Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
GENERAL / Re: Joker's Short Messeges
« Last post by joker on December 23, 2025, 01:05:32 PM »
Perfect partner is someone
who can understand
your mood just by looking at your
texts and emojis
13

முதுமை வந்து விட்டதே!, என வருந்த வேண்டாம். முதுமைப் பருவம் தவிர்க்க முடியாது. இளமையை போல முதுமையையும் நேசிக்கப் பழக வேண்டும்...

முதுமையும் ஓர் அழகு. நமது ஒத்துப் போகும் குணம், மனதை இளமையுடன் வைத்துக் கொள்ளப் பழகுவது ஆகியவை முதுமையைக் கடக்க எளிதான வழிகளாகும்...

முதுமையில் ஏற்படும் களைப்பை, நோய்களை, உடல் வலிகளை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்...

உடல்நிலை எதற்குத் தகுதியோ அதை மட்டும் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது...

பேரக் குழந்தைகளுடன் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் குறும்புகளை அனுபவிக்க வேண்டும். ஆனால்!, முழு நேரக் காப்பாளராக இருக்கக் கூடாது...

மகள் அல்லது  மகன் பொறுப்பில் அவர்கள் வளர்க்கட்டும், அவர்களிடம் அந்தப் பொறுப்பை விட்டுவிட வேண்டும்...

மக்கள் கூட்டம், அக்கம்பக்கத்தார் , நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்கள் கூட்டத்தை அதிகரித்து அவர்களுடன் மகிழ்வுடன் இணைந்து இருக்க வேண்டும்...

தன்னை ஒரு சுமையாக கருதிக் கொண்டு, தன்னை மற்றவர்கள் சுமையாகக் கருதும் அளவிற்கு பேசிக்கொண்டும், நாளது சிக்கல்களில் தாமும் போய் விழுந்து, அதிக சிக்கல்களாக மாறிக் கொண்டும் இருந்தால், உறுதியாக அமைதியே கிடைக்காது...


🟡 முதுமை வரும் பொழுது மனதைத் தான் பக்குவப்படுத்தி மகிழ்ச்சி பெறத் தெரிய வேண்டும். அதுதான் இளமையாக இருப்பதின் மறைபொருளாகும்...!

🔴 இவ்வளவு நாள் சேமித்ததை நல்ல முறையில் செலவிடுங்கள். உங்கள் உடல் நிலை, பொருளாதார வசதி ஒத்துழைத்தால் இதுவரை சென்று வர இயலாத இடங்களுக்கு குடும்பத்துடன்  சென்று வாருங்கள்...!!

🔴 கடந்த கால நினைவுகளை எண்ணாமல் நிகழ்காலத்திற்கு வாருங்கள். நேற்றைய நினைவுகளோ, நாளைய கவலைகளோ தேவையற்றவை. நேற்று என்பது முடிந்து போனது. நாளை என்பது வராமலேயே கூடப் போகலாம். உங்களையும் மற்றவர்களையும் மன்னித்து விடுங்கள்...!!

⚫ உங்களால் பிறருக்கு ஏதேனும் இடர் ஏற்பட்டிருந்தால் தயங்காமல் மன்னிப்பு கோருங்கள். குடியொன்றும் முழுகிப் போவது இல்லை. இறுதியாக வாழ்வின் சுழற்சியில் மரணமும் ஒன்று. அமைதியோடு அஞ்சாமல் இருங்கள்...!!!

⚫ இந்த வாழ்வை விடச் சிறந்த வாழ்வின் திறவுகோல் தான் மரணம். செல்வதற்கு எப்போதும் தயாராக இருங்கள். முதுமையை வென்று இளமையாக வாழ்வோம்...!!!
14
உயிர்ப்பின் பேரழகு
[/color]

பெருவெளியின் ஒரு சிறு துகளாய் அடையாளமற்ற ஓர் அங்கமாய், வெறும் கம்பளிப் பூச்சியென இம்மண்ணில் உதித்தேன்...

அழகின் தராசில் என்னை யாரும் நிறுத்தியதில்லை,
 அருவருப்பின் படிமமாய், விகார முட்கள் கொண்ட உருவமாய், கண்டவுடன் விலகிச் சென்றனர் பலர்.

என் தற்காப்பு ஆயுதங்களையே என் விகாரங்களென உலகம் தூற்றியபோது,
நானும் என்னை வெறுக்கக் கற்றுக்கொண்டேன்.
ஆனால் - அந்த இருண்ட மௌனத்திலும்,
என் ஆழ்மனம் ரகசியமாய் கிசுகிசுத்தது: "இது முடிவல்ல!"

வானத்தை அளக்கும் வேட்கையும்,
 சிறகுகளின் ரகசியக் கனவும்,
ஊர்ந்து செல்லும் என் கால்களுக்குள் உறங்கிக் கிடந்தன.

