Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
General Videos / Re: MUST DATE THE PLAYBOY - TAMIL WEBSERIES EPISODE 7
« Last post by MysteRy on May 20, 2026, 07:29:19 PM »
12


என்னைப்போல் ஒருவன்
இல்லை இல்லை
என்னுள் தொலைந்த அவன்...

பாக்குறதுக்கு என்னையாட்டமே இருந்தான்
ஆனா என்ன விட ரொம்ப அழகா இருந்தான்... ராசாவாட்டம்...

தொட்டு பாக்கணும்னு ஆசை தான் - ஆனா
நான் தொட்டதும் மறைஞ்சுட்டான்னா எங்க போயி தேட..
நாம தொடரதுதான் எதுமே  வெளங்காம போகுதே
"வேணாண்டா ராசா நான் உன்ன தொடல தூரமா இருந்து ரசிச்சுக்குறேன்"..

என் கந்தலும் களைந்த தலைமுடியும் எங்கே
எண்ணெய் வைத்து படியச்சீவிய உன் அழகு எங்கே..
கிழிந்ததை தைத்த என் துணிகள் எங்கே
கிழித்து கச்சிதமாய் தைத்த உன் உடை தான் எங்கே...

குப்பையே சேராத உன் பை எங்கே
குப்பை மட்டுமே நிறைந்த என் பை எங்கே..
வயிற்றுப்பசி போக்க ஒரு உணவுப்பை உன்னிடம்..என் வயிற்றுப்பசியை போக்க என்னிடமும் ஒரு பை இருக்கு
ஆனால் அதில் உணவு தான் இல்லை...

இந்தப்பையை நிரப்பினால்தான் என் வயிறு நிரம்பும்..
அதிகபட்சமாக மூணு வேளை இல்லையென்றாலும்
ஒரு வேளையாகிலும் சோறு கிடைக்கும்..என்ன....
ஒரு நாள் முழுதும் தெருத்தெருவாய் அலைந்து சலிக்கனும்....

என்னைப்போல் இருக்கும் என்னுள் உள்ளவனே
உன்னிடம் ஒன்று கேட்கிறேன் செய்வாயா???
தினமும் ஒருமுறையாகிலும் என் முன் தோன்றிவிடு
பெரிதாக வரம் எதுவும் கேட்டுவிட மாட்டேன் உன்னிடம்..

என் போன்ற குழந்தைகள் மீது...
இந்த சமுதாயம் திணிக்கும் சுமையை கொஞ்சம் இறக்கிவிட உதவி செய்....
படிப்பறிவில்லா எந்தன் தேவைகள் என்னவென்று உறைப்பேன் உன்னிடம்...
அவற்றை சரியான இடத்தில் கொண்டு சேர்ப்பாயா??

நீயே சொல்லலாமே என்று நீ கேட்பது என் செவிகளில் விழுகிறது
படித்தவன் தப்பு பண்ண மாட்டான் என்றும்
படிக்காதவன் என்றுமே முட்டாள் என்றும்
இந்த சமுதாயம் முத்திரை பதித்துள்ளது...

அந்த முத்திரையை கிழிக்க எனக்கு உதவி செய்வாயா
என்றாகிலும் ஒரு நாள் படிக்காதவனும் முயற்சியால் வெற்றி பெறலாம் என்றும்
படிப்பறிவு மட்டுமே ஒரு மனிதனின் அறிவுத்திரன் ஆகாது என்றும் இந்த புவி உணரும்...

அதுவரை நீ என் பிம்பமாக மட்டுமின்றி
என் குரலை கேட்காத செவிகளுக்கும்
கேட்கும் குரலாய் நீ விழங்கவேண்டும்...
இப்புவியை மாற்ற என்னால் இயன்றதை உன் மூலம் செய்ய ஒரு வாய்ப்பு கொடு.....

அப்படி மட்டும் நடந்துச்சுன்னா
இங்க இருக்குற எல்லாரும் ராசாதான்
உன்ன மாதிரியே அழகிலும் அறிவிலும்....

