Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
கவிதைகள் / Re: சிறு புன்னகை 😊
« Last post by joker on Today at 12:05:31 PM »
கவிதை அருமை தொடர்ந்து எழுதுங்கள் சகோ
3
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 11:38:12 AM »
4


Happy Birthday Sabarish


5
ஒரு காலையில்
எழுந்தவுடனே நினைவுக்கு வந்த உன்னை
மீண்டும் நினைவுகளின் அறைகளில் நிரப்ப
நம் குறுஞ்செய்திகளை
மீள்வாசித்து கொண்டிருக்கிறேன்.

தேட முடியாத தூரத்திற்கு
சென்று விட்டவன் நீ.
இந்த கடிதங்களிலாவது
எங்கேனும் ஓர் இடத்தில்
தென்பட்டு விடமாட்டாயா
என்று ஒவ்வொரு வரியிலும் தேடுகிறேன்.

எல்லா வார்த்தைகளிலும்
நீ நிரம்பி இருக்கிறாய்;
ஆனாலும்
உன்னை கண்டடைய முடியவில்லை.

நம் கடிதங்களில்
புத்தகங்கள் இன்னும்
உரையாடிக் கொண்டே இருக்குமா? திரைப்படங்கள் இன்னும்
வாழ்ந்து கொண்டே இருக்குமா?
இசைக்கோர்ப்புகள் இன்னும்
ஒலித்துக் கொண்டே இருக்குமா?

நீ விட்டுச் சென்ற
ஒரு செண்பகப் பூவின் வாசத்தை
இன்னும் நான் அறிந்திருக்கவில்லை.
நீ காட்டிச் சென்ற அந்தக் குன்றின் முகடு
எந்தத் திசை என
இன்னும் வழி தெரியவில்லை.

தொலைத்துவிட்டேன் உன்னை. ஆனால்
தொலைதல் ஒரு வரம்.

தொலைந்து போவதென்றால் கூட உன்னைப் போல
தடயமின்றி தொலைந்து போக வேண்டும்.
என் இருப்புகளின் அடையாளங்களை
இங்கேயே விட்டுவிட்டு
எங்ஙனம்
நான் உன்னைப் போல தொலைந்து போவேன்?

நீ வரப்போவதில்லை என தெரிந்தும் உனக்கான கடிதங்கள்
எழுதப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.

தொலைந்தாலும்
என் நினைவுகளில்
உன்னை மீட்டெடுப்பேன் நான்.
தொலைந்தாலும்
உன் கடிதங்களில்
உன்னை மீட்டெடுப்பேன் நான்.

நீ தொலையத் தொலைய
உன்னைத் தேடிக் கொண்டே இருப்பேன் நான்.
தொலைதல் ஒரு வரம், பேட்ரிக்.

For Patrick.

6
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 06:00:05 AM »
8
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (29-Dec-2025) wishes 🎁 to our lovable friend ⭐ Mr. SABARISH ⭐ and wishes him Good Luck.


9
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 393

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


10

ஒரு கூட்டத்தில்,
ஒரு அவசரத்தில்,
ஒரு போக்குவரத்து நெரிசலில்,
குழலறலாக வெளிப்படும்
ஓர் மனம்பிறழ்ந்தவளின் குரல்
தலை திரும்பாமலேயே
அலட்சியப்படுத்தப்படுக்கிறது.
'ம்மா, ம்மா' என கையேந்துபவரின்
மன்றாடும் முகம்
 உதாசீனப்படுத்தப்படுகிறது
 ஒரு கையசைவில்.
அறுத்தெரியப்பட்ட ஆட்டின் கண்கள் மிக மிக வசதியாக
புறக்கணிக்கப்படுகிறது.
விரல் பிடித்து
'இத வாங்கிக்கோங்க க்கா'
என கண்களால் இறைஞ்சும்
சிறு பிள்ளைகளின் விரல்கள்
உதறப்படுக்கின்றது.
கடவுளின் காணிக்கை தட்டுகளில்
எண்ணி எண்ணி
சில்லறைகளை இட்டு நிரப்பி
புண்ணியம் தேடிக் கொள்வேன் நான்!
Pages: [1] 2 3 ... 10