Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11


‎எங்க வீட்டுல இருந்து நாலு வீடு தள்ளி தான் எங்க பாட்டி வீடு இருக்கு. எங்க அப்பா ஓட பேரண்ட்ஸ் அச்சம்மா, அச்சச்சா நு கூப்டுவோம்.. 

எங்க அக்கா சின்ன வயசுல இருந்தே அங்க வளர்ந்ததாலே அங்க ரொம்ப அட்டாச்டு. நான் அம்மா வீட்டு சைடு அம்மம்மா கூட தான் ரொம்ப அட்டாச். அதனாலேயே அச்சம்மா வீட்டுக்கு நான் போனா மட்டும் ஏதாச்சும் சண்டை போட்டு இல்லை திட்டு வாங்கிட்டு வருவேன். ஆனா அச்சம்மா செய்யற சாப்பாடு சாப்பிட மட்டும் வெட்கமே இல்லாம டைம்க்கு போயிடுவேன். அது என்னமோ தெரியலைங்க, எங்க அம்மா அரைச்சு கறி குழம்பு வச்சாலும் வராத டேஸ்ட் எங்க அச்சம்மா செய்யற வெறும் புளி சாருக்கு இருக்கும்.

‎வெறும் புளி சாறு.. பாலக்காடு ஓட ஒரு ஸ்பெஷல் தான் அதுவும். ஸ்கூல் லீவ்னாலே அச்சம்மா வீடு தான்.. தோட்டம் ஃபுல்லா சுத்தி காத்துல விழுந்த சின்ன தேங்காயில குச்சியில ஓட்டை போட்டு தண்ணி எல்லாம் குடிச்சு, ஆத்துல ஆட்டம் போட்டு லன்ச் டைம் ஆனதும் அச்சம்மா வீட்டுக்கு வந்துடுவோம். வீட்டுக்கு போறோம்னு மனசில்லாம சொன்னாலும் உடனே அச்சச்சா சொல்வாரு, வெயில் ஆயிடுச்சு இனி இங்கேயே சாப்பிடுங்கனு.. அச்சம்மா அது கேட்டதும் சாப்பிட கூப்பிடுவாங்க.. அவங்க ரெண்டு பேர் மட்டும் இருந்தாலும் எப்போதும் அந்த கிச்சன்ல அந்த பானை நிறைய சாப்பாடு இருக்கும்.. அவங்க அப்படிதான், வயலுக்கு போற யாரு சாப்பிடலை சொன்னாலும் கூப்ட்டு சாப்பாடு போடுவாங்க. நான் சாப்பிட்டதுல எப்பவும் ஆசைப்படுற அந்த சாப்பாடு வெறும் புளி சாறு தான்..

அது ஒன்னும் இல்லைங்க, தேங்காய் எண்ணெய் ஊத்தி கடுகு, காஞ்ச மிளகாய், கறிவேப்பிலை, சின்ன உள்ளி (வெங்காயம்) போட்டு தாளிச்சு, புளி உப்பு கரைச்சு ஊத்தி கொதிக்க வச்ச புளி சாறு.. எங்க வீட்டுல விளைஞ்ச நல்ல குத்தரி சாதம் சுட சுட அதுல புளி சாறு ஊத்தி.. தொட்டுக்க நெத்திலி கருவாடு, அதுவும் ஒன்னு முழுசா கிடக்குறது பெருசு, ஆனாலும் அந்த அரை கருவாடு வாசனையே முழு சாப்பாடு உள்ள போகும்.. சாறுல இருக்குற காஞ்ச மிளகாயை சாதத்துல பிழிஞ்சு, அதுல பச்சை மிளகாய் உப்பு போட்டு ஊற வச்ச மாங்காய் ஒரு பீஸ் வச்சு, கருவாடு கடிச்சு சாப்பிட்டா.. அய்யோ அந்த மொமெண்ட்ல சிக்கன், மட்டன் ஓட டேஸ்ட் கூட இத ஓவர் டேக் பண்ணிடும்ங்க. ஆனா அதுக்கப்புறம் எங்க அம்மாவே செய்ய சொல்லி சாப்பிட்டு இருக்கேன், நான் செஞ்சு சாப்பிட்டு இருக்கேன், எப்பவும் அந்த டேஸ்ட் எனக்கு கிடைச்சது இல்லை.

