Author Topic: எஸ். ராமகிருஷ்ணன்  (Read 17722 times)

Offline Gayathri

எஸ். ராமகிருஷ்ணன்
« on: May 31, 2013, 02:09:23 PM »
எஸ். ராமகிருஷ்ணன்




S. Ramakrishnan is an influentially important writer of modern Tamil literature.

He is a full-time writer who has been active over the last 25 years in diverse areas of Tamil literature like short stories, novels, plays, children’s literature and translations.

Born in 1966, he is a native of Mallankinar village of Virudhunagar district of Tamilnadu. He has travelled all over India and having experience of living in its different parts of the country.

His short stories are noted for their modern story-telling style in Tamil. He had, as Editor, brought out the literary publication, Atcharam for five long years. His short stories and articles have been translated and published in English, Malayalam, Hindi, Bengali, Telugu, Kannada and French.

A great story-teller, he has organized over thirty story-telling camps for school children, all over Tamilnadu. He has authored four books for children. He has organized a special story-telling camp for children with dyslexia-related learning disabilities. He has also organized screenplay writing camps for short film directors and students of cinema creation in important cities like Chennai, Coimbatore, etc.

His novel Upa Paandavam, written after a deep research into Mahabharata, was not only selected as the best novel in Tamil, it was widely well received by the readers. The novel Nedum Kuruthi, which spoke of the dark and tragic existential experiences of the tribe of oppressed people cruelly stamped as criminal tribe by the British, secured the Ghanavaani award for the Best Novel. His novel Yaamam, written with Chennai city’s three hundred years history as back drop, is another widely appreciated creation. His Urrupasi is a novel that conveys the stirring mental agonies of a young man who was unemployed because he took his degree majoring in Tamil language.

He became a celebrated author to lakhs of readers through his series of articles like Thunai Ezhuthu, Desanthari, Kathavilaasam, Kelvikurri and Chiridhu Vellicham which appeared in the highly circulated Tamil weekly, Ananda Vikatan. He is the first writer in Tamil to have created a broad circle of readers for his columns. The compilation book of the articles, Thunai Ezhuthu, has created a new history by selling almost a lakh of copies.

A connoisseur of world cinema, he has compiled an introductory compendium on world cinema with thousand pages called Ulaga Cinema. He has written four important books on cinema viz. Ayal Cinema, Pather Panchali, Chithirangalin Vichithirangal and Paesa Therindha Nizhalgal.

The short film Karna Motcham with his screenplay won the National Award for Best Short Film and went on to win, so far, 27 important awards in Indian and International Film Festivals. Another short film Matraval has won three coveted awards as the best Tamil Short Film.

He has worked as Screenplay and Dialogue writer in Tamil films like Baba, Album, Chandaikkozhi, Unnale Unnale, Bhima, Dhaam Dhoom, Chikku Bukku and Modhi Vilaiyadu with over ten films to his credit. Some of these films have successfully crossed 100 days of continuous screening in theatres.

He has written and published five novels, ten collections of short stories, 24 collections of articles, four books for children, three books of translation and nine plays. He also has a collection of interviews to his credit.

Among the many important awards won by him are  Tagore Litearay Award for his novel Yamam. Sangeetha Nataka Academy Award for Best Young playwright, Iyal Award from Canada, Award for Best Novel from Government of Tamilnadu, Award of Literary Thoughts, CKK Literary Award, Best Novel Award of Progressive Writers’ Union, Jnanavaani Award and Young Achiever Award. Salem Tamil Sangam award and also the winner of Kannadasn Award.

Three Doctorates and 13 M.Phil. Degrees have been awarded to scholars for researching into his writings. His books have been prescribed as part of syllabi of 2 Universities and 9 Autonomous Colleges.

S. Ramakrishnan lives in Chennai with wife Chandra Prabha and sons Hariprasad and Aakash.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #1 on: May 31, 2013, 02:20:45 PM »
எதிர் கோணம்

சிறுகதை

பேருந்தின் படிக்கட்டில் நின்றிருந்த அந்த பையனைப் பார்க்க விடுமுறைக்கு வந்திருந்த பள்ளிமாணவனைப் போலிருந்தான்,

ஒடிசலான தோற்றம், வெளிறிய ஜீன்சும், ஆரஞ்சுவண்ண டீசர்டும் அணிந்திருந்தான், அவனது கழுத்தில் கேமிரா தொங்கிக் கொண்டிருந்தது, முதுகில் கேமிராவின் உபகரணங்கள்  அடங்கிய பையை தொங்கவிட்டிருந்தான், அன்று பேருந்தில் நிறைய கூட்டமாக இருந்தது

சவரிமுத்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தபடியே அந்த பையனையே பார்த்துக் கொண்டிருந்தான்,

அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது கேனான் கேமிரா, அது போன்ற கேமிரா ஒன்றை ஹிண்டு பேப்பர்  விளம்பரத்தில் பார்த்திருக்கிறார், சமீபத்தில் அவர் பார்த்த ஒரு திரைப்படத்தில் கூட அதன் நாயகன் இது போன்ற ஒரு கேமிராவை கையில் வைத்திருந்த ஞாபகம் வந்தது.

அதே  கேமிரா தான், பார்க்க பார்க்க ஆசையாக வந்தது, ஒரு காலத்தில் சவரிமுத்துவிற்கு சொந்தமாக ஒரு அக்பா கேமிரா ஒன்றை வாங்க வேண்டும் என்பது கனவாக இருந்த்து, ஆனால் அதற்காக அவரால் பணம் சேர்க்க முடியவில்லை, மூத்த மகள் சுகுணாவிற்கு திருச்செந்தூரில் மொட்டை போட சென்ற போது மச்சினன் வைத்திருந்த யாசிகா கேமிராவை இரவல் வாங்கிக் கொண்டு போய் புகைப்படம் எடுத்தார்,

பிளாஷ் இல்லாத காரணத்தால் உருப்படியாக போட்டோ எடுக்கமுடியாமல் போய்விட்டது, ஆனாலும் இரண்டு நாட்களாக அந்த கேமிராவை தன்னோடு கூடவே வைத்திருந்த்து அவருக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது, கேமிராவை கழுத்தில் போட்டுக் கொண்டவுடன் திடீரென தனது உயரம் மிக அதிகமாகிப்போனது போலவும், தன்னையே எல்லோரும் வியப்போடு பார்ப்பது போலவும் அவருக்கு தோன்றியது,

அந்த உந்துதலில் தான் டைம்கீப்பர் லாசரிடமிருந்த பழைய கேமிரா ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் வீட்டிற்கு தெரியாமல் கடன்வாங்கி ரகசியமாக கேமிராவை வாங்கி வந்தார், பொங்கல் விடுமுறையில் பிள்ளைகளை ஆற்றின் மணல்திட்டிற்கு அழைத்துப் போய் விதவிதமாகப் போட்டோ எடுக்க வேண்டும் என்று இரண்டு பிலிம் ரோல்கள் கூட வாங்கி வைத்திருந்தார்

தைப்பொங்கலுக்கு மறுநாள் வைப்பாற்றுக்குள் பெரிய விழா நடக்கும், ராட்டினங்கள், பலூன்விற்பவர்கள், விதவிதமான ரிப்பன் வளையல் விற்பவர்கள், தூள் ஐஸ், பாம்பே விற்பவர்கள், குறவன் குறத்தி ஆட்டம்,  இசைக்கச்சேரி என்று ஒரே குதூகலமாக இருக்கும்,

ஆற்றின் தென்பகுதியில் ஒரு உயரமான மணல்திட்டிருந்த்து, அதிலேறி பிள்ளைகள் மணலறச் சறுக்கி விளையாடிக் கொண்டிருப்பார்கள், அந்த உயரமான மணல்திட்டினை ஒட்டி எஸ் வடிவில் வளைந்த கூந்தல்பனைமரம் ஒன்றிருந்தது,

அந்த பனைமரத்தின் அருகில் கையில் ஒரு ஒலைக்கிளி ஒன்றை கொடுத்து இரண்டுபிள்ளைகளையும் நிறுத்தி கலர் படம் எடுத்தால் மிக அழகாக இருக்கும் என்று கற்பனை செய்திருந்தார், அதற்காகவே பிள்ளைகளுக்கு அடர்ந்த நீலமும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் உடைகளும் வாங்கியிருந்தார்,

அன்றைக்கு ஆற்றில் கூட்டம் நிரம்பி வழிந்த்து, தனது கைப்பையில் இருந்து அவர் கேமிராவை வெளியே எடுத்த போது சுகுணா ஆச்சரியத்துடன் ஏதுப்பா என்று கேட்டாள்

டிரைவர் ரவியோடது என்று பொய் சொல்லி சமாளித்தபடி அவர்களை மணலில் நடத்திக் கூட்டிக் கொண்டுபோனார், அவர்கள் அணிந்திருந்த உடைக்கு பொருத்தமாக ஒலைக்கிளி ஒன்றை வாங்கி கொடுத்து பனைமரத்தடிக்கு கூட்டிப் போனார்,

மணல்மேட்டில் இருந்து சரிந்து விழும் சிறுவர்கள் கைகளை விரித்தபடியே கூச்சலிட்டிக் கொண்டிருந்தார்கள், காற்றில் மணல் பறந்து சென்று கொண்டிருந்தது, பருத்திப்பால் விற்கின்றவன் தனது பானையில் மணல் விழுந்துவிட்டது என்று ஏசிக் கொண்டிருந்தான்,

சறுக்கும் சிறுவர்களை விலக்கி விட்டு இரண்டு மக்ள்களையும் பனைமரத்தடியில் நிறுத்திவிட்டு வாகான ஒரு கோணத்தில் படம் பிடிப்பதற்காக கேமிராவை முடுக்கினார், அதன் ஷட்டர் திறந்து கொள்ளவேயில்லை, கேமிராவை ஒரு குலுக்கி குலுக்கிவிட்டு மறுபடியும் இயக்கிப் பார்த்தார், இப்போது பட்டனை அமுக்கவே முடியவில்லை, எரிச்சலுடன் ஒங்கி அழுத்தினார், பட்டன் அப்படியே அமுங்கி நின்றுவிட்டது, என்ன எழவு கேமிரா என்று அலுத்துக் கொண்டபடியே அதை மறுபடியும் கடகடவென குலுக்கினார், கேமிராவின் அமுக்கும் பட்டன் வேலை செய்யவேயில்லை,

இப்போது கேமிராவை கழட்ட முடியாது, பிலிம்ரோல் வேறு போட்டாகிவிட்டது, என்ன செய்வது என்று புரியாமல் அதை மேலும் கீழுமாக மறுபடியும் குலுக்கி பார்த்தார், கேமிரா சுத்தமாக வேலை செய்யவில்லை, சே ஆயிரம் ரூபாயை ஏமாற்றி பிடுங்கிவிட்டானே என்று லாசர் மீது ஆத்திரமாக வந்தது, பிள்ளைகள் கையில் ஒலைக்கிளியோடு நின்று கொண்டேயிருந்தார்கள், காற்றில் மணல் பறந்து கொண்டேயிருந்தது

சவரிமுத்துவின் மனைவி கலா பொறுமையற்றவளாக சொன்னாள்

சுகுணா நீங்க போயி விளையாடு, உங்கப்பா போட்டோ எடுக்க ரெடியானது நானே கூப்பிடுறேன்

பிள்ளைகள் குடை ராட்டினத்தை நோக்கி நடந்து போனார்கள்,

சவரிமுத்து சலிப்போடு ஆற்றின் கரையில் டெண்ட் அடித்து பேமிலி போட்டோ எடுத்த தரும் ராயல் ஸ்டுடியோவிற்கு போய் ஆலோசனை கேட்கலாம் என்று நடந்து போனார், அங்கே போட்டோ எடுப்பதற்காக நிறைய கூட்டம் சேர்ந்திருந்த்து,

வேலை நேரத்தில் இதை எல்லாம் கவனிக்கமுடியாது என்று ஸ்டுடியோ முதலாளி சவரிமுத்துவை துரத்திவிட்டார்

திரும்பி வந்த போது ஏமாற்றமாக இருந்தது, வெயில் வேறு போய்க் கொண்டேயிருந்த்து, நினைத்தது போல ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது,

சவரிமுத்துவின் மனைவி மணலில் ஜமுக்காளத்தை விரித்து உட்கார சொன்னாள், ஒரமாக உட்கார்ந்தபடியே கேமிராவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்,

தன்னை சுற்றி நடக்கும் கொண்டாட்டங்ஙகள், ஆடல் பாடல்கள் எதுவும் அவர் மன்தின ஈர்க்கவேயில்லை, கேமிராவை எப்படியாவது சரிசெய்து பிள்ளைகளை போட்டோ எடுக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணம் ஒடிக் கொண்டிருந்த்து,

விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் தலைகலைந்து பறக்க, உடைகள் கசங்க, அவரிடம் ஒடி வந்து கேமிராவை சரி பண்ணியாச்சாப்பா என்று கேட்டார்கள்,

இல்லைடா கண்ணு, நாளைக்கு எடுப்போம் என்று தலைகவிழ்ந்தபடியே சொன்னார், அவரது வருத்தமான முகத்தை கண்ட கலா சொன்னாள்

போட்டோ வேணும்னா, ஸ்டுடியோவில போயி பிடிச்சிகிடலாம், அதுக்கு எதுக்கு நல்ல நாளும் அதுவுமா மூஞ்சியை தூக்கிவச்சிகிட்டு உட்கார்ந்திருக்கீங்க,  கைமுறுக்கு கொண்டு வந்திருக்கேன், தரவா

வேண்டாம் என முறைத்தபடியே கையில் மணலை அள்ளி அள்ளி மறுபக்கம் கொட்டிக் கொண்டிருந்தார், அன்று உருவான தீராதமனவருத்தம் இன்றைக்கு விழித்துக் கொண்டது

பஸ்ஸின் படியில் நின்றிருந்த அந்த பையன் கழுத்தில் இருந்த கேனான் கேமிரா அவரது ஆசைளை கிளறிவிட்டது,

பக்கத்தில் உள்ள சமணர்மலைக்கு போய்விட்டு வருகிறான் போலும்,

இந்த வயதில் டிஜிட்டல் கேமிரா, நிறைய லென்சுகளும் வைத்திருக்கிறான், கொடுத்துவைத்த பயல், ஆசையை அடக்கமுடியாமல் அவனிடம்  சவரிமுத்து கேட்டார்

கேனான் 5 டியா

அந்தப் பையன் காற்றில் மோதும் கேசத்தை இடது கையால் ஒதுக்கிவிட்டபடியே சொன்னான்

5டி, மார்க் 3, சிங்கப்பூர்ல வாங்கினது

பள்ளிபடிப்பை கூட முடித்திருப்பானா என்று தெரியாது, அதற்குள் 5 டி மார்க் 3 வாங்கியிருக்கிறான், அதுவும் சிங்கப்பூருக்கு போய் வாங்கியிருக்கிறான்,

வாழ்க்கை சிலருக்கு எல்லாவற்றையும் வாறி வழங்குகிறது, சிலருக்கு எதையும் அடைய முடியாமல் செய்துவிடுகிறது என ஆத்திரமாக வந்தது

பேருந்து சின்ன ஒடை பஸ் ஸ்டாப்பில் நின்றது, நாலைந்து கிராமவாசிகள் ஏறிக் கொண்டார்கள், சவரிமுத்து விசில் அடித்துவிட்டு கேமிரா வைத்திருந்த பையனுடன் எப்படி பேச்சு கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்,

பஸ்  சீரற்ற சாலையில் சென்று கொண்டிருந்த்து, ஒரு பள்ளத்தில் டயர் விழுந்து ஏறியதில் பேருந்து குலுங்கியது.

தம்பி நீங்க வேணும்னா என் சீட்ல வந்து உட்காருங்க.  ஏன் கேமிராவை வச்சிகிட்டு சிரமப்படுறீங்க என்று தனது சீட்டை விட்டு எழுந்து கொண்டான் சவரிமுத்து

அந்த பையன் வேண்டாம் என்று மறுத்தபடியே படியிலே நின்று கொண்டான்,, அதுவரை கால்கடுக்க நின்று கொண்டுவந்த ஒரு முதியவர் அந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார்,

சவரிமுத்து அந்த பையனிடம் பேசுவதற்கு தோதாக தானும படிக்கட்டில் நின்று கொண்டான். பையன் போட்டிருந்த பாரீன் செண்டின் மணம் தூக்கலாக இருந்தது

கேமிரா என்ன விலையாகுது எனக் கேட்டான் சவரிமுத்து

ஒன் செவண்டி எயிட் என்றான் அந்த பையன்

ஒரு லட்சத்து எழுபத்தியெட்டாயிரம் கொடுத்து ஒரு கேமிராவை விலைக்கு வாங்கியிருக்கிறான், ஒரு வருஷம் கண்டக்டர் உத்யோகம் செய்தால் கிடைக்க கூடிய வருமானமது,

என்ன வேலையிது, எதற்காக இந்த கண்டக்டர் உத்யோகத்தில் வந்து சேர்ந்தோம், எதற்காக திருமணம் செய்து பிள்ளைகளை பெற்றுக் கொண்டோம், ஏன் கைக்கு கிட்டாத விஷயங்களை மனது திரும்ப திரும்ப ஆசைப்பட வைத்துக் கொண்டிருக்கிறது என தன்மீதே ஆத்திரமாக வந்த்து

சமண மலைல மேற்கே ஒரு குகை இருக்குமே, அதுக்குள்ளே போனீங்களா, பேக் லைட்ல பாக்க ரொம்ப நல்லா இருக்கும், என ஆர்வத்துடன் சொன்னான் சவரிமுத்து

அந்த பையன் பதில் பேசவில்லை,  கேமிராவை நைசாக கையால் தொட்டு பார்க்கலாமா என ஆசையாக இருந்தது

பைபர் பாடியா என்று கேட்டான் சவரிமுத்து

அந்த பையன் கண்டு கொள்ளவேயில்லை, வேண்டுமென்றே தலையை திருப்பி சாலையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமியை வேடிக்கை பார்த்தபடியே வருவது சவரிமுத்துவுக்கு ஆத்திரமூட்டுவது,

படிக்கிறவயதில் ஆசைப்பட்டதை வாங்கமுடியாமல் போவதை கூட தாங்கிக் கொள்ள முடிகிறது, ஆனால் வேலைக்கு போன பிறகும் ஆசைப்பட்ட எதையும் வாங்க முடியவில்லை என்றால் என்ன வாழ்க்கையிது என்று எரிச்சலாக வந்த்து

பேருந்தின் வேகத்தில் அந்த பையன் கழுத்தில் இருந்த கேமிரா ஊசலாடி சவரிமுத்துவின் மேல்பட்டது, அந்த உரசலை அவர் ஆனந்தமாக அனுபவித்தார், எப்படியாவது ஒரு முறை அந்த கேமிராவை  கையில் வாங்கி பார்த்துவிட வேண்டும், முடிந்தால் ஒரு ஸ்நாப் அடித்துவிட வேண்டும் என உள்ளுற தோன்றிக் கொண்டேயிருந்தது

அந்த பையன் டீசர்ட்டினுள் காற்று புகுந்து சட்டையை படபடக்க செய்ய ஏகாந்தமாக  வந்து கொண்டிருந்தான்

என்ன இருந்தாலும் பிலிம்ல எடுக்குற மாதிரி கான்டிராஸ்ட் டிஜிட்டல்ல வராது, இப்போ கோடாக் பிலிம் கம்பெனியை நிறுத்திட்டாங்களாமே, என்றார் சவரிமுத்து

இதெல்லாம் எதற்காக என்னிடம் சொல்கிறாய் என்பது போல அந்த பையன் சவரிமுத்துவை முறைத்துப் பார்த்தான், பிறகு தானாக நமட்டு சிரிப்பு ஒன்றை சிரித்துக் கொண்டான்,

அந்த சிரிப்பு சவரிமுத்துவிற்கு ஆத்திரமூட்டியது , ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை,

இதுல மெமரி 64  ஜிபியா.  பாடி மட்டும் எவ்வளவு வெயிட் இருக்கும் என மறுபடியும் கேட்டார்,

பையன் கடந்து செல்லும் வேப்பமரங்களையே பார்த்தபடி வந்தான்,

தன்னோடு அந்த பையன் பேசவிரும்பவில்லை என்பது சவரிமுத்துவிற்கு நன்றாக புரிந்த்து, ஏன் பேசினால் என்ன குறைந்து போய்விடுவான், காக்கி சட்டை போட்டுக் கொண்டு கண்டக்டராக இருப்பவனுடன் கேமிரா பற்றி பேசுவது அவமானத்திற்கு உரிய ஒன்றா, இந்த காலத்து பையன்கள் பெற்றோர்களுடன் கூட முகம் கொடுத்து பேசுவதில்லை, பிறகு எப்படி வெளியாட்களுடன் பேசுவார்கள்,

அந்த பையனின் கவனத்தை எப்படி ஈர்ப்பது என்று சவரிமுத்துவிற்கு தெரியவில்லை, அடுத்தடுத்த நிறுத்தங்களில் பயணிகள் ஏறினார்கள், பேருந்தினுள் முண்டியத்து  டிக்கெட் கொடுத்துவிட்டு திரும்ப வருவதற்குள் அந்த பையன் முன்படிக்கட்டிற்கு மாறியிருந்தான், சவரிமுத்துவிற்கு ஆத்திரமாக வந்த்து,

தன்னை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவன் முன்படிக்கட்டிற்கு போயிருக்கிறான், அவனை அப்படியே விட்டுவிடக்கூடாது, பயணிகளை விலக்கி  தள்ளி  நகர்ந்து முன்படிக்கட்டிற்கு வந்த போது அந்த பையன் ஒற்றைக் கையில் தொங்கிக் கொண்டு வருவது தெரிந்தது.

சவரிமுத்து ஒங்கி விசில் அடித்தார், பேருந்து சடன் பிரேக் போட்டு நின்றது

புட்போர்ட்ல நிக்குறவங்க எல்லாம் மரியாதையா மேலே வாங்க, யாராவது கிழே விழுந்து செத்துகித்துப் போனா நான் போலீஸ் கேஸ்ல லோல்பட வேண்டியிருக்கும், யோவ் உன்னை தான்யா  சொல்றேன், மேலே வா, என கத்தினார்

புட் போர்டில் நின்றிருந்த இளைஞர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் கேலி செய்தபடியே சற்று உடலை வளைத்து உள்ளே வந்தார்கள்,

படியில் நின்றிருந்த நடுத்தரவயது ஆளின் சட்டையை  பிடித்து உள்ளே இழுத்து கத்தினார் சவரிமுத்து,

உனக்கெல்லாம் என்ன இளவட்டம்னு நினைப்பா, அவங்க தான் தண்ணி தெளிச்சிவிட்ட மாதிரி அலையுறாங்க, உனக்கு என்ன கேடு வந்துச்சி, உள்ளே வாய்யா

அந்த ஆள் வெளிறிப்போன முகத்துடன் உள்ளே காத்துவரலை, அதான் என்று சமாளித்தார்

காத்து வரல்லன்னா, டாப்புல ஏறி உட்காந்துக்கோ, ப்ரீயா காத்துவரும் என்றார் சவரிமுத்து,

அதைக்கேட்டு யாரோ சிரித்தார்கள், தனது வேடிக்கையை பேருந்தில் இருப்பவர்கள் ரசிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் நடுத்தரவயது ஆளை மேலும் கிண்டல் செய்த ஆரம்பித்தார் சவரிமுத்து, படியில் நின்றிருந்த கேமிராபையன் அந்த வேடிக்கைகளை ரசிக்கவில்லை என்பது அவனது முகபாவத்தில் தெரிந்தது,

புளியம்பட்டி ஸ்டாப்பை தாண்டியதும் பேருந்து பிரேக் அடித்து நிற்க துவங்கியது  சவரிமுத்து தலையை வெளியே எட்டிப்பார்த்தபோது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது, இந்த நேரத்திற்கு தூத்துக்குடி செல்லும் கூட்ஸ் ரயில் ஒன்று கடந்து போகும்,  கூட்ஸ் வருவதற்கு இன்னும் பத்து நிமிஷமிருக்கிறது,

கேமிரா வைத்திருந்த பையன் கிழே இறங்கி நின்றிருந்தான், கிழேயே அவனிடம் பேசி கேமிராவை வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையோடு சவரிமுத்து   இறங்கி நின்று கொண்டார்,

அந்த பையன் வேண்டுமென்றே அவரை விட்டு விலகி ரயில்வே கேட் அருகில் போய் ரயில் வருவதை போட்டோ எடுப்பதற்கு உரிய இட்ம் தேடுவது போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தான்

இந்த கல்லு மேல ஏறி நின்னு  ரயிலை போட்டோ எடுக்கலாம், நல்ல வியூ கிடைக்கும் என்றார் சவரிமுத்து

ரயிலை எல்லாம் போட்டோ எடுக்க பிடிக்காது என்றான் அந்த பையன்

அந்த குரலில் எரிச்சல் இருந்த்து போல தெரியவில்லை, நம்மோடு பேச ஆரம்பித்துவிட்டான், இனி அப்படியே பிடித்துக் கொள்ள வேண்டியது தான், என்று மனதிற்குள் சொல்லியபடியே, லோ ஆங்கிள்ல தண்டவாளத்தோட் கூட்ஸ் டிரைனை போட்டோ எடுத்தா சூப்பரா இருக்கும். என்று சொல்லி சிரித்தார் சவரிமுத்து

அந்த பையன் பதில் சொல்லாமல் ஒரு சூயிங்கத்தை வாயிலிட்டு மெல்ல ஆரம்பித்தான்

நானும் உன் வயதில் போட்டோ எடுத்திருக்கிறேன், அதில் ஒன்றுக்கு காஷ்மீரின் சுற்றுலா துறை விருது கூட கிடைத்திருக்கிறது என்பதை எப்படி சொல்வது என புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார் சவரிமுத்து,

கடந்த காலத்தை இந்த ஐந்து நிமிசத்திற்குள் சொல்லி புரிய வைப்பது எளிதானதில்லை,

கூட்ஸ் ரயில் வருவத்ற்குள்  கேமிராவை ஒரேயொரு முறை கையில் வாங்கி பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கிக் கொண்டிருந்த்து

எதற்குத் தயக்கம், வாய்விட்டு கேட்டுவிட வேண்டியது தான் என்பது போல அந்த பையனிடம் சிரித்த முகத்துடன் சொன்னார்

நானும் நல்லா போட்டோ எடுப்பேன்,

அந்த பையன் உதட்டை மடித்து அழுத்தியபடியே அப்படியா என்பது போல தலையாட்டினான், அந்த செய்கை சவரிமுத்துவை மேலும் ஆத்திரப்படுத்திய போதும் அதைக்காட்டிக் கொள்ளவில்லை, தொலைவில் இருந்து ரயில்வரும் ஹார்ன் ஒசை கேட்க ஆரம்பித்தது

உங்க கேமிராவை ஒரு நிமிஷம் பாக்கலாமா என்று கேட்டார் சவரிமுத்து,

அதை காதில் கேட்காதவனை போல நடித்த அந்த பையன் த்ரையில் கிடந்த ஒரு சிறிய கல்லை எடுத்து தண்டவாளத்தை நோக்கி வீசினான்

ஒருவேளை தான் கேட்டது அந்த பையனுக்கு நிஜமாகவே காதில் விழாமல் போயிருக்குமோ,இன்னொரு முறை எப்படிக் கேட்பது என்று கூச்சமாக இருந்தது,

அதற்காக கேட்காமல் விட்டுவிட்டால் இது போன்ற லேட்டஸ்ட் கேமிராவை கையால் தொட்டு பார்ப்பது இயலாமல் போய்விடுமே, சவரிமுத்து மீண்டும் முகத்தில் செயற்கையாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னார்

நல்ல சாப்ட் லைட்டிங் இருக்கு, பஸ் பக்கத்தில வந்து நில்லுங்க, நான் உங்களை ஒரு போட்டோ எடுத்து தர்றேன்

நோ, ஐ டோண்ட் வான்ட் என்றான் அந்த பையன்,

இப்போது எதற்காக ஆங்கிலத்தில் பேசினான், டிக்கெட் கேட்கும் போது ஒழுங்காக தமிழில் தானே பேசினான், பிறகு இப்போது என்ன கேடு,  அவன் வேண்டுமென்றே தன்னை எரிச்சல்படுத்துகிறான், போடா மசிரே என்று திட்டுவதற்கு பதிலாக நாகரீகமாகச் சொல்கிறான், ஆனாலும் ஆத்திரப்படக்கூடாது,  வயது பையன்கள் அப்படிதானிருப்பார்கள்,  அது அவர்களின் இயலபு, மறுபடியும் அவனோடு இயல்பாக பேச வேண்டும்,

கூட்ஸ் ரயில் வரத் துவங்கியது, நிறைய பெட்டிகள் கொண்ட கூட்ஸ் அது, தடக் தடக் என நீண்டு போய்க் கொண்டேயிருந்த்து, பேருந்தின் கசகசப்பில் பெருமூச்சிட்டுக் கொணடிருந்தவர்கள் கூட தங்களை மறந்து கூட்ஸ் ரயிலை வேடிக்கை பார்த்தபடியே இருந்தார்கள், வண்ணத்துபூச்சிகளின் கூட்டம் ஒன்று சாலையோரம் அடர்ந்திருந்த தும்பை செடிகளின் மீது பறந்து கொண்டிருந்தன,

பேருந்து  மறுபடியும் கிளம்பியது, அந்த பையன் இப்போது தனது கேமிராவையும் முதுகில் இருந்த பையையும் முன்சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் நீட்டி மடியில வைச்சிகிடுங்க, இறங்கும் போது வாங்கிகிடுறேன் என்றான், அந்த பெண் வாங்கிக் கொண்டாள்

சவரிமுத்துவால் அதை தாங்கிக்  கொள்ளவேயில்லை, இந்த மயிரான் வேண்டுமென்றே தன்னுடன் விளையாடிவிட்டான், அவனுக்கு தான் யார் என்பதை புரிய வைக்க வேண்டும் போலிருந்தது,

பேருந்து வள்ளிக்குளம் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது, ஒடிவந்து ஆட்கள் பேருந்தில் ஏற முண்டியத்தார்கள், துணிமூட்டையுடன் ஒரு ஆள் பேருந்தில் ஏறுவதற்கு முயன்று கொண்டிருந்தான், சவரிமுத்துவின் ஆத்திரம் அந்த துணிவியாபாரி மீது திரும்பியது

துணிமூட்டையை உள்ளே திணித்துக் கொண்டிருந்த ஆளின் சட்டையை பிடித்து கிழே இறக்க முயன்றார் சவரிமுத்து, அந்த ஆள் அதை கண்டுகொள்ளாமல் முண்டியத்து உள்ளே போய்க் கொண்டிருந்தான்

சவரிமுத்து ஆத்திரத்துடன் கத்தினார்

யோவ் அறிவு கெட்ட முண்டம், பஸ்ஸை விட்டு கையை எடுயா, இவ்வளவு பெரிய துணிமூட்டையை எல்லாம் பஸ்ல ஏத்த முடியாது, கிழே இறங்கு

டபிள் லக்கேஜ் வாங்கிக்கோங்க, எப்பவும் கொண்டு போறது தானே , இப்படி ஒரமா வச்சிருக்கிடுறேன், என்றான் துணிவியாபாரி

லக்கேஜ் எவ்வளவு போடணும்னு எனக்கே சொல்லி தர்றியா,  வண்டில ஏற்றமுடியாதுன்னா, முடியாது தான், துணிமூட்டையை ஏத்திகிட்டு போக இது என்ன கழுதையா, கையை எடுய்யா,

பேருந்தினுள் இருந்து  ஒருவர் குரல் கொடுத்தார்

கண்டக்டர், ஏன்யா வெட்டியா தகராறு பண்றே, பாசஞ்சர் லக்கேஜ் கொண்டுவரக்கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா, காக்கி சட்டையை போட்டுட்டா பஸ்ஸே இவங்க அப்பன் வீட்டு இதுனு நினைச்சிடுறாங்க

அதைக்கேட்ட சவரிமுத்துவுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது,

சட்டம் பேசுற அந்த முகரை யாரு, எங்கே காட்டு பாப்போம், யாருடா அது, என சப்தமிட்டார்

பேருந்தினுள் அப்படி பேசியது யார் என தெரியவில்லை, பேருந்து மெதுவாக புறப்பட்டது, சவரிமுத்து கோபம் தணியாமல் ஒங்கி விசில் அடித்தான்,

பேருந்து பிரேக் அடித்து நின்றது

துணிவியாபாரிக்கு ஏண்டுகிட்டு சப்தம் போட்ட முகரை யாருனு தெரியாம வண்டி கிளம்பாது, கண்டக்டர்ன்னா என்ன இளக்காரமாக போச்சா,  நானும் காலேஜ்ல படிச்சிருக்கன், எனக்கும் பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கு, காஷ்மீர்ல போயி வேலை பாத்தவன்டா நான்,  எகத்தாளம் பேசுன அந்த ஆள் யாருனு இப்ப தெரிஞ்சாகணும்

தாடி நரைத்துபோயிருந்த ஒருவர்  அமைதியான குரலில் சொன்னார்

கண்டக்டர், யாரோ தெரியாம பேசிட்டாங்க விடுங்க, நீங்க் தான் அனுசரிப் போகணும்

அப்படி விடப்போயி தான் தலைமேல ஏறுறாங்க, இன்னைக்கு நான் ரூல் படி தான் நடக்க போறேன், படிக்கட்டில நிக்குற எல்லா ஆட்கள் எல்லாம் கிழே இறங்கி அடுத்த பஸ்ல வாங்க, இல்லேன்னா பஸ் கிளம்பாது

படியில் நின்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள், டிரைவர் ஹார்ன் அடித்தபடியே நேரமாச்சி சவரியண்ணே என்று குரல் கொடுத்தார்

படியில நிக்குற ஆள் எல்லாம் தான  இறங்குறாங்க, இல்லே நான்  போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டியை விடச்சொல்லட்டும்மா என்றார்

சும்மா ஒண்ணும் நிக்கலை, டிக்கெட் எடுத்திருக்கோம் என்று யாரோ சொல்வது கேட்டது

அப்போ வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுவோம், புட்போட் டிராவலுக்கு 500  ரூவா பைன்னு சட்டம் இருக்கு, தாசண்ணே வண்டியை எடுங்க,

படிக்கட்டில் நின்றிருந்த ஏழெட்டு பேர் பேருந்தை விட்டு இறங்கிக் கொண்டார்கள், கேமிரா பையன் தனது பையை, கேமிராவை அந்தபெண்ணிடம் இருந்து வாங்கிக் கொண்டான், அவன் முகத்தில் கலக்கம் தெரிகிறதா என்று சவரிமுத்து பார்த்தார், சலனமேயில்லை, அவன் கேமிராவை  கழுத்தில் போட்டபடியே நடக்க துவங்கியிருப்பது தெரிந்தது

பேருந்து கிளம்பியது, வெளியே எட்டிப்பார்த்தார், அந்த பையன் தனது கேமிராவை திறந்து ஒடும் பஸ்ஸையும் அதிலிருந்து எட்டிப்பார்க்கும் சவரிமுத்துவையும் சேர்ந்து போட்டோ எடுப்பது தெரிந்தது

தனது முகம் அந்த போட்டோவில் நன்றாக வந்திருக்குமா, என்ன லென்ஸ் போட்டிருப்பான், அவன் நின்ற இடத்தில் இருந்து பேருந்து எவ்வளவு தூரத்தில் போய் கொண்டிருந்தது, போகஸ் சரியாக வந்திருக்குமா, என்று அடுத்தடுத்து ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின,

எதற்காக  தேவையில்லாமல் இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆழமான வருத்தமும் அவருக்குள் எழுந்து அடங்கியது,

அந்த பையனை அப்படி நடத்தியிருக்ககூடாது என்று நினைத்தபடியே பேருந்தின் விசில் அடித்து அடுத்த ஸ்டாப்பில் இருந்த கல்லூரி மாணவர்களை படியில் ஏற்றி கொண்டார்,

படியில ஆள் ஏத்தக்கூடானு இப்போ தான் சண்டைபோட்டு கத்துனான் அதுக்குள்ளே என்ன ஆச்சி  என டிரைவர் திட்டுவது காதில் கேட்டது,

விடுங்கண்ணே, நாம தான் அனுசரிப்போகணும் என்றபடியே டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தான் சவரிமுத்து

•••


உயிர்மை இதழில் வெளியான சிறுகதை.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #2 on: May 31, 2013, 02:31:06 PM »
ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை

2007ல் வெளியான சிறுகதை


ஜி.சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்து போய்விட மாட்டோமா என்று அவள் பலமுறை முயன்றிருக்கிறாள். ஆனால், தண்ணீருக்குள் வீசிய ரப்பர்பந்து தானே மேலே வந்துவிடுவது போல, அவள் எவ்வளவு முயன்றாலும் பிறந்த நாள் தானே நினைவுக்கு வந்துவிடுகிறது.

ஜி.சிந்தாமணி ராயப்பேட்டையில் வசிக்கிறாள். 40 வயதை நெருங்குவதற்குள் நரையேறி, பருத்த சரீரம் கொண்டவளாகிவிட்டாள். அவளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதற்குக்கூட இப்போதெல்லாம் மறந்து போய் விடுகிறது.

அதை யார் கவனிக்கப் போகிறார்கள்! இப்போது அவள் முகத்தை கூர்ந்து நோக்குகிறவர்கள் யார் இருக்கிறார்கள். அவளாகவே தன்னைப் பார்த்துக்கொள்வதைத் தவிர மற்றவர்களுக்கு அவளிடம் ஈர்ப்பில்லை.

அவள் கடந்த சில வருடங்களாகவே எப்போதும் ஒரு வட்டக்கண்ணாடியை தனது ஹேண்ட்பேகில் வைத்திருக்கிறாள். அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கும்போதோ, சாப்பிட்டு முடித்த பிறகோ அந்தக் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக்கொள்வாள். அப்போதெல்லாம் அவளுக்குத் தன் மீதே தாங்க முடியாத வேதனை கவிழத்தொடங்கிவிடும். கண்ணுக்குத் தெரியாமல் உப்பு தண்ணீரில் கரைந்துவிடுவதைப் போல அவளிடமிருந்த அழகு யாவும் கரைந்து போய்விட்டது அவளை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவளுக்குத் தனது பிறந்தநாள் வரப்போவது நினைவுக்கு வந்தது. அதை அலுவலகத்தில் உள்ள யாரிடமாவது சொல்லலாமா என்று யோசித்தாள். கேலி செய்வதைத் தவிர அவர்களால் தனது பிறந்தநாளைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று தோன்றியது.

இந்த முறை எப்படியாவது அந்த நாளை மறந்துவிடவேண்டும் என்று மனதுக்குள்ளாக முடிவு செய்துகொண்டாள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவளுக்கு இரண்டு நாட்களாகவே பார்க்கும் ஒவ்வொருவரும் என்ன வயதில் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும் போலிருந்தது.தன்னை அறியாமல் ஒவ்வொருவரையாகக் கூர்ந்து பார்க்கத் துவங்கினாள். உலகில் 40 வயதைக் கடந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது ஆறுதல் தருவதாக இருந்தது. அதோடு, எவரும் தங்கள் வயதை நேரடியாக வெளிக்காட்டிக்கொள்வது இல்லை என்பது அவளுக்கு மகிழ்வைத் தந்தது.

இன்றைக்கும் அவள் விழிப்பதற்கு முன்பாகவே மனதுக்குள் ஒரு குரல் ‘இன்றைக்கு உனது பிறந்தநாள்’ என்று கூவியது. அதற்குச் செவிசாய்க் காதவளைப் போல கொஞ்ச நேரம் வேண்டுமென்றே படுக்கையில் கிடந்தாள். கல்லூரிக்குச் செல்லும் மகள் குளித்துவிட்டு ஈரத்தலையோடு அறைக்குள் வந்து தனது உடையை தேடிக்கொண்டு இருப்பது தெரிந்தது. மணி ஆறரையைத் தாண்டி யிருக்கவேண்டும்.

சிந்தாமணி எழுந்து எப்போதும் போல அவசர அவசரமாகச் சமையல் செய்யத் துவங்கினாள். இருப்பதிலேயே அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்காத அரக்கு நிற பூ போட்ட சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டாள். சாப்பிடவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. வீட்டில் அவளது கணவன் டி.வி. பார்த்தபடியே சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். சின்னவள் பள்ளிக் கூடம் கிளம்புவதற்காகபுத்த கங்களை எடுத்துத்திணித்துக் கொண்டிருந்தாள்.

யாராவது தனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பார்களோ என்று ஒரு நிமிஷம் தோன்றியது.அவர வருக்கு அவரவர் அவசரம். இதில் தானே சொல்லாமல் எப்படித் தன் பிறந்தநாளை நினைவு வைத்திருப்பார்கள் என்று நினைத்தபடியே, தன் டிபன்பாக்ஸில் சாப் பாட்டை அடைத்துக்கொண்டாள். மணி எட்டு இருபதை நெருங்கும்போது அவள் மணிக்கூண்டு பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கியிருப்பாள். இன்று ஐந்து நிமிஷம் லேட்!

பேருந்து நிலையத்தில் பூ விற்பவள் முன்பாக சிவப்பு, மஞ்சள் ரோஜாக்கள்குவிந்து கிடந்தன. கூவிக்கூவி விற்றுக்கொண்டு இருந்தவள் சிந்தாமணியைக் கண்டதும் மௌனமாகிவிட்டாள். தான் மஞ்சள் ரோஜாவை வாங்கமாட்டோம் என்று எப்படி இந்தப் பூக்காரி முடிவு செய்தாள் என்று அவள் மீது ஆத்திரமாக வந்தது. அவளிடம் இனிஒரு போதும் பூ வாங்கக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாள்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பள்ளி மாணவிகள் எதற்கோ சத்தமாகச் சிரிப்பதும் ஒருவரையருவர் வேடிக்கையாக அடித்துக்கொள்வதுமாக இருந்தார்கள். ‘40 வயதைத் தொடும்போது உங்களிடமிருந்து சிரிப்பு யாவும் வடிந்து போய்விடும். அதற்குள் சிரிக்கிற மட்டும் சிரித்துக் கொள்ளுங்கள்’ என்று தனக்குள்ளாக சொல்லிக்கொண்டாள்.

ஜி.சிந்தாமணியின் அலுவலகம் சானிடோரியத்தை ஒட்டியிருந்தது. இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். அன்றைக்கு பேருந்துகளில் கூட்டம் ததும்பிக்கொண்டு வந்தது. அதோடு பேருந்து நிறுத்தத்தை விட்டுத் தள்ளி நிறுத்தினார்கள். அவள் ஓடிப்போய் ஏறுவதற்குள் பேருந்து கிளம்பிவிட்டது. பெருமூச்சு வாங்க அவள் நின்றபோது, பிறந்த நாளும் அதுவுமாக ஏன்தான் இப்படி உயிரைக் கொடுத்து ஓடுகிறோமோ என்று வருத்தம் கொப்பளித்தது.

பிரமாண்டமாக சிதறிக்கிடக்கும் இந்த நகரம், அதன் லட்சக்கணக்கான மக்கள், இரக்கமில்லாத சூரியன், நெருக் கடியான சாலைகள், எவரையும் அர வணைத்துக்கொள்ளாத கடல், புகையும் தூசியும் படிந்துபோய் காற்றில்லாமல் நிற்கும் மரங்கள் என எல்லாவற்றின் மீதும் கோபம் பொங் கியது. தனக்குத்தானே அவள் எதையோ பேசிக்கொண்டு இருப்பதை அருகில் இருந்த பெண்கள் முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

வெயில் அவள் முகத்தில் ஊர்ந்து கொண்டு இருந்தது. முன்பாவது அவள் குடை வைத்திருந்தாள். அதை கல்லூரிக்கு செல்லும் மகள் கொண்டு போக துவங்கியபிறகு புதிதாக குடை கூட வாங்கத் தோன்றவில்லை.

ஒவ்வொரு பேருந்தாகக் கடந்து சென்றபடியே இருந்தது. மணி 9:20&ஐ தாண்டியது. அலுவலகம் போய்ச் சேர் வதற்குள் மணி பத்தரை ஆகிவிடும் போலிருந்தது. இன்றைக்கு ஏலச்சீட்டு விடும் நாள் வேறு. அவள் சீட்டு பிடிக்கிறவள் என்பதால், அதை முடித்துக்கொண்டு வீடு திரும்ப இரவு ஒன்பது ஆகிவிடும்.

சாலையோரம் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை ஒரு பசு தின்றுகொண்டு இருந்தது. போஸ்டர் தின்னும் பசுவின் பாலைத்தான் நாம் குடித்துக் கொண்டு இருக்கிறோம் என்று சிறு ஆத்திரம் முளைவிட்டு எழுந்து, மறுநிமிஷமே அடங்கியது.

ஷேர் ஆட்டோ வந்து நின்றது. ஜி.சிந்தாமணி அதற்குள் தன்னைத் திணித்துக்கொண்டபோது மூச்சு முட்டியது. ஆட்டோவினுள் ஆண் பெண் பேதமில்லாமல் ஒருவரோடு ஒருவர் நெருங்கி, அடைந்து கிடந் தார்கள். அந்த முகங்களில் நிம்மதி இல்லை.

ஆட்டோ சம்ஸ்கிருத கல்லூரியைக் கடந்தபோது, ‘எதற்காக நான் அலுவலகம் போகவேண்டும்? ஏன் இப்படிப் பறந்து பறந்து வேலை செய்யவேண்டும்? யாருக்குப் பயந்து இப்படி அல்லாடவேண்டும்?’ என்று தோன்றியது. அந்தக் கேள்விகள் அவளுக்குள் நீருற்று போல வேகத் தோடு பொங்கி வழியத்தொடங்கின.ஏதோ முடிவு செய்தவளைப் போல, லஸ் கார்னரில் ஆட்டோ நின்றபோது இறங்கிக்கொண்டாள்.

சாலையைக் கடந்து எதிர் திசைக்கு வந்தபோது, மனது சிக்கலில் இருந்து விடுபட்டது போன்ற நிம்மதி அடைய துவங்கியது. என்ன செய்வது என்று யோசித்தாள். முதலில் ஒரு பூக்காரி யிடம் மஞ்சள் ரோஜாவாகப் பார்த்து வாங்கவேண்டும் என்று தோன்றியது.அவள் தன் ஹேண்ட் பேகை திறந்து பார்த்தாள். சீட்டுப் பணம் ரூ.2000 இருந்தது. ஒன்று போல உள்ள இரண்டு மஞ்சள் ரோஜாக்களை வாங்கிக் கூந்தலில் சொருகிக்கொண் டாள். பிறகு, தன் வட்டக்கண்ணா டியை எடுத்து முகம் பார்த்துக்கொண் டாள். அந்த ரோஜா அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மெல்லிய வெட்கம் அவள் முகத்தில் தோன்றி மறைந்தது.

ஏதாவது ஓட்டலில் போய் இனிப்பு சாப்பிடவேண்டும் போல் இருந்தது. ஆட்டோவில் ஏறிக் கொண்டு, பெங்கால் ஸ்வீட்ஸ் விற்கும் கடைக்குப் போகச் சொன்னாள். கடை முழுவதும் குளிர்சாதனம் செய்யப் பட்டிருந்தது. காலை வேளை என்ப தால் ஆட்கள் அதிகம் இல்லை. அவள் ரசகுல்லா, குலோப் ஜாமூன் என நான்கு விதமான இனிப்பு சாப் பிட்டாள். பில் கொடுக்கும்போது, கடையில் இருந்த வயதானவங்காளியிடம் தனக்கு இன்று பிறந்தநாள் என்று சொன்னாள். அவர் மௌனமாகத் தலையாட்டியபடியே மீதிச் சில்லறையைக் கொடுத்தார்.

வெளியே வந்தபோது, சாலையில் வெயில் ஒரு சினைப்பாம்பு போலத் திணறியபடியே ஊர்ந்துகொண்டு இருந்தது. அவள் ஒரு கூலிங்கிளாஸ் வாங்கிப் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தாள். கடைக்குச் சென்று, பெரிய ஃப்ரேம் வைத்த கறுப்புக் கண்ணாடி ஒன்றை 200 ரூபாய் கொடுத்து வாங்கிப் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க அவளுக்கு வேடிக் கையாக இருந்தது.

திடீரென உலகம் தன் நிறத்தை மாற்றிக்கொண்டு சாந்தம்கொண்டது போலிருந்தது. ஸ்பென்சருக்குப் போகலாம் என்று முடிவு செய்தாள். அவள் தன் மகளோடு ஸ்பென்சருக்கு சென்றிருக்கி றாள். ஆனால், தனியே இது போன்ற இடங்களுக்குப் போனதில்லை.

ஸ்பென்சரில் போய் இறங்கியபோது, உள்ளே இருபது வயதைத் தொட்டும் தொடாமலும் உள்ள இளைஞர்கள் ஆண் பெண் பேதமின்றி ஆங்காங்கே நிரம்பியிருந்தார்கள். இவ்வளவு பேர் இங்கே என்ன வாங்குவார்கள் என்று யோசனையாக இருந்தது.

நீலநிற ஜீன்ஸ் அணிந்த பெண் ஒரு இளைஞனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு, மறுகையால் அவன் முகத்தைத் தடவியபடி நடந்துபோய்க்கொண்டு இருந்தாள். ஆங்காங்கே இளவயதுப் பெண்களும் ஆண்களும் மிக நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டும், ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தார்கள்.

தான் வாழ்வில் ஒரு முறைகூட இதுபோலப் பொதுஇடங்களில் கணவனோடு கை கோத்து வந்ததில்லை; ஐஸ்க்ரீம் சாப்பிட்டதில்லை. வாழ்க்கை ஏன் இப்படி அர்த்தமற்றுக் கடந்து போய்விட்டது! 17வய தில் கல்யாணம் நடந்தது.அப்போதும் சிந்தாமணி வேலைக்குப் போய்க்கொண்டு தான் இருந்தாள். திருமணத் துக்காக ஐந்து நாள் லீவு கொடுத் தார்கள். அந்த ஐந்து நாட் களும் அவள் உறவினர்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போனதும், ஒரேயரு சினிமா வுக்குப் போனதும் மட்டுமே நடந்தது.

திருமணமான மூன்றாம் மாதமே அவள் சூல்கொண்டு விட்டாள். அதன் பிறகு எங்கேயும் போகவே முடிந்ததில்லை. அடுத்த வருஷம் ஒரு பையன், அதன் இரண்டு வருஷம் தள்ளி ஒரு பெண் என்று மாறி மாறி குழந்தைப் பேறு. வைத்தியம், வீடு, வேலை தவிர, அவள் இந்த யுவதிகள் போல ஐஸ்க்ரீமை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துச் சாப்பிடுவதை அறிந்ததே கிடையாது.

சிந்தாமணி மிகப்பெரிய ஐஸ்க்ரீம் ஒன்றை வாங்கிக்கொண்டு, தனியே கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். ஐஸ்க்ரீமை உதட்டின் நுனியில் வைத்து சுவைத்துச் சாப்பிடத் தொடங் கினாள். இந்த ஐஸ்க்ரீம் கரைந்துபோவது போல தன் வயதும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய்விடக்கூடாதா என்று தோன்றியது.

