Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11


மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பர்கள் என்று, தேவையற்று நாமே நமக்குள் நினைத்துக் கொள்ளும் ஒரு கண்ணோட்டம் மிகவும் தவறானது.

நம்மைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை விட, மற்றவர்கள் கண்ணோட்டத்திற்கு, நாம் பெரிதாக மதிப்பளிக்கத் தொடங்கும் போதே ,நாம் மனதளவில் நம்மைத் தாழ்த்திக் கொள்ளத் துவங்கி விடுகின்றோம்.

நாம் செய்யும் செயல்களையும், அதன் விளைவுகளையும் மறந்து, அடுத்தவர்களின் எண்ணத்திற்கு அதிக மதிப்புக் கொடுப்பதால், நம் செயல்கள் முழுதாக நடைபெறாமல், அதனால் மனம் புழுங்குவது வழக்கமாகி விட்டது.

முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியை இந்த எண்ணம் சாகடித்து விடும். முளையிலேயே முயற்சி சாகடிக்கப்படுவதால், முன்னேற்றம் எங்கிருந்து வரும். இந்த அச்சத்திலேயே பலர் மற்ற தகுதிகளை, திறமைகளைக் கைவிட்டு விடுகின்றனர். இந்த அச்சம் இருந்தால், படைப்புத் திறனோ, முன்னேற வேண்டும் என்கிற உந்துதலோ இருக்காது.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாது; புரியாது. முதலில், இந்த எண்ணத்திலிருந்து வெளியில் வர வேண்டும். இப்படிப்பட்ட எண்ணத்தில் இருப்பது, இருளில் இருப்பதற்குச் சமம்.

வெளியில் வந்து விட வேண்டும் என்று முனைவது முதல் படி,. மற்ற தடைகளை வரிசையாகக் களைய வேண்டும்.

மனதில் ஆழப் பதிந்துள்ள எதிர்மறை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, அச்சம், தயக்கம், ஒப்பீடு என்று அனைத்தில் இருந்தும் வெளிவர முயற்சி செய்ய வேண்டும்.

வெற்றியை நோக்கி செல்லும் பயணத்தில், பிறர் கருத்துகளையும், மன நிறைவுகளையும் நிறைவுபடுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

பிறர் உங்களைக் குறை கூறும் போது, சோர்ந்து போகாதீர்கள்; பிறர் இப்படி இருக்கின்றனரே என்று, உள்ளுக்குள் பொறுமாதீர்கள். இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள்; தீர்வு காணுங்கள்.

இந்த உலகம் உங்களைப் பார்க்கிற பார்வை ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே தான் இருக்கும்.

சிலருக்கு, இன்று உங்களைப் பிடிக்கும். நாளையே அவர்களுக்கு உங்களைப் பிடிக்காமலும் போகலாம்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது.
12

பேஸ்புக் அல்லது மைஸ்பேஸ் அல்லது பொதுவாக எஸ்.என்.எஸ் போன்ற குறிப்பிட்ட எஸ்.என்.எஸ்களைப் பெண்கள் அதிகம் பயன்படுத்துவதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டில், ஆன்லைனில் ஆண்கள் 73% மற்றும் ஆன்லைனில் பெண்கள் 80% சமூக வலைப்பின்னல் தளங்களைப் பயன்படுத்தினர். ... Pinterest, Facebook மற்றும் Instagram அதிக பெண்களை ஈர்க்கின்றன..

சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் பெண்கள் முதன்மையாக கவனிக்க வேண்டியது தங்களுடைய பாதுகாப்பை மட்டுமே. இந்த பாதுகாப்பு முக்கியத்துவம்தான் உங்களை பல சிக்கல்களிலிருந்து பாதுகாக்கும்.

பெண்கள் எப்போதுமே முகநூலில் அறிமுகமில்லாத புதிய நண்பர்களுடன் பழகும் முறையிலும் , தகவல்கள் பரிமாறும் முறையிலும் அளவோடு இருந்துகொள்ள வேண்டும். வரம்பு மீறினால் நீங்கள் மட்டுமல்லாது உங்கள் குடும்பமும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.

சமூக வலைத்தளங்களில் நீங்கள் ஒரு விடயத்தை பகிரும் போது ஒன்றுக்கு நிறைய தடவை சிந்தித்து பகிருங்கள். நீங்கள் பதிவிடும் பதிவுகளை வைத்து உங்கள் மனநிலையை அறிந்து கொள்ள முடியும். அத்தோடு அதற்கேற்ப மற்றவர்கள் உங்களுடன் புதிய அறிமுகமில்லாதவர்கள் நட்பு வைக்க முனைவார்கள். உங்கள் தொடர்பான சில ரகசியம் பேணத்தக்க விபரங்களை வலைத்தளங்களில் மற்றவர்கள் பார்வையிடும் வண்ணம் செயற்படாதீர்கள்.

பெண்கள் நீங்கள் முக்கியமாக புகைப்படங்களை பதிவிடும் போது உங்கள் ஆடைகளில் கவனம் செலுத்துங்கள். இது உங்களுக்கும் உங்கள் எதிர்காலத்திற்கும் நன்மை தரும் குறிப்பிட்ட நேரம் வரை சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிட பழகிடுங்கள்.
13


நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் காலை உணவிலிருந்தே கிடைக்கிறது. ஆனால் உலக அளவில், காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. 'உடல் எடையைக் குறைக்கிறேன்' என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். 'நேரமில்லை' என்கிறார்கள் சிலர்.

