உழைப்பாளர் வர்க்கம்.
உலகை படைத்த இறைவன்,
அதை உழைப்பை கொண்டே சுழலவைதான்.
உலகில் படைக்க பட்ட ஒவ்வொரு உயிரும்,
ஏதோ ஒரு வகையில் உழைப்பு செய்கிறது.
தேனீ அது, தன் உழைப்பை தேடலின் மூலம் வெளிப்படுத்தும்
கவிஞனின் உழைப்பு அது
கவித்துவதில் வெளிப்படும்.
சிற்பியின் உழைப்பு அது,
சிற்பத்தின் சிறப்பினால் வெளிப்படும்.
எழுத்தாளனின் உழைப்பு அது ,
எழிமிகு சிந்தனையின் எழுத்துகளினால் வெளிப்படும்.
ஆசானின் உழைப்பு அது, அன்பின் சிந்தனையில் உருவான
மாணவர்களின் நன்னடத்தையில் உருவகம் பெரும்.
யாசகனும் உழைக்கிறான்,
மனவலியுடன் யாசிக்கும் கனமெல்லாம்..
உழவனின் உழைப்புதனை உலகமே உணர்ந்திருக்கும்.
இது போலாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு
வகையில் உழைத்து கொண்டே இருக்கின்றனர்.
உயிர் மூச்சி அது எப்படி இன்றியமைத்ததோ,
அது போன்று உழைப்பு அதும் இன்றி அமையாததே !.
உழைக்கும் வழி அது வெவ்வேறான பொழுதிதிலும்,
உழைப்பவன் அனைவரும் உழைப்பாளர் வர்க்கமே...
பிரிவுகளை ஒன்றிணைக்க உழைப்பாளர்களை
உருவகித்தான் இறைவன்,
இறைவன் நிர்ணயித்த உழைப்புதனை,
உழைப்பாளர்களை கொண்டே கௌரவித்தது உலகு.
உழைப்பாளர்களுக்கென ஒரு தினம்,
அது நம் இந்திய நாட்டில் "மே தினம்"....
உழைப்பின்றி அமையாது உலகு... MN-AARON....