இப்போ அவங்க ரெண்டு பேரும் இல்லை, அந்த வீடும் இல்லை.. அந்த இடத்துக்கு போனா அவங்க சமையலும், பாசமும், அங்க நாங்க வளர்ந்த நாட்களும் அவ்வளவு அழகா கண் முன்னாடி வரும்.. அவங்க போனாலும் அவங்க போட்ட இந்த புளி சாறோட டேஸ்ட் எப்பவும் எனக்குள்ள இருக்கும்.


12
ஹாய் எஃப் டி சி உறவுகளே இன்றைக்கு நம்ம நெஞ்சம் மறப்பதில்லை ப்ரோக்ராமுக்கு வந்த தலைப்பு உணவு ஓர் நினைவு இந்த தலைப்பை பார்த்ததும் எனக்கு நினைவு வருவது என் அம்மா சமைக்கும் இட்லியும் துவரம் பருப்பு சட்னியும்.அப்புறம் அம்மா வைக்கும் மட்டன் சுக்கா இந்த ரெண்டு உணவுத்தான் உணவின் நினைவா நான் நினைக்கிறேன்.

முதல்ல நான் அம்மா வைக்கும் இட்லி,துவரம் பருப்பு சட்னி இதை பத்தி சொல்லுறேன். இட்லி எல்லார் வீட்டுலயும் செய்ற மாதிரி தான்.ஆனா அந்த பருப்பு சட்னி தான் எனக்கு மெயின் பிக்சர். அம்மா அவ்வளவு ருசியா செய்வாங்க. அதான் எங்க ஊர்ல பாம்பே சட்னி அப்படின்னு கூப்பிடுவாங்க. அந்த சட்னியை நினைக்கிறப்ப இன்னும் இப்பவும் என் நாக்குல எச்சில் ஊறுது.

அம்மாட்ட நான் கேட்டேன் அம்மா பாம்பே சட்னி எப்படி செய்வது என்று. அம்மா சொன்னாங்க 150 கிராம் துவர பருப்பு எடுத்துக்கோ,ஒரு அரை மூடி தேங்காய் நறுக்கிக்கோ ,துவரம் பருப்ப அரை மணி நேரம் ஊற வச்சுக்கோ, தேவையான அளவு மிளகாய் சேர்த்துக்கோ ,தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோ, இதை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு அடிச்சுக்கணும். ஆட்டு உரல் இருந்தா இன்னும் நல்லா இருக்கும் அப்படின்னு  சொன்னாங்க. இவை அனைத்தையும் மை போல அரைக்க கூடாது. கொத்து கொத்தா அரைக்கணும்னு சொல்லுவாங்க .அப்புறம் ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் விட்டு அந்த பச்சை வாசனை போற வரை கொதிக்க விடணும். அப்புறம் வெங்காயம் கருவேப்பிலை கடுகு எல்லாம் போட்டு தாளிச்சு இறக்கினால் பாம்பே சட்னி ரெடி அப்படின்னு சொன்னாங்க .இதை நினைக்கிறப்போ எனக்கு இப்பவும் பசி எடுக்குது.

இரண்டாவதாக அம்மா வைக்கும் மட்டன் சுக்கா .அம்மாவைக்கும் மட்டன் சுக்கா என்றால் காலையிலிருந்து வயிற்ற பட்டினி போட்டுக்குவேன். எப்படா மதியம் ஒரு மணி ஆகும்...அந்த மட்டன் சுக்காவை ஒரு பிடி பிடிக்கலாம் என்று நானும் என் தம்பியும் காத்துகிட்டு இருப்போம் .அம்மா சமையல் முடிச்சிட்டு சாப்பிட வாங்க தங்கங்களா என்று கூப்பிடுவாங்க.கூப்பிட்டதும் நானும் எனது தம்பியும் முதலில் உட்கார்ந்து சாப்பிடுவோம். அம்மா வைக்கும் அந்த மட்டன் சுக்கா அவ்வளவு சூப்பரா இருக்கும் .அம்மா ,அப்பா  எல்லாரும் சாப்பிட்ட பின்ன அந்த சுக்கா பாத்திரத்தில் கடைசியா ஓட்டிட்டு இருக்கும் குழம்புல கொஞ்சம் போல சாதத்தை போட்டு பிசைஞ்சு தருவாங்க அந்த உணவுக்கு ஈடு இணை வேறு உணவு இல்லை. அந்த உணவை வாங்குவதற்கு எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும். இட்லி பாம்பே சட்னி சாதம் மட்டன் சுக்கா இதுவே என் மனதில் நினைத்திருக்கும் உணவு நன்றி வணக்கம்❤️
13
‎ஒரு உணவை பத்தி சொல்லணும் சொன்னா எப்படிங்க சொல்றது. குழந்தையா இருக்கும்போது ஒரு உணவு பிடிக்கும். சிறுமியாக மாறும்போது ஒரு உணவு பிடிக்கும். குமரியாகும்போது ஒரு உணவு பிடிக்கும். இதுல நான் எதை பத்தி பேசுறது.

