Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
ங்கை

அடுத்து ✨ கை ✨


12
விளையாட்டு - Games / Re: Film Names
« Last post by ShyNiKhaa on Today at 12:14:31 AM »
Naan Aanaiyitaal

Next  ✨L✨
13
SMS & QUOTES / Re: ShyNiKhaa Quotes - The Art of Feeling Deeply
« Last post by ShyNiKhaa on Today at 12:05:02 AM »
𝐏𝐞𝐚𝐜𝐞 𝐎𝐯𝐞𝐫 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞!!

14
SMS & QUOTES / ShyNiKhaa Quotes - The Art of Feeling Deeply
« Last post by ShyNiKhaa on May 21, 2026, 11:56:05 PM »
𝐓𝐡𝐞 𝐀𝐫𝐭 𝐨𝐟 𝐅𝐞𝐞𝐥𝐢𝐧𝐠 𝐃𝐞𝐞𝐩𝐥𝐲 !! ✨


✍️𝑨 𝒄𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒊𝒐𝒏 𝒐𝒇 𝒕𝒉𝒐𝒖𝒈𝒉𝒕𝒔 𝒘𝒓𝒊𝒕𝒕𝒆𝒏 𝒇𝒓𝒐𝒎 𝒔𝒐𝒇𝒕𝒏𝒆𝒔𝒔, 𝒔𝒊𝒏𝒄𝒆𝒓𝒊𝒕𝒚, 𝒔𝒆𝒍𝒇-𝒘𝒐𝒓𝒕𝒉, 𝒂𝒏𝒅 𝒕𝒉𝒆 𝒌𝒊𝒏𝒅 𝒐𝒇 𝒆𝒎𝒐𝒕𝒊𝒐𝒏𝒔 𝒕𝒉𝒂𝒕 𝒍𝒆𝒂𝒗𝒆 𝒔𝒊𝒍𝒆𝒏𝒕 𝒍𝒆𝒔𝒔𝒐𝒏𝒔 𝒃𝒆𝒉𝒊𝒏𝒅 .

𝑵𝒐𝒕 𝒆𝒗𝒆𝒓𝒚 𝒇𝒆𝒆𝒍𝒊𝒏𝒈 𝒃𝒆𝒄𝒐𝒎𝒆𝒔 𝒂 𝒄𝒐𝒏𝒗𝒆𝒓𝒔𝒂𝒕𝒊𝒐𝒏.
𝑺𝒐𝒎𝒆 𝒕𝒖𝒓𝒏 𝒊𝒏𝒕𝒐 𝒔𝒊𝒍𝒆𝒏𝒄𝒆, 𝒑𝒐𝒆𝒕𝒓𝒚, 𝒅𝒊𝒔𝒕𝒂𝒏𝒄𝒆, 𝒈𝒓𝒐𝒘𝒕𝒉, 𝒂𝒏𝒅 𝒒𝒖𝒊𝒆𝒕 𝒔𝒕𝒓𝒆𝒏𝒈𝒕𝒉.
𝑻𝒉𝒆𝒔𝒆 𝒘𝒐𝒓𝒅𝒔 𝒄𝒂𝒓𝒓𝒚 𝒑𝒊𝒆𝒄𝒆𝒔 𝒐𝒇 𝒆𝒎𝒐𝒕𝒊𝒐𝒏𝒔 𝑰 𝒏𝒆𝒗𝒆𝒓 𝒌𝒏𝒆𝒘 𝒉𝒐𝒘 𝒕𝒐 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏 𝒂𝒍𝒐𝒖𝒅.


"ǫᴜᴏᴛᴇs" - “ᴡʜᴇʀᴇ ꜰᴇᴇʟɪɴɢs ʙᴇᴄᴏᴍᴇ ᴡᴏʀᴅs.”
15


காத்திருந்த காதல்!!!


எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் என்ற பந்தம் இருக்க  தான் செய்யும்...
அதை மறுப்பவன்
இந்த உலகில் யாரும் இல்லை...

என் வாழ்க்கையிலும்..
காதல் என்னும் பந்தததை சந்தித்தேன்...

என்னவள் அறிமுகம் கிடைத்தது. சிறிது காலம் நன்றாக பேசினோம்..
இன்பம் துன்பம் மகிழ்ச்சி அனைத்தையும் பகிர்ந்தேம்..

 எனக்கோ அளவில்லாத மகிழ்ச்சி...
என்னவளிடம் பேசும் போது அவ்ளோ ஆனந்தம்..எனக்குள் என்னற்ற மகிழ்ச்சி..

 ஏதோ போன ஜென்மத்துல இருந்து   தொடர்ந்து வர சொந்தம் போல் என் மனதில் தோன்றும்..

சந்தோசமாக தான் இருவரும் நாட்களை கடந்தோம்..

என் அன்பானவள் மீது காதல் எப்படி வந்தது என்று நினைக்கும் தருணம்..

