Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31

1. கன மழைக்கு அஞ்சாதீர்கள். மிதமான மழைக்கு ஏங்காதீர்கள். அதைவிட நல்ல குடைக்காக மட்டும் வேண்டுங்கள். அதுதான் நல்லது.

2. வெள்ளம் வரும்போது மீன்கள் எறும்புகளை உட்கொள்ளும். வெள்ளம் வடிந்த பிறகு எறும்புகள் மீன்களைத் திண்ணும். கால நேரம்தான் அனைத்திற்கும் காரணம். கடவுள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பார்.

3. நாடகங்களுக்கு செல்லும் போது முன் வரிசையில் உட்கார இடம் கிடைத்தால் பரவாயில்லை என்பீர்கள். திரைப்படங்களுக்குச் செல்லும்போது, கடைசி வரிசைக்கு அடிபோடுவீர்கள். வாழ்க்கையில் நிலைப்பாடு ஒவ்வொன்றும் தொடர்புடையது. நிலையானது அல்ல.

4. சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை. வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்.

5. சரியான ஆசாமியைத் தேர்ந்தெடுப்பது முக்கியமில்லை. கிடைத்த ஆசாமியை சரியாகக் கையாள்வதுதான் முக்கியமனதாகும்.

6. ஆரம்பத்தில் எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதைவிட, கடைசி வரை தொடர்ந்து எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியமாகும்.

7. ஒவ்வொரு பிரச்சினைக்கும் (N+1) என்பதுதான் தீர்வு. இதில் N என்பது எத்தனை தீர்வுகளை நீங்கள் முயற்சித்தீர்கள் என்பதைக் குறிக்கும். 1 என்பது நீங்கள் முயற்சிக்காத தீர்வுகளைக் குறிக்கும்.

8. நீங்கள் பிரச்சினையில் இருக்கும்போது, அதுதான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள். அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவுதான்.

9. மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடு கடவுள் கொடுக்கிறார், கொடுக்கிறார், விட்டும் கொடுக்கிறார். மன்னித்தும் விடுகிறார். ஆனால் மனிதன் பெறுகிறான், பெறுகிறான். காரியம் முடிந்தவுடன் கடைசியில் கடவுளையே மறந்துவிடுகிறான்.

10. இரண்டுவிதமான மக்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் ( பைத்தியக்காரர்களும் ) குழந்தைகளுமாவார்கள். உங்கள் லட்சியங்களை அடைய பைத்தியக்காரகளைப் போல் இருங்கள். அடைந்தபின் குழந்தைகளைப் போல மகிழ்ச்சியடையுங்கள்.

11. மற்றவர்களுடைய உணர்வுகளோடு விளையாடாதீர்கள். நீங்கள் வெற்றி அடையலாம். ஆனால் அந்த மனிதரை நீங்கள் இழக்க நேரிடும்.

12. வெற்றிக்கு எஸ்கலேட்டர், லிப்ஃட் எல்லாம் கிடையாது. படிகள் மட்டும்தான் உண்டு என்பதை எப்போதும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
32

ரத்த சோகை நோய் இந்தியர்களிடையே பரவலாக காணப்படுகிறது. ரத்த சோகை நோய் என்றால் என்ன? உடலின் ஆரோக்கியத்துக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். சிவப்பு அணுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இது தான் ரத்தத்தில் ஆக்சிஜனை கடத்துகிறது.

ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் அனிமியா ஏற்படும். இதைத்தான் ரத்த சோகை நோய் என்கிறோம். ரத்த சோகை நோய் பெரும்பாலும் பெண்களை தாக்கும். குறிப்பாக கிராமப்புற பெண்கள் ரத்த சோகை நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கிராமங்களில் விவசாய வேலை செய்யும் பெண்கள் செருப்பு அணியாமல் நடக்கும் போது அதனால் வயிற்றில் புழு உருவாகி அது ரத்தத்தை உறிஞ்சிவிடுவதால் ரத்த சோகை ஏற்படுகிறது.