உலகை உதறி, பசியை வென்று,  சிறு கூட்டிற்குள் எனை நானே சிறைபூண்டு  தவமிருந்தேன்.
அங்கே ,
என் வலி மாற்றமானது
என் அமைதி பரிணாமமானது.

ஒரு பொழுதில்...
என் குறுகிய சிறைக்கூடு உடைந்தது!
வண்ணங்கள் என் உடலெங்கும் கவிதை எழுதின!
தரை தொட்ட கால்கள் யாவும் திசை தொடும் சிறகுகளாய் விரிந்தன.

நேற்று என்னை நசுக்கத் துணிந்த கரங்கள்,
இன்று என் வண்ணக் கோலங்களில் வசப்பட்டு,
"நசுங்கி விடுமோ" எனப் பற்றத் தயங்கின.

என் உயிர் மாறவில்லை,
மாறியது என் புறத்தோற்றம் மட்டுமே!

புற அழகைக் கொண்டாடும் இவ்வுலகம்,
என்றாவது ஒருநாள் உணர்ந்து கொள்ளும்,
அழகென்று ஏதுமில்லாத போதும் என் உயிருக்கு ஓர் உன்னத மதிப்பு இருந்தது என்பதை!

புறக்கோலம் கடந்த உயிர்ப்பின் இருப்பே பேரழகென்று,
என் மௌனப் பரிணாமம் உலகிற்கு மொழிந்தது
[/size][/size][/size]

(பி .கு : எழுது எழுது.. என எனை ஊக்குவிக்கும் என் தோழி யாழினிக்கு  சமர்ப்பணம் )
16
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on December 23, 2025, 11:45:02 AM »

18
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on December 23, 2025, 05:23:05 AM »
19
எனை 25 ஆண்டுகள் பின்னோக்கி
பசுமையான நினைவுகளை எடுத்துரைக்கவே இந்தப் புகைப்படத்தை பதிவேற்றி வைத்தீர்களோ
என்னுடைய முதல் பெண் நண்பி எனது பிறந்த நாளிற்காக கொடுத்த ஒரு அன்பளிப்பில் எழுதி இருந்த ஆங்கில வாசகம் இது
ஒரு கம்பளிப்பூச்சி பட்டாம்பூச்சியாகவும், முட்டையின் மஞ்சள் கரு கோழியாகவும், ஏகோர்ன் ஒரு வலிமையான ஓக் மரமாகவும் மாறுவதை விட அற்புதமான அதிசயம் என்ன இருக்க முடியும்?
நமது உறவு ஒரு சிறந்த நட்பாக மாறியது இதை விடவா ...

ஆம் அவள் கூறியது உண்மைதான் எங்களது நட்பானது 25 ஆண்டுகளை தாண்டி நடை பயின்று கொண்டிருக்கின்றது இந்த நட்பானவை எங்கள் மூச்சிருக்கும் வரை தொடரும் நாங்கள் அறிமுகமானது ஒரு பொது மேடையில்
மலையாள கரையோரம் பிறந்த அவள் பெயரோ மஞ்சு மஞ்சுவின் அர்த்தம் அன்று தான் அவள்வாய் மூலம் தெரிந்து கொண்டேன் அழகு என்பது அவள் அதன் பொருள்

ஆம் அழகு வெறும் விழி தோற்றத்தில் மட்டுமல்ல மனதிலும் கூட அழகாய் இருந்தால் வேடிக்கை விளையாட்டு அன்பு  பாசம் அனைத்தும் அவளது நட்பில்
அவள் மூலமே அறிந்து கொண்டேன் ஒரு பெண்ணை நட்பாகவும் பார்க்க முடியும் என்று

உண்மையான நட்பிற்கு நேரில் பார்த்து ன் பழக வேண்டும் என்ற அவசியம் இல்லை மனதார நினைத்தாலே தொலைபேசியில் அவள் என் நம்மை அழைக்கவும் இது உண்மை ஆம் நாம் இன்று கூறும் டெலிபதி
எதையும் எதிர்பார்த்ததில்லை எங்கள் நட்பு ஆம் அது ஒரு கனா காலம் 4 ஆண்டுகள் ஓடின அவளும் தன் படிப்பை முடித்து பறந்து சென்றாள் ஆனால் எங்கள் நட்பான அந்த பட்டாம் பூச்சியும் இன்னும் அதே போலீ உடன் மங்காத வண்ணத்துடன் பறந்து கொண்டு தான் இருக்கின்றது
என் மனதில் இத்தனை ஆண்டுகளாக பறந்து கொண்டிருந்த அந்தப் பட்டாம்பூச்சியை வெளி உலகிற்கு காட்டச் செய்த FTC ஓவியம் உயிராகிறது தேர்வுக்குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
என்றும் உங்கள் CLOWN KING




20
     "அழகை இரசித்திடு,
    அழிக்க நினைக்காதே!"

