11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 390
« Last post by Thenmozhi on December 08, 2025, 10:33:09 PM »" இனியனும் இனியாளும் "
எதை வர்ணிப்பது் ?கிராமத்தின் எழிலயா இவர்கள் இருவரும் கொண்ட மாசற்ற காதலையா!!
என்றும் குறையாத கிராமத்தின் பசுமைப் போல இருந்த இவர்கள் காதல் ,திருமணம் என்னும் பந்தத்தில் இனிதாய் நுழைந்தது !!
காதல் என்னும் கீரிடத்தில் பதித்த வைராமாய் மழலை செல்வங்களையும் கடவுளிடம் தங்கள் காதலின் பரிசாய் பெற்றனர் !!
இனியன் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்து வந்தான்!
காட்டாற்றின் வெள்ளம் போல் மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் இல்லறத்தில் திடீரென வந்த வறட்சியாய் அவனின் குடிபழக்கம் !!
தங்களின் வளத்தை இழந்தனர் இருவரும் !!
எங்கு திரும்பினும் இருளாய் கஷ்டங்கள் இருவரையும் சூழ்ந்தது !!
தன் பொறுப்பை குடியால் மறந்தான் இனியன் !!
அவனின் பொறுப்பையும் தோளில் சுமக்க தொடங்கினாள் இனியாள்!
தினமும் பணிக்கு சென்று சிறிதளவேனும் வருமானம் ஈட்டினாள் இனியாள் !!
மதுவில் தன் மதியை மறந்த இனியன், மாசற்ற தங்கமாய் வாழ்ந்த இனியாளின் நடத்ததையில் கொண்டான் சந்தேகம் !!
அன்று ஞாயிற்றுக்கிழமை இனியாள் தென்பட்டாள் குங்குமப் பொட்டுடனும் பூவுடனும் புதுப்பொலிவாய் !
அன்றுதான் அவர்களின் இனிய திருமண நாள்!
அன்று குடும்பத்துடன் விருந்துண்டு மகிழ்ந்தான் இனியான்!
அங்கே ஒரு சத்தம் " டேய் மச்சான் வாடா பார்ட்டிக்கு போகலாம்" !
அவள் அழகிய வதனத்தைப் பார்த்த இனியன் போக மனமின்றி "டேய் மச்சான் இன்னைக்கு வேணாம்டா" !
இடைவிடாது சத்தமிட்ட நண்பனின் தொனியால் வீட்டை விட்டு போக தயாரானன் இனியன்!
இனியாளிடம் இன்று ஒருமுறை சென்று வருகிறேன் எனக் கூறி விடைபெற்று சென்றான் நண்பர்களுடன் !
இனியாள் அவனை பிரிய மனமின்றி தலையசைத்தாள்!
நண்பர்களாக சேர்ந்து மது அருந்திவிட்டு நீச்சலடிக்க சென்றனர் கடற்கரைக்கு!
நடுக்கடலில் இருந்து கரையை நோக்கி வந்த பேரலையில் அகப்பட்டான் இனியன்!
நடுக்கடலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டான் இனியன்!
நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை இனியனை!
இனியாளின் கடைசியாக பார்த்த வதனம் அவனின் கண்களில் காட்சியாய் வர கண்ணை மூடுகின்றான் இனியன்!
இனியனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த இனியாள் ,இமை மூடாமல் திகைத்து நின்றாள்!
இனியாளின் கண்களில் இருந்து கண்ணீர் சொரியாமல் ஏதோ ஒரு சிந்தனையில் நின்றாள் ஏக்கத்துடன் !
இனியாளின் கனவிலும் நினைவிலும் எப்படி இறந்திருப்பான் தன் காதல் கணவன் என்ற எண்ணங்கள்!
இனியாள் விதவை ஆகிவிட்டேன் என்று அழுவதா?குழந்தைகளுக்கு அப்பா எப்படி இறந்தார் என்று சொல்வதா?
எப்படி ஊரார் வன்சொல் கேட்பேன் என்று அழுவதா?
குழந்தைகளை எப்படி பாதுகாப்பேன் என்று அழுவதா?
அதுதான் எதுவும் சொல்ல முடியாமல் திகைத்து நிற்கின்றாள் இனியாள்!
நண்பர்களே குடி குடியை கெடுக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
நாசமாகின்றன குடியினால் இனியாள் போல் பல குடும்பங்கள்!

Recent Posts
