Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
General Wallpapers / Re: ShyNiKhaa's Gallery
« Last post by ShyNiKhaa on Today at 11:02:39 AM »
12
General Wallpapers / Re: ShyNiKhaa Doodle 🎨
« Last post by ShyNiKhaa on Today at 11:00:43 AM »
13
General Wallpapers / Re: ShyNiKhaa Doodle 🎨
« Last post by ShyNiKhaa on Today at 11:00:24 AM »
14
General Wallpapers / Re: ShyNiKhaa Doodle 🎨
« Last post by ShyNiKhaa on Today at 11:00:01 AM »
15
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 10:14:25 AM »
16
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 04:13:15 AM »
17
GENERAL / Re: Today's Message 📩
« Last post by MysteRy on Today at 04:12:44 AM »
18
19


இணைய நண்பர்கள்

இந்த வார்த்தை பார்த்ததுமே என் மனசில வந்த பல நண்பர்கள்ல இங்க 3 பேர பத்தி சொல்லனும்ன்னு நெனைக்கிறேன்....

2008ல என்னோட முதல் இணையதள நண்பர்கள் பட்டியல் உருவாச்சுனு சொல்லலாம்... அப்போ தெரியல அந்த பந்தம் இன்று வரை தொடரும்ன்னு...

அப்போலாம் ரொம்ப பயம் அதனால யார் கிட்டயும் என்னோட தனிப்பட்ட அடையாளத்த சொல்லிக்க மாட்டேன்..ஆனாலும் இவங்க நம்ம வாழ்க்கைல என்போமே கூட இருந்தா நல்லா இருக்குமேன்னு சிலரோட பாசம் அன்பு எல்லாம் பாக்குறப்ப தோணும் ஆனா இந்த காலத்துல யார நம்புறதுன்னு நெனச்சுட்டு பயத்துல அப்படியே இருந்துருவேன்..

நான் சொல்ல போற முதல் நபர் Thoufiq... சின்ன பையன் .. என் கிட்ட மொதல் மொதல் பேசறப்பதான் 12th முடிச்சு காலேஜ் போக போறான்... ரொம்ப நல்ல மனிதன்... ஏதோ ஒரு குருட்டு தைரியத்துல அவன்கிட்ட என்னோட நம்பர் ஷேர் பன்னினேன்...அவனோட அம்மா பாட்டி தங்கச்சின்னு எல்லார் கிட்டயும் பேச வச்சான்... UG முடிச்சு PG அப்புறம் வேலை அதுக்கு அப்புறம் வெளிநாட்டில வேலை... இப்ப கல்யாணம் ஆகி குடும்பஸ்தன் ஆனால் இன்னமும் எங்க நட்பு தொடர்ந்துட்டு தான் இருக்கு.. ஒரு முறை கூட நேர்ல பாத்தது இல்ல.. ஆனால் ஒருத்தருக்கு ஒருத்தர் எப்போமே support ஆக இருக்கோம்... அது ஆச்சுங்க 18 வருஷம்.... (இவனை பத்தி சொல்ல நிறைய இருக்கு ஆனா அடுத்தவங்களை பத்தியும் சொல்லனும்ல அதனால சுருக்கிட்டேன்)

அடுத்து..சூர்யா
இவரும் Thoufiq போல 18 வருஷமா பழக்கம் ஆனால் அவ்வளவு close இல்லை ... எனக்கு பேச வரும்.. நானும் RJ பண்ணலாம் அப்படினு எனக்கு புரிய வச்ச ஜீவன் இவரு தான்.. FM programs ல எப்படி பேசணும் script worK எப்படி பண்ணனும்ன்னு எனக்கு அடித்தளம் போட்டவர் இவர் தான்... நடுவுல கொஞ்ச காலம் இவரோட பேச முடியல.. அவரோட personal contact எதுவும் நான் வாங்கிக்கலை ஆனா நம்ம FTC ku munnam ஒரு எடத்துல அவரோட குரலை வச்சு அவர identify பண்ணி அவரிடம் மீண்டும் பேச தொடங்கினேன்... இப்போ என் contacts ல இவரும் இணைஞ்சுட்டார்ன்னு சொல்லலாம்...

