Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1

Happy Birthdya My dear Pisasu Kutty Caesar


2
Wishes 🎁 To Our Lovable Friend ⭐ MS CANIM⭐Many More Returns Of The Day 🎉🥳🎈🎉🥳🎈


3
Wishes 🎁 To Our Lovable Friend ⭐ MR CAESAR⭐Many More Returns Of The Day

4
அவள் யார் ?


அவளின் மனது கல் போன்று இருந்தாலும், சிறிய உளியாய் நான் மாறி, அவளின் மனத்தில் என் உருவதை சிற்பமாய்
செதுக்குகின்றேன்!

அவள் தன் வீட்டின் கஷ்டம் போக்க வேலையில் படும் துயரங்களால் தான் மனதை கல் ஆக மட்டும் கடந்து செல்கின்றாள் தன் வீட்டின் நலனுக்காக !
அவள் கல்லாக தன்னை நினைத்தாலும் கரைந்து கொண்டே போகிறாள் வேலை சுமையின் காரணமாக!

அவள் கல்லாக நினைத்தாலும், சமூகத்தில் நடக்கும் துயரங்களினால் அனு தினமும் பாதிக்கப்பட்டடு தினம் தோறும் அழுகிறாள் தனிமையில் ஆறுதலுக்கு கூட அன்பு எனும் அரவணைப்பு இல்லாமல் !

அவள் வீட்டின் நலனுக்காக வேலை செல்கிறாள் என்று புரிந்து கொள்ளாமல், அவளை நாள்தோறும் சிதைக்கின்ற உறவுகளினால் கல் என இருந்தாலும், சிதறுகிறாள் சிறு துண்டுகளாய் உறவுகளின் சுடும் வார்த்தைகள்!

அவளின் மனதில் என்னைச் சிற்பமாய் செதுக்க நினைத்து ,என் மனதையே  கல்லாக  மாற்றி  அவள் உருவத்தை
செதுக்கிவிட்டாள் அந்த அழகிய ராட்சசி!

அவள் நாள் தோறும்  என்னிடம் மட்டும் சண்டை போடும் சண்டைக்காரி!

அவள் என் உள்ளே ஆவியாகப் புகுந்து என் உடன் பயணிக்கிறது என் வாழ்கை பயணத்தில் ஓர் ஒளியாய்!

தென்றல் காற்றும் கூட நுழைய முடியாத என் இரும்பான மனதை அரை நொடிப் பார்வையால் துளைத்து உள்ளே நுழைந்தவள் !

அவள் என்னிடம் தான் படும்  துன்பம் எல்லாம் பகர்ந்து கொள்வாள் அனு தினமும்! அவள் என்னை நினைக்காத நாளும் இல்லை, நான் அவளை நினைக்காத நொடியும் இலை!
 
அவளின் கரம் பிடித்த அந்த நொடி கனவாக இருந்தாலும் ,என் மனத்தில் காலத்தினாலும் அழியாதது!
அழகிய வண்ணங்களால் ஆன வானில் இருந்து இறங்கி வந்த தேவதை அவளே!

அவள் இடைவிடாது என்னை வம்பு பண்ணும் சிறு பிள்ளையும் அவளே!
அவளை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை !
என் வார்த்தை கூட அவள் பெயராக மாறி போனது !
அவள் யார்? அவள் தான் என்னவள்!
5
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (25-Nov-2025) wishes 🎁 to our lovable friend ⭐ Mr. CAESAR ⭐ and wishes him Good Luck.


6
தியாகம்

தன்னை இழந்து மற்றவர் இன்புற்று இருக்க வாழும் வாழ்க்கை   இவ்வகை வாழ்க்கை இன்றைய சமுதாயத்திற்கு பொருந்துமா எல்லோராலும் கேட்கப்பட வேண்டிய ஒரு கேள்வி

மெழுகுவத்தி தன்னை உருக்கி நான் சுற்றி இருக்கும் இடத்திற்கு வெளிச்சத்தை கொடுக்கின்றது
இதே போல பல மனிதர்களை நாம் இப்ப பிரபஞ்சத்தில் காண முடியும்

கரப்பான் பூச்சிகள் இரண்டு வகைகளில் உண்டு ஒன்று முட்டையிடும் மற்றொரு வகையோ குட்டியை தன் வயிற்றில்  சுமந்து அது பிறக்கும் போது தன் வயிற்றறை கிழித்துக்கொண்டு தன் உயிரை தியாகம் செய்து தன் குட்டியை இவ்வுலகிற்கு கொடுக்கின்றது இது பல உயிரினங்களுக்கு பொருந்தும் இது தன் சந்ததியினை தடையின்றி வாழ வழி செய்கிறது

