1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 393
« Last post by SweeTie on Today at 08:43:35 PM »மகளே
அன்னையும் நானே தந்தையும் நானே
உன் இனிய நண்பியும் நானே
உன் கவலையும் கண்ணீரும்
விசும்பலும் வேதனையம்
இனி வேண்டாம்
இருண்டுபோன இந்த நகரம்போல்
உன் வாழ்க்கை ஆகிவிடக்கூடாது
இரவு முழுக்க பிரகாசிக்கும்
மின்விளக்கு போல வெளிச்சமாகவேண்டும்
அவன் தாயுமானவன்
தாயை இழந்த மகளை
தாங்கிப் பிடிக்கும் வேலி
கயவரிடமிருந்து காப்பாற்றும்
கழுகு
மகளே
சுற்றமும் சூழலும்
எப்போதும் வருவதில்லை
கூடவே இருந்து
குழி பறிப்பார்கள் சிலர்
தள்ளி இருந்து
வேடிக்கை பார்ப்பார்கள் சிலர்
மகளே
சிறகடித்து பறக்க வேண்டும் நீ '
வானமே எல்லை என
பறப்பதை நிறுத்திவிடாதே
வருபவர் எல்லாம் இங்கு தங்கிவிட்டால்
வருபவருக்கு இடமேது இங்கே
அன்னை பிரிந்த துயர்
ஆறாத்துயர் எனினும்
அவள் ஆசைகள் உனதாகவேண்டும்
சோர்ந்து படுத்துவிட்டால்
சொர்க்கமே என்றாலும்
வாழ்க்கை வெறுத்துவிடும்
மகளே
துணிந்து நில் வெற்றி நிட்சயம்
கனவுகள் கானல்நீராக கூடாது
காட்டாற்று வெள்ளமாக ஓடவேண்டும்
உறுதியோடு உழைப்பாய்
நாளைய நாள் உனதாகும்.
சாதிக்க பிறந்த நீ
தளர்ந்து போகக்கூடாது
நாமிருக்கும் இந்த கட்டை சுவர்போல
உன்னைத் தாங்க நானிருக்க
எதற்கு இந்த சோகமும் பயமும்
நமக்கு பிடிச்ச வாழ்க்கை நாளை
அமையும் உறுதிகொள்
அன்னையும் நானே தந்தையும் நானே
உன் இனிய நண்பியும் நானே
உன் கவலையும் கண்ணீரும்
விசும்பலும் வேதனையம்
இனி வேண்டாம்
இருண்டுபோன இந்த நகரம்போல்
உன் வாழ்க்கை ஆகிவிடக்கூடாது
இரவு முழுக்க பிரகாசிக்கும்
மின்விளக்கு போல வெளிச்சமாகவேண்டும்
அவன் தாயுமானவன்
தாயை இழந்த மகளை
தாங்கிப் பிடிக்கும் வேலி
கயவரிடமிருந்து காப்பாற்றும்
கழுகு
மகளே
சுற்றமும் சூழலும்
எப்போதும் வருவதில்லை
கூடவே இருந்து
குழி பறிப்பார்கள் சிலர்
தள்ளி இருந்து
வேடிக்கை பார்ப்பார்கள் சிலர்
மகளே
சிறகடித்து பறக்க வேண்டும் நீ '
வானமே எல்லை என
பறப்பதை நிறுத்திவிடாதே
வருபவர் எல்லாம் இங்கு தங்கிவிட்டால்
வருபவருக்கு இடமேது இங்கே
அன்னை பிரிந்த துயர்
ஆறாத்துயர் எனினும்
அவள் ஆசைகள் உனதாகவேண்டும்
சோர்ந்து படுத்துவிட்டால்
சொர்க்கமே என்றாலும்
வாழ்க்கை வெறுத்துவிடும்
மகளே
துணிந்து நில் வெற்றி நிட்சயம்
கனவுகள் கானல்நீராக கூடாது
காட்டாற்று வெள்ளமாக ஓடவேண்டும்
உறுதியோடு உழைப்பாய்
நாளைய நாள் உனதாகும்.
சாதிக்க பிறந்த நீ
தளர்ந்து போகக்கூடாது
நாமிருக்கும் இந்த கட்டை சுவர்போல
உன்னைத் தாங்க நானிருக்க
எதற்கு இந்த சோகமும் பயமும்
நமக்கு பிடிச்ச வாழ்க்கை நாளை
அமையும் உறுதிகொள்

Recent Posts

