Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on March 06, 2026, 09:57:13 AM »
2
GENERAL / Re: Good Morning
« Last post by TiNu on March 06, 2026, 08:17:35 AM »
3
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on March 06, 2026, 06:11:56 AM »
4
என் உயிர் தோழி Fazee

“எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்” என்ற விதி  காந்தத்துக்கு மட்டும் அல்ல ,வாழ்க்கைக்கும் பொருந்தும் என்பதற்கு எங்கள் நட்பே ஆகச்சிறந்த சாட்சி.

இயல்பிலேயே நாங்கள் இரண்டு துருவங்கள்.
எதற்கெடுத்தாலும் தயங்கி நிற்கும் ஒரு பயந்த மனசு நான்.
ஆனால் Fazee,தவறு என்று தெரிந்தால் யாருக்கும் அஞ்சாமல் நிமிர்ந்து பேசும் துணிச்சலின் உருவம்.

எங்களைப் பிரிக்க வேண்டிய இந்த மாறுபாடுகளே, எங்களை இன்னும் வலுவாக இணைத்தது என்பது வாழ்க்கையின் அழகான விந்தை.

எங்க வாழ்கைல நம்ம நட்பை பறைசாற்ற நிறைய தருணங்கள் இருந்தாலும் மறக்க முடியாத ஒரு சம்பவம்னா ,

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்தபோது, எனக்கு கடுமையான eye infection ஏற்பட்டது. Admission பெற பள்ளிக்குச் சென்றபோது, தொற்று பரவிவிடுமோ என்ற பயத்தில் பலர் என்னை விட்டு விலகி நின்றார்கள்.

அந்த நேரத்தில் நான் உணர்ந்த தனிமை, அந்த வயதில் மிகப் பெரிய வேதனை.

ஆனால் அந்த கூட்டத்தில் ஒருத்தி மட்டும் விலகவில்லை.

அவள் வந்து என் கையைப் பிடித்தாள். அருகில் நின்றாள்.
அவள் — என் Fazee

அன்று அவள் சொன்ன “நீ முடிப்பே” என்ற ஒரு வரி, ஒரு தேர்வை கடக்க உதவியதல்ல; வாழ்க்கையில் என்னை நம்ப கற்றுத்தந்தது.

சில நேரங்களில் நட்பு என்பது பெரிய செயல்கள் அல்ல.
அது சரியான நேரத்தில் துணை நிற்பதுதானே?

எங்க நட்பு இரண்டு பேருக்குள் மட்டுமே இருக்கவில்லை. அது மெதுவாக எங்க குடும்பங்களையும் இணைத்தது.

அவள் பாடும் அந்த ஆழ்ந்த குரல் பாடல்களுக்கு என் அம்மா முதல் ரசிகை.
அவள் வீட்டில் பெருநாள் என்றாலே, வட்டிலாப்பமும் பிரியாணியும் எனக்கென்று ஒரு பங்கு  அவங்க உம்மா ஒதுக்கி வச்சுடுவாங்க.

‘உக்கு மாமி’, ‘Fareeha (dha)தாத்தா ’, ‘கம்பளை சாச்சா-சாச்சி’ னு அவ உறவுகளும் என் உறவாகி போனாங்க

திருமணத்திற்குப் பிறகு பல நட்புகள் மெதுவாக மங்கிவிடும் என்று சொல்வார்கள்.
ஆனால் எங்கள் நட்பு அதற்கு விதிவிலக்காக இருந்தது.அவளோட சேர்ந்து எங்க நட்பையும் அவள் கணவன்   புரிஞ்சுட்டது இன்னும் எங்கள் நட்பு அதே நெருக்கத்தோட தொடர்வதற்கு ஒரு பெரிய காரணம்.

ஒரு காலத்தில், அவள் கண்டிப்பாக அரபு மொழி ஆசிரியையாக வருவாள் என்று நான் நம்பிக்கையுடன் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் , “நான் குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்” என்று அவள் சொன்னபோது, எனக்கு சிறிய ஏமாற்றம் தோன்றியது என்பது உண்மை.

ஆனால் வாழ்க்கை எனக்கு ஒரு பெரிய பாடம் கற்றுத்தந்தது.

