Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 12:35:13 PM »
2
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 12:06:17 PM »
3
தனிமையின் மொழி..!

இந்தத் தனிமை எனக்கு பரிசா?
இல்லை தண்டனையா?
சலனமற்ற இந்த இரவோ
ஆயிரம் ரகசியங்களுடன்
என் மனதைப் போல..!

மேனி சிலிர்க்கும் தென்றல் காற்று
அவன் வருகைக்காகக்
காத்திருக்கும் மௌனங்களில்
தேநீரின் ஆவியாய்
என் இறுதி சுவாசமாய் அவன்..!

நிலவே உன்னைப் போல
என் வாழ்விலும்
நிறைவு இல்லையோ?
நீயாவது சொல்
அவன் வருகிறானென்று..!

நான் கண்ட கனவுகள் யாவும்
நட்சத்திரங்கள் வந்து போவது போல்
மறைந்தனவோ இல்லை
கானல் நீராய் கரைந்தனவோ..!

எல்லோரும் உறங்கும் இந்த வேளையில்
என் பழைய நினைவுகள் மட்டும்
சத்தமின்றி சண்டையிட்டு
மொத்தமாய் கொள்கிறதே..!

அவன் தந்த அன்பின் சுவடுகள்
அவன் வராத இரவுகளிலும்
மனதில் தழும்பாய் பதிந்து
மறக்க மனம் மறுக்கின்றதே..!

இரவு விலகி
பொழுதே விடிந்தாலும்
அவன் நினைவுகள் மட்டும்
என்னுள்ளிருந்து விலகவே இல்லை..!

அவன் நினைவால் வாழ்பவளை
அதை அழிக்கும் சக்தி
காலத்திற்கும் கூட  இல்லை
நிலவே நானோ இங்கு அழுகிறேன்
நீயோ அங்கு சிரிக்கிறாய்
என் ஏக்கம் ஒருபோதும் தீராதென..!

மௌனம் என்பது
ஒசையற்ற மரணமோ
உருகி காதலித்த என் மனதில்
அவனால் எழும் வினாக்கள்
எங்கே போனான் ?
என் மௌனத்தின் மொழியானவன்..!

நிலவே நீ தேய்பிறையாய் தேய்ந்தாலும்
வளர்பிறையாய் மீண்டும் வளர்கிறாய்   
ஆனால் என்னவனின்
வருகைக்காகக் காத்திருக்கும்
இந்த பேதையின் வலிகள் எல்லாம்
இரவில் எழும் வானவில்லாய்
என் இரவுகளோடு மட்டுமே
மௌன மொழி பேசுகிறது..!
4

இதோ வந்துவிட்டேனடி 
மென்திரையை  விலக்கி எட்டிப்பார்க்கிறேன்
அவள் கண்கள் வைரம்போல் மின்ன
காத்திருக்கிறாள் என் தோழி
காத்திருப்பில்தான்  எவ்வளவு மகிழ்ச்சி

ஆயிரம் மின்மினிகள் நடுவே
மகாராணிபோல்   பிரகாசிப்பவள்  நான்
ஒளிவிளக்கில் பளிங்குச்சிலையாக அவள்
விண்ணிலே நானும்  மண்ணிலே அவளும்
எப்படி  தோழிகள் ஆனோம் தெரியாது
புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று
 
தினம் தினம்   பேசுகிறோம் 
அவள் உள்ளத்தே  வழிந்தோடும்
காதல் உணர்ச்சிகளை 
ஒளியாமல்   மறைக்காமல்
தேனீரை ருசித்து  அருந்தியபடியே
என்னிடம் கொட்டி தீர்க்கிறாள்

மானசீகமான காதலில்  ஒழிவேது
கண்கள்   விடும்  தூதுகளில்  மறைவேது
இடம் மாறும் மூச்சுக்காற்றுகளில் 
இனம் புரியாத   உணர்ச்சிகளில்
ஊறித் தவிக்கும்  காதல்  இதயங்கள் 
 
சித்திரை மாதத்தில் குயில் பாடுவதும்
மார்கழி மாதத்தில் குளிரில் நடுங்குவதும்
இயற்கையின்  காதல்   
காணுகையில்   நாணத்தில் மூழ்குவதும் 
காணாதவேளை   தேடித்  தவிப்பதும் 
இளம் பெண்ணின்  காதல்

