Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
_*எல்லோருடைய இதயங்களும் ஒரே அளவில் தான் இருக்கிறது, ஆனால் எல்லோர் இதயங்களிலும் கருணையும், மனிதநேயமும் தான் ஒரே அளவில் இருப்பதில்லை,*_

_நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே எனப் புலம்பாமல் நம்மை இவ்வளவுதான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகிவிடுவதே சிறப்பான பதிலடியாகும்._

_*நாம் தொலைந்தால்*_ _*தேடும் அளவிற்கு*_ _*இல்லாவிட்டாலும்,*_ _*நம்மைப் பார்த்து யாரும் ஒளிந்து கொள்ளாத*_
_*அளவிற்கு ஒரு*_ _*வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும்.*_

_தொலைநோக்குச் சிந்தனை, எதிலும் நேர்நிலையான பார்வை, விடாமுயற்சி, உழைப்பின் மீதான நம்பிக்கை, எந்த நேரத்திலும் எதற்காகவும் துவண்டு போகாத மனோதைரியம், குழப்பம் இல்லாமல் முடிவுகளை எடுக்கும் திறன், மற்றவர் கருத்துக்கும் மதிப்பளித்துக் கேட்கும் மனப்பான்மை... இவையனைத்தும் யாரிடம் இருக்கிறதோ அவரே வெற்றியாளர்._

_*வெற்றியாளரின் வாழ்க்கை வரலாற்றைப் பாருங்கள். மேலே குறிப்பிட்ட அத்தனை விசயங்களையும் அவர்கள் கடைபிடித்திருப்பார்கள். வெற்றியாளராவது என்பது மூன்று நிமிடத்தில் ஒரே பாடலில் பணக்காரர் ஆகும் திரைப்படம் போன்றதல்ல.*_
_*பல நாள், பல போராட்டங்களைச் சந்தித்து நல்ல அனுபவங்களை*_
_*கற்றுக் கொண்டால்தான்*_
_*வெற்றிபெற முடியும்.*_

_எவ்வளவு கடுமையாக உழைக்கிறீர்கள் என்பதைச் சொல்லாதீர்கள். எவ்வளவு சாதித்தீர்கள் என்று சொல்லுங்கள் என்கிறார் ஜேம்ஸ் லிங்க் என்ற அறிஞர். எனவே நாம் எவ்வளவு உழைத்தோம் என்பதைவிட, எவ்வளவு சாதித்தோம். ஒரு சாதனையாளராய் வெற்றியாளராய் இருக்கிறோம் என்பதே முக்கியம்._

_*நான் எனக்கு மட்டும் அது கிடைத்திருந்தால் நல்ல வாய்ப்பு எனக்கு வாய்த்திருந்தால், நானும் ஜெயித்திருப்பேன். என்ன செய்வது கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று புலம்பும் சிலரை நாம் பார்த்திருப்போம். இவர்கள் இப்படி சாக்குபோக்கு சொல்லியே தோற்றுப் போகிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் தங்களின் அடையாளத்தையும் தொலைத்து விடுகிறார்கள்.*_
12
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on July 04, 2026, 10:19:19 AM »
13

வழியில் கண்ட அழகு...
வழியில் நடந்தேன்... வாழ்க்கையை நினைத்தபடி...
அப்போது, ஒரு சிறிய பறவை அமைதியாக மண்ணைத் தொட்டு நடந்தது.
அது எனக்குச் சொல்லாமல் சொன்னது...

"பறக்கத் தெரிந்தவனும், எப்போது தரையில் நடக்க வேண்டும் என்பதை அறிவான்."

அவசரமாக ஓடும் உலகத்தில், அமைதியாக வாழ்வதும் ஒரு கலை.
சிறகுகள் இருந்தும் ஆணவம் இல்லை... சுதந்திரம் இருந்தும் ஆர்ப்பாட்டம் இல்லை...

இயற்கை தினமும் பாடம் நடத்துகிறது... அதை ரசிக்க ஒரு மனம் இருந்தால் போதும்.

"வழியில் கண்ட அந்தப் பறவை...
சில நொடிகள் மட்டுமே என் கண்களில் இருந்தது;
ஆனால் அது கற்றுக் கொடுத்த அமைதி,
என்றும் என் மனதில் இருக்கும்."



