FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Gotham on September 15, 2012, 09:38:30 PM

Title: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 15, 2012, 09:38:30 PM
பாகம் 1 :

வணக்கம். நான் தான் மார்க். என்னடா இவன் தமிழ்ல பேசறானேனு பாக்கறீங்களா? எனக்கு தமிழ் தவிர இன்னும் பதினஞ்சு மொழி தெரியும். அது தவிர உங்களால உணர முடியாத இன்னொரு மொழியும் தெரியும். ஆனா உங்கள்ல பல பேருக்கு தமிழ் மட்டுமே தெரியும்ங்கறதால தமிழ்லேயே பேசறேன்.

ஏற்கனவே சொன்ன மாதிரி என் பேர் மார்க், வயசு அஞ்சு, பிறந்த ஊர் ஜெர்மனியிலுள்ள டஸல்டார்ஃப். சொந்த ஊரும் ஜெர்மனி தான். ஆமா. நான் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்தவன். சுருக்கமா சொன்னா பிறப்பால நான் ஒரு நாய். பாருங்க.. இப்ப கூட ‘நாய்’ங்கற வார்த்தைய பயன்படுத்தினதுக்கு அந்த மாமா கோவமா பார்த்தார். என்னவோ அவர திட்டுற மாதிரி. மனுஷங்க திட்ட எங்க பேர பயன்படுத்தறதால ‘நாய்’ன்னு எங்கள நாங்களே கூப்டுக்க முடியல. இனிமே எங்களுக்குள்ள திட்டிக்கணும்னா ‘போடா மனுசப்பயலே’னு தான் திட்டிக்கணும் போல.

சொல்ல வந்ததைத் தவிர என்னன்னவோ பேசிக்கிட்டு இருக்கேன் பாருங்க. உங்ககிட்ட நிறைய சொல்லணும்.. பேசணும்னு தான் வந்தேன். இந்த மாதிரி கதை சொல்றது எனக்கு புதுசு. அதனால கூட தலைப்பை எப்படி வைக்கணும்னு தெரியல.

தலைப்புன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்? தெரியல. ஆனா அதுக்கு முன்னாடி என்னோட கதையை கொஞ்சம் சொல்றேன். ஏற்கனவே சொன்னமாதிரி என் பிறந்த ஊரு ஜெர்மனியில இருக்கு. உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ நீங்க பேசற மொழிகளை எங்களால சீக்கிரமே கத்துக்க முடியும். உங்ககூடவும் பேசுவோம். நீங்க செஞ்ச பாவமோ என்னவோ நாங்க பேசுறத உங்களால் கேட்க முடியாது. ஏதோ நாங்க பேசறதை ‘குரைக்குது’னு சொல்றீங்க. அது சரி. உங்களுக்கு ஒன்னு புரியலேன்னா உங்க மேல தப்பில்ல புரிஞ்சிக்க முடியாதபடி இருக்கறது அந்த விஷயத்தோட தப்புன்னு வாதாடற ஆளு தானே நீங்க.

இப்படி தான் நான் பல மொழிகள்ல பேசுவேன். நான் வளர்ந்தது ஒரு எஞ்சினீயரோட வீட்ல. அவர் வீட்ல என்மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. எஞ்சினீயருக்கு ஒரு முப்பத்தஞ்சு வயசுக்கு மேல இருக்கும். எஞ்சினீயரம்மா ரொம்ப நல்லவங்க. ரெண்டு பேருமே ஜெர்மன் காரங்க. அவங்க கூட பழகி தான் எனக்கு ஜெர்மன் மொழி தெரியும். அப்போ எனக்கு விளையாட்டுத் துணை பக்கத்து வீட்டில இருந்த டாமி. அவனை சின்ன வயசில தமிழ் நாட்டுல இருந்து தூக்கிட்டு வந்திருந்தாங்க. அவன் மூலமா தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். டாமி தமிழ்ல நிறைய கவிதையெல்லாம் எழுதுவான். அவன் தமிழ்ல பாடுறத கேட்க அவ்ளோ நல்லா இருக்கும். தினமும் சாயங்காலம் எஞ்சினீயர் என்னை வாக்கிங் கூட்டிட்டு போவார். வீட்டுக்குப் பக்கத்திலேயே பெரிய பார்க் இருக்கு. அங்க போய் எங்க இனத்துல இருக்கற பல சாதி நாய்ங்களோடயும் விளையாடுவேன். ஒரு நிமிஷம்.. ஏன் இப்படி மொறச்சு பாக்கறீங்க..? சரி உங்க விருப்பத்திற்கு இனி நாய்ன்ங்கற வார்த்தைய பயன்படுத்தல. ‘டாக்’ன்னே பயன்படுத்தறேன். யப்பா என்னா கோவம் வருது? இந்த உரிமை கூட எங்களுக்கு இல்லாம போச்சே.

திரும்ப.. ட்ராக் மாறிட்டேன்.. சாரி. அதான் அங்க பல டாக் வரும். எங்களுக்குள்ள இந்த சாதிப்பிரச்சனையெல்லாம் கிடையாது. எல்லோரும் ரொம்ப சந்தோஷமா விளையாடுவோம். அப்போ தான் மத்த மொழிகளையும் கத்துக்கிட்டேன். நான் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்தவன். ஆணழகன். கம்பீரமா இருப்பேன். அதனாலேயே பல பெண் டாக்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். என்னவோ தெரியல. அவங்க மேலல்லாம் பெரிசா ஏதும் ஈர்ப்பு வரல. சந்தோஷமா வாழ்க்கை போய்ட்டு இருந்தப்போ தான் இடி மாதிரி அந்த சேதி வந்துச்சு. அந்த எஞ்சினீயருக்கு பக்கத்து நாட்டுல வேலை கிடைச்சிருக்குங்கற சேதி. எனக்கு ஒரே கலக்கமா போயிடுச்சி. அவங்க என் மேல ரொம்ப ரொம்ப பாசமா இருப்பாங்க. என்னை விட்டுப் பிரிய முடியாம என்னையும் அவங்களோட கூட்டிட்டு போறதா முடிவு பண்ணினாங்க. எனக்கு ஓரளவு சந்தோஷமா இருந்தாலும் நண்பர்களை விட்டுட்டு பிரியறதுக்கு ரொம்ப கலக்கமா இருந்துச்சு. என்ன இருந்தாலும் மூழ்காத ஷிப்பு ஃப்ரண்ட்ஷிப் தானே. கிளம்ப இன்னும் ஒரு வாரமே இருந்தது. அந்த ஒரு வாரமும் எனக்கு செண்ட் ஆஃப் கொடுத்தாங்க எங்க நண்பர்கள். எப்படின்னு கேக்கறீங்களா?

முன்னமே சொன்ன மாதிரி எனக்கு ஸ்பெஷலா ஒரு மொழி தெரியும்னு சொன்னேன்ல. அதான் டாக் லாங்குவேஜ். எங்க சொந்த மொழி. நாடு கண்டங்களைத் தாண்டி எங்க இனத்தை இணைக்கற மொழி இது. யாரும் தனியா கத்துக்கறதில்ல.. இது எங்க தாய்மொழி மாதிரி. தானாவே பழகிப்போம். எந்த நாட்டில இருந்து வர்ற எந்த டாக் கூடவும் பேசவும் இந்த மொழி தான். அதனால யாரையும் நாங்க அன்னியனாவே பாக்கறதில்ல. ஆமா. உங்களுக்கு அப்படி ஒரு மொழி இல்லீல்ல.. பாவம் சார் நீங்க.

எங்க மொழியில இரவானா ஒலிபரப்பு எல்லாம் நடக்கும், ஆனா உங்களுக்கு எதுவுமே கேட்காது. என்னமோ சொல்லுவாங்களே கேட்கும் அலைவரிசைன்னு, உங்களவிட அதிக கிலோஹெர்ட்ஸ்ல நாங்க நடத்தற அந்த சானல் பத்தி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதுல தான் எனக்காக ப்ரண்ட்ஷிப் பத்தின பாட்டெல்லாம் டெடிகேட் பண்ணினாங்க. எனக்கு அழுகை அழுகையா வந்தது. போற ஊரில இந்த மாதிரி நட்பெல்லாம் கிடைப்பாங்களான்னு சொல்ல முடியாதே..!!

கிளம்புவதற்கு முன்னாடி அந்த எஞ்சினீயர் என்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனார். அரிசி மாதிரி இருந்த ஏதோ ஒன்ன என் தோள்பட்டையில வச்சு தைச்சாங்க. ஊசிப்போட்டதுனால எனக்கு அப்போ வலிக்கல. ஆனா என் ரத்தம் பாத்து எஞ்சினீயரம்மா அழுதாங்க. அவ்ளோ பாசம் என் மேல. அது ஏதோ மைக்ரோசிப்பாம். நான் தொலைஞ்சு போனாலும் கண்டுபுடிக்க உதவுமாம். அடப்பாவிகளா.. நான் தொலைஞ்சுப் போகணும்னு முடிவு பண்ணிட்டா என்ன பண்ணினாலும் உங்களால கண்டுபுடிக்க முடியாதுன்னு கத்த தோணிச்சு. பேசாம இருந்துட்டேன். அடுத்ததா பாஸ்போர்ட்டாம். உங்களுக்குத் தான் பாஸ்போர்ட்ன்னா எங்களுக்கும் வேணுமாம். என்னக் கொடுமை சார் இது? வெட்டினரி டாக்டர் சர்டிஃபிக்கேட் கொடுத்தார். ராபிஸ்க்கு தடுப்பூசி ஏற்கனவே போட்டிருந்ததால எந்த பிரச்சனையுமில்லை. கிளம்ப வேண்டிய நாள் வந்திச்சு. எங்க சானல்ல எல்லோருக்கும் கடைசியா பை சொல்லிட்டு கிளம்பினேன். ஏர்போர்ட் போனதும் தான் தெரிஞ்சது நாங்க போகப்போறது கோபன்ஹெகன். டென்மார்க். அப்போ எனக்குத் தெரியாது. ஜெஸ்ஸிய அங்க தான் சந்திக்கப்போறேன். அவளை காதலிக்கப்போறேன்னு. அந்தக் காதல் என்னை அப்படியே அடிச்சுப் போடும்னு..
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 17, 2012, 10:19:29 AM

பாகம் 2:
முதல்முறையா ஏர்போர்ட்டுக்குப் போறேன். சந்தோஷமா இருந்துச்சு. எங்க சானல்ல பலவகையான டாக்களும் விமானத்துல போன கதைய சொல்லுவாங்க. அவ்ளோ ஆசையா இருக்கும். விமானம் பறக்க ஆரம்பிக்கும் போது காது ஜிவ்வுன்னு அடைச்சுக்குமாம். முதல்ல பயமா இருக்கும். ஆனா போகப் போக சரியாயிடும்னு சொன்னாங்க. ஒருவித திகிலோட தான் நான் ஏர்போர்ட்டுக்கு போனேன்.

