1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391
« Last post by சாக்ரடீஸ் on Today at 06:35:56 PM »நிலவே
இன்றிரவு
உன் வெளிச்சம்
என் ஜன்னலுக்குள் அல்ல
என் உள்ளுக்குள் விழுகிறது.
ஒருகாலத்தில்
யாரோ ஒருவன்
என் மௌனத்துக்கு
அர்த்தம் கொடுத்தான்
இப்போது
அந்த அர்த்தங்களை
நானே மறுபடியும்
எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
பேசப்படாத வார்த்தைகள்
என் நெஞ்சில்
அழுகி போவதற்கு முன்
உன்னிடம் ஒப்படைக்கிறேன்
நீ கேட்பாயா ?
எதிர் கேள்வி கேட்காமல் ?
அமைதியாய்
என் குரலை சுமப்பாயா?
அவன் குரல்
என் இரவுகளை அழகாக்கியது
அவன் இல்லாத
இந்த இரவுகள்
என்னை எனக்கே
திருப்பித் தருகின்றது.
"Saptiya"
"Enna pandra"
“good night” என்ற
சிறு விசாரிப்புகள்
என்னைக் காப்பாற்றும் என்று
நம்பிய காலம் போய்
இப்போது
அது எல்லாம் இல்லை
என்று ஆன பிறகு
ஒரு நிம்மதிப் பெருமூச்சே
போதுமானதாகி விட்டது.
அவன் நினைவுகள் தினம்தோறும்
என்னைத் தேடி வரும்
ஆனால்
நான் இனி அவற்றின்
சிந்தனை வலையில்
சிக்கிக் கொள்ள மாட்டேன்
அவனுக்காக காத்திருந்த
என் இதயம்
இப்போது
என் பெயரை
முதன்முறையாக சரியாக
உச்சரிக்கக் கற்றுக்கொண்டது.
நிலவே
இப்போது நான் கேட்பது
துணை அல்ல
குறைந்தபட்சம்
என்னையே இழக்காத
ஒரு தெளிவு.
நிலவே
பலரின் கவிதைகளுக்கான
முதல் வரி நீ
அதுபோல் நான்
என் சான்றோர்க்கு
எடுத்துக்காட்டாக
மாறிக் கொண்டிருக்கும்
ஒரு அமைதியான
முயற்சி இது
இந்த இரவின் நடுவில்
உன்னைப் பார்த்தபடி
என் பயணத்தை
நானே எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நிலவே
என்னுள் காதல்
இன்னும் இருக்கிறது
ஆனால் அது
யாரையும் தேடாது
யாராலும் நிரப்ப முடியாது.
அந்தக் காதல்
என்னை நானே
மெதுவாக அணைத்துக் கொள்ளும்
ஒரு அமைதி.
இது முடிவு அல்ல
இது என்னை நான்
மீண்டும் சந்திக்கும்
ஒரு தொடக்கம்

Recent Posts

