Step 3 — When installing Simple Machines Forum (SMF) locally (or on a server), you must match the PHP version in your XAMPP (or other PHP environment) to what SMF requires — otherwise you will likely see installation or runtime errors.
Step 4 — Start XAMPP & Click Admin Button
Step 5 — Check XAMPP PHP Version
Step 6 — Extract SMF installer zip to XAMMP path
Step 7 — Create new user to acess db
Step 8 — Stat SMF Installer from browser
Step 9 — Take an db backup
Step 10 — SMF Install Completed Test it from browser
பிஞ்சுகளின் அழகிய புகைப்படங்களும் அடிக்கடி வலைத்தளங்களில் பரிமாறப்பட்டு பலரின் உள்ளத்தையும் உடைவுக்குள்ளாக்கிய கோரம்..
எதனை சொல்வது ? எத்துனை சேதங்களை குறித்து நிற்பது... ஓர் உயிருக்காய் பல உயிர்களின் போராட்டத்தையா?? பல உயிர்கள் போராடினும் காக்க முடியாமல் பரிபோன உயிர்களையா?? போதும் என்று சொல்லி இயற்கையோடு கைகூப்பி நிற்கும் நிலையினை உருவாக்கி விட்டது.
திடீரென இடம்பெற்ற சீற்றம் பல உயிர்களை சூரையாடினாலும் இன்னும் பல உயிர்களுக்கு பல்வேறு பாடத்தையும் கற்றுக்கொடுக்கத்தான் செய்திருக்கிறது..
மனித நேயமும் இன்னும் பலரில் மாண்டு விடவில்லை நேரம் வரும் போது புலப்படும் என்பதும், இயற்கையை இயற்கையாகவே கையாள்வது சிறந்தது அதற்குள் செயற்கைகளை புகுத்தி வேடிக்கை பார்ப்பதும் உகந்ததல்ல என்பதுவும் எமக்குணர்த்திய பாடங்களாகும்.[
« Last post by Thenmozhi on December 01, 2025, 10:23:43 PM »
"உதவும் கரங்கள் குடை பேசுகிறேன்...."
இங்கிலாந்து நாட்டில் ஓர் அற்புதமான கட்டடம் தான் எனது பிறப்பிடம்! இயந்திரம் மூலம் எலும்புகளாக கம்பிகளும்,என் தோலாக கறுப்பு துணியினால் போர்த்தி வடிவமைக்கப்பட்டேன்!-என் இரும்புக் கால்கள் தான் மானிடன் கரம் பற்றும் உன்னத அங்கம்! இணைபிரியாத நண்பர்களாக பல வண்ணங்களில் ஜொலித்தவாறு வண்டியில் ஏற்றப்பட்டோம்!
எமது வருகைக்காக காத்திருந்தார்கள் வர்த்தகர்கள்! எங்களை பணம் கொடுத்து வாங்கி,பத்திரமாய் கண்ணாடி அலமாரிகளில் அடுக்கி வைத்தார்கள்! என் கறுப்பு அழகில் மயங்கிய தேவதை என்னை அவள் வீட்டுக்கு அழைத்தாள்! எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், என் நண்பர்களை பிரியும் துக்கத்துடனும் சென்றேன்!
அவள் என்னை செல்லமாக " குடை" என அழைத்து ,வீட்டில் உள்ள எல்லோருக்கும் காண்பித்து மகிழ்ந்தாள்! அந்த அரக்கி அடுத்த நாளே என்னை ஒரு மூலையில் போட்டுவிட்டு,வேலைக்குப் போக தயாரானாள்! அங்குமிங்குமாக என் மனம் அலை பாய்ந்தது! அழுதேன் என் தனிமையை எண்ணி!
முழங்கியது இடி,வானம் இருண்டு மழை சோ....எனப் பொழிந்தது! முணு முணுத்தவாறே "என் குடை எங்கே?"ஓடி வருகிறாள் அந்த அரக்கி! முழித்தவாறே அவளுடன் பயணிக்கத் தொடங்கினேன்! முதன் முதலாக என் மேனியில் பட்டுத் தெறித்தன முத்தான மழைத்துளிகள்! முற்றுமுழுதாக நான் நனைந்து என் தேவதையை காப்பாற்றினேன்!
என் மேனியில் பட்டு வழிந்தோடும் மழைநீரை இரசித்தேன்! எட்டி வானத்தைப் பார்க்கும் போது ஏழு வர்ணங்களில் வானவில்லை இரசித்தேன்! எட்டுத்திசையிலும் எல்லோர் கைகளிலும் என் நண்பர்களைப் பார்த்து இரசித்தேன்! என் காதுகளில் ஒலித்த வானிலை அறிக்கை " தொடர்ந்து கனமழை" என்பதை இரசித்தேன்! என்னை இனி தேவதை தனிமையில் விட்டுச்செல்ல மாட்டாள் என மகிழ்ச்சியில் சிரித்தேன்!
