11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 403
« Last post by Oonjal on May 26, 2026, 10:00:50 PM »காத்திருப்பின் ஏக்கம்
எனக்கு இந்த ஆசை
எப்போ வந்தது என்று
எனக்கே தெரியவில்லை
என்ன மாதிரியே
எனக்கு ஒரு பெண் குழந்தை
வேண்டும் என்பது
என்னுடைய கனவு..
மனம் நிறைந்த சந்தோஷத்தோடு அடி எடுத்து வைத்தேன் இல்வாழ்க்கையில்...
எங்கள் காதல் வாழ்வின் அடையாளமாய் கருவுற்றேன்
என் கால்கள் தரையில் நிற்கவில்லை...
ஆகாயத்தில் பறந்தேன் சந்தோசத்தில்...
உள்ளங்கையில் வைத்து
தாங்கினர் குடும்பத்தினர்
எது சாப்பிட்டாலும்
வாந்தி எழும்பி
நடக்க கூட தெம்பு
இல்லை உடம்பில்..
மயங்கி மயங்கி சரிய
அள்ளி கொண்டு
ஓடினர் ஆஸ்பத்திரிக்கு...
சிறு ஊசிக்கும் அலறும் நான் குளுக்கோஸ் ஏறுவதை
பார்த்து கொண்டிருந்தேன் அமைதியாய்...
நாட்கள் நகர நகர
நின்று போனது வாந்தி மயக்கம்
மேனி எங்கும் மினுமினுப்பு ஏறியது
பார்க்கும் அனைவரும் பொட்ட பிள்ளை தான் என்றனர்
நானும் என் மகளோடு
விளையாடினேன்
கொஞ்சி பேசி...
பிரசவ நாள் நெருங்க நெருங்க
இனம்புரியாத பயம் என்னில்
ஆஸ்பத்திரிக்கு சென்றேன்
மரண பயத்தில்...
முதல்முதலாக பிரசவ வலி
எப்படி இருக்கும்
என்பதை உணர்ந்தேன்
உயிரை கொடுத்து
வெளி உலகிற்கு அழைத்து வந்தேன் என் மகளை...
சிறு அழுகுரல்
காதில் மோத மகன் பிறந்திருக்கிறான்
என்ற வார்த்தையை கேட்டு கொண்டே மயக்கத்திற்குள்
சென்றேன்..
மயக்கம் தெளிந்ததும்
மகனை காட்டினர்
பிங்க் கலரில் இருந்த அந்த
ரோஜா மொட்டை பார்த்ததும்
என் மனதில் தோன்றியது
என் மகளுக்கு அண்ணன் பிறந்திருக்கிறான் என்றே..
சிறிது காலம் கடந்தது
ஒவ்வொரு மாதமும்
வயிற்று வலியால்
துடிக்க ஆரம்பித்தேன்
பார்க்காத மருத்துவம்
இல்லை ஆனால்
வலி மட்டும் குறையவில்லை
பெண் குழந்தைக்கான
என் ஏக்கம்
தீர வலியாய்..
பார்க்கும் அனைத்து
மருத்துவரும் சொல்லும் ஒரே வார்த்தை உங்களுக்கு குறை ஒன்றும் இல்லை
காத்திருங்கள் என்பதே...
இன்று வரை காத்திருக்கிறேன்..
இருட்டில் அமர்ந்து அழும்போது
உன் நினைவுகள் மட்டும்
தான் என் துணை..
நீ வராத
ஒவ்வொரு மாதமும்
என் இதயம் கண்ணாடி போல் சுக்குநூறாக உடைந்து போவது
யாரும் அறியாதது...
என் கண்களில்
வழியும் கண்ணீர்
உன் மடி தேடி
அலைகிறது
ஆறுதல் சொல்ல நீ
வருவாய் என
ஏக்கத்தோடு
காத்திருக்கிறேன்..
எனக்கு இந்த ஆசை
எப்போ வந்தது என்று
எனக்கே தெரியவில்லை
என்ன மாதிரியே
எனக்கு ஒரு பெண் குழந்தை
வேண்டும் என்பது
என்னுடைய கனவு..
மனம் நிறைந்த சந்தோஷத்தோடு அடி எடுத்து வைத்தேன் இல்வாழ்க்கையில்...
எங்கள் காதல் வாழ்வின் அடையாளமாய் கருவுற்றேன்
என் கால்கள் தரையில் நிற்கவில்லை...
ஆகாயத்தில் பறந்தேன் சந்தோசத்தில்...
உள்ளங்கையில் வைத்து
தாங்கினர் குடும்பத்தினர்
எது சாப்பிட்டாலும்
வாந்தி எழும்பி
நடக்க கூட தெம்பு
இல்லை உடம்பில்..
மயங்கி மயங்கி சரிய
அள்ளி கொண்டு
ஓடினர் ஆஸ்பத்திரிக்கு...
சிறு ஊசிக்கும் அலறும் நான் குளுக்கோஸ் ஏறுவதை
பார்த்து கொண்டிருந்தேன் அமைதியாய்...
நாட்கள் நகர நகர
நின்று போனது வாந்தி மயக்கம்
மேனி எங்கும் மினுமினுப்பு ஏறியது
பார்க்கும் அனைவரும் பொட்ட பிள்ளை தான் என்றனர்
நானும் என் மகளோடு
விளையாடினேன்
கொஞ்சி பேசி...
பிரசவ நாள் நெருங்க நெருங்க
இனம்புரியாத பயம் என்னில்
ஆஸ்பத்திரிக்கு சென்றேன்
மரண பயத்தில்...
முதல்முதலாக பிரசவ வலி
எப்படி இருக்கும்
என்பதை உணர்ந்தேன்
உயிரை கொடுத்து
வெளி உலகிற்கு அழைத்து வந்தேன் என் மகளை...
சிறு அழுகுரல்
காதில் மோத மகன் பிறந்திருக்கிறான்
என்ற வார்த்தையை கேட்டு கொண்டே மயக்கத்திற்குள்
சென்றேன்..
மயக்கம் தெளிந்ததும்
மகனை காட்டினர்
பிங்க் கலரில் இருந்த அந்த
ரோஜா மொட்டை பார்த்ததும்
என் மனதில் தோன்றியது
என் மகளுக்கு அண்ணன் பிறந்திருக்கிறான் என்றே..
சிறிது காலம் கடந்தது
ஒவ்வொரு மாதமும்
வயிற்று வலியால்
துடிக்க ஆரம்பித்தேன்
பார்க்காத மருத்துவம்
இல்லை ஆனால்
வலி மட்டும் குறையவில்லை
பெண் குழந்தைக்கான
என் ஏக்கம்
தீர வலியாய்..
பார்க்கும் அனைத்து
மருத்துவரும் சொல்லும் ஒரே வார்த்தை உங்களுக்கு குறை ஒன்றும் இல்லை
காத்திருங்கள் என்பதே...
இன்று வரை காத்திருக்கிறேன்..
இருட்டில் அமர்ந்து அழும்போது
உன் நினைவுகள் மட்டும்
தான் என் துணை..
நீ வராத
ஒவ்வொரு மாதமும்
என் இதயம் கண்ணாடி போல் சுக்குநூறாக உடைந்து போவது
யாரும் அறியாதது...
என் கண்களில்
வழியும் கண்ணீர்
உன் மடி தேடி
அலைகிறது
ஆறுதல் சொல்ல நீ
வருவாய் என
ஏக்கத்தோடு
காத்திருக்கிறேன்..

Recent Posts