குடம்பி,கூட்டுப் புழு போல்
   குழந்தை பருவம் அது!
மிருதுவான மென்மையான
   உடம்பு கொண்ட பருவம் அது!
மகிழ்வாக இருந்தேன் இலைகள்
    என் உணவான தருணத்தில்!

என் குழந்தை பருவத்தை
    வெறுக்கின்றான் மானிடன்!
மானிடன் மேல் தப்பு எதுவும் இல்லை !
என் உருவத்தோற்றமே
    அவன் வெறுப்பின் காரணம்!

அந்நியன் இடமிருந்து என்னை
  பாதுகாக்க கடவுள் கொடுத்த வரம்   
     கூர்மையான மயிர்கள்!
என் குழந்தைப் பருவத்தை அதிகம்               
    விரும்பியது பறவைகளே!
அப்போ அப்போ காதலுடன் -என்னை
   தீண்டிச் செல்லும் பறவைகள்!
என்னை பாதுகாத்துக் கொள்ள
  என்னை சுற்றி கூடு போல ஒரு வீடு!
இயற்கை அனர்த்தம்,எதிரிகள்     
    எல்லாவற்றிலும் பாதுகாத்தது என் வீடு!

அன்று ஒரு நாள் என் வீடு உடைந்து       
    வீசப்பட்டேன் வெளியே!
என் உடம்பில் உணர்ந்தேன்
  புதுவித உணர்வினை!
ஆஹா எனக்கு அழகான
   சிறகுகள் பறப்பதற்கு!
என் அழகை இரசிக்கனும் என்று
   என் மனதில் ஒரு எண்ணம்!

சிறகுகள் கொண்டு பறந்தேன்
   பறந்தேன் கண்ணாடியை தேடி!
கண்டு கொண்டேன் நிறுத்தி வைக்கப்பட்ட             
     வாகனத்தின் கண்ணாடி!
 கண்ணாடி மேல் அமர்ந்து 
     பிரமித்தேன் என் அழகை கண்டு!

என் அழகினைச் சொல்ல அகராதியில்
     வார்த்தைகளே இல்லை!
வண்ண வண்ண நிறங்களில்  சிறகுகள்!
என் சிரசில் இரு உணர்கொம்புகள்!
என் அழகை இரசித்தபடி பறந்து திரிந்தேன்
   உல்லாசமாக வானில்!

இந்த இளமைப் பருவத்தில் நான்
   அதிகம் ரசித்தது அழகான பூக்களையே!
அழகான வண்ண பூக்கள் அள்ளித்தரும்
   மது தேனை எனக்கு உணவாக!
இரசனையில் மயங்கி மலர்களின்
    காதலன் ஆனேன்  நான் !
காதலியை இரசிக்க விடமாட்டான்
    இந்த பாழாய்ப்  போன மானிடன்!

சின்னஞ்சிறு குழந்தைகள் 
   "ஏய் பட்டாம்பூச்சி, வண்ணத்து பூச்சி"
    என்றழைக்க,
விளையாட்டாய் பறப்பேன் உச்சம் தொட     
    நானும் !
தாங்க முடியவில்லை என்னால்
    காதலர்களின்  தொல்லை!
காதலி என்னை பிடித்துத் தா என கேட்க,
    தன் இரும்பு கரங்களால் என்னை பிடிக்க
    ஓடி  வருவான் காதலன்!
உன்னால் முடிந்தால் என்னை   
    பிடித்துக்கொள் என,
    பறந்திடுவேன் உச்சத்தில்!

அத்தருணத்தில் தான் எனக்குள்
    ஒரு கேள்வி  ஏன் இளமைப் பருவத்தை     
     அடைந்தேன்என்று?
சுதந்திரமாய் பறந்து திரிய
    விடமாட்டான்   இந்த மானிடன்!
என்னை துன்புறுத்த பல வேடங்களில் 
    வருகின்றான் இந்த மானிடன்!
குழந்தைப் பருவத்திலேயே   
     இருந்திருக்கலாம் நான்!

எனக்கே இந்த நிலை என்றால்,   
      மானிடப்பருவத்துக்கு எவ்வளவு
      துன்பம் கொடுப்பான் இந்த மானிடன்!
மானிடனே அழகை இரசித்திடு,
     அழிக்க நினைக்காதே!
மானிடனே சுதந்திரமாய் என்னைப்போல்   
      பறப்பவர்களை வாழ விடு!


Pages: 1 [2] 3 4 ... 10