Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
கவிதைகள் / Re: உயிர்!
« Last post by JsB on Today at 09:52:55 AM »
ஒவ்வொரு வரியும் மனதை கனக்க வைத்தது...
கடைசி வரி கண்களை கலங்க வைத்தது.
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி.
மனதைத் தொட்ட படைப்பு.
12
உங்கள் வரிகளில் மழை மட்டும் பெய்யவில்லை...
மனமும் நனைந்துவிட்டது. ஒவ்வொரு வரியும் இயற்கையை
கண்முன் நிறுத்தியது. படிக்கப் படிக்க நானும் அந்த தூறலில்
நனைந்த உணர்வு. மனதை வருடிய வரிகள் shreya!
13
காதல்...
வயதைப் பார்த்து வருவதில்லை...
இதயத்தைத் தேடி வரும்
இறைவனின் அழகிய வரம்...

இந்த உலகம்
இளமைக் காதலை மட்டுமே
கொண்டாடிக் கொண்டிருக்கிறது...

ஆனால்...நரைத்த முடிகளோடு,
சுருங்கிய கைகளோடு,
இன்னும் கை கோர்த்து நடக்கும்
இரண்டு இதயங்களின் காதல்...
அது சாதாரண காதல் அல்ல...
இறைவன் எழுதிய
நித்திய காவியம்...


ஒரு நாள்...
வானத்தின் நட்சத்திரங்கள்
நிலாவிடம் கேட்டன...

"இந்த பூமியில்
இன்னும் உயிரோடு வாழும்
உண்மையான காதல் எங்கே?"
நிலா புன்னகைத்து
ஒரே ஒரு வழியைக் காட்டியது...


அங்கே...
காலம் முகத்தில்
சுருக்கங்களை வரைந்திருந்தது...
ஆனால்,
இதயத்தில் மட்டும்
முதல் காதலின் துடிப்பு
இன்னும் புதிதாய் இருந்தது...


அவர் அவள் கையைப் பிடித்தார்...
அவள் அவரைப் பார்த்தாள்...
அந்த ஒரு பார்வையில்...
ஆயிரம் வார்த்தைகள்...
ஆயிரம் நினைவுகள்...
ஆயிரம் பிறவிகளின்
காதல் மறைந்திருந்தது...


அவர்கள் நடந்த பாதையில்
பூக்கள் மலரவில்லை...
ஏனெனில்,
பூக்களுக்கே
அவர்கள் காதலின் அழகை
மிஞ்ச முடியவில்லை...

காற்று கூட
அவர்களைத் தொந்தரவு செய்யாமல்
மெதுவாக வீசியது...
அந்தக் கைகளைப் பிரிக்க
அதற்கே மனம் வரவில்லை...


மாலை வந்தது...
நிலா அவர்களை ஆசீர்வதித்தது...
நட்சத்திரங்கள்
ஒளிப் பூக்களைப் பொழிந்தன...
நேரம் மட்டும்
அவர்களுக்காக நின்றது...


ஏனெனில்...
அது இரண்டு மனிதர்கள்
நடந்து செல்லும் பயணம் அல்ல...
ஆயிரம் பிறவிகளைக் கடந்து
மீண்டும் ஒன்றான
இரண்டு ஆன்மாக்கள்
நித்தியத்தை நோக்கி
கை கோர்த்து நடக்கும்
தெய்வீகப் பயணம்...


காதலை வெல்வது
விதி அல்ல...
அதை
ஒவ்வொரு நாளும்
ஒரே இதயமாக
காத்து வாழ்வதே
உண்மையான வெற்றி...


அந்த வெற்றியின்
அழகிய அடையாளமாக
நீங்கள் இருவரும்
என்றென்றும் வாழ வேண்டும்...

உங்கள் காதல்...
காலத்தைக் கடந்தும்
கவிதையாக வாழட்டும்...

உங்கள் புன்னகை...
ஒருவரின் உயிரில்
என்றும் வசந்தமாக மலரட்டும்...

உங்கள் கைகள்...
இறுதி மூச்சு வரை
ஒருபோதும் பிரியாதிருக்கட்டும்...


உங்கள் காதல்...
இந்த உலகம் முழுவதும்
"உண்மையான காதல் இன்னும் உயிரோடு இருக்கிறது"
என்பதற்கான அழகிய சாட்சியாக
என்றென்றும் ஒளிரட்டும்...


வாழ்க உங்கள் அழகான காதல்...! ❤️

அன்புடன், JSB
14
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 06:04:00 AM »
15
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 03:11:19 AM »
16
வருடங்கள் ஓடின !!
வாழ்ககையே முடியும் தருணம் !!
ஏனோ இவளை கண்டால் மட்டும்
மீண்டும் குழந்தையாகிறேன் !!

யார் இவள் !!
என்னுள் எப்போது நுழைந்தாள் இவள் !!
தோழியாய் பள்ளி பருவத்தில் அறிமுகமானவள் !!
இன்றும் அதே பருவத்திற்கு என்னை அழைத்து செல்பவள்!!
காதலியாய் கல்லூரி
பருவத்தில் மாறியவள் !!

