Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
Love & Love Only / New Beginnings ✨
« Last post by MysteRy on Today at 10:19:57 AM »


The night felt warm and soft, just like the promises he once made.

Meghla still remembered that little restaurant—the candlelight flickering between them, the city glowing behind the glass windows, and Arian holding her hands as if he would never let go. He had looked into her eyes and whispered, “I’ll never leave you.”

She believed him.

But love doesn’t always break with noise. Sometimes, it fades quietly.

The calls became shorter. The messages came slower. The warmth in his voice slowly turned distant. And one evening, with a calmness that hurt more than anger, Arian said, “Maybe we need some space.”

Space.

It was such a small word for something that created such a huge emptiness.

Meghla felt her world collapse. She cried herself to sleep, replayed old memories, reread sweet messages, and blamed herself. Was I not enough? Did I love him too much?

Days passed in silence until someone gently knocked on her door—her best friend, Ishita.

Ishita didn’t come with dramatic speeches. She simply sat beside Meghla, held her hand, and stayed. She listened to the tears, the doubts, the heartbreak.

One evening, Ishita softly said,
“You didn’t lose someone who loved you. He lost someone who truly loved him.”

Those words didn’t fix everything overnight. But they planted something—hope.

Slowly, Ishita started taking Meghla out for walks, to bookstores, to cafés. She reminded her of her dreams, her strength, her laughter. Bit by bit, Meghla began to rediscover herself—not as someone’s girlfriend, but as her own person.

She focused on her studies, her ambitions, her passions. The girl who once felt shattered began to glow again.

Months later, Meghla found herself sitting in that same restaurant. The same candlelight. The same city view. But this time, she wasn’t broken. She was stronger. And Ishita was sitting across from her, smiling proudly.

“I’m not the same girl who cried here,” Meghla said softly.

“No,” Ishita smiled. “You’re better.”

As they laughed, a stranger from a nearby table politely approached.

“Excuse me,” he said gently, “your smile is beautiful. It deserves to stay.”

Meghla looked up, surprised—but not desperate, not afraid.

This time, she wasn’t looking for someone to complete her. She was already whole.

She realized something important that night:
Love that leaves is not the end of your story. Sometimes, it clears the path for something healthier, something truer.

And for the first time in a long while, Meghla felt ready—not to chase love, but to welcome it when it arrives.

Because broken hands can still hold new dreams.
And every ending carries the quiet promise of a new beginning. ✨
2
STORIES / “The Girl Who Refused to Give Up”
« Last post by MysteRy on Today at 10:11:31 AM »

.
In a small village, there lived a girl named Ariba.
From a very young age, life kept testing her. Her father was a daily wage worker, and poverty was a constant guest in their home. Some days they had enough to eat, and some days they didn’t. But Ariba carried a dream much bigger than her circumstances — she wanted to study, build a career, and one day give her mother a life without struggle.
To reach school, she had to walk three kilometers every day. During the rainy season, her books would get wet. Many days she attended class on an empty stomach. People would whisper:
“Why educate a girl so much?”
“She will get married anyway.”
Ariba would just smile quietly.
Because she knew — her fight was not against people. Her fight was against her destiny.
Then one day, everything changed. Her father fell seriously ill. The responsibility of the family fell on her fragile shoulders. She almost had to quit her studies. Many nights she cried silently, staring at her unfinished books.
But every morning, she wiped her tears and stood up again.
She started tutoring younger students. She worked in houses. She studied late at night when everyone was asleep. Her eyes were tired, her body exhausted — but her dream was alive.
Whenever she felt like giving up, she told herself:
“If I stop today, another girl like me tomorrow will lose the courage to dream.”
Years passed.
The same village that once doubted her now watched in disbelief as Ariba got admitted to university. She completed her degree with determination and finally secured a good job.
The day she received her first salary, she placed it in her mother’s hands and said:
“Your struggles end here, Ma.”
Today, Ariba is not just successful — she is an inspiration. She encourages other girls in her village to study, to believe, and to fight for their dreams.
Because she learned one powerful truth:
Life will test you. It will break you. It will make you cry.
But the one who stands up again and again —
is the one who truly wins.
3
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 09:58:47 AM »
4
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:51:37 AM »
5