எத்தனையோ குடும்பங்களில் முதலாய் பிறந்தவன் தன் உடன் பிறந்தவள் திருமண வாழ்க்கை அமைவதற்காக காத்திருந்தேன் தன் வாழ்வை தியாகம் செய்திருப்பதை பார்த்திருக்கின்றோம்

எத்தனையோ சீமந்த பொத்திரிகள் குடும்பச் சுமையை தன் தலையில் சுமந்து தன்னுடைய தமக்கைக்கும் தனையனுக்கும்  குலதெய்வமாக வாழ்ந்திருக்கின்றார்கள்

இலக்கியங்களை பார்க்கும் போது அண்ணன் மட்டுமல்ல தம்பிக்களும் தியாக உள்ளங்கள் ஆக படைத்திருக்கின்றார்கள் கும்பகர்ணன் தன் அண்ணனுக்காக தன் உயிரை தியாகம் செய்தவன் லட்சுமணன் அண்ணனுக்காக தன் ராஜ வாழ்க்கையைத் துறந்து அண்ணனுடன் கைகோர்த்து துறவறம் புரிந்தவன் இவற்றில் கூட ரத்த பாசம் உண்டாகும் ஆனால் கர்ணனோ நட்புக்காக தன் உயிரை தியாகம் செய்து தியாகத்தின் திரு உருவமாக நின்றான்

மேலே கண்டதோ உறவு பாசம் நட்ப ஆனால் தமிழில் மேல் காதல் கொண்டு இறைவன் மேல் காதல் கொண்டு தன் இளமையையே தியாகம் செய்த அவ்வை பாட்டியை மறந்திட முடியுமா மணிமேகலையை இலக்கியத்திலிருந்து எடுத்துதான் விட முடியுமா வ உ சிதம்பரம் பிள்ளையை மறக்க முடியுமா தன் சொத்துக்கள் அனைத்தையும் நம் தாய் திருநாட்டிற்காக தியாகம் செய்த அந்த நல்ல ஆத்மாவை

மேற்கூறியவை அனைத்தும் நம் செவிகளால் மற்றும் எழுத்து வடிவமாகவே காணப்பெற்றோம்

நானோ என் இதயத்தால் என் கண்களால் தியாகச் செம்மலை என் அன்னையின் உருவில் கண்டேன்
இதை வளர்த்த அன்னை அம்மா என்று அழைப்பேன் என் அம்மா ஒரு விதிவிலக்கு மாற்றான் தாய் பிள்ளைகளான எங்களை தன் பிள்ளையாக பாவித்த தன் அண்ணன் எத்தனை அழைத்தபோதும் எங்களுக்காக எங்கள் உடன் இருந்து தன் வாழ்வை தியாகம் செய்தால் நான் கண் கண்ட என் தியாகச் செம்மல் என் அன்னையே


விடையை உங்களிடமே விடுகிறேன்  இப்பொழுதுள்ள சமுதாயத்தில் இப்படிப்பட்ட தியாக உள்ளங்களை காண முடியுமா
முடியும் எத்தனையோ தியாக உள்ளங்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்
இவ்வுலகம் அதன் வழியே இயங்கிக் கொண்டிருக்கின்றது இன்றளவும் ...


7
ஓர் தசைப்பிண்டத்தில் தத்ரூபமாய் வடிவமைக்கப்பட்ட ஓர் உயிர்...


இம் மண்ணில் விருட்சமென
தடம் பதிக்கும் போது பல்வேறு சவால்கள்களும்
அவனுக்கே தெரியாது, அவன் கூடவே பயணிக்க தயாராகி விடுகின்றது..

காதல், நட்பு, தேடல், சந்தோசம், துக்கம் என்ற
பல பெயர்களில் பல்வேறு விடயங்களைத்தான்
இம் மண்ணில் மானிடன் மரணம் வரை
தேடியோடிக்கொண்டிருக்கிறான்.

எத்தனை உடைவுகள் வந்தாலும்
உறுதியாய், கற்பனையிலும் சிறந்த ஓர் உலகினை
தேடுவதும் அதனை நிஜமாக்கிட
போராடுவதும்தான் அவனின் இயல்பு..


வீழ்ந்து எழும் ஒவ்வொரு நொடியும்
விண்ணை எட்டிப் பிடிக்கும் தூரத்தை
உயர்த்திக் கொண்டுதான் இருக்கிறான்..

