நோயுடன் படுக்கையில் கிடக்கையில் ...
தொடரும் நினைவுகளின் ஊர்வலம் !
மருத்துவமனையின் நுழைவு சீட்டு
எண்ணங்களின் அழைப்பு வரிசை !
இதய துடிப்புகளின் அலைவரிசையில் ...
வரைபடத்தில் காணமுடியாது
இதயத்தின் வலிகளை ....
வேதனைகலின் அழுத்தங்களை காண இயலுமா
ரத்த அழுத்தத்தின் சோதனையில் ...
பரிசோதனைக்கு ரத்தத்தை உறிஞ்சுகையில்
துக்கங்களையும் உறிந்து எடுத்து விட்டால் ...
எவ்வளவு நன்றாக இருக்கும் ?
வெறித்த பார்வையில் படும்
ஜன்னலில் சதுரமாய் தெரியும் .
வானமும் சில மேகதுண்டுகளும் ...
எங்கோ அலை அலையாய் ...
யாருக்கோ சேதி சொல்வது போல ..
பின்பு ...
சொல்ல வந்ததை சொல்ல முடியாமல்
கலைவதை போல ...
மருந்துகளும் மாத்திரைகளும் ..
மயக்கத்தில் ஆழ்த்துவது ...
புதையுண்ட பொக்கிஷத்தை ..
தோண்டி எடுப்பதை போல ...
நெஞ்சம் மறப்பதில்லை ..
அதன் நினைவுகள் இழப்பதில்லை ..!