விடுமுறையில்பாட்டி வீடு செல்வது அளவில்லாத சந்தோஷம் தரும். பாட்டியின் அன்பு ,அரவணைப்பும் மறக்க முடியாா நாட்கள் தான் .பேரன் தனது வீட்டிற்கு  வந்த சந்தோஷம் .  எனக்குத் தேவையான உணவு செய்வதில் பாட்டிக்கு ஆர்வம். கேட்ட பொருள் வாங்கி தரும் தாத்தா பாட்டி.
   அப்போ கோழி எனக்கு ரொம்ப பிடிக்கும் .அதை உடனே பாட்டி சமையல் செய்து ஊட்டி விட்ட நியாபகம் இன்னும் மறக்க முடியாத நினைவுகள் .தாத்தா  பாட்டி பேரனை வெளியா கூப்பிட்டு போலாம் சொன்னா உடனே சரி நாளைக்கு போலாம் என்று சொன்னவுடனே எண்ணற்ற  மகிழ்ச்சி. எனக்கு அவ்ளோ ஆனந்தம் ஆ  இருக்கும்.     
   சிறு வயதில் தியேட்டர் கூட்டி போவாங்க. குடும்ப கதை படம் ஒரு இருக்கு படம் பார்த்து மகிழ்ந்த தருணங்கள் .எனக்கு தேவை ஆன ட்ரெஸ் அது first choice ஆ இருக்கும் .உனக்கு என்ன டிரஸ் வேணுமோ எடுத்துக்கோ  னு சொல்லும் தாத்தா பாட்டி.. மறக்க முடியாத நினைவுகள் .விடுமுறையில் சென்ற போது திருமண விழா. நான் தாத்தா ,பாட்டி கூட போறது .அவங்க இது என் மக புள்ள பையன்  சொல்றதும் பள்ளி விடுமுறையில் வந்துருக்கான் சொல்வாங்க .மற்ற சொந்தம் பந்தம் இடம் எப்படி பேசுவது என்பதை தாத்தா பாட்டி இடம் கற்று கொண்ட நினைவுகள்.
 இந்த உலகில் மதிப்பும் மரியாதையுடன் பேச காரணமாக இருந்தாங்க என் தாத்தா பாட்டி தான் .பணம் பெரிது பார்க்காமல்  அன்பு உள்ளங்களை மறக்க முடியாது. விடுமுறை முடிந்து பாட்டி வீட்டில் விட்டுச் செல்லும் மனதில் ஏதோ ஒரு மன கவைலை இருக்கும். இன்றும் சில நாட்கள்  தங்கணும் தோணும். தாத்தா பாட்டி கூட திரும்ப என்னை ஊருக்கு வர மாடேன் னு அப்பா அம்மா தான் கூப்பிடா வருவாங்க ... ஊருக்கு கிளம்பு முன் நல்லா இருந்து இருக்கு மாமா இருப்பார் .அவர்  கூட விளையாடாத நாட்கள் மறக்க முடியாது.  தாத்தா பாட்டி நற்குணங்கள் யாருக்கும் வராது .தாத்தா பாட்டியை விட்டுடு செல்கின்றோம் .இனி அடுத்த எப்போ  விடுமுறை வரும். எப்போடா பாட்டி வீட்டிற்கு வரும் னு மனசு ஏங்கும். இன்று தாத்தா பாட்டி இ‌ல்லை என்பது மனசு ரொம்ப கஸ்டம். என்றும் உங்கள் நினைவில் உங்கள் பேரன் பிரியமுடன் ரஹ்மத்துல்லா
6
  விடுமுறை என்றாலே என்றாலே ஞாபகத்துக்கு வருவது பாட்டி வீடு.எங்களுக்கு பள்ளி பெரிய விடுமுறை வருவது ஆகஸ்ட் மாதம்.ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு இலங்கையில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வோம்.எங்களை வரவேற்க பாட்டி ,தாத்தா விமான நிலையத்தில் ஆவலோடு காத்திருப்பார்கள்...எங்களை ஆரத்தழுவி முத்தமடுவதில்  என் மனம் காற்றில் பறக்கின்ற சந்தோசம்..
   விமான நிலையத்திலிருந்து பாட்டி வீட்டை சென்றடையும் வரை ,பாட்டி தாத்தாவுடன் பலகதை பேசிட்டு வருவேன்.போகும் வழியில் பல்வேறு உணவுகள் வாங்கி கொடுத்துண்டு மகிழ்வோம்.பாட்டி வீட்டை சென்றடைந்ததும் முதலில் உங்களை வரவேற்பது நாய்க்குட்டி வீமா தான்.எங்கள் வருகையை கண்டு மகிழ பாட்டி வீடு பூராகவும் மாமா, அத்தை, பெரியம்மா பெரியப்பா என உறவுகள் கூடி இருப்பார்கள்.
அவர்களைப் பார்க்கும்போது இனம் புரியாத மகிழ்ச்சி என் மனதில்...எல்லோரும் பேசிட்டு இருக்கும்போது பாட்டி சொல்லுவார் "நான் இல்லாத நேரத்திலும் இப்படி சந்தோசமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் எல்லோரும் "என்று.....
