1
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
« Last post by Madhurangi on Today at 12:23:31 AM »Grade 6-ல நான் படிச்ச girls school-ல இருந்து திடீர்னு mixed school-க்கு எங்க அப்பா transfer வாங்கி கூட்டிட்டு போனார். மனசு முழுக்க பயத்தோடவும் ஏகப்பட்ட கலக்கத்தோடவும் புது கிளாஸ்க்குள்ள போன எனக்கு, அப்பா கையை பிடிச்சு கூட்டிட்டு போய் அறிமுகப்படுத்துன அந்த முதல் முகம் தான் - என் அன்பரசி டீச்சர்.
அழுத்தமான குரல், அழகான நேர்த்தியான சேலை, நீண்ட கூந்தல், அமைதியான முகம்னு எங்க அம்மாவோட 'cloning' மாதிரி இருந்த டீச்சரை பார்த்ததுமே எனக்கு 'பச்சக்குனு' பிடிச்சுருச்சு.
இயல்பாவே எனக்கு கதை, நாடகம்னா ரொம்ப பிடிக்கும். அதனால தானோ என்னவோ பாடங்களை கூட கதை மாதிரி சுவாரசியமா சொல்ற டீச்சர், என் மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டாங்க. அவங்க சொல்லிக்கொடுத்த விதம் எங்க மனசுல தமிழை மட்டும் விதைக்கல; பெண்ணியம், நம்ம மண்ணோட வரலாறு, புராணங்கள்னு எல்லாத்தையும் சேர்த்து தான் விதைச்சது. இப்ப நினைச்சாலும், அன்னைக்கு ரெட்டை பின்னல் போட்டுக்கிட்டு, கிளாஸ் ரூம்ல back bench-ல உட்கார்ந்து கண் இமைக்காம அவங்க சொல்ற சீறாப்புராணம், பாஞ்சாலி சபதம், ஷாஹினா கிழவி கதைகளை கேட்ட அந்த காலங்கள் அப்படியே மனக்கண் முன்னாடி வருது.
பாட நேரத்துல மட்டும் இல்லாம இலக்கண போட்டி, பேச்சு போட்டி, விபுலாநந்தர் தினம், தமிழ் தினம்னு ஏதாவது ஒரு சாக்குல ஸ்கூல் முடிஞ்ச அப்புறம் கூட டீச்சரோட நிறைய டைம் spend பண்ணுவேன். Weekend-ல டியூஷன் கிளாஸ்னு அவங்க வீட்ல தான் நானும் என் Friends துவாரகா, யாதவனும் 'டேரா' போடுவோம். அவங்களோட மகன்களான ரெண்டு அன்பான தம்பிகள், அப்புறம் தமிழ்ல பெரிய ஆளுமையான அவங்க கணவர் (Sir), இவங்களோட நாங்க செலவழிச்ச அந்த தருணங்கள் ரொம்பவே நெருக்கமானது.
அவங்க என்கிட்டயும் என் நண்பர்கள்கிட்டயும் வெறும் ஆசிரியரா மட்டும் பழகல. எங்க திறமைகளை கண்டுபிடிச்சு அதை encourage பண்ற வழிகாட்டியா, என்ன பிரச்சனைனாலும் தயங்காம பேசக்கூடிய ஒரு தோழியா, வாழ்க்கையில சில இழப்புகள்ல நான் உடைஞ்சு நின்னப்போ அம்மாவோட இடத்துல இருந்து என்னை தாங்குன அரணா அவங்க இருந்திருக்காங்க. இன்னைக்கு நாங்க பிரண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா கூடி அரட்டை அடிச்சாலும், அதுல ஒரு தடவையாவது டீச்சரை பத்தின பேச்சு கண்டிப்பா வந்துடும்.
சொந்த பிள்ளைங்க மாதிரி எங்களோட வெற்றிகளை கொண்டாடுறதுலயும், எங்க ஆக்கங்களை பாராட்டுறதுலயும் அவங்களுக்கு நிகர் அவங்க தான். ஒரு தடவை நான் எழுதின 'சிவாஜி' பட விமர்சனத்தை, ஜூனியர் கிளாஸ் பசங்களுக்கெல்லாம் காட்டி பாராட்டுனாங்கனு பிற்காலத்துல அந்த பசங்க சொல்ல கேள்விப்பட்டப்போ எனக்கு ரொம்பவே ஆச்சரியமா, நெகிழ்ச்சியா இருந்தது.
வேலை காரணமா அவங்க வெளிநாட்டுக்கு போயிருந்தாலும், இன்னைக்கு அவங்ககிட்ட போன்ல பேசும்போதும் அதே "செல்லம்", "குட்டி"னு தான் கூப்பிடுவாங்க. அவங்ககிட்ட பேசும்போது தான் புரியுது, எனக்குள்ள இன்னும் அந்த ஸ்கூல் பொண்ணு அப்படியே வாழ்ந்துட்டு இருக்கான்னு!
