Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-002

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

“திருவிழா கொண்டாட்டம்”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
32
கண்ணுக்கு தெரியாத தெய்வத்திடம்
நடமாடும் தெய்வத்தின் கையேந்தல்...
எதை எதிர் நோக்கி
இந்த யாசகன் கோலம்...
சுயநலமற்ற அந்த இதயத்தின்
உருக்கம் யாருக்காக...
நிச்சயம் அவளுக்காக அல்ல...

இடுப்பெலும்பு உடைய
தன் மக்களை ஈன்றவள்...
உதிரத்தை அமுதாக்கி
தன் சிசுவின் உயிரை வளர்த்தவள்.
ஞாயிற்று கிழமையும்
விடுமுறை அறியாதவள்...

தன் மழலையின் மகிழ்வுக்காக
கோமாளியாக உருமாறியவள்...
தன் பிணியிலும் ஓய்வின்றி
குழந்தைகளின் பசியாற்றியவள்....
பல பணிகளின் மத்தியிலும்
சோர்வின்றி சுழன்றவள்....

கந்தல் துணியாக
தன் தேகம் மாறினாலும்...
சுருக்கங்களின் அணிவகுப்பாக அவளின்
தோல் காட்சி அளித்தாலும்..
அவளின் இதய அரங்குகளில்
சுரக்கும் அன்பிலும்
ஒளியிழந்த கண்களில்
ஒளிர்ந்து மிளிரும் கருணையிலும்

ஓங்கி ஒலிக்கும் ஒரே
வேண்டுதல்
"இறைவா! என் புள்ளைங்கள
நல்லா வச்சுரு!
நோய் நொடி இல்லாம
நல்ல ஆரோக்கியத்த கொடு!
மனம் வாடாம சந்தோஷமா பாத்துக்கோ!"


என்ற தன் நிலையான வேண்டுதலை
யாசகமாக இறையிடம் வேண்டி
திரும்பி சென்றாள் முதியோர் இல்லத்திற்கு
33
வேண்டாத தெய்வங்களை  வேண்டி விட்டேன்
வேண்ட  வந்தேனம்மா உன்னிடத்தில்
காணாத கஷ்டங்கள் கண்டேனம்மா
கண்களில் நீர்வழிய நின்றேனம்மா

தீராத வேதனை என்னிடத்தில்
தீர்த்து வையடி இந்த பெண்னிடத்தில்
வேதனை நீ தந்த சோதனையா
நீ சோதிக்க நான் என்ன பாதகியா

பட்ட கஷ்ட்டம் எல்லாம் போதுமம்மா
கண் திறந்தென்னை பாரும் அம்மா
கல்லான உன்னைக் காண வந்தேன்
சொல்லாலே சோகம் தீர்க்க வந்தேன்

உன் சோதனையால் வாழ்வு வேதனையே
சோறும் தண்ணியும் இறங்கலையே
விரதம் இருந்து வேண்டி வந்தும்
என் வேதனை  இன்னும் தீரலையே

கையேந்தி வேண்டி நிற்கின்றேன் பாரம்மா
காது கொடுத்து கொஞ்சம்  கேளம்மா
உன் கண்களை திறந்து பாரம்மா
நீ கருணை கொஞ்சம் காட்டம்மா
34
கண்கள் மூடி புலம்ப உகந்தவன் நீ

யாரும் அரியா ரகசியம் சொல்ல ஏற்றவன் நீ

கோபப்பட்டு திட்ட உரிமையானவன் நீ

கொஞ்சி விளையாடி ஆசையை தீர்க்க குழந்தை நீ

என்னை நல்வழி படுத்தும் ஆசன் நீ

நீ இருக்கிறாய் என்று பலர் நீ இல்லை என்று சிலர்

இருகிறாயோ இல்லையோ நான் அறியேன் எனக்கு நீ வேண்டும் இறைவனே

அழும்போது நான் சாயும் தோள் உன்னுடையது

நான் குழம்பும் நேரத்தில் பிறக்கும் தெளிவு நீ

நான் ஆணவம் கொள்ளும் நேரம் என் ஆணவம் அழிப்பவன் நீ

 நீயே என் உற்ற தோழன்
அறிவு மிக்க ஆசான்
அன்பு காட்டும் அன்னை
அனுபவம் தரும் தந்தை
கோபிதுகொள்ளும் குழந்தை
அனைத்து நீ

 சொன்னதும் மனதின் குறை திர்ப்பவன்

இந்த புலம்பலும் கேட்டு பதிலும் தந்தான் அதையும் சொல்கிறேன்
 
இந்த பூமியில் பசி எதற்கு?

