Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:51:59 AM »
2


பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : அத்தைக்கு
பிறந்தவளே ஆளாகி
நின்றவளே பருவம்
சுமந்து வரும் பாவாடை
தாமரையே

ஆண் : தட்டாம்பூச்சி
பிடித்தவள் தாவணிக்கு
வந்ததெப்போ மூன்றாம்
பிறையே நீ முழு நிலவா
ஆனதெப்போ மெளனத்தில்
நீ இருந்தா யாரை தான்
கேட்பதெப்போ ஓ…….

ஆண் : { ஆத்தங்கரை
மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே } (2)

ஆண் : ஓடைக்கர ஒழவு
காட்டுல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து
சண்டை இடும் அந்த
முகமா

ஆண் : தாவணிக்கு
வந்ததொரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன
விட்டு போகாது அட
ஓடத்தண்ணி உப்பு
தண்ணி ஆகாது

பெண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே

ஆண் : ………………………

பெண் : மாமனே உன்னை
தாங்காம மத்தியில்
சோறும் பொங்காம பாவி
நான் பருத்தி மாரா போனேனே

பெண் : காகம் தான்
கத்தி போனாலும்
கதவு தான் சத்தம்
போட்டாலும் உன்
முகம் பாக்க ஓடி
வந்தேனே

பெண் : ஒத்தையில்
ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர்
சொன்னேனே ஒத்தையில்
ஓடும் ரயில் ஓரம் கத்தியே
உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம்
போனதும் நேரம் ஆனதும்
கண்ணீர் விட்டேனே

பெண் : முத்து மாமா
என்னை விட்டு
போகாதே என் ஒத்த
உசுரு போனா மீண்டும்
வாராதே

ஆண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே

ஆண் : தாவணி
பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும்
சுகந்தானா பாறையில்
சின்ன பாதம் சுகந்தானா

ஆண் : தொட்ட பூ
எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள்
சுகந்தானா

ஆண் : { அயித்தயும்
மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா } (2)
அன்னமே உன்னையும்
என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சுகந்தானா

ஆண் : மாமன்
பொண்ணே மச்சம்
பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு
மயிலப் பசுவு தோதாச்சு

பெண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே

ஆண் : ஓடைக்கர ஒழவு
காட்டுல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து
சண்டை இடும் அந்த
முகமா தாவணிக்கு
வந்ததொரு நந்தவனமா

பெண் : உள்ள சொந்தம்
என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு
தண்ணி ஆகாது

ஆண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே



3
நித்தம் ஒரு போர், அவள் நிழலோடும் நிஜத்தோடும்..
நிந்தனைச் சொற்கள் நெஞ்சில் தைக்கும் முட்களாய்..
அடுப்படிப் புகையில் தொலைந்த கனவுகள் ஒருபுறம்..
அலுவலகப் போட்டியில் நசுங்கும் உணர்வுகள் மறுபுறம்!!

தன் விருப்பத்தைச் சொல்லத் துடித்தால்..
"திமிர்" என்று முத்திரை குத்தியவர்கள்..
அவளது மௌனத்தை வசதியாக்கிக் கொண்டு..
அதிகாரம் செய்த உறவுகள் ஏராளம்!!

ஒவ்வொரு முறையும் வீழ்த்தும் போது அவள் நினைக்கிறாள்,
இதுவே கடைசி வீழ்ச்சியாய் இருக்கட்டும் என்று..
ஆனால் உலகமோ மீண்டும் ஒரு புதிய சங்கிலியைத் தேடும்,
அவள் கால்களைக் கட்டிப் போட..கனவுகளைச் சிதைக்க!!

"உன்னால் முடியாது" என உலகம் சொல்லும் போது,
"முடித்துக் காட்டுகிறேன்" என மெளனமாய் முழங்குகிறாள்..
பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் பிம்பம் இவள்!!

​வலிகள் அவளுக்குப் பழகிப் போனது..
வடுக்கள் அவளுக்குப் பாடமானது..
அழுவதை அவள் நிறுத்திய போது..
அறிவோ அவளுக்கு ஆயுதமானது!!

​​உலகம் சொன்னது "முடியாது",
உள்ளம் சொன்னது "முயன்றுபார்",
முயற்சி இன்று வெற்றியில்..
முழுமையாய் அவள் விடுதலையில்!!
4
கட்டுண்டு கிடப்பது கைகள் மட்டுமல்ல
உள்ளத்தில் எழும் உணர்வுகளும்...
தானே பூட்டிக்கொண்ட விலங்கு தான்
தன்னிலை மறக்க பூட்டிக்கொண்ட விலங்கு தான்
ஆனால் காவலுக்காக அல்ல
சில பார்வைகளுக்காக பூட்டப்பட்ட விலங்கு...

சிறுவயதில் காப்பாக இருந்தது இன்று
கருங்கல் பாரமாகி போனது..
வட்டத்தை வரைந்த பந்தமும்
இன்று காணாமல் போனது
விமர்சனம் செய்யும் சுற்றமும்
மேலும் சங்கிலியால் இறுக்கியது...