அவள் தனது குடும்பத்தை சிறப்பாக வழிநடத்தி, கணவரின் தொழிலில் உறுதுணையாக நின்று, அமைதியாக பல வெற்றிகளை கட்டியெழுப்பிய விதம் —
வெற்றி என்றால் பதவி அல்லது பெயர் மட்டும் அல்ல;
ஒரு குடும்பத்தை உறுதியாக நிமிர வைப்பதும் ஒரு பெரிய சாதனையே என்பதை எனக்கு நிரூபித்தது.

இன்று நான் பெருமையுடன் சொல்வேன் —
அவள் எடுத்த பாதை வேறாக இருந்தாலும், அது குறைவானதல்ல;
அது அவளுக்கே உரிய வலிமையான தேர்வு
 என்றும் எங்களுக்குள் ஒளிவுமறைவு இருந்ததே இல்லை.
சிறிய வெற்றியோ, மனதை உருக்கும் கவலையோ — என் முதல் அழைப்பு அவளுக்குத்தான்.

அவளுக்கே உரித்தான அந்த ஆழ்ந்த குரலில்
“அடியேய்…” என்று தொடங்கும் அந்த ஒரு வார்த்தை —
எனக்கு மருந்து.

வாழ்க்கையில் பலர் வருவார்கள்.
சிலர் நினைவாக மாறுவார்கள்.
மிக சிலர் மட்டும் — அடையாளமாக மாறுவார்கள்.

எனக்காக எப்பவுமே நிற்கும்.என் வாழ்க்கையின் அந்த அடையாளம் — என் Fazee ❤️
5
எங்கள்ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் அதில் கண்ணன் செல்வம் அபிநயா பரமேஸ்வரி என எனக்கு நாலு நண்பர்கள் இருந்தாங்க எங்கள் ஊரில் இரண்டு பள்ளிக்கூடம் இருந்தது ஒன்று ஆரம்பப் பள்ளிக்கூடம் இரண்டாவது நடுநிலை பள்ளிக்கூடம் ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் இருக்கும் நடுநிலை பள்ளிக்கூடத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இருக்கும் நான் பயின்றது ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் எனது நண்பர்கள் பயின்றது நடுநிலை பள்ளிக்கூடத்தில் நான் எனது நண்பர்களை சந்தித்தது வகுப்பு 6 அந்த நாளிலிருந்து எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வோம் பள்ளிக்கு செல்வதாக இருக்கட்டும் விளையாடுவதாக இருக்கட்டும் , எல்லாம் ஒன்றாகத்தான் செய்வோம் பள்ளி முடிந்தவுடன் சாயங்கால நேரம் விளையாட ஆரம்பிப்போம் அப்போது ஒளிந்து பிடித்து விளையாடுவது பச்சை குதிரை தாண்டுவது குண்டு விளையாடுவது போன்ற எண்ணற்ற விளையாட்டுகளை விளையாண்டு  மகிழ்வோம் அப்பொழுது எனது தோழிகள் நான் வெற்றி பெறுவதற்காக எனக்கு கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் நானும் எனது தோழிகள் ஆரவாரம் செய்வதை கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பேன் விளையாட்டுகளிலும் வெற்றியை பெறுவேன் பிறகு விளையாட்டு முடிந்தவுடன் எங்கள் வீட்டு மாடியில் சென்று நானும் எனது நண்பர்களும் ஆசிரியர் கொடுத்த வீட்டு பாடங்களை செய்ய ஆரம்பிப்போம் அப்பொழுது எனக்குத் தெரியாத புரியாத பாடங்களை எனது தோழிகள் எனக்கு சொல்லித் தருவார்கள் பிறகு நிலா சோறு சாப்பிட ஆரம்பிப்போம் எனது தோழிகள் வீட்டில் இருக்கும் உணவுகளை எடுத்து வருவார்கள் நான் எனது வீட்டில் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டு போவேன் நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து உணவுகளை ஷேர் செய்து சாப்பிடுவோம் அந்த நினைவு இன்னும் என் மனதில் நிலைத்து  நின்றிருக்கிறது அந்தக் அந்தக் காலம் இனி வராதா என்ற ஏக்கம் என்னுள் இருக்கிறது இவ்வாறு மூன்று ஆண்டுகள் போனது ஒன்பதாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊருக்கு தான் செல்ல வேண்டும் அந்த ஊர் எங்கள் கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் காட்டு வழிப் பாதையில் நடந்து சென்று தான் பள்ளிக்கூடம் போக வேண்டும் அப்போது எங்களுக்கு துணையாக எனது தோழிகளும் தோழிகளுக்கு துணையாக நாங்களும் செல்வோம் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஓடக்கரையில் இருக்கும் பனை மரத்தில் ஏறி நுங்குகளை வெட்டி நானும் எனது தோழர்களும் தோழியும் உண்டு மகிழ்வோம் எனது தோழிகள் இருவரும் நன்றாக படியக்கூடியவர்கள் நான் கொஞ்சம் படிக்க மாட்டேன் நான்  பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணி இருக்கேன்னா அதற்கு என் தோழிகள் தான் காரணம் எனக்கு புரியாத பாடங்களை எல்லாம் புரிய வைத்து பாடங்களில் இருக்கும் மிக முக்கியமான கொஸ்டின் எல்லாம் சொல்லி படிக்க வைத்து என்னை பாஸ் செய்ய வைத்தது என் தோழிகள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை பிறகு 11-ம் வகுப்பு 12ஆம் வகுப்பு எனக்குள் வந்த சேட்டை இந்த மாதிரி சேட்டை எல்லாம் பண்ண கூடாது என்று எனக்கு புரிய வைத்து என்னையும் அவர்களுடன் கூட்டிச் சென்றது எனது தோழிகள்தான் இவர்கள் எனது உயிர் தோழிகள் மட்டும் அல்ல என்னால் மறக்க முடியாத தோழிகளும் கூட ❤️❤️❤️❤️
6
Anoth anna .. . thank u so much for ur souful feedback .. u never missed to appreciate me... Thank u anna for the beautiful picture...

