நீண்டதொரு மௌனத்திற்கு பின்
பேசும் வார்த்தைகளுக்காக...
காத்து இருப்பது தவம் !
சிவமும் சவமுமாய் வாழ்க்கை போகையில்
சாம்பலின் வாசத்தில் ..
உணர்வுகளின் ஊர்வலம் !
அந்தரத்தில் தொங்கும் கிரகங்கள் ...
எந்திரத்தில் சிக்கும் மனிதர்கள் !
இரண்டுக்கும் வித்தியாயசம் இல்லை !
காற்றடித்தால் நகரும் ...
மேகக்கூட்டங்கலாய் உறவுகள் !
வான்வெளியை கடக்கும் ...
பறவைகளுக்கு தெரிவதில்லை ..
மண்ணில் போராடி கொண்டு இருக்கும் ...
மனிதர்களின் ஓட்டம் !
புறக்கணிப்புகளும் புதிது அல்ல
புலன்கள் அறிவதில்லை...
புதிய பார்வைகளின்..
பரிமாணங்களை !
எதிர் பார்ப்பு இன்றி வாழ
மனிதன் எந்திரம் அல்லவே !