   மறுநாள் காலை சுடச்சுட பால் அப்பத்தில் ஆரம்பிக்கும் பாட்டியின் கைப்பக்குவம். அந்தப் பால் அப்பத்தின் சுவை இன்னும் என்னாக்கினை விட்டு அகலவில்லை.தாத்தா கடற்கரையில் சென்று மீன், நண்டு ,கணவாய் வாங்கிட்டு வருவாங்க.அதனை பாட்டி பக்குவமாய் ஒடியல் கூழாகி ,எல்லா உறவுகளும் சூழ்ந்து இருந்து ,குடித்து மகிழ்வோம்..அப்போது பாட்டியின் குரல் ஓங்கி ஒலிக்கும்" மீன் முள் வரும் பத்திரமா சாப்பிடுங்க" என்று...
  பாட்டி வகைவகையாய் வாய்க்கு வக்கனையாய்  சமைத்து தருவாங்க.பாட்டி சமையல் மண் சட்டி, பானையில் பண்ணுறது தான் தனிச்சுவை.அரிசிமா புட்டு,மீன் பொரியல் ,இடியப்பம்,சம்பல் ,சொதி நண்டு குழம்பு,இட்லி ,தோசை ,வடை என்று பாட்டியின் கைப்பக்குவத்தை யாராலும் அசைக்க முடியாது...பாட்டி தான் எனக்கு சமையல் கற்றுக்  கொடுத்தாங்க...
  பாட்டியின் வீட்டைச் சூழ பல வகையான பழமரங்கள்.வீட்டு முற்றத்தில் இருந்தால் இயற்கையான காற்று...மாம்பழம் வாழைப்பழம், பலாப்பழம் ,கொய்யாப்பழம்,இளநீர் என இயற்கையான பழங்களை பாட்டியும், தாத்தாவும் எங்களுக்கு தருவார்கள்.அந்தப் பழங்களின் சுவை இன்னும் என் நாக்கில் இன்னும் சுவையூகிறது.
   பாட்டி ,தாத்தா கூட தூங்கும் போது பல்வேறு புராணக் கதைகள் ,நீதிக் கதைகள் கூறுவார்கள்.அவர்களின் கதையை கேட்டு அப்படியே நான் தூங்குவேன்.தாத்தா கூத்து பாடல்கள் எனக்கு சொல்லிக் கொடுப்பார்.நான் அந்தப் பாடல்களைப் பாடும் போது "என் பேர்த்தி கெட்டிக்காரி" என்று தாத்தா கூறுவார்.தாத்தா பாடல்கள் தான் இசைமேல் ஆர்வத்தை எனக்கு தூண்டியது.
   பாட்டி பக்கத்தில் இருக்கிற கோவிலுக்கு என்னைக் கூட்டிட்டு போவாங்க.அங்கே பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது.அந்த ஆலமர விழுதுல ஊஞ்சலாடுவோம்.
பாட்டி வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் கிளித்தட்டு,கபடி என்று விளையாடி மகிழ்வோம்.அங்கே சாளரங்கள் திறந்து வைத்து தூங்குவதால் ,காற்றோட்டம் இதமாக வந்து நிம்மதியான தூக்கத்தை தரும்.
  பாட்டி வீட்டில் ஆடு, மாடு ,கோழி என வளர்த்து வந்தார்.இவற்றிற்கு உணவு கொடுத்து,விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதிகாலையில் எழும்பும்போது சூரிய உதயம்,சேவல் கூவுதல்,காகம் கரைதல்,பட்சிகளின் ரீங்காரம்,கோவில் மணியோசை எல்லா ஒலிகளும் மனதுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
  பாட்டி, தாத்தா உறவுகளுடன் ஊரைச் சுற்றி பார்ப்போம்.என்ன ஊரைச் சுற்றிப் பார்த்தாலும் பாட்டி வீட்டில் இருக்கிற சந்தோசம் போல் வராது.பாட்டி ,தாத்தாவின் பாசம் எல்லையற்றது.பாட்டியின் கைப்பக்குவம் தனித்துவமானது.பள்ளி விடுமுறையை பாட்டி வீட்டில் சந்தோஷமாக கழித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்....
   இப்போ விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு செல்கின்றேன்.ஆனால் அங்கே வரவேகற்க அன்பான பாட்டி ,தாத்தா உயிருடன் இல்லை.அவர்களின் உயிரோட்டமான வீட்டில் எங்கள் பொழுதைக் கழித்துவிட்டு திரும்புகின்றோம். அவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் எங்க கூட இருக்கும்.தாத்தா ,பாட்டி உங்களை மிஸ் பண்றேன்.....
7
எப்போ பள்ளி கோடை விடுமுறை வரும், எப்போ ஆச்சி தாத்தாவ பார்க்க போவோம்னு மனசு ஏங்குன நாட்கள் அதிகம்.. தூக்கம் கூட வராது எப்போ மாலை நேரம் வரும்னு, எப்போ ரயிலில் போவோம்னு.. அந்த ரயில் பயணமே அவ்வளவு அழகா போகும், அந்த மண் வாசனையே தனி.. ஜாலி ஆயிடுவோம், நான் அக்கா அண்ணா எல்லோரும்..