15 வயதில் அவளைப் பார்த் தவர்கள், அவள் நடிகை தேவிகாவைப் போலவே இருப்பதாகச் சொல்வார்கள். இப்போது ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளுக்கு தேவிகா வின் நினைவு வந்தது. ‘நீலவானம்’ படத்தில் தேவிகா இப்படியரு கறுப்புக் கண்ணாடி அணிந்து, ஓலைத் தொப்பியும் அணிந்திருப்பாள். அவள் சிரிப்பது தன்னைப் போலத்தான் இருக்கிறது. அதை யார் ஒப்புக்கொள்ளாவிட் டாலும் கவலை இல்லை என்று தோன்றியது. தனது ஹேண்ட் பேகில் இருந்த வட்டக் கண்ணாடியை எடுத்து தன் முகத்தைப் பார்த்துக்கொண் டாள். முகத்தின் ஊடாக எங்கோ தேவிகாவின் சாயல் ஒளிந்துகொண்டிருப்பது போலி ருந்தது.

தான் இப்படிக் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்போல் இருந்தது. அதோடு, எதற்காகவோ தான் சத்தமாகச் சிரிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. இது போன்ற வணிகவளாகங்களில் எங்கு பார்த்தாலும் சிரிப்பு சிந்திக்கிடக்கின்றது. ஆனாலும், தன் வயதுடைய பெண்களில் எவரும் சிரிக்கிறார்களா என்று ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டாள். அவள் மேஜையைச் சுத்தம் செய்ய வந்த பையனிடம் இன்று தனக்குப் பிறந்தநாள் என்று சொன் னாள். அவன் அதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.

எழுந்து லிப்டில் ஏறி, மூன்றாவது தளத்துக்குச் சென்றாள். விரல் நகங்களுக்கு பூசும் மினுமினுப்பாக பச்சையும் ஜிகினாவும் கலந்த நெயில்பாலீஷ் ஒன்றை வாங்கி பூசிக் கொண்டாள். பினாயில் வாசம் வீசும் பாத்ரூமின் மிகப் பெரிய கண்ணாடி முன் நின்றபடியே தன்னைத்தானே பார்த்துச் சிரித்துக்கொண்டாள்.

வயது அன்று ஒரு நாள் மட்டும் அவளிடமிருந்து பின்திரும்பிப் போய்க்கொண்டு இருந்தது போலிருந்தது. அவள் சிரிப்பை அடக்கமுடியாமல் கர்சீப்பால் வாயைப் பொத்தியபடி வெளியே வந்தாள். தனது டிபன்பாக்ஸில் இருந்த சாப்பாட்டை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டு காலி டிபன்பாக்ஸை பையில் போட்டுக்கொண்டாள். நாள் முழுவதும் அப்படியே சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

திடீரென இந்த நகரம் அவளுக்கு மிகப் புதிதாக தெரிந்தது. தான் இதுவரை பார்த்திராத கட்டடங் களும் கார்களும் மனிதர்களும் நிரம்பியதைப் போல் இருந்தது. கால் டாக்ஸியிலும் ஆட்டோவிலு மாக அவள் சுற்றி அலைந்தபடியே இருந்தாள். தனக்கு இந்த நகரில் வீடில்லை. குடும்பமில்லை. தெரிந்த மனிதர்கள்கூட யாருமில்லை. தான் தனியாள், தன் பெயர் தேவிகா என்று சொல்லிக்கொண் டாள். அன்றைய பகல் முழுவதும் திரையரங்கம், உணவகம், ஜவுளிக் கடைகள் என்று அலைந்து திரிந் தாள்.

மாலையில் அவள் கடற்கரையைக் கடந்தபோது, ஆயிரமாயிரம் கால்கள் தழுவிச் சென்றபோதும் கடல் தனிமையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாள். அலுவலகம் முடிந்து ஆட்கள் வீடு திரும்பும் நேரத்தில், அன்றைய நாள் முடிந்து கொண்டு இருப்பது அவளுக்குள் புகையைப் போல ஒரு மெல்லிய வேதனையை வளர்க்கத் துவங்கியது. இன்றைக்கு ஏல நாள்; தன்னை எதிர்பார்த்துக்கொண்டு ஆட்கள் காத்திருப்பார்கள் என்று தோன்றியது. மறுநிமிஷமே அது தனக்கில்லை; ஜி.சிந்தாமணிக்கு! தான் தேவிகா என்று அவளாகவே சொல்லிச் சிரித்துக்கொண்டாள்.

இரவில் ஒளிரும் விளம்பரப் பலகைகளைப் பார்த்தபடியே நகரின் வீதிகளில் நடந்துகொண்டிருந்தாள். இரானி டீக்கடையில் அமர்ந்து சமோசாவும் டீயும் குடித்தாள். புதிதாக ஒரு செருப்பு வாங்கிக் கொண்டாள். யோசிக்கும்போது, அவளுக்கு தன்னிடம் ஆசைகள்கூட அதிகம் இல்லை என்று தோன்றியது.

சாலையைக் கடந்தபோது காய்கறிக் காரன் ஒருவன் அப்போதுதான் பறித்து வந்தது போன்ற கேரட்டுகளை குவித்துப் போட்டு விற்றுக்கொண்டு இருந்தான். கொஞ்சம் வாங்கிக்கொண்டு போகலாமா என்று நினைத்தாள். திருமணமான இந்த 22 வருஷத்தில் எவ்வளவு காய்கறிகள் வாங்கிவிட்டோம்! இனியும் எதற்காக வாங்கவேண்டும் என்று எரிச்சலாக வந்தது. ஒரேயரு கேரட்டை மட்டும் காசு கொடுத்து வாங்கிக் கடித்துத் தின்றபடியே, சாலையைக் கடந்து நடக்கத் தொடங்கினாள்.

சாலையோரம் ஒரு ஆள் ரப்பர் பந்துகள், பிளாஸ்டிக் பொம்மைகள் போன்ற விளையாட்டுப் பொருட்களை விற்றுக்கொண்டு இருந்தான். அவன் முன்னால் நாலைந்து பேர் தரையில் கொட்டிக்கிடந்த பொருட்களில் தேடி ஏதோ வாங்கிக்கொண்டு இருந்தார்கள். சிந்தாமணி குனிந்து தானும் ஒரு தண்ணீர்த் துப்பாக்கி வாங்கிக் கொண்டாள். அதில் எப்படி தண்ணீர் ஊற்றுவது என்று கேட்டதும், பொம்மை வியாபாரி தன்னிடமிருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த கலங்கிய தண்ணீரை அதில் ஊற்றி அடித்துக் காட்டினான். அவள் அதைக் கையில் வாங்கி சாலையை நோக்கித் துப்பாக்கி விசையை அமுக்கினாள். தண்ணீர் சாலையில் நெளிந்து போனது அவளுக்குச் சிரிப்பாக வந்தது.

மணிக்கூண்டை நெருங்கும் போது, மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. பேருந்து நிலையத் தில் யாருமே இல்லை. ஒரேயரு பிச்சைக்காரன் மட்டும் தனியே ஏதோ கிழிந்த துணியைத் தைத்துக்கொண்டு இருந்தான். அவள் தன் வீட்டை நோக்கி நடந்து வர துவங்கியபோது நடை வேகம் கொள்ளத் துவங்கியது. எங்கிருந்தோ மறைந்திருந்து வயது தன்மீது தாவி ஏறிக் கொண்டது போலிருந்தது. அவள் தன்னிடமிருந்த கறுப்புக் கண்ணாடி மற்றும் நெயில் பாலீஷை என்ன செய்வது என்று தெரியாமல், இருட்டில் தூக்கி எறிந்தாள். அவள் வீடு இருந்த சந்தில் தெருவிளக்கு விட்டுவிட்டு எரிந்துகொண்டு இருந்தது.

தன்னிடமிருந்த தண்ணீர்த் துப்பாக்கியை தனது நெற்றியில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினாள். தண்ணீர் பீய்ச்சிக்கொண்டு அவள் முகத்தில் வழிந்தது. ஒரு நிமிஷம் தன்னை மறந்து நின்றபடியே அழத் தொடங்கினாள். அன்றைக்குத் தனது பிறந்த நாள் என்பதை நினைத்து, கேவிக் கேவி அழுதாள். பிறகு, ஆத்திரத்தோடு அந்தத் துப்பாக்கியை குப்பைத் தொட்டியை நோக்கி வீசினாள்.

கடகடவென வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வீடு பூட்டிக்கிடந்தது. உள்ளே தொலைகாட்சி ஓடும் சத்தம் கேட்டது. காலிங்பெல்லை அமுக்கும்போது, ஒரு முறை அவளை அறியாமல் தேவிகா வின் நினைவு வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு தான் ஜி.சிந்தாமணி என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

கதவு திறந்து, வீடு எந்த மாற்றமும் இல்லாமல் அவளை உள்வாங்கிக் கொண்டது.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #3 on: May 31, 2013, 02:39:09 PM »
தூய வெளிச்சம்

சிறுகதை

கோச்சடை சாலையில் நின்றபடியே வீடு இடிக்கபடுகின்றதை பார்த்துக் கொண்டிருந்தான், இடிபட மறுத்த உறுதியான சுவர்களை டங்டங் என கடப்பாரைகள் ஒங்கியோங்கி குத்தி உடைத்துக் கொண்டிருந்த ஒசை அவனை என்னவோ செய்தது, பழமையான அந்த வீடு  அவன் ஏறிக் குதித்து திருடிய வீடுகளில் ஒன்று,

இரண்டுநாட்களாகவே அந்த வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள், பல்பொருள் அங்காடி ஒன்று வரப்போவதாக சொல்லிக் கொண்டார்கள்,  அந்த வீடு சைகோன் குமாரசாமி பிள்ளையுடையது, கப்பல் ஏறி போய் வணிகம் செய்து பிழைத்த குடும்பமது, எண்பது வருஷத்திற்கும் மேலாக மூன்று தலைமுறையினர் வாழ்ந்தவீடு கண்முன்னே இடிபட்டுக் கொண்டிருந்தது,

அந்த வீட்டை பத்து வருஷமாக கோர்ட் கேஸ் ஒன்றின் காரணமாக மூடிப்போட்டிருந்தார்கள், இப்போது சென்னையில் உள்ள குமாரசாமி மகன் பக்கம் கேஸ் ஜெயித்துவிட்டதாகவும் அவன் உடனே கைமாற்றி விற்றுவிட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்

வீட்டிற்குள் போய் பார்க்கலாமா என்ற யோசனையுடன் கோச்சடை சாலையிலே நின்று கொண்டிருந்தான், அந்த வீட்டிற்குள் அவன் ஒரேயொரு முறை இரவில் திருடுவதற்காக போயிருக்கிறான், வீட்டிற்குள் அவன் வந்து போனது வீட்டுஆட்கள் எவருக்கும் தெரியாது, திருடியதை கூட யாரும் கண்டுபிடிக்கவேயில்லை, ஆனால் கோச்சடைக்கு நன்றாக நினைவிருந்தது

அன்று மழை நாள், அந்த வீட்டிற்குள் நீலநிற விடிவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது, அந்த வெளிச்சத்தில் சுவரில் இருந்த புகைப்படங்கள்,  காலண்டர் மற்றும் மரமேஜை யாவும் விசித்திரமாக தெரிந்தது, ஹாலில் பெரிய ஊஞ்சல் போட்டிருந்தார்கள், அந்த ஊஞ்சலை தாண்டியதும்  சாப்பிடும் மேஜை கிடந்தது, சாப்பிடும் நாற்காலியில் அழுக்கு துணியொன்று தொங்கிக் கொண்டிருந்த்து, கழுவப்படாத குழந்தைக்கான ரப்பர் பாட்டில், திறந்து கிடக்கும் பால்பவுடர் டின்,  காபி டம்ளர்கள், பாதி சாப்பிட்டு மிச்சம் வைத்த பருப்புசாதமுள்ள கிண்ணம் யாவும் தென்பட்டன, வெளியே கம்பீரமாக தெரியும் வீடு உள்ளே அலங்கோலமாக கவனிப்பாரற்று கிடந்தது

மழையின் காரணமாக எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டிருந்த காரணத்தால் வீடு வெம்மையாக இருந்தது, மயக்கமூட்டிய அந்த வெளிச்சமும் வெளியே கொட்டிய மழையும், ஒத்தடம் கொடுப்பது போன்ற வெம்மையும் அவன் நினைவில் அப்படியே இருந்தன

இடிபடும் வீட்டிலிருந்து ஒரு ஆள் வெளியே வந்து ஒரு பழைய காலண்டர் ஒன்றினை வீசி எறிந்தான், சரஸ்வதி படம் போட்ட காலண்டர்,  கோச்சடை குனிந்து அதை எடுத்துப்பார்த்தான், காலண்டரில் யாரோ ஒரு பெண் பால் கணக்கு எழுதி வைத்திருந்தாள், வீடு ஒங்கிஒங்கி இடிபட உதிரும் கற்களுடன் பலத்த  புழுதி கிளம்பியது, ஒரு கல்தெறித்து சாலை வரை வந்து விழுந்தது, காலம் எவ்வளவோ வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது,

அவன் சிறுவனாக இருந்த காலத்தில் சென்டரல் தியேட்டருக்கு போகின்ற வழியில் குமாரசாமியின் வீடு மட்டுமே இருந்தது, வீட்டின் முகப்பில் இரண்டு பக்கமும் இரண்டு யானைகள் துதிக்கையை வளைத்து நிற்பது போன்ற ஆர்ச் அமைக்கபட்டிருக்கும், அதன் ஆர்ச்சின் மீது விளக்கு ஒன்றைப் பொருந்தியிருந்தார்கள், அதன் தூய வெளிச்சம் தெருவிளக்கு போல இரவெல்லாம் ஒளிர்ந்து கொண்டிருக்கும்,

குறிப்பாக இரவு செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு திரும்புகின்றவர்கள் அந்த வெளிச்சத்தை அதிகம் அனுபவித்திருக்கிறார்கள், பள்ளிவயதில் கோச்சடையே பலநாட்கள் அந்த வெளிச்சத்தில் பாதுகாப்பாக தெருவை கடந்து போயிருக்கிறான், வெளிச்சம் ஒரு துணை, ஆள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஆறுதல் என்று தோன்றும், ஆனால் களவிற்குப் போன பிறகு வெளிச்சம் பிடிக்காமல் போய்விட்டது,  கண்கள் இருட்டிற்கு பழகிப்போய்விட்டன

இளைஞனாக இருந்த போது குமாரசாமி வீட்டினை கடந்து போகையில் ஒவ்வொரு முறையும் இப்படி அழகாக வீடு கட்டி குடியிருக்க எத்தனை பேருக்கு அதிர்ஷடமிருக்கிறது என்று நினைத்துக் கொள்வான், சில சமயம் அந்த வீட்டின் பின்பக்கச்சுவர் அருகே ஒட்டி நின்று கொண்டு வீட்டின் உள்ளிருந்து ரிக்கார்ட் பிளேயரில் ஒலிக்கும் கனவு கண்ட காதல் கதையாகி போச்சே பாடலை கேட்டிருக்கிறான், அந்தப் பாடலை அவனுக்கு பிடிக்கும், அவன் யாரையும் காதலித்து கிடையாது, ஆனாலும் சோகத்தில் பாடுகின்ற பாடல்களை கேட்கின்ற நேரத்தில் அது மனதில் வலியை உண்டாக்கிவிடுகிறது

யார் அந்த பாடலை இப்படி அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கோச்சடைக்கு தெரியாது, அந்த வீட்டுப் பெண்களை வெளியே காண்பது அபூர்வம், எப்போதாவது குமாரசாமியின் மனைவி கெடிலாக் காரில் கோயிலுக்கு போய்வருவதை பார்த்திருக்கிறான், அந்த கார்  அழகானது, சென்ட்ரல் தியேட்டரை கடந்து போகையில் டிக்கெட் எடுக்க நிற்கின்ற பலரும் அந்த காரை திரும்பி பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

ஒரு முறை குமாரசாமியின் வீட்டிற்கு ஜெமினி கணேசனும் சாவித்திரியும் விருந்தினர்களாக வந்திருந்தார்கள் என்று அவர்களை பார்ப்பதற்காக ஊரே கூடியிருந்தது, வீட்டின் மாடியில் நின்றபடியே ஜெமினியும் சாவித்திரியும் கை அசைத்ததை கோச்சடையின் மனைவி மீனா சிறுமியாக பார்த்திருக்கிறாள்,

ஜெமினியும் சாவித்திரியும் அந்த வீட்டில் எந்த அறையில் உறங்கியிருப்பார்கள், எந்த தட்டில் சாப்பிட்டு இருப்பார்கள், எந்த டம்ளரில் பால் குடித்திருப்பார்கள், அதை எல்லாம் ஒரு முறை தொட்டுபார்க்க வேண்டும் போலிருக்கும்,

கோச்சடை சிலசமயம் பின்னிரவில் சைக்கிளில் வரும்போது அந்த வீட்டின் முன்பு வேண்டுமென்றே சைக்கிளை நிறுத்தி ஏறிட்டு பார்ப்பான், யானை படுத்திருப்பது போல பிரம்மாண்டமாக தோன்றும், அதன் கழுத்துமணி போல அந்த குண்டுபல்ப்பின் வெளிச்சம் ஒளிர்ந்து கொண்டிருக்கும், அந்த காட்சி இன்றும் அவன் மனதில் அப்படியே உறைந்து போயிருந்தது

இன்று அந்த வீட்டினை ஒரு நாளைக்குள் பாதிக்கும் மேலாக உடைத்து போட்டுவிட்டார்கள், வீட்டை கட்டுவதற்கு தான் மாசக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது, இடிப்பதற்கு அதிக நாட்களாவதில்லை, மனிதர்களின் அழுகையும் சிரிப்பும் வலியும் கவலையும் அறிந்த வீடு மரம் முறிந்து கிடப்பது போல மௌனமாக இடிந்து கிடந்தது

குமாரசாமி பிள்ளையின் வீட்டிற்கு கோச்சடை திருடச் சென்ற போது அவன் மனைவி மீனா மூன்றாவது பிள்ளை உண்டாகி கர்ப்பிணியாக இருந்தாள், ரத்தசோகை கண்டிருக்கிறது அவளை பொது மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரம் பெட்டில் வைத்திருந்தார்கள், அவளுக்காக பழங்களும், சத்து டானிக்குகளும் வாங்க வேண்டும் என்று நினைத்து தான் கோச்சடை களவிற்கு கிளம்பியிருந்தான்

திருடுவதற்காக இல்லாவிட்டாலும் அந்த வீட்டின் உட்புறங்களை பார்க்க வேண்டும், ஜெமினி படுத்த தலையணையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்பதற்காகவாவது அந்த வீட்டிற்குள் ஏறிக்குதிக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் இருந்தது. இப்படியான சில கிறுக்குதனங்களில் அவன் விரும்பியே ஈடுபடுவான்,

முன்பு ஒரு முறை தம்பானூர் முதலாளி வீட்டிலிருந்த  கறுப்பு நிற குதிரை ஒன்றினை பார்ப்பதற்காக பதினாறு அடி உயர இரும்பு கேட்டை தாண்டி குதித்திருக்கிறான்,  கறுப்பு நிற அரபுக்குதிரையை பார்ப்பது அபூர்வம், தம்பானூர் முதலாளி மைசூர் ராஜாவிடமிருந்து அந்த  கறுப்பு குதிரையை வாங்கி ஆசையாக வளர்த்துக் கொண்டிருந்தார், அக்குதிரையை பார்க்கும் போதெல்லாம் ஒருமுறையாவது அதில் ஏறிபார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும்,

அதற்காகவே கோச்சடை அவ்வீட்டினை பல நாட்கள் நோட்டம் பார்த்து பின்பனிக்காலத்தில் ஒருநாளிரவு யாருமறியாமல் வீட்டிற்குள் நுழைந்து லாயத்தில் கட்டியிருந்த குதிரையின் மேலே ஏறினான், கால்களை அகட்டி உட்கார முடியாமல் கஷ்டமாக இருந்த்து, ஆனாலும் குதிரையின் மேலே உட்கார்ந்து இருப்பது சிரிப்பாக வந்தது, கண்ணை மூடிக் கொண்டு ராஜா போல தன்னை நினைத்துக் கொண்டு ஹேஹே என்று கையை அசைத்தான், குதிரை தலையை அசைத்து அவனை முதுகில் இருந்து கிழே தள்ளியது, ஆள் அரவம் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து யாரோ வருவது தெரிந்த்துவுடன் அவன் குதிரையின் காதை தடவி கொஞ்சிவிட்டு தப்பியோடிவிட்டான், அதெல்லாம் ரத்தவேகம் கூடிய இளவட்டமாக இருந்த போது நடந்தது,

கோச்சடை குமாரசாமியோடு பேசியதில்லை, ஆனால் பார்த்திருக்கிறான், ஆள் குள்ளமான உருவம், நெற்றியில் திருநிறுபூசி கழுத்தில் ருத்ராட்சமாலை போட்டிருப்பார், தூய வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை,  கையில் எப்போதும் ஒரு குடை வைத்திருப்பார், வீட்டில் கார் இருந்தாலும் அவர் பஜாரில் இருந்த பாத்திரக்கடைக்கு நடந்து போய்வருவதை பார்த்திருக்கிறான், நாள் தவறாமல் மாலைநேரத்தில் அவர் கோவில் தெப்பக்குளத்தின் படியில் உட்கார்ந்து கொண்டு மீனிற்கு பொறி போடுவார், இப்போது கோவில் குளம் பாசியேறி தூர்ந்துகிடக்கிறது,  பொறி விற்பவனையும் கண்ணில் காண முடியவேயில்லை,

ஆனால் அவனது பால்ய வயதில் கடைமுதலாளிகள் பலரையும் தெப்பக்குளத்தில் வைத்து பார்க்கலாம், அது தான் கடன் கேட்கிற இடம், யாருக்காவது ஏதாவது உதவி தேவை என்றால் அங்கே வைத்து தான் கேட்பார்கள், கோவிலில் கேட்டால் மறுக்கமாட்டார்கள் என்பது நம்பிக்கை, கோச்சடை ஒரேயொரு முறை வக்கீல்பிள்ளையை பார்ப்பதற்காக அங்கே போயிருக்கிறான், மற்றபடி அவனுக்கு கோவிலுக்கு போவது பிடிக்காது

மீனாவை ஆஸ்பத்திரியில் சேர்த்த இரண்டாம் நாள் சோமுவை பார்த்து கடன்கேட்டுவிட்டு கோச்சடை திரும்பி வந்து கொண்டிருந்தான், தம்பா பிள்ளை தெருவை தாண்டும் போது அடர்ந்த இருட்டாக இருந்தது, சட்டென மண்டையில் உறைத்தது, குமாரசாமிபிள்ளை வீட்டில் லைட் எரியவில்லை, ஏன் அணைத்து விட்டிருக்கிறார்கள், ஒரு வேளை பல்ப் ப்யூஸாகி இருக்குமோ,

இருட்டிற்குள்ளாகவே நடந்து வீட்டின் முன்பாக நின்று பார்த்தான், எப்போதும் ஒளிரும் அந்த மஞ்சள் வெளிச்சமும் அதைச் சுற்றிபறக்கும் ஈசல்களின் பறத்தலும் நினைவில் வந்து போனது, மௌனமாக அந்த வீட்டினையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் எதற்கென தெரியாமல் உள்ளுக்குள் ஆத்திரமாக வந்தது,

மறுநாள் கைவண்டி இழுக்கும் மாரியப்பனிடம் இதைபற்றி பேசியபோது, காலம் காலமாக எரிந்து கொண்டிருந்த விளக்கை, வெட்டித்தெண்டமாக எரிகிறது  என்று  குமாரசாமியின் மருமகள் பேச்சியம்மாள் அணைத்துவிட சொல்லி தகராறு செய்து விட்டாள், இனிமேல் அந்த வீட்டில் முகப்புவிளக்கு எரியாது என தெரிந்து கொண்டன், அன்றைக்கு தான் கோச்சடை அந்த வீட்டில் திருடுவது என்று முடிவு செய்தான்

அவன் திருடுவதற்கு துணையாக அன்று மழை சேர்ந்து கொண்டது, மழை பெய்யும் நாட்களில் மனிதர்களை பீடிக்கும் தூக்கம் விசித்திரமான ஒன்று, அது எவரையும் எளிதில் எழும்ப விடாது, மழைநாளில் வரும் கனவுகள் அபூர்வமானவை, அன்றும் கனவில் ஊறிக்கிடப்பவர்களை போல தான் குமாரசாமியின் வீட்டில் ஆழ்ந்து உறங்கிக் கிடந்தார்கள்,

மழைக்குள்ளாக நனைந்தபடியே பின்பக்கச்சுவரில் இருந்த தூம்புவாய் வழியே ஏறி அவன் அடுப்பங்கரை இருந்த பின்கட்டிற்கு வந்தான், எல்லா வீடுகளும் முகப்பில் தான் அலங்காரமாக இருக்கின்றன, அடுப்படி கருமைபடிந்து அலங்கோலமாக தானிருக்கிறது, குமாரசாமிபிள்ளை வீட்டிற்குள் அவன் குதித்த போது வெளியே மழை சீராக பெய்து கொண்டிருந்தது, அவன் பூனையை போல நடந்து சென்று குமாரசாமியின் படுக்கை இருந்த அறையைத் தேடினான், வீட்டினுள் நான்கு அறைகள் தெரிந்தன, இடது பக்கமிருந்த ஒரு அறைக்கதவு லேசாக திறந்து வைக்கபட்டிருந்தது, அப்படியானால் அந்த அறையில் முதியவர்கள் உறங்குகிறார்கள் என்று அர்த்தம்,

வயதானவர்கள் கதவை மூடிக்கொண்டு உறங்குவதில்லை, குமாரசாமி பிள்ளைக்கும் அப்போது அறுபது வயதை தாண்டியிருந்தது, அதுவும் மனைவி இறந்து போன மனிதர் என்பதால் எதற்காக கதவை மூடிக் கொள்ளப்போகிறார் என்று கோச்சடைக்கு தோன்றியது

அவரது இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி  அதே வீட்டில் தான் வசித்தார்கள், ஒருச்சாத்திய கதவை ஒசைப்படாமல் தள்ளி உள்ளே சென்ற போது குமாரசாமி ஒரு சிறுவனை போல சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தார், அறையின் மூலையில் பெரிய இரும்புப் பெட்டியிருந்தது.

திண்டுக்கல்  கோபாலகிருஷ்ணா கம்பெனி தயாரிப்பு அது , அந்த வகை இரும்புப்பெட்டிக்கு இரண்டு பூட்டுகளிருக்கும், மறைவாக உள்ள விசையை அழுத்திக் கொண்டு திறக்காவிட்டால் பூட்டை திறக்கமுடியாது, இது போன்ற சூட்சுமங்கள் அத்தனையும் அவனுக்குத் தெரியும்,  இரும்பு பெட்டியைத் திறந்து உள்ளே பார்த்த போது உள்ளே ஒரு பட்டுச்சேலை, இரண்டு  வெள்ளி டம்ளர்கள், ஒரு வெள்ளிதட்டு, குழந்தைகளின் மோதிரம் ஒன்று இவை மட்டுமேயிருந்த்து, ரொக்கம் கூட நூறு ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது,

கோச்சடைக்கு ஆச்சரியமாக இருந்தது, இவ்வளவு பெரிய வீடுள்ள மனிதன்  வீட்டில் கையிருப்பும் இல்லை, நகையும்  இல்லை, குடும்பம் கடனில் ததளித்துக் கொண்டிருக்கிறது போலும், வெளியே சொல்லாமலே நிலைமையை சமாளித்து வருகிறார்கள் என்று தோன்றியது

பட்டுபுடவையை தொட்டு பார்த்தான், நிறைய ஜரிகை வைத்திருப்பது தெரிந்தது, மீனா இதுவரை பட்டுபுடவையே கட்டிக் கொண்டதில்லை, ஆனால் யாரோ ஒருத்தி கட்டிய புடவையை அவளுக்கு திருடிக் கொண்டு போய் கொடுக்ககூடாது, மதுரைக்கு அழைத்துப் போய் பெரிய ஜவுளி கடையில் அவளுக்கு நீலநிற பட்டுபுடவை வாங்கி தர வேண்டும என்று நினைத்துக் கொண்டு இரும்பு பெட்டியில் இருந்து ஒரு வெள்ளி டம்ளரையும் ஐம்பது ரூபா பணத்தையும் குழந்தையின் மோதிரம் ஒன்றையும் மட்டுமே திருடி எடுத்துக் கொண்டான்,

அவன் அந்த வீட்டிற்குள் திருட வந்ததையோ, பொருட்கள் காணாமல் போனதையோ மறுநாள் அவர்கள் கண்டுபிடிக்கவேயில்லை, ஆனால் கோச்சடை உணர்ந்ததைப் போல அந்த குடும்பம் கொஞ்சநாளில் கடன்சிக்கலில் மாட்டிக் கொண்டது, பனிரெண்டு லட்சம் கடன் என்றார்கள், அவரது மூத்தமகன் தேவையில்லாமல் பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்திருக்கிறான் என்று குமாரசாமி வேதனைபட்டுக் கொண்டார்

அதனால் உருவான சண்டையில் மூத்தவன் தன் மனைவி பிள்ளைகளை மதுரையில் தனியே வீடு பார்த்து கூட்டிக் கொண்டு போனதோடு அப்பாவிடம் தனக்குரிய சொத்தை கேட்டு தகராறு செய்ய ஆரம்பித்தான், தான் செத்துப்போனபிறகு தான் பிள்ளைகளுக்கு சொத்து என்பதில் குமாரசாமி உறுதியாக இருந்தார்

அப்படியானால் நீ செத்து போ, நீ உசிரோட இருந்து இந்த மசிருக்கு கூட பிரயோசனமில்லை  என்று அப்பாவை இதே வீட்டு வாசலில் வைத்து திட்டினான் மூத்தமகன் நெட்டிலிங்கம்,

அந்த வருத்தத்தில் குமாரசாமி பிள்ளை தாடி வளர்க்க ஆரம்பித்து கொஞ்ச நாளில் அவரது நரைத்த தாடி மார்பில் புரளும்படியானது, அவரது கண்களில் சொல்லமுடியாத வருத்தமும், நடையில் தளர்ச்சியும் இருப்பதை கோச்சடை கண்டிருக்கிறான், இரவு கோவில் நடைசாத்தும்வரை கோவில் குளத்திலே அவர் உட்கார்ந்திருப்பதையும் பலநேரம் தனக்கு தானே பேசியபடியே வீட்டை நோக்கி நடந்து வருவதையும் கூட பார்த்திருக்கிறான்,

அப்போதெல்லாம் அந்த குடும்பத்திற்கும் தனக்கும் ஏதோவொரு ஒட்டுதல் இருப்பது போலவே தோன்றும், தான் அந்த வீட்டிற்குள் போகிறோம், அவ்ரது இரும்பு பெட்டியை திறந்து பணம் எடுத்திருக்கிறோம், அவர்கள் அறியாவிட்டால் என்ன, அந்த வீட்டில் திருடிய மோதிரத்தை தானே மூன்றாவது மகன் பிறந்த போது கையில் போட்டிருந்தோம், இதை என்னவிதமான உறவென்று சொல்வது என்று கோச்சடைக்கு புரியாது

ஆனால் அதன்பிந்திய நாட்களில் குமாரசாமிபிள்ளை வீட்டினை கடந்து போகையில் விளக்கு அணைக்கபட்டிருப்பதை காணும்போது தாங்கமுடியாத வருத்தமாக இருக்கும்.

கோச்சடையின் கண்முன்னே அவ்வீடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறத் துவங்கியது, குமாரசாமியின் சாவுக்கு பிறகு அந்த வீட்டில் எவரும் குடியிருக்கவேயில்லை, மூத்தவன் ஊரைவிட்டுப் போய்விட்டான், இளையவன் குடித்து கடன்வாங்கி மனைவியின் ஊரான தென்காசிக்கு போய் வேன் ஒட்டுகிறான் என்றார்கள்,

கோச்சடை குமாரசாமியின் சாவுக்கு போயிருந்தான், வீட்டின் உள்ளே போய் துக்கம் கேட்க கூச்சமாக இருந்தது, வாசலை ஒட்டி போடப்பட்டிருந்த பந்தலில் நின்று கொண்டிருந்தான், பிணம் சுடுகாடு போகையில் கூடவே நடந்து போய் வந்தான், சுடுகாட்டில் இருந்து வீடு திரும்பி வரும்போது சாலையில் கிடந்த உதிர்ந்த ரோஜா இதழ்களை கண்டதும் தாங்கமுடியாத வருத்தம் பீறிட்டது

அதன்பிறகு கோச்சடை தாரமங்கலத்தில் களவு செய்யப்போன போது  பிடிபட்டு  நாலுவருசம் சிறையில் இருந்தான், அவன் ரிலீஸ் ஆகி வெளியே வந்த போது அந்த வீடு சிமெண்ட் குடோனாக மாறியிருந்தது, இரவும் பகலும் சிமெண்ட் மூடைகள் வந்து இறங்கும் போவதுமாக இருந்தன, அப்போதும் கூட ஒரேயொரு தடவை பகலில் அந்த வீட்டிற்குள் போய் பார்த்துவர வேண்டும் என்று தோன்றும், ஏதோவொரு தயக்கத்தில்  போகாமல் வாசலில் நின்றே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு திரும்பிவிடுவான்

அதன்பிறகு அந்த வீடு கைவிடப்பட்டு பல ஆண்டுகள் பூட்டியே கிடந்த்து, ஆர்ச்சில் இருந்த யானைகளின் தும்பிக்கைகள் உடைக்கபட்டிருந்தன, தூசியும் குப்பையும் அடைந்து போய்  சாலையில் அடிபட்டு செத்துப்போன பறவை  ஒன்றை போலவே அந்த வீடு மாறியிருந்தது, பல நேரம் அவ்வீட்டினைக் கடந்து போகும்போது திரும்பிக் கூட பார்க்க வேணாம் என்று தோன்றும், ஆனாலும் அவனால் பார்க்காமல் இருக்க முடியாது

கைவிடப்பட்ட வீட்டைக் காண்கையில் இவ்வளவு தான் வாழ்க்கையா என் வருத்தம் கவ்வும், கண்முன்னே ஊரில் அவன் பார்த்த மனிதர்கள் மறைந்து கொண்டேவருகிறார்கள், அவன் கூடவே வாழ்ந்த மீனா இப்போதில்லை, குமாரசாமி வீட்டில் திருடி மோதிரம் போட்டு பார்த்த மூன்றாவது மகனும் இப்போது உயிரோடில்லை, பதினெட்டுவயதில் களவு செய்ய துவங்கி நாற்பத்தைந்து வயதில் எல்லாம் ஒடுங்கிப்போக மிஞ்சிய வாழ்க்கையை ஒட்டுவதற்காக வாழைக்காய் மண்டியில் வேலைக்கு சேர்ந்து இன்று கோச்சடை செயிண்ட் ஆண்ட்ருஸ் பள்ளியின் வாட்ச்மேனாக இருந்தான்,

பல நாட்கள் மூடப்பட்ட பள்ளியின் வாசலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஆள்இல்லாத வீதியை பார்த்துக் கொண்டேயிருப்பான், இவ்வளவு தானா  வாழ்க்கை என்று தோன்றும், கூடவே குமாரசாமிபிள்ளை வீட்டின் மஞ்சள் வெளிச்சம் நினைவில் வந்து போகும்

இன்றைக்கும் கூட அந்த வீட்டினை இடிப்பதற்குள் அதற்குள் ஒருமுறை போய்விட்டுவர வேண்டும் என்பதற்காகவே அவசரமாக அங்கு வந்திருந்தான்,  ஆனால் வாசலில் வந்து நின்றபோது வீட்டிற்குள் போவதற்கான தகுதி தனக்கு இல்லை என்று தோன்றியது,  வெளியிலே நின்று கொண்டேயிருந்தான், இடிபட்ட கற்கள் தெறித்துவிழுந்து கொண்டிருந்தன, அதை பார்க்க பார்க்க இறந்த குழந்தையை குழிக்குள் தள்ளி மண்ணை போட்டு மூடுவதை விடவும் அது சோகமானதாக தோன்றியது

கோச்சடை தலைகவிழ்ந்தபடியே மௌனமாக நின்று கொண்டேயிருந்தான், அப்போது சாலையில் ஒரு டாக்சி வந்து நிற்கும் சப்தம் கேட்டது, வெளிர்நீல சட்டைஇ வேஷ்டி அணிந்த ஒருஆள் கிழே இறங்கி போன்பேசியபடியே நடந்தவர் கோச்சடை பக்கம் திரும்பி என்ன வேணும் என்று கேட்டார்,

ஒண்ணுமில்லை அண்ணாச்சி சும்மா பாக்கேன் என்றான் கோச்சடை,

அந்த ஆள் உள்ளே  நடந்தபடியே கத்தினார்

டேய் வேலு, என்னடா செய்றீங்க, களவாணிப்பயக உடைஞ்சி கிடக்கிற  மரச்சாமானை தூக்கிட்டு போயிறப் போறாங்கடா , வெளியே ஒருத்தன் நிக்கான் அவன் முகரையே சரியில்லை, அடிச்சிபத்தி விடுங்கடா

யாரோ ஒருவன் உள்ளேயிருந்து கையில் ஒரு இரும்பு ராடுடன் வாசலை நோக்கி ஆவேசமாக வருவது தெரிந்தது

இடிந்து கிடந்த வீட்டில் இருந்து தெறித்து விழுந்த ஒரு சிறுகல்லை எடுத்து சட்டை பையில் போட்டு கொண்டு கோச்சடை மெதுவாக வீட்டை நோக்கி நடந்து போக ஆரம்பித்தான், சுவர் விழுந்து எழுந்த புழுதி காற்றில் கரைந்து கொண்டிருந்தது

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #4 on: May 31, 2013, 03:34:54 PM »
மழைமான்

சிறுகதை

தேவபிரகாஷிற்கு உடனே ஒரு மானைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

தனது மேஜையில் ஆத்தியப்பன் ரிஜிஸ்தரை வைத்து விட்டுப் போகும்வரை அந்த யோசனை தோன்றவேயில்லை. திடீரென்று தான் மனதில் உருவானது.

எதற்காக மானைப் பார்க்க வேண்டும் என்று புரியவில்லை. ஆனால் மனதில் மானைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகக் கொப்பளிக்கத் துவங்கியது. இப்படி யாருக்காவது விசித்திரமான எண்ணம் வருமா என்ன… தன்னைச் சுற்றிலும் இருந்த சக ஊழியர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டார்.

மின்வாரியத்தின் நிர்வாகப் பிரிவு அலுவலகமது. காரை உதிர்ந்து கொண்டிருக்கும் அந்தப் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்த பெரிய ஹாலில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

வலது புறம் நேராக நடந்து போனால் உயரதிகாரிகளின் அறைகள். அதை ஒட்டியது போல காப்பறை. கடந்து போனால் கீழும் மேலுமாகச் செல்லும் சிமெண்ட் படிக் கட்டுகள். அலுவலகத்தில் மொத்தம் முப்பத்தியெட்டு படிகள் இருக்கின்றன.

தேவபிரகாஷ் பலமுறை அப்படிகளை எண்ணியிருக்கிறார். அலுவலகத்திற்கு வந்த புதிதில் அப்படி எண்ணுவது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆனால் இப்போது படிகள் இருப்பதே கண்ணிற்குத் தெரிவதில்லை. கால்கள் தானாகவே ஏறிப்போய்விடுகின்றன. ஒருவேளை தன்னைப் போல புதிதாக வேலைக்குச் சேர்ந்த எவராவது படிகளை எண்ணக்கூடும்.

இடது பக்கம் நீளும் வழி எப்போதுமே இருட்டடிந்து போயிருக்கிறது. மோகன்குமார் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அருகில் உள்ள ஜன்னலை ஒட்டி ஒரு வாதாமர மிருக்கிறது. ஆனால் அதன் இலைகள் அசைவதேயில்லை. தூசிபடிந்து, வெளிறிப்போன நிலையில் ஒரு நோயாளி யைப் போல அந்த மரம் நின்று கொண்டிருக்கிறது.

அரசு அலுவலகத்தின் ஊடாக ஒரு மரமாக இருப்பது துரதிருஷ்டமானது. யாரும் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள். மரத்தின் மீது பாக்கு போட்டு கோழையுடன் வழியும் எச்சிலைத் துப்பியிருப்பார்கள்.  மூன்றாவது மாடியில் வேலைசெய்பவர்கள் சாப்பிட்டு மிச்சமாகித் தூக்கி எறியப்பட்ட உணவுகள் யாவும் மரத்தின் மேலாகத்தான் விழுந்திருக்கின்றன. அந்த மரத்தில் இருந்து ஒரு அணில் அலுவலகத்திற்குள் வந்துவிடுகிறது என்று சொல்லி புனிதவல்லி எரிச்சல்பட்டு பெரிய கிளை ஒன்றை வெட்டிவிடச் செய்தாள். அதன் பிறகு அந்த அணில் வருவதும் நின்று போய்விட்டது.

அந்த அலுவலகம் பரபரப்பாகச் செயல்பட்டு அவர் அறிந்ததேயில்லை. அது போலவே அலுவலகத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் ஒருநாளும் முழுமையாக வந்ததேயில்லை. தினமும் நாலைந்து காலி இருக்கைகள் கண்ணில் படுகின்றன. அதிலும் சுந்தரவதனி என்ற பெண் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விடுப்பில் இருக்கிறாள். அவளது இருக்கை அப்படியே இருக்கிறது. அந்த மேஜை மீது கோப்புகள் தூசி படிந்து கிடக்கின்றன. சுந்தரவதனிக்கு என்ன செய்கிறது. ஏன் ஒருவரும் அவள் வீடு தேடிப்போய் பார்த்து வந்ததேயில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருமுறை இது போன்ற மதிய நேரம் அந்த எண்ணம் அவரை உந்தத் துவங்கியது.

உடனே கிளம்பி சுந்தரவதனியைப் போய் பார்த்து விட்டு வரவேண்டும் என்று மனக்குரல் ஆவேசமாகச் சொல்லத் துவங்கியது. ஏடிஎம் போய் பணம் எடுத்துவர வேண்டும் என்று உயரதிகாரியிடம் பொய் சொல்லிவிட்டு அன்பு பீறிட சுந்தரவதனி வீடு இருந்த ராமாவரத்திற்கு ஆப்பிள் பழங்களுடன் போயிருந்தார்.

அலுவலகத்தில் சுந்தரவதனி எப்போதுமே தலைவலி தைலத்தை தேய்த்துக் கொண்டு கடுமையான முகத்தோடு தானிருப்பாள்.  ஒரு மழை நாளில் அவர் ஏறிய ஷேர் ஆட்டோவில் அவளும் உடன் பயணம் செய்தாள். அப்போது தனது வீடு ராமாவரத்தில் உள்ளதாகத் தெரி வித்திருந்தாள். அதைத் தவிர அவளோடு அதிகம் பேசிப் பழகியதில்லை.

ராமாவரத்தில் அவளது வீட்டை விசாரித்துக் கண்டுபிடிப்பது சிரமமாகவே இருந்தது. இரும்பு கேட் போட்ட பெரிய வீடு. வீட்டின் முகப்பில் எண்டோவர் கார் நின்றது. இவ்வளவு வசதியானவள் என்பதை அவள் காட்டிக் கொள்ளவேயில்லையே என்று தோன்றியது. காலிங்பெல்லை அடித்தபோது சுந்தரவதனி நைட்டியுடன் வந்து கதவைத் திறந்தாள்.

அவர் வரக்கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவரைப் பார்த்த மாத்திரம் திகைத்துப் போனவளாக சோபாவில் உட்காரச் சொன்னாள்.

‘என்ன பேசுவது?’ என்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘என்ன விஷயம்?’ என விருப்பமற்ற குரலில் கேட்டாள்.

‘சும்மா பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்’ என்றார் தேவபிரகாஷ்.

அவள் அதை நம்பமுடியாதவள் போல ‘ஏதாவது கடன்கிடன் வேணுமா?’ என்று நேரடியாகக் கேட்டாள்.

‘அதெல்லாமில்லை. ஆறுமாதமாக நீங்க ஆபீஸ் வரவில்லையே… அதான்’ என்று சமாளித்தார்.

தன்னை வேவு பார்க்க வந்திருக்கிறாரோ என நினைத்து அவள் கடுமையான முகத்துடன் ‘நான் சிக் லீவுல இருக்கேன்’ என்றாள். பிறகு அவரிடம் ‘இது போல போன் செய்யாமல் பார்க்க வருவது தனக்குப் பிடிக்காது. இனிமேல் இப்படி வராதீர்கள்’ என்று சொல்லி ஆப்பிள் பழத்தை அவரையே திரும்பி எடுத்துக் கொண்டு போகும்படியாகச் சொன்னாள்.

ஆத்திரத்தில் அவள் வீட்டின் வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் அந்தப் பழங்களைப் போட்டுவிட்டு அலுவலகம் போகாமல் வீட்டிற்குப் போய் படுக்கையிலே கிடந்தார். யோசிக்க யோசிக்க  சகல மனித உறவுகளும் அர்த்தமற்றுப் போய்விட்டதாகத் தோன்றியது. யாரும் யாரையும் நம்புவதில்லை. காரணமில்லாமல் ஒருவர் மற்றவரைப் பார்ப்பது கூட ஏன் இயலாமல் போயிற்று? பணம் தவிர உலகில் வேறு எதுவுமே முக்கியமானதில்லையா?  ஏன் இப்படி மனக்குரலின் பேச்சைக் கேட்டு நாம் அவமானப்பட்டுப் போகிறோம்? இது என்ன நோய்? ஏன் நம் இயல்பு வாழ்க்கை இப்படி அர்த்தமற்றுப் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்து வேதனை கொண்டார்.

அலுவலகத்தில் அவருக்கு விருப்பமான-வர்கள் என்றோ நண்பர்கள் என்றோ யாருமேயில்லை. மதிய சாப்பாட்டைக் கூட தனியாகத் தனது மேஜையில் வைத்தே சாப்பிட்டு முடித்து விடுவார். அலுவலகத்தில் மட்டுமில்லை.,ஒரு கோடி பேருக்கும் மேலாக வசிக்கும் இந்த மாநகரில் கூட அவருக்கு நண்பர்கள் என்று எவருமில்லை.  முகம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று இரண்டே பிரிவுதான்.

ஐம்பதாவது வயதில் நுழையும் வரை அவருக்கு ஒருநாளும் இப்படியான உணர்வுகள் ஏற்பட்டதேயில்லை. இப்போது தான் ஏதேதோ கொந்தளிப்புகள் மனதில் தோன்றுகின்றன. திடீரென ஒரு எண்ணம் அவரது மனதில் தோன்றத்துவங்கி முழுவதும் ஆக்ரமித்துவிடுகிறது. வேறு எந்த வேலை செய்தாலும் மனது அடங்குவதில்லை.

ஒரு குரல், அழுத்தமான ஒரு குரல் அந்த எண்ணத்தை நிறைவேற்றும் படியாக அவரை வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறது. அக்குரலைக் கண்டு-கொள்ளாமல் விடும்போது மனது வேறு எந்த வேலையிலும் கவனம் கொள்ள மறுப்ப-தோடு, உடலிலும் மெல்லிய படபடப்பு உருவாகிவிடுகிறது.

இன்றைக்கும் அப்படியான ஒரு குழப்பமான எண்ணமாகவே மானைக் காண வேண்டும் என்று மனதில் உதயமானது. மானை எங்கே போய் பார்ப்பது என்று தெரியவில்லை. இதற்கு முன்பு எப்போது எங்கே வைத்து மானைப்பார்த்தோம் என்ற நினைவுகள் மனதில் குமிழ்விடத் துவங்கின.

பதினைந்து வருஷத்தின் முன்பு ஒரு முறை தேக்கடியில் வைத்து அவர் மானைக் கண்டிருக்கிறார். அப்போது அவரது  மகள் விலாசினிக்கு ஐந்து வயது. மான்கள் உலவும் இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. கம்பிமீது ஏறியபடி அவள் மானைக் கையசைத்துக் கூப்பிட்டாள். புல்வெளியில் உலவிக் கொண்டிருந்த மான்கள் திரும்பிப் பார்க்கவேயில்லை.

‘அப்பா, மானை எப்படிக் கூப்பிடுவது?’ என்று விலாசினி கேட்டாள்.

மானை என்ன சொல்லிக் கூப்பிடுவது என்று அவருக்கும் தெரியவில்லை. அதை மறைக்க விரும்பி-யவரைப் போல “கையசைத்துக் கூப்பிடு. வரும்” என்றார்.
அதற்குள் அவளாகப் ‘பூசி பூசி’ என்று அர்த்தமற்ற ஒரு சொல்லைக்  கொண்டு குரல் கொடுத்தாள்.

ஒரு மான் தலை திரும்பியது.

“அப்பா, நான் கூப்பிடுறது அதுக்குக் கேட்குது. புள்ளி புள்ளியா மான் ரொம்ப அழகா இருக்குல்லே! நாம இந்த மானை வீட்டில கொண்டு போய் வளக்கலாமா?” என்று கேட்டாள்.

“இல்லை விலாசினி, மானை வீட்ல வளர்க்கவிடமாட்டாங்க” என்றார்.

“யாரு?” என கேட்டாள்.

“கவர்மெண்ட்” என்றார்.

மானை ஆசையாகப் பார்த்தபடியே மறுபடியும் கேட்டாள்.

“ஏன்பா விடமாட்டாங்க?”

“அதுக்கு நாம் கவர்மெண்ட்ல பெர்மிஷன் வாங்கணும்மா” என்றார்.

“நீங்க கவர்மெண்ட்ல தானே வேலை பாக்குறீங்க, அப்போ பெர்மிஷன் வாங்க வேண்டியது தானே” என்று சொன்னாள்.

“இல்லைடா, மானை வீட்ல வளர்க்க முடியாது. மான் வளரணும்னா காடு வேணும்ல.” என்றார்.

அவள் ஆதங்கத்துடன் “அப்போ நம்ம வீட்டைச் சுற்றிக் காடு வளர்த்திட்டா, பிறகு மான் வளர்க்க விடுவாங்களா?” என்று கேட்டாள்.

“முதல்ல நாம ஒரு காடு வளர்க்கலாம். பிறகு மானை வாங்கிடலாம்” என்று சமாதானம்  சொன்னார். ஊர்வரும்வரை மான் வளர்ப்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் விலாசினி. அதன்பிறகு மானை மறந்து போய்விட்டாள். குழந்தைகள் தனது ஆசையை எளிதாகக் கைவிட்டுவிடுகிறார்கள். அவரும் அதன்பிறகு மானை மறந்து போயிருந்தார்.

இப்போது எதற்காக மானைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மறுபடி வந்தது எனப் புரியவேயில்லை. ஆனால் அந்த எண்ணம் மனதைக் கொஞ்சம் கொசமாக வதைக்க ஆரம்பித்திருந்தது.

மானை எங்கே போய் பார்ப்பது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் இருந்த பெரிய டெலிபோன் டைரக்டரியைத் தேடி எடுத்து வந்து புரட்டத் துவங்கினார். மானைப் பற்றி எதில் தேடுவது என தெரியாமல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்.  எப்போதோ ஒரு முறை பரங்கிமலைச் சாலையில் மான் ஒன்று அடிபட்டுக் கிடந்ததாக பேப்பரில் செய்தி ஒன்றை வாசித்த நினைவு வந்தது,

பரங்கிமலைக்குப் போனால் மானைப் பார்க்க முடியுமா என்ன… யாரைக் கேட்கலாம்?  இருபத்திநாலு மணி நேர இலவச சேவையான ஹலோ சிட்டி நம்பருக்கு போன் செய்து கேட்டால் சொல்லிவிட மாட்டார்களா என்று நினைத்தபடியே அலுவலக போனில் இருந்து ஹலோ சிட்டியைத் தொடர்பு கொண்டார்.

