Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on October 14, 2025, 11:51:30 AM »
2
ஆன்மீகம் - Spiritual / Re: BIBLE VERSE of THE Day ✝️ 🙏
« Last post by MysteRy on October 14, 2025, 08:52:12 AM »
3
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on October 14, 2025, 08:51:32 AM »
4
ஆன்மீகம் - Spiritual / Re: MORNING PRAYER ✝️ 🙏
« Last post by MysteRy on October 14, 2025, 08:50:49 AM »
5
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on October 14, 2025, 08:49:36 AM »
6


மனிதர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மைதான் என்பதை பிரபல அறிவியல் வார பத்திரிக்கை  வெளிட்டிருக்கிறது. ஆதி சங்கரர், புத்தர், ஏசு கிறிஸ்து, குரு நானக் முதலிய பெரியோர்களின் தலையைச் சுற்றி ஒரு வட்டம் பிரகாசமாக வரையப் பட்டிருக்கும். இது தவ சீலர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் நம்மைப் போன்றோர் படங்களில் மட்டுமே காண்கிறோம்.
இவ்வளவு காலமாக இதை ‘பாரா நார்மல்’ (மாய மந்திரம்) என்று அறிவியலுக்கு அப்பால் வைத்திருந்தனர். இப்போது ஒரு ஆராய்ச்சியின் மூலமாக இதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதோ நியூ சைன் டிஸ்ட் செய்தியின் சுருக்கம்:
“ ஒரு கிராமப் புற கதை போலத் தோன்றும் செய்தி இது. ஒரு சில மக்கள் மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஒளி வளையத்தைக் காணமுடியும். ஐம்புலன்கள் ஒன்றை ஒன்று குறுக்கிடும் போது சிலர் மற்றவர்களைச் சுற்றி இருக்கும் வண்ண ஒளியைக் காணமுடியும், இது மன உணர்ச்சிக்குத் தக்கவாறு கலரில் வேறுபடும். டி.கே. என்னும் ஒருவர் ஆஸ்பர்கர் நோயால் கஷடப்பட்டுவந்தார். அவருக்கு வயது 23. அவர் இப்படி ஒளி வட்டத்தைக் காண்பதாகக் கூறியவுடன் வில்லயனூர் ராமசந்திரன் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஒரு சோதனை நடத்தினார். சோதனைக்காக அவர் முன் ஒரு ஆளை நிறுத்தியவுடன் அவரை சுற்றி நீல வண்ணம் இருப்பதாகக் கூறினார். நீல வண்ணத்தில் நீல எழுத்துக்கள் தெரியாது. மற்ற வண்ண எழுத்துக்கள் தெரியும் அல்லவா? ஆகையால் அவரை ஒரு வெள்ளைத் திரையின் முன் நிற்க வைத்து அவர் தலையைச் சுற்றி நீல வண்ண எழுத்துக்களை காட்டினர். யார் ஒளிவட்டத்தைக் கண்டாரோ அவரால் நீல வண்ண எழுத்துக்களைப் படிக்க முடியவிலை. தலையில் இருந்து விலகி அதே எழுத்துக்களைப் போட்ட போதும் வேறு வண்ண எழுத்துகளைப் போட்டபோதும் அவரால் படிக்க முடிந்தது. இதன் மூலம் நீல நிற ஒளிவட்டம் நிரூபணமானது. இந்தியாவில் சில சன்யாசிகள், சிலருக்கு உடனே அநுக்ரகம் செய்கிறார்கள் இன்னும் பலரைப் பாராமுகமாக இருந்து விடுகிறார்கள் இதற்கும் நம் தலையைச் சுற்றி இருக்கும் ஒளிவட்டமே காரணம். குழந்தைகளுக்கு இது நன்றாகத் தெரியுமாம். அம்மா அப்பா தலையை சுற்றி இருக்கும் அதே ஒளி வளையம் உள்ளவர்களிடம் குழந்தைகள் எளிதில் போகும். மற்றவர்களைக் கண்டாலேயே அலறும்.
ஒருவர் நல்ல எண்ணத்துடன், நல்ல செயல்கள் செய்தால் இது பிரகாசமாக தெரியும். கெட்டவர்களாக இருந்தாலோ பூர்வஜன்மத்தில் கெட்டது செய்திருந்தாலோ தலையைச் சுற்றி கருப்பு வளையம் தான் இருக்கும். ஞானிகளுக்கு இது நன்கு தெரியும். விவேகானந்தரைப் பார்த்த மாத்திரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் அருள் மழை பொழிந்தார். விவேகானந்தர் நாஸ்தீக வாதம் பேசியபோதும் அவருடைய பூர்வ ஜன்ம புண்யம் நல்லது என்பதால் உடனே உபதேசம் கிடைத்தது. ஒளி வளையத்தை ஒருவரின் ஆன்மீகக் கைஎழுத்து அல்லது தலை எழுத்து என்று சொன்னால் மிகை இல்லை.
எனக்கும் கூட இதில் சில அனுபவங்கள் உண்டு. என் தந்தைக்கு மிகவும் வேண்டிய சுவாமிஜி பெரிய கணபதி உபாசகர். மதௌரையில் ஒரு நகரசபை வார்டு தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரை என் தந்தை ழைத்துச் சென்று அந்த சுவாமிஜியிடம் ஆசி பெற முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறை அவரை அறிமுகப் படுத்த என் தந்தை முயன்றபோதெல்லாம் சுவாமிஜி வேண்டும் என்றே முகத்தை எதிர்ப்புறம் திருப்பினார். என் தந்தைக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இறுதியில் மதுரைக்குக் கிளம்ப விடை பெறும் போது, இவர் மதுரையில்………….. என்று என் தந்தை துவங்கியதுதான் தாமதம். நீ தேர்தலில் வெற்றி பெறுவாய் போ என்று அவரை ஆசிர்வதித்தார். என் தந்தைக்கும் மிக்க மகிழ்ச்சி. அவர் சொன்னது போலவே தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
