21
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-005 (நெஞ்சில் நின்ற திரைப்படம் - தமிழ் )
« Last post by Tejasvi on March 19, 2026, 10:33:05 PM » என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம் - கர்ணன்.
------------------------------------------------------------------------------------
தினமும் கதைசொல்லும் என் தாத்தாவின் மூலமாக கர்ணன் கதை கேட்டு இருக்கின்றேன். இதுவே என் மனதுக்கு பிடித்த கதாபாத்திரம்.
ஒரு நாள் எனக்கு கர்ணன் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது
1964 ஆம் ஆண்டு, B. R. பந்துலு இயக்கத்தில், சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்த திரைப்படம். இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கவி வரிகள் கண்ணதாசன். வசனம் சக்தி டி.கே. கிருஷ்ணசாமி.
செவி வழியே கேட்ட கதையை, திரையில் பார்க்கும் போதும் மனதில் ஆழமாக பதிந்தது. இதை வெறும் கதையாக என்னால் பார்க்க முடியவில்லை. வாழ்க்கையை புரியவைக்கும் ஒரு பாடமாக தோன்றியது.
இதில் நிறைய வியக்க வைக்கும் காட்சி அமைப்புகள் இருந்தது. இதன் போர்க் காட்சிகள் குருக்ஷேத்திரத்தில் படமாக்கப்பட்டன, அதில் நிஜமான நமது இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பல வீரர்கள் இடம்பெற்றனர் . மேலும் அதிகமான யானைகள், குதிரைகள் பயன் படுத்தினார்களாம்.
இந்த திரைப்படத்தில் நடிப்பு, பாடல்கள் இருந்தாலும் என் மனதில் பதிந்தது வேறு.
1. கர்ணன் : எல்லோராலும் நிராகரிக்க பட்ட ஒருவரின் வாழ்க்கையை புரிந்து கொள்ளமுடிகிறது.
2. குந்திதேவி : விளையாட்டாக செய்யும் செயலின் விளைவை அவரே அனுபவிக்க வேண்டும்.
3. கர்ணன் : ஒருவனுடைய தகுதி தான்.... அவருடைய திறமைகளை மேடை ஏற்றுகிறது.
4. துரியோதனன் : நம்முள் இருக்கும் தீய குணங்களை தூண்டிவிடும் எவரையும் நம்பக்கூடாது.
5. கர்ணன் : தவறான மனிதர்களுக்கு துணை நிற்பது நம்மையும் தவறான பாதைக்கு அழைத்து செல்லும்.
6. கண்ணன் : நல்லவர்களை வஞ்சகத்தால் வீழ்த்தும் நல்லவனுமே பாவத்தை சுமக்கிறான் .
7. கர்ணன்/குந்தி: தேவை படும் போது கிடைக்காத பாசமும் அன்பும்.. என்றுமே வீண்தான்.
8. அர்ஜுனன் : ஒருவரின் திறமைகளை சூதால் களவாடிய பிறகும் அவருடன் மோதி வெற்றிகொள்வது தோல்விக்கு சமமே.
9. கர்ணன் : நாம் தர்மத்தின் வழியின் நின்றால், மனிதர்களும் தெய்வங்களும் நம்மை கைவிட்டாலும். தர்மம் நம்மை காத்து நிற்கும்.
இன்னும் நிறைய பாடங்களை சொல்லி கொண்டே போகலாம்.
எல்லோரும் இந்த திரைப்படத்தை.. கூடா நட்புக்கு உதாரணம் சொல்லுவாங்க. ஆனால் இது தன்னை நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரின் , சதியால் வீழ்ந்த மாவீரன் கர்ணனின் கதைன்னு தோணும்.
இந்த படத்தின் தாக்கத்தால், என் மனதில் தோன்றிய எண்ணங்களை சொல்ல நினைக்கின்றேன்.
* வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு துணை நிற்க முயற்சி செய்யணும் .
* பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களை அவரின் எண்ணங்களை மாற்றனும்.
* நாம் கற்ற பாடங்களை (வித்தைகளை) நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* யாரையும் ஏமாற்றியோ பொய் சொல்லியோ நல்ல விஷயங்கள் கற்றுக்கொண்டால் அது நமக்கு உதவாது.
* நமக்கு நியாயமாக கிடைக்கும் விஷயங்கள், கண்டிப்பாக நம்மை வந்து சேரும் .
* பாசத்துக்கு ஏங்கும்.. எந்த உயிரையும் நம்ம கருணையோடு பார்த்து .. அரவணைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
* நம்ம எதை சாதிக்க நினைக்கின்றோமோ, அதை நம்ம திறமைகளால் வெல்ல வேண்டும். குறுக்கு வழியில் சாதிக்க நினைக்க கூடாது.
* நம் எண்ணங்களும் செயலும் நேர்மையாகவும்.. உண்மையாகவும் இருந்தால், அது நிச்சயம் நம்மை கைவிடாது,
இப்படி சொல்லி கொண்டே போகலாம். இப்பொழுதும் இந்த திரைப்படத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன்.
என் தாத்தா இன்று என்னுடன் இல்லையென்றாலும், அவர் என்னுள் விதைத்த கர்ணன்.. இன்னும் என் வாழ்க்கையில் உயிரோடு வாழ்கிறார்.
