Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11

தங்கைகள் தேவைப்படுகிறார்கள்...

நடை பழகும் நாட்களில்
கைபிடித்து கொள்ள
அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...
அடம் பிடித்தோ
அழுது புரண்டோ
பொட்டோ, பூவோ
முதல் முதலில் தங்கைக்கே
வாங்குகிறான் அண்ணன்...
'' அ" வில் தொடங்கி
சைக்கிள் பழக்கி
மகிழுந்து வரை அண்ணன்களே
ஆசிரியர் தங்கைகளுக்கு...
அண்ணனாக மட்டுமன்றி
நண்பனாகவும்
சில நேரங்களில் தந்தையாகவும்
மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...
தங்கைகளின் எந்தவித
கோரிக்கையும்
அண்ணன்களிடமே வருகிறது
தங்கைகளுக்கான முதல்
சிபாரிசை அண்ணன்களே
முன்னெடுக்கிறார்கள்

அக்காக்களிடம் மறைத்த
அண்ணன்களின் காதலை
அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்...
அண்ணன்களுக்காக
அப்பாக்களிடம்
கோபம் கொள்வதில்
தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்...
தங்கைகளில்லா வீடு
அமைதியாகவே இருக்கிறது
தீராத மௌனம் சுமந்து...
திருமணமாகிச் செல்கையில்
அப்பாக்கள் அழுகிறார்களோ ஆயிரம் சண்டை வந்தாலும்
விட்டு கொடுக்காத ஒரே
உறவு அண்ணன் தங்கை
உறவு மட்டுமே

மனம் விட்டு பேச
ஒரு நல்ல அண்ணன்
கிடைத்தால் அதுவும்
தாயின் மடிதான்இல்லையோ
அழாமல் நடிக்க அண்ணன்கள்
கற்றுக் கொள்கிறார்கள்
[ அழுதால் துடைக்கும்
சிரித்தாள் தட்டும்
செல்லமாய்க் குட்டும்
பாசக்கை தங்கை

டேய் அண்ணா எனும்
போதே அதட்டலையும்
அன்பையும் ஒரு சேர
காட்டுவது தங்கை மட்டுமே

வயதால் வளர்ந்தாலும்
தங்கச்சி எப்போதும்
என் தேவதை தான்
இந்த ஜென்மம் மட்டும்
இல்லை இன்னும் ஏழேழு
ஜென்மம் எடுத்தாலும்
நீ தான் என் தங்கை

காலங்கள் கடந்தாலும்
என் தங்கைக்கு என்
இதயத்தில் எப்போதும்
தனி இடம் உண்டு

கண்கள் அழவில்ல
இதயம் அழுகிறது தங்கை
திருமணமாகி செல்கையில்
12
                                                   பாச மலர்!!

உன் விரல் பிடித்து பள்ளிக்கு சென்ற காலம் அது
இன்றும் நினைவிருக்கிறது..
வீட்டுக்கு வந்ததும் அந்த டெலிவிஷன் ரிமோட்டிற்காக
தினம் ஒரு யுத்தமே நடக்கும் நம்மிடையே..
அடிதடி முட்றிப் போய் கோபத்தில் உன்னை கடித்தேனே
என் பற்களின் தடம் உன் கையில் ஆழமாய் பதியும்...
அதற்காக அம்மாவிடம் நான் வாங்கிய அடிகள் ஏராளம்..!

கடைக்கு செல்ல சொன்னால் நீ அசைந்து கொடுக்க மாட்டாய்
உன் வேலையையும் நான் செய்த போது பொங்கியது ஆத்திரம்,
ஆனாலும்... அக்காவை விட என்மேல் ஒரு தனி பாசம்
உன் மௌனமான செயல்களில் நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன்..!

என் தோழர்களுக்கெல்லாம் உன்னை கண்டாலே சிம்ம சொப்பனம்
யாரும் அறியாமல் உனக்கு “ஹிட்லர்” என பெயர் வைத்தோம்!
என் முதல் காதலை நீ மிரட்டி முடித்து வைத்த போது
உன் மேல் வந்த வெறுப்பை விட,
நீ என் மேல் வைத்து இருந்த அக்கறையை ​உணர்ந்தேன்..!

கல்லூரி செல்லும் அவசரத்திலும் என்னை இறக்கி விட நீ வந்ததும்
பிரேக் வயரை கையால் பிடித்து விபத்தில் நம்மை மீட்டாயே...
அன்று உன் சமயோசித புத்தியை கண்டு மிரண்டு போனேன்.
யாரோ ஒருவன் என்னை அசிங்கமாய் கிண்டல் செய்ய
அழுது கொண்டிருந்தேன் அம்மாவிடம்..
“இரு வரேன்” என ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு
அவனை தேடி சென்று நீ கொடுத்த அடியும் பதிலடியும்...
அங்கே தான் அண்ணா, உன் அன்பு என்னை தாக்கியது..!