இன்பம் இருக்கையில் துன்பம் எதற்கு?

தாய் இருக்கையில் தாரம் எதற்கு?

நல்லவர் இருக்கையில் தீயவர் எதற்கு?

அவன் சொன்ன பதில்

பசியே பூமியின் சுழற்சிக்கு காரணம்.பசி இல்லையேல் உழைபில்லை மாற்றம் இல்லை எதுவும் இல்லை

இன்பத்தின் சுவை அறிய துன்பத்தின் வடுக்கள் தேவை

ஆணின் தலை சாய்ந்து அழ தேவைப்பட்ட இடம் அன்னை மடி அவள் போன பின் தாரதின் தோள்

முழுமையான நல்லவர் தீயவர் யாரும் இல்லை  நல்ல குணம் அதிகம் உள்ளவர் தீய குணத்தை கட்ட தீய குணம் கொண்டோர்

கண்ணீரோடு புலம்பி கண்ணீர் துடைத்து மனம் தேரும் போது கண்ணாடி கூட கடவுளே....
35
 கல்லும் கடவுளும் நடுவே ஒரு அம்மை                                                                                                                         கல்லில் செதுக்கிய
அம்மையின் காலடியில்
கண்ணீரை மறைத்துக்
கைகளைக் கூப்பும்
இன்னொரு அம்மை…

கணவன் என்ற நிழல்
குடிக்குள் கரைந்து போன நாளிலிருந்து
விடியலை வாங்க
இரவுகளைக் கடன் வாங்கியவள்.
கை குழந்தைகளாய் இருந்த
அவள் பிள்ளைகள்
இன்று புத்தக சுமையுடன்
பள்ளி வாசல் கடக்க
அவள் தோள்கள் தான்
பாலம் ஆனது.

வீட்டு வேலை,
எங்கே கிடைக்குமோ அங்கே வேலை,
காயும் கைகளில்
கனவு மட்டும்
உலராமல் வைத்தவள்.
“தனி பெண்” என்ற சொல்லால்
சமூகம் எறியும்
கூர்மையான பார்வைகள்,
வார்த்தைகள்,
மௌன அவமானங்கள்...
எல்லாவற்றையும்
பிள்ளைகளின் புன்னகைக்காக
விழுங்கிக் கொண்டவள்.

படிக்காத குறை
வாழ்க்கையில் வலியாக மாறினாலும்,
“என் பிள்ளைகள்
அதே வலியை
சுமக்கக் கூடாது”
என்ற வெறி ஆசை
அவள் மூச்சாகி நிற்கிறது.
அதனால்தான்
கோவிலின் இருட்டில்
விளக்கின் முன்
அவள் மண்டியிடுகிறாள்...
“துர்கையே… காளியே…
அநியாயத்தை அழிக்கும்
உன் தைரியத்தின்
ஒரு துளி போதும் தாயே.
தனி பெண்ணாக
இந்த சமூகத்தில்
மானத்தோடு
என் குடும்பத்தோடு
நான் வாழ
அருள் தா...

பாரதி கண்ட
புதுமைப் பெண்ணின்
உறுதியையும்,
தெளிவையும்,
தன்னம்பிக்கையையும்
என் மனத்தில் விதை.”

அவள் வேண்டுதல்
ஆண்களுக்கு எதிரல்ல..
கொடூர குணம் கொண்ட
சிலருக்கே.
நல்ல மனம் கொண்ட
ஆண்களையும்
அவள் மனம்
வணங்கத் தவறவில்லை.

