Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் விரிவான பட்டியல் இங்கே. விசா இல்லாத அணுகலை விரிவுபடுத்துவது இந்தியப் பயணிகளுக்கு கலாச்சார பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கும், பல உலகளாவிய இடங்களை ஆராய்வதற்கும் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.
🏝🏜🏖🏕

அங்கோலா

பார்படாஸ்

பூட்டான்

பொலிவியா

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்

புருண்டி

கம்போடியா

கேப் வெர்டே தீவுகள்

கொமோரோ தீவுகள்

குக் தீவுகள்

ஜிபூட்டி

டொமினிகா

எல் சால்வடார்

எத்தியோப்பியா

பிஜி

காபோன்

கிரெனடா

கினியா-பிசாவ்

ஹைட்டி

இந்தோனேசியா

ஈரான்

ஜமைக்கா

ஜோர்டான்

கஜகஸ்தான்

கென்யா

கிரிபதி

லாவோஸ்

மக்காவோ (SAR சீனா)

மடகாஸ்கர்

மலேசியா

மாலத்தீவுகள்

மார்ஷல் தீவுகள்

மொரிட்டானியா

மொரிஷியஸ்

மைக்ரோனேசியா

மாண்ட்செராட்

மொசாம்பிக்

மியான்மர்

நேபாளம்

நியு

ஓமன்

பலாவ் தீவுகள்

கத்தார்

ருவாண்டா

சமோவா

செனகல்

சீஷெல்ஸ்

சியரா லியோன்

சோமாலியா

இலங்கை

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

செயின்ட் லூசியா

செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்

தான்சானியா

தாய்லாந்து

திமோர்-லெஸ்டே

டோகோ

டிரினிடாட் மற்றும் டொபாகோ

துனிசியா

துவாலு

வனுவாடு

ஜிம்பாப்வே

1.பூடான்:

பூட்டானில் இமயமலை, பனி மூடிய மலைகள், பண்டைய மடங்கள், மலையேற்றப் பாதைகள் பல்வேறு விறுவிறுப்பான இடங்கள் உள்ளது. நீங்கள் பூடானுக்கு இந்தியன் பாஸ்போர்ட் இருந்தாலே சென்று வர முடியும்.
🏜

2) மக்காவு:

இது விடுமுறை நாட்களை அனுபவிக்க ஒரு மிகச்சிறந்த இடமாகும். இந்த அற்புதமான இடத்தில் கண்கவர் இடங்கள் ஷாப்பிங் மற்றும் 300 வருடம் பழமை வாய்ந்த இடங்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இங்கு இந்தியர்கள்
30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம்.
🏝

3) மாலத்தீவுகள்:

இது இந்தியப் பெருங்கடலில் வெப்பமண்டல சொர்க்கமாகும், மாலத்தீவு மொத்தம் 1000 பவளத் தீவுகளால் ஆனது. இது அழகான கடற்கரைகள், நீல தடாகங்கள் மற்றும் பவளப்பாறைகளுக்கு பெயர் பெற்றது.

ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங் மற்றும் பலவற்றின் அற்புதமான விளையாட்டுகளுக்கும் இது பிரபலமானது.
🏝

4) நேபாளம்:

நேபாளம் அனைவராலும் அறியப்பட்ட மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட் ஆகும். இங்கு கண்டுகளிக்க வரலாறு சிலைகள் மற்றும் பலவித ஆச்சர்யங்களை உள்ளது.

இந்த இடத்திற்கு மிக எளிமையாக செல்ல முடியும் மற்றும் பணமும் குறைவாக இருந்தால் போதும்.
12

▪மழைக்காலம் தொடங்கியதும் பாம்புகள் போன்ற குளிர் ரத்த உயிரினங்கள் மனிதன் வாழும் பகுதிக்கு ஏன் படையெடுக்க வேண்டும்...??

▪ அதற்கு சில காரணங்கள் உண்டு.. அவைகள்:

1. மழை நீரால் பாம்பின் வாழ்விடமான வளைகள் (பொந்துகள்), வற்றிய நீர்நிலைகள் நீரால் மூழ்குவது...

2. நமது வீட்டின் கத கதப்பான சூழல் குளிர் ரத்த உயிரினங்களை ஈர்க்கிறது...

3. மழைக் காலம் பாம்பின் உணவுகளான தவளை தேரை போன்ற உயிரினங்களை ஈர்க்கிறது.., பின் அவைகளை உணவாக்க பாம்புகள் நடமாட்டம் அதிகரிக்கிறது..

