« Last post by Thooriga on December 11, 2025, 08:44:27 PM »
Hi my dear Isai Thendral team ..
Last week Tinu present panna show romba nalla irunthuchu .. Tejasvi new ah neraya BGMs kuduthu super ah DJ pani irunthanga..
Well done guys for your Fabulous work.
intha vaaram naan ketka virumbum song
Movie : Marumagan Song : Oh ragini Music : Deva Singer: SPB and Janaki Lyrics : Vairamuthu
I am a very big Fan of Deva Sir. Avaroda music romba etharthama rasikum vagaila irukum.. Most ah deva sir music naaley gana paattu kuththu pattu than ellarukum theriyum.. aana avar kudukatha melody hits illanu than solanum.
Deva sir oda intha OH RAGINI song avaroda isai thiramaikku maraikka patta sandrunnu sollallaam such a melody one..
kekka rombave menmaiyana paattu ithu Na intha song oru vaati than keten romba pudichu pochu.. athanala FTC friends unga kooda sernthu kekka aasai paduren namma isai thendral nigalchi moolama. i dedicate this song to everyone in FTC especially Deva sir fans ku.
« Last post by Yazhini on December 11, 2025, 12:01:50 AM »
மீண்டும் பெறவே இயலாத பேரன்புகாரனே... உன்னோடு பயணித்த ஒவ்வொரு மணிதுளிகளும் மனக்கண்ணில் அசைந்தாடுகின்றன...
யாரும் அறியா என்னை முழுமையாக அறிந்தவனே நீயின்றி கழியும் பொழுது அர்த்தமற்ற மொழியாய் ஆகிதான் போகின்றது.
அன்பின் அடித்தளமாக அமைந்தவனே அட்சயபாத்திரம் போல் அதனை அளித்தவனே கண்ணயரும் போதும் விரல்பிடித்து உடனிருந்தவனே வாட்டம் கொள்கையில் அன்னையாக அரவணைத்தவனே
சிறு அணைப்பில் ஊடல் அனைத்தையும் தனித்தவனே மையல் கொள்ளும் நேரத்திலும் காதலின் மென்மையை உணர்த்தியவனே மோகம் தணிகையிலும் - காதலை அறுவடை செய்தவனே...
என்னையே முதல் குழந்தையாய் பாவித்தவனே யாரிடமும் என்னை விட்டுக்கொடுக்காத என் தந்தைக்கு நிகரானவனே... கண்ணியத்துடன் கரம் பிடித்தவனே
என் பலமும் நீயே! என் பலவீனமும் நீயே! சிந்தனை முழுக்க ஆக்கிரமித்து யாவும் நீயாய் மாறுகையில் என்னை பிரிந்தது ஏனோ... தனிமையில் தள்ளியது ஏனோ...
தத்தளித்து நிற்கும் சேய்யாய் ஆகிதான் போனேன்... நீ ரசித்த என்னை சிறுக சிறுக சிதைக்கின்றேன் யாவிலும் உன்னோடு பயணிக்கிறேன் உன் இறுதி நிமிடங்களில் இன்றும் பேதலித்து நிற்கின்றேன்...
« Last post by Clown King on December 10, 2025, 11:33:01 PM »
விழிகள் காந்த விழிகள் கருணை பொங்கும் விழிகள் அன்பை சாரை சாரையாய் அள்ளிக் கொடுக்கும் விழிகள் பார்த்த அந்த நொடியே என் உலகம் நீதான் என்றேன்
உன்னை பெண் பார்க்க வந்த பொழுது பேசியது நம் விழிகள் தானே நான் பார்த்த ஒரே பெண்ணும் நீ அன்றே முடிவு செய்தேன் நீ தான் என் வாழ்க்கை என்று
நீ பேசிய வார்த்தைகளை விட உன் விழிகள் சொன்ன வார்த்தைகள் ஏராளம் உன் விழி பார்வையில் நான் அடங்கிப் போனேன் என்பது நிதர்சனமான உண்மையே
விழிகள் அழகாய் இருந்தால் போதுமா போதாது அதில் அன்பு பாசம் கருணை எல்லாம் வெளிப்பட வேண்டும் காதல் உட்பட உன் விழிகள் இவை அனைத்திலும் மிக மிஞ்சியே இருந்தன
நூறு ஆண்டுகள் வாழ வேண்டிய அந்த விழிகள் மிக மிஞ்சிய காதல் பாசம் கருணை அன்பு பொழிந்ததனால் விரைவிலே மூடச் செய்தானோ
உன் விழிகள் இல்லாத என் வாழ்க்கை இரண்டும் போனது கண்கள் இருந்தும் குருடனாகவே வாழ்கின்றேன் எனை காண வேண்டியது உனது விழிகள் தானே காத்துக் கிடக்கும் உன் விழிகள் என்ன ஓட்டங்கள் அறிவேன் விரைவில் சேர்வேன் உன் விழிகள் முன் அதே உன் அவனாய் ...