காரிலேர்ந்து துள்ளிக் குதிச்சு இறங்கியதும் எஞ்சினீயரம்மா என்னைக் கூப்பிட்டாங்க. ‘செல்லமே.. என் தங்கமேன்னு’ ஜெர்மன் மொழியில கொஞ்சிக்கிட்டே, ‘செல்லம்.. கொஞ்சம் நேரம் தான் எங்கள விட்டு பிரிஞ்சு இருக்கப்போற. இந்த பெட்டிக்குள்ள இரு. உனக்கு ஒன்னும் ஆகாது. நாங்க இருக்கறோம்னு’ செல்லம் கொஞ்சினாங்க. அவங்க இருக்கறப்போ எனக்கு என்ன பயம். தலையாட்டிக்கிட்டே வாலாட்டினேன். நான் ஆறுகிலோக்கும் மேல இருக்கறதால பயணிகள் உட்கார்ற கேபினுக்குள்ள இருக்கக்கூடாதாம். தனியா வேறொரு இடத்துல இருக்கணுமாம். நாங்கல்லாம் உயிருள்ள ஜீவன்கள் கிடையாதான்னு கத்தத் தோணுச்சு. எஞ்சினீயருக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாதென்னு அமைதியா இருந்தேன்.

என்னைத் தனியா ஒரு கதவு கிரில் போட்ட பெட்டிக்குள்ள வச்சாங்க. நான் நடக்கறதுக்கும் படுக்கறதுக்கும் வசதியா இருந்துச்சு. அப்போ தான் கவனிச்சேன். என்னைய மாதிரி இன்னும் நாலு டாக் அங்க இருந்துச்சு. எங்கள வசதியா அந்த விமானத்துக்குள்ள ஏத்தினதும் உலகமே அமைதியான மாதிரி இருந்துச்சு. ரொம்ப பயமா போச்சு. கொஞ்ச நேரம் தான். அப்புறம் அங்க இருந்த டாக்-கெல்லாம் ப்ரண்ட் ஆயிட்டோம். என்கூட வந்த இன்னொரு டாக் நிறைய தடவை விமானத்துல போயிருக்காம்.

இப்படி தான் அந்த ஏர்பெர்லின் விமானம் பறக்க ஆரம்பிச்சது. ஆரம்பத்துல வயத்துல யாரோ கிச்சுகிச்சு மூட்டற மாதிரி இருந்துச்சு. அப்புறம் போகப்போக சரியாயிடுச்சு. விமானத்துல ஏறரத்துக்கு முன்னாடி நிறைய தண்ணி குடிச்சிருந்தேன். கொஞ்சம் களைப்பில்லாம் இருந்துச்சு. ஒரு வழியா விமானம் கோபன்ஹேகன் வந்தது. இங்க தான் முதன்முதலா ஜெஸ்ஸிய நான் சந்திச்சேன்.

முதல் விமானப்பயணம்ங்கறதால கொஞ்சம் கிறுகிறுப்பா இருந்துச்சு. தரை இறங்கியதும் எங்கள வெளியே கொண்டு வந்தாங்க. எஞ்சினீயரம்மா ஓடி வந்து என்னை கட்டிப்புடிச்சுக்கிட்டாங்க. ரொம்ப பாசக்காரங்க. அப்புறமா ஏதோ இமிகிரேஷனு சொல்லி கூட்டிட்டு போய் நோய் இருக்கானு செக் பண்ணினாங்க. அங்க தான் ஜெஸ்ஸிய சந்திச்சேன். ஜெஸ்ஸி.. பேச சொல்லும் போதே உடம்புல சின்னதா ஒரு அதிர்வு இருக்கு பாருங்க. அதான் அவ. அவ அழகுன்னு சொல்ல முடியாது.. பேரழகி. ஜெஸ்ஸி…ஷி இஸ் செக்ஸி டூ. நான் என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு டாக்-அ சந்திச்சதில்ல. அவ்வளவு அசத்தலா இருந்தா. அவளுக்கும் அது முதல் பயணம் போல. பயந்திருந்தா. உடம்பு நடுங்கிட்டு இருந்துச்சு. மிரள மிரள பாத்துட்டு இருந்தா. இப்போ நினைச்சாலும் சிரிப்பா வருது. நான் ஏதோ பெரிய இவன் மாதிரி வால ஆட்டிக்கிட்டு இருந்தேன். வரிசைல எங்களுக்கு மூணு பேர் முன்னால ஜெஸ்ஸிய கூட்டிட்டு வந்தவங்க நின்னுட்டு இருந்தாங்க. இவ சுத்தி முத்தி தலைய திருப்பிப் பார்க்கும் போது நான் என் முகத்தை வேற பக்கம் திருப்பிக்கிட்டேன். நான் பாக்கறத அவ பாத்துடக்கூடாது பாருங்க.

க்யூ மெதுவா நடந்துட்டு இருந்தப்ப தான் அது நடந்தது. திரும்பி திரும்பி அங்கயும் இங்கயும் பாத்துட்டு இருந்த ஜெஸ்ஸி என்னை நேருக்கு நேரா பாத்தா. இத தான் மனுஷங்க பாத்ததும் காதல்னு சொல்றாங்களோ. அந்த நிமிஷம்… அந்த ஒரு கணம் என் வாழ்க்கையில மறக்க முடியாத நிமிஷம். என்னை அப்படியே புரட்டிப் போட்டுச்சு. உடம்புல என்னன்னவோ நிகழ்ந்துச்சு. சுத்திலும் மக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி இருந்துச்சு. அவ வாயோரமா ஒரு சின்னப் புன்னகை போதும். நாளெல்லாம் பாத்துட்டு இருக்கலாம். அவ.. என் ஜெஸ்ஸி…சார்.. ஜெஸ்ஸி… என் அஞ்சலைங்க..

அவளுக்குள்ளும் ஏதேதோ நடந்திருக்கும் போல. சட்டென திரும்பிக்கிட்டா. அதுக்கப்புறம் திரும்பவே இல்லை. எனக்கு கொஞ்சம் ஏமாத்தமா இருந்துச்சு. இன்னொரு முறை திரும்பேனு கத்தணும் போல இருந்தது. அங்க ஒரு காதல் காவியம் அரங்கேறுவது தெரியாம மனுஷங்கல்லாம் இயந்திரம் மாதிரி தங்களோட வேலைய பாத்துட்டு இருந்தாங்க. ஜெஸ்ஸியோட இமிகிரேஷன் முடிஞ்சு அவ கிளம்பிட்டா. எனக்குள்ள அப்படி ஒரு பதைபதைப்பு. ஒரு தடவை தான் நேருக்கு நேரா பாத்துக்கிட்டோம். ஒரு வார்த்தைக்கூட பேசினதில்ல. ஆனா என் உசுரே போற மாதிரி எனக்குள்ள அப்படி ஒரு தவிப்பு.

போறாளே போறாளே போறாளேனு சோககீதம் வாசிக்கணும் போல இருந்துச்சு. கடவுளுக்கு ஏன் இப்படி ஒரு கல்நெஞ்சம். எங்கிருந்தோ வந்த எனக்கு என் ஜெஸ்ஸிய காமிச்சு, கண்ணோடு கண் நோக்க வச்சு, ஒரு வார்த்தை பேசறதுக்குள்ளேயே எங்கள பிரிக்க வச்சு.. என்ன அமைப்பு இது? புரிஞ்சுக்கவே முடியல. அதோட பெரிய கொடுமை என்னன்னா நமக்கு புடிக்கறவங்களுக்கு நம்ம புடிச்சிருக்கான்னு தெரிஞ்சிக்கறது. ஒருதலையாவே காதலிச்சு வாழ்க்கையில நிறைய மனுஷங்க தோத்ததா நிறைய கேள்விப்பட்டிருக்கேன். என் வாழ்க்கையும் அப்படி ஆயிடுமோ? கடவுளே! ஒரே ஒரு முறை ஜெஸ்ஸி என்னைத் தான் விரும்பறானு தெரிஞ்சிக்கற சந்தர்ப்பத்த கொடு. அத நெனச்சுக்கிட்டே என் காலத்த ஓட்டிடுவேன்னு வேண்டினேன். உடனே கடவுள் கண்ண திறந்துட்டார். தன்னை கூட்டிட்டு வந்த அந்த அம்மாவோட போயிட்டு இருந்த ஜெஸ்ஸி ஒரே ஒரு தடவை என்னை திரும்பிப்பார்த்தா. அதுல ஆயிரம் ஆயிரம் காதல்கதைகள். அப்படி ஒரு காதல்பார்வை பார்த்தா. என்னால நிக்க முடியல. குதிக்க முடியல. ‘என்னைப்பார்த்துட்டா.. என்னைப்பார்த்து சிரிச்சுட்டா’னு கதற வேணும் போல இருந்துச்சு. என் கண்ணில் தாரைத் தாரையா கண்ணீர். என்னையும் என் கண்ணீரையும் பார்த்துக்கிட்டே ஜெஸ்ஸி அந்த கேபில ஏறிப் போனா….!!!
அவ கண்ணிலேயும் கண்ணீர்….!!
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 17, 2012, 10:20:31 AM
yaarachum itha padikaringalaa?  :-[
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Anu on September 20, 2012, 10:35:33 AM
Nice story. continue pannunga.
enaku oru doubt gotham
adhu enna eppavum love storye ezhudaringa..
iduku pinnaala edaachum periya love story  irukumo ...
irundha unga sondha love story ah ezhudunga
interesting ah irukum..
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 20, 2012, 11:50:18 AM
நன்றி அனுக்கா.


