40
« Last post by SweeTie on March 23, 2024, 07:54:04 PM »
மாறு வேடத்தில் மறைந்திருந்தால்
மாண்பு மிக்க உன்னை தெரியாமல் போய்விடுமா?
கன்னியரை கவர்ந்து
காதல் எனும் மாயவலையில் வீழ்த்தி
கடைசியில் நட்டாற்றில் விடுபவன் அல்லவா நீ
காலமெல்லாம் நீயென்று
காத்திருந்த காயத்ரி
பள்ளியில் படிக்கையிலே பவித்ரா
உன்னையே உலகம் என நினைத்து
உனக்காக தவம்கிடந்த ஊர்வசி
தான் உண்டு தன வேலை உண்டு என்றிருந்த
தமிழரசியை கூட விட்டுவைக்கவில்லையே
இன்னும் எத்தனை பெண்களை நிர்க்கதியாக்கினாயோ?
கன்னியரை கழுவேற்றும் மனிதா !
காதல் எனும் மோக வலையில்
காலத்தை கறையாக்கும் மனிதா !
களைந்துவிடு உன் வேடத்தை
இல்லையெனில், சீக்கிரமே நீ கழுவேறும்
காலத்துக்கு இரையாவாய்?
காலக் கொடுமைகளில் சிக்கி சீரழிந்து
காலாவதியாகும் பெண்ணினத்தை வாழவிடு
நீதிக்கு பயந்து ஒளிந்து வாழும்
உன் சீரற்ற வாழ்க்கைக்கு வை ஒரு முற்றுப்புள்ளி
உத்தமனாய் வாளாவிட்டாலும்
உலகத்தின் ஒரு மனிதனாய் வாழப்பார்
நான்கு சுவற்றுக்குள் எத்தனை காலங்கள் வாழப்போகிறாய்
உன் முகமூடி வாழ்க்கைக்கு முடிவே இல்லையா?
நீ திருந்துவதும் செத்து முடிவதும்
உன் கையில்தான் இருக்கிறது.
சிந்தித்து செயல்படு மனிதா !