11
« Last post by MysteRy on Today at 08:35:03 AM »

பப்பாளியின் அனைத்து பகுதிகளிலும் நன்மைகள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பப்பாளியின் வேர், இலைகள், பழம், பூ என்ற அனைத்திலும் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. நம் அனைவருக்குமே பப்பாளிப் பழத்தின் நன்மைகளைப் பற்றித் தெரியும். ஆனால் அதன் பூவை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பலருக்கு பப்பாளியின் பூவை சாப்பிடலாம் என்பதே இக்கட்டுரையைப் பார்த்த பின்பு தான் தெரிந்திருக்கும்.
ஒரு 100 கிராம் பப்பாளி பூவில் புரோட்டீன் 2.6 கிராம், கார்போஹைட்ரேட் 8.1 கிராம், கால்சியம் 290 மிகி, பாஸ்பர் 113 மிகி, இரும்புச்சத்து 4.2 கிராம், வைட்டமின் சி 23.3 மிகி உள்ளது. என்ன தான் பப்பாளி பூவில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அதன் கசப்புத் தன்மையால் பலரும் இதை சாப்பிட தவிர்க்கலாம். ஆனால் பப்பாளிப் பூவினால் கிடைக்கும் நன்மைகளைத் தெரிந்து கொண்டால், என்ன தான் கசப்பாக இருந்தாலும், அதை மறந்து சாப்பிடுவீர்கள்.
...
செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும்:
பப்பாளிப் பூவில் டானின்கள் உள்ளன. இவை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் பப்பாளிப் பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரமான உறுப்பின் செயல்பாட்டிற்கு உதவி புரிந்து, உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கச் செய்யும். ஆகவே உங்களுக்கு அஜீரண கோளாறுகள் அடிக்கடி ஏற்பட்டால், அதிலிருந்து விடுபட சிறிது பப்பாளிப் பூவை சாப்பிடுங்கள்.
...
பசியைத் தூண்டும்:
உங்கள் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லையா? அவர்களுக்கு பசி எடுப்பதே இல்லையா? அப்படியானால் பப்பாளிப் பூ அவர்களது பசியின்மையைப் போக்கி, பசியைத் தூண்டிவிடும். பசியின்மை பிரச்சனையைப் போக்க பல நாடுகளில் இந்த பப்பாளிப் பூ தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆய்வுகளிலும் பப்பாளிப் பூ பசியைத் தூண்டுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
...
ப்ரீ-ராடிக்கல்களை நீக்கும்:
பப்பாளிப் பூவில் இருக்கும் உட்பொருட்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலினுள் ப்ரீ-ராடிக்கல்கள் நுழைவதைத் தடுக்கும். இந்த ப்ரீ-ராடிக்கல்கள் உடலினுள் நுழைந்தால், அது பல்வேறு நோய்களை உண்டாக்கும். இதனைத் தவிர்க்க வேண்டுமானால், பப்பாளிப் பூவை சாப்பிடுங்கள்.
..
இரத்த ஓட்டம் மென்மையாக நடைபெறும்:
உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், அன்றாட டயட்டில் பப்பாளி பூவை சாப்பிடுங்கள். இது இரத்த அழுத்தத்தை சரியான அளவில் பராமரிக்க உதவும். பப்பாளிப் பூவில் உள்ள உட்பொருட்கள், உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
..
புற்றுநோயைத் தடுக்கும்:
பப்பாளிப் பூவில் உள்ள ப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், ப்ரீ-ராடிக்கல்கள் உடலினுள் நுழைந்து பல்வேறு புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தைத் தடுக்கும். மேலும் பப்பாளிப் பூவில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை சீராக பராமரித்து, உடலின் பல்வேறு செயல்பாட்டையும் சிறப்பாக வைக்கும்.
...
