Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 285514 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
பேனா

நீ என் துணை
நீ என் ஆறுதல்
நீ என் புகழ்ச்சி 

நீ என் உயர்ச்சி
நீ என் மகிழ்ச்சி
நீ என் வருவாய்

நீ என் ஆதாரம்
நீ என் போர்வாள்
நீ என் விடுதலை

நீ என் சுதந்திரம்
நீ என் பகை விரட்டி 
நீ என் கவலை போக்கி

நீ என் மொழிச்சுரப்பி

நீயே என்னுயிர் தோழன் பேனா


வருவாய்
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline MyNa

மீண்டும் உயிர்பெற்று
எழுந்து வருவாய்
முண்டாசு கவியே
நீ விட்டு சென்ற
புரட்சியை தொடர்ந்திட !


முண்டாசு கவி

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
தத்தளிக்கும் தமிழ் தாயை
கரை சேர்க்க நாதி இல்லை
கண்ணீர் விட்டு கதறும்
தாயின் குரல்  கேட்க
இயலாமல் முண்டாசு கவி
மூடிக்கொண்டார் காதுகளையே


கொடை

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
கொடை

ஆசிரியர்களும் கொடை
தாய் தந்தையர் கொடை 
உறவுகள் எல்லாம் கொடை
நண்பர்கள் எல்லாம் கொடை
தம்பியும் தங்கையும் கொடை
அண்ணனும் அக்காவும் கொடை



நல்ல கல்வியும் கொடை
தகுந்த தொழிலும் கொடை
பசிக்கு உணவும் கொடை
திகிலில்லா உறக்கமும் கொடை


பகையில்லா வாழ்வும் கொடை
நோயில்லா மெய்யும் கொடை
குறைவில்லா செல்வமும் கொடை


இவை அனைத்தும் அருள வல்ல
இறைவன் பேற்றி


உறக்கம்
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
விழி மூடி  உறங்க நினைத்த
என்னை ஆட்கொண்டது
நித்திரா தேவியல்ல
என் நினைவின் தேவி
நீயடி கண்ணே


மௌனம்

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
மௌனம்


எதிர்பார்த்து ஏங்கி கிடக்கும்
உறவுக்கு எதிரான மௌனம்
கொலை


பொய்யரை புறக்கணிக்கும்
மௌனம் கோவம்


உண்மை இதயத்தின்முன்
பேசும் பொய்களிலும்
மேன்மை மௌனம்


மனிதர்கள் நடுவே
உலகிலுள்ள மிகக்கொடிய
தண்டனைகளில் ஒன்று
மௌனம்



பொய்
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline MyNa

ஓர்  உண்மையை மறைக்க
ஆயிரம் பொய்கள் கூறப்பட வேண்டும் ..
கூறப்பட்ட பொய்களை  நிலைநாட்டிட
ஓர் உறவை இழந்திட வேண்டும்..
பொய்யால் உறவை இழப்பதைவிட
மெய்யால் காயப்படுத்துவதே மேல்
:)

மயில்

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
தலைவியின் வாடிய
வதனமதை கண்டு துயர்
கொண்ட தலைவனோ
விரித்தான் வண்ண
தோகையை மயிலாக மாறி
தலைவி கண்டு மகிழவே

மொழி

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
மொழி


மொழியின் அடையாளமே இனம்
இனத்துக்கு ஆதாரமாய் இருக்கும்
மொழியை அறியாதவர் பாவியர்


ஒருவர் கிறுக்குவதை
ஒருவர் ஒலிப்பதும்


ஒருவர் ஒலிப்பதை
மற்றொருவர் கிறுக்குவதும்


இதனை புரிந்து உணர்ந்து
செயலாற்ற உதவுவது
மொழியின் சிறப்பாகும்



சிறப்பு


« Last Edit: May 05, 2017, 01:37:12 PM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
சிறப்புக்கள் ஆயிரமாய்
நீ சூடிக் கொண்டாலும்
தலைக்கணமாம் அது
தலை வைத்தால்
தாழ்ந்திடுமே உன்
தலை கூட தரை நோக்கியே


காலம்
« Last Edit: May 07, 2017, 08:12:18 AM by VipurThi »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
காலம் செல்லும் பாதையில்
கால்கள் செல்ல ...
எந்தன் மனம் மட்டுமெனோ
உந்தன் காலடி தேடிச்செல்கிறது ...!!!


தேடி ..

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
தேடிச் சுழழும் உந்தன்
விழியின் அழகை
ஒட்டியிருந்து ஓரமாய்
ரசிப்பது கூட சுகமடி
காதலியே!


நினைவு

Offline MyNa

விடியாத இரவில்
முடியாத கண்ணீரோடு
துணை நின்றது
உன் நினைவு..

இரவு

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
இரவு


இரவுகள் உண்மை சொல்லும் உத்தமர்கள்
செய்த நன்மையை நினைவுறுத்தி மகிழ்விக்கும்
செய்த தீமையை நினைவுறுத்தி இகழும்


இரவுகள் ஆசான்
இரவுகள் நீதிபதி
இரவுகள் உண்மையின் ஒரேபதம்
இரவுகள் மனசாட்ச்சியின் விம்பம்
இரவுகள் போல் துணிச்சல் கொண்டு
நெஞ்சுக்கு நீதியென உரியவரிடம்


உண்மைபேசும் உத்தம குணம் எவருக்கும் இல்லை
இரவுகள் முகத்துதி பாடாது


உயர்வை வாழ்த்தும்
இழிவை இகழும்
செவி மடுத்தால் நிம்மதி நிலைக்கும்
செவி மறுத்தால் நிம்மதி குலைக்கும்
நிம்மதி இல்லா வாழ்வும் மரணமும் ஒன்றுதான்


இரவுகள் சொல் கேட்டல் நிம்மதிக்கு மூலதனம்


நிம்மதி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline MyNa

பிறருக்காக வாழ்ந்து
நிம்மதியை இழப்பதை விட
நிம்மதியாய் வாழ்ந்திட
தடையாய் இருக்கும் சிலரை
இழந்து விடுவது மேல் ..


இழப்பு