Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 22, 2026, 12:05:14 PM »

February 2026
#473   22.02.2026







- Socky
22
அருமையான கவிதை லூமினஸ். உண்மையை உரக்க சொல்லும் வரிகள். எந்நேரமும் ஒரே மனம் கொண்டிருத்தல் அரிய செயல்
ஆனால் அதுவே அறம் 💜✨🍀
23
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on February 22, 2026, 10:15:00 AM »
24
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on February 22, 2026, 06:32:08 AM »
25
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 397

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


26
சூழல் பல மாறினும்
சொல்லின் செம்மை மாறாதிருத்தல்
அதுவே மனிதன் காக்க வேண்டிய
மிக உயர்ந்த காவல்💜
கூட்டம் பெருகின்
பலர் முகம் மலரும்🤎
தனிமை வரின்
அதே முகம் திசை மாறும்.💙
அது உலகின் இயல்பு
அதை உணராத மனமே
துன்பம் கொள்ளும்.
நேற்றின் நட்பு
இன்றின் நிலைமையால் சாய்ந்திடின்,
அது நட்பு அன்று
நேரத்தின் நிழல்.💛
எந்நேரமும்
ஒரே மனம் கொண்டிருத்தல்
அரிய செயல்
ஆனால் அதுவே அறம்.🧡
நிலவு மேகத்தால் மறைந்தாலும்
அதன் ஒளி மாறாது💚
அதைப் போல
சூழ்நிலை மாறினாலும்
நம் இயல்பு மாறாதிருப்பதே
உயர்ந்த தத்துவம்.💙
ஏனெனில்
உண்மை என்பது
காலத்தோடு பயணித்தாலும்
நேரத்தோடு மாறாத ஒன்று.💯💐🕊🧘‍♀️🍭👍luminous
27
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 21, 2026, 10:14:10 PM »

February 2026
#472   21.02.2026







- Socky
28
joker  oru  sweet kadhala  apdiye oru cup tea la puthaichutinga ponga.      nice
29


பள்ளிவிடுமுறையும் பாட்டி வீடும்
==============================

Dear RJ,

மாணவர் விடுதியில் இருந்து.. நாங்கள் காலாண்டு, அரையாண்டு விடுமுறைக்கு எல்லாம் ஊருக்கு போவதில்லை. பள்ளி கோடை விடுமுறையில் மட்டுமே நாங்கள் ஊருக்கு போவோம்.

அந்த 2 மாத கோடை விடுமுறையில் தான் என்னுடைய பாட்டி வீட்டுக்கு செல்வோம். வருடத்துக்கு ஒருமுறைதான்  எல்லா சொந்தங்களையும் பார்ப்பேன்..

எங்களுக்கு லீவு ன்னு சொன்னதும் train க்கு ticket எல்லாம் book பண்ணி, கடைசி பரீட்சை அன்னிக்கு இரவே கிளம்பிவிடுவோம். ஊரில் அங்கே தயாராக இருக்கும் car ல எங்கள் பெட்டிபடுக்கை எல்லாம் ஏற்றி,  பாட்டியின் பண்ணை வீட்டிற்க்கு பறந்து போய்விடுவோம்.

அந்த இடம் சுற்றி ஊர் எல்லாம் இருக்காது.. வயலும் அந்த வயலில் வேலை செய்பவர்கள் மட்டுமே இருப்பர். நமக்கு மனுஷங்களா முக்கியமா... வயல்வெளியும்..  ஆடு மாடுகள் எல்லாம் கட்டி போட்டு வச்சு இருக்கும் அந்த தொழுவம் தான் பொழுது போக்கே..

பாட்டி வீட்டுக்கு போன முதல் நாளில் இருந்தே.. எங்களுக்கு ஜாலி தான்.. ஆனால் பாட்டிக்கு தான் தலைவலி..  summer ல தான் பருத்தி செடி பயிர் செய்து இருப்பாங்க.. நாங்க எல்லோரும் பருத்தி பிஞ்சு இனிப்பாக இருக்கும்ன்னு.. பிஞ்சுகளை எல்லாம் பறிச்சு மடி நிறைய கட்டிக்கிட்டு  வந்திருவோம்.. இது என்னோட ஆச்சிக்கு தெரியாமல்.. பருத்தி பிஞ்சுகளை எல்லாம் பன்றி மேயுது போல.. வேலியா போட்டுவிடுப்பா ன்னு அப்பாவியாக சொல்லும்... நாங்க மனசுக்குள்ளே சிரிச்சுக்குவோம்...

