ஒரு படம் மட்டும் தான் கொடுக்கப்பட்டுச்சு .. ஆனா அதுல ஆயிரம் உயிர்கள் பேச ஆரம்பிச்சது. ஒரே ஓவியம் தான் ... ஆனா ஒவ்வொருத்தருக்கும் வேற வேற உலகம்... யாரோ காதலா பார்த்தாங்க… யாரோ கண்ணீரை உணர்ந்தாங்க… யாரோ தங்களைத் தேடி கண்டுபிடிச்சாங்க… அந்த ஒரு படம்…அது படம் இல்ல…அது ஒரு கண்ணாடி. அதுல ஒவ்வொருவரும் தங்களையே பார்த்தாங்க.
“ஓவியம் உயிராகிறது” ன்னு பெயர் வைக்கும்போது யாருக்கும் தெரியாது....இது ஒரு வரலாறு ஆகும்னு. சின்னதா தொடங்கியது…சில உணர்வுகள் மட்டும் இருந்தது… ஆனா இப்போ? நூற்றுக்கணக்கான இதயங்கள் ஒரே இடத்தில் துடிக்குது...
ஒரு படம் வந்ததும்…அந்த நிமிஷம்…எல்லாருக்கும் ஒரே எதிர்பார்ப்பு. “இது என்ன உணர்வு தரும்?”
சிலர் எழுத ஆரம்பிக்கும்போது...கைகள் நடுங்குது… ஏன்னா… அது அவங்களோட முதல் வரி....ஆனா அந்த முதல் வரிதான் ஒரு கவிஞனை உருவாக்குது... எழுத தெரியாதவங்க கூட…உணர தெரிந்தவர்கள் தானே ... அந்த உணர்வு…எழுத்தா மாறும் போது… அது கவிதை ஆகுது.
இங்க யாரும் எழுத்தாளர்கள் இல்ல... ஆனா எல்லாரும் aவங்களோட உண்மையா உணர்வுகளை எழுதறாங்க.. அதுதான் இந்த மேடையின் அழகு...
சில வரிகள் சிரிக்க வைக்கும்… சில வரிகள் மனசை உடைக்கும்… சில வரிகள் சிந்திக்க வைக்கும் ... சில வரிகள் நினைவுகளை திரும்ப கொண்டு வரும்....
இது கவிதை மட்டும் இல்ல… இது வாழ்க்கையின் சத்தம். ஒவ்வொரு வாரமும்…ஒரு புதிய பயணம்... ஒரு படம் → ஒரு கதை → ஒரு கவிதை → ஒரு பாடல்… அந்த பாடல் வரும் போது…நம்ம எழுதிய வரிகள்… மறுபடியும் உயிர் பெறும்...அந்த நிமிஷம்… அது உடலை சிலிர்க்க வைக்கும் ஒரு புனிதமான உணர்வு ..
400 வாரங்கள்… வெறும் எண்ணிக்கை மட்டும் இல்ல அது 400 உணர்வுகள்…400 நினைவுகள்…400 கதைகள். ஒவ்வொரு வாரத்துக்கும் பின்னாடி…ஒரு உழைப்பு இருக்கு. அதை யாரும் பார்க்க மாட்டாங்க… ஆனா அது தான் இந்த வெற்றியின் காரணம்.
தொகுப்பாளர்கள், பின்னணி இசை அமைப்பாளர்கள் , பாடல் தேர்வாளர்கள் அவர்கள் இந்த மேடையின் இதயம். ஒவ்வொரு வாரமும்…நம்ம உணர்வுகளை கேட்டு… அதை உலகத்துக்கு சொல்லி…இந்த மேடையை உயிரோடு வைத்திருக்கிறவர்கள். அவர்களுக்கு…ஒரு salute மட்டும் போதாது… ஒரு பெரிய நன்றி… என்னோட இதயத்திலிருந்து...
இந்த நிகழ்ச்சி…பலருக்கு ஒரு தைரியம் கொடுத்தது. “நானும் எழுதலாம்…”“நானும் சொல்லலாம்…” அந்த நம்பிக்கை... ஒரு வாழ்க்கையை மாற்றும்.....
ஒரு படம்… எவ்வளவு மாற்றம் செய்ய முடியும்… அதுக்கு இதுதான் சாட்சி. தமிழுக்கு இது ஒரு வெற்றி. உணர்வுகளை உயிரோட சொல்லும் மொழி…அது தமிழ். அதை இவ்வளவு அழகா வாழவைத்தது… இந்த மேடை... 400 வாரங்கள் கடந்துடுச்சு... ஆனா இது முடிவு இல்ல… இது தான் ஆரம்பம்.
இந்த பயணம்…நிற்க கூடாது. ஓவியம் வரட்டும்…உணர்வு பிறக்கட்டும்…
“ஓவியம் உயிராகிறது”…
இது ஒரு பெயர் மட்டும் இல்ல… இது…ஒரு உணர்வின் புரட்சி.
Hi IT Team Movie : Kadhar Dhinam Song. : Roja Roja Singer : UnniKrishnan Music. : A.RRahman. Lyrics. : Vaali Fvt line : unnai thendral theendavum vidamaten thingal theendavum vidamaten,
« Last post by auto karan onToday at 12:05:44 AM »
Hi friends na pothuva ipdi songs lam ketka maten but ipo recent a intha movie la Iruka songs keten unexpected ah ithula Iruka elam songs ume enaku romba pudichiruchi i was fallen to these songs thirumba thirumba ketute iruken ningalum ketu rasinga .. important thing is ithula ela songs um my favourite... But ithu konjam related Achu so ithu choice panren..