Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
மகளே
அன்னையும் நானே தந்தையும் நானே
உன் இனிய நண்பியும் நானே
உன் கவலையும் கண்ணீரும்
விசும்பலும் வேதனையம்
இனி வேண்டாம்
இருண்டுபோன  இந்த நகரம்போல்
உன் வாழ்க்கை ஆகிவிடக்கூடாது
இரவு முழுக்க பிரகாசிக்கும்
மின்விளக்கு போல  வெளிச்சமாகவேண்டும்


அவன் தாயுமானவன்
தாயை  இழந்த  மகளை
தாங்கிப் பிடிக்கும்  வேலி 
கயவரிடமிருந்து காப்பாற்றும்
கழுகு 


மகளே
சுற்றமும் சூழலும் 
எப்போதும் வருவதில்லை
கூடவே  இருந்து
 குழி பறிப்பார்கள்   சிலர்
தள்ளி  இருந்து
வேடிக்கை  பார்ப்பார்கள் சிலர்

மகளே
சிறகடித்து பறக்க வேண்டும் நீ '
வானமே  எல்லை   என
பறப்பதை   நிறுத்திவிடாதே
வருபவர் எல்லாம்  இங்கு தங்கிவிட்டால்
வருபவருக்கு  இடமேது  இங்கே
அன்னை  பிரிந்த துயர்
ஆறாத்துயர்  எனினும் 
அவள்  ஆசைகள்  உனதாகவேண்டும்
சோர்ந்து படுத்துவிட்டால்
சொர்க்கமே என்றாலும்
 வாழ்க்கை வெறுத்துவிடும் 

மகளே
துணிந்து நில்  வெற்றி நிட்சயம்
கனவுகள் கானல்நீராக கூடாது
காட்டாற்று வெள்ளமாக ஓடவேண்டும்
உறுதியோடு  உழைப்பாய் 
நாளைய  நாள்  உனதாகும்.

சாதிக்க பிறந்த  நீ
தளர்ந்து  போகக்கூடாது 
நாமிருக்கும் இந்த  கட்டை சுவர்போல
உன்னைத் தாங்க நானிருக்க
எதற்கு  இந்த சோகமும் பயமும்
நமக்கு பிடிச்ச வாழ்க்கை  நாளை
அமையும்  உறுதிகொள்
2
Jan 🙋🙋🙋🙋
3
ஆம்
4
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on December 30, 2025, 03:27:03 PM »
5
GENERAL / Re: Two minutes takeaways !
« Last post by சாக்ரடீஸ் on December 30, 2025, 12:49:14 PM »


Guilty Pleasures

    Everyone has a guilty pleasure. It is something we enjoy but do not always admit proudly. It could be watching silly videos late at night or eating junk food on a diet day or listening to old songs we pretend not to like. These small habits may not look productive but they make us feel good.

    Guilty pleasures give our mind a break from daily stress. Life is full of rules pressure and expectations. In between all that these little joys help us relax and feel normal. They remind us that it is okay to enjoy life without a reason.

    Of course too much of anything is not good. But enjoying something harmless once in a while is not a crime. Guilty pleasures remind us that we do not have to be perfect all the time. Sometimes choosing joy is more important than being right.


- socky
6
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on December 30, 2025, 12:17:32 PM »
7
பொதுப்பகுதி / Re: குறுந்தகவல் Raj
« Last post by RajKumar on December 30, 2025, 10:21:22 AM »
அழகாய் தான்
இருக்கிறது...

இந்த
மௌனமும்,
அமைதியும்,
சில
நேரங்களில்
தனிமையும்...

8
  கனவு இல்லையென்றால் இலக்கை அடைய முடியுமா ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வோம் சிறிய முன்னேற்றம் கூட நமது வாழ்வின் மாற்றம்

உனது ஆசைகளையும் கனவுகளையும் மறைத்தாய் ஏன்?  உனது கண்களின் அசைவுகளே காட்டி கொடுத்தது என்னவளின் ஏக்கதை எனக்குள் சுமையாக்க கூடாதென!!