சர்க்கரை நோயை சரிசெய்யும்:
பப்பாளிப் பூ சர்க்கரை நோயாளிகளின் உடலில் குறைவாக உள்ள இன்சுலின் அளவிற்கு உதவும். எந்த ஒரு ஆராய்ச்சியிலும், பப்பாளிப் பூ சர்க்கரை நோயை சரிசெய்யும் என கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், பழங்காலத்தில் மக்கள், தங்களது இரத்த சர்க்கரை அளவை பப்பாளிப் பூ சாப்பிட்டு தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். வேண்டுமானால், பப்பாளிப் பூவை சாப்பிட்டுப் பாருங்கள். இதனால் நிச்சயம் உங்கள் உடலினுள் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
...
எடை குறைய உதவும்:
பப்பாளிப் பூவில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை போதுமான அளவில் உள்ளது. பப்பாளிப் பூ ஒருவரது உடல் எடைக் குறைக்க உதவியாக இருக்கும். எனவே தினமும் சிறிது பப்பாளிப் பூவை சாப்பிட்டு வாருங்கள். அதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள். இதனால் நிச்சயம் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
...
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்:
பப்பாளிப் பூவில் உள்ள ஃபோலேட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இதனால் தான் இது பல்வேறு கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. எப்போது ஒருவர் பப்பாளிப் பூவை சாப்பிடுகிறாரோ, அப்போது அவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராடும் ஃபோலேட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு மேம்படும்.
...
பக்கவாதத்தைத் தடுக்கும்..
பப்பாளிப் பூவில் பக்கவாதத்தைத் தடுக்கும் ஏஜென்ட்டுகள் அதிக அளவில் உள்ளது. ஒருவருக்கு பக்கவாதமானது மோசமான இரத்த ஓட்ட சுழற்சியால் ஏற்படுவதாகும். ஆனால் பப்பாளிப் பூ உடலில் இரத்த ஓட்டத்தை சிறப்பாக மேம்படுத்தி, பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
..
மாரடைப்பைத் தடுக்கும்:
முன்பே கூறியது போல், பப்பாளிப் பூவில் இரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சிறப்பாக வைக்கும் உட்பொருட்கள் ஏராளமான அளவில் உள்ளது. ஒருவது உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தாலே, இதயம் ஆரோக்கியமாக இருந்து, மாரடைப்பு மற்றும் இதர இதய நோயின் அபாயம் தடுக்கப்படும்.
...
பப்பாளிப் பூவை எப்படி சாப்பிடுவது?
பப்பாளிப் பூ மிகவும் கசப்பாக இருக்கும். இந்த கசப்பு இல்லாமல் பப்பாளிப் பூவை எப்படி சமைத்து சாப்பிடுவது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
🍑
தேவையான பொருட்கள்:
பப்பாளிப் பூ – 250 கிராம்
வெங்காயம் – 1
பூண்டு – 3 பற்கள்
வரமிளகாய் – 2
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
பப்பாளிப் பூவை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பப்பாளிப் பூவில் உள்ள கசப்பை நீக்க, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பப்பாளிப் பூ மற்றும் புளிச்சாறு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பூண்டு, வரமிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் அந்த பப்பாளிப் பூவுடன் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து நன்கு ஒரு கொதி விட்டு இறக்கி, சூப் போன்று குடியுங்கள்.
