல்லது. ஏனெனில், உங்களின் மீதுள்ள முக்கிய புகாரே உடனே வேலையைச் செய்வதில்லை என்பதுதான். ஜூன் 13ந் தேதி முதல் உத்தியோக ஸ்தானத்தை குரு பார்க்க இருப்பதால் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள் போராடி தங்கள் உத்தியோகத்தை தக்க வைக்க வேண்டியது வரும். இந்தாண்டு பிறக்கும் போது சனி உங்களின் யோகாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் நிற்பதால் அயல்நாட்டில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
 
கலைத்துறையினரே! கடந்த வருடத்தை விட இந்த ஆண்டில் பரபரப்பாவீர்கள். படைப்பாற்றல் பெருகும். மூத்த கலைஞர்களின் சிபாரிசு மூலம் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வெளியிடப் படாமல் முடங்கிக் கிடந்த உங்களின் படைப்புகள் வெளிப்பட்டு புகழடைவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் சுகாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தள்ளிப்போன திருமணம் கூடி வரும். காதல் விவகாரத்தில் தெளிவு கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடிச் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். கூடுதலான திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக மொழியறிவு சார்ந்த அறிவையும், பொது அறிவுத் திறனையும் வளர்த்துக் கொள்வது நல்லது.
 
இந்த ஜய வருடம் நிம்மதியையும், பணவரவையும் தருவதாக அமையும்.

 
பரிகாரம் :  சென்னை - மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சரபேஸ்வரரை சனிக்கிழமை அல்லது அமாவாசை திதியில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #2 on: April 15, 2014, 07:07:32 PM »
ஜய வருட ராசி பலன்கள் - ரிஷபம்


மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் நீங்கள், மற்றவர்களின் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக்காட்டுவீர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் குரு பகவான் வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் ஆதரவு கிட்டும். இந்தப் புத்தாண்டு உங்களின் 5ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வரன் தேடித்தேடி அலுத்துப்போன உங்களின் மகளுக்கு இந்த ஆண்டு திருமணமும் சீரும் சிறப்புமாக முடியும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் யாவும் சாதகமாக முடியும். உங்களை மறந்துபோன தூரத்து உறவினர்கள் தேடி வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். சொந்த ஊரிலுள்ள பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.
 
ஜூன் 12ந் தேதி வரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் நினைத்த காரியங்கள் சுலபமாக முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் வருடம் முடியும் வரை குரு 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள், திட்டங்கள் தாமதமாகி முடியும். ஒரே வேலையை இரண்டு, மூன்று முறை முயன்று போராடி முடிக்க வேண்டியது வரும். அவ்வப்போது சோர்வடைவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம்.
 
ஜூன் 20ந் தேதி வரை ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் சின்னச் சின்ன கனவுகள் நனவாகும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கி லோன் கிடைக்கும். ஆனால், கேது 12ல் மறைந்து நிற்பதால் திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் சுயநலவாதிகளை கண்டறிவீர்கள்.

சில நாட்கள் தூக்கம் குறையும். ஜூன் 21ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5ல் ராகு அமர்வதால் பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகமாகும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கேது 21ந் தேதி முதல் லாப வீட்டில் நுழைவதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கோயில் விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

 ஆவணி, தை, மாசி, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு, வீடு, வாகனம் வாங்கும் யோகம், புதியவரின் நட்பெல்லாம் உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஐப்பசி மாதம் உங்கள் ராசிநாதனான சுக்கிரனும், சுகாதிபதியான சூரியனும் வலுவிழந்து காணப்படுவதால் தொண்டைப் புகைச்சல், உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, முன்கோபம், குடும்பத்தில் சலசலப்பு, வாகனப் பழுது வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பெற்றோரின் ஆரோக்யம் பாதிக்கும். அவர்களுடன் மனக்கசப்பு வந்து விலகும்.
 
டிசம்பர் 15 வரை உங்களின் யோகாதிபதியான சனி பகவான் 6ம் வீட்டில் நிற்பதால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். தள்ளிப்போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள்.
 
டிசம்பர் 16ந் தேதி முதல் சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் எதிலும் ஆர்வமின்மை, தாழ்வுமனப்பான்மை, சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டியது வரும். கணவன்-மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். வீண் சந்தேகத்தாலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். மனைவிக்கு சிறுசிறு விபத்துகள், மருத்துவச் செலவுகள் வந்துபோகும். யாருக்காகவும் யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். மனைவி வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரம் சூடுபிடிக்கும்.
 
ஆனி, ஆடி மாதங்களில் பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகளை கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றி விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரக்கூடிய பங்குதாரரும் அறிமுகமாவார். துரித உணவகம், மர வகைகள், வாகன உதிரி பாகங்கள், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள். பழைய பங்குதாரருடன் சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும்.

 உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். இதுவரை உங்களுக்கும் உங்கள் மேலதிகாரிக்கும் இருந்த தவறான புரிதல் விலகும். மூன்றாவது நபர் தலையீட்டால் இதுவரை இருந்த மெல்லிய பகையெல்லாம் அகலும். உங்களின் நிர்வாகத் திறன் கூடும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் குரு 3ல் மறைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள்.

பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களை நம்பி ஒப்படைப்பார். பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யுங்கள். உங்களின் உத்தியோக ஸ்தானாதிபதியான சனிபகவான் டிசம்பர் 16 முதல் 7ல் அமர்வதால் அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். அப்படி வந்தாலும் கூட நன்மையில்தான் முடியும். மேலும், உங்களுக்கு வேண்டாதவர்கள் பழைய விஷயங்களை கிளறி உங்கள் மீது வழக்கு தொடர்வார்கள். ஒன்றும் பயப்படாதீர்கள். அரசு உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் கிடைத்து விடும்.
 
கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.
 
கன்னிப்பெண்களே! நேர்முகத் தேர்வில் வெற்றிப்பெற்று புது வேலையில் சேருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். அவ்வப்போது அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். பெற்றோர் ஆதரிப்பார்கள்.
இந்த ஜய வருடம் உங்கள் திறமையை சோதிப்பதாக இருந்தாலும், கடின உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் வெற்றி பெற வைக்கும்.

 
பரிகாரம் :  கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிடைமருதூர் தலத்தில் அருள்பாலிக்கும் மகாலிங்கேஸ்வரரை தரிசியுங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
« Last Edit: April 15, 2014, 07:09:11 PM by Maran »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #3 on: April 15, 2014, 07:13:06 PM »
ஜய வருட ராசி பலன்கள் - மிதுனம்

 காசு பணத்திற்காக விலை போகாத நீங்கள், கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்பவர்கள். உங்களின் யோகாதிபதியான சுக்கிரன் 9ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் பன்மடங்கு பெருகும். புதிய வேலைக்கு முயற்சி செய்ததற்கெல்லாம் நல்ல பலன்கள் கிட்டும். சலசலப்போடு இருந்த குடும்பம் அமைதிப் பூங்காவாக மாறும். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பிறப்பதால் மாதக் கணக்கில் தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும்.
 
பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தாயாரின் ஆரோக்யம் மேம்படும். சொத்து வாங்குவதற்காக திட்டமிட்டீர்களே! இப்போது அதற்கான முன் பணத்தைத் தருவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும்.
ஜூன் 12 வரை உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். வாயுத் தொந்தர வால் நெஞ்சு வலிக்கும். யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
 
கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று பார்த்து காசோலையைத் தருவது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். ஜூன் 13ந் தேதி முதல் குரு 2ம் வீட்டில் சென்று அமர்வதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் திருப்பித் தருவீர்கள்.
 
குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடிகள் வந்து நீங்கும். மழலை பாக்யம் கிடைக்கும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். சொத்துச் சேர்க்கையும் உண்டு. நீங்கள் சொல்லா ததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு விலகியிருந்த சொந்த-பந்தங்களெல்லாம் வலிய வந்து பேசுவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு.
 
 ஆனி, ஆடி மாதங்களில் தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். ஜூன் 20ந் தேதி வரை கேது லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். புதிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிசீலனை செய்யப்படும். ஷேர் மூலமாக பணம் வரும். ஜூன் 21 முதல் கேது உங்கள் ராசிக்கு 10ல் நுழைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அவசரப்பட்டு வாக்குறுதிகள் தந்து விட்டு அதை நிறைவேற்ற முடியாமல் திணற வேண்டாம். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வரும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக் கூடும்.
 
ஜூன் 20ந் தேதி வரை ராகு 5ல் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்துபோகும். அவர்களிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. சாலைகளைக் கடக்கும் போது கவனம் தேவை. பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் மூக்கை நுழைக்காதீர்கள். 21ந் தேதி முதல் ராகு 4ம் வீட்டில் நுழைவதால் தாயாரின் ஆரோக்யம் பாதிக்கும். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து கொண்டு செல்லுங்கள். வீடு, மனை வாங்கும் போது தாய்ப்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். வீடு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 
உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்துபோகும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். டிசம்பர் 15ந் தேதி வரை சனிபகவான் 5ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகளை உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி விசாரித்து கல்யாணம் முடிப்பது நல்லது. மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். பாதை மாற வாய்ப்பிருக்கிறது. சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள்.
 
டிசம்பர் 16 முதல் சனிபகவான் 6ம் வீட்டில் நுழைவதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் உதவிகள் உண்டு. குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்த சலசலப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். அண்டை மாநிலம், வெளிநாட்டிலிருப்பவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். 
வியாபாரத்தில் தள்ளுபடி விற்பனை மூலமாக லாபம் ஈட்டுவீர்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
 
 இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். முரண்டு பிடித்த வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். உங்களின் புதுத் திட்டங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் வாய்ப்புகளும் வரும். ஹார்டுவேர்ஸ், ஜுவல்லரி, செங்கல் சூளை, சிமென்ட் போன்ற வகைகளால் லாபமடைவீர்கள்.
 
ஜூன் 12ந் தேதி வரை ஜென்ம குரு தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைகள் இருந்து கொண்டேயிருக்கும். 13ந் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு குரு விலகுவதால் அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை புரிந்து கொள்வார்கள். தொந்தரவு தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். கேது ஜூன் 21ந் தேதி முதல் 10ல் அமர்வதால் சக ஊழியர்கள் மத்தியில் உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள்.
 
கலைத்துறையினரே! வீண் வதந்திகள், கிசு கிசுக்களிலிருந்து விடுபடுவீர்கள். உதாசீனப்படுத்திய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
 
மாணவ-மாணவிகளே! அறிவாற்றல், நினைவாற்றல் கூடும். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். ஆசிரியர்களின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! சருமத்தில் ஒவ்வாமை வந்து நீங்கும். அழகும் கூடும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். சிலர் உயர்கல்விக்காக வெளிநாட்டிற்குச் சென்று வருவீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்.
 
இந்த ஜய வருடம் முற்பகுதி கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் மையப்பகுதி முதல் திடீர் யோகங்கள் உண்டாகும்.

 
பரிகாரம் :  சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் தலத்தில் அருள்பாலிக்கும் வீரராகவப் பெருமாளை தரிசித்து வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #4 on: April 15, 2014, 07:18:38 PM »
ஜய வருட ராசி பலன்கள் - கடகம்


புரட்சிகரமான சிந்தனையுடைய நீங்கள், தனக்கென துன்பம் வந்தாலும் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குவீர்கள். உங்களின் பாதகாதிபதியான சுக்கிரன் 8ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இதுவரை கடினமானதாக இருந்த  காரியங்களை யெல்லாம் எளிமையாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
 
அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் பிறப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும்.
 
எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். ஜூன் 12 வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் குரு மறைந்து காணப்படுவதால் ஒரு பக்கம் பணவரவு இருந்தாலும் மறுபக்கம் அதற்கேற்ப செலவினங்களும் கூடிக் கொண்டே போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று காணிக்கையை செலுத்துவீர்கள்.
 
ஜூன் 13ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து விலகும். தலைவலியாக இருந்தாலும் பெரியதாக பயம் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் புகையிலை சார்ந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும். மஞ்சள் காமாலை, காய்ச்சலால் சோர்வடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லதாகும். ஈகோ பிரச்னையால் மன இறுக்கம் அதிகரிக்கும்.

 ஜூன் 20ந் தேதி வரை சர்ப்ப கிரகங்களான ராகு 4ம் வீட்டிலும், கேது 10ம் வீட்டிலும் தொடர்வதால் உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சி செய்வார்கள். அதனால் எதையுமே வெளிப் படையாக பேசி விடுவதுதான் நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும். எடுத்த வேலைகளை உடனே முடிக்க முடியாமல் திணறுவீர்கள். உத்தியோகத்தில் பிடிப்பற்றபோக்கு வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஜூன் 21ந் தேதி முதல் ராகு 3ம் வீட்டில் நுழைவதால் படபடப்பு, பயம் விலகும். தைரியம் கூடும். உங்கள் வார்த்தைக்கு இனி மதிப்பு கூடும். தள்ளிப்போன திருமணம் கூடிவரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள். ஆனால், கேது ஜூன் 21ந் தேதி முதல் 9ம் வீட்டில் நுழைவதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவருடன் மோதல்களும் வந்து செல்லும். தந்தை வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அவர்கள் பிரச்னை என்று ஆரம்பிப்பதற்கு முன்னரே நீங்கள் இருக்கும் பழைய விவகாரங்களுக்கு தீர்வு காணுங்கள். 
   
டிசம்பர் 15 வரை சனி 4ம் வீட்டில் நின்று அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால் வாகனத்தை இயக்கும்போது அலைபேசியை பயன்படுத்த வேண்டாம். ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கத் தவறாதீர்கள். சிறுசிறு அபராதத் தொகை கட்ட வேண்டியது வரும். தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். டிசம்பர் 16 முதல் சனி 5ம் வீட்டில் நுழைவதால் வீண் பழி, தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும்.
 
