FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on November 08, 2019, 12:12:48 PM

Title: நேசகி அவள் நினைவுதனில்
Post by: Unique Heart on November 08, 2019, 12:12:48 PM
நெஞ்சம் எனும் சிறை தனில், நேசம் எனும் கயிற்றினால்
பிணைக்கப்பட்ட நேசகனான ஆயுள் கைதி நான்.

சிறை பட்ட நாள் முதலே, சிந்தனை எல்லாம் என் ஸ்நேகிதியே.

நேசகி அவள் நினைவுகளாலே, நேசம் அதன் மகிழ்ச்சி தனில் 
நித்தம் நான் நித்திரை கொண்டேன்.

நிஜத்தினில் என்னுடன் பயணித்து, நேசம் எனும் அன்பை படிப்பித்து.
இன்று நினைவுகளாய் மட்டும் மாறியதேனோ !!!.....