ஹாய் ஆல் என் பெயர் அருள் ..
எனக்கு உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ..
பிறந்த இடம்- மதுரை .
நான் படிச்சது எல்லாமே அண்ணா பல்கலைக்கழகம் -சென்னை ..
நான் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன் .
பிடிச்சது நிறைய விஷயமுங்க ... அதுல சில விஷயம் சொல்லுறேனுங்க .... இளையராசாவோட இசை,காதல்,கவிதை,சிரிச்சுகிட்டே இருக்குற வாழ்க்கை.
என்னை பற்றி சொல்லணும் என்றால் நான் நல்ல பேசுவேன் , நல்ல கிண்டல் கேலி பண்ணுவேன் .
எனக்கு நல்ல ஜாலியா பேச சிரிச்சுகிட்டே இருக்கனும் ... நல்ல நண்பர்கள் கூட ஊரு சுத்துறது புடிக்கும் . இரு சக்கர வாகனங்களில் ரொம்ப வேகமா போக பிடிக்கும் .நல்ல தின்னுவேன் ..
பிறரை சந்தோஷ படுத்தி பார்க்குறது எனக்கு ரொம்ப ஆசை .. சத்தமே இல்லாத தனிமை ..ஆரவாரம கேக்கும் இசை,புகைவண்டியில் தூரபயனம் செய்யும் போது கண்ணை மூடியவாறு பாடல் கேப்பது ..
எனக்கு என்னில் பிடிக்காதவை - பழிவாங்கும் குணம்,அளவுக்கு அதிகமான திமிர் மற்றும் ஈகோ .. அதிகமா கோபபடுவேன் , எதுவா இருந்தாலும் அதை நேருக்கு நேர கேட்டு அதை அபொழுதே சரி செய்து விடுவேன் .
பிடித்த உணவுகள்- அசைவ உணவுகள் எல்லாமே , சாம்பார் ரசம் முட்டை போரியல் ரொம்ப விரும்பி சாப்பிடுவேன்.. முயல் கரி ரொம்ப புடிக்கும் .
பிடித்த இசை- இசைஞானி இளையராசா,எ.ஆர் ரஹ்மான் பாடல்கள்,மற்றும் காதல்,சோகம், அதிரடினு கலந்து கட்டி எப்போவுமே இசையில் முழ்கிகிடக்க பிடிக்கும்.
பிடித்த பன்ச் டயலாக் - என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிமிசமும்,ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா (பில்லா -அஜித்)
எனக்கு பிடித்தது உங்கள் அருமையான மன்றம் .. சந்தோசமா இருக்கு ..
மீண்டும் உங்களை இங்கு சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் ..