Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
கவிதைகள் / Re: Oh Butterfly 🦋
« Last post by joker on July 01, 2026, 06:43:25 PM »
பட்டாம்பூச்சி கவிதை அருமை
தொடர்ந்து எழுதுங்கள் சகோ

உங்கள் கவிதை படித்ததும் எனக்கு
என் கிறுக்கல் நியாபகம் வந்தது




அழகான மாலை வேளையில்
பள்ளி முடிந்து வந்து வீட்டின்
முற்றத்தில் அமர்ந்த வேளையில்
என் மடியில் வந்தமர்ந்த
அழகான உயிர் நீ

வண்ணம் பல கொண்டிருக்கிறாய்
நீ பல மனங்கள்
கொள்ளை கொண்டிருக்கிறாய்

சிறகு விரித்து  நீ பறக்கையில்
உன் பின்னே பறக்குமே  என்
இரு கண்கள்

தொட்டாலே ஒட்டிக்கொள்ளும்
என் கைகளில் உன் வண்ணங்கள்

பேசாமலே என் மனதில்
ஒட்டிக்கொண்ட சிறு கள்ளி நீ

பட்டம் போல் என் மனது உன் பின்னால்
பறப்பதால் தானோ
உன் பெயர்
பட்டாம்பூச்சி
12
தினமும் சிறிது நேரம் சிரித்து பேசக் கிடைத்த
FTC-யின் நட்புறவுகள்... 💙

வாழ்க்கையின் பரபரப்பில் சில நிமிடங்களே இருந்தாலும், அந்த நிமிடங்களை மறக்க முடியாத நினைவுகளாக மாற்றியது நம் நட்புதான்.
ஒரு "வணக்கம்"... ஒரு சிரிப்பு... ஒரு கலாட்டா... ஒரு அன்பான உரையாடல்...
இதுவே ஒரு நாளை அழகாக மாற்றப் போதுமானது.
நட்பு என்பது தினமும் பேசுவதில் இல்லை... பேசும் அந்த சில நிமிடங்களில் மனதை நிறைக்கும் அன்பில்தான் இருக்கிறது.

💙 JSB: தினமும் சிறிது நேரம் சிரித்துப் பேசக் கிடைத்த FTC-யின் நட்புறவுகள்... என்றும் மனதில் நிலைத்திருக்கும் அழகான நினைவுகள்!

💙 Thanks to All My FTC Lovely Friends
உங்கள் அன்பு, உங்கள் ஆதரவு, உங்கள் கலாட்டா, உங்கள் நட்பு...
இவை அனைத்தும் என் நாட்களை இன்னும் அழகாக்கின.
என்றும் இதே அன்பும் நட்பும் தொடரட்டும்...

Lots of Love & Respect,
– JSB 🌹

13
என் மீது நான் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை... 💙

என்னைப் பற்றி
பலர் சந்தேகப்பட்டார்கள்...

என் கனவுகளை
சிலர் கேலி செய்தார்கள்...

என் பயணத்தை
சிலர் குறைத்து மதிப்பிட்டார்கள்...

ஆனால்...

என் மீது நான் வைத்த நம்பிக்கை மட்டும்
ஒருபோதும் என்னைக் கைவிடவில்லை.

தடைகள் வந்தன...
தோல்விகள் வந்தன...
காத்திருப்புகளும் நீண்டன...

இருந்தாலும்,
ஒவ்வொரு முறையும் என்னை எழுப்பியது
அந்த ஒரே நம்பிக்கையே!

இன்று நான் நிற்கும் இடம்
அதிர்ஷ்டத்தால் கிடைத்ததல்ல...

என் மீது நான் வைத்த நம்பிக்கையின் வெற்றி அது.