14

இன்று எனக்கு திடீரென்று Durian சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

அதனால்தான், ரெடியாக பேக் செய்து வைத்திருந்த Durian பழத்தை வாங்கினேன்.

எனக்கு முழு Durian வாங்கி அதைத் திறக்கத் தெரியாது. அதனால் ஆசை வந்தால் இப்படி ரெடியாக பேக் செய்து வைத்திருப்பதை வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.

ஆனால், ஒரு விஷயம் சொல்லணும்...

யாராவது முதல் முறையாக Durian சாப்பிட நினைத்தால், இப்படி ரெடியாக பேக் செய்ததை வாங்காதீர்கள். இதன் சுவையும் மணமும் கொஞ்சம் குறைந்திருக்கும்.

புதிதாக (Fresh) பழத்தை வாங்கி, அப்போதே திறந்து சாப்பிட்டால்தான் Durian-ன் உண்மையான சுவையையும் கிரீமியான பதத்தையும் முழுமையாக ரசிக்க முடியும்.

சில பழங்கள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் Durian மட்டும் சரியான நேரத்தில் கிடைத்தால் தவறவிடாதீர்கள்!

உங்களுக்கு Durian பிடிக்குமா? ❤️ இல்லை அதன் வாசனைக்கே ஓடிடுவீங்களா? 😄


15
SMS & QUOTES / Re: 𝖇𝖚𝖙 𝕷𝖎𝖋𝖊 𝖌𝖔𝖊𝖘 𝖔𝖓✍
« Last post by MysteRy on July 04, 2026, 06:18:09 AM »
16
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on July 04, 2026, 06:04:14 AM »
17
General Videos / Re: Sam Odu Vilayadu Season 5 Episode 7
« Last post by MysteRy on July 03, 2026, 07:58:39 PM »
18

"பசிக்குதுன்னு சொன்னார்... ஆனால் பசி வயிற்றுக்கில்லை!"





நான் வேலை செய்யும் இடத்தில் நடந்த ஒரு சம்பவம் இது.

ஒரு நாள் மதிய நேரத்தில், இரண்டு தமிழ் உணவகங்களில் ஒன்றில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு குடிபோதையில் இருந்தவர் என் மேசை அருகே வந்து, "எனக்கு ரொம்ப பசிக்கிறது... சாப்பாடு வாங்க பணம் இல்லை..." என்று கேட்டார்.

அவருடைய வார்த்தைகளைக் கேட்டதும் மனம் கேட்கவில்லை. உடனே சில பணத்தை அவரிடம் கொடுத்து, "போய் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கள்" என்று சொன்னேன்.

ஆனால் அடுத்த நிமிடமே அவர் அந்தப் பணத்தில் பீர், சிகரெட் வாங்கக் கேட்டதைப் பார்த்ததும் எனக்குள் இருந்த கருணை கோபமாக மாறிவிட்டது.

உடனே கவுண்டருக்குச் சென்று, நான் கொடுத்த பணத்தை அவரிடமிருந்து திரும்பப் பெற்றேன். அவரை நன்றாகக் கண்டித்தேன். "பசி என்று பொய் சொல்லி யாருடைய இரக்கத்தையும் ஏமாற்றாதீர்கள். உண்மையில் பசித்தால் உணவைக் கேளுங்கள்; மது, சிகரெட்டுக்காக அல்ல," என்று புத்திமதியும் சொன்னேன்.

கோபத்தில் பாதி சாப்பாட்டையே விட்டுவிட்டு வெளியே வந்தேன்.

ஆனால் சில அடிகள் நடந்த பிறகு மனசாட்சி என்னை விடவில்லை.

அவர் செய்தது தவறு. அதற்காக அவருடைய பசியும் உண்மையாக இருக்கக்கூடாதா என்ற எண்ணம் தோன்றியது.

மீண்டும் அந்த உணவகத்திற்குச் சென்று, உணவக உரிமையாளரிடம், "அவருக்கு ஒரு சாப்பாடு மட்டும் கொடுத்து அனுப்புங்கள். இதோ அதற்கான பணம்," என்று சொல்லிவிட்டு அமைதியாக அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அன்று எனக்குப் புரிந்தது...

