Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
‎முதுமை காதல்....


வருடங்கள் பல கடந்தும்
‎கண்களில் பார்வை குறைந்தும்
‎தளர்ந்த நடையும் ,தேகத்தில் உள்ள அனைத்து உறுப்புகளும் தளர்ந்தும்,
‎பாசம், நேசம் ,அன்பு இவற்றையெல்லாம்
‎உள்ளடக்கிய காதலுக்கு வயதே இல்லை
‎என் இதயத்துடிப்பு நிற்கும் வரை
‎என் கடைசி மூச்சு நிற்கும் வரை
‎என் இதயத்தின் இளமை நீயே..

‎இளமையில் கஷ்டப்பட்டு உழைத்து
‎சேர்த்து வைக்கும் பணம் என்ற காற்று
‎முதுமையில் நம்மை
இதமாக தழுவுகிறது...
‎அப்போது உன் தளர்ந்த நடையும்
‎உன் சுருங்கிய கரங்களை பற்றிக்கொண்டு
‎நடக்கும் போது நம் மகிழ்ச்சிக்கு
‎எல்லை என்பது இல்லாமல்
‎பேசிக்கொள்கிறது நம் இதயங்கள்...

‎நமது காதல் மொழியை என்னுடைய வயது
‎காரணமாக எனது உடல் சோர்வாகலாம்
‎எனது கை கால் தளர்வாகலாம்
‎ஆனால் உன் தளர்ந்த கைகளை
பற்றிக் கொண்டு செல்லும்போது
‎என் இதயத்தில் உள்ள நம் காதலின் வலு
பல மடங்கு அதிகரிக்கும்
‎அதிசயம் கண்டேன்...

‎என்னுள் முதுமை காதல் என்பது
முகத்தின் அழகைப் பார்த்து
‎ஈர்த்து வரும் காதல் அல்ல
‎அது வாழ்க்கையில் ஒருவருக்கொருவர்
‎புரிந்து கொண்ட முழுமையான புரிதலே !

‎அந்த நரைத்த முடியிலும்
சுருங்கிய முகத்திலும்
‎மாறாத அன்பையும் பாசத்தையும்
‎காதலையும் தேடும் உன்னதமான
‎காதல் தான் முதுமை காதல்....
12
                                                காதல் சுவடுகள்

காலச் சக்கரம் சுழன்றாலும் நம்
காதல் சுவடுகள் நெஞ்சை விட்டு அழியவில்லை!
கூந்தல் வெளுத்து நரைசூடி நின்றாலும்,
உள்ளத்தின் துள்ளல் இன்னும் குறையவில்லை!

​பூட்டிய கதவுகள் யாவையும் உடைத்து,
புதியதோர் உலகிற்குள் ஓடுகிறோம்!
வயதின் எல்லைகள் யாவையும் கடந்து
குழந்தைகளாய் நாம் இன்று மாறுகிறோம்!

​சுருக்கங்கள் விழுந்த உந்தன் கன்னத்து முத்தங்கள்,
கோடிப் பொன்னைக் காட்டிலும் பேரழகு தருபவை!
தொலைந்துபோன நம் இளமையின் அழகிய மிச்சங்கள்,
இன்று எல்லைகள் இல்லாமல் நெஞ்சில் துள்ளுதே!

​காற்றின் திசையெங்கும் நம் சிரிப்புச் சத்தம்,
கேட்டுப் பறவைகள் வாழ்த்துகள் சொல்லுதடி!
இளமைக் காலத்தில் இல்லாத ஒரு வேகம்,
முதுமையின் வாசலில் எப்படி வந்தது?
உலகத்தின் கவலைகள் யாவையும் மறந்து,
நேற்றைய சுமையிறக்கி, இன்றைய நொடியை
ரசிக்கத் தொடங்கியதோ!

​விதி எழுதிய சுவடுகளை நம் பாதங்கள் அழிக்கட்டும்,
துயரங்கள் தீண்டாததோர் புதிய உலகம் பிறக்கட்டும்!
இந்த அலாதி மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை,
உன் கைகளைப் பிடித்தபின் எனக்குத் தோல்வியே இல்லை!

