11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 389
« Last post by joker on December 01, 2025, 10:58:58 PM »மழை…ஓர் நாள்
அது வானத்தின் கண்ணீரோ
இல்லை
வறண்ட பூமியின் ஆனந்த கண்ணீரோ
சில நேரம் மழை
சிறு புன்னகை போல
சிறு சிறு துளிகளாக மண்ணை
முத்தமிடும்
சில நேரம்
யாரோ தனது சோகத்தை
சிறுக சிறுக மேகமாய் சேமித்து வைத்து
ஓர்நாள் கொட்டி தீர்க்கிறதோ
மண் மேல் என தோன்றும்
சிலரது வாழ்க்கை
மழை இல்லாமல்
வறண்டு போகும்
சிலரது வாழ்க்கையிலோ
அளவுக்கு அதிகமாய்
அவர்களையே மூழ்கிட செய்யும்
மழை பெய்கையில்
குழந்தை மனது
பள்ளி விடுமுறையை எதிர்பார்க்கிறது
முற்றத்தில் தேங்கிய நீரில்
விளையாடி துள்ளி குதிக்கிறது
தாயின் மனமோ அதை ரசிக்கிறது
சூடாய் பஜ்ஜி பக்கோடா செய்து தர
முற்படுகிறது
தந்தைக்கோ
விடுமுறையில்லா நாளாக
குழந்தையாய் இருந்தபோது ரசித்ததை
அசைபோட்டு ஒரு பயணம்
விதை விதைத்து
மழைக்காக காத்திருக்கும்
விவசாயிக்கோ
மண்ணை மட்டுமல்ல
மனதையும் குளிர்விக்கும்
தினக்கூலி செய்பவருக்கோ
பட்டினியில் ஒரு நாள்
அழையா விருந்தாளியாய்
மழைநீர் வீட்டுக்குள்
அரசுக்கோ
திட்டமிடாத
மழை நீர் சேகரிப்பு குழி போல
சாலையெங்கும் தேங்கும் நீர்
அசம்பாவிதம் ஏதுமின்றி -வடிந்திட
அயராது உழைக்கும்
மழை விட்டு சென்ற
ஒவ்வொரு துளியிலும்
விதைகள் முளைக்கின்றன
மனிதரின் ஒவ்வொரு கண்ணீரிலும்
புதிய உறுதி முளைக்கிறது.
அளவோடு பெய்தால்
செழிப்பாய் வளரும் பயிர்கள்
அதிகமாய் பெய்தால்
அழிந்திடும் உயிர்கள்
அது மழைக்கு மட்டுமல்ல
மனித உணர்வுகளுக்கும் பொருந்தும்.
.
***Joker***
அது வானத்தின் கண்ணீரோ
இல்லை
வறண்ட பூமியின் ஆனந்த கண்ணீரோ
சில நேரம் மழை
சிறு புன்னகை போல
சிறு சிறு துளிகளாக மண்ணை
முத்தமிடும்
சில நேரம்
யாரோ தனது சோகத்தை
சிறுக சிறுக மேகமாய் சேமித்து வைத்து
ஓர்நாள் கொட்டி தீர்க்கிறதோ
மண் மேல் என தோன்றும்
சிலரது வாழ்க்கை
மழை இல்லாமல்
வறண்டு போகும்
சிலரது வாழ்க்கையிலோ
அளவுக்கு அதிகமாய்
அவர்களையே மூழ்கிட செய்யும்
மழை பெய்கையில்
குழந்தை மனது
பள்ளி விடுமுறையை எதிர்பார்க்கிறது
முற்றத்தில் தேங்கிய நீரில்
விளையாடி துள்ளி குதிக்கிறது
தாயின் மனமோ அதை ரசிக்கிறது
சூடாய் பஜ்ஜி பக்கோடா செய்து தர
முற்படுகிறது
தந்தைக்கோ
விடுமுறையில்லா நாளாக
குழந்தையாய் இருந்தபோது ரசித்ததை
அசைபோட்டு ஒரு பயணம்
விதை விதைத்து
மழைக்காக காத்திருக்கும்
விவசாயிக்கோ
மண்ணை மட்டுமல்ல
மனதையும் குளிர்விக்கும்
தினக்கூலி செய்பவருக்கோ
பட்டினியில் ஒரு நாள்
அழையா விருந்தாளியாய்
மழைநீர் வீட்டுக்குள்
அரசுக்கோ
திட்டமிடாத
மழை நீர் சேகரிப்பு குழி போல
சாலையெங்கும் தேங்கும் நீர்
அசம்பாவிதம் ஏதுமின்றி -வடிந்திட
அயராது உழைக்கும்
மழை விட்டு சென்ற
ஒவ்வொரு துளியிலும்
விதைகள் முளைக்கின்றன
மனிதரின் ஒவ்வொரு கண்ணீரிலும்
புதிய உறுதி முளைக்கிறது.
அளவோடு பெய்தால்
செழிப்பாய் வளரும் பயிர்கள்
அதிகமாய் பெய்தால்
அழிந்திடும் உயிர்கள்
அது மழைக்கு மட்டுமல்ல
மனித உணர்வுகளுக்கும் பொருந்தும்.
.
***Joker***

Recent Posts

