1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 394
« Last post by Vethanisha on Today at 05:06:06 PM »உழவர்
அவர் கைகளிலே
மண்ணும் பொன்னாகும்
அதிசயமே
காலை சூரியன்
கண்விழிப்பதும்
உழவர் இவர்
முகத்தில் தானே
மும்மாரியும்
முந்திக்கொண்டு
பொழியும்
இவர் கடைக்கண்
பார்வை பட்டாலே
கரிசல் நிலமும்
விளைச்சல் நிலமாய்
மாறும்
இவர் வியர்வை
துளி சிந்தினாலே
உழுதுண்டு வாழ்வாரே
வாழ்வார்
என பாடினார் வள்ளுவனும்
அவர் புகழ்தனயே
உழவர்
தோள் கொடுக்கும் தோழனாய்
ஏர் இழுக்கும் காவலனாய்
நாள் முழுக்க
பக்க பலமாய்
இருப்பவனோ
ஐந்தறிவாளனே
அயராது உழைப்பின்
பலனாய் அதன்
எதிர்பார்ப்பு என்னவோ
அன்பும் உணவும் தானே
தனக்கென வாழ மறந்து
பிறர்க்காய்
வாழும் இவர்கள்
தானே
மண்ணில்
ஜீவராசிகளின்
பசியை தீர்க்கும்
கண் கண்ட தெய்வங்களே!
இனிய உழவர் தின நல்வாழ்த்துக்கள் 🙏♥️
அவர் கைகளிலே
மண்ணும் பொன்னாகும்
அதிசயமே
காலை சூரியன்
கண்விழிப்பதும்
உழவர் இவர்
முகத்தில் தானே
மும்மாரியும்
முந்திக்கொண்டு
பொழியும்
இவர் கடைக்கண்
பார்வை பட்டாலே
கரிசல் நிலமும்
விளைச்சல் நிலமாய்
மாறும்
இவர் வியர்வை
துளி சிந்தினாலே
உழுதுண்டு வாழ்வாரே
வாழ்வார்
என பாடினார் வள்ளுவனும்
அவர் புகழ்தனயே
உழவர்
தோள் கொடுக்கும் தோழனாய்
ஏர் இழுக்கும் காவலனாய்
நாள் முழுக்க
பக்க பலமாய்
இருப்பவனோ
ஐந்தறிவாளனே
அயராது உழைப்பின்
பலனாய் அதன்
எதிர்பார்ப்பு என்னவோ
அன்பும் உணவும் தானே
தனக்கென வாழ மறந்து
பிறர்க்காய்
வாழும் இவர்கள்
தானே
மண்ணில்
ஜீவராசிகளின்
பசியை தீர்க்கும்
கண் கண்ட தெய்வங்களே!
இனிய உழவர் தின நல்வாழ்த்துக்கள் 🙏♥️

Recent Posts






