Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
   Wishing all dear  islamic friends a happy EId Mubarak 
23
என்னை அதிகமா பாதித்த மற்றும் motivate பன்ற திரைப்படங்களுள் ஒன்று "வாகை சூடவா"...

2011 இல் வெளிவந்த இந்த திரைப்படத்துல  விமல், இனியா மற்றும் பாக்கியராஜ் முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சுருப்பாங்க.

கல்வியின் முக்கியத்துவத்த இந்த படத்துல சொல்லிருப்பாங்க. கல்வி கிடைப்பது எல்லோருக்கும் எளிது இல்லனும்  ஒரு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் பிறகு படிக்க ஏங்கும் தருணங்கள் ன்னு கதை காமெடி கலந்த சமூக சிந்தனையோடு அமைந்திருக்கும்.

இந்த படம் personal அ பல பாதிப்ப எனக்குள்ள ஏற்படுத்திற்கு. நமக்கு பிடிச்ச வேலை செய்யணும் அதுவும் பிடிச்ச மாதிரி செய்யணும் முக்கியமா மன நிறைவா செய்யணும் ன்னு இந்த படத்த பாக்கும் போது எல்லாம் தோணும்.

இப்பவும் அந்த படத்துல காட்டுற மாதிரி வேலைக்கு போய்ட்டு படிக்கிற students இருக்காக. கல் அறுக்குறது, பூ பறிக்கிறது, தறி clean பண்றது ன்னு வேலை செஞ்சுட்டே படிக்குற பசங்கள பாக்கும் போது இந்த படம் எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும்.

கதை: 
செங்கல் அறுக்கும் இனமா ஒரு ஊரே ஆண்டே என்பவருக்கு அடிமை மாதிரி வேலை செய்றாங்க. அங்க குழந்தைங்க பள்ளிக்கூடம் போய் படிக்க மாட்டாங்க, அதுக்கு விடவும் மாட்டாங்க. அந்த குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர NGO வால  ஏற்பாடு பண்ணப்படுற teacher தான் விமல். விமல் படிப்போட முக்கியத்துவத்த அந்த ஊர் மக்களுக்கு எப்படி புரியவைக்கிறாங்க, அதுல ஏற்படுற இடர்பாடுகள் ன்னு படம் நகரும்...

Teaching வெறும் வேலை இல்ல அது ஒரு வித அமைதியான புரட்சி ஏற்படுத்த கூடிய கருவி... அத பயன் படுத்துற விதத்துல பயன்படுத்துனா society ல பல மாற்றங்கள ஏற்படுத்தலாம், விதைக்கலாம். இந்த கருத்த விமல் ஆசிரியரா இந்த படத்துல ஆழமா அழகா தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்திருப்பாங்க.

ஹீரோவோட எண்ணத்த புரிஞ்சுகிட்டு supportive character அ பாக்கியராஜ் அப்பாவா நடிச்சுருப்பாங்க. ஹீரோ சமையல்ல திருடி சாப்டுறது, விடுகதை கேட்டு அலற விடுறது ன்னு இனியா ஒருபக்கம் காமெடி பண்ண, படத்துல குட்டி பசங்களா வர குழந்தை நட்சத்திரங்கள் அவங்க பங்குக்கு இயல்பான நடிப்பு ல காமெடிய தெறிக்க விட்டுருப்பாங்க ...

 "செங்கல் சூல காரா" மற்றும்  "ஆ னா ஆவன்னா ஈனா அத அறிவிக்க வந்தவன் ஆண்டவனா" பாடல்கள கேட்கும் போது எல்லாம் மெய்சிலிர்க்கும்...

என் நெஞ்சில் மறக்க முடியாத திரைப்படங்களில் "வாகை சூடவா" என்றுமே முதலிடம் தான்...


24
Hi happy birthday agalyanega epoome srichite santhosama
Many more retuns of the
https://ibb.co/ZpwzTCTy
27
நான் இந்த திரைப்படத்தை குறிப்பிடும்போது ஆச்சரியமா கூட இருக்கலாம். ஆனா உண்மையாவே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச திரைப்படம், இப்போ நான் டவுனா இருந்தா கூட போட்டு பார்க்க கூடிய திரைப்படம் ‘மைக்கேல் மதன காம ராஜன்’ தான்.

