Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1


வளரும் குழந்தையாய் - முகம் மலரும் மழலையாய்....
காண்போரின் புன்முறுவளுக்கு காரணமாய்....
கண்ணீரை மறந்து கனவுலகில் -  என்றும்
பறக்க உதவும் சிறகாய்..

வளர்ந்தாலும் தேய்ந்தாலும் அழகாய்...
கவி பாட துடிக்கும் பல கவிஞர்களின் கருத்தாய்.....
ஈடற்ற பெண்மைக்கு ஈடான உவமையாய்....
அடுத்தவரின் இருளை போக்கும் வெளிச்சமாய்....

என்றுமே வானில் உலாவரும் வெண்ணிலவே... என் முழுமதியே....
உவமையாய் உருவகமாய் உன்னை
பாடிப்பாடி சலித்த போதும். மீண்டும்
பாடத்தூண்டும் பால்நிலவே...

எத்தனை வரிகளடி உனைப்பாட
எத்தனை வார்த்தைகளடி உனை வர்ணிக்க
எத்தனை கவிஞரடி உனைப்புகழ...
உம்மை பாடாத கவிஞனுமில்லை
உன்னை பாடாதவன் கவிஞனே இல்லை...

பலரின் உறக்கமற்ற இரவுகளின்
உற்ற துணை நீ.
தேடும்போது வானில் தோன்றும்
வெண்ணிற சிற்பம் நீ...

முகிலின் இடையில் ஒளிந்து விளையாடும்
மழலையின் வடிவமும் நீ...
உணவருந்த மறுக்கும் மழலையின்
விலைமதிப்பில்லா பொம்மையும் நீ..

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகமதில்
வாழ்வும் தாழ்வும் வாழ்க்கையின் இயல்பே என்பதையும்
கொடுப்பதால் குறைவதில்லை -குறைந்தே போனாலும்
 மீண்டும் முழுமை பெறவேண்டும் என்பதையும் உணர்த்த
உனையன்றி யாருண்டு இவ்வுலகில்...

பிறந்த குழந்தை முதல் - நரைமுடி கண்டு கிழப்பருவமெய்தும் காலம்வரை
தன்னிலை மறந்து உம்மை ரசிக்கச்செய்யும்
மாயக்காரியே...
என்னையும் மயக்கிவிட்டாய்
உன் அழகில் மயங்கவிட்டாய்....

பலரது மதியில் நிறைந்த வெண்மதியே
உனைக்கண்ட இச்சிறு நொடியில்
எனையும் கவி படைக்கச்செய்துவிட்டாய்
என் கவிதையின் கருத்தாயும் அமைந்துவிட்டாய்......


3
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 01:17:12 PM »
4
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 10:03:58 AM »
5
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:41:09 AM »
6
"படித்ததில் பிடித்தது"

யாருடைய மாறுதல்களுக்காகவும்
            உங்களை வருத்திக்
                கொள்ளாதீர்கள்.........

எந்த உறவும் இங்கு நிரந்தரமில்லை.....

இங்கே மனிதர்கள் சந்தர்ப்பத்துக்கும்,      காலத்திற்கும் ஏற்ப மாறிக் கொண்டு
  தானே இருக்கிறார்கள்......
7

நிலவே

இன்றிரவு
உன் வெளிச்சம்
என் ஜன்னலுக்குள் அல்ல
என் உள்ளுக்குள் விழுகிறது.

ஒருகாலத்தில்
யாரோ ஒருவன்
என் மௌனத்துக்கு
அர்த்தம் கொடுத்தான்
இப்போது
அந்த அர்த்தங்களை
நானே மறுபடியும்
எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

பேசப்படாத வார்த்தைகள்
என் நெஞ்சில்
அழுகி போவதற்கு முன்
உன்னிடம் ஒப்படைக்கிறேன்
நீ கேட்பாயா ?
எதிர் கேள்வி கேட்காமல் ?
அமைதியாய்
என் குரலை சுமப்பாயா?

அவன் குரல்
என் இரவுகளை அழகாக்கியது
அவன் இல்லாத
இந்த இரவுகள்
என்னை எனக்கே
திருப்பித் தருகின்றது.

"Saptiya"
"Enna pandra"
“good night”
என்ற
சிறு விசாரிப்புகள்
என்னைக் காப்பாற்றும் என்று
நம்பிய காலம் போய்
இப்போது
அது எல்லாம் இல்லை
என்று ஆன பிறகு
ஒரு நிம்மதிப் பெருமூச்சே
போதுமானதாகி விட்டது.

அவன் நினைவுகள் தினம்தோறும்
என்னைத் தேடி வரும்
ஆனால்
நான் இனி அவற்றின்
சிந்தனை வலையில்
சிக்கிக் கொள்ள மாட்டேன்

அவனுக்காக காத்திருந்த
என் இதயம்
இப்போது
என் பெயரை
முதன்முறையாக சரியாக
உச்சரிக்கக் கற்றுக்கொண்டது.

நிலவே
இப்போது நான் கேட்பது
துணை அல்ல
குறைந்தபட்சம்
என்னையே இழக்காத
ஒரு தெளிவு.

நிலவே
பலரின் கவிதைகளுக்கான
முதல் வரி நீ

அதுபோல் நான்
என் சான்றோர்க்கு
எடுத்துக்காட்டாக
மாறிக் கொண்டிருக்கும்
ஒரு அமைதியான
முயற்சி இது

இந்த இரவின் நடுவில்
உன்னைப் பார்த்தபடி
என் பயணத்தை
நானே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நிலவே
என்னுள் காதல்
இன்னும் இருக்கிறது
ஆனால் அது
யாரையும் தேடாது
யாராலும் நிரப்ப முடியாது.

அந்தக் காதல்
என்னை நானே
மெதுவாக அணைத்துக் கொள்ளும்
ஒரு அமைதி.

இது முடிவு அல்ல
இது என்னை நான்
மீண்டும் சந்திக்கும்
ஒரு தொடக்கம்
8
தினந்தோறும் இரவில்
யாருக்காக எரிகின்றனவோ
வானின் விளக்கு

வான் தேவதையின்
உள்ளத்தின் ஆழத்தில்
சாம்பலாகாமல்
புகைந்து கொண்டிருக்கும்
ஒரு காதல் கனல் போல

அதை யாரும்
எடுத்துக்கொள்ளவும் முடியாது
மாற்றிக் கொடுக்கவும் முடியாது
அது அப்படியே இருக்க வேண்டும்
மௌனமாக,தனிமையாக,
உண்மையாக.

என் பல இரவுகளை
அமைதியாக கடக்க
உதவியிருக்கிறாய்

நீ என்னுடையதாக
இல்லை என்று தெரிந்தும்
உன்னை நேசிப்பதை
நான் நிறுத்தவில்லை.
ஏனெனில்

காதல் என்பது
உரிமை கோருவது அல்ல,
உள்ளுக்குள்
மௌனமாக
எரிந்துகொண்டிருப்பதுதான்.

நான் உன்னை
நேசித்த உண்மை
முழுநிலவே
உன்னை போல
முழுமையானது .


****Joker***
9
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on December 16, 2025, 12:35:13 PM »
10
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on December 16, 2025, 12:06:17 PM »
Pages: [1] 2 3 ... 10