Author Topic: ஜோக்கரின் குட்டி கதைகள் பகுதி  (Read 15674 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இது தான் கருணை..!!

ஒரு இளைஞன், ஒரு ஜென் குருவிடம் வந்தான்.
அவன் எல்லாவற்றையும் அனுபவித்து சலித்து விட்டதால் ஜென் குருவிடம் வந்து, ஐயா எனக்கு உலகம் சலித்து போய் விட்டது. உங்களிடம் சீடனாய் சேர விரும்புகிறேன் என கேட்டான்.

குரு "எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்கு ஆர்வத்துடன் ஆழமாக எதிலாவது ஈடுபட்டதுண்டா என கேட்டார். இளைஞன் சிந்தித்து விட்டு ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். எனக் கூறினான்.

குரு,,, "நீ காத்திரு" எனக் கூறி விட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஓரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். சதுரங்க அட்டை கொண்டு வரப்பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார்.

குரு, அவரை பார்த்து "துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது, நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன்" என்றவர், அவனிடம் திரும்பி, "இதோ பார், இது வாழ்வா சாவா என்பதற்கான போட்டி. நீ தோற்று விட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டி விடுவேன் என்பதை நினைவில் கொள்" என்றார்.

போட்டி தொடங்கியது. இளைஞனுக்கு முழு உடலும் நடுங்கியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா? துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அது போல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்.

ஆனால், இளைஞன் அதில் முழ்கிய ஓரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது. அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித் தனமாய் இருந்தார். பனிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது. போட்டியில் தோற்று அவருடைய தலை வெட்டப்படுமே என்பதை நினைத்ததுமே அவர் பால் அவனுக்கு அன்பு ஏற்பட்டது.

இந்த கருணையை உணர்ந்த அந்த கணமே அவனுக்கு, தெரியாத கதவுகள் திறந்தன. பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை. ஆனால், இந்த துறவி கொலை செய்யப்பட்டால் அழகான ஓன்று அழிந்து விடும். ஆனால் நான் பயனற்றவன். துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான்.

அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்து விட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர், "இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள்" எனக் கூறினார்.

குரு,,, "மகனே நீ வெற்றி பெற்று விட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய்" எனக் கூறினார்.

இது தான் கருணை.
உன்னை விட மற்றவர் முக்கியமாக படும் போது,
நீ மற்றவருக்காக பிரதி பலனின்றி உன்னை தியாகம் செய்யும் பொழுது
நீ கருணை உடையவனாகிறாய்.
அன்பு எப்போதும் கருணைமயமானது.
அவை உனது இருப்பின் ஓரு இயல்பாகட்டும்..!!

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
எதை இழக்கிறோம்..?? 

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி, அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள்” என்றான்.

உடனே பிச்சைக்காரன் “அப்படியானால் ஒரு ரூபாய் தந்து விட்டு இந்தக் கல்லை வைத்துக்கொள்” என்றான். அதற்கு வைர வியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன்” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன். இல்லை என்றால் வேண்டாம் என்றான்.

பிச்சைக்காரன், "அப்படியானல் பரவாயில்லை. அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான். வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்து விடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.

அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி, அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான். இதை சற்றும் எதிர்பாராத முதல் வைர வியாபாரி அதிர்ச்சியுடன் “அட அடி முட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்து விட்டு, இவ்வளவு சந்தோசமாக செல்றாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய்“ என்றான்.

அதை கேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது. அதனால் அதை இந்த விலைக்கு விற்று விட்டேன். மேலும், எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை. எனவே, நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன், அதன் மதிப்பு தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய். இது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்“ என்றவாறே நடக்கலானான்.

கருத்து : இப்படித் தான் நம்மில் பலர் மிகச் சிறிய சந்தோசங்களுக்காக விலை மதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம்.

அது மட்டுமல்லாமல் கருமித்தனம் எப்போதுமே தோல்வி தரும்.

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
மறப்போம் மன்னிபோம்..!!

ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருவருக்கும் ஒரு விஷயத்தில் வாய்ச் சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவன் நண்பனின் கன்னத்தில் அறைந்து விட்டான்.

ஆனால், அறை வாங்கியவன் அதற்கு கோபப்படாமல், அமைதியாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் “இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்து விட்டான்” என்று எழுதினான்.

ஆனால், அது மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று தூரம் மறுபடியும் இருவரும் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர். நடந்ததை மறந்து அவர்கள் இருவரும் தண்ணீரை பருகினர். அப்போது அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பது போன்று இருந்ததது. பார்த்தால் அவன் புதைக்குழிக்குள் சிக்கிக் கொண்டான்.