மொத்தத்துல, பக்கத்துல இல்லனாலும் எங்க நினைவுகள்ல நீங்க வாழ்ந்துட்டு தான் இருக்கீங்க. என் டீச்சர் அன்புக்கு மட்டும் இல்ல, அறிவுக்கும் அழகுக்கும் கூட அரசி தான். எப்ப "உங்களுக்கு பிடிச்ச teacher யாரு?"னு கேட்டாலும், யோசிக்காம நான் சொல்ற ஒரே பேரு - அன்பரசி டீச்சர் .
அழுத்தமான குரல், அழகான நேர்த்தியான சேலை, நீண்ட கூந்தல், அமைதியான முகம்னு எங்க அம்மாவோட 'cloning' மாதிரி இருந்த டீச்சரை பார்த்ததுமே எனக்கு 'பச்சக்குனு' பிடிச்சுருச்சு.
இயல்பாவே எனக்கு கதை, நாடகம்னா ரொம்ப பிடிக்கும். அதனால தானோ என்னவோ பாடங்களை கூட கதை மாதிரி சுவாரசியமா சொல்ற டீச்சர், என் மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டாங்க. அவங்க சொல்லிக்கொடுத்த விதம் எங்க மனசுல தமிழை மட்டும் விதைக்கல; பெண்ணியம், நம்ம மண்ணோட வரலாறு, புராணங்கள்னு எல்லாத்தையும் சேர்த்து தான் விதைச்சது. இப்ப நினைச்சாலும், அன்னைக்கு ரெட்டை பின்னல் போட்டுக்கிட்டு, கிளாஸ் ரூம்ல back bench-ல உட்கார்ந்து கண் இமைக்காம அவங்க சொல்ற சீறாப்புராணம், பாஞ்சாலி சபதம், ஷாஹினா கிழவி கதைகளை கேட்ட அந்த காலங்கள் அப்படியே மனக்கண் முன்னாடி வருது.
பாட நேரத்துல மட்டும் இல்லாம இலக்கண போட்டி, பேச்சு போட்டி, விபுலாநந்தர் தினம், தமிழ் தினம்னு ஏதாவது ஒரு சாக்குல ஸ்கூல் முடிஞ்ச அப்புறம் கூட டீச்சரோட நிறைய டைம் spend பண்ணுவேன். Weekend-ல டியூஷன் கிளாஸ்னு அவங்க வீட்ல தான் நானும் என் Friends துவாரகா, யாதவனும் 'டேரா' போடுவோம். அவங்களோட மகன்களான ரெண்டு அன்பான தம்பிகள், அப்புறம் தமிழ்ல பெரிய ஆளுமையான அவங்க கணவர் (Sir), இவங்களோட நாங்க செலவழிச்ச அந்த தருணங்கள் ரொம்பவே நெருக்கமானது.
அவங்க என்கிட்டயும் என் நண்பர்கள்கிட்டயும் வெறும் ஆசிரியரா மட்டும் பழகல. எங்க திறமைகளை கண்டுபிடிச்சு அதை encourage பண்ற வழிகாட்டியா, என்ன பிரச்சனைனாலும் தயங்காம பேசக்கூடிய ஒரு தோழியா, வாழ்க்கையில சில இழப்புகள்ல நான் உடைஞ்சு நின்னப்போ அம்மாவோட இடத்துல இருந்து என்னை தாங்குன அரணா அவங்க இருந்திருக்காங்க. இன்னைக்கு நாங்க பிரண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா கூடி அரட்டை அடிச்சாலும், அதுல ஒரு தடவையாவது டீச்சரை பத்தின பேச்சு கண்டிப்பா வந்துடும்.
சொந்த பிள்ளைங்க மாதிரி எங்களோட வெற்றிகளை கொண்டாடுறதுலயும், எங்க ஆக்கங்களை பாராட்டுறதுலயும் அவங்களுக்கு நிகர் அவங்க தான். ஒரு தடவை நான் எழுதின 'சிவாஜி' பட விமர்சனத்தை, ஜூனியர் கிளாஸ் பசங்களுக்கெல்லாம் காட்டி பாராட்டுனாங்கனு பிற்காலத்துல அந்த பசங்க சொல்ல கேள்விப்பட்டப்போ எனக்கு ரொம்பவே ஆச்சரியமா, நெகிழ்ச்சியா இருந்தது.
வேலை காரணமா அவங்க வெளிநாட்டுக்கு போயிருந்தாலும், இன்னைக்கு அவங்ககிட்ட போன்ல பேசும்போதும் அதே "செல்லம்", "குட்டி"னு தான் கூப்பிடுவாங்க. அவங்ககிட்ட பேசும்போது தான் புரியுது, எனக்குள்ள இன்னும் அந்த ஸ்கூல் பொண்ணு அப்படியே வாழ்ந்துட்டு இருக்கான்னு!
மொத்தத்துல, பக்கத்துல இல்லனாலும் எங்க நினைவுகள்ல நீங்க வாழ்ந்துட்டு தான் இருக்கீங்க. என் டீச்சர் அன்புக்கு மட்டும் இல்ல, அறிவுக்கும் அழகுக்கும் கூட அரசி தான். எப்ப "உங்களுக்கு பிடிச்ச teacher யாரு?"னு கேட்டாலும், யோசிக்காம நான் சொல்ற ஒரே பேரு - அன்பரசி டீச்சர் .

Recent Posts