Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
கடகாரங்க பொண்ணு... உனக்கு என்ன பா....கடையில ஆச படுற எல்லாத்தையும் எடுத்து சாப்பிடலாம் என தோழிகள் பல முறை சொல்வார்கள்...

     மளிகை கடகாரங்களுக்குன்னு ஒரு சில தியாகம் இருந்தே ஆகணும். அதுல குடும்பத்துல எல்லோருமே பங்கு பெற தான்செய்யணும். அதுல முக்கியமானது வெளியூர் பிரயாணம் குடும்பமா போக முடியாது... என் நினைவுகளில் வெளியூர்ல இருக்கும் அம்மம்மா பெரியம்மா வீட்டுக்கு போனத விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போ இந்த நினைவுக்கூட கொஞ்சம் தான் என்னிடம் இருக்கு.
       
        புகை, வாகன சத்தம் நிறைஞ்ச நகரத்தோட ஓட்டத்தில் காணாம போன பச்சை பசேல் ன்னு வயல்கள பார்த்த போது மனசு நிறைய சந்தோஷம் எப்படி வந்து ஒட்டிகிச்சுன்னு தெரியல...
நெல்கதிர முதல் முறை பார்த்தது அப்போ தான். மரம் செடிகளை மட்டுமே பார்த்த எனக்கு அது ஒரு அதிசயம்... 🌾 அம்மாவிடம் " அம்மா பாருங்க குட்டி குட்டி மரம் காச்சிருக்கு" ன்னு சொல்ல அருகே இருந்தவங்க எதுக்கு சிரிக்குறாங்குனு கூட தெரியாம என்னோட உற்சாகத்துல இன்னும் அதிகமா சொல்லிட்டே இருந்தேன். அம்மா கஷ்டப்பட்டு தான் என் வாய்ய அடைச்சாங்க.

       அந்தோணியார் கோவில் முன்னாடி தான் அம்மம்மா வீடு. முதல் முறை அம்மம்மா வீட்டுக்கு போகும் போது கை நடுங்க விறகு அடுப்புல சோறு வடிச்சுட்டு இருந்தாங்க...எங்கள பாத்ததும் "ஏ மக்கா" ன்னு முகத்த தடவி நெட்ட எடுத்து, உச்சி முகர்ந்து நெற்றில முத்தம் கொடுத்தாங்க... சுருக்கம் நிறைஞ்ச அழகிய அன்பான கைகள், கண்கள்ல அவ்வளவு அன்பு. அது இன்னைக்கும் என் நினைவுல இருக்குற என் அம்மம்மாவோட நினைவு.

      பிறகு கருப்பட்டி காபி போட்டு குடிச்சுட்டு அக்கா, பெரியம்மா வழி அண்ணா, நானு மூணு பேரும் கோவில் முன்னாடி மணல்ல செம்ம ஆட்டம்... கால் வலிக்க வலிக்க விளையாட்டு. பாக்குறவங்க கொடுக்கர் பேத்தியா ன்னு கேக்கும் போது தான் தெரிஞ்சுது என் தாத்தாவோட பட்ட பேரு.

      பனங்கிழங்கு, பதனி, ஏணிப்படி மிட்டாய் எல்லாம் ஒரு கட்டு கட்டுனோம்... விடுமுறைய விளையாட்டோட கழிச்சுட்டு கிளம்பும் போது சீலைல முடிஞ்ச பைசா எடுத்து பாசமா கொடுத்து கன்னத்த வருடி வழி அனுப்பி வச்சாங்க...

       ஒரு சில தொடுதல் நம் வாழ்க்கையோடு பினஞ்சு இருக்கும். அத நினைக்கும் போது எல்லாம் பசுமை மாறாமல் நிலைச்சு இருக்கும் ....
பல வருடம் கழித்து தூசிதட்டி இந்த நினைவுகளை எழுப்பிய ' நெஞ்சம் மறப்பதில்லை ' க்கு மிக்க நன்றி ❤️ ❤️
12
எல்லோரும் மாதிரிதான் நாங்களும், எப்போடா ஸ்கூல் லீவு விடுவாங்கன்னு காத்திருக்க gang, ஆனா ஒரே ஒரு வித்தியாசம் நாங்க வேற ஊருக்கு போய் பாட்டிய பாக்க முடியாது. ஏன்னா நாங்க இருந்த அதே ஊர்ல தான் பாட்டி வீடும், அப்புறம் என்ன ஹாப்பினஸ் தனியான்னு கேட்குறீங்களா, அங்க தான் இருக்கு டிவிஸ்ட்டு. ஊர்ல இருந்து என் ரெண்டு மாமாவோட பசங்க, பொண்ணுங்க எல்லாரும் லீவுக்கு பாட்டி வீட்டுக்கு வந்துடுவாங்க. அப்புறம் என்ன, அட்டகாசம் தான்.

