Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
கையெழுத்து




. அடுத்து.       🪷 து 🪷
12
Reverence.          வணக்கம்






Next      🪷 Glory 🪷
13
Love is fine darling when yore mine
No sun no shine summer rain
Love is fine darling when yore mine
No sun no shine summer rain
Without you dear life is pain
When youre mine darling always fine
Its always dream ever green
See that screem oh my queen

Both : Raa… rarara rarara rarara rara raaraara raa…

Female : Naan oru kaadhal sanyaasi
Naal oru maedai en raasi
Oorukku ooru sellum ullaasi
Yaarukku naan sondham nee yosi

Female : Ezhubadhu vayadhu
Kumaranukkum ennai
Oru dharam paarthaal kilukukkum


Come on hold me tight
I feel so lite
My eyes are turning bright
You always right yaeh

Ezhubadhu vayadhu
Kumaranukkum ennai
Oru dharam paarthaal kilukukkum
Irubadhu vayadhu kizhavanukkum
Endrum en manam ingae idam kodukkum
Aanaal…
Idhu varai aangalai thottadhillai
Pillai irandukku mel naan pettradhillai

Female : Naan oru kaadhal sanyaasi
Naal oru maedai en raasi



Next song.     🪷 Gun gun enn stenn gun
Roger moore pole
Munnaal pennundu
Endhan pinnaal kannundu paar
 Fun fun unn love fun
Eddy murphy poll naughty
Nee endhan maan thaan
Naan than don than
14
தமிழ் நாட்டின் மருத்துவ செடி எது ??

துளசி,




Next.     🪷ஆவாரம் பூ மருத்துவ குணம் என்ன? 🪷
15
விளையாட்டு - Games / Re: பொது அறிவு
« Last post by RajKumar on June 02, 2026, 09:51:41 PM »
Who is the father of philosophy?

Socrates




Next.      🪷 Who first created philosophy? 🪷
17
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-010

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

'வெயிலோடு விளையாடி - நாம் மறந்த விளையாட்டுகள்'

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.
18
காணாமல் போனவர்களைத் தேடுகிறோம்...
ஆனால்,
தங்களையே தொலைத்துவிட்டு வாழும் மனிதர்களை
யார் தேடுகிறார்கள்...?

ஒருவன் தன்னையே தொலைக்கிறான் என்றால்...
அவன் காணாமல் போகவில்லை...
எங்கோ ஒரு மூலையில்...
எல்லோருக்காக வாழ்ந்துகொண்டு...
தனக்காக வாழ்வதை மட்டும்
மறந்துவிட்டான்...
அதுதான்... ஒரு மனிதன் தன்னையே தொலைக்கும் தருணம்..
🤔🤔🤔💯🔥
19
சுமைகளோடு பறக்கும் சிறகுகள்

இன்றிரவு இந்த ஊரின் கடைசி இரவு...
இந்த ஆலமர நிழலில், இந்த ஏரிக்கரையின் அமைதியில், இந்த நிலவொளியின் சாட்சியாக, என் மனதில் புதைந்து கிடந்த ஆயிரம் வார்த்தைகளை உன்னிடம் சொல்ல வந்திருக்கிறேன் நிலவே...
நாளை காலை, இந்த மண்ணை விட்டு விமானத்தின் சாளரத்தில் இருந்து சிறிது சிறிதாக மறையும் என் ஊரை பார்த்தபடி, நான் ஒரு வெளிநாட்டு பயணத்தை தொடங்கப் போகிறேன்...

ஆசைக்காக அல்ல... ஆடம்பரத்திற்காக அல்ல...
அம்மாவின் மருந்துச் செலவிற்காக...
தங்கையின் திருமணத்திற்காக வாங்கிய கடன்களின் வட்டிக்காக...
நாளை எழும்பப் போகும் எங்கள் வீட்டின் சுவர்களுக்காக...
இன்னும் பிறக்காத என் குழந்தையின் எதிர்காலத்திற்காக...
சின்ன வயதிலேயே அப்பா சென்றுவிட்டார்...
அவரின் தோளில் இருந்த பொறுப்புகளை எல்லாம் என் தோளில் சுமந்து நிற்கும் ஒரு சாதாரண மகன் நான்...

ஆனால்...
"நான் களைத்துவிட்டேன்" என்று சொல்லும் உரிமை கூட எனக்கு கிடைக்கவில்லை...
ஏனென்றால்...
இந்த வீட்டின் நம்பிக்கை என் சம்பளத்தில் தான் இருக்கிறது...
அம்மாவை நினைத்தால் மனம் உடைகிறது நிலவே...
நான் வெளியூர் செல்லும் நாளை நினைத்து அவள் சிரிக்கிறாள்...
ஆனால் அந்த சிரிப்பின் பின்னால் எத்தனை கண்ணீர் இருக்கிறது என்று நானும் அறிவேன்... நீயும் அறிவாய்...
"நல்லா சாப்பிடுப்பா..." என்று சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு தாயின் பயம் ஒளிந்திருக்கிறது...