நான் காதல் கதையும் எழுதியிருக்கேன். சில பார்த்தது கேட்டது. இப்படின்னு. இது ரெண்டு வருஷம் முன்னாடி எழுதினது வேற இடத்துல :D


நீங்க படிக்கறீங்கன்னா மத்த கதைகளையும் வேணா பதிக்கலாம். இங்க யாரும் படிக்கற மாதிரி தெரியல. அதான் அடுத்த பாகத்த போடணுமானு யோசிச்சிட்டு இருந்தேன் :)
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Anu on September 21, 2012, 11:47:45 AM
eduku stop seiringa ?
share seiyunga.
sometimes padichitu comments podaama irukalam thaane.
naan neraiya times apadi seiven.
so continue seiyunga ..
kettatha thodaravum koodaathu,nallatha niruthavum koodaadhu ..
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Global Angel on September 21, 2012, 01:12:53 PM
ஹஹஹா நாயே உனக்கும் ஒரு லவ் ஆ ... மனுசங்களே லவ் பண்ணிட்டு நாய் படாத பாடு .. அப்போ நாய் லவ் பணினா எப்டி இருக்கும் ... ஹஹஹா கோதம் நாய் காதல் நல்லாத்தான் போகுது .. அதிலும் இந்த நாய் குசும்பு தாங்கல... மனுசங்கள எனமா கலைக்குது ... ஹ்ம்ம் வாய் விட்டே சிரிச்சுட்டேன் பல பகுதில ... ஹஹஹா
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 21, 2012, 01:15:12 PM
நன்றி க்ளோபல் ஏஞ்சல். சில விஷயங்கள முழு கதையும் பதிஞ்சபின்னாடி சொல்றேன். :)
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 21, 2012, 01:19:33 PM

பாகம் 3:
------------------------------------------------------------------------------------------------------------------
சொல்ல மறந்துட்டேன். ஜெஸ்ஸி பொமரேனியன் இனத்தை சேர்ந்தவ. நல்லா புசுபுசுனு நிறைய முடி இருக்கும். வெள்ளைக் கலர்ல. பார்க்க தேவதை மாதிரி இருப்பா. அவ வாலாட்டிட்டு போற ஸ்டைலே தனி. அவ அந்த இடத்தை விட்டுப் போனதும் உலகமே இருண்ட மாதிரி இருந்துச்சு. கண்ணை இருட்டிட்டு வர்ற மாதிரி இருந்துச்சு. உண்மையிலேயே நான் மயக்கமாயிட்டேன்.

கண் முழிச்சுப் பார்த்தா ஏதோ ஆஸ்பிடல்ல இருந்தேன். சுத்தி அந்த எஞ்சினீயரம்மாவும் எஞ்சினீயரும் நின்னுக்கிட்டு இருந்தாங்க. எஞ்சினீயரம்மா கண்ணுல கண்ணீர். ‘விமானப்பயணம் ஒத்துக்கலேன்னும் அதனால மயக்கமாயிருக்கலாம்னும்’ டாக்டர் சொல்லிட்டு இருந்தார். ரெண்டு மூணு நாள்லேயே சரியாயிடும்னு சொல்லி கொஞ்சம் மருந்து எழுதிக் கொடுத்தார். எனக்கில்ல தெரியும் உயிர் போனதுக்கு அப்புறம் இங்கிருப்பது வெறும் உடல் தானே. என் ஜெஸ்ஸி எங்க இருக்காளோ.. எப்படி இருக்காளோ? ஆனா அவ இந்த நாட்டில தான் இருக்காங்கற நெனப்பே எனக்கு தெம்ப கொடுத்தது.

ஊருக்கு கொஞ்சம் தள்ளி பெரியவீட்டை எஞ்சினீயர் வாடகைக்கு எடுத்திருந்தார். பெரிய வீடு, நீச்சல்குளம், நான் தங்க தனிவீடுனு அமர்க்களமா இருந்தது. நாங்க போன நேரம் வானிலையும் நல்லா இருந்தது. ரெண்டு நாள் வீட்டில நான் ரெஸ்ட் எடுத்தேன். எஞ்சினீயரம்மா எனக்கு வேளாவேளைக்கு சாப்பாடும் மருந்தும் கொடுத்தாங்க. ரெண்டு நாள் கழிச்சு கார்ல ஊர் சுத்த கிளம்பினோம். அந்த ஊரில இருக்கிய பெரிய பார்க்குக்கு போனோம்.

பார்க்க பார்க்க என் கண்ணு விரிஞ்சுது. யப்பா.. எவ்ளோ பெரிய பார்க். டஸல்டார்ஃப்ல பார்க் இருக்கும். ஆனா இவ்ளோ பெரிசு இல்லே. ஏகப்பட்ட மரங்களும், செடிகளும்.. பச்சைப்பசேல்னு புல்வெளிகளும்னு ஆள அசத்துச்சு. கூட்டமும் அதிகமில்லை. என்னை மாதிரியே நிறைய டாக்குங்க வந்திருந்தாலும் புது இடங்கறதால யார்கிட்டேயும் பேசல. என்னைக் கூட்டிட்டு போன எஞ்சினீயர் கொண்டு வந்திருந்த ஃப்ரீஸ்பிய தூக்கிப் போட்டார். நான் ஓடிப் போய் எடுத்து வந்தேன். இது தான் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச விளையாட்டு. விளையாடி ரொம்ப நாள் ஆச்சு. எஞ்சினீயரம்மா ஒரு ஓரமா பெஞ்ச்சில உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிட்டு இருந்தாங்க. அன்னிக்கு தான் எனக்கு விஷயமே தெரியும், எங்க வீட்டுல நாலாவதா ஒருத்தர் வரப்போறாங்க. இன்னும் ஏழு மாசத்துலேன்னு. எஞ்சினீயரம்மா ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. அவங்க மட்டுமில்ல. அங்க நான் பார்த்த பல பேரு எப்பவுமே சிரிச்ச முகத்தோட சந்தோஷமா இருந்தாங்க. உலகத்துலேயே சந்தோஷமான மக்கள் அதிகமிருக்கற நாடுன்னு சும்மாவா சொன்னாங்க.

விளையாடிக்கிட்டு இருக்கறப்போ அடிச்ச காத்துல ஃப்ரிஸ்பி ஓரமா இருந்த பெரிய புதர்க்குள்ள விழுந்துடுச்சு. இருட்டா இருந்த புதர்க்குள்ள நுழைஞ்ச நான் தேடிக் கண்டிபுடிச்சேன். எடுக்கலாம்னு வாயில கவ்வும் போது எதிர்பக்கமா யாரோ இழுக்கற மாதிரி இருந்துட்டு. எங்க இனத்துக்கே தோக்கற பழக்கம் கிடையாது. நானும் வலுக்கட்டாயமா இழுக்க ஆரம்பிச்சேன். யாரோ ஒரு டாக் இழுக்குது. வெளியில ஃப்ரிஸ்பியோட அந்த டாக்கையும் இழுத்துட்டு வந்துட்டேன். வந்ததுமே என் வாயிலே இருந்த ஃப்ரிஸ்பிய விட்டுட்டேன். நீங்க நினைக்கறது உண்மை தான். சந்தேகமே இல்லாம அது ஜெஸ்ஸி தான். இமைக்க இமைக்க பாத்துட்டு இருந்தேன். ஜெஸ்ஸியும் ஃப்ரிஸ்பிய போட்டுட்டு என்னைப் பார்த்துட்டு இருந்துச்சு. கொஞ்சம் வெட்கப்பட்ட மாதிரி இருந்துச்சு. இருக்காதா பின்ன என்ன மாதிரி ஒரு ஆண் டாக் காதலனா கிடைக்க எத்தனையோ பெண் டாக் தவம் கிடக்கும் போது. ஜெஸ்ஸி பல் அத்தனையும் முத்து போல வெண்மை. அவளை மாதிரியே. ரெண்டு பேரும் பார்த்துட்டே இருக்கும் போது ,’ஜெஸ்ஸி.. ஜெஸ்ஸி’னு கூப்பிட்டுக்கிட்டே அவ அம்மா வந்தாங்க.

அப்போ தான் அவ பேரு ஜெஸ்ஸின்னு எனக்குத் தெரியும். ஒவ்வொரு தடவை அவ பேர அவங்க சொல்ற போதும் அப்படியே அடி வயித்துல ஜிலீர்னு ஒரு உணர்வு வரும். காதலிச்சுப் பாருங்க. அப்ப புரியும். காதுமடல்லாம் துடிக்க துடிக்க வாலை மிக வேகமா ஆட்டினேன். ஜெஸ்ஸியும் வேகமா ஆட்டினா. என்னை அவளுக்கு ரொம்பபிடிச்சுப் போட்டு.

அதே நேரத்துல என்னை தேடிக்கிட்டு எஞ்சினீயர் வர அவர் கூப்பிட்டதுலேர்ந்து தான் என் பேர் மார்க்னு ஜெஸ்ஸி தெரிஞ்சுக்கிட்டா. இன்னும் வேகமா ஆமோதிக்கற மாதிரி வாலாட்டினா. எஞ்சினீயரும், ஜெஸ்ஸியோட அம்மாவும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கிட்டாங்க..

“ஹாய் நான் டேனியல்..” “நான் க்ளாரா..!”

அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே எஞ்சினீயரம்மா இருக்கற இடத்துக்குப் போக நானும் ஜெஸ்ஸியும் பின் தொடர்ந்தோம். எங்க மௌனமே எங்களுக்குள்ள பல உரையாடல்கள நடத்துச்சு. முதல் முறையா என் பக்கத்துல நடந்து வர ஜெஸ்ஸி வெட்கப்பட்டா. அதனால கொஞ்சம் தள்ளித் தள்ளி நடந்தா. பேசலாம்னு பாத்தா…. முகத்தை வேற பக்கம் திருப்பிக்கிட்டா. அப்புறமா சொன்னா.. அன்னிக்கு ரொம்ப வெக்க வெக்கமா இருந்துச்சாம். நானும் விடாம அவ வாலைத் தட்டினேன். அவ கண்டுக்கல.