காலை உணவைத் தவிர்த்தவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம் இயல்பைவிட அதிகமாக இருந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 'காலையில் தவறாமல் சாப்பிடுகிறீர்களா' என்பதைக் கவனித்தால், காலை உணவு சாப்பிடுபவர்களைவிட, உணவைத் தவிர்ப்பவர்களுக்குதான் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது, குளுக்கோஸ்-இன்சுலின் சார்ந்த செயல்பாடுகள் குறையும். அதன் பிறகு மதிய உணவின் மூலம் கிடைத்த அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகமாக இன்சுலின் சுரந்து, தொடர்ந்து மாற்றங்கள் நிகழும். சில மாதங்கள் கழித்து ’இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ ஏற்பட்டு, சர்க்கரை நோயாளியாக நாமும் மாறிவிடுவோம்.

காலை உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் ’டோபமைன்’ மற்றும் செரடோனின் ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை.

காலை உணவை மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பில் உள்ள லைஸோசைம் (கிருமிநாசினி செய்கையுடையது), வாய்ப் பகுதியில் மையமிட்டுள்ள நுண்கிருமிகளை அழிக்கும். அதுவே உணவைச் சாப்பிடாவிட்டால், கிருமிநாசினியின் ஆதரவின்றி, வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கும் செரிமானச் சுரப்பிகளை உணவு ஆசுவாசப்படுத்தாதபோது, வயிற்றுத் தசைகளில் படர்ந்திருக்கும் மென்படலத்தில் புண்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் உணவு எதுக்களித்தல், வயிற்றுவலி, செரிமானத் தொந்தரவுகள் உண்டாகும்.

முந்தைய நாள் இரவு முதல், அடுத்த நாள் மதியம் வரை நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் நடக்கும் அனைத்து வளர்சிதை மாற்றங்களிலும் பாதிப்புகள் ஏற்படும். காலையில் சாப்பிடாமல் தவிர்க்கும்போது, செயல்படுவதற்குத் தேவைப்படும் சக்தி கிடைக்காது. உணவின் மூலம் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் சோர்வும், மந்தமான நிலையும் நம்மைப் பற்றிக்கொள்ளும்.
14
SMS & QUOTES / Re: 𝖇𝖚𝖙 𝕷𝖎𝖋𝖊 𝖌𝖔𝖊𝖘 𝖔𝖓✍
« Last post by MysteRy on June 24, 2026, 11:11:56 AM »
15
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on June 24, 2026, 10:03:14 AM »
16
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on June 24, 2026, 05:00:13 AM »
18
காற்றில்லா தேசத்தில் வாழவும் முடியுமோ?
காசில்லா வாழ்வில் நல் வழியும் கிடைக்குமோ?
வெறும் அன்பை மட்டும் வச்சு வயிறு நிறையாது,
காசில்லா மனிதனை உலகம் அறியாது!

தாய்ப்பாலுக்கு அடுத்தபடி தேவையிங்கு காசு,
அதுதான் தீர்மானிக்கும் நம்முடைய மூச்சு!
மருத்துவ மனை வாசல் மிதிக்க வேண்டும் என்றால்,
பணப்பையின் கனம் தானே உயிரைக் காக்கும் அங்கே?

கௌரவமும் மரியாதையும் காசுக்குத்தான் உண்டு,
பணமிருந்தால் ஊருக்குள் சொல்வாக்கும் உண்டு!
இல்லையென்றால் நிழல்கூட நம்மை விட்டு விலகும்,
வறுமையின் பிடியினில் வாழ்வே நரகமாகும்!

ஆசைகள் யாவையுமே காகிதத்தில் அடங்கும்,
காசில்லை என்றால் நம் கனவுகளும் முடங்கும்!
உறவுகள் நம்மை மதிக்க உழைப்பு மிக வேண்டும்,
நம் தேவையை நாம் முடிக்க நாணயம் தான் வேண்டும்!

காசுக்கும் குணத்துக்கும் எப்போதும் போர்தான்,
இருந்தாலும் வாழ வழி காட்டுவது காசுதான்!
ஆதிக்கத்தை எதிர்த்தாலும் அதன் தேவை குறையாது,
பணத்தின் பலமில்லாமல் ஒரு அடியும் நகர முடியாது!

ஆனாலும்...
காசுக்கு அடிமையாகி கரம் கட்டி நிற்காதே,
சங்கிலிப் பூட்டுகளுக்குள் உன் ஆன்மாவை விற்காதே!
பணம் என்பது வெறும் வாழ்க்கைக்கான துடுப்புத்தான்,
ஆனால் அன்பு ஒன்று  தான் நம்மை வாழ வைக்கும் அச்சாணி!!

விலைமதிப்பில்லா குணமே என்றும் வெல்லும்,
காசின் ஆதிக்கத்தை மனிதநேயம் வென்றே தீரும்!
19

Happy Birthday Mr. KILLIVALAVAN





20
SMS & QUOTES / Re: 𝖇𝖚𝖙 𝕷𝖎𝖋𝖊 𝖌𝖔𝖊𝖘 𝖔𝖓✍
« Last post by MysteRy on June 23, 2026, 04:57:59 PM »
Pages: 1 [2] 3 4 ... 10