அதைக் கண்ட மற்றொருவன் என்ன செய்வதென்று தெரியாமல், கஷ்டப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின் அவனை மேலே தூக்கி விட்டான். மேலே வந்ததும். அவன் ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்தான், பின் அங்கு இருக்கும் ஒரு சிறு கல்லை எடுத்து, அந்த பெரிய கல்லின் மீது “இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்” என்று தட்டி தட்டி எழுதினான்.

இதைப் பார்த்த காப்பாற்றிய நண்பனுக்கு ஒன்றும் புரியாமல், “உன்னை அறைந்த போது மணலில் எழுதினாய், இப்போது உன்னை காப்பாற்றிய போது கல்லில் எழுதுகிறாய். இதற்கு என்ன அர்த்தம்? ஒன்றும் புரியவில்லை” என்று சொல்லி கேட்டான்.

அதற்கு அறை வாங்கிய நண்பன் “யாராவது நம்மை கஷ்டப்படுத்தினால் அவர்களை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு என்னும் காற்று அதை மனதில் இருந்து அழித்து விடும். அதுவே நமக்கு யாராவது நல்லது செய்தால், அதை கல்லில் எழுதிவிடு. அது எப்போதும் மனதில் இருந்து அழியாது” என்றுசொன்னான்.

நீதி: மறப்போம் மன்னிபோம் அன்பை செலுத்துவோம் இந்த புவிக்கும் இதில் வாழும் அனைவருக்கும்..!!

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நெருக்கடி..!!

உலகில் உள்ள பெரிய பெரிய நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டுக்கு அருகில் உள்ள குட்டி குட்டி தீவுகள் மீது போர்தொடுத்து அவற்றை ஆக்கிரமிக்க தொடங்கிய காலகட்டம்!

ஒரு கப்பலில் 500 வீரர்களை அனுப்பி 500 பேர் மக்கள் தொகை கொண்ட ஆதிவாசிகள் வாழ்கின்ற ஒரு தீவை கைப்பற்ற அனுப்பினார்கள். கப்பல் தீவை சென்றடைந்தது, சிலநாட்களில் திரும்பி வந்தது, 500 வீரர்களும் கை கால் உடைந்த நிலையில் தோற்று போய் திரும்பி வந்தார்கள், ஆதிவாசிகள் பின்னி எடுத்து விட்டார்கள்,

அடுத்த நாள் 1000 வீரர்களை கப்பலில் அனுப்பினார்கள். 1000 வீரர்களும் கை கால் இழந்த நிலையில் பயந்து ஓடி வந்தார்கள், மீண்டும் 2000 பேரை அனுப்பினார்கள். அவர்களுக்கும் அதே கதி தான், பின் 5000 பேர்! அவர்களுக்கும் அதே கதி!

இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை வெறும் 500 ஆதிவாசிகள் ஆயுதங்களுடன் சென்ற 5000 பேரையும் தோற்கடித்து கை கால்களை உடைத்து திருப்பி அனுப்பி விட்டார்களே. எப்படி முடிந்தது என்று தீவிரமாக யோசித்தார்கள். பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள்,

இந்த முறை வெறும் 500 பேரை மட்டுமே கப்பலில் அனுப்பினார்கள் இரண்டு நாள் நடந்த தீவிர சண்டையில் ஆதிவாசிகளை தோற்கடித்து விட்டார்கள் !

5000 பேர் சென்று தோற்ற இடத்தில் வெறும் 500 பேர் சென்று எப்படி ஜெயித்தார்கள்?!?!

இந்த முறை ஒரே ஒரு மாற்றத்தை தான் செய்திருந்தார்கள், 500 பேரை தீவில் இறக்கியதும் கப்பல் திரும்பி விட்டது. இனிமேல் இந்த தீவில் இருந்து திரும்பி செல்ல முடியாது, உயிருடன் வாழ வேண்டும் என்றால் தீவை கைப்பற்றியே ஆக வேண்டும்! இந்த நெருக்கடி தான் அவர்களை ஜெயிக்க வைத்தது!

இலட்சியத்தில் உறுதியாக இருப்பதை விட அதை அடைவதற்கான முயற்சியில் மிகவும் உறுதியாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

படிக்கட்டில் இறங்கி நீச்சல் கற்றுக் கொள்பவனை விட மேலிருந்து குதிப்பவனே எளிதில் நீந்துகிறான்..!!



"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
ஜென் துளிகள்
ஆசையின் வலி....

ஒரு காலத்தில், கல் உடைப்பவர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அன்றாடம், அவர் மலைகளின் உச்சிக்குக் கல் உடைப்பதற்காகச் செல்வார். அவர் கல் உடைக்கும் பணியைப் பாடியபடி உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்துவந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் அவர் தன்னிடம் இருப்பதைவிட அதிகமாக எதற்கும் ஆசைப்பட்டதில்லை. அதனால், அவர் உலகத்தைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை. ஒருநாள், ஒரு செல்வந்தரின் மாளிகைக்குப் பணியாற்றுவதற்காக அழைக்கப்பட்டார்.