12
« Last post by MysteRy on Today at 08:30:02 AM »

மோட்டார் சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனங்களை பல ஆண்டுகளாக ஓட்டும் ஆண்களில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேர் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். ஒரே நிலையில் இருந்து வெகுநேரம் வாகனத்தை ஓட்டிச் செல்வது, கரடு முரடான சாலைகளில் செல்லும்போது முதுகுத்தண்டுப்பகுதி அதிக அதிர்வுக்கு உள்ளாவது போன்றவை முதுகு வலிக்கான காரணங்கள். வாகனம் ஓட்டும்போது இரண்டு கைகளுக்கும், விரல்களுக்கும் தொடர்ந்து ஒரே மாதிரி வேலை கொடுத்துக்கொண்டிருப்பதால், மணிக்கட்டு மற்றும் கைவிரல்களிலும் வலி ஏற்படும். தோள்பட்டை வலி, கழுத்து வலியும் ஏற்படலாம். கீயரை மாற்றுவது, போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் அடிக்கடி கால்களை ஊன்றுவது போன்ற செயல்களால் கால்களிலும் வலி தோன்றும்.இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களில் சிலருக்கு கை பகுதி நரம்புகள் மரத்துப்போகும் நிலையும் ஏற்படுகிறது. குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமானால் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கழுத்து முதல் பாதம் வரை வலியால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வலிகளுக்கான தீர்வுகள் :
தொடர்ச்சியாக இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டாம். 45 நிமிடங்களை தாண்டிவிட்டால், வண்டியை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு, இறங்கி உடலை இயல்புக்கு கொண்டுவந்துவிட்டு, மீண்டும் பயணத்தை தொடருங்கள்.
இரண்டு மணிநேரத்திற்கு மேற்பட்ட பயணத்திற்கு நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்துங்கள். மழைக்காலத்தில் முடிந்த அளவு இரு சக்கர வாகனப் பயணத்தை தவிர்த்திடுங்கள். குண்டுங்குழியுமான சாலைகளில் பயணித்தால் உடலில் பலகீனமாக இருக்கும் பகுதிகள் அனைத்துமே வலிக்கும். வாகனத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்யுங்கள். ‘ஷாக் அப்சர்பெர்’ போன்றவைகளை சரிசெய்யுங்கள். சர்வீஸ் செய்யப்படாத வாகனங் களால் உடல் வலி அதிகரிக்கும். வலிகள் ஏற்படும்போது ஓய்வெடுத்துப் பாருங்கள். சாதாரண வலிகள் ஓய்வு மூலம் சரியாகி விடும். அப்படி சரியாகாவிட்டால் டாக்டரை சந்தியுங்கள். மாத்திரை மற்றும் பிசியோதெரபி மூலம் சரி செய்துவிடலாம். எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்றவை ஒருவேளை தேவைப்படலாம். பரிசோதனையில் கண்டறிந்த பாதிப்புகளின் அடிப்படையில் சிகிச்சைகள் தேவைப்படும்.மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள். நீங்கள் சுயநினைவில் இருக்கும்போது ஒருவேளை வாகனம் விபத்தில் சிக்கினால், சுயபாதுகாப்பு உணர்வு மேலோங்கி முகத்தில் அடிபடாதவகையில் சுதாரித்துக்கொள்வீர்கள். மதுவின் போதையில் இருந்தால் உங்களால் முகத்தை பாதுகாக்க முடியாது. அது மிகுந்த ஆபத்தையும், கஷ்டத்தையும் உருவாக்கிவிடும்.
13
« Last post by MysteRy on Today at 08:24:45 AM »

எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் கெட்டது எனக் கூறலாம்.
ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது. கண்கள் துடிப்பது, வந்து ஒரு சில நிமிடங்களில் தானாகவே போய் விடும். இது சாதாரணமாய் எல்லோருக்கும் வரும். பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் அது மாதக்கணக்கில் நீடித்தால், நிச்சயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கண் துடிப்பது எதனால்?
கண்களின் மெல்லிய நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கும் வகையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டால், கண்கள் துடிக்கும். சில சமயங்களில் வெட்டி இழுப்பது போலவும் இருக்கும். கண்கள் துடிப்பதற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் அழைப்பார்கள்.
குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறண்டு போவதால், மன அழுத்தம், அதிகமாய் காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, வெகு நேரம் கம்ப்யூட்டரை உற்று பார்ப்பது, படித்துக் கொண்டேயிருப்பது இது போன்று, கண்களுக்கு அதிகம் சிரமம் கொடுத்தால், சரியாக தூங்காமல் இருந்தால், மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவற்றினால் ஏற்படும். குடிப்பழக்கமும் முக்கிய காரணமாகும். தொடர்ச்சியாக கண்கள் துடித்துக் கொண்டேயிருந்தால், அவை நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். ஆகவே என்ன பிரச்சனை என கண்டறிவது அவசியம். நீண்ட நாள் கண் துடிப்போ, வெட்டி இழுப்பது போலவோ இருந்தால், அது மூளை சம்பந்தப்பட்ட கோளாறாகவும் இருக்கலாம்.
கண் துடித்தலுக்கு சிகிச்சை:
கண் துடிப்பிற்கு, நன்றாக தூங்கி, கண்களுக்கு போதிய ஓய்வு கொடுக்கும் போது அது தானாகவே போய்விடும் அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் தந்தாலும் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து, துடிப்பது நிற்கும். ஆனால் இதுவே நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் போது பொடாக்ஸ் ஊசி செலுத்துவதன் மூலம் சரி செய்யலாம். அல்லது அறுவை சிகிச்சையில், பிரச்சனைக்குரிய சில நரம்புகளையும், தசைகளையும் வெடிவிடுவார்கள். இதனால் வெட்டி இழுக்கும் பிரச்சனைக்கும் மற்றும் கண் துடிப்பிற்கும் தீர்வு கிடைக்கும்.
14
« Last post by MysteRy on Today at 08:20:01 AM »

ஜாதிக்காய் ஒரு பிரபலமான மசாலா ஆகும், இதில் வலி நிவாரணம், அஜீரணத்தை ஆற்றுவது, தூக்கமின்மையை நீக்குவது மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். இது கல்லீரலைப் பாதுகாத்தல், மனச்சோர்வைப் போக்க, கொழுப்பின் அளவை மேம்படுத்துதல், இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துதல்.
ஜாதிக்காய் என்பது மசாலா மட்டுமே, இது உணவுகளில் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது, இது உங்கள் ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கக்கூடும், முக்கியமாக வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் தொடர்பான கரிம சேர்மங்களின் சத்தான கூறுகளில் நார்ச்சத்து, மாங்கனீசு, தியாமின், வைட்டமின் பி 6, ஃபோலேட், மெக்னீசியம், தாமிரம் மற்றும் மெசெலிக்னன் ஆகியவை அடங்கும்.
ஜாதிக்காயின் ஆரோக்கிய நன்மைகள்
வலியை நீக்குகிறது
புற்றுநோய், அழற்சி நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தொடர்ச்சியான வலியால் பாதிக்கப்படுகின்றனர். ஜாதிக்காய் மரத்தின் விதைகளிலிருந்து பெறப்பட்ட ஜாதிக்காய் எண்ணெய், வலிநிவாரணி மற்றும் நீண்டகால வலி நிவாரணி என நிரூபிக்கப்பட்டுள்ளது. பிற வலி நிவாரணிகளுடன் ஒப்பிடும்போது, ஜாதிக்காய் எண்ணெயின் மேற்பூச்சு பயன்பாடு, அழற்சி வலிக்கு சிறந்த விளைவைக் காட்டுகிறது ஜாதிக்காய் எண்ணெய் மூட்டு வீக்கத்தையும், குறைக்கிறது.
