Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
Sis i am very big fan of mahabharatham..

lock down time la whole mahabharatham episodes download senju athu pathuttu irunthom..


mahabharathoda hero krishnar than..

ipo nenga krishnaroda yukthi nu vithurar ku solli irukurathu.. when i read the entire pic ennoda mind la recap achu ..

yarukku theriyum theriyala .. intha mahabharatham uruvaga kaaranam .. saguni than athukku pinnala irukurathu avaroda thangachi pasam thannu...

Mahabharatham ithu everyone must know .. religion kaaga sollala athula pala therinjika venidya karuthukal irukku ..

Thank u for the post sis
2
நம்பியவனே விற்றுப் போகையில்....

அறிமுகம் இல்லாதவன் அறுப்பதில்....

என்ன ஆச்சரியம்...?

(சந்தையில் விற்கப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் மன குமுறல்)
3
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 11:10:19 AM »
5
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on Today at 09:08:32 AM »
6
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 09:07:12 AM »
7

நலமான வாழ்வை விரும்புவோர், நான்கு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பிழைத்திருத்தல் என்பது வேறு.. வாழ்ந்திருத்தல் என்பது வேறு... பிழைத்துக் கிடப்பதற்கு பெரிய சிந்தனையோ விஷய ஞானமோ தேவையில்லை. ஆனால் வாழ்ந்திருப்பதற்கு நான்கு விஷயங்கள் தேவை.

வாழ்வை பற்றிய தெளிவு அவசியம். சிரத்தை இல்லையெனில் பல சிக்கல்கள் வந்துவிடும். அதனால்தான் சிரத்தையுள்ளவனே ஆன்மாவைப் பற்றிய அறிவை பெறுகிறான் என்கிறது கீதை. ஆன்மா அறிவை மட்டுமல்ல, நலமிகு வாழ்வை குறித்த அறிவையும் அவன்தான் பெறுகிறான். மனமும் உடலும் சீரான நிலையில் இருந்தால் பிரச்சினைகளுக்கு இடமிருக்காது.

தூங்க வேண்டிய நேரத்தில் சிலர் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருப்பார்கள். செல்போனில் யாரிடமாவது கதைத்துக் கொண்டிருப்பார்கள், அல்லது வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரத்தை பற்றிய உணர்வே இல்லாமல் மூழ்கி கிடப்பார்கள்.

எவ்வித நேர ஒழுங்குமின்றி எப்போதும் வேலை வேலை என்று தூக்கத்தை உதறித் தள்ளுபவர்கள் வெகு சீக்கிரத்திலேயே பல்வேறு உபாதைகளை வாங்கிக் கொள்கிறார்கள். தூக்கமின்மை உடற்சோர்வையும் மனநோயையும் ஏற்படுத்தும்.. புத்தி மயக்கம், பார்வைக் கோளாறு, பேச்சில் குழப்பம், பசியின்மை, எதிலும் தெளிவின்மை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தூக்கமின்மையே மூல காரணம்.

ஒவ்வொருமுறை தூங்கி விழிக்கின்ற போதும் நாம் புதிதாக பிறக்கின்றோம். எனவே சந்தடியற்ற சஞ்சலமற்ற அமைதியான தூக்கம் மிக அவசியம். இன்றைய விறுவிறு வாழ்க்கை கட்டத்தில் பல நல்ல விஷயங்களை நாம் தவறவிட்டுவிடுகின்றோம். எப்போதும் பரபரப்புடனும் மன உளைச்சலுடனும் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்திரமயமான நமது நவீன வாழ்க்கை முறையும் நோய்களுக்குத்தான் வழிவகுக்கின்றன. எனவே அவற்றை வருமுன் தடுத்தாக வேண்டுமே. அதற்குத்தான் உடற்பயிற்சி. பணச்செலவே இல்லாமல் எல்லாரும் எளிதாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சி சில நிமிட நடைப்பயிற்சி. காலையிலோ மாலையிலோ நாற்பது நிமிடங்கள் போதும். அங்கேயும் நாலுபேரைச் சேர்த்துக் கொண்டு பிரச்சினைகளை பேசிப் பேசி நடக்காதீர்கள். அதில் பயனில்லை. சீரான நடைப்பயிற்சியே நீரோட்டத்தை வேகப்படுத்தும். அது நம் உடல் முழுவதும் நடைபெறும்போது நமது காது மடல்களுக்கும் காலின் சுண்டு விரல்களுக்கும் ரத்தம் முழுமையாகச் சென்று திரும்பும். அப்படியானால்தான் நம் உடலின் செல்கள் அனைத்தும் தினம்தினம் புத்துணர்வைப் பெறமுடியும். அப்படி அவை புத்துணர்வைப் பெறும்போதுதான் உள்ளுறுப்புகள் தமக்குரிய கடமைகளை முழு ஆற்றலுடன் செய்ய முடியும்.

