11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 407 🆕
« Last post by Thenmozhi on June 29, 2026, 10:13:13 PM »"உழைப்பாளிகளே நாட்டின் முதுகெலும்பு"
உழைப்பே உலகின் உயிர்மூச்சு !
உழைப்பாளிகள் வாழ்வின் ஒளிவிளக்கு !
உழைப்பாளிகள் கரங்கள்
பேசும் மொழி உழைப்பு !
உழைப்பாளிகளின் வாழ்க்கை
சொல்லும் பாடம் முயற்சி !
வயலில் விதை தூவும் விவசாயி,
வாழ்வின் அன்னம் தரும் கடவுள்!
கட்டிடம் எழுப்பும் தொழிலாளி,
கனவுகளை நனவாக்கும் சிற்பி.
சாலைகள் அமைக்கும் கரங்கள்,
ஆடைகளை நெய்யும் நெசவாளர்
சமூகத்தின் முன்னேற்றப் படிகள்!
நாட்டின் எல்லையில் நமக்காக
சண்டையிட்டு பாதுகாத்திருக்கும் இராணுவத்தினர்
இரவு பகலாய் குற்றங்களை புலனாய்வு செய்யும் காவல்துறையினர்
நீதிக்காக போராடும் சட்டத்தரணிகளும் நீதிபதிகளும்
இவர்களின் கடின உழைப்பினால்
நிம்மதியாய் தூங்கும் மக்கள் !
இல்லங்களை அன்புடனும் ,
பொறுப்புடனும் நடாத்தும் இல்லத்தரசிகள்!
கடல் அலைகளில் தத்தளித்து வழங்குகின்றனர் கடல் உணவுகளை
மீனவர்கள் !
அறுசுவை உணவுகளை இன்முகத்துடன் நமக்கு அளிக்கும் உணவகங்கள் !
இருக்கும் இடத்திலிருந்தே பொருட்களை பெற்றுக் கொள்ள வழி செய்யும் விநியோகிஸ்தர்கள் !
ஆசிரியர்கள் விதைக்கிறார்கள் அறிவை,
மருத்துவர்கள் காக்கிறார்கள் உயிர்களை,
தூய்மை பணியாளர் நகரம் காக்க,
அனைவரின் வாழ்வும் அழகாகிறது !
விஞ்ஞானிகளின் அதிசயக் கண்டுபிடிப்புகளும்
விண்வெளியில் புரிந்த சாதனைகளும்
வியாபாரிகளின் நுணுக்கமான
வர்த்தக முறையும்
வியத்தகு உலகத்தை உருவாக்கியது !
எங்கள் மனங்களை மகிழ்விக்கும்
இயல் ,இசை ,நடன கலைஞர்களும்,
எங்களை அழகுபடுத்தும்
அழகு கலை நிபுணர்களும்,
இன்பமாய் இஷ்டப்பட்ட இடத்துக்கு நாம் சென்றுவர உழைக்கும் ஓட்டுநர்களும்
உழைப்பாளிகளே !
கடின உழைப்பை நண்பனாக்கி,
கடமையைத் தெய்வமாக எண்ணி,
துன்பங்கள் வந்தாலும் துவளாமல்,
துணிவுடன் முன்னேறிச் செல்பவன்!
அவன் வியர்வை மண்ணில் விழுந்தால்,
பசுமை முளைக்கும் !
அவன் கரங்கள் செயல்பட்டால்,
நாட்டின் வளர்ச்சி மலரும் !
உழைப்பாளியின் நேர்மையும்,
ஒழுக்கமும் அனைவருக்கும்
சிறந்த எடுத்துக்காட்டு !
அவன் உழைப்பின் பலனால்தான்
நம் வாழ்க்கை இனிமையாகிறது !
உழைப்பை மதிக்கும் மனம் கொண்டால்,
வாழ்க்கை வளமாகும் !
உழைப்பாளிகளைப் போற்றும் நாடு
என்றும் செழிப்போடு திகழும் !
உழைப்பே உயர்வின் திறவுகோல் !
உழைப்பாளிகளே நாட்டின் முதுகெலும்பு !
