Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
“ஓவியம் உயிராகிறது” – வெற்றி பயணம் – 400!
இது பல இதயங்களின் உணர்வுகள் உயிர் பெற்ற பயணம்!

கவிதை என்பது…
மனித உணர்வுகள், அனுபவங்கள், சிந்தனைகள்…
அழகியல் நயத்துடனும், சந்த நயத்துடனும்
செறிந்த சொற்களாய் மலரும் ஒரு கலை!

கவிஞனின் மனதில் பிறக்கும் காட்சி
அனுபவங்களின் நிசப்தம்,
வார்த்தைகள் கோர்த்து,
உணர்ச்சிகள் சேர்த்து,
எழுத்தாய் மலர்ந்து,
இதயத்தில் நிலைக்கும்…
தமிழ் பேசும் கவிதை!

ஆனால் இங்கு…
ஒரு கவிஞன் மட்டும் இல்லை…
ஒரு மனம் மட்டும் இல்லை…

ஒரு ஓவியம்…
அதைப் பார்க்கும் நூறு கண்கள்…
அதில் துடிக்கும் நூறு இதயங்கள்…
அதில் பிறக்கும் நூறு கவிதைகள்!

ஒரே படம்…
ஆனால் ஆயிரம் உணர்வுகள்…
ஒவ்வொருவரின் மனதில்,
ஒவ்வொரு உலகம் உருவாகிறது!

யாரோ அதை காதலாக எழுதுகிறார்!
யாரோ வலியாக உரைக்கிறார்!
யாரோ நினைவுகளை கூறுகிறார்
ஆனால் அனைத்திலும் ஓடும் ஒன்று…
தமிழின் உயிரோசை!

அந்த பல குரல்கள் சேரும் போது,
அது சத்தம் அல்ல…
ஒரு இசை! ஒரு சங்கீதம்!!
இதயங்கள் இணையும் ஓர் அழகு தருணம்!

அதை குரல் வாசிக்கும் போது…
அது ஒருவரின் குரல் இல்லை!
பல இதயங்களின் துடிப்பு…!

அதை இசை தழுவும் போது…
அது பாடல் அல்ல!
உணர்வுகளுக்கு கிடைத்த இறக்கைகள்…
இப்படி உருவான இந்த உலகம் தான் இன்று
400…!!!

400…ஒரு எண்ணிக்கை அல்ல…!
400 முறை இதயம் துடித்தது!
400 முறை தமிழ் உயிர் பெற்றது!
400 முறை பலரின் உள்ளம்
இந்த உலகத்தோட பகிரப்பட்டது!

இந்த சாதனையின் பின்னால்,
தெரியாத உழைப்பின் தடங்கள்!
தூங்காத இரவுகளின் நிழல்கள்!
"இன்னும் அழகாக வேண்டும்" என்ற
அன்பான பிடிவாதங்கள்!

குரல் கொடுக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் உயிரோசை…!
ஒவ்வொரு நொடியையும் செதுக்கும் ஒலி வடிவமைப்பாளர்களின் பொறுமை!
மனதை தொடும் பாடலை தேர்வு செய்யும் திறமையாளர்களின் அந்த நுண்ணுணர்வு…!!
இவை அனைத்தும் சேர்ந்து தான்,
இந்த நிகழ்ச்சியை ஒரு சாதாரண முயற்சியாக இல்லாமல்,
ஒரு ஒரு அருமையான “வெற்றி பயணமாக” மாற்றியிருக்கிறது

இந்த 400…
ஒரு எண்ணிக்கை அல்ல!
ஒரு சாதனை மட்டும் அல்ல!
இது உழைப்பின் உயரம்!
அன்பின் ஆழம்!
தமிழின் பெருமை!

இந்த 400 ஒரு நிறைவு அல்ல…
இன்னும் பல நூறு ஓவியங்கள்!
இன்னும் ஆயிரம் கவிதைகள்!
இன்னும் எண்ணற்ற இதயங்கள்!
இங்கே உயிர் பெற காத்திருக்கின்றன!


இந்த அற்புதமான பயணத்திற்கு பின்னால் நிற்கும்
அனைத்து  தொகுப்பாளர்களுக்கும்,
எடிட்டர்களுக்கும்,
இசை தேர்வாளர்களுக்கும்,
எங்கள் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்…!!
இந்த “வெற்றிப் பயணம்” இன்னும்  தொடர
எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்… !!
2



        என்  உயிர் தோழி
     “ஓவியம் உயிராகிறது”
Ftcஇல் ரொம்ப நேசிப்பது
நான் உன்னை தான்!
Forum இல் என்னை உள் நுழைய
வைத்ததும் நீதான்!
நீ நவரச நாயகி!
ftcஇல் நீ எப்போதும்
ஜொலிப்பாய் வைரமாக!
நீ சாதாரண ஆள் கிடையாது
உன்னை கட்டி எழுப்பியது
பல பேரின் உழைப்பு!

371வது வாரத்தில் இணைந்து
கொண்டேன் கவிதைப்
பயணத்தில் உன்னுடன்..
இப்போ உன் பாசத்தால் பிரிய மனமின்றி
உன்கூட இருக்கின்றேன் ஒவ்வொரு
வாரமும் அன்பு தோழியாய்!
4சதம் நீ கண்ட வெற்றியை கண்டு
மிக்க மகிழ்ச்சி அடைகிறது என்மனம்!