ஆரோக்கியமோ சுகக்கேடோ நம் வாழ்க்கை முறையில்தான் உள்ளது. சாப்பிடுவதில்கூட ஒழுங்குமுறை இருக்கிறது. உணவை பயபக்தியுடன் உண்ண வேண்டும். ஏனெனில், உணவு உண்ணுதல் என்பது ஒரு வகை வழிபாடு. சாப்பிட்ட உடனே குளிக்கச் செல்லாதீர்கள். வயிறு நிரம்பி இருக்கும்போது குளித்தால், செரிமான மண்டலம் பலவீனமாகும். உணவு ஜீரணமாவதில் பிரச்சினை ஏற்படும். எனவே குளித்த பிறகுதான் சாப்பிட வேண்டும்.

படுத்துகொண்டோ நின்றுக்கொண்டோ வீட்டுக்கும் தெருவுக்கும் இடைப்பட்ட வாசல்வெளியில் இருந்துகொண்டோ, வீட்டின் கதவைத் திறந்து வைத்து வாசலுக்கு எதிராக அமர்ந்து கொண்டோ சாப்பிடக்கூடாது என்றெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். வாழை இலையில் உணவு உட்கொண்டால் உடல்நலம் பெருகும்.. மந்தம், வலிமைக் குறைவு இழைப்பு போன்ற பிரச்சினைகள் நீங்கும். பித்தமும் தணியும் என்கிறார்கள்.

எனவே கூடுமான வரையில் வாழை இலைகளை நாம் பயன் படுத்திக்கொண்டால் நல்ல பலன்களை காண முடியும். இன்னொரு முக்கியமான விஷயம். எல்லாம் இருந்தும் மனதில் மகிழ்ச்சி இல்லை என்றால் அனைத்தும் வீண். எனவே எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.

உடலின் உற்சாகம் மனதைச் சார்ந்தது. கண்ணுக்குத் தெரிகின்ற ஒன்றிற்கும், கண்ணுக்குப் புலப்படாத மற்றொன்றிற்கும் அப்படியொரு பிணைப்பு.

நம் சராசரி உயரம் மூன்றரை முழம்தான். ஆனால் மனம்? அதன் உயரத்திற்கு வரையறை இல்லை. அது அற்புதமானது... ஆகாயத்தையும் விஞ்சியது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மூளை விறுவிறுப்பாக செயல்படுகிறது. எந்த வேலையையும் சிரமமின்றி முடிப்பதற்கு வேகம் பிறக்கிறது. உள்ளத்தின் மகிழ்ச்சி வாழ்வை சுலபமாக்குகிறது;

அந்த மகிழ்ச்சி என்னும் பெருஞ்செல்வத்தை நாம் எங்கிருந்து பெறமுடியும்? நமக்குள்ளிருந்துத்தான்.. கல்லுக்குள்தானே சிலை இருக்கிறது. தேவையற்றவைகளை வெட்டி எடுத்துவிட்டால் சிலை வந்துவிடும். அதேபோல், மகிழ்ச்சிக்குத் தடையாய் இருப்பவைகளை மனதிலிருந்து விலக்கிவிட்டால் வாழ்க்கை புதுப்பொலிவு பெற்றுவிடும்.