எஞ்சினீயரம்மாக்கிட்ட போனதும் அவங்க மூணு பேரும் பேச ஆரம்பிக்க என்னையும் ஜெஸ்ஸியையும் தனியே விட்டுட்டாங்க. இதான் சந்தர்ப்பம்னு ஜெஸ்ஸிய பாத்து செல்லமாய் கூப்பிட அவ ஓட ஆரம்பிச்சா. நானும் விடல. துரத்த ஆரம்பிச்சேன். ரெண்டு பேரும் ஓடி ஓடி அந்த பார்க் ஓரத்துல இருந்த ஏரிக்கரைக்கு வந்துட்டோம். ஏரியோரமா காலை நெனச்சுக்கிட்டு ஜெஸ்ஸி நிக்க நானும் பக்கத்துல நின்னேன். சூரியன் அப்போ தான் மறைய ஆரம்பிச்சிருந்தான். அந்த இடமே தகதகன்னு ரம்மியமா இருந்துச்சு. கூடவே என் ஜெஸ்ஸி வேற. கேக்க வேணுமா..? சத்தியமா நான் சொர்க்கத்திலே தான் இருக்கேன்.

மெதுவா பேச ஆரம்பிச்சேன்.

“ஜெஸ்ஸி…”

“ம்ம்..”

“என்கிட்ட பேச மாட்டியா..?”

“அப்படி எல்லாம் இல்லே..”

“பின்ன ஏன் பாத்தும் பாக்காத மாதிரி இருக்க..”

“என்னமோ தெரியல.. வெக்கம் வெக்கமா இருக்கு..”

“என்கிட்ட என்ன வெக்கம்.. உன்னை முத முதலா ஏர்போர்ட்ல பாத்தவுடனே என் மனச பறிகொடுத்துட்டேன்..”

“நானும் தான்.. ஏதோ ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு. உடனே கிளம்பினவுடனே.. அழுகை அழுகையா வந்துச்சு..”

“நானும் பாத்தேன். என் மேல அவ்ளோ ஆசையா..”

ஆமாம் என்பது போல் தலையாட்டினா..

அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருந்துச்சு. நாங்க பேசினது எங்க பாஷையில. உங்க வசதிக்காக மொழிபெயர்த்து கொடுத்தேன். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே அவங்க மூணு பேரும் இருந்த இடத்துக்கு வந்தோம். கிளம்ப வேண்டிய நேரம் வந்தததும் துக்கம் தொண்டையை அடைக்க பிரியாவிடை பெற்றோம்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் ரொம்பவே அசதியா இருந்தாலும் ஜெஸ்ஸிய சந்திச்சு பேசினது ரொம்ப புத்துணர்ச்சியா இருந்துச்சு. சாப்டுட்டு சீக்கிரமே படுக்கப் போயிட்டேன். கனவுல ஜெஸ்ஸி… தேவதை மாதிரி. அவளுக்கும் எனக்கும் ரெக்கை முளைச்சிருக்கு. ரெண்டு பேரும் பறந்துக்கிட்டே உலகத்துல இருக்கற அதிசய இடங்கள்ல்லாம் சுத்திப் பார்க்கிறோம். எப்போ தூங்கினேன்னு தெரியல.

அடுத்த நாள் காலையில் ஒரு ஆச்சர்யம் காத்துட்டு இருந்தது.
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Global Angel on September 21, 2012, 01:25:42 PM
 ;D ;D ;D  நல்லா காதலிகுறாங்க.. ஹஹஹா .. சிரிப்பு தாங்கலப்பா ...
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 21, 2012, 01:40:10 PM
ஏன் அவங்க காதலிக்க கூடாதா?


எழுதி 2 வருஷம் ஆச்சு. இப்ப்போ படிச்சா காமெடியா இருக்கு.
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Anu on September 21, 2012, 02:00:30 PM
hahahahaha.
funny n romantic ah iruku..adhaane ninga solradhum seri thaan.
naaikaluku paasam irukalam love iruka koodaatha enna?
idhu ninga ezhudina kadhaiya gotham ?
mark n Jessy romance thodara en vaazthukkal
very nice .
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 21, 2012, 02:02:59 PM
சத்தியமா நிச்சயமா நானே எழுதினது. வேற பேர்ல. வேற இடத்துல.


நன்றிக்கா..
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Anu on September 21, 2012, 02:06:06 PM
சத்தியமா நிச்சயமா நானே எழுதினது. வேற பேர்ல. வேற இடத்துல.


நன்றிக்கா..
ada very nice..
nandri engalukaaga ingha padhivu seidhaduku :)
melum thodara en vaazthukkal.
idhuku eduku promise lam solringa gotham.
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 21, 2012, 02:07:04 PM

பாகம் 4:
-------------------------------------------------------------------------------------------------------
காலையில் எழுந்ததும் வாழ்க்கையே புதுசா தோணிச்சு. என்னிக்கும் இல்லாத நாளா உலகம் ரொம்ப ரொம்ப அழகா தெரிஞ்சுது. உலகத்துல எல்லோருமே சந்தோஷமா இருக்கற மாதிரி. பரபரன்னு இருந்துச்சு. சந்தோஷம் தாங்காம வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் ஓடினேன். சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன். நேத்து ஜெஸ்ஸி கூட பேசினது இன்னமும் என் காதிலேயே கேட்டுட்டு இருந்துச்சு.

ஏரிக்கரையோரமா நடந்துட்டு வரும் போது

“ஜெஸ்ஸி.. உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..?”

என்ன என்பது போல் பார்த்தாள்.

“என்னைப் பார்த்ததும் உனக்கு ஏன் அவ்ளோ புடிச்சுப் போச்சு?”

அவள் முகம் அழகாய் வெட்கப்பட்டது.

“சில விஷயங்களுக்கு ஏன்ங்கற கேள்விக்கு பதில் கிடையாது. உங்க அழகா, கம்பீரமா..ஏதோ ஒன்னு என்னை ஈர்க்குது. ஆமா என்னை எப்படி புடிச்சுது?”

“அதே பதில் தான்.. உன்னோட துறுதுறுப்பும்..அங்கங்க அலைபாயற கண்களும்.. யப்பா என்னமா இழுக்குது”

இன்னும் அதிகமாய் வெட்கப்பட்டாள்.

“நீ எங்கிருந்து வர்றே..?” ஜெஸ்ஸியை கேட்டேன்.

“ஸ்விஸ்லேர்ந்து. க்ளாராம்மாக்கு இங்க வேல கிடச்சுதுன்னு மாத்திக்கிட்டு வந்துட்டாங்க.”

“ஓ.. அவங்க தனியாவா இருக்காங்க..”

“ஆமா. எனக்கு தெரிஞ்ச நாள்லேர்ந்து தனியா தான் இருக்காங்க. சொந்தம்னு சொல்லிக்க நான் மட்டும் தான்”.

“ம்ம்..” நான் என் கதையை சொல்ல அவள் ஆர்வமானாள்.

இன்றைக்கு அதை அசை போடுகையில் சுகமாய் இருந்தது. வீட்டுக்கு முன்னிருந்த புல்வெளியில் கனவு கண்டு கொண்டே விளையாடிய போது யாரோ கூப்பிடுவது மாதிரி இருக்க திரும்பினேன். என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை.

பக்கத்து வீட்டு மாடியில் ஜெஸ்ஸி நின்று கொண்டிருந்தாள். கட்டைகளுக்கு நடுவில் இருந்த இடைவெளியில் தலையை வெளியே விட்டு தன் இனிய குரலால் என்னைக் கூப்பிட்டாள். “மார்க்”

என் பேர் இத்தனை இனிமையாக ஒலிக்கும்னு இது வரை நான் நெனச்சத்தில்லை. அவள் கூப்பிடும் போது மட்டும் பாடலாய் ஒலித்தது. அவள் கூப்பிடுவதாலேயே என் பேரை எனக்கு மிகவும் பிடிச்சுப் போனது. கண்ணில் காதல் வழிய ஜெஸ்ஸி என்னைப் பார்க்க நான் அவளைப் பார்க்க ஒரு காதல் அரங்கேறிக் கொண்டிருந்தது.

மனது பலவகைகளில் லேசாய் பறக்க ஆரம்பித்தது. ‘ ஜெஸ்ஸி.. பக்கத்து வீட்டில் தான் இருக்கிறாள்.’ அந்த நினைப்பே உடலை லேசாக்கியது. இதோ கூப்பிடு தூரத்தில் என் ஜெஸ்ஸி. நினைத்த மாத்திரம் பேசிக் கொள்ளலாம். ஆண்டவன் கருணையே கருணை. மனம் நெகிழ்ந்து போயிருந்தது.

அன்று முழுதும் வெளியிலிருந்து ஜெஸ்ஸி கூட பேசிக்கிட்டு இருந்தேன். அர்த்தமில்லா பேச்சு தான். கேக்கறவங்களுக்கு ஒன்னுமே புரியாது. ஆனா ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். எல்லாம் என் மேல் அவள் கொண்ட காதலும் அவ மேல் நான் கொண்ட காதலும். அன்னிக்கு சாயங்காலமா க்ளாராம்மா ஜெஸ்ஸிய கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்தாங்க. எனக்கு ஒரே சந்தோஷம். ஜெஸ்ஸி கூட கொஞ்ச நேரம் தனியா இருக்கலாமே.

எங்க வீட்டு புல்வெளியில இரண்டு பேரும் ஓடிப்பிடிச்சு விளையாண்டோம். அப்புறம் எங்க வீட்ட சுத்திக் காமிக்க ஜெஸ்ஸிய கூட்டிட்டு போனேன். நான் சொன்ன கதையெல்லாம் கண்ண விரிச்சு கேட்டா. ஆச்சர்யத்தினால அந்த ரெண்டு நாள்ல அந்த வீட்டில இருந்த எல்லா இடமும் எனக்கு அத்துபடி. மாடியில தொங்கும் தோட்டம் இருந்தது. அங்க ஊஞ்சல் கட்டியிருந்தாங்க. சாயந்திர நேரத்துல அங்க உட்கார்ந்து எதிர்ல மறைய சூரியன பாத்திட்டு இருக்கலாம். நானும் ஜெஸ்ஸியும் அந்த ஊஞ்சல்ல உட்கார்ந்து சூரியன் மறையறத பாத்துட்டே இருந்தோம். நேரம் போனதே தெரியல. என் தோளில் அவள் தலையும் அவள் தலை மீது என் தலையும் வச்சு நிலாவையே பாத்துட்டு இருந்தோம். கொஞ்ச நேரம் கழிச்சு க்ளாராம்மா ஜெஸ்ஸிய கூப்பிட நானும் ஜெஸ்ஸியும் கீழே வந்தோம்.