4. சில வகை பாம்பு இனங்களுக்கு இது இனப்பெருக்க காலம்...

5. கதகதப்பான தார் சாலை குளிர் ரத்த விலங்குகளுக்கு உடல் வெப்பத்தை சீராக்க உதவுகிறது...

நஞ்சுள்ள பாம்புகள் எவை?

1.நல்லபாம்பு Indian_Cobra,

2. கட்டுவிரியன் Krait,
3. கண்ணாடி விரியன் Russell_Viper,

4. சுறுட்டைவிரியன் Saw_scaled_Viper.

▪இந்த நான்கு பாம்பு மட்டுமே அதிக மனித உயிர் இழப்புக்கு காரணமாகிறது. இவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருந்தால் போதும்..

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம்?

1. வீட்டை சுற்றி துய்மையாக, பழைய பொருட்கள் அடசலாக வைக்காமல், குப்பைகள் இல்லாமல் பார்த்து கொள்வது.

2. வீட்டில் இருந்து வெளி வரும் கழிவு நீர் குழாய்கள் சல்லடை போன்ற வலை கொண்டு மூடி வைத்தல்.

3. தூங்கும் முன் கட்டில்கள், தலையணை, மெத்தை விரிப்பு, மெத்தை அடியில் சோதனை இடுவது. தூங்கும் அறை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.

4. வாயிற் கதவின் கீழ் அல்லது பக்கவாட்டு இடைவெளி இல்லாமல் நிரந்தரமாக அடைத்து வைப்பது. சன்னல் இடைவெளி கவனம் தேவை (கொசு வலை அல்லது நமக்கு தேவை எனும் பொது திறந்து கொள்வது)

5. கழிவறை மற்றும் குளியலறை போதிய வெளிச்சம் மற்றும் சுத்தமாக வைத்து கொள்வது.
கழிவறை வீட்டுக்கு வெளியில் இருந்தால் பாதை முழுவதும் வெளிச்சம் படும் விளக்குகள்.

6. காலணிகளை பொதுவாக ஷு (shoe) தரையில் வைக்காமல், உயரமான இடத்தில் வைப்பது. ஷு போன்ற மூடிய காலணிகள் நன்கு சோதித்த பின்பு அணிவது.

7. வாகனத்தை குறிப்பாக கைப்பிடி, முன் பகுதி நன்கு சோதனை செய்து பின் இயக்குவது.

8. குப்பைகள் மற்றும் எலிகளை வீட்டுக்குள்ளும், வீட்டின் சுற்றுப் பகுதியில் இல்லாமல் பார்த்து கொள்வது.

9. இரவில் டார்ச் விளக்கு இல்லாமல் வெளியில் செல்வது தவறு.

10. தோட்டத்து வேலை செய்பவர்கள் வேலை செய்யும் இடத்தை நன்கு சோதனை இட வேண்டும், சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.

பாம்பு கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

1. மன அமைதி.

2. ரத்த ஓட்டத்தை சீராக வைத்துகொள்ள பதட்டப்படாமல், அழுகை, கத்துதல், ஓட்டம், ஏதும் இருத்தல் கூடாது.

3. உதவிக்கு ஒரு நபரையோ (தைரியமான) அல்லது 108 அவசர ஊர்தி, அல்லது இருக்கும் வாகனத்தில் அரசு மருத்துவமனை (மைய) செல்ல வேண்டும்.

4. கடித்த பாம்பை தேடி ஓட வேண்டாம்.

செய்ய கூடாதவை:

1. இருக்க கயிறு கட்டுதல் வேண்டாம்.

2. கத்தியால் வெட்டி, உறிஞ்ச வேண்டாம்.

3. தனியார் மருத்துவமனை அல்லது வேறு வகை வைத்தியம் கால தாமதம் ஏற்படும்.

▪பாம்பு க்கடிக்கு ANTI SNAKE VENOM (நஞ்சு முறிவு மருந்து) சரியான நேரத்தில் கொடுக்கப்பட உயிர் பிழைத்து கொள்ளலாம்.

பாம்பு கடித்து எத்தனை மணி நேரத்திற்குள் ஒருவரை நச்சு முறிவு மருந்து கொடுத்து பிழைக்க வைக்கலாம் என்பது கடி பட்டவரின் மன நிலை, வயது போன்றவற்றால் மாறும். பொதுவாக 2 இல் இருந்து 4 மணி நேரம்,.. இது குழந்தைக்கும் முதியவர்க்கும் வேறுபடும்...
13

மஞ்சள் காமாலை நோயால் அவதியுற்று வரும் நபர்கள் வில்வ மரத்தில் இருக்கும் இளம் வில்வ இலைகளை சுமார்
10 கிராம் முதல்
15 கிராம் அளவு இருக்குமாறு எடுத்துக்கொண்டு., அதோடு சுமார் 10 மிளகை சேர்த்து அரைத்து இருவேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோயானது குணமடையும்.