என் குடும்பத்தில் முக்கியமான function..
எல்லா சொந்தமும் என் கூட இருக்கப்போ..
என் மனது ஏதோ இழந்தது போல்  எனக்குள் மிக பெரிய வேதனை..
என் சொந்தம் பந்ததிடம் பேசும் போது மிகவும் மண வேதனை..

 அன்றைய தினம் function முடிந்தது .. என் தேடல் தொடங்கியது...
என் அன்பானவளே நினைத்து..

உடனே குறுஞ்செய்தியில் என்னவளுக்கு hi சொன்னனேன்..
அந்த hi வெறும் hi இல்லை.. புதிதாக - - -செல்ல பெயர் வைத்து hi - -  - nu சொன்னேன்..

என் அன்பானவள் பதில்...என்ன sir புதுசா பேரு வச்சு கூப்பிடுரிங்க  சொல்ல..

நான் சொன்னேன் இல்ல ஒரே நியாபகம் அதான் அப்படி கூப்பிட்டேன்னு..
என் அன்பானவளிடம் எத்தனை  முறை பேசினாலும்..

 எனக்கோ ஒரு பொழுதும் அழுத்து போவதில்லை..
அப்படி பேசி மகிழ்ந்த நாட்களை எப்படி மறக்க முடியும்..
என் அன்பானவளை எப்படி மறப்பேன்..

மறந்திடுவேன் என்று.. சொல்வது மிக சுலபமான விஷயம் கிடையாது..

ஒவ்வொரு நொடியும் என்  அன்பானவளுக்காக
காத்திருந்து காத்திருந்து பேசியவன் நான்..

என் அன்பானவளுக்கு
நிகர் யாரும் இல்லை
இந்த உலகினிலே..

அவள் வருகைக்காக தினம் தினம்  காத்திருந்து பேசிய நாட்களை..
என்று என்னும் போது மிக பெருமையாக தான் இருக்கும்..

இருப்பினும் ஒரு தலை காதல் என்றும் சேராது....என்று என் மனதை மிக வருந்தி கொண்டு.. என் உள் மனம் என்னை கொள்ளாமல் கொன்று குவிக்கும்..

என் அன்பானவளுடையை  நியாபகதை என்னால் மறக்கவும் முடியாமல்..
காதலை சொல்ல தைரியமும் இல்லாமல் என் மனம் தவிக்கும் பாடு இருக்கே..
மிக பெரிய பாடு..

அந்த மனம் தவிக்கும் வலி..

எந்த எதிரிக்கும் அந்த நிலைமை வர கூடாது.. என்று தான் நினைப்பேன்..

காதல் என்பது ஒரு பெண்ணே கேட்டு வர்ரதில்லை..
 அப்படி வந்த காதலை...
யாராலும் மறக்க முடியாது..

என் கண்கள் எப்பொழுதும் என் அன்பானவள் தான் தேடும்..

அப்படி தேடும் போதே..
 சில சந்தர்ப்ப சூழ்நிலையில்

என் அன்பானவளே
பிரிய நேரிட்டது..

அந்த பிரிவு  நாட்கள் எனக்கு இன்னும் என் அன்பானவள் மேல் அதிக பாசம் வர தோன்றியது...

மனதில்  பல குழப்பம். இனி என் அன்பானவள்..

என்னிடம் பேச மறுபாளோ  என்று என் மனம் தவித்த  தவிப்பு இருக்கே இருக்கே!

அதை எழுத்தாலும் வார்த்தையாலும்
சொல்ல முடியாது..
அந்த அளவுக்கு என் மனதில்  நீங்கா பாரம். பாரம்

என் அன்பானவளே நினைத்து நினைத்து..  இன்னும்  நினைப்பு அதிகமாக   என் மனதில் ஓட தொடங்கியது..

ஒவ்வொரு நாளும் என் அன்பானவளிடம் பேசிய நாட்ககளை  நினைத்து
வாழ்ந்த நாட்கள் எனக்கு சோகம் கூட சுகமாய் தெரிந்தது.

மனதில் ஓர் அச்சம் வர தொடங்கியது..

என் அன்பானவள் இனி என்னிடம் பேச போவதில்லை என்று நினைக்கும் போது.
மனதில் நீங்கா வேதனை..

என் காதலே  என் அன்பானவளிடம் சொல்ல எனக்கு மனம் தைரியமும் இல்லை..

என் அன்பானவளே  பிரிந்து இவ்வுலகில் வாழவும் பிடிக்கவில்லை..

காதல் யாரை கேட்டும் வரவும் வில்லை..
அப்படி வந்த காதல் விடவும் என் மனது இடம் கொடுக்கவில்லை..

என் அன்பானவளே!!!

 நான்  உன்னை நினைக்காத நாள்
எது என்றால்..

