18
« Last post by VenMaThI on May 27, 2026, 02:52:38 PM »
கண்ணாடி இதயம்
கண்ணாடியாய் ஒரு இதயம்
நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்
நீ அழுதால் நானும் அழுவேன் - என்று
எல்லாமே உன் பிம்பமாய் இருந்தேன்..
காற்றின் தூய்மை போல
கள்ளங்கபடமற்ற காதல் என்றிருந்தேன்
காற்றின் தூய்மைக்கும் களங்கம் வருமென்பதை
கள்ளமான உன் காதலால் அறிந்தேன்...
சிரித்த சிரிப்பும்... நீ
பேசிய வார்த்தைகளும் மனதிலிருந்து அல்ல
உதட்டின் நுனியிலிருந்து என்பதை உணர்த்தியது
இரண்டாய் பிளந்த என் இதயம்...
காயம் ஆறுமோ தெரியல.. எந்தன்
கவலையும் தீருமோ தெரியல..
சில்லாய் பிளந்த இதயமதை ஒட்ட
எந்தக்கடையில் கோந்து விக்குதோ அதுவுந்தான் தெரியல...
உடைந்த இதயத்தின் உதிரமோ
ஊற்றெடுத்த கண்ணீராய் பொங்கியது...
கண்ணீரை துடைக்க ஆளில்லை என்று உணர்ந்தபோது
தனிமையே சிறந்த துணையென்று புரிந்தது...
உடைந்த இதயத்தை ஒட்ட கற்றுக்கொண்டேன்...
எனக்கு நானே ஆசானாய்...
வாழ்வியல் என்ற பாடத்தில்...
வாழ்க்கை என்ற பள்ளியில்...
இது என் இதயம்...எனக்கே எனக்கு என்றான இதயம்
இனி எவராலும் இதை உடைக்கவோ காயப்படுத்தவோ முடியாது
உனக்கான எல்லை உன்னிடம்.. இனி
எனக்கான எல்லை மட்டுமல்ல என் வாழ்க்கையும் என்னிடம் மட்டுமே ❤️❤️❤️