மாலைவேளை  இயற்கையின் மௌனம்
சுகமான   தனிமையில் மீட்டும் நினைவுகள்
வந்து போகும்  சிறு சிறு சண்டைகள்
தொடரும்  ஊடலும்  கூடலும்
காதலுக்கே உரித்தான  மீட்டல்கள்
காலத்தால் மாறாத காதல் பண்புகள்

மேகவண்ணன்  மெல்லிய வஸ்திரத்தால்
என்னை தொட்டுச்செல்கையில்  எனக்குள்ளும்
காதல் தோன்றாமல் இல்லை 
நானும்  ஒரு பெண்தானே! 
காதல்   பெண்மையின் சுகமல்லவா ?
வெட்கித்துப்போகிறேன்  நான்
நிலா நீயுமா ? கேட்கிறாள் என்  தோழி
 
5
நிலா ஒளியில் நிமிர்ந்து நிற்கும் அழகில் நீந்தும் பதுமை அவள்..
அவளைப் பாடுவதா??!!
அவளின் அழகை உருவகப்படுத்தும்
நிலாவப்பாடுவதா!!??..

கண்ணைக் கவரும் கண்மணியோ 
எத்துனை கனங்களை சுமந்தவளோ!??
தாகித்து தலை நிமிர்ந்து நிலவோடு நியாயம் பாடுகிறாள்...!?

நீந்தும் நிலவின் கதிரில்
அருகிருக்கும் அனல் விளக்குகளும்
தலை கவிழ்ந்து வெட்கத்தோடு மாது அவளின் அருகிருந்திற்று....

வலைந்தோடும் அருவியைப் போல்
அழகிய கார் குழலோடு காத்திருக்கும்
அழகிய சிலையாய் அவளின் ஏக்கத்தில்
தனிமையின் தாக்கங்கள் தலை தூக்கியிருக்கிறது..

நிலாவை தன் துணையாய்
தன் காவலாய் நம்பும் அவள்
என்னதான் தூது அனுப்புகிறாள்!??
என்ற எண்ணங்களும் என்னில் எழாமல் இல்லை..

இரவின் அழகும்
பெண்மையின் புனிதமும்
ஒத்துதலாய் ஒன்றாய் அடங்கியிருக்கும் அற்புதம்..

எதைத்தான் சொல்வது
நானும் தனிமையை தனதாக்கி
அண்ட வெளியில் உலாவும் வெள்ளைப் பந்துக் கோலத்துக்காய்
காத்திருந்து தன் அவலத்தை கொட்டித் தீர்த்தவள் தானே!!??

நிலவு நிலைமை அறிந்தது என்னவோ
அவள் மௌனத்தின் மொழி மட்டும் தான்…
சொல்ல நினைத்த வலிகள்
கண்ணீராய் கரைந்து
ஒளிக்குள் ஒளிந்தன…

தனிமை கூட அவளை
அரவணைக்க மறந்து
அவள் அருகே உறைந்து நின்றது…
காத்திருப்பு ஒரு பழக்கமாய்
நம்பிக்கை ஒரு சுமையாய்
நெஞ்சில் அடங்கியது…
நிலாவிடம் தூது அனுப்பியவள்
பதில் வராத இரவுகளை
எண்ணிக் கொண்டே முதிர்ந்தாள்…

அழகு இருந்தும்
ஆறுதல் இல்லாத
ஒரு பெண்ணின் இரவு அது… 🌑💔
6
கார்மேகங்கள் விலக,கோடி விண்மீன்கள் நடுவே தவழ்ந்து வரும் வெண்ணிலாவே!
தொலைதூரத்தில் உன் புன்னகை ஒளிவீசி இரவின் இளவரசியாய் அலங்கரிக்கின்றாய்!
மாடியில் இருப்பவனையும், குடிசையில் இருப்பவனையும் இரசிக்க வைத்து மகிழ்விக்கின்றாய்!
குழந்தைக்கு சோறு ஊட்ட,காதல் மொழி பேச,கூட்டாஞ்சோறு உண்டு மகிழ எம்முடன் இருக்கும் தேவதை நீ வெண்ணிலாவே!

நிலாவே உன் ஒளியில் கல்வி கற்ற மகான்கள் ஏராளம்!
நிலாவே கொஞ்சம் நில் !உன்னை வர்ணிக்கும் போது உன்னை விட பேரழகி தென்படுகிறாளே என் கண்களில்!