தூக்கமின்மையை விடுவிக்கிறது
பல தலைமுறைகளாக, தூக்கமின்மை மற்றும் தூக்கமின்மைக்கான வீட்டு மருந்தாக ஜாதிக்காய் பரிந்துரைக்கப்படுகிறது. சூடான பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி போட்டு குடிப்பதால் நல்ல தூக்கத்தை தருகிறது. ஒட்டுமொத்த பலவீன நிலை மற்றும் தூக்கமின்மை ஆழ்ந்த தூக்கத்தின் காலத்தை அதிகரிக்க ஜாதிக்காய் சாறுகள் உதவுகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது
ஜாதிக்காயில் மருத்துவ குணங்கள் இருப்பதாக அறியப்படுகிறது மற்றும் செரிமான பிரச்சினைகளான அஜீரணம் மற்றும் வயிற்று புண்கள் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருத்துவ பண்புகள் ஜாதிக்காய் விதையின் தனித்துவமான வாசனையிலிருந்து வருகின்றன.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஜாதிக்காய் பெரும்பாலும் நியூரோபிராக்டிவ் பண்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜாதிக்காயில் மைரிஸ்டிசின், யூஜெனோல் மற்றும் எலிமிசின் போன்ற எண்ணெய்கள் உள்ளன முடிவுகள் இவை செரோடோனின், டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் அளவை அதிகரிக்க உதவியது. ஹிப்போகாம்பஸ் என்பது மூளையில் அமைந்துள்ள ஒரு உறுப்பு ஆகும், இது முக்கியமாக நினைவகம் மற்றும் இடஞ்சார்ந்த வழிசெலுத்தலுடன் தொடர்புடையது, இது மூளையில் உள்ள அனைத்து தகவல்களையும் பதிவுசெய்து மீட்டெடுப்பதற்கான நினைவகத்தின் பகுதியாகும்.
ஆகவே, ஜாதிக்காயில் உள்ள எண்ணெய்கள் மறதி ,(அல்சைமர்,) _பார்கின்சன் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களைத் தடுக்கிறது.
வாய்வழி ஆரோக்கியம்
ஜாதிக்காயில் காணப்படும் மெத்தனால் சாறு ஆன்டிகாரியோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் பல் சிதைவு மற்றும் பல் நோய்களைத் தடுக்க உதவுகிறது. இந்த மசாலாவில் காணப்படும் மற்றொரு பாக்டீரியா எதிர்ப்பு முகவரான மேசெலிக்னன், குழிக்கு காரணமான பாக்டீரியாக்களின் செயல்பாட்டைத் தடுக்க உதவுகிறது. ஜாதிக்காய் எண்ணெயின் மேற்பூச்சு பயன்பாடு பல் வலியை நீக்கும்.
கல்லீரல் பாதுகாப்பு
ஜாதிக்காய் என்பது கல்லீரல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் அதன் பயன்பாடு உட்பட பல்வேறு மருத்துவ பயன்பாடுகளைக் கொண்ட ஒரு பிரபலமான தாவரமாகும். மைரிஸ்லிக்னனில் நிறைந்த ஜாதிக்காய் கல்லீரல் காயங்களை போக்க உதவும். ஜாதிக்காய் எண்ணெயில் காணப்படும் மைரிஸ்டிசின் கல்லீரல் பாதுகாப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
மன அழுத்த எதிர்ப்பு பண்புகள்
ஆயுர்வேத மருத்துவத்தில், ஜாதிக்காய் மனச்சோர்வுக்கு வரும்போது அதன் மருத்துவ குணங்களுக்காக நீண்ட காலமாக பொக்கிஷமாக உள்ளது., ஜாதிக்காய் சாறுகள் மன அழுத்த எதிர்ப்பு செயல்பாட்டை நிரூபிக்கின்றன. இது வழக்கமான அலோபதி மருந்துகளை விட குறைவான பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.
புற்றுநோய் சாத்தியம்
ஜாதிக்காயின் குறைவாக அறியப்பட்ட தரம் புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிரான அதன் சாத்தியமான பயன்பாடாகும். ஜாதிக்காயில் காணப்படும் மிரிஸ்டிசின் வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளது இது லுகேமியா செல்களில் உயிரணு இறப்பை (அப்போப்டொசிஸ்) தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது, புற்றுநோய்களின் வளர்ச்சியையும், பொதுவாக குழந்தைகளை பாதிக்கும் லுகேமியாவின் மெட்டாஸ்டாசிஸையும் தடுக்க உதவும்.