எங்க அம்மா கைபக்குவத்துல சமையல் எல்லாமே சுவையா தான் இருக்கும். அதுலயும் உளுந்தஞ்சோறும் , நாட்டுக்கோழி கறியும் கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சின்ன வயசுல உளுந்தஞ்சோறு சாப்பிட சொன்னா வேணாம் வேணாம் என்று ஓடுவேன். ஆனா அந்த உளுந்தஞ்சோறையும் நான் ரசித்து சாப்பிடுற ஒரு நேரம் வந்துச்சு. என் கல்யாணத்துக்கு முன்னாடி என்னோட அத்தைமார் எல்லாரும் சேர்ந்து எனக்கு பொங்கி போட்டது உளுந்தஞ்சோறு தான். என் கூட சிறு வயதிலிருந்து ஓடியாடி விளையாடின அத்தை பசங்க அனைவரும் சேர்ந்து சுத்தி நின்று கிண்டல் பண்ண வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க சாப்பிட்ட சாப்பாடு அடடடடா அதன் ருசி சொல்ல வார்த்தையே இல்லை. அன்றிலிருந்து தான் உளுந்தஞ்சோறும், நாட்டுகோழி கறியும் என்னோட விருப்ப சாப்பாடு பட்டியலில் இடம் பிடித்தது.

அம்மாவிடம் கேட்டு செய்முறையை கற்றுக்கொண்டு இன்றுவரை என்னோட சமையலறையில் மாதத்தில் இருமுறையாவது உளுந்துஞ்சோறு இடம் பிடிக்கும். என்னோட பையன் கிட்ட பிரியாணி வேணுமா உளுந்தஞ்சோறு வேணுமானு கேட்டா உளுந்தஞ்சோறு வேணும்னு தான் சொல்லுவான். அந்த அளவுக்கு எங்க எல்லாருக்கும் பிடிக்கும்.

அடுத்ததா முந்திரிக்கொத்து. முந்திரிக்கொத்து செய்றதுல எங்க அம்மாவை அடிச்சுக்க வேற ஆளே கிடையாதுனு எங்க குடும்பத்திலேயே சொல்லுவாங்க. வேலை அதிகம் இழுக்குற பலகாரம் னு சொன்னா முந்திரிக்கொத்து தான்னு எங்க அம்மா சொல்லுவாங்க. சரியான பதத்தில் செய்யலைன்னா ரெண்டே நாள்ல கெட்டுப் போய்விடும். எங்க அம்மா செய்ற முந்திரிக்கொத்துக்கு  நான் அடிமைன்னே சொல்லுவேன். அவ்வளவு ருசியா இருக்கும். சின்ன வயசுல உருண்டை உருட்டறதுக்கு அம்மா கூப்பிட்டா டிமிக்கி கொடுத்துட்டு ஓடிடுவேன். அம்மாவே தனியா உருண்டை உருட்டி அதை நாலு நாள் வீட்டிலேயே வாட வைப்பாங்க. நான் அம்மாக்கு தெரியாம அதையும் அள்ளிட்டு ஓடுவேன். அஞ்சாவது நாளு பொறிச்சு தரும்போது அதை சாப்பிடுற ருசி இருக்கே அதெல்லாம் சாப்பிட்டவங்களுக்கு தான் தெரியும். இப்போ நானே என் வீட்ல தனியா முந்திரிக்கொத்து செய்து என் பையன் சாப்பிடும் போது அதை பார்த்து ரசிக்கிற சுகம் இருக்கே...