மறுமுனையில் ஒரு இளம்பெண் மென்மையான குரலில் பேசத் துவங்கினாள். தயங்கித் தயங்கி அவளிடம் இந்த நகரில் மான்கள் எங்கேயிருக்கின்றன என்ற விபரம் தனக்குத் தெரிய வேண்டும் என்றார்.

அவள் குறிப்பாக ஏதாவது ஒரு இனத்தைச் சேர்ந்த மானைப் பற்றிக் கேட்கிறாரா அல்லது பொதுவாக மான்களைக் காண விரும்புகிறாரா என்று கேட்டாள்.

தனது மகளை அழைத்துப் போய் வேடிக்கை காட்ட விரும்புவதாக அவர் பொய் சொன்னார்.

அவள் இதற்கான  பதிலைத் தருவதற்குள் அவரது சுயவிபரங்களைப் பதிவு செய்துகொள்ள விரும்புவதாகச் சொல்லி அவரது வயது, வேலை, முகவரி என ஆறு கேள்விகளைக் கேட்டாள். முடிவில் வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் மான்கள் இருக்கின்றன.  ஆனால் இன்று விடுமுறைநாள் என்றாள். நாளை வரை தன்னால் காத்திருக்க முடியாது. வேறு எங்காவது  மான்கள் இருந்தால் சொல்லுங்கள். தூரத்தில் நின்று பார்த்தால் போதும் என்றார்.

வேறு எங்கும் மான்கள் இருப்பதாகத் தகவல்மையம் தெரிவிக்கவில்லை. உங்கள் மகளுக்காக ஒரு ஆலோசனை சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு கிண்டி கவர்னர் மாளிகை தெரியுமில்லையா? அதன் உள்ளே பாதுகாப்பு பணிக்காக வசிப்பவர்களுக்கான குடியிருப்பு இருக்கிறது. அதில் யாரையாவது தெரியும் என்று பொய் சொல்லி உள்ளே போய்விடுங்கள். அங்கே மான்களை எளிதாகக் காண முடியும். நான் அப்படி ஒரு முறை என் தோழிகளை அழைத்துப் போயிருக்கிறேன் என்றாள்.

இதைச் சொல்லும்போது அவள் சிரித்தாள். அது சந்தோஷத்தின் வெளிப்பாடா அல்லது தன்னை மாட்டிவிட முயற்சிக்கிறாளா என புரியாமல் இருந்தது. குரலை வைத்து அந்தப் பெண்ணின் இயல்பைக் கற்பனை செய்துக்கொள்ள முடியாது. ஒரு வேளை அந்த சிரிப்பு இயந்திரக் குரலாகக்கூட இருக்கக் கூடும்.

கிண்டிக்குப் போய் மானைக் காண முயற்சி செய்ய வேண்டியதுதான் என்றபடியே  தனக்குக் குளிர் சுரம் போல இருப்பதாகச் சொல்லி அலுவலகத்தில் இருந்து அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டார். கொண்டு வந்திருந்த மதிய சாப்பாட்டை பையில் வைத்து  எடுத்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து விடைபெற்றபோது மணி பனிரெண்டரையாகி இருந்தது. கிண்டி செல்வதற்கான பேருந்திற்காகச் சாலையில் காத்துக்கிடந்த போது அவரது வயதில் யாராவது இப்படி திடீரென மானைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விடுப்பு எடுத்துக் கொண்டு போவார்களா எனத் தோன்றியது. தான் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறோமா? என்ன மனநிலையிது. . . மனது வேறு எதையும் யோசிக்க மறுத்தது.

மான் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  உலகில் வேறு எந்த மனிதனும் இப்படி தனது அலுவலகத்தைப் பாதியில் போட்டுவிட்டு மானைப் பார்க்கப் போக மாட்டான். தனக்கு ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது அல்லது தன்னை ஏதோ பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. சே, என்ன சிந்தனையிது.

இதிலிருந்து உடனே விடுபட வேண்டும். இல்லா-விட்டால் மனது துவண்டு போய்விடுகிறது, தலையைத் திருப்பிச் சாலையைக் கவனித்தார்.

அவரது வயதை ஒத்த பலர் பரபரப்பாக பைக்கிலும், காரிலும் போய்க் கொண்டிருந்தார்கள். பொதுவாக அவரது கண்ணில் சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே தென்படுகிறார்கள். இளைஞர்கள், அதிலும் குறிப்பாக பதின்வயது பையன்கள், பெண்களைக் காணும்போது மனதில் தேவையில்லாத பொறாமையுணர்வு அல்லது கோபம் உருவாகிவிடுகிறது. பெரும்பாலும் அவர்களைக் கண்டுகொள்ளாதவரைப் போலவே நடந்து கொள்கிறார். ஆனால் உலகில் இளைஞர்கள்தான் அதிகமாக நடமாடுகிறார்கள். கூடிப்பேசுகிறார்கள். சிரிக்கிறார்கள். ஆரவாரம் செய்கிறார்கள். கனவுகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அவரது வயதை ஒத்தவர்களுடன்  பேசப் பழக அவருக்குப் பிடிப்பதில்லை. அதே நேரம் அவரை விட மிகவும் வயதானவர்களுடன் பேசும்போது சலிப்பாக இருக்கிறது. ஈரமில்லாமல் சுண்ணாம்பு உலர்ந்து உலர்ந்து பொக்காகி உடைந்து சிதறுமே, அப்படித்தான் தானும் மாறிக் கொண்டிருக்கிறோமா என தோன்றும். இல்லை, வெடித்துப்போன பலூன் இனி எவருக்கும் உபயோகமில்லாமல் கிழிந்து கிடப்பது போன்றதுதான்  தனது வாழ்க்கையா? அவருக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் தன்னை அப்படித் தாழ்மையாக உணர்கிறோம் என்ற மறுயோசனையும் அவருக்குள் எழுவதும் அடங்குவதுமாக இருந்தது.
கிண்டி செல்லும் நகரப்பேருந்து வந்து நின்றது. ஏறிக் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டார். இந்தப் பேருந்தில் யாராவது மானைப் பார்க்கப் போகிறவர் இருப்பாரா என்ன… அவர் டிக்கெட் எடுத்து பையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.

***

போனவாரம்  இது போன்ற ஒரு காலை நேரத்தில் மனதில் பென்சில் சீவி எவ்வளவு நாளாயிற்று என்று ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. பகல் முழுவதும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.

பென்சில் திருகிகள் வந்த பிறகு பிளேடால் பென்சிலை சீவுவது முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டது. அன்றாடம் பென்சிலை உபயோகிப்பதே அரிதாகிப் போன பிறகு பென்சிலை ஏன் பிளேடால் சீவ வேண்டும். வீட்டில் மூத்தமகள் ஓவியம் வரைவதற்கு வண்ணமயமான பென்சில்களை வைத்திருக்கிறாள். ஆனால் சாதாரண மஞ்சள், பச்சை நிறப் பென்சில்கள் அவளிடமும் கிடையாது.

அவரும் பள்ளி வயதிற்குப் பிறகு பென்சிலை விலை கொடுத்து வாங்கியதே கிடையாது. பிறகு எதற்கு அந்த யோசனை வந்தது எனப் புரியவில்லை. அலுவலக மேஜையைக் குடைந்து ஏதாவது பென்சில் கிடக்கிறதா என்று தேடிப்பார்த்தார். உடைந்துபோன ரெனால்ட்ஸ் பேனாக்கள், அழிரப்பர்கள், ரெவின்யூ ஸ்டாம்ப், நூல்கண்டு, துளையிடும் கருவி, ஜெம்கிளிப் என ஏதேதோ இருந்ததேயன்றி பென்சிலைக் காணோம்.

உடனே பென்சிலை வாங்கி சீவ வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடையத் துவங்கியது. சே, என்ன இழவு யோசனை… ஏன் நம்மை இப்படிப் படுத்துகிறது என்று நினைத்தபடியே அலுவலக பியூன் பழனியை வரவழைத்து ரத்னா பென்சில் ஒன்றை வாங்கிக் கொண்டு வரும்படியாகச் சொன்னார்.

‘சார், அதெல்லாம் இப்போ கிடையாது. நட்ராஜ் பென்சில் இருக்கும், வாங்கிட்டு வரவா?’ என்று பழனி கேட்டான்.

‘அப்படியே ஒரு புது பிளேடு ஒன்றும் வேண்டும்’ என்று சொல்லி இருபது ரூபாயை நீட்டினார்.

“பிளேடு எதற்கு சார்!  பென்சில் சீவி இருக்கு, நானே சீவிக் கொண்டுட்டு வர்றேன்” என்றான்,

அதுதான் அலுவலக நடைமுறை. உயர் அலுவலர், ஊழியர்கள் அனைவரின் பேனாவிற்கு மை ஊற்றுவது, பென்சிலை சீவித் தருவது, கழற்றிய பேனாவின் மூடியை மாற்றி விடுவது, தபாலைப் பிளேடால் பிரித்துக் கொடுப்பது, ஸ்டாம்பை எச்சில் தொட்டு ஒற்றித் தருவது, கீழே விழுந்த குண்டூசியைப் பொறுக்கி எடுத்துத் தருவது, இதெல்லாம்தான் பியூனின் வேலைகள், இதுவரை ஒரு உயர் அலுவலர் கூட தானாகக் கீழே விழுந்த குண்டூசியைக் குனிந்து எடுத்த சரித்திரமே கிடையாது.

“வேணாம் பழனி, நானே சீவிக்கிடுவேன். நீ பென்சில், பிளேடு மட்டும் வாங்கிட்டு வா” என்றார்

இது போன்ற அற்ப எண்ணம் யாருக்காவது வருமாயென்ன…  சிறுவயதில் பென்சிலை சீவும்போது பிளேடு கையில் பட்டு பெருவிரலில் ரத்தம் வந்த நாட்கள் நினைவில் வந்து போனது. பழனி வரும்வரை மனது கொதிப்பிலே இருந்தது.

பழனி பென்சிலையும் பிளேடையும் நீட்டினான். அரக்கு வண்ணக் கோடு போட்ட பென்சிலது. அதை முகர்ந்து பார்த்தபோது வாசனையேயில்லை. வழக்கமாக புதுப்பென்சிலில் ஒரு மணமிருக்குமே. அது ஏன் இந்தப் பென்சிலில் இல்லை என்று ஆழமாக நுகர்ந்து பார்த்தார். ஒரு வாசனையும் இல்லை.

பிளேடைப் பிரித்து பென்சிலை  சீவ ஆரம்பித்தார். ஆப்பிள் பழத்தின் தோலை உரிப்பது போல கவனமாக, மெதுவாக, வளைய வளையமாக அவர் பென்சிலை சீவத் துவங்கினார். அந்த நிமிசம் மனம் மெல்ல சந்தோஷம் கொள்ளத் துவங்கியது. பென்சிலை சீராக சீவச்சீவ மனது தீவிரமாக உற்சாகம் கொள்ளத் துவங்கியது.

பென்சில் முனையைக் கூர்மையாகத் தீட்டினார். அழகாகச் சீவப்பட்டு பென்சில் எழுதத் தயாராக இருந்தது. ஏதாவது வரையலாமா என்று யோசித்தார். என்ன வரைவது?  ஒரு முட்டை போல வரைந்து அதற்கு இரண்டு கண்கள் வைத்தார். மூக்கை எப்படி வரைவது என்று யோசிப்பதற்குள் படம் வரையும் ஆசை வடிந்துவிட்டிருந்தது.

மனதில் அதே குரல் மீண்டும் எழுந்தது.

பென்சில் சீவு.  நன்றாக பென்சில் சீவு.

‘என்ன இம்சை இது’ என்றபடியே அவர் பென்சில் நுனியை மேஜையில் அழுத்தி உடைத்தார். மறுபடியும் பிளேடை எடுத்து பென்சிலை சீவத்துவங்கினார். அன்று மாலை வரை அது ஒரு முடிவில்லாத விளையாட்டு போலவே நடந்தேறியது. அலுவலகம் விடும்போது அவர் கையில் சுண்டுவிரல் அளவு பென்சிலே மீதமிருந்தது.

சீவிச்சீவிப் போட்ட பென்சில் வளையங்கள் அவரது மேஜையடியில் சிதறிக்கிடந்தன. மனதில் அந்தக் குரல் அடங்கியிருந்தது. என்ன விளையாட்டு இது, யாராவது தனது செய்கையைக் கவனித்திருப்பார்களா? சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். ஒருவேளை அவர்களும் தன்னைப் போல விசித்திர விளையாட்டில்தான் ஈடுபட்டிருக்கிறார்களோ என்று தோன்றியது.

மீதமான பென்சிலைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். பென்சிலை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு போக வேண்டும். மனைவி துணி துவைக்கும்போது கவனமாக அதை வெளியே எடுத்து வைக்கிறாளா எனப் பரீட்சை செய்து பார்க்க வேண்டியதுதான் என தோன்றியது. இதை வைத்து அவள் தன்மேல் கொண்டிருக்கிற அக்கறையை முடிவு செய்துவிடலாம் என்றபடியே பென்சிலை சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

அன்றிரவு வேண்டுமென்றே அவராக சட்டையைக் கழட்டி அழுக்குக் கூடையில் போட்டுவந்தார். இரண்டு நாட்கள் கழித்து அவரது மனைவி துவைத்து தேய்த்து வைத்த சட்டைகளில் ஒன்றாக இருந்த அந்த சட்டையைக் கண்டார். உடனே மனைவியை அழைத்து “இதில் ஒரு பென்சில் இருந்ததே, அதைப் பார்த்தாயா?” என்று கேட்டார்.

அவள் “அப்படி எந்தப் பென்சிலையும் தான் பார்க்கவில்லை” என்றாள்.

“சட்டைப் பையில்தான் வைத்திருந்தேன். அதைக் கூட கவனிக்கவில்லையா?: என்று கடுமையான குரலில் சொன்னார்.

அவளோ அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போல “சட்டையை அப்படியே எடுத்து வாஷிங் மிஷினில் போட்டு இருப்பேன். இப்போ எதுக்கு அந்தப் பென்சில்!” என்று முறைத்தபடியே கேட்டாள்.

அவருக்கு ஆத்திரமாக வந்தது. இவ்வளவுதான் தனது இடம். வீட்டில் தன் மீது யாருக்கும் எவ்விதமான அக்கறையும் கிடையாது. தனது சம்பாத்தியத்திற்காக மட்டுமே தன்னை சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. இந்த நிலை இப்படியே தொடர அனுமதிக்கக்கூடாது என்று கோபம் பொங்கியது.

“சட்டையில் என்ன இருக்குனு பாக்கவே மாட்டாயா?” என்று கோபப்பட்டார்.

“அதுக்கு எல்லாம் எனக்கு நேரமில்லை. கரண்ட் எப்போ வரும், எப்போ போகும்னு தெரியலை.  வாஷிங் மிஷின்ல கதவு சரியில்லாமல் தண்ணி ஒழுகுது. இதுல உங்க இம்சை வேறயா? ஒருநாள் நீங்க பக்கத்தில இருந்து துணி துவைச்சிப் பாருங்க, அப்போ தெரியும்” என்றாள்.

தாங்க முடியாத ஆத்திரத்துடன் அன்று காலை உணவை வீட்டில் சாப்பிட மறுத்துப் பசியோடு அலு வலகம் வந்து சேர்ந்தார். அலுவலக பாத்ரூமிற்குள் போய் நின்றுகொண்டு தனது முகத்தை தானே பார்த்துக் கொண்டிருந்தார்.

கண்கள் ஒடுங்கியிருந்தன. புருவம் தளர்ந்திருந்தது. கண் இரைப்பைகள் ஊதி தொங்கிக் கொண்டிருக்கின்றன. நெற்றி, கன்னம் இரண்டும் உலர்ந்து போயிருக்கிறது. உதட்டில் ஒட்டியிருந்த சிரிப்பு உதிர்ந்து விட்டிருக்கிறது.  தன்னிடமிருந்த யௌவனம் முற்றிலுமாகப் போய்விட்டது. இனி தன் முகத்தில் ஒருபோதும் இளமையில் கண்ட பொலிவு திரும்ப வரப்போவதில்லை. தான் தோற்றுவிட்டோம். இளமையை இழந்துவிட்டோம். அதுதான் இது போன்ற கிறுக்குத்தனமான எண்ணங்களை உருவாக்குகிறது. இனி தான் ஒரு காலிபாட்டில் மட்டுமே… நினைக்க நினைக்க தன்மீதே ஆத்திரமாகவும் கோபமாகவும் வந்தது.

சே, என்ன வாழ்க்கையிது… முடுக்கிவிடப்பட்ட இயந்திரம் போல பேருந்து பயணம். அலுவலகம், மதிய உணவு, வேலை முடிந்து வீடு திரும்புதல், டி.வி.பார்ப்பது, இரவு உணவு, உறக்கம், விடிகாலையில் அலாரம் வைத்து எழுந்து கொள்ளுதல், குளிப்பது, சாப்பிடுவது, மறுபடி பேருந்துப் பயணம் என ஓடிக் கொண்டேயிருப்பது தாங்க முடியாத சலிப்பூட்டுகிறது.

அதே பற்பசை, அதே சோப்பு, அதே சிவப்பு நிற பிளாஸ்டிக் வாளி, அதே இட்லி, தோசைகள், அதே கோடு போட்ட சட்டை, கைக்குட்டை, செருப்பு, அலுவலக மரமேஜை, குண்டூசிகள், தனது வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது.

மாற்றம் வேண்டும். ஏதாவது செய்து உடனே தனது வாழ்வை மாற்றியாக வேண்டும் என்ற குரல் ஆழமாக எழுந்தது. என்ன செய்வது, எப்படி மாற்றுவது, யாரிடம் கேட்பது, அவர் குழப்பத்தினுள் ஆழ்ந்துபோய்க் கொண்டிருந்தார்.

என்ன செய்து இதை மாற்றுவது என்று புரியவில்லை. ஆனால் மாறிவிடு மாறிவிடு என்ற அந்தக் குரல் மண்டைக்குள் சதா கேட்டுக் கொண்டேயிருந்தது. அதுவரை நிம்மதியாக உலவி வந்த தினசரிவாழ்வின் இயல்பிற்குள் அடங்கவிடாமல் அக்குரல் அவரைத் திணறடித்துக் கொண்டிருந்தது.

அது ஒரு மீளமுடியாத அவஸ்தை. இந்த ஆதங்கம் பற்றியோ, வேதனை குறித்தோ மனைவியோ, பிள்ளைகளோ கவலைப்படவேயில்லை. அவர்களிடம் இதைப் பற்றி எப்படிப் பேசுவது என்று தெரியாமல் அவர் தவித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாளிரவு படுக்கையில் கிடந்தபடியே மனைவியிடம் கேட்டார்:

“சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, துணி துவைப்பது, டி.வி. பார்ப்பது, உறங்குவது என இதையே  திரும்பத் திரும்பச் செய்வது அலுப்பாகயில்லையா?”

“அலுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி ஒன்றும் இல்லையே” என்றாள்.

“நீ ஏன் இப்போது  இரட்டை சடை பின்னிக் கொள்வதில்லை? நிறைய நேரங்களில் பவுடர் கூட போட்டுக் கொள்வதில்லையே” என்று கேட்டார்.

“பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். இனிமேல் எதற்கு பவுடர்? ஜடைபின்னல்? வரவர கண்ணாடி பார்க்கவே அலுப்பாக இருக்கிறது. நிறைய நேரங்களில் கண்ணாடி பார்க்கும்போது அழுகை வந்துவிடுகிறது” என்றாள்.

அது நிஜம். தன்னாலும் இருபது வயதில் கண்ணாடியை ரசித்தது போல இன்று ரசிக்க முடியவில்லை. ஆழமான குற்றவுணர்ச்சி மேலோங்கிவிடுகிறது. கண்ணாடி மௌனமாகப் பல உண்மைகளை நமக்குப் புரிய வைத்து விடுகின்றது.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். காதோரம் நிறைய நரைமயிர்கள் வந்துவிட்டிருக்கின்றன. அதை மைபூசி மறைக்க விரும்பாதவள் ஆகிவிட்டாள். உடலில் இருந்த பெண்மையின் நளினங்கள் மறைந்து போய்விட்டன. தொடர்ச்சியாக ஏதாவது வேலை செய்துகொண்டேயிருப்பதன் மூலம் தனது அலுப்பைக் கடந்து போய்விடுகிறாளோ என்று தோன்றியது.

நரை மயிர்கள் பெண்களுடன் பேசும் என்று அம்மா சொல்வாள். இவளிடம் அவளது நரைமயிர் என்ன பேசியிருக்கும் எனத் தெரியவில்லை.

மாற வேண்டும் என்று நீ நினைக்கவில்லையா என்று கேட்க நினைத்தார். ஆனால் அதை அவளிடம் கேட்கவில்லை. அவள் தலையணையால் முகத்தை மூடியபடியே உறங்கத் துவங்கியிருந்தாள். இதே போலத்தான் இத்தனை ஆண்டுகாலமாகத் தூங்குகிறாள். அது அவளது இயல்பு. ஒருவர்  போல இன்னொருவரால் உறங்கவே முடியாது. அன்றிரவு குழப்பமான சிந்தனைகள் அவரை வாட்டி எடுக்க ஆரம்பித்தன.

சொந்த வீடு வாங்கியாகிவிட்டது. பேங்க் சேமிப்பு இருக்கிறது. பிள்ளைகள் ஒழுங்காகப் படிக்கிறார்கள். உடம்பில் சக்கரை நோய் வந்துவிட்டது. இனி என்ன மிச்சமிருக்கிறது. ஆனால் வாழ்வின் பாதியில் தானே வந்துநிற்கிறேன். சைக்கிள் சுற்றுபவன் ஒரே வட்டத்திற்குள் ஓய்வேயில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பது போன்றதுதான் மிச்சமிருக்கும் வாழ்க்கையா? அதுதான் நிஜமென்றால் அது எவ்வளவு பெரிய தண்டனை!

இதை அனுமதிக்கக் கூடாது, மாறிவிட வேண்டும்.

ஒருநாள் பேருந்தில் போவதற்குப் பதிலாக ஆட்டோ வில் அலுவலகம் போய் பார்த்தார். வீட்டு உணவைச் சாப்பிடாமல் பீட்சா கார்னரில் போய் பீட்சா சாப்பிட்டுப் பார்த்தார். கோடு போட்ட சட்டைக்குப் பதிலாக டீசர்ட் போட்டார். வழக்கமாகக் கேட்கும் பழைய பாடல்களுக்குப் பதிலாக ராப் பாடல்கள் கேட்கத் துவங்கினார். விடுப்பு எடுத்து ஊட்டிக்குப் போய் தனியே இருந்து வந்தார். ஆனால் இந்த மாற்றங்கள் எதுவும் அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. மாறாக, மனம் பழைய விஷயங்களை ஆழமாகப் பற்றிக் கொள்ளத் துவங்கியது.

இவ்வளவுதானா வாழ்க்கை, இதற்காகவா ஓடியோடி வேலை செய்தோம். அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எங்கோ ஒரு தவறு செய்திருக்கிறோம் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. ஆனால் அந்தத் தவறை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. எதிலும் ஒன்ற முடியாத தத்தளிப்பு அவரை இப்படிக் காரணமில்லாத எண்ணங்களாகத் துரத்தியது.

***

பேருந்து கிண்டி வந்து நின்றதும் இறங்கி அவர் ராஜ் பவனை நோக்கி நடந்து போகத் துவங்கினார். பலமுறை பேருந்தில் இதைக் கடந்து போயிருக்கிறார். ஒருமுறை கூட ராஜ்பவன் உள்ளே போனது கிடையாது. இப்போது யார் கவர்னர் என்று கூட அவருக்குத் தெரியாது.

ஆர்ச் உள்ளே நடந்தபோது வெள்ளையும் காக்கியுமாக யூனிபார்ம் அணிந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை நிறுத்தி யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர் மின்சாரத்துறையில் இருந்து வருவதாகச் சொன்னார்.  அவரை உள்ளே செல்வதற்கு அனுமதித்தார்கள். இவ்வளவு பசுமையான மரங்கள் அடர்ந்த பகுதி சென்னைக்குள் தானிருக்கிறது என்பது வியப்பாக இருந்தது. கவர்னரின் மாளிகை என்பது பழங்கால அரண்மனை போல இருந்தது. அதைக் கடந்து உள்ளே போனபோது ஒரு இளம்பெண் சைக்கிளில் சாய்ந்து உட்கார்ந்தபடியே தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் பேச்சின் ஊடாகவே அவரைப் பார்த்து மெலிதாகப் புன்னகை செய்தாள்.

அவர் நடந்து உள்ளே சென்றபோது சிவப்பு ஓடு வேய்ந்த குடியிருப்புகள் தெரிந்தன. முதுமலையில் பார்த்த வனசரகர்களுக்கான குடியிருப்புகள் நினைவிற்கு வந்தன. பசுமையின் ஊடாக அமைந்த அந்த வீடுகளும் அதன் முகப்பில் பீச்சியடிக்கும் தண்ணீர்க் குழாயும்  சாலை முழுவதும் உதிர்ந்து கிடக்கும் பூக்களும் விட்டு விட்டுக் கேட்கும் குயிலின் குரலும் அந்த இடத்தை மிகுந்த ஈர்ப்புடையதாக்கியது.
மான்கள் எங்கேயிருக்கின்றன என ஒரு நடுத்தர வயது ஆளிடம் கேட்டதும் அவன் தெற்குப்பகுதியை நோக்கி கையைக் காட்டினான்.

அந்த மண்சாலையில் உள்ளே நடந்தபோது காய்ந்து போன சருகுகள் பழுத்து மக்கியிருந்த வாசனை அடித்தது. கவர்னர் மாளிகையின்  புறத்தோற்றத்திற்கு மாறாக உட்புறம் அடர்ந்த காடு ஒன்றின் பகுதி போலவே இருந்தது. அவரது காலடிச் சப்தம் கேட்டு எங்கிருந்தோ ஒரு பறவை சடசடவென சிறகடித்துப் பறந்து போனது.

அவர் ஈரம் படிந்த மண்ணில் நடந்து திரும்பியபோது காய்ந்துபோன புற்களின் ஊடாக நாலைந்து மான்கள் வெயில்பட படுத்துக் கிடப்பதைக் கண்டார். அந்த மான்கள் சோர்வுற்றிருந்தன. அதன் கண்களில் அச்சம் மேலோங்கியிருந்தது. அவை வாகனங்களின் சிறுசப்தத்திற்குக் கூட திடுக்கிட்டு எழுந்தன. நகரம் மான்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமில்லை. சூழ்நிலைக்குப் பழகிப் போய்விடுவதுதான் மான்களின் பிரச்சினை.  தனக்கு விருப்பமான சூழ்நிலையை மான்களால் உருவாக்கி கொள்ள முடியாது.  வாழ்நாள் முழுவதும் துரத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டியதுதான் அதன் வாழ்க்கை, எவ்வளவு பெரிய அவலமது.

மான்களைப் பார்க்கப் பார்க்க அதன் உடலில் இருந்த புள்ளிகள் உதிர்ந்து போய் அவை வெறும் ரப்பர் பொம்மைகள் போல தோன்றின. தான் காணவிரும்பியது இது போன்ற சலிப்பூட்டும் மான்களையில்லை. இவை நகரவாசிகள் வேடிக்கை பார்ப்பதற்காக  வளர்க்கப்படும் மான்கள்.

இந்த நகரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது என்பதை நினைவூட்டுவதற்காக மிச்சமிருக்கும் மான்கள். இவை குற்றவுணர்வின் சின்னங்கள். மனசாந்தியை அளிப்பதற்குப் பதிலாக இவை குற்றவுணர்வைத் தூண்டுகின்றன.

ஒரு மான் வீசி எறியப்பட்ட காகிதம் ஒன்றினை முகர்ந்து பார்த்துவிட்டு மூக்கால் உரசத் துவங்கியது. எரிச்சலூட்டும் இந்த மான்களை ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். போய்விடலாம் என்று தோன்றியது.

நிழல் விரிந்து கிடந்த மரங்களுக்கு இடையில் நடந்து வந்தபோது சிவப்பு ஓடு வேய்ந்த வீடுகள் தென்பட்டன. அதன் ஊடாகவே நடந்தார்.  ஒரு வீட்டின் வாசலில் கோடுபோட்ட ஜிப்பா அணிந்த ஒரு முதியவர் கையில் ஒரு மான்குட்டியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது,

ஆச்சரியத்துடன் அவரை நெருங்கிப் போய் நின்றார்.

அந்த முதியவர் சிறிய பால்புட்டி ஒன்றினை மானுக்குப் புகட்டி விட்டுக் கொண்டிருந்தார். மான் புட்டிப்பால் அருந்துவது வியப்பாக இருந்தது. மான் குட்டியைத் தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. வய-தானவர். சும்மா தொடுங்க என்றார். அவர் மான்குட்டி-யின் உடலில் கை வைத்தபோது மிருதுவாக, கோரைப் புல்லைத் தடவுவது போல இருந்தது. மானின் மூச்சுக் காற்று சீராகக் கையில் பட்டுக் கொண்டிருந்தது.

“இந்த மான்குட்டியோட தாய் ரோட்டை கிராஸ் பண்றப்போ கார்ல அடிபட்டுச் செத்துப்போச்சி. அதான் குட்டியைத் தூக்கிட்டு வந்து நான் பால்குடுத்து வளக்கேன். தானாக இரை எடுக்கிற வரைக்கும் வளர்த்து விட்டுட்டா அப்புறம்  அது புல்லைத் தின்னு வளர்ந்துக்கிடும். இப்படி எது மேலயாவது நாம அக்கறை காட்டாட்டி நாம வாழ்ந்து என்ன பிரயோசனம்? சொல்லுங்க” என்றார்.

அவர் மௌனமாக அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

இது முதுமையில் ஏற்படும் மனப்பக்குவம். மிச்சமிருக்கும் வாழ்க்கையை இப்படி மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அன்பைப் பற்றி பேசச் செய்கிறது. அதிகாரியாக இவர் வேலை செய்த காலத்தில் தனது அலுவலகத்தை விட்டுவிட்டு இப்படி மான்குட்டிக்குப் புட்டிப்பால் கொடுப்பாரா என்ன… சூழ்நிலையைத் தனக்குச் சாதமாக்கிக் கொள்கிறார். அவ்வளவே. நாளை இந்த மான்குட்டியைப் பற்றி இவர் ஒரு கட்டுரை எழுதுவார். மான்குட்டியை அணைத்தபடியே உள்ள தனது புகைப்படங்களை நண்பர்களிடம் காட்டி சந்தோஷப்படுவார். சுயநலம் கலந்த அன்பிது.
அவர் வெளியேறிச் சாலையில் நடந்தபோது வெயில் உச்சிக்கு வந்திருந்தது. வீடு செல்லும் பேருந்தில் ஏறிய போது ஒரு பள்ளிச் சிறுவன் அருகே இருக்கை காலியாக இருந்தது. அதில்  போய் உட்கார்ந்து கொண்டார்.

அந்த சிறுவன் சாலையை வேடிக்கை பார்த்தபடியே வந்தான். அவனிடம் “நீ மானைப்  பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

அவன் டி.வி.யில் பார்த்திருப்பதாகச் சொல்லியதோடு, தன்னால்  நன்றாக மானை வரையமுடியும் என்றான்.

தான் ஒரு அதிசயமான நீலப்புள்ளிகள் கொண்ட மழைமானைப் பார்த்து வந்ததாகவும், அந்த மான் அமேசான் மழைக்காடுகளில் மட்டுமே வாழக்கூடியது என்றும், அந்த மான் மழைத்துளியைத் தவிர வேறு தண்ணீரை அருந்தாது என்றும் தொடர்ச்சியாகப் பொய் சொல்லத் துவங்கினார். சிறுவன் வியப்போடு “அப்படியான மான் எங்கேயிருக்கிறது” என்று கேட்டான்.

தான் இப்போது தான் அதை கவர்னர் மாளிகையினுள் கண்டதாகவும், அதை மெக்சிகோவில் இருந்து கொண்டு வந்திருப்பதாகவும் கதைவிடத் துவங்கினார். அந்த சிறுவன் நீலநிறப் புள்ளிகள் எது போல இருந்தன என்று கேட்டான். அது எரியும் சுடர் போல ஒளிர்ந்தன என்று சொன்னார். அந்த சிறுவன் கண்ணை மூடிக் கொண்டு நீலப்புள்ளி கொண்ட மழைமானைப் பற்றிக் கற்பனை கொள்ளத் துவங்கினான். அதன்பிறகு அச்சிறுவன் மானைப் பற்றிக் கேட்டுக் கொள்ளவில்லை.

பேருந்தை விட்டு இறங்கும்போது சிறுவனை ஏமாற்றியது மிகவும் வருத்தமாக இருந்தது. தான் நிஜமாக நீலப்புள்ளி உள்ள ஒரு மழைமானைக் கண்டிருக்கக் கூடாதா என ஆதங்கமாக இருந்தது.
வீடு வந்து சேரும்போது திடீரெனத் தோன்றியது, எதையுமே நாமாக கற்பனையில் நினைத்துக் கொள்வது தான் சுகம். நிஜம் ஒருபோதும் ருசிப்பதில்லை. தேவையில்லாமல் நம்மை நாம் அலைக்கழித்துக் கொள்கிறோம் என்று.

வீடு வந்த சேர்ந்தவுடன் அவரது மனைவி  அலுவலகப் பையை வாங்கி வைத்துவிட்டு “முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு? கிட்ட வாங்க, கண்ல ஏதோ ஒட்டியிருக்கு” என்றாள்.
சட்டையைக் கழட்டிக் கொடியில் போட்டபடியே சொன்னார்:

“அது மானோட உடம்புல இருந்து உதிர்ந்த புள்ளியாக இருக்கும். இன்னைக்குத் திடீர்னு ஆபீஸ்ல இருந்து கவர்னரைப் பார்க்கப் போகச் சொல்லிட்டாங்க. அங்கே ஒரு மழைமானைப் பார்த்தேன். அப்பா, என்ன ஒரு ஜொலிப்பு! நீ பாக்கணுமே. அந்த மான் மழைத்துளியைத் தவிர வேறு எதையும் குடிக்காதாம்” என்று கடகடவென தனக்குத் தோன்றிய கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவள் அதைக்கேட்டு சிரித்தபடியே சொன்னாள்:

“போதும் உங்க கதை. நான் ஒண்ணும் பச்சைப்பிள்ளையில்லை, எனக்கும் வயசாகுது.”

“எனக்கும்தான்” என்றபடியே அவர் சிரித்துக் கொண்டார். பிறகு அப்படி சிரித்ததற்காக மிகவும் வருத்தமாக உணர்ந்தார். அந்த வருத்தமான மனநிலையின் அடியாழத்தில் மழைமான் ஒன்று பெரும் சிறகுகளுடன் பசுமையான வனத்தில் பறந்து கொண்டிருந்தது சற்று ஆறுதலாக இருந்தது.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #5 on: May 31, 2013, 03:48:37 PM »
கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

சிறுகதை

தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி வெளியான நாள் செப்டம்பர் 20  ஞாயிற்றுகிழமை, 1998, அப்போது அவளுக்கு வயது இருபத்திமூன்று,

கோகிலவாணியை இப்போது யாருக்கும் நினைவிருக்காது, ஒருவேளை நீங்கள் தினசரி பேப்பரைத் தவறாமல் படிக்கின்றவராகயிருந்தால் உங்கள் நினைவின் ஏதாவது ஒரு மூலையில் அவள் பெயர் ஒட்டிக் கொண்டிருக்க கூடும், ஆனால் தினசரி செய்திகளை யார் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவை சாலைவிபத்துக்களைக் கூட சுவாரஸ்யமான நிகழ்வாக மாற்றிவிடுகின்றன, ரத்தக்கறை படியாத நாளிதழ்களேயில்லை,

விபத்தில் இறந்த உடல்களின் புகைப்படங்களை ஏன் நாளிதழ்கள் இவ்வளவு பெரியதாக வெளியிடுகின்ற்ன, யார் அதைக் காண்பதற்கு ஆசைப்படுகின்றன மனிதன், ஒருவேளை வன்முறையின் களியாட்டத்தை நாம் உள்ளுற விரும்புகிறோமோ, கோகிலவாணியை தலைப்பு செய்தியாக்கியதற்கு நாம் காரணமில்லை என்று ஒதுங்கிக் கொள்ளமுடியாது, அவள் நம்மைக் குற்றம் சொல்லவில்லை, ஆனால் அவள் நம்மை கண்டு பயப்படுகிறாள், நம் யாவரையும் விட்டு விலகிப் போயிருக்கிறாள்,

இன்றைக்கும் அவளது கால்கள் சாலையில் நடப்பதற்கு பயப்படுகின்றன, கைகள் தன்னை அறியாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றன, யாராவது அருகில் வருவதைக் கண்டால் கண்கள் காற்றிலாடும் அகல்விளக்கின் சுடரைப்போல தட்டளிகின்றன, இவ்வளவு ஏன்  அவளுக்கு உறக்கத்தில் கூட நிம்மதியில்லை, குரூரக்கனவுகளால் திடுக்கிட்டு அலறுகிறாள்,

அவள் சாகவாசமாகப் புழங்கி திரிந்த உலகம் ஒருநாளில் அவளிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டது, தோழிகள். குடும்பம். படிப்பு, வேலை அத்தனையும் அவளிடமிருந்து உதிர்ந்து போய்விட்டிருந்தது, களிம்பு மருந்துகளும் டஜன் கணக்கான மாத்திரைகளும் ரணசிகிட்சையும் அவளது அன்றாட உலகமாகியிருக்கிறது, அழுதழுது ஒய்ந்து ஒடுங்கிப் போயிருக்கிறாள், பலநேரங்களில் தன்னைக் கழிப்பறை மூலையில் வீசி எறியப்பட்ட பாதி எரிந்துபோன தீக்குச்சி ஒன்றை போலவே  உணர்ந்திருக்கிறாள்,

ஒரு சம்பவம் என்று எளிதாக நாளிதழ்களால் விவரிக்கப்பட்ட அந்த துயர நிகழ்வு இப்படியாகத் தான் செய்திதாளில் விவரிக்கபட்டிருந்தது


சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் கோகிலவாணி என்ற 23 வயது பெண் மீது துரை என்ற வாலிபர் ஆசிட் வீசினார். இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் துரை என்பவர் கோகிலவாணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், கோகிலவாணியோ மகேஷ் என்ற கல்லூரி மாணவனை காதலித்து வந்திருக்கிறார்

தனது காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்று கோகிலவாணியை துரை பலமுறை எச்சரித்திருக்கிறான், ஆனால் துரையின் காதலை அவள் ஏற்றுக் கொள்ளவேயில்லை, இதனால் ஆத்திரமான துரை தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோருடன் கூடிப் பேசி கோகிலவாணியின் முகத்தில் ஆசிட் வீச தம்புசெட்டி தெருவில் உள்ள ஒரு கடையில் `சல்பியூரிக்‘ ஆசிட்டை வாங்கியிருக்கிறான். மறுநாள் காலை கிண்டி ரயில்நிலையத்திற்கு செல்லும் வழியில் கோகிலவாணியை வழிமறித்து ஆசிட்டை ஊற்றிவிட்டுத் துரை தப்பியோடினான்.

இதனால் கோகிலவாணியின் முகம்  வெந்து போனது. சம்பவ இடத்தில் அலறியபடியே மயங்கி  விழுந்த அவளை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 60 சதவீத அளவுக்கு முகம்வெந்து போய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரை மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்,


**

பதினைந்து வயதிலே காதலிப்பதை பற்றிய கற்பனைகள் கோகிலவாணிக்குள் புகுந்துவிட்டன, பள்ளி நேரத்தில் அதைப்பற்றியே அவளும் தோழிகளும் ரகசியமாக பேசிக் கொண்டிருப்பார்கள், காதலைப்பற்றி பேசும்போதெல்லாம் பனிக்கட்டியை உள்ளங்கையில் வைத்துக் கொண்டிருப்பதை போல அவள் உடலில் கிளர்ச்சி உருவாவதை உணர்ந்திருக்கிறாள்,

சாலையில், பயணத்தில், பொதுஇடங்களில் தென்படும் பதின்வயது இளைஞர்களை காணும் போதெல்லாம் இதில் யார் தன்னைக் காதலிக்கப்போகிறவன் என்று குறுகுறுப்பாக இருக்கும், அவள் காதலிப்பதற்காக ஏங்கினாள், யாராலோ காதலிக்கபடுவதற்காக காத்துக் கொண்டேயிருந்தாள், அதைப்பற்றி தனது நோட்டில் நிறைய கிறுக்கி வைத்திருக்கிறாள், கவிதைகள் கூட எழுதியிருக்கிறாள்

அவளுக்கு திவாகர் என்ற பெயர் பிடித்துப் போயிருந்த்து, இவ்வளவிற்கும் அந்த பெயரில் ஒருவரையும் தெரியாது, ஆனால் ஏனோ அந்த பெயர் பிடித்திருந்த்து, அந்தப்பெயரிலே ஒருவனை காதலிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கூட தோன்றியது, ஆனால் அது நடக்குமா என்ன,

அந்த பெயரை தன் பெயரோடு சேர்த்து திவாகர் கோகிலவாணி என்று ரகசியமாக எழுதி பார்த்துக் கொண்டேயிருப்பாள், ஒரு நாள் தோழி இந்திரா அவளிடம் யாருடி அந்த திவாகர் என்று கேட்டதற்கு பக்கத்துவீட்டில் இருக்கின்ற பையன் அவனை நான் லவ் பண்ணுகிறேன் என்று பொய் சொன்னாள்,

அந்த பொய்யை இந்திரா நம்பிவிட்டதோடு அந்த காதல் எப்படி ஆரம்பித்த்து, எவ்வளவு நாளாக நடக்கிறது என்று கேட்கத்துவங்கிவிட்டாள், அவளுக்காகவே கோகிலவாணி நிறைய கற்பனை செய்து திவாகரை பற்றி கதைகதையாக சொல்லிக் கொண்டேயிருப்பாள்,

அதை கேட்டதில் இருந்து இந்திராவும் யாரையாவது காதலிக்க விருமபினாள், ஆனால் எப்படிக் காதலிப்பது என்று பயமாக இருந்த்து, அவர்கள் டியூசன் படிக்கப் போகின்ற வீட்டில் இருந்த முரளிடம் இந்திரா தயங்கி தயங்கி தான் அவளை காதலிப்பதாகச் சொன்னாள், அவன் தானும் அவளை காதலிப்பதாக சொல்லி மாடிஅறைக்கு வரச்சொல்லியிருந்தான்,

பயமும் ஆர்வமுமாக மாடிக்குப்போன இந்திரா கத்தி அலறியபடியே கிழே இறங்கி ஒடிவந்தாள், என்னடி ஆச்சு என்று கோகிலா கேட்ட போது இந்திரா பதில் சொல்லவேயில்லை, அழுது கொண்டேயிருந்தாள், வீடு திரும்பும் போது பேருந்தில் வைத்து லவ் பண்றேனு சொல்லிட்டு கிஸ் குடுத்து உதட்டை கடிச்சிட்டான்டி, அசிங்கமாக இருக்கு, என்று சொல்லியபடியே கண்ணீர் விட்டாள்,

கோகிலவாணிக்கு நல்லவேளை நாம் யாரையும் காதலிக்கவில்லை என்று தோன்றியது, மறுநாள் முழுவதும் இந்திரா லவ் பண்ணுவது தவறு என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள், உள்ளுற அதை ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இந்திராவிற்காக தானும் திவாகரை லவ் பண்ணுவதை விட்டுவிட்டதாக சொன்னாள் கோகிலவாணி, ஆனால் மனதிற்குள் பலவந்தமாக கிஸ் பண்ணாத  நல்லபையனாகப் பார்த்து லவ் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருந்த்து

••

கோகிலவாணி எட்டாவது படிக்கும் போது ருதுவெய்தினாள், பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்டு சில மாதங்கள் அருகாமையில் இருந்த எஸ்டிடி பூத்தில் வேலை செய்தாள், அங்கே வரும் இளைஞர்களில் ஒருவன் கூட அவளை கண்டுகொள்ளவேயில்லை, கருத்துப்போய் மெலிந்த உடலோடு இருப்பதால் தான் தன்னை எவருக்கும் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக் கொள்வாள், அவளிடம் இரண்டே இரண்டு நல்ல சுடிதார்கள் இருந்தன, அதையே மாற்றி மாற்றி போட்டுக் கொண்டு வேலைக்கு போவாள், சம்பளப்பணத்தில் மஞ்சளும் சந்தனமும் கலந்த டர்மெரிக் கிரிம் வாங்கி உடல்முழுவதும் பூசிப் பார்த்தாள், பேர் அண்ட் லவ்லியை வாங்கி ரகசியமாக உபயோகித்து பார்த்திருக்கிறாள், பாலில் குங்குமப்பூபோட்டு குடித்து அழகை மேம்படுத்த முயன்றிருக்கிறாள், அப்படியிருந்தும் அவள் மீது யாருக்கும் ஈர்ப்பு ஏற்படவேயில்லை.

எஸ்டிடி பூத் நடத்தும் சொக்கநாதன் தினசரி அவளை அனுப்பி சிகரெட் வாங்கி வரச்சொல்வான், அவள் ஒரு பெண் என்று கூடகவனிக்காமல் பச்சை பச்சையாக போனில் பேசிக் கொண்டிருப்பான், தன்னை ஒரு பெண்ணாக கூட அவன் மதிப்பதில்லையே என்ற ஆதங்கம் கோகிலவாணிக்கு நிறைய இருந்தது,

தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் போது தனக்கு மட்டும் ஏன் கழுத்து எலும்புகள் இப்படி தூக்கி கொண்டிருக்கின்றன, தாடை ஒடுங்கிப்போயிருக்கிறது என்று ஆத்திரமாக வரும், தன்னை எப்படியாவது அழகாக்கி கொண்டுவிட வேண்டும் என்று புதுசுபுதுசாக சோப்பு வாங்கி பார்த்தாள், தலைமயிரை சுருளவிட்டு பார்த்தாள், மூன்று மாதம் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பிற்கு கூட போய்வந்தாள், ஆனாலும் யாரும் அவளைக் காதலிக்கவேயில்லை

ஒரு மாலைநேரம் போன் செய்யவந்த ஜீன்ஸ் மற்றும் வெள்ளைகோடு போட்ட சட்டை அணிந்த இளைஞன் அவளிடம் வேண்டும் என்றே சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்துவிட்டு அவளது பெயரை கேட்டு தெரிந்து கொண்டு போனான், அந்த நிமிசமே அவன் மீது காதல் உருவாக ஆரம்பித்தது,  அவன் மறுபடி எப்போது வருவான் என்று காத்துக் கொண்டேயிருந்தாள், பெயர் கூட தெரியாமல் அவனை மனதிற்குள் காதலித்து கொண்டிருந்தாள்

ஆனால் ஒருநாள் அந்த பையன் பைக்கில் ஒரு இளம்பெண்ணை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சினிமா தியேட்டர் பக்கமாக போகையில் அவளை கையை காட்டி ஏதோ சொல்லிவிட்டு போவதை கண்டதும் அவன் மீது ஆத்திரமாக வந்தது,

காதலிக்க துவங்கும் முன்பே காதல் தோல்வியிடைந்துவிட்ட கோபத்தில் அவள் இரண்டு மூன்று நாட்கள் மதியச்சாப்பாடை சாப்பிடாமலே தூக்கி எறிந்தாள், ஆனால் பசியை அவள் காதலால் வெல்லமுடியவில்லை,

சில வேளைகளில் கடற்ரைக்கு போகையில் இவ்வளவு பேர் எப்படி காதலிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும், கடலை வேடிக்கை பார்ப்பதை விடவும் காதலர்களையே பார்த்துக் கொண்டிருப்பாள், அவளை விட சுமாராக உள்ள பெண்கள் கூட காதலிக்கிறார்கள், தன்னை ஏன் ஒருவரும் காதலிக்கவில்லை என்று ஆதங்கமாக இருக்கும், அதை நினைத்து நிறைய கவலைப்பட்டிருக்கிறாள், அதிகமாக சம்பளம் வாங்குகின்ற பெண்ணால் இருந்தால் காதலிப்பார்கள் என்று இந்திரா சொன்னதை கேட்டது தாங்கமுடியாத வருத்தமாக இருந்தது, காதல் மட்டும் தான் அவள் வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோல் போல நினைத்துக் கொண்டிருந்தாள்

மாம்பலத்தில் சொக்கநாதன் புதிதாக துவங்கியிருந்த ஜெராக்ஸ் கடைக்கு அவளை இடம் மாற்றிய போது தினசரி மின்சார ரயிலில் போய்வர வேண்டிய அவசியமானது, அப்படி தான் மகேஷை சந்தித்தாள், இரண்டுநாட்களில் பேசிப்பழகிவிட்டான்,

மகேஷ் அவளை விட ஒல்லியாக இருந்தான், பெரும்பாலும் நீலநிற பேண்ட் தான் அணிந்துவருவான், ஒரு ஒரியண்ட் சலூனில் வேலை செய்து கொண்டிருப்பதாக சொன்னான், மகேஷை அவளுக்கு பிடித்து போனது, தினமும் மகேஷ்  அவளுக்காக டிபன் பாக்ஸில் ஏதாவது ஒரு உணவு கொண்டுவருவான், ரயிலில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டால்கூட அவன் கை அவள் மீது படாமல் பார்த்துக் கொள்வான், அவளது தண்ணீர்பாட்டிலை வாங்கி குடிக்கும் போது கூட அண்ணாந்து தான் குடிப்பான், அதை விடவும் அவள் புது உடையோ. பாசியோ. பொட்டோ. ஹேர்கிளிப்போ எது அணிந்து வந்தாலும் இது உன்க்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது என்று பாராட்டுவான், அதனாலே தான் ஒரு நல்லவனை காதலிப்பதாக பெருமை கொண்டாள் கோகிலவாணி

ஒருநாள் மாலை மகேஷ் வருவதற்காக மாம்பலம் ரயில் நிலையத்தின் அருகில் காத்திருந்த போது கால்வலிக்கிறது என்று ஒரு பைக்கில் சாய்ந்து நின்றிருந்தாள், எதிர் கடையில் இருந்து ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், அவன் தன்னை பார்க்கிறான் என்று உணர்ந்த மறுநிமிசம் தனது துப்பட்டாவை சரிசெய்துவிட்டு தலையை குனிந்து கொண்டாள் கோகிலவாணி, அந்த இளைஞன் ஒரு சிகரெட்டை பற்றவைத்துவிட்டு அவளை பார்த்துக் கொண்டே புகையை ஊதிக் கெர்ண்டிருந்தான், மகேஷ் வருவதற்கு தாமதமாவது ஆத்திரமாக வந்தது, அவன் சிகரெட்டை அணைத்துவிட்டு அருகில் வந்து நின்று இது என் பைக், வேணும்னா ஏறி உட்காந்துகிடலாம் , இல்லை எங்கே போகணும்னு சொல்லுங்க நானே கொண்டுபோய்விடுறேன் என்று சொல்லி சிரித்தான்,

அதை பவ்வியமாக அவன் சொன்னவிதம் அவளுக்கு சிரிப்பாக வந்த்து, அதை கேட்ட அந்த இளைஞன் பைக்சாவியை எடுத்து நீங்களே வேணும்னாலும் ஒட்டிகிட்டு போகலாம் என்றான், கோகிலவாணி வேண்டாம் என்று மறுத்துவிட்டு சிரிப்போடு நகர்ந்து  நின்று கொண்டாள், அந்த இளைஞன் அவளிடம் வீடு எங்க என்று கேட்டான், அவள் பதில்சொல்லாமல் ஸ்டேஷனையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் தன் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலையை வாறிவிட்டபடியே ஒரு பபிள்கம்மை எடுத்து அவளிடம் நீட்டினான்,

அவள் விடுவிடுவென ரயில்நிலையத்தின் உள்பகுதியை நோக்கி நடந்து போக துவங்கினாள், அவன் சிரிப்பது கேட்டது, மகேஷ் வந்து சேரும்வரை அவள் திரும்பி பார்க்க்கவேயில்லை, மகேஷிடம் அந்த இளைஞனை பற்றி சொல்லவா வேண்டாமா என்று தயக்கமாக இருந்த்து, ஆனால் சொல்லவேயில்லை,

இரண்டு நாட்களின் பின்பு அந்த பைக் இளைஞனை மறுபடியும் ரயிலில் பார்த்தாள், அவன் நெருங்கி அருகில் வந்து நின்று அவளையே பார்த்தபடியே வந்தான்,  கோகிலவாணி அவனை ஒரக்கண்ணால் பார்க்கும் போது அவன்  உதட்டை கடிப்பதும் உள்ளங்கையில் ஐ லவ்யூ, யுவர்ஸ் துரை என்று தன் பேனாவில் எழுதிக்காட்டுவதும், கள்ளசிரிப்புடன் கையசைப்பதுமாக இருந்தான்,

ஒருவாரத்தின் பிறகு ஒருநாள் காலையில் அவள் ரயிலை விட்டு இறங்கி நடக்கும்போது அருகில் வந்து உனக்காக தான் தினம் தாம்பரத்துல இருந்து இதே ரயில்ல வர்றேன் என்றான், , கோகிலவாணி  அவனிடம் பேசவேயில்லை

அவனோ நெடுநாள் பழகியவன் போல அருகில் வந்து படத்துக்குப் போவமா என்று கேட்டான், அவளுக்கு அதை கேட்ட போது பயமாக வந்த்து, அதைக்காட்டிக் கொள்ளாமல் எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்றாள்,

துரை சிரித்தபடியே அப்போ நீ என்னை லவ் பண்ணலையா என்று கேட்டான், கோகிலவாணி கோபத்துடன் நான் எதுக்கு உன்னை லவ் பண்ண்ணும் என்று கேட்டாள்,

அப்போ அன்னைக்கு மட்டும் சிரிச்சே, தினம்தினம் லுக்விட்டயே அது எதுக்கு என்றான் துரை,

நான் ஒண்ணும் உன்னை லவ் பண்ணலே, நான் மகேஷை லவ் பண்றேன், பிரச்சனை பண்ணாம போயிடு என்றாள்,

உடனே துரை பச்சை பச்சையாக அவளை திட்டியதோடு நீ என்னை லவ் பண்ணிதான் ஆகணும், நான் டிசைட் பண்ணிட்டேன் என்றான், அவனுக்கு பயந்து கொண்டு சில நாட்கள் பஸ்ஸில் வரத்துவங்கினாள்,

ஒருநாள் மகேஷிடம் ஒரு பையன் தன்னை பின்னாடியே துரத்துவதாக சொன்னாள், மகேஷ் சற்றே கலக்கத்துடன் நான் பேசிப்பாக்குறேன் என்று ஆறுதல் சொன்னான், அதன் இரண்டு நாட்களுக்கு பிறகு மகேஷ்ஷை பார்க்கவே முடியவேயில்லை, அவனை தேடி ஒரியண்ட் சலூனுக்கு போன போது மகேஷின் முகத்தில் அடிவாங்கிய  வீக்கமிருந்த்து,

மகேஷ் தலையை குனிந்தபடியே அந்த ரௌடிப்பய துரை என்னை அடிச்சிட்டான் கோகிலா, நாம ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்தா கொன்னுருவேன் சொல்றான், என்ன செய்றதுனு தெரியலை, சலூன் ஒனர்கிட்டே யோசனை கேட்டேன், லவ் எல்லாம் எனக்கு சரிப்படாதுனு சொல்றார், இப்போ என்ன செய்றதுனு தெரியலை ஒரே குழப்பமா இருக்கு என்றான், கோகிலவாணி அங்கேயே அழுதாள், மகேஷ் சலூன் ஒனரிடம் சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு போய் அருகாமை தேநீர்கடையில் ராகிமால்ட் வாங்கி தந்து நிறைய அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைத்தான்.

