Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 06:09:35 AM »
2


During software development,
switching between databases often introduces unexpected issues.
I learned a lot during this stage when our app started showing feature failures
after migrating to Supabase.

Problems like BGM editing errors and BGMs not receiving proper IDs were caused
by mismatches between the old and new database structures.

I’ve written scripts to fix these conflicts, and I’m resolving each issue one by one.
Everything will be fully fixed soon
3


மௌனமே அவளது பதில்…!

யாரடா இவள் இவ்வளவு கல் நெஞ்சுக்காரி?
இவளை உடைப்பது கஷ்டம் போலே…
ஆணவம் பிடித்தவள், இரக்கமற்றவள்,
கருணை என்ற சொல்லே அவளகத்தே இல்லை.
புன்னகை கூட முகத்தோடு பிணக்காயிருக்க,
உணர்வுகளை மறந்த கல் சிலை போல அவள்.

இவளை யாருக்கு பிடிக்கும்?
அழகை மட்டும் தாங்கி நிற்கும் அவள்…
அவளுக்கு நான் பணிவது தகுதி இல்லாததற்கே.
இவள் உள்ள உலகத்துக்கு
அவள் என்ன பயன் கொடுத்திருப்பாள்?

எத்தனை இழிந்த பேச்சுகளுக்கும்
அவள் சுலபமான இலக்கா இருந்திருக்கிறாள்.
வார்த்தைகளே இல்லாமல் போனாலும்
அவளை வசைபாட உலகம் தயாராகத்தான் இருக்கும்.

ஆனா அவள் என்ன பாவம் செய்தாள்?
இந்தப் பெண்ணாய் பிறந்ததைத்தவிர…?

அவள் உள்ளத்திற்குள் சென்று பார்த்தால் தான் தெரியும்—
எத்தனை துண்டுகளாய் உடைந்து கிடக்கிறாள் அவள்!
கல்லாய் தெரிந்தாலும் அவள் நினைவுகள்,
கடலாய் பொங்கும் கனவுகளைக் கொண்டவள்.

வெளியில் கல் சிலைபோல் தெரிந்தாலும்,
உள்ளே சென்றுப் பார்ப்பாய்—
அவள் ஒரு அழகிய கலை.
உலகம் வீசும் கற்கள் எல்லாம்
அவளுக்கு வெற்றியின் படிக்கட்டுகள்.

அவள் தேடும் உலகம் வெளியில் இல்லை…
அவளுள் தான் இருக்கிறது.
அவளின் எண்ணக்குரல்கள்
அவளை மலராகவும், புயலாகவும் மாற்றும்.

அவள் கண்கள் மூடப்பட்டிருக்கலாம்,
காதுகள் கேட்காமல் இருக்கலாம்,
உதடுகள் சிரிப்பை மறக்கலாம்—
ஆனா அவளது எண்ணங்களை
நீயால் ஒருபோதும் சிறை பிடிக்க முடியாது!

எத்தனை கேள்விகள், கிண்டல்கள், விமர்சனங்கள் வந்தாலும்
அவை அவளை முட்டுவதில்லை—
அவள் இருக்கும் சிந்தனை குகைகளில்.

அவள் அனுமதிக்காவிட்டால்
காற்றே கூட அவளிடம் நெருங்க முடியாது.
பறக்க துடிக்கும் பறவையைப்போல்
ஆயிரம் கனவுகளுடன் அவள்!
ஆனால் அவளை பலவீனப்படுத்த
லட்சம் குழப்பங்களும் முன் நிற்கும்.

அதற்கும் மேலே அவளது மனஉறுதி.
உலகம் எவ்வளவு காற்றை வீசினாலும்—
காணாமல் ஆக்க முயன்றாலும்—
அவள் ஒருபோதும் மாறப் போவதில்லை.
அனைத்தையும் தாண்டி
இந்த பூமியையே வெல்வாள் அவள்!

இனி அவள் பேசப் போவதில்லை…
அவளது மௌனமே எல்லா கேள்விகளுக்கான பதில்..!
4
                  மானிடனே!

மண்டை ஓட்டினுள் மானிட மூளையினை இறைவன் படைத்தது ஏன் தெரியுமா?
மதியால் தான் உன்னையும், உலகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று!
மானிடனே அதை மறந்த நீ உன்னையும்,உலகத்தையும் சிறு துண்டுகளாய் உடைக்கின்றாயே!

ஒருவன் பாட்டு பாடினால் ,இவனுக்கு பாடத்தான் தெரியும் படிக்க தெரியாதென்பாய்!
ஒருவன் நன்றாக படித்தால்,இவன் படித்து என்ன கிழிக்கப் போறான் என்பாய்!
ஒருவன் நன்றாக விளையாடினால்,இவன் உருப்பட மாட்டான் என்பாய்!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை உலக வளர்ச்சிக்காக வித்திடு!
வக்கிர எண்ணத்திற்குள் புதைத்து விடாதே!
வளமாக வீதி விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் ,எத்தனை இழப்புக்கள் மூளைச் சாவுகள்?

