Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
மீண்டும் பெறவே இயலாத பேரன்புகாரனே...
உன்னோடு பயணித்த ஒவ்வொரு மணிதுளிகளும்
மனக்கண்ணில் அசைந்தாடுகின்றன...

யாரும் அறியா என்னை
முழுமையாக அறிந்தவனே
நீயின்றி கழியும் பொழுது
அர்த்தமற்ற மொழியாய் ஆகிதான் போகின்றது.

அன்பின் அடித்தளமாக அமைந்தவனே
அட்சயபாத்திரம் போல் அதனை அளித்தவனே
கண்ணயரும் போதும் விரல்பிடித்து உடனிருந்தவனே
வாட்டம் கொள்கையில் அன்னையாக அரவணைத்தவனே

சிறு அணைப்பில் ஊடல் அனைத்தையும் தனித்தவனே
மையல் கொள்ளும் நேரத்திலும்
காதலின் மென்மையை உணர்த்தியவனே
மோகம் தணிகையிலும் - காதலை
அறுவடை செய்தவனே...

என்னையே முதல் குழந்தையாய் பாவித்தவனே
யாரிடமும் என்னை விட்டுக்கொடுக்காத
என் தந்தைக்கு நிகரானவனே...
கண்ணியத்துடன் கரம் பிடித்தவனே

என் பலமும் நீயே!
என் பலவீனமும் நீயே!
சிந்தனை முழுக்க ஆக்கிரமித்து
யாவும் நீயாய் மாறுகையில்
என்னை பிரிந்தது ஏனோ...
தனிமையில் தள்ளியது ஏனோ...

தத்தளித்து நிற்கும் சேய்யாய்
ஆகிதான் போனேன்...
நீ ரசித்த என்னை
சிறுக சிறுக சிதைக்கின்றேன்
யாவிலும் உன்னோடு பயணிக்கிறேன்
உன் இறுதி நிமிடங்களில்
இன்றும் பேதலித்து நிற்கின்றேன்...
2


விழிகள் காந்த விழிகள் கருணை பொங்கும் விழிகள் அன்பை சாரை சாரையாய் அள்ளிக் கொடுக்கும் விழிகள் பார்த்த அந்த நொடியே என் உலகம் நீதான் என்றேன்

உன்னை பெண் பார்க்க வந்த பொழுது பேசியது நம்  விழிகள் தானே நான் பார்த்த ஒரே பெண்ணும் நீ அன்றே முடிவு செய்தேன் நீ தான் என் வாழ்க்கை என்று

நீ பேசிய வார்த்தைகளை விட உன் விழிகள் சொன்ன வார்த்தைகள் ஏராளம் உன் விழி பார்வையில் நான் அடங்கிப் போனேன் என்பது நிதர்சனமான உண்மையே

விழிகள் அழகாய் இருந்தால் போதுமா போதாது அதில் அன்பு பாசம் கருணை எல்லாம் வெளிப்பட வேண்டும் காதல் உட்பட உன் விழிகள் இவை அனைத்திலும் மிக மிஞ்சியே இருந்தன

நூறு ஆண்டுகள் வாழ வேண்டிய அந்த விழிகள் மிக மிஞ்சிய காதல் பாசம் கருணை அன்பு பொழிந்ததனால் விரைவிலே மூடச் செய்தானோ

உன் விழிகள் இல்லாத என் வாழ்க்கை இரண்டும் போனது கண்கள் இருந்தும் குருடனாகவே வாழ்கின்றேன் எனை காண வேண்டியது உனது விழிகள் தானே
காத்துக் கிடக்கும் உன் விழிகள் என்ன ஓட்டங்கள் அறிவேன்
விரைவில் சேர்வேன் உன் விழிகள் முன் அதே உன் அவனாய் ...

3
பிறப்பின் மகத்துவம்

*தாய்* ....இருந்தால் துன்பம் இல்லை.

 *தந்தை*...இருந்தால் தவிப்பு இல்லை.

  *தங்கை*... இருந்தால் தனிமை இல்லை.

  *தாத்தா*... இருந்தால் தயக்கம் இல்லை.

  *பாட்டி*.... இருந்தால் பயம் இல்லை.

 *அக்கா*....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.

  *அண்ணன்*.... இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.

 *தம்பி*... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.

 *மனைவி*... இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.

  *மகள்*.... இருந்தால் மழலை பருவம் தெரியும்.

  *மகன்*.... இருந்தால் மாண்புமிக்க வம்சம் நிலைக்கும்.

*நட்பு*....இருந்தால்
உயிர் காக்கும்; அனைத்தும்
கிடைக்கும்.

 மண்ணில் இறக்க போகிறோமே தவிர..
  மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை....

  வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் .

  *குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...*

*அதை சொர்க்கமாக்குவதும்*
*நரகமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது..*

மறைந்த.... பின் நாம் செல்லும் பாதை நாமறியோம்.

*இருக்கும் போதே சொர்கத்தில் இருந்து விட்டு போவோமே!!!
4
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on December 10, 2025, 10:54:21 AM »
5
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on December 10, 2025, 06:36:44 AM »
6
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on December 10, 2025, 05:53:21 AM »
9
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on December 09, 2025, 11:46:48 AM »
10
Match#21 Result:


--------------

Match#22 Result (includes super over):


--------------

Match#23 Result:


--------------

Match#24 Result:


--------------

Match#25 Result:


--------------

Match#26 Result:


--------------

Match#27 Result:


--------------

Match#28 Result:

Pages: [1] 2 3 ... 10