அதன்பிறகு மகேஷ் அவளை பார்க்க வரவேயில்லை, ஆனால் கோகிலாவால் காதலைவிட முடியவில்லை, திரும்பவும் ஒருநாள் மகேஷை காண சலூனுக்கு போனாள், அப்போது சலூனில் யாருமேயில்லை, மகேஷ் மட்டும் தனியே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான், அவளை பார்த்தவுடன் சலூன் நாற்காலியில் உட்கார சொன்னான், எதிரில் உள்ள கண்ணாடியில் அவள் முகம் தெரிந்த்து, மகேஷ் சிரிப்போடு உனக்கு முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணிவிடவா என்று கேட்டான்,

கோகிலவாணி ஆத்திரத்துடன் அவனை திட்டினாள், பிறகு ஆவேசமானவள் போல அவனை கட்டியணைத்து இறுக்கமாக முத்தம் கொடுத்தாள், அதன்பிறகு இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டேயிருந்தார்கள், ஒன்றாக அன்று வீடு திரும்பினார்கள், கோகிலவாணி மறுபடியும் காதலிக்க துவங்கினாள்,

ஆனால் அவர்களை ஒன்றாக உதயம் தியேட்டரில் பார்த்த துரை நான் மட்டும் தான்டி உன்னை லவ் பண்ணுவேன், வேற யாரு உன்னை லவ் பண்ணினாலும் நீ செத்தே, உன் மேல ஆசிட் ஊத்திருவேன், பாத்துக்கோ என்று கடுமையாகத் திட்டினான், கோகிலவாணிக்கு அது உண்மையாகப் போகிறது என்று அப்போது தெரியாது,

அதன் இரண்டு நாட்களுக்கு பிறகு துரை நிறைய குடித்துவிட்டு அவளது ஜெராக்ஸ் கடைக்கு வந்து நீ என்னை லவ் பண்றயா இல்லையானு இப்பவே தெரியணும் சொல்லுடி,  என்று மிரட்டினான், கோகிலவாணி அவனிடம் பேசவேயில்லை, அவன் அசிங்கமாக கத்தினான், அவனுக்கு பயந்து சில நாட்கள் வேலைக்கு போகாமலும் இருந்தாள், ஆனால் அவன் விடவேயில்லை, வீட்டின் முன்பு வந்து நின்று கொண்டேயிருந்தான், குளியல் அறையை ஒட்டிய சந்தின் இடைவெளியில் வந்து நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பான், அவளுக்கு பயமாகவும் நடுக்கமாகவும் இருந்தது

••

துரை அவள் மீது ஆசிட் ஊற்றுவதற்கு முந்திய நாள் காலையில் கோகிலவாணியின் அப்பாவிடம் யாரோ அவள் மகேஷை காதலிக்கிறாள் என்பதை பற்றி சொல்லியிருந்தார்கள், அதற்காக அப்பா தன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி அவள் முகத்தில் மாறிமாறி அறைந்ததோடு மகேஷின் ஜாதியை சொல்லி கேவலமாகத் திட்டியதோடு அவள் தன்னுடைய மகள் என்பதையும் மறந்து ஆபாசமான வசைகளை பொழிந்தார்,

அவர் கூடவே செல்வம் அண்ணனும் சேர்ந்து கொண்டு அவன் மட்டும் இல்லைப்பா, துரைனு இன்னொரு பையனும் இவ பின்னாடி சுத்துறான், ஒரே நேரத்தில ரெண்டு பையக கூட சுத்துறா என்று ஏற்றிவிட்டான்,

அப்பா அவள் தலைமயிரை பிடித்து இழுத்து சுவரோடு முட்டவைத்து ஒடுகாலி நாயி என்று மறுபடியும் ஏச ஆரம்பித்தார், அம்மா அவரது பலமான பிடியில் இருந்து கோகிலாவை விடுவித்து சோற்றுகரண்டியால் காலிலும் புட்டத்திலும் அடித்தாள், கோகிலவாணி காதலுக்காக தான் அடிபடுகிறோம் என்பதால் அழுது கத்தவேயில்லை

••

ஆசிட் ஊற்றப்பட போகின்ற நாளின் காலையில் துரை அவள் முன்னால் வந்து நின்றபோது எப்படியாவது அவனிடம் கெஞ்சிப்பேசி தான் மகேஷை காதலிப்பதை புரிய வைத்துவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் கோகிலா,

ஆனால் துரை ஒருவார்த்தை கூட அவளிடம் பேசவும் இல்லை, பேசவிடவும் இல்லை, பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுப்பது போல சிறிய பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை வெளியே எடுத்தான், தொலைவில் மின்சார ரயில் வருவதற்காக ஒசை  கேட்டது, அவள் ரயில் நிலையத்தின் படியை நோக்கி நடப்பதற்கு அவள் முகத்தில் ஆசிட்டை ஊற்றினான்,

கொதிக்கும் நெருப்பினுள் முகத்தை நுழைத்துவிட்டது போல எரிய ஆரம்பித்த்து, காது முகம் நாசி கன்னம் என்று அத்தனையும் உருகியோடுவது போல தாங்கமுடியாத வலி பீறிட்டது, கோகிலவாணி அலறினான், கூட்டத்தை விலக்கி கொண்டு துரை ஒடுவது தெரிந்தது, அவள் முன்னிருந்த உலகம் மெல்ல புகைமூட்டம் கொண்டு மயங்க துவங்கியது,

••

கோகிலவாணி ஆறு வாரங்கள் மருத்துவமனையில் சிகிட்சை பெற்றாள், வலது பக்க முகம் முற்றிலும் எரிந்து போயிருந்த்து, காதின் நுனி சிதைந்து போனதால் பாதி காதே மிச்சமாக இருந்த்து, ஆசிட் முகத்தில் பட்டதோடு பின்னந்தலை வரை பரவியிருந்த காரணத்தால் அவளது தலைமயிரையும் பாதி கத்தரித்து இருந்தார்கள், அவளது தோற்றத்தை காண அவளாலே சகிக்கமுடியவில்லை

அவள் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவளது அப்பாவும் அம்மாவும் உறவினர்களும் மாறிமாறி அவளை மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டேயிருந்தார்கள்,

கோகிலவாணியின் எரிந்த முகத்தை கண்ட அப்பா  அப்படி என்னடி உனக்கு லவ்வு கேட்குது, செத்து போயிருந்தா சனியின் விட்டுச்சினு தலைமுழுகிட்டு போயிருப்பேன், இனிமே உன்னை எவன் கட்டிகிடுவான், உன்னை எங்கே கொண்டு போய் தள்ளுறது என்று தனது முகத்தில் மாறிமாறி அடித்துக் கொண்டு அழுதார்,

எதற்காக காதலிக்க ஆசைப்பட்டோம், காதல் என்பது இது தானா, ஏன் துரை இப்படி தன்முகத்தில் ஆசிட் ஊற்றினான், அவளுக்கு நினைக்க நினைக்க அழுகையும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது

அவள் கூட படித்த மாணவிகள், தெரிந்தவர்கள், தோழிகள் எவரும் அவளைப்பார்க்க வரவேயில்லை, ஆசிட் அடிக்கப்பட்டவளின் தோழி என்று யார் சொல்லிக் கொள்ள ஆசைப்படுவார்கள், மகேஷ் கூட அவளை பார்க்க வரவேயில்லை,

பெண் மருத்துவர் அவள் முகத்தை துடைத்தபடியே உனக்கு எத்தனை லவ்வர்டி என்று நக்கலாக கேட்பார், கோகிலவாணி பதில் சொல்வதேயில்லை,

மருந்தாளுனரும் அவள் முகத்தில் உள்ள காயத்தை துடைத்தபடியே இனிமே உன்னை ஒரு பையனும் திரும்பி பார்க்கமாட்டான், நீ எங்கே வேணும்னாலும் போகலாம், எந்த நேரம் வேணும்னாலும் வீட்டுக்கு வரலாம், உன்னை யாரு பாலோ பண்ண போறாங்க என்பார்,

கோகிலவாணிக்கு ஆத்திரமாக வரும் ஆனால் வாய் திறந்து பேசமாட்டாள் , இப்படி அவமானப்பட்டு வாழ்வதற்கு பதிலாக பேசாமல் அப்பா சொன்னது போல செத்துப்போயிருக்கலாம், எதற்காக பிழைத்துக் கொண்டோம், மிச்சமிருக்கும் வாழ்க்கையை எப்படி கடத்தப்போகிறோம், அந்த வலி ஆசிட்டின் கொதிப்பை விட அதிகமாக இருந்த்து

••

கோகிலவாணி அந்த வழக்கிற்காக இருபத்தியாறு முறை கோர்ட்டிற்கு சென்று வர நேர்ந்த்து, ஒவ்வொரு முறையும் அவளது காதலை யாராவது பரிகாசம் செய்வார்கள், எரிந்த முகத்தை காட்டி அவளது கதையை சொல்லிச் சிரிப்பார்கள், விசாரணைக்கு மகேஷ் வரமறுத்துவிட்டதுடன் தான் அவளை ஒருபோதும் காதலிக்கவேயில்லை என்று காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறான், துரையோ அவள் தன்னை பலமாதங்கள் காதலித்து ஏமாற்றிவிட்டதாக போலீஸில் வாக்குமூலம் தந்திருந்தான், கோகிலவாணி தான் யாரையும் காதலிக்கவில்லை, துரை தன்னை காதலிக்கும்படியாக மிரட்டினான் என்றே சொன்னாள், வழக்கறிஞர் அவள் யாரோடாவது பாலுறவு கொண்டிருக்கிறாளா, ஆண் நண்பர்க்ள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று துருவிதுருவி கேட்டார்,  கோகிலவாணி நீதிமன்றத்தில் நிறைய முறை அழுதிருக்கிறாள், ஆனால் யாரும் அவளை தேற்றவேயில்லை, முடிவில் துரை  தண்டிக்கப்பட்டான்

•••

பாதி எரிந்த முகத்துடன்  எலிவால்முடி போல கொஞசம் தலைமயிருடன் கோகிலவாணி வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடந்தாள், டிவி பார்ப்பது கூட கிடையாது, தலையில் பூ வைத்துக்  கொள்வதோ, கண்ணாடி பார்த்து திருநீறு வைத்துக் கொள்வதோ கூட கிடையாது, ,இரண்டு முறை அவளுக்கு கல்யாணப்பேச்சு துவங்கியது, ஆனால் எவரும் அவளை கட்டிக் கொள்ள முன்வரவேயில்லை, கோகிலவாணி தனிமையை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டில் இருந்தபடியே காளான் வளர்த்துவிற்பனை செய்ய துவங்கினாள், தினமும் அம்மாவும் அப்பாவும் அவளை வாய்க்கு வாய் திட்டினார்கள், வீட்டின் எந்த விசேசத்திலும் அவள் கலந்து கொள்ள அனுமதிக்கபடவேயில்லை, சிரிப்பை மறந்தவளாக  கோகிலவாணி ஒரு நடைப்பிணம் போலவே வாழ்ந்து கொண்டிருந்தாள்

••

உபாசனா என்ற தன்னார்வ நிறுவனம் அவளை தஙகள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்ட போது அவளுக்கு வயது முப்பத்திரெண்டை கடந்திருந்த்து, அது பார்வையற்றவர்களுக்காக சேவை செய்யும் நிறுவனம், பார்வைக்குறைபாடு கொண்டவர்களே அங்கு பெரும்பாலும் பணியாற்றிக் கெர்ண்டிருந்தனர், அதனால் யாரும் அவளை கேலி செய்வார்கள் என்ற பயமின்றி அவள் வேலைக்கு போய்வரத்துவங்கினாள், அங்குள்ள நூலகத்தில் இருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படித்துக் கொண்டேயிருப்பாள்,

சில சமயம் அவள் அறியாமல் உடலின்பம் பற்றி மனது நாட்டம் கொள்ள துவங்கும் அப்போது விரலால் முகத்தை தடவிக் கொள்வாள்,, மின்சாரத்தில் கைப்பட்டது போல மனது உடனே அந்த நினைவில் இருந்து தன்னை துண்டித்துக் கொள்ளும்

••

சென்றவருடத்தில் ஒரு நாள் கடற்கரையில் தற்செயலாக துரையை பார்த்தாள், அவனுக்கு திருமணமாகி பெண் குழந்தையிருந்த்து, இரண்டு வயதான அந்த குழந்தை ஒரு வண்ணபந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது, மணலில் உட்கார்ந்தடிபயே துரையின் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தாள், நல்லநிறம், அரஞ்சு நிற புடவை கட்டியிருந்தாள், கையில் ஒரு ஹேண்ட்பேக், கழுத்தில் நிறைய நகை போட்டிருந்தாள், துரையும் முழுக்கை சட்டை அணிந்து தலையை படிய வாறியிருந்தான்,

ஏனோ துரையின் மனைவியிடம் போய் பேச வேண்டும் போலிருந்த்து, அந்த குழந்தையை ஒருமுறை கொஞ்சலாமா என்று கூட தோன்றியது, அவள் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை துரை கவனித்தவுடன் மனைவியிடம் ஏதோ சொன்னான், அவர்கள் எழுந்து கொண்டார்கள்,

நாம் தானே துரை மீது கோபமும் வெறுப்பும் கொள்ள வேண்டும், அவன் ஏன் தன்னை பார்த்தவுடனே எழுந்து ஒடுகிறான், பயமா, கடந்தகாலத்தின் நினைவுகள் எதுவும் தன்முன்னால் வந்துநின்றுவிடக்கூடாது என்ற பதைபதைப்பா என்ற யோசனையுடன் அவர்கள் போவதையே கோகிலவாணி பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

ஒரு பெண் மீது ஆசிட் அடித்தவன் என்று அவனை பார்த்தால் யாராவது சொல்வார்களா என்ன? அவனுக்கு ஆசிட் வீசியது என்பது ஒரு சம்பவம், ஆனால் தனக்கு, கண்ணில் இருந்து துரை மறையும்வரை அவனையே பார்த்துக் கொண்டேயிருந்தாள்,

கடற்கரையெங்கும் காதலர்கள் நிரம்பியிருந்தார்கள், இவர்களில் ஏதோவொரு பெண் தன்னை போல முகம் எரிந்து போககூடும், அல்லது வன்கொலை செய்யப்படவும் கூடலாம், வசை. அடி. உதை, எரிப்பு, கொலை இவை தான் காதலின் சின்னங்களா, காதல் வன்முறையில் தான்   வேர் ஊன்றியிருக்கிறதா,

அவள் கடல் அலைகளை பார்த்துக் கொண்டேயிருந்தான், இருட்டும்வரை வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று தோனற்வேயில்லை

உலகம் தன்னை கைவிட்டு யாருமற்ற நிர்கதிக்கு உள்ளாக்கி வைத்திருப்பதை உணர்ந்து கொண்டவளை போல நீண்ட நேரத்தின் பிறகு ரயில் நிலையத்தை நோக்கி தனியே நடக்க ஆரம்பித்தாள்,

ரயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்த போது ஏனோ தனக்கு முப்பத்தியாறு வயது முடிந்துவிட்டது என்பது நினைவிற்கு வந்தது.

ரயில் செல்லும்போது வீசிய கடற்காற்று தழும்புகள் நிறைந்த முகத்தில் பட்டதும் மனது தானே காதலைப்பற்றி நினைத்துக் கொள்ள துவங்கியது, உடனே மனதிற்குள்ளிருந்து இத்தனை வருசங்களாகியும் மறையாத திராவகத்தின் எரி மணமும் திகுதிகுப்பும் பீறிட்டு கிளம்பியது, தன்னை மீறிய உள்ளார்ந்த வலியை அவளால் தாஙகிக் கொள்ள முடியவில்லை

கோகிலவாணி திரும்பி பார்த்தாள், எதிர்சீட்டில் ஒரு இளம்பெண் ஒரு இளைஞன் மடியில் சாய்ந்து கொண்டு ரகசியமான குரலில் பேசியபடியே காதலித்துக் கொண்டிருந்தாள்,

கோகிலவாணி அவர்களை பார்க்காமல் வெளியே இருந்த இருட்டையே பார்த்துக் கொண்டு வந்தாள், இருட்டில் பறந்த மின்மினி பூச்சி ஒன்று முகத்தை உரசிக் கொண்டு போனது,

காதல்ஜோடி பேசிச்சிரிப்பதைக் கேட்க கேட்க கோகிலவாணி தன்னை அறியாமல் விசும்பத் துவங்கினாள், தன் காதலை  உலகம் ஏன் ஏற்க  மறுத்தது, எதற்காக தனக்கு இவ்வளவு குரூரமான தண்டனை வழங்கபட்டது என்பதை நினைத்து அவள் அழுது கொண்டேயிருந்தாள், ரயிலின் கூடவே மின்மினிகள் பறந்து வந்து  கொண்டேயிருந்தன, அது இருட்டிற்கு கண்கள் முளைத்து அவள் அழுவதை பார்த்துக் கொண்டிருப்பதை போலவே இருந்தது

••


2011 ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான கதை

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #6 on: May 31, 2013, 04:02:22 PM »
அந்தக் காலத்திலே....

லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் விருப்பமான கதையிது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது, எளிய கதை போல வெளிப்படையாக தோன்றினாலும் அது சுட்டிக்காட்டும் உண்மை மிகவும் ஆழமானது




அந்தக் காலத்திலே : லியோ டால்ஸ்டாய்

முன்பு ஒருநாள், பள்ளத்தாக்கு ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள் முட்டை போல் பெரியதாக உருண்டு திரண்டிருந்த பொருள் ஒன்றைக் கண்டெடுத்தனர்.

இதன் நடுவில் வடுப்போல் பள்ளமாயிருந்ததால், தானிய மணி போலிருந்தது. குழந்தைகளிடம் இதைக் கண்ட ஓர் வழிப்போக்கன் காசு கொடுத்து விலைக்கு வாங்கிப்போய், ஜார் மன்னனிடம் அரும் பொருளாக விற்றுவிட்டான்.

மன்னன், தனது சபையில் உள்ள அறிஞர்களை அழைப்பித்து, இது முட்டையா அல்லது தான்ய மணியா என்பதினைக் கண்டறிந்து சொல்லுமாறு ஏவினான்.

அறிஞர்கள் பலவிதங்களில் பரிசோதனை செய்து பார்த்தும், கண்டுபிடிக்க முடியவில்லை. இது பயனற்றது என்று கைவிட்டுவிட்டனர்,

ஒருநாள் அங்கு பறந்து வந்த பறவையொன்று அதை தனது அலகால் குத்தித் துளை பண்ணிவிட்டது. இப்போது, இது தானியமென்பது என்பது அறிஞர்களுக்குத் தெரிய வந்தது.

வியப்போடு தானியத்தை ஜார் மன்னனிடம் கொண்டு சேர்த்தனர் .

ஆச்சரியமடைந்த மன்னன், இது எங்கே, எப்பொழுது பயிரிடப்பட்டது என்று தெரிந்து சொல்லச் சொன்னான். அறிஞர் யோசித்தனர்; புத்தகங்களைப் புரட்டினர்; பயனில்லை. “எங்கள் புத்தகங்களில் இதைப் பற்றி ஒன்றுங்காணோம். எங்கட்குத் தெரியாது. விவசாயிகளிடம் வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம். ஒருவேளை அவர்கள் மூதாதைகளிடமிருந்து யாராவது இதைப் பற்றித் தெரிந்திருக்கலாம். விசாரிக்க உத்தரவிடுங்கள்” என்றார்கள்

ஜார் மன்னன் கட்டளைப்படி, விவசாயிகளில் மிகவும் வயதான கிழவன் ஒருவன் அரசசபைக்கு கொண்டுவரப்பட்டான். இக்கிழவன், சோகை பிடித்துப் பல்லில்லாமலிருந்தான். இரண்டு கோல்களில் சாய்ந்த வண்ணம் வருந்தி நடந்தான்.

மணியைச் சரியாய்க் கூடப் பார்க்க முடியாதபடி கிழவனது பார்வை மங்கிப் போயிருந்தது. பாதி கண்ணாலும், பாதி கை உணர்ச்சியாலும் அவன் தடவிப் பார்த்தபிறகு, ஜார் அவனைப் பார்த்து,-

“பெரியவரே, இது எங்கே பயிரானது, தெரியுமா உனக்கு? உமது வயலில் இப்படி தானிய மணிகளை நீர் விதைத்த துண்டா? இல்லை, உமது காலத்தில் இவை போன்றவைகளை விலைக்கு வாங்கியதாவது உண்டா?”என்று கேட்டான்.

கிழவன் செவிடு. நிரம்பச் சிரமப்பட்டுத்தான் புரிந்து கொண்டான். பதிலும், தட்டுத் தடுமாறித்தான் சொன்னான்: “இந்த மாதிரித் தானியங்களை நான் விதைக்கவுமில்லை, அறுக்கவுமில்லை, வாங்கவுமில்லை. நாங்கள் வாங்குவது எல்லாம் சிறியதாய், மெருகோடிருக்கும். என் தகப்பனாரைக் கேட்டுப் பார்க்கலாம்; அவருக்கு ஒருவேளை தெரிந்திருக்கும்.”

அவனது தகப்பனை அனுப்பிவைக்கும்படி ஜார் பணித்ததும், தகப்பனும், ஒரு கோல் மட்டும் ஊன்றிக் கொண்டு வந்து சேர்ந்தான். இவனுக்குக் கண் நன்றாயிருந்ததால், நன்றாய்ப் பார்க்க முடிந்தது. இவனிடமும் முன்போல் கேட்டான் அரசன். இவன் காதும் மந்தந்தான். ஆனால், மகனைக் காட்டிலும் தெளிவாய்க் கேட்டது

“இந்த மாதிரி தானியமணிகளை நான் விதைத்ததுமில்லை, அறுத்ததுமில்லை, வாங்கினதுங்கூட இல்லை. ஏனென்றால், எங்கள் காலத்திலெல்லாம் பணம் புழங்கத் தொடங்கிவிடவில்லை. தனக்கு வேண்டிய ரொட்டிக்கான கோதுமையை மட்டும் தான் பயிரிட்டுக் கொண்டோம். மற்ற தேவைகட்கு ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டோம். ஆகவே இது எங்கே பயிராகி இருக்கக் கூடுமென்பது எனக்குத் தெரியவில்லை. எங்கள் காலத்துக் கதிர் மணிகள் இப்போதையைக் காட்டிலும் பெரியவைதான். மாவு நிறையத் தரும். ஆனாலும், இதுமாதிரி நான் கண்டதில்லை. தமது காலத்தில் தானிய அறுவடை நல்லபடியாயிருக்குமென்று என் தகப்பனார் சொல்லிக் கொள்வார். அது இன்னும் பெரிதாம். நிறைய மாவு தருமாம். அவரைக் கூப்பிட்டுக் கேளுங்கள்”என்று இவன் கூறினான்.

அப்படியே, இவனுடைய அப்பன் அழைத்து வரப்பட்டான். கைக்கோல் எதுவும் இல்லாமலேயே அரசன்முன் சரளமாய் நடந்து வந்து சேர்ந்தான். கண்கள் இன்னும் ஒளி வீசின. பேச்சுத் தெளிவாயிருந்தது. அரசன் காட்டிய தான்யத்தைக் கிழவன் புரட்டிப், புரட்டிப் பார்த்தான்.

“இப்படி தானிய மணியை நான் பார்த்து நிரம்ப நாளாச்சே”என்று கூறிவிட்டு,தானிய மணியைச் சிறிது பல்லாற் கடித்துச் சுவைத்தான். அப்புறம், “அதேதான்!”என்று வியந்துரைத்தான்.

“எங்கே, எப்பொழுது இத்தகைய மணிகள் பயிராயின, பெரியவரே? நீர் உமது வயலில் இப்படி விதைப்பதுண்டோ? இல்லை, வேறு யாரிடமாவது விலைக்கு வாங்குவதுண்டோ?”என்று மன்னன் வினவினான். அதற்கு முதியவன் பதில் சொன்னான்: “என் காலத்திலே இந்த மாதிரி தான்யம் நாடெங்ககும் அறுவடையாயிற்று. இந்த தானியங்களைக்  சாப்பிட்டு தான் நாங்கள் பிழைத்து வந்தோம். இவற்றையே நான் விதைத்து, அறுவடை செய்து, அரைத்துமிருக்கிறேன்.”மீண்டும் மன்னன் கேட்டான் “இவற்றை நீர் எப்போதாவது, எங்காகிலும் விலைக்கு வாங்கும் வழக்கம் உண்டா? இல்லை, உமது சொந்த நிலத்திலே, எப்போதும் நீரே விதைப்பீரா?”

கிழவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “தான்யத்தை விற்பது வாங்குவது போன்ற பாபத்தைச் செய்ய எவனும் என்னுடைய காலத்தில் ஒருவனும் எண்ணமாட்டான். பணத்தைப் பற்றி நாங்கள் கேள்விபட்டதே கிடையாது. எல்லாரிடமும் வேண்டிய தானியமிருந்தது இல்லாதவர்களுக்கு எங்களுடையதை பகிர்ந்து தருவோம்”என்று பதில் கூறினான் கிழவன்.

ஜார் மன்னர் மறுபடியும் கேள்வி கிளப்பினார்

“நீர் விதைப்பு நட்ட இடமெங்கே? உமது வயல் இருப்பதுதான் எங்கே?”

கிழவன் சொன்னான்:

“என் வயல் கடவுள் அருளிய எங்களுர் மண்ணே . நான் உழுத இடமே எனது வயல்வெளி.  அப்போது பூமி செழிப்பானதாகயிருந்தது,  யாவரும் ஒன்று கூடி பாடுபட்டோம்,

“இன்னும் இரண்டே விஷயங்கள் நீர் எனக்குச் சோல்ல வேண்டும். முதலாவது, -முன்பு விளைந்தது போல இப்போது ஏன் பயிர்கள் விளைவதில்லை? இரண்டாவது உமது பேரன் இரு தடி தாங்கி நொண்டுகிறான்; உம்முடைய மகன் ஒரே கோலூன்றி நகர்கிறான்; நீரோ கோலெதுவுமின்றிச் சுலபமாய் நடக்கிறதோடு மட்டுமின்றி, உமது கண்களில் இன்னும் ஒளிவீசுகிறது; பற்கள் வலுவாயிருக்கின்றன; பேச்சும் தெளிவாய், அன்போடிருக்கிறது. இது ஏன்? இவை இரண்டுக்கும் காரணம் என்ன?”

முதுகிழவன் மொழிந்தவை:

“இவை இரண்டுக்கும் காரணம், மனிதர் தங்கள் உழைப்பால் மட்டும் வாழ்வதை நிறுத்திவிட்டுத், தம் அண்டையிலிருப்பவரது பொருட்களின் மீது ஆசைப்பட்டு குறுக்குவழியில் பிழைப்பதும், சத்தேயில்லாத உணவை உண்பதுமே காரணம் . அந்தக் காலத்தில் மக்கள் உண்மைக்கு பயந்து நடந்தனர், கடவுள் சொற்படி நடந்தனர். தமது உடைமைக்கு எஜமானராயிருந்தனர். பிறர்க்குச் சொந்தமானவற்றை இச்சிக்கவில்லை. அக்காலத்தில் ஒருவரும்  தனது சுயநலத்திற்காக இயற்கையை அழித்ததில்லை , நாங்கள் பூமியை நேசித்தோம், அது தான் காரணம் என்றார் ”


தமிழாக்கம்: சுப நாராயணன்

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #7 on: May 31, 2013, 04:11:24 PM »
புத்தனாவது சுலபம்

சிறுகதை

அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை.

பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான்.

மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள்.  அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். இப்போது அவனுக்கு இருபத்திநாலு வயதாகிறது. இன்ஜினியரிங் படிப்பை கடைசிவருசத்தில் படிக்காமல் விட்டுவிட்டான். இனிமேல் என்ன செய்யப்போகிறான் என்று கேட்டபோது பாக்கலாம் என்று பதில் சொன்னான்.

பாக்கலாம் என்றால் என்ன அர்த்தம் என்று கோபமாக்க் கேட்டேன்.

பதில் பேசாமல் வெறித்த கண்களுடன் உதட்டைக் கடித்துக் கொண்டே தன் அறைக்குள் போய்விட்டான்.

என்ன பதில் இது.

பாக்கலாம் என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது.

கடந்த ஐந்து வருசமாகவே அருண் வீட்டில் பேசுவதைக் குறைத்துக் கொண்டே வருவதை நான் அறிந்திருக்கிறேன். சில நாட்கள் ஒருவார்த்தை கூடப் பேசியிருக்க மாட்டான். அப்படி என்ன வீட்டின் மீது வெறுப்பு.

எனக்கு அருண் மீதான கோபத்தை விடவும் அவன் பைக் மீது தான் அதிக கோபமிருக்கிறது. அது தான் அவனது சகல காரியங்களுக்கும் முக்கியத் துணை. பைக் ஒட்டிப்போக வேண்டும் என்பதற்காகத் தானோ என்னவோ, தாம்பரத்தை அடுத்துள்ள பொறியியல் கல்லூரியில் படிக்க சேர்ந்து கொண்டான்.

சிலநாட்கள் என் அலுவலகம் செல்லும் நகரப்பேருந்தில் இருந்தபடியே அருண் பைக்கில் செல்வதைக் கண்டிருக்கிறேன். அப்போது அவன் என் பையனைப் போலவே இருப்பதில்லை.  அவன் அலட்சியமாக பைக்கை ஒட்டும் விதமும். தாடி வளர்த்த அவனது முகமும் காண்கையில் எனக்கு ஆத்திர ஆத்திரமாக இருக்கும்.

அருண் சிகரெட் பிடிக்கிறான். அருண் பியர் குடிக்கிறான். அருண் கடன்வாங்குகிறான். அருண் யாருடனோ சண்டையிட்டிருக்கிறான். அருண் அடுத்தவர் சட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறான் . உறவினர் வீட்டு திருமணத்திற்கு அருண் வருவதில்லை. அருண் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறான்.  அருண் காதில் கடுக்கன் போட்டிருக்கிறான். கையில் பச்சை குத்தியிருக்கிறான். தலைமயிரை நிறம் மாற்றிக் கொண்டுவிட்டான். இப்படி அவனைப் பற்றி புகார் சொல்ல என்னிடம் நூறு விசயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் அவனது ஒரே பதில் மௌனம் மட்டுமே

என் வீட்டில் நான் பார்க்கவே வளர்ந்து, நான் பார்க்காத ஆளாக ஆகிக் கொண்டிருக்கிறான் அருண்.

அது தான் உண்மை.

அவனது பதினாறுவயது வரை அருணிற்கு என்ன பிடிக்கும். என்ன சாப்பிடுவான். எதற்குப் பயப்படுவான் என்று நன்றாகத் தெரியும். ஆனால் பதினேழில் இருந்து இன்றுவரை அவனைப்பற்றி கேள்விப்படும் ஒவ்வொன்றும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. சிலவேளைகளில் பயமாகவும் இருக்கிறது.

நான் அனுமதிக்ககூடாது என்று தடுத்துவைத்திருந்த அத்தனையும் என் மகனுக்குப் புசிக்கத் தந்து உலகம் என்னை பரிகாசபபடுத்துகிறதோ.

சில வேளைகளில் குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்றபடியே நீண்ட நேரம் அருண் எதற்காக வெறித்து தன்னைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தத் தருணங்களில் யாரோ அந்நியன் நம் வீட்டிற்குள் வந்துவிட்டது போல எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா. சாப்பாட்டுத் தட்டின் முன்னால் உட்கார்ந்த வேகத்தில் பாதி இட்லியைப் பிய்த்து விழுங்கிவிட்டு எழுந்து போய்விடும் அவனது அவசரத்தின் பின்னால் என்னதானிருக்கிறது.

ஒருநாள்மாலையில் வீட்டின் முன்னால் உள்ள இரும்புக்கதவைப் பிடித்துக் கொண்டு இரண்டுமணிநேரம் யாருடனோ போனில் பேசிக் கொண்டேயிருப்பதை பார்த்தேன். எதற்காக இப்படி நின்று கொண்டே போனில் பேசுகிறான். இவன் மட்டுமில்லை. இவன் வயது பையன்கள் ஏன் நின்று கொண்டேயிருக்கிறார்கள். உட்கார்ந்து பேசவேண்டும் என்பது கூடவா தோன்றாது.

அருண் போனில் பேசும் சப்தம் மற்றவருக்குக் கேட்காது. வெறும் தலையசைப்பு. முணங்கல். ஒன்றிரண்டு ஆங்கிலச்சொற்கள் அவ்வளவு தான். எதற்காக போனில் ஆங்கிலத்திலே பேசிக் கொள்கிறார்கள். ரகசியம் பேசத் தமிழ் ஏற்ற மொழியில்லையா,

சில நேரம் இவ்வளவு நேரமாக யாருடன் பேசுகிறான் என்று கேட்கத் தோன்றும்.  இன்னொரு பக்கம், யாரோ ஒருவரோடு போனில் இரண்டுமணி நேரம் பேசமுடிகின்ற உன்னால் எங்களோடு ஏன் பத்து வார்த்தைகள் பேசமுடியவில்லை என்று ஆதங்கமாகவும் இருக்கும்,

உண்மையில் இந்த ஆதங்கங்கள், ஏமாற்றங்களை எங்களுக்கு உண்டாக்கிப் பார்த்து அருண் ரசிக்கிறான் என்று கூட நினைக்கிறேன்

பள்ளிவயதில் அருணைப்பற்றி எப்போதுமே அவனது அம்மா கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பாள். நான் அதிகம் கவலைப்பட்டதேயில்லை. ஆனால் அவன் படிப்பை முடித்த நாளில் இருந்து நான் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன். அவனது அம்மா கவலைப்படுவதை நிறுத்திவிட்டாள்.

மிகுந்த ஸ்நேக பாவத்துடன், அவனது தரப்பு நியாயங்களுக்காக என்னோடு சண்டையிடுகின்றவளாக மாறிப்போய்விட்டாள். இது எல்லாம் எப்படி நடக்கிறது, இல்லை இது ஒரு நாடகமா.

ஒருவேளை நான் தான் தவறு செய்கிறேனா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருக்கிறது.

முந்தைய வருசங்களில் நான் அருணோடு மிகவும் ஸ்நேகமாக இருந்திருக்கிறேன். ஒன்றாக நாங்கள் புட்பால் ஆடியிருக்கிறோம். ஒன்றாகச் சினிமாவிற்குப் போயிருக்கிறோம். ஒன்றாக ஒரே படுக்கையில் கதைபேசி சிரித்து உறங்கியிருக்கிறோம்.

என் உதிரம் தானே அவனது உடல், பிறகு எப்படி இந்த இடைவெளி உருவானது.

வயதால் இரண்டு பேரின் உறவைத் துண்டித்துவிட முடியுமா என்ன?

என்ன காரணமாக இருக்கும் என்று ஏதேதோ யோசித்திருக்கிறேன்.

திடீரென ஒரு நாள் ஒரு உண்மை புரிந்தது.

உலகில் உள்ள எல்லா இருபது வயது பையன்களுக்கும் வரும் வியாதி தான் அருணையும் பிடித்திருக்கிறது. அதை நான் ஒருவன் சரிசெய்துவிட முடியாது .

அதை வியாதி என்று சொல்வது அவர்களுக்குக் கோபமூட்டும்.

அவர்கள் அதை  ஒரு உண்மை. ஒரு விடுதலை.  ஒரு ஆவேசம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ஏதோவொரு எழவு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிரச்சனையை பற்றி என்னைப்போலவே உடன் வேலை செய்யும் பிற ஊழியர்களும்  கவலைபடுகிறார்கள். சந்தானமூர்த்தி தனது கல்லூரியில் படிக்கும் மகன் கழிப்பறைக்குள் போனால் வெளியே வர இரண்டு மணி நேரமாகிறது. என்ன தான் செய்வான் எனத் தெரியவில்லை என்று புலம்புவதைக் கேட்கையில் எனக்கு உண்மையில் சற்று ஆறுதலாகவே இருக்கிறது,  என்னைப் போலவே பல தகப்பன்களும்  இதே மனக்குறையிலே தானிருக்கிறார்கள்.

நான் மற்றவர்களைப் போல எனது மனக்கவலையை அதிகம் வெளியே காட்டிக் கொள்கின்றவனில்லை. நானும் பிகாம் படித்திருக்கிறேன். கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியில் சிறப்பு பயிற்சி முடித்து பால்வளத்துறையில் வேலை செய்கிறேன்.  பதவி உயர்விற்காக தபாலில் தமிழ் எம்ஏ கூடப் படித்திருக்கிறேன். கடந்தபத்து வருசமாகவே வள்ளலாரின் திருச்சபையில் சேர்ந்து  தானதரும காரியங்களுக்கு உதவி செய்கிறேன். இந்த நற்குணங்களில் ஒன்றைக் கூட ஏன் அருண் கைக்கொள்ளவேயில்லை. ஒருவேளை இவை எல்லாம் அர்த்தமற்றவை தானா. நான் தான் அதைப் புரிந்து கொள்ளாமல் சுமந்து திரிகின்றேனா

நான் படிக்கின்ற காலத்தில் ஒன்றிரண்டு பேர் குடிப்பதும் ஊர்சுற்றுவதும் பெண்களை தேடிப்போவதுமாக இருந்தார்கள் என்பது உண்மை தான். அன்றைக்கு ஊருக்குப் பத்து பேர் அப்படியிருந்தார்கள். இன்று ஊரில் பத்து இளவட்டங்கள் ஒழுக்கமாக இருந்தால் அபூர்வம். இதெல்லாம் எனக்கு தோன்றுகின்றன புகார்களா அல்லது இது தான் உண்மையா,

இது போன்ற விசயங்களைத் தொடர்ச்சியாக யோசிக்க ஆரம்பித்தால் எனக்கு ரத்தக்கொதிப்பு வந்துவிடுகிறது. உண்மையில் இது என்னுடைய பிரச்சனை மட்டுமில்லை. ஆனால் என் பிரச்சனையாகவும் இருக்கிறது.

நான் படித்து முடித்தவுடனே திருமணம் செய்து  கொண்டுவிட்டேன். உண்மையை சொல்வதாக இருந்தால் எனது இருபத்திநாலாவது வயதில் அருண் பிறந்து ஒன்றரை வயதாகி விட்டான். ஆனால் அருண் இன்னமும் வேலைக்கே போகவில்லை.  ஏன் இவ்வளவு தாமதப்படுத்துகிறான்.  ஏன் இவ்வளவு மெதுவாக, வாழ்க்கையின் மீது பற்றே இல்லாமல் நடந்து கொள்கிறான். இது தான் இன்றைய இயல்பா.

ஒருவேளை நான் தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாமல் வண்டிவண்டியாக புகார்களோடு அலைந்து கொண்டேயிருக்கிறேனா.  அப்படியே இருந்தாலும் என் புகார்களில் உள்ள நியாயம் ஏன் மறுக்கபடுகிறது

இந்த இரவில் கூட படுக்கையில் படுத்தபடியே அருண் எங்கே போயிருக்ககூடும் என்று நானாக எதை எதையோ யூகித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னை உறங்கவிடாமல் செய்கிறது. கற்பனையான பயத்தை உருவாக்குகிறது. அதை ஏன் அருண் புரிந்து கொள்ள மறுக்கிறான்.

இந்த நேரம் அருண் என்ன செய்து கொண்டிருப்பான். நிச்சயம் என்னைப்பற்றிய நினைவே இன்றி எங்காவது உறங்கிக் கொண்டிருப்பான். யாரையும் பற்றி நினைக்காமல் எப்படி ஒரு ஆளால் வாழ முடிகிறது. அதுவும்  ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு மற்றவர்களைப் பற்றி எப்படி கவலைப்படாமல் இருக்க முடிகிறது.

அருண் எங்களோடு தானிருக்கிறான். ஆனால் எங்கள் வீட்டிற்குள் அவனுக்காக ஒரு தனித்தீவு ஒன்று இருப்பதை  போலவே நான் உணர்கிறேன். அங்கே அவனது உடைகள் மட்டுமே காயப்போடப்பட்டிருக்கின்றன. அவனது பைக் நிற்கிறது. அவனது லேப்டாப் ஒடிக் கொண்டிருக்கிறது. அவன் வாங்கி வளர்க்கும் ஒரு மீன்குஞ்சு மட்டுமேயிருக்கிறது. வேறு ஒரு மனிதருக்கு அந்த்த் தீவில் இடம் கிடையாது. டேபிள் வெயிட்டாக உள்ள கண்ணாடிக் கோளத்தினுள் உள்ள மரத்தை, எப்படி நாம் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் கையால் தொட முடியாதோ அப்படியான ஒரு இடைவெளியை, நெருக்கம் கெர்ளளவே முடியாத சாத்தியமின்மையை அருண் உருவாக்கி வைத்திருக்கிறான்.

அப்படி இருப்பது எனக்கு ஏன் பிடிக்கவேயில்லை, நான் அவனை கண்காணிக்க விரும்புகிறேனா,

இது அருண் பற்றிய பிரச்சனை மட்டுமில்லை,

பைக் வைத்துள்ள எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே தானிருக்கிறார்கள்

அருணிற்கு பைக் ஒட்ட யார் கற்றுக் கொடுத்தது.

அவனாகவே கற்றுக் கொண்டான்.

பதினோறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அவன் பைக்கில் போவதைக் கண்டேன். அவன் பின்னால் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். ஒருகையை காற்றில் அசைத்தபடியே  அவன் மிக வேகமாக பைக் ஒட்டிப்போவதைப் பார்த்தேன். அன்று வீட்டில் பெரிய சண்டையே நடந்தது.

உனக்கு ஏது பைக். யாரு பைக் ஒட்டக் கற்றுக் கொடுத்தது. அது யாருடைய பைக் என்று கத்தினேன். அருண் அதற்குப் பதில் சொல்லவேயில்லை.  அவன் ஒரேயொரு கேள்விமட்டுமே கேட்டான்

பைக் ஒட்டுனா தப்பா

பைக் ஒட்டுவது தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை.

ஆனால் எனது உள்மனது தப்பு என்று சொல்கிறது. காரணம் பைக் என்பது ஒரு வாகனமில்லை. அது ஒரு சுதந்திரம். அது ஒரு சாகசம்.  அப்பாவிற்கும் மகனுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தும் ஒரு சாதனம். அப்பாவைச் சீண்டி விளையாட மகன் கண்டுபிடித்த ஒரு தந்திரம்.

அந்த வாகனத்தை எனக்குப் பிடிக்கவேயில்லை. ராணுவத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கபட்டது தான் பைக் என்கிறார்கள். ஆனால் அது எப்படியோ பிரபலமாகி இன்று என் வீடு வரை பிரச்சனையாகியிருக்கிறது.

இந்த நகரில் பைக்கில் செல்லும் எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள்.  சாலையில் செல்வதை மகத்தான ஒரு சாகசம் என்றே நினைக்கிறார்கள். பலநேரங்களில் எனக்குத் தோன்றுகிறது பைக்கில் சாலையில் செல்லும் இளைஞனுக்கு அவனைத் தவிர வேறு மனிதர்கள், கண்ணில்படவே மாட்டார்கள். எந்த ஒசையும் கேட்காது. மொத்தச் சாலையும் வெறுமையாகி அவன் மட்டுமே செல்வது போன்று தோன்றும் போல.

அதிலும் பைக்கில் செல்லும் போதே செல்போனில் பேசிக் கொண்டு போகும் இளைஞர்களைக் காணும்போது என்னால் ஆத்திரத்தைக் கட்டுபடுத்தவே முடியவேயில்லை. அப்படி என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று மனம் பதைபதைக்கிறது. ஆனால் அவர்கள் முகத்தில் பதற்றத்தின் ஒரு துளி கூட இருக்காது. திடீரென அவர்களுக்குக் கூடுதலாக இரண்டு கைகள் முளைத்துவிட்டது போலவே நடந்து கொள்கிறார்கள்.

அருண் பைக் ஒட்டவே கூடாது என்று கண்டிப்பாக இருந்தேன்.

அப்படி நான் சொல்வதற்குக் காரணம் விபத்து குறித்த பயம் என்று ஒரு பொய்யை சொல்லி என் மனைவியை நம்ப வைத்தேன்.

உண்மையில் நான் பயந்த காரணம் ஒரு பைக் என்பது என் வீட்டிற்கும் இந்த பரந்த உலகிற்குமான இடைவெளியை குறைத்துவிடும். வீட்டிலிருந்து பையனை முடிவில்லாத உலகின் வசீகரத்தைக் காட்டி இழுத்துக் கொண்டுபோய்விடும் என்று பயந்தேன்

ஆனால் அருண் பைக் ஒட்டுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

ஒருவேளை நான் திட்டுவதையும் கண்டிப்பதையும் செய்யாமல் போயிருந்தால் பைக் ஒட்டுவதில் அக்கறை காட்டாமல்  போயிருப்பானோ என்னவோ

.இல்லை ,, இது  சுயசமாதானம் செய்து கொள்கிறேன்.  அது உண்மையில்லை.

பைக் என்பது  ஒரு விஷப்பாம்பு

அது எல்லா இளைஞர்களையும் அவர்களது இருபது வயதைத் தாண்டும் போது கடித்துவிடுகிறது. அதன் விஷம் பத்து ஆண்டுகளுக்காகவாவது உடலில் இருந்து கொண்டேதானிருக்கும். அந்த விஷமேறிய காலத்தில்  பைக் மட்டும் தான் அவர்களின் உலகம். அதைத் துடைப்பதும் கொஞ்சுவதும் பராமரிப்பதும் கோவித்துக் கொள்வதுமாகவே இருப்பார்கள்.

அருணிற்கும் அப்படிதான் நடந்தது.

அவன் பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறையில்  நாமக்கல்லில் உள்ள அவனது மாமா வீட்டிற்கு போய்விட்டு புதுபைக்கிலே சென்னைக்குத் திரும்பியிருந்தான். காலேஜ் போய்வருவதற்காக  மாமா புது பைக் வாங்கி தந்ததாக சொல்லியபடியே பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான்.

உனக்கு லைசன்ஸ் கிடையாது. நாமக்கல்லில் இருந்து ஏன் பைக்கில் வந்தே. வழியில் லாரியில் அடிபட்டு இருந்தா என்ன செய்வது என்று நான் கத்திக் கொண்டிருந்த போது அவன் மௌனமாக ஒரு குழந்தையின் காதைத் டர்க்கித்துண்டால் பதமாக துவட்டுவது போல மிருதுவாக பைக்கை துடைத்துக் கொண்டேயிருந்தான்.

அதன்பிறகு அவனாக லைசன்ஸ் வாங்கிக் கொண்டான். நாளடைவில் அந்த பைக்கை தனது உடலின் இன்னொரு உறுப்பைப் போல மாற்றிக் கொண்டுவிட்டான்.

சிலநாட்கள் காலை ஆறுமணிக்கு அவசரமாக எழுந்து பைக்கில் வெளியே போய்விடுவான்.

எங்கே போகிறான். யார் இந்த நேரத்தில் அவனை வரவேற்க்க் கூடியவர்கள்.