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டியது வரும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. அதேபோல வேலையாட்களிடம் எல்லா வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அதேசமயம் கடுமையாகவும் பேச வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமில்லாத தொழிலில் இறங்க வேண்டாம். மார்கழி பிற்பகுதி, பங்குனி மாதங்களில் புதிய தொடர்புகள் கிடைக்கும். இப்போது செய்கின்ற தொழிலுக்கு இணையாக வேறொரு தொழிலும் செய்ய வேண்டிய வாய்ப்புகளும் வரும். லாபம் கணிசமாக உயரும். வேற்று மதத்தவர்கள், மாநிலத்தவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களுடன் சச்சரவு வரும். கமிஷன், புரோக்கரேஜ், ஏஜென்சி, மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.

 உத்தியோகத்தில் நிம்மதியற்ற போக்கும் நிலவும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகாரிகள் தவறுகளை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வது நல்லது. அடிக்கடி இடமாற்றங்களும் வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகும். எவ்வளவுதான் உண்மையாக உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். உங்கள் திறமையை வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் உங்களைப் பற்றி தவறான புகார்களில் சிக்க வைத்து கோர்ட், கேஸ் என்று அலைக்கழிப்பார்கள். 
 
கலைத்துறையினரே! சுய விளம்பரத்தை விட்டுவிட்டு யதார்த்தமான படைப்புகளை தரப் பாருங்கள். இதுவரை போனது போகட்டும். இனி வருவதாவது நன்றாக இருக்கட்டும் என்று எண்ணி கடின உழைப்பைக் கொட்டுங்கள். உங்களைப்பற்றிய வதந்திகள் வரும். 
     
மாணவ-மாணவிகளே! டி.வி., சினிமா என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு படிப்பில் முழு  கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். நல்லவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
கன்னிப் பெண்களே! காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நண்பர்களிடம் உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களை விவாதிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். கல்யாணம் தள்ளிப்போகும். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும்.
 
இந்த ஜய வருடம் ஆரோக்ய குறைவால் செலவுகளையும் அலைச்சலையும் தந்தாலும் நடு நடுவே வெற்றியை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

 
பரிகாரம் : தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகேயுள்ள திருப்பூந்துருத்தி தலத்திலுள்ள வீணா தட்சிணாமூர்த்தியை ஏதேனும் ஒரு வியாழக் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #5 on: April 15, 2014, 07:22:32 PM »
ஜய வருட ராசி பலன்கள் - சிம்மம்

 எதையும் மேலோட்டமாக பார்க்காமல் ஆழமாக அலசி ஆராய்வதில் வல்லவர்கள் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் இந்த ஜய வருடம் பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு கட்டுவீர்கள்.
 
உங்களின் ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகு, இளமைக் கூடும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி நவீன ரக வண்டி வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும்.
 
வைகாசி, ஆனி மாதங்களில் உங்கள் ராசிநாதன் சூரியன் பலம் பெற்றிருப்பதால் புது முயற்சிகள் யாவும் பலிதமாகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். 
ஜூன் 12 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் குரு தொடர்வதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
 
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். மழலை பாக்யம் கிட்டும். ஜூன் 13ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 12ல் மறைவதால் வீண் விரயம், ஏமாற்றம், தூக்கமின்மை, செலவுகள் வந்துபோகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை
கவனமாகக் கையாளுங்கள். பணப் பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
 
ஜூன் 20ந் தேதி வரை கேது 9ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையாரின் ஆரோக்யம் பாதிக்கும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். தந்தை வழிச் சொத்துக்களை பெறுவதில் பிரச்னைகள் வந்து நீங்கும். ஜூன் 20ந் தேதி வரை ராகு 3ம் வீட்டில் இருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனோபலம் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வேற்று மதத்தவர், மொழியினரால் பயனடைவீர்கள். தடைபட்ட திருமணம் கூடி வரும்.

 ஜூன் 21ந் தேதி முதல் நிழல் கிரகங்களான ராகு 2ம் வீட்டிலும் கேது 8ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். பார்வைக் கோளாறு வரக்கூடும். சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. வெளிப்படையாகப் பேசி பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்துகொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.
 
டிசம்பர் 15 வரை சனிபகவான் 3ம் வீட்டில் தொடர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புது வேலை கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும். உங்களைவிட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். மனைவி வழியில் பக்க பலமாக இருப்பார்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள். சிலர் புது முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். டிசம்பர் 16ந் தேதி முதல் சனி 4ல் அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனி தொடங்குவதால் வேலைச்சுமை, வாகனப் பழுது, தாயாருடன் மோதல்கள், அவருக்கு மூட்டு வலி, தைராய்டு பிரச்னை வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
 
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி பிற்பகுதி மற்றும் மாசி மாதங்களில் அநாவசியச் செலவுகள், குடும்பத்தில் சச்சரவு, முன்கோபம், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், ஒற்றைத் தலை வலி, எதையோ இழந்ததைப்போல் ஒருவித கவலைகள், படபடப்பும் வந்துபோகும்.
வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். சந்தையில் மதிப்பு கூடும். பங்குதாரர்களோடு இருந்து வந்த பிரச்னைக ளெல்லாம் இப்போது தீரும். நவீன வியாபார யுக்தி களையும், தற்போதைய மார்க்கெட் நிலவரத்தையும் மனதில் கொண்டு நிறைய மாற்றங்களை நீங்கள் ஏற்படுத்தத்தான் வேண்டும்.
 
வியாபார சங்கம் மூலமாக புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகள் வசூலாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி பிற்பகுதியில் புதிய கிளைகளைத் தொடங்குவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எண்டர்பிரைசஸ், பெட்ரோ- கெமிக்கல், மருந்து, கடல் உணவு வகைகளால் லாபமடைவீர்கள்.

 ஜூன் 12 வரை உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மூத்த அதிகாரி களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். அலுவலகத்தில் கடுமையான வேலைச் சூழ் நிலையின் நடுவில் வேகமாகவும் விவேகத்தோடும் பணியாற்ற கற்றுக் கொள்வீர்கள். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். அதனால் உங்களின் உயர்வுகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வைகாசி, ஆனி, பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். புதிய பொறுப்பு கள் தேடி வரும். சிலர் உத்தியோகத்தின் பொருட்டு அயல்நாடு செல்வீர்கள்.
 
கலைத்துறையினரே! பகட்டாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டியது வரும்.
 
மாணவ-மாணவியர்களே! விளையாட்டைக் குறையுங்கள். தொடக்கத்திலிருந்தே படிப்பில் தீவிரம் காட்டுங்கள். நீங்கள் விரும்பிய பாடப் பிரிவில் சிலரின் சிபாரிசு அல்லது அதிக பணம் கொடுத்து சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம். 
 
கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
 
இந்த ஜய வருடம் தடைபட்ட வேலைகளை முடித்து வைப்பதுடன், நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் நிறைவேறும்

 
பரிகாரம் : காரைக்குடிக்கு அருகேயுள்ள பிள்ளை யார்பட்டியில் அருளும் கற்பக விநாயகரை சதுர்த்தி அன்று தரிசித்து வாருங்கள். பக்தர்களுக்கு அன்ன தானம் செய்யுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #6 on: April 15, 2014, 07:27:34 PM »
ஜய வருட ராசி பலன்கள் - கன்னி

 ஈரப் பார்வையால் எல்லோரையும் தன் வசம் ஈர்க்கும் நீங்கள் எப்போதும் இதயத்திலிருந்து பேசுவீர்கள். உங்கள் ராசிநாதனான புதன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். நட்பு வட்டம் விரிவடையும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உறவினர்கள் உங்களை புரிந்துகொண்டு வலிய வந்து உதவுவார்கள்.
 
பூர்வீகச் சொத்தை உங்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள். 
உங்கள் ராசியிலேயே இந்த ஜய வருடம் பிறப்பதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். அவ்வப்போது கோபப்படுவீர்கள். அடிக்கடி தலைவலி, வாயுப் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல், தோலில் நமைச்சல், நரம்புக் கோளாறு வந்து நீங்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
 
வருடம் பிறக்கும்போது செவ்வாய் வக்ரமாகி உங்கள் ராசிக்குள் அமர்ந்திருப்பதுடன், சுக்கிரனும் 6ம் வீட்டில் பலவீனமாகி நிற்பதால் மன இறுக்கம் அதிகமாகும். பணப் பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். சொத்துப் பிரச்னையை சுமுகமாக தீர்க்கப் பாருங்கள். எதிர்தரப்பு வாய்தாவால் வழக்குகள் தள்ளிப்போகும்.
 
ஆனி, ஆடி, மார்கழி, மாசி மாதங்களில் திடீர் திருப்பங்களும், யோகங்களும் உண்டாகும். ஜூன் 12 வரை குரு 10ல் தொடர்வதால் வேலைச்சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, இரவல் வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். உங்களை யாரும் மதிக்கவில்லை, யாருமே புரிந்து கொள்ளவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்கிற பயமும் வரும்.

 ஜூன் 13ந் தேதி முதல் குருபகவான் லாப வீட்டில் சென்று அமர்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். மனைவி வழியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய நகையை மாற்றி புது
டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கல்யாணம் கூடி வரும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும்.
 
மூத்த சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். குறைகூறிக் கொண்டிருந்த உறவினர்களின் மனமும் மாறும். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பதவிகள், பொறுப்புகள் தருவார்கள். வேலையும் கிடைக்கும். சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்களில் புதிய முயற்சிகளில் கவனம் தேவை.
 
ஜூன் 20ந் தேதி வரை கேது உங்களின் ராசிக்கு 8ம் வீட்டிலும், ராகு 2ம் வீட்டிலும் நிற்பதால்  உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. கண் வலி, வீண் வாக்குவாதம், சிறுசிறு விபத்துகள், மனதில் ஒருவித சஞ்சலம் வந்துபோகும். திடீர் பயணங்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஜூன் 21ந் தேதி முதல் ராகு உங்கள் ராசிக்குள்ளேயும், கேது 7ம் வீட்டிலேயும் நுழைவதால் விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். அலைச்சல் குறையும். என்றாலும் வீண் டென்ஷன், எதிலும் ஒரு பிடிப்பற்றப் போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, தலைச்சுற்றல், ஹார்மோன் பிரச்னை வந்துபோகும்.
 
இரும்பு, சுண்ணாம்புச் சத்துள்ள காய், கனி, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மனைவிக்கு அடிவயிற்றில் வலி, ஃபைப்ராய்டு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள்.
 
டிசம்பர் 15 வரை சனி உங்கள் ராசிக்கு 2ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச் சனி தொடர்வதால் சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். பார்வைக் கோளாறு வந்து நீங்கும்.

 பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கு, பிடிவாத குணத்தை நினைத்து வருந்துவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மகள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வாள். மகன் கோபப்படுவார். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும். கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது. நல்லவர்களுடன் பழகுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது.
 
டிசம்பர் 16 முதல் ஏழரைச் சனி விலகி 3ம் வீட்டில் சனிபகவான் நுழைவதால் நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உள் மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து செயல்படத் தொடங்குவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். என்றாலும் பெரியளவில் முதலீடுகள் வேண்டாம். கடன் வாங்கி கடையை விரிவுபடுத்தி நவீனமாக்குவீர்கள். உணவு, இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. தொழில் ரகசியங்களை கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்களால் பிரச்னைகள் வரும்.
 
உத்தியோகத்தில் ஜூன் 12 வரை குரு 10ல் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகளும், வேலைச்சுமையும் இருக்கும். 13ந் தேதி முதல் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் கடின உழைப்பை உயரதிகாரிகள் புரிந்து கொள்வார்கள். உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். உங்களை எதிர்த்த அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார்.
சக ஊழியர்களுக்காக வாதாடி சாதித்துக் காட்டுவீர்கள். இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பதவி உயர்விற்காக சில தேர்வுகளை எழுதத் திட்டமிடுவீர்கள்.
 
கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். புது வாய்ப்புகளும் வரும்.
 
மாணவ-மாணவியர்களே! பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். 
 
கன்னிப்பெண்களே! தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்களை ஏமாற்றி வந்த சிலரிடமிருந்து விடுபடுவீர்கள். பெற்றோரின் ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும். போராடி நல்ல நிறுவனத்தில் வேலையில்
அமர்வீர்கள். வயிற்றுக் கோளாறு, தூக்கமின்மை வந்து நீங்கும்.
 
இந்த ஜய வருடம் முற்பகுதி கொஞ்சம் சறுக்கினாலும் பிற்பகுதியில் உயர்ந்த இடத்தில் அமர்த்துவதாக இருக்கும்.

 
பரிகாரம் :  தாம்பரம் - செங்கல்பட்டு சாலையிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி பெருமாளை தரிசியுங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #7 on: April 15, 2014, 07:31:17 PM »
ஜய வருட ராசி பலன்கள் - துலாம்

 எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்று நினைக்கும் பொதுவுடைமைவாதிகளே! உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வலுவாக 5ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். புதிய யோசனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். அனுபவப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.
 
மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்களை வாங்குவீர்கள். இந்த வருடம் உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12ம் வீட்டில் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். வெளியூர் பயணங்கள் உண்டு. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனதை வாட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த கோயில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். வீட்டை விரிவுப் படுத்திக் கட்டுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
 
ஜூன் 12 வரை குருபகவான் 9ம் வீட்டில் நிற்ப தால் பிரச்னைகளை தொலைநோக்குப் பார்வையு டன் தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். வங்கிக் கடனின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணமகள் அமைவார். மகளின் உயர்கல்வி சிறப்பாக அமையும்.
 