இவள் கதையல்ல இது…
தெய்வம் சில நேரம்
சிலையிலிருந்து இறங்கி
அம்மாவாக உழைக்கும்
உண்மை.
    LUMINOUS 💜🧡💛💐😇
36
            இறை பக்தி

அகிலத்தை படைத்த
  அற்புதமான சக்தி இறைவன்!
அன்பை கொடுத்து ஆச்சர்யத்தை     
  நிறைவேற்றுவார் இறைவன்!

அதர்மம் எங்கே தலைதூக்குகிறதோ
 அங்கே நிற்பார் இறைவன்!
நல்லவர்களுக்கு நன்மையே
 செய்வார் இறைவன்!
தீய செயல்கள் செய்வோரை
 நின்று கொல்வார் இறைவன்!

இறைைன் ஒருவனே
உருவமற்ற மாபெரும் சக்தியான 
 இறைவனுக்கு உருவம் கொடுத்து,   
  வழிபடுவது மானிடனின் இறைபக்தியே!
பக்தனிடத்தில் பரிவு, பாசம் காண்பித்து,
  துணிவு, சுறுசுறுப்பு கொடுப்பது
   இறை பக்தியே!
   
உலகக்  காலப்பரிமாணத்தைக்
 குறிப்பவர் இறைவனே!
படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல் 
 இயற்றுவது இறைவனே!

தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார் இறைவன்!
கடவுளின் இருப்பிடம் உருவச் சிலை அல்ல
மக்களின் எண்ணங்களிலும்     
    உணர்ச்சிகளிலும் மட்டுமே!

பசித்தோர் வாசலில் காத்திருக்க,
பால் அபிஷேகம் கோவிலில்!
பசித்தவன் உருவத்தில் தான் கடவுள் இருக்கிறான் என்று அறியாத
   பாழாய்ப்  போன மனிதர்!
பசித்தவன் பசியை போக்கு
  அது தான் இறை பக்தி!

உடுத்த உடை இன்றி பச்சிளம்
  குழந்தைகள் நடுரோட்டில்...
உள்ளிருக்கும் சிலையான சாமிக்கு
  ஆயிரம் பொன்னாடைகள்....
உடுத்திக்க உடை இன்றி தவிப்பவனுக்கு உடை கொடு அதுதான் இறை பக்தி!

தங்க இடமின்றி தவிக்கும்
  குழந்தைகள் எத்தனையோ....
தங்கத்தில் பிரம்மாண்ட கோயில்கள்!
தர்மம் தழைத்தோங்க  தங்கும் இடம்     
  கொடு அதுதான் இறை பக்தி!

இன்பம் வரும் போது கடவுள்
 இருக்கிறார் என்று நம்புகின்றாய்!
துன்பம் வரும்போது கடவுள்
 இல்லை என்று ஏன் சொல்கிறாய்?
இதிலிருந்து புரிகின்றது தன்னம்பிக்கை   
  உன்னிடம் இல்லையென்று!
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்!
அது தான் இறை பக்தி!

அனைத்து உயிர்கள் மீதும் அன்பு வை 
  அதுதான் இறை பக்தி!
ஆணவத்தில் ஆடாதே அழிவு நேரிடும்!
இன்சொல் பேசி அனைவரையும் மகிழ்வி   
  அதுதான் இறை பக்தி!
ஈகை உணர்வை உன்னிடத்தில்   
 வளர்த்துக்கொள் அது தான் இறை பக்தி!
உன்னைப்போல் மற்றவரையும் நேசி
  அது தான் இறை பக்தி!

பஞ்சமா பாதகங்களை பண்ணாதே!
பரணி போற்ற வாழ்ந்திடு
அது தான் இறை பக்தி!
இறை பக்தியுடன் நாமும்
இன்புற வாழ்ந்து,
 மற்றவரையும் வாழ வைப்போம்!









37
நீயும் நானும் ஒன்றுதான்.

நீ ஆயுதம் ஏந்தி
அகிலத்தை காக்கிறாய் ,
நான் பொறுப்புகளை  ஏந்தி
என் அகத்தை  காக்கிறேன்
போர்க்களம் வேறு ,
பொறுப்பு ஒன்றே,
நீயும் நானும் ஒன்றுதான்.