💙 JSB :
உலகம் உன்னை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை...
ஒருமுறை நீ உன்னை முழுமையாக நம்பிப் பார்...
உன் வாழ்க்கையே உனக்காக கைதட்டும்!
14
என் எதிர்காலம் வரைந்த கோலம்

வெற்று தரையில் ஒரு கோலம் வரையத் தொடங்கினேன்.
முதல் கோடு... சற்று வளைந்தது.
அடுத்த கோடு... சரியாக அமையவில்லை.
பலர் சிரித்தார்கள்... "இந்தக் கோலமே அழகாக வராது!" என்றார்கள்.
நான் மட்டும் நிறுத்தவில்லை.
ஒவ்வொரு தவறும் அடுத்த கோட்டை அழகாக வரைய கற்றுக்கொடுத்தது.
சிறிது நேரத்தில்...
அதே வெற்றுத் தரையில், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு அழகான கோலம் மலர்ந்தது.
அப்போது நான் உணர்ந்தேன்...
"எதிர்காலம் யாராலும் வரையப்படுவதில்லை... நம் முயற்சிகளே அதை அழகான கோலமாக மாற்றுகின்றன."

💙 JSB-யின் Lesson:
வாழ்க்கையில் சில கோடுகள் வளைந்தாலும் கவலைப்படாதே... அவைதான் உன் எதிர்கால ஓவியத்தின் அழகை கூட்டும்.
உழைப்பு உன் நிறமாகவும், நம்பிக்கை உன் கோலமாகவும் இருந்தால், உன் எதிர்காலம் நிச்சயம் அனைவரும் ரசிக்கும் ஒரு அழகான படைப்பாக மாறும். 🌸
15
கவிதைக்குள் பிறந்த குட்டிக் கதை

ஒரு அழகான Lesson – JSB

ஒரு சிறிய விதை... மண்ணுக்குள் புதைந்து கிடந்தது.
"இருட்டு... ஈரம்... தனிமை... என் வாழ்க்கை இவ்வளவுதானா?" என்று அது வருந்தியது.
நாட்கள் கடந்தன.
ஒருநாள்... அதே விதை மண்ணை உடைத்து வெளியே ஒரு சிறிய முளையாக வந்தது.
அப்போது சூரியன் சிரித்தான்...
"உன்னை புதைத்தது மண் இல்லை... உன்னை வளர்த்தது மண்ணே!" என்றான்.
அந்த முளை மெதுவாக மரமானது. அதன் நிழலில் பலர் இளைப்பாறினர். அதன் கிளைகளில் பறவைகள் கூடுகட்டின.
அப்போது அந்த மரம் உணர்ந்தது...
"வலி வந்ததால் வாழ்க்கை முடிவதில்லை... வலியை தாங்கியதால்தான் வாழ்க்கை மலர்கிறது."

💙 JSB-யின் Lesson:
சில நேரங்களில் வாழ்க்கை நம்மை கீழே தள்ளுவது போல தோன்றும்... ஆனால் உண்மையில், அது நம்மை உயரமாக வளர்க்கவே தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.
எனவே... சோதனைகளை சாபமாக நினைக்காதே... அவை நாளைய வெற்றிக்கான விதைகள்.
நம்பிக்கையுடன் முன்னேறு... ஒருநாள் நீயே பலருக்கு நிழலாக மாறுவாய்! 🌱💙
16


விமர்சனங்கள் என்னை நிறுத்தவில்லை...
சவால்கள் என்னை பயமுறுத்தவில்லை...
தோல்விகள் என்னை தளர்த்தவில்லை...
ஒவ்வொரு அனுபவமும் என்னை இன்னும் வலிமையாக்கியது...

வாழ்க்கை எளிதாக இருந்ததில்லை...
ஆனால் நான் எப்போதும் எளிதில் விட்டுக்கொடுத்ததில்லை.

என்னைப் பற்றி பலர் பல விதமாக பேசலாம்...
ஆனால் என்னை உண்மையாக அறிந்தவர்கள்,
என் மனதையும் என் பயணத்தையும் அறிவார்கள்.

நான் யாருடனும் போட்டியிட வரவில்லை...
நேற்றைய என்னைவிட
இன்றைய நான் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே
ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.

என் கதை...
என் பயணம்..
என் அடையாளம்...

அது யாராலும் எழுதப்படவில்லை...
நானே எழுதிய வாழ்க்கைப் பயணம்.

நான்... JSB.

.

