« Last post by Madhurangi on January 29, 2026, 03:42:50 PM »
காலத்தின் சுவடுகளில் மூத்தவள் நீ இன்று கணிப்பொறித் திரையிலும் பூத்தவள் நீ! முடிவிலியிலும் இளமை மாறா என் அன்னை.. எம் அறிவியலை ஆளும் நவீன விந்தை.. என் தமிழ் தாயே!
« Last post by Madhurangi on January 29, 2026, 03:11:04 PM »
சொற்பமே உன்னுடனான இந்த சுகமான வாழ்வென்றாலும், நரகமே நாம் செல்லும் பாதையென்றாலும், மீண்டும் அந்தப் பள்ளத்தில் விழத் தயார்... என்னை அழைத்துச் செல்பவள் நீயாக இருந்தால்
(இந்த கோட்டை சாமி யார் என்ன சொன்னாலும் தலை கீழாகத்தான் குதிப்பான் moment )
« Last post by Yazhini on January 29, 2026, 02:21:55 PM »
ஏதும் எதிர்பாராமல் இருந்திருந்தால்... மனதிடத்துடன் மறுத்திருந்தால்... அன்பை சுகிக்காமல் இருந்திருந்தால்... தேடப்படும் போது தொலைந்திருந்தால்... உன் வசப்படாமல் இருந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் இந்த துன்பகளத்தை...
« Last post by Forum on January 29, 2026, 02:04:42 PM »
காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி
எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .
உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துகளை கவிதைகளாய் வெளிபடுத்த உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம். உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 04.02.2026 ( இந்திய நேரம் 11:59 PM) வரை உங்கள் கவிதைகளை இங்கே பதிவு செய்யலாம் ....
FTC பண்பலை நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று உங்கள் இதயங்களை வந்தடையும் ....
குறிப்பு: • உங்கள் கவிதைகள் 250 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
• சொந்தமாக எழுதப்படும் 10 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
• எதிர்வரும் ஞாயிற்று கிழமை (01.02.2026 ) இரவு இந்திய நேரம் 10 மணிமுதல் பதிவிடும் வகையில் இந்த பகுதி திறக்கப்படும் .