பிம்பத்தைக் காட்டும் ஆடியும்
வேறொரு தோற்றத்தைக் காட்டிடவே
தேடலை நிறுத்திய சங்கிலியே இன்று
தன் பிடியை தளர்த்திடவே...
வறண்டு கிடந்த வேர்களும்
புதிய பூக்களை சொறிந்திடவே


பாலை நிலத்தின் மணலும்
மாரியின் சாரலில் குளிர்ந்திடவே...
இறுக பற்றிய சங்கிலியில்
புதிய விடியலும் உதித்திடவே...
போலித்திரையில் அடைப்பட்ட உள்ளமும்
பூட்டிக்கிடந்த விலங்கை தானே உடைத்திடவே...
புதியவள் ஆகிறாள் புத்துயிரோடு புணருகிறாள்
5
     "பெண்களே மாபெரும் சக்தி"

பெண்கள் நாட்டின் இரு கண்கள்
பெண்கள் தான் இவ்வுலகின் தூண்கள்
பெண்கள் வாழ்க்கையின் ஆதி
பெண்கள் உறவுகளின் உயிர்
பெண்கள் சமூகத்தின் அத்திவாரம்

பூமியில் உயிர்களை மலர வைக்கும் மாபெரும் சக்தி பெண்கள்
ஒரு ஆண் இன்றி பெண்ணால்
வாழ முடிவது  பெண்களின் பெரும் தன்னம்பிக்கையே!
பெண் இன்றி ஆண்களால்
வாழ முடியாத காரணம்
ஆண்களின் தன்னம்பிக்கையே
பெண்கள் தான்!

பெண் சக்தி மாபெரும் சக்தி
இவ்வுலகில்....
பொறுமை பெரிது என்று வாழும்,
எத்தனையோ பெண்கள்...
வறுமையில் கூட போராடி வென்று
வாழும் பெண்கள்...
பெற்ற குழந்தைகள்,கணவன்,பிறந்த வீட்டார்,புகுந்த வீட்டார் என பாசத்தினால்
தாங்கிப் பிடிக்கும் சக்தி அவள்!

இன்னலில் அழுதாலும் ,
விடியலைத் தேடி புன்னகையுடன்
வீறுநடை போடுபவர்கள்
சிங்கப் பெண்களே!
தன் பசி,தூக்கம் விடுத்து
தன்னைச் சார்ந்தவர்கள்
பசி போக்கிடும் பெண் சக்தி!

ஒரு பெண்ணின் சிறு வயதில்
கற்றுத் தரப்படுகிறது "பொறுப்பு'
இளமையில் போராட ஆரம்பிக்கின்றாள்
தன் கனவுகளை நோக்கி...
ஒரு பெண் கல்வி கற்பதால்
குடும்பம் மட்டுமல்ல பயனடைகிறது வளமான நாடும்....
பட்டம்,பதவிகள் பல பெற்றாலும்
தன் கடமைகளை மறவாத
பெண் சக்தி அவள்!

விஞ்ஞான உலகை இயக்குவது சக்தி
பெண் தெய்வங்களை அழைப்பதும் சக்தி
அதே போன்று மனித உலகினை
இயக்குவது பெண் சக்தி அல்லவா ?
பெண் சக்தியை மாபெரும் சக்தி என்று கூறுவதில் வியப்பில்லையே!

பெண்கள் தைரியமானவர்கள்-ஆனால்
இந்த உலகம் கூறுவது "திமிர் "பிடித்தவள்
பெண் நியாயத்திற்காக குரல் கொடுத்துக்கிட்டே இருப்பாள்
அத்துமீறும் ஆண்களை சுட்டெரிக்கும்
மாபெரும் சக்தி பெண்களுக்கு உண்டு!

புரட்சி பெண்ணே உன் புன்னகையால்
பூமியை வென்றிடு!
அடிமை சட்டங்களை உடைத்தெறிந்திடு!
ஆணவக்காரர்களை அடக்கிடு!
தீயவர்களை திருத்தி நல்லவர்களாக
வாழ வைத்திடு !

பெண்கள் தொழில்,கல்வி, அரசியல்,
சமூகசேவை,விண்வெளி,விவசாயம்,
வர்த்தகம் எங்கும்  வியாபித்து
உள்ளமை பெருமையே!

உலகில் உயர்ந்தது உனது மன தைரியம்
உலகில் மிகப்பெரிய உடல் வலியாம்
பிரசவ வலியை தாங்கிய உனக்கு
அனைத்து தடைகளும் பெரிய வலி அல்ல..

யாருக்கும், எதற்கும் பெண்ணே
நீ அடிமை அல்ல..
அடிமை விலங்கினை தகர்த்தெறிந்திடு பெண்ணே உன் மாபெரும் சக்தியால்..
பெண்ணே உன்னால்  மலரட்டும் வண்ணமயமான வளமான மனித உலகம்!
நானும் பெருமை கொள்கின்றேன்
"பெண்" என்ற உன்னதமான பிறப்பினால்...










7
Happy Birthday Wisdom sister
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என்றென்றும் மகிழ்ச்சியுடன் புன்னகையுடன்
நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
8
சொன்னாலும் கேட்காமல்
கொன்றாலும் தோற்காமல்
அடம்பிடிக்கின்ற இதயத்திற்கு
என்றும் உன்நிழலே தஞ்சம்...!!!

🌹கண்கள்🌹
9
🌹மைபூசி கண்களுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுக்கிறாள், என்னவள்!🌹
10
🌹இது கனவா, இல்லை நினைவா? என்று கிள்ளிப் பார்த்தேன்; உன் கண்களை பார்த்து நான் உறைந்த நிமிடத்தை!🌹
Pages: [1] 2 3 ... 10