18
கவிதைகள் / Oh Butterfly 🦋
« Last post by Oonjal on July 01, 2026, 12:20:43 PM »

                                  Oh Butterfly 🦋
‎காலையில் கண் விழிக்கும்போதே இன்று விடுமுறை நாள் மெதுவாக வேலைகளை தொடங்கலாம் என்று மனதில் ஓடியது. கையில் காபியுடன் கதவைத் திறந்து வெளியே வந்தால் மழையின் வாசம் மனதை குளிர செய்தது. ரோஜா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலை இல்லை என்று நினைத்துக் கொண்டே  தோட்டத்தை நோக்கி நடை போட்டன கால்கள்.

மழைத்துளிகள் ரோஜாக்களின் இதழில் முத்தமிட்டு நிற்பதை கண்டு ரசிக்கும் போதே ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்து பறப்பதை கண்டேன். கண்களில் ரசனையுடன் உன்னை கண்டால் மட்டும் என் கண்களில் ஒரு மின்னல் வருவது ஏனோ என்று பட்டாம்பூச்சியை பார்த்து கேட்டேன். நான் சொன்னதை புரிந்து என்னை பார்த்து சிரிப்பதைப் போல் வீர்ர்ர்ர்னு அங்கும் எங்கும் வேகமாக பறந்தது.

வானவில்லின் அனைத்து நிறங்களையும் உனக்குள் கொண்டு அழகிய சிறு குழந்தையாய் என் கண் முன்னால் மிதந்து கொண்டிருந்தாய்.
‎தோட்டத்தின் அமைதியில் காற்றின் திசைக்கேப்ப பறந்து திரியும் அழகைக் காணவே கண் கொள்ளா கட்சியாக இருந்தது. உன்னை பார்க்கும் போது நானும் ஒரு பட்டாம்பூச்சியாக மாறிவிட வேண்டும் என்று என் மனம் ஆசையில் துடிக்கிறது.

என் மனத் தோட்டத்தில் நீ ஒரு பூச்சி அல்ல. இயற்கையின் மௌன கவிதை. பட்டாம்பூச்சியே உன்னை ரசிக்கும் ஒவ்வொரு முறையும் வார்த்தைகளில் வடிக்க இயலா மகிழ்ச்சியை எனக்கு தருகிறாய். என் தோட்ட ரோஜாக்கள் ஒவ்வொன்றும் உன்னை கண்டு புன்னகைப்பதை கண்டாயா சிறு பட்டாம்பூச்சியே. ஒரு ரோஜாவிலிருந்து மற்றொரு ரோஜாவுக்கு தேன் எடுக்க பறக்கும் உன்னைக் கண்டபோது என் மனதிலும் சிறகுகள் முளைத்தது போல் உணர்ந்தேன். நீ சுதந்திரமாய் பறப்பதை ரசித்தப்படியே நிற்கத்தான் என் மனம் விரும்பியது.

இன்று என் தோட்டம் மிக அழகாக தெரிய காரணம் பல வர்ண ரோஜாக்கள் மட்டுமல்ல ரோஜாக்களின் மீது வந்து அமர்ந்த நீயே. என் ரோஜா தோட்டத்தில் பட்டாம்பூச்சி மட்டும் பறக்கவில்லை என் மனமும் கூட சேர்ந்து பறந்தது. நீ எந்த ரோஜாவையும் காயப்படுத்த வில்லை. ரோஜா இதழ்களையும் உதிர்க்கவில்லை. மென்மையாக ரோஜாக்களை முத்தமிடுவது போல் தொட்டு தொட்டு பறந்தாய்.

சிறிது நேரத்தில் என் மனதை தொட்டு அழகிய நினைவுகளை தந்து விட்டு வானத்தை நோக்கி பறந்தது அந்த பட்டாம்பூச்சி. நானும் எனது வேலைகளை தொடங்க வீட்டை நோக்கி நடையை கட்டினேன்.
19
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on July 01, 2026, 10:41:12 AM »
20
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on July 01, 2026, 06:24:42 AM »
Pages: 1 [2] 3 4 ... 10