அம்மா கிட்ட இருந்து தான் பொண்ணுங்க சமையல் கத்துப்பாங்க. அன்று நான் அழுது அழுது கத்துக்கிட்டது எல்லாம் இன்று இங்கு பதிவாக பதியும்போது என் நினைவுகளை நானே மீட்டிப் பார்க்கும்போது அட இது எல்லாம் நான்தானா என்று எனக்கே ஆச்சரியமாக உள்ளது. புதிய புதிய தலைப்புகளை தந்து மனதில் புதைந்திருக்கும் நினைவுகளை வெளிய கொண்டுவர உதவும் ftc க்கு நன்றிகள் பல..
14
இந்த உலகத்திலேயே எனக்கு பிடித்தது உணவு தான்.உணவை இரசித்து ருசித்து சாப்பிடுவேன்.ஆனால் அதிகமாக சாப்பிட மாட்டேன்.என் tasteக்கு cook பண்ணி சாப்பிடணும்னு எனக்கு ஆசை.எங்க வீட்டில cookபண்ணலாம்னா அம்மா சொல்லுவாங்க "கையில் சூடு பிடிக்கும்.அப்புறம் schoolக்கு பதில் சொல்ல முடியாதுன்னு".அம்மாக்கு அவங்கள விட நான் நல்லா cook பண்ணிடுவேன் என்று பொறாமை அப்படின்னு சொல்லிட்டு போயிட்டேன்.

விடுமுறையில்  பாட்டி வீட்டுக்கு போனபோது பாட்டியை கேட்டிருந்தேன் "பாட்டி எனக்கு cookபண்ண ஆசையா இருக்கு. அம்மா விடமாட்டேங்கிறாங்க.நீங்க விடுவீங்களா" அப்படின்னு.அப்போது எனக்கு பத்து வயது."இந்த வயதில் தான் நானும் cook பண்ணேன்.வா உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன்" என்று பாட்டி தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க.

பாட்டி பொருட்களை எடுத்துட்டு வா,கழுவிட்டு வா என்று சொல்லிகிட்டு இருந்தாங்க."பாட்டி என்கிட்ட வேலை வாங்க கூடாது.cooking only தான் எனக்கு சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு பாட்டிகிட்ட சொல்லிட்டேன்.

பாட்டி வீட்டில் விறகு அடுப்பு இருக்கும்.விறகை cross பண்ணி வைக்கணும்.first சிறிய விறகுகளை வைத்து தீ மூட்டனும் என்று விறகு அடுப்பு எப்படி மூட்டுறதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க.தீ மூட்டி சோறு ஆக்குவதற்கு பானையில் தண்ணி வைத்து கொதிக்க விட சொன்னாங்க.அரிசியை எவ்வாறு களைந்தெடுப்பது என்றும்,சோறு வேந்துடுச்சா என கையில் எடுத்து பார்க்க சொன்னாங்க.அப்புறம் கஞ்சி வடிக்கிறது எப்படின்னு அதிலேயே வடிச்சு காமிச்சாங்க.வடித்த கஞ்சியில் உப்பு, தேங்காய் பால் விட்டு குடிக்க கொடுத்தாங்க.அந்த tasteக்கு எந்த சூப்பும் ஈடாகாது.

பாட்டி சொன்னாங்க first நீ உருளைக்கிழங்கு குழம்பும்,பருப்புக்கறியும் கத்துக்கோன்னு."நீங்க சொல்லி மட்டும் கொடுக்கணும்.கை வைக்க கூடாது என்று நான் சொல்லிட்டேன்.பாட்டி vegetables cut பண்றது சொல்லிக் கொடுத்தாங்க.நான் என்ன பண்ணுனேனா பாட்டி சொன்ன sizeஐ வச்சு வெஜிடேபிள் cutபண்ணிட்டு இருந்தேன்.அதைப் பார்த்து தாத்தா சொன்னாங்க "பார் என் பேர்த்தி எப்படி அளந்து அளந்து வெட்டுறா"அப்படின்னு.பாட்டி சிரிச்சுக்கிட்டே இப்படி அளந்து வெட்ட தேவையில்லமா.கண் மட்டத்துக்கு பார்த்து வெட்டினால் போதும் அப்படின்னு சொன்னாங்க.அன்று தான் நான் வெஜிடேபிள் வெட்ட கத்துக்கிட்டேன்.

