20
« Last post by Ninja on Today at 12:11:23 AM »
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள் வாழும் தொடர்கதை தான்...
இணையம் என்ன கொடுத்துச்சு உனக்குன்னு யாராச்சும் என்னை கேட்டா 'என்னை அறிந்த நண்பர்களை எனக்கு கொடுத்துச்சுன்னு' பெருமையா சொல்லிப்பேன். யாஹூ சாட் காலத்துல இருந்தே எனக்கு இணைய நண்பர்கள் அதிகம் தான். அதில சில நட்புகள் இன்னைக்கு வரைக்கும் இணக்கமா தொடர்புல இருக்காங்க. இணைய நட்புகள்னா தினமும் பார்க்கனும், பேசனும்னு அப்படி இருந்தா தான் அந்த நட்பு தொடரும் அப்படிங்கிற கட்டாயம் எங்களுக்குள்ள இருந்ததில்ல.
காலபோக்குல யாகூ சாட்ல தொடங்கின நட்பு, ஆர்குட்ல தொடர்ந்து, பேஸ்புக் காலம் வரைக்கும் வளர்ந்துச்சு. ஆனா இணையத்தில் தொடங்கி இதயத்தில் தொடரும் பந்தம்னா அது என்னோட Blogger friends தான். Blogger friendsனு சொல்றது கூட அந்நியமா படுது. ஏன்னா இப்போ நாங்க குடும்ப நண்பர்கள், உறவுகளை கடந்த உறவுகள்னு தான் சொல்லனும். என்னுடைய இரண்டு நெருக்கமான தோழிகள் BB, VV(Privacyகாக பேர்களை மாற்றி கொடுத்திருக்கேன்). எல்லாருமே வேற வேற contextல Blogs எழுதுறவங்களா இருந்தாலும் எங்க மூணு பேரையும் ஒன்னா இணைச்ச புள்ளி ‘தமிழ்'. இணையத்தால் இணைந்தோமா தமிழால் இணைந்தோமான்னு கேட்டா பிரிச்சு பார்த்து சொல்ல முடியாது.
அரசியல்ல இருந்து ஆன்மீகம் வரைக்கும் நாங்க பேசாத விஷயங்களே கிடையாது. Blog commentsல ஆரம்பிச்ச நட்பு இப்போ life commitments வரை எல்லாத்தையும் பகிர்ந்துக்கிற உறவா மாறியிருக்குன்னா இணையம் - இதயத்திற்கு போட்டு தந்த பாதைன்னு தான் சொல்லனும். இணையத்தில் மலர்ந்து 16 வருடங்களா தொடர்கிறது எங்களோட நட்பு
எவ்வளவோ நண்பர்கள் இணையத்தின் வழி கிடைச்சிருக்காங்க ஆனா ஏன் இவங்கள முக்கியமா குறிப்பிடுறேன்னா, அவங்க இல்லன்னா நான் இல்ல. மிகைப்படுத்தி சொல்ற மாதிரி இருக்கலாம் ஆனா அதுதான் உண்மை. என் வாழ்க்கைல எல்லா முக்கியமான முடிவுகளை, நான் முடிவெடுக்க முடியாத நேரங்கள்ல தோழியா தோள் கொடுத்து மனுஷியா காது கொடுத்து கேட்ட தோழிகள் ரெண்டு பேரும்.
2017 ஆம் ஆண்டு ஒரு விபத்து காரணமா Blood clotஆகி இதயத்துல அடைப்பு ஏற்பட்டு ஹாஸ்பிடல்ல நான் அட்மிட் ஆகியிருந்த நேரத்துல தேற்ற வார்த்தகளற்று இருந்த என் குடும்பத்துக்கு மொத்த ஆதரவுமா இருந்தது என் தோழிகள் தான். அவங்களோட வேலைகளை பொருட்படுத்தாம, அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் 2.5 இலட்சம் பணம் உடனடியா உதவி பண்ணி என்னோட குடும்பத்துக்கு ஆறுதலா இருந்தாங்க. பணம் கொடுத்து உதவி செஞ்சதால இதை சொல்லல, அந்த நேரத்துல உறுதுணையா நின்ன அந்த மனுஷங்களை தான் நான் வாழ்க்கையில சம்பாதிச்ச மிக பெரிய சொத்தா நினைக்கிறேன். அந்த நட்பை கொடுத்த இணையத்திற்கு காலத்திற்கும் கடமைபட்டிருப்பேன்.
ஒரே ஊர்ல இருந்தாலும் தினமும் பாத்துக்கிற, தினமும் பேசிக்கிற தோழிகள் நாங்க இல்ல, ஆனா நாம கொஞ்சம் dullஆ இருந்தாலும் எப்படி தான் இவங்களுக்கு மூக்கு வேர்க்குமோ தெரியாது அன்னைக்குன்னு யாரவது ஒருத்தர் கரக்ட்டா கால் பண்ணி என்ன பண்ற, வேலைக்கு போயிட்டு வந்தியா, சும்மா தான்; உன் ஞாபகமா இருந்துச்சு அதான் கால் பண்ணினேனு சொல்லுவாங்க. இந்த நாகரிகம் பார்க்கிற பவிசான நட்பெல்லாம் இல்ல, தலையிலிருந்து கால் வரை, காலைல இருந்து சாயங்காலம் வரை, பொழுது போயி பொழுது விடிஞ்சா என்னென்ன பிரச்சனன்னு அர்ச்சனை மாதிரி கொட்டினாலும் காது கொடுத்து கேட்பாங்க.
அண்ணன் கல்யாணம், அக்கா பொண்ணு காது குத்து, அம்மா அப்பா அறுவதாம் கல்யாணம், ஒன்னுவிட்ட மாமாவோட friend பையனுக்கு கல்யாணம்னு எங்களுக்குள்ள நாங்க அழைக்கப்படாத விழாக்களும் இல்ல, போகாத விஷேசங்களும் இல்ல.
இணையம் பலரை அறிமுகப்படுத்தியிருக்கலாம். சிலர் நினைவுகளாகக் கடந்திருக்கலாம், சிலர் வாழ்க்கையின் ஒரு பகுதியாகத் தங்கியிருக்கலாம். ஆனால் என் சிரிப்பிலும் கண்ணீரிலும் பங்கெடுத்து, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இந்த தோழிகள்தான் இணையத்தில் தொடங்கி இதயத்தில் தொடரும் உறவுகள்.