இதுல இன்னுமொரு சந்தோஷம் என்னன்னா அப்பா, அம்மா ஊருக்கு 1 கி.மீ தான் தூரம்.. அதனால 2 இடத்துக்கும் போயிட்டு வந்துடலாம்.. ஆனால் அப்பா ஊர் தான் ரொம்ப பிடிக்கும், ஏன்னா முத்தாச்சியோட அன்பு அப்படி.. தோழிகளும் அங்க தான் அதிகம்..

பெரிய இடம் விளையாட.. போன உடனே ஆச்சி ஊஞ்சல், மரத்துல கட்டி கொடுத்திடுவாங்க அதுல அவ்வளவு உயரமா ஆடுற சுகமே தனி.. வீடு பின்னாடியே தோட்டம், இளநீர் குடிக்க ஸ்டிரா (straw) எல்லாம் கிடையாது.. பப்பாளி மரத்தோட ஸ்டிரா தான்.. பெரிய தொட்டி, 2 முறை குளியல் அதுவும் 2 மணி நேரம் ஆட்டம் போடுவோம்..

​அந்த தேரிக்காடு செம்மணல், ஆச்சி கை பிடிச்சு போகும் அந்த நினைவுகள், கொல்லம்பழம் சுவைய அடிச்சுக்க முடியாது.. வீட்டுக்கு அருகாமையிலேயே சுடலைமாடன் கோவில், திருவிழா வந்துட்டா போதும் ஊரே களைகட்டும்..

​இந்த பக்கம் அம்மா ஊருக்குப் போனா அம்மன் கோவில், சப்பரம், முளைப்பாரி-னு அங்கேயும் நல்லா இருக்கும்.. ஒரே நேரத்துல திருவிழா வரும், காப்பு கட்டிட்டா அங்க போகக் கூடாதுன்னு சொல்லுவாங்க, ஆனாலும் ஆச்சிகிட்ட கேட்டு அங்கேயும் போய் பார்த்திடுவோம்..