பருப்புக்கறி வைக்கிறது சொல்லிக் கொடுத்தாங்க.எப்படி உப்பு கரெக்டா இருக்கு அப்படின்னு பார்க்கிறது,கரண்டியால் கறி எடுத்து கையில விட்டு சுவைத்துப் பார்க்கலாம் .இல்லன்னா smell பண்ணி பார்க்கலாம் அப்படின்னு சொன்னாங்க.எனக்கு பிடித்தது smell பண்ணி கரெக்ட்டா இருக்கான்னு பார்க்கிறது.அப்படியே உருளைக்கிழங்குக்கறி  வைக்கிறதும் சொல்லிக் கொடுத்தாங்க.

பாட்டி சொன்னாங்க "விறகு தாத்தா எடுத்து வச்சிருக்காங்க அதை எடுத்துட்டு வா" அப்படின்னு.நான் போய் பார்த்தேன்.அங்கே தாத்தா விறகு வெட்டிய கோடரி இருந்தது.தாத்தா பண்ணது போல நானும் விறகு வெட்ட கோடரி எடுத்தேன்.அந்தக் கோடரியின் பிடி என் கையில வந்து அடித்து விட்டது.ஐயோ அம்மானு கத்தினேன்.என்ன ஆச்சுன்னு கேட்டாங்க.எதுவும் இல்ல பாட்டி என்று சொல்லி கையை மறைச்சுகிட்டே போயிட்டேன்.அப்புறம் பார்த்தா என் சுட்டு விரல் நகம் black colourஆக வந்துடுச்சு.waterல கழுவி பார்த்தேன் போகல.தாத்தா வந்ததும் தாத்தா கிட்ட காமித்தேன்.தாத்தா என்ன ஆச்சுன்னு கேட்டாங்க. திட்டுவாங்கன்னு "என் shoeஎடுக்க போனேன்.stand கையில் விழுந்திருச்சு"அப்படின்னு சொன்னேன்.தாத்தா பாட்டிக்கு தான் திட்டு.

தாத்தா first நான் cookபண்ண உணவு சாப்பிட்டாங்க.ஆஹா "என் பேர்த்தி எவ்வளவு tasteஆ cook பண்ணி இருக்கா"அப்படின்னு சொன்னாங்க."உண்மையா சொல்றீங்களா தாத்தா"  என்று கேட்டேன்."பாட்டி,உங்க அம்மாவை விட நீ நல்லா cook பண்ற" என்று தாத்தா சொன்ன அந்த வார்த்தை தான் இன்று வரை என்னை cookingமேல ஆர்வத்தை காட்டிக்கிட்டு இருக்கு.அப்புறம் நான்,அப்பா,அம்மா,அண்ணா,பாட்டி எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டோம்.அண்ணா நீயா cook பண்ணா அப்படி என்று ஒரு கேள்வி.

எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று கூடி நான் சமைத்த முதல் உணவை சாப்பிட்டது எல்லையற்ற மகிழ்ச்சியான உணர்வு என்றும் மனதில் நினைவாக...

அழகிய நினைவுகளை பகிர்வதற்கு சந்தர்ப்பம் அளித்த NM teamக்கு நன்றிகள்.


15

   
  அண்ணா செய்த செயல்


எனக்கு பூரணம்  ரொம்ப பிடிக்கும். அந்த நினைவு பகிர்ந்து  கொள்கிறேன்..

அப்பா இருக்கும் போது நடந்த விஷயம்.  ரமலான் மாதம்  30நாள் நோன்பு நோற்க்கும்  மாதம்.. அந்த மாதம் கடைசி 10நோண்பில்
வீட்ல  அம்மா & பாட்டி   & மாமி எல்லாம் சேர்ந்து பலகாரம் செய்வாங்க...

வருடத்தில் இரு முறை பலகாரம் எங்க வீட்டுல செய்வது  வழக்கம்.

ரமலான் மாதம் & ரமலான் முடிந்த பிறகு 4 மாதம் கழித்து  பூரணம்  பாத்திஹா னு  ஒரு மாதம் வரும் அப்போ ரெடி பண்ணுவாங்க.

முறுக்கு, எள்ளு சீடை, பூரணம் எல்லாம்  ரெடி பண்ணுவாங்க..