மூன்றாவதாக நான் சொல்ல போறது... RV அவர அப்படி தான் கூப்பிடுவேன்.. பெருசா இவர்கிட்ட நான் பேச மாட்டேன்... Hi bye அளவு தான் ஆனா ஒரு நாள் நான் என் வேலைய இழந்துட்டேன்... அவரோட company எங்க ஏரியால இருக்குன்னு தெரியும் அதனால எனக்கு வேலை தேடிட்டு இருக்கேன் நண்பர்கள் யாராச்சும் கிட்ட கேட்டு சொல்ரீங்களான்னு கேட்டேன்... 24 மணி நேரம் கூட ஆகல ஆனா ஒரு நல்ல கம்பெனில இருந்து எனக்கு கால் வந்துச்சு அப்போ தான் தெரியும் RV refer பண்ணி இருக்கார்ன்னு... நேர்ல பாத்தது இல்ல.. நமக்கென்னன்னு இல்லாம அடுத்தவர்க்கு ஒண்ணுன்னா உதவி  பண்ற அந்த மனசு இருக்கே அது தான் sir கடவுள்ன்னு சொல்றது போல அந்த நிமிஷம் என் கண்ணுக்கு அவர் கடவுளாகத்தான் தெரிஞ்சாரு....

இப்படியே போய்ட்டு இருந்த என் இணைய நண்பர்கள் வட்டம்... நம்ம FTC ல என்னோட நட்பு வட்டம் ரொம்பவே பெருசாச்சுன்னு சொல்லலாம்... ஒரு ஒரு நபரும் ஒரு ஒரு விதத்துல முக்கியமே.. நம்ம FTC எனக்கு குடும்பம் மாதிரி தம்பிகள் தங்கைகள் நட்புகள்ன்னு அளவில்லாம நல்ல உள்ளங்கள் நிறைய கிடைச்சாங்க... என் சந்தோசம் துக்கம் அனைத்தையும் பகிர ஆரம்பிச்சேன்... எனக்கு real life பிரிஎண்ட்ஸ்ன்னு சொல்லிக்க யாருமே இல்ல ஆனால் இணைய நண்பர்கள் வட்டம் மிக பெரியது.  நேர்ல பாத்துக்காட்டியும் அன்பை பகிர முடியும் அப்படிங்கறதுக்கு சரியான எடுத்துக்கட்டு அப்படினு சொன்ன அது இணைய நண்பர்கள் தான்...

நம்ம FTC ல என்னோட நட்பு வட்டம் பத்தி எழுத தொடங்கினா முடிக்குறது ரொம்ப கஷ்டம் so நான் இதோட நிப்பாட்டிக்கிறேன்..

Social media ல இன்றைய கால கட்டத்துல  நல்லதும் நடக்குது நிறைய கெட்டதும் நடக்குது.. முகம் பாரா மனிதர்களிடம் நட்பு பாராட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை... கரணம் தப்பினால் மரணம்ன்னு சொல்றது போல தான்.. அதனால நாம யாரிடம் எப்படி நட்பு பாராட்டுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.... கவனம் முக்கியம் பிகிலூ.......






20
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள் வாழும் தொடர்கதை தான்...

இணையம் என்ன கொடுத்துச்சு உனக்குன்னு யாராச்சும் என்னை கேட்டா 'என்னை அறிந்த நண்பர்களை எனக்கு கொடுத்துச்சுன்னு' பெருமையா சொல்லிப்பேன். யாஹூ சாட் காலத்துல இருந்தே எனக்கு இணைய நண்பர்கள் அதிகம் தான். அதில சில நட்புகள் இன்னைக்கு வரைக்கும் இணக்கமா தொடர்புல இருக்காங்க. இணைய நட்புகள்னா தினமும் பார்க்கனும், பேசனும்னு அப்படி இருந்தா தான் அந்த நட்பு தொடரும் அப்படிங்கிற கட்டாயம் எங்களுக்குள்ள இருந்ததில்ல.

காலபோக்குல யாகூ சாட்ல தொடங்கின நட்பு, ஆர்குட்ல தொடர்ந்து, பேஸ்புக் காலம் வரைக்கும் வளர்ந்துச்சு. ஆனா இணையத்தில் தொடங்கி இதயத்தில் தொடரும் பந்தம்னா அது என்னோட Blogger friends தான். Blogger friendsனு சொல்றது கூட அந்நியமா படுது. ஏன்னா இப்போ நாங்க குடும்ப நண்பர்கள், உறவுகளை கடந்த உறவுகள்னு தான் சொல்லனும். என்னுடைய இரண்டு நெருக்கமான தோழிகள் BB, VV(Privacyகாக பேர்களை மாற்றி கொடுத்திருக்கேன்). எல்லாருமே வேற வேற contextல Blogs எழுதுறவங்களா இருந்தாலும் எங்க மூணு பேரையும் ஒன்னா இணைச்ச புள்ளி ‘தமிழ்'. இணையத்தால் இணைந்தோமா தமிழால் இணைந்தோமான்னு கேட்டா பிரிச்சு பார்த்து சொல்ல முடியாது.