உண்ண உணவின்றி,உடுக்க உடையின்றி ,தங்குமிடமின்றி தவிக்கும் மானிடர் ஒருபுறமிருக்க!
உயிரைக்கொடுத்து பால் அபிக்ஷேகம் நடிகர்களுக்கு இன்னொருபுறம்!
உனக்கு கடவுள் பாதுகாப்பாக தந்த  மூளையை செவ்வனவே பயன்படுத்தாமல் ,
சிதறடித்துவிட்டாய்!
உண்ணும் உணவில் போசனை இன்றி நோய்களும்,இளம் சாவுகளும்!
உடற்பயிற்சி இன்றி உடல்,உளச் சோர்வுகளுடன் நடமாடும் மானிடரே!

உழைக்கும் கரங்களை உயர்த்தி விடு!
உலக உயிர்களை உளமார நேசி!
உதவி செய்வதில் உத்தமனாய் இரு!
உலக வளர்ச்சிக்கு உன் அறிவை காணிக்கையிடு!
உளமார வாழ்த்திடு மற்றவர்கள் திறமைகளை!

உன் மதியினை சிறப்பாக பயன்படுத்திடு மானிடனே!
உன்னையும் பாதுகாத்து உலகத்தையும் சிதறிடாமல் பாதுகாத்திடு மானிடனே!





5
Wish You Many More Happy Returns Of The Day Canim Sis❤️🎂💐

6
Belated Happy Birthday Caesar Dude 🎂💐[/co :blank:lor]
7
Wish You Happy Birthday Canim Sis..!

9
Happy Birthday Caesar Raja Maha இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என்றென்றும்  புன்னகையுடன் மகிழ்ச்சியுடன் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
10
..
''அன்பான, ஆதரவான வார்த்தைகள்...!"*
.......................................
பல நேரங்களில் நல்லதாக, ஆதரவாக சொல்லப்படும் அன்பான வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவதில்லை...

அதுவும் துன்ப காலங்களில் ஒருவர் சிக்கித் தவிக்கும் போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும் செயலாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவே இல்லை...

தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கும் நீந்தத் தெரியாத மனிதனுக்குக் கிடைக்கும் மரக்கட்டை பிடிகொடுத்து மிதக்க உதவுவதைப்போல, அந்த அன்பான நல்ல வார்த்தைகள் துன்ப காலங்களில் தாக்குப் பிடிக்க ஒருவருக்கு உதவுகின்றன...

மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள், திறமையாளர்கள் கூட சில நேரங்களில் தங்கள் தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் இழந்துவிடுவதை நாம் பார்த்திருக்கின்றோம்...

அவர்களே தங்களுக்குள் அவற்றை இழந்து நிற்கும் அந்தக் குறுகிய காலத்தில் அடுத்தவரிடமிருந்து வரும் நம்பிக்கை வார்த்தைகள் எப்படிப்பட்ட ஊக்க மருந்தாக வேலை செய்கிறது என்பதைக் கண் கூடாகக் கண்டு இருக்கின்றோம்...

இன்றைய நாட்களில் ஆதரவான நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையிலேயே அரிதாக இருக்கிறது...

எத்தனையோ வசதி, வாய்ப்புகள் பெருகி இருந்தாலும் மனப் பற்றாக்குறையாலும்,நேரப் பற்றாக்குறையாலும் நல்ல நம்பிக்கை, ஆறுதலூட்டும் வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது...

இந்த சிறிய குறைபாட்டின் விளைவுகள் வார்த்தைகளில் அடங்காதவை. பூதாகாரமானவை...


🟡 *சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை. அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள்...!*

🟡 *அப்படி நல்லதைப் பாராட்டும்போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள். மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கியிருக்கையில் மனமுவந்து ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள்...!*

🔴 *வருத்தங்களையும், தோல்விகளையும் கடக்காமல் எவரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள். உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலே வந்தவர்கள் பற்றி எடுத்துச்சொல்லி தைரியப்படுத்துங்கள்...!!*

🔴 *அதன் மூலம் அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள். காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள்...!!*

⚫ *பிறையாகத் தோன்றும் எல்லாமே முழு நிலவாகிப் ஒளிர்வதில்லை. எத்தனையோ பிறைகள் அலட்சியத்தாலும், கடுமையான விமரிசனங்களாலும் அமாவாசை இருட்டாய் தொலைந்து போய் இருக்கின்றன...!!!*

⚫ *ஒரு திறமை வெளிப்படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும் போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள். தங்கள் திறமைகள் மீது உண்மையிலேயே நம்பிக்கை ஏற்படும் வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இது போன்ற நல்ல வார்த்தைகள் தேவைப் படுகின்றன...!!!*

🔘 _*அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயக்கம் கொள்ளாதீர்கள்.  தன்னலமில்லாத சேவைகளை செய்ய நமக்கு முடியாமலிருக்கலாம். ஆனால் ,அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லலாம் இல்லையா...?*_

🟢 _*அதற்கு என்ன செலவு இருக்கிறது...? அதில் என்ன சிரமம் இருக்கிறது...? இந்தக் கணத்திலிருந்து சிரமமில்லாத, செலவில்லாத அந்த நல்ல செயலை நாம் செய்ய ஆரம்பிப்போமா.
Pages: [1] 2 3 ... 10