Joker such a wonderful memory u shared (mama ponnu yarunu than Theriyala ) aana I enjoyed a slot . And thank you so much for your feedback ..

Yazhini my dear Tom .. thank u so much for your love .. I missed your portion .. aana unga memories enakku romba pudichu irunthuchu.. 

Overwhelmed with all your feedback and love thank you ❤️


I want to mention this ....writters unga memories la iruntha anbu, paasam, chella sandaigal, kobam, vilayattu , pidivatham, thatah patiyoda alavilla paasam enna rombave negizha vechuduchu .. sila peru program kettu emotion agiteenganu .. evalo memories la chinna vayasula ..

ellame unga pathivula nallave therinjuthu..

Keep writing my dear friends .. azhiya mudiyatha ninaivugal inga namma nenjam marapathillai la epavum nilaya irukattum   
7
My dear Yazhini AKka
Thank you so much for always being there with your constant support.
8
பள்ளியில் prayar bell அடிச்சதும் வரிசையாக prayer hall போனோம். பக்கத்து வரிசையில் இருந்த சிறுமி காலை தெரியாமல் மிதித்து விட்டேன். அவள் என்னோடு சண்டைக்கு வந்தாள். தெரியாமல் பட்டது ஏன் கத்துற என்று நானும் சண்டைக்கு போனேன். அன்றில் இருந்து எங்கே அவளை பார்த்தாலும் மூஞ்சை திருப்பிட்டு போக ஆரம்பித்தேன். அவளும் அப்படி தான் என்னை எங்கே பார்த்தாலும் ஏதோ சொல்லி முனங்கிட்டே போவாள். அடுத்த வருஷம் வகுப்புக்கு முதல் நாள் போகும் போதுதான் பார்த்தேன் அவள் என் வகுப்பில் இருந்தாள். அய்யோ இவளா என்று தான் அப்போது நினைத்தேன். ஆசிரியர் வரிசையாக அமர வைத்தார் பக்கத்தில் பார்த்தால் அவள். இவள் பக்கத்திலா என்று மனதில் முனுமுனுத்தேன். போக போக ஏதோ பேசனுமே என்று அவளுடன் பேச தொடங்கினேன்...

  அப்போ எனக்கு தெரியாது என் வாழ்க்கையில் என் கூடவே வர போற நட்பு அவள் தான் என்று. ஒருநாள் ஆசிரியர் எழுதி போட்டதை note ல் எழுதும் போது என் பேனா எழுதாமல் நின்று விட நான் என்ன பண்ண என்று முழித்து கொண்டிருந்தேன். அப்போது அவள் ஒரு பேனாவை என் கையில் திணித்தாள். நன்றியோடு அவளை பார்த்து விட்டு எழுத தொடங்கினேன். அன்றில் இருந்து அவளோடு சிரித்து பேச தொடங்கினேன். அன்று தொடங்கியது எங்கள் நட்பு...