பைக்கில் சாய்ந்து கொண்டுநின்றபடியே பேசுவதும், பைக்கில் ஏறி உட்கார்ந்து தேநீர் குடிப்பது என்று பைக்கில்லாமல் அவன் இருப்பதேயில்லை. அதற்கு எவ்வளவு பெட்ரோல் போடுகிறான். அதற்கு பணம் எப்படிக் கிடைக்கிறது. எதற்காக இப்படி பைக்கில் வெயிலேறச் சுற்றியலைய வேண்டும், எதற்கும் அவனிடமிருந்து பதில் கிடையாது.

அவனது அம்மாவிற்கு அருண் பைக் ஒட்டுவது பிடித்திருக்கிறது. அவள் பலநேரங்களில் அருண் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டு கோவிலுக்குப் போகிறாள். ஒயர்கூடை பின்னும் பொருள் வாங்கப் போகிறாள். அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் என்னால் அப்படி பைக்கில் போக முடியாது. ஒருநாள் என்னை அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டுவந்து விட்டபோது கூட அவன் இயல்பாக பைக் ஒட்டவில்லை என்றே பட்டது.

அருண் உடலுக்குள் ஒரு கழுகு இருக்கிறது என்பதை ஒரு நாள் நான் கண்டுபிடித்தேன். அந்த கழுகு அவனுக்குள் மட்டுமில்லை. எல்லா இருபது வயதைக்கடந்த பையன்களுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. அது வீட்டை விட்டு வெளியேறி மிக உயரமான இடம் ஒன்றுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு, தனியாக உலகை வேடிக்கை பார்க்க விரும்புகிறது. தானும் மற்றவர்களும் ஒன்றில்லை என்று சொல்லத் துடிக்கிறது. தன்னால் மற்றவர்களால் செய்ய முடியாத ஒன்றை அடையமுடியும் என்று காட்ட முயற்சிக்கிறது.

வேட்டையை விடவும் கழுகுகள் உலகை வேடிக்கை பார்க்கத் தான் அதிகம் விரும்புகின்றன. அதிலும் தன் அகன்ற சிறகை அடித்துக் கொண்டு யாரும் தொடவே முடியாத உயரத்தில் ஏறி நின்று உலகைக் காண்பதில் ஆனந்தம் கொள்கின்றன. அதில் ஏதோ ஒரு இன்பமிருக்கிறது. ஏதோ ஒரு அலாதியிருக்கிறது போலும்.

அந்த கழுகின் ரெக்கைகள் அருணிற்குள்ளும் படபடப்பதை நான் அறியத் துவங்கினேன். அதன் சிறகடிப்பு ஒசை என் முகத்தில் படுவதை நன்றாகவே உணர்ந்தேன்.  எனக்குப் பயமாக இருந்தது. இந்தகழுகு அவனை  திசைதவறிக் கூட்டிக் கொண்டு போய் அலைக்கழிக்கும் என்று பயந்தேன். ஆனாலும் தடுக்க வழியில்லாமல் பார்த்துக் கொண்டேதானிருந்தேன்

உண்மையில் அந்தக் கழுகு தான் அவனது பைக்கின் வடிவம் கொண்டுவிட்டிருக்கிறது

சில சமயங்களில் ஒருவார காலம் அருண் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போய்விடுவான். எங்கே போயிருக்கிறான் என்று கேட்டால் என் மனைவி பிரண்ட்ஸைப் பார்க்கப் போயிருப்பான் என்று சொல்வாள்.

பையன்களுக்காக பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள். அது ஒரு சதி. பையன்கள் வளர வளர வீட்டில் உள்ள அப்பா அம்மாவைப் பிரிக்கத் துவங்குகிறார்கள்.  அல்லது பிள்ளைகளின் பொருட்டு பெற்றவர்கள் சண்டையிட்டு மனக்கசப்பு கொண்டுவிடுகிறார்கள்.

பெரும்பான்மை நாட்கள் அருண் நள்ளிரவுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்து வீட்டின் இரும்புக்கதவை தள்ளி திறக்கும் ஒசையை கேட்டிருக்கிறேன். எங்கே போய்விட்டுவருகிறான் கேட்டு சண்டைவந்தது தான்மிச்சம்.

எவ்வளவு முறை கேட்டாலும் பதில் சொல்லவும் மாட்டான். நேராக அவன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டுவிடுவான். வீட்டில் இரவு சாப்பிடுவதும் இல்லை.

நள்ளிரவுக்கு பின்பு வந்தாலும் அவன் பாட்டுக்கேட்க மறப்பதேயில்லை. அதுவும் சப்தமாகவே பாட்டுகேட்கிறான். வீட்டில் நானோ அவனது அம்மாவோ, த்ஙகையோ இருப்பதை முழுமையாக மறந்துவிட்டவனைப்போலவே நடந்து கொள்கிறான்.

அருண் சப்தத்தை குறைச்சிவச்சிக்கோ என்று படுக்கையில் இருந்தபடியே அவன் அம்மா சொல்லுவாள். நான் சொன்னால் அதையும் கேட்கமாட்டான்

ஆனால் அம்மா சொல்வதற்காக சப்தத்தை குறைக்காமல் கதவை மூடிவைத்துக் கொள்ளுவான். அவனால் உரத்த சப்தமில்லாமல் பாடல்களைக் கேட்க முடியாது. அதுவும் அவனது பிரச்சனையில்லை.  எல்லா பதின்வயதுபையன்களும் இந்த விசயத்தில் ஒன்று போலதானிருக்கிறார்கள்.

அவர்கள் கேட்கும்பாடல்களில் ஒருவரி கூட என்னை ஈர்ப்பதில்லை. ஒரே காட்டுக்கத்தல்.

எனக்கு கர்நாடக ச்ங்கீதம் மற்றும் திரையிசைப்பாடல்களில் விருப்பம் உண்டு. படிக்கின்ற காலத்தில் ரிக்காடு பிளேயரில் நிறையக் கேட்டிருக்கிறேன். இப்போதும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கறுப்பு வெள்ளைப் பாடல்களை விடாமல் கேட்கிறேன். ஆனால் அருண் உலகில் கறுப்பு வெள்ளைக்கு இடமே கிடையாது.

அவன் எட்டாம்வகுப்பு படிக்கையில் ஒருநாள் டிவியில் பாசவலை என்ற பழைய படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் மிக ஆர்வமாகப்  பார்த்துக்கொண்டிருந்தேன். என் அருகில் வந்து எப்படிப்பா இதை எல்லாம் பாக்குறீங்க என்று கேட்டான்.

நல்லா இருக்கும் அருண், கொஞ்ச நேரம் பாரு என்றேன்.

அவன் என்னை முறைத்தபடியே உங்களுக்கு டேஸ்டேயில்லைப்பா  என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்து கொண்டு போனவன் இரவு வரை வீடு திரும்பவேயில்லை.

இப்போது அவ்வளவு நேரடியாக என்னிடம் பதில் சொல்வதில்லை. ஆனால்  என்னைப்பற்றி அதே அபிப்ராயத்தில் தானிருக்கிறான்.

அவன் கேட்கும்பாடல்களை விடவும் அந்த தலைவிரிகோலமான பாடகர்களை எனக்குப் பிடிப்பதேயில்லை. கறுப்பன் வெள்ளை என்று பேதமில்லாமல் அசிங்கமாக இருக்கிறார்கள். ஒருவன் கூட ஒழுங்கான உடை அணிந்திருப்பதில்லை. அடர்ந்து வளர்ந்த தலைமயிர். கோரையான தாடி, வெளிறிப்போன உதடுகள். கையில் ஒரு கிதார். அல்லது கீபோர்ட். உடலுக்கு பொருத்தமில்லாத உடைகள்.  போதையில் கிறங்கிப்போன கண்கள் .

ஒருவேளை இப்படி இருப்பதால் தான் அவர்களின் பாடல்களை இந்த பதின்வயது பையன்களுக்கு பிடிக்கிறதா, அதைப் பாடல் என்று சொல்வது கூட தவறு. கூச்சல். கட்டுப்பாடற்ற கூச்சல்.

அந்தக் கூச்சலின் உச்சத்தில் யாரோ யாரையோ கொல்வது போலிருக்கிறது. அல்லது காதலின் துயரத்தை தாங்கிக் கொள்ளவே முடியாதது போல ஒரு பொய்யான பாவனையில் ஒருவனோ ஒருத்தியோ கதறிகதறிப்பாடுகிறாள். அதைக் கையில் ஒரு சிகரெட்டுடன் கேட்டு அருணும் சேர்ந்து கண்ணீர்வடிக்கிறான்.

ஏன் அருண் இப்படியிருக்கிறான்  என்று  எரிச்சலாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசினால் எனக்கு ரசனையில்லை என்பான்.

சில வேளைகளில் அவன் சொல்வது உண்மை என்றும் கூட தோன்றியிருக்கிறது. ஒரு நாள் அவன் அறையைக் கடந்து போகையில்  கசிந்துவந்த ஒரு பெண் குரல் பாடலே இல்லாமல் உன்மத்தம் பிடித்தவள் போல ஒரே வார்த்தையை ‘ஹம்பண்ணிக் கொண்டேயிருந்ததை கேட்டேன்

மொத்தமாக ஒரு நிமிசம் தான் கேட்டிருப்பேன். ஆனால் தேள்கொட்டியது போல ஒரு கடுகடுப்பு உருவானது. அடுத்த நிமிசத்தில் கடுமை உருமாறி எல்லையில்லாத ஆனந்தமாகி அந்த ஹம்மிங்கை மனதிற்குள்ளாகவே  வைத்துக் கொண்டேயிருந்தேன்.

பின்பு நாலைந்துநாட்களுக்கு அந்த ஹம்மிங்  என் மண்டைக்குள் ஒடிக்கொண்டேயிருந்தது. அந்த பெண் எதற்காக இவ்வளவு துயரத்தோடு பாடுகிறாள். அவளது அப்பா அம்மா யார். அவர்கள் இவளை எப்படிப் பாட அனுமதிக்கிறார்கள். தாடிவைத்த கஞ்சா புகைக்கும் இந்த இசைக்கலைஞர்களின் அப்பாக்களும் அவர்களுடன் என்னைப் போலவே சண்டை போட்டுக் கொண்டுதானிருப்பார்களா.

இந்த உலகில் காதலை தவிர வேறு எதற்காகவாவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன.  அப்படி என்ன இருக்கிறது காதலில்.

ஒரு பெண்ணின் தேவை என்பது உடற்பசியோடு சம்பந்தபட்ட ஒன்று தானே.

அதற்கு எதற்கு இத்தனை பொய்பூச்சுகள், பாவனைகள்.

இந்த உலகில்காதலைப்பற்றி மித மிஞ்சிய பொய்கள் நிரம்பியிருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் அந்தப் பொய்களை வளர்த்தெடுப்பதில் தனது பெரும்பங்கை அளிக்கிறது. பெண்கள் எல்லாம் ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்பது போல எதற்காக இவ்வளவு வியப்பு.  பிரமிப்பு,

இந்த பயல்களை ஒரு நாள் பிரசவ விடுதிக்குள் கொண்டுபோய்விட்டுவந்தால் இந்த மொத்த மயக்கமும் தெளிந்துபோய்விடும் என்று தோன்றுகிறது.

நான் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு வயதாகிவிட்டது தான் காரணம் என்று என் மனைவியே  சொல்கிறாள். எனக்கு மட்டும் தான் வயதாகிறதா என்ன. அவளுக்கும் வயதாகிறது.

நான் குடியிருக்கும் இந்த நகருக்கு வயதாகிறது.

நான் பேருந்தில் கடந்து போகிற கடலுக்கு வயதாகிறது.

ஏன் தலைக்கு மேலே இருக்கிற சூரியனுக்கும் நிலாவிற்கும் கூட தான் வயதாகிறது.

வயது அதிகமாக அதிகமாக நம்மைப் பற்றி  முதுக்குப் பின்னால் பலரும் கேலி செய்வது அதிகமாகிக் கொண்டே தான் போகிறது.

உண்மையில் எனக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை. ஐம்பத்தியொன்று தான் நடக்கிறது. ஒருநாள் பேப்பரில் படித்தேன். இத்தாலியில் ஒரு ஐம்பது வயது  ஆள் திடீரென மலையேறுவதில் ஆர்வம் வந்து ஒவ்வொரு மலையாக ஏறி இறங்கி முடிவில் தனது அறுபத்திரெண்டுவயதில் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிவிட்டான் என்று.

நான் அந்தவகை ஆள்இல்லை. எனக்கு புதிதாக ஆசைகள் உருவாவதேயில்லை. இருக்கின்ற ஆசைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை உண்மையில் சலிப்பாகவே இருக்கிறது. வாழ்ந்து நான் அடைந்த சலிப்பை அருண் ஏன் இருபத்திநாலு வயதில் அடைந்திருக்கிறான். எப்படி ஒருவனால் மௌனமாக லேப்டாப் முன்பாகவே பலமணிநேரங்கள்  இருக்க முடிகிறது. ஏன் அலுக்கவே மறுக்கிறது

எனக்கு அருணை நினைத்தால் பயமாக இருக்கிறது.  ஆனால் அவனது அம்மா அந்த பயத்திலிருந்து எளிதாக விடுபட்டுவிட்டாள்.  பெண்களால் நெருக்கடியை எளிதாக சந்தித்து கடந்து போய்விட முடிகிறது, எப்படி என்ன சூட்சும்ம் அது.

எனக்கு உறக்கம் வரவில்லை. விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரமிருக்கிறது. உலகின் இன்னொரு பகுதியில் இந்நேரம் விடிந்திருக்கும். யாரோ ஒரு பையன் வீட்டிலிருந்து பைக்கில் கிளம்பியிருப்பான். யாரோ ஒரு தகப்பன் அதைபற்றிய புகாரோடு வெறித்து பார்த்தபடியே நின்று கொண்டிருப்பான், அந்த்த் தகப்பனைப் பற்றி நினைத்தால் எனக்குத் தொண்டையில் வலி உண்டாகிறது.

என்னால் இனிமேல் உறங்க முடியாது.

விடியும் வரை என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எதற்காக நான் படுக்கையில் கிடக்க வேண்டும்.  இப்போதே எழுந்து சவரம் செய்து கொள்ளப் போகிறேன்

எனக்கு வயதாகிறது என்கிறார்கள். ஆமாம். கண்ணாடி அப்படித்தான் காட்டுகிறது.

முகத்தில் முளைத்துள்ள நரைமயிர்கள் என்னைப் பரிகசிக்கின்றன.

நான் ஒரு உண்மையை உங்களிடமிருந்து மறைக்கிறேன். நானும் இளைஞனாக இருந்த போது இதே குற்றசாட்டுகளை சந்தித்திருக்கிறேன், நானும் பதில் பேசாமல் வீட்டை விட்டு போயிருக்கிறேன், இன்றும் அதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். எனக்குத் தோன்றுகிறது

இருபது வயதில் பையன்கள் இலவம்பஞ்சைப்போல எடையற்று போய்விடுகிறார்கள். காற்றில் மிதந்து திரிவது தான் சுபாவம் என்பது போலிருக்கிறது அவர்களின் செயல்கள்.

யாருக்காவும் எதற்காகவும் இல்லாத பறத்தல் அது.

அப்படி இருப்பது தான் இயல்பு என்பது போல அலைந்து திரிகிறார்கள்.

இலவம்பஞ்சு ஒரு போதும் பள்ளதாக்கைக் கண்டு பயப்படுவதில்லை.  பாறைகளைக் கண்டு ஒதுங்கிக் கொள்வதுமில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டு பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. அது தான் உண்மை. எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு தகப்பனாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் தகப்பன் ஆகும் நாளில் இதை உணர்வீர்கள்.

நான் நிறைய குழம்பிபோயிருக்கிறேன்.

எனது பயமும் குழப்பமும் முகமெங்கும் படிந்துபோயிருக்கிறது. தண்ணீரை வைத்துக் கழுவிக் கொள்வதால் பயமும் குழப்பமும் போய்விடாது என்று எனக்குத்தெரியும்

ஆனால் என்னால் இதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதே.

**


பாரம்பரியமிக்க கணையாழி இலக்கிய இதழ் மறுபடியும் துவங்கப்பட்டுள்ளது, தசரா அறக்கட்டளை சார்பில் டாக்டர் மா. ராஜேந்திரன் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்துகிறார்,  கணையாழி ஏப்ரல் இதழில் இந்தக்கதை  வெளிவந்திருக்கிறது.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #8 on: June 01, 2013, 07:19:12 PM »
சொந்தக்குரல்

அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள்

என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

இல்லாத எதைஎதையோ பற்றிக் கொண்டு தான் முதுமையில் வாழவேண்டியிருக்கும் போலிருக்கிறது, இருட்டில் தடுமாறி விழுந்து அடிபட்டுவிட்ட அம்மாவை மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.. இரவில் அம்மாவோடு நான் துணைக்கு இருந்தேன். அம்மாவிற்கு வயது எழுபத்திமூன்றைக் கடந்துவிட்டிருக்கிறது.

சமீபமாக அம்மா மின்சார விளக்குகளைப் போட்டுக் கொள்ளாமல் இருட்டிலே நடக்கப் பழகியிருந்தாள். எவ்வளவோ முறை அப்படிச் செய்யாதே என்று நான் திட்டிய போதும். இருட்டு பழகிப்போச்சுடா சோமா. இருட்டை என்ன இன்னைக்கு நேத்தா பாக்குகிறேன். இருட்டு பழக ஆரம்பிச்சி எழுபது வருசம் போயிருச்சி. இன்னும் என்ன பயம் என்பாள்

இல்லைம்மா. பயத்திற்காக சொல்லவில்லை. நீ கிழே விழுந்து வைத்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்பேன்.

விழுந்தா, போய்ச் சேர வேண்டியது தான். என் மனசில இருக்கிற ப்ரகாசம் எல்லாம் அணைச்சி போய் பல வருசமாகிருச்சிடா. இப்போ நான் வெறும் உடம்பு தான் என்றபடியே இருட்டிற்குள் நடந்து போய்க் கொண்டிருப்பாள்.

அப்படி தான் விழுந்து அடிபட்டுக் கொண்டாள்

 கடந்த சில வருசங்களாகவே அம்மா இப்படிதானிருக்கிறாள். சில நேரங்களில்  வீட்டில் உள்ளவர்கள் பெயர்களே கூட மறந்து போய்விடுகிறது. டேய் இவனே. அல்லது இங்கே வாயேன் என்று தான் கூப்பிடுகிறாள்.  முதுமை அடையும் போது உடலின் எடை குறைந்து மெலிந்து போய்விட வேண்டும் இல்லாவிட்டால் யாரால் தூக்கி கொண்டுபோய் டாய்லெட்டில் உட்கார வைக்க முடியும் என்று அவளாகவே சொல்லிக் கொள்கிறாள். அதற்காக சாப்பாட்டை க் குறைத்துக் கொள்வதுடன் தன்னை வருத்திக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தாள்

இளவயதில் அம்மா நல்ல பருமனாக இருந்தாள். அதற்கு அவள் சொல்லும் காரணம் ,அப்பா,

அவர் எப்படிக் காரணம் என்று கேட்டால் நினைவுகளைக் கொட்டத் துவங்கிவிடுவாள்.

அவருக்கு வீட்ல சமைச்ச எதுவும் மிச்சம் ஆகிறக்கூடாது. வேற என்ன செய்றதுனு சமைச்ச  மிச்சத்தை எல்லாம் நானே கொட்டிகிட்டேன். அப்போ உடம்பு பெருத்துப்போகாமல் என்ன செய்யும். அத்தோட மாசத்துக்கு ஒருநாள் கோவிலுக்கும் தெரிஞ்சவங்க வீட்டுக்கும் போறதை தவிர வீட்டை விட்டு வெளியே போனதே கிடையாது. ஒரு தேங்காய்ச் சில்லு வாங்கிட்டு வர்றேன்னு சொன்னாக் கூட உங்கப்பா தான் போயிட்டு வருவார். கல்யாணமாகி எனக்கும் ஏழு பிள்ளைகள் பிறந்து அதுல ரெண்டு செத்தும் போச்சி. அத்தனை வருசத்துக்கு பிறகும் உங்கப்பாவுக்கு என்னைத் தனியா அனுப்புறதுன்னா பயம்.

கோடையில சிவசு மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்றதுக்கு ரயில் ஏத்திவிட வரும் போது ஸ்டேஷன்ல வச்சி ஒண்ணுக்கு பத்து தரம் அட்வைஸ் பண்ணுவார்.

அது பத்தாதுனு ரயில்க்குள்ளேயே ஏறி இவளைப் பத்திரமாக கொண்டு போய் விட்ருங்கன்னு பக்கத்து மனுசங்க கிட்டே வேற சொல்லிவிடுவார்.

ரொம்ப அவமானமா இருக்கும்.

அதே நேரம் நம்ம மேல இருக்கிற அக்கறையில் தான் இப்படி எல்லாம் செய்றாருனு சமாதானம் பண்ணிகிடுவேன். அப்போ உனக்கு வயது நாலோ அஞ்சோ இருக்கும். ஞாபகமிருக்குமோ என்னமோ.

அக்கறை காட்டுறதுக்காக நாம செய்ற காரியங்கள் அடுத்தவரை எவ்வளவு இம்சை பண்றதுனு  நாம புரிஞ்சிகிடுறதேயில்லை.  அதுக்கு உங்க அப்பா ஒரு ஆள் போதும்.

செத்துப் போன மனிதரைப் பற்றி இப்போ பேசி என்ன ஆகப்போறது.

ஆனாலும் மனுசன் செத்து போயிட்டாலும் அவன் படுத்தின பாடு. பண்ணின அக்ரமம் எல்லாம் கூடவே செத்து போயிடுறதில்ல. அது யார் மனசிலயாவது அழியாம இருந்துகிட்டே தான் இருக்கு.

இப்போ கூட கனவுல உங்கப்பா முகம் வந்துச்சின்னா திடுக்கிட்டு முழிச்சிகிடுறேன்.

உங்கப்பா வாழ்நாள் முழுவதும் யாரையாவது திட்டிகிட்டே இருந்தார்.

அவருக்குப் பிள்ளைகள் எல்லாமே ரெண்டாம் பட்சம் தான்.

அப்படியொரு மனசு.

ஒண்ணுக்குப் பத்துத் தடவை கேட்டா தான் எதுவும் கிடைக்கும்.

சோமா, உங்களை நினைச்சி நான் நிறைய நாட்கள் அழுதிருக்கேன்டா.

ஏன்டா சோமா, நீ, உன் தம்பி,  எல்லாம் எங்களுக்குப் பிள்ளையா வந்து பிறக்கணும்.

எப்பவாது யோசிச்சி பாத்திருக்கியா.

என் பிள்ளைகளை பற்றி நான் நிறைய யோசிச்சி பாத்திருக்கேன்.

இதுகள் எல்லாம் ஏன் என் வயிற்றுல வந்து ஜனிச்சிருக்கு. நான் என்ன கொடுப்பினை பண்ணினே அதுக்கு. சில நேரம் பாத்தா நீங்க எல்லாம் யாரோ எவரோங்கிற மாதிரியும் இருக்கு. குறத்தி பின்னாடி பிள்ளைகள் வேடிக்கை பாக்க கூடவே வருவாங்களே அப்படி தான் உங்களையும் தோணுது, நான் தான் அந்தக் குறத்தி.

சோமா, எனக்கு நீங்கள் எல்லாம் சின்ன வயசா இருந்த போது  ஒரு பயம் இருந்துகிட்டே இருந்துச்சி. அது என்னன்னா, யாராவது தொலைஞ்சி போயிடுவீங்களோனு.

எதுக்கு அப்படிப் பயந்தேனு தெரியலை.

ஆனா உள்ளுக்குள்ளே அந்தப் பயம் உலை கொதிக்கிற மாதிரி கொதிச்சிகிட்டே இருந்துச்சி.

தெருவில் பிள்ளைகள் விளையாடிக்கிட்டு இருக்கிறப்போ கூட அடிக்கடி வந்து இருக்காங்களானு எட்டிப் பாத்துகிடுவேன்.

ஸ்கூல் விட்டு லேட்டா வந்தா மனசு தாங்காது.  திடீர்னு மதிய நேரம் யாராவது வந்து கதவைத் தட்டினா அய்ய்ய்யோ பிள்ளை காணாமப் போயிருச்சினு தான் பயப்படுவேன். பதறி எழுந்து வந்து கதவைத் திறந்து பார்ப்பேன்.

உங்கப்பாவுக்கு அந்தப் பயமே கிடையாது.

அது எப்படிறா, பொண்டாட்டிக்கு இருக்கிற பயத்தில ஒண்ணு கூட புருஷனுக்கு இருக்கிறதில்லை.

உன் தங்கச்சி லட்சுமி இருக்காளே. அவ என்னை கிறுக்கா ஆக்கி வச்சா. ஒரு நாள், ஒரு பொழுது வீட்ல அடங்கிக் கிடக்க மாட்டா. இத்தனை ஆம்பளைப் பசங்க வீட்ல ஒடுங்கி இருந்தப்போ அவளுக்கு கால் ஒரு இடத்தில நிக்காது.

ஒட்டம். ஒட்டம். அடுத்த வீடு. அடுத்த வீதி. சத்திரம் சாவடி லைப்ரரினு ஒடிக்கிட்டே இருப்பா.  எங்கேயோ தொலைஞ்சி போகப்போறாளோ.னு பயமா இருக்கும்.  ஆனா அப்படி எதுவும் நடக்கலை.

ஒழுங்கா படிச்சி கல்யாணம் ஆகி புருஷனோட ஜாம்ஷெட்பூருக்குப் போயி வாழ்ந்து நாற்பத்தியெட்டு வயசில எனக்கு முன்னாடியே செத்தும் போயிட்டா.

அவசரம். எதுலபாரு அவசரம். ஆனா அவளும் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா. அம்மா கிட்டே அதை எல்லாம் சொன்னதில்லை.

பிள்ளைகள் நிறைய விசயத்தை பெத்தவங்ககிட்டே சொல்றதேயில்லை. பாவம் அம்மா இதை நினைச்சி வருத்தப்படுவானு நினைச்சிருப்பா.

ஆனா சொல்லாம இருக்கிறது தான்டா ரொம்ப வலிக்குது. ஒரு நாள் அவள் என் கனவுல வந்து எதுவும் சொல்லாம அழுதா. அழுகைன்னா அவ்வளவு அழுகை. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட தோணலை. அழுதுமுடிச்சி கையைத் துடைச்சிகிட்டு அம்மா உனக்கு புரிஞ்சிருச்சானு கேட்குறா.

உடம்பு சிலிர்த்து போச்சி. கை கால் நடுக்கம் வந்து தூக்கத்தில இருந்து எழுந்து உட்கார்ந்துகிட்டேன். மனது துவண்டு போச்சுடா.  அவளைக் கனவுல ஏன் பார்த்தேன்.

என்னாலே ரெண்டு நாளுக்கு ஒரு வாய் சோறு சாப்பிட முடியலை. செத்துப் போயிட்டாளே இனிமே அவளுக்கு நான் என்ன உதவி பண்ண முடியும். ஆனாலும் செத்து போனபின்னாடியும் நினைப்போட வலி ஆறாதது தானா.  அதை நினைச்சி தூக்கம் வராம பலநாள் அழுதிருக்கேன்,

சோமா, உனக்கும் அழுகணும்னு ஆசையா இருந்தா இப்பவே அழுதுரு.

என்னாலே  உன்னைத் தேற்ற முடியாது. ஆனா உன் கஷ்டத்தை என்னால புரிஞ்சிகிட முடியும். ஏன்னா நீ என் பிள்ளை. பெத்தவங்களுக்குப் பிள்ளைங்க கஷ்டம் அவங்க சொல்லி தான் தெரியுறதுன்னா அதை விட கேவலம், அவமானம் வேற எதுவுமில்லை.

நீ உன் தங்கச்சி, உங்க தம்பி எல்லாம் என் உடம்புல கொஞ்சம் பிஞ்சி எடுத்துட்டு பிறந்தவங்க தானே. எனக்குக் கை கால் வலிக்குன்னா யாராவது வந்தா சொல்றாங்க. நானா தெரிஞ்சிகிடுறது இல்லை.. அப்படி தான் உங்க கஷ்டம் வலியும்.

நானாத் தெரிஞ்சிகிடுறேன். எனக்கு உங்க யாரு மேலயும் கோபம் இல்லைடா. ஆனா நிறைய வருத்தம் இருக்கு. ஆதங்கம் இருக்கு. அது என் சுபாவம். எனக்கு நடந்ததை நான் யார்கிட்டேயும் சொல்லாம புத்து மாதிரி எனக்குள்ளேயே வளர்த்துகிட்டேன். புத்து வளர்ந்து என்னையை மூடிகிடுச்சி. அதுக்கு வேற யாரும் பொறுப்பில்லை.

சோமா. எனக்கு ஒரேயொரு ஆசைடா. நான் ஒரு கதை எழுதணும். சொன்னா  உனக்கு ஆச்சரியமா இருக்கும். நான் ஒரு கதை எழுதி அது கலைமகள்ல 1952வது வருசம் வெளியாகி இருக்குடா. கதைக்கு தலைப்பு பிராப்தம். அதுக்குப் படம் போட்டது யார் தெரியுமா. ஒவியர் சங்கர். என்ன அருமையா வரைஞ்சிருப்பார் தெரியுமா. எதுக்கு அந்தக் கதையை எழுதுனேன்னு தெரியலை. ஆனா அப்போ தான் கல்யாணம் ஆகி உங்க அண்ணன் பிறந்து இருந்தான். உங்க அப்பா வத்தலகுண்டில தாசில்தார் ஆபீஸ்ல வேலையா இருந்தார்.

நாங்க குடியிருந்த வீட்டுக்கு பக்கத்தில் ஒரு லைப்ரரி. பகல்ல உங்க அப்பாவுக்கு தெரியாம அங்கே போயி காண்டேகர் எழுதுன புத்தகங்களை எடுத்துட்டு வந்து படிக்க ஆரம்பிச்சேன். என்னைப் பத்தியே எழுதியிருக்கிற மாதிரி இருந்துச்சி. அப்போ தான் மனசில ஒரு கதை தோணுச்சி. அதை காண்டேகர் கதை மாதிரியே பார்த்துப் பார்த்து எழுதினேன். கதையை எழுதி முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியலை.

அந்த லைப்ரரியன் கிட்டே கேட்டேன். அவர்தான் கலைமகளுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி முகவரி கொடுத்தார். அனுப்பி வச்சிட்டு மறந்துட்டேன். நாலு மாதம் கழிச்சி அது வெளியாகி இருந்துச்சி.  அச்சில என் கதையைப் பார்த்த சந்தோஷம் தாங்க முடியலை. உங்க அப்பா மதியச்சாப்பாட்டுக்கு வந்தப்போ அவர் கிட்டே பத்திரிக்கையை நீட்டினேன். நீ எழுதுனதானு கேட்டார். தலையாட்டினேன். சாப்பிட்டு முடிச்சிட்டு ஊஞ்சல் உட்கார்ந்து படிச்சார். பரிட்சை பேப்பர் திருத்திற வாத்தியார் முன்னாடி நிக்கிற பொண்ணு மாதிரி கையைக் கட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தேன்.

உங்க அப்பா படிச்சி முடிச்சிட்டு ஒரு பெருமூச்சு விட்டார். பிறகு எழுந்து சமையற்கட்டுக்குள்ளே போனார் ஒரு தீக்குச்சியை எடுத்து அந்த கதையை கிழிச்சி அதுக்கு தீவச்சார். வேற ஒண்ணுமே பேசலை. அப்படியே போய் மாடில அவர் ரூம்ல போய் தூங்கப் போயிட்டார். எரிந்து கிடந்த காகிதத்தைப் பாத்துகிட்டே இருந்தேன். அழுகை முட்டிகிட்டு வருது. அவமானமா இருந்துச்சி, சாயங்காலம் அவர் வெளியே கிளம்பும் போது காபி கொண்டுவந்து வச்சிட்டு கதை பிடிக்கலையானு கேட்டேன்.

அவர் யாரைக் கேட்டுடி நீ கதை எழுதுனேனு கேட்டார்.

மனசுல தோணுச்சி எழுதுனேன்னு சொன்னேன்.

உனக்கு ஏதுடி பேனா. காகிதம், யாரு கொடுத்ததுனு கத்தினார் 

வீட்ல இருக்கிறதே உங்க பழைய பேனா. வெள்ளைக் காகிதம் நயினார் கடைல போயி வாங்கினேனு சொன்னேன்.

பகல்ல தனியா கடைக்கு வேற போயிட்டு வர ஆரம்பிச்சிருக்கியா, வேற என்ன திருட்டுதனம் பண்ணினே சொல்லு என்றபடியே உனக்கு இந்த கலைமகள்க்கு அனுப்பணும்னு ஐடியா  யார் சொன்னது என்று கேட்டார். நான் ஒளிக்காமல் எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிவிட்டேன்.

உங்கப்பா பல்லைக்கடித்துக் கொண்டு இப்பவே உங்க அப்பாவை வரச்சொல்லி தந்தி குடுக்குறேன்னு சொல்லி வெளியே கிளம்பி போயிட்டார். சொன்னது போலவே எங்க அப்பாவை தந்தி குடுத்து வரச் சொன்னார்.  எங்க அப்பா கோவில் கணக்குப்பிள்ளை, இயலாத மனுசன், அவரு மாப்பிள்ளை கோபமா இருக்காருனு தெரிஞ்சதும் என்ன செஞ்சார் தெரியுமா.

சாஷ்டாங்கமா உங்க அப்பா கால்ல விழுந்து கெட்டியாப் பிடிச்சிகிட்டு என் பொண்ணு செஞ்ச தப்பை மன்னிருச்சி ஏத்துக்கோங்கன்னு அழுதார்.

உங்க அப்பாவுக்கு அது போதலை. என்னாலே உங்க மக செஞ்ச தப்பை மன்னிக்க முடியாது. அவளை உங்க வீட்டுக்கு கூட்டுட்டு போயிருங்கன்னு சொல்லி என் புடவை பெட்டி எல்லாம் தூக்கி வெளியே வீசி எறிஞ்சார்.

அய்யோ அப்படி சொல்லாதீங்கனு எங்க அப்பா கோபத்தில் என்னை நாலு அறை அறைஞ்சி மாப்ளே கிட்டே மன்னிப்பு கேளுடி. இனிமே கதை எழுதுனே உன்கையை ஒடிச்சி மொண்டி ஆக்கிடுவேன்னு சொன்னாரு.

நானும் உங்க அப்பா கிட்டே மன்னிப்பு கேட்டு சத்தியம் பண்ணிக்குடுத்தேன, உங்க அப்பா என்னை ஏத்துகிட்டார். ஆனா எப்பவாவது கோபம் வந்தா நீ திமிர் பிடிச்சிப்போயி கதை எழுதுறவ ஆச்சே. இதையும் எழுதுடி என்று சொல்லிக்காட்டுவார்.

அதுல இருந்து வாரப் பத்திரிக்கை படிக்கிறதை எல்லாம் விட்டுட்டேன்.

ஆனா உங்க அப்பாவுக்கு தெரியாம மனசுக்குள்ளயே ஒரு கதையை எழுதிகிட்டு வர ஆரம்பிச்சேன். அந்த கதைக்கு தலைப்பு எல்லாம் கூட வச்சிருக்கேன். தலைப்பு என்ன தெரியுமா. பரமபதம்.  அதுல வர்ற பொண்ணு பேரு சரஸ்வதி. அது என்னோட கூட படிச்ச  ஒரு பொண்ணோட பேரு. அவளை ஸ்கூல்ல படிச்சதுக்கு அப்புறம் திரும்ப பார்க்கவேயில்லை.  ஆனா அவ முகம் மறக்கவே முடியலை. அதனாலே அந்தப் பெயரை வச்சிகிட்டேன்.

சும்மா இருக்கிற நேரம் எல்லாம் அந்தக் கதையை மனசுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா எழுதிகிட்டே இருப்பேன். எங்கே மனசில இருக்கிற கதையை உங்கப்பா கண்டுபிடிச்சிருவாரோனு கூட பயமா இருக்கும். ஆனா அவர் கடைசி வரைக்கும் கண்டுபிடிக்கவேயில்லை.

உங்க அப்பா எனக்கு நிறைய நகை வாங்கி குடுத்து இருக்கார். என் பேர்ல ஒரு வீடு வாங்கி குடுத்தார். வருசத்துக்கு ஒரு பட்டுபுடவை.. இஷ்டப்பட்ட கோவில்குளம் எல்லாம் கூட்டிட்டு போய் வந்திருக்கார். ஆனா அவருக்கு நான் ஒரு துணையாள். அவர் அதிகாரத்துக்கு கட்டுபடுற நல்ல வேலையாள். அவ்வளவு தான்.

நீ சென்னைக்கு போயிட்டே உன் தம்பிகள் அவனவன் பாட்டை பாத்து ஆளுக்கு ஒரு திக்கு போயாச்சி, வீட்ல நானும் உங்க அப்பாவும் ரெண்டே ஆளு, பிள்ளைகள் இல்லாம வீட்ல தனியா இருக்கிறது கொடுமைடா, கிறுக்கச்சி மாதிரி நீங்க விளையாண்ட் சுவரை தொட்டு பாக்குறதும் படுத்த படுக்கையை தடவி பாக்குறதுமா இருப்பேன்,

ஏன்டி வீட்லயே இருக்கே,, வெளியே  எங்காவது கோவில் குளம்னு போயிட்டு வர்றதுன்னா போயிட்டு வானு உங்க அப்பா சொல்லிகிட்டே இருந்தார். வயசானதுக்கு அப்புறம் அவரு தப்பை உணர்ந்துகிட்டாருனு நினைக்கிறேன்.

எனக்குத் தான் வெளியே போகப் பிடிக்கலை.

செக்குமாட்டை அவுத்துவிட்டா அது எங்கே போகும். உங்க அப்பா இறந்து போனபின்னாலும்  என் கூடவே அவர் இருக்கிற மாதிரியே தான் இருக்கு.  என்  ரெண்டாவது கதையை எழுதி வெளியிடுறதுக்கு துணிச்சலே வரலை.

இனிமே நான் கதை எழுதி என்ன செய்யப்போறேன். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. உங்கப்பாவுக்கு நான் எழுத மாட்டேனு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன். அதை அவர் இல்லேங்கிறதுக்காக என்னாலே மீற முடியாது. அதனாலே சோமா உன்கிட்டே அந்தக் கதையை சொல்றேன்.

நீ எழுதி கலைமகளுக்கே அனுப்பி வச்சிரு. ஆனா உன் பேரு போட்டுக்கோ. ஏன்னா ஆம்பளைப்பசங்க கதை எழுதினா உங்கப்பா ஒண்ணும் சொல்ல மாட்டார்.  அந்தக் கதை  என் மனசில இருந்து ரொம்ப ரணப்படுத்துடா. ஒரு வேளை அதை சொல்லாமலே நான் செத்து போயிட்டா ஒரு கதை அநியாயமா என்னோடவே புதைஞ்சிபோயிரும்டா. அந்தப் பாவத்தை என்னாலே தாங்க முடியாது.

சோமா,  அந்தக் கதையை உன்கிட்டே சொல்லட்டும்மா. கவனமா கேட்டுகிடுறயா. நான் சொல்றதுல எதையும் மாத்திராதே.

பேருக்கு தான் அது கதை. ஆனா நடந்தது எல்லாம் நிஜம்.

கதைன்னாலே அப்படித் தானே.  கிட்டே வா. உங்கப்பா பக்கத்தில் இருந்து கேட்டுகிட்டு இருக்கப்போறார். என்றபடியே அம்மா தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்

 மருத்துவமனையில் ஒடும் மின்விசிறியின் சப்தம் மட்டும் சீரற்று கேட்டுக் கொண்டிருந்தது, அம்மா மௌனமாகிவிட்டிருந்தார்

அம்மாவினை எழுப்பி என்னம்மா கதை கிதைனு ஏதோ சொல்லிகிட்டு இருந்தியே என்னது அது என்று கேட்டேன்

கலக்கத்துடன கண்விழித்தபடியே தெரியலைடா மறந்துபோச்சி. ஞாபகம் வந்தா சொல்றேன் என்றாள்,

பிறகு அந்தக் கதையை அம்மா நினைவு கொள்ளவேயில்லை தான் இறக்கும்வரை   

•••


பெமினா ஆங்கில இதழின் புதிய தமிழ்பதிப்பு வெளியாகி உள்ளது, அதன் முதல் இதழில் வெளியான சிறுகதை.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #9 on: June 01, 2013, 07:29:43 PM »
கடவுளின் குரலில் பேசி

சிறுகதை


ஜான் வீடு திரும்பும் வழியில் விசாரணைக்காரர்களால் விசாரிக்கப்பட்டான். அவர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஜானிடம் பதிலிருந்தது. அவர்கள் அந்த நாடகத்தைப் பற்றியே திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மாலையும் அந்த நாடகம் சதுக்கத்தில் நடைபெறுகிறது. தினமும் அதில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. முதல் நாள் அன்று ஜான் ஒருவன் மட்டும் அந்த சதுக்கத்தில் சிறு மேஜையைப் போட்டு, ஏராளமான காகிதங்களை வைத்து எழுதிக்கொண்டிருந்தான். பொது இடத்தில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தான்.

பொது இடத்தில் உட்கார்ந்து எழுதும் அவனை மக்கள் வேடிக்கை பார்த்துப் போனார்கள். கேட்கும் சிலரிடம் இது தனிநபர் நடிக்கும் நாடகம் என்றான். நாடகத்தின் ஒரே பாத்திரம் ஜான். நாடக ஆசிரியன் பலகாலமாக முயன்று நாடகம் எழுதமுடியாமல் தோற்றுக்கொண்டிருக்கிறான். நாடகம் எழுதுவதற்கான காகிதங்கள் குரோட்டோவெஸ்கி நாடக அரங்கு பற்றிய புத்தகம், வில்ஸ் பாக்கெட், மை பேனாக்கள், சிவப்புநிற சிகரெட் லைட்டர், அவன் லைட்டரை கொளுத்துவதும் சிகரெட்டை எடுக்க முனைவதும், பின் விட்டுவிடுவதும் கண்டு மாபெரும் அபத்த நாடகம் என மக்கள் சிரித்தார்கள்.

ஜான் நாடகம் எழுத பேப்பர்களை வேகமாக எடுப்பான். மக்கள் கூட்டம் சிரிக்கும். பின் அவன் நாடகப் பாத்திரங்கள் பெயரை வரிசையாக எழுதுவான். அவற்றை வாய்விட்டுப் படிப்பான். இப்படியாக தனி ஆளாக நடந்த ஜானின் நாடகத்தின் இரண்டாம் பாத்திரம் இரண்டாம் நாள் கிடைத்தது. இரண்டாவது பாத்திரமாக ஒருவன் மாலைப்பேப்பரை வாங்கிக் கொண்டு வந்து ஜானுக்குப் பக்கமாக உட்கார்ந்து தினமும் படித்தான். சுவாரஸ்யமான அரசியல் தலைப்புச் செய்திகள். நடிகைகளின் ரகசிய உறவுகள், குரங்குகுசலா, சிந்துபாத்தின் கன்னித் தீவு இப்படி. ஜான் நாடகம் எழுதுவதை நிறுத்தி விட்டுப் பேப்பர் படிப்பவனோடு சிறிது நேரம் சேர்ந்து படிப்பான். அவர்கள் அரசியல் சர்ச்சை செய்து கொள்வார்கள்.

இப்படியாக ஜானின் நாடகத்தில் இப்போது நாற்பது பாத்திரங்கள் சேர்ந்துவிட்டன. அவர்கள் வருவார்கள். பேசிக்கொள்வார்கள். ஜான் சொல்வது போலக் கேட்பார்கள், அல்லது தங்கள் வேலைகளைச் செய்வார்கள். ஜான் பாத்திரங்களை ஒழுங்குபடுத்துவதில்லை. பாத்திரங்கள் தங்கள் வசனங்களைத் தாங்களே பேசினார்கள். ஒருவர் கணக்கிட்ட படியிருந்தார். இன்னும் சிலர் பாடம் நடத்தினார்கள். தினமும் புதுப் புதுப் பாத்திரங்கள் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. பாத்திரங்கள் அதிகமான ஒரு நாளில் இரண்டு காவலர்கள் வந்த ஜானிடம் விசாரித்தார்கள்.

“என்ன நடக்கிறது இங்கே”

‘நாடகம்’

‘யார் எழுதியது’

‘யாரும் எழுதவில்லை’

‘பின்னே’

“அவர்களாக வருகிறார்கள், நடிக்கிறார்கள். சொல்லப் போனால் நீங்கள் இருவரும்கூட இரண்டு பாத்திரங்கள்” தான்.

“நாங்கள் விசாரிக்க வந்திருக்கிறோம்”

விசாரிக்கும் இரண்டு பாத்திரங்கள்”

‘நாங்கள் நினைத்தால் உன்னை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம், கைது செய்யக் கூட முடியும்’

‘நாடகம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்’

அவர்கள் அவர்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டார்கள். சில பாத்திரங்கள் தங்கள் வேலைகளை விட்டு இதை வேடிக்கை பார்த்தன. காவலர்கள் பேசாமல் திரும்பிப் போய் விட்டார்கள். மறுநாள் மாலையிலும் வந்தார்கள். வந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாடகத்தில் புதிதாக வந்து சேர்ந்திருந்த ஒரு பாத்திரம் ஓடியபடியிருந்தது. இரண்டு அரசியல்வாதிகள் பேசிக் கொண்டார்கள். ஜானிடம் காவலர்கள் வந்து நின்றார்கள். அவர்கள் முகம் வெளுத்துப் போயிருந்தது.

‘இது நாடகமில்லை. நீங்கள் எதிர்ப்பாளர்கள்’

‘தெரியவில்லை எனக்கு’

‘நீ என்ன செய்கிறாய்’

‘நாடகம் எழுதுபவன்’

‘இதன் முன்பு என்ன நாடகம் எழுதியிருக்கிறாய்.

‘சவரக் குறிப்புகள்’

அவர்கள் சிரித்துவிட்டார்கள். ஜான் திரும்பிப் பார்த்த போது சதுக்கம் எங்கும் ஆட்கள் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் குடைகளை விரித்த படி முன்னும் பின்னும் நடந்தார்கள். ஜான் காவலர்களிடம் திரும்பினான். அவனுக்கு அவர்கள் நாடகப் பாத்திரங்கள் போலவே தோன்றின. நாடகப்பாத்திரங்கள் சொல்லும் வசனத்தைத்தான் குறித்துக்கொள்ள வேண்டுமென முயற்சி செய்தான். காவலர்கள் விசாரித்ததை அவன் பேப்பரால் குறித்துக் கொண்டதை காவலர்கள் கண்டார்கள். காவலர்கள் அந்தப் பேப்பரை பிடுங்கிக் கொண்டார்கள். பின் அவனிடம் கேட்டார்கள்.

‘எங்கே அந்த நாடகப் பிரதி’

‘வீட்டில் இருக்கிறது’

‘வா, போகலாம்…’

‘நாடகம் இன்னமும் முடியவில்லை.’

காவலர்கள் சதுக்கத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். சதுக்கம் எங்கும் வெளிச்சம் பரவியது. நேரமாகிக் கொண்டே போனது. சோடியம் விளக்கு எரிய துவங்கியது. அவரவர்களாக கலைந்து போகத் தொடங்கினார்கள். வெகு நேரம் வரை பேப்பர் வாசிப்பவர்களும் ஜானும் மட்டுமே இருந்தார்கள். கடைசியாக அவன் பேப்பரைச் சுருட்டி கையிடுக்கில் வைத்துக்கொண்டு ஜானிடம் சொன்னான்.

“எவ்வளவோ நடக்கிறது வெளியே”

ஜான் அவனுக்கு பதில் சொல்லவில்லை. காவலர்களைக் கடந்து போகும் போது அவன் மாலை பேப்பரை ஆட்டி வணக்கம் வைத்துப் போனான். ஜான் மேஜையைத் திருப்பி ஒரு பழைய கட்டிடத்தின் உள் கொண்டு போய் போட்டு வைத்தான். காவலர்கள் அவனோடு வெளியே வந்தார்கள். ஜான் சிகரெட் பிடித்தான். அவர்கள் ஜானிடமிருந்து சிகரெட்டு வாங்கிக் கொண்டார்கள். பின் அவர்களில் ஒருவன் கேட்டான்.

“நாங்களும் இந்த நாடகத்தில் நடிப்பவர்கள் என்கிறாயா?”

“இருக்கலாம்”

“எனக்கு அப்படித்தான் படுகிறது”

மற்றொரு காவலர் முறைத்தார். உடனடியாகப் பதில் சொன்னார்.

நாம் எல்லா விபரங்களையும் சேகரித்து அனுப்ப வந்திருக்கிறோம். பாத்திரங்கள் அல்ல

“அப்படியானால் அங்கே நடந்தது நாடகல்ல.”

“பின் என்ன அது”

அவரவர் காரியங்களை அவரவர் செய்கிறார்கள். அதைப் பார்க்கும்போது நமக்கு அலுப்பும் எரிச்சலும் வருகிறது. குறிப்பாக அந்தடைப்பிஸ்ட் கணக்குப் பார்ப்பவன், வாத்தியார், கேஷியர்.. சே..

நீ அவர்களோடு சேர்ந்து பேசுகிறாய்.

காவலர் என்பதும் பாத்திரம்தான்…

“உளறாதே, நீ அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட ஆள். ஊழியன்

ஜான் அவர்கள் பேசுவதைக் கேட்டபடி வந்தான். பின் அவர்களிடம் திரும்பிச் சொன்னான்.

“பாத்திரங்கள் பேசிக் கொள்வதுபோல நிஜ வாழ்க்கையில் கூட எவரும் பேசிக் கொள்வதில்லை… அற்புதம் மிக அற்புதம்.

“உளறாதே.. இது நிஜவாழ்க்கை.. உன் நாடகம் அல்ல. அத்தோடு நாங்கள் நடிகருமல்ல”

“நடிகர்கள் எப்போதும் நடிகர்களாகவே இருப்பதில்லை. அவர்களும் வீடு திரும்பி விடுகிறார்களே”

“எங்களைக் குழப்பி… நீ எங்களை உன் நாடகத்தில் நடிக்க வைக்க பார்கிறாய்.. அப்படித்தானே உன் வீடு எங்கே”?

ஜான் அவர்களிடம் பேசவேயில்லை. மூவரும் நடந்தார்கள். இருட்டடைந்த சந்துகள்; வெங்காய வாடைவீசும் தெருக்கள். நிழல்கள் சரிகின்றன. வெளிச்சம் மங்கி நிற்கும் வீடுகள். காரைகள்பெயர்ந்த குடியிருப்புகள். மரங்கள் கூட இலைகள் உதிர்ந்து நின்றன. நாய்கள் குரைக்காது பின்தொடர்கின்றன. தெருவை அடைத்தபடி கிடக்கும் கோவில்மாடுகள். யார் வீட்டிலோ கேட்கும் பாட்டுச்சத்தம். பிள்ளைகள் பாடம் வாசிக்கும் சப்தம். காவலர்கள் மீண்டும் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

“நாம் வீடு திரும்ப வெகு நேரமாகிவிடும்.”

அவர்களின் சலிப்புத் தாங்கமுடியாததாகியிருந்தது. ஜான் சிறிய ஓட்டுவீட்டில் இருந்தான் ஜானின் மனைவி உறங்கியிருந்தான். கதவைத் தட்டியதும் திறந்து வந்தாள். அவள் காவலர்களைப் பார்த்துவிட்டு உள்ளே வந்து லைட்டைப் போட்டுக் கேட்டாள்.