காலைலேயே என்னையும் தங்கச்சியயும் டிவிஸ் 50ல ஏத்திக்கிட்டு போயிட்டு பாட்டி வீட்டுல தள்ளிவிட்டுட்டு அம்மா வேலைக்கு போயிருவாங்க. நம்மளவ விட நம்மளோட லீவ அதிகம் எஞ்சாய் பண்ணது அவங்க தான்னு அப்போ புரியல, இப்போ புரியுது. நாங்க 6 பேரு எங்களுக்கு பயம்னா என்னான்னே தெரியாது. பாட்டி வீடு அல்லோலப்படும். ரெண்டு பேர வச்சிக்கிட்டே இந்த அம்மா அப்பாக்கெல்லாம் சமாளிக்க முடியல எங்க 6 பேர வச்சிக்கிட்டு எப்படி தான் எங்க தாத்தா பாட்டி சமாளிச்சாங்களோ தெரியல.

எங்க பாட்டி வீட்டுல வெளியே திண்ணைல ஆரம்பிச்சு, முற்றம் பின்வாசல்ன்னு பெரிய வீடு எங்களுக்குன்னே அமைஞ்ச மாதிரி இருக்கும். இந்த பக்கத்துக்கும் அந்த பக்கத்துக்கும் எங்க ஓட்டத்துல ஜூராசிக் பார்க் படத்துல டயனோசர்ங்க ஓடி வருமே அந்த மாதிரி வீடே அதிரும். பெரிய டார்ஸான்னு நினைப்பு திண்ணை மேல் கூரைல ஒரு சட்டத்துல கயிற மாட்டி இந்த திண்ணைல இருந்து அடுத்த திண்ணைக்கு 'ஏயேஆஆ ஆஏஏஏ' ன்னு கத்திக்கிட்டே தாவுவோம். என்னைக்கு அந்த சட்டம் முறிஞ்சு விழும்ன்னு வீட்டுல எல்லாரும் காத்துக்கிட்டு இருந்த மாதிரியே தோணும்.

ஒருத்தர்கொருத்தர் சளைச்சவங்க இல்ல நாங்க. தக்கிளியூண்டு வண்டு மாதிரி இருந்துகிட்டு பக்கத்துவிட்டுல இருந்த இளந்தாரி பயல, 'டேய் குரங்கு மூஞ்சா'ன்னு கூப்பிட்டு வம்பிழுத்து, அவன் அம்மாவ கூட்டிட்டு வந்துட்டான் பஞ்சாயத்துக்கு. அவங்ககிட்ட தாத்தா பாட்டி சண்டை போட்டு/சமாதானம் பண்ணி அனுப்பி வச்சாலும் எங்களுக்கு தெரியும் ஆஹா நமக்கு இருக்குடின்னு முருங்ககுச்சிய ஒடச்சிட்டு பாட்டி வரும்போதே ஓட்டம் எடுப்போம்.

எங்க அம்மா ஹாஸ்பிடல்ல இருந்து எடுத்துட்டு வர்ர additional syringeலாம் எங்க போகும்னு நினைக்கிறீங்க? எங்க கசின்ஸ் ஊர்ல இருந்து வாங்கிட்டு வர்ர டெடிபியருக்கு தான். Syringeல தண்ணிய fill பண்ணி அந்த டெடிக்கு ஏத்தி ஏத்தி, சொத சொதன்னு ஆக்கி, அந்த பொம்மைக்கு உயிர் இருந்திருந்தா செத்தே போயிருக்கும். செவனேன்னு இருக்கலாம் ஆனா நாங்க இருக்க மாட்டோம், ஆஸ்திரேலியால இருந்து அம்மாக்கு ஆசையா ப்ரண்ட் வாங்கி கொடுத்த கங்காரு பொம்மை கழுத்தறுத்து ஆபிரேஷன் பண்ணி சாகடிச்சிருக்கோம்.