​இன்னும் ஓடுவோம் மூச்சடங்கும் வரை அல்ல,
நம் காதல் மூச்சு உலகைக் கடக்கும் வரை!
13
இளமை காதல் இனக் கவர்ச்சியால் வந்தது
இளமைக் காதலில் உறுதி குறைவு முதுமை காதல் இறுக்கமான அன்பினால் இதயத்தில் உறுதியுடன் இருக்கும் காதல் புரிதல் மிக்கது

இளமைக் காதல் காய்களை போன்றது
பழுக்க காத்து இருக்கும் காய்
முதுமை காதல் இனிய சுவை மிக்க பழங்களைப் போன்றது
நரைத்த முடியுடன்
தோள்கள் சுருங்கினாலும்
காதல் அன்பு சுருங்காது

வயது ஆனாலும் உள்ளத்து அன்பு குறையாமல் வாழ்க்கையின்
கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு கைகளை இறுக்கி பிடித்து கொண்டு கால்கள் மட்டும் ஓடுகிறது
இளமை துள்ளலுடன்

வாழ்க்கை ஓட்டம் தடுமாறினாலும்
வலக்கை இடக்கையை விட்டதில்லை
வண்ணமயமான அவர்கள் வாழ்க்கையில் முகத்தில் இருக்கும் சிரிப்பு குறையாமல்
 வயது ஒரு எண் தான் என்று சொல்லாமல் சொல்கிறது
அவர்கள் வாழ்க்கை

முதுமை காதல் அன்பு காதல் பாசம் கருணை புரிதல் மிகுந்து ஒருவரை ஒருவர் அப்படியே ஏற்றுக் கொண்டதின் இனிமையான வாழ்க்கை பிணைப்பு

நிபந்தனையற்ற அன்புடன்
அவர்களுக்குள் எதிர்பார்ப்புகள் குறைந்து உண்மையான நேசம் மிகுந்த முதுமை வாழ்க்கை

முதுமை காதலின் அழகே
உண்மையான புரிதலுடன்
அவர்களின் அன்பான அரவணைப்புடன் காதலின் ஆழத்தை உணர்த்தும் மன அமைதி

வாழ்வின் பிரச்சனைகளுக்கு தோளோடு தோள் நின்று
கைகோர்த்து அதனைக் கடந்து முதிர்ச்சி அடையும் முழுமையான காதல் பருவம் முதுமைப் பருவம்

முதுமை காதல் முழுமையானதே புரிதல் அடித்தளம்
அன்பு ஆணிவேராக இருந்து இருமனம்
ஒரு மனமாய் இணைந்து
ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுத்து
 பசுமையான காதலை என்றென்றும் கால ஓட்டத்துடன் கடந்து
 ஈருயிர் ஓர் உயிராய் கலந்து
காதலில் வெற்றி பெற்று 
அகம் மகிழ்ந்து
வாழும் வாழ்க்கை புனிதமானது
 முழு நிலவைப் போன்று பிரகாசமானது
14
 "பள்ளி நட்புடன் அவனும் நானும்"

அவனும் நானும்...
ஒரே பள்ளியில் படித்தோம் !
அடுத்தடுத்த இருக்கைகளில்
அமர்ந்து அரட்டை அடித்தோம் !
ஆனால் படித்தது மட்டும்
அடுத்தவன் நோட்டைத்தான்!

ஆசிரியர் கேட்ட கேள்விக்கு
பதில் தெரியாத நேரத்தில்...
கரும்பலகையை விட
கடவுளைத்தான் அதிகம் நம்பினோம் !

காலம் ஓடியது...
பள்ளி நட்பு
மெல்லக் காதலாக மாறியது...
சொல்லத் துணிவில்லாமல்
இருவரும் பார்வையிலேயே...
ஆயிரம் கவிதைகள் எழுதினோம் !

வாழ்க்கை வந்தது...
காதலை விட
கடமையை கையில் கொடுத்தது !
இருவரும்
இருவேறு பாதையில் நடந்தோம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு,
பள்ளியில் சந்தித்தோம்...

