Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
ஹாய் நண்பர்களே! இந்த தலைப்பை பார்த்ததும் என்னோட கிராமத்து வாழ்க்கை அந்த பொக்கிஷம் என் மனசுக்குள்ள வந்துச்சு. அதுமட்டும் இல்லாமல் மறந்து போன கிராமத்து வாழ்க்கையை மீட்டெடுக்கும் ஒரு அற்புதமான தலைப்பாய் இருக்கு. நான் சிறுவயதாய் இருக்கிறப்போ இப்போ இருக்கிற சிறுவர்களைப் போல மொபைல் கம்ப்யூட்டர்ல எங்க விளையாட்டு அடங்கிராது. வெயில் தூசி பாராமல் ஓடி ஆடி விளையாடும் விளையாட்டுகளை அதிகமா விளையாண்டோம்.

இதுமாதிரி விளையாடுவதினால் உடல் ஆரோக்கியமும் ,விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் எங்கள் சிறுவயதில் நிறைய இருந்துச்சு. வெயிலோடு விளையாடி மறந்த விளையாட்டுனு பார்த்தா என் நினைவுக்கு வருவது ,அந்த 12 மணி வெயிலில் எங்களோட கிராமத்து கிணற்றில் நீச்சல் அடிச்சு ஓடி புடிச்சு விளையாண்ட விளையாட்டு தான். நான் பயின்ற ஸ்கூல் பக்கத்திலேயே ஒரு கிணறு இருக்கு. விடுமுறை நாள் ஃபுல்லா அந்த கிணற்றில போய் தான் முங்கி,நீச்சல் அடிச்சு ஓடி புடிச்சு விளையாடுவோம்.

அந்த விளையாட்டோட விதிமுறை என்னவென்றால் பிடிக்க வரும் நபர் தண்ணியில மூழ்கி இருக்கப்ப தலையை தொடக்கூடாது. தண்ணீரில் வெளியே வந்தவுடன் தலையை தொட்டால் தொட்ட நபர் அவுட். பள்ளி நேரங்களில் உணவு இடைவெளியின் போது நானும், எனது நண்பர்களும் ஆசிரியருக்கு தெரியாமல் அந்த கிணற்றுக்கு போய் விளையாடிட்டு வருவோம்.

ஒரு நாள் ஆசிரியர் எங்களை கவனிச்சு என்னடா எல்லோருடைய தலையும் ஈரமா இருக்கு எங்க போயிட்டு வாரீங்க? என்று கேட்க, நாங்க வெயில் தாங்க முடியல பக்கத்து கிணற்றில குளிச்சிட்டு வாரோம் என்று, உண்மை அறிந்த ஆசிரியர் என்னடா சொல்றீங்க என எங்கள் அஞ்சு பேரையும் தண்டித்தார். அந்த அடி வாங்குன நிகழ்வு இன்னும் என் மனசுல பதிந்திருக்கு.

இந்த காலத்துல எங்க கிராமத்துல எந்த கிணத்துலயும் தண்ணியும் இல்ல. இந்த மாதிரி விளையாட்டை யாரும் விளையாடுவதும் இல்லை என்பது ரொம்ப வேதனைக்குரிய விடயமாக இருக்கு. இது மட்டும் இல்ல இன்னும் நிறைய விளையாட்டுகள் இருக்கு.

கில்லி விளையாட்டை நாங்க எங்க கிராமத்துல கிட்டினு சொல்லுவோம். ஒரு மரக்கட்டை குச்சையை செதுக்கி குறி பார்த்து  அடிக்கிறது. பின்பு ஓடி பிடிப்பது அப்புறம் பச்சை குதிரை தாண்டுவது. ஒருவர் குனிந்து கொள்ள மற்றொருவர் முதுகின் மேல தாண்டுவது அப்புறம் நொண்டி ஆடுவது  கட்டங்களை  போட்டுக்கொண்டு ஒரு காலை மடக்கிக் கொண்டு ஆடுவது, அப்புறம் கோலி குண்டு ஆடுவது தரையில் பள்ளத்தை தோண்டி கோலி குண்டு அதில் போட்டு ஒரு குண்டை குறி பார்த்து அடிப்பது இந்த மாதிரி விளையாட்டுகள் விளையாடுவதற்கு பெரிய உபகாரணங்கள் தேவையில்லை.

