22
« Last post by Ninja on March 20, 2026, 11:00:55 PM »
நான் இந்த திரைப்படத்தை குறிப்பிடும்போது ஆச்சரியமா கூட இருக்கலாம். ஆனா உண்மையாவே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச திரைப்படம், இப்போ நான் டவுனா இருந்தா கூட போட்டு பார்க்க கூடிய திரைப்படம் ‘மைக்கேல் மதன காம ராஜன்’ தான்.
சின்ன வயசுல இந்த படத்தை பார்த்தப்போ கேளிக்கையா இருந்துச்சு. ஆனா வளர வளர இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்கும்போது எனக்கு இந்த படம் ஒரு ஹீலரா இருந்திருக்குன்னு தான் சொல்லனும். அப்படி ஒன்னும் இல்லையே இந்த படத்துலன்னு நினைக்கலாம், ஆனா கமல் எனும் கலைஞனை என் மனசுக்கு ரொம்ப நெருக்கமாக்கினது இந்த படம் தான். நாலு கமல், நாலு வித்தியாசமான கேரக்ட்டர்ஸ், நாலு விதமான ஸ்லாங்.. அப்படி ஒரு வெர்சட்டாலிட்டி (Versatility) காட்டியிருப்பாரு கமலஹாசன்.
இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், அப்போ புதுமைக்கும், கிரியேட்டிவிடிக்கும் பஞ்சமே இல்ல. கூடவே அளவில்லாத ஹ்யூமர் தான் இந்த படத்தோட பலம்னு நான் நினைக்கிறேன். வசனங்கள் கிரேஸி மோகன், படத்துக்கு ஒரு பெரிய பலம். பெரிய நடிகர்கள் பட்டாளம் வேற, காமெடிக்கு பஞ்சமே கிடையாது படம் முழுக்க. அவினாசியா நடிச்ச நாகேஷ் மதன் கேரக்ட்டர் கமல்கிட்ட இதெல்லாம் கம்ப்யூட்டர்ல நீங்க அடிச்சதுன்னு சொல்லுவாரு, அதுக்கு கமல் ‘இதெல்லாம் நான் அடிச்சது இல்ல எங்க அப்பாகிட்ட இருந்து நீங்க அடிச்சது’ன்னு ஷார்ப்பா வர்ர டயலாக் ஆகட்டும், ஒரு காட்சில குஷ்பு ‘மாண்புமிகு குத்துவிளக்கை அமைச்சர் ஏற்றி வைப்பார்னு சொல்றதாகட்டும், ‘சம்மந்தி காதுல விழுந்துட போகுது - சாம்பர்ல விழுந்துடுத்து காதுல விழுந்தா என்ன?’, ‘கிராமமும் குக்கா நீங்களும் குக்கு’, ‘நீ திரிபுர சுந்தரி இல்லே, திருட்டு சுந்தரியாக்கும்’ இப்படி ஒரு சீன் சீக்வன்ஸ் முழுக்கவே வாய மூட முடியாத அளவுக்கு சிரிப்புக்கு கேரண்டி கிரேஸி மோகனோட வசனங்கள்.
காட்சியமைப்பும் கொஞ்சமும் சளைக்காம அமைஞ்சிருக்கும். நம்ம பீம் பாய் பீம் பாய், மனோரமா காமெடி, நாகேஷ், குஷ்பு துப்பாக்கி எடுத்துட்டு எல்லாரையும் சுத்தி சுத்தி அலைய விடுற சீன், கடைசியா அந்த மலை உச்சியில வீடு காட்சி, எல்லாமே முழுக்க முழுக்க பவர் பாக்ட் எண்டர்டெயின்மெண்ட்
கமல் இந்த நாலு கேரக்டர்ஸ்கும் காட்ற வித்தியாசம் இருக்கே, ஸ்டைலிஷா ஷார்ப்பா பேசுற மதனாகட்டும், வில்லன் வாய்ஸ்ல கரகரப்பா பேசுற மைக்கேல் ஆகட்டும், சென்னை பாஷைல லவ்வாங்கி பண்ணும் ராஜூ, கடைசியா, குழம்புல விழுந்த மீன எடுக்க ‘மீன் பிடிக்கிறவாளா கூட்டிண்டு வரட்டுமா'ன்னு கேட்கிற வெள்ளந்தி பாலகாட்டு ஐயர் காமேஷ்வரனாகட்டும் இப்படி ஒரே படத்துல ஒரே நடிகர் நாலு பேரா பிரிஞ்சு நடிக்கிறதை பார்க்கும்பொழுது நான்கு வேற வேற கதாநாயகர்களே நடிக்கிற ஒரு அனுபவத்தை கொடுக்க கமல் எனும் கலைஞனை தவிர யாரால முடியும். ‘உலக நாயகன் பட்டம் சும்மா வந்ததில்லையாக்கும் கேட்டியோ’.
இந்த பதிவை எழுதும்போது கூட படத்தை திரும்ப பார்க்கனும் அப்படின்னு ஆசைய தூண்டுது. அந்த அளவுக்கு soul saver எனக்கு இந்த படம். வாழ்க்கையோட அடிமட்டத்துக்கு போய், அடிமாட்டு அளவுக்கு உழைச்சு, களைச்சு, ஓய்ஞ்சு போற நேரம் நான் தேடி ஓடுற ரெண்டு விஷயம் ஒன்னு வடிவேலு காமெடி, ரெண்டாவது இந்த படம். என்ன கஷ்டம்னாலும் அந்த கஷ்டத்தை மறந்து சிரிக்க வச்சிருக்கு இந்த படம்.
இளையராஜா இசை, இந்த படத்தோட இன்னொரு பலம். பிண்ணனி இசை, பாடல்கள்னு தனியா சொல்லிட்டு போகலாம். இப்பவும் ப்ரஷ் பீல் (fresh feel) கொடுக்க வைக்கும் பாடல்கள்னு சொன்னா மிகையாகாது.
ஒரு படம் நம்மளை ரசிக்க வைக்கலாம், சிலிர்க்க வைக்கலாம், நெகிழ வைக்கலாம், அழ வைக்கலாம், சிரிக்க வைக்கலாம் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஒரு ஒரு நேரங்கள்ல நமக்கு ஏற்படுத்தும். ஆனா தனிமைல துணையா இருக்கிற, ஆறுதலா நண்பன் போல அரவணைக்கிற படம் தான் ஒவ்வொருத்தருக்குமே நெஞ்சில நிக்கிற திரைப்படமா இருக்கும்.