Author Topic: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2020)  (Read 1594 times)

Offline Forum

காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்


எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .

உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு  மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துக்களை கவிதைகளாய் வெளிபடுத்த  உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம்.  உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 10.02.2020  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....

என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று  உங்கள் இதயங்களை வந்தடையும் ....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
காதலாய்,
உன்னை சுமந்து
கிறுக்குகிறேன்
காதல் கவிதை ஒன்று..!

தனிமை எனும்
இருள் சூளும் போது,
உன்
நினைவுகள் எனும்
அகல் விளக்கு
ஏற்றபடுகின்றன..!

பிரிவு எனும்
வெயில் தாக்கும் போது,
உன்
காதல் எனும்
தென்றல் வீசுகின்றன..!

மேலே சொல்ல வரிகள்
இருக்கிறது..!
வாசிக்க நீயில்லையே..!
என் காதலனே !
கண்ணீரால் கனக்கிறது
கன நெஞ்சமும்..
காதலிக்க நீயில்லாமல்..!

கவிதையாக
கிறுக்குகிறேன்..
சொப்பனத்தில் கண்ட
நினைவுகளை..!
காலமென்னும்
கதவுகளை உடைத்து
கண்முன் வருவாயே
என் நாயகனே ..!

நினைவுகளைச் சுமந்த
நிலவாய் உலவருகிறேன் …!
மொத்தமாய்  கண்ணீரில்
தேய்வதற்குள் கண்ணன்
உன்  முகம் காண 
விரும்புகிறேன் ..!

உனக்காக
காத்திருப்பேன்..
உயிரெனும் எல்லையிலே..!
வரும் வழி வந்தால்
மென்விழி இமைத்து விடு..!
சுவாசித்து மீண்டும்
உயிர் வாழ்வேன்,
நீ உரசிய
செம்பூங்காற்றை...!

~ !! ரித்திகா !! ~
« Last Edit: February 04, 2020, 08:41:08 AM by ரித்திகா »


Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 343
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
நேசம் எனும் மையினால்,  காதல் எனும் உன் ஓவியம் வரைந்தேன்,
என் இதயம் எனும் காகிதத்தில். !!

என்னவளே ! என்னில் உன் அறிமுகத்தை தந்தது ஒருநாள்.

முதல் சந்திப்புதனை அன்புடன் கலந்த நினைவுகளாய்
நிலைப்படுத்தியது ஒருநாள்.

நிலைப்பெற்ற நினைவுகளை, நேசமாய் மாற்றியது ஒருநாள்.

நேசம் கொண்ட நினைவுகள் தனை,
நேசகியிடம் இணைத்தது ஒருநாள். 
அது என் வாழ்வின் திருநாள்..

இப்படி வாழ்வின் வளமான நிகழ்வுதனை
ஒவ்வொரு நாட்கள் அலங்கரித்தன.

ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிகழ்வுகளை நினைவு படுத்த,

எந்தன் அணைத்து நினைவுகளையும்
நினைவு படுத்தியது ஒரு தினம்...

அது அணைத்து அன்பு கொண்ட இதயங்களையும்
மகிழ்ச்சி பெறச்செய்த
            💞 காதலர் தினம் 💞

 நீரின்றி அமையாது உலகு !
நினைவின்றி இயங்காது மனது !!

நிழல் போன்றவை நினைவுகள்,
உன் அனுமதி இல்லை என்ற பொழுதிலும்
உன்னையே பின் தொடரும்.
.
. MN-AARON AHAMED.....
« Last Edit: February 05, 2020, 03:59:09 PM by Unique Heart »

Offline MoGiNi

உன்னோடான
என் பொழுதுகளெல்லாம்
வண்ணம் தெளித்து
வரையப்படுகிறது
ஒரு பட்டாம் பூச்சியின்
இறகுகள் கொண்டு ..

அவ்வப்பொழுது
கேள்விகளாய்
உயரும் புருவ வளைவில்
வளைந்து குளைகிறது
வாகாய் மனது ...

ஒரு மென்புன்னகையில்
உலகின்
மாயங்கள் அனைத்தும்
மயங்கிக் கிடப்பதாய் எண்ணம்

விலகமுடியாத
நிமிடங்கள் கொண்டு
புனையப் படுகிறது
நமக்கான
எதிர்காலம் ..

அவ்வபொழுது
பாய்ந்து மீளும்
பார்வையின் வீச்சில்
வெக்கம் துகில் உரிந்து
பக்கம் வீழ்ந்துகிடக்கிறது
ஏக்கம் எதுவரையோ
அதுவரை நீள்கிறது
உன் விழிக் கணைகள் ...