இப்போ புரியுது அப்போலாம் எங்களோட அம்மா அப்பா இந்த குட்டி குளவாரிங்க தொல்ல தாங்க முடியாம தான் தாத்தா பாட்டி வீட்டுல கொண்டு போயிட்டு தள்ளிவிட்டுருக்காங்கன்னு. ஆனா என்ன சேட்டை பண்ணினாலும் தாங்க கூடிய சக்தி தாத்தா பாட்டிக்கு தான் இருந்திருக்கு. காலைலயும் சரி, ராத்திரியிலயும் சரி வீட்டுக்கு வெளியே பெரிய அரசமரத்தடிக்கு கீழ ரெண்டு கயித்து கட்டில போட்டு சுத்தி உட்கார வச்சி கவள சோறு உருட்டிக்கொடுப்பாங்க பாட்டி. அதுவும் சிலசமயம் காலைல பழைய சோற பிழிஞ்சு உருட்டி அதுல சுண்ட வச்ச பழைய குழம்ப ஊத்தி ஊட்டி விடுவாங்க பாருங்க, தேவாமிர்தமா இருக்கும்.

அரசமர இலைல தாத்தா பீப்பீ செஞ்சு கொடுப்பாங்க, தாத்தவோட கதைகளுக்கு நாங்க எல்லாருமே மகுடிக்கு ஆடுற பாம்பா சுருண்டுடுவோம். அதெல்லாம் ஒரு காலம்னு சொன்னாலும், அந்த காலம் திரும்பி வராதுன்னு தெரிஞ்சாலும் மனசு ஏங்குறதை தவிர்க்க முடியல. கசிஸ்குள்ள இப்பவும் நாங்க நெருக்கமா இருக்க காரணம் எப்பவும் எங்கள பிணைப்போட கட்டி போட்ட எங்க பாட்டி வீடுங்கறதை மறுக்கவே முடியாது.
13
General Videos / Re: Mindset is everything!
« Last post by Ninja on February 21, 2026, 10:51:11 AM »
14
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on February 21, 2026, 06:51:34 AM »
15
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on February 21, 2026, 05:57:30 AM »
16
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 20, 2026, 10:59:31 PM »

February 2026
#471   20.02.2026







- Socky
17
Rules & Admin Notice / Chat Nickname CHANGE Log
« Last post by Forum on February 20, 2026, 10:39:31 PM »

20-02-2026
Friendly Heart nickname changed as Phoenix
18
அழகான தலைப்பு

பள்ளி விடுமுறையும் பாட்டி வீடும்

பள்ளியில் இறுதி  நாள் தேர்வு எழுதி வீட்டுக்கு வந்ததும் புத்தக பையை
இறக்கி வைக்கும்போது புத்தகப்பையின் சுமை மட்டும் அல்ல,
மனசின் சுமையும் இறங்கும்

பாட்டி வீட்டுக்கு செல்லும் நாளுக்காய் காத்திருக்க துவங்கும் மனம்
ஊரிலோ பாட்டி புத்தாண்டு பிறந்ததும் கேட்க துவங்கிடுவாள் அம்மாவிடம்
எப்போ வரீங்க , பிள்ளைகளையாச்சும் அனுப்பிவிடுங்க என்று

அழகான இரவு ரயில் பயணம் , கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தபின் எப்போ தூங்குவோம் என தெரியாது
சட்டென்று அழகான நறுமணம் , சில்லென்ற காற்று , எழுப்பி விடும் , சன்னலில் பார்க்க அழகான
பச்ச பசேல் என்ற மரங்கள் , ரயிலை விட வேகமாய் கடப்பதாய்  தோன்றும்,

இரயில் நிலையத்தில் இறங்கி , பேருந்தில் பாட்டியை காண ஆவலாய் ஒரு பேருந்து பயணம் , சன்னல் இருக்கைக்கு அண்ணனிடம் கெஞ்சி அமர்ந்து , இயற்கையை ரசித்து , நிறுத்தத்தில் இறங்கி , வீடு நோக்கி வயல்வெளிகளை  கடந்து நடக்க , வரும்வழியில் இன்னாருடைய மகன் தானே நீ என்று பல அப்பத்தாக்கள் ஆசையா கேள்விக்கணைகளை தொடுக்கும், பாட்டியை காணும் ஆவலில் கால்கள் ஓடும் ,
 