  எங்கு சென்றாலும் கைகோர்த்து ஒன்றாகவே சுற்றினோம். அடுத்த அடுத்த வருடங்களில் வேற வேற வகுப்பில் பிரிந்து இருந்தாலும் எங்கள் அன்பில் பிரிவு என்பதே வந்தது இல்லை.அவளுடன் இருக்க ஆசைப்பட்டு பள்ளி தங்கும் விடுதியில் சேர்ந்தேன்.....

     இறுதியாக 11 ஆம் வகுப்பில் மீண்டும் ஒரே வகுப்பில் இணைந்தோம். எங்கள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவள் பாடங்களை படித்து கொண்டிருக்கும் போது அவளை தொந்தரவு பண்ணாமல் நான் வேறு யாரோடும் கதை பேசினால் கூட பொறாமையோடு அவங்க கூட என்ன கொஞ்சல் என்று சண்டைக்கு வருவாள். எப்படி போனது என்றே தெரியாமல் இரண்டு வருடங்கள் ஓடி போனது. பிரிவு ஆம் முதல் பிரிவு எனக்கு நெஞ்சமெல்லாம் வலி இவள் இல்லாமல் இனி எப்படி இருப்பேன் என்று பயந்தேன்....

      புது கல்லூரியில் யாரோடும் பழகவே முடியவில்லை. அவள் இடத்தில் வேறு யாரையும் நினைக்க கூட முடியவில்லை. அறியா வயதில் எதை பற்றியும் அறியாமல் பூத்த நட்பு போல் தன்னலமற்ற நட்பு இங்கே கிடைக்காது என்பது மெதுவாக தான் உணர்ந்தேன். எப்படியோ கல்லூரி வாழ்க்கை முடிந்தது. எனக்கு வீட்டில் திருமண முடிவு எடுத்தார்கள். என் திருமண மேடையில் அவளை மீண்டும் சந்தித்தேன். ஓடி வந்து கட்டி அணைத்து முத்தமிட்டாள். நான்கு கண்களும் கலங்கியது. அழாதே போட்டோவில் பார்க்கும் போது நன்றாக இருக்காது என்று ஆறுதல் சொன்னாள்...

    அலைபேசியில் தொடர்பில் இருந்தாலும் நேரில் 3 வருடங்கள் கழித்து சந்தித்தோம் எனக்காக குட்டி குட்டியாய் நிறைய பரிசுகளுடன் தனியே கிளம்பி வந்தாள். சில வருடங்களில் அவள் திருமணத்தில் சந்தித்தோம். எனக்கு அவள் எவ்ளோ முக்கியம் என்று என் கணவர்க்கு தெரியும். அவளுக்கு நான் எவ்ளோ முக்கியம் என்று அவள் கணவர்க்கு தெரியும். அவர்களின் புரிதலில் தான் எங்கள் நட்பு இன்றுவரை தொடர்கிறது...

    அறியா வயதில் தொடங்கிய எங்கள் நட்பு ஜாதி மதம் பார்க்காமல் இன்று வரை அதே அன்போடு தொடர்கிறது.தூரத்தில் இருந்தாலும் என் அருகில் இருப்பது போல் நினைவுகளில் நீங்காமல் இருப்பது அவள் ஒருத்தியே. அவளையன்றி வேறு யாரை என் உயிர் தோழி என்பேன்...❤️
9
உயிர்த்தோழி னு சொன்னதும் என் மனசுக்கு முதல்ல வர பேரு அவங்க தான்

அவங்களாவே தான் எனக்கு தன்னை அறிமுகபடுத்திக்கிட்டாங்க , எனக்கு செல்ல பேர் வெச்சிலா  கூப்பிட ஆரம்பிச்சாங்க, நல்ல பழகினாங்க , என் முதல் சிரிப்புக்கு காரணமே அவங்க தான் , திட்டுவேன் , சில நேரம் செல்ல செல்ல சண்டைகள் எல்லாம் போட்ருக்கோம் , எல்லாத்தையும் பொறுமையா handle பண்ணுவாங்க

நெறய ஊர் சுத்தி காமிச்சிருக்கா , எனக்கு புடிக்கும்னு சொன்ன போதும் உடனே வாங்கி தந்திடுவா
எனக்கு புது புது விஷயத்த கத்து கொடுத்தது அவ தான் , இதோ பாருங்க இப்படி எல்லாம் நான் எழுத முதல் காரணமும் அவ தான் ,

