காலனி கூட இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில்
பொடி நடையாய் நடந்து தகாத்தை தணிக்க
அல்லல் படும் அன்பு தோழியே !
நன்னீரைத் தொலைத்து
கண்ணீரில் கரையும்
மாந்த இனம்..
ஈரப்பதம் எங்கள் உடம்புகளில் குறைந்ததால்
இரத்தம் கூட கட்டிகளானதே!
பொறுத்தார் பூமி ஆழ்வார் என்று சொல்லிய மக்கள்
இன்று பூமியே பொறுமை இழந்து
வாடிப்போய் நிற்கிறது
தண்ணீருக்காய் கண்ணீரோடு !!
குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று
குடங்களைச் சுமந்து அலைவது ஏனோ
குடமே குழந்தையாய் மாறியதால் தானோ!
அணைவரின் தாகத்தை தீர்த்த கிணறுகளும், ஏரிகளும்
தவித்து நிற்கிறது தண்ணீருக்காய்!!
பொருத்துப் பொருத்துப் பார்த்து விட்டு,
வயிற்றுக் குழந்தை கூட வெளியில் வந்து
"அம்மா, கொஞ்சம் தண்ணீர் கொடு!" என்றதே!
நீரே எங்களை காத்திடு இந்த பஞ்சத்தின் நரகத்திலிருந்து ..........
கோடை காலம் என்றாலே கடலின் வாசம்
காதில் ஓங்கிக்கொண்டிருந்த கடல் அலையின் ஓசை -இன்று
கடலும் அழிந்து வருகிறது சமூகத்தின் அநாகரிக செயலால் !!
நீரே! உலகில் முக்கால் பாகம் நீதான் ... !!! ஆயினும்
நீ கிடைக்கவில்லை என்றுதான்
உலகமே மூக்கால் அழுகிறது!
பிள்ளை பெறுவதற்கு தவம் இருந்த மக்கள்
இன்று பச்சிளங்குழந்தை கூட தவமிருக்க செய்து விட்டு சென்றாயே
நீ தாக்கத்திற்காய் பயன்பட்ட நாட்கள் கடந்து
இன்று லாபத்திற்காய் உலாவிக்கொண்டிருக்கிறாயே
நீரே ! நீர் மட்டும் ஏன் நீர்வழிச்சாலையாய் அமையாமல் போனாய் .
நீர் இல்லாமல் எங்கள் வயலும் வாடியதே
முலை சப்பி களைத்த இந்த குழந்தையின் கயல் விழியும் காய்ந்ததே
நீரே ..!! இந்த பச்சிளங் குழந்தையை பார்
இன்னுமா எங்கள் மேல் இரக்கம் வரவில்லை
நேற்று பிறந்து இன்று தன் வயிற்று பசிக்ககா
ஏழு கடல் தாண்டி உன்னை தேடி வருகிறதே
ஏன் எங்களை வாட்டி எடுக்கிறாய்..!!
சுத்தப் படுத்தி கடல் நீர் குடிக்க
சுக்கா? மிளகா?
நீயே எவ்வுயிர்க்கும் தாய்ப்பால் ஆகும்!
நீயே நம்வாழ்வும் வளமுமாகும்!
மழை நீரை சேமித்து தம்மையும் தம் வளத்தையும் காப்போம்
தண்ணீரைக் காத்திட
தேசம் கடந்து
கை கோர்ப்போம் நீர் வளம் காத்திடுவோம் !!!