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். ஜூன் 13ந் தேதி முதல் குரு 10ம் வீட்டில் நுழைவதால் யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். எல்லோரும் பாரபட்சமாக உங்களிடம் நடந்து கொள்வதாக குறைக் கூறுவீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தையெல்லாம் வங்கியில் பாதுகாப்பாக வைத்துச் செல்வது நல்லது. வீட்டில் களவுபோக வாய்ப்பிருக்கிறது. சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம்.

 ஆனி, ஆடி, ஆவணி, மார்கழி, பங்குனி மாதங்களில் செல்வாக்கு கூடும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 7ம் வீட்டிலும், ராகு ராசியிலேயும் நீடிப்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்துபோகும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு உங்கள் மனைவியை சந்தேகப்படாதீர்கள். மனைவிக்கு முதுகுத் தண்டு, அடி வயிறு மற்றும் கணுக்கால் வலி வந்துபோகும். மனைவி வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். ஜூன் 21ந் தேதி முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகி 12ல் மறைவதாலும், கேது ராசிக்கு 6ல் அமர்வதாலும் தடைகள் நீங்கும். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். விலகி நின்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். குடும்பத்தில் இருந்த சல சலப்புகள் குறையும்.
 
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். திடீர் பயணங்கள் உண்டு. சிலருக்கு அயல்நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். டிசம்பர் 15 வரை சனி பகவான் உங்கள் ராசிக்குள் உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் ஜென்மச் சனியாக இருப்பதால் உடல் நலம் பாதிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எண்ணெயில் பொரித்த மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்த்து விடுங்கள். தலைச்சுற்றல், எலும்புத் தோய்வால் அவதிப்படுவீர்கள்.
 
பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரிகளையெல்லாம் கால தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். டிசம்பர் 16 முதல் பாதச் சனி தொடங்குவதால் பார்வைக் கோளாறு, பேச்சால் பிரச்னை, குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வந்துபோகும். காலில் அடிபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும் நீடிக்கும்.
 
சித்திரை, ஐப்பசி, மாசி மாதங்களில் அலைச்சல், வீண் டென்ஷன், குழப்பங்கள் வந்து போகும். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களுடன் போராட வேண்டியது வரும். அயல்நாட்டிலிருப்பவர்கள் திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். சிறியதாக கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். ரியல் எஸ்டேட், பழைய இரும்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயமடைவீர்கள். மார்கழி மாதத்திலிருந்து வியாபாரம் சூடுபிடிக்கும். பற்று வரவு உயரும்.

 ஜூன் 12 வரை குரு 9ல் நிற்பதால் உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஜூன் 13ந் தேதி முதல் 10ல் குரு நுழைவதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சின்னச் சின்ன அவமானங்கள், மனக் கலக்கங்கள் வந்துபோகும். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள்.
 
கலைத்துறையினரே! மறைமுகமாக போட்டிகள் இருக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
 
மாணவ-மாணவியர்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவியல், கணிதப் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கலை, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். கூடாப் பழக்க வழக்கங்களை தவிர்த்து விடுங்கள். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். உங்களிடம் அன்பாகப் பேசி சிலர் உங்களை பாதை மாற்றக் கூடும்.
 
இந்த ஜய வருடம் முற்பகுதி செல்வத்தையும் பிற்பகுதி செல்வாக்கையும் தருவதாக அமையும்.

 
பரிகாரம் :  ஈரோடுக்கு அருகேயுள்ள திருச்செங்கோடு தலத்தில் அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக் கீரையைக் கொடுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #8 on: April 15, 2014, 07:35:13 PM »
ஜய வருட ராசி பலன்கள் - விருச்சிகம்

அதிரடியாக செயல்பட்டு உடனடியாக தீர்வு காண்பதில் வல்லவர்களே! உங்களின் ராசிநாதனான செவ்வாய் லாப வீட்டில் இருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது பிறப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
 
ஜூன் 12 வரை குருபகவான் 8ல் மறைந்து நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாய மடைவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பலவருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள்.
 
ஜூன் 13ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நுழைவதால் திடீர் பணவரவு, யோகமெல்லாம் உண்டாகும். உங்களைப்பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் குறையும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சொந்த-பந்தங்களின் சுயரூபம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.   
   
ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்பதால் வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். கோயிலை புதுப்பிக்க நன்கொடை வழங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஜூன் 21ந் தேதி முதல் கேது ராசிக்கு 5ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். சிலர் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர்களில் சிலர் உங்களை காரியம் ஆகும் வரை பயன்படுத்திக் கொண்டு விலகு கிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை அதிகம் செலவு செய்து சீர் செய்வீர்கள். 
 
ஜூன் 20ந் தேதி வரை ராகு ராசிக்கு 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் பழைய பகை, கடனை நினைத்து கலங்குவீர்கள். அடுத்தவர்களின் குடும்ப விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம். தாயாருக்கு கை, முழங்கால் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சை வந்துபோகும். எதிர்காலம் பற்றிய பயம் வரும். ஜூன் 21ந் தேதி முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் எதிர்ப்புகள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்று மொழி பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பும் மரியாதையும் கூடும். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சிலர் அயல்நாடு செல்வீர்கள்.



டிசம்பர் 15 வரை ஏழரைச் சனியில் விரயச் சனி இருப்பதால் தூக்கம் குறையும். திடீர் பயணங்கள், வீண் அலைச்சல் இருக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லி உங்கள் சுயமரியாதையைக் குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நெருக்கமாக உள்ள முக்கியஸ்தர்களை யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். திடீரென்று அறிமுகமாகும் நண்பரை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.

முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். டிசம்பர் 16ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்மச் சனியாக அமர்வதால் அதுமுதல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பெரிய நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். நெஞ்சு வலி, படபடப்பு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.
 
வியாபாரத்தில் அனுபவ அறிவால் லாபம் ஈட்டுவீர்கள். அதிரடியாக சில சலுகைகளை அறிவிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். செய்யும் தொழிலோடு இணையாக வேறொரு தொழிலையும் தொடங்கு வீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். என்றாலும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்ள வேண்டாம். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். கமிஷன், ரியல் எஸ்டேட், செங்கல் சூளை, ஸ்டேஷனரி, பதிப்பகம் வகைகளால் லாபமடைவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உங்கள் கருத்திற்கு உடன்படும் நபரை பங்குதாரராக சேர்த்துக் கொள்வீர்கள்.

 உத்தியோகத்தில் ஜூன் 12ம் தேதி வரை பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். ஜூன் 13ம் தேதி முதல் வேலைச்சுமை குறையும். உயரதிகாரி களின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல்போன பதவி உயர்வு கிட்டும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள்.
 
கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். மக்களால் பாராட்டப்படுவீர்கள். உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும்.
 
மாணவ-மாணவியர்களே! படிப்பில் மதிப்பெண் கூடும். நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் சரியாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. உயர்கல்வி எதிர்பார்த்த கல்வி பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் கிடைக்கும். 
 
கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திருமணத் தடைகள் நீங்கும்.
 
இந்த ஜய வருடத்தின் முற்பகுதியில் புதுப்பது விஷயங்களில் முயற்சியையும் பிற்பகுதியில் வெற்றியையும் தருவதாக அமையும்.

 
பரிகாரம் :  பழநி தண்டாயுதபாணியை கந்த சஷ்டி கவசம் படித்து வணங்குங்கள். ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #9 on: April 15, 2014, 07:40:50 PM »
ஜய வருட ராசி பலன்கள் - தனுசு

பொதுவாக அமைதியை விரும்பும் நீங்கள், தர்க்கம் என வந்து விட்டால் இடியாக முழங்குவீர்கள். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் பிறப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
 
உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரத்தில் புதன் சென்று கொண்டிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.
 
ஜூன் 12 வரை உங்கள் ராசிநாதனான குருபகவான் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். புண்ணிய தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். நண்பர் வீட்டுக் கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.
 
ஜூன் 13ந் தேதி முதல் குருபகவான் ராசிக்கு 8ல் சென்று மறைவ தால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டியது வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெயர், புகழ், கௌரவம் குறைந்து விடுமோ என்ற ஒரு பயம் வரும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது.

 ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 5ல் நிற்பதால் பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். உங்கள் இளமைக் காலத்துடன் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்கான வரியைச் செலுத்தி சரியாக பராமரியுங்கள். சிலருக்கு கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். என்றாலும் ராகு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் அமைதியாக இருந்து சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் வெளிநாட்டிற்குச் சென்று வருவீர்கள்.
 
ஜூன் 21ந் தேதி முதல் ராகு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டிலும், கேது 4ன் வீட்டிலும் அமர்வதால் வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். தாய்வழிச் சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் அடிக்கடி இட மாற்றங்கள் வரும். சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பழைய கசப்பான அனுபவங்களை நினைத்து பெருமூச்சு விடுவீர்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம்.
 
டிசம்பர் 15 வரை சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால் நீண்ட நாள் கனவுகளெல்லாம் நனவாகும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. பங்குச் சந்தை மூலமாக ஆதாயமடைவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிபுகுவீர்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று செய்வீர்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். டிசம்பர் 16ந் தேதி முதல் சனிபகவான் 12ல் மறைந்து ஏழரைச் சனியின் முதல் கட்டமான விரையச் சனி தொடங்கயிருப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். அடிக்கடி மன அழுத்தத்திற்குள்ளாவீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். முக்கிய காரியங்களையெல்லாம் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
 
வியாபாரத்தில் புது முயற்சிகள் வெற்றியடையும். சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். வியாபார சங்கத்தில் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். இப்போது செய்கின்ற தொழிலைத்தவிர வேறொரு இணைத் தொழிலை கைக்கொள்ளுங்கள். வேற்றுமொழிக்காரர்கள், வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்களை வேலையாட்களாக அமர்த்துவீர்கள். விசாரித்துச் சேர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலர் முக்கிய சாலை அதாவது, மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். வேற்றுமாநிலம், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பங்குதாரர்களாக அறிமுகமாவார்கள். பெட்ரோ- கெமிக்கல், மருந்து, உணவு, ஃபைனான்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

 ஜூன் 12ந் தேதி குரு சாதகமாக இருப்பதால் உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் குரு 8ல் மறைவதால் கொஞ்சம் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். தலைமையின் நம்பிக்கையைப் போராடிப் பெறுவீர்கள். நீங்கள் செய்து முடித்த வேலைக்கு சக ஊழியரோ, அல்லது மூத்த அதிகாரியோ உரிமை கொண்டாடுவார்கள். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உரிமைக்காக நீதிமன்றங்கள் செல்ல நேரிடும்.
 
கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். உங்கள் திறமைக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும். உங்களின் கற்பனைத் திறன் வளரும். கடுமையாக உழைத்து படைப்பாற்றலை பெருக்கிக் கொள்ளுங் கள். சரியான சந்தர்ப்பங்கள் வரும்போது எளிதாக வெற்றி பெறலாம்.
 
மாணவ-மாணவிகளே! உங்களுடைய பொது அறிவுத்திறன் வளரும். அரசுத் தேர்வில் மதிப்பெண் கூடும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலைப்படுத்துங்கள். போராடி நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்வீர்கள். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
 
இந்த ஜய வருடம் அலைச்சல்களையும் சுபச் செலவுகளையும், தொலை தூரப் பயணங்களையும் தருவதுடன் புதிய திட்டங்கள் நிறைவேறுவதற்கும் உதவியாக அமையும்.

 
பரிகாரம் :  திண்டிவனம் - விழுப்புரம் பாதையில் மயிலம் தலத்திற்கு அருகேயுள்ள திருவக்கரை வக்ரகாளியம்மனை அமாவாசை திதி நாளில் சென்று வணங்கி வாருங்கள். புற்றுநோயாளிகளுக்கு உதவுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #10 on: April 15, 2014, 07:45:32 PM »
ஜய வருட ராசி பலன்கள் - மகரம்


மனசாட்சி ஒதுக்கும் செயல்களை மந்திரியே சொன்னாலும் செய்ய மறுப்பவர்களே! உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் இந்த ஜய வருடம் பிறப்பதால் தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். உங்கள் மீது உங்களுக்கே இருந்து வந்த அவநம்பிக்கைகள் நீங்கும். சாதிக்கும் எண்ணம் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வி.ஐ.பிகள் அறிமுகம் கிடைக்கும். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
 
உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் சுக்கிரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மாதக் கணக்கில் தடைப்பட்டு தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். பூர்வீகச் சொத்தின் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். படித்துப் பட்டம் வாங்கியும் உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப உத்தியோகம் இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
 
ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு, வீடு, ஜூன் 12 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். வீண் பழிகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.
 
ஜூன் 13ந் தேதி முதல் குரு 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அழகும் இளமையும் கூடும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு விரைவில் கூடிவரும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் நீங்கும். இருவரும் மனம் விட்டுப் பேசி செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

 ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். அவருக்கு வீண் டென்ஷன், ரத்த அழுத்தம் வந்துபோகும். வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் நிதானம் அவசியம். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். ஜூன் 21ந் தேதி முதல் கேது 3ம் வீட்டில் அமர்வதால் தடைகள், எதிர்ப்புகளெல்லாம் குறையும். வீரியத்தை விட காரியம்தான் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்குவார்கள். இளைய சகோதர வகையில் ஆதரவு கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும்.
 
ஜூன் 20ந் தேதி வரை ராகு 10ல் நிற்பதால் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். அதற்காக கவலைப்பட வேண்டாம். உத்தியோகத்தில் பிடிப்பற்றபோக்கு நிலவும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வந்து போகும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். ஜூன் 21ந் தேதி முதல் ராகு 9ம் வீட்டில் நுழைவதால் அநாவசியச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.