“இப்போதுதான் நாடகம் முடிந்ததா…”

“இன்னும் முடியவில்லை”

அவர்கள் யார்.. நடிப்பவர்களா…

நாடகப்பிரதிவேண்டி வந்திருக்கிறார்கள்..

அவள் மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் குடித்துவந்தாள். பின் அவனைப்பார்த்துச் சொன்னாள்.

“உறக்கம் வருகிறது எனக்கு. சீக்கிரமாக அவர்களை அனுப்பு”

அவர்கள் வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். மரமேஜை கிடந்தது. பெரிய கிதார் ஒன்று. சில நாடகப் பொருட்கள், பேப்பர்கள், பூஜாடி, மீன் தொட்டி, காலி சிகரெட்பெட்டிகள், வர்ணக்காகிதங்கள். அவர்கள் இருவரும் ஸ்டூலில் உட்கார்ந்தார்கள். ஜான் பழைய பெட்டியில் தேடி நாடகப்பிரதியை எடுத்துவந்தான். பழுத்துப்போன காகிதத்தில் கறுப்பு மசியில் எழுதப்பட்ட நாடகம். அவர்கள் அந்தக்காகிதத்தை எடுத்துப்படித்துப்பார்த்தார்கள். பின் சுருட்டிக் கொண்டார்கள். ஜான் அவர்களுக்கு அந்த நாடகத்தைப் பற்றி விளக்கி பேசினான்.

‘மூன்று பாத்திரம் மட்டும்தான். ஒன்று கடவுள், மற்ற ஒன்று சவரக்காரன். மூன்றாவது நபர் காத்திருப்பவன்… நாடகம் கடவுளுக்கும் சவரம் செய்பவனுக்கும் நடக்கும் உரையாடல். உங்களுக்கே தெரியும் தானே… முகத்தில் மயிர் இருப்பது எந்தக் கடவுளுக்குத் தான் பிடிக்கும் சொல்லுங்கள். மழிக்கப்பட்ட கடவுள் முகம்தான் எல்லாருக்கும் வேண்டும்… இங்கே கூட அப்படித்தான். உங்களுக்குத் தெரியும்தான்’

அவர்கள் அவளிடம் உரக்கப் பேசினார்கள்.

நாங்கள் இதை நாடகம் போடக் கேட்கவில்லை… விசாரணைக்காகக் கேட்கிறோம்.. இதன் பிரதிகள் பல இடங்களுக்கும் அனுப்பப்படும்… நிச்சயம் உனக்குத் தண்டனை கிடைக்கும்.

இதை நானாக எழுதவில்லை. சவரம் செய்யும் இடத்தில் பேசிக்கொண்டவை. இவை நாவிதனின் வசனங்கள் நான் அவற்றைக் குறித்து வந்தேன்… அவ்வளவு தான்.

அவர்கள் திரும்ப ஒரு முறை பிரதியைச் சரிபார்த்துக் கொண்டார்கள். பின் அவர்கள் கிளம்பிப் போனார்கள். நள்ளிரவாதலால் தெருவில் ஜன நடமாட்டமில்லை. வெறிச்சோடிய தெரு. காவலர்களில் ஒருவன் பேசினான்.

“அந்த ஆளை என்ன செய்யப்போகிறது அரசாங்கம்.”

“நமக்கு சம்பந்தமில்லாதது”

“நாளையும் நாம் சதுக்கத்திற்கு வரவேண்டுமா?”

“தினமும் நம் வேலை அதுதான்…”

ஞாயிற்றுக் கிழமையன்று ஜானின் நாடகத்தில் நூறு பேர்கள் நடித்தார்கள். இடைவிடாத சப்தம், கூக்குரல், நிறைய பெண்கள், பெண் பாத்திரங்களில் சில ஜானிடம் வந்து நின்று ஏங்கி கேட்டன.

காதல் நாடகம் எழுதேன் ஜான்.

எனக்குத் தெரியாதது அது.

ஜான் காதல் இல்லாத நாடகம் வேண்டாம்… இளம் உள்ளங்களை வதைக்கும் காதல் நாடகம் போடு ஜான்

மிகச் சிறந்த நடிகையாக இருக்கிறாய் நீ…

அந்தப் பெண் வெட்கப்பட்டாள் ஜானிடம் ஒருவயதான நபர் வந்து நின்று பேசினார்.

ஜான் என் கண்ணே… நான்தான் அப்பா…

யாருடைய அப்பா…

நாடகத்தில் வரும் அப்பா… நான். நீ நாடகங்களே பார்த்ததில்லையா..

இருக்கலாம்.

அப்பா பாத்திரம் ஜானை விட்டு விலகிப்போனதும் ஜான் காகிதங்களைப் புரட்டினான். கோழிமயிர்சொருகி, வைக்கோல் தொப்பி வைத்த பாத்திரம் ஒன்று மஞ்சள் சட்டையிட்டு கறுப்புப் பேண்ட்டை கால்வரை மடித்துவிட்டு, பழையகால பூட்ஸ்போட்டு, கிடாரோடு வந்து நின்று சிரித்தது. அவன் கிடாரிலிருந்து சப்தம் விநோதமாக வந்தது. அவன் ஜானிடம் மண்டியிட்டுக்கேட்டான். ஜான் என்பிரிய நண்பனே, நான் தான் சாகசக்காரன். கோமாளி, என் பாத்திரம் என்ன சொல் ஜான். அவனைப் பார்த்ததும் ஜானுக்குச் சிரிப்பு வந்தது.

உனக்கு எதற்குப் பாத்திரம். உன் சாகஸங்களை நீ காட்டுவது தானே உன் இயல்பு. உன்னை நான் பழைய நாடகங்களில் பார்த்திருக்கிறேனே என்றான். கிடாரிலிருந்து இனிய சப்தம் வர அவன் பேசினான். என் தாத்தாவின் தாத்தாவின் தாத்தா கப்பில் நாடகம் நடித்தவர். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எல்லாம் அவர் தான் நடித்தார். அவரிடம் ஹாம்லெட்டின் கத்தி இருந்தது. ஒத்தல்லோவின் கர்சீப் இருக்கிறது. நீண்ட கால் கொண்ட மதுக் கோப்பைகள் இருந்தன. ஒத்தல்லோவின் கர்சீப்பை தான் என் தாத்தா தலையில் கட்டிக்கொண்டு வருவார் ஒத்தல்லோ என்று கறுப்பனின் இசைப்பாடல் இதோ. படுவேகமாக வாசித்தான். கூட்டம் சிரித்தது. அவன் தன் வைக்கோல் தொப்பியை எடுத்துச் சுழற்றி வீசினான்.

ஜானின் பேனா பலவாறாக முயன்று புதிய நாடகம் எழுதப்பார்த்தது. யாருடைய கதையை நாடகமாக்குவது என யோசித்தான். சிறையில் இறந்து போன நாடகக் காரனைப்பற்றிய நாடகத்தை எழுதலாம் என நினத்தான். அவனுக்கு நாடகத்தில் கோரஸ்பாடுவது பிடித்திருந்தது. ஜானுக்கு கோரஸ் பாடல்கள் பிடித்திருந்தன. கோரஸ்காரர்கள் சுழன்று சுழன்று பாடும் நாடகம் எழுத விரும்பினான். சதுக்கத்தில் வெயில் மிஞ்சியிருந்தது. இன்றைக்கு நிறைய பாத்திரங்கள் நடிக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான். கடற்கரையில் உலவும் யானை என ஒருவன் அவனாக நினைத்துக் கொண்டு கைகளை உயரே தூக்கி பிளிறிக்காட்டி நடித்துக்கொண்டிருந்தான். அன்றைக்கு வேடிக்கைப் பார்க்க குழந்தைகள் நிறைய வந்திருந்தன. அவை ஜான், ஜான் எனக் கூச்சலிட்டன. சிறு கண்ணாடி கொண்டு ஜான் மீது வெயிலைப் பாய்ச்சி கண்களைக் கூச வைத்தன.

ஜான் சதுக்கமெங்கும் அலைந்தான். அவ்வளவு பெரிய நகரத்தில் மக்கள் கூட்டம் நிறையவேயிருந்தது. எல்லாவற்றையும் ஆட்கள் விசாரித்தார்கள். ஜானிடம் அப்பா பாத்திரம் வந்தது.

ஜான்… ஆசிர்வதிக்கப்பட்ட மகனே… என்னை என்ன செய்யப் போகிறது… வயதான அப்பாவிற்கு தனிமை தானா.

நீங்கள் பேசுவது எனக்குப் புரியவில்லை..

நீ நாடகம் எழுதுபவன், ஜான். நான் பாத்திரம்…. பலரின் நாடகத்திலும் வந்த பாத்திரம்…

நீங்கள் மட்டுமா…

நான் மட்டுமில்லை. அம்மா, அக்கா, காதலி, காதலன், நீதிபதி, அச்சுகா; பாலி எல்லாம் பாத்திரங்கள் என் ஜானே… நான்லியர்… எனக்கு மூன்றுபெண்கள் உண்டு.

நான் என்ன செய்ய வேண்டும்..

அப்பாவை எதிர்க்கும் மகன் நாடகம் எழுதாதே ஜான், அப்பா வயதானவர், நோயாளி சிடுசிடுப்பானவர். இப்படிவசனம் எழுதாதே ஜான்… அப்பா நல்லவர், , ஜான்.

போய்விடுங்கள் இப்போது நான் நாடகம் எழுத வில்லை.

ஜான் என்னை மறக்காதே.. ஜான்.. ஜான்.. பலகுரல்கள் கேட்டன. ஜான் மேஜைமீது அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் சிலர் கேலி செய்தார்கள். ஜான் சிகரெட் பற்றவைத்துக் கொண்டான். நாயை வைத்துக் கொண்டு உலவும் ஒருவயதானவன் கூட இன்றைய நாடகத்தில் இருந்தான். ஜானிடம் ஒருவன் கேட்டான்.

இந்த நாடகத்தின் பெயரென்ன..

கூட்டம்

பேப்பர் வாசிக்கும் ஜான் பக்கம் திரும்பிக் கேட்டான்.

எங்கே நடக்கிறது கூட்டம். யார் பேசுகிறார்கள்?

தெரியவில்லை.

மாலைப்பேப்பரில் செய்திவரவில்லையே… இரண்டு காணாமல் போன பையன்கள் படம்தான் வைத்திருக்கிறது.

ஜான் காவலர்கள் வந்து கொண்டிருப்பதை பார்த்தான். உடன் வேறு ஒரு ஆள் வேறு வந்தான். அவன் உயர மானவனாக இருந்தான். அவர்கள் சதுக்கத்தின்பக்கம் வந்து நின்று கேட்டார்கள்.

ஜான் உன் நாடகத்தை நிறுத்து.

நான் எந்த நாடகமும் நடத்தவில்லை.

உன் கூட்டத்தை நிறுத்து.

அது என் வேலையில்லை… உங்களுடையது.

காவலர்கள் உரக்கக்கத்தினார்கள். சதுக்கம் விரைவில் காலியானது. உயரமான நபரின் கையில் நாடகப்பிரதி இருப்பதை ஜான் பார்த்தான். உயரமான நபர் மீசை மழிக்கப்பட்டு பெரியகண்களோடு இருந்தார். அவர் ஜானைப் பார்த்துக் கேட்டார்.

இது உன்னுடைய நாடகம்தானே.

இல்லை .. குறிப்பு…

சவரக்குறிப்பு… இதை நிகழ்த்திக்காட்டு… எதுவுமே புரியவில்லை வாசிக்க.

என்னிடம் நடிகர்கள் இல்லை.

எங்கே போனார்கள்.

நான் நடிகர்களைத் தேடுவதுமில்லை… அவர்கள் என்னுடன் நடிப்பதுமில்லை.

இப்போது என்ன செய்வது.

நீங்கள் நினைத்தால் நாம் மூவரும் நடிக்கலாம்… மூன்று பாத்திரங்கள்… நீங்கள் கடவுள் நான் நாவிதன்.. மூன்றாம் ஆள் காத்திருப்பவன்.

சதுக்கத்தில் பலர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஜான் தன்னுடைய சட்டையை கழட்டிவைத்துவிட்டு தரையில் உட்கார்ந்தான். அவன் எதிரில் இரண்டு கல்லை தூக்கிப்போட்டு அதிகாரியை உட்காரச்சொன்னான். மற்றொரு ஆள் தள்ளி நின்றான்.

ஜான் பாக்கெட்டிலிருந்து சிறிய கத்தியை எடுத்து வைத்துக் கொண்டான். அதிகாரியின் சட்டையும் கழட்டப்பட்டது. ஜான் அவருடைய முகத்தைக் கைகளால் தடவிவிட்டுக் கேட்டான்.

கடவுளே உங்கள் முகம்தான் எவ்வளவு வழவழப்பானது… நீங்கள்தானே எல்லாவற்றிற்கும் அதிகாரி.. ஜானின் நாடகத்தில் கடவுளுக்கு வசனம் இல்லை. கடவுளின் மொழி பற்றி யோசிக்க யோசிக்க யோசிக்க ஜானுக்குக் குழப்பமே மிஞ்சியது. அதனால் கடவுள் தலையை மட்டும் ஆட்டினார். காத்திருப்பவன்தான் அதிகம் பேசினான். காத்திருப்பவன் ஒரு கைதியைப்போல, குடும்பஸ்தனைப்போல கல்லூரி மாணவனைப்போல பல குரலிலும் பேசினான். ஜானின் கத்தி கடவுளின் கன்னங்களில் உரசியது ஜான் இப்போது நாவிதனாகவே மாறிப் போயிருந்தான். அவன் குரல் உயர்ந்து கேட்டது.

நீசத்தனமானவனே… உன் பெயர் கடவுளா… முட்டாள்.. சவரக்கத்தியின் முனையால் எந்த சரித்திரத்தையும் மாற்ற முடியும் ததெரியுமா.. உன் பெயர் என்ன? கர்னலா… சக்கரவர்த்தியா, எண்ணெய் வயலுக்கு சொந்தக் காரனா, உளவாளியா யாராயிருந்தாலும் சவரக்கத்தியின் நுனியில் உன் தலை எப்போதும் இருக்கிறது தெரியுமா…

காத்திருப்பவன் அவசரப்படுத்தினான்.

இன்னுமா சவரம் செய்கிறாய். நேரமாகிறது… சினிமா போகவேண்டும். காதலியைச் சந்திக்கவேண்டும்.. தப்பிக்கவேண்டும்.. வேகம்..

கடவுளகாக இருந்த அதிகாரியின் முகம் வெளுத்துக் கொண்டு வந்தது. சதுக்கத்தில் ஆட்கள் குறைந்து கொண்டிருந்தார்கள். சோடியம் விளக்கு வெளிச்சத்தில் ஜானின் கண்கள் மின்னின. அதில் இனம் புரியாத குரூரம் தோன்றுவதைக் கண்ட அதிகாரி சப்தமிட்டான். ஜான்… நாடகம் போதும்.. நிறுத்து

கடவுளுக்குப் பேச உண்மையில்லை.. இன்னமும் சவரம் பாக்கியிருக்கிறது. காத்திருப்பவன் ஜானின் முதுகில் அறைந்து பேசினான்.

கிழப்பிணமே.. அவசரமாக சிரைத்துவிடு.. அவசரம் ஜானின் கத்தி அதிகாரியின் தொண்டையின் கீழே போனது. ஜானின் கண்களை அவர் பார்த்தபடியிருந்தார். ஜான் சரால் என ஒரு இழு இழுத்தான். ரத்தம் பெருகியது காவலர்கள் தன்னிலை பெற்றார்கள்.

ஜான் .. டேய்… என்ன செய்கிறாய்.

அதிகாரி ஜானை எட்டி உதைத்தார். ஜான் தள்ளிப் போய் விழுந்தான். அவர்கள் ஜானை பிடித்துக் கொண்டார்கள். அதிகாரி  கர்சீப்பால் கழுத்தை ஒத்திக்கொண்டார். ஜான் முகத்தை உலுக்கிக் கேட்டார். ஜான் தலையை திருப்பாது சொன்னான்.

நாடகம் அது.

என்ன நாடகம்… மடையனே.. உன்விரல் நகங்களை பிடுங்கினால் தான் உனக்கு சொரனை வரும்.

அவர்கள் ஜானைத் தள்ளிக் கொண்டுபோனார்கள். ஜானின் மேஜை, பேப்பர் அப்படியே கிடந்தது. ஜான் தெருவில் நடக்கும் போது கூட நாடகத்தில் நடிப்பது போலவே அவனுக்குத்தோன்றியது உடன்வரும் மூன்று பாத்திரங்களுடன் தான் போவது போலவேயிருந்தது. ஒருவன் கையில் நாடகப்பிரதியிருந்தது. ஜான் முடிவடையாத தன் நாடகத்தை நினைத்துக்கொண்டே போனான். ரத்தம் வழிந்த இடத்தில் தீயாக எரிந்தது அதிகாரி புலம்பினான் , ஜானோ ஒரு நாடகப் பாத்திரம் போலவே மெதுவாக உடன் நடந்து போனான்.

••


(ஏப்ரல் 1993 வெளியான இந்த சிறுகதை மலையாளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது )

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #10 on: June 01, 2013, 07:45:17 PM »
வேனல்தெரு

சிறுகதை

பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம் கலைவுற்றவர்களாகவும் குடிகாரர்கள் நடந்து கொண்டிருந்தனர். வேனல் தெருவின் இரு பக்கமும் நீண்ட வரிசையாக மதுக்கடைகளே நிறைந்திருந்தன. கண்ணாடிக் குடுவைகளில் தேங்கிய மது தன் நீள் தொடு கொம்புகளால் பார்ப்பவரின் கண்களைச் சுருட்டி அடைத்துக் கொண்டிருந்தது. நகரின் தொல் பழமையான இந்தத் தெருவின் இமைகள் இரவு பகல் பேதமின்றி சிமிட்டிக்கொண்டிருந்தன. வயதை மறந்த குடிகாரர்கள் தங்களை மீறி ஸ்நேகித்துக் கொண்டும், பரஸ்பரம் அன்பில் கட்டுப்பட்டவர்களாய் நேசம் மட்டுமே வழியும் மதுக் குடுவையுடன் விடாது பேசியபடியிருக்க, எரிந்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு குண்டு பல்புகளுக்கு ஊடே பெண்களும் கூடி கபடின்றி சிரித்தபடி முக்காடு விலக்கிக் குடித்துப் போகின்றனர். போதை ததும்பியவென் கனவிலோ உருக்கொண்டது போல வியாபித்திருக்கிறது வேனல் தெரு. மனிதர்கள் மதுவுடன் தங்கள் ஆகிருதிகளைக் கரைத்துவிட்டு திரவம் போலாகி மதுப்புட்டியினுள் சேகரமாகிவிட முயன்று கொண்டிருந்தனர்.

நீண்ட தாடியும் கருத்த ரம் புட்டியுமாக நிற்கிறாரே… அதோ கட்டத்தின் கடைசியில் – அவரிடம் கேளுங்கள். தனது விநோத கனவுகளில் நூறு நடிகைகளைக் காதலித்துத் தோற்ற கதை அவரிடம் ஒரு சுருள் பூச்சியாய் ஆயிரம் கால்கொண்டு ஊர்ந்துகொண்டிருக்கிறது. என்றோ இறந்துபோய்விட்ட எல்.பி.வனமோகினிக்காகத்தான் அவர் இப்போது மது அருந்திக் கொண்டிருக்கிறார். இருபது வயதிற்குள் எண்ணற்ற நடிகர்களால் காதலிக்கப்பட்டு, எவரையும் வெறுக்கத் தெரியாமல் சுயமரணம் செய்து கொண்ட அந்த நடிகையின் சுருள் கூந்தல் இழையொன்று மதுவின் வழியே தன்மீது படர்வதாகவே அவர் நினைத்துக்கொள்கிறார். எல்.பி. வனமோகினியை அவர் நேரில் கண்டவரில்லை.

யாரோ தந்த சினிமா புகைப்படத்தாளில் சுழித்த உதடுடன் இருந்த அவள், நரி ஒன்றைத் தன்னோடு அணைத்துக் கொண்டிருந்தாள். நரியே அவளைக் காதலிக்கச் செய்தது. இந்த நூற்றாண்டின் இரண்டாம் பத்தில் இறந்து போனாள் வனமோகினி. என்றாலும் என்ன? அவளை உயிருடன் எழும்பும் மதுப்புட்டிகள் அவரிடம் இருந்தனவே. அவரின் மனதில் அன்பின் சிறு துவாரங்களின் வழியே தீர்க்க முடியாத துக்கம் சுரந்துகொண்டிருக்கிறது. அன்பே துக்கத்தின் துளிதானோ? உலகில் வனமோகினியின் காலம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இருக்கும்? அவரிடமிருந்து தேவைப்படுமாயின் மதுவை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். இன்று அவரிடமிருந்த மதுப்புட்டியைப் பிடுங்கிக்கொண்டு அவரை மிதித்துத் தள்ளியபடி நகர்கிறானே அந்த இளைஞன், அவன் பெயர் என்னவாகயிருக்கும்?

வேனல் தெருவிற்குள் வருபவர்கள் எவராகயிருப்பினும் பெயர் ஒன்றுதானே? இளைஞன் தன்னிடமிருந்த சில்லறைகளைத் தெருவெங்கும் வீசி இறைக்கிறான். எவனோ ஒரு கடைக்காரன் தன்னிடம் சில்லறையில்லை என எந்த ஊரிலோ மறுதலித்ததின் பதிலாக இங்கே சில்லறைகள் வீசுகிறான். புpன்பு மெதுவாகத் தன்னிடமிருந்த நூறு ரூபாய் தாளை சுருட்டி அதன் முனையில் நெருப்பிட்டுப் புகைக்கிறான். அவனைப் பார்த்து யாரோ சிரிக்கிறார்கள். ஏழாம் நம்பர் கடை மூலையில் இருக்கும் இருவர்தானே சிரித்தது. அவர்களில் ஒருவனுக்கு, பணத்தைப் புகைப்பவனிடமிருந்து ஒரேயொரு தம் அடிக்க ஆசை எழ, கால் பின்னிய நிலையில் எழுந்து வந்து அவனிடம் தம் கேட்கிறான். வந்தவன் உதட்டிலும் பணத்தின் நீல நிறம் ஒட்டிக்கொள்கிறது. இருவரும் புகைக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட புதிய நட்பிற்காக இருவரும் ஒரே மதுக்கோப்பையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கோப்பை காலியானதும் இருவருக்குள் விரோதம் துவங்குகிறது. தனது பணத்தைப் பிடுங்கி சுருட்டிப் புகைத்துவிட்டான் என வந்தவனுக்கு எதிராகக் கூச்சலிடுகிறான் இளைஞன்.

 ஏழாம் கடையில் இருந்தவனோ தன்னுடன் இருந்த நண்பன் எவன் என அறியாது மற்றொருவன் தோளில் சாய்ந்துகொண்டு உறவை விளித்து மாப்ளே… மாப்ளே.. என செல்லமிடுகிறான். இத்தனை குடிகாரர்களுக்கும் நடுவில் சிதறிய நாணயங்களைக் குனிந்து அவசரமும் ஒடுக்கமுமாக பொறுக்கிக் கொண்டிருக்கிறாளே அந்த செங்கிழவி, அவளை விடவும் திருடக்கூடியவர் இந்த வேனல் தெருவில் எவரும் கிடையாது. நாணயங்களைக் குனிந்து சேகரித்தபடியே அவள் கால் செருப்புகளைத் திருடி ஒளிக்கின்றாள் பாருங்கள். அவள் உடைந்த குப்பிகளுக்குள் நாணயங்களைப் போட்டுக் குலுக்குகிறாள். அவைதான் எத்தனை இனிமையாகச் சப்தமிடுகின்றன. நாணயங்கள் நிரம்பிய மதுப்புட்டியுடன் வேனல் தெருவில் இருந்த இருள் சந்தில் போகிறாள். அங்கும் சிலர் குடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் நிலத்தோடு உரையாடிக்கொண்டிருப்பது போல முணுமுணுக்கின்றனர்.

விலை மலிந்த சாராய வீதி அந்த இருள் சந்து. தகரக் குவளைகளில் மஞ்சள் சாராயம் மினுக்கிறது. செங்கிழவி தன் மதுப்புட்டியை ஒரு தகரக் குவளையில் கொட்டுகிறாள். மிச்சமான சாராயத்தில் ஊறுகின்றன நாணயங்கள். தங்கத்தைப் போன்ற வசீகரமான அத்திரவத்தை அவள் உதடு தீண்ட விரிகின்றது. ஒரு வான்கோழியைப் போல சப்தமிட்டபடி அவள் குடித்துவிட்டுத் தகரக் குவளையைத் தருகிறாள். அவளுடைய வயது மெல்லக் கரைந்து மீண்டும் பால்யம் கண்டவள் போல தனது மார்புகளை சாராயக்காரனிடம் காட்டி இச்சை மொழியில் பேசுகிறாள். அவனோ கிழட்டு நாயே என ஏசியபடி மீண்டும் தகரக் குவளையில் சாராயம் தருகிறான். இனி இரவு முழுவதற்கும் வேறு கிடைக்காது என்பது தெரியும். நீண்ட கயிற்றால் காலி மதுப்புட்டியை இடுப்பில் சுற்றி நாணயம் தேடி அலையத் துவங்குவாள். வேனல் தெருவிற்கு எல்லா இரவும் மது வாங்க வரும் பக்கீர் வந்திருக்கக்கூடும்.

அவரது மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் ஓசையைக் கேட்டதும் கிழவி ஓடுகிறாள். பக்கீர் என்றைக்கும் போலவே இரண்டாம் கடை முன் நிற்கிறார். அவருக்கு உரியதைப் பெற்றுக்கொள்கிறார். இளம் பெண்ணைப் போல அவரை உரசிச் சிரிக்கிறாள் செங்கிழவி. அவர் வண்டியில் அமர்ந்தபடி எல்லா நாளையும் போலவே தனது இடது காலால் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஐந்து ரூபாயை எறிந்து புறப்படுகிறார். அதை எடுக்க மனம் அற்றவளாக அவரின் மனைவிகளைப் பற்றியவசைகளைப் பெருக்கியபடி நிற்கிறாள். அந்தப் பணம் இரவெல்லாம் எவராலும் எடுக்கபடாமல் அந்த இடத்தில் கிடக்கும். விடிந்த பின்பு அதை அவளே எடுத்துக்கொள்ளக் கூடும். ஆயினும் இரவில் அவள் அதன்மீது மூத்திரம் பெய்வதையோ, காறி உமிழ்வதையோ எவர் தடுக்க முடியும்? வழியற்ற ஒருவன் அப்பணத்தை எடுத்த நாள் ஒன்றில் கிழவி அவன் உடைகளை அவிழ்த்துவிட்டு ஆடையற்ற அவன் உறுப்பில் புட்டியால் அடித்திருக்கிறாள் என்கிறார்கள். எனினும் புறக்கணிக்கப்பட்ட பணம் வெறும் காகிதமாகஇருளில்வீழ்ந்துகிடக்கும்.

வேனல் தெருவிற்குப் புதிதாக வந்த அந்தப் பையனைப் பாருங்கள். இப்போதே மீசை அரும்பத் துவங்கியிருந்த அவன், எதிர் வீட்டில் குடியிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போன மாணவிக்காகவும் தன் முதல் காதலுக்காகவும் மதுப்புட்டியைத் திறக்கிறான். அவனிடம் சொல்லவொண்ணாத காதல் இருக்கிறது. தோற்றுப்போன தன் முதல் காதல் பற்றி யாரிடமும் பேச முடியாத தவிப்பில் அவன் கடைசியில் தன்னிடமே பேச முயலுகிறான். தன்னிடம் பேசுவதைவிடவும் வேறு எவர் கிடைக்கக்கூடும் நல்துணை. அவனுக்கு குடிக்கத் தெரியாமல் இருக்கக்கூடும். ஒருவேளை மது அவனை வீட்டிற்குத் திரும்பவிடாமல் ஏதோ ஒரு தெரு இருளில் விழச் செய்யக்கூடும். ஆனாலும் அவனுடன் பேசுவதற்குக் கற்றுத் தரக்கூடும். அவன் கறுப்புத் திரவம் ஒன்றை வாங்கியிருக்கிறான்.

அத்திரவம் அவன் உடலில் கண்ணாடி இதழ் போல நீர்தட்டானின் சிறகை விடவும் மெல்லியதாக இரு சிறகுகளைக் கிளைவிடச் செய்யும். இதை நினைத்தபடியே குடிக்கிறான். பனை விசிறியைப் போல வடிவம் கொண்ட அந்தச் சிறகு அருகில் குடித்துக் கொண்டிருப்பவன் கண்ணுக்;குக்கூடத் தெரிகிறது. அவனுள் மிதந்து கொண்டிருந்த திரவம், மாற்றலாகிப் போன பெண்ணின் சுவடுகளைப் பற்றிச் சென்று, தெரியாத ஊரில் உறங்கும் அவள் வெண்பாதங்களை முத்துகின்றன. அவன் இப்போது அந்தப் பெண்ணையே குடித்துக் கொண்டிருக்கிறான். புட்டியில் ஒரு துளி திரவமும் இல்லாமல் தீர்த்துவிட்டான். நீர்மை படர்ந்த கண்களுடன் தன் முதல் காதலைப்பற்றித் தன்னிடமே பேசிக்கொள்கிறான். விசும்பலும் ஏக்கமும் ஊர்கின்றன உடலெங்கும். சக குடிகாரன் ஒருவன் அவனை நோக்கித் தன் கைகளை விரிக்கிறான். கரங்களின் ஊடே நுழைந்த மாணவனை முத்தமிடுகின்றன பெரு உதடுகள். மாறி மாறி முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.

பின் இருவரும் தோளில் கைபோட்டபடி அடுத்த மதுக்கடைக்குப் போகிறார்கள். அவர்களை இடித்துக்கெர்ணடு போகும் நபர் பையனின் நல்லாசிரியராக இருக்கிறார். எனினும் என்ன? இரவின் ரகசிய படிக்கட்டுகளின் வழியே உலவும் குடிகாரர் அவரும்தானே. காலி மதுப்புட்டிகளில் விரல் நுழைத்து துழாவும் குருடன் செபாஸ்டியன் புட்டிகளில் மிஞ்சிய மதுவைத் துளிதுளியாக தன் சிரட்டையில் சேகரிக்கிறான் பாருங்கள். எவனோ குடித்து மீதம் வைத்துப்போன பாதி புட்டி ஒன்றால் சிரட்டையே நிரம்பி விடுகிறது. இனி அவனை விடவும் யோகமும் சந்தோஷமும் கொள்ளக்கூடிய மனிதன் எவனிருக்கிறான். வேனல் தெரு இடிந்த மூத்திரப் பிறையின் படிக்கட்டில் அமர்ந்தபடி அவன் இரவு உணவையும் சிரட்டை மதுவையும் ருசித்துக் குடிக்கிறான். பகல் முழுவதும் கூவிப் பெற்ற நாணயங்களையும் மனிதர்களையும் மறந்துவிட்டு, தான் கண் பார்த்து அறியாத வேனல் தெருவின் வாசனையை முகர்ந்தபடி களிப்புறுகிறான். சந்தோஷம் ஒரு சல்லாத்துணி போல உடல்மீது படர்கிறது.

 தன்னிடமிருந்த பீடியைப் புகைக்கத் துவங்கியதும் உலகம் ஏன் இத்தனை சந்தோஷமாகவும், இடைவிடாத களிப்பையும் கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டான். ஸ்திரீகளையும் வீட்டையும் மறந்த வேனல் தெரு மதுக்குடியர்களுக்குள் மட்டும் எப்படி வற்றாமல் களிப்பு பீறிடுகிறதோ என புரியவேயில்லை. கசப்பு முளைத்த நாவுடன் அவர்கள் உலகின் மொத்தக் களிப்பையும் திருடி வந்துவிட்டார்களாயென்ன. வேடிக்கையும் உல்லாசமும் நிரம்பிய அத்தெருவிற்குள் குற்றம் என எதைச் சொல்லிக்கொள்ளக் கூடும். திறந்த இரவினுள் குற்றங்கள் நிழலைப்போலசப்தமிடாதபடியேஉலவுகின்றன.

பண்டிகை நாள் தவிர வேறு காலங்களில் ஒப்பனையற்றுப் போன ஸ்திரீபார்ட்காரன் ஒருவன் மட்டும் குடியில் குரல் உயர்த்திப் பாடாமல் இருந்திருந்தால் உல்லாசத்தில் இந்த லயம் இருந்திருக்கக் கூடுமா? அவனுக்குப் பெண்களைவிடவும் அடர்ந்த கூந்தல். ஸ்திரீ முகம் கொண்ட அவன் வேனல் தெருவிற்குக் குடிப்பதற்கு ஒருபோதும் தனியே வருவதேயில்லை. ஒரு ஆட்டுக் குட்டியை மார்போடு அணைத்து எடுத்துக்கொண்டு வருவான். கற்பனையான உபவனத்தில் தோழியோடு அலையும் ராணியைப் போல நடக்கிறான்.

அவனுடைய தோளில் சரசரக்கும் தலைமயிர் குடிப்பவர்களுக்குள் சரசத்தின் மூச்சைக் கிளப்பிச் செல்கிறது. வேஷமிடாத போதும் அவனால் ஸ்திரீபார்டினின்னு தப்பிக்க முடியவில்லையே. பொய் மார்பகமும், உயர் கொண்டையும் அணியவில்லையே தவிர, அவன் முகத்தில் மஞ்சள் திட்டுகளும், கைகளில் வளையும் சப்தமிட வருகிறான். அவனுடைய ஆட்டுக்குட்டி துள்ளி குடிகாரர்களின் ஊடே அலைகிறது. ஆட்டின் கழுத்தில் புரளும் ஒற்றை மணி சப்தம் கேட்ட குடிகாரன் எவனோ தங்களுக்குக் குடிப்பதற்காக வாங்கிய புட்டியுடன் இருளில் மறைகிறான். ஆட்டின் கண்களில் பழகிய போதையின் சுகிப்பு தெரிகிறது. அவனும் ஆடுமாகக் குடிக்கிறார்கள். இருவரும் இரவெல்லாம் குடிக்கக்கூடும். குடித்த ஆடுகள் எப்போதும் இயல்பிலேயே புணர்ச்சிக்கு ஏங்குகின்றன. அவை மனித பேதமறியாது கால் தூக்கி நிற்கின்றன. நள்ளிரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆடு வேனல் தெருவின்று கிளம்பி அவர்கள் மஞ்சள் அழியும் உலர்ந்த வீதிகளில் காகிதத்தை மென்றபடி அலையத் துவங்குகிறது. மூடிய வீடுகளுக்கு வெளியே முரட்டுக் குடிகாரனைப் போல ஆடு மணியசைத்துச் சுழல்கிறது. தடுக்க யார் இருக்கிறார்கள். உல்லாசம் தெருவில் தனியே நடனமிடுகிறது என்பதைத்தவிர.

வேனல் தெரு மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. கடைகளுக்குக் குடிக்க வருபவர்கள் மட்டுமல்ல, கடையில் இருக்கும் விற்பனை செய்யும் நபர்கள் கூட ஒரே முகச் சாயலில் தானிருக்கிறார்கள். அவர்களுள் நான்காம் கடை சிப்பந்தியின் கண்கள், புட்டிகளை வாங்கும் எல்லா மனித முகத்தையும் துளையிட்டு அறிந்துவிடுகின்றன. மதுக்கடைச் சிப்பந்திகள் சில்லறை தராமல் ஏமாற்றும்போதோ, கள் மதுவை விற்கும்போதோ கூட குடியர்கள் ஏன் எதிர்;ப்பதில்லை. வேனல்தெரு இரவு எப்போதும் அரை மயக்கநிலையே இருக்கிறது. பொருள் வழி அலையும் வியாபாரிகளும் பயணிகளும் இதனுள் நுழையாமல் செல்ல முடிவதேயில்லை. தனது குறிப்பேட்டில் யாரோ பயணியின் கைகள் தெருவின் ஞாபகத்தினை எழத் தாக்குகின்றன. பின் அவனும் களைத்துவிடுகிறான். நேற்றாக இருக்கலாம்.

குடிக்க வந்த இருவர், நெடும் காலத்தின் பின் சந்திப்பு கொண்டு நினைவைப் பரிமாறியபடி குடித்தனர். அவர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தவர்கள் எனத் தெரிகிறது. மதுப்புட்டிகள் காலியாகியபடி இருந்தன. பின் இருவரில் மூத்தவன் மதுப்புட்டியை உயர்த்தி அதனுள் பர்மா மூழ்கியிருப்பதாகக் கூறுகிறான். திரவம் மெல்ல படிய பர்மா நகரம் கண்ணாடி மீறி விரிகிறது. இருவரும் யுத்தத்திற்கு முந்திய மரவீடுகளின் சாலையில் நடக்கின்றனர். ஜப்பானிய விமானங்களின் குண்டு நகர் மீது சிதறுகிறது. தெருக்களுக்குள் ஓடுகிறார்கள். துப்பாக்கி ரவை எட்டாத வெளியில் பயணித்து நடந்தபோது ஒருவன் மற்றவனை நோக்கி துப்பாக்கி நீட்ட, தோட்டா பீறிட்டு முதுகில் பாய்கிறது. விழித்துக் கொண்டவனைப் போல குடிப்பவன் கண்ணாடி புட்டியைத் தூக்கி உடைக்கிறான். பர்மா சிதறுகிறது. சுட்டுக்கொண்டது யார் யாரை என்ற புதிர் விலகாமல் சொந்த துயரத்திற்காக மீண்டுமொரு மதுப்புட்டி வாங்க நடக்கின்றனர்.

இரவு நீள நீள மயங்கிச் சரிந்த சாயைகளின் நடமாட்டம் ஓய்ந்த பின்பும் வேனல் தெரு விழித்தபடிதானிக்கிறது. என்றோ இந்த நகரையாண்ட வெள்ளைப் பிரபுவின் குள்ளமான சிலையைப் பாருங்கள். அதன் கண்கள்கூட இந்தத் தெருவைப் பார்த்தபடிதானிருக்கின்றன. பிறந்த தேசம் விட்டு கனவுக் கப்பலில் மிதந்தபடி அந்தத் துரை இந்நகரை நன்றாக அறிந்திருந்தான். அந்தச் சிலையின் கீழே உளறுகிறானே ஒருவன் அவன் எதைத்தான் பேசுகிறான் – காதில் விழுகிறதா? என்றோ மழை வெறித்த நாள் ஒன்றில் சிவப்புக் குடையுடன் வந்த இரண்டு சட்டைக்காரப் பெண்கள் கண்ணீர் மல்க, அந்தச் சிலையின் முன்பாக மௌனித்து விட்டு ரோஜா மலர்களை அங்குவிட்டுச் சென்றனரே அன்றும் அவன் அங்கு குடித்துக்கொண்டிருந்தான்.

ரோஜா மலர்கள் வேனல் தெரு மதுக்குடியர்களைப் பேச்சற்றுப் போகச் செய்தது. மதுக் கடைக்காரர்களுக்கு அந்த ரோஜாக்களைப் போல குற்ற உணர்வை ஏற்படுத்தும் அந்தப் பொருளும் இதுவரை உலகில் இருந்ததாக நினைவில்லை. இருபத்தி எட்டு மதுக்கடை சிப்பந்திகளும் ரோஜாக்களை எவராவது எடுத்துப் போய்விட வேண்டும் என ஆசைப்பட்டார்களே அன்றி எவனும் கீழ் இறங்கி அந்த ரோஜாக்களை எடுத்து எறிய இயலவில்லை. பதினாலாம் கடைச் சிப்பந்தி ஒருவன் தன் ஆறு வயது மகள் ஞாபகம் பெரு மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமத்து வீட்டின் கதவுகளைத் தட்டி முகம் பார்க்க ஆசையுற்றுப் புலம்பினான்.

அவனாலும் இந்த ரோஜாக்களை எடுத்து விடமுடியவில்லைதானே. மூன்று நாட்கள் வரை அதே இடத்தில் காய்ந்து சருகாகிய நிலையில் ரோஜாக்கள் இருந்தன. பின் காற்று அதைத் தன்னோடு கூட்டிப் போனது. காற்றில் மறைந்து விட்ட ரோஜா ஏற்படுத்திய வெறுமை கடைச் சிப்பந்தி ஒருவனுக்குத் தாளாமல், அவன் வீதியின்று அழித்து ஓடி, நகரையே விட்டுப் புலம்பி ஓடுகிறானே அது எதற்காம்? விசித்திரம்தான் மனிதர்களாக உருக்கொண்டு இங்கு வருகின்றதாயென்ன?

மழிக்கப்படாத மயிர் படர்ந்த முகத்துடன் ஒருவன் எல்லா மதுக்கடைகளிலும் இரஞ்சும் குரலில் பணத்தை வைத்துக்கொண்டு கேட்டும், எவரும் இல்லையெனத் தலையாட்டுகிறார்களே தெரிகிறதா? அவனுக்கான மதுப்புட்டிகள் உலகில் இல்லாமல் தீர்ந்து விட்டனவா? அவன் குடிப்பதற்காக எதையும் கேட்பதாகத் தெரியவில்லை. அருகில் வந்து அவன் குரலைக் கேளுங்கள். வேறு எதோ ஒரு பொருளிற்காக மன்றாடுகிறான். படர்ந்த மீசையில் கண்ணீர் துளிர்த்து நிற்க அவன் வேதனையுடன் எதைத்தான் கேட்கிறான்? நேற்றுதானோ இல்லை ஒரு வருடத்தின் முன்பாகவோ எதோ ஒரு மதுக்கடையில் அவன் இறந்துபோன மனைவியின் மணநாள் பட்டுப் புடவையொன்றை விற்றுக் குடித்து போயிருக்கிறான். இன்று புடவையின் ஞாபகம் பீறிட, தேடி மீட்டுக் கொள்ள அலைகிறான். அந்தப் புடவையின் ஒரு முனை தீயில் எரிந்து போயிருக்கும் என்பதும் அதைச் செய்தவன் அவன் என்பதையும் யார் அறிவர்? எல்லா மதுக்கடைக்காரர்களும் அவனையறிவர். புடவை என்றில்லை. கடிகாரங்கள், நிலைக்கண்ணாடி என எத்தனையோ விற்றுக் குடித்துப் போயிருக்கிறான்.

அந்தப் புடவையை அடைந்தவன் எக்கடையின் சிப்பந்தி எனத்தான் தெரியவில்i. அவனது பரிதாபம் தாங்காது சக குடிகாரன் ஒருவன் விடாது பேசுகிறான். ஒரு சிப்பந்தி அவனைக் கூப்பிட்டு குடிகாரர்கள் விற்றுப்போன பொருட்களின் சேகர அறையைத் திறந்து காட்டுவதாகக் கூறுகிறான். அந்த அறையினுள் புடவைகள், மரக்கண்ணாடிகள், கடிகாரங்கள், மணல்குடுவைகள், பழம் துப்பாக்கி, இசைத்தட்டுகள், புகை பிடிக்கும் குழல், கோப்பைகள், தைல ஓவியம் எனக் குவிந்து கிடக்கின்றன. தன் மனைவியின் புடவையைத் தேடிச் சலிக்கிறான். என்றோ அடமானத்தில் வைக்கப்பட்டுப் போன சித்திரக்காரனின் இதயம் ஒன்று மிக மெதுவாகத் துடித்துக்கொண்டிருந்தது அறையில். அந்த அறையை விட்டு அகலாது ஆறு நாட்கள் புடவையைத் தேடிக் கொண்டிருந்தான். பின்னொரு நாள் வெளிறிய முகத்துடன் மனைவியின் புடவையை நெருப்பிட்டு எரித்து சாம்பலாக்கிக் குடித்தவன் நானே எனக்கூறி தெருக் கடந்து சென்றான். கடைச் சிப்பந்திகள் அறிந்திருக்கிறார்கள் – குடிகாரர்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதேயில்லை என்பதை.

வேனல் தெரு என்பதே ஒரு கண்ணாடி கூண்டுதான் போலும். இங்கே வருபவர்கள் மதுவால் மட்டும் போதையாடுகிறார்கள் என எவராலும் தீர்க்கமாகச் சொல்ல முடியாது. விசித்திரம் ஒரு மோதிரமென இவர்கள் விரல் சுற்றிக்கொள்ள, உறக்கமற்று எதைத்தான் அழிந்துவிடக் குடிக்கிறார்கள். வாகனங்கள் ஊர்ந்து அலையும் நகர வீதியில் கூக்குரலிட்டு வெறியுடன் ஒருவன் நீட்டுகிற கத்தியின் பரப்பில் வேனல் தெரு உருக்கொண்டு விடுவதைப் பல கண்களும் அறிந்தே கடக்கின்றன. என்றாலும் நண்பர்களே, மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. மீன்கறிகளையும் மிஞ்சிய மதுவையும் குடித்துப் பெருத்த எலிகளின் கூட்டமொன்று தெருவை கருமி பூமியினுள் இழுத்துச் சென்றுவிட முயல்கின்றன. தன் தலைமயிர் நிலத்தில் வேர்விட நூற்றாண்டுகளாக ஒருவன் இத்தெரு நடுவில் வீழ்ந்து உறங்கிக் கொண்டேயிருக்கிறான். அந்த மனிதன் விடுபட்டுப் போன சீன யாத்ரீகர்களில் ஒருவன் எனச் சொன்னால் நம்புவீர்களா நீங்கள்?


காலச்சுவடு-இதழ்19,1997

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #11 on: June 01, 2013, 07:55:36 PM »
வழி

சிறுகதை

வக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது. சைக்கிளை அடுப்படி சந்தில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். சோப் டப்பாவும் வலைதுண்டுமாக நந்தவனத்துக்கு குளிக்கப் புறப்பட்டபோது தெரு தூக்கத்தில் மூழ்கியிருந்தது. முப்பதுவருடத் தினப்பழக்கம் இது. சைக்கிள் அவர் யோசனைக்கு இடம் தந்தபடி தானே போய்க்கொண்டிருந்தது.

காலையில் கோர்டுக்கு வரப்போகும் சிங்கிகுளம் கொலைகேஸ் பற்றி யோசித்தார். ஒரு தெரு தாண்டும் முன்பு அது கலைந்து மூத்தவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றிய யோசனையாக உருமாறியது. இருள் பம்மிய வீதியில் சைக்கிள் சென்றபடியிருந்தது. எல்லா வீடுகளும், தெருவும் மனிதர்களும் பார்த்து பழகின தொல்பொருள்களாகவே அவருக்குத் தெரிந்தன. மனது வாயு தொல்லைக்குரிய மருந்து, வீட்டு வாடகை, வரப்போகும் அம்மன் கொடை என உருமாறி சுழன்று கொண்டே வந்தது. கல் பரவின தெருக்களில் சைக்கிள் போகும்போது நாய்கள் விழித்துக்கொண்டன.

கடலைக்காரத் தெருவைக் கடந்து வலப்பக்கமாக திரும்பினார். நீண்ட தானாக்கார வீதி தெரிந்தது. குளிர்கால இரவென்பதால் ஜன்னல் மூடப்பட்ட வீடுகள் ஈரமேறியிருந்தன. தானாக்கார தெருவை கடக்கும் முன்பே அடுத்தது வாடியான் தெரு, அடுத்து ஒரே சந்து, பிறகு நந்தவனம் என மனம் முந்தியது. சைக்கிள் வாடியான் தெருவுக்குள் நுழைந்தது. மிகக்குறுகலான தெரு. அதன் முதல் வீடாகயிருந்தது பச்சைப் பெயிண்ட் அடித்த வீயெஸ்வி வீடு. தாண்டினால் வரிசையாக இருப்புறமும் வீடுகள். யோசித்தபடியே பரிச்சயமான அத்தெருவினுள் போய்க்கொண்டிருந்தார்.

தெருவின் கடைசி வீடு காரையார் வீடு. கம்பியிட்ட திண்ணையும் ஆறுபடிகளும் கொண்டது. வலப்புறமாகத் திரும்பினால் சுப்பையாக்கோனார் சந்து. அதன் முடிவில் திலாக்கிணறு உள்ள நந்தவனமிருந்தது. சைக்கிளில் காரையார் வீட்டை கடக்கும்போது பார்த்தார். விடிவெள்ளி எரிந்து கொண்டிருந்தது. எதையோ யோசித்தபடி வலப்பக்கம் சைக்கிளை திருப்பி மிதித்தார். சைக்கிள் வீயெஸ்வி வீட்டை கடந்து சென்றது.

ஒரு நிமிஷ நேரம் திகைத்தவராக சைக்கிளை மெதுவாக ஓட்டினார். சைக்கிள் வாடியான் தெருவுக்குள்தான் போய்க்கொண்டிருந்தது. இப்போதுதான் இதைக்கடந்து போனோம் எனத் தோணியது. ஒரு வேளை கடந்து போகவில்லையோ, எதோ யோசனைதான் கடந்ததாக நினைக்கச்செய்துவிட்டதோ என சுயசமாதானம் கொண்டவராக காரையார் வீட்டைக் கடந்தபோது அதே விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. வலப்பக்கம் சைக்கிளை திருப்பி ஓட்ட வீயெஸ்வி வீட்டு முன்பு திரும்பி ஊர்ந்தது. வாடியாள் தெரு தாண்டினால் சுப்பையா கோனார் சந்தல்லவா வர வேண்டும் ?

இது எப்படி வாடியான் தெருவே திரும்பவும் வருகிறது. ஒரு வேளை தான் இன்னமும் தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருக்கிறோமா ? இது கனவில்லை; விழித்துக்கொண்டுதானே இருக்கிறோம் என்று புரியும் போது பாதி தெரு வந்துவிட்டது. சைக்கிளை நிறுத்தி இறங்கி பின்னாடி பார்த்தார். வீயெஸ்வி வீட்டு வாழைமரம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. இது ஏதோ மனப்பிரமைதான் என்றபடி திரும்பவும் சைக்கிளை மிதித்தார். கடைசிவீட்டு விடிவிளக்குவரை வந்துவிட்ட்டு தயங்கியபடி வலப்பக்கம் திரும்பினார். நினைத்தபடி அது வீயெஸ்வி வீட்டு வாசலைக்கடந்தது. விருத்தாசலம் பிள்ளைக்கு எதுவுமே புரியவில்லை.

இது எப்படி சாத்தியம் ? தெரு மூடிக்கொண்டு விட்டதா என்ன ? தெருவின் முதல் வீடும், கடைசிவீடும் எப்படி அடுத்தடுத்த வீடாகயிருக்கும் ? திகைப்பும் பயமும் கவ்வ சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தார். தெரு தன்னைப் பூட்டிக்கொண்டுவிட்டதா ? அப்படியும் சாத்தியமா, இது நிஜமானால் இதில் இருந்து வெளியேறவே முடியாதா ? யோசிக்க யோசிக்க பயம் பூரான் போல ஆயிரம் கால்களால் ஊர்ந்து உடலெங்கும் ஏறியது. வேஷ்டியை இருக்கிக் கட்டிக்கொண்டு மூடிய வீடுகளைப் பார்த்தார். எல்லா கதவும் உறைந்திருந்தன. ஒரு வீட்டிற்கும் மறுவீட்டிற்கும் இடைவெளியேயில்லை. தப்பிக்க முடியாத பொறியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டதாகத் தோன்றியது உடலை நடுக்கமடையச் செய்தது.