நம்பிக்கை, நிதானம், நல்லெண்ணம், நல்லுறவு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனம்விட்டுப் பேச வேண்டும். வாய்விட்டுச் சிரிக்க வேண்டும். குடும்பத்தாரோடு நேரம் செலவிட வேண்டும். அப்படியெனில், மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். எனவே நலமான வாழ்வை விரும்புவோர், நான்கு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நிம்மதியான தூக்கம், சீரான நடைப்பயிற்சி, ஒழுங்கான உணவுமுறை, எப்போதும் மகிழ்ச்சி இவற்றை பழக்கப்படுத்திக் கொண்டால் நலமிகு வாழ்க்கை நமதாகும்.
8


வாழை நம்மை வாழ வைக்கும் என்ற பழமொழியைக் கேள்விப் பட்டிருப்போம். வாழை இலையில் சாப்பிடுவது யாருக்குத் தான் பிடிக்காது. வாழை அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படும். அதில் வீணாகிற விஷயமே கிடையாது.
பொதுவாக சாப்பிடுவதற்கு வாழை இலையைப் பயன்படுத்துவோம். சில நேரங்களில் வாழை இலையில் வைத்து மடித்து கொழுக்கட்டை, மீன் போன்ற சில ரெசிபிகளை சமைத்தும் சாப்பிட்டிருப்போம். சுடச்சுட சாப்பாட்டை வாழையில் போட்டதும் இலையின் நிறம் மாறி அதில் உள்ளதெல்லாம் உணவில் கலந்து அந்த உணவுக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்கும்.
...
இளநரை...
அடிக்கடி வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், தலையில் இளநரை வராமல், உங்களுடைய முடி நீண்ட நாட்களுக்குக் கருப்பாகவே இருக்கும்.
...
தீக்காயம்...
உடலின் வெப்பத்தைக் குறைக்கும் ஆற்றல் வாழை இலைக்கு உண்டு. அதேபோல் தீக்காயம் பட்டால் அதற்கு சிறந்த மருந்தாக வாழை இலை இருக்கும். அதனால் தான், தீக்காயம் பட்டவர்களை வாழை இலையின் மேல் வைத்து, தீக்காயத்தின் தீவிரத்தைக் குறைப்பார்கள்.
...
கெட்டுப்போகாமல் இருக்க...
வெளியிடங்களுக்குச் செல்லுகின்ற பொழுது, வாழை இலையில் உணவை வைத்துப் பேக் செய்து எடுத்துச் சென்றால், உணவு வெகுநேரம் கெட்டுப் போகாமல் இருக்கும். அதேசமயம் மிகுந்த வாசனையாகவும் இருக்கும்.
குழந்தையின் உடலுக்கு நல்லெண்ணெய் பூசி, வாழை இலையை விரித்து அதில் குழந்தையை சூரிய ஒளியில் படுக்க வைத்திருந்தால் குழந்தைக்கு வைட்டமின் டி அதிகமாகவே கிடைக்கும். குழந்தையின் உடல் சூடு தணிந்து சரும நோய்கள் வராமல் தடுக்கும்.
இதுவரையிலும் மேலே சொல்லப்பட்ட அனைத்துக்கும் வாழை இலையை வெளி மருந்து போல பயன்படுத்தப்பட்டது. ஆனால் வாழை இலையை உள் மருந்தாகவும் சாப்பிடலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதுவும் மருந்தாக இல்லை. உணவைப் பரிமாறும் இலையையே உணவாகச் சாப்பிட முடியும்.
சித்தர்கள் வாழையில் பட்சணங்கள் செய்து வாழையின் மற்ற பாகங்களைப் போல இலையையும் சாப்பிட்டிருக்கிறார்கள்.
சித்த மருத்துவத்தில் வாழை இலைத்துவையல் பல நோய்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
....
ஊட்டச்சத்துக்கள்...
வாழை இலையில் அப்படி என்ன சத்துக்கள் இருந்துவிடப் போகிறது. நாம் தான் தினமும் வாழைப்பழம், வாழைக்காய், தண்டு, பூ என சாப்பிடுகிறோமே அதில் கிடைக்காததா இந்த இலையில் கிடைக்கப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வாழை இவை எல்லாவற்றிலும் இருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் வாழை இலையில் இருந்து நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையில் இயற்கையாகவே நிறைய ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறையவே இருக்கின்றன. வைட்டமின் ஏ அதிக அளவில் இருக்கிறது அதேபோல் கால்சியமும் நிறைந்திருக்கிறது.
...
சிறுநீரகக் கல்...
வயிற்றுப்புண் இருப்பவர்களுக்கு இந்த வாழை இலைத்துவையல் ஒரு அருமருந்து என்றே சொல்லலாம். அதேபோல் சிறுநீரகக் கல் உண்டாகாமல் தடுக்கவும் ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
...
வாழை இலை... துவையல்
தேவையான பொருள்கள்
வாழை இலை - அரை இலை (மீடியம் சைஸ்)
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7
பூண்டு - 10 பல் (தோல் உரிக்காமல்)
சின்ன வெங்காயம் - 25 (உரித்தது)
உப்பு - தேவையான அளவு
புளி - ஒரு கொட்டையளவு.
செய்முறை:
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பொன்னிறமாக வதங்கியதும் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வெங்காயம் நன்கு வேகும் வரை வதக்கவும். இஞ்சி சுவை பிடித்தால் ஒரு சின்ன துண்டு இஞ்சியும் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் நன்கு வதங்கியதும், சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வாழை இலையினைப் போட்டு நன்கு சுருண்டு வதங்கும் வரை வதக்கவும். சிறிய நெல்லிக்காய் இளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்பு சிறிது நேரம் ஆறவிட்டு, மிக்சியில் போட்டு நன்கு மை போல அரைத்து எடுத்துக் கொண்டு, எல்லா சட்னிகளையும் தாளிப்படு போல, கடுகு உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டுங்கள். சுவையான ஆரோக்கியமான வாழை இலை சட்னி தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
9