அந்த டைம் எங்க அண்ணா ரமலான் நோன்பு வைத்தால் 1month.  எங்க மட்டன் கடைக்கு  போக மாட்டான் ..

அப்பா ஏன் டா இன்னும் பொழப்ப பார்க்கனும் எண்ணம் வரைலயா னு கேட்ட உடனே இவனுக்கு கோபம் வந்து எங்க அம்மா  எல்லாம் ரெடி  பண்ணின
பூரணத்தை  கோபப்பட்டு மிதி மிதி மிதி னு  எல்லாத்தையும் மிதுச்சுட்டான்..

 அதுக்கு அவன் சொல்லறான் நான் என்ன இந்த   மாதம் மட்டும் தானே வரலை வருஷம்  முழுவதுமா வராமல் இருக்கேன் என்று சொல்லுறான்..

எங்க அக்கா  தான் அண்ணாவை சத்தம் போட்டு.. அம்மா அப்பா எல்லாம் அவனை திட்டி  விட்டாங்க..

எனக்கு அந்த நேரம்  ஒரே அழுகை ஏன்டா இப்படி பண்ணின   சாப்பிடும் பொருள் a
என்று சொல்லி எனக்கு பிடிச்ச snacks செய்யும் பொழுது தான் உங்க மகனுக்கு கோபம் வருமா.. என்று சொல்லி அவனை சத்தம் போட்டேன் அவன் அதை காதுல வாங்கல .. Room kulla போயிட்டான்..

இனி அம்மாவிடம் நான் எப்படி மறுபடியும் பூரணம் ரெடி  பண்ணுங்கனு  கேட்பேன்...

அதற்கும் இனி வாய்ப்பு இல்லை..
எனக்கு அந்த மிதி பட்ட பூரணத்தை பார்க்க பார்க்க எங்க அண்ணா மேல இன்னும் கோபம் தான் அதிகமானது.. ஆசை பட்ட snacks   பூரணம் சாப்பிட முடியலனு...

நான் அவனை திட்டினாள்.. இன்னும் வீட்ல சண்டை பெருசா தான் வரும்னு நெனச்சுட்டு
பொறுமையா இருந்தேன்..

மறுநாள் அம்மா முறுக்கு அதற்கு அடுத்த நாள் எள்ளு சீடை ரெடி பண்ணாங்க...

பகல் full ah நோன்பு இருக்கும்  நேரம் இரவில் அந்த முறுக்கு, எள்ளு சீடை சாப்பிடுவேன்...
கடையில் order செய்து வாங்கி சாப்பிட்டால் கூட ருசி இருக்காது..

வீட்ல அம்மா & பெரியவர்கள் கை பக்குவம் போல் எங்கும் வராது  அவ்ளோ சுவையா இருக்கும்.. பூரணம், எள்ளு சீடை, முறுக்கு..


எனக்கு ரொம்பவும் பிடித்த Snacks பூரணம் இல்லாத போது  ரொம்ப மனசு கஷ்டமா இருந்தது..
 
அம்மா ஆசையா ஆசையா ரெடி பண்ணின அம்மாக்கும் & மாமி, பாட்டி எல்லாம் வேதனை பட்டது தான் மிச்சம்..

அடுத்தடுத்து ரமலான் நோன்பு வரும் பொழுது எங்க அண்ணா செய்த செயல் தான் நியாபகம் வரும்..

இந்த வருடம் ரமலான் time la கூட வீட்ல பேசுவோம்  அண்ணா, அண்ணா wife ta அம்மா சொல்லவாங்க இந்த மாதிரி  அவன் செய்துட்டான் என்று... அண்ணா wife சொல்லும் என்னால நம்ப முடியலனு..
 இவரா இப்படி செய்தார் என்று...

பூரணம் snacks என்றும் மறக்க முடியாத ஒரு உணவு ஒரு நினைவு..

இப்போ அப்பாவும் இல்லை அப்பா இறந்து விட்டார்.. கடந்த கால நினைவுகள் என்றென்றும் என் மனதில்  நிலைத்திருக்கும் நினைவுகள்..

