Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
அப்பம்மா வீடு

கிழக்கு இலங்கையின் கரையோர பகுதியில் எங்க அப்பம்மா வீடு. விருந்தோம்பலுக்கு பெயர் போன மீன் பாடும் பூமி அது. அட metaphor ஆஹ் சொல்லலைங்க, நிஜமாவே அந்த கடற்கரை ஓரமா பௌர்ணமில போனோம்னா கடலலைகளோட மீன்கள் எழுப்புற சத்தம் பாடுற மாதிரி இனிமையா தான் இருக்கும்.

கடலுக்கும் எங்க வீட்டுக்கும் 100m தான் தூரம். ஆகஸ்ட் விடுமுறையில பெரியப்பா family சித்தப்பா family நாங்கன்னு எல்லாமே அங்க ஆஜர் ஆகிடணும்கிறது மீற முடியாத எங்க அப்பம்மாவோட அன்பு கட்டளை. சுருள் முடியும் கன்னக்குழியும் முகத்துல எபவுமே தவழும் ஒரு புன்னகையும் தான் எங்க அப்பம்மாவா நினச்சா உடனே mind கு வார எங்க அப்பாம்மாவோட விம்பம்.
சமையல் மட்டும் ,தான்  மட்டும் தான் பண்ணுவன்றது,எங்க அப்பம்மா சமரசமே பண்ண முடியாம அடம் பிடிக்கும் விஷயம்.இருக்கிற அவ்வளவு நாளும் ஒவ்வொரு வேளை சாப்பாட்டுலயும் மருமகள், மகன் மற்றும் பேரப்பிள்ளைங்க favourite dish அவங்க கையாலேயே பார்த்து பார்த்து செஞ்சு வச்சிடுவாங்க.செல்லம், குட்டி, தங்கம் அப்படின்ற வார்த்தைகளைத் தவிர பெயர் கூட சொல்லி கூப்பிட மாட்டாங்க எங்க அப்பம்மா. வீணை முதல் ஆங்கில இலக்கியம் வரை கற்றுத் தேர்ந்த ஆழ்ந்த அறிவும் அன்பும் கொண்ட பெண்மணி.

அம்மா, பெரியம்மா, சித்தி எல்லாம் இருந்து கதை பேசி கொண்டே ,அப்பம்மா சமையலுக்கு காய்கறிகள் வெட்டி கொடுப்பாங்க .

அப்பா, பெரியப்பா, சித்தப்பா இருந்து பூகோள அரசியல்ல இருந்து, cricket ஆன்மீகம் வரைக்கும் அலசி ஆராய்வாங்க.

நம்ம cousin gang ,வெளிநாட்ல இருந்து சித்தப்பா கொண்டு வந்த சின்ன வீடியோ  camera வச்சு அப்பவே short film எடுப்பம் . Battery போடுற guitar toy எங்க BGM source.பனங்கா  பணியாரத்துல இருந்து nestamalt வரைக்கும் advertisement  கூட நாங்க அப்பவே shoot பண்ணிருக்கோம். அதை மணல்ல பாய் விரிச்சு வெற்று சுவர்ல மல்டிமீடியா ப்ரொஜெக்டர்ல ப்ரொஜெக்ட் பண்ணி எல்லோருக்கும் இரவு telecast பன்றது எங்க பெருமிதம்னான பால்ய கால oscar moment .

வருஷத்துக்கு ஒரு தடவ வார மாமங்க திருவிழால விக்கிற மண்ணுல செய்ற சின்ன சட்டி முட்டி அடுப்பு விளையாட்டு பொருளை வைகோல் போட்டு உடையாம pack panni எனக்கு பரிசா தருவாங்க. முதல் பேர பிள்ளை என்றதால எனக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை அது