வீட்டிலோ சூரியன் உதிக்கும் முன்னே எழுந்து வாசலில் , எங்கள் வருகைக்காக காத்திருப்பாள் பாட்டி , ஓடி சென்று அவளை அணைக்க , ஒரு வருடத்திற்கான அத்தனை சேமிப்பையும் வட்டியுடன் மூச்சு முட்ட முத்தமாய் தந்திடுவாள்

குளிச்ட்டு வாங்க பலகாரம் செய்திருக்கேன் என்பாள் , ஆசையாய் தேடி தேடி எடுத்தி வைத்திருப்பாள் , தோட்டத்தில் இருந்து மாங்காயும் , பலாப்பழமும் , ஆசையாய் ஊட்டி விட இரட்டிப்பு இனிப்பு எங்களுக்கு கிடைப்பதாய் உணர்வோம் ,

கோவிலுக்கு அவள் கையை பிடித்து அழைத்து செல்வாள் , தோட்டத்திலும் அவளோடு நடப்போம் , இயற்கையை ரசிப்போம் ,  வழியில் காண்போரிடமெல்லாம் என் பேரன்  பட்டினத்தில் இருந்து வந்திருக்கான் என்று பெருமையுடன் சொல்லும்போது உடல் சிலிர்க்கும் ,

அவள் மடியில் கிடந்து ,ஏழு மலை ஏழு கடல் கடந்த ராட்சசன் உயிர் இருக்கும் என அவள் சொல்லும் பேய் கதைகளை கேட்டு பயத்தில் அவளை அணைத்திடுவோம், , மழை வரும் நேரம் அர்ஜுனா அர்ஜுனா சொல் என்பாள் , தினமும் அவள் சொல்லும் கதைகள் கேட்டு உறங்குவோம் .

மாலையில் , நேந்திரம் பழம்பொரி, சிப்ஸ் என்று ஆசையாய் அவளே செய்திடுவாள் ,  சித்தி , பெரியப்பா குழந்தைகள் என்று ஓடி ஆடி கழித்திடுவோம்,  கீழ விழுந்த மாங்காய் தின்னாமல் ,தோட்டத்தில் கல் எரிந்து வீழ்த்தும் மாங்காய் சுவை என்றும் அலாதி தான் எங்களுக்கு

இது ஒரு புறம் இருக்க , வீட்டுக்கு மாமன் மகள் வந்து விட்டால், சின்ன ராசாவ  கையில புடிக்க முடியாது என்பது போல மனசுக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கும் , பாட்டியோ அவள் உனக்கு தான் என்று உறவினர் முன் சொல்கையில் எக்ஸ்ட்ரா குதூகலம் தொற்றிக்கொள்ளும் மனதிற்குள் அறியாத வயசில் நாணமும் தொற்றிக்கொள்ளும்.

பழைய சோறாக இருந்தாலும் பாட்டியின் கையில் ஊட்டி விட அமிர்தமாய் இறங்கும், தொலைபேசி தொல்லை தந்ததில்லை , தொலைக்காட்சியும் அத்தியாவசியமில்லாததாகி போயின .

ஒரு வருடத்தில் நடந்த கதைகளை ஒவ்வொன்றாய் ஒப்பித்திடுவோம் , பேசி பேசி தீராத கதைகள் அவை
விடுமுறை கழிந்து விட்டு விலகுகையில் இங்கயே இருந்திடு ராசா என்பாள் , கண்ணீர் எங்களை ஆசுவாச படுத்த ஓடி வரும்,

அவள் சேலையில் முடிந்து வாய்த்த நாணயங்களிலிருந்து எடுத்து ஒவ்வொருவருக்கும் ஒன்று என கொடுப்பாள், இனிப்பு வாங்கி சாப்டுக்கோ என்று

அடுத்த சில நாட்களுக்கு பள்ளியில் அந்த அனுபவ பகிர்தலில் செல்லும் , மீண்டும் மனம் காத்திருக்க துவங்கும் அடுத்த விடுமுறையை நோக்கி