அவனைப் பார்த்தேன்...
நரைத்த தலைமுடி
முகத்தில் காலத்தின் கோடுகள்
ஆனால் கண்களில் மட்டும்
அதே பள்ளி நாட்களின் பிரகாசம் !
என்னைப் பார்த்தான்...
தலையில் வெள்ளி பூத்திருந்தது !

அவன் சிரித்துக்கொண்டே,
"நீ இன்னும் அதே அழகுதான் தேனு...
ஆனா கண்ணாடி இல்லாம
எனக்குத்தான் தெரியல!" என்றான்

நான் உடனே,
"நீயும் அதே ஹீரோதான்...
ஆனா ஹீரோயினுக்கு பதிலா
இப்போ முழங்கால் வலிதான்
உன்னைச் சுற்றி வருது!" என்றேன்.
இருவரும் சிரித்தோம்...

நலமா?" என்ற கேட்ட ஒரு வார்த்தை...
ஆண்டுகள் முழுவதையும் சுருக்கியது !
கைகுலுக்கிய அந்த நொடி...
உணர்த்தியது நட்பின்
வலிமையை மீண்டும் !

அன்று  பள்ளியில் அவன் என்
கையை பிடித்து நடந்தவன்...
இன்று நானே அவன் கையை
பிடிச்சு கூட்டிட்டு போறேன்!
ஏன்னா... இவனை தனியா விட்டா
எந்த திசையில போவான்னே தெரியாது !

தனிமையில் அவனை விடாமல்
கிண்டல் செய்து சிரிக்க
வைத்துக்கொண்டே இருப்பேன் நான் !
என்னை ஏளனம் செய்து
மகிழ்விப்பான் அவன் !

அவன் மெதுவாக,
"அப்போ உனக்காக வாங்கிய
சாக்லேட்டை கொடுக்க முடியல...
இப்போ சர்க்கரை நோய்,
வாங்கியும் கொடுக்க முடியல!" என்றான் !

நான் சிரித்தபடி,
"பரவாயில்லை...
அந்தக் காதல் இனிப்பு
இன்னும் நெஞ்சில் தேனாக இருக்கு...
சாக்லேட் இல்லாத குறையே
தெரியல!" என்றேன் !

அப்போது புரிந்தது...
முதுமை என்பது
வயதுக்குத்தான் வரும்...
பள்ளி நட்புக்கு வராது !

காலம் என்பது
முகத்தை மாற்றலாம்...
ஆனால் உண்மையான காதலையும்,
கலாட்டா நட்பையும்
ஒருபோதும் மாற்ற முடியாது!

நமக்கு வயதானாலும்,
நட்பின் ஆழத்தினால்
நினைவுகள் புதுசுதான்...
காதல் சொல்லப்படாவிட்டாலும்,
இதயம் அதை மறப்பதில்லை...
சிரிப்பு குறைந்தாலும்,
நண்பன் அருகில் இருந்தால்
வாழ்க்கை மீண்டும்
பள்ளிப் பருவமாகி விடும் !

தனிமை துணையாக,
ஏக்கம் நிழலாக வாழ்ந்தேன் !
மீண்டும் பள்ளியில் உன்னைச் சேர்த்தது
பிரியாவிடை நாளான இன்று !
மௌனமாய் நின்ற கண்கள்
ஆயிரம் கதைகள் பேசின..
காலம் பிரித்த இதயங்களை
விதி மீண்டும் இணைத்தது...
பள்ளி நட்பு தொடரும் வாழ்நாள் முழுதும்...

15

     ஏக்கம்  பொய்யானது



  இன்று என்  மனைவின் பிறந்தநாள். திருமணம் முடித்த போது எப்படி இருந்தாளோ..

அதே புன்னகையுடன் முதுமை தோற்றத்திலும் புன்னகை செய்யும் புன்னகை அரசி அவள்..

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை  திருமணம் செய்து கொண்டவள்..