என்னை இன்றும் வாலிபனாய்
உணர வைப்பவள் !!
என் வாரிசுகளுக்கு தாயானவள் !!
என்றும் என்னை மழலலையாய் பாரமரிப்பவள்!!

என் இன்பத்தில் பங்கெடுத்தவள் !!
என்றும் என்னை மகிழ்ச்சியாக
வாழ வைப்பவள் !!
என் துன்பத்தை சுமந்தவள் !!
என்றும் தோல்விகள் என்னை
தொடமல் தடுப்பவள்!!

என் வாழ்வை தினமும் அலங்கரித்தவள் !! தினமும் தாயை போல என்
பாரங்களை சுமந்தவள் !!
இவளின்றி என் வாழ்வில்லை !!
இன்று இவளிடம் மூச்சு இல்லை!!

மரணம் எங்கள் காதலுக்கு முடிவுமில்லை !! அவள் மூச்சு நின்ற மறு நொடி
நின்றது என் மூச்சும் !!
இன்றும் அவளுடன் நான் !!
சொர்க்த்தில் இவள் கரம் பிடித்து
சுகமாய் உலா வரும் நான்!!
அழிவில்லா காதலுக்கு
அடையாளமாய் நாங்கள் !!
17
சலிக்காத காதல்
இருபதில் மலரும் ஈர்ப்பல்ல காதல்,
எழுபதைத் தாண்டியும்
இறுதி வரை தொடர்வதே பேரன்பு!

காலத்தின் கரங்கள்
உடலை மட்டுமே முதுமையாக்கும்,
கைகோர்த்து ஓடும்
இவர்களின் மனதை அல்ல!

ஆரம்பத்து வாழ்வாதாரக் கஷ்டங்கள்,
அலுவலக வேலைப் பொறுப்புகள்,
ஓயாமல் ஓடிய நாட்கள்
இவர்கள் கடந்து வந்த பாதை!

பெற்ற பிள்ளைகளை ஆளாக்கி,
இன்று பேரப்பிள்ளைகளின்
மழலைச் சிரிப்பில்
தங்கள் இளமையைத் தேடுகிறார்கள்!

சுற்றமும் சொந்தமும் சூழ்ந்திருந்தும்,
இருவர் மட்டுமே உணர்ந்த
தனிமையின் வலிகளும்
இவர்களுக்குள் உண்டு!

நரைத்த கூந்தலும் சுருக்கங்களும்
அழகைக் குறைப்பதில்லை,
வாழ்ந்து முடித்த
வாழ்க்கையின் பெருமை பேசுகிறது!

உலகமே ஓடி இளைப்பாறும்போது,
இவர்கள் மட்டும்
கவலைகள் மறந்து ஓடுவதில்
தான் எத்தனை ஆனந்தம்!

ஆனாலும்...
இந்த ஓவியத்தைப் பார்க்கும்போது
நெஞ்சுக்குள் ஒரு ஏக்கம் பிறக்கிறது,
"நமக்கெல்லாம் இந்த கொடுப்பினை கிடைக்குமா?

இறுதி வரை கைவிடாத
ஒரு ஜீவனுடன்,
இப்படியொரு முதுமை அமையுமா
என்ற தவிப்பு எழுகிறது!

வெண்மையாய் மாறிய கூந்தலிலும்
மாறாமல் மின்னுகிறது நேசம்,
வெறும் கோடுகளாய் இருந்த ஓவியம்
இன்று உயிராகிப் பேசுகிறது!



18
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...


அவள் சிரிப்பில் மட்டுமல்ல, சோர்விலும் காதலைக் காணத் தெரியலென்றால்...
இளமையின் அழகை மட்டும் ரசித்துவிட்டு,
காலம் அவள் தோள்களில் முதுமையை இறக்கும் போது
அதே பிரியத்தோடு அவளைக் காதலிக்கத் தெரியலென்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

காலங்கள் கடந்தும் அவளுக்குள் வாழும் மழலையைத் தாலாட்டத் தெரியாமல்...
"வயசுக்கேத்த மாதிரி இரு" என்று
அவள் சின்னச் சின்ன ஆசைகளுக்கு வேலி போடப் போறீங்கன்னா...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

பலநூறு கண்கள் பார்க்கும் வீதியில் அவள் விரல் கோர்க்கக் கூச்சப்பட்டு...
முதுமையில் அவள் நடை தளர்ந்து தடுமாறும் போது,
தாங்கிப் பிடிக்க உங்கள் கைகள் நீளாதென்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

அவள் எட்டும் சின்னச் சின்ன வெற்றிகளை இளமையில் கொண்டாடாமல்...
முதுமையில், "இன்னும் உன் காபியில் அதே முதல் நாள் வாசனை" என
ஒரே ஒரு வார்த்தையால் அவள் மனதை மலர வைக்கத் தெரியலென்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

கூந்தல் நரைத்து, கண்கள் மங்கி, முகம் சுருங்கும் முதுமையில்...
அதை வயதின் அடையாளமாய் பார்க்காமல்,
நீங்கள் இணைந்து வாழ்ந்த காதலின் வரலாறாய் வாசிக்கத் தெரியலென்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