சின்ன வயசுல இந்த படத்தை பார்த்தப்போ கேளிக்கையா இருந்துச்சு. ஆனா வளர வளர இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்கும்போது எனக்கு இந்த படம் ஒரு ஹீலரா இருந்திருக்குன்னு தான் சொல்லனும். அப்படி ஒன்னும் இல்லையே இந்த படத்துலன்னு நினைக்கலாம், ஆனா கமல் எனும் கலைஞனை என் மனசுக்கு ரொம்ப நெருக்கமாக்கினது இந்த படம் தான். நாலு கமல், நாலு வித்தியாசமான கேரக்ட்டர்ஸ், நாலு விதமான ஸ்லாங்.. அப்படி ஒரு வெர்சட்டாலிட்டி (Versatility) காட்டியிருப்பாரு கமலஹாசன்.

இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், அப்போ புதுமைக்கும், கிரியேட்டிவிடிக்கும் பஞ்சமே இல்ல. கூடவே அளவில்லாத ஹ்யூமர் தான் இந்த படத்தோட பலம்னு நான் நினைக்கிறேன். வசனங்கள் கிரேஸி மோகன், படத்துக்கு ஒரு பெரிய பலம். பெரிய நடிகர்கள் பட்டாளம் வேற, காமெடிக்கு பஞ்சமே கிடையாது படம் முழுக்க. அவினாசியா நடிச்ச நாகேஷ் மதன் கேரக்ட்டர் கமல்கிட்ட இதெல்லாம் கம்ப்யூட்டர்ல நீங்க அடிச்சதுன்னு சொல்லுவாரு, அதுக்கு கமல் ‘இதெல்லாம் நான் அடிச்சது இல்ல எங்க அப்பாகிட்ட இருந்து நீங்க அடிச்சது’ன்னு ஷார்ப்பா வர்ர டயலாக் ஆகட்டும், ஒரு காட்சில குஷ்பு ‘மாண்புமிகு குத்துவிளக்கை அமைச்சர் ஏற்றி வைப்பார்னு சொல்றதாகட்டும்,  ‘சம்மந்தி காதுல விழுந்துட போகுது - சாம்பர்ல விழுந்துடுத்து காதுல விழுந்தா என்ன?’, ‘கிராமமும் குக்கா  நீங்களும் குக்கு’,  ‘நீ திரிபுர சுந்தரி இல்லே, திருட்டு சுந்தரியாக்கும்’ இப்படி ஒரு சீன் சீக்வன்ஸ் முழுக்கவே வாய மூட முடியாத அளவுக்கு சிரிப்புக்கு கேரண்டி கிரேஸி மோகனோட வசனங்கள்.

காட்சியமைப்பும் கொஞ்சமும் சளைக்காம அமைஞ்சிருக்கும். நம்ம பீம் பாய் பீம் பாய், மனோரமா காமெடி, நாகேஷ், குஷ்பு துப்பாக்கி எடுத்துட்டு எல்லாரையும் சுத்தி சுத்தி அலைய விடுற சீன், கடைசியா அந்த மலை உச்சியில வீடு காட்சி, எல்லாமே முழுக்க முழுக்க பவர் பாக்ட் எண்டர்டெயின்மெண்ட்

கமல் இந்த நாலு கேரக்டர்ஸ்கும் காட்ற வித்தியாசம் இருக்கே,  ஸ்டைலிஷா ஷார்ப்பா பேசுற மதனாகட்டும், வில்லன் வாய்ஸ்ல கரகரப்பா பேசுற மைக்கேல் ஆகட்டும், சென்னை பாஷைல லவ்வாங்கி பண்ணும் ராஜூ, கடைசியா, குழம்புல விழுந்த மீன எடுக்க ‘மீன் பிடிக்கிறவாளா கூட்டிண்டு வரட்டுமா'ன்னு கேட்கிற வெள்ளந்தி பாலகாட்டு ஐயர் காமேஷ்வரனாகட்டும் இப்படி ஒரே படத்துல ஒரே நடிகர் நாலு பேரா பிரிஞ்சு நடிக்கிறதை பார்க்கும்பொழுது நான்கு வேற வேற கதாநாயகர்களே நடிக்கிற ஒரு அனுபவத்தை கொடுக்க கமல் எனும் கலைஞனை தவிர யாரால முடியும். ‘உலக நாயகன் பட்டம் சும்மா வந்ததில்லையாக்கும் கேட்டியோ’.