இரத்த சோகை பிரச்னையால் அவதியுறும் நபர்கள் வில்வ பழத்தை காயவைத்து பொடியாக அரைத்து பசும்பாலில் சேர்த்து காய்ச்சி தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனையானது குணமடையும்.

கர்ப்பமான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல்., இரத்த சோகை பிரச்சனையை நீக்குவதற்கு ஒரு தே.கரண்டி அளவிற்கு வில்வ பழத்தின் பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமடையும்.

டைபாய்டு நோயை குணப்படுத்துவதற்கு வில்வ இலையை நீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குழம்பு போன்று சுண்டும் பக்குவத்தில் வந்தவுடன்., தேனை சேர்த்து மூன்று வேலை என்று தினமும் சாப்பிட்டு வந்தால் டைபாய்டு நோயானது உடனடியாக குணமடையும்.

ஞபாக சக்தியை அதிகரிப்பதர்க்கு வில்வ பழத்தை எடுத்து அதனுடன் கற்கண்டை சேர்த்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்னதாக சாப்பிட்டு வந்தால் மனது அமைதியாகி., நமது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

சர்க்கரை நோயால் அவதியுறும் நபர்கள் தினமும் ஐந்து இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயானது உடனடியாக குணமாகும். வில்வப்பழத்தை பொடியாக அரைத்து வைத்து சுமார் 10 கிராம் அளவிற்கு எடுத்து கொண்டு 50 கிராம் நெய்யுடன் மஞ்சள் சேர்த்து நீரில் கலந்து பருகி வந்தால்., எலும்பு முறிவு பிரச்சனையானது உடனடியாக நீங்கும்.
14

கேமராக்கள் எங்கெல்லாம் மறைத்து வைக்கப்படும்?:

ரகசியமாக மறைத்து வைக்கப்படும் கேமராக்கள் அளவில் மிகவும் சிறியவையாக இருக்கும். ஆனால் அதில் அனைத்து செயல்பாடுகளும் தெளிவாக பதிவாகும். கழிவறை, கடைகளில் ஆடை மாற்றும் அறை, ஹோட்டலில் துணையுடன் தங்கியிருக்கும் போது என எல்லா இடங்களிமே செய்யப்படும் எல்லா செயல்களுமே அந்த கேமராவில் பதிவாகும்.

🖲
கேமராக்கள் ரகசியமாக வைக்கப்படும் இடங்கள்:

கண்ணாடியின் பின்புறம்,
கதவுகள், சுவரின் ஏதாவது ஒரு மூலையில், அறையின் மேற்கூரையில்,
மின் விளக்கில்,
புகைப்பட சட்டங்களில்,
டிஷ்யூ காகிதம் உள்ள பெட்டியில், பூக்குவளை, பூச்செண்டுகளில்,
புகை கண்டறியும் கருவிகளில்.
🖲
கேமரா இருப்பதை எப்படி கண்டறிவது?

கவனமாக இருக்க வேண்டியது தான் அடிப்படையான விஷயம் என சைபர் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொது கழிப்பறையை பயன்படுத்தினாலும், துணி வாங்கும்போது, அங்கு அதை போட்டுப்பார்க்க உடை மாற்றும் அறைக்கு சென்றாலும், ஹோட்டலின் எந்த அறைக்கு சென்றாலும் கவனமாக இருப்பது அவசியம். அங்குள்ள பொருட்களை ஆராயவேண்டும். அறையின் மேற்கூரையின் மூலைகளில் ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என்பதை கவனிக்கவும். துளை ஏதேனும் உள்ளதா என்று கவனிக்கவும். துளை இருந்தால், அதனுள்ளே ஏதாவது வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும்.

பொதுவாக, இதுபோன்ற கேமராக்கள் ரகசியமாக வைக்க தேர்ந்தெடுக்கப்படுவது, கண்ணாடியின் பின்புறம், புகைப்பட சட்டங்கள் கதவின் பின்புறம் என யாருக்கும் சந்தேகம் வராத இடங்களில் தான். எனவே இதுபோன்ற இடங்களை சோதனை செய்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.
தேவையில்லாமல் கம்பியோ, ஒயரோ எங்காவது இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். அப்படி ஏதாவது கம்பியோ ஒயரோ இருந்தால், அது எங்கே போகிறது என்பதை கண்டுபிடிக்கவும். இது கேமரா இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்கலாம்.

