1
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
« Last post by Vethanisha on Today at 04:47:30 PM »திருவிழா
திருவிழா கொண்டாட்டம் என்றாலே எனக்கு என் சின்ன வயசு ஞாபகம் தான் வருது.
வீட்டுக்குப் பக்கத்துலே நடந்து போகுற தூரத்துலே கோவில் . என் நாட்டுலே இப்படி எல்லா வசிப்பிடத்துலயும் அமையாது.
வலது பக்கம் போன அழகா கருமாரியம்மன் வீற்றிருக்க , அருகே சீன ஆலயத்தில் குர்ணியம்மா இருக்க இடது பக்கம் பள்ளிவாசல் என மொத்த ஆசிர்வாதமும் நிறைஞ்ச ஊர் எனது . இதுவும் கடவுள் கொடுப்பினை தான் அம்மா அடிக்கடி சொல்வாங்க . அப்பா சிரிச்சிட்டே மழை வெயில்ன்னு போராடி வீடு வாங்குனது நானு ஆனா பாராட்டு கடவுளுக்கானு அம்மாவ சீண்டி கேலி பண்ணுவாரு.
அப்பா பொதுவா எங்களை எந்த ஒரு திருவிழாக்கும் சட்டுனு அழைச்சிட்டு போக மாட்டாரு .
கோவிலே வசிப்பிடம் , கடவுளே உறைவிடம் அப்படி வாழ்ற அம்மாவுக்கும் எல்லாமே உன் செயலின் வெளிப்பாடு தான் , முயற்சியை மட்டும் நம்பு என்று பகுத்தறிவு பேசுகிற அப்பாவுக்கும் இடையிலே ஐயோ ! இந்த முறையும் திருவிழா கோவில் சாப்பாடு போய்டுமா என்று கவலை படுற குட்டி பசங்க நாங்க .
திருவிழா என்றால் கோவிலில் அடிக்குற உறுமி மேளம் வீடு வரைக்கும் கேட்கும் , அப்படியே ஏக்கத்தோடு அப்பாவே பார்ப்போம் .
சிரிச்சிட்டே போயிட்டு வாங்க மா சொல்வாரு . உடனே தீபாவளிக்கு எடுத்த சட்டையைப் போட்டுக்கிட்டு நேரா என் தோழி மலர் வீட்டுக்குப் போய்ட்டு அவளையும் என் பட்டு பாவாடை வண்ணத்துலே உடை அணியச் சொல்லி கோவிலுக்கு ஓடியே போவோம்.
சாமி கும்புடறது என்னமோ 10 நிமிடம் தான் . முதல்ல தட்டு தூக்கிக்கிட்டு வரிசையிலே நின்னுடுவோம். அது என்னமோ திருவிழா சாப்பாடுனாலே தனி ருசி. அதோடு கோவிலுக்கு வெளியே போடுற கடைக்குக் கைகோர்த்துட்டு உலா போயிடுவோம் நானும் என் தோழியும்.
எங்க ஊர் திருவிழா சுத்துவட்டாரத்தில் கொஞ்சம் பிரபலம் என்றே சொல்லலாம்.
எல்லா கோவிலிலும் காலையிலே திருவிழா ஆரம்பித்து மதியம் நிறைவிடையும் ஆனா எங்க கோவில் திருவிழாவே மதியம் 2 மணிக்கு தான் ஆரம்பம் ஆகும். ஆத்தங்கரை இருந்து கிரகம் தூக்கி வருவது சாஸ்திரம் ஆனா எங்க கோவில் கிரகமோ சீன கோவில் இருந்து எடுத்து வரப்படும். திருவிழாக்கு 11 நாள் முன்பதாகவே கிரக குடம் சீன கோவிலில் இருக்கும் குரணியம்மா கையிலே ஒப்படைப்பாங்க. திருவிழா அன்று மேளதாளத்தோடே சீன கோவிலில் இருந்து மீண்டும் அம்மன் கோவிலுக்குத் தூக்கி வருவாங்க . சீன நண்பர்கள் அலகு குத்துறதும் தீமிதி இறங்குறது என கோலாகலம் என்றால் இதுதான் என்று சொல்ற அளவுக்கு இருக்கும் .
இது எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா அமையுறது தேர் வெளியாகும் இரவு நேரம் தான் . தேர் நேரா முதலில் என் வீட்டுக்கு தான் வரும். அம்மா சாமிக்கு சீர் தவிர்த்து உடன் வர எல்லாருக்கும் டீ , காபி கலக்கி தருவாங்க. சாப்பிட ரொட்டி , கடலை இப்படி எல்லாமே இருக்கும் . பாத்தீங்களா சாமி முதல்ல நம் வீட்டுக்குத் தான் வராங்கனு அம்மா அப்பாவே பெருமிதமா பாக்க .
ஏன்னா நான் நல்லவன் மா என்று அப்பா மீண்டும் அம்மாவைச் சீண்டுவாரு. என் கையிலே 100 ரிங்கிட் கொடுத்து உண்டியிலே போடுமா என சொல்லி அப்பா அவர் வேலையை பாக்க போக நானும் என் அக்கா அண்ணாவும் தேருடன் நடக்க ஆரம்பிப்போம்.
