1
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-003 (பள்ளிவிடுமுறையும் பாட்டி வீடும்)
« Last post by Madhurangi on Today at 10:43:18 PM »அப்பம்மா வீடு
கிழக்கு இலங்கையின் கரையோர பகுதியில் எங்க அப்பம்மா வீடு. விருந்தோம்பலுக்கு பெயர் போன மீன் பாடும் பூமி அது. அட metaphor ஆஹ் சொல்லலைங்க, நிஜமாவே அந்த கடற்கரை ஓரமா பௌர்ணமில போனோம்னா கடலலைகளோட மீன்கள் எழுப்புற சத்தம் பாடுற மாதிரி இனிமையா தான் இருக்கும்.
கடலுக்கும் எங்க வீட்டுக்கும் 100m தான் தூரம். ஆகஸ்ட் விடுமுறையில பெரியப்பா family சித்தப்பா family நாங்கன்னு எல்லாமே அங்க ஆஜர் ஆகிடணும்கிறது மீற முடியாத எங்க அப்பம்மாவோட அன்பு கட்டளை. சமையல் மட்டும் ,தான் மட்டும் தான் பண்ணுவன்றது,எங்க அப்பம்மா சமரசமே பண்ண முடியாம அடம் பிடிக்கும் விஷயம்.இருக்கிற அவ்வளவு நாளும் ஒவ்வொரு வேளை சாப்பாட்டுலயும் மருமகள், மகன் மற்றும் பேரப்பிள்ளைங்க favourite dish அவங்க கையாலேயே பார்த்து பார்த்து செஞ்சு வச்சிடுவாங்க.செல்லம், குட்டி, தங்கம் அப்படின்ற வார்த்தைகளைத் தவிர பெயர் கூட சொல்லி கூப்பிட மாட்டாங்க எங்க அப்பம்மா. வீணை முதல் ஆங்கில இலக்கியம் வரை கற்றுத் தேர்ந்த ஆழ்ந்த அறிவும் அன்பும் கொண்ட பெண்மணி.
அம்மா, பெரியம்மா, சித்தி எல்லாம் இருந்து கதை பேசி கொண்டே ,அப்பம்மா சமையலுக்கு காய்கறிகள் வெட்டி கொடுப்பாங்க .
அப்பா, பெரியப்பா, சித்தப்பா இருந்து பூகோள அரசியல்ல இருந்து, cricket ஆன்மீகம் வரைக்கும் அலசி ஆராய்வாங்க.
நம்ம cousin gang ,வெளிநாட்ல இருந்து சித்தப்பா கொண்டு வந்த சின்ன வீடியோ camera வச்சு அப்பவே short film எடுப்பம் . Battery போடுற guitar toy எங்க BGM source.பனங்கா பணியாரத்துல இருந்து nestamalt வரைக்கும் advertisement கூட நாங்க அப்பவே shoot பண்ணிருக்கோம். அதை மணல்ல பாய் விரிச்சு வெற்று சுவர்ல மல்டிமீடியா ப்ரொஜெக்டர்ல ப்ரொஜெக்ட் பண்ணி எல்லோருக்கும் இரவு telecast பன்றது எங்க பெருமிதம்னான பால்ய கால oscar moment .
அப்பம்மா வீட்டை சுத்தி நிறைய முந்திரி மரம் இருக்கும். இரவின் அமைதியில ஓயாம கேட்கும் கடல் அலை சத்தம் பின்னணியில ,எங்க அப்பம்மா விறகடுப்பு மூட்டி சுடுமணல்ல முந்திரி வறுத்து உடைச்சு தர்ற முந்திரிக்கு எங்க ஸ்கூல்ல அவ்வளவு டிமாண்ட் இருக்கும்.
taunami பேரலையில் எங்க வீடும் முந்திரி தோட்டமும் அழிஞ்சு போயிருந்தாலும் , எங்க வீட்டு கட்டிடத்தின் எச்சங்களும் அந்த வெண்ணிற மணலும் , கடலலை சத்தமும் இன்னும் எங்க பள்ளி கால விடுமுறை நாட்களின் வாழ்வியலின் அடையாளமாய் இன்னைக்கும் நிலைச்சு நிக்குது.ஏன்னா சில கட்டிடங்கள் கற்களால கட்டப்பட்டதில்லை. நினைவுகளால கட்டப்பட்டது.
