11
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-012 (ஒரு உணவு... ஒரு நினைவு)
« Last post by MaiVizhi on July 02, 2026, 10:17:28 PM »
எங்க வீட்டுல இருந்து நாலு வீடு தள்ளி தான் எங்க பாட்டி வீடு இருக்கு. எங்க அப்பா ஓட பேரண்ட்ஸ் அச்சம்மா, அச்சச்சா நு கூப்டுவோம்..
எங்க அக்கா சின்ன வயசுல இருந்தே அங்க வளர்ந்ததாலே அங்க ரொம்ப அட்டாச்டு. நான் அம்மா வீட்டு சைடு அம்மம்மா கூட தான் ரொம்ப அட்டாச். அதனாலேயே அச்சம்மா வீட்டுக்கு நான் போனா மட்டும் ஏதாச்சும் சண்டை போட்டு இல்லை திட்டு வாங்கிட்டு வருவேன். ஆனா அச்சம்மா செய்யற சாப்பாடு சாப்பிட மட்டும் வெட்கமே இல்லாம டைம்க்கு போயிடுவேன். அது என்னமோ தெரியலைங்க, எங்க அம்மா அரைச்சு கறி குழம்பு வச்சாலும் வராத டேஸ்ட் எங்க அச்சம்மா செய்யற வெறும் புளி சாருக்கு இருக்கும்.
வெறும் புளி சாறு.. பாலக்காடு ஓட ஒரு ஸ்பெஷல் தான் அதுவும். ஸ்கூல் லீவ்னாலே அச்சம்மா வீடு தான்.. தோட்டம் ஃபுல்லா சுத்தி காத்துல விழுந்த சின்ன தேங்காயில குச்சியில ஓட்டை போட்டு தண்ணி எல்லாம் குடிச்சு, ஆத்துல ஆட்டம் போட்டு லன்ச் டைம் ஆனதும் அச்சம்மா வீட்டுக்கு வந்துடுவோம். வீட்டுக்கு போறோம்னு மனசில்லாம சொன்னாலும் உடனே அச்சச்சா சொல்வாரு, வெயில் ஆயிடுச்சு இனி இங்கேயே சாப்பிடுங்கனு.. அச்சம்மா அது கேட்டதும் சாப்பிட கூப்பிடுவாங்க.. அவங்க ரெண்டு பேர் மட்டும் இருந்தாலும் எப்போதும் அந்த கிச்சன்ல அந்த பானை நிறைய சாப்பாடு இருக்கும்.. அவங்க அப்படிதான், வயலுக்கு போற யாரு சாப்பிடலை சொன்னாலும் கூப்ட்டு சாப்பாடு போடுவாங்க. நான் சாப்பிட்டதுல எப்பவும் ஆசைப்படுற அந்த சாப்பாடு வெறும் புளி சாறு தான்..
அது ஒன்னும் இல்லைங்க, தேங்காய் எண்ணெய் ஊத்தி கடுகு, காஞ்ச மிளகாய், கறிவேப்பிலை, சின்ன உள்ளி (வெங்காயம்) போட்டு தாளிச்சு, புளி உப்பு கரைச்சு ஊத்தி கொதிக்க வச்ச புளி சாறு.. எங்க வீட்டுல விளைஞ்ச நல்ல குத்தரி சாதம் சுட சுட அதுல புளி சாறு ஊத்தி.. தொட்டுக்க நெத்திலி கருவாடு, அதுவும் ஒன்னு முழுசா கிடக்குறது பெருசு, ஆனாலும் அந்த அரை கருவாடு வாசனையே முழு சாப்பாடு உள்ள போகும்.. சாறுல இருக்குற காஞ்ச மிளகாயை சாதத்துல பிழிஞ்சு, அதுல பச்சை மிளகாய் உப்பு போட்டு ஊற வச்ச மாங்காய் ஒரு பீஸ் வச்சு, கருவாடு கடிச்சு சாப்பிட்டா.. அய்யோ அந்த மொமெண்ட்ல சிக்கன், மட்டன் ஓட டேஸ்ட் கூட இத ஓவர் டேக் பண்ணிடும்ங்க. ஆனா அதுக்கப்புறம் எங்க அம்மாவே செய்ய சொல்லி சாப்பிட்டு இருக்கேன், நான் செஞ்சு சாப்பிட்டு இருக்கேன், எப்பவும் அந்த டேஸ்ட் எனக்கு கிடைச்சது இல்லை.
இப்போ அவங்க ரெண்டு பேரும் இல்லை, அந்த வீடும் இல்லை.. அந்த இடத்துக்கு போனா அவங்க சமையலும், பாசமும், அங்க நாங்க வளர்ந்த நாட்களும் அவ்வளவு அழகா கண் முன்னாடி வரும்.. அவங்க போனாலும் அவங்க போட்ட இந்த புளி சாறோட டேஸ்ட் எப்பவும் எனக்குள்ள இருக்கும்.

Recent Posts