மர நிழல் குளங்கள் இந்த மாதிரி இடத்துல மழை ,வெயில் பார்க்காமல் விளையாண்டு மகிழ்ந்தோம். அப்புறம் பார்த்தீங்கன்னா பனை மரத்தின் மரத்தில் கிடைக்கும் நுங்கை சாப்பிட்டுவிட்டு நுங்கு வண்டி செய்து வெயில் என்று கூட பாராமல் தெருத்தெருவாக ஓட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்த காலமும் அதுவே. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தினால் வீடியோ கேம்கள் தொலைக்காட்சி போன்றவைகளுக்கு நாம் அடிமையாகி விட்டோம். நமது பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து தொலைபேசி கேம்களுக்கு அடிமையாகி இருக்கிறோம். கம்ப்யூட்டர் மயமாக இருக்கிற இந்த காலகட்டத்தில் நான் மறந்த பாரம்பரிய விளையாட்டுகளை வியர்வையும் ,புன்னகையும் நிறைந்த நம் சிறுவயது விளையாட்டுகளை மீண்டும் விளையாட வேண்டியது அவசியமாகி உள்ளது.

நமது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அந்த கிராமத்து விளையாட்டுகளை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விளையாட வைக்க வேண்டும் என்பது எனது ஆசை நன்றி வணக்கம் நண்பர்களே....
13


காலநிலைகளில் எனக்கு மிகவும் பிடித்தது வெயில் காலம்.இந்த வெயில் காலத்துக்காக நாங்கள் ஆறு மாதமாக காத்திருப்போம்.எப்போ வரும் இந்த வெயில்? எப்போ நாங்கள் அந்த சூரியனை பார்ப்போம்? என்று. அது வந்ததுமே என் மனதில் மிகவும் குதூகலமாக இருக்கும்.ஸ்கூல் விட்டு வீடு வந்ததும் நானும் அண்ணாவும் garden போய் play பண்ணுவோம்.
நண்பர்களும் நம்முடன் இணைந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு நாள் ஒரு வீடு என்று சொல்லி விளையாடப் போவோம்.
கண்ணாமூச்சி விளையாடுவோம்.

ஒருநாள் அண்ணாவின் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடினோம்.புது இடம் என்பதால் அண்ணாவின் பின்னாடியே சென்றேன்.அண்ணா ஒரு பூச்செடியின் பின் ஒளிந்துகொள்ள சொன்னாங்க.ரொம்ப நேரமாக  ஏன் என்னைத் தேடவில்லை யாரும் அப்படின்னு பார்த்தேன். அப்படியே தூங்கிவிட்டேன்.கண்விழித்த போது இரவு ஆகிவிட்டது.அண்ணா தேடி வந்தாங்க.உன்னை மறந்துவிட்டோம்.cricket play பண்ண போய்விட்டோம்.அம்மா கேட்கத் தான் நியாபகம் வந்தது அப்படின்னு அண்ணா சொல்ல,நான் அழுதுகிட்டே போய் அண்ணாக்கு அப்பாகிட்ட அடி வாங்கி கொடுத்ததும் தான் நிம்மதி.இது மறக்க முடியாத நினைவு.

park போய் barbeque family friends கூட சாப்பிட்டு basket ball,cricket,football னு play பண்ணுவோம்.வெயில் நேரத்தில் இர‌வு 9மணி வரை கூட play பண்ணுவோம்.
friends கூட சந்தோசமாக cyclying போவோம்.

தாத்தா சொல்லி கொடுத்த கிளித்தட்டு,பல்லாங்குழி,கபடி ,கோலிக்குண்டு,கிட்டிப்புள் விளையாட்டுகள் அப்பா,மாமா,அண்ணா,உறவினர்கள் கூட play பண்ண தருணங்கள் மறக்க முடியாது.என‌க்கு கிளித்தட்டு ரொம்ப பிடிக்கும்.நான் அப்பா teamக்குத் தான் போவேன்.கிளி அடிக்கும் னு box லேயே நிற்பேன்.அப்பா தான் என்னை தூக்கி next boxல விடுவாங்க.

swimming pool ல water fill பண்ணி romba நேரம் swimming பண்ணுவோம்.pool a vittu veliya வரவே மனம் இருக்காது.அம்மா போதும் வாங்கனு சொன்னதும் ஒரு 2hrs after தான் போவோம்.

summer timeல தான் ஒடியல் கூழ் பண்ணுவாங்க அம்மா.family friends கூட சேர்ந்து சாப்பிட super a இருக்கும்.சாப்பிட்டு fun game play பண்ணுவோம்.