காலுக்கும் வயிற்றுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்க தோன்றலாம். கால் வழியாகத்தான் குடல் பூச்சிகள் உருவாகின்றன. எனவே கால்களை சுத்தமாக வைத்து பராமரிப்பது அவசியம். அடுத்ததாக மாதவிடாய் ஒழுங்காக இல்லாத பெண்களுக்கும்; மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்தம் வெளியேறும் பெண்களுக்கும் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது.

ஆண்களில் ரத்தசோகை நோயால் குறைந்த அளவிலே பாதிக்கப்படுகிறார்கள். ரத்த பரிசோதனை செய்யாமல் அடிக்கடி ரத்ததானம் செய்பவர்களுக்கும் ரத்த சோகை வர வாய்ப்பு உள்ளது. பன்றிக்கறி சாப்பிடுபவர்களுக்கும் ரத்த சோகை வரும்.

ரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு சோர்வு, கண்ணில் கருவளையம், முடி உதிர்தல், சக்தி இல்லாமல் சோர்வடைதல், எதிலும் சரிவர கவனம் செலுத்த முடியாது, சோம்பல் ஏற்படும், ஒழுங்கற்ற மாதவிடாய், நீண்ட நேரம் வேலை செய்ய முடியாமல் சோர்ந்து விடுதல், தூக்கம் இன்மை, தலைவலி, தலைசுற்றல், வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை ரத்தப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை நோய் தாக்கி இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ரத்த சோகை நோய் ஏன் வருகிறது என்று பார்த்தோமேயானால் இரும்புச் சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடாததே காரணம்.

கிராமப் பகுதியில் இருந்து இப்போது நகர்ப்பகுதி பெண்கள் அதிக அளவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது உணவு பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது. காய்கறிகள், கீரைகளை அதிகம் சாப்பிடாமல் பாட்டில், டின்களில், பைகளில் அடைத்த உணவை அதிகம் சாப்பிடுகிறார்கள். பெண்கள் 3 வேளையும் காய்கறியுடன் உணவு சாப்பிடுவது அவசியம்.

இரும்பு சத்து நிறைந்த உணவு மூலம் ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம். ரத்தசோகை உள்ளவர்கள் காய்கறிகள், கீரைவகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைவகைகளில் அதிக அளவு இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளன.

கீரை வகைகளை எடுத்துக் கொண்டால் மணத்தக்காளி கீரை, முருங்கை கீரை, பசலை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கருவேப்பிலை, கொத்தமல்லி, ஆரைக்கீரை, புதினா, முலைக் கீரை, அகத்திக் கீரை, வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.

பழங்களில் ஆப்பிள், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா, நெல்லிக்கனி, வாழைப்பழம், பேரிக்காய், மாதுளம் பழம் போன்ற வற்றில் இரும்புச் சத்துக்கள் அதிகம் அடங்கி யுள்ளன. உணவு சமைக்க கைக்குத்தல் அரிசியை பயன்படுத்த வேண்டும்.

கிராமங்களில் முன்பெல்லாம் கைக்குத்தல் அரிசியைத்தான் பயன்படுத்தி வந்தனர். இப்போது மாறிவிட்டது. அவர்கள் கூட ரைஸ்மில்லில் அரைத்த அரிசியைத்தான் வேக வைத்து சாப்பிடுகிறார்கள். கைக்குத்தல் அரிசியில் பி.காம்ப்ளக்ஸ் சத்து அதிகம் உள்ளது. அவல் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை கோழிக்கறி, மீன் சாப்பிட வேண்டும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு எளிய உடற்பயிற்சி அவசியம்.

இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு பழக்கங்கள் மாற்றத்தால் இன்றைய கால கட்டத்தில் இளம் பெண்கள் சீக்கிரமே பருவம் அடைகிறார்கள். சிறு வயதிலேயே அவர்களுக்கு மாதா மாதம் ரத்தம் வெளியேறும் நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ஹீமோ குளோபின் அளவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பெற்றோர் தெரிந்து கொண்டு அனிமியா வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு மாதவிடாய் சரியாக வரவில்லை என்றாலும் ரத்த சோகையாக இருக்கலாம். அதையும் சேர்த்து கவனிக்க வேண்டும். ரத்த சோகை நோயை உணவு பழக்க வழக்கங்கள் மூலம் சரி செய்ய 3 மாதம் முதல் 6 மாதம் வரை ஆகும். எனவே சாப்பிட்ட முதல் நாளே சரியாக வில்லையே என்று எதிர்பார்க்கக்கூடாது.

