Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 220  (Read 1752 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 220
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline சிற்பி

எங்கு போனாலும்
நாம் இருவரும்
ஒன்றாகவே
போகலாம்
அன்பே.....

அன்பின்
இருபெரும் விளக்கமாக
நீயும் நானும்
இருக்கலாம்

அழகான பூக்களிலும்
அழகற்ற பூவிதழ்கள் உன்டு
அழகற்ற பூக்களிலும்
அமுதம் போல் தேன் துளி உன்டு

இந்த உலகில்
காதலிலும் சில
தோல்விகள் உன்டு
தோல்வியிலிலும் சிலர்
வாழ்ந்தது உன்டு

மனிதர்கள் உண்மைக்கு
எதிரானவர்கள்
நம் காதலுக்கு
எதிரானவர்கள்

அழகே
இந்த எதிர்ப்புகளை
தாண்டியும் நாம்
வாழ்ந்துவிடலாம்
ஆனாலும்
எப்படியேனும் மனிதர்கள்
நம்மை பிரித்துவிட்டால்

நம் வாழ்க்கைக்கும்
பொருள் இல்லை
நாம் வாழ்வதிலும்
பொருள் இல்லை

நீயும் நானும்
கற்பனை கனவுகளால்
நமது வாழ்க்கையை  அலங்கரித்து கொண்டோம்

எனதருமை காதலியே
இப்போது தான் புரிந்தது
கற்பனை வேறு
எதார்த்த வாழ்கை வேறு

இந்த உலகமே
காதல் தந்த பரிசு
அந்த காதலுக்கு
நம்மை நாமே
பரிசாக தந்து விடுவோம்


...அன்புடன் சிற்பி...

« Last Edit: June 09, 2019, 04:07:03 PM by சிற்பி »
❤சிற்பி❤

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 180
  • Total likes: 547
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
வானம் எல்லாம் நீலமாக..
நாணம் கொஞ்சம் தள்ளி போக..
தேன்போல் இனிமை நம்மை சேர..
இரு கரங்கள் கோர்த்தே இணைந்தே போவோம்!

கொட்டும் காதல் அருவியாக..
நமை முட்டும் ஊடல் தகர்ந்து போக..
நமதன்போ என்றும் மலைகளாக..
துயர் நீக்கி வாழ்வோம் அலைகள் போலே!

மேகம் நம்மில் மழையை தூவ-
ஆகும் நேரம் மோகம் போதும்!
அறிவியல் சொல்லும் அணுவின் அளவே
நம்மை சேரும் துன்பம் போதும்!
வெகு தூரம் நீளும் வானின் அளவாய்..
அன்பு மகிழ்ச்சி காதல் யாவும்..
மிகையாய் நம்மை சேர்வது போலே..
வாழ்வோம் நாமே!!! யுகம் பல கடந்தே!!!

இரு கை கோர்த்து.
இயற்கை சேர்த்து..
உவகை கொள்ள...
வேண்டும் நீயே!!!

__நகைச்சுவையாளன்__பீன்__
[/size][/color]
« Last Edit: June 09, 2019, 05:49:44 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Poocha

  • Guest
கண்ணும்
கண்ணும்
கண்டதும்
காதல் மொழி
கற்று கொள்ள
தொடங்கினேன்

கைகளில்
கைகள் கோர்த்த
சமயம் காதல் புரிய
தொடங்கினேன்

பரஸ்பரம்
நிறமோ
மதமோ
வித்தியாசப்படுத்தி பார்க்கும்
திராணியின்றி
காதல் வளர்க்க
தொடங்கினேன்

உன்னை காணா
ஒவ்வொரு நொடியும்
நீ அழைப்பதாய்
தலைக்குள்
ஒரு குரல்

மனதின்
தவிப்பு
யாரிடம் சொல்ல

கண்ணுக்குள்
எப்போதும்
உன் உருவம்
புன்னகை
பூத்திடும்

பிரியாத
உன்னுடன்
பிரியத்துடன்
இவ்வுலகை
சுற்றி
ரசித்திட வேண்டும்

இருள் மெல்ல மெல்ல
கண்ணுக்கு பழகி
காட்சி விரிவது போல
ஏதோ ஒரு இசை
மெல்ல மெல்ல
தொடங்கி அருகில் சத்தமாய்
கேட்க தொடங்கும் நேரம்