​முக்கியமா மாமா பசங்களுக்காகப் போவோம்.. மாலை நேரம் வந்துட்டா போதும், எல்லோருமே வெளிய தான் இருப்போம்.. கபடி ஆடிட்டு இல்ல பள்ளாங்குழி ஆடுவோம்.. இரவாச்சுன்னா தாத்தா கையால நிலாச் சோறு நிச்சயம்.. எப்பவும் அடுப்புல கருப்பட்டி காபி கண்டிப்பா இருக்கும்..

நாங்க ஊருக்கு போனாலே திரையில ஆச்சி கண்டிப்பா படம் போட சொல்லிடுவாங்க, அவங்க மடியில படுத்து படம் பாக்குற சுகம் எதுலயும் இல்ல.. கட்டி பிடிச்சு அவங்க கொடுக்கிற முத்தம் இப்போ நினைச்சாலும் உடம்பு சிலிர்க்குது.. அவங்க காதுல போட்டிருக்க தங்கட்டி எனக்கு தான் வேணும்னு எப்பவும் செல்லமா சண்டை போடுவேன்..

தாத்தாவ(அப்பா ஓட அப்பா) நான் பார்த்ததே இல்லை.. மொத்த அன்பையும் ஆச்சி கொடுத்திருக்காங்க.. அவங்க கையால சமைக்கிற அந்த பருப்பு கூட்டு அவ்வளவு மணம், தொட்டுக்க அப்பளம் போதும்.. வட்டில் நிறைய சாதம் போட்டு அவங்க ஊட்டுற அன்புக்கு ஈடு இணையேது..

மதியம் ஆனா தோட்டத்துக்கு போயிடுவோம்.. அங்க பதநீர் வச்சிருப்பாங்க, நல்ல மாம்பழம் நிறைய போட்ட பதநீர் அமிர்தம்.. அந்த பக்கம், கிடங்கில கருப்பட்டி காய்ச்சிட்டு இருப்பாங்க.. பனை ஓலைய கிழிச்சு கிடங்குல இருந்து ஓரமா எடுத்து தர கூப்பணியும் அம்புட்டு ருசியா இருக்கும்..
​இரவானாலே ஆச்சி கதை சொல்லாம தூங்கின நாட்களே இல்லை..

ஊருக்கு போகும் போது எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அங்க இருந்து கிளம்பும் போது அவ்வளவு சோகமும் திரும்ப எப்போ வருவோம் என்ற ஏக்கமும் இப்படியே இங்கேயே இருக்கலாமே என்று அப்பாவிடமும் போட்ட சண்டைகள் பல.. எத்தனை வருடங்கள் ஆனாலும் ஆச்சியின் நினைவுகள் நெஞ்சில் நீங்காத நினைவுகளாய்!!!
8
SMS & QUOTES / Re: Words that HIT ! ✨
« Last post by சாக்ரடீஸ் on Today at 12:08:00 AM »
stand with love, not under control !