உன் நெற்றியில் குங்குமம்
சக்தியின் அடையாளம் என்றால்,
என் நெற்றியில் வியர்வை
தியாகத்தின் சாட்சி.
ஒன்று பூஜையில் மின்னுகிறது,
ஒன்று உழைப்பில் கரைகிறது
அலங்காரம் வேறு
அர்ப்பணிப்பு ஒன்றே 
நீயும் நானும் ஒன்றுதான்.

நீ கோயில் கருவறையில்
மூடப்பட்ட கதவுக்குள் நிற்கிறாய்,
நான் சமையலறையின்
அடுப்பங்கரைக்குள் என்னை முடக்கி கொள்கிறேன் .
இடங்கள் வேறு,
சிறைகள் ஒன்றே ..
நீயும் நானும் ஒன்றுதான்.

உனக்கு அர்ச்சனை,
எனக்கு கடமை.
உனக்கு மலர்கள்,
எனக்கு மௌனம்.
வாழ்விடம் வேறு 
வலி ஒன்றே..
நீயும் நானும் ஒன்றுதான்.

திருவிழா எனும் நாளில்,
உலகம் உன்னை வணங்கும்.
திருநாளைக் காண்கிறாய்;
நான் அன்னையர் தினம் மட்டும்  போற்றப்பட்டு,
வேறு நாட்களில் யாரும் காணாத,
தனிமையினை காண்கிறேன் .
கோலங்கள் வேறு
தனிமை ஒன்றே
நீயும் நானும் ஒன்றுதான்.

நீ பத்துக் கரங்களால்
பாதுகாப்பை அளிக்கிறாய்,
நான் இரண்டு கரங்களால்
பசி போக்கி படியளிக்கின்றேன்  .
அளவுகள் வேறு
சுமை ஒன்றே
நீயும் நானும் ஒன்றுதான்.

அடுப்பின் நெருப்பில்
என் பொறுமை சோதிக்கப்படுகிறது,
வேண்டுதல்கள்  அழைப்பில்
உன் சக்தி சோதிக்கப்படுகிறது.
சோதனை வேறு,
பொறுப்புகள் ஒன்றே
நீயும் நானும் ஒன்றுதான்.

வாய் மூடி,
சொல் கேட்டு,
வேண்டுதல்களை நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறோம்
நீ கடவுளாக,
நான் பெண்ணாக.
பெயர்கள் வேறு,
நிலை ஒன்றே
நீயும் நானும் ஒன்றுதான்.

கடவுளாய் உலகத்தின் 'போற்றுதல்' எனக்கு வேண்டாம்,
மனிதியாய் இந்த மண்ணின் 'புரிதல்' ஒன்றே போதும்!
பீடத்தின் மகுடத்தை விட ,
என் சுதந்திரத்தின் சிறு சிறகே போதும்!

சரணடையும் பக்தியை விட,
என் சமத்துவத்தை ஏற்கும் மனிதம் போதும்!
பூசைக்குரிய சிலையாய் அல்ல ,
தோள்சேரும் சக உயிராய் மதிக்கப்படுதலே போதும்!"
ஏனெனில் நீயும் நானும் ஒன்றுதான்
38

நான் பேச வரல....கேட்கவும் வரல..

சும்மா நின்னு
உன்னைப் பார்க்க தான் வந்தேன்..

உன் முன்னாடி நின்னா, என்ன கேட்கணும்னே
எனக்கே தெரியல..

ஒரு காலத்துல நிறைய கேள்விகள் இருந்தது.
உன்னைக் கேள்வி கேட்கவும்
செஞ்சிருக்கேன்.

ஏன்?
எப்படி?
இன்னும் எத்தனை நாள்?
எனக்கு மட்டும் தானா?
இப்படி எல்லாம்…

ஆனா இப்ப,
அந்த கேள்விகள் எல்லாம்
சோர்ந்து
மௌனமா மாறிடுச்சு...

கடந்து வந்த பாதை
ரொம்ப நீளம்...

திரும்பிப் பார்க்க
சக்தி இல்ல...தெம்பும் இல்ல...

சிரிச்ச முகத்தோட
வாழ பழகிட்டேன்.
வேற வழி இல்லாம.
உள்ளுக்குள்ள வலி இருந்தாலும்,
அது
என்னோட தனிப்பட்ட விஷயமா
மாறிடுச்சு...

