FTC Forum

Entertainment => விளையாட்டு - Games => Topic started by: சிநேகிதன் on January 28, 2013, 03:51:51 PM

Title: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on January 28, 2013, 03:51:51 PM
இப்பகுதியில் இடம் பெரும் பதிவுகள் யாவும் தமிழ் எழுத்துக்களிலேயே இருத்தல் வேண்டும்.

தமிழ் பாரம்பரியம் ,கலாச்சாரம், வரலாறு இவை யாவும் தொழில்நுட்ப உலகில் அழிந்து வருகிறது . தமிழை  பற்றியும் , தமிழர் பற்றியும் தகவல்களை நினைவூட்டும் வகையில் இப்பகுதியில் கேள்விகள் அமைய வேண்டும்.

இந்த பகுதியில் தமிழர் சார்ந்த ,தமிழ் வரலாறு சார்ந்த ,தமிழ் இலக்கணம் சார்ந்த   கேள்விகள் மட்டுமே இருத்தல் வேண்டும்.

ஒருவர் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டு  முடித்தபின் மற்றவர் கேள்விகளை தொடருவது இப்பகுதி அழகுபெற உதவும்.



குறிப்பு : இப்பகுதியை நேர்த்தியாகவும் அழகுறவும் வைக்க உதவுவது தமிழர்கள் நம் கடமை.
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on January 28, 2013, 04:10:01 PM
முதலில் இப்பகுதியின் முழு அம்சமும் அனைவரும் உணர நான் முதலாவதாக கேள்விகளை தொடர்ச்சியாக கேட்கிறேன்.கேள்விகளை   சிவப்பு வர்ண எழுத்துக்களில் அமைய செய்வது நலம்.

ஐம்பெரும் காப்பியங்கள் எனப்படுவன யாவை?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Varun on January 28, 2013, 10:03:49 PM
தமிழில் உள்ள காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள் என்றும், ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் கூறுவர். ஐம்பெரும் காப்பியங்கள் என்றால், சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி போன்றவை அடங்கும். ஐஞ்சிறு காப்பியங்கள்,என்றால், சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம், உதயணகுமாரா காவியம் ஆகும்.
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on January 28, 2013, 11:44:58 PM
பதினென் கீழ்கணக்கு நூல்கள் என்பன யாவை ? ( நூல் பெயர்களை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது )
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Bommi on January 29, 2013, 01:00:54 AM
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ,பதினென் கீழ்கணக்கு நீதி நூல்கள்,
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on January 29, 2013, 01:22:08 AM
பொம்மி ,பதினென் கீழ்கணக்கு நூல்கள்  என்ற தொகுப்பில் அடங்கியுள்ள நூல்களின் பெயரை குறிப்பிட வேண்டும்.
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Bommi on January 29, 2013, 01:49:34 AM
இன்னா நற்பது, இனியவை நற்பது, கண்ணார்பது, கலவளி ந்ற்பது, அரிமதி தென்ன்னகம்,
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on January 29, 2013, 04:15:19 AM
தாங்கள் சொன்ன பதிலில் 5 நூல்களின் பெயர்களே உள்ளன. 18 நூல்கள் இருக்க வேண்டும். முயன்று பாருங்கள் பொம்மி.
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on January 29, 2013, 01:12:56 PM
பதினென்கீழ்கணக்கு நூல்கள்

1.       திருக்குறள்
2.       நாலடியார்
3.       நான்மணிக்கடிகை
4.       இனியவை நாற்பது
5.       இன்னா நாற்பது
6.       கார் நாற்பது
7.       களவழி நாற்பது
8.       திணைமொழி ஐம்பது
9.       திணை மாலை நூற்றைம்பது
10.    ஐந்திணை ஐம்பது
11.    ஐந்திணை எழுபது
12.    திரிகடுகம்
13.    ஆசாரக்கோவை
14.    பழமொழி நானூறு
15.    சிறுபஞ்ச மூலம்
16.    முதுமொழி காஞ்சி
17.    ஏலாதி
18.    இன்னிலை
கைந்நிலை
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on January 29, 2013, 01:16:27 PM
எட்டுத்தொகை நூல்களின்  பெயர்களை குறிப்பிடுக . ( 8 நூல்கள் மொத்தம் )
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Global Angel on January 29, 2013, 01:34:08 PM
       
