வானம் மிக நீண்ட தெருக்களாய்
அகன்று விரிந்து கிடக்க
அங்கே உன்னொரு சிறுபார்வைக்காய்
காத்துக் கிடக்கிறது என் மனசு
எல்லோரும்
பார் அவள் கிறுக்கி என்கிறார்கள்
தொலைத்த இடத்தில்
மரணத்தின் பின்னிருந்து
உன்னை தேடுகிறேன் என்பதை
யாரறிவார்
கண்ணீரில் நனைந்த
கல்லறையில் - உன்னைப்
பிரிந்த சோகமே பூக்களாக பூத்திருக்க
எனக்குள் இறவாத உன்
நினைவுகளால் நானே மெல்ல மெல்ல
உயிர் துறக்கிறேன்
சுற்றித் திரிந்த தெருக்களும்
அமர்ந்து பேசிய கோவில்களும்
கள்ளத்தனமாக நாம் சந்தித்த கிணத்தடியும்
முத்தம் தந்த ஜன்னலின் அருகாமையும்
வேறென்ன வேண்டும் எனைக் கொல்ல
யாருக்கும் புரியாது தான் - ஏன்
உனக்கே புரியாது அது