அந்த காட்டில் நிறைய கிணறு இருக்கும்.. பெரிய அண்ணா, மாமன்மாராகள் எல்லாம் எங்களை ஆளுக்கு ஒருவராக தெரிவு செய்து கொண்டு.. கிணற்றின் சுவரில் நின்று கொண்டு, எங்களை கிணற்றின் உள்ளே போடுவாராகள். பின் அவர்களின் எங்களின் பின்னே குதித்து காப்பாற்றி மேலே தூக்கிட்டு வருவாங்க.. செம ஜாலி ஆ இருக்கும்.. நான் நீச்சல் கத்துக்கிட்டதே இப்படி தான்...

ஆலமரங்கள் அங்கே நிறைய உண்டு. அதில் ஊஞ்சல் ஆடுகிறேன் என்று.. வேகமாக நான் முந்தி நீ முந்தின்னு மண்டையெல்லாம் ஒடைச்சு இருக்கோம். அங்கே எங்களுக்கு எதுவும் உடல்நிலை சரி இல்லை என்றால். என்னோட மாமன்மார்கள். ஜீப் எடுத்துட்டு town க்கு போய் doctor nurse எல்லோரையும் கூட்டிட்டு வந்துருவாங்க... ஒரு முறை நானும் கூட  கத்தரிக்காய் பாரவண்டிக்கு கீழே மாட்டி எலும்பை உடைச்சு இருக்கேன்..

ஒரு சமயங்களில் இலந்தை  பழம் பறிக்க போகிறேன் என்று காடுகளில் சுற்றி திரிந்து தொலைந்த போய்.. ஆச்சிக்கு  எதிரி பண்ணைக்காரங்க..   எல்லைக்கே போய்ட்டோம்.. அப்போ அங்கே இருந்த அண்ணா..  எங்களை கூட்டி வந்து  பண்ணையில பத்திரமா விட்டு இருக்காங்க.. ஹீஹீஹீ அப்புறமா  ஆச்சிகிட்டே வாங்கின அடி இன்னும் மறக்கலை..

கடைசியா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். எங்க gang ல ஒருத்தன் பாம்பு குட்டி போடுது வாங்க பாக்கலாம்ன்ன்னு கூட்டி போனாங்க.. நாங்களும் அவனோட போய்ட்டோம்.. அங்கே பார்த்த.. எவ்ளோ பாம்பு குட்டி.. அல்வா போல சூப்பர் இருந்துச்சு..  ஆள் ஆளுக்கு ஓடி ஓடி போய் குட்டிகளை பிடிச்சுட்டு இருதோம்..

எங்களுக்கு ரொம்ப நேரமா காணுமேன்னு.. எங்களை தேடிவந்த மாமாக்கு அதிர்ச்சி..  எங்க எல்லோரையும் எங்கே கிடந்த காஞ்ச மாறு வச்சு அடிச்சாரு பாருங்க..  பாம்பு பிடிக்கவ வந்தீங்க.. கொன்னுருவேன்.. ஒடுங்க.. ஐயோ அம்மா.. அடி.. செம அடி... நல்லவேளை அந்த பாம்பு குட்டி எல்லாம் தண்ணிப்பாம்பு குட்டியாம்..

இப்போ நான் சொன்னது எல்லாம் ஒரு வருட நினைவுகள் தான்.. அதிலும் நான் ரொம்பவே பார்த்து பார்த்து சொல்லி இருக்கேன்.. எல்லாம் அப்படியே சொன்ன.. Tinu இமேஜ் ரொம்ப damage ஆகிற கூட்டத்துல...  இத்துடன் என் நினைவுகளும் முற்றுப்புள்ளி வைக்கிறேன்..