அப்பம்மா வீட்டை சுத்தி நிறைய முந்திரி மரம் இருக்கும். இரவின் அமைதியில ஓயாம கேட்கும் கடல் அலை சத்தம் பின்னணியில ,எங்க அப்பம்மா விறகடுப்பு மூட்டி சுடுமணல்ல முந்திரி வறுத்து உடைச்சு தர்ற முந்திரிக்கு எங்க ஸ்கூல்ல அவ்வளவு டிமாண்ட் இருக்கும்.

taunami பேரலையில் எங்க வீடும் முந்திரி தோட்டமும் அழிஞ்சு போயிருந்தாலும் , எங்க வீட்டு கட்டிடத்தின் எச்சங்களும் அந்த வெண்ணிற மணலும்  , கடலலை சத்தமும் இன்னும் எங்க பள்ளி கால விடுமுறை நாட்களின் வாழ்வியலின் அடையாளமாய் இன்னைக்கும் நிலைச்சு நிக்குது.ஏன்னா சில கட்டிடங்கள் கற்களால கட்டப்பட்டதில்லை. நினைவுகளால கட்டப்பட்டது.
2
ஸ்கூல் டூர், சொந்தக்காரங்க வீடு, ஃப்ரெண்ட்ஸ் வீடுனு எங்கயும் விடாத எங்க ஸ்ட்ரிக்ட் அப்பாவ பத்தி முன்னாடியே தெரிஞ்சதாலயோ என்னமோ, கடவுள் பாவம் பாத்து எங்க அம்மாவை ஊட்டிலே பொறக்க வெச்சாங்க. அதனால வருஷத்துக்கு ஒரு முறை சம்மர் லீவ்ல அம்மம்மா வீட்டுக்கு போறதுதான் எங்க மிகப்பெரிய சந்தோஷமா இருந்துச்சு.
கேரளாலே எல்லாம் மார்ச் 25-ஓட ஸ்கூல் முடியும். ரெண்டு மாசம்  ஃப்ரெண்ட்ஸ பிரியுற வருத்தம் இருந்தாலும், அம்மா வீட்டுக்கு போறத நெனச்சாலே மனசுக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கும்.
எப்போடா அப்பா வரும், ஊட்டி போற டேட் சொல்லும்னு நானும் அக்காவும் ஏக்கமா அம்மாகிட்ட கேட்டு தொல்லை பண்ணிட்டே இருப்போம். போறோம்னு ஃபிக்ஸ் ஆனாலே 4 நாள் முன்னாடியே எல்லாம் பேக் பண்ணி ரெடி ஆவோம். அங்க கிடைக்காத தேங்கா, மாங்கா, பலாப்பழம், கருவாடு, சிப்ஸ்னு அம்மா எல்லாம் பேக் பண்ணிட்டு இருப்பாங்க.

நாளைக்கு ஃபர்ஸ்ட் ஊட்டி பஸ் பிடிக்கணும், சீக்கிரம் 4 மணிக்கெல்லாம் எந்திருக்கணும், சீக்கிரம் தூங்குங்கனு அப்பா கத்துவாரு.   காலையில அலாரம் அடிக்குறப்போ டெய்லி அம்மா கத்துனாலும் எந்திரிக்காத நாங்க, மொத ஆளா பிரஷ்ஷோட எந்திரிச்சு நிப்போம்.

எப்போவும் வேட்டியில சுத்துற அப்பா ஊட்டி போறப்போ மட்டும் பேண்ட் ஷர்ட் போட்டு செம்மையா இருப்பாரு ஹீரோ மாதிரி. அப்புறம் டக் டக்னு கிளம்பி குளிருல பஸ்க்கு வெயிட் பண்ணுவோம். இனி மைண்ட் ஃபுல்லா எப்போடா ஊட்டி போய் சேருவோம்னு இருக்கும்.  அக்காவும் அம்மாவும் வாமிட் கேஸ், கொஞ்ச நேரத்துல சைடு ஆகிடுவாங்க. வாமிட் எடுக்காம அம்மாவையும் அக்காவையும் பாத்துப்பேன், லக்கேஜ் பாத்துப்பேன் நு என்ன பத்தி பெருமையா பேசுறதையும் ரசிப்பேன்.

