10
« Last post by Luminous on March 09, 2026, 10:48:19 PM »
வலியைத் தாண்டி ஒளிர்வாய்
சொற்களில் பெருமை இல்லாமல்,
செயல்களில் மட்டும் உண்மை கொண்டு,
தன் வேலையை
சரியாகச் செய்து கொண்டு
அமைதியாக நடக்கிறான் ஒருவன்.
அவன் சத்தமாக பேச மாட்டான்,
ஆனால்
அவனது செய்கைகள்
மெதுவாகவே
உண்மையை பேசும்.
சிலர் அவனை
“ஏமாளி” என்று சிரிப்பார்கள்,
சிலர் அவன் அமைதியை
பலவீனம் என்று நினைப்பார்கள்,
சிலர் அவன் நேர்மையை
பைத்தியமாகக் கூட கூறுவார்கள்.
ஆனால்
உண்மையின் பாதை
மெல்ல மெல்ல சென்றாலும்
ஒருநாள்
தன் ஒளியை மறைக்காது.
சிகப்பு ரோஜாக்கள்
அனைத்தும் ஒன்றாய் மலர்ந்த
ஒரு பெரிய தோட்டத்தில்
தனித்து தெரியும்
ஒரு வெள்ளை ரோஜா போல,
ஒருநாள்
அவனது நேர்மையான
நடத்தைதான்
அவனை
எல்லோரிடமும்
தனித்துவமாக காட்டும்.
ஏனெனில்
தனியாகத் தெரிவது
சாதாரணம் அல்ல…
அதற்குள்
எத்தனை காயங்கள்,
எத்தனை அவமானங்கள்,
எத்தனை தோல்விகள்,
எத்தனை இரவுகளின்
மௌனக் கண்ணீர்கள்
மறைந்து கிடக்கின்றன.
பலர் திரும்பிப் போகும்
அந்த பாதையில் கூட
சிலர் மட்டும் தான்
தொடர்ந்து நடப்பார்கள்.
அவர்களின்
அமைதியான போராட்டமே
ஒருநாள்
அவர்களை உயர்த்தும்.
அனைவரும் சிகப்பு ரோஜாக்களாக
ஒன்றாய் தெரியும் போது
ஒருவன் மட்டும்
அமைதியாக
தன் நிறத்தில் நிற்பான்.
அவன் தான்
அந்த கூட்டத்தில்
தனித்து தெரியும்
ஒற்றை வெள்ளை ரோஜா.
ஆகவே நண்பனே,
எதிர்காலத்தில்
நீயும் தனித்துவமாக
தெரிய விரும்பினால்,
இன்றே
உன் வேலையில்
உன் கனவில்
உன் நேர்மையில்
முழு மனதுடன்
ஈடுபடு.
ஏனெனில்
ஒருநாள்
உன் உழைப்பும்
உன் பொறுமையும்
உன் நேர்மையும்
அந்த சிகப்பு ரோஜா கூட்டத்தில்
உன்னை
ஒற்றை வெள்ளை ரோஜாவாக
ஒளிரச் செய்யும். 🌹
LUMINOUS 😇💜💙💚💛🧡🧚♀️