நான் அடைந்த இன்பம் துன்பம் அனைத்திலும் பங்கு பெற்றவள்..
என்னை நல்வழியில் நடத்தி சென்றவள்..

என் சொந்தம் பந்தங்கள் என்னை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியை போதும்
என்னை வழி நடத்தி சென்றவள்..

காலங்கள் கடந்தாலும்  பாசம் மாறா உற்ற துணைவியும் அவள்..

தன் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாடணும் என்று முடிவும் எடுத்தாள்..

அதன் படியே பிறந்தனாளும் நன்றாக நடந்து முடிந்தது..

என் மனைவி முஹத்தில் அவ்ளோ ஆனந்தம்.. புன்னகையில் மிதந்தாள் ..

என் கரத்தை பிடித்து இங்க வாங்க என்று  சொல்லி  கொண்டு நடந்தால்..

 அன்றைய பிறந்தநாள் தான் அவளுக்கு  கடைசி பிறந்தநாளும் கூட..

திடிரென்று கீழே விழுந்தால்.. விழுந்த என் மனைவியை பார்த்து  அதிர்ச்சி அடைந்தேன்..

Doctor வந்து  helth a check  பண்ணி பார்த்து .
உங்க மனைவிக்கு  வாதம் நோய்   வந்துள்ளது  வலது பக்கம் கை கால் செயல் இழந்துள்ளது என்றார்...

Doctor சொன்னதும் எனக்கு  அந்த நிமிடம் என்ன செய்வது தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்தேன்..

அவளை பார்த்து ஏன் இதற்கு தான் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் பிறந்தநாள்  கொண்டாட்டம் வேண்டும் என்று கேட்டியா..

   அழுதேன் அழுதேன் அவள் கண்கள் இருந்து அசைவு மட்டும் இருக்கிறது..
வேற எந்த ஒரு உணர்வும் இல்லை..

காலம் பாரு எவ்ளோ சோதனை எல்லாம் எனக்கு கற்று தருகிறது என்று..

எப்படி எல்லாம் அழகாய் சிரிப்பாள் என் மனைவி ஆனால் இன்று அவளை பார்க்க வேதனை அழிக்கிறது...

வயது முதிர்ந்த காலத்திலும்  என்னை அண்பாய்  பார்த்தவள்..

என் மனைவியை இப்படி பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்க வில்லையே..
 
இவ்வுலகில் உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கா என்று கதறி கதறி அழுதேன்..

எனக்கு ஆறுதல் சொல்ல கூட உன்னை தவிர வேற யாரும் இல்லையே..

நீயோ என் பேச்சை காதில் வாங்கி மௌனம் காக்கிறாயே...

அந்த நிமிடமும் என் மனைவி திரும்ப பழைய நிலைமைக்கு   வந்து விடுவாள் என்று  ஏக்கம் கொண்டேன்..

என்னிடம் பேசி விடுவாள் என்று.. என் மனைவி பேரை சொல்லி சொல்லி  கூப்பிட்டேன்...

என் ஏக்கம் பொய்யானது.
அவள்
நிலைமை  புரிந்து.. என் மனதை திடபடுத்தி  கொண்டேன்..

யாருக்காக நான் இவ்வுலகில் வாழ ஆசை பட்டேனோ அவள்  இன்று    சிறு குழந்தை போல் படுக்கையில் தள்ளபட்டால்..

நானோ அழுது புலம்பி தவிக்கின்றேன்..

அவள் என்னை பார்த்த காலம் போயி.. இனி நான் அவளை  ஒரு குழந்தையை போல் பார்க்க வேண்டும்.. பார்ப்பேன்......
16
FTC Special Programs (Discussion & Related Information)) / Re: FTC 15th Anniversary
« Last post by Forum on July 06, 2026, 10:09:55 PM »
FTC 15th Anniversary Annoucement  published in chat room "FTC 15th Anniversary" Wall


🎉 FTC is all set to celebrate its 15th Anniversary on Friendship Day (August 2)! 🎉

To make this milestone truly memorable, we've planned a variety of exciting and fun-filled special programs. We warmly invite each and every one of you to join the celebrations and make this anniversary a grand success with your enthusiastic participation.