க்ளாராம்மா கிளம்ப ஜெஸ்ஸி பிரிய மனமில்லாம போனா. அவ கண்ணில இருந்த ஏக்கம்..அப்பப்பா. எனக்கும் துக்கம் தொண்டைய அடைச்சுது. ஏதோ ரொம்ப நாள் நம்ம கூட இருந்தவங்க பிரிஞ்சு போற மாதிரி. எங்க வீட்டிலேயும் க்ளாராம்மாவும் ரொம்ப ஸ்னேகமாயிட்டாங்க. எஞ்சீனியரும் க்ளாராம்மாவும் ஒரே ஆபிஸில தான் வேலை பாத்தாங்க. அதனால நாங்க அடிக்கடி அவங்க வீட்டுக்குப் போறதும் அவங்க எங்க வீட்டுக்கு வர்றதும்னு வாழ்க்கை போச்சு.

ஒவ்வொரு தடவை ஜெஸ்ஸிய பாக்கற போதும் அன்னிக்கு தான் புதுசா பாக்கற மாதிரி இருக்கும். அவ்ளோ புத்துணர்ச்சியோடு இருப்பா. கண்ணில அந்த காந்தப்பார்வை அப்படியே சுண்டி இழுக்கும். அடிக்கடி எல்லோரும் சேர்ந்து பிக்னிக் போறப்ப எனக்கும் ஜெஸ்ஸிக்கும் ஏக சந்தோஷமா இருக்கும், அவங்க மூணு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிட்டு இருக்க நாங்க ரெண்டு பேரும் ஓடி விளையாடுவோம். களைச்சுப் போனா அப்படியே நடந்து போயிட்டு வருவோம். அந்த ஊரில நான் ஜெஸ்ஸிய தவிர எந்த டாக் கூடவும் பேசினதில்ல. பேசவும் தோணல. ஜெஸ்ஸி மட்டுமே போதும். அவ கூட பேசிட்டு இருந்தாலே போதும். இந்த உலகத்துல நானும் அவளும் மட்டுமேனு அடிக்கடி தோணும். அந்தளவுக்கு எங்க காதல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமா வளர ஆரம்பிச்சுது.

அப்படி இருக்க ஒரு நாள் காலையில நான் எந்திருக்கும் போது இடி விழற மாதிரி அந்த விஷயம் நடந்தது.
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Global Angel on September 21, 2012, 02:11:57 PM
மனுசர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல ........................................... ஆஹா கதைல திருப்பமா ... திருபுங்கா பார்க்கலாம் என்ன வருதுன்னு ஆவலாய் இருக்கேன்
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 21, 2012, 02:17:32 PM
ஏற்கனவே முடிவ படிச்சுட்டீங்களா?  :-[
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Global Angel on September 21, 2012, 03:34:41 PM
இல்ல நான் குணா பட ஸ்டைல் ல சொனேன் .. ஹிஹிஹிஹி  ;D
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 21, 2012, 03:37:38 PM

இறுதிப்பாகம்
--------------------------------------------------------------------------------------------------------

சீக்கிரமே ஜெஸ்ஸிய நான் பிரிய வேண்டி வரும்னு நினைக்கல. ஆனா நடந்துச்சு. ‘வாழ்க்கையில சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வரும்’னு தெரியும். சந்தோஷம் வரும் போது துக்கம் அடுத்து வரும்ங்கற நெனக்கக் கூட மாட்டோம். எப்பவுமே அந்த சந்தோஷம் நிரந்தரமானதுன்னு நெனப்பு இருக்கும். ஆனா துக்கம் வரும் போது எப்போடா சந்தோஷம் வரும்னு இருக்கும். முன்னாடி சந்தோஷமா இருந்த தருணங்கள நெனச்சுப்போம். அதே மாதிரி தான் வாழ்க்கையில அந்த கால கட்டத்துல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துட்டேன் போல. யார் கண்ணு பட்டுச்சோ.. அன்னிக்கு காலைல அந்த பிரச்சனை ஆரம்பிச்சது.

காலைல கண்முழிக்கும் போதே எஞ்சினீயரம்மாவோட அழுகை சத்தம் தான் கேட்டுது. அவங்க நிறைமாச கர்ப்பிணியா இருந்தாங்க. அப்போ அழக்கூடாதாம். ஆனா அதிகமா அழுதாங்க. கைக்கு கிடைச்சதையெல்லாம் கீழே போட்டு உடைச்சாங்க. என்னமோ பெரிசா தப்பு நடந்திருக்குனு மட்டும் புரிஞ்சுது. ஆனா அதுக்கு மேல தெரியல. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. ஓடிப் போய் எஞ்சினீயரம்மாகிட்ட நின்னேன். என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டு ஓன்னு அழுதாங்க. எனக்கும் அழுகை அழுகையா வந்துச்சி. ஏன்னு மட்டும் தெரியல.

எஞ்சினீயர் ஒரு ஓரமா அமைதியா இருந்தார். வாய தொறந்து எதுவும் பேசல. வீடு கொஞ்ச நேரம் அமைதியா இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல துணியெல்லாம் ஒரு பெட்டியில எடுத்து வச்சுக்கிட்ட எஞ்சினீயரம்மா என்னைக் கூப்பிட்டாங்க. ஓடிப்போய் அவங்க காலை உரசிக்கிட்டு நின்னேன் தலையை தொங்கப்போட்டுக்கிட்டு. அவங்க ஒரு கேப் வர சொல்லி இருந்தாங்க. என்னை கேப்ல ஏற சொல்லும் போது திகீர்னு இருந்துச்சு. ‘எங்க போறோம்?’ ஜெஸ்ஸிய விட்டுட்டு. ‘ஒன்னுமே புரியல’. ஆனாலும் ஏறினேன். ஏறும் போது திரும்பி பார்த்தேன். வீட்டு வாசலில் எஞ்சினீயர் சோகமே உருவாக நின்றிருந்தார். பக்கத்து வீட்டில் அதே மொட்டைமாடியில் ஜெஸ்ஸி கம்பிகளுக்கிடையே தலையை விட்டு வாலை வேகமா ஆட்டினா. அவளுக்கு நான் பிரியப் போவது தெரிஞ்சுடுச்சு. ‘அவள் கதறினா..’ போகாதேனு. எனக்கு வேற வழி தெரியல. ‘ எங்கேயும் போகல. சீக்கிரமே வந்துடுவேன்னு’ சொல்லிட்டு ஏறினேன். ஆனா உள்மனசில ஏதோ ஒன்னு தோணுச்சு. ‘இனிமே எஞ்சினீயரம்மா எஞ்சினீயர் கூட வாழ மாட்டாங்க’னு. ஜெஸ்ஸி பக்கத்துல க்ளாராம்மாவும் சோகமா இருந்தாங்க. ‘என்ன பிரச்சனையோ.. ஆனா என் காதல் இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சுடுமா?’ நினைக்க நினைக்க பகீரென்றது. ஜெஸ்ஸி இல்லாத வாழ்க்கைய என்னால நெனச்சுப் பார்க்கவே முடியல. ‘நான் ஜெஸ்ஸிய லவ் பண்றேன். என்னையும் அவளையும் சேர்த்து வையுங்க’னு கத்தலாம் போல இருந்துச்சு. ‘என்ன பண்ண.. மனுஷங்க உணர்வை புரிஞ்சுக்கற அறிவை எங்களுக்குப் படைச்ச ஆண்டவன் எங்க உணர்வை புரிஞ்சுக்கற அறிவை அவங்களுக்கு வைக்கலியே’. கண்ணில் நீருடன் நான் ஜெஸ்ஸிய பார்க்க அவளிட பரிதவிப்பை அந்த கண்ணீரில் உணர முடிஞ்சது.

வண்டியில போகும் போது எஞ்சினீயரம்மா என் தலையை வருடி,

“கவலைப்படாத மார்க்.. இனி நாம அங்க போகப்போறதில்ல. இடம் கொடுத்தது என் தப்பு தான். இப்படி டேனியலும் க்ளாராவும் பண்ணுவாங்கன்னு நான் நினைக்கல. இனி எனக்கு நீயும் உனக்கு நானும் தான் துணை.”

கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. பக்கத்து வீட்டு பழக்கம், ஒரே கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்தது எஞ்சினீயரையும் க்ளாராம்மாவையும் நெருங்கச் செஞ்சிருக்கு. அவங்களுக்குள்ள பழக்கம் எஞ்சினீயரம்மாக்கு தெரிய வர வெடிச்சிருக்காங்க. என் மேல வச்சிருந்த மாதிரி அவங்க எஞ்சினீயர் மேலயும் கண்மூடித்தனமா பாசம் வச்சிருந்தாங்க. அத புரிஞ்சிக்காம எஞ்சினீயர் தப்பு பண்ணிட்டார். ‘ எஞ்சினீயர் மேல பரிதாபமா இருந்தது.’ அவரும் எஞ்சினீயரம்மாவ ரொம்ப காதலிச்சார். ஆனா சூழ்நிலையை மட்டும் குத்தம் சொல்ல முடியாது. அவர் செஞ்சது சரியா தப்பானு சொல்ல நான் ஒன்னும் மேதாவியான ஆறறிவு ஜீவனில்லையே. எல்லாத்தையும் விட ஜெஸ்ஸிய பிரிஞ்ச வலி தான் என்னைப் புரட்டிப் போட்டது. காதல்னு இருந்தா வலியும் சேர்ந்தே இருக்கணும்னு ஆண்டவன் இந்த உலகத்தை படைச்சுட்டான் போல. பிரிவு ரொம்ப ரொம்ப கொடுமையானது. எஞ்சினீயரம்மா இனியும் சமாதானமா போவாங்கன்னு எனக்குத் தோணல.