1.நற்றிணை
        2.குறுந்தொகை
        3.ஐங்குறுநூறு
        4.கலித்தொகை
        5.அகநானூறு
        6.பதிற்றுப்பத்து
        7.புறநானூறு
        8.பரிபாடல்
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on January 29, 2013, 02:07:40 PM
மயில்  குளிரில் நடுங்குவதாக கருதி அதற்கு  போர்வை அணிவித்த தமிழ் மன்னன் யார் ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Bommi on January 29, 2013, 02:12:41 PM
பேகன்
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on January 29, 2013, 04:01:34 PM
திருவள்ளுவர் ஆண்டு என்பது என்ன ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Bommi on January 29, 2013, 05:26:08 PM
திருக்குறள் இயற்றப்பட்டு ஏறக்குறைய இரண்டாயிரம் (2000) ஆண்டுகள் என்றும் இது கிறிஸ்தவ சகாப்தத்தின் முன் பகுதியை சேர்ந்தது எனவும் கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகளாரின் ஆராய்ச்சியின் விளைவாய் தமிழர் ஆண்டு நாட்காட்டி முறைக்கு திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டாகிய கிறிஸ்துவிற்கு பின் தொடங்கும் ஆண்டில் இருந்து முப்பத்தொன்று (31) ஆண்டுகள் முன்னாக சேர்க்க வேண்டும்
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on January 30, 2013, 03:52:27 PM
சக வருடம்  என்பது என்ன ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Bommi on January 31, 2013, 02:26:48 AM
சக வருடம் மற்றும் சாலிவாகன வருடம் என்று இந்திய அரசாங்கத்தால் கடைப் பிடிக்கப் படுகிற வருடமாகும்.சாலிவாகனன் ஈஸ்வரனின் அருளைப் பெற்ற நாகராஜன் என்னும் மன்னனின் புத்திரன் ஆவான். இவன் விக்கரமார்க்கன் என்னும் மன்னனுடன் போர் செய்து வென்ற நாள் முதல் இது சக வருடம் என்று அவன் பெயரால் வாழங்கப் படுகிறது. இந்த சக வருடம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22–ஆம் தேதி ஆரம்பமாகும். லீப் வருடத்தில் 21-ஆம் தேதி ஆரம்பமாகும்
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on January 31, 2013, 02:52:12 AM
உயர்ந்த நட்பின் இலக்கணமாக வடக்கிருந்து உயிர் விட்ட தமிழ் புலவர்  யார் ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: gab on January 31, 2013, 03:09:40 AM
பிசிராந்தையார்
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on February 04, 2013, 03:50:30 PM
பத்துப்பாட்டு தொகுப்பில் அடங்கியுள்ள (10) நூல்கள்  யாவை ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Bommi on February 04, 2013, 09:24:36 PM
திருமுருகாற்றுப்படை
மலைப்படுக்கடாம்
முல்லைப்பாட்டு
நெடுநல்வாடை
சிறுபாணாற்றுப்படை
பட்டினப்பாலை
குறிஞ்சிப்பாட்டு
பொருநாறாற்றுப்படை
மதுரைக்காஞ்சி
நாளங்காடி அல்லங்காடி
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: சிநேகிதன் on February 23, 2013, 04:57:51 PM
இதுவரை எத்தனை உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்று உள்ளன ? அவை நடைபெற்ற இடங்கள்   யாவை ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: vimal on February 23, 2013, 05:30:57 PM
1 கோலாலம்பூர்( மலேசியா) - 1966.

2 சென்னை - 1968.

3 பாரிஸ்(பிரான்ஸ்) - 1970.

4 யாழ்பாணம்(இலங்கை) - 1975.

5 மதுரை - 1981.

6 கோலாலம்பூர்( மலேசியா) - 1987.

7 மொரிசியஸ் - 1989.

8 தஞ்சை - 1995

9 கோயம்புத்தூர் - 2010
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Bommi on June 15, 2013, 02:47:39 PM
இந்து புராணங்களின் படி என்றும் 16 வயதுடையவர்களாக திகழ்பவர் யார் ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Gayathri on June 15, 2013, 05:49:16 PM
பதுமைகள்



கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியவர் ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Varun on June 15, 2013, 09:21:24 PM
ஜெயங்கொண்டார்
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Gayathri on June 15, 2013, 09:45:51 PM
தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Varun on June 15, 2013, 09:58:34 PM
மோகனாங்கி.
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Gayathri on June 15, 2013, 10:08:43 PM
தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Varun on June 15, 2013, 10:14:52 PM
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.



உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Gayathri on June 15, 2013, 10:24:11 PM
தாலின்

இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது



திருப்பாவை பாடல்களை பாடியவர் ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Varun on June 15, 2013, 10:25:15 PM
ஆண்டாள்
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Bommi on June 16, 2013, 01:21:11 AM
வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில்  பகலும், இரவும் சரியாக
12  மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Varun on June 24, 2013, 12:01:36 PM
மார்ச்சு 21

மனித உடலில் வியர்க்காத பகுதி எது
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Bommi on July 02, 2013, 04:36:45 PM
உதடு


கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Gayathri on July 07, 2013, 10:32:38 AM
படம் - மூன்றாம் பிறை
பாடல் --கண்ணே கலைமானே



விக்கிரமாதித்தனின் சபையில் உள்ள பதுமைகள் எதனை அதில் முதல் பதுமையின் பெயர் என்ன?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Bommi on August 01, 2013, 04:31:08 PM
ரம்பை, ஊர்வசி
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: sameera on August 02, 2013, 08:01:42 PM
நாலடியாரின் ஆசிரியர் பெயர்?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Maran on April 16, 2015, 07:53:58 PM


இந்நூல், ஆசிரியர் ஒருவரால் இயற்றப்பெற்றது இல்லை, பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாய் உள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.


நான்கு அடி வெண்பாக்களால் இந்நூல் செய்யுட்கள் அமைந்திருத்தலின் இதனை 'நாலடி'என்றும், 'ஆர்'என்னும் சிறப்பு விகுதியை இறுதியில் இணைத்து, 'நாலடியார்' என்றும் வழங்கி வருகின்றனர்.

திருக்குறளுக்கு அடுத்த நிலையில்வைத்துப் போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த அறநூல் நாலடியார்.



இது பற்றிய கன்னபரம்பரைவரலாறு ஒன்றும் உள்ளது:  ஒரு சமயம் எண்ணாயிரவர்சமண முனிவர், பஞ்சத்தால் தம் நாடு விட்டு வந்து, பாண்டியன் ஆதரவில் வாழ்ந்து வந்தனராம். சில காலத்தில்தம் நாடு முன் போலச் செழிப்புறவே அவர்கள் மீண்டுசெல்ல விரும்பிய போது, பாண்டியன் அவர்களைப்பிரிய மனம் இன்றி, விடைகொடாது இருந்தனனாம். இதனால், எண்ணாயிரவரும் ஒவ்வொரு பாடல் எழுதித்தத்தம் இருக்கையின் கீழ் வைத்துவிட்டு, பாண்டியனிடம் அறிவியாமலே, தம் நாட்டுக்குத் திரும்பிவிட்டனராம். இச் செய்தி தெரிந்த மன்னன், புலவர்களைப் பிரிந்த மனத்துயராலும், தன் வாக்கை அவர்கள் மதியாமைபற்றி எழுந்த வெகுளியாலும், அவர்கள் எழுதிய எண்ணாயிரம் பாடல்களையும் வைகைப் பெருக்கில் எறியக் கட்டளைபிறப்பித்தானாம். அரசன் ஆணைப்படி வைகையில் எறிந்தஏடுகளில் நானூறு நீரை எதிர்த்து வரவே, பாண்டிய மன்னன் அவற்றைச் சிறந்தன என்று கொண்டு தொகுப்பித்துவைத்தானாம். இந் நிகழ்ச்சியைச் சில தனிப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

எண் பெரும் குன்றத்து எணாஅயிரம்இருடி
பண் பொருந்தப் பாடிய பா நானூறும்

என்றும் ஒரு தனிப்பாடலில் காண்கிறது.

இவ்வரலாறு எவ்வாறாயினும், நாலடியார்புலவர் பலர் பாடிய செய்யுட்களின் தொகுதி என்றே ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர்.


Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: SanSa on January 09, 2017, 03:41:16 PM
திருநாவுக்கரசரின் இயற்பெயர்  என்ன ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: ரித்திகா on January 09, 2017, 03:44:21 PM
திருநாவுக்கரசரின் இயற்பெயர்  என்ன ?

= திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார் ....
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: SanSa on January 09, 2017, 04:04:52 PM
திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் காணப்படுகிறது ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: ரித்திகா on January 11, 2017, 02:40:44 PM
திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் காணப்படுகிறது ?

விடை : 64.....
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: SanSa on January 11, 2017, 03:00:57 PM
நிலையமையைப் பாடும் நூல் ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: SanSa on January 27, 2017, 01:22:08 PM
முதுமொழிக்காஞ்சி                                                                   


வடமொழியில் முகுந்தமலை என்ற நூலை இயற்றி யவர் யார்?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: JeSiNa on April 14, 2017, 01:18:13 PM
வடமொழியில் முகுந்தமலை என்ற நூலை இயற்றி யவர் யார்?

                                       வட மொழியில் முகுந்த மாலை என்ற நூலை இயற்றியவர்
(A) குலசேகரயாழ்வார்
(B) திருப்பாணாழ்வார்
(C) திருமங்கையாழ்வார்
(D) திருமழிசையாழ்வார்
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: EmiNeM on April 24, 2017, 02:23:14 PM
(A) குலசேகரயாழ்வார்
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: JeGaTisH on August 05, 2017, 02:25:33 PM
இராவணனின் தங்கை யார்?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: ரித்திகா on August 05, 2017, 02:44:57 PM
சூர்ப்பனகை
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: JeGaTisH on August 05, 2017, 02:46:42 PM
சரியான விடை... ;D ;D ;D ;D

அர்ஜுனனின் 2வது மனைவியின் பெயர் என்ன?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: ரித்திகா on August 05, 2017, 02:50:28 PM
சுபத்திரை  :(sediya nyabagam illa
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: JeGaTisH on August 05, 2017, 02:58:50 PM
;D ;D ;D சரியான விடை...

அர்ஜுனனுக்கு சூரிய பகவான் வழகிய வில்லின் பெயர் என்ன?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: MoaNa on August 08, 2017, 06:51:28 AM
 காண்டீபம்  (Gandiva) ennaku sariya therila but just guessed
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: JeGaTisH on August 19, 2017, 12:56:50 PM
correct(சரி )
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: JeSiNa on August 29, 2017, 09:53:15 PM
கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: ரித்திகா on September 02, 2017, 06:17:01 PM
இந்தோனேஷியா
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: JeGaTisH on September 16, 2017, 04:48:38 PM
கர்ணனின் அண்ணன் யார் ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: CheetaH AdhitYa on June 22, 2020, 07:13:14 PM
கர்ணனின் அண்ணன் யார் ?

விடை:கர்ணனன்அண்ணா யாரும் இல்லை

விளக்கம்: குந்தி தேவிக்கு திருமணத்திற்கு முன்பே தனியே பிறந்த முதல் பிள்ளை கர்ணன் .
அவருக்கு பிறகே குந்தி தேவி பாண்டு வை மணம்முடித்தார் பிறகு பஞ்ச பாண்டவர்கள்
(தர்மன்,பீமன்,அர்ஜுனன்,நகுலன்,சகதேவன்)அக அனைவரும் கர்ணன்க்கு இளைய
சகோதரர்கள் மட்டுமே.
 
கிண்டமா முனிவர் பாண்டுவிர்கு அளித்த சபாம் என்ன?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: ரித்திகா on June 25, 2020, 06:47:11 AM
கிண்டமா முனிவர் பாண்டுவிர்கு அளித்த சபாம் என்ன?

எப்பெண்ணையாவது புணர்ந்தால், அப்போதே, அவ்விடத்திலே வீழ்ந்து மடிவாய் எனச் சாபமிட்டார். 