அம்மா மேல் நீ வைத்திருந்த உயிரான பாசமும்
ஆபீஸ் போகும் போதும் அம்மா உனக்கு ஊட்டி விட்டதும்...
ஓர கண்ணால் பார்த்து நான் பொறாமை பட்டிருக்கிறேன்!
“அவன் மட்டும் தான் உனக்கு புள்ளையா?”
என அம்மாவிடம் சண்டை போட்டுக்
ஊட்டி விட சொன்னது ஒரு காலம்..
நண்பர்களை வீட்டு வாசலோடு நிறுத்தும் உன் அந்த தெளிவு
இன்றும் என் மனதில் ஒரு பெருமிதமான பாடமாய் இருக்கிறது..!

ஊரில் உன் அந்த முதல் நடனம்...
ஒட்டுமொத்த தெருவும் கைதட்டிய போது உன் தங்கையாய
ஒரு பெருமிதம் உன் திறமை கண்டு!
“ட்ரெஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என நீ சரி செய்யும் போது
உன் அக்கறையில் ஒரு தகப்பனை நான் கண்டிருக்கிறேன்..!

நீ எனக்காக முதன் முதலாக வாங்கித் தந்த அந்த 1100 மொபைலும்...
எப்போதும் ஆனாலும் நீ செக் செய்த போது
கோபம் வந்தாலும்,
அதற்கு பின்னால் இருந்த உன் பயம் எனக்கு புரிந்தது..!

நீ பாட ஆரம்பித்ததில் இருந்து
நான் இன்றும் உனது தீவிர ரசிகை தான் அண்ணா!
அக்கா திருமண மேடையில் நீ பாடிய அந்த நொடிகள்
என் வாழ்வின் அழகான பக்கங்கள்..
நீ வாங்கித் தந்த அந்த முதல் புடவை இன்னும் இருக்கிறது
உன் நினைவுகளை தாங்கியபடி என் அலமாரியில்..!

நண்பர்களோடு திருமணத்திற்கு செல்கிறேன் என பொய் சொல்லி விட்டு
விபத்தில் கை ஒடிந்து வந்த போது என் கோபம்
உன்னை பார்த்த மறு நொடி கரைந்தது..
உன்னை வண்டியில் வைத்து நான் அழைத்து சென்ற போது
“தங்கச்சி நல்லா ஓட்டுறியே” என நீ சொன்ன அந்த ஒற்றை பாராட்டு...
காலங்கள் ஓடினாலும் இன்றும் அது என் நினைவில்..!

அன்று வாங்கிய அந்த பழைய பிளாக் காரில் பயணித்த சுகம்
இன்று நீ வைத்திருக்கும் காரிலும் மாறவே இல்லை!
ஒரு சின்ன சண்டையில் “என்னை நீ புரியவில்லையே” என
உனக்காக என் உயிரையே விட துணிந்தேனே...
உன் மேல் இருந்த கோபமல்ல அது... என்னை நீ தவறாய்
நினைத்து விடக் கூடாதென்ற அந்த பெரும் வலி..!

முதல் முறை உன்னை பிரிந்து நான் சென்ற போது
கல் போன்ற உன் கண்களில் வழிந்த அந்த கண்ணீர்...
அன்றே என் உயிர் ஒரு நொடி பிரிந்து போனது அண்ணா!
இன்று நாம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும்
மனதில் உன் நிழல் அப்படியே தான் இருக்கிறது..!

மீண்டும் ஒரு முறை உன்னை நேரில் பார்த்தால் போதும்..
அப்படியே ஓடி வந்து உன்னை கட்டிக்கொள்ள வேண்டும்!
“ஏண்டா இத்தனை நாள் பேசல?” என உன்னை கோபித்து
உன் மார்பில் சாய்ந்து அழுது தீர்க்க வேண்டும்!
ஆயிரம் கோபங்கள் இருந்தாலும்... உன் தங்கை இன்றும்
உன் அதே சின்ன பெண் தான்... உன் அன்பிற்காக ஏங்குபவள்!!
13
Wallpapers - Own Creations / Re: OP Art - 2026
« Last post by Ninja on January 26, 2026, 10:14:46 PM »
14
Many More Happy returns of the day dear friend 🎂🎂🎂🎂🎂🎂🎂🌹🌹🌹🌹🌹🌹
16

கட்டற்ற கடலும் இல்லை,
கவ்வி செல்ல மீனும் இல்லை;
குத்தும் குளிரில்
எதிர் திசையில் நடந்த
பென்குயினுக்கு
கனவில் இருந்ததெல்லாம்
ஏதுமற்ற
பனி அடர்ந்த அந்த மலைகள் தான்
தன்னை புரிந்து கொள்ளும் வீடு போல


அடுத்த தலைப்பு : தனிமை
17
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 26, 2026, 07:01:57 PM »
19
Happy birthday bro... Always stay blessed 💜


20
கட்டற்றப் பெருங்காற்று நம்மைக் கடக்கையில்,
வளைவதும் பணிவதும் கோழைத்தனம் அல்ல;
தக்கன பிழைத்தலின் சூத்திரம் என உலகிற்கு உணர்த்தும்
நெடிய பசுமை நிறப் புத்தன் - மூங்கில்!

அடுத்த தலைப்பு : கனவு
Pages: 1 [2] 3 4 ... 10