17

"ஆமைகள் சொல்லும் வாழ்க்கை"

நீரில் மிதக்கும் ஆமைகள்...
சத்தமின்றி வாழ்வை ரசிக்கின்றன...
போட்டி இல்லை...
பொறாமை இல்லை...
யாரையும் முந்த வேண்டும் என்ற அவசரமும் இல்லை...
தன் பயணத்தை தானே நம்பி...
மெதுவாக நகர்ந்து இலக்கை அடைகிறது...
வாழ்க்கையும் அப்படித்தான்...
அவசரமாக ஓடுவதல்ல வெற்றி...
நிம்மதியாக வாழ்வதே உண்மையான வெற்றி...
"மெதுவாக நடந்தாலும்...
நம்பிக்கையுடன் நடந்தால்...
ஒவ்வொரு இலக்கும் நம் காலடியில் வந்து சேரும்!"




– Natpudan JSB
18
*புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்...! 👑*

எள்ளு மிட்டாய், எள்ளுருண்டை, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம்.🪷 பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்டை சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுன்னு தெரியல. ஆனால், இதை சாப்பிட்டதால் வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம்.  ✍️

ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிஞ்சால் நீங்க இனி இதை விட்டு வைக்க மாட்டீங்க.. முக்கியமாக, எள்ளு சாப்பிடறதலா புற்றநோய் வராமல் இருக்குமாம். அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..

எள் சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை... இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம்.

எள்- உயிர் காக்கும் நண்பன்:

இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம். இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 / கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டது. அதில் கருப்பு எள் புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் 'Sesamin' தான்.

Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் இருப்பு சத்து, வைட்டமின் பி, எ, ஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். எவ்வளவு சாப்பிடலாம்..? தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும்.

19
கவிதைகள் / உயிர்!
« Last post by joker on July 06, 2026, 05:06:26 PM »
மருத்துவர் சொன்னதும்
ஆனந்தம் சூடி கொண்டேன்
என் கணவரிடம் சொல்ல
வெட்கம் சூடி கொண்டேன்
சொன்னேன் அவரிடம்
நான் தாய்மை அடைந்தேன் என

என் காதலை சொன்ன
நேரம் போல் ஆனந்தம் அடைந்தார்

தொடங்கியது எங்கள் பிள்ளைகளுக்கான
எங்கள் தேடல்
பெயர் தேர்வு முதல் குழந்தையை சேர்க்கும்
பள்ளி தேர்வு வரை  ஆயிற்று

குழந்தையை மார்பில் போட்டு
தாலாட்ட கற்று கொண்டேன் நூறு பாடல்

அக்கறையாய் மருத்துவரிடம் கூட்டி  சென்றார்
மாதமொருமுரை. குழந்தையின்  இதய துடிப்பு
கேட்டேன்

பத்து மாதம் கடந்தது வெளியுலகு வந்து
தன்தந்தையை காணும் ஆவலில்  -எட்டி  உதைத்தான்
என் வயிற்றில்

ஆனந்த வலியில் மருத்துவமனை சென்றேன்
அருகில் அன்பாய் என் கை  கோர்த்து என் தலை கோதி
என் கணவர்

பிரசவ அறையில் நான் துடிக்க -
வெளியில் நின்று என் கணவர் துடிக்க

சொர்க்கமும் நரகமும் ஒரு சேர
அனுபவித்தோமே

ஆண் பிள்ளை என்றாலும் பெண் பிள்ளை
என்றாலும் கள்ளி பாலுக்கு இடம் இல்லை
என்றிருந்தோம்

கடைசியில் கள்ளி பால் எங்களுக்கு தந்து
சென்றாயே பிரசவ அறையை சவ அறையாக்கி

கண்விழித்தவளிடம் என்ன சொல்வேனோ !? :(


***Joker***
20
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on July 06, 2026, 03:08:48 PM »
Pages: 1 [2] 3 4 ... 10