ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 174
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/174.png)
என் மகளே.....
பசுமை மாறாத முகமும்.,
அதில் பளிங்கு போல் ஒளிரும் சிரிப்பும்.,
மலர்ந்த ரோஜாவின் மென்மை .,
உன்னோடு இருப்பதுதான் உண்மை!
குதித்து ஓடிடும் மானும்.,
தோகை விரித்து ஆடிடும் மயிலும்.,
நீர் அள்ளி தெளித்திடும் மீனும்.,
குரல் கொண்டு கவி பாடும் குயிலும்.,
யாவும் அழகென சொன்னேன்.,
உனை காணும் முன்னர் நானே!!
அமிழ்து தன்னோடு கொண்டு.,
அதை இயல்பாய் நமக்கள்ளி தந்து.,
தவழ்ந்து விளையாடும் பிள்ளை.,
அகிலத்தில் உனக்கிணை இல்லை!
மழலை பேசிடும் மொழிகள்.,
அதில் தோற்றிடும் பல கவிகள்!!!
கொஞ்சி விளையாடும் மழலை.,
அதைக்கண்ட எனக்கில்லை கவலை!
உனை நெஞ்சில் சுமப்பது ஓர் வரமே!
அது பொங்கும் இன்பத்தை-என்றும் எனக்கு தருமே!!!
என்னில் பிறந்த இக்கவியை .,எனக்காய் பிறந்த என் கவிக்கு(என் மகள் ரியானா (sl)(K)(H))சமர்பிக்கிறேன்
பாசமிகு தந்தை திருவாளர் பீன்.....
[/font][/color][/size]