அடுத்து:
கர்ணனும் துரியோதனனும் முதல் முறையாக நண்பர்களானது எப்போது?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Ninja on June 25, 2020, 07:33:07 AM
அஸ்தினாபுரத்தில் துரோணர் குரு இளவரசர்களின் திறன்களை காண்பிக்கும் ஒரு போட்டியை நடத்தினார். இந்த போட்டியில் குறிப்பாக வில்லாளி என்ற பரிசை அருச்சுனன் வென்றார். கர்ணன் அந்தப் போட்டிக்கு வந்து சேர்ந்து வெல்லத்தக்க அர்ஜூனின் வித்தைகள் முடிந்த பின்னர், அவரிடம் போட்டிக்காக சவால்விடுத்தார். க்ரிபாச்சார்யா கர்ணனின் போட்டியை மறுத்து, அவரிடம் முதலில் அவரது குலம் மற்றும் அரசைப் பற்றி கேட்கின்றார் - போட்டி விதிமுறைகளின் படி, அர்ஜூனன் குரு இல்லத்தின் இளவரசனாக இருப்பதால் ஒரு இளவரசம் மட்டுமே சவால் விட முடியும். கௌரவர்களில் மூத்தவரான துரியோதனன், பாண்டவர்கள் போர்க்கலையில் அவரையும் அவரது சகோதரர்களையும் விட சிறந்தவர்கள் என்பதை அறிவார். கர்ணனை பாண்டவர்களுக்கு எதிராக வலிமையானவராகப் பார்த்தார். உடனே அவரை அங்கதேசத்தின் அரசனாக்கி, அரசன் அர்ஜூனனுடன் போட்டியிட தகுதியானவனாக்கினார். அப்போது கர்ணன் அவரிடம் இதற்கு ஈடாக நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டதற்கு துரியோதனன் தனக்கு அவரது நட்பைப் வேண்டுவதாகக் கூறுகின்றார்.

இந்த நிகழ்ச்சியானது மகாபாரதத்தில் முக்கியமான உறவை ஏற்படுத்தியது. அதுவே துரியோதனன் மற்றும் கர்ணன் இடையே வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது

அடுத்து,
இளங்கோவடிகளுக்கு கண்ணகியின் கதையை கூறியவர் யார்
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Evil on June 25, 2020, 08:05:04 AM
இளங்கோவடிகளுக்கு கண்ணகியின் கதையை கூறியவர் யார்?
 
சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் .

 இளங்கோவடிகள் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். இவர்  அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் .

அடுத்து.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர் யார் ?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: ரித்திகா on June 30, 2020, 06:44:17 AM
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர் யார் ?

விடை: பாரதியார்

விளக்கம்:

ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம், கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.



இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. சோழ நாட்டில் பிறந்து, பாண்டிய  நாட்டில் வளர்ந்து சேர நாட்டில் முடியும் சிறந்த காப்பியம் சிலப்பதிகாரம். இந்நூல் இன்பத்தை நுகர்ந்தவர்களில் மகாகவி பாரதி தலை சிறந்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியார்  நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்று சிலப்பதிகாரத்தின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார்.

அடுத்து : தஞ்சைப் பெருவுடையார் கோவில் எப்பொழுது கட்டி முடிக்கப்பட்டது?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: CheetaH AdhitYa on July 02, 2020, 12:44:21 AM
தஞ்சைப் பெருவுடையார் கோவில் எப்பொழுது கட்டி முடிக்கப்பட்டது?

தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது
தஞ்சைப் பெரிய கோயில் (பிரகதீஸ்வரர் கோவில்)
 கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.


புதியது-கம்பராமாயணம் எத்தனை காண்டங்களையும், படலங்களையும்,பாடல்களையும் கொண்டவை?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Tejasvi on June 29, 2022, 12:15:48 PM


கம்பராமாயணம் எத்தனை காண்டங்களையும், படலங்களையும்,பாடல்களையும் கொண்டவை?

கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும்,

    பாலகாண்டம்
    அயோத்தியா காண்டம்
    ஆரண்ய காண்டம்
    கிட்கிந்தா காண்டம்
    சுந்தர காண்டம்
    யுத்த காண்டம்

இந்த ஆறு காண்டங்களில் 123 படலங்களும், 10,500 பாடல்களும் உள்ளன.

Next : முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்?


Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Madhurangi on August 01, 2023, 02:22:42 PM
Ans - சாத்தனார்

Next Question- கடையெழு வள்ளல்கள் பெயர்கள்?
Title: Re: தமிழ் அறிவு விளையாட்டு
Post by: Vethanisha on March 18, 2024, 12:31:51 PM
பேகன்,
பாரி,
காரி,
ஓரி,
அதியமான்,
ஆய்,
நல்லி

ஆகியோர் கடையேழு வள்ளல்கள் எனப் போற்றப்படுகின்றனர். இம்மன்னர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதி களை அந்த காலத்தில் ஆண்டவர்கள்

கேள்வி : கடையெழு வள்ளல்கள் பற்றி கூறும் நூல் எது?