27
« Last post by Ashik on Today at 12:09:19 AM »
யார் நீ என்றேன் !!
என் காதலி என்றாள் !!
வேண்டாம் விலகி செல் என்றேன்
ஏனோ வருடும் தென்றாலாய்
என்னை சுற்றியே வந்தாள் !!
போதும் கடந்து செல் என்றேன்
ஏனோ மழையை பொழியும் மேகமாய் அன்பை எனக்கு பொழிந்தாள் !!
எதற்கு என்றேன் காதல் என்றால் !! இணைவோமா என்றேன்
இனையவில்லை என்றால்,
உயிர் துறப்பேன் என்றாள் !!
நம்பலாமா என்றேன்
என்னை தவிர வேறு
உலகமில்லை என்றாள் !!
கற்று கொடு என்றேன்
காதலை எனக்கு சொல்லி தரும்
ஆசானாய் மாறினாள் !!
மாற்றிவிட்டாய் என்றேன்
ஆம் என்னுள் அவளும்
கலந்துவிட்டாள் என்றாள் !!
அடுத்து என்ன என்றேன்
திருமணம் என்ற பந்தம் என்றாள் !!
நடக்குமா என்றேன்
அவளின் பெற்றோரிடம்
சம்மதம் வாங்க சொன்னாள் !! சம்மதிக்கவில்லை என்றேன் !! காத்திருப்போம் என்றாள் !!
வருடங்கள் ஓடியது என்றேன் !!
வாழ்க்கை எல்லாம் உனக்காக அர்ப்பணிப்பேன் என்றேன் !!
யாருக்கு திருமணம் என்றேன் !!
தன் பெற்றோர் காட்டிய மணமகனுடன் தனக்கு என்றாள் !!
நம் காதல் என்றேன் !!
காலம் கடந்து விட்டது என்றாள் !!
ஏன் உன் கண்களில்
கண்ணீர் என்றேன் !!
உன்னை விட்டு பிரிவதால் என்றாள் !! சத்தியம் ஒன்று வேண்டும் என்றேன் !!
என்ன சத்தியம் என்று கேட்டாள் !!
இனி ஒரு முறை என் முன்னே வர மாட்டேன்
என்ற உறுதி வேண்டும் என்றேன் !! கண்ணீருடன் தனக்கு காத்திருந்த
காரில் ஏறி சென்றாள் !! 💔