7
« Last post by Sadham on January 22, 2026, 08:49:38 PM »
ரம்ழானும் நானும்
இடைவிடாது 30நாள் நோன்பு வைத்து காத்திருக்கும் பெருநாள் தான் ரம்ழான். ரம்ழானில் சிறந்த இரவாக 27th லைலத்துல் கத்ர் இரவு இருக்கும். இரவு மிகச் சிறந்த தொழுகை இருக்கும்.
குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து இரவு தொழுகைக்குப் பள்ளிவாசலுக்குச் செல்வோம் . பள்ளிவாசல் வண்ண ஒளி விளக்கினால் அலங்கரிக்கப்பட்டு அற்புதமாக காட்சி அளிக்கும்.நான் அந்த வண்ண ஒளிகளை பார்த்து ரசிப்பேன் .கூட்டம் அலை மோதி இருந்தாலும் தொழுகை நேரத்துல் அவரவர் வரிசையில் நின்று அந்த புனித மிகு இரவின் சிறப்பு தொழுகை நிறைவேற்றுவோம்.
அந்த இரவு முழுவதும் திருக்குர்ஆன் உடன் பிரார்த்திப்போம் . பண்டிக்கு 2நாள் முன்னாடி உறவினர்கள் மட்டும் அல்லாமல் ஏழை ,எளியவர்களுக்கு புது துணி எடுத்து கொடுத்து மகிழ்வது போல சந்தோஷம் நிறைந்த மாதம் தான் ரம்ழான் மாதம்.
எங்க ஊரில் உள்ள அனைத்து (முஸ்லிம்) சமுதாய மக்கள் அனைவரும் ஒன்று கூடி பெருநாள் தொழுகையை நிறை வேற்றுவோம் . தொழுகை முடிந்ததும் பிற சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம். மற்றும் நண்பர்களுடன் வெளியே வந்து, அவர்களுக்காக பிடித்த ஆடை வாங்கி கொடுத்து,உணவு உண்டு மகிழ்வோம் .பின்பு வீடு வந்து சேர்ந்து தோப்புள் கொடி உறவான சமூகம் ,நண்பர்கள் ,வீட்டிற்கு உணவு கொடுத்து மகிழ்வோம். சொந்தம் பந்தம் வீடு சென்று பெரியோர்களிடம் ஆசி வாங்க ஆவலாகக் காத்திருப்பேன்.
குடும்ப நண்பர்கள் உடன் ஒருவரை ஒருவர் இனிப்பு ஊட்டி மகிழ்வோம். அதன் பிறகு நண்பர்கள் உடன் ஊர் சுற்றிப் பார்க்க போறது அளவில்லா மகிழ்ச்சியைத் தரும்.மீண்டும் அந்த ரம்ழான் எப்போ வரும் .... இந்த நாட்கள் இனிய நினைவாக என் மனதில்....
மகிழ்ச்சி மட்டும் அல்லாமல் எனக்கு எங்க அப்பா அம்மா சொல்லி கொடுத்த விடயம் இந்த ரம்ழான் நோன்புக்கு ஏழை, பணக்காரன்னு சொல்ல கூடாது.அனைவரும் சமம் தான். பெரும் நோயாளியைத் தவிர அனைவருக்கும் நோன்பு கட்டாயம் ஆக்க பட்டது என்று சொல்லிக் கொடுத்தார் அப்பா.நான் சிறு வயதில் இருந்தே நோன்பு வைப்பேன் .மற்றும் என் குடும்பமும் என்னற்ற மழைச்சி உடனும், குடும்பத்தில் சந்தோஷம் ஆகவும் நான் வாழ்கிறேன்.
இருளும் சோகமும் விலகி வளர்பிறையாய் வாழ்க்கை பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். ஐந்து வேளை தொழுகை என்பது நோன்பு முடியும் வரை அல்ல இந்த உலகை விட்டு நம் உயிர் பிரியும் வரை இனிய ரம்ழான் ....
வருகை வருகை என வரவேற்கின்றேன்