இரக்கம் என்பது ஏமாளித்தனம் அல்ல. அதே நேரத்தில், கோபம் என்பது மனிதநேயத்தை இழப்பதும் அல்ல. தவறைத் தட்டிக்கேட்கலாம்; ஆனால் பசியைத் தண்டிக்கக் கூடாது.
19

"வெற்றிக்காக ஓடிய நான்... ஒரு நாள் மயங்கி விழுந்தேன்!"
 


நான் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை. பள்ளியில் நடந்த எந்த ஓட்டப்பந்தயமாக இருந்தாலும், முதல் இடம் என்றால் அனைவரின் நினைவிலும் என் பெயர்தான். ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும்,"இந்தப் போட்டியிலும் இவள்தான் ஜெயிப்பாள்..."என்று என் ஆசிரியர்கள் பெருமையுடன் கூறுவார்கள். அந்த நம்பிக்கையே எனக்கு மிகப்பெரிய பலம்.

ஆனால்... அந்த ஒரு நாள் மட்டும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.

போட்டி நடந்த அன்று எனக்கு கடுமையான காய்ச்சல். உடல் சோர்வாக இருந்தாலும், என் ஆசிரியர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை உடைக்க மனம் வரவில்லை. அதனால், அந்த காய்ச்சலோடும் களத்தில் இறங்கினேன்.

விசில் ஒலித்தது... என் கால்கள் வழக்கம்போல் வேகமாக பறந்தன. வெற்றிக்கோடு இன்னும் சில அடிகளே தூரத்தில் இருந்தது. அப்போது திடீரென்று என் கண்கள் இருண்டன... உலகமே சுழல்வது போல இருந்தது... அடுத்த நொடியே மயங்கி தரையில் விழுந்துவிட்டேன்.

அந்த விழுதல் வெறும் உடலின் விழுதல் மட்டுமல்ல... என் ஆசிரியர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை விழுந்துவிட்டதாகவே அந்த வயதில் நான் உணர்ந்தேன். அந்த வேதனையே எனக்கு மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.

நான் கீழே விழுந்ததைப் பார்த்த என் ஆசிரியர்கள் பதறியபடி ஓடி வந்து என்னைத் தூக்கிக்கொண்டு அவசர சிகிச்சை அறைக்குச் சென்றார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்து, காற்று வீசச் செய்து, காய்ச்சலுக்காக மருந்து கொடுத்து என்னை கவனித்துக் கொண்டார்கள். அவர்களின் அந்த அக்கறை, அந்த அன்பு... இன்றுவரை என் மனதில் அழியாத நினைவாக இருக்கிறது.

இன்றும் அந்த நாளை நினைத்தால்கூட என் கண்கள் கலங்கிவிடுகின்றன. வெற்றி பெற முடியாததற்காக அல்ல... என்னை முழுமையாக நம்பியிருந்த என் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை முதன்முறையாக நிறைவேற்ற முடியாமல் போனதற்காக.

அந்த நாள்தான் எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது...
சில தோல்விகள் நம்மால் ஓட முடியாததால் வருவதில்லை... நம்மால் முடிந்த அளவுக்கு ஓடிய பிறகும், உடல் நம்மைத் தாங்க முடியாமல் போனதால் வருகிறது. அந்தத் தோல்விகளுக்கு நாமே காரணமில்லை.
20
கவிதைகள் / ஆணவப் படுகொலை
« Last post by Thenmozhi on July 03, 2026, 05:57:59 PM »
     ஆணவப் படுகொலை

காதல் இரு உயிர்களின் மொழி !
காதலை கட்ட முடியாது
சாதியின் சங்கிலியால்..
ஆணவம் கண்களை மூடும்போது, இரத்தமாகின்றன அன்பின் இதயங்கள் !

"குடும்ப மரியாதை" என்ற பெயரில்
கொல்லப்படுகிறது மனிதம் தினமும் !
மண்ணில் புதைகின்றன
மலர வேண்டிய கனவுகள் !

அம்மாவின் கண்ணீர் ஆறாக ஓடுகிறது...
இரு உயிர்களை அழித்தாலும்,
யாராலும் அழிக்க முடியாது
உண்மையான காதலை...
சாதியை விட மனிதநேயம் உயர்ந்தது !
அன்பே வாழ்வின் அடையாளம்,
ஆணவம் அல்ல !

ஆணவப் படுகொலையை ஒழிப்போம்!



Pages: 1 [2] 3 4 ... 10