Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
Wish You HappY birthday Wisdom sis..!

12
ஒரு காலத்தில அவ  வாழ்க்கை, அவ கையில இல்ல....
“கடமை”ன்னு சொல்லி
அவளோட சுவாசத்துக்கும் எல்லை போட்டாங்க.
அவளோட கனவுகளுக்கு,
காத்திருக்க சொல்லி மூலையில் நிக்க வைச்சாங்க.
அவள் ஆசைகளுக்கு ...
“இது நேரமல்ல…”ன்னு ஒதுக்கி வைச்சாங்க.
அவள் காத்திருந்தாள்...
பொறுமையா....
அமைதியா....
அவளோட கண்ணீரையும் சத்தமில்லாம விழுங்கிக்கிட்டு....

ஆனா யாருக்கும் தெரியல...
அந்த அமைதிக்குள்ள
ஒரு சிங்கம் வளர்ந்துட்டு இருந்துச்சுன்னு...
ஒவ்வொரு தியாகமும்
அவள இன்னும் உறுதியா மாத்துச்சு.. ..
ஒவ்வொரு அவமானமும்
அவளோட முதுகெலும்பா மாறிச்சு...

இணைக்கு ....

அவள் யாரோட நிழலுளையும் இல்ல...
அவ மட்டும் அவளுக்குனு இருக்கா ....
இணைக்கு அவளோட எல்லா கட்டுப்பாடுகளிலும் இருந்து ...
கடமை என்னும் சங்கிலி உடைச்சு.....
தன் பெயர்ல தன் பாதையை உருவாக்கிட்டா ...

இது கோபம் இல்ல....
இது திமிர் இல்ல...
இனி யாரோட அனுமதியும் கேட்டு அவ வாழனும்னு அவசியமும் இல்ல...
இது அவளோட தன்னம்பிக்கை.. அவளோட வாழ்க்கை...

பல தடங்கல்களை தாண்டி தனுக்கு தானே மகுடம் சூடிக்கொள்ளும் ஒவ்வொரு பெண்களுக்குமே இந்த பதிவு சமர்ப்பணம்..
13
GENERAL / Re: Good Morning
« Last post by TiNu on March 03, 2026, 09:53:56 AM »




14
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on March 03, 2026, 09:36:51 AM »
15
🔥 சாம்பலாக்கும் சுடர் 🔥
போர் வெடிக்கிறது எல்லைகளில்,
ஆனால் அடக்குமுறை வெடிக்கிறது வீடுகளின் உள்ளே.
வெளியில் குண்டு,
உள்ளே கட்டளை.
வெளியில் ரத்தம்,
உள்ளே அமைதியின் பெயரில் அடிமை.
“அமைதியா இரு” என்ற வார்த்தை
அவள் நாவை வெட்டுகிறது.
“வெளியே போகாதே” என்ற கட்டளை
அவள் கனவுகளைச் சுடுகிறது.

ஆனால்,
அவள் கண்களில் எரியும் அந்த தீ
பயத்தின் தீ அல்ல.
அது பழியின் தீ.
கதவுகள் பூட்டப்படுகின்றன
“பாதுகாப்பு” என்ற பெயரில்.
ஆனால் அந்த பூட்டு
அவள் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் கயிறு.

விதி அவளைக் காயப்படுத்தினால்
சமூகம் தீர்ப்பு வழங்குகிறது.
கணவன் இழந்தவள் என்ற பெயரில்
நிறங்களைப் பறிக்கிறது.
“உன் வாழ்வு முடிந்தது” என்று
உயிரோடு புதைக்க முயல்கிறது.

ஆனால் அவள் உயிர்
யாரின் அனுமதியாலும் தொடங்கவில்லை,
யாரின் மறுப்பாலும் முடிவதில்லை.
மீண்டும் காதலிக்கலாம்.
மீண்டும் மணமுடிக்கலாம்.
மீண்டும் சிரிக்கலாம்.
அது பாவமல்ல,
அது உயிரின் இயல்பு.