என் மனைவி...
திருமணம் முடிந்து சில மாதங்களே ஆனது...
இப்போது அவள் கருவுற்றிருக்கிறாள்...
அவளின் அருகில் அமர்ந்து அவளின் கனவுகளை கேட்க வேண்டிய நேரத்தில்,
அவள் கைகளை பிடித்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நேரத்தில்,
அவள் சிரிப்பின் காரணமாக நான் இருக்க வேண்டிய நேரத்தில்,
நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருக்கப் போகிறேன்...
என் குழந்தை பிறக்கும் போது அதன் முதல் அழுகையை நான் கேட்க முடியாமல் போகலாம்...
அதன் முதல் நடை... அதன் முதல் வார்த்தை...
அனைத்தையும் தொலைபேசியின் சிறிய திரையில் தான் பார்க்க நேரிடலாம்...
ஆனால்...
இரண்டு வருடங்கள் கழித்து நான் திரும்பி வரும்போது,
"அப்பா..." என்று ஓடிவந்து என்னை கட்டிப்பிடிக்கும் அந்த ஒரு நொடியுக்காக,
இந்த இரண்டு வருடங்களின் தனிமையை நான் வாங்கிக் கொள்கிறேன்...

என் நண்பர்கள்...
என் கஷ்டத்தில் என் பக்கத்தில் நின்றவர்கள்...
என் சிரிப்பையும், என் தோல்விகளையும், என் கனவுகளையும் அறிந்தவர்கள்...
அவர்களையும் விட்டு செல்கிறேன்...

உலகம் சொல்வது...
"ஆண் என்றால் பலசாலி..."
ஆனால் உண்மையில்...
அவன் தினமும் உடைகிறான்...
அம்மாவை நினைத்து உடைகிறான்...
மனைவியை நினைத்து உடைகிறான்...
குழந்தையை நினைத்து உடைகிறான்...
நண்பர்களை நினைத்து உடைகிறான்...
ஆனால்...
அந்த உடைந்த சத்தத்தை யாரும் கேட்காதபடி சிரித்துக் கொண்டே வாழ்கிறான்...

உடம்பு சரியில்லாத நாளிலும்,
மருத்துவமனையின் நாற்காலியில் அமர்ந்தபடி,
"நான் நல்லா இருக்கேன் அம்மா..." என்று பொய் சொல்லும் மனிதன்...
பண்டிகை நாளில் அறை மூலையில் தனியாக அமர்ந்து,
குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை வீடியோ அழைப்பில் பார்த்து சிரிக்கும் மனிதன்...

உணவு சாப்பிட மனமில்லாத நாளிலும்,
"சாப்பிட்டாச்சு..." என்று சொல்லும் மனிதன்...
அவன் ஒரு வெளிநாட்டு தொழிலாளி மட்டும் அல்ல...
ஒரு குடும்பத்தின் மௌனமான தியாகம்...

நிலவே...
இன்று என் மனம் கனமாக இருக்கிறது...
ஆனால் நான் அழவில்லை...
ஏனென்றால்...
என் கண்ணீரை விட என் குடும்பத்தின் எதிர்காலம் பெரியது...
என் ஆசைகளை விட அவர்களின் சந்தோஷம் பெரியது...
நாளை நான் செல்கிறேன்...
பணத்திற்காக அல்ல...
என் குடும்பம் நிம்மதியாக சிரிக்க வேண்டும் என்பதற்காக...
என் அம்மாவின் முகத்தில் கவலை குறைய வேண்டும் என்பதற்காக...
என் மனைவியும் குழந்தையும் எதற்கும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக...

எனவே நிலவே...
இன்றிரவு உன்னிடம் விடைபெறுகிறேன்...
இந்த ஊரின் வானத்தில் உன்னை கடைசியாக பார்த்துக்கொள்கிறேன்...
இரண்டு வருடங்கள் கழித்து...
மீண்டும் இதே இடத்தில்,
இதே நிலவொளியில்,
என் கடன்கள் குறைந்திருக்கும்...
என் கனவுகள் நிறைவேறியிருக்கும்...
என் குழந்தை "அப்பா" என்று அழைக்கும்...
அந்த நாளில் மீண்டும் வந்து உன்னிடம் பேசுவேன்...

அதுவரை...
"சென்று வருகிறேன் நிலவே..."
ஒரு ஆணின் கண்ணீரை
உன் ஒளியில் மறைத்து வைத்து கொள்...
அவன் திரும்பி வரும் வரை...

Luminous 😇💜💚💛🧡💯🔥
20
General Videos / Re: ShyNiKhaa Video Status 📸
« Last post by ShyNiKhaa on June 02, 2026, 03:01:44 PM »
wife's Logic to tease😆

Pages: 1 [2] 3 4 ... 10