9
பள்ளி விடுமுறை என்றாலே என் மனசு நேராக போகும் இடம்  பாட்டி வீடு.
அது ஒரு வீடு இல்லை… ஒரு தனி உலகம்.
விடுமுறை ஆரம்பமான உடனே பள்ளிப் பையை மறந்துவிட்டு பாட்டி வீட்டுக்குப் போய்விடுவேன். அங்கே வாழ்க்கை வேறு நிலை.
தாமதமாகத் தூங்கலாம்… தாமதமாக எழுந்துக்கொள்ளலாம்…
படி, இதைச் செய்யாதே, அப்படி செய்யாதே, என்ற கண்டிப்பு அதிகம் இருக்காது.
அந்த சுதந்திரமே அந்த நாட்களின் பெரிய சந்தோஷம்.
அங்கே எனக்கு நிறைய நண்பர்கள். காலையிலேயே கூட்டமாக விளையாடுவோம். சில நாட்களில் மீன் பிடிக்கச் சென்று மகிழ்ச்சியாக இருப்போம்.
ஆனால் அந்த மகிழ்ச்சிக்காக ஒருநாள் நல்ல அடி கூட வாங்கியிருக்கிறேன்😒
இப்போது நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
என் பாட்டி கையால் செய்யும் பால் கடும்பு… அது ஒரு இனிப்பு மட்டும் அல்ல அன்பின் வடிவம்.
அதை எனக்காகக் கொடுத்தால், நான் என்ன செய்வேன் தெரியுமா?
வெளியில் விளையாடும் நண்பர்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுத்துவிடுவேன்.
அவர்கள் சாப்பிட்டு இன்னும் எடுத்து வா, என்றால், எனக்குத்தான் வேண்டும் என்று சொல்லி மீண்டும் மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து அவர்களுக்கே கொடுத்து விடுவேன்.
ஒருநாள் அப்படியே “இன்னும் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தேன், திடீரென்று திரும்பிப் பார்த்தால் 🙄 பாட்டி பின்னால் நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எதற்குத்தான் இன்னும் வேண்டும் என்று கேட்டாய்? என்று கேட்டதும்… நல்ல கண்டிப்பு
அந்த நாளிலிருந்து இன்றுவரை பால் கடும்பு என்றாலே எனக்கு பயத்தோடு சேர்ந்த ஒரு நினைவு.
இன்னொரு சம்பவம்  நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது.
பாட்டி வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு பையன் தேர்வு முடிந்ததற்குப் பிறகு சட்டையில் மை தடவி விளையாடிக்கொண்டிருந்தான்.
நான் வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று அவன் சட்டையில் இருந்த பேனாவை எடுத்து அதிலிருந்த மையை அவன் முதுகில் ஊற்றிவிட்டேன்🙃
அவன் என்னைத் துரத்தினான். நான் ஓடிவந்து பாட்டி வீட்டில் ஒளிந்துக்கொண்டேன்.
அவன் வந்து அவள் எங்கே? என்று பாட்டியிடம் கேட்டான்.
என் பாட்டி காரணமே கேட்காமல் அதோ அலமாரி பின்னால் என்று சொல்லிவிட்டு அமைதியாகப் போய்விட்டார்கள்😑
அவன் என் ஜடையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டான்🤨
அந்த நேரத்தில் அவன் அம்மா வந்தார்கள்.
நான் உடனே அழுது, 🤕மாமி, இவன் அடிக்கிறான் என்று சொல்லி மாட்டிவிட்டேன்.
அவனுக்கு அங்கேயே நல்ல அடி.
என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே, அடிவாங்கிக் கொண்டு போனான். 😂
இப்போது அந்த எல்லா சம்பவங்களையும் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
அதுதான் பாட்டி வீடு.
தவறு செய்தாலும் சின்னச் சின்ன சண்டைதான்… ஆனால் அன்பு மட்டும் மிகப் பெரியது.
விடுமுறை முடிந்து திரும்ப வர வேண்டிய நாள் மிகவும் கடினம்.
சிறிது கோபம்… சிறிது சோகம்… சில நேரங்களில் கண்ணீரும் கூட.
ஆனால் அந்த சிரிப்பு, அந்த சுதந்திரம், அந்த அன்பு , இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.
பாட்டி வீடு என்பது ஒரு இடம் அல்ல…
ஒரு உணர்வு.
என்றும் மறக்க முடியாத  நினைவுகள்.
எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகள்           💜💛💙🧡🧚‍♀️😍🍭 ஒளிமிகு LUMINOUS
10
அப்பம்மா வீடு

கிழக்கு இலங்கையின் கரையோர பகுதியில் எங்க அப்பம்மா வீடு. விருந்தோம்பலுக்கு பெயர் போன மீன் பாடும் பூமி அது. அட metaphor ஆஹ் சொல்லலைங்க, நிஜமாவே அந்த கடற்கரை ஓரமா பௌர்ணமில போனோம்னா கடலலைகளோட மீன்கள் எழுப்புற சத்தம் பாடுற மாதிரி இனிமையா தான் இருக்கும்.