திருவிழா கொண்டாட்டம் என்றாலே எனக்கு என் சின்ன வயசு ஞாபகம் தான் வருது.
வீட்டுக்குப் பக்கத்துலே நடந்து போகுற தூரத்துலே கோவில் . என் நாட்டுலே இப்படி எல்லா வசிப்பிடத்துலயும் அமையாது.
வலது பக்கம் போன அழகா கருமாரியம்மன் வீற்றிருக்க , அருகே சீன ஆலயத்தில் குர்ணியம்மா இருக்க இடது பக்கம் பள்ளிவாசல் என மொத்த ஆசிர்வாதமும் நிறைஞ்ச ஊர் எனது . இதுவும் கடவுள் கொடுப்பினை தான் அம்மா அடிக்கடி சொல்வாங்க . அப்பா சிரிச்சிட்டே மழை வெயில்ன்னு போராடி வீடு வாங்குனது நானு ஆனா பாராட்டு கடவுளுக்கானு அம்மாவ சீண்டி கேலி பண்ணுவாரு.
அப்பா பொதுவா எங்களை எந்த ஒரு திருவிழாக்கும் சட்டுனு அழைச்சிட்டு போக மாட்டாரு .
கோவிலே வசிப்பிடம் , கடவுளே உறைவிடம் அப்படி வாழ்ற அம்மாவுக்கும் எல்லாமே உன் செயலின் வெளிப்பாடு தான் , முயற்சியை மட்டும் நம்பு என்று பகுத்தறிவு பேசுகிற அப்பாவுக்கும் இடையிலே ஐயோ ! இந்த முறையும் திருவிழா கோவில் சாப்பாடு போய்டுமா என்று கவலை படுற குட்டி பசங்க நாங்க .
திருவிழா என்றால் கோவிலில் அடிக்குற உறுமி மேளம் வீடு வரைக்கும் கேட்கும் , அப்படியே ஏக்கத்தோடு அப்பாவே பார்ப்போம் .
சிரிச்சிட்டே போயிட்டு வாங்க மா சொல்வாரு . உடனே தீபாவளிக்கு எடுத்த சட்டையைப் போட்டுக்கிட்டு நேரா என் தோழி மலர் வீட்டுக்குப் போய்ட்டு அவளையும் என் பட்டு பாவாடை வண்ணத்துலே உடை அணியச் சொல்லி கோவிலுக்கு ஓடியே போவோம்.
சாமி கும்புடறது என்னமோ 10 நிமிடம் தான் . முதல்ல தட்டு தூக்கிக்கிட்டு வரிசையிலே நின்னுடுவோம். அது என்னமோ திருவிழா சாப்பாடுனாலே தனி ருசி. அதோடு கோவிலுக்கு வெளியே போடுற கடைக்குக் கைகோர்த்துட்டு உலா போயிடுவோம் நானும் என் தோழியும்.
எங்க ஊர் திருவிழா சுத்துவட்டாரத்தில் கொஞ்சம் பிரபலம் என்றே சொல்லலாம்.
எல்லா கோவிலிலும் காலையிலே திருவிழா ஆரம்பித்து மதியம் நிறைவிடையும் ஆனா எங்க கோவில் திருவிழாவே மதியம் 2 மணிக்கு தான் ஆரம்பம் ஆகும். ஆத்தங்கரை இருந்து கிரகம் தூக்கி வருவது சாஸ்திரம் ஆனா எங்க கோவில் கிரகமோ சீன கோவில் இருந்து எடுத்து வரப்படும். திருவிழாக்கு 11 நாள் முன்பதாகவே கிரக குடம் சீன கோவிலில் இருக்கும் குரணியம்மா கையிலே ஒப்படைப்பாங்க. திருவிழா அன்று மேளதாளத்தோடே சீன கோவிலில் இருந்து மீண்டும் அம்மன் கோவிலுக்குத் தூக்கி வருவாங்க . சீன நண்பர்கள் அலகு குத்துறதும் தீமிதி இறங்குறது என கோலாகலம் என்றால் இதுதான் என்று சொல்ற அளவுக்கு இருக்கும் .
இது எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா அமையுறது தேர் வெளியாகும் இரவு நேரம் தான் . தேர் நேரா முதலில் என் வீட்டுக்கு தான் வரும். அம்மா சாமிக்கு சீர் தவிர்த்து உடன் வர எல்லாருக்கும் டீ , காபி கலக்கி தருவாங்க. சாப்பிட ரொட்டி , கடலை இப்படி எல்லாமே இருக்கும் . பாத்தீங்களா சாமி முதல்ல நம் வீட்டுக்குத் தான் வராங்கனு அம்மா அப்பாவே பெருமிதமா பாக்க .
ஏன்னா நான் நல்லவன் மா என்று அப்பா மீண்டும் அம்மாவைச் சீண்டுவாரு. என் கையிலே 100 ரிங்கிட் கொடுத்து உண்டியிலே போடுமா என சொல்லி அப்பா அவர் வேலையை பாக்க போக நானும் என் அக்கா அண்ணாவும் தேருடன் நடக்க ஆரம்பிப்போம்.

Recent Posts