சரும பராமரிப்பு
மூலிகை மற்றும் பாரம்பரிய மருந்துகள் நீண்ட காலமாக ஜாதிக்காயைப் பயன்படுத்தி சருமத்தின் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கின்றன. மிகவும் பொதுவாக, இது தண்ணீரில் கலந்த பேஸ்டாக அல்லது தேன் கூட பயன்படுத்தப்படுகிறது, இது தோல் பராமரிப்புக்கும் சிறந்தது.
கொழுப்பின் அளவைக் குறைக்கிறது
ஜாதிக்காய்க்கு உடலில் உள்ள மோசமான கொழுப்புப்புரதங்களைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது
வயிற்றுப்போக்கிலிருந்து நிவாரணம்
வயிற்றுப்போக்கிலிருந்து நிவாரணம் அளிக்க ஜாதிக்காய் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதை மேற்பூச்சுடன் பயன்படுத்தலாம் அல்லது இஞ்சி மற்றும் குளிர்ந்த நீரில் உட்கொள்ளலாம்...
15
« Last post by MysteRy on Today at 08:16:49 AM »

நாகதாளி என்பது கறுமை நிறத்தில் முட்கள் மிக நுண்ணியதாகவும் 12 அடி வரை உயரமாகவும் அதன் வேரில் கறுநாகம் தலை தூக்கி நிற்பது போலும் இருக்கும். இது மிக தடினமானது, இதன் இலைகள் அல்லது தட்டுக்கள் நீள்வட்டமாக இருக்கும்.
.
அன்றே மருந்தை கண்டுபிடித்து சொன்ன நம் அகத்தியப்பெருமான் .! சிறப்பு பதிவு.!
இது திரு நடராஜன் அவர்கள் வலைப்பதில் இருந்து எடுத்த அருமையான பொக்கிஷம் .!
.
மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில் மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன் பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை.
.
இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.*
*எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்வோம்
.*
*கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு வகையான பூஞ்சை காளான் நோயாகும்.*
*சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார்.
.
ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.*
*
.அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.*
*இதன் பின் தான் இதற்கான மருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,
*
*அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார். இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.
*
*வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
*
*விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.
*
*பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும் பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
*
*நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
*
*பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !*
*– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17*
*கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான் என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்*
*
இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.*
*
நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம்.
குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.
*
*அதன் பின் இந்த உப்பை நன்றாக பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார்,
*
*நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.*
*அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.*
*இல்லை என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம்.*
*இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) ) தான் என்றார்.*
*நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்*
*உடனடியாக அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.*
*அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,*
*இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள் என்றார் அவர்.*
*அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.*
*2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார்.*
*
இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*
*
பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். இதுவரை கேன்சர் தொடர்பான ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.
*
*ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம் இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை சென்றடைந்துள்ளது.
*
*மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
*
*வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.
*
*இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து என்று தெரிவிக்கிறார்.
அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில் நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில் இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும்.
* *முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.
*
*இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.*
இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் மற்றும் மூலிகை ஆராட்சியாளர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம். அதை சார்ந்த அன்பர்கள் இதை செயல்பாட்டில் கொள்ள முயல வேண்டுகிறோம்.!
நம் தமிழ் மொழி உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்து வந்துள்ளது என்பதற்க்கு இது மேலும் ஓர் சான்று. கிடைப்பதற்கரிய பொக்கிஷத்தை பாதுகாப்பது நம் கடமையல்லவா.?
16
« Last post by MysteRy on Today at 08:07:36 AM »
17
« Last post by MysteRy on Today at 08:06:09 AM »
18
« Last post by MysteRy on Today at 08:01:40 AM »
19
« Last post by MysteRy on Today at 08:00:36 AM »
20
« Last post by MysteRy on Today at 07:59:35 AM »