அந்த மாளிகையின் கம்பீரத்தைப் பார்த்த அவர், முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் ஆசையின் வலியை உணர்ந்தார். “நான் மட்டும் செல்வந்தனாக இருந்திருந்தால்! இப்போது கஷ்டப்படுவதுபோல், வியர்வையில் கடினமாக உழைக்க வேண்டியிருந் திருக்காது” என்று பெருமூச்சுவிட்டார். “உன் விருப்பம் நிறைவேறட்டும். இனிமேல், நீ ஆசைப்படுவதெல்லாம் உனக்குக் கிடைக்கும்” என்ற ஒரு குரலைக் கேட்டதும் கல் உடைப்பவர் ஆச்சரியப்பட்டுப்போனார். பணியை முடித்து, மாலை அவர் தன் குடிசைக்குத் திரும்பினார். அவருடைய குடிசை இருந்த இடத்தில் அவர் ஆசைப்பட்ட கம்பீரமான மாளிகை வீற்றிருந்த். அவர் வாயடைத்துப்போனார். கல் உடைக்கும் பணியை நிறுத்திவிட்டு, அவர் செல்வச் செழிப்பான வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கினார்.

வெப்பம் அதிகமாக இருந்த ஒரு நாளில், அவர் தன் மாளிகையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். அப்போது ஓர் அரசர், தன் படை பரிவாரங்களுடன் பல்லக்கில் சென்றுகொண்டிருந்தார். உடனே, “நான் மட்டும் அரசராக இருந்தால், எப்படிக் குளுமை நிறைந்த அரச பல்லக்கில் அமர்ந்தபடி செல்வேன்” என்று அவர் நினைத்தார். அவரது விருப்பம் அடுத்த நொடியில் நிறைவேறியது. அவர் அரச பல்லக்கில் அரசராகச் சென்றுகொண்டிருந்தார்.
ஆனால், அவர் நினைத்த மாதிரி, அரச பல்லக்கு முற்றிலும் குளுமையுடன் இல்லை. அவர் நினைத்ததைவிட அதிக வெப்பம் நிறைந்ததாக அது இருந்தது. பல்லக்கின் சாளரத்தின் வழியாக வெளியே பார்த்த அவர், சூரியனின் ஆற்றலைப் பார்த்து ஆச்சரியத்துக்குள்ளானார். சூரியனின் வெப்பம் எப்படி இவ்வளவு வலிமையான பல்லக்கிலும் ஊடுருவுகிறது என்று நினைத்தார். “நான் மட்டும் சூரியனாக இருந்திருந்தால்” என்று நினைத்தார். மீண்டும் அவர் ஆசை நிறைவேறியது. அவர் சூரியனாக மாறி, ஒளிக் கதிர்களையும், வெப்பக் கதிர்களையும் பிரபஞ்சத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.

சிலகாலம் எல்லாமே நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. ஒரு மழைநாளில், அவர் அடர்த்தியான மேகங்களுக்குள்ளிருந்து வெளியே வர முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை. அதனால் அவர் தன்னை மேகமாக மாற்றிக்கொண்டு, சூரியனை மறைக்கும் தன் ஆற்றலைக் கொண்டாடத் தொடங்கினார். எல்லாம் அவர் தன்னை மழையாக மாற்றிக்கொள்ளும்வரைதான். ஆனால், மழையாகப் பெருக்கெடுத்து ஓடும்போது ஒரு பெரும்பாறை அவர் ஓட்டத்தைத் தடுத்தது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர் பாறையைச் சுற்றிக்கொண்டு தன் ஓட்டத்தைத் தொடர வேண்டியிருந்தது.

“என்ன? ஒரு பாறை என்னைவிட ஆற்றல்வாய்ந்ததாக இருப்பதா? அப்படியென்றால், நான் பாறையாக விரும்புகிறேன்” என்று நினைத்தார். அதனால், இப்போது அவர் மலையில் ஒரு பெரும்பாறையாக நின்றுகொண்டிருந்தார். அவருக்குத் தன் தோற்றத்தை ரசிப்பதற்குக்கூட நேரம் அளிக்கப்படவில்லை. அதற்குள் ஒரு வித்தியாசமான சத்தத்தைத் தன் காலடியில் கேட்டார்.