ஒயர் இல்லாத கேமராக்களும் உள்ளன. அவை பேட்டரியால் இயக்கப்படுபவை. காந்தத்தின் உதவியால் இந்த கேமராக்கள் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.

மின்சார விளக்கை அணைத்து பார்க்கவும். ஆடை மாற்றும் அறையில் அல்லது ஹோட்டல் அறைக்கு செல்லும்போது, உள்ளே சென்றதுமே விளக்குகளை அணைத்துவிட்டு அறையை நன்றாக சுற்றி பார்க்கவும்.

எல்.ஈ.டி. விளக்கு ஒளி இருப்பது தெரிந்தால், அது கேமராவாக இருக்கலாம். இருளிலும் செயல்பாடுகளை பதிவு செய்யும் கேமராக்களும் உள்ளன.

இந்த கேமராக்களுக்குள் எல்.ஈ.டி. விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். அது இருளில் ஒளிரும் என்பதால் விளக்கை அணைத்துவிட்டு பார்ப்பதால் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தால் அதை அறிந்துக் கொள்ளலாம்.
🖲
கண்ணாடி பரிசோதனை:

உடை மாற்றும் அறைகள், குளியலறை, கேமரா என எல்லா இடங்களிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். நீங்கள் துணிகளை மாற்றுவதற்கு முன்னர், கழிப்பறையை பயன்படுத்துவதற்கு முன்னர் அங்கிருக்கும் கண்ணாடியை பரிசோதனை செய்யவேண்டும்.

கண்ணாடியின் பின்புறத்தில் கேமரா ரகசியமாக பொருத்தப்பட்டிருக்கலாம். ஹோட்டல் அறைகளில் மிகப் பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். அதன் மறுபுறம் இருப்பவர்களுக்கு இந்தப் புறம் நடைபெறும் அனைத்தும் நன்றாக தெரியலாம். எனவே கண்ணாடியை கவனமாக பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம். கண்ணாடியின் மீது ஒரு விரலை வைத்து பரிசோதிக்கவும். கண்ணாடி மீது வைக்கும் உங்கள் விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் உங்கள் உருவத்திற்கும் இடையே சிறிது இடைவெளி இருந்தால், கண்ணாடி, சாதாரண கண்ணாடி என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் உங்கள் விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் உங்கள் உருவத்திற்கும் இடையே இடைவெளியே இல்லை என்றால் பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும். உடனே மின்விளக்கை அணைத்து விட்டு, செல்பேசியின் ப்ளாஷை ஆன் செய்து, நான்கு பக்கமும் கவனமாக பார்க்கவும். அப்போது ஏதாவது ஓரிடத்தில் இருந்து பிரதிபலிப்பு தோன்றினால், அது கேமராவில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடியில் இருந்து வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
🖲
செயலி (App) மூலம் கண்டறிவது:

ரகசிய கேமராக்களை கண்டறிவதற்கான பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அந்த செயலிகளும் போலியானவையாக இருக்கலாம் என்று சைபர் பிரிவு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கேமரா எதுவும் இல்லை என்று அந்த செயலிகள் சொல்வதை கண்டு நீங்கள் நிம்மதியாக இருந்தால், உங்கள் அந்தரங்கம் பறிபோகலாம். அதுமட்டுமல்ல, உங்கள் செல்பேசியில் வைரஸையும் ஏற்படுத்தலாம். கேமரா இருப்பதை அறியும் டிடெக்டர்களும் கிடைக்கின்றன, அவற்றை பயன்படுத்தலாம். ஆனால் விலை உயர்ந்த இந்த டிடெக்டர்கள், பொதுவாக போலீஸாரிடம் தான் இருக்கும்.
🖲
கேமரா இருப்பதை கண்டறிந்தால் என்ன செய்ய வேண்டும்?

கேமரா மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தால் அச்சப்பட வேண்டாம். உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளவும். கேமராவை தொட வேண்டாம். ஏனெனில் அதில் பதிந்திருக்கும் குற்றவாளியின் கைரேகையை, உங்கள் கைரேகை அழித்துவிடும். போலீஸ் வரும்வரை அந்த இடத்திலேயே இருக்கவும்.