நினைக்க நினைக்க மனசு வெறுமையா இருந்தது. டென்மார்க்கிலேயே இருந்த தன் தோழி வீட்டுக்கு எஞ்சினீயரம்மா போனாங்க. அவங்க நாங்க தங்க இடத்தை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாங்க. ‘எவ்வளவு தான் நினைத்தாலும் மறக்க முடியாது ஜெஸ்ஸியுடன் நான் இருந்த தருணங்களை’. எங்கிருந்தோ வந்த எங்க இரண்டு பேரையும் ஏர்போர்ட்ல பார்க்க வச்சு ஒருத்தருக்கொருத்தர் ஏங்க வச்சு, பக்கத்து பக்கத்து வீட்டில தங்க வச்சு, அழகான நாட்டில காதலிக்க வச்சு.. பின்ன பிரிச்சு பார்க்கிற இந்த ஆண்டவன் எப்பேர்ப்பட்ட சாடிஸ்ட். ‘சாப்பிட பிடிக்கல. தூங்க பிடிக்கல… எதுவுமே பிடிக்கல. அங்க என் ஜெஸ்ஸி என்ன பண்ணிட்டு இருக்காளோ? அவளும் என்னை நெனச்சு சாப்பிடாம இருக்காளோ?’ தெரியல.

நாங்க போன ஊர்ல ஏகப்பட்ட டாக் இருந்துச்சு. ஆனாலும் யார் கூடவும் பேசத் தோணல. தனிமையே எனக்கு சொந்தம் மாதிரி ஆயிடுச்சு. எஞ்சினீயரம்மாக்கு குழந்தை பொறந்துச்சு. செக்கச் செவேல்னு ஆண் குழந்தை. பக்கத்துல நான் போனா இன்ஃபெஷன் ஆயிடும்னு சொன்னாங்க. அதனால நான் இன்னும் தனிமைல வாட ஆரம்பிச்சேன். நாட்கள் இப்படியே போகப் போக என் உடல் மெலிய ஆரம்பிச்சுது. கண்கள் சோர்ந்து போக ஆரம்பிச்சுது. குழந்தை பிறந்த சந்தோஷத்துல இருந்த எஞ்சினீயரம்மா என்னை கொஞ்சம் கொஞ்சமா கவனிக்க ஆரம்பிச்சாங்க.

“ஏன் டா.. ஏன் சரியா சாப்பிட மாட்டேங்கற..?”

நான் மௌனமாய் தலையாட்டினேன். என் செய்கை அவங்களுக்கு எஞ்சினீயர பத்தின நெனப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவங்க கண்ணில் மெல்லிதாய் சோகம். என்னை மாதிரி துணையை பிரிஞ்சு இருக்கற வேதனை.

“எஞ்சினீயர பிரிஞ்சு உன்னாலேயே இவ்ளோ நாள் இருக்க முடியலியே.. நான் எப்படி இருந்திருப்பேன் சொல்லு?”

அவங்க வலி எனக்குப் புரிஞ்சுது. காதலிக்கறவங்க வலி பிரிஞ்ச இன்னொரு காதலனாலேயோ காதலியாலேயோ மட்டும் தான் முழுமையா உணர முடியும். என்னால அவங்கள உணர முடிஞ்சுச்சு. ஆனா அவங்களுக்கு… ‘ இந்த உலகத்துல எத்தனையோ பேர் இருக்க நான் ஜெஸ்ஸிய மட்டும் தான் காதலிச்சேன்னு’ என்னால அவங்களுக்குப் புரியற மாதிரி சொல்ல முடியல. பதிலா என்னால கண்ணீர மட்டுமே விட முடிஞ்சுது. குழந்தை பிறந்த நேரம் எஞ்சினீயரம்மாவோட கோவம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது.

என் நிலையையும் பார்க்க அவங்களால முடியல. முடிவா, “குழந்தைய அவர் முகத்துல காட்டணும். வா.. போய் பாத்துட்டு வரலாம்” னு எஞ்சினீயரம்மா சொன்னப்ப எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. எப்படியாச்சு ஜெஸ்ஸிய பாத்துடலாம்ங்கற நெனப்பே அவ்ளோ சந்தோஷத்தை குடுத்துச்சு. போற வழியெல்லாம் ஜெஸ்ஸிய பத்தின கனவுகள். அவள முத முதலா பாத்தது, பேசினது, சிரிச்சது.. திரும்பவும் என் ஜெஸ்ஸிய பாக்கப் போறேன்.

எங்க வீடு இருக்கற ரோட்டுல திரும்பும் போது அவ வீடு கண்ணுல பட்டுது. வீடு வெளில பூட்டி இருந்துச்சு. மனசுல திக் திக்னு சத்தம். ஜெஸ்ஸி இப்போ அங்க இல்லியா. க்ளாராம்மா எங்க போயிருப்பாங்க….? மனசுல வலியோட ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.

வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே எஞ்சினீயர் எங்கள எதிர்பார்க்கல. அவர் தனியா தான் வாழ்ந்திட்டு இருக்கார். எஞ்சினீயரம்மாவ பாத்ததும் ஓடி வந்து கட்டிப்புடிச்சிக்கிட்டு ஆயிரம் ஆயிரம் மன்னிப்பு கேட்டார். பிரிவு அவரையும் பாடா படுத்தி இருந்துச்சு. குழந்தையை ஆசைத் தீர கொஞ்சினார். அப்புறமா என்னைப் பார்த்தார்.. அவர்கிட்ட பல விஷயங்கள் கேக்கணும்.. ‘முதல்ல க்ளாராம்மா எங்க.. ஜெஸ்ஸி எங்க’. என் தலையை கோதிக்கிட்டே எஞ்சினீயரம்மாகிட்ட பேச ஆரம்பிச்சார். ‘க்ளாராம்மா வீட்டை காலி பண்ணிக்கிட்டு வேற ஊருக்குப் போயிட்டாங்க. தெரியாம நடந்த தப்பு அவங்கள ரொம்பவே பாதிச்சிடுச்சு. குடும்பத்தை பிரிச்ச பாவம் அவங்கள நோகடிச்சுடுச்சு.’ தலையில் மறுபடியும் இடி. ‘அப்போ என்னால ஜெஸ்ஸிய இனிமே பாக்கவே முடியாதா…?’ ஏன் இந்த சோதனை.

அப்போ தான் அது நடந்துச்சு. வீட்டுக்குள்ளே இருந்து பழக்கப்பட்ட குரல். திரும்பி பாத்தேன். என்னாலேயே என்னை நம்ப முடியவில்லை. இதென்ன கனவா..? ஆம். கதவோரத்தில் ஜெஸ்ஸி நின்னுட்டு இருந்தா..அவ கண்ணுல கண்ணீர். என்னைப்பார்த்ததும்.. ஓடிக்கூட வரமுடியாம கால்கள் பின்னிக்கிட்டு. எப்படி..? எப்படி? இரண்டு பேரும் ஆசைத் தீர ஒருத்தர் மேல் ஒருத்தர் ஏறி விளையாடினோம். மறுபடியும் என் ஜெஸ்ஸிய பார்க்க வச்ச ஆண்டனுக்கு கோடானுகோடி நன்றி சொன்னேன்.

அன்னிக்கு சாயந்திரம் மாடில அதே ஊஞ்சல்ல நானும் ஜெஸ்ஸியும் சூரியன் மறையும் அந்த ரம்மியமான தருணத்தில் பேசிக்கிட்டு இருந்தோம். கீழே ஹாலில் எஞ்சினீயர் தன் குழந்தையோடு கொஞ்சிக் கொண்டிருந்தார். அப்போ ஜெஸ்ஸிக்கிட்ட கேட்டேன்…

“எப்படி.. நீ மட்டும் எப்படி?”

என்னைப் பார்த்து கிறக்கமா சிரிச்சா…

“நீ போனதும் உயிரே போன மாதிரி இருந்துச்சு. ராப்பகலா தூக்கமில்லாம கஷ்டப்பட்டேன். க்ளாராம்மாவும் என்னைவிட நொந்து போயிந்தாங்க. தப்பான சந்தர்ப்பத்துல ஒரு குடும்பம் குலைஞ்சு போயிடுச்சேனு”

“ம்ம்..”

“அப்போ தான் தனியா போறதா முடிவெடுத்தாங்க.. எஞ்சினீயர்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தப்போ நான் அவர் காலை கட்டிக்கிட்டு விட மாட்டேனுட்டேன். என்னை கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தாங்க… நான் விடல.”

“ஏன்?”

“என்னிக்கிருந்தாலும் ஒரு நாள் எஞ்சினீயரம்மா அங்க வருவாங்கன்னு தெரியும். அப்போ நீயும் வருவ. உன்னை ஒரு தடவையாவது பாத்துடலாம்னு தான்…” சிரித்து சிரித்து உள்ளத்த கொள்ளை கொண்டாள்.

“வராமலேயே போயிருந்தா..?”

“கண்டிப்பா வருவன்னு தெரியும்.. அப்புறம் க்ளாராம்மா என்னை இங்கேயே விட்டுட்டு போயிட்டாங்க..”

“ம்ம்..” அவள் மேல் இருந்த காதல் இன்னும் பல மடங்காச்சு. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மறையும் போது திடீரென்று அந்த கேள்வியை கேட்டாள்..

“மார்க்.. க்ளாராம்மாவையும் சரி.. எஞ்சினீயர் அவர் பொண்டாட்டியையும் சரி.. அவங்க காதலையும் உணர்ச்சியையும் நம்மலால புரிஞ்சுக்க முடியுது. ஆனா நாம் ரெண்டு பேரும் காதலர்கள். நம்மை பிரிக்கறோம்ங்கற உணர்வே அவங்களுக்கு எப்படி தெரியாம போச்சு…?”

சிரித்துக் கொண்டே என் குரல் தூரத்தில் எதிரொலிக்க சொன்னேன்..

“ஏன்னா.. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல…அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது.. புனிதமானது…
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 21, 2012, 03:39:14 PM
இந்த கதைக்கு ஒரிஜினலா நினச்சிருந்த முடிவு வேற. அதன் சுருக்கத்த நாளைக்கு பதியறேன்
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Anu on September 22, 2012, 02:03:45 PM
இந்த கதைக்கு ஒரிஜினலா நினச்சிருந்த முடிவு வேற. அதன் சுருக்கத்த நாளைக்கு பதியறேன்

haha. nice ending.
animals vachi aduvum dog vachi love story first time padikiren.
very nice :)
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 22, 2012, 02:31:20 PM
Thx Anu ka.

