1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 397
« Last post by Madhurangi on Today at 02:56:00 PM »மாதவியின் மனக்குமுறல்
[/color]காவிரி பூம்பட்டினத்து மண்ணில் பிறந்தேன்
கலையே என் மூச்சாய் கொண்டு வளர்ந்தேன்!
ஐந்து வயதில் ஆடல் தொடங்கி - என்
அங்கம் வருத்தி தவம் புரிந்து வளர்ந்தேன்!
ஏழாண்டு காலம் இமைக்காத உழைப்பு கொண்டு ,
ஏற்றங்கள் கண்டேன் சோழ தேசம் போற்ற..
ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன் தந்த கரிகாலனவனும் - அந்த
தலைக்கோல் பட்டமும் என் கலைக்காய் சமர்பித்தான் !
சொற்கட்டு தாளத்தில் சுழன்று ஆடுவேன்
சுதி பிசகாமல் ராகம் பாடுவேன்!
பிண்டி பிணையல் என முத்திரை காட்டி
பிரபஞ்ச அழகை மேடையில் கூட்டி !
நாட்டிய நன்னூல் நயம்படக் கற்றேன்
நாடகக் கணிகையர் திலகமாய் நின்றேன்!
ஆடல் மகள் என்பது என் குலத்தின் விதி
அதை அகிலம் வியக்கச் செய்வதே என் மதி..
நயன அசைவில் நவரசத்தை காட்டிடுவேன்..
அபிநயத்தால் என் உள்ளம் உணர்த்திடுவேன்..
கலை மொழியால் பல உள்ளம் கொள்ளை கொண்ட நானோ ,
அன்று அரங்கேற்ற மேடை தனில்
அவன் விழி கண்டேன் என் உள்ளத்தை இழந்தேன் !
மாலையை வாங்கி என் மனம் கொண்டான் கோவலன் .
என் வாழ்வை வென்றான் அந்த மன்னவன் !
கணவனாய் அவனை ஏற்றுக்கொண்டேன் - கலை
காதலாய் அவனோடு கலந்து நின்றேன்!
மணவறை இன்றி மனதளவில் அவன் மனைவி ஆனேன்..
இன்று ஊரார் பேசும் பழிச்சொல் கசக்குதே
உள்ளத்தின் வேதனையில் என் நெஞ்சம் விம்முதே!
"பிறத்தியான் கணவன்" என ஏசும் உலகம்
என் உண்மைக் காதலை உணர மறுக்கும் தருணம் !
பரத்தை என என்னை முத்திரை குத்தினார்
பாசத்தை அறியாமல் கல்லெறிந்து நின்றார்
ஆடல் மகளென்றால் உள்ளம் இல்லையா?
அன்பு கொள்வதே எல்லையற்ற பிழையா ?
கற்பு என்பது ஒரு தலைப் பட்சமா ?
கட்டியவளுக்கு மாத்திரமே காதல் மோட்சமா?
கண்ணகி போலவே நானும் ஒரு பேதை,
காதலைத் தொலைத்த ஒரு கலையின் மேதை,
சலங்கை ஒலியில் என் கண்ணீர் மறையட்டும்
சரித்திரம் என்னை "காதலி" என எழுதட்டும்!

Recent Posts







