Recent Posts

Pages: [1] 2 3 ... 10
2
SMS & QUOTES / Re: Life thoughts 🥰
« Last post by Vethanisha on Today at 07:19:50 AM »
Start your day with love ♥️


5
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:32:03 AM »
6
அப்பா செய்துதந்த காகித கப்பல்களில்
இன்றுவரை மூழ்காமல் பயணிக்கிறது
குழந்தை உள்ளம்...

அடை மழைக்காலம்...
அப்பாவின் அண்மையில் தராசின் மேல்,
மூக்குப்பொடி நறுமணத்துடனே
ஆணியில் ஆடிய காகிதம்
கப்பலாக உருமாறிய அதிசயம்...

அந்த அழகிய காகித கப்பல்
தெருவில் தேங்கிய மழைநீரில்
தன் பிரம்மாண்டமான
முதல் பயணத்தை ஆரம்பித்தது...

தண்ணீரில் அங்குமிங்கும் அசைந்தாடிய
கப்பலைக் கண்டு பிரமித்து
கைத்தட்டி ஆரவாரித்த என் கன்னத்தில்
அப்பாவின் அன்பு முத்தம் - இன்றும்
அதனை முத்தாரமாக்கும்
முத்து மழைத்துளிகள்...

குளிருக்கு இதமாக அன்னைமடி
சுடசுட போண்டா பஜ்ஜி.
இடி இடித்தால் என்ன?
செவியைக் கிழித்தால் என்ன??
பாதுகாத்து கட்டிப்பிடித்து கொள்ளும்
அம்மாவின் கைகள்...

மழைக்கால சோம்பலுக்கு
தீனிப்போடும் அம்மாவின் பழங்கதைகள்.
அதில் பேய்கள் ஆட்டம் போடும்
பூதம் ஆளைத் தின்னும்.
ஆனால் அம்மாவின் பாதுக்காப்பால்
எதுவும் என்னை நெருங்காது...

இன்றும் அன்னைமடி கதகதப்பை
தேட செய்கிறது மழை...

நண்பர்கள் அனைவரும் வந்துவிட வேண்டும்
ஆனால் ஆசிரியர் ஒருவர்கூட வரக்கூடாது
என்ற பிரத்தனையுடன்
முழுமையாக நனைந்து தண்ணீர்
சொட்டசொட்ட வகுப்பறை...

மழையின் காரணமாக நடைபெறாத வகுப்பறை
உச்சக்கட்ட மகிழ்ச்சியின் வரையறை.
இடிசத்தத்திற்கு "ஓ" என்ற
பின்பாட்டு பாடியது இன்றும்
இடியின் முழக்கத்தோடு
இணைந்தே ஒலிக்கும்...

மழலையோடு மழலையாக மாற்றும் மழை...
தன் வெள்ளிக்கம்பிகளால்
பல அழகிய நினைவுகளைக் கோர்த்து
பூமியை மட்டுமல்லாமல்
மனதையும் குளிர செய்கிறது.... ☔ ☔ ☔
7
Naan kooda enna da yepo vandhaalum 000 nu oru id iruke nu notice panen 2 birthday banner a um pathen....kadaisila paatha samooham peria edam a irukeee paaaaa 8)...naan bayandhu oduna c..c++ java tally adhu edhu nu Iruku sari kathukren ungata irundhe note panunga pa note panunga pa pinraru pa pinraru pa (mind voice)...edhelaam enna nu puria sila kaalangal aagum pola.... Inum niraya explore panunga....waiting to see ur magic THALAIVAA 8) 8)....
8
சிலர் யோசிப்பார்கள்
யாரைக் காதலித்து தோல்வி அடைந்தது 
இந்த மழை அதனால்தான் இப்படி 
வானின் கரும் மேகங்களில் இருந்து 
கண்ணீராய் கனத்த சோகமாய் 
தாரை தாரையாகக் கொட்டுகிறது. 

நினைவுகளின் மேகம் கூடி நிற்கும் போது 
மின்னல் ஒரு வலியாய் பாய்ந்து பிளக்கும்
ஆகாயம் தாங்காமல் துடிக்கும் போது 
துளியாக உடைந்து
துளியாக உருண்டு
துளியாக உதிர்ந்து 
பூமிமேல் விழுந்து அழுகிறது. 

ஆனால்… 

மழை ஒருபோதும் பலவீனம் இல்லை
அது பொறுமையின் சிலையே 
அது அமைதியின் உச்சமே. 

ஒவ்வொரு துளியும் 
ஒரு உறுதிமொழி 
ஒரு பிரார்த்தனை 
ஒரு பயணத்தின் முதல் அடி. 

மலையின் பாறைகள்
எழுந்து நின்றாலும் 
அவற்றின் கடினமான
வலிமையான மார்பில் 
மழை தன் விரல்களை நுழைத்து 
இடுக்குகளைத் தேடி
பிளவுகளை விரித்து 
பல்லாயிரம் ஆண்டுகளாய் 
பொறுமையாய்ப் பயணித்து 
இறுதியில் கடலையே சேர்ந்து விடும். 

கல்லாய் இறுகிய நெஞ்சங்களும்   
அதன் முன் தோற்றுப் போகும்
ஏனென்றால் மழைக்கு 
வலிமை இல்லை என்று நினைப்பவர்கள் 
அதன் மென்மையை மறந்து விடுகிறார்கள்
மென்மையே உலகை வென்றது என்பதை 
மழை தன் வாழ்வியலில் காட்டுகிறது. 

