17
« Last post by MaiVizhi on May 01, 2026, 12:16:25 AM »
நம்ம படிக்கிற டைம்ல வாரத்துக்கு 5 நாள் ஸ்கூல் போறதே பெருசு, இதுல 5-வது ஸ்டாண்டர்ட்ல இருந்தே டியூஷன் சேர்த்து மார்னிங் 7-க்கெல்லாம் வீட்ட விட்டு துரத்திடுறாங்க. அன்னைக்கு ஒரு மண்டே, 2 டேஸ் லீவ் முடிஞ்சு லேஸியா எழுந்து டியூஷன் கிளம்புனேன். ஸ்கூல் தாண்டி தான் டியூஷன் சென்டர். ஸ்கூல் வந்ததும் "ஒரு நாள் தானே லீவ் போடுவோம்"னு நேரா கிரவுண்டுக்கு போயி, ஊறுகாய் பாக்கெட் வச்சு நானும் பிரெண்டும் சீனியர்ஸோட பாஸ்கட்பால் பிராக்டிஸ் பார்த்துட்டு ஜாலியா இருந்தோம்.
மறுநாள் டியூஷன் போனப்போ மிஸ் கேட்டாங்க "நேத்து ஏன் வரல?"னு. சரி ஏதாச்சும் சொல்லி சமாளிப்போம், எப்பவும் எல்லாரும் பாட்டி இறந்துட்டாங்க, தாத்தா இறந்துட்டாங்கன்னு பொய் சொல்லுவாங்க, நாம டிஃபரண்டா சொல்லுவோம்னு 10 வருஷம் முன்னாடி இறந்த, நான் பார்த்தது கூட இல்லாத என் பெரியப்பா நேத்துதான் இறந்துட்டாருன்னு பிட் போட்டேன்.
அறியா வயசு, டெத் ஆகி மறுநாளே எப்படி ஸ்கூல்னு சந்தேகப்பட்ட மிஸ், அதே சென்டர்ல டியூஷன் படிக்கிற என் இன்னொரு பெரியப்பா பொண்ணைக் கூப்டு "ஏன் இவ டெத் சொல்றா உண்மையா?"னு கேட்க, அதுக்கு என் அக்கா "அய்யோ என் அப்பாதான் அவ பெரியப்பா, அவரு நல்லாத்தான் இருக்காரு, இவ பொய் சொல்றா"னு ஒரே போடா போட்டுட்டா. அவளுக்கு என் மேல என்ன கடுப்போ...
அவ்வளவுதான் சொல்லி முடிஞ்சது, அப்புறம் நானே சொல்லிட்டேன் நான் சொன்னது ஏற்கனவே இறந்த பெரியப்பான்னு. பொய்க்கு 2 அடி, லீவுக்கு 2 அடின்னு பிரெண்ட்ஸ் சிரிச்சதும் நினைச்சு உக்காந்து இருந்தேன். அப்போதான் எங்க மிஸ் என் மேல இருக்குற கொள்ளை பாசத்துல எங்க அப்பாவைக் கூப்டு வர சொல்லிட்டாங்க. அவரும் வந்தாரு, டீச்சர் அட்வைஸ் பண்ணி கூட அனுப்புனாரு. எங்க அம்மா வீட்டுல தொடப்பக்கட்டையோட வெயிட்டிங்னு தெரிஞ்சோ என்னமோ எங்க அப்பா என்னைத் திட்டக்கூட இல்ல.
இப்போ நினைச்சா சிரிப்பு வந்தாலும் அன்னைக்கு அப்பா பைக்ல போறப்போ, அம்மா மாரியம்மா மாரி வாசல்ல என்னை வரவேற்க நிக்கிறதை நினைச்சு, பேசாம வண்டில இருந்து குதிச்சிடலாமா? இல்ல இல்ல வலிக்கும்... பேசாம மூவில தலைகாணி வச்சு அமுக்குனா செத்து போற மாதிரி நாம மூச்சை ஹோல்ட் பண்ணி செத்து போயிடலாம்னு மூச்சைப் பிடிச்சு உக்காந்தேன் ஒரு 20 நிமிஷம். அதுக்குள்ள வீடே வந்துட்டேன், ஆனா சாகுற மாதிரி தெரியல.
சரி இன்னைக்கு அம்மா கையிலதான் நம்ம உசுரு போகணும்னு இருக்குனு மனசைக் கல்லாக்கிக்கிட்டு போனேன். வீடு சுத்தி அடி வாங்குனதும், அப்புறம் எங்க அக்கா பொய் சொல்லி பெரியப்பா, தாத்தா, பாட்டினு அட்வைஸ் மழை கொட்டி அசிங்கப்படுத்தது எல்லாம் ஒரு பெரிய சம்பவமாவே மாறிடுச்சு. ஒரு லீவுக்கு பொய் சொல்லப்போயி... ஆனா பொய்னு சொல்ல முடியாது, 10 வருஷம் முன்னாடி இறந்த பெரியப்பாவ நேத்துனு டேட் மட்டும் தானே மாத்தி சொன்னேன்! ஆனா அதுக்குப் போய் கலவரமே ஆயிப்போச்சு.
ஆனாலும் இப்பவும் ஆபீஸ் லீவுக்கு குட்டி குட்டி பொய் சொல்லிட்டு தான் இருக்கேன், அப்போ எல்லாம் இந்த இன்சிடென்ட் சின்ன ஸ்மைலோட என் முன்னாடி வந்து போகத்தான் செய்யுது.