#பெண்_என்பவள்!!!
♥பெண் என்பவள்,
#போதை அல்ல நாம் கண்டோ,
உண்டோ, களிப்புற...
♥பெண் என்பவள்,
#ஆடை அல்ல, நாம் உடுத்தி, கிழித்து,
சேதப்படுத்த...
♥பெண் என்பவள்,
#கண்ணாடி அல்ல, நம்மையே நாம்
அங்கு காண...
♥பெண் என்பவள்,
#கொடி கம்பம் அல்ல, நம்மை
கொடியாய் உயர்த்த...
♥பெண் என்பவள்,
#கனவு அல்ல, நம் ஆசைகளை மட்டும்
காண...
♥பெண் என்பவள்,
#வர்ணம் அல்ல, நம் கொண்டாடங்களுக்காக பூசி மகிழ...
♥பெண், உண்மையில்...
ஒரு மருந்து, நாம் அன்பிற்கு
ஏங்குகையில்...
♥பெண்,
ஒரு ஊசி, நம் கிழிசல்களை தைத்து
அழகாக்கும்...
♥பெண்,
ஒரு கூரிய கத்தி, நம்
தவறுகளுக்கு நம்மை கிழிப்பாள்...
♥பெண்,
ஒரு கொடி, உயரே பறந்து நம்மை
பார்க்க வைப்பாள்...
♥பெண்,
ஒரு காட்சி, நம் காட்சி பிழைகளின்
விடையாகி திருத்துவாள்...
♥பெண்,
ஒரு தூரிகை, நம் வெற்று
வாழ்க்கையில், வர்ணம் பூசி, பின்
வர்ணமாகி, நம் கறை பட்டு, கரைந்தே
போகிறாள்...
♥இது என்னை பெற்று, வளர்த்து,
ஆளாக்கியவளுக்கும்.,.
என்னை செழுமை ஆக்கி, ஆக்கும்,
ஆக்க போகும் அனைத்து
பெண்களுக்கும் சமர்ப்பணம்..
படித்ததில் ரசித்தது