Author Topic: மாண்புமிகு (குடி)மகன் ..¿?  (Read 267 times)

Offline JerrY

வள்ளுவன் தந்த கள்உண்ணாமை
மறந்தாய்

மதுபுட்டியில் எழுதிய வாசகம்
மறைத்தாய் ..¿?

இராவணனின் பேய் பிடித்ததோ
உனக்கு

மனிதன் என்னும் மமதை
விடுத்து

மதுவில் மயங்கி மதியற்ற
மூடனாய் ..¿?

இச்சமுகத்தின் மலமாய் நிற்க்கும்
குடிமகனே ..

சாராயம் என்னும் சாக்கடையில்
ஊறி

காலனின் நிழலிலே நிற்க்கும்
நரனே ..¿?

உன்முன்னே நிற்க்கும் நீ இரக்கும்
காலத்திற்க்காய் வறுந்துகிறேன் ..¿?

( liquor drinking is injuries to health )

இவண் ..
இரா.ஜகதீஷ் ¿?