உன் கண்களில்
தெரிந்த மிரட்சியில்
பதற்றமடைந்து
கண் விழித்து
பார்க்கிறேன்

தொலைபேசி
அழைப்பு
தொடுதிரையில்
சிரித்தபடி
உன்
புகைப்படம்

சுரீரென
உரைத்தது
உன் பிரிவு

வலி தாங்க
பழகுவதே
வாழ்க்கையின்
மிகசிறந்த
பாடம்

Offline KuYiL

என்றுமே உன் காதலனாய் நான் !!!
நீ
சிரிக்கும் சிரிப்பில் மழலை !
சிணுங்களில் வெள்ளி கொலுசு!
காதில் உன் மூச்சு நான் விடும் சுவாசம் !
உன் அணைப்பின் இறுக்கத்தில் 
காற்றுக்கு என்றுமே தோல்வி தான் !
உன் ஆசை வார்த்தை
என் வாழ்க்கையின் வெற்றி பாதை !
உன் உள்ளங்கை சூட்டில்
எரிந்து போன என் தோல்விகள்!
சோகத்தில் சாவை தேடும்
கொலை காதலன் நான் அல்ல!
உயிர் விடும் நொடி வரை
உன் உயிராய் வாழ
உலகம் என் எதிராய் நின்றாலும்
உன் நிழல் என் உயிர் கவசம் !
மலை விளிம்பில் உன்னுடன் நான்..
வானம் பூமி சாட்சியாய்
மலை அருவி சாரல் அச்சதை தூவ
உன் கரம் பிடிக்கும் இக்கணம்
என் வாழ்க்கையின் அடித்தளம் !
காமத்தில் மட்டும் முடிவதல்ல
என் காதலின் தேடல்
என் சிகரம் நோக்கிய
வெற்றி பாதைக்கு
என் தேடலில் நான் கண்ட
நம்பிக்கை நட்சத்திரம் !
உன்னை மட்டுமே கை பிடித்து நிற்கும்
நான்
உன்னுடன் நிற்பது சாவின் விளிம்பில் அல்ல
சிகரம் தொட்ட நம் காதலின் வெற்றி மகுடம் ....



Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..

அன்பே  ! ஆருயிரே !
 
அருவியின் அழகை காண சென்றோமா ?
அகத்தின் பரிமாறலுக்கு சென்றோமா ?
உன்னோடு கரம் கோர்த்து நிற்கும் வினாடிகள் ....
மண்ணோடு நாம் வாழும் யுகங்கள் .....

மேக  படகில்  ஏறி 
விண்மீன் பிடிக்க  போகலாம்  வா
பறப்பதும்  மிதப்பதும்
காதலில்  மட்டும்  சாத்தியம்  இங்கு....

சலனமற்ற  என்  வாழ்வில்  ...
சலங்கையாய் சிரிக்க  வைத்தாய் நீ .
வாழ்க்கை  சிகரத்தில்  ஏற ..
சிறகுகளை விரிப்போம்  வா  ..

நாம்  ரசித்த  காதலுக்கு
நன்றி  சொல்வோம்  காலத்திற்கு ...
பிரியத்தின்  பாதையில்  நம் பயணங்கள்
பிரியாத  வரம்  கிடைக்க   வேண்டுவோம் ....

நெஞ்சுக்குள்  பூத்த  மொழிகள்  யாவும்
நேசத்தில்  நெய்த  காதல் ...
என்னோடு  நீ  வந்தால் இங்கே ...
புதியதோர்  கனவு தேசம்  உருவாகும்

Offline Guest 2k


நதியென
நீண்டு விரியும்
இந்த பாதையின் முடிவு
நாம் என்றுமே அறிந்திராதது
இருந்தும் இணைந்தே பயணிக்கும்
ஒத்திசவை கொண்ட நம் மனங்களுக்கு
முடிவற்ற பாதைகள் தான்
பெரும் விருப்பமானதாக இருக்கிறது


பெருவனமென
நீண்டு விரியும்
இந்த பாதையின் அடர்த்தி
நாம் என்றுமே கண்டறிந்திடாதது
அடர்ந்த இவ்வனத்தின் எதிர்ப்புகளைப் பற்றி
யாதொரு கவலையும் இருந்ததில்லை
காதலின் பாதை கரடு முரடானது
என்பதறிந்தே
இணைந்து பயணித்தோம்


புதைமணலின் உள்ளிழுக்கும்
இந்த பாதையின் ஆழம்
நாம் பரீட்சித்திராதது
நம்
சங்கமிக்கும் நினைவுகளை புதைமணலிற்கு பரிசளித்து
ஆழங்களை அளக்கிறோம்


எல்லையின்றி விரியும்
நீள்வானத்தின் எல்லையை
யஞ்ஞனம் அறிந்துகொள்வது
காதலின் சிறகுகள் கொண்டு
பறந்தே திரிகிறோம்
கண்டங்களை கடக்கும்
வலசைப் பறவைகளாய்


ஆழியின் பேரிரைச்சல்
அடங்கி பேரமைதி நிலவும் இடத்தினை
ஒத்த இந்த பாதையின்
முடிவில் இருக்கும்
அமைதியின் ரீங்காரம் நாம் கேட்டிராதது
நூற்றாண்டுகளா நீந்தியும் கடக்க முடியாத
காதலின் ஆழத்தை விடவும் ஆழி ஆழம் பெரியதா என்ன?


சர்ப்பமென
நீண்டு விரியும்
இந்த பாதயின் நீளம்
நாம் என்றுமே அறிந்திராதது
காலங்களை கடத்தும் சக்தி கொண்ட
காதலின் கரம்பிடித்து
புன்னகை சூடி
கடவைகளை கடந்து செல்கிறோம்


அடர் இருட்டின் பிசுபிசுப்போடு
நீளும் இப்பாதையில்
முன்னோக்கி எதுவுமே தெரிவதில்லை
இருந்தும் இணைந்தே பயணிக்கிறோம்
நெடுந்தோங்கி நிற்கும் மலைகளும் உண்டு
கிடுகிடுக்கும் பள்ளங்களும் இங்குண்டு
கைப்பிடித்து செல்லும் காதலின்
வழித்தடங்கள்
பெருவெளிகளை கடந்து செல்கிறது
இருளின் முடிவில்
என்றுமே சிறு வெளிச்சம் உண்டுதானே?


ஆர்பரித்து விழும்
நதியின் வீழ்ச்சியென
எல்லைகளற்று வீழும் இப்பாதையின்
ஆழம் நாம் அறிந்திராதது
இருந்தும்
இரு கைகள் கோர்த்து முன் செல்கிறோம்
நம் முன்னே என்ன இருக்கலாம்?
என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்


வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்