------------------------------------------------------------------------------------
தினமும் கதைசொல்லும் என் தாத்தாவின் மூலமாக கர்ணன் கதை கேட்டு இருக்கின்றேன். இதுவே என் மனதுக்கு பிடித்த கதாபாத்திரம்.
ஒரு நாள் எனக்கு கர்ணன் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது
1964 ஆம் ஆண்டு, B. R. பந்துலு இயக்கத்தில், சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்த திரைப்படம். இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கவி வரிகள் கண்ணதாசன். வசனம் சக்தி டி.கே. கிருஷ்ணசாமி.
செவி வழியே கேட்ட கதையை, திரையில் பார்க்கும் போதும் மனதில் ஆழமாக பதிந்தது. இதை வெறும் கதையாக என்னால் பார்க்க முடியவில்லை. வாழ்க்கையை புரியவைக்கும் ஒரு பாடமாக தோன்றியது.
இதில் நிறைய வியக்க வைக்கும் காட்சி அமைப்புகள் இருந்தது. இதன் போர்க் காட்சிகள் குருக்ஷேத்திரத்தில் படமாக்கப்பட்டன, அதில் நிஜமான நமது இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பல வீரர்கள் இடம்பெற்றனர் . மேலும் அதிகமான யானைகள், குதிரைகள் பயன் படுத்தினார்களாம்.
இந்த திரைப்படத்தில் நடிப்பு, பாடல்கள் இருந்தாலும் என் மனதில் பதிந்தது வேறு.
1. கர்ணன் : எல்லோராலும் நிராகரிக்க பட்ட ஒருவரின் வாழ்க்கையை புரிந்து கொள்ளமுடிகிறது.
2. குந்திதேவி : விளையாட்டாக செய்யும் செயலின் விளைவை அவரே அனுபவிக்க வேண்டும்.
3. கர்ணன் : ஒருவனுடைய தகுதி தான்.... அவருடைய திறமைகளை மேடை ஏற்றுகிறது.
4. துரியோதனன் : நம்முள் இருக்கும் தீய குணங்களை தூண்டிவிடும் எவரையும் நம்பக்கூடாது.
5. கர்ணன் : தவறான மனிதர்களுக்கு துணை நிற்பது நம்மையும் தவறான பாதைக்கு அழைத்து செல்லும்.
6. கண்ணன் : நல்லவர்களை வஞ்சகத்தால் வீழ்த்தும் நல்லவனுமே பாவத்தை சுமக்கிறான் .
7. கர்ணன்/குந்தி: தேவை படும் போது கிடைக்காத பாசமும் அன்பும்.. என்றுமே வீண்தான்.
8. அர்ஜுனன் : ஒருவரின் திறமைகளை சூதால் களவாடிய பிறகும் அவருடன் மோதி வெற்றிகொள்வது தோல்விக்கு சமமே.
9. கர்ணன் : நாம் தர்மத்தின் வழியின் நின்றால், மனிதர்களும் தெய்வங்களும் நம்மை கைவிட்டாலும். தர்மம் நம்மை காத்து நிற்கும்.
இன்னும் நிறைய பாடங்களை சொல்லி கொண்டே போகலாம்.
எல்லோரும் இந்த திரைப்படத்தை.. கூடா நட்புக்கு உதாரணம் சொல்லுவாங்க. ஆனால் இது தன்னை நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரின் , சதியால் வீழ்ந்த மாவீரன் கர்ணனின் கதைன்னு தோணும்.
இந்த படத்தின் தாக்கத்தால், என் மனதில் தோன்றிய எண்ணங்களை சொல்ல நினைக்கின்றேன்.
* வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு துணை நிற்க முயற்சி செய்யணும் .
* பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களை அவரின் எண்ணங்களை மாற்றனும்.
* நாம் கற்ற பாடங்களை (வித்தைகளை) நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* யாரையும் ஏமாற்றியோ பொய் சொல்லியோ நல்ல விஷயங்கள் கற்றுக்கொண்டால் அது நமக்கு உதவாது.
* நமக்கு நியாயமாக கிடைக்கும் விஷயங்கள், கண்டிப்பாக நம்மை வந்து சேரும் .
* பாசத்துக்கு ஏங்கும்.. எந்த உயிரையும் நம்ம கருணையோடு பார்த்து .. அரவணைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
* நம்ம எதை சாதிக்க நினைக்கின்றோமோ, அதை நம்ம திறமைகளால் வெல்ல வேண்டும். குறுக்கு வழியில் சாதிக்க நினைக்க கூடாது.
* நம் எண்ணங்களும் செயலும் நேர்மையாகவும்.. உண்மையாகவும் இருந்தால், அது நிச்சயம் நம்மை கைவிடாது,
இப்படி சொல்லி கொண்டே போகலாம். இப்பொழுதும் இந்த திரைப்படத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன்.
என் தாத்தா இன்று என்னுடன் இல்லையென்றாலும், அவர் என்னுள் விதைத்த கர்ணன்.. இன்னும் என் வாழ்க்கையில் உயிரோடு வாழ்கிறார்.

Recent Posts