ரத்த சோகை அதிகம் இருப்பவர்கள் மருத்து வரை அணுகி அயர்ன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். கிராமங்களில் சத்து மாத்திரைகள் என்று சொல்வார்கள். இது சத்து மாத்திரை தானே என்று தொடர்ந்து அயர்ன் மாத்திரைகளை சாப்பிடக் கூடாது. மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்டு 3 மாதம் முதல் 6 மாதத்தில் நிறுத்தி விடலாமா என்று கேட்க வேண்டும்.

மீறி நாமாகவே தொடர்ந்து அயர்ன் மாத்திரைகளை சாப்பிட்டால் கல்லீரல், மண்ணீரலில் பாதிப்பு ஏற்படும். அவற்றில் வீக்கம் ஏற்பட்டு வயிற்று வலி உண்டாகும். வலது பக்க வயிற்றிலும், இடது பக்க வயிற்றிலும் வலி ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டால் உடலின் செயல்பாடு குறைந்து விடும். உணவு ஜீரணம் ஆகாது, வயிற்றுப்போக்கு ஏற்படும், தோல் வறட்சியாக காணப்படும்.

கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போலிக் ஆசிட், அயர்ன் மாத்திரைகளுடன் சத்தான உணவு வகைகள் சாப்பிட வேண்டும். ஒரு நாள் கூட விடாமல் 6 மாதம் வரை அவர்கள் சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணிகள் கீரை சூப், காய்கறி சூப், ராகி, ராகி கஞ்சி, முருங்கை கீரை கலந்த ராகி தோசை, கம்பு, கோதுமை, கீரை, வெந்தயக்கீரை, முருங்கை கீரை, புதினா, பேரீட்சம் பழம், மாதுளை, ஆப்பிள் பழங்கள் சாப்பிட வேண்டும்.

சாதம், சப்பாத்தி, பரோட்டா, கீரை ரைஸ், அரைக்கீரை, பழச்சாறு, மில்க்ஷேக், இஞ்சி மிளகு ரசம், பருப்பு ரசம், பைனாப்பிள் ரசம், கருவேப்பிலை ரசம் செய்து சாப்பிடலாம். இவை ரத்த சோகை வராமல் 100 சதவீதம் தடுக்கும். ரத்த சோகை இருந்தாலும் 100 சதவீதம் நிவர்த்தி ஆகும். காய்கறிகள், கீரைகள் சேர்ப்பதால் ரத்தம் ஊறும். சுறுசுறுப்பு உண்டாகும்.

குழந்தையின் வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் உதவியாக இருக்கும். ரத்தம் சோகை நோயை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் ரத்த செலுத்தும் நிலை ஏற்படும். அந்த நிலை ஏற்பட விடவேண்டாம். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ரத்த சோகை வராமல் தடுத்து நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.
33

