-
என் செல்லம் நீ...
எங்கோ பிறந்த நீ
என் சாலையில் வந்து நின்றாய்...
யாரென தெரியாமலே
முதல் பார்வையில் மனதை வென்றாய்...
உன் பரிதாப முகம் கண்டு
என் மனம் மெழுகாய் உருக,
அக்கணமே உன் மீது
வசீகர காதல் கொண்டேன்...
உன்னை என்னுடையவனாக்க
இதயம் அலைபாய்ந்தது
ஆயினும் வந்த தயக்கம்,
என் ஆசையை மேய்ந்தது...
உன் ஏங்கும் விழிகள்
என் காதலை தூண்ட,
உன்னை என் பந்தமாக்க
தீர்மானம் பூண்டேன்...
உனக்கு அடைக்கலமாய்
என் மெத்தை மடி
எனக்கு இன்பம் பல தரும்
உன் செல்ல அடி...
எனக்குள் தினமும் ஊடுருவினாய்
என் உறவுகளை கொள்ளை கொண்டாய்
உன் கொஞ்சலினால் தாயானேன்
உன் குறும்பினை ரசிக்க சேயானேன்...
என்னையே சுற்றும் உன்னால்
தினமும் சோகம் மறக்கிறேன்
உனக்கென இன்னல் வந்தால்
உடனே லோகம் மறக்கிறேன்...
உன் பெயரும் பிறப்பும் அறியேன்
அநாதரவாய் பயந்துநின்ற
உன் உள்ளம் மட்டுமே அறிவேன்...
உன் பூர்வீகம் யாதாயினும்
என் மீசை வைத்த பூனையாரே...
நீ என்றும் என் செல்லமே...
-
செல்ல பூனைக்குட்டிக்கு ஒரு கவிதை செம்ம
என்னையே சுற்றும் உன்னால்
தினமும் சோகம் மறக்கிறேன்
உனக்கென இன்னல் வந்தால்
உடனே லோகம் மறக்கிறேன்..
படிக்கப்படிக்க ஆனந்தம் கொள்கிறேன் சகோ
தொடர்ந்து எழுதுங்கள்
-
Miga nanri Joker anna
-
haha sis poonakutty ka kavidhai,,
Super!! Na nanece unge first love pathi,,
Cute kavidhai ashini
-
Poona kutty um ennoda lover than sissy ...hehe
-
Ashini Sistu nick kavithai ... :D என் சாலையில் வந்து நின்றாய்...
யாரென தெரியாமலே
முதல் பார்வையில் மனதை வென்றாய்... :D
-
Thanks a lot Dora sissy
-
ARUMAI THOZHI INNUM MALARATUM PALA KAVITHAI POOKAL
-
Thanks a lot Joke guy bro
-
செல்ல பிராணிளில் பூனை ரொம்ப விசித்திரமானது... அது எங்கே நாம் இடம் மாறி சென்றாலும் நமை தேடி வந்துவிடுமாம்
அபூர்வ செல்லப் பிராணிக்கு
அழகான கவிதை
-
Thank you Niya akka
-
செம செம :)
சூப்பர் கவிதை ஆசினி
வாழ்த்துக்கள்
-
Ice bro thank you so much