51
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 339
« Last post by VenMaThI on March 21, 2024, 10:53:07 PM »பயம்
தனிமை கண்டு பயந்தேன்
தாலாட்டுப்பாடி தூங்க வைத்தீர்...
இருட்டை கண்டு பயந்தேன்
இருக்கமாய் அணைத்து கொண்டீர்...
படிப்பை கண்டு பயந்தேன்
படிப்படியாய் அதன் அருமையை உணர்த்தினீர்...
மிருகங்களை கண்டு பயந்தேன்
மிருளாதே என்று அதட்டினீர்...
பருவமடைந்த காலத்திலோ.. கன்னியரை
மயக்கும் கட்டிளம் காளைகளை கண்டு பயந்தேன்..
பக்குவமாய் எடுத்துரைத்து..அவர்களும்
நம் நட்புதான் என விளக்கினீர்...
யார் வந்தாலும் யார் போனாலும்
நான் இருப்பேன் உனக்காய்
என்றும் தனித்து இயங்க விடேன்
என்று நம்பிக்கை மொழி உரைத்தீர்...
உம்மீது இருந்த நம்பிக்கையில்
உலகை எதிர்கொள்ள துணிந்தேன்..
வீரமங்கையாய் உலா வர நினைக்கையில்
வெறுமை ஆகி போனதென்ன நின் இடம்...
நீர் கொடுத்த தைரியங்களை
ஆயுதமாய் ஏந்தி போராடி களைத்தேன்
இனி வரும் காலம் தனை..
உம் கை கோர்த்து கடந்திட காத்திருக்கிறேன்
என் கண்ணெதிரே தோன்றி
என் கவலையெல்லாம் நீக்கி
என் பயம் தனை போக்க
என்று வருவீரோ ... அப்பா
❤️❤️❤️❤️❤️❤️