வெயில் time beach போவோம்.அங்க மண‌ல் வீடு கட்டி விளையாடுவோம்.யாரோட building உயரமா இருக்கோ அதை மற்றவங்க உடைத்திடுவோம்.துரத்துவாங்க அடிக்க.அப்படியே கட‌லில் போய் குதிப்போம்.friends எல்லோரும் சேர்ந்து கடலில்  ஒவ்வொருத்தங்க மேலே ஏறி கோபுரம் make பண்ணுவோம்  .காற்று வ‌ந்து எங்களை தள்ளிவிடும்.நாங்கள் அலையில் மிதப்போம்.beach la fish &chip சுட சுட சாப்பிடுவோம்.sema fun a irukkum.

வெயில் start பண்ணாலே யூஸ், ஐஸ்கிரீம் என்று சாப்பிட்டுகிட்டே இருப்போம்.

வெயிலோடு விளையாடும் போது எங்களது மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.mobile,tv பாவனை இருக்காது.

குழந்தை பருவம் ,பாடசாலை பருவம் தான் வெயிலோடு விளையாடுவதற்கு உகந்த பருவம்.இப்போ எல்லாரும் work  போறதால சந்திக்கிற time குறைவு.leave daysல தான் அப்பப்போ வெயிலோடு விளையாட முடிகிறது.

இப்போ வெயில் work பண்ணும் போது  எங்க உடலில் சூடாகவும்,பயணங்களின் போது தலைகளிலும் தான் வெயில் விழுகிறது.அந்த வெப்பத்தை குறைக்க நாங்கள் fan or ac  பயன்படுத்துகிறோம். முன்னர் வெயிலில் விளையாடி திரிந்த நாங்கள் இப்படி பண்றதுக்கு reason Already work tensionஇல் தலை heat a  இருக்கும்.so வெயில பார்த்ததும் விளையாட தோணாது ஒரே வெக்கையா  இருக்குன்னு சொல்லுவோம்.

வெயிலோடு விளையாடிய தருணங்கள் என்றும் பசுமையானவை.

Thanks நெஞ்சம் மறப்பதில்லை teamக்கு இப்படி ஒரு topic தந்து என்னோட வெயில் ஓடு விளையாடிய நினைவுகளை என் மனக்கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியமைக்கு.



14

கிரிக்கெட் 🏏🏏



எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட் தான்.  சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் தான் ஆர்வம். அதுவும் அண்ணாவும்  இருப்பான் அவன் frnds  கூட தான் நானும் விளையாடுவேன்.
எல்லாம் ஒரே ground la தான்  விளையாடுவோம்..

 வீட்ல அப்பொழுதே அண்ணாவுக்கும்  எனக்கும் சண்டைகள் வரும்..  அவன் என் 🏏 bat ta தான் தூக்கிட்டு  ground ku first ye போயிருவான்.  நான் சீக்கிரமா காலையில் எழ மாட்டேன்... அது எங்க அண்ணாக்கு +point..நான் late ah எழுந்து tea biscuit lam சாப்பிட்டு.. என் 🏏 bat இருக்காது.. அச்சச்சோ இவன் என் 🏏 bat a தான் தூக்கிட்டு போயிட்டான்னு. அம்மாவிடம் அழுவேன் ஏன் இவன் என் 🏏bat a எப்படி எடுத்துட்டு போலாம்.. வேகமா அம்மா நல்லா பார்க்காமல் அவனை சொல்லகூடாது. இந்தா உன் 🏏 bat அம்மா சொல்வாங்க . இது உடைஞ்ச 🏏bat. என்னது புது 🏏 bat மா. நான் சொன்னேன்...

அப்படியே அழுது புழம்பி    அம்மாவிடம்  எனக்கு வேற 🏏bat வேணும் சொல்லி உடனே வாங்கி...new 🏏 bat  oda ground க்கு போனேன்..

அங்க போனா என் நண்பர்கள்  ரெடியா இருந்தார்கள்

எங்க அண்ணா என்ன பார்த்து வீட்டுக்கு போ. நானும் நீயும் விளையாடலாம்.. Opposite street la. யாரும் இருக்க மாட்டாங்க நம்ம மட்டும் தான் நைட் வரைக்கும் விளையாடலாம் சொல்வான் ..