சில மாதங்களுக்குப் பின்னர் அந்த சுவாமிஜியை வேறு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவரே விளக்கம் கொடுத்தார்; “ சந்தானம் (எனது தந்தையின் பெயர்)  தனது குடும்பத்துக்காகக் கூட எதையும் கேட்டதில்லை. ஆனால் ஜெயிக்காத ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டுவந்து கேட்டவுடன் நான் கனபதியுடன் “சண்டை போட்டு” அவருக்கு வெற்றி பெற ஆசியை வாங்கினேன் என்றார். எனது தந்தை அழைத்துச் சென்ற ஆள் எல்லா கெட்ட பழக்கங்களும் உடையவரே. நண்பர் என்ற முறையில் என் தந்தை அவருக்கு உதவி செய்யச் சென்றபோது இத்தனையும் நடந்தது. ஆக ஆளைக் கண்டவுடனேயே சந்யாசிகளுக்கு நம்மைப் பற்றித் தெரிகிறது.
கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் ரிக் வேதத்தில் ஒரு சாகை முழுதையும் அத்யயனம் செய்து காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் தங்கக் காசு, சால்வை ஒரு வீடு ஒரு பசு மாடு பெற்றவர். மதுரைக்கு டி.வி.எஸ். பஸ் நிறுவனத்தார் அழைப்பின் பேரில் ஆண்டுதோறும் உபந்யாசம் செய்ய வருவார். எங்கள் வீட்டில் தங்குவதால் பல உண்மைச் சம்பவங்களை சொல்லுவார். ஒரு நாஸ்தீகர் அவரைச் சோதிக்க இறந்தவரின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்தபோது அதைத் தொட்டவுடன் அவருக்கு ‘ஷாக் அடித்தது போல இருந்தது. உடனே வந்தவரை எச்சரித்து வெளியேற்றினார்.
சென்னையில் என் அண்ணன் பொழுதுபோக்காக அரசியல் துறை சினிமா துறையைச் சேர்ந்தோருக்கு ‘ஓஸி’யாக ஜோதிடம் சொல்லுவதுண்டு. சில பாப ஜாதகங்களைக் கையில் எடுத்தவுடன் ஒரே களைப்படைந்து கொட்டாவி விடத் துவங்கி விடுவார். கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கும். தான் முதல் நாள் இரவில் தூங்காததால் களைப்பாக இருப்பதாக சாக்கு போக்குக் கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பி விடுவார்.
இந்த சம்பவங்கள் மனிதர்களுக்கு மட்டும் இன்றி ஜட வஸ்துகளுக்கும் பாப புண்யம் இருப்பதைக் காட்டுகிறது—அதாவது மக்களுடைய பாப புண்யத்தை அது எதிரொலிக்கிறது. என் அண்ணன் லண்டன் வந்தபோது எனக்கு நீண்ட காலமாக வேலை இடத்தில் தொல்லை கொடுத்து வந்த ஒரு பெண்மணியையும் மரியாதையின் பொருட்டு அறிமுகப் படுத்தி வைத்தேன். அவரைக் கண்டவுடன் என அண்ணன் மிக நல்ல பலன்களாகப் பொழியத் துவங்கிவிட்டான். எனக்கோ ஆத்திரம் தாங்க முடியவில்லை. அந்தப் புறம் அழைத்துச் சென்று ஏன் ‘எதிரிக்கு’ உதவினாய் என்று கடிந்து கொண்டபோது அந்தப் பெண் நாட்டை விட்டு லண்டனுக்கு வந்த காலம் முதல் தன் மகள் நன்றாக இருக்கவேண்டும் என்று அவருடைய தாய் கந்த சஷ்டிக் கவசம் படித்ததாகவும் அந்தத் தாயின் பிரார்த்தனை இந்தப் பெண்ணைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போட்டிருப்பதாகவும் கூறினான. என்னுடைய விருப்பு வெறுப்புகளுக்காக் புனிதமான ஜோதிட சாஸ்திரத்தை மாற்றமுடியாது! என்றான்.
ஆக ஒருவரின் தாய் தந்தையின் பிரார்த்தனையும் கூட ஒருவரைச் சுற்றி கவசமாக நிற்கமுடியும்!
எனது தந்தை ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியைப் படித்துக் காட்டியதும் நினைவுக்கு வருகிறது. “யமதர்ம ராஜனின் உதவியாளர் பெயர் சித்திரகுப்தன். இவந்தான் நம்முடைய பாவ புண்ணீயங்களைக் கூட்டிக் கழித்துப் போடும் கணக்குப் பிள்ளை. உண்மையில் சித்திர குபதன் என்ரு யாரும் ஒரு ஆள் இல்லை. சித்திர குப்தன் என்ற வடமொழிச் சொல்லுக்கு ரகசிய வரைபடம், மரைட்ந்த ஓவியம் என்று பொருள். அதாவது நாம் மனோ, வாக் காயம் ( மனம் மொழி மெய்) ஆகியவற்றால் செய்யும் ஒவ்வொரு செயலும் வரைபடம் போலப் பதிவாகி நம்முடைய உண்மைப் படத்தை வரைந்துவிடுகிறது!”
நம்மைச் சுற்றி ஒளி வளையம் பிரகாசம் அடைய நாம் நற்சிந்தனையுடன் வாழ்வோமாக.
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்.
7

சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.
இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை.
ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக
318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல.
எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதன் வென்றிருக்கிறான். மனிதனின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற தென் துருவத்தை எட்டியிருக்கிறான். வட துருவத்தையும் விட்டு வைக்கவில்லை. சந்திரனுக்கும் சென்று வந்திருக்கிறான். ஆனால் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் உண்டென்றால் அது கடலடித் தரையாகும்.
விண்வெளி வீரர் போல மிகப் பாதுகாப்பான உடை அணிந்து கடலில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் யாரேனும் போய் நிற்க முடியுமா என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை. ஒரே கணத்தில் பற்பசை டியூப் போல நசுக்கப்பட்டு மடிந்து போவார். கடலுக்கு அடியில் அந்த ஆழத்தில் அழுத்தம் மிக பயங்கரமான அளவில் இருக்கும்.
தரையில் நாம் காற்றின் எடையைச் சுமந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். காற்றுக்கு எடை உண்டு. அது நம்மை ஒரு சதுர செண்டிமீட்டருக்கு ஒரு கிலோ வீதம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கிறது. இதை ஒரு மண்டல் அழுத்தம் என்று குறிப்பிடுகின்றனர்.
கடலுக்குள் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் நம் தலைக்கு மேலே உள்ள அத்தனை தண்ணீரும் சேர்ந்து நம்மை அழுத்தும். அத்துடன் நம்மைச் சுற்றிலும் உள்ள தண்ணீரின் எடையும் சேர்த்து நம்மை அழுத்தும். அந்த அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதை விட இரண்டு மடங்காக இருக்கும். 20 மீட்டர் ஆழத்துக்குச் சென்றால் அழுத்தம் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தும் நான்கு மடங்காகி விடும்.
உலகின் கடல்களின் சராசரி ஆழம் நான்கு கிலோ மீட்டர். அந்த ஆழத்தில் அழுத்தம் 400 மடங்காக இருக்கும். ஒருவரைப் படுக்க வைத்து அவர் மீது பல சிமெண்ட் மூட்டைகளை வைத்தால் எப்படி இருக்கும்? கடலில் மிக ஆழத்தில் நிலைமை அதை விட மோசமாக இருக்கும்.
உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ளது. அந்த  இடத்தின் பெயர் மரியானா அகழி (Mariana Trench). அந்த அகழியின் நடுவே தான் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் உள்ளது. அதன் பெயர் சேலஞ்சர் மடு (Challenger Deep), ஆழம் சரியாக 10,902 மீட்டர். அவ்வளவு ஆழத்தில் அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு. ஆகவே யாராலும் என்றுமே அந்த ஆழத்துக்குப் போய் கடலடித் தரையில் காலடி பதிக்க முடியாது
1960 ஆம் ஆண்டில் இரண்டே இரண்டு பேர் கனத்த உருக்கினால் ஆன ஒரு கோளத்துக்குள் உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடுவில் போய் இறங்கினர். கனத்த பிளாஸ்டிக்கினால் ஆன ஜன்னல் வழியே கடலடித் தரையை சிறிது நேரம் கண்டனர். அதோடு சரி. ட்ரீயஸ்ட் என்னும் பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கு கலத்தின் மூலம் இவ்வாறு சென்றவர்களில் ஒருவர் கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக் பிக்கா, மற்றொருவர் அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ்.
ட்ரீயஸ்ட் நீர் மூழ்கு கலம். அடிப்புறத்தில் அமைந்த கோளத்தில் தான் இருவரும் இருந்தனர். கடலில் மிக ஆழத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை - சுமார் 800 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றால் ஒரே காரிருள் சூழ்ந்திருக்கும். தவிர, கடல் நீரானது கடும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படியாக கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவதில் பிரச்சினைகள்.
 பசிபிக் கடலில் மரியானா அகழி அமைந்த இடம் கடந்த பல ஆண்டுகளில் கடல் ஆராய்ச்சித் துறையில் பல நவீன தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் ஆழ் கடலை மனிதனால் இன்னும் வெல்ல முடியவில்லை.
8

காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை அமையப்பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.
ரொடோடென்ரன் (Rhododendran) என்றழைக்கப்படும் இந்த மரத்தின் அருகில் நெருப்பு சென்றால், பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கிவிடும். இதனால் இம்மரத்திற்கு நெருப்பினால் அழிவு ஏற்படாது.

பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இம்மரங்கள் பறவைகளைக் கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாசஸ்தலமாக விளக்குகின்றன. பலத்த காற்றினையும் தாங்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மருத்துவத் தன்மை கொண்டது.
தமிழில் காட்டுப் பூவரசு எனவும் நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் அழைக்கப் படுகிறது. இம் மலர்கள் போரஸ் என்று பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவரால் அழைக்கப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் (நீலகிரி, ஆனைமலை, பழனி, மேகமலை) கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இதனை அழைக்கலாம்.

இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் ரொடோடென்ரன் மரங்கள் காணப்படுகின்றன.
9

ஒரு சமயம் சுவாமிநாத பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள் அமெரிக்கா சென்றிருந்தார். அங்குள்ள சில விஞ்ஞானிகளிடையே உரையாற்றும் வாய்ப்பு ஏற்பட்டது அவருக்கு. அப்போது ‘பிராணா’ என்ற உயிர்சக்தியை, தகுந்த பயிற்சிகளின் வாயிலாக வளர்த்துக் கொண்டால், ஒருவர் ஒரு மணி நேரம்கூட சுவாசிக்காமல் உயிர்வாழ முடியும் என்றார் அவர். அந்தக் கூற்றை நம்பாத அமெரிக்க விஞ்ஞானிகள், அதை பரிசோதித்துப் பார்ப்போமா என சவால் விட, சுவாமிகள் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவிலுள்ள ‘மெரிங்கர் பவுண்டேஷன்’ ஆராய்ச்சிக்கூடத்தில், மூன்று பெரிய கண்ணாடி சேம்பர்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றுக்குள்ளிருந்த காற்று முழுவதும் பம்புகளால் உறிஞ்சி வெளியேற்றப்பட்டன. சுவாமிகளின் உடலில் பல எலக்ட்ரோடுகள் பொருத்தப்பட்டு அவரது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், மூளையின் செயல்பாடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், சுவாமிகளின் காது, மூக்கு மற்றும் உடலிலுள்ள வியர்வைத் துவாரங்களில், மெழுகு பூசியும், காற்று உள்ளே புகாமல் அடைக்கப்பட்டன.