கிழக்கு இலங்கையின் கரையோர பகுதியில் எங்க அப்பம்மா வீடு. விருந்தோம்பலுக்கு பெயர் போன மீன் பாடும் பூமி அது. அட metaphor ஆஹ் சொல்லலைங்க, நிஜமாவே அந்த கடற்கரை ஓரமா பௌர்ணமில போனோம்னா கடலலைகளோட மீன்கள் எழுப்புற சத்தம் பாடுற மாதிரி இனிமையா தான் இருக்கும்.
கடலுக்கும் எங்க வீட்டுக்கும் 100m தான் தூரம். ஆகஸ்ட் விடுமுறையில பெரியப்பா family சித்தப்பா family நாங்கன்னு எல்லாமே அங்க ஆஜர் ஆகிடணும்கிறது மீற முடியாத எங்க அப்பம்மாவோட அன்பு கட்டளை. சமையல் மட்டும் ,தான் மட்டும் தான் பண்ணுவன்றது,எங்க அப்பம்மா சமரசமே பண்ண முடியாம அடம் பிடிக்கும் விஷயம்.இருக்கிற அவ்வளவு நாளும் ஒவ்வொரு வேளை சாப்பாட்டுலயும் மருமகள், மகன் மற்றும் பேரப்பிள்ளைங்க favourite dish அவங்க கையாலேயே பார்த்து பார்த்து செஞ்சு வச்சிடுவாங்க.செல்லம், குட்டி, தங்கம் அப்படின்ற வார்த்தைகளைத் தவிர பெயர் கூட சொல்லி கூப்பிட மாட்டாங்க எங்க அப்பம்மா. வீணை முதல் ஆங்கில இலக்கியம் வரை கற்றுத் தேர்ந்த ஆழ்ந்த அறிவும் அன்பும் கொண்ட பெண்மணி.
அம்மா, பெரியம்மா, சித்தி எல்லாம் இருந்து கதை பேசி கொண்டே ,அப்பம்மா சமையலுக்கு காய்கறிகள் வெட்டி கொடுப்பாங்க .
அப்பா, பெரியப்பா, சித்தப்பா இருந்து பூகோள அரசியல்ல இருந்து, cricket ஆன்மீகம் வரைக்கும் அலசி ஆராய்வாங்க.
நம்ம cousin gang ,வெளிநாட்ல இருந்து சித்தப்பா கொண்டு வந்த சின்ன வீடியோ camera வச்சு அப்பவே short film எடுப்பம் . Battery போடுற guitar toy எங்க BGM source.பனங்கா பணியாரத்துல இருந்து nestamalt வரைக்கும் advertisement கூட நாங்க அப்பவே shoot பண்ணிருக்கோம். அதை மணல்ல பாய் விரிச்சு வெற்று சுவர்ல மல்டிமீடியா ப்ரொஜெக்டர்ல ப்ரொஜெக்ட் பண்ணி எல்லோருக்கும் இரவு telecast பன்றது எங்க பெருமிதம்னான பால்ய கால oscar moment .
அப்பம்மா வீட்டை சுத்தி நிறைய முந்திரி மரம் இருக்கும். இரவின் அமைதியில ஓயாம கேட்கும் கடல் அலை சத்தம் பின்னணியில ,எங்க அப்பம்மா விறகடுப்பு மூட்டி சுடுமணல்ல முந்திரி வறுத்து உடைச்சு தர்ற முந்திரிக்கு எங்க ஸ்கூல்ல அவ்வளவு டிமாண்ட் இருக்கும்.
taunami பேரலையில் எங்க வீடும் முந்திரி தோட்டமும் அழிஞ்சு போயிருந்தாலும் , எங்க வீட்டு கட்டிடத்தின் எச்சங்களும் அந்த வெண்ணிற மணலும் , கடலலை சத்தமும் இன்னும் எங்க பள்ளி கால விடுமுறை நாட்களின் வாழ்வியலின் அடையாளமாய் இன்னைக்கும் நிலைச்சு நிக்குது.ஏன்னா சில கட்டிடங்கள் கற்களால கட்டப்பட்டதில்லை. நினைவுகளால கட்டப்பட்டது.

Recent Posts





.png)