« Last post by KS Saravanan onToday at 01:56:10 PM »
பிரியாணி
ஞாயிற்றுக்கிழமை என்றாலே எல்லா வீடுகளிலும் பிரியாணி வாசம்… அது அசைவம் என்ற எல்லையைத் தாண்டி, ஒரு உணர்வு, ஒரு குடும்ப வழக்கம், ஒரு மனதுக்குள் பிறக்கும் மகிழ்ச்சி விருந்தாக இருந்தாலும், விழாவாக இருந்தாலும், “பிரியாணி இல்லாம எப்படிங்க?” என்று கேட்கும் அளவுக்கு அது வாழ்க்கையோடு கலந்துவிட்டது அப்படிப்பட்ட பிரியாணி சாப்பிடாமலும், தூங்காமலும், பசியோடு இருக்கிற என்னைப் பார்த்து, “பிரியாணி கவிதை எழுது” என்று சொல்வது நியாயமா சொல்லுங்க? வாசத்திலேயே வயிறு நிரம்புது, வார்த்தை தேடும் மனசு பசியாலே தடுமாறுது. முதலில் பிரியாணி… அப்புறம் கவிதை! இதுதான் பசியால் வாடும் கவிஞனின் நியாயமான கோரிக்கை..!