« Last post by MysteRy on June 26, 2026, 11:12:22 AM »
இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதுதான். மேலும் உடலை குளிர்ச்சியாகவும் போதுமான தண்ணீர் சத்து இருக்கும்படியும் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களை வெயிலிலிருந்து பாதுகாத்து உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பல உணவுகள் உள்ளன அதில் ஒன்றுதான் லிச்சி பழங்கள் (litchi fruit). உங்கள் டயட்டுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது
நீங்கள் இந்த பழத்தை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்...
* இந்த லிச்சி பழத்தில் நார்சத்து அதிகமாக உள்ளது இது உடல் எடையை குறைக்கவும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கவும் உதவுகிறது. மேலும் இந்த பழம் சாப்பிட மிகவும் ருசியாக இருந்தாலும் இதில் குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. எனவே எப்போதாவது உங்களுக்கு தண்ணீர் சத்து மிகுந்த இனிப்பான எதையாவது சாப்பிட வேண்டும் போன்று தோன்றினால் இந்த பழத்தை ஒரு கடி கடிக்கலாம். * நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது செரிமானத்துக்கு நல்லது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு ஏற்படும் முதல் தடை மலச்சிக்கல். லிச்சி பழங்கள் இந்த பிரச்சனையை பார்த்துக் கொள்ளும். இது குடல் இயக்கத்தை எளிதாக்கி உடலில் தேவையான ஊட்டச்சத்துக்களை தக்க வைத்துக் கொள்ள உதவும். * இந்த பழத்தில் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இது வலுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக உள்ள ஒரு உடல் ஆரோக்கியமாக இயங்கும் இதனால் உடல் எடையும் அரோக்கியமாக இருக்கும்.
* இறுதியாக லிச்சி பழங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. இதில் அதிக பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சமப்படுத்த நீங்கள் முயற்சிக்கும் போது சிறப்பாக செயல்படும். நீங்கள் மிகவும் ஆற்றலுடன் இருப்பதாக உங்களை உணரவைத்து பல உடல் வேலைகளை செய்ய உதவும் இதன் மூலம் உடல் எடை குறையும். உங்கள் உடல் எடையை சரியாக வைக்க நீங்கள் நன்றாக சாப்பிடுவதோடு, உடல் ரீதியாக ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
சிறுவர்களுக்கு இந்தப் பழம் வழங்குவது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் இருக்கின்றன. எனவே அந்த விஷயத்தில் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று செயல்படவும்.
« Last post by MysteRy on June 26, 2026, 11:09:29 AM »
இன்றைய காலக்கட்டத்தில் பொழுதுப்போக்கு என்றாலே திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மொபைல்போன் என்றாகிவிட்டது. இவையெல்லாம் நம்மை ஆக்கிரமித்து கொண்டதால், நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தையும் நாம் மறந்துவிட்டோம். அப்படி நாம் மறந்து போன நமது தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றுதான் பல்லாங்குழி விளையாட்டு. அதை பற்றி இன்று நாம் காண்போம். மற்ற விளையாட்டுகளை காட்டிலும் இந்த விளையாட்டு சற்றே வித்தியாசமானது. இந்த விளையாட்டை இருவர் மட்டுமே விளையாட முடியும்.
பல்லாங்குழி விளையாடுவதற்கு வட்டமாக குழி செதுக்கிய பலகை அல்லது நிலத்தில் இருவரிசையில் ஏழு ஏழு சிறு குழிகளைக் கிண்டி புளியங்கொட்டையோ, சோழியோ அல்லது சிறு கற்களையோ நிரப்பி ஒவ்வொன்றாக எடுத்து விளையாடும் விளையாட்டு இது. பலகையில் குழி செதுக்கவோ அல்லது நிலத்தில் குழி கிண்ட முடியாதவர்கள், தரையில் சுண்ணாம்பு கட்டிகளால் வட்டமிட்டும் இந்த விளையாட்டை விளையாடலாம்.
முதலில் ஒரு குழியில் ஐந்து ஐந்து கற்களை போட்டு கொள்ள வேண்டும். முதலில் யாரோ ஒருவர் தனது பக்கத்தில் உள்ள ஏதேனும் ஒரு குழியில் உள்ள கற்களை எடுத்து ஒவ்வொன்றாக அடுத்த அடுத்த குழிகளுக்குள் வரிசையாக போட வேண்டும். கையில் இருக்கும் கற்கள் முடிந்தவுடன் அதற்கடுத்த குழியில் உள்ள கற்களை எடுத்து மீண்டும் ஒவ்வொரு கற்களாக தொடர்ந்து போட வேண்டும். இவ்வாறு 14 குழிகளிலும் ஒவ்வொரு கற்களாக போட வேண்டும். இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு வெறுங்குழி வருமாயின் அதைத் தொட்டு அடுத்த குழியில் இருக்கும் கற்களை தனக்குரியதாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து விளையாடும் பொழுது ஒரு குழியில் நான்கு கற்கள் இருந்தால் அதை 'பசு" எனச் சொல்லி தனதாக்கிக் கொள்ள வேண்டும். ஆட்டத்தின் முடிவில் அதிகமாக கற்களை வைத்திருப்பவர்களே வெற்றியாளர் ஆவார். இதில் கடைசி முத்து தீரும் வரை ஆட்டத்தை நீடிக்க வேண்டும்.
பல்லாங்குழியின் பயன்கள் :
எதிரில் இருப்பவரின் மன ஓட்டத்தை படிக்க கற்று கொள்ளலாம்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும்.
மனக் கணக்கு போட எளிதாக கற்றுக் கொடுக்கிறது.
குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாடுவதால் அவர்களுக்கு கணிதப்பாடம் எளிதாகிறது.
மன அழுத்தத்தை நீக்குவதில் இந்த விளையாட்டு ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால் நீங்கள் வீட்டில் இருக்கும் இந்த நாட்களை பயனுடையதாகவும் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு பாரம்பரிய விளையாட்டை கற்று கொடுத்த மனநிறைவுடனும் உங்கள் நேரத்தை செலவழிக்கலாம்.
« Last post by MysteRy on June 26, 2026, 11:03:04 AM »
Tesla emphasizes that the act of invention represents humanitys highest responsibility toward future generations. As we innovate and develop new technologies, we shape a world that can improve lives and ensure a sustainable future, highlighting the importance of purposeful creation.
« Last post by MysteRy on June 26, 2026, 11:02:02 AM »
Nikola Tesla believed in a future where civilization would be driven by renewable energy sources such as solar, wind, and hydroelectric power. His vision highlighted the potential of harnessing natural elements to create sustainable energy solutions, paving the way for advancements in how we power our world.
« Last post by MysteRy on June 26, 2026, 10:49:49 AM »
Nikola Tesla conducted experiments with neon lighting over a century ago, well before neon signs became a staple in commercial advertising. His innovative work in electrical phenomena laid the groundwork for future developments in lighting technology, showcasing his forward-thinking approach to electricity and illumination.
« Last post by MysteRy on June 26, 2026, 10:47:58 AM »
Nikola Tesla, the renowned inventor and engineer, expressed a profound admiration for books, stating they were his favorite among all things. This preference illustrates the importance he placed on knowledge and learning, which played a significant role in shaping his groundbreaking ideas and innovations.