வீணையில் பல விதங்கள் இருந்தாலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் சரஸ்வதி வீணை சுமார் நான்கு அடி நீளமாக இருக்கும். வீணையின் வடிவை தாங்கி நிற்பது இதன் தண்டி. வீணையை செய்வதற்கு பலா மர வகையை சார்ந்த கட்டைகளையே பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் இசை இவ்வளவு இனிமையாக இருக்கிறதோ என்னமோ. ஒரே மரத்தினால் செய்யப்பட்ட வீணைகளுக்கு ஏகாந்த வீணை என்று பெயர் உண்டு. தண்டியின் ஒரு ஓரத்தில் காலியான குடம் போன்ற அமைப்பு உண்டு. இந்த குடத்தில் ஏற்படும் அதிர்வினால்தான் இசையே உருவாகிறது. தண்டியின் இன்னொரு புறம் யாளி முகம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பகுதியில் ஒரு சிறிய குடமும் உண்டு. இது பெரும்பாலும் வீணையை தொடையில் தாங்கி இருத்திக் கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. தண்டியின் மேலிருந்து கீழ் வரை பித்தளையால் செய்யப்பட்ட 24 மெட்டுக்கள், ஒரு வகை மெழுகுப் பொருளினால் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மெட்டுகளை பார்த்தால் எனக்கு தாயக்கட்டைகள் தான் ஞாபகம் வருகிறது. இவற்றின் மேல்தான் வீணையின் 7 தந்திகள் படர்ந்திருக்கும். வீணையின் பல நுணுக்கமான வடிவமைப்புகள் பற்றி நிறைய சொல்லலாம், ஆனால் அதை பற்றி எழுதுவதற்கு எனக்கு பொறுமை இருக்கிறதோ இல்லையோ , ஆனால் அதை படிப்பதற்கு உங்களுக்கு நிறைய பொறுமை வேண்டும்.
இந்த வீணையை தரையில் உட்கார்ந்து கொண்டு, பெரிய குடத்தை வலது பக்கம் தரையில் இருத்தி, யாளி முக பக்கம் இருக்கும் குடத்தை இடது பக்கத்தொடையின் மேல் பொருத்திக் கொள்வார்கள். தந்திகளை வலது கையினால் மீட்ட வேண்டும். வலது கையின் ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரலை கொண்டு 7 தந்திகளில் வாசிப்பு தந்திகள் எனப்படும்  4 தந்திகளை மட்டும் கீழ்நோக்கி மீட்டி வாசிப்பார்கள். மற்ற மூன்று தந்திகளான தாள-சுருதி தந்திகளை வலது கையின் சுண்டு விரலை கொண்டு மேற்புரம் நோக்கி மீட்டுவார்கள். பலர் விரல்களின் மேல் மீட்டுக்கோள் எனப்படும் க்ளிப்புகளை பொருத்திக் கொண்டு மீட்டுவார்கள்  , ஆனால் சிலர் நகங்களாலேயே மீட்டுவார்கள். இடது கையின் விரல்கள் எல்லாம் தந்தியின் மேல் அழுத்தம் கொடுத்து இசையை மாற்ற பயன்படும். இதை சொல்லும்போதே கண்ணைகட்டுகிறதே, இதை நீண்ட நேரம் தாங்கிக்கொண்டு வாசித்தால் காலிலும், முதுகிலும்,விரல்களிலும் எவ்வளவு வலி ஏற்படும் என்று வாசிப்பவர்கள் தான் கூற முடியும்.. லேசுப்பட்ட விஷயம் இல்லை..
நமக்கு வீணை என்றாலே நினைவுக்கு வருவது சரஸ்வதி வீணை என்ற வகை வீணை தான். நான் மேலே சொன்ன குறிப்புகள் கூட சரஸ்வதி வீணையை பற்றியதுதான், ஏனென்றால் இப்போதைக்கு மிக பரவலாக உபயோகப்படுத்தப்படுவது இந்த வகை வீணைகள் தான். ஆனால் வீணையில் வேறு ரகங்களும் கூட உண்டு. அவற்றில் முக்கியமான சில வகைகள் பற்றி சிறிது பார்ப்போமா??
🎻
#ருத்ர வீணை:
