Author Topic: "விஷ(ம)ம்"  (Read 3029 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
"விஷ(ம)ம்"
« on: December 10, 2011, 05:00:15 AM »
"விஷ(ம)ம்"

இன்று எப்படியாவது "அருமையான சமையல்" என பாராட்டும் படி சமைத்துதிருப்தி படுத்திடவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் சமைத்துபரிமாறப்போனால், தட்டு நிறைய ஒரேஅடியாய் சாதம், அதன் மீது குழம்பு,ரசம்துவையல் பொரியல் என ஆக்கி வைத்த எல்லாவற்றையும் ஒன்றின் மீதுஒன்றாக போட்டு தட்டை பார்க்க முடியாத உயரத்திற்கு தூக்கி கொண்டு அழகானசாப்பாடு மேசையும் நாற்காலியும் இருக்க ஒற்றை கட்டில் போட்டிருக்கும் தனதுபடுக்கை அறைக்கு கொண்டு சென்று ஐந்து நிமிடத்தில் உண்டு முடித்து தட்டைதானே அலம்பி கவிழ்த்து விட்டு வாங்கி வைத்த இனிப்பு வகைகளில்தேவையானவற்றை கையில் அள்ளிக்கொண்டு மறுபடியும் ஒற்றை கட்டில்போட்ட படுக்கை அறைக்குள் சென்று எல்லா இனிப்பையும் தின்று தீர்த்துவிட்டுசாப்பிட்ட உணவு முழுவதுமாய் இரைப்பைக்குள் போய் சேர்வதற்கு முன்பேதொல்லை"காட்சியில் வரும் சீரியலில் ஒன்று கலந்து சில மணி நேரத்தில்குறட்டை ஒலி ..........


விடியலில் மணி நான்கிற்க்கோ மூன்றிக்கோ எழுந்து தன் செல்ல பிராணியைதினக்கடன் செய்ய அனுமதித்து பல் துலக்கி டீ போட்டு காலை மறுபடியும்செய்திகளில்" மூழ்கி குளித்து காலை உணவையும் தட்டில் வைத்து ஒற்றைகட்டில் படுக்கையறைக்கு கொண்டு சென்று உண்டு முடித்து அலுவலகம்செல்லும்போது "போகிறேன்" என்று சொல்லிவிட்டு போகும் வழக்கத்தைவைத்துகொள்ளாமல், தானே கதவை அடைத்து விட்டு ..............

இப்படியே வாரம் முழுதும் பேச ஒரு வார்த்தையும் இன்றி, வார இறுதியிலும்விடுமுறையின் போதும் ஒரு மாற்றமும் இன்றி நாட்கள் மாதங்களாகிமாதங்கள் வருடங்களாகி ........... அந்த பெண்ணின் வாழ்க்கை வீணாய் போகிறது

இரண்டுபேர் அவர்களுக்கு பெயர் கணவன் மனைவி, இருவரும் ஒரே வீட்டில்வாழ்கின்றனர் பேசுவது எனபது அரிது, அப்படியே பேசினாலும் அதன் முடிவுவாக்குவாதம்......

அந்த பாழாய் போன மனசுக்குள்ள என்ன என்ன இருக்குமோ....ம்ம் ஹு ஹும்ஷ்.....ஒண்ணுமே புரியல.....

சில பேருக்கு வாழ்கையை வாழ தெரிகிறது சில பேருக்கு மத்தவங்களையும்கஷ்டப்படுத்தி அவங்க படர கஷ்டத்த பார்க்கறதுல சந்தோஷத்த அனுபவிக்கிறஒருவித மன நோய் இருக்கு.......இவங்களுக்கு இருக்கிறது மன நோயின்னுபுரியாம கூட வாழ வந்தவுங்கள கஷ்டப்படுத்தி .........முடிவில்லாத தொடர்வேதனையாய் சிலரின் வாழ்க்கை விமோசனம் இன்றி போகிறது.........

வாழ்க்கையை ஒரு முறை தான் வாழ முடியும் என்பது அறிந்தும்அறியாததுபோல மற்றவரின் வாழ்க்கையை சிதைப்பது எந்த விதத்திலும்நியாயம் அல்லவே.......

மனநோய் தான் என்று அறுதி இட்டு மனநோய் நிபுணர் தான் சொல்ல முடியும், அல்லாதவர் எப்படி இவரை ஒரு மன நோயாளி என்று சொல்லிவிட முடியும்.....

"உன் கையால சாப்பாடு போடாதே.........நான் சாப்பிடறத பார்த்துடாத"... .....என்றுசொல்லுவதும் "உன்னை அடிச்சா கத்தற......ஊர்ல இருகறவங்க கிட்ட போய்சொல்லற.... இனிமேல் உன்ன அடிக்க போறது இல்ல ........என் கிட்ட உனக்கு இனிசெக்ஸ் கெடைக்காது ஊர் சுத்தி பார்க்க என்னோட எங்கேயும் வர அனுமதிஇல்ல......இது தான் உனக்கு தண்டனை........என்ன பண்ண போறன்னுபார்க்கலாம்."...... ..

அவன் மனைவியை தேடி வீட்டுக்கு யாரேனும் சொந்தகாரர்கள் வந்தால்அவர்கள் எதிரே ஒரு "மகா அருமையான ஜோடின்னு" சொல்லிவிட்டு போகும்அளவிற்கு நடிப்பு ........." கே.பாலச்சந்தரின் "அவர்கள்" ரஜினிகாந்தின் வேடத்தைபோல .......

பாவம் அந்த பெண் அவளது வாழ்க்கை ஒரு மனோ வியாதிக்காரனிடம் சிக்கி சின்னா பின்னம் ஆகி விட்டதா அல்லது கொடுமைக்காரனிடம் மாட்டிக்கொண்டுவாழ்க்கை அழிக்கப்படுகிறதா.........தெரியல.........கடவுள் கூட சில பலரைகாப்பாற்றுவது இல்லை .........துரதிஷ்டவசமானது.....
, " " ............ .......