உனது கரங்கோர்த்து ஆராவாரம் இல்லாத இடத்தில்  பேசுகையில் இன்னும் கடினமான பாதைகள் வந்தாலும் பயமில்லாமல் சொல்வேன் .உன்னுடன்   பயணம் செய்தால் சுமை கூட சுகம் தான் ..

உடைந்த போன  கனவுகள் எல்லாம் வலியாய் நம் வாழ்க்கையில் வந்தாலும்  உனது  புன்னகையால் நம் நம்பிக்கை ஒளிரசெய்து விடும்.
சோகம் நிறைந்த நாட்களும் உண்டு  வாழ்க்கை தடுமாறுமோ என பயமுமம் உண்டு  அது எல்லாமே  அடங்கி நீர்த்து போகும் உனது அமைதியான சுவாசகாற்றால் ..

எனது மடியில் உறங்கும் தேவதையே விரக்த்தியான நினைவுகளில்  உனது சிரிப்பை விதைத்து இரசிக்க செய்தாய், இரவின் மடியில் உன்னுடைய மௌனம் எனக்கு காதலிசை. 

தோல்விகளின் தொடக்க கதைகள் எல்லாமே நமது வாழ்க்கை பயணத்தின் முகப்பு பக்கங்கள்.விழுந்தால்  தூக்கி நிறுத்த உன் காதல் இருக்க. மாற்றத்தை  நோக்கி நகர்வோம் இரு கரங்களுடன் ...

எதிர்வினைகளை கடந்து  ஒரே பாதையில் இருவரும் செல்வோம் நம் காதலோடு , ஒரு நாள் நமது வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையோடு அல்ல மாற்றி காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையோடு ...

 
[/siz
9
ஒருநாள் மாறும் இந்த வாழ்க்கை
நமக்குப் பிடித்தாற்போல்
மட்டும் அல்ல தங்கையே,
அனைவருக்கும் பிடித்தாற்போல்
நம் வாழ்க்கை மாறும்
ஒரு நாள்…
தாய் இல்லா வெற்றிடத்தில்,
மது நாற்றம் சூழ்ந்த
ஒரு வீட்டில்,
அன்பும் அரவணைப்பும்
கல்வியும் இன்றியே
வளர்ந்தோம் நாம்.
குடித்துக் குடித்தே
உயிரை கரைத்த தந்தையும்
ஒரே அடியாய்
நம்மை விட்டு போனார்…
ஆனால் தங்கையே,
இனி
அந்த கடந்த காலமே
நம் அடையாளம் அல்ல.
“அண்ணா…
பயமா இருக்கு”
என்று நீ சொன்ன அந்த வார்த்தை
என் நெஞ்சை
உலுக்கியது.
ஆம்…
பயம் எனக்கும் உண்டு,
இந்த சமூகத்தில்
எப்படி வாழ்வோம்
என்று…
ஆனால் தங்கையே,
பயந்தபடியே முன்னே நடப்பதுதான்
தைரியம்.
இந்த சமூகத்தில்
நாம் வாழ்ந்தே ஆக வேண்டும்...
தலைநிமிர்ந்து,
நிம்மதியாக,
சந்தோஷமாக.
அதற்கான ஒரே வழி...

நம் கல்வி.
ஆம்…
கல்விதான்
கைகளில் விளக்காய்,
கண்களில் கனவாய்,
வாழ்க்கையில் வழிகாட்டி.
என் கையில் இருந்த
தந்தையின் கசப்பான நினைவாய்
அந்த மது பாட்டிலை
இன்று
தூக்கி வீசுகிறேன்.

அதற்குப் பதிலாக
உன் கையிலிருக்கும்
புத்தகப் பையை
எடுக்கிறேன்.

இனி நாம்
சமூகத்திற்கான
ஒரு எடுத்துக்காட்டாய் இருப்போம்...
“குடிகாரனின் பிள்ளை
குடிகாரனாகவே
மாற வேண்டியதில்லை
படித்தால்
உயர்ந்த நிலை அடையலாம்”
என்று.
அப்போது இந்த சமூகத்திற்குச்
சொல்வோம்....
குடிப் பழக்கம்
ஒரு தீர்வு அல்ல,
அது ஒரு வீழ்ச்சி என்று.