கீழே பார்த்தால், ஒரு சிறிய மனிதன் அங்கே அமர்ந்து, அவரின் பாதங்களிலிருந்து கற்களை உடைத்துகொண்டிருந்தான். “என்ன? இவ்வளவு பலவீனமான ஒரு மனிதன் என்னைப் போன்ற ஒரு மாபெரும் பாறையைவிட ஆற்றல்நிறைந்தவனா? நான் மனிதனாக வேண்டும்!” என்று நினைத்தார். மீண்டும் அவர் ஒரு கல் உடைப்பவராக மலை ஏறிக்கொண்டிருந்தார். வியர்வையுடன், கடின உழைப்புடன் தன் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால், மனத்துக்குள் முன்பைப் போலவே பாடல் நிறைந்திருந்தது. ஏனென்றால், தான் யாராக இருக்கிறோம் என்பதைத் தெரிந்திருந்தார்,

தன்னிடம் இருப்பதை வைத்து வாழ்வதற்கான மனநிறைவு அவரிடம் இருந்தது..

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்

"" ஏளனங்களை கண்டு கலங்கி நின்றால்,
சூழல்களின் வெற்றியில் நாம் தோல்வியடைந்ததாக பொருளாகும்..!!""


 "ஒருவர் ஒரு ஊருக்கு வந்து தங்கியிருந்தார். மக்கள் கூட்டங்கூட்டமாக வந்திருந்து, அவரை வணங்கி வழிபட்டு அவரின் வழிகாட்டுதலால், வார்த்தைகளால் நிறைவடைந்தனர்.

ஆனால் ஒரு மனிதனுக்கு மட்டும் அந்தத் துறவியின் புகழ் வெறுப்பைத்தந்தது.

அவரை மட்டம் தட்டி ஏளனப்படுத்த வேண்டும் என எண்ணியபடி தன்னுடைய உள்ளங்கையில் ஒரு பட்டாம்பூச்சியை வைத்து ஒளித்தபடி, தன் கைகளை முதுகுக்குப்பின்புறம் மறைத்துக்கொண்டு துறவியின் முன் சென்று நின்றான்.

“ஐயா, உம்மை ஞானி என்கிறார்கள், என் கையில் உள்ள பூச்சி உயிருடன் இருக்கிறதா அல்லது செத்துவிட்டதா என்பதை கண்டறிந்து சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று அவரிடம் சவால் விட்டான்.

பூச்சி செத்துவிட்டதாக சொன்னால், அதை உயிருடன் காண்பிக்கவும், பூச்சி உயிருடன் உள்ளதாக சொன்னால், அதை உள்ளங்கையிலேயே நசுக்கி சாகடிக்கவும் அந்த மனிதன் எண்ணி உள்ளதை துறவி புரிந்து கொண்டார்.

“அந்த பூச்சி உயிருடன் இருப்பதும், இறந்து போவதும் உன் கையில் தான் இருக்கிறது” என்று சாதுர்யமாக மறுமொழி கூறினார்.

 இந்த பதிலை எதிர்பாராத அந்த மனிதன் தடுமாறிப்போனான்.

அவனால் அடுத்து ஏதும் பேச இயலாத நிலையேற்பட்டதால் வெட்கித் தலைகுனிந்து தோல்வியைத் தழுவினான்.

அந்த துறவிபோல, நாமும் பல நேரங்களில் சூழ்நிலைக் கைதிகளாக தடுமாறும் நிலையேற்பட்டாலும், அவற்றைச் சாதுரியமாக சமாளித்து சரிவுகளை சரிசெய்து கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் நம்முடைய வாழ்க்கைக்கு நாம் சொந்தகாரர்களாக இருக்க முடியும்.

மாறாக ஏளனங்களை கண்டு கலங்கி நின்றால் சூழல்களின் வெற்றியில் நாம் தோல்வியடைந்ததாக பொருளாகும்

வாழ்வினிது..
சிந்தித்து செயலாற்றுங்கள்..!!

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.

அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.

ஆகவே...

சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.

ஆனால்...

அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...

ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.

முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.

ஆனால்...

வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.

அதில் அவனும் காயம் அடைந்தான்.

‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?

என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்...

"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..

அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’

என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.

உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.

பூனை இருப்பதை அறிந்த எலி..

தயங்கித் தயங்கி வெளியே வந்தது.

கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.

எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..

மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.

ஆனால்....

இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள்....

வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.

சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

*சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.*

இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,...

"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’

எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.

*நான் பொறுமையாக காத்திருந்தேன்.*

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.

ஆகவே..,

அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.

ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

*"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’* என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,...

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.

என் நகங்கள் கூட கூர்மையானவை.

ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

*’’உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது..."*

எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.

ஆகவே...

ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.

ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

"ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,

அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..

உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..

ஆனால்...

தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’

என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.

மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் பூனையிடம் கிடையாது.

ஆனால்...

அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.

காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "