காதலில் அப்படி என்ன தான் இருக்கிறது?
மனிதன் அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கிறானே.
இந்த சூதாட்டத்தை எல்லோரும் ஆடுகிறார்கள்.
இது பாவ சூதாட்டமில்லை.புண்ணியத்தின் சூதாட்டம்.
இந்த சூதாட்டத்தில் மனிதன் எதையும் பணயமாக வைக்கத் துணிகிறான்.
வீடு வாசல் சொத்து சுகம் சொந்தம் எல்லாவற்றையும் பணயமாக வைக்கிறான்
மாமன்னர்கள் தங்கள் மணிமகுடத்தையே பணயமாக வைத்திருக்கிறார்கள்.
சிலரோ தங்கள் உயிரை பணயமாக வைக்கிறார்கள்.
காதலோ அதிசய சூதாட்டம்.
இதில் ஆடுபவர்கள் தோல்வி வெற்றியை பற்றி கவலைபடுவதே இல்லை.லாப நஸ்டத்தை பற்றி கவலைபடுவதில்லை.
இதை ஆடுவதே அவர்களுக்கு போதையாகவும் ஆனந்தமாகவும் ஏன் வாழ்க்கையாகவும் ஆகிவிடுகிறது.
காதல் ஒரு வித்தியாசமான சூதட்டம்
அதில் இழப்பவனே பெறுகிறான். தோற்றவனே வெற்றியடைகிறான்.
தன்னை இழப்பவனுக்கே காதல் கீரிடம் சூட்டுகிறது.
தன்னை இழப்பவன் காதலியை மட்டுமல்ல, உலகத்தையே பெற்றுவிடுகிறான்.
தன்னை இழப்பவன் காதலியை மட்டுமல்ல கடவுளையே பெற்றுவிடுகிறான்.