1
கவிதைகள் / Re: காதலர் தின சிறப்புக்கவிதை நிகழ்ச்சி (2026)
« Last post by Vethanisha on Today at 03:47:42 PM »காதல்…
இந்த மூன்றெழுத்து செய்யும்
மாயம் தான் எத்தனை!
அதை நீ மதித்த நேரம்
எதிரியை நண்பனாக்கி,
நண்பனைக் காதலனாக்கி ,
காதலனைக் கவிஞனாக்கி,
கவிஞனைக் கணவனாக்கி,
கணவனைக் காவலனாக்கி
வித்தை காட்டும்!
நீ அதை உதறிய வேளை
உரியவனைக் கயவனாக்கி,
கயவனைப் பகைவனாக்கி,
பகைவனை அந்நியமாக்கி,
நம்பிக்கையை நொறுக்கி,
நினைவுகளை நெருப்பாக்கி
வேடிக்கை காட்டும்!
நட்பு,
பாசம்,
நேசம்,
பற்று
என்றெல்லாம்
பரிணாமம் எடுக்கும்
இந்த அன்பின்
காதல் உணர்வுக்கு
மவுசு அதிகம்
எப்போதும்!
கண்களில் தொடங்கி,
ஊன் உயிரில் கலந்து,
கண் சிமிட்டி சிரிக்கும்!
எதிர்பார்ப்புகளை உருவாக்கி,
எண்ணமெல்லாம் பிணைத்து,
எட்டி நின்று ஏகத்தாளம் செய்யும்!
"ஆம்" என்ற வார்த்தையில்
உறவினை உருவாக்கி,
"போ" என்றவுடன்
உயிர் நொறுக்கி செல்லும்!
இருந்தும்
அற்புதங்கள் பல காட்டும்
இந்த
அன்பினிலே காலமெல்லாம்
அடிமையாவோம்
காதலில் விழுந்து
காதலையும் காதல்
செய்வோம்
இனிய அன்பர் தின நல்வாழ்த்துக்கள் ♥️
இந்த மூன்றெழுத்து செய்யும்
மாயம் தான் எத்தனை!
அதை நீ மதித்த நேரம்
எதிரியை நண்பனாக்கி,
நண்பனைக் காதலனாக்கி ,
காதலனைக் கவிஞனாக்கி,
கவிஞனைக் கணவனாக்கி,
கணவனைக் காவலனாக்கி
வித்தை காட்டும்!
நீ அதை உதறிய வேளை
உரியவனைக் கயவனாக்கி,
கயவனைப் பகைவனாக்கி,
பகைவனை அந்நியமாக்கி,
நம்பிக்கையை நொறுக்கி,
நினைவுகளை நெருப்பாக்கி
வேடிக்கை காட்டும்!
நட்பு,
பாசம்,
நேசம்,
பற்று
என்றெல்லாம்
பரிணாமம் எடுக்கும்
இந்த அன்பின்
காதல் உணர்வுக்கு
மவுசு அதிகம்
எப்போதும்!
கண்களில் தொடங்கி,
ஊன் உயிரில் கலந்து,
கண் சிமிட்டி சிரிக்கும்!
எதிர்பார்ப்புகளை உருவாக்கி,
எண்ணமெல்லாம் பிணைத்து,
எட்டி நின்று ஏகத்தாளம் செய்யும்!
"ஆம்" என்ற வார்த்தையில்
உறவினை உருவாக்கி,
"போ" என்றவுடன்
உயிர் நொறுக்கி செல்லும்!
இருந்தும்
அற்புதங்கள் பல காட்டும்
இந்த
அன்பினிலே காலமெல்லாம்
அடிமையாவோம்
காதலில் விழுந்து
காதலையும் காதல்
செய்வோம்
இனிய அன்பர் தின நல்வாழ்த்துக்கள் ♥️

Recent Posts




.jpg)