கடன் கொடுத்தவன் ஒரே ஒரு கேள்விய வச்சுக்கிட்டு ரொம்பத் தயங்கித் தயங்கி குற்ற உணர்ச்சியோட உயிர் வாழ்றான்...
1. எப்போ தருவீங்க..?

கடன் வாங்கியவன் நிறைய பதில்கள வச்சிக்கிட்டு ஜாலியா குடும்பத்தோட ஊர் சுத்துறான்..

1. உன் பணத்த தூக்கிட்டு ஓடிட மாட்டேன்..

2. உன் காச புடுங்கியா தின்னுட்டேன்..

3. ஏன் பணம் பணம்னு அலையிற..

4. என்கிட்ட வாங்கி அப்படி என்ன பண்ணப் போற....

5. இப்போ என்ன அவசரம்?

6. இன்னுமா ஞாபகம் வச்சிருக்க?

7. ஏற்கெனவே கொடுத்துட்ட மாதிரி இருக்கே...

8. உனக்கு என்ன செலவு இருக்கப் போகுது..

9. ஒருதடவ கொடுத்துட்டு ஓராயிரம் தடவையா கேப்ப?

10. உன்ன ஏமாத்தணும்னு நினைக்கல..

11.கண்டிப்பா கைக்கு வந்தவுடன் குடுத்துடறேன்..

12.இப்போ விட்ரு அடுத்த மாசம் குடுத்துடுறேன்...

🥺🥺🥺🥺🥺

நீங்களாவது நல்லாருங்கடா டேய்...
10

'யானை பாகனுக்கு யானையால் தான் சாவு'ன்னு சொல்லுவாங்க. பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமாக மஸ்து நேரத்தில், தலைமை பாகன்... யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான்.