துருவெறிய ஜன்னல் கம்பிகள், இருண்ட வானம் எல்லாமும் பீதி கொள்ள செய்தன. சைக்கிளை உருட்டிக்கொண்டு காரையார் வீடுவரை வந்தார். வலப்பக்கம் இருள் படர்ந்திருந்தது. மிக மெதுவாகத் திரும்பினார். அதே வீயெஸ்வி வீடு. பயம் முற்றாக அவரைப் பற்றிக்கொண்டது. மனைவி, மக்கள், கடன், கோர்ட், சிங்கிக்குளம்கொலைகேஸ், என எண்ணம் குடை ராட்டினம் போல சுழன்று அதிவேகமாகியது. தனக்குத் துளியும் பரிச்சயமில்லாத தெரு போல தென்பட்டது.

யாராவது வீட்டின் கதவைத் திறந்து வெளிப்படமாட்டார்களா எனக் காத்துக்கொண்டிருந்தார். எவரும் கதவு திறக்கவில்லை. தான் ஒரு வேளை அதிகாலை என நினைத்துக் கொண்டு நள்ளிரவில் புறப்பட்டு வந்து விட்டோமா, வீட்டுக் கடிகாரம் காட்டிய நேரம் சரியானதுதானா ? யோசிக்க யோசிக்க குழம்புகிறது. மனதைத் தேற்றிக்கொண்டபடி சைக்கிளை நிறுத்திவிட்டு ஓடிவிடலாமா என எண்ணம் வந்தது. அதுதான் சரியான வழி, சைக்கிளை பூட்டி நிறுத்தினார். ஆகாசத்தை ஏறிட்டுப் பார்த்தார். ஒரு நட்சத்திரம் கூட இல்லை. ஒளிந்து கொண்டு விட்டனவா ? கண்ணை மூடிக்கொண்டு ஓடுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றபடி தெரு அதிர ஓடத் துவங்கினார். நினைத்ததுபோல ஓடுவது எளிதாகயிருக்கவில்லை. உடம்பு அதிர்ந்து மூச்சு வாங்கியது.

கரையார் வீடு திரும்பும்போது கண்ணை மூடிக்கொண்டு இருளில் புகுந்து ஓடினார். பெருமூச்சுடன் நின்று கண் திறந்த போது அது வாடியான் தெருவாகவேயிருந்தது. ஆத்திரமும் பயமும் கொண்டவராக தனியே உரக்க தெருவின் பிறப்பை கொச்சைப்படுத்தி வசையிட்டார். நிசப்தம் தெருவை அடர்ந்து ததும்பியது. செய்வதென்ன புரியாமல் தரையில் உட்கார்ந்தார்.

வீடுகளுக்குள் உறங்கும் மனிதர்கள் மீது கோபம் திரும்பியது. அவர்களையும் வசைத்தார். யார் வீட்டு கடிகார ஒலியோ கேட்டுக்கொண்டிருந்தது. கதவைத் தட்டி யாரையாவது எழுப்பி உதவி கேட்டால் ? நினைத்தவுடனே என்ன சொல்லி உதவி கேட்க என்ற யோசனையும் தோண மெளனமாகி கொண்டார். தன் வாழ்நாள் முடியப் போகிறதோ. ஸர்ப்பம் போல தெரு தன் வாலைத் தானே கவ்விக்கொண்டிருக்கிறதா. எழுந்து நடந்து தெருமுனைவரை சென்றார். சுப்பையாக் கோனார் சந்து புலப்படவில்லை. தெருவின் வட்டம் சுருங்கிக் கொண்டே வந்து நத்தைகூடு போல ஆகிவிடக்கூடுமோ, என்ன இழவு யோசனைகள் என விரல்களை இறூக்கிக்கொண்டார். பள்ளத்தை தாண்டி குதிப்பதுபோல இருளைத்தாண்டி குதித்தால் அடுத்த தெருவந்துவிடாதா. உடல்வலியுடன் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டார். வேகமாக இருளில் தாவிக்குதித்தார்.

எதன் மீதோ மோதி அவர் கீழே விழும் சப்தம் அதிர்ந்தது. வீழ்ந்த இடத்தில் கை ஊன்றி தலை தூக்கிப் பார்த்தார். காரையார் வீட்டில் லைட்டைப் போட்டுக்கொண்டு யாரோ கதவு திறக்கும் சப்தம் கேட்டது. ஒரு பெண் கதவைத் திறந்து கொண்டு வாடியான் தெருவில் இறங்கி, கையில் இருந்த குப்பைக்கூடையுடன் வலப்பக்கம் மெதுவாக திரும்பி இருளில் நடந்து அவர் வீழ்ந்து கிடந்த இடத்தருகே வந்து குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு அவரைப் பார்க்காது திரும்பிப் போனாள். அவர் உடனே தெருவை ஏறிட்டுப் பார்த்தார். அங்கே சுப்பையாக்கோனார் சந்து என்ற பெயர் தெரிந்தது.

**


திண்ணை இணைய இதழில் வெளியானது

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #12 on: June 01, 2013, 09:09:36 PM »
மிருகத்தனம்

சிறுகதை

அன்று காலை பதினோறு மணிக்கு நாயை வைத்தியரிடம் அழைத்து போக வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்தாள் சியாமளா . உண்மையில் நாய் ஆரோக்கியமாகவே இருந்தது. ஆனால் அதன் சுபவாம் மாறியிருப்பதை தான் அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

திருமணமாகி வரும்வரை அவள் நாய் வளர்த்ததில்லை. ஆனால் அவளது கணவன் ராஜனுக்கு நாய் வளர்ப்பதில் அதிக ஆர்வமிருந்தது. பெங்களுரில் பிரம்மசாரியாக தனியே வசித்த போது கூட இரண்டு நாய்கள் வளர்த்தாக சொல்லியிருக்கிறான்.

அவர்களது திருமணபரிசாக ஜோசப் தயாளன் தந்தது தான் அந்த ஜெர்மன் ஷெப்பர்ட். இரண்டு மாத குட்டியாக இருந்தது . அதற்கு நோவா என்று பெயர் வைத்தது கூட ராஜன் தான். தினசரி குளிக்க வைப்பது, இறைச்சி, பிஸ்கட் வாங்கி போடுவது. நடைபயிற்சிக்கு கூட்டி போவது என்று ராஜன் அதன் மீது மிகுந்த நெருக்கத்துடனிருந்தான். ஜெர்மன் ஷெப்பர்ட்டால் வெக்கை தாங்கமுடியாது. அதற்கு இரவில் குளிர்ச்சி தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் படுக்கை அறையின் ஒரத்திலே வந்து படுத்து கொள்ளும். அந்த அறையில் மட்டும் தான் குளிர்சாதன வசதியிருந்தது.

பலநேரங்களில் அவனோடு உடலுறவு கொள்ளும்போது நாய் அவளை பார்த்து கொண்டிருக்கிறதோ என்று சியாமளாவிற்கு தோன்றும். இருளில் நாய் சலனமில்லாமல் கிடப்பது தெரிந்த போது அந்த கூச்சம் மனதில் மூலையில் அகலாமலே இருந்தது. அதை ராஜன் கண்டு கொண்டதேயில்லை.

அதனால் தானோ என்னவோ அவளுக்கு நோவாவை பிடிக்காமலே இருந்தது. சில நேரங்களில் அலுவலகம் விட்டு அவனுக்கு முன்னால் சியாமளா வீடு வந்த போது நோவா வேகமாக வந்து அவள் மீது தாவி ஆசையோடு நக்க துவங்கும். அவள் எரிச்சல் அடைந்தபடியே அதை விலக்குவாள். கடுமையாக திட்டுவாள்.

அந்த நாய்க்கு ஆங்கிலம் பழகியிருந்தது. அவர்கள் வீட்டில் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொண்டார்கள். கோபம் அதிகமான நேரங்களில் மட்டுமே ராஜன் தமிழில் கத்துவான்.   எந்த மொழியில் பேசினாலும் நாய்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்க போகிறதா என்ன? அந்த நாயின் மூதாதையர்கள் வேட்டைக்கு பிரசித்தி பெற்றவர்கள் என்றும், பனிபிரதேசங்களில் வாழ்ந்து பழகியவர் என்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி ராஜன் நிறைய சொல்லியிருக்கிறான்.

ஏன் இப்படி தன்னைப் போல அதுவும் தன் பூர்வீகம் மறந்து இப்படி தங்கள் வீட்டில் வந்து அடைபட்டு கிடக்கிறது என்று தோன்றும் நிமிசங்களில் அதன் மேல் ஒரு பரிவு உண்டாகும். நாயை தடவி கொடுப்பாள்.

ராஜன் அலுவலகம் விட்டு வந்ததில் இருந்து அந்த நாயோடு சேர்ந்தே தானிருப்பான். அவன் டிவி பார்க்க துவங்கும் போது அது காலடியில் படுத்து கொள்ளும். அவன் உற்சாகமாக கைதட்டி விளையாட்டினை ரசிக்கும் போது அதன் முகத்திலும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டிருக்கும். ராஜன் அலுவல பயணமாக கிளம்பும் நாட்களில் நோவா பரிதவிக்க துவங்குவத கண்டிருக்கிறாள். அது தன்னை விடவும் அவன் மீது அதீத அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருக்கிறதோ என்று கூட தோணும்.  நாயோடு உளள் உறவை பொறுத்தவரையில் ராஜன் அருமையான மனிதன் தான். ஆனால் அவளால் தான் அவனோடு சேர்ந்து வாழ முடியாமல் போயிருந்தது.

அவர்கள் திருமணமாகி ஒன்றரை வருசத்திற்குள் பிரிந்து விட்டார்கள். அவன் அதே நகரில் வேறு அலுவலகத்திற்கு இடம்மாறி போய்விட்டான். எப்போதாவது அவளிடம் தொலைபேசியில் பேசுவதுண்டு.  அவர்கள் பிரியும் நாளில் அவள் தான் நோவா தன்னிடம் இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டாள். சில நாட்களிலே வேலை வீடு என்று தனித்து வாழ பழகிய அவளுக்கு நோவாவை கவனிப்பதும். அதோடு பேசுவது. அதை கட்டிக் கொண்டு உறங்குவது மட்டுமே இயல்புலமாக இருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாகவே நோவா குலைப்பதில்லை என்பதை அவள் ஒரு நாளில் கண்டுபிடித்தாள். கடைசியாக நோவா எப்போது குரைத்தது. யோசிக்கையில் மனதில் அப்படியொரு நாள் தென்படவேயில்லை. அறியாத மனிதர்கள் வரும்போது ஒடி அவர்களை வழிமறிக்கிறதே அன்றி அது கத்துவதேயில்லை. ஏன் இப்படியிருக்கிறது என்று அவள் கவனிக்க துவங்கினாள்.

 நோவா அந்நியர்களை கண்டுமட்டுமில்லை. எதற்குமே சப்தமிடுவதேயில்லை. அதன் முகத்தில் தீர்க்கமுடியாத துயரொன்று படர்ந்திருந்தது. அதை கலைப்பதற்காக அவள் புத்தகம் ஒன்றால் அதை அடித்து கூட பார்த்துவிட்டாள். அது சப்தமிடவேயில்லை. எதற்காக இந்த உக்கிரமௌனம். உலர்ந்த காயம் போல அதன்குரல் ஒடுங்கி போயிருக்கிறதா?.

நாயின் மௌனத்தை அவளால் தாங்க முடியவேயில்லை. சில நாட்கள் அவள் பாதி உறக்கத்தில்  விழித்து பார்த்த போது நோவா இருட்டிற்குள்  உட்கார்ந்திருப்பது தெரியும். எழுந்து அதை தன்னோடு இறுக்க கட்டிக் கொண்டு என்னடா வேணும் என்பாள். அதன் காதுகள் விடைத்து கொள்ளும். கண்களில் பரிவு கசியும். அவள் நாயின் ரோமங்களை நெற்றியை தடவி விட்டபடியே இருப்பாள். ஏன் இந்த நாய் தன் இயல்பை மறந்து இப்படியிருக்கிறது என்று யோசித்து கொண்டேயிருப்பாள்.

தெரிந்தவர்கள். நண்பர்கள் பலரிடமும் அதை எப்படி சரி  செய்வது என்று கேட்டாள். இதற்காகவே நோவாவை கடற்கரைக்கு அழைத்து போனாள். சில வேளைகளில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகளுக்கு கூட அதை கூட்டி சென்றாள். செடிக்கு தண்ணீர் பாய்ச்சும் குழாயை வைத்து அதன்மீது தண்ணீரை பாய்ச்சி விளையாடினாள். அது துள்ளியது. தாவியது. ஆனால் சப்தமிடவேயில்லை. குரைக்காத நாயாக இருப்பது அவளுக்கு குற்றவுணர்ச்சி தருவதாக இருந்தது.

இதற்காகவே ஒரு முறை மணவிலக்கு பெற்று பிரிந்த ராஜனை தேடி போய்  நோவாவை பற்றி பேசினாள். அவன் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்கள் விசித்திரமானவை. அதை கையாளுவது எளிதில்லை. உன்னால் அதை வளரக்க முடியாது. விற்றுவிடு என்று ஆலோசனை சொன்னான். அவள் அப்படியில்லை. உன்னை பிரிந்திருப்பது தான் காரணமாக இருக்க கூடும். சில நாட்கள் அதை உன்னோடு வைத்திருந்து பார் என்றாள். அவனும் பார்க்கலாம் என்றான்.  மறுநாள் அவளே ராஜன் தங்கியிருந்த குடியிருப்பில் நோவாவை கொண்டு போய்விட்டு வந்தாள்.

மூன்றாம் நாள் ராஜன் போன் செய்து நோவா ரொம்பவும் மாறிவிட்டது. அவள் சொன்னது போல அது கத்துவதேயில்லை. அது சுவரை வெறித்து பார்த்தபடியே இருக்கிறது. நாய்களை புரிந்து கொள்ள முடியாது. அதன் கண்களில் வெறுப்பு பீறிடுகிறது. நீயே வந்து கூட்டி போய்விடு என்றான்.

அன்றிரவு நோவாவை வீட்டிற்கு கூட்டி வந்து நெடுநேரம் அதோடு பேசிக் கொண்டிருந்தாள். அவள் ராஜனை காதலித்த கதையை அதற்கு சொல்லிக் கொண்டிருந்தாள். நோவா தலைகவிழ்ந்தபடியே இருந்தது. மறுபடி சொல்லும் போது யாருக்கோ நடந்த  கதை ஒன்றை போலிருந்தது. இவ்வளவிற்கும் அது என்றோ நடந்த விசயமில்லை. இரண்டு வருசங்களுக்குள் தானிருக்கும்.

அப்போது தான் சியாமளா அலுவலகத்திற்கு பெங்களுரில் இருந்து ராஜன் வந்திருந்தான். அனிருத்தாவின் பிறந்த நாள் பார்ட்டியின போது தான் அவர்கள்  நிறைய பேசிக் கொண்டார்கள். அதன்பிறகு சியாமளாக தான் அவனை பிடித்திருப்பதாக முதலில் தெரிவித்தாள்.

ஒரு வேளை  பதவி உயர்வில்  தான் அமெரிக்கா போவதாக இருந்தால் திருமணம் செய்து கொள்ள இரண்டு ஆண்டுகள் ஆகும் பரவாயில்லையா என்று ôஜன் கேட்டான். அவள் தானும் அமெரிக்கா வந்துவிடுவதாக சொன்னாள்.

அவர்கள் அதிகம் காதலிக்கவில்லை. இரண்டு முறை ஒன்றாக திரைப்படம் பார்த்தார்கள். ஒரு முறை ஒன்றாக உடன்வேலை செய்யும் திருமுருகனின் திருமணத்திற்காக பாபநாசம் சென்றார்கள்.  அன்று ராஜன் அருவியில் குளிக்கவில்லை. திரும்பி வரும்போது அவளோடு ரயிலில் சீட்டு விளையாடினான். பொதுவில் அவன் அதிகம் கலகலப்பில்லாதவன் என்று தான் அவளுக்கு தோன்றியது. ஆனால் அவளோடு நெருக்கமாகவும், வேடிக்கையாகவுமே ராஜன் பேசினான்.

சியாமளாவிற்கு முன்பாகவே அவளது தங்கை சித்ராவிற்கு திருமணமாகியிருந்தது. அவள் இரண்டு வருசங்கள் ஆஸ்திரேலியாவில் உயர்படிப்பு படிக்க போன காலத்தில் அது நடந்திருந்தது. அப்போது அது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் ஊர் திரும்பி வேலைக்கு போன போது சியாமளாவின் மனதிற்குள் தனக்கு முன்பாக சித்ரா திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் தானிருந்தது.

ஒவ்வொரு முறை தங்கையை பார்க்கும் போது அவள் அப்போது தான் புணர்ச்சியிலிருந்து எழுந்து வந்திருக்கிறாள என்பது போல மனதில் தோன்றுவதை சியாமளாவால் கட்டுபடுத்தவே முடியவில்லை. அதற்காகவே சியாமளா வேகமாக திருமணம் செய்து கொண்டுவிட வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அவர்களாகவே திருமணத்திற்கான நாளை குறித்தார்கள். உடைகள், நகைகள் வாங்கினார்கள். திருமணத்திற்கு பிறகு குடியேற போகும் புதிய வீட்டை வாடகைக்கு பிடித்தார்கள். அவர்கள் எதிர்ப்பார்த்ததை விடவும் அதிகம் நண்பர்கள் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். ராஜன் அன்று மிகுந்த பதட்டத்துடன் இருந்தான் என்பது அவனது முகத்தில் துல்லியமாக தெரிந்தது.
முதலிரவிற்காக கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்கள். உடற்கிளர்ச்சிகள் ஆவேசமாக துவங்கி அரைமணி நேரத்திற்குள் அடங்கிவிட்டிருந்தது. ராஜன் தனது லேப்டாப்பில் ஏதோ தேடிக் கொண்டிருந்தான். படுக்கையில் கிடந்தபடியே அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளது விரல்கள் அவன் கேசத்தை கோதின. அவன் விரல்களை விலக்கிவிட்டு டெலிபோனை எடுத்து தனக்கு பசிப்பதாக சொல்லி சான்ட்விட்ச் ஆர்டர் செய்வதாக சொன்னான்.

அவள் சற்றே எரிச்சலுற்றபடியே தான் உடையை மாற்றிக் கொள்வதாக சொல்லி குளியலைறைக்குள் சென்றாள். அவன் தனது போனில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான்.  அவள்  கதவை திறந்து வெளியே வந்து கடற்காற்றை பார்த்தபடியே இருந்தாள். ராஜன் வெளியே வரவேயில்லை.
அலை இருளை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து கொண்டிருந்தது. அவள் சப்தமாக கடற்கரை மணலில் நிற்கலாமா என்று ராஜனிடம் கேட்டாள். அவன் அதெல்லாம் வேண்டாம் என்றபடியே கதவை திறந்து வைத்தால் ஏசி வீணாகிவிடும் என்று சொன்னான்.

அவள் தன் கன்னிமை இழந்த நாளின் இரவு வானத்தை பார்த்து கொண்டிருந்தாள். நிறைய நட்சத்திரங்கள் இருந்தன. அவள் நிறைய கற்பனை செய்திருந்தாள். அவை கால்சுவடுகளை அலை கரைத்து அழிப்பதை போல கண்முன்னே மறைந்து போய்விட்டன. இனி அந்த நிமிசங்கள் திரும்பிவராது.
அவள் நட்த்திரங்களை பார்த்தபடியே அவன் தன்னை முத்தமிட்டானா என்று யோசித்து கொண்டிருந்தாள். ஒரேயொரு முறை முத்தமிட்டான். ஆனால் அந்த முத்தம் உணவு பொட்டலத்தை சுற்றி கட்டப்பட்ட நூலை அவிழ்ப்பவனின் அவரசம் போன்றே இருந்தது. அவள் நிறைய முத்தங்களை அவனுக்கு தந்தாள். அவன் அந்த அளவு திரும்பி தரவில்லை. அவர்களை மீறி உடல்கள் ஒன்றையொன்று சேர்ந்து தங்கள் இச்சைகளை தீர்த்து கொண்டன. அவ்வளவுதானா என்பது போலிருந்தது. அன்று தான் திருமணவாழ்க்கை துவங்கியிருக்கிறது என்று அவள் சுயசமாதானம் கொண்டாள்.

ஆனால் நாட்களின் போக்கில் ராஜன் சாப்பாடு, பணம், அதிகாரம் இந்த மூன்றை தவிர வேறு எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான். வார விடுமுறை நாட்களை பியர் குடிப்பதற்கு மட்டுமேயானதாக கருதினான். உடைகளில் அவனுக்கு விருப்பமேயில்லை. ஏதாவது ஒரு உடையை அணிந்து கொண்டு அலுவலகம் வந்துவிடுவான். அவனுக்கு தன் வருமானத்தை போல இன்னொரு வருமானம் தேவையானதாக இருந்தது. அதற்காகவே அவளை திருமணம் செய்து கொண்டதாக வெளிப்படையாக சொன்னான்.

அவர்கள் சண்டையிட்டார்கள். விட்டுகொடுத்து சமாளித்துவிடலாம் என்று முயன்று பார்த்தாள். அந்த பிளவை சரிசெய்யவே முடியவில்லை. முடிவாக ராஜன்  தன் சேமிப்பில் இருந்து எதையும் அவள் எதிர்பார்க்காவிட்டால் அவர்கள் பிரிந்து விடலாம் என்று சொன்னான். அப்படியே ஆனது. அவள் அலுவலகம் அருகிலே இடம் மாறி போனாள். ஊருக்கு போவதோ. அப்பா தங்கைகளை காண்பதையோ குறைத்து கொண்டாள்.  பெரும்பான்மை நேரங்களில் உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிட்டு பசியை கடந்து சென்றாள்.

 பின்னிரவில் உறக்கம் பிடிக்காமல் உடல் கிளர்ச்சியோடு எழுந்து உட்கார்ந்து இருளை பார்த்தபடி இருந்தாள். என்ன பிடிப்பில் தான் இப்படி நாட்களை கடந்து  கொண்டிருக்கிறோம் என்று தோன்றும். அது போன்ற நேரங்களில் அவளை விடவும் அந்த நாயின் மீது அவளுக்கு அதீதமான துக்கம் வந்து சேரும்
நாயின் வாழ்க்கையை பத்தோ,பனிரெண்டோ வருசங்கள் தான் அதற்குள் யாருக்கோ விசுவாசமாக இருந்து. யாரையோ அண்டி வாழ்ந்து. எங்கோ வழியில் கண்ட இன்னொரு நாயுடன் கலவி கொண்டு தன் இச்சைகளை தீர்த்துவிட்டு ஒவ்வொரு நாளும் தன் விசுவாசத்தை வீடெங்கும் வழிய விட்டு என்ன வாழ்க்கையிது.

 நாய்கள் ஏன் மனிதர்களோடு இவ்வளவு நெருக்கம் கொண்டிருக்கின்றன. தன் மூதாதையர்களை போல வேட்டையாடவோ. பனியில் தனித்து அலைந்து திரியவோ. அடிவானத்து சூரியனை பார்த்து குரைக்கவோ ஏன் இந்த நாய்கள் முயற்சிப்பதேயில்லை.

அதன் மனதில் அந்த நினைவுகள் துடைத்தெறியப்பட்டதை எப்படி இயல்பாக எடுத்து கொண்டன. இல்லை ஒருவேளை இன்றும் அதன் கனவில் பனிபொழியும் நிலமும், துரத்தியோடும் வேகமும் இருந்து கொண்டுதானிருக்குமா? தான் அலுவலகம் போன பிறகு நாள் எல்லாம் அந்த நாய் வீட்டின் சுவரை வெறித்தபடியே என்ன நினைத்து கொண்டிருக்கும். தன்னை ஏன் இப்படி நாய்கள் வருத்திக் கொள்கின்றன. அவள் அந்த நாய்க்காக வேதனை கொள்வாள். அப்போதும் கூட தன்னால் ஒரு போதும் அதன் நிஜமான உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாது என்று தோன்றும்.


நாய்களின் மௌனம் இத்தனை வலிமையானது என்பது அவளை அப்போது தான் அறிந்து கொள்ள துவங்கினாள். தொண்டையை விட்டு கிழே இறங்காமல் எதை விழுங்கி கொண்டாய் என்று பார்த்தபடி இருப்பாள். நோவாவின் காதுகள் அசைந்து கொண்டேயிருக்கும். பற்களை தவிர நாய்களின் உடல் ரப்பரை போன்று மிருதுவானவை. அவை குழந்தைகளின் வெதுவெதுப்பை கொண்டிருக்கின்றன. அதன் நாக்கு தான் ஒய்வற்று துடித்து கொண்டிருக்கிறது. அந்த நாக்கு மொழியற்றது. எதையோ சொல்ல முயன்று வாழ்நாள் எல்லாம் தோற்று போய்க் கொண்டிருக்கிறது போலும்.

**
மருத்துவமனை மிக சுத்தமானதாக இருந்தது. மருத்துவர் அவளை விடவும் வயதில் இளையவராக இருந்தார். அவர் நோவையை பரிசோதனை செய்துவிட்டு அது ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லியபடி அவளது பிரச்சனை என்னவென்று விசாரித்தார். நோவா குரைப்பதேயில்லை என்றாள். அவர் சிரித்தபடியே நல்லது தானே என்றார்.

இல்லை அது திடீரென குரைப்பதை நிறுத்தி கொண்டுவிட்டது என்று சொன்னாள். அவர் நாயின் அருகில் சென்று அதன் குரல்வளையை தன் கைகளால் பிடித்து பார்த்தார். அது சப்தமிடவில்லை. சிறிய டார்ச் லைட்டால் அதன் வாயை பரிசோதனை செய்தார். பிறகு வியப்புடன் குரல்வளையில் எந்த பிரச்சனையுமில்லை. ஏன் அது கத்துவதில்லை என்று அவளிடமே திரும்ப கேட்டார். அவள் எப்போதிருந்து அது குலைக்கவில்லை என்று தனக்கு தெரியவில்லை என்றும் கடந்த சில வாரங்களாகவே அப்படிதானிருக்கிறது என்றாள்

மருத்துவர் அந்த நாயின் வயதை விசாரித்தார். இரண்டரை இருக்கும் என்றாள். அந்த நாய் இதுவரை ஏதாவது பெட்டைநாயோடு பழகியிருக்கிறதா என்று கேட்டார். இல்லை அது தன் வீட்டிற்குள்ளாகவே வளர்கிறது என்றாள் சியாமளா. ஒருவேளை பாலுணர்ச்சி காரணமாக நாய் கத்தாமல் இருக்க கூடும் என்றபடியே அதை முயற்சி செய்து பார்க்கலாமே என்றார். ஒரு பெட்டை நாயை எப்படி கண்டுபிடிப்பது. எப்படி அதை இதோடு பழக விடுவது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது.

அவர் தன் மேஜை டிராயரில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து இவர்களை பார்த்தால் இந்த நாய்க்கு பொருத்தமான பெண்நாயை ஏற்பாடு செய்து தருவார்கள் என்று சொன்னார். எப்போது அங்கே தான் போவது என்று மருத்துவரிடம் கேட்டபோது அதற்கும் முன்பதிவு செய்து கொள்வது நல்லது என்றார்

அங்கிருந்தபடியே அந்த எண்ணில் தொடர்பு கொண்டு மறுநாள் மதியம் மூன்று மணிக்கு அழைத்து வரும்படியாக முன்பதிவு செய்து கொண்டாள். அடுத்த நாள் நாயை வீட்டிலிருந்து கூட்டி போகும் போது அவளுக்கு  கூச்சமாக இருந்தது.  முதன்முறையாக நோவா ஒரு பெண்ணை அடைய போகிறது. அவளை நோவாவிற்கு பிடித்திருக்குமா. எளிதாக அதன் பாலுணர்ச்சியை தீர்த்து கொண்டுவிடுமா. அவன் குழப்பமான யோசனைகளுடன் நாயை அழைத்து கொண்டு சென்றாள்.

அது நாய்களுக்கான பிரத்யேக பொருள்விற்பனையகமாக இருந்தது. அந்த வீட்டில் நடுத்தர வயது மனிதர் ஒருவர் மட்டுமே இருந்தார். நோவாவிற்கு இணையாக போகிற பெண் நாய் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடக்கூடும் என்றார். அவள் நோவாவோடு காத்து கொண்டிருந்தாள்.

நீல நிற சான்ட்ரோ கார் ஒன்றிலிருந்து இன்னொரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் இறங்கியது. அது தனது நோவாவை விடவும் பருத்திருந்தது. அந்த நாயை அழைத்து கொண்டு வந்த ஆள் நோவாவை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். நோவா அந்த பெண் நாயின் பக்கம் திரும்பவேயில்லை. இரண்டையும் ஒன்றாக விட்டபோதும் கூட அது விலகி விலகி வந்தது. பெண் நாயின் உரிமையாளன் தனக்கு தெரிந்த வழிகளை முயற்சித்து நோவை ஈர்க்க முயற்சித்தான். நோவா வாலை அசைத்தபடியே ஒடி அவள் அருகில் வந்து நின்று கொண்டது. அதற்கு பால்கிளர்ச்சிகளே இல்லை போலும்.

பெண் நாய் அதை கண்டு சப்தமிட்டது. ஆனால் நோவா சப்தமிடவேயில்லை. அரைமணி நேர போராட்டத்தின் பிறகு பெண் நாயை கூட்டிக் கொண்டு அந்த ஆள் கிளம்பி போனான். அவள் நோவாவை திரும்ப ஆட்டோவில் அழைத்து கொண்டு வந்தாள். ஆத்திரமாகவும் வருத்தமாகவும் இருந்தது. வீட்டில் அன்று அவளும் சாப்பிடவில்லை. நோவாவிற்கும் எதையும்  கொடுக்கவில்லை.
தான் நோவாவை விட்டு பிரிந்துவிடுவதை தவிர வேறு வழிகள் எதுவுமில்லை என்று அவளுக்கு தோன்றியது. அதை தன்னோடு வைத்து கொண்டிருந்தால் தன் இயல்பு மாறிவிடுவதோடு நடந்து போன திருமண முறிவு மனதில் ஆறாத ரணமாகி கொண்டிருப்பதை அவள் உணர துவங்கினாள். இரண்டு நாட்கள் அதை பற்றியே யோசித்து கொண்டிருந்து விட்டு முடிவில் ஒரு ஏஜென்சியிடம் சொல்லி அதை விற்பதற்கு ஏற்பாடு செய்தாள்.

அவள் அலுவலகத்தில் இருந்த நேரத்தில் ஒரு பேராசியர் போன் செய்து அதை தான் வாங்கி கொள்ள விரும்புவதாக சொன்னார்.  அவள் நோவாவை பற்றி எடுத்து சொன்ன போது அவர் தனக்கு எழுபது வயதாகிறது என்றும் அதுவும் தன்னை போல வாயை மூடிக்கொண்டிருப்பதில் தனக்கு ஒரு பிரச்சனையுமில்லை என்றார். அவள் ஞாயிற்றுகிழமை காலையில் வீட்டிற்கு வரும்படியாக சொன்னாள்.

அந்த ஞாயிற்றுகிழமை அவள் நோவை குளிக்க வைக்கும்போது அதை விற்று விட்டதை பற்றி அதனிடமே சொன்னாள். அது காதை ஆட்டிக் கொண்டேயிருந்தது. பதினோறு மணி அளவில் பேராசிரியர் வருகை தந்தார். அவருக்கு நோவாவை பிடித்திருந்தது. அதை தான் வாங்கி கொள்வதாக சொல்லி அதற்கான காசோலையை அவளிடம் நீட்டினார். அவள் அன்று ஒரு நாள் மட்டும் தன்னோடு அந்த நாய் இருக்கட்டும் என்றபடியே தானே காலையில் அவர் வீட்டில் கொண்டுவந்துவிடுவதாக சொன்னாள்.

அவர் கிளம்பி போன பிறகு சியமளா  வெளியில் போய் சாப்பிடலாம் என்று அதை அழைத்து கொண்டு போனாள்.  பகலெங்கும் நகரில் அலைந்து திரிந்தாள். இரவு வீடு திரும்பும் போது நோவா எப்போதும் போல இருளில் படுத்து கொண்டது. அவள் அதை பார்க்க மறுத்து புரண்டு படுத்திருந்தாள். நாயின் கண்கள் இருளிற்கும் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பிறகு தன்னை அறியாமல் விசும்பியபடியே எழுந்து அதை கட்டிக் கொண்டாள். நாயின் வெதுவெதுப்பு அவள் உடலெங்கும் நிரம்பியது.

என்னை நானே ஏமாத்திகிட்டு இருக்கேன். அது உனக்கு தெரியுதுடா. நான் நல்லவயில்லை.. செல்பிஷ் என்று அவள் ஆவேசத்துடன் புலம்பியபடி கட்டிக்  கொண்டாள். நாயின் நாக்கு  ஈரத்துடன் அவள் கைகளை தடவியது. அதன் பரிவை தாங்கமுடியாமல் அவள் உடைந்து அழுது கொண்டிருந்தாள். நோவா மௌனமாக காதுகளை அசைத்தபடியேயிருந்தது. இருவராலும் அவ்வளவு தான் செய்யமுடியும் என்பது  போலவே அவர்களை வெறித்து பார்த்து கொண்டிருந்தது அறையின் இருள்.

 ****


2009 தினமணி தீபாவளி சிறப்பிதழில் வெளியான சிறுகதை.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #13 on: June 01, 2013, 09:22:05 PM »
புர்ரா

சிறுகதை

அந்த  வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை சொல்லும் போது அவளது முகத்தில் சந்தோஷம் கொப்பளித்து கொண்டிருந்தது. கைகளை விரித்தபடியே அவள் புர்ரா என்று கத்தும் போது அவளை காண்பதற்கே விசித்திரமாக இருந்தது. என்ன சொல் அது என்று புரியாமல் திரும்பி பார்த்தேன்.


சுகு உற்சாகமாக புர்ரா புர்ரா என்று கத்திக் கொண்டிருந்தாள். அவளது உற்சாகத்திற்காக ஒரு நிமிசம் அதை அனுமதித்த என்னால் திரும்ப திரும்ப கத்துவதை சகித்து கொள்ள முடியாமல் இருந்தது. கோபமான குரலில் என்னடி இது என்று கேட்டேன். அவள் அதற்கும் புர்ரா என்று கத்தினாள். உன்னை தான்டி கேட்குறேன். யார் கிட்டே இதை கத்துகிட்டே என்று கேட்டதும் அவள் உதட்டை கடித்தபடியே பேசாமல் இருந்தாள்.


அர்த்தமில்லாமல் உளறக்கூடாது புரிஞ்சதா என்று சொன்னதும் தலையாட்டிக் கொண்டு என் அறையிலிருந்து வெளியேறி போனாள். வாசலை கடந்த போது புர்ரா என்ற சப்தம் மறுபடி கேட்டது


தினமும் சுகு பள்ளியிலிருந்து எங்கள் இருவருக்கும் முன்பாக வீடு திரும்பி வந்துவிடுகிறாள். நான் வீடு வருவதற்கு ஐந்தரை மணியை கடந்து விடும். அதுவரை இரண்டு மணிநேரம் அவள் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியோடு பேசிக் கொண்டோ, தன்நிழலோடு விளையாடிக் கொண்டோ தானிருக்கிறாள். சில நேரங்களில் அதை காணும் போது குற்றவுணர்ச்சி மனதில் உருவாகிறது. அதை வளரவிடாமல் ஆளுக்கு ஒரு இடத்தில் வேலைக்கு போவதால்  இதை தவிர்க்க முடியாது என்று சுயசமாதானம் செய்து கொள்வேன்.


என் மனைவி ஆவடியில் உள்ள பன்னாட்டு வங்கி பிரிவில் வேலை செய்கிறாள். எனது அலுவலகமோ தரமணியில் உள்ளது. இரண்டுக்கும் நடுவில் மின்சார ரயில் வசதி உள்ள இடமாக வேண்டும் என்பதற்காக சில வருசங்கள் இருவரும் நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தோம். அங்கே தான் சுகு பிறந்தாள். ஆரம்ப நாட்களின் சந்தோஷத்தை தாண்டி சுகு எங்கள் இருவருக்குமே எரிச்சலூட்டும் பொருளாக மாறியிருந்தாள்.


அவளை கவனிப்பதை இருவருமே தவிர்க்க முடியாத ஆனால் விருப்பமில்லாத வேலையை போலவே உணர துவங்கினோம். சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாலுôட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.


அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது. சுகு எனது குழந்தை என்றபோதும் உறக்கத்தில் அது அழுவதை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. சில நாட்கள் தலையணையை வைத்து முகத்தை பொத்திக் கொண்டுவிடுவேன்.
உடல்நலமற்று சுகு வீறிட்டு மருத்துவமனைக்கு கொண்டு போகும் இரவில் தூங்கமுடியாதபடி அவள் என்னை படுத்தி எடுப்பதாக மனதிற்குள் கடுமையாக திட்டியிருக்கிறேன்.

 குழந்தையை புரிந்து கொள்ள முடியாமல் நானும் மனைவியும் மாறிமாறி கத்தி சண்டையிட்டிருக்கிறோம். எதுக்காடி நீ பிறந்து என் உயிரை எடுக்குறே என்று ஒரு நாள் என் மனைவி சுவரில் தலையை முட்டிக் கொண்டு கத்தியபோது அவளை காண்பது எனக்கு பயமாக இருந்தது. குழந்தைகள் உண்மையில் விருப்பமானவர்கள் இல்லையா? தொல்லைகள் தானா?  எனக்கும் குழப்பமாக இருந்தது. அரிதான ஒன்றிரண்டு நிமிசங்களில் மட்டுமே சுகுவை காண்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. சுகு எங்கள் ஆற்றாமையோடு தான் வளர்ந்தாள்.


அவளது பிறந்த தின கொண்டாட்டங்களில் கூட எங்கள் இருவர் முகத்திலும் மறைக்க முடியாதபடி விருப்பமின்மை படர்ந்திருந்ததை புகைப்படங்களில் காணமுடிகிறது. அதை மறைக்க நாங்கள் இருவருமே அதிகம் நடிக்க கற்று கொண்டோம். சுகுவை மாறிமாறி முத்தமிடுவதை இருவரும் செய்த போது நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொள்வதை நிறுத்தி பல மாதகாலம் ஆகியிருந்தது ஏனோ என் நினைவில் எழுந்து அடங்கியது.


திருமணமான சில மாதங்களிலே முத்தமிடுவது அபத்தமான செயல்போலாகியிருந்தது. அதை காபி குடிப்பதை போல எந்த சுவாரஸ்யமற்ற செயலாக நாங்கள் மாற்றியிருந்தோம். குறிப்பாக அவளது கேசங்கள் மீது ஏனோ எனக்கு அசூயை உருவாகிக் கொண்டேவந்தது. முகத்தில் வந்து விழும் அவளது கேசத்தை விலக்கும் போது அதை பிடுங்கி எறிந்துவிடலாம் போன்ற ஆத்திரம் உருவாகி எனக்குள்ளாகவே அடங்கிவிடும்.


சமீபமாகவே சுகுவை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே பழவந்தாங்கலுக்கு மாறியிருந்தோம். இதனால் என் மனைவி இரண்டு ரயில்கள் மாறி அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது. நான் அலுவலகத்திற்கு பைக்கில் சென்றுவிடுவதால் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் வாரத்தில் மூன்று நாட்களாவது சுகுவின் காரணமாக நாங்கள் சண்டைபோட்டுக் கொள்வதுண்டு.

சுகுவிற்கு எங்கள் சண்டையும் கூச்சலும் பழகிப்போயிருந்தது.
நாங்கள் சண்டையிடும் நாட்களில் சுகு எளிதில் உறங்குவதில்லை என்பதை கண்டுபிடித்திருக்கிறேன். சுகு உறங்கினால் மட்டுமே நானும் மனைவியும் உடலுறவு கொள்ள முடியும். அதுவும் பின்னிரவாகிவிட்டால் மறுநாள் வேலைக்கு போவதில் சிக்கல் உருவாகிவிடும். எங்கள் இச்சை அவள் மீது கோபமாக பலஇரவுகள் மாறியிருக்கிறது.


போர்வையை அவளது முகத்தில் போட்டு உறங்குடி என்று அழுத்தியிருக்கிறோம். சில நிமிசங்கள் அவளது கண்கள் மூடிக் கொண்டிருக்கிறோம். பிறகு அவள் பாதி கண்ணை திறந்து வைத்தபடியே குளிர்சாதன இயந்திரத்தில் மினுங்கும் எண்களை முணுமுணுத்த குரலில் எண்ணிக் கொண்டிருப்பாள்.


சுகுவிற்காக நாங்கள் கண்டுபிடித்த வழி இரவு விளக்கில்லாமல் அறையை முழு இருட்டாகிவிடுவது என்று. சில நாட்கள் அது எங்களுக்குள்ளே விசித்திரமான அனுபவமாக இருந்தது. அது எங்கள் படுக்கை அறை என்பது மறந்து பூமியின் ஆழத்தில் இரண்டு புழுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டிருப்பது போன்று தோன்றும்.


சுகு இருட்டிற்குள்ளும் விழித்துக்கொண்டிருக்க பழகியிருந்தாள். அவள் கண்கள் இருளை கடந்து பார்க்க பழகியிருந்தன. அவள் உதடுகள் உறங்க மறுத்து எதையோ சொல்லிக் கொண்டிருந்தன. நாங்கள் அவளது முணுமுணுப்பினை சட்டை செய்வதேயில்லை. அவள் குரல் தானே ஒயும்வரை விட்டுவிடுவோம்.


சுகு ஆரம்ப வகுப்புகளை கடற்கரையை ஒட்டியிருந்த ஆங்கிலப்பள்ளியில் படித்தாள். அந்த பள்ளியின் அருகில் கடல் இருந்தது.. பசுமையான மரங்கள் அடர்ந்த பள்ளிக்கூடம். சுவர்கள் ரோஸ் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. கண்ணாடி கதவுகள், மீன்தொட்டிக்குள் நீந்தும் மீன்கள் போன்று இயல்பான துள்ளலுடன் நடந்து திரியும் சிறுமிகள். ஒரு அறை முழுவதும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள். பொம்மைகள். பள்ளியிலே மதிய உணவு தந்துவிடுவதால் சுகுவை கவனிப்பதற்கு நாங்கள் அதிகம் மெனக்கெடவில்லை

. ஒரு நாள் கூட அவள் வகுப்பறைக்குள் போய் நான் பார்த்ததேயில்லை. ஏன் அப்படியிருந்தேன் என்று இன்று வரை எனக்கு புரியவேயில்லை.
சுகு பள்ளிக்கு போவதற்கு தயக்கம் காட்டவேயில்லை. அவள் தன்னுடைய அம்மா  அலுவலகம் கிளம்புவது போன்று பரபரப்பாக பள்ளிக்கு கிளம்புவாள். தானே குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு அம்மாவை போலவே லேசாக ஈரம் படிந்த தலையுடன் முகத்திற்கு திட்டு திட்டாக பவுடர் அப்பிக் கொண்டு நின்றபடியே சாப்பிட பழகியிருந்தாள். அப்படி சுகுவை காண்பது தன்னை பரிகசிப்பது போல என் மனைவி உணர்ந்திருக்க வேண்டும். ஏன்டி நின்னுகிட்டு சாப்பிடுறே.. உட்காரு என்று அழுத்தி பிடித்து உட்கார வைப்பாள்.


சுகுவின் முகம் மாறிவிடும். நீ மட்டும் நின்னுகிட்டு சாப்பிடுறே. நான் சாப்பிட்டா என்னவென்று கேட்பாள். சனியன் ஏன்டி உயிரை வாங்குறே. உன்னோட சண்டை போட்டுட்டு இருந்தா. ஆபீஸ் அவ்வளவு தான் என்று அவசர அவசரமாக டிபன் பாக்ûஸ பைக்குள் திணித்து கொண்டிருப்பாள்.  சுகுவை பள்ளி பேருந்தில் ஏற்றி அனுப்பி வைப்பது எனது வேலை. அது வரும்வரை நானும் சுகுவும் மாடி ஜன்னலில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருப்போம்

சுகு சாலையில் செல்லும் வாகனங்களை எண்ணிக் கொண்டிருப்பாள். அவள் என் மகள் தானா என்று ஏனோ சந்தேகமாக தோன்றும். பள்ளி பேருந்தை கண்டதும் தாவியோடுவாள். பேருந்தில் ஏறியபிறகு கையசைப்பதோ, விடைபெறுவதையோ ஒரு நாளும் அவள்  செய்வதேயில்லை.


என் மனைவியும் அப்படிதானிருக்கிறாள். அவள் வீட்டின் படியை விட்டு வெளியேறியதும் என் உலகிலிருந்து அவள் துண்டித்து போய்விடுவதை கண்டிருக்கிறேன். ஒரு நாளிரவு மின்சார ரயிலில் தற்செயலாக அவள் தன் அலுவலக பெண்களுடன் சிரித்து பேசிக் கொண்டு வருவதை கண்டேன். யாரோ முன் அறியாத பெண்ணை போலிருந்தாள். அவள் கையில் ஒரு வேர்கடலை பொட்டலம் இருந்தது. அவள் வயதை ஒத்த இரண்டு பெண்கள் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். நான் அந்த ரயிலில் வருவேன் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.


அதிகம் பரிச்சயமில்லாத ஒரு நபரை பார்த்து சிரிப்பதை போல மெலிதாக என்னை பார்த்து சிரித்துவிட்டு தோழிகளுடன் முன்போலவே  பேசிக் கொண்டிருந்தாள். அவளை பார்க்கையில் புதிதாக யாரோ ஒரு பெண்ணை பார்ப்பது போலிருந்தது. என்னோடு அவள் பேச முயற்சிக்கவோ, எனக்காக எழுந்து கொள்ள முயற்சிக்கவோ இல்லை. மாறாக அவளது உலகிற்குள் எனக்கு இடமில்லை என்பதை உணர செய்பவள் போல அந்த பெண்களுடன் விட்ட சிரிப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள்.


அந்த பெண்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் எழுந்து கொண்டார்கள். அவளது அருகாமை இருக்கைகள் காலியாக இருந்தன. ஆனால் நான் உட்கார வில்லை. அவள் உட்காரும்படியாக சொல்லவும் இல்லை. வேண்டும் என்றே வேறு ஒரு இருக்கை தேடி உட்கார்ந்து கொண்டேன். அவள் ரயிலை விட்டு இறங்கும்வரை என்னோடு பேசவேயில்லை.


பிளாட்பாரத்தில் நடக்கும் போது காய்கறி வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று என்னிடம் சொன்னாள். இருவருமாக நடந்து காய்கறி மார்க்கெட்டினுள் போனோம். மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் எல்லா காய்கறிகளும் ஒரே நிறத்திலிருந்தன. அவள் ஒரு கேரட்டை ஒடித்து என்னிடம் தின்னும்படியாக தந்தாள். மாட்டிற்கு கேரட் போடுவது ஏனோ நினைவிற்கு வந்தது. அவளோடு சண்டையிடுவதற்கு அந்த ஒரு காரணம் போதுமானதாகயிருந்தது.


காய்கறி கடை என்பதை மீறி அவளோடு சண்டையிட்டேன். அவள் பொது இடம் என்பதை மறந்து அழ துவங்கினாள். அவள் அழுவது எனக்கு பிடித்திருந்தது. அதற்காக தான் நான் சண்டையிட்டேனோ என்று கூட தோன்றியது. மறுநிமிசம் நான் அவளை சமாதானம் செய்வது போல அவளது ஹேண்ட்பேக்கை என் கையில் எடுத்து கொண்டேன். விடுவிடுவென அவள் நடந்து முன்னால் செல்ல ஆரம்பித்தாள். நிச்சயம் அன்று இரவு சமையல் கிடையாது என்று எனக்கு தெரியும்.


வழியில் இருந்த உணவகத்தில் நான் அவளுக்கும் சுகுவிற்குமாக சேர்ந்து உணவு வாங்கி கொண்டேன். வீட்டை அடையும்  போது சுகு அடிவாங்கி கொண்டிருந்தாள். நான் அதை கண்டு கொள்ளாதது போல உணவை சமையற்கட்டில் வைத்துவிட்டு படுக்கை அறைக்கு திரும்பியிருந்தேன். சுகு அன்றிரவு முழுமையாக உறங்கவில்லை என்பதை மறுநாள் அவள் கண்கள் வீங்கியிருப்பதில் இருந்து கண்டு கொள்ள முடிந்தது.


சுகுவிற்காக தான் விடுமுறை எடுத்துக் கொள்ள போவதாக என் மனைவி சொன்னாள். மறுநாள் முழுவதும் தாயும் மகளும் உறங்கியிருந்தார்கள். மாலையில் நாங்கள் மூவரும் கடற்கரை சென்றோம். இனிமேல் சுகுவை கவனிப்பதற்காக நாங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி உறுதிமொழிகள் எடுத்து கொண்டோம். கடற்கரை மணலில் சுகு விளையாடவேயில்லை. அவளுக்கு கடலின் சப்தத்தை கேட்பது மட்டுமே பிடித்திருந்தது.


என் மனைவி அப்போது தான் சுகுவை வேறு பள்ளிக்கு மாற்றிவிடவேண்டும் என்பதை பற்றி சொன்னாள். ஒன்றாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதிவரை ஒரே பள்ளியில் படித்தாள் மட்டுமே அவளது அறிவு வளரும் என்று தன்னோடு வேலை செய்யும் கலைவாணி சொன்னாதாகவும் அவள் பிள்ளைகள் அப்படிதான் படிக்கின்றன என்றாள். எனக்கும் அது சரியென்றே தோன்றியது.

நாங்கள் சுகுவிடம் பள்ளிமாறுவதை பற்றி பேசவோ கேட்கவோயில்லை. எந்த பள்ளியில் சேர்ப்பது என்பதை முடிவு செய்து நாங்கள் இருவரும் அலைந்து திரிந்து வரிசையில் நின்று ஆள் பிடித்து பிரெஞ்சும் ஆங்கிலமும் போதிக்கும் அந்த புகழ்பெற்ற பள்ளியில் இடம் பிடித்து முதல்வகுப்பில் சேர்த்தோம்.
சுகு அந்த பள்ளிக்கு அழைத்து போன முதல்நாள்  வீட்டிலிருந்து கொண்டு போன மதியஉணவை சாப்பிடவேயில்லை. வகுப்பறையில் அவள் அர்த்தமில்லாத சொற்களை கத்திக் கொண்டிருக்கிறாள் என்று ஒரு முறை அவளது டயரியில் வகுப்பாரிசிரியை எழுதி அனுப்பியிருந்தாள்.

என்ன சொற்களை கத்துகிறாள் என்று கேட்காமலே அவளுக்கு அடி விழுந்தது.
அதன்சில நாட்களுக்கு பிறகு அவள் வீட்டில் முதன்முறையாக டியாங்கோ. டியாங்கோ என்று கத்துவதை என் மனைவி தான் கண்டுபிடித்தாள். இப்போ என்னமோ சொன்னயே அது என்னடி என்று சுகுவிடம் கேட்ட போது அவள் உற்சாகமாக டியாங்கோ டியாங்கோ என்று சொன்னாள். அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு டியாங்கோ என்று பதில் சொன்னாள். என்ன சொல் இது. என்ன பொருளாக இருக்கும் என்று புரியúயில்லை.


போதும் நிறுத்து உளறாதே என்று மனைவி அடக்கியதும் அந்த சொல் சுகுவிற்குள் அடக்கிவிட்டது. ஆனால் நாங்கள் எங்காவது அவளை வெளியே அழைத்து கொண்டு போகையில் சப்தமில்லாமல் அவள் இது போன்ற சொற்களை சொல்லிவிளையாடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். அதை எங்கிருந்து கற்றுக் கொள்கிறாள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று மட்டுமே எனக்கு தோன்றிக் கொண்டிருந்தது.