சில கொடூர கைகளின்
குரூரத் தடங்கள்
அவள் தோலில் விழுந்தாலும்,
அவள் ஆன்மாவில் விழ மாட்டாது.
காயம் அவளை மௌனப்படுத்தாது,
அது அவளை வடிவமைக்கும்.
“இங்கே நமக்கு இடமில்லை”
என்று தலையணையிலே அழ வேண்டாம்.
இந்த மண்
அவள் பாதத்தின் சுவடுகளால் தான் முழுமை பெறும்.

அவள் அன்புக்கு தலை குனிவாள்.
அச்சத்துக்கு இல்லை.
அவள் மரியாதையை நாடுவாள்.
கருணையை அல்ல.
ஒரு பெண் தன் வாழ்க்கையை
தான் தேர்ந்தெடுத்து வாழும் போது
அது ஒரு தனிப்பட்ட முடிவு அல்ல,
அது தலைமுறைகளின் சிந்தனையை மாற்றும் மின்னல்.
சங்கிலி தீயாய் ஜொலிக்கிறது,
அதை உடைக்க அவள் காத்திருக்கவில்லை.
அதை உருக்கி
புதிய வடிவம் படைக்கிறாள்.

மற்றொரு கோணம்…
ஆண்கள் மட்டும்
மாற வேண்டும் என்று
சொல்லிக் கொண்டிருக்கும் உலகத்தில்
மற்றொரு கோணமும் உண்டு.

சில நேரங்களில் அல்ல
பல நேரங்களில் கூட
ஒரு பெண்ணின் கண்ணீருக்கு
மற்றொரு பெண்ணே காரணம்.
அதனால் பெண்ணே…
மாற்றத்தின் முதல் படி
நீயாக இருக்க வேண்டும்.

நம்முள் மறைந்திருக்கும்
பொறாமை, திமிர், தவறான ஆசைகள்
என்ற சங்கிலிகளை
முதலில் உடைத்தெறிவோம்.

ஏனெனில்
ஒரு பெண் உயர்ந்தால்
ஒரு வாழ்க்கை மட்டும் அல்ல,
முழு பெண்ணியமும் உயர்கிறது.


மங்கையே,
நீ பலவீனம் இல்லை.
நீ பாதுகாக்கப்பட வேண்டிய பொருள் இல்லை.
நீயே பாதுகாப்பு.
நீயே மாற்றம்.
நீயே தீர்ப்பு. 🔥
LUMINOUS 🧡💛💚💙💜😇
16
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on March 03, 2026, 05:51:59 AM »
17


பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : அத்தைக்கு
பிறந்தவளே ஆளாகி
நின்றவளே பருவம்
சுமந்து வரும் பாவாடை
தாமரையே

ஆண் : தட்டாம்பூச்சி
பிடித்தவள் தாவணிக்கு
வந்ததெப்போ மூன்றாம்
பிறையே நீ முழு நிலவா
ஆனதெப்போ மெளனத்தில்
நீ இருந்தா யாரை தான்
கேட்பதெப்போ ஓ…….

ஆண் : { ஆத்தங்கரை
மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே } (2)

ஆண் : ஓடைக்கர ஒழவு
காட்டுல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து
சண்டை இடும் அந்த
முகமா

ஆண் : தாவணிக்கு
வந்ததொரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன
விட்டு போகாது அட
ஓடத்தண்ணி உப்பு
தண்ணி ஆகாது

பெண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே

ஆண் : ………………………

பெண் : மாமனே உன்னை
தாங்காம மத்தியில்
சோறும் பொங்காம பாவி
நான் பருத்தி மாரா போனேனே

பெண் : காகம் தான்
கத்தி போனாலும்
கதவு தான் சத்தம்
போட்டாலும் உன்
முகம் பாக்க ஓடி
வந்தேனே

பெண் : ஒத்தையில்
ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர்
சொன்னேனே ஒத்தையில்
ஓடும் ரயில் ஓரம் கத்தியே
உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம்
போனதும் நேரம் ஆனதும்
கண்ணீர் விட்டேனே

பெண் : முத்து மாமா
என்னை விட்டு
போகாதே என் ஒத்த
உசுரு போனா மீண்டும்
வாராதே

ஆண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே

ஆண் : தாவணி
பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும்
சுகந்தானா பாறையில்
சின்ன பாதம் சுகந்தானா

