காதலி....
என்னை விட்டு சென்றாலும்
அவளே என் முதல் மனைவி
மறுபிறவி ஆனாலும்
அவள் மடிசாய நினைக்கிறேன்
மரணம் வரும் வரையிலும்
அவள் நினைவோடு வாழ்கிறேன்
கண்ணீர் துளிகளாய்
கவிதையாய் வார்த்தையாய்
என்னில் இருக்கிறாள்
கடவுளை இதுவரை
கண்களால் காண்கிலேன்
காதலி அவளை நான்
கடவுளாய் பார்க்கிறேன்
ஆயிரம் ஆண்டுகள்
அரசனாய் வாழலாம்
ஆயினும் ஆண்மகன்
அன்புக்கு அடிமை தான்
நான் இறந்திடும்
நாள்வரை என் இதயம்
அவள் வாழும் தாஜ்மஹால்