11
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-010 (வெயிலோடு விளையாடி - நாம் மறந்த விளையாட்டுகள்)
« Last post by Sethu on June 05, 2026, 01:42:05 AM »ஹாய் நண்பர்களே! இந்த தலைப்பை பார்த்ததும் என்னோட கிராமத்து வாழ்க்கை அந்த பொக்கிஷம் என் மனசுக்குள்ள வந்துச்சு. அதுமட்டும் இல்லாமல் மறந்து போன கிராமத்து வாழ்க்கையை மீட்டெடுக்கும் ஒரு அற்புதமான தலைப்பாய் இருக்கு. நான் சிறுவயதாய் இருக்கிறப்போ இப்போ இருக்கிற சிறுவர்களைப் போல மொபைல் கம்ப்யூட்டர்ல எங்க விளையாட்டு அடங்கிராது. வெயில் தூசி பாராமல் ஓடி ஆடி விளையாடும் விளையாட்டுகளை அதிகமா விளையாண்டோம்.
இதுமாதிரி விளையாடுவதினால் உடல் ஆரோக்கியமும் ,விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் எங்கள் சிறுவயதில் நிறைய இருந்துச்சு. வெயிலோடு விளையாடி மறந்த விளையாட்டுனு பார்த்தா என் நினைவுக்கு வருவது ,அந்த 12 மணி வெயிலில் எங்களோட கிராமத்து கிணற்றில் நீச்சல் அடிச்சு ஓடி புடிச்சு விளையாண்ட விளையாட்டு தான். நான் பயின்ற ஸ்கூல் பக்கத்திலேயே ஒரு கிணறு இருக்கு. விடுமுறை நாள் ஃபுல்லா அந்த கிணற்றில போய் தான் முங்கி,நீச்சல் அடிச்சு ஓடி புடிச்சு விளையாடுவோம்.
அந்த விளையாட்டோட விதிமுறை என்னவென்றால் பிடிக்க வரும் நபர் தண்ணியில மூழ்கி இருக்கப்ப தலையை தொடக்கூடாது. தண்ணீரில் வெளியே வந்தவுடன் தலையை தொட்டால் தொட்ட நபர் அவுட். பள்ளி நேரங்களில் உணவு இடைவெளியின் போது நானும், எனது நண்பர்களும் ஆசிரியருக்கு தெரியாமல் அந்த கிணற்றுக்கு போய் விளையாடிட்டு வருவோம்.
ஒரு நாள் ஆசிரியர் எங்களை கவனிச்சு என்னடா எல்லோருடைய தலையும் ஈரமா இருக்கு எங்க போயிட்டு வாரீங்க? என்று கேட்க, நாங்க வெயில் தாங்க முடியல பக்கத்து கிணற்றில குளிச்சிட்டு வாரோம் என்று, உண்மை அறிந்த ஆசிரியர் என்னடா சொல்றீங்க என எங்கள் அஞ்சு பேரையும் தண்டித்தார். அந்த அடி வாங்குன நிகழ்வு இன்னும் என் மனசுல பதிந்திருக்கு.
இந்த காலத்துல எங்க கிராமத்துல எந்த கிணத்துலயும் தண்ணியும் இல்ல. இந்த மாதிரி விளையாட்டை யாரும் விளையாடுவதும் இல்லை என்பது ரொம்ப வேதனைக்குரிய விடயமாக இருக்கு. இது மட்டும் இல்ல இன்னும் நிறைய விளையாட்டுகள் இருக்கு.
கில்லி விளையாட்டை நாங்க எங்க கிராமத்துல கிட்டினு சொல்லுவோம். ஒரு மரக்கட்டை குச்சையை செதுக்கி குறி பார்த்து அடிக்கிறது. பின்பு ஓடி பிடிப்பது அப்புறம் பச்சை குதிரை தாண்டுவது. ஒருவர் குனிந்து கொள்ள மற்றொருவர் முதுகின் மேல தாண்டுவது அப்புறம் நொண்டி ஆடுவது கட்டங்களை போட்டுக்கொண்டு ஒரு காலை மடக்கிக் கொண்டு ஆடுவது, அப்புறம் கோலி குண்டு ஆடுவது தரையில் பள்ளத்தை தோண்டி கோலி குண்டு அதில் போட்டு ஒரு குண்டை குறி பார்த்து அடிப்பது இந்த மாதிரி விளையாட்டுகள் விளையாடுவதற்கு பெரிய உபகாரணங்கள் தேவையில்லை.
மர நிழல் குளங்கள் இந்த மாதிரி இடத்துல மழை ,வெயில் பார்க்காமல் விளையாண்டு மகிழ்ந்தோம். அப்புறம் பார்த்தீங்கன்னா பனை மரத்தின் மரத்தில் கிடைக்கும் நுங்கை சாப்பிட்டுவிட்டு நுங்கு வண்டி செய்து வெயில் என்று கூட பாராமல் தெருத்தெருவாக ஓட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்த காலமும் அதுவே. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தினால் வீடியோ கேம்கள் தொலைக்காட்சி போன்றவைகளுக்கு நாம் அடிமையாகி விட்டோம். நமது பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து தொலைபேசி கேம்களுக்கு அடிமையாகி இருக்கிறோம். கம்ப்யூட்டர் மயமாக இருக்கிற இந்த காலகட்டத்தில் நான் மறந்த பாரம்பரிய விளையாட்டுகளை வியர்வையும் ,புன்னகையும் நிறைந்த நம் சிறுவயது விளையாட்டுகளை மீண்டும் விளையாட வேண்டியது அவசியமாகி உள்ளது.
நமது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அந்த கிராமத்து விளையாட்டுகளை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விளையாட வைக்க வேண்டும் என்பது எனது ஆசை நன்றி வணக்கம் நண்பர்களே....
இதுமாதிரி விளையாடுவதினால் உடல் ஆரோக்கியமும் ,விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் எங்கள் சிறுவயதில் நிறைய இருந்துச்சு. வெயிலோடு விளையாடி மறந்த விளையாட்டுனு பார்த்தா என் நினைவுக்கு வருவது ,அந்த 12 மணி வெயிலில் எங்களோட கிராமத்து கிணற்றில் நீச்சல் அடிச்சு ஓடி புடிச்சு விளையாண்ட விளையாட்டு தான். நான் பயின்ற ஸ்கூல் பக்கத்திலேயே ஒரு கிணறு இருக்கு. விடுமுறை நாள் ஃபுல்லா அந்த கிணற்றில போய் தான் முங்கி,நீச்சல் அடிச்சு ஓடி புடிச்சு விளையாடுவோம்.
அந்த விளையாட்டோட விதிமுறை என்னவென்றால் பிடிக்க வரும் நபர் தண்ணியில மூழ்கி இருக்கப்ப தலையை தொடக்கூடாது. தண்ணீரில் வெளியே வந்தவுடன் தலையை தொட்டால் தொட்ட நபர் அவுட். பள்ளி நேரங்களில் உணவு இடைவெளியின் போது நானும், எனது நண்பர்களும் ஆசிரியருக்கு தெரியாமல் அந்த கிணற்றுக்கு போய் விளையாடிட்டு வருவோம்.
ஒரு நாள் ஆசிரியர் எங்களை கவனிச்சு என்னடா எல்லோருடைய தலையும் ஈரமா இருக்கு எங்க போயிட்டு வாரீங்க? என்று கேட்க, நாங்க வெயில் தாங்க முடியல பக்கத்து கிணற்றில குளிச்சிட்டு வாரோம் என்று, உண்மை அறிந்த ஆசிரியர் என்னடா சொல்றீங்க என எங்கள் அஞ்சு பேரையும் தண்டித்தார். அந்த அடி வாங்குன நிகழ்வு இன்னும் என் மனசுல பதிந்திருக்கு.
இந்த காலத்துல எங்க கிராமத்துல எந்த கிணத்துலயும் தண்ணியும் இல்ல. இந்த மாதிரி விளையாட்டை யாரும் விளையாடுவதும் இல்லை என்பது ரொம்ப வேதனைக்குரிய விடயமாக இருக்கு. இது மட்டும் இல்ல இன்னும் நிறைய விளையாட்டுகள் இருக்கு.
கில்லி விளையாட்டை நாங்க எங்க கிராமத்துல கிட்டினு சொல்லுவோம். ஒரு மரக்கட்டை குச்சையை செதுக்கி குறி பார்த்து அடிக்கிறது. பின்பு ஓடி பிடிப்பது அப்புறம் பச்சை குதிரை தாண்டுவது. ஒருவர் குனிந்து கொள்ள மற்றொருவர் முதுகின் மேல தாண்டுவது அப்புறம் நொண்டி ஆடுவது கட்டங்களை போட்டுக்கொண்டு ஒரு காலை மடக்கிக் கொண்டு ஆடுவது, அப்புறம் கோலி குண்டு ஆடுவது தரையில் பள்ளத்தை தோண்டி கோலி குண்டு அதில் போட்டு ஒரு குண்டை குறி பார்த்து அடிப்பது இந்த மாதிரி விளையாட்டுகள் விளையாடுவதற்கு பெரிய உபகாரணங்கள் தேவையில்லை.
மர நிழல் குளங்கள் இந்த மாதிரி இடத்துல மழை ,வெயில் பார்க்காமல் விளையாண்டு மகிழ்ந்தோம். அப்புறம் பார்த்தீங்கன்னா பனை மரத்தின் மரத்தில் கிடைக்கும் நுங்கை சாப்பிட்டுவிட்டு நுங்கு வண்டி செய்து வெயில் என்று கூட பாராமல் தெருத்தெருவாக ஓட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்த காலமும் அதுவே. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தினால் வீடியோ கேம்கள் தொலைக்காட்சி போன்றவைகளுக்கு நாம் அடிமையாகி விட்டோம். நமது பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து தொலைபேசி கேம்களுக்கு அடிமையாகி இருக்கிறோம். கம்ப்யூட்டர் மயமாக இருக்கிற இந்த காலகட்டத்தில் நான் மறந்த பாரம்பரிய விளையாட்டுகளை வியர்வையும் ,புன்னகையும் நிறைந்த நம் சிறுவயது விளையாட்டுகளை மீண்டும் விளையாட வேண்டியது அவசியமாகி உள்ளது.
நமது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அந்த கிராமத்து விளையாட்டுகளை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விளையாட வைக்க வேண்டும் என்பது எனது ஆசை நன்றி வணக்கம் நண்பர்களே....

Recent Posts