நன்றி FTC Team 
 

30
கடகாரங்க பொண்ணு... உனக்கு என்ன பா....கடையில ஆச படுற எல்லாத்தையும் எடுத்து சாப்பிடலாம் என தோழிகள் பல முறை சொல்வார்கள்...

     மளிகை கடகாரங்களுக்குன்னு ஒரு சில தியாகம் இருந்தே ஆகணும். அதுல குடும்பத்துல எல்லோருமே பங்கு பெற தான்செய்யணும். அதுல முக்கியமானது வெளியூர் பிரயாணம் குடும்பமா போக முடியாது... என் நினைவுகளில் வெளியூர்ல இருக்கும் அம்மம்மா பெரியம்மா வீட்டுக்கு போனத விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போ இந்த நினைவுக்கூட கொஞ்சம் தான் என்னிடம் இருக்கு.
       
        புகை, வாகன சத்தம் நிறைஞ்ச நகரத்தோட ஓட்டத்தில் காணாம போன பச்சை பசேல் ன்னு வயல்கள பார்த்த போது மனசு நிறைய சந்தோஷம் எப்படி வந்து ஒட்டிகிச்சுன்னு தெரியல...
நெல்கதிர முதல் முறை பார்த்தது அப்போ தான். மரம் செடிகளை மட்டுமே பார்த்த எனக்கு அது ஒரு அதிசயம்... 🌾 அம்மாவிடம் " அம்மா பாருங்க குட்டி குட்டி மரம் காச்சிருக்கு" ன்னு சொல்ல அருகே இருந்தவங்க எதுக்கு சிரிக்குறாங்குனு கூட தெரியாம என்னோட உற்சாகத்துல இன்னும் அதிகமா சொல்லிட்டே இருந்தேன். அம்மா கஷ்டப்பட்டு தான் என் வாய்ய அடைச்சாங்க.

       அந்தோணியார் கோவில் முன்னாடி தான் அம்மம்மா வீடு. முதல் முறை அம்மம்மா வீட்டுக்கு போகும் போது கை நடுங்க விறகு அடுப்புல சோறு வடிச்சுட்டு இருந்தாங்க...எங்கள பாத்ததும் "ஏ மக்கா" ன்னு முகத்த தடவி நெட்ட எடுத்து, உச்சி முகர்ந்து நெற்றில முத்தம் கொடுத்தாங்க... சுருக்கம் நிறைஞ்ச அழகிய அன்பான கைகள், கண்கள்ல அவ்வளவு அன்பு. அது இன்னைக்கும் என் நினைவுல இருக்குற என் அம்மம்மாவோட நினைவு.

      பிறகு கருப்பட்டி காபி போட்டு குடிச்சுட்டு அக்கா, பெரியம்மா வழி அண்ணா, நானு மூணு பேரும் கோவில் முன்னாடி மணல்ல செம்ம ஆட்டம்... கால் வலிக்க வலிக்க விளையாட்டு. பாக்குறவங்க கொடுக்கர் பேத்தியா ன்னு கேக்கும் போது தான் தெரிஞ்சுது என் தாத்தாவோட பட்ட பேரு.

      பனங்கிழங்கு, பதனி, ஏணிப்படி மிட்டாய் எல்லாம் ஒரு கட்டு கட்டுனோம்... விடுமுறைய விளையாட்டோட கழிச்சுட்டு கிளம்பும் போது சீலைல முடிஞ்ச பைசா எடுத்து பாசமா கொடுத்து கன்னத்த வருடி வழி அனுப்பி வச்சாங்க...

       ஒரு சில தொடுதல் நம் வாழ்க்கையோடு பினஞ்சு இருக்கும். அத நினைக்கும் போது எல்லாம் பசுமை மாறாமல் நிலைச்சு இருக்கும் ....
பல வருடம் கழித்து தூசிதட்டி இந்த நினைவுகளை எழுப்பிய ' நெஞ்சம் மறப்பதில்லை ' க்கு மிக்க நன்றி ❤️ ❤️
Pages: 1 2 [3] 4 5 ... 10