சிதைந்திருந்த அறியாமையிலும்
சித்தரிக்கப்பட்ட இம் மண்ணை
சிறந்த சிந்தனைகளால் அழகியதொரு சிற்பமாய்
செதுக்கியிருக்கிறான் பல்வேறு கல்வியியல் வளர்ச்சியாலும்
தொழில்நுட்ப வளங்களாலும்..

அப்பேர்ப்பட்ட சிந்தனையின்
சிகரம் தான் மானிடன்...
அப்படி இருந்தும் சில சமயங்களில்
சில உடைவுகள் ஊண்டத்தான் செய்கிறது..
அதற்காய் தன்னைத் தானே சமுதாயத்திற்கு இரையாக்கிவிட இயலாது அல்லவா!!??..

ஆம்..!
சமுதாயம் என்ற ஒன்றால்
தம்மை ஒளிர்விக்கவும் முடியும்
இருள் ஆக்கவும் முடியும்..

யாருக்கும் மயங்கி விடாது
பாறையின் இயல்பென
முனைந்து முன் நிற்க வேண்டும்..
பாறையைக் குடைந்தால்
அழகிய சிற்பம்,
பாறையை சிதைத்தால் பயிர்கள் விளையும் மண்..,
இத்தனையும் அதன் இயல்பில் இருக்கும் போது
வெரும் பாறை என்ற கணிப்பே..., ஆனால்
அதனுள் ஏதோ ஓர் அழுத்தத்தை பிரயோகிக்கும் போதே
அதன் உண்ணதம் வெளிப்படும்..

அவ்வாறே மானிடா நீயும் இங்கே...
போலி வார்த்தைகளால்
உள்ளத்தையும் மூளையையும் சலவை செய்யும் போது
உன்னை நீயே கூர்மையாக்கிக் கொள்..
உன்னுள் எழும் சிறந்த சிந்தனையே
 உனக்கு முன் உருவாகும் உன் அழகிய உலகை மட்டும் அல்ல,
 அவ் உலகில் உன் இடத்தையும் பிரதிபலிக்கும்.
[/b]
8
உணர்வுகளற்ற என் கல் நெஞ்சில் கால் தடம் பதித்தவளே
கால் தடம் பட்டவுடன் எனக்குள்
மறைந்திருக்கும் மென்மையான உணர்வை வெளிக்கொண்டு வந்தாயே
சிதைந்திருந்த என் மனதை
உன் சிரிப்பால் சிறகடித்து பறக்க வைத்தாய்
உன் கடைக்கண் பார்வையால்
என் அன்பு இழ்ந்த கல் நெஞ்சமும் அன்பின் ஊற்று ஆனதே
கானல் நீர் போல் மறைந்து இருந்த
என் வாழ்வின் நிறைவேற ஆசைகளை நிறைவேற்றினாய்
உன் வரவால்
அன்பு இழந்து நொறிங்கிய
என் இதயத்தை
உன் இரு கைக்கொண்டு இணைத்து
இதயத்தை இதமாகினாய்
ஈரம் இல்லாத கல் நெஞ்சம் என்ற வார்த்தை பொய் ஆகினாய்
உன் கண் விழியின் ஈரத்தால்
உன் கண்ணீர் துளியால்
என் இதயம் உருகியதே
கொஞ்சம் சிரித்தாய்
என் நெஞ்சம் குளிர்ந்தது
சிறியதாய் ஏதோ பேசினாய்
என் நெஞ்சம் மகிழ்ந்தது

உன் நேசமிகுந்த நேசத்தால்
பாசம் நிறைந்த பாசத்தால்
அன்பு கலந்த நெஞ்சத்தின் காதலால்
என் நொறிங்கிய நெஞ்சத்தின்
வலியை குறைத்தாய்
வடுக்களாய் இதயத்தில் புதைந்த
பழைய நினைவுகளை
மறக்க செய்தாய்
இறுகிய என் மனத்தின் வலி உணர்த்தி
என் தனிமை வலியை போக்கினாய்
கடந்த கால கசந்த நினைவுகளை கலைந்து
நிகழ் காலத்தில் மன மகிழ்ச்சியுடன்
வாழ வைத்தது உன் காதல்
உன்னால் மென்மையானது
என் கல் நெஞ்சம்




9
ஆன்மீகம் - Spiritual / Re: BIBLE VERSE of THE Day ✝️ 🙏
« Last post by MysteRy on November 24, 2025, 06:55:42 PM »
Pages: [1] 2 3 ... 10