என் அன்புத் தோழன் மழை ,ஏனென்றால் அவன் வரும்போது தான் சந்தோசமாக நான் வெளியில் நடமாடுவேன்! என் தோழன் சிலவேளை என்மீது கோபம் கொள்வான் ,சீக்கிரமாக கடலை அடைய நான் தடுக்கிறேன் என்று! என் எலும்புகளை உடைத்தெறிவான் கூடா நட்பு புயலுடன் சேர்ந்து!
கடவுள் முதல் காதலர்கள் வரை.. மன்னர் முதல் மகளீர் வரை.. குழந்தை முதல் முதியவர் வரை.. சிறு வர்த்தகத்திற்கு கூரையாக .. வீடு இல்லாதவனுக்கு புகலிடமாக வெயில்,மழை இரண்டிலும் காப்பாற்றுவது "குடை "நாங்கள் தானே !
என் படைப்பின் அர்த்தம் புரிந்து பெருமிதம் கொள்கிறேன்! என்னை விரித்து பயன்படுத்தும் போது என்னை நேசியுங்கள்! எனக்குள்ளும் ஒரு அழகிய ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது.... என்னை உடைத்து எறியாதீர்கள்....ஏனெனில் உதவும் கரங்கள் நாங்கள்...
« Last post by Agalya on December 01, 2025, 10:19:03 PM »
மழையே மழையே… நீரின் திரையே
எத்தனை தேவைகள் எத்தனை பரிமாணங்கள் எத்தனை இன்னல்கள் ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் மழை ஒவ்வொரு விதமா வியாபிக்குது
பள்ளி போற குழந்தைங்களுக்கு “அப்பாடா மழை பேயுது! எப்படியாவது லீவு விட்டுடுவாங்கனு” காலை எட்டு மணி வரைக்கும் நியூஸ் பாத்துட்டு நிப்பாங்க மழைத்துளி ஒவ்வொன்றும் லீவு லெட்டர் மாதிரி தோணும்
இதே காலேஜ் போற இளைஞர்களுக்கு “என்னடா இது… இன்னிக்குத்தான் லவ்வரோட டேட்டிங் வெச்சிருந்தேன் இன்னிக்குன்னு பாரு… மழை வந்து நம்ம பிளான் எல்லாத்தையும் சொதப்புதேடா” அப்படின்னு ஒரே பீலிங்
இதே வேலைக்கு போற இளைஞர்களுக்கு அடாத மழையிலும் விடாது குடை பிடிச்சுட்டு TL-க்கு பயந்து மேனேஜருக்கு பயந்து HR-க்கு பயந்து கொட்ற மழையிலேயும் பைக் ஓட்டிட்டு போவாங்க
இதே விவசாயிகளுக்கு அளவா பேஞ்சா… “சூப்பர் பாசனத்துக்கு குறை இருக்காது” ஆனா அதிகமா பேஞ்சா “ஏங்க நெல்லெல்லாம் நீரில் பாலா போச்சுங்க… மானியத்தை முதல்ல பார்த்துக் கொடுத்துடுங்க” அப்படின்னு அரசு கிட்ட கெஞ்சுவாங்க
இதுக்கெல்லாம் மேல ஒரு ரகம் இருக்கு அசர வைக்கிற ரகம் Work From Home warriors ஏழு to நாலு ஷிப்ட் ஆ இருந்தாலும் மழைக்கால அட்ராசிட்டி தொடங்கிடும் வேலையை தவிர எல்லாம் நடக்கும் மழைக்கு என்னெல்லாம் பண்ணலாம்? பஜ்ஜி-வடை எப்படி சாப்பிடலாம்? போர்வைய இழுத்து போத்தி எப்படித் தூங்கலாம்? ஓப்பியடிக்கவா… இல்ல சும்மா மழை சத்தம் கேட்டுட்டு படுக்கவா? இல்ல ரீல்ஸ் பார்க்கவா? இல்ல பிக் பாஸ் பார்க்கவா? இப்படி யோசிக்கிறதே ஒரு பெரிய வேலையாயிடும்
தரையில கால் வெச்சா சில்லுனு இருக்கும் பேன் போட்டா குளிரடிக்கும் ஆஃப் பண்ணினா கொசு கடிக்கும் வெயில் அடிக்குமானு எட்டிப் பார்த்தா “வெயிலா? வரவே மாட்டேன்”னு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது ஒரு பக்கம் மழை பேஞ்சு சந்தோஷமா இருந்தாலும் மறு பக்கம் இம்சையாத்தான் இருக்கு சரி… நம்ம போவோம் இப்படியே புலம்பிட்டு இருந்தா யார் வேலை பார்க்குறது? யார் சோறு போடுறது? அடேய்… ஏழு to நாலு ஷிப்ட்டு வேலை பார்க்க வந்துட்டேன் டா !