Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
கவிதைகள் / Re: எனக்காகவே ✨
« Last post by Vethanisha on Today at 12:15:32 PM »

வலி அடங்கும் வார்த்தைகளிலும் சிரிப்பை கலந்து பேச தெரிந்தவள் நீ...


பெண்மையின் பலமும் பலவீனமும் இதுவே
அருமையான வரி Laksuu ❤️
2
SMS & QUOTES / Re: Random Quotes, Pics, Comedy etc. - Everyday a Suprise
« Last post by Ishaa on Today at 11:55:46 AM »
3
சுவரின் அந்தப்பக்கத்தில் சுதந்திரம்,
இப்பக்கம் — நினைவுகள் வலிக்கின்றன.
இரும்புக்கம்பிகள் என் விழிகளைக் கிழிக்க,
இருண்ட நாட்கள் என் நெஞ்சைக் நெகிழ்த்தன.

வானம் பார்க்க வாடைதான் வழி,
வாசல் பார்த்து காலமே கடிகாரம்.
குற்றமோ என் செய்தியில்லை,
அறிந்ததும் — தண்டனை மாறவில்லை!

நண்பர்கள் தொலைந்திட, நேரம் தகர,
அம்மாவின் குரல் கனவில்தான் வரும்.
என் எழுத்துகள் காகிதத்தில் போராடும்,
என் உயிர் மட்டும் ஒளி தேடும்!

தண்டனை அல்ல இது — பயணம்,
உணர்வுகளின் நடுக்கட்டுமானம்.
ஒரு நாள் — கதவுகள் திறந்திடும்,
கனவுகள் போலவே நானும் பறப்பேன்
கைதியாக இல்லையே என் உள்ளம்,
தவறுகள் செய்தது என் வாழ்வின் புலம்.
நாணமோ, ஆத்திரமோ தெரியாது எனக்குள்,
தீராத சுமையாய் நிமிர்கின்றேன் இன்று முழுக்க.

நேற்று ஒரு பேர் விழி பார்த்தேன்,
மழையில் நனைந்த குழந்தையைக் கண்டேன்.
அந்த பார்வை என் மனதைக் கிழித்தது,
பாவமும் பிணியும் ஒன்றாய் சேர்ந்தது.

என்னைப் போல் நிழல்களும் வாழ்கின்றன,
இங்கு எல்லாம் மேயும் வரிகள் கோபத்தில் இரங்குகின்றன.
தப்பே செய்தேன் – அதில் உண்மை இருக்கலாம்,
ஆனால் மனுஷனாய் வாழ விரும்பினேன் – அது தண்டனையா?

ஒரு நாள் சுவர்கள் தகரும்,
நான் உங்களைப் போலவே நழுவிப் பறக்கும்.
ஆனால் என் உள்ளம் விட்டுப் போகாது,
இங்கு விட்டிருக்கும் வரிகள் சாட்சி தரும்..
4
சிறைக்குள் கதறும் சத்தம்,
வாழ்க்கையில் இனி இருள் வட்டம்...
தண்டனையின் பெயரில் லத்தி அடி ஆட்டம்,
கண்ணீர் நிறைந்த கண்கள் சொல்லமுடியாத வலிகள்...

உடல் மட்டும் இல்லாமல் மனதளவிலும்
வலிகளை சுமந்த கைதிகள்...
சத்தமின்றி சாகும் மௌன குரல்,
சத்தம் எழும்பும் இடத்தில் மெளனமாய் கூச்சலிட்டான்...

கையில் சங்கிலி, மனதில் பாரம்
சொல்லி கண்ணீர் விட நாதி இல்லை...
சிறை சுவற்றில் ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட படங்கள்,
நீதி கேட்டால் மீண்டும் கிடைப்பது லத்தி அடியே!!!

கைகளில் சாவி இருந்தும் திறக்க மறுத்த
அதிகாரிகள் மத்தியில், உயிரை கையில் பிடித்து
அடிவாங்கிய கைதிகளே
உங்களுக்கு நியாயம் கிடைக்க வழி இல்லையா?

கண்ணாடி போல் உடைந்த நீதி,நேர்மை...
தவறு செய்யாமல் அடி வாங்க பிறக்கவில்லையே நீ...
குற்றம் செய்யாதவன் ஏன் அடி வாங்க வேண்டும்?
அவன் மேல் விழும் அடி நியாயமானதா?

அவன் தனிமையை தாங்கிய சுவர்கள்
இப்போது ரத்த கரைகளையும் தாங்கி நிற்கிறது...
சிறையின் வெளியே ஒளி இருந்தும் சிறைக்குள் இருள் மட்டுமே...
நிழல்கள் மட்டும் வாழும் கருப்பு அறை, சிறை!

உன் ஒவ்வொரு கண்ணீருக்கும்
விடைகளை எங்கு தேடி செல்வாயோ நீ?
5
SMS & QUOTES / Re: ❚█══MONDAY 😎 MOVITVATION══█❚
« Last post by MysteRy on Today at 10:15:48 AM »
6
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்

1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். .


Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.



நிழல் படம் எண் : 377

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


7
மிக அழகான வரிகள் meehoon...❤️
8
Adadaa mazhaidaa adai mazhaidaa
Azhagaa sirichaa puyal mazhaidaa
Adadaa mazhaidaa adai mazhaidaa
Azhagaa sirichaa puyal mazhaidaa...

Next:- A❤️
10
விளையாட்டு - Games / Re: Words in A to Z order
« Last post by Lakshya on Today at 09:44:07 AM »
Zinc

Next:- A ❤️
Pages: [1] 2 3 ... 10