Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 09:24:00 AM »
12
13
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 08:50:44 AM »
16
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின்  ஒளிபரப்பின்பொழுது (சனிக்கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால்   திங்கள்கிழமை   உங்கள் கவிதைகளை பதிவு செய்யப்படும் வகையில் (உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது) இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 409

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


18




முருங்கை இலையை காய வைத்து அரைத்து அதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் உடலில் உள்ள ஊளைச்சதைகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். முருங்கை பல வகையில் நன்மை பயக்கும் என்பதால் உலக அளவில் இது பிரசித்தி பெற்று வருகிறது. நாமே தயாரித்தால் கலப்படம் இல்லாத பாதுகாப்பு உறுதி. இந்த முருங்கை டீயில் பக்க விளைவுகள் ஏதும் இல்லை...
19
உன் பதிலுக்காக...

ஒரு செய்தி அனுப்பினேன்...
அது உன்னை அடைந்ததோ
இல்லையோ தெரியவில்லை...

ஆனால்,
அந்த நொடியிலிருந்து
என் மனம் மட்டும்
உன் பதிலுக்காகவே காத்திருக்கிறது.

ஒவ்வொரு முறையும்
அலைபேசியை எடுத்து பார்க்கும்போது,
"இப்போது வந்திருக்கும்..."
என்று நம்பும் இதயம்,
ஒவ்வொரு முறையும்
அமைதியையே பார்த்து
மீண்டும் ஏமாறுகிறது.

நேரம் நகர்கிறது...
நிமிடங்கள் மணிநேரங்களாகின்றன...
ஆனால்,
உன் ஒரு வார்த்தைக்காக
பதறித் துடிக்கும்
என் இதயம் மட்டும்
இன்னும் காத்திருக்கிறது...

நீ அனுப்பும்
ஒரே ஒரு பதில்...
என் எல்லா தவிப்புக்கும்
அமைதியாக மாறிவிடும்...
20
என் தவிப்பு...

என் தவிப்பு ஒருநாளும் புரியாது...
என் மௌனம் பேசும் மொழியை
யாரும் மொழிபெயர்க்க முடியாது...

புன்னகை முகமூடி அணிந்தாலும்,
இதயம் மட்டும்
உன் நினைவின் நிழலில்
தினமும் அழுதுகொண்டே இருக்கிறது...

காத்திருப்பது எளிதென்று
சொல்பவர்கள் பலர்...
காத்திருந்த இதயத்தின்
வலியை உணர்ந்தவர்கள் சிலரே...

வராத ஒரு செய்திக்காக,
கிடைக்காத ஒரு பதிலுக்காக,
திரும்பாத ஒரு நொடிக்காக,
தினமும் துடிக்கிறது என் மனம்...

காலம் நகர்கிறது...
நாட்கள் மாறுகின்றன...
ஆனால்,
உன்னை எதிர்பார்க்கும்
என் இதயத்தின் துடிப்பு மட்டும்
மாறவே இல்லை...

ஒருநாள்
என் கண்ணீரும் வற்றிப் போகலாம்...
என் வார்த்தைகளும்
மௌனமாகி விடலாம்...

ஆனால்,
உன்னைத் தேடிய
என் தவிப்பு மட்டும்...
என்றும்
என் உயிரோடு
பயணித்துக் கொண்டே இருக்கும்...
Pages: 1 [2] 3 4 ... 10