இதற்காகவே ஒரு நாள் அவளை பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு வரும்போது அவளிடம் யாரெல்லாம் அவளது வகுப்பு தோழிகள் என்று கேட்டேன். யாருமேயில்லை.  வகுப்பில் யாரோடும் பேசவே மாட்டேன் என்று சொன்னாள். எதற்காக என்று கேட்டபோது தனக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டு அவள் தனக்கு தானே எதையோ சொல்லிக் கொள்வதை கேட்டேன்.


அன்றிரவு இதை பற்றி என் மனைவியிடம் சொன்ன போது அதற்கும் சுகுவிற்கு அடி விழுந்தது. ஏன்டி ஊமைக்குரங்கா இருக்கே. உடனே நீ பிரண்ட்ஸ் பிடிச்சாகணும் புரிஞ்சதா என்று மிரட்டினாள்


அம்மா சொல்வதை ஏற்றுக் கொள்வதை போல சுகு தலையாட்டினாள். அதன் பிறகும் அவள் இயல்பு மாறவேயில்லை. வீட்டில் அவளை யாரும் கவனிக்கவில்லை என்று தோன்றினால் அர்த்தமற்ற சொற்களை தன் முன்னால் குவித்து அவள் விளையாட துவங்கிவிடுவாள். அந்த சொற்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதறி வெடித்து போவதை கண்டு அவளுக்கு சிரிப்பாக இருக்கும். இயந்திரத்தின் குரலில் அந்த சொற்களை அவள் பேசுவதை கூட சில வேளைகள் கேட்டிருக்கிறேன்.


அப்போது எனக்கு பயமாக இருக்கும். ஒருவேளை அவளது மனநலம் பாதிக்கபட்டு இருக்கிறதோ என்று பயப்படுவேன். ஏன் இப்படி அர்த்தமில்லாத சொல்லை உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று கடுப்பாகி கத்துவேன். சுகு அடங்கிவிடுவாள். அந்த சொற்கள் வாயை திறக்காமலே அவளுக்குள் உருண்டு கொண்டிருக்க கூடும்.


இன்றைக்கும் அப்படியொரு சொல்லை தான் கத்தினாள். அதை இதன் முன்னால் எங்கேயோ கேட்டது போலவும் இருந்தது. சுகுவை அருகில் அழைத்து மறுபடியும் அதை சொல்ல சொன்னேன். தயங்கியபடியே புர்ர்ரா என்றாள்.  நீயா கண்டுபிடிச்சியா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னாள். அவளை போலவே நானும் புர்ரா என்று சொல்ல முயற்சித்தேன். அது அவளுக்கு சிரிப்பாக வந்தது.


அப்படியில்லைப்பா என்றபடியே புர்ரா என்று கத்தினாள். அந்த நிமிசம் அவளை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவளை போலவே நானும் கத்த முயற்சித்தேன். ஏதோவொரு கூச்சம் அது போல கத்துவதற்கு எனக்கு வரவேயில்லை. நான் அவளது அர்த்தமற்ற சொல்லை ரசிப்பதை உணர்ந்து கொண்டவள் போல அவள் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு காரில் போவது போல புர்ரா. புர்ரா என்று ஒடிக் கொண்டேயிருந்தாள். அந்த ஒரு சொல் எங்கள் வீடு முழுவதும் உதிர்ந்து கிடந்தது.


இரவில் என் மனைவி அலுவலகம் விட்டு வீடு வரும்வரை அந்த சொல் காற்றில் பறந்து அலையும் சோப்பு குமிழ்கள் போல அலைந்து கொண்டிருந்தன. ஆனால் அவள் வருகையின் போது அவை கரைந்து போய்விட்டன. சுகு ஒடிவந்து என்னிடம் ரகசியமான குரலில் இதை அம்மாகிட்டே சொல்லாதே. அடிப்பா என்றாள். எங்கள் இருவரையும் பார்த்த மனைவி என்ன திருட்டுதனம் பண்ணுறீங்க என்று கேட்டாள்.


நான் பதில் பேசவில்லை. எழுந்து போய் அவளை முத்தமிட விரும்பி அருகில் இழுத்தேன். சுகு இதை காண விரும்பாதவள் போல வேடிக்கையாக கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். என் முகத்தை விலக்கியபடியே கடுகடுப்பான குரலில் நானே அலுத்து போய் வந்திருக்கேன். நீங்க வேற ஏன் உயிரை எடுக்குறீங்க என்று  சொன்னாள் மனைவி. என் முகம் சிடுசிடுப்பேறி மாறியது.
அவசரமாக குளியல் அறைக்குள் போய் கதவை பூட்டிக் கொண்டேன். ஆத்திரமாக வந்தது. ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது. கண்ணாடி முன்பாக நின்று கொண்டு புர்ரா..  என்று கத்தினேன்


கத்த கத்த  மனதில் இருந்த கோபம் வடிந்து போய்க் கொண்டிருந்தது.  எனக்கு சுகுவை அந்த நிமிசத்தில் ரொம்பவும் பிடித்திருந்தது. நானும் அதை போன்ற சொற்களை நிறைய கற்று கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மறுபடியும் கண்ணாடி முன்பாக புர்ரா என்று சப்தமிட்டேன்.


என் முகத்தை அப்படி காண்பது எனக்கே விசித்திரமானதாக இருந்தது.


***

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #14 on: June 03, 2013, 09:02:10 PM »
தரமணியில் கரப்பான்பூச்சிகள்

என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் என் பெயரை மறந்து போயிருப்பீர்கள். அல்லது கேட்டிருக்கவே மாட்டீர்கள். காரணம் நான் பெயரோடு பெரும்பாலும் அறிமுகமாகிக் கொள்வதேயில்லை. என் அடையாளமாக இருப்பது கரப்பான்பூச்சிமருந்து விற்பவன். அதுவும் ஜெர்மனியின் புகழ்பெற்ற பூச்சிக் கொல்லி நிறுவனமான வில்ஹெம் ஒபேரின் விற்பனைப் பிரதிநிதி என்ற அடையாள அட்டையிருக்கிறது. ஆகவே அது உங்களுக்குப் போதுமானது. எனக்கே கூட என்னுடைய பெயர் தற்போது கொஞ்சம் அசௌகரியமாகவே இருக்கிறது.

பெயரைப் பொறுத்தவரை அது என்னோடு ஒட்டிக் கொள்ளவேயில்லை. வேலை மாறும்போது அதுவும் மாறிக் கொண்டேயிருக்கிறது. சிறுவயதிலே எனக்கு அந்தச் சந்தேகம் உண்டு. அடுத்தவர்களுக்காக ஏன் நான் ஒரு பெயரை வைத்துக் கொண்டிருக்கிறேன். என் பெயரால் எனக்கு என்ன நன்மை. அது தேவையற்ற ஆறாவது விரல் ஒன்றை போல ஏன் கூடவே ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று. உலகில் பெயரில்லாமல் எவ்வளவோ பொருட்கள் இருக்கின்றன. நம் கண்ணிலும் படுகின்றன. அதை நாம் ஒரு போதும் பெரிதாகக் கருதியதேயில்லை. அப்படி நானும் இருந்துவிட்டுப் போவதில் என்ன தவறிருக்ககூடும்.

என்றாலும் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குப் பெயர் வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒரு பெயர் போதும். அது ஒற்றை எழுத்தாகக் கூட இருந்தாலும் அங்கீகரித்துவிடுகிறார்கள். அதனால் ஒபேர் நிறுவனம் எனக்கு உருவாக்கிய கரப்பான்பூச்சி மருந்து விற்பவன் என்ற பெயரே போதுமானதாகயிருக்கிறது. அதை நான் ஆங்கிலத்தில் சொல்லும் போது தமிழை விடக் கூடுதலான ஒரு நெருக்கத்தை நீங்கள் அடைகிறீர்கள். கரப்பான்பூச்சிகளைக் கூட காக்ரோஷ் என்று தான் பெரும்பான்மை வீடுகளில் சொல்கிறார்கள். கரப்பான்பூச்சி அளவில் கூட தமிழ் ஒட்டிருப்பது மாநகரவாசிகளுக்குப் பிடிப்பதில்லை போலும்.

என்னைப் பற்றி அறிந்து கொள்வதில் உங்களுக்கு விருப்பம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் எனக்கு இரண்டு மணி நேரம் பணியிடை ஒய்வு இருக்கிறது. ஆகவே அதைப் போக்கி கொள்வதற்காகவே உங்களிடம் இதைச் சொல்கிறேன்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயிற்சிப் பணியாளராக இருந்த போது நெசப்பாக்கம் பகுதியின் முன் உள்ள பெட்ரோல் பங்க் முன்னால் தினமும் காலையில் சந்தித்துக் கொள்வோம். எங்களுக்கு தலைவராக இருந்தவர் மணிநாராயணன். அவர் கரப்பான்பூச்சிமருந்து விற்பதில் தமிழகத்திலே மூன்றாவது ஆளாக சாதனை படைத்தவர்.

நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இருநூறு ஸ்பிரே விற்க வேண்டும் என்பதை அவர் இலக்காக வைத்திருந்தார். ஆகவே காலை ஏழு மணிக்கு குழு குழுவாகப் பிரித்து பணியிடத்திற்கு அனுப்பிவிடுவார். அவரிடம் கரப்பான்பூச்சிகள் காலை ஏழு மணிக்கு எழுந்து கொள்ளுமா அல்லது உறக்கத்தில் இருக்குமா என்ற சந்தேகத்தை நான் ஒரு போதும் கேட்க முடிந்ததேயில்லை.

அவர் தனது கறுப்பு சூட்கேஸில் மாநகரின் வரைபடத்தை நான்காக மடித்து வைத்திருக்கிறார். அந்த வரைபடத்தில் நகரின் ஒவ்வொரு பகுதியும் ஒரு வண்ணத்தில் தனித்துப் பிரிக்கபட்டிருக்கும். எந்தப் பகுதியில் கரப்பான்பூச்சிகள் அதிகமிருக்கும். அங்கே எத்தனை பேர் போக வேண்டும் என்று வட்டமிட்டிருப்பார்.

ஒரு நகரை கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தனித்தனியாக பிரித்திருப்பது எவ்வளவு பெரிய விந்தை. அதை மணி நாராயணன் உணர்ந்திருப்பாரா?

அவர் கறாரான முகத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு பேசுவார். அது கூட வயதான ஒரு கரப்பான்பூச்சி பேசுவது போலதானிருக்கும். அவர் இளைஞராக இருந்த காலத்தில் சென்னையில் அதிக கரப்பான்பூச்சிகள் இருந்திருக்க கூடும். அதில் பெரும்பகுதியை ஒழித்து ஒரு இனத்தின் அடிவேரைப் பாதியாக அழிந்த பெருமை அவருக்கு உண்டு.

அன்று நெசப்பாக்கம் பகுதிக்குள் நாங்கள் ஆறு பேர் பிரித்து அனுப்பபட்டோம். புதிதாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் அது இன்னமும் ஒரு கிராமத்தின் சாயலை கொண்டிருந்தது. பால்மாடுகள், சாலையில் நின்று குளிப்பவர்கள், சிறிய ஒட்டுவீடுகள், முருங்கைமரங்கள், வறட்டி தட்டி விற்பவர்கள், மரப்பெஞ்சு போட்ட தேநீர்கடைகள், நகரப் பேருந்துகள் உள்ளே வராத சாலைகள், முட்டுச்சந்துகள், என்று கலவையாக இருந்தது. நான் அதன் தென்பகுதியில் உள்ள பனிரெண்டுவீதிகளை மதியத்திற்குள் முடித்துவர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.

எந்த வீட்டின் கதவை முதலில் தட்டுவது என்று புரியாமல் நடந்து கொண்டேயிருந்தேன். எங்கள் பணியில் முதல் சத்ரு நாய்கள். அது தெருநாயாகவோ, வளர்ப்பு நாயாகவோ எதுவாக இருந்தாலும் அதற்கு எங்களைப் பிடிப்பதேயில்லை. எங்களைக் கண்டு வாய் ஒயாமல் குறைக்கின்றன. கடிக்கப் பாய்கின்றன. இதே நாய்கள் பெண் விற்பனையாளரைக் கண்டு மட்டும் குலைப்பதில்லை. வாலாட்டுகின்றன. அது என்ன பேதம் என்று தான் புரியவேயில்லை. நாய்கள் மனிதர்களுடன் பழகி அவர்கள் சுபாவத்தையேக் கொண்டிருக்கின்றன. ஒரு நாய் கூட நாய் போல நடந்து கொள்வதில்லை என்பது தான் நிஜம்.

இதனால் நான் நாய்களை வெறுக்க ஆரம்பித்தேன். சீனாவில் மாநகரங்களில் நாய்கள் வளர்க்கவோ. வீதியில் அலையவோ அனுமதிக்கபடுவதேயில்லை என்று ஒருநாள் காலைபேப்பரில் வாசித்தேன். அது தான் என் வாழ்நாளின் கனவும் கூட. ஆனால் நகரவாசிகள் நாய்களை நேசிக்கிறார்கள். எவரோ தெருநாய்களுக்கு கூட உணவளித்து அதன் வம்சவிருத்தியை அக்கறையோடு கவனித்து கொள்கிறார்கள். இந்த விசயத்தில் எனக்கு மக்களை புரிந்து கொள்ள முடியவேயில்லை.

விற்பனையாளராக நான் பணியில் சேர்ந்த போது ஒருவார காலம் ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து எங்களுக்குச் சிறப்பு பயிற்சி கொடுக்கபட்டது. அதில் எத்தனை விதமான வண்டுகள், பூச்சிகள், எறும்புகள் வீட்டிற்குள் புகுந்துவிடுகின்றன என்று புகைப்படத்துடன் பெரிய கேட்லாக் ஒன்றை எங்களுக்கு தந்தார்கள்.

என்னால் நம்பவே முடியவில்லை. நானூற்று பதினாறு விதமான பூச்சிகள் நம்மோடு சேர்ந்து வாழ்கின்றன. கரப்பான்பூச்சிகளில் தான் எத்தனை விதம். நிறத்தில் வடிவத்தில் ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. கண்ணில் பார்க்கும் போது நாம் அதை இவ்வளவு துல்லியமாக வேறுபடுத்தி அறிய முடியவில்லை. அத்தோடு கரப்பான்பூச்சிகளுக்கு தனியான பெயர்கள் இல்லை என்பதால் அதை நாம் பொதுவான ஒன்றாகவே கருதுகிறோம்.

அந்தப் பூச்சிகளின் புகைப்படங்களைப் பார்த்த போது நாமும் சிறு பூச்சிகள் போல தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அந்தப் புகைப்படத்தை உண்மையில் நான் நேசித்தேன். ஒவ்வொரு கரப்பான்பூச்சியையும் நேரில் பார்த்து அறிமுகம் செய்துகொண்டுவிட வேண்டும் என்பது போல ஆசைப்பட்டேன். ஆனால் அவர்கள் அதை எப்படிக் கொல்வது. எங்கே அவை ஒளிந்து கொண்டிருக்கும். எவ்வளவு நேரத்தில் ஒரு கரப்பான்பூச்சி செத்துப் போகும் என்பதிலே கவனமாக இருந்தார்கள்.

உண்மையில் கரப்பான்பூச்சிகளைக் கண்டு ஏன் மக்கள் பயப்படுகிறார்கள். அது கடித்தால் விஷமா என்று சக ஊழியரைக் கேட்டேன். அவர் அது ஒரு பொய். பல காலமாக இந்தப் பொய்யை நாம் வளர்த்துக் கொண்டே வந்துவிட்டோம். அந்தப் பொய்யில் தான் நமது சம்பாத்தியம் அடங்கியிருக்கிறது என்று சிரித்தபடியே சொன்னார்.

என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சமூகம் ஏன் கரப்பான்பூச்சிகளை வெறுக்கிறது. கண்ணில் பட்டாலே அருவருப்புக் கொண்டுவிடுகிறது. என்ன பகையிது. ஏன் இவ்வளவு வெறுப்பும் அசூயையும் என்று ஐந்து நாளும் யோசித்தேன். அப்படியும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எங்களது பயிற்சி வகுப்பை நடத்த கல்கத்தாவில் இருந்து வந்திருந்த மோகித்சென் வங்காள உச்சரிப்பிலான ஆங்கிலத்தில் நீங்கள் ஒவ்வொரு வீட்டின் கதவைத் தட்டியதும் சொல்ல வேண்டிய முதல் பொய் எது தெரியுமா என்று கேட்டார். நாங்கள் அமைதியாக இருந்தோம்.

அந்தப் பொய் அற்புதமானது. அது எந்த வீட்டையும் திறக்ககூடிய சாவியைப் போன்றது என்று கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டமாகச் சொன்னார். அவரது பொய்யைக் கேட்க ஆவலாக இருந்தோம்.

உங்களது முதல் பொய் இது தான். உங்கள் அருகாமையில் விஷமான கரப்பான்பூச்சிகள் பெருகிவருவதாக அறியப்படுகிறது. அவை கடித்தால் விபரீதமாகிவிடும். அதிலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள நீங்கள் ஏன் எங்கள் தயாரிப்பைப் பரிசோதித்து பார்க்க கூடாது என்பதே.

இந்தப் பொய்யை நீங்கள் உணர்ச்சிவசப்படமால், கண்களில் மிகுந்த அன்பும் வாஞ்சையோடும் சொல்லிச் சொல்லி பழகவேண்டும். காரணம் புதிய மனிதர்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் கண்களைத் தான் மக்கள் கவனிக்கிறார்கள். என்றார்

அதைக் கேட்ட போது எனக்கு எரிச்சலாக வந்தது. எந்த மனிதனும் அடுத்தவனின் உதடை ஏன் கவனிப்பதில்லை. கண்கள் ஒரு போதும் பொய் சொல்வதில்லை. உதடுகள் தான் பொய் சொல்கின்றன. ஆனால் அதை மக்கள் ஏன் இவ்வளவு அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள். எனக்கு என்னவோ அடுத்தவரின் பொய்கள் மீது நாம் உள்ளுற ஆசை கொண்டிருக்கிறோமோ என்று தான் தோன்றுகிறது.

அன்று எங்கள் பயிற்சி வகுப்பில் நாங்கள் நாற்பத்தி ரெண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்து கண்களில் அன்பு ஒழுக உங்கள் வீட்டின் அருகாமையில் விஷமுள்ள கரப்பான்பூச்சிகள் பெருகிவிட்டன .எங்கள் தெளிப்பானை உபயோகித்து அவற்றைக் கொல்லுங்கள் என்று நேசத்துடன் சொல்லிப் பழகினோம்.

மிக அபத்தமான நாடகம்ஒன்றில் பாத்திரமாகிவிட்டதைப் போல இருந்தது. ஆச்சரியமான உண்மை என்னவென்றால் நான் பதினைந்து நிமிசங்களிலே அந்த வேஷத்திற்கு கச்சிதமாக பொருந்தி போய்விட்டது. நான் அதைச் சொல்லும் போது அந்த வீட்டில் கரப்பான்பூச்சிகள் ஒடுவது என் கண்ணில் நிஜமாக தெரிவது போல இருக்கிறது என்று மோகித் சென் பாராட்டினார்.

பொய்கள் எளிதாகப் பழகிவிடுகின்றன. உண்மையைச் சொல்வதற்கு தான் நிறைய நடிக்க வேண்டியிருக்கிது. அந்தப் பயிற்சிகாலத்தில் மக்களைப் பயமுறுத்த வேண்டியதே நாங்கள் திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வேலை என்று அறிவுறுத்தபட்டது.

அது எளிதான ஒன்றில்லை. மக்கள் எப்போது எதைக் கண்டு பயப்படுவார்கள் என்பது மாபெரும் புதிர். ஆனால் கரப்பான்பூச்சிகளைச் சொல்லி பெண்களை எளிதாக பயமுறுத்திவிடலாம். ஆகவே ஆண்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் தான் நாங்கள் கதவைத் தட்ட வேண்டியிருந்தது.

பெண்கள் கரப்பான்பூச்சி குறித்து விதவிதமான கற்பனையை கொண்டிருக்கிறார்கள் என்பதை என் பணி அனுபவத்தில் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். வேறு எந்தப் பூச்சியை விடவும் கரப்பான் அந்த அளவில் துரதிருஷ்டசாலி . அதைப் பெண்கள் வெறுக்கிறார்கள். அழித்து ஒழிக்க பணம் செலவழிக்கிறார்கள். பெண்களால் வெறுக்கபடுவது அழிந்து போவது இயற்கை தானே.

நான் பெண்களிடம் கரப்பான்பூச்சி பற்றி விதவிதமாக பொய் சொல்லப் பழகியிருந்தேன். குறிப்பாக அவர்கள் குளியல் அறையில் வந்து ஒளிந்து கொள்ளும் கரப்பான்பூச்சிகள் ஒருவிதமான பச்சை நிறத் திரவத்தை உமிழ்கின்றன என்றும் அது உடலில் பட்டால் உடனே தோலில் புள்ளிபுள்ளியாக உருவாக துவங்கிவிடும் என்றும் மிரட்டினேன். அதை அவர்கள் அலட்சியப்படுத்தினால் ஒரு மாத காலத்தில் உடலெங்கும் நோய் பரவி அகோரமாகிவிடுவார்கள் என்றும் சொல்வேன்.

இந்தப் பொய் ஒரு பிரம்மாஸ்திரம் போன்றது. அதிலிருந்து எந்தப் பெண்ணும் தப்பவே முடியாது. ஒரு பெண் இந்தப் பொய்யைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதாள். அப்படி அவள் உண்மையில் கரப்பான்பூச்சிகளால் கடிபட்டிருக்கிறாள் என்றும் அந்த சந்தேகத்தை நான் உறுதி செய்துவிட்டதாகச் சொல்லி உடனடியாக எனது தெளிப்பானை வாங்கி கொண்டதுடன் இதற்கு என்னவிதமான சிகிட்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கறையோடு கேட்டாள்.

இதற்காக நான் கூடுதலாக கொஞ்சம் அழகுக்கலை குறிப்புகளை வாசிக்க வேண்டிய அவசியமிருந்தது. அதற்கு நான் பெரிய சிரமம் ஒன்றும் எடுக்கவில்லை. பழைய பேப்பர் கடைகளில் உள்ள ஐந்தாறு வருச பழைய பெமினா, ஈவ்ஸ் வீக்லி போன்ற இதழ்களைப் புரட்டி அதில் வெளியான அழகுகுறிப்புகளை மனதில் நிறுத்தி வைத்துக் கொள்வேன்.

உண்மையில் ஒரு கரப்பான்பூச்சி கொல்லி விற்பவன் எவ்வளவு நுட்பமாக பணியாற்ற வேண்டியிருக்கிறது என்பதை நீங்களே நினைத்து பாருங்கள். அந்தப் பெண் நான் சொன்ன அழகுகுறிப்பை நிச்சயம் பயன்படுத்தத் துவங்கியிருப்பாள். எல்லா அழகு குறிப்புகளும் பயத்திலிருந்து உருவானவை தானே.

கரப்பான்பூச்சி பற்றிய பொய்களை மக்கள் சந்தேகம் கொள்வதேயில்லை. பூச்சிகள் கொல்லப்படும் போது மக்கள் நிம்மதி அடைகிறார்கள். கரப்பான்பூச்சிகள் எவ்வளவு காலம் உயிர்வாழ கூடியவை. அதில் ஆண் பெண் என்று வேறுபாடு இருக்கிறாதா? வயதாகி செத்த கரப்பான்பூச்சி என்று ஒன்றாவது உலகத்தில் இருக்குமா என்று எவரும் என்னிடம் கேட்டதேயில்லை

நான் இந்தப் பணியில் ஆரம்ப நாட்களில் வீட்டின் காலிங்பெல்லை அடிக்க கூச்சப்பட்டிருக்கிறேன். காலிங்பெல் மீது கை வைத்தவுடனே எனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிடும். வீட்டிலிருந்து எந்த வயதில் யார் வெளியே வருவார்கள் என்று மனதில் ஒரு கற்பனை உருவம் தோன்ற ஆரம்பிக்கும். பெரும்பாலும் என் கற்பனை பொய்யாகிவிடும். அரிதாக ஒன்றிரண்டு முறை நான் நினைத்தது போலவே மெலிந்த உடலும் நெளிகூந்தலும் தூக்கம் படிந்த முகத்தோடு பெண்கள் வந்திருக்கிறார்கள்.

நான் பயிற்றுவிக்கபட்ட கிளி போல சொல்வதை அவர்கள் காதுகள் கேட்டுக் கொள்வதில்லை. சலிப்புடன் வேண்டாம் என்றோ, ஏன் காலிங்பெல்லை அடித்தேன் என்று கோபபட்டோ கதவை மூடிவிடுவார்கள். மூடிய கதவிற்கு வெளியில் சில நிமிசங்கள் நின்று கொண்டிருப்பேன். அப்போது மனதில் சில விபரீதமான எண்ணங்கள் தோன்ற துவங்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, என்று கரும்புகை சுழல்வதை போல தீவினைகள் என் மனதில் புகைய ஆரம்பிக்கும். பிறகு அது தானே அடங்கி ஒடுங்கியதும் இறங்கிப் போய்விடுவேன். பூச்சிமருந்து விற்பவன் வேறு என்ன செய்ய முடியும்.

விற்பனைப் பிரதிநிதி என்பவன் பொதுவெளியில் அலையும் ஒரு நடிகன். நாடகக் கதாபாத்திரம் ஒன்று தான் எப்போது மேடையில் நுழைவோம் என்று திரையின் பின்னால் நின்றபடியே காத்துக் கொண்டிருப்பது போன்ற மனநிலை தான் தினமும் எனக்கு நேர்கிறது.

ஒவ்வொரு நாளும் பூச்சிமருந்துகளுடன் தெருவில் நடந்து போகத் துவங்கியதும் எந்த வீட்டின் கதவை முதலில் தட்டுவது என்று குழப்பமாக இருக்கும். எனது சக ஊழியர்கள் ஒவ்வொருவரும் இதற்கான தனியான வழிமுறை ஒன்றை வைத்திருந்தார்கள்.

மூத்த விற்பனையாளரான சங்கரன் எப்போதுமே வலதுபக்கம் உள்ள வீட்டைத் தான் முதலில் தட்டுவார். எல். கோவிந்துவிற்கு ஒன்பது ராசியான எண் என்பதால் எட்டுவீடுகளை தவிர்த்துவிட்டு ஒன்பதாவது வீட்டில் யாரும் இல்லாமல் போயிருந்தால் கூட அதைத் தான் முதலில் தட்டுவார். நான் இப்படி எந்த பழக்கத்தையும் உருவாக்கி கொள்ளவில்லை. மாறாக நான் நடக்க துவங்குவேன். சில நேரம் வீதியின் கடைசி வரை கூட நடந்து கொண்டேயிருப்பேன். மனதில் நடிக்கத் துவங்கு என்ற குரல் கேட்க ஆரம்பிக்கும். அது உச்சத்திற்கு எட்டியதும் சட்டென ஏதாவது ஒரு வீட்டு கதவை தட்டிவிடுவேன்.

பகல்நேரங்களில் திறக்கபடும் வீடுகளை கவனிக்கிறேன். எல்லா வீடுகளும் அலங்கோலமாகவே இருக்கின்றன. ஒழுங்கின்மை, கவனமின்மை பீடித்திருக்கிறது. தேவையற்ற பொருட்கள் குவிந்துகிடக்கின்றன. பயத்தோடு தான் கதவைத் திறக்கிறார்கள். சில வீடுகளில் கதவை திறப்பதேயில்லை. ஆனால் குரல் மட்டும் வெளியே கேட்கிறது. அப்படித் திறக்கப்படாத கதவுகளை பொய் சொல்லி திறக்க வைப்பதே எங்களது சாமர்த்தியம்.

ஆகவே கதவின் முன்னே நின்றபடியே நான் சுகாதாரத் துறையில் இருந்து வந்திருப்பதாக பொய் சொல்லுவேன். உடனே கதவு திறந்துவிடும். மக்கள் அரசாங்கத்திற்கு பயப்படுகிறார்கள். எவ்வளவு மேன்மையான குணமது. அவர்களிடம் சுகாதாரத் துறை இந்தப் பகுதியில் கரப்பான்பூச்சிகள் பெருகிவிட்டதாக அடையாளம் கண்டுள்ளது என்று கறாரான குரலில் சொல்வேன். அவர்கள் கலக்கத்துடன் அது தன்னுடைய தவறில்லை என்பதுபோலவே கேட்டுக் கொள்வார்கள். என்னிடம் உள்ள குறிப்பு நோட்டில் அந்த வீட்டோர் பற்றிய விபரங்களை கேட்டறிந்து மறுநாள் எனது சகாக்களில் ஒருவனை அங்கே அனுப்பி தெளிப்பானை விற்பது வழக்கம்.

மக்கள் தங்களை விட சிறிய உயிரினங்கள் எல்லாவற்றையும் வெறுக்கிறார்கள். கொன்றுவிட துடிக்கிறார்கள். அதில் குழந்தைகள் கூட விதிவிலக்கில்லை. எந்தக் குழந்தையும் ஒரு எறும்பைக் கூட நேசிக்கவில்லை. எறும்பை தலைவேறு உடல்வேறாக பிய்த்து கொல்வதில் எவ்வளவு ஆனந்தம் கொள்கின்றன. இவ்வளவு ஏன், அழகிகளாக நாம் கொண்டாடும் பெண்கள் வன்மத்துடன் பூச்சிகளை கட்டையால் அடித்துக் கொல்வதை நீங்கள் அருகில் இருந்து பார்க்க வேண்டும். எவ்வளவு ஆவேசம். எவ்வளவு ஆத்திரம்.

ஆண்கள் பூச்சிகளுடன் வாழ்வதில் அதிக பேதம் காட்டுவதில்லை. எப்போதாவது அதைக் கண்டு சலித்து கொள்கிறார்கள். சில வேளைகளில் அதைக் கட்டுபடுத்த முடியாத தனது ஆண்மையை நினைத்து கோபம் கொள்கிறார்கள். ஒன்றிரண்டு மெல்லிதயம் படைத்த ஆண்கள் மட்டுமே பூச்சிகொல்லிகளை உபயோகிக்கிறார்கள். இது பொது உண்மையில்லை எனது கண்டுபிடிப்பு.

கரப்பான்பூச்சி மருந்து விற்பவர்கள் இப்படி நிறைய கண்டுபிடிப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு உதாரணம் சொல்கிறேன். கரப்பான்பூச்சியைக் கொன்ற பிறகு பெரும்பான்மை மக்கள் அதன் மீசையைப் பிடித்து மட்டுமே தூக்கி வெளியே எறிகிறார்கள். காரணம் மீசையின் மீதுள்ள தாங்கமுடியாத வெறுப்பு. மனிதர்கள் எவராவது இப்படி மீசையைப் பிடித்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்களா?

பெரும்பான்மை வீட்டுப் பெண்களின் கவலை எல்லாம் எனது தெளிப்பானை எவ்வளவு மலிவாக வாங்கிவிட முடியும் என்பதே. நாங்களே அந்தத் தந்திரத்தை நுகர்வோருக்கு அளித்திருந்தோம். எங்கள் பூச்சி மருந்து தெளிப்பானின் விலை பனிரெண்டு ரூபாய் முப்பது காசுகள். அதை நாங்கள் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். வீடு தேடி வரும் சலுகை என்று அதை ஐம்பது ரூபாய் குறைத்து இருநூற்றுக்கு விற்பனை செய்கிறோம். அதை அடித்துபேசி விலை குறைக்கும் பெண்களிடம் உங்களுக்காக மட்டும் நூற்று ஐம்பது என்று விற்பனை செய்வோம். அப்படி வாங்கிய பெண் அளவில்லாத சந்தோஷம் கொள்வதை என்னால் காண முடிந்திருக்கிறது. ஒரு கரப்பான்பூச்சி மருந்தை விலை குறைத்து வாங்கிவிட்டது எளிய செயலா என்ன?

ஒரேயொரு முறை ஒரு பெண் என்னிடம் எனது தெளிப்பானால் எவ்வளவு கரப்பான்பூச்சிகளை கொல்ல முடியும் என்று கேட்டாள். எங்கள் பயிற்சிகாலத்தில் இந்தக்கேள்வியை நான் கேட்டிருந்தால் நிச்சயம் கைதட்டு கிடைத்திருக்கும். மொகித்சென் அதற்கான விடையை உடனே சொல்லியிருப்பார். ஆனால் அன்று அந்தபெண் கேட்டதற்கு என்னிடம் பதில் இல்லை. உடனடியாகப் பொய் சொல்லவும் முடியவில்லை.

நான் சமயோசிதமாக உங்கள் வீட்டில் உள்ள அத்தனை கரப்பான்பூச்சிகளையும் கொல்ல முடியும் என்று மட்டுமே சொன்னேன். உடனே அந்த பெண் எறும்புகளை இதனால் கொல்ல முடியுமா என்று கேட்டாள். எறும்புகள் ஈக்கள், பொறிவண்டுகள், விளக்குபூச்சிகள் என அத்தனையும் கொல்ல முடியும் என்று சொன்னேன். அவள் பல்லியைக் கொல்ல முடியுமா என்று மறுபடியும் கேட்டாள். பல்லியைக் கொல்வது பாவம் என்று மட்டுமே சொன்னேன். அவளும் அதை உணர்ந்து கொண்டவளை போல தலையாட்டிவிட்டு பணத்தை எண்ணித் தந்தாள். அந்த பணத்தில் ஒரு கிழிந்து போன ஐம்பது ரூபாய் இருந்தது. அதை என்னிடம் தந்திரமாக தள்ளிவிட்ட திருப்தி அவளுக்கு இருந்திருக்கும். ஒருவேளை அதற்காகவே இந்த தெளிப்பானை அவள் வாங்கியிருக்கவும் கூடும்.

மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள் என்பதே என் அனுபவம். அவர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள். அதை வளர்த்து கொள்ள விரும்புகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு கற்று தருகிறார்கள். ஏமாற்றியதை பற்றி பெருமை பேசுகிறார்கள்.

ஒரு நாள் ஸ்ரீனிவாசா திரையரங்கு அருகாமையில் உள்ள வீட்டின் கதவை தட்டினேன். மதியமிருக்க கூடும். பெரும்பான்மையினர் மதியத்தில் உறங்கிவிடுகிறார்கள். மனிதர்கள் உறங்கும் போது உலகம் அமைதி அடைகிறது என்று காலண்டர் தாளில் ஒரு வாசகம் படித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதனால் நாங்கள் மதியம் இரண்டு முதல் நான்கு வரை வேலை செய்வதில்லை. எங்காவது ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். அன்று நான்கு மணிக்கு சற்று முன்பாக அந்த வீட்டின் கதவை தட்டியிருந்தேன். வயதான ஒருவர் கதவைத் திறந்தார். அவரிடம் நான் பூச்சிமருந்து விற்பனையாளன் என்று சொன்னதும் அவர் உள்ளே வரச்சொன்னார். அந்த வீடு அழுக்கடைந்து போயிருந்தது. சுவெரங்கும் மழைநீர் இறங்கிய கறை. மூடிக்கிடந்த ஜன்னல். அதில் ஒரே போல நாலைந்து உபயோகமற்ற பல்துலக்கிகள். அறையெங்கும் பழைய நாளிதழ்கள். வார மாத இதழ்கள், புத்தகங்கள். குப்பை போல குவிந்து கிடந்தன. அவர் அதற்கு ஊடாகவே ஒரு சாய்வு நாற்காலியை போட்டிருந்தார். அருகாமையில் துருப்பிடித்து போன ஒரு கட்டில் அதன் மீது முழுவதும் வெவ்வேறு விதமான புத்தகங்கள், அடியிலும் கட்டுகட்டாக பழைய நாளிதழ்கள். கயிற்றுகொடியில் பழுப்பேறிய வேஷ்டி பனியன்கள் காய்ந்து கொண்டிருந்தன. நிச்சயம் அவரிடம் எளிதாக ஒரு தெளிப்பானை என்னால் விற்றுவிட முடியும் என்று தோன்றியது.

நான் தூசியால் ஏற்பட்ட அசௌகரியத்தை பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தேன். அவர் ஒரு நாளிதழ் கட்டைக் காட்டி அதில் ஏறி என்னை உட்காரச் சொன்னார். நான் அதில் உள்ள தூசியை கையால் தட்டியபோது நாசியில் காரமேறித் தும்மல் வந்தது. எனது தெளிப்பானை வெளியே எடுத்து விளக்கம் சொல்ல ஆரம்பித்தேன்.

அவர் அதைப் பிறகு பார்த்து கொள்ளலாம். தான் நிச்சயம் ஒன்றை வாங்கி கொள்கிறேன் என்றபடியே எனக்கு திருமணமாகிவிட்டதா என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். குடிக்கிற பழக்கமிருக்கிறதா என்று கேட்டார். இல்லை என்று அவசரமாக மறுத்தேன். அவர் தலையாட்டிக் கொண்டு கேலியான தொனியில் இதுவரை எவ்வளவு கரப்பான்பூச்சிகளை கொல்ல உதவியிருக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்டார். அது என்னை குத்திபார்ப்பது போல இருந்தது.

அது உபயோகமில்லாதவை அழிக்கபட வேண்டியவை தானே என்று கறாராக சொன்னேன். அவர் தலையாட்டிக் கொண்டார். பிறகு என் அருகில் இருந்த ஒரு பேப்பர்கட்டை காட்டி அதை பிரிக்கும்படியாக சொன்னார். நான் குனிந்து எடுத்து அதை பிரித்தபோது 1978 வருசம் நவம்பர் 7ம் தேதி பேப்பரை எடுக்கும்படியாக சொன்னார். எதற்காக இவற்றை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார் என்று புரியவில்லை.

பளுப்பேறி எழுத்து மங்கிப் போயிருந்த ஒரு பேப்பரை எடுத்து நீட்டினேன். அதன் ஆறாம்பக்கத்தை உரக்க படி என்று சொன்னார். பிரித்து பார்த்த போது அதில் ஒரு கரப்பான்பூச்சி படமிருந்தது. சப்தமாக படித்தேன். மடகாஸ்கரில் காணப்பட்ட ராட்சச கரப்பான்பூச்சியது. அது ஐந்து அங்குல நீளமுடையது. முப்பது கிராம் எடை கொண்டது அதை கரப்பான்பூச்சிகளின் டைனோசர் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவர் அதை கவனமாக கேட்டு கொண்டிருந்துவிட்டு இது போல ஒன்றை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார். இல்லை என்றேன்.

இது நம் ஊரில் இருந்து அழிக்கபட்ட இனம். நான் பார்த்திருக்கிறேன். நான் இதை பற்றி மறுப்பு எழுதி அனுப்பினேன். அது பத்திரிக்கையில் வரவேயில்லை என்று சொன்னார். நான் அமைதியாக இருந்தேன். அவர் விஞ்ஞானம், வானவியல், ஜோசியம், ஜன்ஸ்டீன் குவான்டம் தியரி, ரிச்சர்ட் டாவ்கின்ஸ் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்கு நிறைய வேலையிருக்கிறது என்று எழுந்து கொள்ள முயன்றேன்.

அவர் தனது பர்சில் இருந்து இருநூறு பணத்தை எடுத்துத் தந்து தெளிப்பான் எனக்கு வேண்டாம். நீயே உபயோகபடுத்தி கொள். உனக்கு நேரமிருந்தால் என்னோடு வந்து பேசிக் கொண்டிரு. ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு தெளிப்பானை வாங்கி கொள்கிறேன். காரணம் நானே ஒரு கரப்பான்பூச்சி போல தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது வயது எழுபத்தியாறு. பனிரெண்டு வருசமாக இந்த அறையை விட்டு வெளியே போவதே கிடையாது. பிள்ளைகள் அமெரிக்க போய்விட்டார்கள். யாரும் என்னைத் தேடி வருவது கிடையாது.

நான் முப்பது வருசம் அறிவியல் ஆய்வுதுறையில் வேலை செய்திருக்கிறேன். பதவி, சம்பாத்தியம், உறவு, பெயர் புகழ் எல்லாம் பொய். மயக்கம். எதுவும் நமக்கு கை கொடுக்கபோவதில்லை. முதுமை ஒரு நீண்ட பகலை போலிருக்கிறது.

பழைய நாளிதழ்களை திரும்ப திரும்ப படிப்பதில் எனக்கு ஆனந்தமாக இருக்கிறது. இந்த செய்திகள் யாவும் நடந்து முடிந்துவிட்டவை தானே. ஆனால் அவற்றை பற்றி கற்பனை செய்து கொள்ளும்போது ஏனோ மிக சந்தோஷமாக இருக்கிறது. உனக்கு நேரமிருந்தால் என் வீட்டு கதவை நீ எப்போதும் தட்டலாம், ஒரு வேளை நீ வரும்போது நான் செத்துகிடந்தால் இந்த புத்தகத்தின் உள்ளே கொஞ்சம் பணமிருக்கிறது. எடுத்து செலவுசெய்து எரித்துவிடு. என்று சொன்னார்.

நான் உண்மையில் பயந்து போய்விட்டேன். அவர் தந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவரைச் சந்தித்த பிறகு நான் சென்ற வீடுகளில் எதிலும் ஒரு தெளிப்பானை கூட விற்பனை செய்ய முடியவில்லை. மனதில் அவரது குரல் என்னை வதைக்க துவங்கியது. அவர் என்னை மிகவும் பாதித்திருந்தார். இதற்காக அன்றிரவு நானும் செல்வரத்தினமும் குடிப்பதற்காக சென்றோம்.

ஒயின்ஷாப்பின் மதுக்கூடங்களில் அதிக கரப்பான்பூச்சிகள் வளர்க்கபடுகின்றன. அவற்றை குடிகாரர்கள் நேசிக்கிறார்கள். போதையில் பேச ஆள்கிடைக்காத போது கரப்பான்பூச்சிகளோடு பேசுகிறார்கள். சேர்த்து குடிக்கிறார்கள். நான் போதையேறி செல்வரத்தினத்திடம் நமது மேலாளராக உள்ள மணிநாராயணைக் கொல்ல வேண்டும். அவன் ஒரு பெருச்சாளி போல நம் உழைப்பை தின்று ஊதிக் கொண்டு வருகிறான் என்று கத்தினேன். அவன் கட்டுபடுத்த முடியாமல் அழுதான். விற்பனை பிரதிகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை நானும் அறிவேன். ஆகவே அவனோடு சேர்ந்து அழுவதற்கு முற்பட்டேன். என்னால் அப்படி பொது இடத்தில் அழ முடியவில்லை. செல்வரத்தினம் அழுவதை கண்ட ஒரு குடிகாரன் அவன் மீது அன்பாகி தனது மதுவை பகிர்ந்து கொண்டான்.

அப்போது எனது இருக்கையின் அருகில் உள்ள செங்கல் சுவரில் ஒரு கரப்பான்பூச்சி நின்றபடியே என்னை பார்த்து கொண்டிருந்தது. அது என்னோடு பேச விரும்புகிறதோ எனும்படியாக அதன் பார்வையிருந்தது. நான் என்ன பேசுவது என்று புரியாமல் அதை தவிர்க்க துவங்கினேன். என்றாவது இப்படியொரு இக்கட்டு உருவாக கூடும் என்று எனக்கு தெரியும். ஆனால் அதை இந்த நிலையில் என்னால் எதிர்கொள்ளமுடியவில்லை. ஆகவே நான் கோபத்துடன் கரப்பான்பூச்சிகளை விரட்டியடிங்கள் என்று கத்தினேன்.

அங்கிருந்த பணியாளர்கள் எவரும் அதைக் கேட்டுக் கொள்ளவேயில்லை. அந்த பூச்சி திமிரோடு என்னை பார்த்து கொண்டிருந்தது. எனக்கு குற்றவுணர்ச்சியானது. நான் உடனே அந்த இடத்திலிருந்து வெளியேறி தனியே நடக்க ஆரம்பித்தேன்.

குற்றவுணர்ச்சி என்பது ஒரு மோசமான வியாதி. அதை ஒரு போதும் வளர விடவே கூடாது. இல்லாவிட்டால் அது நம்மை வாழவிடாமல்செய்துவிடும். நீண்டநேரம் கடற்கரை சாலையில் சுற்றியலைந்துவிட்டு அறைக்கு திரும்பினேன். உறக்கம் கூடவேயில்லை. சுழல்விசிறியை பார்த்தபடியே படுத்துகிடந்தேன். நான் படித்திருக்கிறேன் என்பது தான் பொது இடங்களில் அழமுடியாமல் என்னை தடுக்கிறது என்பதே அன்றிரவே கண்டுபிடித்தேன்.

அந்த வயதானவரை திரும்பச் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே அதன்பிறகு நான் தரமணி பகுதிக்கு வேலையை மாற்றம் செய்து கொண்டுவிட்டேன். அது வசதியானவர்கள், மென்பொருள்துறை சார்ந்த அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் உள்ள பகுதி. ஆகவே எளிதாக விற்பனையில் சாதனை படைத்து பதவிஉயர்வு பெற்றுவிடலாம். தரமணியில் பூச்சிமருந்துவிற்பதற்கு பெரிய போட்டியே இருந்தது.

நான் காய்களை நகர்த்தி அந்த இடத்தை பிடித்து கொண்டுவிட்டேன். மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தரமணியில் பொருட்கள் விற்பது எளிதாகவே இருந்தது. தரமணியில் கரப்பான்பூச்சிகள் கூட ஆங்கிலம் பேசுகின்றன. அவை மற்ற பகுதியில் காணப்படுவது போல பயந்து ஒடுவதில்லை. மெதுவாகவே செல்கின்றன. அங்கே எளிய இதயம் கொண்டவர்கள் அதிகமிருக்கிறார்கள். ஆகவே நான் ஒரு நாளில் ஐநூறு தெளிப்பான்கள் வரை கூட விற்க முடிந்தது. அத்துடன் தெளிப்பான்கள் அறிமுகத்திற்கு என்று தொலைபேசியில் நேரம் குறித்துவிட்டு விற்க போகலாம். கரப்பான்பூச்சி பற்றி பேசுவதை ரசித்து கேட்கிறார்கள்.

அப்படியொரு நாள் சீவியூ டவர்ஸ் உள்ளே ஒரு வீட்டிற்கு தெளிப்பான் அறிமுகம் செய்ய போய்விட்டு திரும்ப வெளியே வந்த போது குடியிருப்பின் காவலாளி என்னைப் பிடித்து கொண்டுவிட்டான். பதிவுபுத்தகத்தில் நான் கையெழுத்து இடவில்லை என்பதைக் காரணம் காட்டி என்னைத் திருடன் என்று அவன் சந்தேகபட துவங்கினான்.

நான் அடையாள அட்டைகள், தெளிப்பான்களை காட்டிய போதும் நம்பிக்கை கொள்ளவேயில்லை. என்னைப் பிடித்து போலீஸில் ஒப்ப்படைப்பதன் வழியே தனது வேலையில் முன்னேற்றம் காண அவன் விரும்புகிறான் என்று புரிந்தது. நான் அதற்கு என்னை ஒப்பு கொடுத்தேன். நன்ழ்ஸ்ண்ஸ்ஹப் ர்ச் ற்ட்ங் ச்ண்ற்ற்ங்ள்ற். எவ்வளவு அழகான வாசகம்.

அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என்னை ஒப்படைத்தான். நான் ஏதாவது திருட முற்பட்டேனா என்று காவலர்கள் அவனிடம் விசாரித்தார்கள். அவன் நீண்ட விளக்கம் தந்து கொண்டிருந்தான். மாலை வரை என்னை காவல்நிலையத்தில் உட்கார வைத்திருந்தார்கள். காவல்நிலையத்திற்குத் தேவைப்படுகிறது என்று இரண்டு தெளிப்பான்களை இலவசமாக வாங்கி கொண்டு என்னை இரவில் வெளியே அனுப்பிவைத்தார்கள். அன்று இந்த வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் உண்டானது.

யாரிடமாவது ஆலோசனை கேட்கலாம் என்று நினைத்தேன். மணிநாரயணன் நினைவு வந்தது. அவரிடமே கேட்டால் என்னவென்று இரவோடு அவர் வீட்டிற்கு போய் நின்றேன். அவர் வீட்டின் வரவேற்பரையில் உட்கார வைத்து குடிப்பதற்கு பில்டர் காபி தந்தார். சுவரில் மிகப்பெரிய தொலைக்காட்சியிருந்தது. அதி நவீனமான சோபா, அலங்காரமான சுவர் ஒவியங்கள். மீன்தொட்டிகள். கரப்பான்பூச்சிகள் அவரை சுகபோகமாக வாழவைத்து கொண்டிருக்கின்றன.

மணிநாராயணன் என் பிரச்சனைகளைக் கேட்டு சிரித்தபடியே நீ ஏன் குற்றவுணர்ச்சி கொள்கிறாய். நீயா கரப்பான்பூச்சிகளை கொல்கிறாய். அது ஜெர்மன் நிறுவனத்தின் வேலை. நாம் வெறும் அம்புகள். கர்த்தா அவனே என்று பகவத்கீதை போன்ற நீண்ட உரையை வழங்கினார். நான் அவரிடம் உங்களைப் போல நான் ஆக வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று நேரடியாக கேட்டேன்.

அவர் சிரித்தபடியே மனிதர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய பயம் எப்போதும் அதிகம். அதன் ஒரு அடையாளம் தான் கரப்பான்பூச்சி. அது ஒருவேளை நம்மை கடித்துவிட்டால் என்னசெய்வது என்ற பயமிருக்கிற வரை நாம் சந்தோஷமாக இருக்கலாம். ஆகவே எந்த வீட்டின் கதவை தட்டும்போதும் உன்னை ஒரு தேவதூதனைப் போல நினைத்துக் கொள். அவர்களை மீட்பதற்காகவே நீ வந்திருப்பதாக நம்பு. இரண்டு மாசத்தில் நீ மேலே போய்விடுவாய் என்றார்.

எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள். மறுநாளே இதை நடைமுறைபடுத்த துவங்கினேன். என் பேச்சில் கண்களில் புதிய நம்பிக்கை பீறிட்டது. என் சொற்களை நகரவாசிகள் நம்பினார்கள். ஒரு ஆள் ஒரே நேரம் மூன்று தெளிப்பான்களை வாங்கினான். அந்த அளவு நான் பேசி மயக்க தெரிந்து கொண்டுவிட்டேன். ஆங்கிலம் ஒரு வசதியான மொழி. அதில் தான் எவ்வளவு லாவகம், எவ்வளவு சூட்சுமம்.

மணிநாராயணன் சொன்னது உண்மை. நான் இலக்கை மீறி விற்றுச் சாதனை செய்திருந்தேன். அலுவலகமே விடுமுறை தந்து ஒய்விற்காக ஒரு வார காலம் கோவாவிற்கு அனுப்பி வைத்தது. கூடுதல் சம்பளம். வாகன வசதிகள். அத்தோடு இப்போது எனக்குக் கிழே ஆறு பேர் வேலை பார்க்கிறார்கள். நான் மணிநாராயணன் இடத்தை ஒரு வருசத்தில் அடைந்துவிடுவேன். இயற்கை மனிதர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அது நிஜம்.

உங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் கரப்பான்பூச்சிகள் இருக்ககூடும். அவற்றை அலட்சியமாக பார்க்காதீர்கள். அவை ஒழிக்கபட வேண்டியவை. என்னை அறிந்து கொண்ட உங்களுக்காக நாற்பது சதவீத சிறப்புசலுகை விலையில் தெளிப்பான்களை தருகிறேன். விருப்பம் இருந்தால் நீங்கள் என்னை எப்போதும் அழைக்கலாம். வீடு தேடி வந்து இலவசமாக விளக்கம் தர தயாராக இருக்கிறேன்.

**