 என் உயிர் என்னை விட்டு பிரியும் போது.. 2முழக்கத்துடன் என் உயிர் பிரியும்..1.என் அன்பானவள் பெயர் சொல்லி.. 2.என் இறைவனை துதித்து... "லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் "

என்று சொல்லி இவ் வுலகை  விட்டு உயிர் பிரிவேன்...

TQ
16
"சொல்லாமலே போன அன்பு"

ஊரையே சுற்றி சுற்றி விளையாடும் சிறு பிள்ளைகள் நாங்கள் யாரும் டிவி பக்கமே போறது இல்லை. அப்படி ஒரு நாள் நான் சைக்கிள் ஓட்டி முடித்து வீட்டுக்குள் வரும்போது டிவியில் "துள்ளாத மனமும் துள்ளும்" படம் கடைசி scene போறதை பார்த்தேன். என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தது. அந்த படம் முழுவதும் பார்க்க ஆசைபட்டு cable அண்ணா கிட்ட விஜய் படம் போடுங்க அண்ணா என்று கெஞ்சி போட வைத்து படம் பார்த்து முடித்தேன். அன்றில் இருந்து விஜய் படம் தேடி தேடி பார்க்க தொடங்கினேன்.

ஏன் என்னனு தெரியாமல் விஜய் டிவியில் வந்தாலே ரசிக்க ஆரம்பித்தேன். விஜய் பாடலை கேட்டால் கூட சேர்ந்து ஹம்மிங் பண்ணுவேன். நான் வளர வளர விஜய் மேலே இருந்த crush என் கூடவே வளர்ந்தது. ஒரு ரசிகையாய் நான் பண்ணும் ஆர்ப்பாட்டம் எல்லாம் பார்த்து என் தோழிகள் கிண்டல் பண்ணுவர். இப்படி ஒரு ரசிகை இருப்பது உன் விஜய்க்கு தெரியவா போகுது என்று கூட கலாய்ப்பர்.

யார் என்ன சொன்னாலும் கண்டுக்காமல் எனக்கு விஜயை பிடிக்கும் நான் இப்படிதான் இருப்பேன். விஜய்க்கு தெரியனும் என்று அவசியம் இல்லை என்பேன். நான் சொல்வதை விஜயை ரசிக்கும் ஒரு ரசிகையால் மட்டுமே உணர்ந்து கொள்ளமுடியும்.

அப்பா கிட்ட படத்துக்கு போகனும் என்று கேட்க முடியாது. ஒரு function போயிட்டு வரும் வழியில் அத்தை குடும்பத்தோடு கத்தி படம் போனோம். மறக்க முடியாத படமாய் என் நெஞ்சில் இன்றுவரை இருக்கிறது. எல்லா‌ பாடல்களுக்கும் கத்தி கத்தி என் தொண்டை புண்ணாகி போச்சு. அவ்ளோ ஆட்டம் போட்டேன்.

திருமணத்திற்கு பின் என் கணவர் என்ன சொல்லுவாரோ என்று கொஞ்சம் பயம் இருந்தது. அவரோடு விஜய் படம் பார்க்க போனேன். கொஞ்ச நேரம்தான் அமைதியாக இருக்க முடிந்தது. எல்லோரும் கத்தி கூச்சல் போடுவதை பார்த்ததும் நானும் கத்தி கூச்சல் போட்டேன். அவர் சிரித்து கொண்டே என்ன இப்படி ஆட்டம் போடுற என்று கேட்டார். Hehe விஜயை பார்த்த மட்டும் எனக்குள்ள இருந்து இன்னொருத்தி வெளியே வருவா என்றேன். அவர் திட்டவோ இப்படி பண்ணாதே என்றோ சொல்லிருந்தா என் மனம் உடைந்திருக்கும். அன்றில் இருந்து விஜய் படம் வந்தால் முதல்நாள் படம் பார்க்க அழைத்து செல்லுவார்.

தியேட்டரில் படம் பார்ப்பதே கனவாக இருந்த எனக்கு முதல் நாள் படம் பார்ப்பது எவ்ளோ சந்தோசம் தரும் என்று சொல்ல வார்த்தைகள் இல்லை. News channel பக்கமே போகாத நான் டிவியில் "ஜோசப் விஜய் என்கிற நான்" விஜய் CMஆ பொறுப்பு ஏற்ற அந்த நொடியை கண்டு மெய்சிலிர்த்தேன். நான் எப்பவுமே விஜயை ஒருமையில் தான் பேசுவேன் என் மனதில் இப்படி நெருங்கிய இடத்தை வேறு யாரும் பிடித்தது இல்லை.

எங்க வீட்டில் ஒருத்தராக பார்க்கும் விஜயை தள்ளி வைத்து மரியாதை கொடுத்து பேச எனக்கு வராது. என்னை யார் என்றே தெரியாத விஜய் மேலே எனக்கு வந்த இந்த அன்பு என் வாழ்வின் இறுதி வரை தொடரும்.
18
Wish You Happy Birthday Pradeepa ji..!

Pages: 1 [2] 3 4 ... 10