1
திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) / Re: இரவின் மடியில்
« Last post by RajKumar on Today at 04:43:40 PM »*குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை*
*உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க*
*ஓடியதென்ன*
*பூவிதழ் மூடியதென்ன*
*என் மனம் வாடியதென்ன*
*ஒரு மாலையிடவும்*
*சேலை தொடவும்*
*வேளை பிறந்தாலும்*
*அந்தி மாலை பொழுதில்*
*லீலை புரியும் ஆசை பிறக்காதோ*
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன ...
*மேள தாளம் முழங்கும்*
*முதல் நாள் இரவு*
*மேனி மீது எழுதும்*
*மடல் தான் உறவு*
*தலையில் இருந்து பாதம்*
*வரையில் தழுவி கொள்ளலாம்*
அதுவரையில் நான்
*அதுவரையில் நான்*
*அனலில் மெழுகோ*
*அலை கடலில்தான்*
*அலையும் படகோ*
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும்
சேலைத் தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ ...
*காற்று வந்து தொடத்தான்*
*கொடியே இருக்க*
*கடலில் வந்து விழத்தான்*
*நதியே பிறக்க*
இடையில் வந்து தடைகள்
சொல்ல எவரும் இல்லையே
பிறர் அறியாமல்
*பிறர் அறியாமல்*
*பழகும் போது*
*பயம் அறியாத இதயம் ஏது*
*வீணை மீது விரல்கள்*
*விழுந்தால் ராகம்*
*ராகம் நூறு ரகங்கள்*
*விளைந்தால் யோகம்*
உனது ராகம் உதயம் ஆகும்
இனிய வீணை நான்
*சுதி விலகாமல்*
*இணையும் நேரம்*
*சுவை குறையாமல்*
*இருக்கும் கீதம்*
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ ....
படம் : *அழகே உன்னை ஆராதிக்கிறேன்*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்*
பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா*

Recent Posts



