காட்டாற்று வெள்ளமாய் வாரி சுருட்டி சென்றது -காதல்
மூச்சு முட்டி போகையில் ஸ்வாசமாய் அவன்...
ஆழிப்பேரலையாய் சுற்றி சுழன்றடித்தது- காதல்
சிக்கி சின்னாபின்னமாகாமல் சுவாசமாய் அவன்
நேற்று வரை நினைத்து இருந்தேன்-காதல்
தீண்டத்தகாதது என... நீ தீண்டிய நொடியில்
உயிர்த்தெழுந்தேன் உயிர்ப்பாய் அவன்
சிறகுடனே பறப்பேனென சஞ்சரித்த எனது-காதல்
வானம் நரகமாய் மாறிப்போனதாய் அவன்
நரகமான நொடி சொர்க்கமாவதும்,
சொர்கமான நொடி நரகமாவதும்
உன் அருகாமையில்...
ஆகாயம் தொடும் உணர்வை தந்த-காதல்
அவனே பாதாளத்திழும் தள்ளிச் சென்றான்...
நரகமாய் நீளும் பாதை
இருந்தும் பயணிக்கிறேன்
காதலை சுவாசமாய் சுவாசித்து...