காதலில் தோற்றதாக நினைத்து 
வானம் அழுதாலும் 
அந்தக் கண்ணீரே 
பூமியின் வயிற்றில் 
பசுமையாய்ப் பிறக்கும். 

ஒரு சிறு விதையின் மீது 
ஒரு துளி விழுந்தால் போதுமே
அது மரமாகும் 
அது காடாகும் 
அது வாழ்வாகும். 

அதனால் தான்
மழை அழுவதில்லை
மழை புன்னகைக்கிறது. 
ஒவ்வொரு துளியும் 
ஒரு புதிய தொடக்கத்தின் 
முத்திரையாய் விழுகிறது. 

இன்று
நீர் வடிவில் வந்தாலும் 
பின்னர் பூவாக
பின்னர் காற்றாக 
பின்னர் வானவில்லாக 
பின்னர் மழையாக திரும்பி வரும். 

காதல் என்றும் தோற்று போவதில்லை
நாம் அதை காதல் தோல்வி
என்று நினைக்கிறோம் 
அது உண்மையில் ஒரு விதை 
விழுவது தோல்வி இல்லை
விழுந்த இடத்திலிருந்து 
முளைப்பது தான் வெற்றி. 

எனவே… 

மழை பெய்யட்டும். 
அதன் கண்ணீரில்
நனையட்டும் நம் நெஞ்சம். 
ஏனென்றால்
அந்த நனைவில்தான் 
நமது உடைந்த காதல்களும் 
ஒரு நாள் பூக்களாகும். 

மழை உணர்த்துவது
மனம் விட்டு அழு ஆனால் நிற்காதே. 
விண்ணை தாண்டி விழு ஆனால் முளைத்தெழு. 

அதனால் தான் 
இந்த மழை 
எப்போதும் அழகாய் 
எப்போதும் வலிமையாய் 
எப்போதும் நம்பிக்கையாய் 
பெய்கிறது… பெய்கிறது…. பெயிந்து கொண்டே இருக்கிறது
9
Hi Mr. Siva hearty congratulations 🎉🎉 for ur hardwork..

I have already seen ur old posts .. u have created many logos for many users in ftc nanumey feel panni iruken chaa namma antha time illama poitomey nu..

I am very happy to see you back again here..  welcome back home mr.siva..

I am so excited to explore your magic in forum..



10
      “போராட்டமும் பொழுதுபோக்கும் ஒரே மேகத்தில்”                                      காலை இருள் இன்னும் கரைந்திருக்க,
மழை கோபமாக தரையைத் தாக்க,
குடையை மார்போடு அழுத்திக் கொண்டு
வழுக்கி விழாமல்
சின்னச் சின்ன படிகளில் முன்னேறுகிறான்
ஒரு சாதாரண மனிதன்.

அவன் சிந்தனையின் உள்ளே
ஒரே ஒரு சத்தம்😌
இன்று வேலைக்கு தாமதமா ஆக கூடாது…
இல்லேனா சம்பளத்தில் குறைவு😔
குழந்தைகளின் மதிய உணவுக்கே பிரச்னை

மழை அவனை நனைத்தாலும்,
அவனின் மனதை நனைக்கவில்லை.
ஊதியக் காசில்
உணவு, பள்ளி கட்டணம், மருந்து😐
ஒவ்வொன்றும் கணக்காக நடக்கிறது.
அதனால் தான்
ஒவ்வொரு துளியும்
அவனுக்கு ஒரு பொறுப்பு.

அதே நேரத்தில்🤔

அதே மழையை
ஒரு பெரிய மாளிகையின் பின்தோட்டத்தில்
கைகள் பரப்பி
உயிரோடு ஊற்றிப் பெருகும் ஓசையாகக் கேட்கிறான்
மற்றொருவன்😎ஒரு பணக்காரன்.

விலையுயர்ந்த செடிகளின்🌹🌱 இலைகளில்
மழை தட்டும் சத்தத்தை ரசிக்கிறான்😇.
அவன் நடக்கும் பாதையில்
பெரிய கல்லணைகள், அழகான பூங்கா,
செடிகளின் வாசம்🌲
அனைத்தும் ஒரு ஓவியம் போல.

அவனுக்குப் மழை
ஒரு விளையாட்டு,
ஒரு சுகம்,
ஒரு நிம்மதி.

ஆனால் அந்த சாதாரண மனிதனுக்கோ🤔
அதே மழை
ஒரு போராட்டம்,
ஒரு கடமை,
ஒரு நாளைய நம்பிக்கையைத் தாங்கும் சுமை.

ஒரே இயற்கை🌧
ஆனால் வாழ்க்கை
இரு வேறு பாதைகளில் ஓடுகிறது.

ஒருவரின் மழை
பொறுப்புகளின் நிறை☔
மற்றொருவரின் மழை
பொழுதுபோக்கின் நிழை☔

இதுதான்
மனித வாழ்வின்
எளிய ஆனால் ஆழமான உண்மை.🔥💞
☔   💫 𝓁𝓊𝓂𝒾𝓃𝑜𝓊𝓈 பார்வையில் குடையும் மழையும் 💫             
Pages: [1] 2 3 ... 10