நன்றி
16
Wishing you both a very Happy Birthday, Mr. Vikram & Ms. Minnie! 🎂
May your special day be filled with joy, good health, happiness, and countless wonderful memories. Wishing you both a fantastic year ahead. Have an amazing celebration! 🎈🎁
17
கைஎழுத்து... நட்பின் அமைதியான சாட்சி

இடைநிலைப் பள்ளியில்
படித்துக் கொண்டிருந்த காலம் அது.
என்னுடைய கைஎழுத்தும், என்னுடன் படித்த
தோழியின் கைஎழுத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது.

ஒரு நாள் கணிதத் தேர்வில் நான் செய்த தவறுக்காக
கணக்கு ஆசிரியர் மிகவும் கோபமடைந்தார்.
ஆனால் கைஎழுத்து ஒன்றுபோல் இருந்ததால்,
தவறு செய்தது நானென்பதை அறியாமல்,
எனக்குப் பதிலாக என் தோழியையே அழைத்து அடித்துவிட்டார்.

அந்த நொடியில் நான் அனுபவித்த குற்ற உணர்வை
வார்த்தைகளால் சொல்ல முடியாது. தவறு என்னுடையது...
ஆனால் தண்டனை வாங்கியது என் தோழி.
அந்தச் சம்பவம் எனக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்தது.

சில நேரங்களில் உண்மை தாமதமாகத் தெரிந்தாலும்,
மனசாட்சி மட்டும் உடனே நம்மைத் தண்டித்துவிடும்.
இன்றும் அந்த நிகழ்வை நினைத்தால்,
என் தோழியின் அன்பும் பொறுமையும்,
அந்தப் பள்ளி நாட்களின்
இனிய நினைவுகளும் மனதில் மீண்டும் மலர்கின்றன.
18
என் மனதை கொள்ளையடித்த சிவப்பு வண்ணம்... ❤️


வண்ணங்கள் பல இருந்தாலும்,
என் இதயத்தை
முதலில் கவர்ந்தது சிவப்பு வண்ணம்தான்.

சிவப்பு என்பது ஒரு நிறம் மட்டுமல்ல...
அது உணர்வுகளின் மொழி...
அன்பின் அடையாளம்...
தைரியத்தின் சின்னம்...
உற்சாகத்தின் வெளிப்பாடு...
வாழ்க்கையின் துடிப்பு...
ரோஜாவில் சிவப்பு...
சூரிய உதயத்தில் சிவப்பு...
மாலையின் வானத்தில் சிவப்பு...
ஒவ்வொரு காட்சியும் மனதை
வேறொரு உலகத்திற்கு
அழைத்துச் செல்கிறது.

சிவப்பு வண்ணத்தைப் பார்க்கும்போதெல்லாம்,
வாழ்க்கையை இன்னும்
அழகாக வாழ வேண்டும் என்ற
ஆசை பிறக்கிறது.
ஒவ்வொரு நாளையும்
முழு மனதுடன்
ரசிக்க வேண்டும் என்ற
உணர்வு வருகிறது.

எனக்குப் பிடித்த நிறம் என்று
மட்டும் சொல்ல முடியாது...
அது என் மனநிலையைப் பிரதிபலிக்கும்
ஒரு உணர்வு.

என் தன்னம்பிக்கைக்கு ஒரு அடையாளம்...
என் கனவுகளுக்கு ஒரு நிறம்...
என் மனதை
கொள்ளையடித்த சிவப்பு வண்ணம்...
இன்றும் என் கண்களைக் கவர்கிறது...
என் இதயத்தை மகிழ்விக்கிறது...
என் வாழ்க்கைக்கு...
ஒரு புதிய உற்சாகத்தைத் தருகிறது.

சில நிறங்கள் கண்களைக் கவரும்...
ஆனால் சிவப்பு மட்டும்...
என் மனதையே கொள்ளையடித்துவிட்டது. ❤️🌹
19

JSB....JCB

"JSB என்று என் பெயரை
'JCB' என்று மாற்றி
எத்தனை பேர் கலாய்த்தாலும்,
அந்த கலாய்ப்புகளுக்கு மத்தியில்
நான் தலை நிமிர்ந்து நிற்கவும்,
தன்னம்பிக்கையுடன் நடக்கவும் வைத்தது
உங்கள் அன்பும், ஆதரவும்,
நம்பிக்கையும் தான். 💙

சில வார்த்தைகள்
காயப்படுத்த முயன்றாலும்,
உங்கள் ஒரு ஊக்கமான வார்த்தை
அந்த காயத்தை ஆற்றிவிட்டது.