சரணடையணும்னு தான் ஆசை.
முழுசா...

எதையும் பிடிச்சுக்காம.

“நீயே போதும்”

என்று சொல்லும் அளவுக்கு.
ஆனா
என் கைகளில்
கடமைகள் இருக்கு...

என் தோள்களில்
பொறுப்புகள் இருக்கு...

அதை இறக்கி வைக்க
இடமில்லை,நேரமில்லை, சில நேரம்
அனுமதியும் இல்லை.

அதனால தான்
உன் காலடியில் கூட
முழுசா உடைய முடியல....

என் கண்ணீர் இப்ப
சத்தம் போடாது.
மௌனத்துக்குள்ள
கரைய பழகிட்டுச்சு...

நான் உன் கிட்ட
எதுவும் கேட்கல... பதில் வேண்டாம்னு
நானே முடிவு பண்ணிட்டேன்.

சுகம் வேண்டாம்....அதிர்ஷ்டம் வேண்டாம்....
ஒரு நாள் கூட
சுமை குறையலன்னாலும்,
இந்த மூச்சு
நிக்காம இருக்க
பார்த்துக்கோ...


உன் மேல இருக்க நம்பிக்கை
இன்னும் போகல.
அது
கூச்சலில்லாம
உள்ளுக்குள்ள
உயிரோட இருக்கு...


இன்னும் நான்
உன்னை விட்டுப் போகல.
போவதுக்கும்
மனம் வரல...

இல்ல…
போறதுக்கு தான்
இடம் இருக்கா சொல்லு..?

கேள்விகள் முடிஞ்ச இடத்துல,
நான் இப்ப
நின்னுட்டு இருக்கேன்.
மௌனமா.
அமைதியா. அவ்ளோதான்...

அதுவே
என் வேண்டுதல்.
39


பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன், அருண் மொழி

மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி

ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ

ஆண் : வேதனை சொல்லிடும்
ராகத்திலே
வேகுதே என் மனம்
மோகத்திலே…ஏ

ஆண் : மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி

ஆண் : காதலில் தோற்றவர்
கதை உண்டு இங்கே ஆயிரம்
ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்ம்…

ஆண் : வேண்டாத பேச்சுக்கள்
ஏன்டா அம்பி

ஆண் : காதலும் பொய்யும் இல்லை
உண்மை கதை மண்ணில் ஆயிரம்
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : உன் காதல் சஸ்பென்ஸ்
என்ன அம்பி

ஆண் : காதல் செஞ்சா பாவம்
அந்த ஆதாம் காலத்தில்
ஆண் : எதுக்கு வீணா சோகம்
கதைய முடிடா நேரத்தில்

ஆண் : பூங்கிளி கைவரும்
நாள் வருமா…ஆ
பூமியில் சொர்கமும்
தோன்றிடுமா…ஆஅ…

ஆண் : மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி

ஆண் : காற்று விடும் கேள்விக்கு
மலர் சொல்லும் பதில் என்னவோ
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : வாசங்கள் பேசாத
பதிலா தம்பி..

ஆண் : மேகம் விடும் கேள்விக்கு
வெண்ணிலவின் பதில் என்னவோ
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : கடல் ஆடும் அலை கூட
பதில்தான் தம்பி..

ஆண் : அவளின் மௌனம் பார்த்து
பதை பதிக்கும் என் மனம்

பெண் : வேண்டாத எண்ணம் வரும்
காதல் திருமணம்

ஆண் : மோகமுள் நெஞ்சிலே
பாய்கிறதே..
என் மனம் அவள் மடி
சாய்கிறதே

ஆண் : மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி

ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ

ஆண் : வேதனை சொல்லிடும்
ராகத்திலே
வேகுதே என் மனம்
மோகத்திலே…ஏ…

ஆண் : மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி



40
எந்த உறவாக இருந்தாலும்
அன்பு இருந்தால் மட்டுமே
நீ  விலகி நின்றாலும்
உன்னைத்தேடி வரும்
Pages: 1 2 3 [4] 5 6 ... 10