ஒரு மாதம் பல பல காலத்தால் அழியாத பல பல நல்ல நினைவுகளை தந்து விட்டு செல்லும்



நினைவுகளை தட்டி எழுப்ப செய்தமைக்கு  நன்றிகள்  பல FTC க்கு



***JOKER***

19
பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் அம்மா சீக்கிரம் ரெடியாகி வா பஸ்க்கு நேரமாகுது என்று சொல்லவும் நானும் சந்தோசமாக ரெடியாகி வந்தேன். பஸ்சில் ஏறினாலே ஜன்னலோர சீட்டில் இருந்து வெளியே வேடிக்கை பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதுவும் பாட்டி வீட்டுக்கு போக போறேன் என்றால் நேரம் போவதே தெரியாமல் வேடிக்கை பார்ப்பேன்.   
  மரங்களுடன் காத்தாடியும் பின்னால் ஓடி போறதை பார்க்க கண் கொள்ளா காட்சியாய் இருக்கும்.அம்மா அடுத்து இறங்கனும் என்று சொல்லும் போது தான் அதற்குள் வந்து விட்டோமா என்று எண்ணி கொண்டு இறங்கினேன். அடுத்து டவுண் பஸ்சில் கொஞ்ச நேர பயணம். இதோ இறங்கி விட்டோம்.பஸ் stand ல் மாமா காத்திருந்தார் அவரை பார்த்தவுடன் மாமா..... என்று கத்தி கொண்டு ஓடினேன் என்னை தூக்கி அணைத்து முத்தமிட்டு கொஞ்சினார்.
   பாட்டியும் தாத்தாவும் உன்னை பார்க்க ஆசையாய் காத்திருக்காங்க வாங்க போகலாம் என்று எங்களை அழைத்து சென்றார்.சிறிது தூரம் நடந்ததும் பாட்டி வீடு கண்ணுக்கு தெரிய நான் ஓட்டம் எடுத்தேன்.பாட்டி தாத்தா என்று கத்தி கொண்டே ஓடி போய் கட்டி அணைத்தேன்.வாடி ராசாத்தி என்று என்னை கொஞ்சினர்.அம்மா முதல்ல சாப்பாடு குடுங்க என்று மாமா சொல்ல பாட்டி என்னையும் அம்மாவையும் சாப்பிட அழைத்து சென்றார். எல்லோரும் சேர்ந்து சாப்பிட பாட்டி எனக்கு ஊட்டி விட்டார்.வெகு நேரம் அம்மாவும் பாட்டியும் கதை பேச நான் மாமா கூட விளையாடி கொண்டிருந்தேன்.   
    நேரமாச்சி தூங்க போங்க காலையில் பேசலாம் என்று பாட்டி சொல்லவும் தூங்க போனோம்.பாட்டி காலையில் சாப்பிட எனக்கு பிடித்த புட்டு பயிறு அப்பளம் ஊட்டி விட்டார்.சாப்பிட்டதும் தாத்தா கூட தோட்டத்துக்கு போனேன்.அங்கே மா மரங்களில் மாங்காய் கொத்து கொத்தாக தொங்கி கொண்டிருந்தது. தாத்தாவிடம் எனக்கு மாங்காய் வேண்டுமென சொல்ல கிளிமூக்கு மாங்காய் பறித்து கழுவி என்னிடம் நீட்டினார் .நான் அப்படியே கடித்து சாப்பிட்டு கொண்டே நடந்தேன்.கொய்யா, சக்கைபழம் முந்திரிபழம் எல்லாம் காய்த்து தொங்கி கொண்டிருந்தது.தாத்தாவிடம் எனக்கு எல்லா பழங்களும் வேண்டும் என்று கேட்டேன்.உனக்கு இல்லாத பழமா என்று கைநிறைய கொய்யாப்பழம் பறித்து தந்தார்.பழுத்த சக்கைபழம் வீட்டில் இருக்கு பாட்டி வெட்டி தருவா என்று சொன்னார் .
   கை எட்டும் தூரத்தில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் வெட்டி கொடுத்தார் .வெயில் ஏறவும் வீட்டுக்கு திரும்பி வந்தோம்.பாட்டி மதிய சமையல் தயார் செய்து கொண்டிருந்தார். என்ன சமையல் என்று பாட்டியிடம் கேட்டேன்.நாட்டு கோழி அடிச்சி கறி வைக்கிறேன் என்று சொல்லும் போதே ஈரல் எனக்கு எனக்கு என்று குதித்தேன்.வாழை இலையில் சாப்பாடு பரிமாறி ஆசையாய் ஊட்டி விட்டார் பாட்டி.பாட்டி கைமணம் அவ்வளவு ருசியாக இருந்தது.
  சாயங்காலம் பாட்டி சக்கையை வெட்டி உரிச்சி தர தர தேனாக இனித்த சக்கையை ருசித்து சாப்பிட்டேன். அப்போது மாமா இளநீர் குலையும் நொங்கு குலையும் கொண்டு வந்தார்.எல்லாம் உனக்கு தான் நல்லா சாப்பிடு செல்லம் சொன்னார். எனக்கு பிடித்த அனைத்தும் பார்த்து பார்த்து சமைத்து கொடுத்தார் பாட்டி. தாத்தா கூட தோப்புக்கு போறதும் நல்லா சாப்பிடவும் என்று பள்ளி விடுமுறை முடியும் வரை சந்தோசமாய் சுற்றி திரிந்தேன்.விடுமுறை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது அடுத்த விடுமுறைக்கும் வரணும் ராசாத்தி என்று சொல்லி வழி அனுப்பி வைத்தனர் பாட்டி தாத்தா. எங்களை கொண்டு விட மாமா வந்தார்.எங்களோடு மா ,சக்கை ,கொய்யா நொங்கு எல்லாம் பயணமாகி எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தது.விடுமுறை என்றாலே பாட்டி வீடும் அங்கே கிடைக்கும் கவனிப்பும் மறக்க முடியாத நினைவுகள்.
20
Love & Love Only / New Beginnings ✨
« Last post by MysteRy on February 20, 2026, 10:19:57 AM »