நிறைய அரட்டை அடிப்போம், அவளை விட்டு நான் பாத்திட்டு வந்த சினிமா கதையை , அவள் கிட்ட சொல்வேன் , மற்ற நண்பர்கள் கிட்ட பேசினது, நடந்த சண்டை கொண்டாட்டம் எல்லாம் பகிர்ந்துப்பேன்
சரி எது தவறு எதுன்னு புரிய வைப்பா ,

என் firends சில பேரை அறிமுகப்படுத்திருக்கேன் ,அதுல girl friends ம் இருக்காங்க ,  வாழ்க்கைல நண்பர்கள் முக்கியம்னு சொல்வா

என் உயிர்த்தோழி, அவள்தான் எனக்கு உயிரையும் கொடுத்தவள் அவளே என் அம்மா


*Joker*
**
10
1 முதல் 10ஆம் வகுப்பு வரை நான் படித்த காலத்துக்கு சாட்சி என் தோழி உஷா. தினமும் காலை எங்கள் வீட்டுக்கு வந்து என்னை டியூஷனுக்கு அழைத்து போவது அவள்தான். அவள் வந்த பிறகுதான் நான் எழுந்திருப்பேன்.
அதற்குள் என் அம்மா ஆரம்பித்து விடுவார்கள்
“அந்த குழந்தை காலையிலேயே எழுந்து ரெடி ஆகிட்டு டியூஷன் போக வருது… நீ இன்னும் தூங்கிக்கிட்டே இருக்கே!” என்று.
நான் எழுந்து ரெடி ஆகும் வரை அம்மா “அர்ச்சனையை ஆரம்பித்து விடுவாங்க
உடனே நான், அம்மா நம்ம வீட்டுக்கு வந்தவளுக்கு எதாவது குடிக்க கொடுக்கணுமே என்று சொல்வேன். அதுவே எங்களுக்கு தினமும் காபி கிடைக்க காரணம்.
அந்த சிறிய காலையிலான சம்பவங்களே இன்றும் மனதில் இனிமையாக நிற்கின்றன.

4ஆம் வகுப்பில் நடந்த ஒரு சம்பவம் இன்னும் மறக்க முடியாதது. நான் பள்ளியில் முதல் மாணவி. சுதந்திர தினத்தன்று கலெக்டர் வந்து பரிசு வழங்கினார். ஆனால் பட்டியலில் தவறுதலாக என் பெயருக்கு பதிலாக உஷாவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.
பரிசு வாங்க அவள் மேடைக்கு சென்றதை பார்த்தவுடன் எனக்கு மயக்கம் வந்து விழுந்துவிட்டேன்.
அடுத்த நாள் ஆசிரியர் உண்மை அறிந்து, பரிசு பெட்டி எனக்கு கொடுத்தார். அதில் இருந்த பொருட்களை 2ஆம், 3ஆம் இடம் பெற்றவர்களுக்கும் பகிர சொல்லியபோது எனக்கு கோபம் வந்தது.

நான் அதை வீட்டில் வைத்துவிட்டேன். சில நாட்கள் ஆசிரியர் என்னை கடிந்து கொண்டாலும், அதனால் எங்கள் நட்பு குறையவில்லை.
10ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம்.

பின்னர் பள்ளி, கல்லூரி, வீடு, எல்லாம் மாறிவிட்டது. ஒரு நாள் கல்லூரிக்கு செல்லும் வழியில் அவளை திடீரென சந்தித்தேன். பல வருடங்கள் கழித்து சந்தித்த மகிழ்ச்சி. ஆனால் ஒரு சின்ன சம்பவம் அவள் நான் யார்? என்று கேட்டபோது, எனக்கு பெயர் நினைவில் வராமல் போனது. அதனால் அவள் வருத்தப்பட்டு பேசாமல் சென்றுவிட்டாள். அந்த நாள் முதல் அவளை நான் மிகவும் மிஸ் செய்தேன்.