இந்த பதிவை எழுதும்போது கூட படத்தை திரும்ப பார்க்கனும் அப்படின்னு ஆசைய தூண்டுது. அந்த அளவுக்கு soul saver எனக்கு இந்த படம். வாழ்க்கையோட அடிமட்டத்துக்கு போய், அடிமாட்டு அளவுக்கு உழைச்சு, களைச்சு, ஓய்ஞ்சு போற நேரம் நான் தேடி ஓடுற ரெண்டு விஷயம் ஒன்னு வடிவேலு காமெடி, ரெண்டாவது இந்த படம். என்ன கஷ்டம்னாலும் அந்த கஷ்டத்தை மறந்து சிரிக்க வச்சிருக்கு இந்த படம்.

இளையராஜா இசை, இந்த படத்தோட இன்னொரு பலம். பிண்ணனி இசை, பாடல்கள்னு தனியா சொல்லிட்டு போகலாம். இப்பவும் ப்ரஷ் பீல் (fresh feel) கொடுக்க வைக்கும் பாடல்கள்னு சொன்னா மிகையாகாது.

ஒரு படம் நம்மளை ரசிக்க வைக்கலாம், சிலிர்க்க வைக்கலாம், நெகிழ வைக்கலாம், அழ வைக்கலாம், சிரிக்க வைக்கலாம் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஒரு ஒரு நேரங்கள்ல நமக்கு ஏற்படுத்தும். ஆனா தனிமைல துணையா இருக்கிற, ஆறுதலா நண்பன் போல அரவணைக்கிற படம் தான் ஒவ்வொருத்தருக்குமே நெஞ்சில நிக்கிற திரைப்படமா இருக்கும்.
28
Heyyyyyy ftc ians😍😍😍😍...
U  all literally made my day emotional...
Ennoda motha negativity um neenga elaam make up panitinga🥳🥳😇😇😇😇..
Yaar irundha enna ilena enna naanga irukom nu feel pana vachutinga..🥹🥹🥹... I personally feel happy
Ethana nalla urava indha platform la make panirken...
Niraya fun niraya joy niraya missings niraya plus ...double the minus...😇😇
Anyways I m very thankful that oru negativity kooda ulla ilama ethana persons a naan earn panirken...nandri makalaeeeeeeeeeeeeee😍🥰🥰😍🥰😍🥰😍
And then the voice wish adhuvum summa ila THE MOD EVIL🥳🥳🥳 grt work pisasu .....
35 wishes naan nijama edha expect panala edhume jus like that panama mean pani paninga...romba romba  nandri uravugaleeeee.....I really blessed en office la  vandha wishes a vida ftc wishes adhigum❤️❤️❤️❤️...then the editor Saravanan 🥳🥳🥳
Once again nandri banners and voice wishes elaathukum makaleeeee🤩🤩🤩( engal veetil elaa naalum Karthigai la la la)....


29
மீண்டும் ஒரு நெஞ்சம் மறப்பதில்லை
  இருவர்

 நான் ஒரு movie freak என்றே சொல்லலாம் .  இந்த மொழி, அந்த மொழி என்று இல்லாமல் எல்லா படங்களையும் பார்ப்பேன்.
எனக்கு ரொம்ப பிடித்த ஒரு பொழுது போக்கு  அப்பா கூட உட்காந்து  படம் பாக்குறதுதான் .

