11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 393
« Last post by சாக்ரடீஸ் on Today at 12:01:21 AM »அவள்
இல்லாத வீட்டில்
சூரியன் மெதுவாக
உதிக்கின்றது
ஒளி கதிர் வீசுகின்றது
ஆனால்
அதில் அவள் நிழல் இல்லை.
இரண்டு சிறு கைகள்
என் வாழ்க்கையை
பிடித்துக்கொள்கின்றன
அவர்களின் சிரிப்பில்
அவள்
கொஞ்சம் கொஞ்சமாக
நினைவாக தெரிகிறாள்
வலி தினமும்
என்னோடு இருக்கிறது
நான் அதை
ஒதுக்கி விடவில்லை
ஏனென்றால்
அந்த வலிதான்
அவளை
என் மனத்தில்
உயிரோடு வைத்திருக்கிறது.
யார் காரணம்?
எது காரணம்?
என்று
இப்போது கேள்வி இல்லை
நடந்தது நடந்ததே.
அந்த வலி
என் உள்ளத்தில் பதிந்து விட்டது
சோர்ந்து போகும் நாட்களில்
குழந்தைகளின் சிரிப்புக்காக
நான் எழுந்து நிற்கிறேன்.
அவள் ஓய்வெடுத்த என் மடி
இப்போது
அவள் நினைவோடு
என் குழந்தைகள் உறங்கும்
இடமாக மாறிவிட்டது.
அவர்கள் கண்களில்
எதிர்காலம் தெரிகிறது.
அதில் ஒரு சிறிய
நம்பிக்கை பிறக்கிறது.
ஒருநாள்
எனக்கு தானாக
சிரிப்பு வரும்.
அன்று வாழ்க்கை
அமைதியாக நிம்மதியாக
என் கைகளில் வந்து சேரும்.
எனக்கு பிடித்ததுபோல்
வாழ்க்கை அன்று மாறும்.
அந்த மாற்றத்திலும்
அவள் இருப்பாள்.
அவள் இல்லாமல் அல்ல
அவள் நினைவோடு.
வலிகள் இல்லாமல் அல்ல
வலியைத் தாண்டி
ஒரு புதிய புத்துணர்வோடு.
வார்த்தைகளாக மாறிய என் நண்பனின் உணர்வுகள்.
அவனுக்காக, அமைதியாக சமர்ப்பிக்கிறேன்.
இல்லாத வீட்டில்
சூரியன் மெதுவாக
உதிக்கின்றது
ஒளி கதிர் வீசுகின்றது
ஆனால்
அதில் அவள் நிழல் இல்லை.
இரண்டு சிறு கைகள்
என் வாழ்க்கையை
பிடித்துக்கொள்கின்றன
அவர்களின் சிரிப்பில்
அவள்
கொஞ்சம் கொஞ்சமாக
நினைவாக தெரிகிறாள்
வலி தினமும்
என்னோடு இருக்கிறது
நான் அதை
ஒதுக்கி விடவில்லை
ஏனென்றால்
அந்த வலிதான்
அவளை
என் மனத்தில்
உயிரோடு வைத்திருக்கிறது.
யார் காரணம்?
எது காரணம்?
என்று
இப்போது கேள்வி இல்லை
நடந்தது நடந்ததே.
அந்த வலி
என் உள்ளத்தில் பதிந்து விட்டது
சோர்ந்து போகும் நாட்களில்
குழந்தைகளின் சிரிப்புக்காக
நான் எழுந்து நிற்கிறேன்.
அவள் ஓய்வெடுத்த என் மடி
இப்போது
அவள் நினைவோடு
என் குழந்தைகள் உறங்கும்
இடமாக மாறிவிட்டது.
அவர்கள் கண்களில்
எதிர்காலம் தெரிகிறது.
அதில் ஒரு சிறிய
நம்பிக்கை பிறக்கிறது.
ஒருநாள்
எனக்கு தானாக
சிரிப்பு வரும்.
அன்று வாழ்க்கை
அமைதியாக நிம்மதியாக
என் கைகளில் வந்து சேரும்.
எனக்கு பிடித்ததுபோல்
வாழ்க்கை அன்று மாறும்.
அந்த மாற்றத்திலும்
அவள் இருப்பாள்.
அவள் இல்லாமல் அல்ல
அவள் நினைவோடு.
வலிகள் இல்லாமல் அல்ல
வலியைத் தாண்டி
ஒரு புதிய புத்துணர்வோடு.
வார்த்தைகளாக மாறிய என் நண்பனின் உணர்வுகள்.
அவனுக்காக, அமைதியாக சமர்ப்பிக்கிறேன்.

Recent Posts