The night felt warm and soft, just like the promises he once made.

Meghla still remembered that little restaurant—the candlelight flickering between them, the city glowing behind the glass windows, and Arian holding her hands as if he would never let go. He had looked into her eyes and whispered, “I’ll never leave you.”

She believed him.

But love doesn’t always break with noise. Sometimes, it fades quietly.

The calls became shorter. The messages came slower. The warmth in his voice slowly turned distant. And one evening, with a calmness that hurt more than anger, Arian said, “Maybe we need some space.”

Space.

It was such a small word for something that created such a huge emptiness.

Meghla felt her world collapse. She cried herself to sleep, replayed old memories, reread sweet messages, and blamed herself. Was I not enough? Did I love him too much?

Days passed in silence until someone gently knocked on her door—her best friend, Ishita.

Ishita didn’t come with dramatic speeches. She simply sat beside Meghla, held her hand, and stayed. She listened to the tears, the doubts, the heartbreak.

One evening, Ishita softly said,
“You didn’t lose someone who loved you. He lost someone who truly loved him.”

Those words didn’t fix everything overnight. But they planted something—hope.

Slowly, Ishita started taking Meghla out for walks, to bookstores, to cafés. She reminded her of her dreams, her strength, her laughter. Bit by bit, Meghla began to rediscover herself—not as someone’s girlfriend, but as her own person.

She focused on her studies, her ambitions, her passions. The girl who once felt shattered began to glow again.

Months later, Meghla found herself sitting in that same restaurant. The same candlelight. The same city view. But this time, she wasn’t broken. She was stronger. And Ishita was sitting across from her, smiling proudly.

“I’m not the same girl who cried here,” Meghla said softly.

“No,” Ishita smiled. “You’re better.”

As they laughed, a stranger from a nearby table politely approached.

“Excuse me,” he said gently, “your smile is beautiful. It deserves to stay.”

Meghla looked up, surprised—but not desperate, not afraid.

This time, she wasn’t looking for someone to complete her. She was already whole.

She realized something important that night:
Love that leaves is not the end of your story. Sometimes, it clears the path for something healthier, something truer.

And for the first time in a long while, Meghla felt ready—not to chase love, but to welcome it when it arrives.

Because broken hands can still hold new dreams.
And every ending carries the quiet promise of a new beginning. ✨
Pages: 1 [2] 3 4 ... 10