ஆண் : தொட்ட பூ
எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள்
சுகந்தானா

ஆண் : { அயித்தயும்
மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா } (2)
அன்னமே உன்னையும்
என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சுகந்தானா

ஆண் : மாமன்
பொண்ணே மச்சம்
பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு
மயிலப் பசுவு தோதாச்சு

பெண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே

ஆண் : ஓடைக்கர ஒழவு
காட்டுல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து
சண்டை இடும் அந்த
முகமா தாவணிக்கு
வந்ததொரு நந்தவனமா

பெண் : உள்ள சொந்தம்
என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு
தண்ணி ஆகாது

ஆண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே



18
நித்தம் ஒரு போர், அவள் நிழலோடும் நிஜத்தோடும்..
நிந்தனைச் சொற்கள் நெஞ்சில் தைக்கும் முட்களாய்..
அடுப்படிப் புகையில் தொலைந்த கனவுகள் ஒருபுறம்..
அலுவலகப் போட்டியில் நசுங்கும் உணர்வுகள் மறுபுறம்!!

தன் விருப்பத்தைச் சொல்லத் துடித்தால்..
"திமிர்" என்று முத்திரை குத்தியவர்கள்..
அவளது மௌனத்தை வசதியாக்கிக் கொண்டு..
அதிகாரம் செய்த உறவுகள் ஏராளம்!!

ஒவ்வொரு முறையும் வீழ்த்தும் போது அவள் நினைக்கிறாள்,
இதுவே கடைசி வீழ்ச்சியாய் இருக்கட்டும் என்று..
ஆனால் உலகமோ மீண்டும் ஒரு புதிய சங்கிலியைத் தேடும்,
அவள் கால்களைக் கட்டிப் போட..கனவுகளைச் சிதைக்க!!

"உன்னால் முடியாது" என உலகம் சொல்லும் போது,
"முடித்துக் காட்டுகிறேன்" என மெளனமாய் முழங்குகிறாள்..
பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் பிம்பம் இவள்!!

​வலிகள் அவளுக்குப் பழகிப் போனது..
வடுக்கள் அவளுக்குப் பாடமானது..
அழுவதை அவள் நிறுத்திய போது..
அறிவோ அவளுக்கு ஆயுதமானது!!

​​உலகம் சொன்னது "முடியாது",
உள்ளம் சொன்னது "முயன்றுபார்",
முயற்சி இன்று வெற்றியில்..
முழுமையாய் அவள் விடுதலையில்!!
19
கட்டுண்டு கிடப்பது கைகள் மட்டுமல்ல
உள்ளத்தில் எழும் உணர்வுகளும்...
தானே பூட்டிக்கொண்ட விலங்கு தான்
தன்னிலை மறக்க பூட்டிக்கொண்ட விலங்கு தான்
ஆனால் காவலுக்காக அல்ல
சில பார்வைகளுக்காக பூட்டப்பட்ட விலங்கு...

சிறுவயதில் காப்பாக இருந்தது இன்று
கருங்கல் பாரமாகி போனது..
வட்டத்தை வரைந்த பந்தமும்
இன்று காணாமல் போனது
விமர்சனம் செய்யும் சுற்றமும்
மேலும் சங்கிலியால் இறுக்கியது...

பிம்பத்தைக் காட்டும் ஆடியும்
வேறொரு தோற்றத்தைக் காட்டிடவே
தேடலை நிறுத்திய சங்கிலியே இன்று
தன் பிடியை தளர்த்திடவே...
வறண்டு கிடந்த வேர்களும்
புதிய பூக்களை சொறிந்திடவே


பாலை நிலத்தின் மணலும்
மாரியின் சாரலில் குளிர்ந்திடவே...
இறுக பற்றிய சங்கிலியில்
புதிய விடியலும் உதித்திடவே...
போலித்திரையில் அடைப்பட்ட உள்ளமும்
பூட்டிக்கிடந்த விலங்கை தானே உடைத்திடவே...
புதியவள் ஆகிறாள் புத்துயிரோடு புணருகிறாள்
20
     "பெண்களே மாபெரும் சக்தி"

