கண்ணும்
கண்ணும்
கண்டதும்
காதல் மொழி
கற்று கொள்ள
தொடங்கினேன்
கைகளில்
கைகள் கோர்த்த
சமயம் காதல் புரிய
தொடங்கினேன்
பரஸ்பரம்
நிறமோ
மதமோ
வித்தியாசப்படுத்தி பார்க்கும்
திராணியின்றி
காதல் வளர்க்க
தொடங்கினேன்
உன்னை காணா
ஒவ்வொரு நொடியும்
நீ அழைப்பதாய்
தலைக்குள்
ஒரு குரல்
மனதின்
தவிப்பு
யாரிடம் சொல்ல
கண்ணுக்குள்
எப்போதும்
உன் உருவம்
புன்னகை
பூத்திடும்
பிரியாத
உன்னுடன்
பிரியத்துடன்
இவ்வுலகை
சுற்றி
ரசித்திட வேண்டும்
இருள் மெல்ல மெல்ல
கண்ணுக்கு பழகி
காட்சி விரிவது போல
ஏதோ ஒரு இசை
மெல்ல மெல்ல
தொடங்கி அருகில் சத்தமாய்
கேட்க தொடங்கும் நேரம்
உன் கண்களில்
தெரிந்த மிரட்சியில்
பதற்றமடைந்து
கண் விழித்து
பார்க்கிறேன்
தொலைபேசி
அழைப்பு
தொடுதிரையில்
சிரித்தபடி
உன்
புகைப்படம்
சுரீரென
உரைத்தது
உன் பிரிவு
வலி தாங்க
பழகுவதே
வாழ்க்கையின்
மிகசிறந்த
பாடம்