நாம் மனிதர்கள்
எலிகளைக் கண்டு பயப்படுகிறோம்
புலிகளைக் கண்டும் பயப்படுகிறோம்
பூச்சிக்கும் பயப்படுகிறோம்
ஏச்சிக்கும் பயப்படுகிறோம்
இருட்டுக்கும் பயப்படுகிறோம்
திருட்டுக்கும் பயப்படுகிறோம்
சண்டைக்கும் பயப்படுகிறோம்
சாவுக்கும் பயப்படுகிறோம்
கடவுளுக்கும் பயப்படுகிறோம்
கனவுக்கும் பயப்படுகிறோம்
நாம் மனிதர்கள்
!!மனசாட்சிக்கு மட்டும்
பயப்படுவதே இல்லை!!