உலகில்  முதன்மையான மொழி
செம்மொழியான தமிழ் மொழி!
தேனிலும் இனிமையான தமிழ் மொழிக்கு
நீ முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு!
அழகியற்கலைகளில் ஒன்றான ஓவியக்கலையை இரசிக்காதவர் யாருமிலர்!

வரைந்த ஓவியங்கள்  எப்போதும்
எழுப்பி விடும் நம்மமுள் பல
எண்ணங்களை கவிதை எழுதுவதற்கு!
ஒவ்வொரு வாரமும் விதவிதமான நிழற்படங்கள் வழங்கப்பட...
அழகான கவி வரிகளில்
வெவ்வேறு மொழி நடைகளில்
கவிஞர் ,கவிதாயினிகள் உயிர் கொடுக்க ...
வண்ணமயமாக வரையப்பட்ட கவிதைகளை
தொகுத்து வழங்கிடுவர் பண்பலையில் தொகுப்பாளர்கள்....

ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியை பண்பலையில் கேட்பதற்கு
காத்திருப்பார்கள் பல இரசிகர்கள்!
இந்நிகழ்ச்சியை கேட்கும் போது
கவிதை எழுதும் ஆசையை
எல்லோர்க்கும் தூண்டும் சக்தி
உன்னிடம் உண்டு தோழியே!

உன்னை பார்ப்பதற்கு ஒவ்வொரு
வாரமும் ஒரே நண்பர்கள் வருகிறார்கள் என்பதற்காக கொண்டு வந்தனர் விதிமுறைகளை....
புதிய நண்பர்கள் கூட இணைகிறார்கள் இப்போ உன்னுடன்...
400 வாரங்களாக நீ பெற்ற
நண்பர்கள் ஏராளம்..

ஒரு வாரம் நீ வரவில்லை என்றால்
ஏனோ என் மனம் துடிக்கின்றது
எப்போ வருவாய் என்று...
உன் ஓவியத்தை பார்த்தவுடன்
என் மனதில் எழும் பல எண்ணங்கள்!
பத்தே நிமிடத்தில் எழுதிட தோணும்
எனக்குத் தெரிந்த கவி வரிகளில்...

நீ  400 வாரங்களாக வழங்கிய
ஓவியங்கள் அனைத்தும்
வித்தியாசமானவையும் தனித்துவமானவையுமே!
ஒவ்வொரு ஓவியத்துக்கும்
வித்தியாசமான கண்ணோட்டத்தில் கவிஞர்கள் கவி வரைந்திடுவார்கள்!

உறவுகள்,காதல்,நீதி,சமத்துவம்,
கல்வி,கலைகள் என்று பல்வேறு ஓவியங்களை வழங்குவதும்
பலபேர் உழைப்பே!
அந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுப்பது கவிஞர்களோடு உழைப்பு!
கவிதைகள் எழுதவில்லை என்றாலும் கவிஞர்களை ஊக்கப்படுத்துபவர்கள் கொடுப்பதும் உழைப்பு!
கவிதைகளை தொகுத்து வழங்குவது தொகுப்பாளர்கள் கொடுக்கும் உழைப்பு!
பண்பலையில் தொகுத்து வழங்குவதற்கு எடிட்டிங் செய்பவர் கொடுப்பதும் உழைப்பு!

எல்லோரும் கொடுத்த உழைப்பினால்
என்னுயிர் தோழி இன்று
400 வது வார வெற்றியை
சிகரம் தொட்டுவிட்டாள்!
இது தோழிக்கு மட்டுமல்ல தமிழுக்கும் கிடைத்த வெற்றியே!
அழகிய கலையான ஓவியத்துக்கும்
கிடைத்த வெற்றி இது!

இந்த நிகழ்ச்சியை என் மனதை
மட்டும் அல்ல
பல நண்பர்களின் மனதுக்கு
ஆறுதலும் ,விருந்தும் அளிக்கின்ற
ஒரு நிகழ்வு!
கவிஞர்கள் அவர்களின் எண்ணங்கள் ,
உள்ளக் கிடக்கைகளை
அழகாக வெளிக் கொண்டு வர உதவும்
ஒரு நிகழ்வு "ஓவியம் உயிராகிறது"

உழைப்பே உயர்க! தமிழ் வாழ்க!
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி
வெற்றி நடை போடுக!


குறிப்பு:-இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
இன்னும் நீ பல வெற்றி காண என்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!







3
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் BREEZE மச்சாள்  & SOCKY மச்சி , இன்பமும் இனிமையும் உங்கள் வாழ்வில் நிலைத்திருக்க மனமார வாழ்த்துகிறேன்.
4
HAPPY HAPPY BIRTHDY FRIEND, STAY BLESSED AND STAY HAPPY !

5
Happy Birthday KB friend epavume sirichitte happy a irunga !
file-000000005d447243a86699aa03c3dbf3" border="0
Happy birthday Breeze sis !
file-00000000a52072469baf0c2e3b725be9" border="0
6

epovum srichite santhosama erukanum socky machi 🌹🌹🌹
7
Wish You Many More Happy Returns Of The Day SockY NAP 🎂🎂💐💐



Wish You Many More Happy Returns Of The Day Breeze Sis 🎂💐💐🎂

8
Happy Birthday machi Socky  &. Breeze frd
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் மகிழ்ச்சியுடன் புன்னகையுடன்
நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
9




Copy RightZzzz by
BreeZyyyy
Pages: [1] 2 3 ... 10