7
« Last post by RajKumar on November 15, 2025, 09:52:05 AM »
நமக்கு எல்லாவற்றிலுமே
அவசரம், பதட்டம்தான்.
ஹாஸ்பிடல் சென்ற போது பார்த்தேன். லிப்ட் பட்டனை ஒருவர் அடிக்கடி வேகமாக பதட்டத்தோடு அழுத்தி கொண்டு இருந்தார் லிப்ட் சீக்கிரம் வரும் என்ற எண்ணத்தில்.
மற்றவர்கள் பேச்சை முடிப்பதற்குள் அரைகுறையாக புரிந்து கொண்டு,
சிலர் ஊழி தாண்டவம் ஆடுவார்கள்.
பக்திமான் நண்பர் ஒருவர்,வேக வேகமாக ஸ்லோகங்கள் சொல்வார். அவருக்கே புரியாது. ஏதோ பள்ளி குழந்தை
அவசரமாக ஒப்புவிப்பது போல்.
சிலர் உணவு உண்ணும் போது கூட, உலகத்தையே இவர்கள்தான் போய் தாங்குவது போல, தட்டில் இருப்பது என்ன என்று பார்க்காமல் நெருப்பு கோழி போல சாப்பிடுவார்கள்.
செய்யும் காரியங்களில்
பதற்றம். பேசுவதில் அவசரம்.
தங்களை நிதானப்படுத்தி கொள்ளாவிட்டால், வாழ்வே திசைமாறிவிடும்.
Be at the moment என்று
ஓஷோ கூறுவார்.
One thing at one will என்று
அருட்தந்தை கூறுவார்.
சின்ன சின்ன காரியங்களை நிதானமாக செய்து பாருங்கள். எப்போதும் செய்வதை விட சிறப்பாக இருக்கும்.
பெரிய முயற்சிகள் செய்யும்போது,
இந்த பழக்கம் தொடரும்.