Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
Hi friends , this song is from sakarakati movie
"Marudhani"
Intha song enoda life la oru golden mins ku kuti pogum sad happy ipdi entha nelamai la irunthalum
17
நரை படர்ந்த தலைமுடியில்
நாட்களின் கதை எழுதப்பட்டிருந்தது
சுருங்கிய கைகளில்
சுகமும் சுமையும்
சமமாக உறங்கிக் கொண்டிருந்தது

மாலை நேரத் திண்ணையில்
இருவரும் அருகருகே அமர்ந்திருந்தோம்
பேச வார்த்தைகள் குறைந்திருந்தாலும்,
பார்வைகள் மட்டும் இன்னும் காதலாகவே இருந்தன

"நினைவிருக்கிறதா?" என்று
நீ மெதுவாகக் கேட்டாய்
அந்த ஒரு கேள்விக்குள்
நம் முழு வாழ்க்கையும் ஒளிந்திருந்தது.

முதல் சந்திப்பின் வெட்கம்...
மழை நனைத்த மாலையின் சிரிப்பு
கைப்பிடிக்கத் தயங்கிய அந்த நொடி
கண்களால் மட்டும் பேசிய ஆயிரம் கவிதைகள்

பேருந்து நிறுத்தத்தில்
உன்னைப் பார்க்கவே நான் வந்த நாட்கள்
என்னைப் பார்க்காமல் பார்த்தது போல
நீ நடித்த குறும்புகள்

ஒரே குடைக்குள் நின்று
உலகமே நமக்காக மழை பெய்தது போல
நனைந்த அந்த மாலை
இன்றும் என் மனதில் உலரவில்லை

வாழ்க்கை காதலை மட்டும் கேட்கவில்லை
பொறுப்புகளையும் கொடுத்தது
வீடு கட்டினோம்
கனவுகளை விதைத்தோம்
குழந்தைகளின் சிரிப்பில்
நம் காதலை வளர்த்தோம்

பல இரவுகளில்
உன் கண்ணீரை நான் மறைத்தேன்
என் கவலைகளை
நீ சிரிப்பால் கரைத்தாய்

சில நாட்கள் சண்டைகளும் வந்தன
சில வார்த்தைகள் காயங்களாய் மாறின
ஆனால்,
ஒவ்வொரு மௌனத்தின் முடிவிலும்
மீண்டும் நம்மை இணைத்தது காதல்தான்

நாம் முதுமை அடைந்தது
காலண்டரில் மட்டும்
என் இதயத்தில் நீ
இன்னும் அந்த முதல் நாள் பெண்ணே

உன் கண்ணாடியின் பின்னால் மறைந்த கண்களிலும்
அதே குறும்பு இன்னும் தெரிகிறது...
என் நடுங்கும் கைகளைப் பிடிக்கும்
உன் விரல்களில்
இன்னும் அதே வெப்பம் இருக்கிறது

நம் குழந்தைகள்
தங்கள் வாழ்க்கையை வாழப் பறந்துவிட்டார்கள்
ஆனால்,
நாம் மட்டும்
மீண்டும் காதலர்களாகி விட்டோம்

இப்போது
நடக்க முடியாத தூரங்களை
நினைவுகள் நடந்துகொண்டே செல்கின்றன
ஓட முடியாத கால்களை விட
இதயம் இன்னும் வேகமாக ஓடுகிறது

உன் சிரிப்பின் சத்தம்
இன்றும் என் காதுகளுக்கு இசை
உன் பெயரை அழைக்கும் போது
என் குரலில்
இளமை இன்னும் உயிரோடு இருக்கிறது

ஒருநாள்
நம்மில் ஒருவர்
மற்றவரின் கையை விட்டுவிட நேர்ந்தாலும்,
விட்டுச் செல்லப் போவது கை மட்டுமே
காதல் அல்ல

ஏனெனில்,

காதல் என்பது
இளமையின் பரிசு அல்ல
முதுமையின் துணை

அழகு மாறலாம்
உடல் சோர்ந்து போகலாம்
காலம் நம்மை மெதுவாக மாற்றலாம்
ஆனால்,

ஒரு உண்மையான காதல்
ஒவ்வொரு சுருக்கத்திலும்
ஒரு புதிய மலரை மலரச் செய்கிறது

வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தபோது
நாம் சேர்த்து வைத்த செல்வம்
வீடுகளோ,  பணமோ, புகழோ அல்ல

"நீ இருந்தாய்..."
"நான் இருந்தேன்..."
"நமக்குள் காதல் இருந்தது..."

அதுவே

ஒரு முழு வாழ்க்கையை
அழகாக வாழ்ந்ததற்கான
அனைத்திலும் பெரிய சான்று.


***JOKER***
18
கவிதைகள் / Re: உயிர்!
« Last post by joker on July 08, 2026, 08:47:34 PM »
Nandri JSB
19




🐜 எறும்புகள் ஃபெரமோன்கள் எனப்படும் வேதிப்பொருட்களை உமிழ்கின்றன. இந்த வேதிப்பொருட்களின் மூலம் பல்வேறு வகையான செய்திகளை பகிர்ந்து கொள்கின்றன. (எ.கா) முதலில் ஒரு எறும்பு உணவை தேடி செல்லும். அது செல்லும் பாதையில் ஃபெரமோன்களை உமிழ்ந்து கொண்டே செல்லும். பின்வரும் எறும்பு அந்த வேதிப்பொருட்களின் வாசனையைக் கொண்டு பின்தொடரும்.
20
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on July 08, 2026, 01:17:51 PM »
Pages: 1 [2] 3 4 ... 10