வீணையின் வகைகளில் நாம் முதலில் பார்க்க போவது ருத்ர வீணை. இது பெரும்பாலும் ஹிந்துஸ்தானி சங்கீததின் ஒரு வகையான துருபத் எனும் இசையை இசைக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கும் சரஸ்வதி வீணைக்கும் உள்ள வித்தியாசங்களை பார்தோமென்றால், சரஸ்வதி வீணையில் குடங்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் ஆனால் ருத்ர வீணையில் இரண்டு பக்கமும் சம அளவுள்ள காய்ந்து போன பூசனிக்காய்கள் பொருத்தப்பட்டிருக்கும். சரஸ்வதி வீணையில் உள்ளது போலவே இந்த வீணையிலும மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் ( தாயக்கட்டைகள்.)) இந்த வீணையை வாசிக்கும் விதமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தண்டியின் ஒரு பகுதியில் உள்ள குடத்தை தோளின் மேல் இருத்திக்கொண்டு இந்த வகையான வீணையை வாசிப்பார்கள். இந்த வகை வீணைகள் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவின் மிக பழமையான இசை கருவிகளில் ருத்ர வீணையும் ஒன்று.
🎻
விசித்திர வீணை:
இதுவும் பார்க்க கொஞ்சம் ருத்ர வீணை போலவே தான் இருக்கிறது இல்லையா? இந்த வீணையிலும் இரு புறமும் காய்ந்து போன பூசனிக்காய்களை பொருத்தி இருப்பார்கள். ஆனால் ருத்ர வீணையை போல இது ஒன்றும் பழமையான இசைக்கருவி அல்ல. இந்த வீணைக்கும் ருத்ர வீணைக்கு உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால் இந்த வீணையில் மெட்டுகளே கிடையாது. அதுவும் தவிர இந்த வீணையை வாசிக்கும் விதத்திலும் சிறிது விசித்திரம் உண்டு. வலது கை விரல்களால் தந்திகளை மீட்டியபடி இடது கையில் ஒரு விதமான தட்டையான மீட்டுக்கோளை பயன்படுத்தி தேய்த்து தேய்த்து வாசிப்பார்கள். இந்த வீணையும் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தபடுவதில்லை. அதனால் வீணை உலகில் முடி சூடா ராணியாக சரஸ்வதி வீணையை நாம் எண்ணிக்கொள்ளலாம்.
🎻
கோட்டுவாத்தியம்:
இந்த வகை வீணைக்கு சித்திர வீணை என்றும், மஹாநாடக வீணை என்று பல பெயர்கள். பார்ப்பதற்கு இது சரஸ்வதி வீணையை போலத்தான் இருக்கும். ஆனால் இந்த வீணையில் என்ன வித்தியாசம் என்றால் இதில் மொத்தம் 21 தந்திகள் உண்டு.. அதுவும் ஒவ்வொன்றும் மிக தடிமனானவை. இந்த வீணையை விசித்திர வீணையை வாசிப்பது போலவே இடது கையால் ஒரு விதமான தட்டையான மீட்டுகோளை வைத்து ஒலி எழுப்புவார்கள். வலது கையால் தந்திகளை மீட்டுவார்கள்.
இந்த வீணையில் உள்ள இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால்,இதில் கூட விசித்திர வீணையை போல் மெட்டுக்கள் கிடையாது. இந்த வீணையின் வரலாறு ஒன்றும் பெரியது அல்ல, சுமார் 100 வருடங்களாக தான் இது புழங்கி வருவதாக கூறப்படுகிறது. திருவிடைமருதூர் சகாராம் என்பவரால் இது முதல் முதலாக பிரபலப்படுத்தப்பட்டது, பின் மைசூர் சமஸ்தானத்தில் அரண்மனை இசைகலைஞரான நாராயண ஐயங்கார் என்பவரால் இது மேலும் மக்களால் அறியப்பட்டது. ரவிகிரண் போன்ற புகழ்பெற்ற இசைகலைஞர்களால் இந்த விதமான வீணையின் நாதத்தை இன்றும் இசை உலகில் கேட்க முடிகிறது
வீணை நம் நாட்டின் கலாசாரத்தையும் , பாரம்பரியத்தையும் குறிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. படிப்புக்கு அதிபதியான கலைவாணியின் கையில் வீணையை கொடுத்திலேயே அதற்கு நம் மக்கள் எவ்வளவு மரியாதை கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.  முன்பே குறிப்பிட்டிருந்தது போல கர்நாடக இசை உலகில் வீணைக்கு என்று ஒரு தனி மரியாதைக்குரிய இடம் எப்பொழுதும் உண்டு. அதுவும் இல்லாமல் நம்ம அப்துல் கலாம், KRS, துர்கா அக்கா  மாதிரி பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வீணை வாசிக்க தெரிஞ்சவங்களா இருக்காங்க.. இது மாதிரி வீணையின் சிறப்பை எல்லாம் சொல்லிக்கிட்டே போகலாம்.
34