பரிசோதனை நடைபெறும் சமயத்தில், கண்ணாடி சேம்பரில் அமர்ந்த சுவாமிகள், தபேலா வாசிக்கப்போவதாகவும், மொட்டையடிக்கப்பட்ட தனது தலையின் உச்சியில், ஒரு நாணயத்தை வைக்கும்படியும், தனது உடலில் ஒரு மைக்கைப் பொருத்தி, அதன் வாயிலாக உண்டாகும் சத்தத்தைக் கேட்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். விஞ்ஞானிகளும் அப்படியே செய்தனர்.

மூன்று கண்ணாடி சேம்பரிலும், உள்ளே இருந்த காற்றை உரிய பம்புகள் மூலம் உறிஞ்சி வெற்றிடமாக்கினர். முதல் சேம்பரில் சுவாமிகள் அமர்ந்திருந்தார். இரண்டாவது சேம்பரில் எரியும் மெழுகுவர்த்தியை வைத்தனர். மூன்றாவது சேம்பரில் ஒரு குரங்கை உட்கார வைத்திருந்தனர். இந்தப் பரிசோதனையில் ஐந்து நிமிடங்கள் கடந்தன.

வெற்றிடம் உருவாக்கப்பட்ட மூன்று சேம்பரில், இரண்டாவது சேம்பரிலிருந்த மெழுகுவர்த்தி தொடர்ந்து எரியத் தேவையான பிராண வாயு இல்லாததால் அது அணைந்துபோனது.

மூன்றாவது சேம்பரிலிருந்து குரங்கின் செயல்பாடுகள், மெல்ல குறைந்து மயங்கி விழுந்துவிட்டது.

முதல் சேம்பரிலிருந்த பிரம்மானந்த சுவாமிகள், மிக அமைதியாக தபேலா வசித்துக் கொண்டிருந்தார். அவரின் இதயத்துடிப்பு - முளையின் இயக்கம் அனைத்தும் இயல்பாக இருந்தது. ஆனால், வியர்வை மட்டும் உடல் முழுவதிலும் ஆறாகப் பெருகிக்கொண்டிருந்தது. அவரது உச்சந்தலையில் வைக்கப்பட்டிருந்த நாணயம் மட்டும், மேலும் கீழுமாகக் குதித்துக்கொண்டிருந்தது. சுவாமியின் உடலில் உள்ள மைக்கிலிருந்து நீர் வீழ்ச்சியில் நீர் சொட்டுவதுபோன்ற ஓசை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. காற்றில்லா வெற்றிடத்தில், சுமார் நாற்பதைந்து நிமிடங்கள் வரை சுவாமிகள் தபேலா வாசித்துக்கொண்டிருந்தார். பின்னர், அவரது இதயத்துடிப்பில் சிறிது மாற்றம் காணவே, விஞ்ஞானிகள் அதற்குமேல் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர விரும்பவில்லை. சுவாமிகள் ஒரு மணி நேரம் வரை தொடரலாம் என்றபோதும், விஞ்ஞானிகள் 45 நிமிடத்திலேயே தமது ஆராய்ச்சியை முடித்துக் கொண்டனர்.

பின்னர், இதுகுறித்து சுவாமிகளிடம் கேட்ட போது, ‘பிரபஞ்ச சக்தி, சகஸ்ரார சக்கரத்தின் வழியே, உடலில் நுழைந்து வெளியேறிக் கொண்டிருந்ததால், தலை மீதிருந்த நாணயம் மேலும் கீழுமாக துள்ளியது. உடலில் மைக்கை வைத்தபோது, கேட்ட நீர்வீழ்ச்சி போன்ற இரைச்சல், உடலிலினுள் ‘பிராணா’ எனும் உயிர்ச்சக்தி ஓடுவதால் ஏற்படும் ஒலியே. இந்தப் பிராணா சக்தியை அதிகரித்து, நோயற்ற வாழ்வு வாழலாம் - ஆயுளையும் நீட்டிக்கலாம்’ என்றார் சுவாமிகள். அதைக் கேட்ட விஞ்ஞானிகள், ‘இந்தச் சாதனை அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு விந்தை’ எனக் கூறி வியந்தனர்.

(முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள்-2005 (Author: John P Nayagam) என்ற நூலிலிருந்து).
🖊
10
கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்கணும் போலத் தோன்றுகிறதா...

ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரை திறந்தவுடன் சாதத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு சின்ன வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி, இந்த விளக்கெண்ணெயில் தேய்த்து, கண் இமைகள் மீது ஒற்றி, ஒற்றி எடுங்கள். இதுபோல மூன்று நாள் செய்தால் நான்காம் நாள் கண் தெளிவாகத் தெரிவதோடு வலியும் இருக்காது...


Pages: [1] 2 3 ... 10