பல பட்டாம் பூச்சியின்
நகர்வுகள் என
உன் மென்மையான
தீண்டலுக்காய்
காதலோடு காத்திருக்கிறது
மங்கை மனது ...
மனம் நீவி வா
மயக்கும் நீ
மயங்கும் நான் ..
[/b]
« Last Edit: February 07, 2020, 11:55:54 PM by MoGiNi »

Offline JeGaTisH

என் காதலி உன்னிடம் சொல்லிய நாலதுவோ
காதலர் தினம் அனதுவோ !

உன்னை பிரியா வரம் வேண்டு
கை கோர்த்து கடல் ஓரம்
கால் நடைபோட்டு அலை நனைவோம் !

சிங்கப்பெண்ணே உன்னை நான்
இன்று எனதாகிய நாள்
காதலர்கள்  குதூகலத்திலே !

மெதுவா துடித்த இதயம் அதுவோ
இப்போது உன் நினைவால்
துடிக்க மறப்பதேனோ !

என் மேல் அம்மா வைத்த
அன்பை பார்த்தேன்
உன் பாசத்தாலே !
என்னை யாரும்
ஏதேனும் சொன்னால்
கோவப்பட்டு சண்டைக்கு
சீரும்  சண்டக்கோழி நீயோ!

பூக்களில் சிறந்தது செவ்வந்தி
அது  நீ சூடியதனாலோ !
வானில் உதித்த நட்சத்திரம் ஓன்று
தரையில் என்னுடன் சேர்தது பெண்ணாக இன்று  !

உன்னை விரும்புவோர்
யார் வென இருக்கலாம் !
உன்னை துளி கூட கண்கலங்காமல்
பார்த்துக்கொள்ள நினைப்பவன் நான் ஒருவனே !


எல்லோருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
உங்கள் SINGLE சிங்க குட்டி ஜெகதீஷ்

                                         [highlight-text] .................back In action.................[/highlight-text][/size][/color]
« Last Edit: February 08, 2020, 01:59:43 PM by JeGaTisH »

Offline SweeTie

உன்னுடன் பழகிய அந்த நாட்கள்
செங்கரும்பினும் இனிய பொழுதுகள்
காலமும்  மறக்கவொண்ணா  நினைவுகள் 
நம் நான்கு விழிகளும் கலந்தவேளை
பேச வார்த்தைகள் அற்றுப்போன  தருணம்
மது உண்ட கருவான்டாக  நீயும்
மலரிடையே  மகரந்தமாய் நானும் !!!!
மறக்கத்தான்  முடியுமோ???

பட்டாம் பூச்சியாய்  பறந்தது என்னுள்ளம்
காதலை சொல்ல துடித்தன இதழ்கள்
 விடியலில் பூமியில் விழுந்த பனித்துளிபோல்   
அரும்பின உடலில் வியர்வையின்  துளிகள் .
காதலின் சுவாலைகள் உன் கண்களில் தெரிய
காத்து கிடந்தன உன் அதரங்கள்
காக்க வைப்பதில்  எத்தனை சுகமோ 
கண்டேன்  உன்னிடம்
நீ காத்துக் கிடந்த கணம்

அக்கினிகுஞ்சுகள்  ஆன்மாவைத் தேடின
நீண்ட நெடுஞ்சுவர்  சிதைந்து தகர்ந்தது
ஸ்வரங்கள்  ஜதி யுடன்  சேரத்துடித்தன
ஸ்பரிசங்களின்  பரிமாற்றம்  அங்கே
நாணி கோணி  நின்ற  நெற் பயிர்கள் 
காதலின் சந்நிதியில்  கட்டவிழ்ந்தன
இதயம்களின் சங்கமத்தில்  புலர்ந்தன
நெடிலும் குறிலுமாய்  சூடான மூச்சுகள் !!!

அனைத்து  தோழர் தோழியருக்கும்   காதலர் தின  வாழ்த்துக்களுடன்
உங்கள் அன்புத்தோழி  ஜோ
 
« Last Edit: February 11, 2020, 08:02:14 AM by SweeTie »

Offline அனோத்

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 246
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Male
  • இனியதோர் விதி செய்வோம் !

சப்தங்களுக்கு நடுவில்
நிசப்தமான 
சொப்பனத்தில் இயங்கும்
உணர்வே காதல்.....

யுத்தத்தின் முடிவில்
முத்தத்தை இட்டு
மண்ணில் வீழும்
வீரத்தின் பெயரும்  காதல்........