13
Hi my Dear Nenjam marapathillai Team ...

I am so happy to be a part of this show.

ninaivugalin pettagam namma nenjam marapathillai..

I am here to share my review about our New DJ of Nenjam marapathillai ..

YAZHINI

ivanga kavithaigala na rasichu iruken.. Script writing pannum bothu kooda work pani iruken. RJ tamilyin ucharipugala koornthu gavanichu iruken.. ipo

puthusa DJ va kalam erangi irukanga.. solla enna irukku yazhini .. ur damn good ... my expression was like wooooowwwwwwwwwwwwww..

first time mathiri nu sonna nambave mudiyala .. avalo professional ah pani irukeenga..

first time DJ panna appave solli irukanum am sorry for the delay..

On May 18th - Chinna poi - periya kalavaram ilal sambavam EPisode - 8, intha thalaippukku na present panna vaippu kedachuthu..

Ennoda voice ah thaniya kekurathukkum unga dj mixing la kekurathukkum avalo vithiyasam irukku.. thevaiyana idangal la nenga thantha clipings melum sirappu..

starting from rahmathulla palaar palaar la irunthu total ah vera level editing.. maivizhi pesama sethudalam nu solli iruppa anga.. (en amma thittita na sethu porenu nu chinna pilla soldra dialogue)

unga dj oda kekumbothu athukkana uyir irunthuchu..   oru short film pakura effect irunthuchu..

I Enjoyed to the Core.. Thank u for the memorable episode.. kandippa nenga neraya DJ pannanum.. My hearty Wishes Yazhini tom. Keep going
14
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on May 20, 2026, 02:10:37 PM »
15
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on May 20, 2026, 05:47:15 AM »
16
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-008

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

'சொல்லாமல் போன காதல்/அன்பு'

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.
17
கனவொன்று கண்டேன் !!
பள்ளி செல்லும் எனக்கு
என் தாய் உணவு ஊட்டினாள் !! அலங்காரமாய் நான் உடையணிந்து
வாசல் வரை வந்து நின்ற
பேரூந்தில் ஏறி பள்ளி சென்றேன் !!

கனவொன்று கண்டேன் !!
என் அக்கா அவள் மதிவண்டியில்
என்னை அமர வைத்து
ஊர்த்தெருக்களில் வலம் வந்தாள் !!
என் தங்கை என் கரம் பற்றி
நடக்க பயின்றாள் !!

கனவொன்று கண்டேன் !!
பனி முடிந்து திரும்பி வந்த
என் தந்தை எனக்காக வாங்கி வந்த தின்பண்டங்களை அவர் மடியில்
அமர வைத்து ஊட்டி விட்டார் !!
நான் சோர்வாக இருந்த போதெல்லாம் எனக்கு தான் இருக்கிறேன் என்ற
பலத்தை கொடுத்தார் !!

கனவொன்று கண்டேன் !!
விடுமுறை நாட்களில் நண்பர்கள்
என் வீடேறி வந்து மைதானத்திற்கு விளையாட என்னை அழைத்து சென்றனர் !! நீர் நிரம்பிய குளத்தில் எனக்கு
நீந்த சொல்லி கொடுத்தார்கள் !!

கனவொன்று கண்டேன் !!
என்னை சுற்றி என் குடும்பமும் என் நண்பர்களும் எப்பொழுதும் வலம் வந்தனர் !! காண்பவர்களுக்கு அலங்காரமாய் உடையனிந்து மிடுக்காய்
நான் அவர்களை ஈர்க்க செய்தேன் !!

தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
ஆதவற்றோர் இல்லத்தில் ஓரமாய்
நான் படுத்து இருந்தேன் !!
கிழிந்த என் போர்வையால் குளிர் தாங்காமல் எழுந்திருந்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன்!!

கிழிந்த என் சட்டையணிந்து
மெலிந்த தேகமாய் இளைத்திருந்தேன் !! தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
தாயும் இன்றி தந்தையுமின்றி ஆதரவற்ற ஒருவனாய் இந்த விடுதியில்
என்னை இணைத்து கொண்டேன் !!

தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
மீண்டும் தூங்கி கனவால் வரும்
அந்த சிறு சந்தோஷத்தை எண்ணி
ஏங்கி இருந்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன் !!மற்றவர்களுக்கு நிதர்சனம் உருவமாய் கனவுகள் நிழலாய் இருக்க !!
எனக்கோ கனவு என் உருவுமாய் மாறி நிதர்சனம் என் நிழலாய் மாற பிராத்தனையுடன் நான் !! 💔🚶‍♂️
18
கவிதைகள் / Re: Poems Audio & video
« Last post by Yazhini on May 19, 2026, 07:37:24 PM »
உரையாடல் ...

19

சாபமா? இல்லை வரமா ?

அன்று ஓர் நாள்.....
கண்விழித்து பார்த்தேன்..
சூரிய ஒளி, கண்ணை பறித்தது..
மனம் பதறி ...எழுந்தேன்...,
ஐயோ! வெகு நேரம் ஆகிவிட்டதே..
எனைவிட்டு .. எல்லோரும்
விரைந்து.. சென்றிருப்பார்களே..

பல இடங்களில் கிழிந்து.. தைத்த..
ஓட்டை இல்லா என் கைப்பையை
எடுத்துக்கொண்டு..ஓட்டமும்
நடையுமாக ஓடினேன்.. .

அதிகாலையில் தானே..
எல்லா வீட்டின் குப்பைகளும்
குப்பைமேட்டுக்கு வரும்..
நான் தாமதமாக போனால்..
தூக்கியெறியப்பட்ட புத்தகங்கள்..
எழுதாத வெள்ளை காகிதங்களை   
எல்லாம் எரித்து விடுவார்களே..

அப்படி மட்டும் நடந்தால்..
என் படிப்பும்.. என் கனவுகளும்
கலைந்து சுக்குசுக்காக.. சிதறி விடுமோ....
என்ற பயம் கவ்விய முகத்துடனே ..
அதிவேகமாக ஓடினேன்..
மலைபோல் கொட்டி கிடந்த
குப்பைக்கிடங்கு நோக்கி..
 
இன்று....
"என்னங்க.. எழுந்திரிங்க..
அலுவலகம் போகும் நேரமாச்சு"..
அன்புடனே முகம் மலர...
அழைத்தாள். என் மனைவி...
ஆம், இன்றோ நான் ஒரு..
பொறுப்பான வங்கிஅதிகாரி..
கடவுளின் அருளாலும்..
கடின உழைப்பாலும்..
கிடைத்த பலன்.. இது....
என் கனவுகளை சாதித்த.
பெருமையுடன்.. கிளம்பினேன்..
மனம் நிறைந்த மகிழ்வுடனே..

காரின் வெளியே யாரோ.. எனை கைநீட்டி
பேசுவதுபோல்  ஓர் உணர்வு....
நிதானித்து அவர்களை கவனித்தேன்...
"அதோ போறாரே ஒருத்தர்..
அவர்தான் ஒரு காலத்தில்.. இங்கே..
குப்பை பொறுக்கிட்டு இருந்தார்..
இன்று காரில் போகிறார்...
இது அவரின் விடாமுயற்சியும்
கடின உழைப்பின் பலன்.. .
நீயும் அதே போல.. நல்ல படிச்சு..
நல்ல நிலைமைக்கு வரணும்..
புரிஞ்சுதா மகனே...?" என்றாள் அவள்...

அந்த சிறுவனுக்கு நான் ஓர் நல்ல
உதாரணமாக இருந்தாலும்.. என்
மனம் கனத்தது... வலித்தது... என்னை
அறியாமல் கண்கள் வியர்த்தது..

அழுக்கடைந்த.. உடைகளையும்.. கிழிந்த பையுடன்..
குப்பைகளை.. சேகரிக்கும் என் அடையாளங்களை
மாற்றிவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் இருந்த எனக்கு...
இது சாபமா? இல்லை வரமா ?....

20
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on May 19, 2026, 06:07:44 AM »
Pages: 1 [2] 3 4 ... 10