Vera ending sikiram post panren.
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: ஸ்ருதி on September 23, 2012, 10:19:43 AM
இந்த கதையும் அதில் வெளி பட்ட உணர்வுகளும் மிகவும் அருமை...
டாக் லவ் என்று தோணல....முதல் பார்வை ,. முதல் காதல் , முதல் சந்தோசம் ,. முதல் பிரிவு .,ஏக்கம், ஊடல் , கூடல் . எல்லாமே அருமை..

படிக்கும் போதே சிரிச்சிகிட்டே ன் தான் படிச்சேன்....

முதல் பாகத்துல

 மனிதர்களுக்கு நாய்க்கும் இடையே நடக்கும் ஒரு போராட்டத்தையே சொல்லி இருக்கீங்க... நல்லா இருக்கு

இனிமே எங்களுக்குள்ள திட்டிக்கணும்னா ‘போடா மனுசப்பயலே’னு தான் திட்டிக்கணும் போல.


இந்த இடம் நல்ல இருக்கு...


இரெண்டாம் பாகத்துல...

ஜெசிய பார்த்த நொடியில என்ன ஒரு வர்ணனை...அருமை


அங்க ஒரு காதல் காவியம் அரங்கேறுவது தெரியாம மனுஷங்கல்லாம் இயந்திரம் மாதிரி தங்களோட வேலைய பாத்துட்டு இருந்தாங்க......

 சூப்பர்...

ஒரு வேலை காதல் வந்தால் தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் இயந்திர தனமாக இருப்பதாக  தெரியுமோ???

மூன்றாம் பாகத்தில்


அவ பேரு ஜெஸ்ஸின்னு எனக்குத் தெரியும். ஒவ்வொரு தடவை அவ பேர அவங்க சொல்ற போதும் அப்படியே அடி வயித்துல ஜிலீர்னு ஒரு உணர்வு வரும். காதலிச்சுப் பாருங்க. அப்ப புரியும்.....

காதல் உணர்வின் நல்ல வெளிபாடு

இருவரின் முதல் பேச்சு ரொம்ப  நல்ல இருக்கு..

படிக்கும் போது ஒரு படமே கண் முன்னுக்கு வந்த போல இருக்கு...


எஞ்சீனியரும் க்ளாராம்மாவும் ஒரே ஆபிஸில தான் வேலை பாத்தாங்க. அதனால நாங்க அடிக்கடி அவங்க வீட்டுக்குப் போறதும் அவங்க எங்க வீட்டுக்கு வர்றதும்னு வாழ்க்கை போச்சு.


இந்த இடம் படிக்கும் போது ஏதோ நடக்கும்னு தோனுச்சு...ஆனால் இந்த காதலில் இப்படி நினைக்க கூடாதுன்னு நினைச்சேன்...
ஆனால் நான் நினைச்சது போல நடந்துச்சு....


நான்காம் பாகத்தில்
 
ஒவ்வொரு தடவை ஜெஸ்ஸிய பாக்கற போதும் அன்னிக்கு தான் புதுசா பாக்கற மாதிரி இருக்கும். அவ்ளோ புத்துணர்ச்சியோடு இருப்பா. கண்ணில அந்த காந்தப்பார்வை அப்படியே சுண்டி இழுக்கும்.

மனஷனுக்கும். நாய்க்கும் ஒரே பீலிங் தான் போல....நல்ல இருக்கு,,, சினிமா கதாநாயகர்கள் சொல்ற போல இருக்கு..

நிறைவு பாகத்தில

இந்த முடிவை நினைச்சு பார்க்கல...
மனஷங்க பிரிந்து டாக் லவ்-அ சேர்த்து வச்சிட்டாங்க..

ரொம்ப நல்ல இருக்கு கௌதம் வாழ்த்துக்கள்
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 23, 2012, 10:26:59 AM
Nandri Shruthi. ovvoru partum padichu pudicha idangala sonathuku.


Eluthum pothu ethaiyum plan pannama eluthinathu. appadiye flowla.
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Global Angel on September 23, 2012, 12:46:15 PM
ஹ்ம்ம் அட நா அணிக்கு எதசாயா சொன்ன மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்லதானா ... ஹஹஹா ... கோதம் கதை ரொம்ப நேர்த்தி ... ரொம்பவே மனசை கொள்ளை கொள்ளும் கதை .. ஒரு நாயை வைத்து கதை இவ்ளோ அழகாய் கொண்டு போக ஆண்கிலபடதில்தான் முடியும் என நினைத்தேன் .. அனால் அசத்திவிட்டீர்கள் போங்கள்..
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Anu on September 24, 2012, 06:21:41 AM
Thx Anu ka.

Vera ending sikiram post panren.
innoru ending eppa varum gotham :)
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 24, 2012, 07:06:59 AM

கதை மார்க் மறுபடியும் எஞ்சினீயர் வீட்டுக்கு வருவதிலிருந்து தொடர்கிறது.
-----------------------------------------------


எஞ்ஜீனியரம்மா எஞ்சினீயர பார்க்க போகலாம்னு சொன்னப்ப எனக்கு தலைகால் புரியாத சந்தோஷம். நாலுகால் பாய்ச்சல்ல வீட்ட சுத்தி வந்தேன். எஞ்சினீயர பார்க்க போற சந்தோஷம்னு அவங்க நெனச்சாங்க. அந்த சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் என்னோட ஜெஸ்ஸிய பார்க்க போறேங்கற சந்தோஷமே எனக்கு அதிகமா இருந்தது. அவளும் என்னை மாதிரியே சாப்பிடாம மெலிஞ்சு போயிருப்பாளோ. எதுவானாலும் பரவாயில்ல இனி அவள விட்டு பிரியக்கூடாதுனு முடிவு பண்ணினேன்.


ஒரு மத்தியான வேளையில எஞ்சினீயரம்மா அவங்க குழந்தை மற்றும் நான், எல்லோரும் திரும்ப எஞ்சினீயர் வீட்டுக்கு புறப்பட்டோம். வழியெல்லாம் ஜெஸ்ஸிய பத்தின நினைப்பு தான். கார் ரோட்டுல முன்னே செல்ல அவளைப்பத்தின நினைவில நான் பின்னோக்கி போனேன். ஏர்போர்ட்ல அவள பாத்தது, அப்புறம் பார்க் அப்புறம் பக்கத்துவீட்டு தேவதையா அவ வந்ததுன்னு. எல்லாத்தையும் நெனச்சு பாக்கும் போது எனக்கு நானே சிரிச்சிக்கிட்டேன்.


எஞ்சினீயர் வீட்ட நெருங்கும் போது மனம் கன்னாபின்னானு தவிச்சது. இதயத்துடிப்பும் எகிற ஆரம்பிச்சது. ஜெஸ்ஸி வீட்ட தாண்டி தான் எஞ்சினீயர் வீட்டுக்கு போகணும். வெளியில எட்டி பார்த்தேன். ஒரு நிமிஷம் கண்ண இருட்டற மாதிரி இருந்துச்சு. உலகம் ரொம்ப வேகமா சுத்தற மாதிரி ஒரு உணர்வு.


ஆமா. ஜெஸ்ஸி இருந்த வீடு பூட்டிக்கிடந்தது. ரொம்ப நாளா அங்க ஆட்கள் யாருமே இல்லேனு தெரியற மாதிரி ஏகத்துக்கும் செடி வளர்ந்திருந்தது. மனசு பூரா ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு ஓலமிட்டது. கண்ணுல தண்ணி ஆறா கொட்ட ஆரம்பிச்சது. என்ன ஆச்சுன்னு தெரியலியே. ஜெஸ்ஸி எங்க போயிருப்பா.? தவியா தவிச்சேன்.


வீட்டுக்குள்ள போனதும் தான் தெரிஞ்சது. ஜெஸ்ஸியும் ஜெஸ்ஸியோட ஓனரும் எப்போவோ வீட்ட காலி பண்ணிட்டு போயிட்டாங்கன்னு. என்ன மாதிரியே ஜெஸ்ஸியும் மனசுல அழுதிருப்பான்னு நெனச்சேன். என்ன பண்ண? எங்க போனான்னும் தெரியல. அவள தேடிக்கிட்டும் போக முடியாது. மனசு முழுக்க பாரத்தோட வீட்ட சுத்தி வர ஆரம்பிச்சேன். எஞ்சினீயரம்மா எஞ்சினீயர் கூட மறுபடியும் சந்தோஷமா வாழ ஆரம்பிச்சாங்க. மனசுல ஆயிரம் வலிகள் இருந்தாலும் அதெல்லாம் காட்டிக்காம நடைபிணம் மாதிரி வாழ ஆரம்பிச்சேன்.


காலம் எல்லா காயத்துக்கும் மருந்துனு சும்மாவா சொன்னாங்க. என்னோட காயங்களும் ரணங்களும் ஆற அந்த நாளும் வந்தது.
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 24, 2012, 07:09:01 AM
ஹ்ம்ம் அட நா அணிக்கு எதசாயா சொன்ன மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்லதானா ... ஹஹஹா ... கோதம் கதை ரொம்ப நேர்த்தி ... ரொம்பவே மனசை கொள்ளை கொள்ளும் கதை .. ஒரு நாயை வைத்து கதை இவ்ளோ அழகாய் கொண்டு போக ஆண்கிலபடதில்தான் முடியும் என நினைத்தேன் .. அனால் அசத்திவிட்டீர்கள் போங்கள்..
அதனால் தான் கேட்டேன். முடிவு தெரியுமா என்று? கதையை படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி ஏஞ்சல்.
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 24, 2012, 07:25:24 PM
தனிமையா என்னோட நாட்களும் வாழ்க்கையும் போயிட்டு இருந்தப்போ அந்த சம்பவம் நடந்துச்சு. பூட்டிக்கிடந்த பக்கத்து வீட்டுக்கு யாரோ ஒரு நாள் குடிவந்தாங்க. அன்னிக்கு கொஞ்சம் சத்தமா இருந்துச்சு. பொதுவா இங்க இருக்கற வீட்டுல சத்தமே அதிகம் கேக்காது. யாருடான்னு எட்டிப்பாத்தேன். ஒரு அப்பா அம்மா பையன் கொண்ட குடும்பம் அது.