சொந்தங்கள் கூடி
சந்தங்கள் பாடி
கந்தலால் முடிச்சிடும்
உறவின் தொடக்கம் காதல்.....

கூந்தல் மணத்தினில்
ஊடும் ஊடலால்
உருவான அர்த்தம்
அதுவும்  காதல்.....

நித்தமும் சிந்தையில்
தன் மொத்தமென
உணர்த்தும் அன்னையவர் 
பாசம் காதல்.....

ஆதியும் அந்தமும்
தன் பாதியென
தந்தையவர்   ஆற்றும்
விந்தையது காதல்.....

சாதியம் மறந்து
சாத்தியம் ஆக்கும்
இதயங்களின்
உதயம்  காதல்.....

மதங்களைத்  தாண்டி
மனங்களால் இணையும்
நல் மதிப்பிற்கோர் 
இலக்கணம் காதல் .....

இவையனைத்தும்
உணர்த்தும்
உலக மொழி
அதுவே காதல்.....


காதலர் தின நல் வாழ்த்துகள்

« Last Edit: February 11, 2020, 03:07:41 AM by அனோத் »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


ஒன்றும் வேண்டாம்...
எதுவும் வேண்டாம்...
இவை மட்டும் போதும்!
நாளுக்கு மும்முறை
எனை கடந்து
சென்றுவிடு
அதுபோதும்!
கடக்கையில்
உன் பார்வை என்னை
தொட்டுவிட்டுப்
போகட்டும்
அது போதும்!
உன் கூந்தல்
என் முகத்தில்
முத்தமிட்டு
போகட்டும்
அது போதும்!
இதழ் பூக்கள்
புன்னகை மகரந்தத்தை
தூவி விட்டு
போகட்டும்
அது போதும்!
உந்தன் மொழி
என்னை
விசாரித்துவிட்டு
போகட்டும்
அது போதும்!
என் காதலை
நீ சம்மதிக்க வேண்டாம்!
நீ என்னை
காதலிக்கவும் வேண்டாம்!
ஒன்றும்
வேண்டாம்...
வேறொன்றும்
வேண்டாம்...
எதுவும் வேண்டாம்...
வேறெதுவும் வேண்டாம்...
இவை மட்டும் போதும்
நான்
வாழ்வதற்கு!!


 - மாறன்


Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
உனக்கொன்று தெரியுமா..?
உனக்காகவென்று
ஏதாவது எழுத
ஆரம்பித்தால் மட்டுமே
கவிதை வரைகிறது பேனா...

சில
தெரிந்த பொய்களிலும்,
விரும்பி
ஏமாறுவதிலும்தானே இருக்கிறது
வாழ்கையின் சுவாரசியமே .

உன் குறும்பு புன்னகையை
உதிர்க்கும் உதடுகள்
என் கண்களை மட்டுமா
சிறை செய்தது?
என்னையும் சேர்த்தல்லவா
கட்டி போட்டிருக்கிறது...

எத்தனை முறை
இதே உதடுகளை
என் கண்கள் பிரதி எடுத்திருக்கும்?
என்றென நீ அறிவாயா...
எடுத்த பிரதிகளை
எங்கே பத்திரப்படுத்தியிருக்கிறாய்? -
என்றென்னை கேட்டுவிடாதே.

உன்னை எதுவும் கேட்காமலே
உனக்காக கவிதை எழுதுகிறேன்
எனை எதுவும் கேட்காமலே
நீ என்னை காதலால் வீழ்த்துவாயென்று

உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்!
உனக்காக எழுதிய
கவிதை எனத்தெரிந்தும்
"எனக்கா?' என
கேட்டு புன்னைக்கும்
உன் சிரிப்பிற்கு முன்
என் கோபம் செயலிழந்துபோகிட
ஏங்கியே தவிக்கிறேன்...

எத்தனையோ பெண்கள்
உன்னை சுற்றி சுற்றி வந்தாலும்,
அன்பினால் மயக்கினாலும்...
மழை ஓய்ந்த பின்
மரக்கிளையினை உலுப்பி
எனைத் தெப்பமாய் நனைப்பதுபோல்
உன் அன்பினால்
என்னை சிதைக்கிறாயே
என் அன்பு காதலா FTC...!
இப்படி திகட்ட திகட்ட
காதலை அள்ளிதராமல்
தவணை முறையில் தந்திருக்க கூடாதா?

Copyright By,
இப்படிக்கு ftc யின் காதலி BreeZe :D