“என்னாச்சுன்னு தெரியலைங்க. திடீர்னு இரண்டு நாளுக்கு முன் கை, கால் ஒருபக்கமா இழுத்துக்கிடுச்சு… இப்போ பேச வேற முடியல. ஞாபகம் மங்கிட்டே வருதுன்னு சொல்றாங்க. பிழைக்கிறதே கஷ்டமாம்” – இது போன்ற உரையாடல்கள் தற்போது சர்வசாதாரணமாக கிராமம், நகரம் என எங்கெங்கும் கேட்கிறது. பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புஉணர்வு மட்டும் மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாக உள்ளது. இதனால், பலர் சரியான சிகிச்சை இன்றியே உயிரிழக்க நேரிடுகிறது.

*பக்கவாதம் (ஸ்ட்ரோக்)...
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைக்கு ஆக்சிஜன் செல்லாதபோது, மூளை செயலிழப்பதுதான் ‘பிரெய்ன் அட்டாக்’ எனப்படும் ஸ்ட்ரோக். தமிழில், `பக்கவாதம்’. மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால், மூளை செயல் இழந்து, மரணம் ஏற்படலாம்.

இளம் வயதில் ஸ்ட்ரோக்..

ஸ்ட்ரோக் பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும். இவர்கள் புகைபிடிப்பவராகவோ, மது அருந்துபவராகவோ, சர்க்கரை நோயாளியாகவோ, கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவராகவோ இருந்தால் ரிஸ்க் அதிகம். தவிர, 40 வயதுக்குள் ஸ்ட்ரோக் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. உடலில், புரோட்டின் சி, புரோட்டின் எஸ் குறைதல், `ஹோமோசிஸ்டீன்’ என்னும் அமினோஅமிலம் அதிகரித்தல், ஆன்டித்ரோம்பின் – 3 குறைதல், கார்டியோலிபின் உடலில் தங்குதல் போன்றவற்றால் இளம் வயதில் ஸ்ட்ரோக் ஏற்படலாம்.

#குழந்தைகளுக்கு ஸ்ட்ரோக்:

ஒருசில குழந்தைகள் வளரும்போது, அவ்வப்போது திடீர், திடீரெனக் கீழே விழுந்துவிடுவார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அடிக்கடி ஸ்ட்ரோக்குக்கான அறிகுறி தெரியும். சில குழந்தைகளுக்கு மூளைக்குச் செல்லும் அனைத்து ரத்தக் குழாய்களும் அவ்வப்போது சுருங்குவதால், இந்தப் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னைக்கு ‘மொயா-மொயா’ நோய் என்று ஒரு பெயர் உண்டு.

#பரிசோதனை:
உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கிரியாட்டினின், கொலஸ்ட்ரால், தைராய்டு அளவைப் பரிசோதிப்பதன் மூலம் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறியலாம்.

#சிகிச்சை என்ன...?

ஸ்ட்ரோக் வந்தவுடன் உடனடியாக ஸ்ட்ரோக் யூனிட், அவசரசிகிச்சைப் பிரிவு வசதி உள்ள மருத்துவமனைக்குச் செல்வதுதான் சிறந்தது. மூன்றரை மணி நேரத்துக்குள் சென்றுவிட்டால், அவருக்கு `இன்ட்ராவீனஸ் த்ரொம்போலைசிஸ்’ எனும் சிகிச்சை அளிக்கப்படும். இதை அளித்துவிட்டால், ஸ்ட்ரோக் வந்தவர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட முடியும். நேரம் கடந்துவிட்டால், இந்த தெரப்பி பயன் அளிக்காது. மூன்றரை மணி நேரத்தில் வர முடியாதவர்கள், ஸ்ட்ரோக் வந்த எட்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்துவிட்டால், அவர்களுக்கு `இன்ட்ரா ஆர்டிரியல் த்ரோம்போலைசிஸ்’ அல்லது `மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி’ சிகிச்சை அளித்து, உயிரைக் காப்பாற்றலாம்.