அவங்க எல்லோரு வீட்ட செட் பண்ற வேலையில இருந்தப்போ நான் வீட்டுக்கு முன்னாடி இருந்த புல்வெளியில சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தேன். என்கூடவே துணைக்கு என் ஜெஸ்ஸியோட நினைவுகளும். என்னால அவ கண்ண மறக்க முடியல. அப்படி ஒரு பார்வை. அதுவும் கடைசியா அவள விட்டு பிரிஞ்சு போறப்ப அவ என்னை பார்த்த பார்வை இருக்கே.. யப்பப்பா..

இப்படியே அவ நினைவுல என்னோட வாழ்க்கைய ஓட்டிடலாம்னு இருந்தப்போ அந்த சத்தம் கேட்டுச்சு. திரும்பி பார்த்த ஜெஸ்ஸி இருந்த வீட்டு பால்கனியில இன்னொரு டாக். இது பூடுல் வகை. குட்டியா பூனை மாதிரி பம்மிக்கிட்டு இருந்துச்சு. என்னை தான் கூப்பிட்டுச்சு போல. ஜெஸ்ஸியோட நினைவுகள்ல இருந்தவன தொல்லை பண்ணுதுனு மொறச்சு பார்த்தேன். பயந்துட்டு வீட்டுக்கு உள்ளே ஓடுச்சு.

அப்புறமா சில நாட்கள் அப்படியே போச்சு. அந்த டாக் அவங்க வீட்டு பால்கனியில நின்னு என்ன லுக் விடறதாவே இருந்துச்சு. 'என்னை தான் சைட் அடிக்குதுனு நல்லாவே தெரிஞ்சுது. என்ன பண்ண ஐயாம் சாரி. என் மனச நான் ஏற்கனவே ஒருத்திக்கிட்ட கொடுத்திட்டேனு' சொல்லலாம்னு பார்த்தேன். யாருன்னே தெரியல எதுக்கு நம்ம கதைய போய் சொல்லணும்னு விட்டுட்டேன். 'என்ன மாதிரி ஒரு நல்ல திடகாத்திரமான ஆண் டாக்-அ பாத்திருக்காதோ'. இப்படி பாக்குது இந்த டாக்.

அப்போ தான் அது நடந்தது. திடீர்னு ஒரு குரல்.

"ஜெஸ்ஸி...."

என் உடம்பெல்லாம் சிலிர்க்க ஆரம்பிச்சது. ரொம்ப நாள் கழிச்சு அவ பேர கேக்கறேன். திரும்ப என்னைத் தேடி வந்துட்டா போல. கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் அவள தேடினேன். காணல. திடீர்னு குரைக்கற சத்தம். பக்கத்து வீட்டு மாடியில இருந்த டாக் பௌ பௌன்னு கத்திட்டு வீட்டுக்குள்ள ஓடிச்சு. அப்போ தான் தெரிஞ்சுது. அந்த டாக் பேரு ஜெஸ்ஸி தான்னு.

நீங்க எத்தன பேர் காதலிச்சிருக்கீங்கன்னு தெரியல. காதலிச்சுப்பாருங்க. காதலியோட பேர் வச்சிருக்கறவங்க மேல தனிபாசம் வரும். அப்படி தான் முதன்முதலா அந்த டாக் சாரி சாரி.. ஜெஸ்ஸி மேல எனக்கிருந்த கோவம் போக ஆரம்பிச்சுது. அடுத்த நாள் அவ மாடியில நின்னப்ப கொஞ்சமா சிரிச்சேன்.

அவ என்கிட்ட பேச ஆரம்பிச்சா.

"என்ன திடீர்னு சிரிக்கற?"

"இல்லே. பக்கத்து பக்கத்து வீட்டில இருக்கோம். முறச்சுக்கிட்டா இருக்க முடியும். அதான்."

"ஓ. இப்போ தான் தெரிஞ்சுதாக்கும். இதுவரைக்கும் ஒரு சிரிப்பு கூட இல்லே.. க்கும்.." தலையை வெட்டினாற்போல் இடித்தது. எனக்கு சிரிப்பாய் வந்தது. அந்த மேனரிசம் கூட நல்லா தான் இருந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சோம். முதல்ல பொதுவா பேச ஆரம்பிச்சு பிறகு நல்லா பேச ஆரம்பிச்சோம். பழைய ஜெஸ்ஸி விட்டுப்போன காயங்களுக்கு புது ஜெஸ்ஸி மருந்து போட ஆரம்பிச்சா. அவ கூட பேசும் போது மனசுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.

புது ஜெஸ்ஸியின் சேஷ்டைகள் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கு. அப்புறம் அந்த வீட்டுலேர்ந்து யாராச்சும் எங்க வீட்டுக்கு வந்தா ஜெஸ்ஸியும் வர ஆரம்பிச்சா. நிறைய பேசினோம். முதல்ல நட்பா தான் நினைச்சிருந்தேன். மெல்ல மெல்ல பழைய ஜெஸ்ஸியோட இடத்த பிடிக்க ஆரம்பிச்சா. ஒருநாள் அவகிட்ட சொல்லிட்டேன்.

"ஜெஸ்ஸி. உன்ன எனக்கு புடிச்சிருக்கு. உனக்கு?"

அப்படியே மொறச்சா. பயந்துட்டேன்.

"இத சொல்ல உனக்கு இவ்வளவு நேரமா என்ன? வந்த நாள்லேந்தே உன்ன எனக்கு புடிக்கும். மெஜஸ்டிக்கா கம்பீரமா நீ நிக்கறப்போ உன்கூடவே இருக்கணும்னு தோணும்."

வானத்துல மறுமுறையா பறக்க ஆரம்பிச்சேன். இப்படியே எங்க காதல் அத்தியாயம் தொடங்கிச்சு. இதுக்கு மறுபடியும் சோதனை அவ ஓனர் மூலமா வந்தது. விடுமுறைக்கு ஒருவாரம் வெளியூர் போனாங்க. அப்போ ஜெஸ்ஸியையும் கூட்டிட்டு போனாங்க. அழுகையே வந்துச்சு. மனசில்லாம விடைகொடுத்தேன்.

அடுத்த நாள்லேந்து தனிமை. அப்படி ஒருநாள் உட்கார்ந்திருந்தப்போ என் வாழ்க்கையில நடந்த சம்பவங்கள யோசிச்சுப்பாத்தேன். ஜெர்மனி, டென்மார்க், அப்புறம் பழைய ஜெஸ்ஸி.. ஸ்ஸ்ஸ்.. இத்தனை நாளா அவள பத்தின நெனப்பையே மறந்திருந்தேன் புது ஜெஸ்ஸியால. சிந்தனை வேற மாதிரி போச்சு. இப்போ புது ஜெஸ்ஸி மேல இருக்கறது காதலா இல்லே பழைய ஜெஸ்ஸி மேல இருந்தது உண்மை காதலா?

நிறைய யோசிச்சு அந்த விடைய கண்டுபுடிச்சேன். என்னன்னு கேக்கறீங்களா?? கதையோட தலைப்ப மறுபடியும் படிங்க.

'உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?'

ஆமாங்க. இதுவரைக்கும் நான் லவ் பண்ணியிருக்கிறது. ஜெஸ்ஸிங்கற பேர தான். எந்த நாயாயிருந்தாலும் பரவாயில்லே. ஆனா ஜெஸ்ஸிங்கற பேர்ல இருந்தா காதலிச்சிருப்பேன்னு தோணுச்சு.

ஹலோ.. என்ன பாக்குறீங்க.. அடிக்க வராதீங்க.. பௌ..பௌ...

--- முற்றும்---

பி.கு: கதையில் வரு சில காட்சிகளால நான் காதலை கொச்சைப்படுத்தறேனு யாரும் நினைக்க வேண்டாம். இப்படிப்பட்ட விஷயங்களும் இருக்கலாம்னு சொல்றது தான் இந்த கதை. : )
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Global Angel on September 25, 2012, 12:44:23 AM
அட பாவிகளா .. நாய் காதல்னது சரியாதான் போச்சு  >:(... ஹிஹி  நல்ல சமாளிபி^கேசன்  ... நல்லா தான் இருக்கு இந்த முடிவும்
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 25, 2012, 06:42:09 AM
ஹிஹி.. க்ளோபல் ஏஞ்சல். கடைசியா வர்ற வசனங்கள் தான் இந்த கதைக்கு கருவே. மனிதர்கள வச்சு எழுதினா நிறைய பேர் தப்பா ஃபீல் பண்ணலாம்னு கேரக்டர்கள நாயா மாத்தினேன். பொருந்தும்ல. :)
Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Anu on September 25, 2012, 07:02:47 AM
நீங்க எத்தன பேர் காதலிச்சிருக்கீங்கன்னு தெரியல. காதலிச்சுப்பாருங்க. காதலியோட பேர் வச்சிருக்கறவங்க மேல தனிபாசம் வரும். அப்படி தான் முதன்முதலா அந்த டாக் சாரி சாரி.. ஜெஸ்ஸி மேல எனக்கிருந்த கோவம் போக ஆரம்பிச்சுது. அடுத்த நாள் அவ மாடியில நின்னப்ப கொஞ்சமா சிரிச்சேன்.

'உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?'

ஆமாங்க. இதுவரைக்கும் நான் லவ் பண்ணியிருக்கிறது. ஜெஸ்ஸிங்கற பேர தான். எந்த நாயாயிருந்தாலும் பரவாயில்லே. ஆனா ஜெஸ்ஸிங்கற பேர்ல இருந்தா காதலிச்சிருப்பேன்னு தோணுச்சு.

haha .
indha mudivum nalla thaan iruku gotham.
nitharsanamaana unmai..
romba azhaghaa kondu poringa kadhaiya..
unga kathaila elllame iruku.
very nice.



Title: Re: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??
Post by: Gotham on September 25, 2012, 07:18:48 AM
நன்றி அனு க்கா. இது தான் தற்சமயம் நடக்கிறது. ஒன்னு இல்லேன்னா இன்னொன்னு. எனக்குத் தெரிஞ்சு இது ப்ராக்டிக்கலான முடிவும் கூட. : )