நிலவின் ஒளி முகத்தில் பிரகாசிக்க,
கார்மேக கூந்தல் காற்றில் அசைய,
வெண்ணிற ஆடை அணிந்து  சமாதான ஒளி விளக்காய்,
அஞ்ஞான இருளை நீக்கி மெஞ்ஞான ஒளியை தேடி,
கரங்களில் நூல் ஏந்தி கல்வியறிவு இயற்றுகின்றாய் பெண்ணே!
விளக்கின் ஒளியில் கல்வி பயில தொடங்கினாய் மின்சாரம் இல்லாத காலத்தில் பெண்ணே!
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்று கூறியதை முறியடித்து விட்டாய் பெண்ணே!
விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை சாதித்துக் கொண்டு தான் இருக்கின்றாய் பெண்ணே!

அமைதியான மனசு வேண்டும் என்று தான் நிலாவை தேடி மாடி வந்தாயோ?
அவள் உன் கூடவே உலா வருவாள் நிழலாய் அன்புத் தோழியாய்!

புத்துணர்ச்சி தரும் தேநீரை அருந்தி விடு!
புத்தகத்தில் கற்ற அறிவினை மெருகூட்டிடு!
புது உலகம் படைத்து விடு!-பெண்ணே!

விளக்கு தன்னை அர்ப்பணித்து ஒளி தருவது போல் உதவுவோம் மற்றவர்களுக்கு!
விண்மீன்கள் தொலைவில் இருந்து ஒளிர்வது போல் நேசிப்போம் நம் உறவுகளை!
விண்ணில் வெண்ணிலா பிரகாசிப்பது போல் சாதிப்போம் வாழ்வில்!





7
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:10:13 AM »
8
இரவின் மடியில்
மௌனத்தின் மொழியைத் தழுவி,
நிலவொளியின் வனப்பில்
மிதந்திருந்தாள் அந்த மங்கை.

பொலிவுடன் ஜொலித்த நிலவு,
அவள் வெளிர் முக அழகை
நினைவூட்டியது…

காற்றின் சலசலப்பே
அவள் சிந்தனையை கலைக்குமோ என
மென்மையான ஸ்பரிசமாய்
தீண்டிச் சென்றது.

இரவின் காரிருளைத் துடைத்து,
ஒளியால் அரவணைக்கும்
பால் நிலவின் குளிர்ந்த உள்ளம்
கொண்டவள் அவள்.

நிலவின் கறைகள் போல,
அவள் மனதிலும்
சில காயவடுக்கள் உண்டு…
ஆனாலும் ஒளிர்வதை
அவள் ஒருநாளும்
நிறுத்தியதே இல்லை.

எத்தனை நட்சத்திரக் கூட்டங்களுக்கு
நடுவே இருந்தாலும்,
வானத்தின் வட்டப் பொட்டு போல
தனித்து தெரிவாள்
அத்தனை கூட்டத்திலும்.

எத்தனை இடர்கள் வந்தாலும்
அவைகளை சமாளிக்க எனது
இடக்கையே போதுமென்ற உறுதி கொண்டு,
ஆரவாரம் இல்லாத வெற்றித்திருமகளாய்
உலா வருபவள் அவள்

எத்தனை நாள் இந்த வெண்ணிலவு
தனிமையில் வாடிக் கிடக்கிறதோ என,
தேநீர் கோப்பையில் எஞ்சிய
வெப்பம் போல
மௌன மொழி பேசிக்கொண்டிருந்தாள்.

தினம் அவள் வருகைக்காக
எத்தனையோ காத்திருப்புகள்,
தேய்ந்தாலும் தேடச் செய்யும்
அந்த வெண்ணிலவு போலத்தான்
இந்த பெண்நிலவும்.


தனிமையின் தோழியாக,
காத்திருக்கும் தரைநிலாவை
விட்டு விலக மனமில்லாமல்
அலைபாய்ந்து கொண்டிருக்கிறது
 வானில் அந்த வெண்ணிலா.


பின்குறிப்பு :

என்னடா இது உருட்டு பலமா இருக்கே
யாரா இருக்கும்னு தானே யோசிக்கிறீங்க?
 
ஆமாங்க ...நீங்க நினைக்கிறது சரிதான்!!!
 
MIND VOICE :
ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும் 
பூசாத மாதிரியும் இருக்கனும்
பாக்க பளீர்னு இருக்கணும்

9
தொலையாத கனவாய்
தொலைதூர நிலவாய்
சில உறவுகளும்
அதன் நினைவுகளும்...