சமீபத்தில், கடந்த மாதம் மீண்டும் சந்தித்தோம்.  நானாக முன் வந்து உன் பெயர் உஷா தானே? என்று கேட்டேன். அவள் தலையில் மெதுவாக அடித்துக் கொண்டு சிரித்தாள்.
 முகத்தில் நிறைந்த சந்தோஷம். நாங்கள் நீண்ட நேரம் பேசினோம், ஒன்றாக சாப்பிட்டோம். மீண்டும் பழைய பாசம் திரும்பிவிட்டது.
இப்போது அவள் மீண்டும் என் வாழ்க்கையில் நெருக்கமான தோழி. சில நட்புகள் தூரமானாலும், காலம் கடந்தாலும், மனதில் பதிந்த இடம் மாறாது என்பதை உஷா எனக்கு உணர்த்தினாள்.

எனக்கு சத்யா என்ற இன்னொரு நெருங்கிய தோழி இருக்கிறார். நாங்கள் இருவரும் கல்லூரியில் படித்த காலத்தில், அவளுடைய அப்பா புற்றுநோயால் இறந்துவிட்டார்.
சத்யா எங்கள் துறையின் டாப்பர்.
மிகவும் புத்திசாலி. நான் அவளுடன் ஒப்பிடும்போது சாதாரணமாக இருப்பவள். உண்மையில், எங்களுடைய குணாதிசயங்களும் முற்றிலும் வேறுபட்டவை. அவள் மிகவும் அமைதியானவள்.
நான் பேசிக்கொண்டே இருப்பவள். அவள் எப்போதும் ஒழுக்கமும் நேர்த்தியும் கொண்டவர். வகுப்பில் நாங்கள் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. என் நண்பர்கள் குழு சற்று சுறுசுறுப்பானவர்கள். ஆனால் அவள் எல்லோரும் நல்ல பெண் என்று சொல்லும் வகையான அமைதியான குணம் கொண்டவள்.

அந்த நேரத்தில் அவளுடைய அப்பா திடீரென இறந்ததால், அவள் மிகவும் மனம் உடைந்திருந்தாள். அதே சமயத்தில் செமஸ்டர் தேர்வுகளும் இருந்தன. தேர்வு எழுத அவள் வந்திருந்தாலும், மிகவும் கவலையுடன் இருந்தாள். ஒருநாள் பேருந்தில் நான் அவளுடன் அருகில் அமர்ந்திருந்தேன்.

அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டே இருந்தாள். அந்த நாளில் நான் எடுத்துவந்த மதிய உணவை அவளுடன் பகிர்ந்து கொடுத்தேன். அதன்பிறகு அந்த செமஸ்டர் தேர்வு முடியும் வரை, தினமும் காலை உணவும் மதிய உணவும் சேர்த்து அவளுக்காகவும் நான் எடுத்துச் செல்வேன். அந்த செமஸ்டரில் கூட அவள்தான் டாப்பராக வந்தாள்.
இதையெல்லாம் நான் இப்போது நினைவுகூர்வதற்குக் காரணம் ஒன்று உள்ளது. சமீபத்தில் ஒரு தோழியின் திருமண வரவேற்பில் நாங்கள் அனைவரும் சந்தித்தோம். அப்போது சத்யா என்னிடம் நேராகச் சொல்லவில்லை.
ஆனால் அந்த நாட்களில் நான் அவளுக்கு தினமும் சாப்பாடு கொண்டு வந்ததை மற்ற நண்பர்களிடம் மிகவும் பாராட்டி பேசினாள்.

இப்போது அவள் ஒரு மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாள்.
அந்த கடினமான காலத்தில் நான் செய்த அந்த சிறிய உதவியும் அவளுக்குப் பெரிய ஆதரவாக இருந்தது என்று கூறியதாக நண்பர்கள் சொன்னார்கள்.

நான் செய்தது மிகவும் சிறிய உதவிதான் என்று நினைத்தேன். ஆனால் அது அவள் மனதில் இவ்வளவு பெரிய நினைவாக இருந்தது என்று கேள்விப்பட்டபோது எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சியும் கண்களில் நீரும் வந்தது.

 நமக்குச் சிறியதாகத் தோன்றும் உதவியும், சரியான நேரத்தில் கிடைத்தால் அதை பெறும் ஒருவருக்கு மிகப்பெரியதாக உணரப்படலாம் என்பதை அப்போது உணர்ந்தேன்.

இப்போது நானும் சத்யாவும் நல்ல நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். இந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பொறுமையாக கேட்டதற்கு நண்பர்களுக்கு நன்றி.
💜

LUMINOUS 😇💙💚💛🧡💜💐
Pages: [1] 2 3 ... 10