20
« Last post by RajKumar on June 06, 2026, 10:13:45 AM »
வணக்கம் FTC உறவுகளே,
நெஞ்சம் மறப்பதில்லை நினைவுகள் பேசும் நேரம் நிகழ்ச்சியின் எனது முதல் பதிவை பதிவிடுகிறேன்
என் அன்பு தங்கை Thooriga சகோதரியின் அன்பு வார்த்தைகளால்,
நிகழ்ச்சியின் இன்றைய தலைப்பு வெயிலோடு விளையாடி பார்த்த உடன் என் நினைவுக்கு வருவது பள்ளி பருவத்தில் நான் சைக்கிள் எடுத்து நண்பர்களுடன் சுற்றி திரிந்த காலம், அது என் வாழ்வின் அழியாத பசுமையான நினைவுகள்.
பள்ளிக்கூடம் போகும் வீட்டில் என் அப்பா தரும் 10 மற்றும் 20 பைசா வை
தினம் தோறும் சேர்த்து வார இறுதி நாட்களில் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் வாடகை சைக்கிள் எடுத்து சின்ன சின்ன சந்துகளில் சென்று வருவதை வழக்கமாக இருந்தது,
சிறு வயதில் என்னிடம் சைக்கிள் இல்லாமல் இருந்தால் வாடகை சைக்கிள் எடுத்து விளையாட்டுவேன், அப்போது அந்த நாட்களில் அரைமணி நேரத்திற்கு 50 பைசா ஒரு மணி நேரத்திற்கு 1 ருபாய் என சைக்கிள் வாடகை இருக்கும், அப்படி நண்பர்களுடன் இணைந்து சைக்கிள் போட்டி போட்டு கொண்டு ஓட்டுவது மகிழ்ச்சியாக இருந்தது ,
மணி யை பார்த்து கொண்டே சைக்கிள் ஒட்டுவோம்,சைக்கிள் ஒட்டிக்கொண்டு இருக்கும் போது கடைசி பத்து நிமிடம் ஐந்து நிமிடம் என் மனதில் நினைத்து கொண்டே சைக்கிள் பயணம் தொடரும் ,
மணி துளிகள் கரைந்து கொண்டே இருக்கும் போது என் ஆசைகள் அதிகாரித்து கொண்டே இருக்கும் கடைக்காரரிடம் சைக்கிள் விட மனம் இருக்காது, அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்து இருந்து சைக்கிள் பயணம் கொண்டேன், எப்போதும் சைக்கிள் விடும்போது 10 நிமிடங்கள் கழித்து கடைக்காரரிடம் விடுவதும் அவர் பதிலுக்கு அடுத்த வாரம் பத்து பைசா அதிகமாக கொடுத்தால் தான் சைக்கிள் கொடுப்பேன் என சொல்லுவதும் எல்லா வாரம் நடக்கும் நிகழ்வு அந்த நினைவுகளை இப்போது நின்னைத்தாலும் மகிழ்ச்சி தரும் நினைவுகள் , வெயில் மழை என பாராமல் பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் இணைந்து தெருக்களில் விளையாட்டியது இன்றும் பசுமையாக என் மனதில் வந்து செல்லுக்கிறது