குறிப்பு: உலகில் உள்ள அனைத்து உழைப்பாளிகளுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.
உழைப்பே உலகின் உயிர்மூச்சு !
உழைப்பாளிகள் வாழ்வின் ஒளிவிளக்கு !
உழைப்பாளிகள் கரங்கள்
பேசும் மொழி உழைப்பு !
உழைப்பாளிகளின் வாழ்க்கை
சொல்லும் பாடம் முயற்சி !
வயலில் விதை தூவும் விவசாயி,
வாழ்வின் அன்னம் தரும் கடவுள்!
கட்டிடம் எழுப்பும் தொழிலாளி,
கனவுகளை நனவாக்கும் சிற்பி.
சாலைகள் அமைக்கும் கரங்கள்,
ஆடைகளை நெய்யும் நெசவாளர்
சமூகத்தின் முன்னேற்றப் படிகள்!
நாட்டின் எல்லையில் நமக்காக
சண்டையிட்டு பாதுகாத்திருக்கும் இராணுவத்தினர்
இரவு பகலாய் குற்றங்களை புலனாய்வு செய்யும் காவல்துறையினர்
நீதிக்காக போராடும் சட்டத்தரணிகளும் நீதிபதிகளும்
இவர்களின் கடின உழைப்பினால்
நிம்மதியாய் தூங்கும் மக்கள் !
இல்லங்களை அன்புடனும் ,
பொறுப்புடனும் நடாத்தும் இல்லத்தரசிகள்!
கடல் அலைகளில் தத்தளித்து வழங்குகின்றனர் கடல் உணவுகளை
மீனவர்கள் !
அறுசுவை உணவுகளை இன்முகத்துடன் நமக்கு அளிக்கும் உணவகங்கள் !
இருக்கும் இடத்திலிருந்தே பொருட்களை பெற்றுக் கொள்ள வழி செய்யும் விநியோகிஸ்தர்கள் !
ஆசிரியர்கள் விதைக்கிறார்கள் அறிவை,
மருத்துவர்கள் காக்கிறார்கள் உயிர்களை,
தூய்மை பணியாளர் நகரம் காக்க,
அனைவரின் வாழ்வும் அழகாகிறது !
விஞ்ஞானிகளின் அதிசயக் கண்டுபிடிப்புகளும்
விண்வெளியில் புரிந்த சாதனைகளும்
வியாபாரிகளின் நுணுக்கமான
வர்த்தக முறையும்
வியத்தகு உலகத்தை உருவாக்கியது !
எங்கள் மனங்களை மகிழ்விக்கும்
இயல் ,இசை ,நடன கலைஞர்களும்,
எங்களை அழகுபடுத்தும்
அழகு கலை நிபுணர்களும்,
இன்பமாய் இஷ்டப்பட்ட இடத்துக்கு நாம் சென்றுவர உழைக்கும் ஓட்டுநர்களும்
உழைப்பாளிகளே !
கடின உழைப்பை நண்பனாக்கி,
கடமையைத் தெய்வமாக எண்ணி,
துன்பங்கள் வந்தாலும் துவளாமல்,
துணிவுடன் முன்னேறிச் செல்பவன்!
அவன் வியர்வை மண்ணில் விழுந்தால்,
பசுமை முளைக்கும் !
அவன் கரங்கள் செயல்பட்டால்,
நாட்டின் வளர்ச்சி மலரும் !
உழைப்பாளியின் நேர்மையும்,
ஒழுக்கமும் அனைவருக்கும்
சிறந்த எடுத்துக்காட்டு !
அவன் உழைப்பின் பலனால்தான்
நம் வாழ்க்கை இனிமையாகிறது !
உழைப்பை மதிக்கும் மனம் கொண்டால்,
வாழ்க்கை வளமாகும் !
உழைப்பாளிகளைப் போற்றும் நாடு
என்றும் செழிப்போடு திகழும் !
உழைப்பே உயர்வின் திறவுகோல் !
உழைப்பாளிகளே நாட்டின் முதுகெலும்பு !
குறிப்பு: உலகில் உள்ள அனைத்து உழைப்பாளிகளுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.

Recent Posts