சைபர் நிபுணர் கர்ணிகா இவ்வாறு கூறுகிறார்:
"ஒரு பெண்ணின் சம்மதமின்றி கேமராவில் அவரை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதும், அதை வேறு ஒருவருடன் பகிர்வதும் குற்றம். அதை செய்பவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், பிரிவு 67A மற்றும் 66E (தனியுரிமை மீறல்) மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 354Cயின்படி, வழக்கு பதிவு செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பக்கப்பட்டால் மூன்றாண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்."

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2016இல் பதினோராயிரம் பேர் சைபர் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கு மேற்பட்டவர்கள், இது போன்ற ரகசிய கேமராக்களால் வீடியோ தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
🖲
காணொளிகளை என்ன செய்வார்கள்?

"தாங்கள் பார்ப்பதற்காக சிலர் இதுபோன்ற காணொளிகளை தயாரித்தால், வேறு சிலரோ விற்பனை செய்யும் நோக்கில் காணொளிகளை தயாரிக்கிறார்கள். பணம் கொடுத்து பெறப்படும் இந்த காணொளிகள் வாட்ஸ்-ஆப் போன்ற சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன."

"பல சந்தர்ப்பங்களில் பாதிப்புக்கு ஆளான பெண்கள் புகார் கொடுப்பதில்லை. வெளியே சொன்னால் அவமானம் என்று அமைதியாக இருந்துவிடுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பெண்களின் மனதை பாதித்து தற்கொலைக்கும் தூண்டுகின்றன. ஆனால் இது போன்ற விவகாரங்களுக்காக அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. போலீஸாரை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியைப் பெறலாம்."

"இந்திய அரசின் cybercrime.gov.in என்ற வலைத்தளத்தில் குழந்தைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து பதிவு செய்யப்படுகிறது.

விரைவில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளையும் பதியும் வகையில் இந்த வலைதளம் மேம்படுத்தப்படவிருக்கிறது. மகளிர் ஆணையத்தின் சைபர் செல்லில் பெண்கள் புகாரளிக்கலாம். இதைத்தவிர, பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் சைபர் செல்லிலும் புகார் அளிக்கலாம்."

ரகசிய கேமராக்களில் இருந்து பாதுகாக்க சைபர் நிபுணர்கள் பல உக்திகளை கூறினாலும், அதிக எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருப்பதுதான் அனைவருக்கும் நல்லது.
15

வில்வ இலை - 25 கிராம்

வில்வகாய் - 25 கிராம்

வில்வஓடு - 25 கிராம்

வில்வப்பட்டை - 25 கிராம்

இஞ்சி - 10 கிராம்

சோம்பு - 10 கிராம்

இவற்றை ஒன்றிரண்டாய் சிதைத்து, தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து,பாதியாகச் சுண்டச் செய்து, ஒரு டம்ளர் அளவு அதிகாலையிலும் மாலையிலும் சாப்ப்பிட்டு வர, ரத்த மூலம், ஆசனவெடிப்பு, சீழ்மூலம் போன்ற ஒன்பது வகை மூலங்களும் குணமாகும். மூலாதாரம் பலப்படும்...
16

வயதாக ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனைகளும் வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் எழுந்து நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள்.
முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எலும்பு தேய்மானமும், கால்சியம் பிரச்சனையும், மூட்டு வலியும் சேர்ந்து வந்து வருகின்றது.
இதனை தவிர்க்க முருங்கை விதைகளை பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சனை ஆகியவை ஓடியே விடும்.

தேவையான பொருட்கள்:

1. முருங்கை விதை- 5 g

2. நெய் 1 ஸ்பூன்

3. பால்- 1 டம்ளர்

4. நாட்டு சர்க்கரை

செய்முறை:

முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளிலிலோ அல்லது மிகவும் முற்றிய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகளை மட்டும் தனியே எடுத்து காய வைத்து மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்துகொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி இந்த முருங்கை விதைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
இத்துடன் ஒரு டம்ளர் அளவிற்கு பால் சேர்த்து கொதிக்க வைத்து சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

சத்து குறைபாட்டால் தலை சுற்றுதல், மற்றும் கண் பிரச்சனை, கண் மங்குதல் கால்சியம் குறைபாடு, மூட்டு வலி, எலும்பு பிரச்சனை, எலும்பு தேய்மானம், கால் வீக்கம், கெட்ட கொழுப்பு ஆகிய அனைத்தும் நீங்கும். நரம்பு மண்டலத்தை வலுவாகி உடலை பலப்படுத்தும்...
Pages: 1 [2] 3 4 ... 10