அரசியல்ல இருந்து ஆன்மீகம் வரைக்கும் நாங்க பேசாத விஷயங்களே கிடையாது. Blog commentsல ஆரம்பிச்ச நட்பு இப்போ life commitments வரை எல்லாத்தையும் பகிர்ந்துக்கிற உறவா மாறியிருக்குன்னா இணையம் - இதயத்திற்கு போட்டு தந்த பாதைன்னு தான் சொல்லனும். இணையத்தில் மலர்ந்து 16 வருடங்களா தொடர்கிறது எங்களோட நட்பு
எவ்வளவோ நண்பர்கள் இணையத்தின் வழி கிடைச்சிருக்காங்க ஆனா ஏன் இவங்கள முக்கியமா குறிப்பிடுறேன்னா, அவங்க இல்லன்னா நான் இல்ல. மிகைப்படுத்தி சொல்ற மாதிரி இருக்கலாம் ஆனா அதுதான் உண்மை. என் வாழ்க்கைல எல்லா முக்கியமான முடிவுகளை, நான் முடிவெடுக்க முடியாத நேரங்கள்ல தோழியா தோள் கொடுத்து மனுஷியா காது கொடுத்து கேட்ட தோழிகள் ரெண்டு பேரும்.

2017 ஆம் ஆண்டு ஒரு விபத்து காரணமா Blood clotஆகி இதயத்துல அடைப்பு ஏற்பட்டு ஹாஸ்பிடல்ல நான் அட்மிட் ஆகியிருந்த நேரத்துல தேற்ற வார்த்தகளற்று இருந்த என் குடும்பத்துக்கு மொத்த ஆதரவுமா இருந்தது என் தோழிகள் தான். அவங்களோட வேலைகளை பொருட்படுத்தாம, அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் 2.5 இலட்சம் பணம் உடனடியா உதவி பண்ணி என்னோட குடும்பத்துக்கு ஆறுதலா இருந்தாங்க. பணம் கொடுத்து உதவி செஞ்சதால இதை சொல்லல, அந்த நேரத்துல உறுதுணையா நின்ன அந்த மனுஷங்களை தான் நான் வாழ்க்கையில சம்பாதிச்ச மிக பெரிய சொத்தா நினைக்கிறேன். அந்த நட்பை கொடுத்த இணையத்திற்கு காலத்திற்கும் கடமைபட்டிருப்பேன்.

ஒரே ஊர்ல இருந்தாலும் தினமும் பாத்துக்கிற, தினமும் பேசிக்கிற தோழிகள் நாங்க இல்ல, ஆனா நாம கொஞ்சம் dullஆ இருந்தாலும் எப்படி தான் இவங்களுக்கு மூக்கு வேர்க்குமோ தெரியாது அன்னைக்குன்னு யாரவது ஒருத்தர் கரக்ட்டா கால் பண்ணி என்ன பண்ற, வேலைக்கு போயிட்டு வந்தியா, சும்மா தான்; உன் ஞாபகமா இருந்துச்சு அதான் கால் பண்ணினேனு சொல்லுவாங்க. இந்த நாகரிகம் பார்க்கிற பவிசான நட்பெல்லாம் இல்ல, தலையிலிருந்து கால் வரை, காலைல இருந்து சாயங்காலம் வரை, பொழுது போயி பொழுது விடிஞ்சா என்னென்ன பிரச்சனன்னு அர்ச்சனை மாதிரி கொட்டினாலும் காது கொடுத்து கேட்பாங்க.

அண்ணன் கல்யாணம், அக்கா பொண்ணு காது குத்து, அம்மா அப்பா அறுவதாம் கல்யாணம், ஒன்னுவிட்ட மாமாவோட friend பையனுக்கு கல்யாணம்னு எங்களுக்குள்ள நாங்க அழைக்கப்படாத விழாக்களும் இல்ல, போகாத விஷேசங்களும் இல்ல.

இணையம் பலரை அறிமுகப்படுத்தியிருக்கலாம். சிலர் நினைவுகளாகக் கடந்திருக்கலாம், சிலர் வாழ்க்கையின் ஒரு பகுதியாகத் தங்கியிருக்கலாம். ஆனால் என் சிரிப்பிலும் கண்ணீரிலும் பங்கெடுத்து, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இந்த தோழிகள்தான் இணையத்தில் தொடங்கி இதயத்தில் தொடரும் உறவுகள்.
Pages: 1 [2] 3 4 ... 10