கடலுக்கும் எங்க வீட்டுக்கும் 100m தான் தூரம். ஆகஸ்ட் விடுமுறையில பெரியப்பா family சித்தப்பா family நாங்கன்னு எல்லாமே அங்க ஆஜர் ஆகிடணும்கிறது மீற முடியாத எங்க அப்பம்மாவோட அன்பு கட்டளை. சுருள் முடியும் கன்னக்குழியும் முகத்துல எபவுமே தவழும் ஒரு புன்னகையும் தான் எங்க அப்பம்மாவா நினச்சா உடனே mind கு வார எங்க அப்பாம்மாவோட விம்பம்.
சமையல் மட்டும் ,தான்  மட்டும் தான் பண்ணுவன்றது,எங்க அப்பம்மா சமரசமே பண்ண முடியாம அடம் பிடிக்கும் விஷயம்.இருக்கிற அவ்வளவு நாளும் ஒவ்வொரு வேளை சாப்பாட்டுலயும் மருமகள், மகன் மற்றும் பேரப்பிள்ளைங்க favourite dish அவங்க கையாலேயே பார்த்து பார்த்து செஞ்சு வச்சிடுவாங்க.செல்லம், குட்டி, தங்கம் அப்படின்ற வார்த்தைகளைத் தவிர பெயர் கூட சொல்லி கூப்பிட மாட்டாங்க எங்க அப்பம்மா. வீணை முதல் ஆங்கில இலக்கியம் வரை கற்றுத் தேர்ந்த ஆழ்ந்த அறிவும் அன்பும் கொண்ட பெண்மணி.

அம்மா, பெரியம்மா, சித்தி எல்லாம் இருந்து கதை பேசி கொண்டே ,அப்பம்மா சமையலுக்கு காய்கறிகள் வெட்டி கொடுப்பாங்க .

அப்பா, பெரியப்பா, சித்தப்பா இருந்து பூகோள அரசியல்ல இருந்து, cricket ஆன்மீகம் வரைக்கும் அலசி ஆராய்வாங்க.

நம்ம cousin gang ,வெளிநாட்ல இருந்து சித்தப்பா கொண்டு வந்த சின்ன வீடியோ  camera வச்சு அப்பவே short film எடுப்பம் . Battery போடுற guitar toy எங்க BGM source.பனங்கா  பணியாரத்துல இருந்து nestamalt வரைக்கும் advertisement  கூட நாங்க அப்பவே shoot பண்ணிருக்கோம். அதை மணல்ல பாய் விரிச்சு வெற்று சுவர்ல மல்டிமீடியா ப்ரொஜெக்டர்ல ப்ரொஜெக்ட் பண்ணி எல்லோருக்கும் இரவு telecast பன்றது எங்க பெருமிதம்னான பால்ய கால oscar moment .

வருஷத்துக்கு ஒரு தடவ வார மாமங்க திருவிழால விக்கிற மண்ணுல செய்ற சின்ன சட்டி முட்டி அடுப்பு விளையாட்டு பொருளை வைகோல் போட்டு உடையாம pack panni எனக்கு பரிசா தருவாங்க. முதல் பேர பிள்ளை என்றதால எனக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை அது

அப்பம்மா வீட்டை சுத்தி நிறைய முந்திரி மரம் இருக்கும். இரவின் அமைதியில ஓயாம கேட்கும் கடல் அலை சத்தம் பின்னணியில ,எங்க அப்பம்மா விறகடுப்பு மூட்டி சுடுமணல்ல முந்திரி வறுத்து உடைச்சு தர்ற முந்திரிக்கு எங்க ஸ்கூல்ல அவ்வளவு டிமாண்ட் இருக்கும்.

taunami பேரலையில் எங்க வீடும் முந்திரி தோட்டமும் அழிஞ்சு போயிருந்தாலும் , எங்க வீட்டு கட்டிடத்தின் எச்சங்களும் அந்த வெண்ணிற மணலும்  , கடலலை சத்தமும் இன்னும் எங்க பள்ளி கால விடுமுறை நாட்களின் வாழ்வியலின் அடையாளமாய் இன்னைக்கும் நிலைச்சு நிக்குது.ஏன்னா சில கட்டிடங்கள் கற்களால கட்டப்பட்டதில்லை. நினைவுகளால கட்டப்பட்டது.
Pages: [1] 2 3 ... 10