பொதுவாக எனக்கு light-feel படங்கள்தான் மிகவும் பிடிக்கும். இல்லையெனில், நன்றாக சிரிக்க வைக்கும் comedy படங்களை அதிகமாக பார்ப்பேன்.
ஆனால் இந்த தலைப்பைப் பார்த்தவுடன், எனக்கு உடனே ஞாபகம் வருவது “இருவர்” படம் தான். முதல் தடவையாக இந்த படத்தை பார்த்த போது, உண்மையில் எனக்கு பெரிதாக எதுவும் புரியவில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தை பார்க்கும் போது, ஒவ்வொரு frame-மும் என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஒரு கனவுகளுடன் இருக்கும்   நடிகர் மற்றும் ஒரு ஆட்சியாசை கொண்ட எழுத்தாளர் ; இவர்களின் நட்பு, உயர்வு, வீழ்ச்சி ஆகியவற்றை உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு  மணிரத்னம் அவர்களின் கையில் ஒரு காவியமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தோடு வசனங்கள் புரட்சிகரமா எழுதி இருப்பாங்க சுஹாசினி மணிரத்னம் . சந்தோஷ் சிவன் அவர்களின் cinematography இந்த படத்தின் முதுகெலும்பு என்று சொல்லலாம்.

மோகன்லால் ஆனந்தன் கதாபாத்திரமாக வாழ்ந்தே இருப்பார். பல இடங்களில் அவரின் நளினமான முகபாவங்களும் நடிப்பும் நம்மை மிரள வைக்கும். ஒரு பெரிய தலைவரை நேரடியாக imitate செய்யாமல், அவரின் சாயல் மட்டும் கொண்டு நடித்திருப்பது ஒரு பெரிய முயற்சி.

இந்த படத்தின் முத்தாய்ப்பு கதாபாத்திரம் தமிழ்ச்செல்வன் தான். அப்போது பிரகாஷ் ராஜ் புதுமுகமாக இருந்தாலும், அவரின் அசுர நடிப்பு இந்த படத்தில் தெளிவாக தெரியும். இளமையின் அரசியல் தீவிரமும், வயதானபின் வரும் நிதானமும்
 இரண்டையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு வலிமையான வசனம்   (so powerful) ஒன்னு வரும் . ஆனந்தன் (மோகன்லால்) தமிழ்செல்வன் (பிரகாஷ் ராஜ்)  அரசியல் பத்தி பேசுவாங்க , அப்போ ஆனந்தன்  கேப்பாரு உங்க கைலே "செங்க்கோல் கிடைச்ச என்ன பண்ணுவீங்க" .. அதுக்கு தமிழ்செல்வன்  தர பதிலும் (வறுமை ஒழிப்பு , இயலாமை ஒழிப்பு )  பின்னாடி வர bgm ம் , அந்த orange வண்ணத்துலே சூரிய அஸ்தமன frame ம் , இப்போ வரைக்கும் என் mind  விட்டு அகலவே இல்ல. .

ஐஸ்வர்யா ராய்  , கவுதமி , ரேவதி , நாசர் , நிழல்கள் ரவி ena , ஒரு நடிகர் பட்டாளமே இருப்பாங்க . ஒவ்வொருவரும் போட்டி போட்டு கதாபாத்திரங்களாவே வாழ்ந்து இருப்பாங்க.

இதற்கெல்லாம் மேலாக அழகு சேர்த்தவர் ஏ.ஆர். ரஹ்மான். அவரின் பின்னணி இசை  உண்மையில் மாற்று இல்லாத ஒன்று. 60s, 70s காலத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளார். அவர் ஏன் “இசைப் புயல்” என்று அழைக்கப்படுகிறார் என்பதையும் நிரூபித்துள்ளார்.

உன்னோடு
நான் இருந்த ஒவ்வொரு
மணி துளியும் மரண
படுக்கையிலும் மறக்காது
கண்மணியே

தொன்னூறு
நிமிடங்கள் தொட்டணைத்த
காலம் தான் எண்ணுாறு
ஆண்டுகளாய் இதயத்தில்
கனக்குதடி..

இந்த கவிதை பிடிக்காத யாரேனும் இருக்காங்களா என்ன ❤️


அரசியல், நட்பு மற்றும் சினிமா பற்றிய ஒரு விசித்திரமான அறிவார்ந்த, உணர்ச்சி நிறைந்த மற்றும் கலை ரீதியாக துணிச்சலான படம்,   இதை ரசிக்க பொறுமை தேவைப்படும்; ஆனால் நுணுக்கமாக கவனித்தால் பெரும் அனுபவத்தை தரும்.

Pages: 1 2 [3] 4 5 ... 10