அந்த நாளுக்காக
நாம் இன்று
விழிப்போம்.
எழு தங்கையே…
எழு…

உன் கனவுகளை
முதுகில் சுமந்து,
உன் கல்வியை
ஆயுதமாக்கி,
உன் முயற்சியை
அடையாளமாக்கி..
இந்த உலகிற்கு
நாம் யார் என்பதை
சொல்ல…

நமக்குப் பிடித்தாற்போல்
மட்டும் அல்ல,
அனைவருக்கும் பிடித்தாற்போல்
நம் வாழ்க்கை மாறும்.

அந்த நாளை
நாமே
உருவாக்குவோம்.

LUMINOUS 💜💛🧡💚😇
10



ஏக்கங்கள் அலை போல் மோத
எதிர்பார்ப்புகளோ அதற்கும் மேலோங்க
என் வாழ்க்கை எங்கே என்ற தேடலில்
எனக்கான வரமாய் வந்தவன் நீ...

காலன் வந்து என் கை கோர்க்கும் வரை
உம் கைகளில் நான் தவழ நினைத்தேன்
நரை கண்டு கிழப்பருவம் எய்தினாலும்
நாம் ஈருடல் ஓருயிராய் வாழ நினைத்தேன்...

கனவுகள் பல என் கற்பனையில் ஓட
அக்கனவுகளை நினைவாக்க - இந்த வாழ்க்கையில் நான் ஓட
காலமும் ஓடியது என் கனவுகளும் ஒய்ந்தது
கனவுகள் நினைவாவது எளிதல்ல என்பதும் என் மனதில் பதிந்தது..

எது வந்த போதும் உன்னை பிரியேன் என்றாயே
என் கண் போல் உன்னை காப்பேன் என்றாயே
என் கண்கள் குளமாக.. பட்டுப்போன
தனி மரமாய் இன்று நிற்கிறேன்
இந்த தனிமையை எனக்கு வரமாக்காதே
என்று உன் மடியில் விசும்பி அழுத நொடியில்

'இன்னுமா இந்த கனவில் மிதக்கிறாய்

நீ கண்ட கனவுகளும் உனக்கில்லை
நீ தவழ்ந்த காரங்களும் இன்று உனதில்லை
வாழ்வியல் பாடத்தில் தேர்ச்சி பெற
இன்னும் பல அத்தியாகங்கள் மீதமுள்ளது...
அழுதது போதும் எழுந்து வா"
என்ற அசரீரி எங்கோ ஒலிக்க

எனக்கு மட்டுமே ஏன் இந்த நிலை
என்ன தவறு தான் நான் இழைத்தேன்
தனிமை மட்டுமே எனக்கு துணையா?
என்ற வினாவுக்கு விடையளித்தது என் மனம்

"இரவில் பல்லாயிரம் நட்சத்திரங்கள் ஜோலித்தாலும்
தனக்கான தனிச்சிறப்புடன் நிலவு இல்லையா  - அந்த
சூரியன்தான் பகலில் தனியாக உலா வரவில்லையா
உனக்கு பசித்தால் நீ தான் உண்ண வேண்டும்..
ஆயிரம் பேர் உன்னுடன் இருந்தாலும்
உனக்கான வாழ்க்கையை நீ தான் வாழ வேண்டும்
தனிமை என நினைத்தால்தான் அது தனிமை
அதையே வரமென நினைத்தால் அதற்க்கில்லை ஈடுயிணை'...

தனிமையுடன் கரம் கோர்த்து
எதார்த்தங்களை படிக்க தொடங்கினேன்
ஏமாற்றங்கள் ஏற்றுக்கொள்ள பழகினேன்
எதிரிகளை எதிர்த்து நின்று வீழ்த்தினேன்
எங்கு வீழ்ந்தேனோ அங்கிருந்தே எழுந்தேன்
புதிய விதையில் முளைக்கும் புதிய செடியாய்....

எனக்கான வாழ்க்கை
என்னால் மட்டுமே  - என்றும் அது
எனக்காய் மட்டுமே....



Pages: [1] 2 3 ... 10