இருளில் ஒளி தந்து
மீண்டும் இருளில் உரல விடும்...
மின்மினியின் ஒளி போல
சிறுபொழுது ஒளியைப் பரப்பும்...

தேடாத போது அமுதளித்து
தேடும் போது நஞ்சை பரிசளிக்கும்...
மாயம் நிறைந்த உறவு
மனக்காயத்தை ஏற்படுத்திக் கொண்டே மருந்தளிக்கும்...

தேடிராத அன்பை பொழிந்து
அடிமைப் படுத்தியபின் புறந்தள்ளும்...
மனதிடத்தையும் சிறிது அசைத்து
அதில் ஆனந்தம் கொள்ளும்...

சுதந்திர காற்றையும் கொஞ்சம்
சிறைப் பிடித்து அக்களிக்கும்...
தான் என்ற அகந்தையை
அழித்து அதில் பரவசம் கொள்ளும்...

தன்னிறைவு கொள்ளா இச்சைகளை
வேரோடு பிடிங்கி எறியும்...
உருண்டோடும் திங்களையும் உலவும் திங்களையும்
எள்ளி நகையாடும்...

சிறு புன்னகையில் அரும்பி
உரையாடலில் மலர்ந்து மணம் பரப்பும்...
வீசும் மணத்தில் மனதை
பேதலிக்க செய்து ரசிக்கும்...

நிலையற்ற பிடிமானத்தைத் தந்து
தளர்ந்து சரிவதையே எதிர் நோக்கும்
இறுதியில் தீரா தனிமையை
பரிசளித்து பரிகாசிக்கும்

தொலையாத கனவாய்
தொலைதூர நிலவாய்
சில உறவுகளும்
அதன் நினைவுகளும்...

இருளில் ஒளி தந்து
மீண்டும் இருளில் உரல விடும்...
மின்மினியின் ஒளி போல
சிறுபொழுது மட்டும் ஒளியைப் பரப்பும்...
10
கார் மேகங்கள் வானம் முழுதும் கம்பளம் விரிக்க
அதில் வைரங்களை தெளித்தது போல நட்சத்திரங்கள் ஜொலி ஜொலிக்க
நடுவில் தேவதையாய் இராகதிராய் நீ மின்ன உன் பொலிவிற்கும் ஈடேது உண்டு

நீயும் துணை இல்லாமல் தனித்து நிற்கின்றாய்
அதேபோல் நானும் உன்னைப் பார்த்து ஆறுதல் கொண்டு உன் அழகை ரசித்து கொண்டிருக்கின்றேன்

நீ தனித்து இருப்பதை பார்த்த பின்பு தான் தனிமை மனிதனுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் பொருந்தும் என்று ஆம் நாம் இருவரும் கடவுளின் படைப்பு தானே
எனக்காவது நீ இருக்கின்றாய்
உனது  அழகை பார்த்துக் கொண்டே எனது தனிமையின் வலியை போக்கிக் கொள்வேன்
நீயோ பாவம் என்னைப் பார்க்கின்றாயா உன்னால் பார்க்க முடியுமா உனது என்ன குமரல்களை
.தனித்துக் கொள்ளத்தான் முடியுமா

உன்னால் முடிந்தது எல்லாம் மற்றவரை இன்புற்று இருக்கவே
உனது குளிர்ச்சியான கதிர் அலைவு கலை கொடுக்க முடியும் நீ இன்புற்று இருக்க ஏதேனும் ஏற்க முடியுமா

தனிமை ஒற்றை பதம்  எத்தனை வலிகள் அத்தனை வலிகளையும். சகித்துக் கொண்டு நீயும் மிளிர தானே செய்கின்றாய் இது நீ பக்குவப்பட்டதின் அடையாளமோ

உன் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்தாலும் எனது என்ன ஓட்டங்கள் எனையும் தாண்டி செல்கின்றதே தனிமையில் விட்டு சென்ற அவனை நினைத்து நினைத்து ஏங்கிக் கொண்டு அல்லவா இருக்கின்றது எனது இதயமும்

எனது தனிமை போகுமா இல்லை
உனைத் தோழியாக்கிக் கொண்டு நீண்டு தான் செல்லுமா காத்திருக்கின்றேன் அவன் வரவுக்காக .....





Pages: [1] 2 3 ... 10