தந்தையாருக்கு நெஞ்சுவலி, சோர்வு, களைப்பு வந்துபோகும். அவருடன் மனத்தாங்கல் வரும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னையில் மூக்கை நுழைக்காதீர்கள்.     
 
டிசம்பர் 15 வரை உங்கள் ராசிநாதனான சனிபகவான் 10ம் வீட்டிலேயே நிற்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட வெற்றிகள், பாராட்டுகளை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். முக்கியப் பதவியில் இருக்கும் பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமொழி பேசுபவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். வேலைச்சுமை அதிகரிக்கும். டிசம்பர் 16 முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப வீடான 11ம் வீட்டில் நுழைவதால் பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும்.

வியாபாரத்தில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் லாபம் அதிகரிக்கும். தரமான சரக்குகளை மொத்த விலைக்கு வாங்குவீர்கள்.
 
புது நண்பர்களின் உதவியால் முன்னேறுவீர்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழும் கூடும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். இரும்பு, மூலிகை, கன்ஸ்ட்ரக்ஷன், அழகு சாதனப் பொருட்கள், துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
 
உத்தியோகத்தில் சூழ்ச்சியாலும், மறைமுக எதிரிகளாலும் இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். புது வாய்ப்புகள் தேடிவரும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்.

 சக ஊழியர்கள் உங்களின் புதுத் திட்டங்களை வரவேற்பார்கள். என்றாலும் டிசம்பர் 15 வரை சனி உத்தியோக ஸ்தானத்தில் நிற்பதால் அதிகாரப் பதவியில் அமர்ந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்ய வேண்டாம். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சம் வரும். எனவே, தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும்.
 
கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். மக்களால் பாராட்டப்படுவீர்கள். பழைய நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும்.
 
மாணவ-மாணவிகளே! எண்ணங்கள் நிறைவேறும். படிப்பில் மதிப்பெண் கூடும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். ஆசிரியர் உறுதுணையாக இருப்பார்கள். பள்ளிக் கல்வியை தவிர்த்து மற்ற மொழியறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். 
 
கன்னிப் பெண்களே! கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வாழ்க்கைத்துணையும் அமையும். பெற்றோரின் பேரன்பில் மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
 
இந்த ஜய வருடம் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவதாகவும், சமூகத்தில் அந்தஸ்தையும் வழங்கிச் செல்லும்.

 
பரிகாரம் :  திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை நெய் தீபமேற்றி வணங்குங்கள். வயதானவர்களுக்கு காலணியும், குடையும் வாங்கிக் கொடுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #11 on: April 15, 2014, 07:49:34 PM »
ஜய வருட ராசி பலன்கள் - கும்பம்


உள்ளம் அழுதாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நகைச்சுவையாக பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஜய வருடம் பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தள்ளிப்போன அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.
 
வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். மனைவி உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். சவால்களை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி பைசல் செய்வீர்கள்.
 
ஆனி, ஆடி, ஆவணி மாதப் பிற்பகுதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் ஓரளவு பணவரவும், பதவியும் வந்து சேரும். மகளுக்கு திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 8ல் செவ்வாய் நிற்கும்போது ஜய வருடம் பிறப்பதால் அடிவயிற்றில் வலி, சிறுசிறு விபத்துகள், சகோதர வகையில் மனத்தாங்கல், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துபோதும். இரவு நேரப் பிரயாணங்களின் போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல சுயமாக வாகனத்தை ஓட்டும்போது வேகத்தை குறைத்து ஓட்டுங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
 
ஜூன் 12ந் தேதி வரை குருபகவான் சாதகமாக இருப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்ப மிட்டு வைக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள்.

 புகழ், கௌரவம் குறைந்துவிடுமோ என்ற ஒரு அச்சம் வரும். தன்னம்பிக்கை குறையும். சில நேரங்களில் நெருக்கடிகளையும், தர்மசங்கடமான சூழ்நிலை களையும் சமாளிக்க வேண்டியது வரும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் தைரியம் கூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுக்கத் தொடங்குவீர்கள். சொத்துச் சேர்க்கையும் உண்டு. ஆன்மிக விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும்.
 
வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால், ராகு 9ம் வீட்டில் நீடிப்பதால் தந்தைக்கு வேலைச்சுமை, டென்ஷன், அவருடன் கருத்து மோதல்கள், வீண் விரயம் வந்துபோகும். சேமிப்புகள் கரையும். ஜூன் 21ந் தேதி முதல் கேது உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலும், ராகு 8லும் மறைவதால் யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொண்டு உங்களை விமர்சிப்பார்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல்வலி வந்துபோகும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்துபோகும்.
 
டிசம்பர் 15ந் தேதி வரை உங்கள் ராசிநாதனான சனிபகவான் 9ம் வீட்டில் நிற்பதால் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் நூலிழையில் வெளிவருவீர்கள். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும். தந்தை வழியில் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும். உள்மனதில் தொக்கி நிற்கும் தாழ்வுமனப்பான்மையை தூக்கி எறிவீர்கள். புது வேலை கிடைக்கும். டிசம்பர் 16ந் தேதி முதல் 10ம் வீட்டில் சனி நுழைவதால் வீண் வதந்திகள், அக்கம்-பக்கம் வீட்டாருடன் பிரச்னைகள் வந்துபோகும்.
 
வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிது புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். லாபம் கணிசமாக உயரும். ஆழம் தெரியாமல் பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். தேங்கிக்கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். லாபத்தை அதிகப்படுத்த விளம்பரம் மற்றும் நவீன யுக்திகளை கையாளுங்கள்.

தற்போதைய மார்க்கெட் நிறுவனங் களை புள்ளி விவரங்களாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். வேற்றுமதத்தவர்களின் உதவி மற்றும் கடன் உதவியால் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அரசாங்கத்தால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். புது ஏஜென்சியை யோசித்து எடுக்கப் பாருங்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். எந்த பிரச்னையாக இருந்தாலும் மனதிலுள்ளதை மறைக்காமல் பேசி விடுவதுதான் உங்களுக்கும் பங்குதாரருக்கும் நல்லது.

 உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களை குறை கூறிக் கொண்டிருந்த மேலதிகாரியின் மனசு மாறும். என்றாலும் சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்கள் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டியது வரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தாமதமாகும். உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகளை போராடிப் பெறுவீர்கள். 
 
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். கடுமையான உழைப்பை முதலீடாகச் செய்யுங்கள். சமயம் வரும்போது எல்லாமும் நல்ல முறையில் நடக்கும். மூத்த கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.
 
மாணவ-மாணவிகளே! மொழியறிவுத் திறனையும் பொது அறிவையும் நிறைய வளர்த்துக் கொள்ளுங்கள். அன்றைய பாடங்களை அன்றே முடிப்பது நல்லது. வகுப்பறையில் ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்கத் தயங்காதீர்கள். கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கிவிட்டு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பள்ளி மாற வேண்டியது இருக்கும். போராடி சில பாடங்களில் வெற்றி பெறுவீர்கள்.   
 
கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணம் கொஞ்சம் தாமதமானாலும் நல்லபடியாக முடியும்.
 
இந்த ஜய வருடம் நினைத்ததை நிறைவேற்றுவதுடன் உங்களின் செல்வாக்கையும் அந்தஸ்தையும் அதிகப்படுத்தும்.

 
பரிகாரம் :  தஞ்சாவூருக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டையில் அருளும் குருபகவானை தரிசித்து வாருங் கள். சாலைப் பணியாளர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்!
« Reply #12 on: April 15, 2014, 07:53:42 PM »
ஜய வருட ராசி பலன்கள் - மீனம்


யார் மனதும் புண்படாதபடி பேசும் நீங்கள், ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டிருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்த ஜய வருடம் பிறப்பதால் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அழகும் இளமையும் கூடும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வாட்டி வதைத்துக் கொண்டிருந்த பிரச்னைகளுக்கெல்லாம் இனி தீர்வு கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் உடனே முடியும். உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள். 
 
சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரத்தில் செல்லும்போதும் இந்த வருடம் பிறப்பதால் வீராவேசமாகப் பேசுவதைவிட, கனிவாகப் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பது தான் நல்லது. பணப்பற்றாக்குறையைப் போக்க கூடுதலாக உழைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். உங்களைப்பற்றிய நல்ல அபிப்ராயம் மனைவிவழி உறவினர்கள் மத்தியில் அதிகரிக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.
 
ஜூன் 12 வரை உங்கள் ராசிநாதனான குருபகவான் 4ம் வீட்டில் நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் வீண் பிரச்னைகள் வந்துபோகும். உங்களைப்பற்றிய விமர்சனங்களும் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களும் ஏற்படும். ஜூன் 13ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நுழைவதால் வசதி, வாய்ப்புகள் ஓரளவு பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடி திட்டங்கள் தீட்டி உழைப்பீர்கள். பிரபலங்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். மனை வாங்கிப் போட்டு வெகுநாட்களாகிவிட்டதே! அதில் இப்போது வீடு கட்டி முடிப்பீர்கள்.
 
எவ்வளவோ சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குழந்தை பாக்யம் தள்ளிப் போனவர்களுக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாத குணம் மாறும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனின் கூடாநட்பு விலகும். பொறுப்பாக நடந்து கொள்வார். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். கண்டும், காணாமல் சென்று கொண்டிருந்த சொந்த-பந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

 ஜூன் 20ந் தேதி வரை ராகு 8ம் வீட்டிலும், கேது 2ம் வீட்டிலும் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். ஈகோ பிரச்னையால் பிரிவுகள் ஏற்படக்கூடும். பேச்சில் காரம் வேண்டாம். எனவே இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படப் பாருங்கள். பல், காது மற்றும் தொண்டை வலி வரக்கூடும். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். ஜூன் 21ந் தேதி முதல் கேது உங்கள் ராசிக்குள் நுழைவதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எண்ணெயில் பொரித்த, வறுத்த மற்றும் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது முன்கோபம் வரக்கூடும். ராகுவும் 7ம் வீட்டில் அமர்வதால் மன உளைச்சல், விரக்தி, விரயம் வந்துபோகும். தலைசுற்றல் ஏற்படும். அவ்வப்போது குடும்ப வாழ்க்கையில் பற்றில்லாமல் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பணத்தட்டுபாடு இருக்கும்.
 
மனைவிக்கு ஃபைப்ராய்டு, முதுகுத்தண்டில் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்க்கப் பாருங்கள். யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலர் நல்லவர்களைப் போல் பழகி உங்களை ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது. 
டிசம்பர் 15 வரை அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் திடீரென்று அறிமுகமாகும் நபர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. நகை, பணம், முக்கிய சொத்து ஆவணங்களையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது நல்லது.
 
வீட்டில் களவுப் போக வாய்ப்பிருக்கிறது. வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை வரும். பழைய பிரச்னைகளெல்லாம் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் இருந்து கொண்டேயிருக்கும். அவ்வப்போது மற்றவர்களைப்போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். நெஞ்சு வலி, ஹார்மோன் பிரச்னை, ஆழ்ந்த உறக்கமின்மை வந்துபோகும். கை, கால் மரத்துப் போகும். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம்.
 
டிசம்பர் 16ந் தேதி முதல் சனி உங்களின் ராசிக்கு 9ம் வீட்டில் நுழைவதால் மனப்போராட்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் விலகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள்.
 
வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பணவரவு அதிகரிக்கும். வேலை கிடைக்கும். சொத்து அமையும். வியாபாரத்தில் சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு லாபம் கணிசமாக உயரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் புதியவர்களை நம்பி முதலீடுகள் செய்து ஏமாற வேண்டாம். ஆனால், ஜூன் 13ந் தேதி முதல் ராசிநாதன் குரு உச்சமடைவதால் லாபம் இரட்டிப்பாகும். கடையை மாற்றுவீர்கள். சிலர் விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்களின் தொந்தரவுகள் குறையும். பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புதுத் திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

 கல்வி, ஸ்டேஷனரி, உணவு, ரியல் எஸ்டேட், வாகன உதிரிபாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயமுண்டு. வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. ஜூன் 13ந் தேதி முதல் குரு 5ல் அமர்வதால் உத்தியோகத்தில் பழைய சிக்கல்களெல்லாம் பனியாக விலகும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. என்றாலும் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், முகவரி இல்லாத குற்றச்சாட்டு கடிதங்களின் அடிப்படையில் சின்ன சின்ன விசாரணைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும். உங்கள் வேலையை மற்றொருவரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
 
கலைத்துறையினரே! கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களை உங்களை அருகே அழைத்துப் பாராட்டுவார்கள். எப்போதும் புகழ்ந்து கொண்டே இருப்பவர்களை அதிகம் நம்ப வேண்டாம்.
 
மாணவ-மாணவிகளே! புத்தகத்தை பிரித்தாலே தூக்கம் வந்ததே! இனி உற்சாகமாக படிப்பீர்கள். விளையாட்டில் பதக்கம் உண்டு. கூடா நண்பர்களை தவிர்த்து நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற மாணவர்களோடு எப்போதும் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்த வருடக் கல்வியைப்பற்றி இப்போது சில திட்டங்களை தீட்டி வைத்துக் கொள்வது நல்லது.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வேலைக் கிடைக்கும். பெற்றோரின் விருப்பப்படி திருமணம் முடியும். முகப்பரு, பசியின்மை, ஹார்மோன் கோளாறுகள் வந்து நீங்கும். காய், கனிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
இந்த ஜய வருடம் முற்பகுதி கடினமாக இருந்தாலும் பிற்பகுதி மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும்.

 
பரிகாரம் :  சங்கரன்கோவில் கோமதி அம்மனை குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உங்களால் இயன்ற அளவு உதவியைச் செய்யுங்கள்.