1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 399
« Last post by Oonjal on March 09, 2026, 11:52:46 PM »காலையில் கண் விழித்ததும்
என் மனதை புத்துணர்ச்சி
ஆக்கிடும் ஒரு காப்பி..
அதன் பின் சமையலை
தொடங்கி விட்டு நான்
ஓடும் இடம் - என்
ரோஜா தோட்டம் தான்
வெயில் ஏறும் முன்
தண்ணீர் ஊத்தனுமே
என்று நான் ஓடினால்
எப்போ தண்ணீர் ஊற்ற
நான் வருவேன்
என்று காத்திருக்கும்
என் ரோஜாக்கள்....
தண்ணீர் ஊற்றும் போதே
எந்த செடியில் மொட்டுக்கள்
மலர்ந்திருக்கு என்று தான்
நொட்டமிடும் என் கண்கள்!
மழை நேரத்தில் தண்ணீரில்
நனைந்து நிற்கும் ரோஜாக்களை
பார்த்தாலே சந்தோசத்தில்
ஆர்ப்பரிக்கும் என் முகம்!
மனதில் உள்ள கவலைகள்
எல்லாம் பறந்து போய்விடும்
ரோஜாப் பூக்களின் அழகினை
இரசிக்கின்ற பொழுதில்...
விதவிதமான வர்ண நிறங்களில் பூத்திருக்கும் ரோஜா பூக்களே
உங்கள் அழகினை காண
கண் இரண்டு போதாது!
முட்கள் கூட அழகு தான் !
உங்களை பாதுகாப்பதால்
அந்த முட்களினால் என் கைகளில்
ஏற்படும் காயங்களை கூட
பெரிது படுத்த மாட்டேன்
உந்தன் அழகில் !
என் மனதை இழந்ததினால்
உன்னை இந்த கோடை
வெயிலின் தாக்கத்தில் காப்பாற்ற
நான் படும்பாடு கொஞ்சமா?
இது எல்லாமே நான் உன் மீது
கொண்ட காதலின்
வெளிப்பாடன்றி வேறென்ன!
வெள்ளை, மஞ்சள் ,சிவப்பு ,
செம்மஞ்சள்,இளஞ்சிவப்பு
நிறங்களில் நீ பூப்பத்தால்
நான் மட்டுமா உன்னை
கண்டு மகிழ்கிறேன் !
என்னோடு கூட சேர்ந்து
பறக்கும் பட்டாம்பூச்சிகளை
கேட்டுபார் ....
நீ மலர்ந்தவுடன் உன்னில்
தேனெடுக்க வரும் தேனீக்கள்
எண்ணிக்கையை பார்த்தால்
உன் வாசத்தின் அருமை புரியும்
காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும்
உன் வாழ்வே
இத்தனை அழகு
இந்த ஒரு நாளில்
நீ எத்தனை பேர் வாழ்வில்
மகிழ்ச்சியை தருகிறாய்
என்று உனக்கு தெரியுமா?
சிறுமியின் தலையில் பூவாய்
காதலன் காதலிக்கு தரும்
அன்பு பரிசாய்..
கோவிலில் அர்ச்சனை மலர்களாய்
நீ தானே மலர்களின் ராணி !
உனக்கு ஈடு இணை ஏது!
என் மனதை புத்துணர்ச்சி
ஆக்கிடும் ஒரு காப்பி..
அதன் பின் சமையலை
தொடங்கி விட்டு நான்
ஓடும் இடம் - என்
ரோஜா தோட்டம் தான்
வெயில் ஏறும் முன்
தண்ணீர் ஊத்தனுமே
என்று நான் ஓடினால்
எப்போ தண்ணீர் ஊற்ற
நான் வருவேன்
என்று காத்திருக்கும்
என் ரோஜாக்கள்....
தண்ணீர் ஊற்றும் போதே
எந்த செடியில் மொட்டுக்கள்
மலர்ந்திருக்கு என்று தான்
நொட்டமிடும் என் கண்கள்!
மழை நேரத்தில் தண்ணீரில்
நனைந்து நிற்கும் ரோஜாக்களை
பார்த்தாலே சந்தோசத்தில்
ஆர்ப்பரிக்கும் என் முகம்!
மனதில் உள்ள கவலைகள்
எல்லாம் பறந்து போய்விடும்
ரோஜாப் பூக்களின் அழகினை
இரசிக்கின்ற பொழுதில்...
விதவிதமான வர்ண நிறங்களில் பூத்திருக்கும் ரோஜா பூக்களே
உங்கள் அழகினை காண
கண் இரண்டு போதாது!
முட்கள் கூட அழகு தான் !
உங்களை பாதுகாப்பதால்
அந்த முட்களினால் என் கைகளில்
ஏற்படும் காயங்களை கூட
பெரிது படுத்த மாட்டேன்
உந்தன் அழகில் !
என் மனதை இழந்ததினால்
உன்னை இந்த கோடை
வெயிலின் தாக்கத்தில் காப்பாற்ற
நான் படும்பாடு கொஞ்சமா?
இது எல்லாமே நான் உன் மீது
கொண்ட காதலின்
வெளிப்பாடன்றி வேறென்ன!
வெள்ளை, மஞ்சள் ,சிவப்பு ,
செம்மஞ்சள்,இளஞ்சிவப்பு
நிறங்களில் நீ பூப்பத்தால்
நான் மட்டுமா உன்னை
கண்டு மகிழ்கிறேன் !
என்னோடு கூட சேர்ந்து
பறக்கும் பட்டாம்பூச்சிகளை
கேட்டுபார் ....
நீ மலர்ந்தவுடன் உன்னில்
தேனெடுக்க வரும் தேனீக்கள்
எண்ணிக்கையை பார்த்தால்
உன் வாசத்தின் அருமை புரியும்
காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும்
உன் வாழ்வே
இத்தனை அழகு
இந்த ஒரு நாளில்
நீ எத்தனை பேர் வாழ்வில்
மகிழ்ச்சியை தருகிறாய்
என்று உனக்கு தெரியுமா?
சிறுமியின் தலையில் பூவாய்
காதலன் காதலிக்கு தரும்
அன்பு பரிசாய்..
கோவிலில் அர்ச்சனை மலர்களாய்
நீ தானே மலர்களின் ராணி !
உனக்கு ஈடு இணை ஏது!

Recent Posts