எனக்கு எங்க அண்ணாவ பத்தி தெரியாதா. சும்மா என்னை ஏமாத்துறான்னு..
நான் சொன்னேன். இல்லை எனக்கு இங்க தான் விளையாட பிடிக்கும். நீ போடா நான் என்னமோ பண்றேன்.. எனக்கு இஷ்ட்டம் இருந்தா விளையாடுவேன்  இல்லைனா  வீட்டுக்கு போவேன்.. போ போ உன் நண்பன் உன்னை கூப்பிடுறான் பாரு. சொல்லி அவனை அனுப்பிட்டு பார்த்தா. வெயில் கொள்ளுத்த ஆரம்பிக்கும்..
இவனிடம்  பேசி முடிகிறக்குள்ள வெயிலே அதிகமாயிருச்சு..
 
ம் ம் ம் னு யோசித்து.. அண்ணா நண்பனிடம் நாங்க 4பேரு இருக்கோம். நாங்களும் match ku  வரோம் சொல்லி.

அண்ணா நண்பன் சொல்லறான் இல்ல வேணாம் உங்க அண்ணா  match விளையாட மாட்டான்.  நான் சொன்னேன்  என் அண்ணனிடம்   நான் கேட்கிறேன். சொல்லிட்டு டேய் டேய்  அண்ணா match ku நாங்களும் வரோம். அவன் வேகமா என்  🏏 bat ta பார்த்து இது எப்போ வாங்கின..
நீ தான் என் 🏏 bat ta எடுத்துட்டு வந்துட்ட..

 இப்போ தான் அம்மா பணம் குடுத்தாங்க. வாங்கினேன்..
 எங்க team ku players correct ah இருக்காங்க opposite team ta சொல்லறேன் சொல்லி..

சின்ன சின்ன சண்டைகளுடன் match நல்லா விளையாடுவோம்...
  வெயில்  மயக்கம் வர ஆரம்பிக்கும்.. தண்ணீர்  எவ்ளோ குடித்தாலும் தாகம் அடங்காது.

எல்லாரும் பணம் போட்டு ஐஸ்கிரீம் வாங்கி  சாப்பிட்டு
சந்தோசமாக வாழ்ந்த நாட்கள்  எல்லாம் இனி திரும்பி கிடைக்காது..
 
அவ்ளோ மகிழ்ச்சியான தருணங்கள். வீடு திருபும் போது  நான் நண்பர்கள் எல்லாம்  பேசி சிரிச்சுகிட்டே வீடு வந்து சேருவோம்..

காலசூழ்நிலை மாறுபட மாறுபட நான் தொழிலுக்கு  முக்கியதுவம் கொடுக்க வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது..

நான் நண்பர் களோட விளையாண்டதை இன்றும் நினைத்து பார்ப்பேன் அது ஒரு பொற்காலம்.. வாழ்க்கையில திரும்பி கிடைக்காத சந்தோசம்..

இந்த summer time la எனக்கு cricket தான் நியாபகம் வரும் இப்போ அடிக்கிற வெயிலுக்கு வெளிய எங்கயும் போகாமல் வீடும். கடையும் மட்டும் தான்  life la போகுது  என்று நினைத்து.
அந்த பொற்காலத்தையும்   நினைத்து. மனதில் மிக பெரிய சந்தோசத்தை இழந்துவிட்டேன் என்று என் மனம் வேதனை அளிக்கிறது..

TQ
Priyamudan
15
Happy Birthday Penguin 🐧 😊

Stay blessed always
18
Happy birthday Kutty Ithayam.. May God bless 🍀
19
நண்பன் போல யாரு மச்சி
நம்ம நண்பன் Evil போல யாரு மச்சி

கஷ்டம் வந்தா முன்னாடி நிக்கும் மச்சி
கலாய்ச்சாலும் மனசுல இடம் இருக்கும் மச்சி

சின்ன ஹெல்ப் கேட்டா பெரியதா செய்வான் மச்சி
சிரிப்பை கொண்டு டென்ஷன் ஓட்டும் மச்சி

கூட்டத்துல நம்ம பெயர் சொல்லும் மச்சி
கூட இருந்தா எல்லா நாளும் செம்ம மச்சி

WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY MACHI----

GOD BLESS YOU





JOKER

20
Happy Birthday to u Evil Machi... 💗 Keep smiling always...

Pages: 1 [2] 3 4 ... 10