சில சமயங்களில் பின்மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு, 12 மணி நேரத்துக்குள் இந்த தெரப்பி கொடுப்பதன் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும்.
மருத்துவமனைக்கு 12 மணி நேரம் கழித்துச் சென்றால், பரிசோதனைக்குப் பிறகு மூளையின் வீக்கம் அளவிடப்படும். மூளையின் வீக்கம் அதிகமாக இருந்தால், `டீகம்ப்ரஸிவ் கிரேனியேக்டமி’ எனும் அறுவைசிகிச்சை செய்யப்படும். இதில், வீக்கம் உள்ள பகுதியில் மண்டைஓடு திறக்கப்பட்டு, வீக்கம் குறைந்த பின்னர், சில நாட்களில் அறுவைசிகிச்சை செய்தபின் மண்டைஓட்டை மூடிவிடுவார்கள். இவர்களுக்கு, கை, கால்கள், வாய் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு குறைவு. எனினும், உயிரைக் காப்பாற்ற முடியும்.

#தடுப்புமுறைகள்:

மினி ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு, அவரவர் உடல்நிலையைப் பொருத்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு, ஆஸ்ப்ரின் போன்ற ரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரை அளிக்கப்படும். உடலில் ஹோமோசிஸ்டீன் அதிகமாக இருந்தால், ஃபோலிக்அமிலம் மற்றும் மெத்தில் கோபாலமைன் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சாப்பிட்டுவந்தால், ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.

#நவீன சிகிச்சை முறைகள்:

ஸ்ட்ரோக், மினிஸ்ட்ரோக் வந்தால் தற்போது உள்ள சில நவீன சிகிச்சைமுறைகள் மூலம் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. மினி ஸ்ட்ரோக் அல்லது ஸ்ட்ரோக் வந்தால், இதயச் செயல்பாட்டை ஆய்வுசெய்ய வேண்டும். பின்னர், கழுத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய, டாப்ளர் பரிசோதனையும், சி.டி ஆஞ்ஜியோகிராபி பரிசோதனையும் செய்யப்படும். மினி ஸ்ட்ரோக் அல்லது ஸ்ட்ரோக் வந்தால், இதயச் செயல்பாட்டை ஆய்வுசெய்ய வேண்டும். பின்னர், கழுத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய, டாப்ளர் பரிசோதனையும், சி.டி ஆஞ்ஜியோகிராபி பரிசோதனையும் செய்யப்படும். பரிசோதனையில், ரத்தக் குழாய்களில் 50 சதவிகிதத்துக்கு மேல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டால், கரோட்டிட் என்டார்டெரக்டமி (Carotid endarterectomy) என்ற அறுவைசிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்படும். ஒருவேளை, கழுத்தில் இருக்கும் ஏதாவது ஒரு ரத்தக் குழாய் முழுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு மூளைக்கு வெளியே இருக்கும் ரத்தக் குழாயை எடுத்து, மூளைக்கு உள்ளே வைத்து பைபாஸ் அறுவைசிகிச்சை (Cerebaral bypass) செய்து, ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க முடியும்.

#மறுவாழ்வு சிகிச்சைகள்:

ஸ்ட்ரோக் வந்த குறிப்பிட்ட நேரம் கடந்த பின்னர், சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்டாலும், சிலரால் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கான வரம்தான் மறுவாழ்வு சிகிச்சைகள். பிசியோதெரப்பி மூலம் அவர்களை சக்கர நாற்காலியில் உட்காரும் அளவுக்கோ, தனியாக நடக்கும் அளவுக்கோ தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்படும். 60 சதவிகிதம் வரை மறுவாழ்வு சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. மறுவாழ்வு சிகிச்சைகள் மூலம் தற்போது பலர் மீண்டுவருகிறார்கள். எனவே, நம்பிக்கை இழக்க வேண்டாம்.
35