சிலர் என்னை சிரிக்க வைத்தார்கள்;
சிலர் என்னை கலாய்த்தார்கள்.
ஆனால் நீங்கள் மட்டும்
என்னை நம்பினீர்கள், மதித்தீர்கள்,
ஊக்கப்படுத்தினீர்கள்.

வாழ்க்கையில் எல்லோருக்கும்
விமர்சனங்கள் வரும்;
எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது.
ஆனால் நம்மை உண்மையாக
நேசிப்பவர்களின் அன்பு இருந்தால்
எந்த விமர்சனமும் நம்மை வீழ்த்த முடியாது.

என்னைப் பற்றி பேசுபவர்களுக்கும் நன்றி;
என்னை நம்பி என் பக்கத்தில் நின்றவர்களுக்கும்
இதயப்பூர்வமான நன்றி.
உங்கள் அன்பும் நம்பிக்கையும் இருக்கும் வரை
எந்த கலாய்ப்பும் என்னை தலைகுனிய வைக்காது.
நான் என்றும் தலை நிமிர்ந்து, புன்னகையுடன்,
தன்னம்பிக்கையுடன்
என் பயணத்தைத் தொடர்வேன்.

என்றும் அன்புடனும் நன்றியுடனும்...

💙 JSB 💙
20
தொலைந்து போன காலணியைத் தேடிக் கொடுத்த தோழியின் கதை... 🤍

சில நட்புகள் ஒரு சிறிய
உதவியில் தொடங்கும்...
சில நட்புகள்
ஒரு புன்னகையில் மலரும்...
எங்களுடைய நட்பு, ஒருவருக்கொருவர்
துணையாக இருந்த அந்த
எளிய நாட்களில் உருவானது.

ஒருநாள் தொலைந்து போன
காலணியைத் தேடி,
கண்டுபிடித்து கொடுத்த
அந்தச் சிறிய தருணம்...
அது ஒரு காலணியை மட்டும்
திருப்பிக் கொடுத்த சம்பவம் அல்ல...
அது நம்பிக்கையையும், அன்பையும்,
"நான் உனக்காக இருக்கிறேன்" என்ற
உணர்வையும் தந்த தருணம்.

அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்தன...
வாழ்க்கை மாறியது...
சூழ்நிலைகள் மாறின...
மனிதர்களும் மாறினார்கள்.

ஒரு காலத்தில், நட்பே
எல்லாமாக இருந்த இடத்தில்,
பின்னர் பணம்தான்
முக்கியமானதாக மாறிவிட்டது.

பணம் வாழ்க்கைக்கு அவசியம்...
ஆனால் சில நேரங்களில்,
அது சில உறவுகளின்
மதிப்பையே மாற்றிவிடுகிறது.

ஒருகாலத்தில் அன்பால்
இணைந்த இதயங்கள்,
பின்னர் கணக்குகளால்
பிரிந்து போனது.

நான் இழந்தது பணம் அல்ல...
ஒரு உண்மையான நட்பை.

இன்று அந்த நினைவுகள் மட்டும்
என்னுடன் இருக்கின்றன.
காலணியைத் தேடிக் கொடுத்த
அந்த நாளும்,
நட்பை மனதார நம்பிய
அந்த தருணங்களும்,
இப்போது இனிய
நினைவுகளாகவே மாறிவிட்டன.

சில உறவுகள் முடிவடைவது
சண்டையால் அல்ல...
முன்னுரிமைகள் மாறிவிடுவதால்தான்.

அதனால் இன்று நான் வருந்தவில்லை...
ஆனால் ஒரு உண்மையை
மட்டும் கற்றுக்கொண்டேன்.

பணம் வாழ்க்கையை வசதியாக்கலாம்...
ஆனால் அன்பால்
கட்டியெழுப்பப்பட்ட நட்பை
வாங்க முடியாது.

சில நினைவுகள்...மீண்டும் வராது.
சில நட்புகள்...மீண்டும் மலராது.
ஆனால் அவை கற்றுக் கொடுத்த
பாடங்கள் மட்டும்,வாழ்நாள் முழுவதும்
நம்மோடு இருக்கும்.
Pages: 1 [2] 3 4 ... 10