பாலக்காட்டுல இருந்து எடுத்த பஸ் கோயம்புத்தூர் ரீச் ஆகுறப்பவே ஊட்டி வந்த ஃபீல் வரும். தான் பொறந்த ஊரு காத்தடிச்ச சந்தோஷமும் எங்க அம்மா முகத்துல பாப்பேன். மேட்டுப்பாளையம் கடந்து நீலகிரி ஃபர்ஸ்ட் பெண்ட்ல இருந்தே நல்லா வேடிக்கை பாக்க ஸ்டார்ட் பண்ணுவேன். சைடுல மலையில இருந்து பஸ் விழுந்தா என்ன ஆகும்னு பயந்து பயந்து  வேடிக்கை பாப்பேன்.
வாட்டர் ஃபால்ஸ், ஃபாரஸ்ட், குரங்குனு சூப்பரா இருக்கும். ஹேர்பின் பெண்ட்ஸ்ல மட்டும் கண்ண மூடி கடவுள வேண்டிக்கிவேன். கைல எடுத்துட்டு போன ஸ்நாக்ஸ் பாதி சாப்பிட்டு பாதி கைல வெச்சு குரங்குக்கு போடுவேன். அது நம்ம போட்ட ஸ்நாக்ஸ் சாப்பிடுறத பாக்கவே அவ்வளவு ஹாப்பியா இருக்கும். பார்லியார் வந்தாலே ஒரு சந்தோஷம்தான். அங்கதான் அப்பா சூடா போண்டா, டீ வாங்கி தருவாரு. அதுமட்டும் இல்ல நல்ல இனிப்பான பேரிக்காவும் அங்கதான் வாங்கிப்போம். போற வரைக்கும் எங்கயும் பஸ் நிக்காது, "என்ன வேணுமோ வாங்கிக்கோங்க"னு அப்பா குரல் கேட்டதும் போதும் நானும் அக்காவும் போட்டி போட்டு வாங்குவோம்.
அதுக்கு மேல நல்ல தூக்கம் போட்டு, அப்புறம் வரும் பாருங்க ஒரு சில்லு காத்து, பிரிட்ஜ் டோர் ஓபன் பண்ண மாதிரி! . குன்னூர் கிட்ட போறப்போ "எஸ்! ஊட்டிக்கு இன்னும் கொஞ்ச நேரம்", அம்மா "ஒரு மணி நேரத்துல வீடு"னு சொல்றப்போ துள்ளி குதிப்போம். அடுத்த ஒரு மணி நேரம் போறதுதான் கஷ்டம். மத்தியம் நேரம் ரீச் ஆனாலும் குளுகுளுனு அடிக்குற குளிருல போய் இறங்குவோம். அங்க இருந்து மினி பஸ். ஹில்ஸ்னால ரொம்ப ஸ்லோவா ஓல்ட் இளையராஜா சாங்ஸ் போட்டு போகும். ஐயோ அந்த ஃபீல்!

