ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 177
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/177.png)
கழிமுகம் தொடுகின்ற கடல் நீர் சூழ..
கதிர் பாய்ச்சி கனலாக்கும் கதிரவன் ஆள..
பல்லுயிர் வாழ படைத்திட்டதை போல..
பசுமை நிறைந்தே பளிச்சிட்டது ஞாலம்!
பேரண்டம் கொண்ட நெற்றித்திலகம்..
பேரின்பம் பொங்க இருந்தது உலகம்..
இறைவனின் கருணையில் அதிசய கிரகம்..
ஆனதே மனிதனால் மிகப்பெரும் நரகம்!
ஆதாமும் ஏவாளும் அலைந்திட்ட மண்மீது..
அகதியை போலவே ஆகி விட்டோமே..
ஆசையும் தேவையும் அதிகரித்த போது..
அவஸ்தைகள் சூழவே நாமும் வாழ்வோமே..
அறிவியல் கொண்டுதான் ஆட்சிகள் செய்கிறோம்..
அதிசயம் காணவே ஆர்வமும் கொள்கிறோம்..
அறிவிலி போலவே நாமும் மாறியே..
அழகிய இயற்கையை காத்திட மறந்திட்டோம்..
பூமியின் பசுமையை காப்பதும் நீரடா!
பூமியில் முழுமுதல் கடவுளும் நீரடா!
மனிதனின் தேவையில் முதன்மையும் நீரடா!
நீரின்றி வாழவும் முடியுமா கூறடா?
நீர்நிலை மாசினால் வீணாகும் தண்ணீரடா!
பார்க்கின்ற போதிலே கண்களில் கண்ணீரடா!!!
பூமியின் புனிதத்தை காக்க மறந்தாலே!
புகழிடம் இன்றியே தேடி அலைவோமே!!
நீர் நிலை காப்போம்..! நம் நிலை காப்போம்..!
நதிகளை இணைப்போம்..! நாமும் இணைவோம்..!
உங்களின் தோழன் பீன்....
[/size][/color][/color]