20
« Last post by Kavii on May 07, 2026, 10:10:58 PM »
நெஞ்சம் மறப்பதில்லை - அந்தப் பால் டப்பாவும்... பூமா கிரகமும்!
நான் 4th Standard படிச்சிட்டு இருந்த சமயம். எங்க Jothi Miss-க்கு நான் தான் செல்லப் பிள்ளை. அவங்களுக்கு என் மேல ஒரு தனி பாசம், எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும். எங்க Street-க்கு அடுத்த Street தான் மிஸ் ஓட வீடு. நான் அப்போ பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன், அதனால என்னை ரொம்ப கண்ணும் கருத்துமா, 'புரொடெக்டிவ்'-ஆ வளர்த்தாங்க.
ஸ்கூலுக்கு ஆப்போசிட்ல ஒரு Church இருக்கும். சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்சதும் அங்க போய் மிஸ்-க்காக பசும்பால் வாங்கிட்டு வரணும், இது தான் எனக்கு மிஸ் கொடுத்த முக்கியமான வேலை. ஆனா அந்த இடம் Main Road, எப்பவும் வண்டிங்க இடைவிடாம வந்துட்டே இருக்கும். பால் வாங்கிட்டு போய் மிஸ் வீட்ல கொடுத்துட்டு வர்றதுக்குள்ள வீட்டுக்கு போக நேரம் ஆகிடும்.
ஒரு நாள் பாட்டி மடக்கினாங்க, "ஏன் லேட்?"
நான் உண்மையையே சொல்லிட்டேன், "மிஸ்-க்கு பால் வாங்கிட்டு போய் கொடுத்தேன் பாட்டி"ன்னு. அவ்வளவுதான்... ஆரம்பிச்சது பெரிய ரகளை! "அவ்ளோ பெரிய Main Road-ஐ Cross பண்ணி போகணும், ஏதாவது ஆச்சுன்னா நாங்க யார்கிட்ட போய் பதில் சொல்லுவோம்? அந்த மிஸ்-க்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? சின்னப் புள்ளைய இப்படி அனுப்புறாங்க?"ன்னு என்னையும் திட்டி, மிஸ்-யும் திட்டி தீர்த்துட்டாங்க. "இனிமே அந்த வேலைக்கு போகக்கூடாது"ன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க.
சரி-ன்னு சொல்லிட்டு ரெண்டு நாள் மிஸ் கிட்ட இருந்து எப்படியோ தப்பிச்சு ஓடி வந்துட்டேன். ஆனா மூணாவது நாள் மிஸ் கேட்டதும் எனக்கு 'நோ' சொல்ல முடியல. மறுபடியும் பால் வாங்கிட்டு மிஸ் வீட்டுக்கு போயிட்டு வழக்கம் போல வீட்டுக்கு போக லேட் ஆகிடுச்சு.
பாட்டி மறுபடியும் கேட்டாங்க. இந்த தடவை உஷாரா ஒரு பொய்யைச் சொன்னேன், "ஸ்கூல்ல Home Work எழுதிட்டு இருந்தேன் பாட்டி"ன்னு. அடுத்த நாள் கேட்டப்போ, "Dance Practice இருந்துச்சு"ன்னு சொன்னேன். இப்படியே ஒரு நாலு அஞ்சு நாள் பொய்யைச் சொல்லி சமாளிச்சிட்டேன்.
அடுத்த நாள் வீட்டுக்கு போறேன்... பார்த்தா வீட்டு வாசல்ல அந்தத் திண்ணைல பாட்டியும், என் தாய் மாமாவும் உட்கார்ந்து இருக்காங்க. (என் மாமாவுக்கு நான் எதுலயாவது மாட்டி அடி வாங்கினா அப்படி ஒரு சந்தோஷம்!)
"ஏன் லேட்?" - அதே கேள்வி.
நான் அதே பழைய பதிலை சொன்னேன், "Home Work எழுதிட்டு வந்தேன் மாமா"ன்னு.
உடனே மாமா, "அப்படியா... அந்த Note-ஐ எடு பார்க்கலாம்"ன்னாரு.
அப்போதான் எனக்கு பொறி தட்டுச்சு, "அய்யோ... மாட்டிக்கிட்டோமே!"ன்னு. மனசுக்குள்ள செம Tension. சமாளிக்கறதுக்காக, "Note-ஐ கிளாஸ்லேயே வச்சிட்டு வந்துட்டேன்"னு சொன்னேன். அவ்வளவுதான்... விழுந்தது பாருங்க ஒரு அடி! பலமான அடி!
"பொய் சொல்றியா? இத்தனை நாளா பொய் சொல்லிட்டு இருக்கியா?"ன்னு பாட்டி சத்தம் போட... அப்போதான் தெரிஞ்சது, என் Classmate பூமா எல்லாத்தையும் சொல்லிட்டான்னு. என் கிரகச்சாரம் இல்ல, இந்தப் 'பூமா கிரகம்' தான் எல்லாத்தையும் வீட்ல போட்டுக் கொடுத்துடுச்சு போல!
அடி வாங்கிட்டு அழுதுட்டே இருந்த என்னைக் கூட்டிட்டு நேரா மிஸ் வீட்டுக்கு போனாங்க. அங்க ஒரு பெரிய கலவரமே நடந்துச்சு. "சின்னக் குழந்தையை எதுக்கு ரோடு Cross பண்ணி பால் வாங்க அனுப்புறீங்க? இனிமே இப்படி பண்ணுனீங்கன்னா HM கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவோம்"னு என் பாட்டி மிஸ்ஸை ஒரு வழி பண்ணிட்டாங்க.
இப்போ நினைச்சா சிரிப்பு தான் வருது. நம்ம செய்ற உதவி மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம், ஆனா நம்ம சொல்ற பொய் நம்ம சொல்ற பொய் யாராவது ஒரு பூமாவுக்கு தெரியாம இருக்கவே இருக்காது! நம்ம லைஃப்ல நாம எவ்வளவோ பேருக்கு Help பண்ணியிருப்போம், ஆனா நாம வாங்குன அந்த ஒரு அடி தான் இன்னைக்கும் நம்ம மனசுல நிக்குது. அதுதான் 'சிறுவயது ஞாபகங்கள்'!
அடியே பூமா! இப்போ நீ எங்க இருக்க? உன்னை என் ஆயுசு முழுவதுமே மறக்க மாட்டேண்டி! என் கிரகம் அப்போ சரி இல்லைனு நினைச்சேன், ஆனா உன் கிரகம் தான் என்னைப் போட்டுக் கொடுத்துடுச்சுன்னு இப்போதான் புரியுது!
Friends... உங்க Life-லயும் ஒரு 'பூமா கிரகம்' கண்டிப்பா இருந்திருப்பாங்க, அப்படித்தானே? அதே மாதிரி இந்த மாமாக்களும் இப்படித்தான்... எப்படா நாம மாட்டுவோம்னு காத்துட்டு இருப்பாங்க! உங்களுக்கும் இப்படி நடந்திருக்கா?
என் நெஞ்சம் மறக்காத இந்தக் கதையை இங்கே ஷேர் பண்ண வாய்ப்பு அளித்த நம்ம FTC-க்கும் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் டீமுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
இப்படிக்கு,
அன்புடன்,
கவி.