நினைவுகள் மறந்து, பெயர்கள் மறந்தாலும், "சாப்பிட்டியா?" எனும் அவள் குரல் மாறாது.
அந்தக் குரலுக்காக, நடுங்கும் விரல்களுக்காக,
உங்கள் வேகத்தைக் குறைத்து அவளோடு மெதுவாய் நடக்கத் தெரியலென்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

காதல் என்பது இளமையில் "லவ் யூ" சொல்வதல்ல;
முதுமையில் மாத்திரை கொடுப்பது, கண்ணாடி தேடுவது, படிக்கட்டில் கை பிடிப்பது!
மூச்சு இருக்கும் வரை "நான் இருக்கிறேன்" என்பதை உன் இருப்பால் உணர்த்தத் துணிவில்லை என்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க..!
19
FTC Special Programs (Discussion & Related Information)) / Re: FTC 15th Anniversary
« Last post by Forum on July 06, 2026, 10:34:41 PM »


🎙️ Have a great idea for an FTC Anniversary Special Program? Here's your chance to host it!

Submit your program concept using the link below on or before 10th July. The earlier you submit, the sooner it can be reviewed.

If multiple members submit similar ideas, preference will be given to concepts that are well-structured, detailed, and thoughtfully presented.

Have questions about the criteria or need help with your submission? Feel free to reach out to FTC Admin or our program coordinators Anoth/Ninja.

⏳ Don't wait—time is running out!






20
காதல்... காலம் எழுதும் கவிதை

இளமையில் காதல்,
இதயம் துடிக்கும் சத்தம்...
முதுமையில் காதல்,
இதயம் நிம்மதியாக துடிக்கக் காரணம்...

இன்று...
சின்ன வார்த்தைகள்
பெரிய சுவர்களாகின்றன...
சின்ன கோபங்கள்
நிரந்தர பிரிவுகளாகின்றன...
"விட்டுக் கொடுப்பது தோல்வி" என்று
நினைக்கும் மனங்களுக்கு...
வாழ்க்கை மட்டும்
வெற்றியைத் தருவதில்லை...

அன்று...
வீட்டில் வசதி குறைவு...
கையில் பணம் குறைவு...
வாழ்க்கையில் கஷ்டம் அதிகம்...
ஆனால்...
"நீ இருந்தால் போதும்..."
என்ற நம்பிக்கை மட்டும்
குறைந்ததே இல்லை...

இன்று...
காதலிக்க நேரம் இருக்கிறது...
காத்திருக்க பொறுமை இல்லை...
திருமணம் செய்ய ஆசை இருக்கிறது...
உறவை சுமக்க மனம் இல்லை...

தாத்தாவின் கை நடுங்கும் போது...
அதை இறுக்கமாகப் பிடிக்கும்
பாட்டியின் கை...
பாட்டியின் கண் மங்கும் போது...
அவள் நடையை
தன் தோளில் சுமக்கும் தாத்தா...
அவர்கள் பேசும் மொழி
வார்த்தைகள் அல்ல...
புரிதல்...

நம் அம்மா – அப்பாவும் அப்படித்தான்...
ஆயிரம் சண்டைகள்...
லட்சம் கருத்து வேறுபாடுகள்...
ஆனால்...
ஒருநாள் கூட...
"நீயும் உன் பாதை... நானும் என் பாதை..."
என்று சொல்லவில்லை...

ஏனென்றால்...
அவர்கள் காதலை வெல்ல நினைக்கவில்லை...
வாழ்க்கையை வெல்ல நினைத்தார்கள்...

இன்று...
விவாகரத்து அதிகரிக்கிறது...
காரணம்...
காதல் குறைந்ததால் அல்ல...
பொறுமை குறைந்ததால்...
புரிதல் மறைந்ததால்...
'நாம்' என்ற வார்த்தையை விட...
'நான்' என்ற வார்த்தை உயர்ந்ததால்...
காதல் என்பது...
ஒரே நாளில்
பூத்து உதிரும் ரோஜா அல்ல...
புயலையும்...
வெயிலையும்...
மழையையும்...
கடந்து...
இறுதி வரை நிழல் தரும்
ஆலமரம்...

ஒருநாள்...
நம் தலைமுறையும் முதுமையை அடையும்...
அப்போது...
நம் கையைப் பிடிக்க
ஒரு கை இருக்க வேண்டுமா...?
அல்லது...
நம் நினைவுகளைப் பிடித்துக் கொண்டு
தனியாக வாழ வேண்டுமா...?

முடிவு...
இன்று நாம் விதைக்கும்
பொறுமையிலும்...
புரிதலிலும்...
விட்டுக் கொடுத்தலிலும்...
இருக்கிறது...

காதலைத் தேர்ந்தெடுப்பது எளிது...
காதலாகவே வாழ்ந்து காட்டுவதுதான் கலை...
இளமையில் காதலிப்பது சாதாரணம்...
முதுமையிலும் அதே கையை விடாமல் பிடித்திருப்பதுதான்...
உண்மையான காதல். 💯😇🧡💛💚💙💜Luminous
Pages: 1 [2] 3 4 ... 10