Author Topic: நான் என்பது....  (Read 639 times)

Offline Guest

நான் என்பது....
« on: February 07, 2019, 09:27:04 PM »
நான் எனும் திமிர்க்கொள்ளா
நான் ஆகிடும் மனம் வேண்டி
நின்னுள் தஞ்சமடைகிறேன்

மிதக்கும் கனத்தில் எனை மாற்றி
காற்றென சலசலக்க வைத்து 
பின் வெள்ளமாய் ததும்பி
கரைபுரள செய்கிறாய்.

எடையுணரும் நொடிகள் மீண்டும்
உன் அருகாமை வேண்டி நிற்கும் 

மெய்களும் மெய்நிகர் கனவுகளுமென
கூடவே இருந்து பின் கூடுமாகிறாய்.

‘நான்’ எனும் என்னை தொலைக்க
உன்னை தேடிக்கூடியதில்
எனை உணர்கிறேன்.

கனமில்லாது கர்வமில்லாது
வெறுமனே நானாகுகையில்
உறுத்தல்களில்லா நானாகிறேன்..
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 499
  • Total likes: 1534
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: நான் என்பது....
« Reply #1 on: February 07, 2019, 10:43:08 PM »
Niceuuu  :D மிக அருமையான வரிகள்

Offline Guest

Re: நான் என்பது....
« Reply #2 on: February 08, 2019, 11:53:48 AM »
@sam  danks danks
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: நான் என்பது....
« Reply #3 on: February 12, 2019, 09:57:51 PM »
இரண்டு நானாதல் கவிதை படிச்சிட்டேனோ. ம்ம்ம் Nice நண்பா.

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்