ஒரு யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது ஐந்து கும்கியை நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும். அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சியை எடுத்துடாது. ஆனால் அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டி நொறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச காட்டு மூங்கில் பிரம்புகள வெச்சிருப்பாங்க. வளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா செத்துருவான். அதால அடிச்சு வெளுப்பாங்க. பிளிரும்... ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனால் குச்சியயை எடுக்காது. எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து எந்த பாகன் கைல குடுக்குதோ, அவனைதான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமை பாகன். இப்ப யானைக்கு பிடிச்சவன தேர்ந்தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும்.

அதை பழக்கறதுகுள்ள, தும்பிக்கையை தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் கொடுத்து ருசிகாட்டி, பசியை தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். அதுக்குள்ள எத்தனை அடிகள் சித்ரவதைகள் அப்பப்பா... அந்த பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது.

கடைசியாக... என்றைக்கு அந்த யானை, பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாமல், தன் முன்னங்கால்களை மடக்கி குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளிய வரனும். அப்பதான் அது முழுசும் பழக்கப் பட்டதுக்கான அடையாளம். இதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும். கோவை மாவட்டத்தில் 13 பேரை கொன்று, கேரள அரசால் ஷூட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்றைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு சித்ரவதை ட்ரெய்னிங்.

மஸ்துன்னா மதம்.. நவம்பர் டூ ஜனவரி யானைகளின் இணைச் சேர்க்கை காலத்தில், நெத்தியில் இருந்து மஸ்து நீர் வடியும். பாகன் மேல் பாசம் உள்ள யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றை கால் சங்கிலிதான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போதே... ரெட்டை காலுக்கு சங்கிலி போட்ருவாங்க. சாதாரணமா அங்குசத்தை பார்த்தால் கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது. அதன் பிறகு யாரும் கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடம்தான். அந்த மஸ்து நீரோட வாசம், நீண்ட தூரம் வீசும். வாசம் வந்தா... எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும். பயங்கர ரெஸ்ட் லெஸ்ஸா இருக்கும். உர்ர்ர்ர் ன்னு உருமிகிட்டே இருக்கும். எப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும். மண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும். அதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார ஞாபக சக்தி கொண்ட யானை, தன்னோட பாகன் மேலான பகைய தீர்த்துக்க... தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனை தான் தேடும். சிக்குனான்... அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு போட்ரும்.
🐘

சின்ன கொசுறு தகவல்:

யானையில் ஆறு வகை உள்ளது. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. நம்பக தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட் லெஸ்ஸா கொலை வெறியோடு இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது.

அதே போல உடம்பில் முதுகெலும்பு தூக்கிக் கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானை களையும், இடுங்கிய கண்களை கொண்ட யானை களையும், நெற்றி துருத்திய யானைகளையும் வளர்க்கவே முடியாது. பயங்கர சிடு மூஞ்சி. இது அவ்வளவு ஆபத்தில்லைனாலும் கூட, கையாள்வது சிரமம். வேண்டா வெறுப்பா கட்டளைக்கு அடி பணியும். இதன் மீது துர்நாற்றம் வீசும்.

ஒழுங்கில்லாத தந்தங்கள் அல்லது ஒற்றை தந்தம் கொண்ட யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான். காட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள்தான் ஆட்கொல்லிகள். மற்ற வகைகள் வெறும் மிரட்டலுடன் விலகி போய்விடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும் குணமும் உடையது. மனுஷனை பார்த்துட்டால், அனல் போல கொதிநிலைக்கு போயிடும். பயங்கர ராட்ஷசன். அது உடம்பிலிருந்து அழுகிய மாமிச வாசம் வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாடையை வைத்தே இது வருவதையோ, அருகில் நிற்பதையோ கண்டு பிடித்து விடுவார்கள்.

ஒச்சம் இல்லாத, நிமிர்ந்த தலை, சம அளவுகளில் அகலமாக முன் நோக்கி V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்பவும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும், மனிதர்களுடன் முக்கியமாக குழந்தைகளுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும். இது பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குதான் அமையும். இதன் உடம்பில் தாமரை பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்காவிட்டாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.
Pages: [1] 2 3 ... 10