11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 409 🆕
« Last post by Thenmozhi on July 13, 2026, 10:19:39 PM » "அம்மாவின் அரவணைப்பில் நான்"
உலகின் முதல் சொர்க்கம் - என்
"அம்மாவின் அரவணைப்பே!"
அம்மாவின் நெற்றியில்
மிளிரும் குங்குமம்,
காலைச் சூரியனின்
சிவந்த கதிர்களைப் போல
என் வாழ்வில் விதைக்கிறது
தன்னம்பிக்கையை..
நிலவின் மென்மையும்
விண்மீன்களின் அழகும்
ஒன்றாகக் கலந்திருக்கும்
அம்மாவின் மூக்குத்தி
சிந்தும் ஒளியில்....
அம்மாவின் கைகளில்
குலுங்கும் வளையல்கள்
எனக்காக இசைக்கும்
அன்பின் சங்கீதம்...
அச்சமும், கவலையும்
எங்கோ மறைந்துவிடும்
அந்த ஒலி கேட்டாலே...
அம்மாவின் நீண்ட கரிய கூந்தல்,
என் கனவுகளின் மேகம்...
அது என் கன்னத்தை வருடிய
ஒவ்வொரு நொடியும்
என் மனதில் சொர்க்கம் ...
அம்மா அணிந்திருக்கும் சேலை,
வெறும் ஆடை அல்ல
என்னை அரவணைக்கும்
அன்பின் வானவில்...
சேலையின் முந்தானை
என் சிறுவயதின்
பாதுகாப்புக் கோட்டை!
குழந்தையாக நான் அழுதபோது,
என்னை மெதுவாக தூக்கி,
தன் தோளில் சாய்த்துக் கொண்டு,
இனிய தாலாட்டு பாடிய
அந்த நொடிகள்...
என் வாழ்வின் பொக்கிஷங்கள்!
அவளின் குரலில் ஒலித்த
ஒவ்வொரு ராகமும்
என் இதயத்தில் என்றும்
அழியாத நினைவுகள்....
அம்மாவின் தோளில்
சாய்ந்தவுடன் உலகத்தின்
எல்லா சுமைகளும்
பனித்துளிபோல் கரைந்து
விடுகின்றன எனக்கு....
நான் விழுந்த போதெல்லாம்
கை நீட்டி எழுப்பியவள் அம்மா!
நான் தோற்ற போதெல்லாம்
"மீண்டும் முயற்சி செய்" என்று
துணிவை விதைத்தவள் அம்மா!
என் கண்ணீரை தன் சிரிப்பால்
துடைத்தவள் அம்மா!
என் வெற்றியை தன்
வெற்றியாகக் கொண்டாடியவள்!
இறைவன் எங்கும்
இருக்க முடியாததால்
அம்மாவை படைத்திருக்கிறான்
என்ற உண்மையை
உணர்கிறேன் ஒவ்வொரு நாளும் !
இந்த உலகத்தை விட்டு ஒருநாள்
நான் விலகினாலும்,
உன் அன்பு மட்டும்
என்றும் என் இதயத்தில்
நிலைத்திருக்கும் அம்மா !
இன்று நான் வளர்ந்துவிட்டேன்
உன் கைகள் தொட்ட
பாதையை விட்டு
தொலைவில் நடந்தாலும்,
என் மனம் இன்னும் உறங்குகிறது
உன் சேலையின் நிழலில்தான்!
என் வாழ்வின் முதல் தெய்வம்,
முதல் ஆசான்,முதல் தோழி
என்றென்றும் என்
உயிரின் அழியாத கவிதை
என் குழந்தைப் பருவத்தின்
உயிரோவியம் – என் அம்மா!
உலகின் முதல் சொர்க்கம் - என்
"அம்மாவின் அரவணைப்பே!"
அம்மாவின் நெற்றியில்
மிளிரும் குங்குமம்,
காலைச் சூரியனின்
சிவந்த கதிர்களைப் போல
என் வாழ்வில் விதைக்கிறது
தன்னம்பிக்கையை..
நிலவின் மென்மையும்
விண்மீன்களின் அழகும்
ஒன்றாகக் கலந்திருக்கும்
அம்மாவின் மூக்குத்தி
சிந்தும் ஒளியில்....
அம்மாவின் கைகளில்
குலுங்கும் வளையல்கள்
எனக்காக இசைக்கும்
அன்பின் சங்கீதம்...
அச்சமும், கவலையும்
எங்கோ மறைந்துவிடும்
அந்த ஒலி கேட்டாலே...
அம்மாவின் நீண்ட கரிய கூந்தல்,
என் கனவுகளின் மேகம்...
அது என் கன்னத்தை வருடிய
ஒவ்வொரு நொடியும்
என் மனதில் சொர்க்கம் ...
அம்மா அணிந்திருக்கும் சேலை,
வெறும் ஆடை அல்ல
என்னை அரவணைக்கும்
அன்பின் வானவில்...
சேலையின் முந்தானை
என் சிறுவயதின்
பாதுகாப்புக் கோட்டை!
குழந்தையாக நான் அழுதபோது,
என்னை மெதுவாக தூக்கி,
தன் தோளில் சாய்த்துக் கொண்டு,
இனிய தாலாட்டு பாடிய
அந்த நொடிகள்...
என் வாழ்வின் பொக்கிஷங்கள்!
அவளின் குரலில் ஒலித்த
ஒவ்வொரு ராகமும்
என் இதயத்தில் என்றும்
அழியாத நினைவுகள்....
அம்மாவின் தோளில்
சாய்ந்தவுடன் உலகத்தின்
எல்லா சுமைகளும்
பனித்துளிபோல் கரைந்து
விடுகின்றன எனக்கு....
நான் விழுந்த போதெல்லாம்
கை நீட்டி எழுப்பியவள் அம்மா!
நான் தோற்ற போதெல்லாம்
"மீண்டும் முயற்சி செய்" என்று
துணிவை விதைத்தவள் அம்மா!
என் கண்ணீரை தன் சிரிப்பால்
துடைத்தவள் அம்மா!
என் வெற்றியை தன்
வெற்றியாகக் கொண்டாடியவள்!
இறைவன் எங்கும்
இருக்க முடியாததால்
அம்மாவை படைத்திருக்கிறான்
என்ற உண்மையை
உணர்கிறேன் ஒவ்வொரு நாளும் !
இந்த உலகத்தை விட்டு ஒருநாள்
நான் விலகினாலும்,
உன் அன்பு மட்டும்
என்றும் என் இதயத்தில்
நிலைத்திருக்கும் அம்மா !
இன்று நான் வளர்ந்துவிட்டேன்
உன் கைகள் தொட்ட
பாதையை விட்டு
தொலைவில் நடந்தாலும்,
என் மனம் இன்னும் உறங்குகிறது
உன் சேலையின் நிழலில்தான்!
என் வாழ்வின் முதல் தெய்வம்,
முதல் ஆசான்,முதல் தோழி
என்றென்றும் என்
உயிரின் அழியாத கவிதை
என் குழந்தைப் பருவத்தின்
உயிரோவியம் – என் அம்மா!

Recent Posts