வீடு வந்ததும் ஓடி போய் அம்மம்மா, அச்சச்சாவ பாத்து அவங்க ஹோட்டல்ல ஸ்பெஷலான ஒரு வெஜ் பப்ஸ் சூடா சாப்பிட்டாதான் நிம்மதியாவே இருக்கும். ஐயோ இனி ஒரு மாசம் இங்கதான்னு நெனைக்குறப்போ அவ்வளவு சந்தோஷம். போன உடனே பிரெஷ் ஆகி எங்க தாத்தா பாட்டி வாங்கி வெச்ச நல்ல சாஃப்ட் ஸ்வெட்டர், மஃப்ளர், சாக்ஸ்னு போட்டு, சுட சுட வெச்ச சாதம், எங்க தோட்டத்துல விளைஞ்ச கேரட் போட்டு வெச்ச பருப்பு, கிழங்கு காய வெச்சு வறுத்த வத்தல்னு அந்த டேஸ்ட் எப்போவும் எச்சில் ஊறும். அப்புறம் என்ன, ஊட்டில எங்க வருகைக்கு காத்திருக்குற எங்க பிரண்ட்ஸ்! அவங்களுக்கு குடுக்க கிண்ணத்துல பாட்டி போட்டு தர சிப்ஸ்ஸோட ஓடி போவோம். 30 நாட்கள் கொண்டாட்டம்தான். சுத்தி உள்ள எஸ்டேட், தைல ஷெட், ஷூட்டிங் ஸ்பாட், ரோஸ் கார்டன்னு நாங்க பிரண்ட்ஸோட அலைஞ்சு திரியாத காடே இல்ல அங்க. நாள் போறதும் தெரியாது. அது என்னமோ தெரியலங்க, அங்க யாருக்கும் வேர்க்காது, நாலு நாள் குளிக்கலன்னாலும் சும்மா ஊட்டி தக்காளி மாதிரி பிரெஷ்ஷாவே இருப்போம்ங்க. நாட்கள் நிமிடங்கள் மாதிரி போகும்.

சந்தோஷத்தோட கடைசி நாட்கள். நாளைக்கு ஃபர்ஸ்ட் பஸ் பாலக்காட்டுக்கு. கண்ணுல கண்ணீர், கோவம், "நான் வரல"னு கத்தி பாட்டிய கட்டி புடிச்சு அழுதத நெனைக்குறப்போ எப்போவும் அந்த காலத்துக்கு போயிடுவேன். அதே தூக்கம் இல்லாத ராத்திரி. விடியாம இருக்காதா? வயிறு வலின்னு சொல்லலாமா? பஸ் கேன்சல் ஆகாதா? அப்பா மனசு மாறி ஒரு நாள் கூட கிடக்காதானு நைட் ஃபுல்லா அழுதுட்டே போகும். பாட்டி "நல்லா படிக்கணும், நாங்க வரோம் ஊருக்கு, நெக்ஸ்ட் லீவ்க்கே தாத்தாவ அனுப்பி கூப்ட்டு வரேன்"னு எல்லாம் ஆறுதல் சொன்னாலும் கண்ணீர் நிக்காது. "பஸ்ல ஏதும் வாங்கி சாப்டுக்கோ"னு தாத்தா குடுக்குற 50 ரூபா, அதுக்கு மூல்யம் (மதிப்பு) அதிகம். போறப்போ ரசிச்ச எல்லா விஷயமும் பாக்காமலேயே தான் ரிட்டன் வருவேன்.

.. வீடு வந்து பல நாளைக்கு அழுதுட்டே இருப்பேன். அடுத்த வருஷம் லீவ்க்கு போலாமேனு மனச தேத்தி ஸ்கூல் போக ரெடி ஆவேன். இன்னைக்கு எல்லாம் மாறி போச்சு. நான் நெனைச்சா தனியா இன்னைக்கு 3 ஹவர்ஸ்ல ஊட்டிக்கு போலாம், இருந்தும் போக தோணாதப்போ தான் புரிஞ்சது... நான் ஏங்குனது ஒரு பயணமோ சுற்றுலாவோ அல்ல, என் அம்மம்மா அச்சச்சாவோட அளவில்லா பாசத்துக்குனு. அதனாலதான் இருக்கும் போல, அவங்க இல்லாத அந்த வீட்டுக்கு போக என் மனம் விரும்பவில்லை.


3
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 04:17:51 PM »

February 2026
#470   19.02.2026







- Socky
4
General Videos / Re: Mindset is everything!
« Last post by Ninja on Today at 02:42:27 PM »
5
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 09:17:40 AM »
6
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 06:14:30 AM »
7
Happy happy birthday samyoooo
8
Wish You Many More Happy Returns Of The Day Aadhini Sis❤️🎂💐

9
 
   Wish you many more happy returns of day dear
10
General Videos / Re: Mindset is everything!
« Last post by Ninja on February 18, 2026, 04:21:56 PM »
Pages: [1] 2 3 ... 10