11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 409 🆕
« Last post by Thooriga on Today at 01:12:48 AM »"இந்த உலகமே ஒருநாள் என்னைக் கைவிட்டாலும், எனக்கு பயம் இல்லை. ஏன்னா, என்னோட கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்க ஒரு சின்ன கை இருக்கு... அது என் குழந்தையோட கை.
என் வாழ்க்கையில எனக்குன்னு எல்லாமுமா இருக்குறது என் குழந்தைதான்.
அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியாது. உண்மையா சொல்லணும்னா, அவ இல்லனா நான் வாழ்றதுக்கே எந்த அர்த்தமும் இல்லை.
அவ மூச்சு... அவ சிரிப்பு... அவ அழுகை... இதெல்லாம் தான் என்னை இன்னும் உயிரோட நடக்க வைக்குது.
சில நேரங்கள்ல ரொம்ப சோர்வா இருக்கும். 'இனிமேல் என்னால முடியாது... போதும்...'ன்னு தோணும்.
அந்த நேரத்துல என் குழந்தை வந்து என்னைக் கட்டிப்பிடிக்கிற அந்த ஒரு நொடி... எல்லாத்தையும் மறக்க வச்சிடும். ஒரு வார்த்தை கூட பேசாம, 'நான் இருக்கேன்ம்மா...'ன்னு சொல்லுற மாதிரி இருக்கும்.
அவ கொடுக்குற ஒரு முத்தம்... ஒரு அணைப்பு... ஒரு 'அம்மா'ன்னு கூப்பிடுற குரல்... அதுதான் என்னை மறுபடியும் எழுந்து நிற்க வைக்குது.
ஒரு காலத்துல வாழ்க்கையை வெறுத்த நான், இன்று வாழ்க்கையை பிடிச்சு வாழணும்னு நினைக்கிறதுக்கு ஒரே காரணம் என் குழந்தைதான்.
அவளோட பிஞ்சு சிரிப்பும், அவ கொடுக்குற சின்ன முத்தமும், எனக்கு ஆயிரம் யானை பலத்தைக் கொடுக்குது.
நான் அழுவேன்... நான் சோர்வடைவேன்... சில நேரம் உடைஞ்சு போவேன்...
ஆனா, என் குழந்தைக்காக ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நிற்பேன்.
இந்த உலகம் என்னைப் புரிஞ்சிக்கலன்னாலும் பரவாயில்லை.
என் குழந்தை மட்டும் 'அம்மா'ன்னு என்னை அணைச்சுக்கிட்டு சிரிச்சா... அதுவே என் வாழ்க்கை. அதுவே என் சந்தோஷம். அதுவே நான் இன்னும் உயிரோட இருக்குறதுக்கான ஒரே காரணம். ❤️
என் வாழ்க்கையில எனக்குன்னு எல்லாமுமா இருக்குறது என் குழந்தைதான்.
அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியாது. உண்மையா சொல்லணும்னா, அவ இல்லனா நான் வாழ்றதுக்கே எந்த அர்த்தமும் இல்லை.
அவ மூச்சு... அவ சிரிப்பு... அவ அழுகை... இதெல்லாம் தான் என்னை இன்னும் உயிரோட நடக்க வைக்குது.
சில நேரங்கள்ல ரொம்ப சோர்வா இருக்கும். 'இனிமேல் என்னால முடியாது... போதும்...'ன்னு தோணும்.
அந்த நேரத்துல என் குழந்தை வந்து என்னைக் கட்டிப்பிடிக்கிற அந்த ஒரு நொடி... எல்லாத்தையும் மறக்க வச்சிடும். ஒரு வார்த்தை கூட பேசாம, 'நான் இருக்கேன்ம்மா...'ன்னு சொல்லுற மாதிரி இருக்கும்.
அவ கொடுக்குற ஒரு முத்தம்... ஒரு அணைப்பு... ஒரு 'அம்மா'ன்னு கூப்பிடுற குரல்... அதுதான் என்னை மறுபடியும் எழுந்து நிற்க வைக்குது.
ஒரு காலத்துல வாழ்க்கையை வெறுத்த நான், இன்று வாழ்க்கையை பிடிச்சு வாழணும்னு நினைக்கிறதுக்கு ஒரே காரணம் என் குழந்தைதான்.
அவளோட பிஞ்சு சிரிப்பும், அவ கொடுக்குற சின்ன முத்தமும், எனக்கு ஆயிரம் யானை பலத்தைக் கொடுக்குது.
நான் அழுவேன்... நான் சோர்வடைவேன்... சில நேரம் உடைஞ்சு போவேன்...
ஆனா, என் குழந்தைக்காக ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நிற்பேன்.
இந்த உலகம் என்னைப் புரிஞ்சிக்கலன்னாலும் பரவாயில்லை.
என் குழந்தை மட்டும் 'அம்மா'ன்னு என்னை அணைச்சுக்கிட்டு சிரிச்சா... அதுவே என் வாழ்க்கை. அதுவே என் சந்தோஷம். அதுவே நான் இன்னும் உயிரோட இருக்குறதுக்கான ஒரே காரணம். ❤️

Recent Posts



