10
« Last post by RajKumar on Today at 12:17:55 PM »
*சளி, சைனஸ் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் பிரமர முத்திரை...*
*செய்முறை*
ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து,
மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும்.
இவ்வாறு தினமும் 15 முதல் 25 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
*பயன்கள்*
மனிதனது உடலில் உள்ள ஒவ்வாமை,
பயங்களைப் போக்கவல்ல அற்புத சக்தி கொண்டது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.
தொற்றுகள் ஏற்படும்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படுகின்ற வயிற்றுக் கோளாறுகள்,
சளி, சைனஸ் போன்ற தொல்லைகளுக்கும் இது நிவாரணம் தரும்.
*சைனஸ்...*
மூக்கு, சைனஸ் (எலும்புக்குழிகள்), தொண்டை, சுவாசக்குழாய்கள், இவற்றின் உட்படை வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு உண்டாகும் தொற்று ஜலதோஷம்.
பல வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன. அவற்றில் முக்கியமானது ரைனோ வைரஸ் (Rhino virus). இதிலேயே நூறு வகை வைரஸ்கள் உள்ளன.
ரைனோ வைரஸ் தான் பெரும்பாலான ஜலதோஷத்திற்கு காரணம்.
மூக்கில் நுழைந்த வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்க 1 லிருந்து 30 எண்ணிக்கைகள் போதும். வைரஸ் பெருகி மூக்கின் பின் பக்கமாக, அடினாய்டுகளில் படியும். தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தோன்ற 1 லிருந்து 3 நாட்களாகும்.
உடலுக்குள் ஜலதோஷ வைரஸ்கள் நுழையும் வாசல் மூக்கு தான்.
கண்கள் வழியாகவும் கிருமிகள் நுழைந்து, கண்ணீரின் வடிகால்கள் வழியே மூக்கின் பின்பாகத்தை அடையும்.
ஜலதோஷம் வழக்கமாக வாட்டுவது 7 நாட்கள். சில சமயங்களில் 14 நாள்கள் வரை நீடிக்கும்.
சளி கெட்டியாக பச்சை நிறத்தில் ஒழுகினால், அதில் “இறந்த” வைரஸ், திசுக்கள், பாக்டீரியாக்கள் இருப்பதால், ஜலதோஷம் முடியப் போவதின் அறிகுறி.
முடிந்து விடாமல் தொடர்ந்தால் “சைனஸ்” தொற்றாக இருக்கலாம்.
ஒரு தடவை ஜலதோஷத்தால் தாக்கப்பட்டால் நோயாளி எந்த வைரஸ் தாக்கியதோ அதற்கு நோய் எதிர்ப்பு உடையவராகி விடுவார்.
விட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும் – குறிப்பாக குளிர்காலங்களில் காலையிலும், மாலையிலும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வரவும்.
ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்காமல் இருப்பது.
சிகிச்சை
ஜலதோஷத்திற்கு என்று தனிப்பட்ட மருந்து என்று ஏதும் கிடையாது
அறிகுறிகளின் உபாதையை குறைப்பதற்கும், சிக்கல்கள் வராமல் தடுக்க மட்டுமே மருந்துகள் தரப்படுகின்றன.
ஆன்டி – பையாடிக் மற்றும் ஆன்டி – வைரஸ் மருந்துகள் பலன் தராது தவிர இவற்றின் பக்க விளைவுகளும் அதிகம்.
*வீட்டு வைத்தியம்*
அடைபட்ட மூக்கை திறப்பதற்கு சிறந்த வழி ‘ஆவி பிடிப்பது’. ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் நீரை விட்டு, அதிலிருந்து எழும் நீராவியை நுகரவும். துவாலையால் முழு நீராவியும் முகத்தில் / மூக்கில் படுமாறு, தலையை மூடிக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் மூலிகைகள் போட்டு நுகரலாம். வெங்காயம் அல்லது பூண்டை நசுக்கி போடலாம்.
சுக்கு, மிளகு, துளசி போன்றவற்றை சமஅளவு எடுத்து டீ ’ போல பருகி வர ஜலதோஷம் விலகும். இதை தினம் (ஜலதோஷம் இருக்கும் போது) 2 (அ) 3 முறை எடுத்துக் கொள்ளலாம்.
காலையிலும், இரவும் சூடான பாலில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி, சிறிதளவு சுக்கு, மிளகு, திப்பிலி தூள்கள் சேர்த்து பருகி வர ஜலதோஷம் குறையும்.
வெறும் பால் + மஞ்சள்பொடி அல்லது நீர் + மஞ்சள் பொடி கூட போதுமானது. பாலில் குங்குமப் பூ சேர்த்து பருகினாலும் நல்லது.
மூக்கில் சளி கொட்டினால் வெற்றிலைச் சாற்றில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தும்மலும் குறையும்.
இஞ்சிப்பொடி, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை – இவை ஒவ்வொன்றும் 1/2 தேக்கரண்டி எடுத்து, ஒரு சிட்டிகை கிராம்புப் பொடியுடன் சேர்த்து ஒரு கப் கொதி நீரில் இடவும். 10 நிமிடம் ஊறிய பின், வடிகட்டி நீரை குடிக்கவும். இதை தினம் 3 (அ) 4 தடவை குடிக்கலாம்.
நாம் வழக்கமாக பருகும் தேநீரில் 3 (அ) 4 துளிகள் இஞ்சிச் சாறு விட்டு குடிக்கலாம். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.
வெங்காயத்தின் ஒரு பெரிய துண்டை ஒரு கிண்ணத்தில் போட்டு, மிளகுப் பொடியை (ஒரு தேக்கரண்டி) தூவி இவற்றின் மேல் கொதிக்கும் நீரை விடவும். 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு இந்த நீரை இளம் சூட்டில் குடிக்கவும்.
சூடான அல்லது வெது வெதுப்பான நீரை அடிக்கடி குடிக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
இஞ்சி சாற்றுடன் சம அளவு தேன் கலந்து தினமும் 1/2 தேக்கரண்டி தினமும் இரு முறை எடுத்துக் கொள்ளலாம்.
துளசிச்சாறு + ஒரு கைப்பிடி ஆடாதொடை இலைகளின் சாறு தினமும் 1 தேக்கரண்டி வீதம் 3 நாட்களுக்கு சாப்பிடவும்.
ஆடாதொடை வேர் – 30 கிராம், துளசி இலைகள் 20 கிராம், சுக்கு 5 கிராமும் எடுத்து இவற்றை 1 லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும். கால் பாகமாக (250 மி.லி.) தண்ணீர் சுருங்கும் வரை காய்ச்சவும். இதில் 60 மி.லி. எடுத்து, தினம் 4 வேளை குடிக்கவும். இதை 3 நாட்கள் செய்யவும்.
அகஸ்திய ரசாயனம் – இதை இரண்டு வாரத்திற்கு உணவுக்கு பிறகு 1 தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
ஜலதோஷம் ஏற்பட்ட உடனேயே, விட்டமின் சி அதிக அளவு எடுத்துக் கொண்டால், ஜலதோஷத்தின் தீவிரம் குறையும். மறுபடியும் வருவதை தவிர்க்கலாம்.