பெண்கள் நாட்டின் இரு கண்கள்
பெண்கள் தான் இவ்வுலகின் தூண்கள்
பெண்கள் வாழ்க்கையின் ஆதி
பெண்கள் உறவுகளின் உயிர்
பெண்கள் சமூகத்தின் அத்திவாரம்

பூமியில் உயிர்களை மலர வைக்கும் மாபெரும் சக்தி பெண்கள்
ஒரு ஆண் இன்றி பெண்ணால்
வாழ முடிவது  பெண்களின் பெரும் தன்னம்பிக்கையே!
பெண் இன்றி ஆண்களால்
வாழ முடியாத காரணம்
ஆண்களின் தன்னம்பிக்கையே
பெண்கள் தான்!

பெண் சக்தி மாபெரும் சக்தி
இவ்வுலகில்....
பொறுமை பெரிது என்று வாழும்,
எத்தனையோ பெண்கள்...
வறுமையில் கூட போராடி வென்று
வாழும் பெண்கள்...
பெற்ற குழந்தைகள்,கணவன்,பிறந்த வீட்டார்,புகுந்த வீட்டார் என பாசத்தினால்
தாங்கிப் பிடிக்கும் சக்தி அவள்!

இன்னலில் அழுதாலும் ,
விடியலைத் தேடி புன்னகையுடன்
வீறுநடை போடுபவர்கள்
சிங்கப் பெண்களே!
தன் பசி,தூக்கம் விடுத்து
தன்னைச் சார்ந்தவர்கள்
பசி போக்கிடும் பெண் சக்தி!

ஒரு பெண்ணின் சிறு வயதில்
கற்றுத் தரப்படுகிறது "பொறுப்பு'
இளமையில் போராட ஆரம்பிக்கின்றாள்
தன் கனவுகளை நோக்கி...
ஒரு பெண் கல்வி கற்பதால்
குடும்பம் மட்டுமல்ல பயனடைகிறது வளமான நாடும்....
பட்டம்,பதவிகள் பல பெற்றாலும்
தன் கடமைகளை மறவாத
பெண் சக்தி அவள்!

விஞ்ஞான உலகை இயக்குவது சக்தி
பெண் தெய்வங்களை அழைப்பதும் சக்தி
அதே போன்று மனித உலகினை
இயக்குவது பெண் சக்தி அல்லவா ?
பெண் சக்தியை மாபெரும் சக்தி என்று கூறுவதில் வியப்பில்லையே!

பெண்கள் தைரியமானவர்கள்-ஆனால்
இந்த உலகம் கூறுவது "திமிர் "பிடித்தவள்
பெண் நியாயத்திற்காக குரல் கொடுத்துக்கிட்டே இருப்பாள்
அத்துமீறும் ஆண்களை சுட்டெரிக்கும்
மாபெரும் சக்தி பெண்களுக்கு உண்டு!

புரட்சி பெண்ணே உன் புன்னகையால்
பூமியை வென்றிடு!
அடிமை சட்டங்களை உடைத்தெறிந்திடு!
ஆணவக்காரர்களை அடக்கிடு!
தீயவர்களை திருத்தி நல்லவர்களாக
வாழ வைத்திடு !

பெண்கள் தொழில்,கல்வி, அரசியல்,
சமூகசேவை,விண்வெளி,விவசாயம்,
வர்த்தகம் எங்கும்  வியாபித்து
உள்ளமை பெருமையே!

உலகில் உயர்ந்தது உனது மன தைரியம்
உலகில் மிகப்பெரிய உடல் வலியாம்
பிரசவ வலியை தாங்கிய உனக்கு
அனைத்து தடைகளும் பெரிய வலி அல்ல..

யாருக்கும், எதற்கும் பெண்ணே
நீ அடிமை அல்ல..
அடிமை விலங்கினை தகர்த்தெறிந்திடு பெண்ணே உன் மாபெரும் சக்தியால்..
பெண்ணே உன்னால்  மலரட்டும் வண்ணமயமான வளமான மனித உலகம்!
நானும் பெருமை கொள்கின்றேன்
"பெண்" என்ற உன்னதமான பிறப்பினால்...










Pages: 1 [2] 3 4 ... 10