12
« Last post by Madhurangi on May 30, 2026, 09:23:01 AM »
எப்பவுமே எனக்கும் என் அப்பாவுக்கும் இடையிலான உறவு, இந்த "daddys little princess" வகையறாவா இருந்ததே இல்லை. உள்ளார்ந்த அன்பை செய்கைகளாலோ அல்லது வார்த்தைகளாலோ நாங்க பல நேரம் வெளிக்காட்டினதே இல்லை.
ஆனா, என் அப்பா என்னால எப்பவும் பெருமைப்படணும் அப்படின்ற எண்ணம் எனக்குள்ள எப்பவுமே இருக்கும். அதே மாதிரி, எந்த சூழ்நிலையிலயும் நான் காயப்பட்டுடக் கூடாது, எதையும் bold ஆஹ், confident ஆஹ் அணுகணும்ன்ற எண்ணம் என் அப்பாக்கு எப்பவுமே இருந்துருக்கு. Maybe அவர் இல்லாத காலத்துல இந்த உலகத்தை நான் எப்படி எதிர்கொள்ளணும்ன்ற பயிற்சியை, அவரை அறியாமலே எனக்கு அப்பவே குடுக்க தொடங்கிட்டாரோ என்னவோ..
அப்பாவா மட்டும் இல்லாம அவர் என் ஆசிரியராகவும் இருந்ததாலேயே என்னவோ, எங்க பேச்சின் பெரும்பான்மையான மையப்பொருள் எப்பவும் படிப்பு பற்றியே இருக்கும். மத்த அப்பா-பொண்ணுங்க மாதிரி எங்களுக்கு இடையிலான அர்த்தமே இல்லாத, குறும்புத்தனமான உரையாடல்கள் என் நினைவுல இருந்ததே இல்லை.
வெளிப்படையா எதையும் காட்டிக்க மாட்டார். ஆனா, எனக்கு ஒரு விஷயம் பிடிக்கும்னு தெரிஞ்சா, அதை அப்பா எப்படியாவது என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துடுவார். பெரும்பான்மையான நேரங்கள்ல எங்க ரெண்டு பேருக்கு இடையிலான பேச்சு ஊடகமே எங்க அம்மா தான்!
"சாப்பிட்டாளா?", "உடம்பு ஏதும் முடியலையா?", "ஒரு மாதிரி இன்னைக்கு class ல இருந்தாளே என்னனு கேளு?" அப்டினு அப்பா அம்மாட்ட கேட்பாங்க..
நானும் நேரா கேட்காம, "எப்ப பாரு சாப்பிடாம canteen ல tea மட்டும் குடிச்சுட்டு class கு வாரார், இருமிட்டே வேற இருந்தார், என்னனு கேளுங்க அம்மா"னு அம்மாட்ட தான் சொல்லுவேன். இப்படித்தான் எங்க அன்பு அம்மா வழியா Pass ஆயிட்டு இருந்தது.
ஒரு நாள் கூட அப்பா என்னை அடிச்சது இல்லை, ஏன்... அதட்டி கூட பேசினதே இல்லை. எங்க தன் பிள்ளை தன்னை வெறுத்துடுவாளோன்ற பயம் அவருக்குள்ள இருந்திருக்கலாம். வாய் வார்த்தையால அவர் என்னை எப்பவும் பாராட்டினதே இல்லைதான், ஆனா அவர் பார்வைல தெரியுற அந்தப் பெருமிதத்தை பார்க்குறதுக்காகவே எவ்ளோ வேணும்னாலும் கஷ்டப்படலாம்னு தோணும். எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்க அப்பா எப்பவுமே hero தானே? அதே தான் எனக்கும்!
நாங்க சேர்ந்து வாழப்போற காலம் இவ்வளவுதான் கம்மி-னு எனக்கு அப்பவே தெரிஞ்சுருந்தா... அந்தத் தயக்கங்களையும், அளவுக்கு அதிகமான மரியாதையையும் உடைச்சு எறிஞ்சிட்டு, என் உரிமையில ஏகப்பட்ட அர்த்தமில்லாத சண்டைகள் போட்டிருப்பேன். சின்னப் பிள்ளை மாதிரி அடம் பிடிச்சிருப்பேன். "டேய் அப்பா..."னு ஒருமையில விளிச்சு செல்லமா பேசியிருப்பேன். எவ்வளவோ குறும்புத்தனமான தருணங்களை அவரோட பகிர்ந்துருப்பேன்.
அப்போ சொல்லாம போன, காட்டாம விட்ட அந்த அன்புதான்... இப்பவும் என் மனசுல ஆறாத தழும்பாவும், அப்பா மேல குறையாத காதலாவும் தங்கியிருக்கு.