உனக்கொன்று தெரியுமா..?
உனக்காகவென்று
ஏதாவது எழுத
ஆரம்பித்தால் மட்டுமே
கவிதை வரைகிறது பேனா...
சில
தெரிந்த பொய்களிலும்,
விரும்பி
ஏமாறுவதிலும்தானே இருக்கிறது
வாழ்கையின் சுவாரசியமே .
உன் குறும்பு புன்னகையை
உதிர்க்கும் உதடுகள்
என் கண்களை மட்டுமா
சிறை செய்தது?
என்னையும் சேர்த்தல்லவா
கட்டி போட்டிருக்கிறது...
எத்தனை முறை
இதே உதடுகளை
என் கண்கள் பிரதி எடுத்திருக்கும்?
என்றென நீ அறிவாயா...
எடுத்த பிரதிகளை
எங்கே பத்திரப்படுத்தியிருக்கிறாய்? -
என்றென்னை கேட்டுவிடாதே.
உன்னை எதுவும் கேட்காமலே
உனக்காக கவிதை எழுதுகிறேன்
எனை எதுவும் கேட்காமலே
நீ என்னை காதலால் வீழ்த்துவாயென்று
உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்!
உனக்காக எழுதிய
கவிதை எனத்தெரிந்தும்
"எனக்கா?' என
கேட்டு புன்னைக்கும்
உன் சிரிப்பிற்கு முன்
என் கோபம் செயலிழந்துபோகிட
ஏங்கியே தவிக்கிறேன்...
எத்தனையோ பெண்கள்
உன்னை சுற்றி சுற்றி வந்தாலும்,
அன்பினால் மயக்கினாலும்...
மழை ஓய்ந்த பின்
மரக்கிளையினை உலுப்பி
எனைத் தெப்பமாய் நனைப்பதுபோல்
உன் அன்பினால்
என்னை சிதைக்கிறாயே
என் அன்பு காதலா FTC...!
இப்படி திகட்ட திகட்ட
காதலை அள்ளிதராமல்
தவணை முறையில் தந்திருக்க கூடாதா?
Copyright By,
இப்படிக்கு ftc யின் காதலி BreeZe