Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11


அங்கு வந்த அவளின் தாய், "நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு" என்றாள்…

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, உடனே ஒரு ஆப்பிளைக் கடித்து விட்டாள்… பின் இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்... தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்…

உடனே அந்த சிறுமி, தாயிடம் "அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ இதை எடுத்துக்க என்றாள்…"

நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் உங்களுக்கு இருக்கலாம். அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால், ஒருவரை பற்றிக் கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும். அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரைபற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம். எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்...

மனக்கணக்கு தவறலாம்... மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.
12


பென்சில் போல் வாழ்ந்தால் வெற்றிதான், ஓர் கதை மூலம் விளக்கம்.........

ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார் வெற்றிக்குயார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க பிரேம்போட்டு ஒரு பென்சில் புகைப்படம்..

நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங்களைக் கற்றுத் தந்தது.

*பல விஷயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது.

*அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம். சீவும் போதெல்லாம் கூர்மையடைகிறது.

*தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.

*வெளியே எப்படியிருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது. சின்னஞ்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது.

*கடைசி வரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது.

இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன். பல அரிய விஷயங்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு என்னைக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருக்கிறேன்.

*சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாகிக் கொள்கிறேன்.

*தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.

*வெளிச்சூழலில் புகழ் வந்தாலும் பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறேன்.

*கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். காலத்தில் நம் சுவட்டைப் பதித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, பெரிய பெரிய விஷயங்கள் பென்சிலில் இருப்பது புரிந்தது...
13
கவிதைகள் / Re: சிங்கப் பெண்ணே
« Last post by JsB on July 11, 2026, 01:20:25 PM »
சிங்கப் பெண் என்பது ஒரு பெயர் அல்ல... ஒரு மனநிலை, ஒரு தன்னம்பிக்கை, ஒரு வாழ்க்கைப் பயணம்.
ஒவ்வொரு வரியும் பெண்களின் துணிவையும், தன்னம்பிக்கையையும் அழகாகப் பேசுகிறது. மனதை ஊக்கப்படுத்திய அருமையான பதிவு. 👏
14
அப்பா என்ற உறவு...
வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு.

ஒவ்வொரு வரியும் கண்களை கலங்க வைத்தது.
அருமையான பதிவு . 👏
15
வார்த்தைகள் படிக்கவில்லை...
வாழ்க்கையையே படித்த உணர்வு.
இளமையில் மலர்ந்த காதல்,
முதுமையில் நிழலாக நிற்கும்
என்பதற்கு இந்த வரிகள்
அழகான சாட்சி.
அருமையான பதிவு. 👏
16
*வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்பு.*

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

* அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.
 
* கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
 
* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
 
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக்  கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
 
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.
 
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக  வாழலாம்

17
Happy Birth day KANITHAN machi , Many more Happy returns of day , eppavum happy ya santhosamma ya irukanga
18
பொதுப்பகுதி / தெப்பக்குளம்
« Last post by Baaski on July 11, 2026, 12:23:03 PM »
🌹 தெப்பக்குளம்...

நம்ம ஊர் பெரிய கோவில்களுக்குப் போனால், அங்கே பிரம்மாண்டமான ஒரு தெப்பக்குளம் இருப்பதை பார்த்திருப்போம். சாமிக்கு தெப்ப உற்சவம் நடத்தவும், கை கால் கழுவவும்தான் இந்த குளம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் அசாத்தியமான அறிவியலைத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இன்று நாம்  'மழைநீர் சேகரிப்பு' என்று  கூறும் நீர் சேமிப்பு பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஒட்டுமொத்த ஊருக்கும் சேர்த்து பிரம்மாண்டமாக மழைநீரை சேகரித்தார்கள் நம் முன்னோர்கள். ஊரின் பள்ளமான பகுதியைத் தேர்ந்தெடுத்துதான் கோவில் குளங்கள் அமைக்கப்பட்டன. இதனால் ஊரில் பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரும் இயற்கையாகவே அந்த குளத்திற்கு வந்து சேரும்.

கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தால், அதைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும். எவ்வளவு கொடிய கோடைக்காலம் வந்தாலும், வறட்சி ஏற்பட்டாலும் மக்கள் தண்ணீருக்கு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட 'உயிர் காக்கும் வங்கி' (Life-saving Bank) தான் கோவில் குளம்!

அது மட்டுமா? கோவில் கட்டும்போதே, குளத்துக்காக தோண்டப்பட்ட உறுதியான மண்ணை வைத்துதான் பிரம்மாண்டமான கோவில் மதில்களையும், கோபுரத்தின் அஸ்திவாரத்தையும் எழுப்பினார்கள். நிலநடுக்கம் வந்தாலும், அந்த அதிர்வுகளை குளத்தில் உள்ள தண்ணீர் உள்வாங்கிக் கொண்டு கோவிலைக் காக்கும். அதனால் தான் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம் கோவில் கோபுரங்கள் சிறு விரிசல் கூட இல்லாமல் இன்றும் கம்பீரமாக நிற்கின்றன.

ஆன்மீக ரீதியாகவும் இதற்கு ஒரு பெரிய காரணம் உண்டு. கோவில்கள் அதிக நேர்மறை அதிர்வுகள் மற்றும் காந்த சக்தி கொண்ட இடங்கள். தண்ணீர் ஒரு சிறந்த கடத்தி. கோவில் குளத்து நீரைத் தழுவி வரும் காற்று நம் உடலில் படும்போது, நம் சக்கரங்கள் சமநிலையடைந்து, மன அழுத்தம் குறைந்து ஒருவித அமைதி கிடைப்பதை நீங்கள் நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள். இதுதான் சித்தர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன ஆழமான அறிவியல்!

வெறும் வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாமல், கோவில்களை ஒரு சமூகத்தின் நீர் ஆதாரமாகவும், வாழ்வாதார மையமாகவும் மாற்றிய நம் தமிழர்களின் அறிவுக்கு ஈடு இணையே இல்லை!

19
விண்ணுக்கு வான வில் அழகு
மண்ணுக்கு இயற்கை வளம் அழகு
செடிகளுக்கு பூக்கள் அழகு
கடலுக்கு அலைகள் அழகு
காதலுக்கு அன்பு அழகு
முகத்திற்கு புன்னகை அழகு
உனக்கு நான் அழகு
எனக்கு நீ அழகு

‌அடுத்து   🪷 புன்னகை 🪷
Pages: 1 [2] 3 4 ... 10