35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது.
ரோஜாவை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் சுலபமாகப் போகும். குடல்புண், தொண்டைப் புண் குணமாக்குவதற்கும் ரோஜா மலர் பயன்படுத்தப் படுகின்றது.ரோஜாப் பூவின் மணம் சளியைக் குணப்படுத்தும் ஆற்றலும், வயிற்றை சுத்தமாக்கும் இயல்பும் கொண்டது. ரோஜாவிலிருந்து தைலம் எடுக்கலாம். காது வலி, காது குத்தல், காதில் ரோகம், காதுப்புண் என்பவற்றுக்கு இத்தைலம் பயன்படுத்தப்படுகின்றது. ரோஜா இதழ்களைக் கொண்டு குல்கந்து தயார் செய்யலாம். இதனைச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெருகும், அத்துடன் அழகான உடல் அமைப்பையும் பெறலாம். அத்துடன் குருதி சுத்தமடைந்து தோலின் நிறம் பளபளப்புடன் விளங்கும். ரோஜா இதழ்களிலிருந்து சர்பத் தயார் செய்யலாம். இதை அருந்தினால் மூலச்சூடுஇ மலச்சிக்கல் குடலில் உண்டாகும் புண் இவைகளைக் குணப்படுத்தும்

ரோஜாப்பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் பிரச்சனைகளை நிறுத்தும்.
மலமிளக்கியாக செயல்படும் ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும். பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள் நீங்கும். இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும். பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து தண்ணீலை வடிகட்டி, காலையில் ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும், குடிக்கவேண்டும் ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயம் பித்த்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களைச் சேர்க்க க்கூடாது.
ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு காய வைத்த சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.
ரத்த விருத்தி உண்டாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் மலர்கள் நறுமண எண்ணெய் உடையவை. பினைல்எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜாமலரில் அடங்கியுள்ளன.
ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை(தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும்.

குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.
களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும். பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும். பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும். சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும். இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
இரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம். இதனால் ரத்த விருத்தி உண்டாகும்.
ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்
ரோஜா இதழ்களைக் கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக் கொண்டால் ருசிக்கு ருசியாகவும் இருக்கும் மருந்துக்காகவும் பயன்படும்.. நாள்தோறும் ரோஜா மலர் இதழ்களைக் கொண்டு செய்த சர்பத் அருந்தி வந்தால் முலச்சூடு தணியும். நீர்கட்டு மலக்கட்டு விலகும். உடற்சூடு தணிந்து உடல் இதமான குளிர்ச்சியைப் பெறும். ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும். காதில் கட்டி ஏற்பட்டு கடுமையான வலியுடன் சீழ் வந்தால் மின்மினிப் பூச்சியென்றை பிடித்து ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து இலேசாக சுடவைத்து காதில் இரண்டிரண்டு சொட்டுக்கள் வீதம் விட்டு வந்தால் விரைவில் உடைந்து சிரியாகிவிடும். எந்த பிரச்சனையால் சீழ் வந்தாலும் நின்றுவிடும். காதில் என்ன காரணத்தால் வலி குத்தல் இருந்தாலும் அபினியைச்சுட்டு சாம்பலாகச் செய்து அந்தச்சாம்பலை இரண்டு அரிசி அளவில் எடுத்து ரோஜா பூவினால் தயாரிக்கப்பட்ட தைலத்துடன் கலந்து இலேசாகச் சூடு செய்து இரண்டிரண்டு சொட்டுகள் வீதம் காதில் விட்டு வர வேண்டும்.
பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் குணம் தெரியும். ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து காலையிலும், மாலையிலும், சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி, பித்தக்கோளாறுகள் வெள்ளை முதலிய பிணிகள் விலகிவிடும்.
ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால், ஏற்படக்கூடிய பல்வேறு வகைக்கோளாறுகள் அகலும். சிலருக்கு காரணமின்றி அடிக்கடி தும்மல் தோன்றும். இதற்கு மேற்கண்ட முறையில் நல்ல குணம் பெறலாம்.
வாய் நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களைப்போட்டுக் கொள்வதனால் நாற்றம் நீங்கி நலம் பெறலாம்.
ரோஜா பூக்களில் இருந்து ‘அத்தர்’ எனப்படும் நறுமணம் கொண்ட எண்ணெய் எடுக்கப்படுகிறது. தாகம், ஒக்காளம், கீழ்வாய் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குணப்படுத்தவும், மலமிளக்கவும் ரோஜா பூக்கள் பயன்படுகின்றன.

ரோஜா இதழ்கள் 50 எண்ணிக்கையில் சேகரித்து அரை லிட்டர் வெந்நீரில் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த தண்ணீரில் 50 கிராம் சர்க்கரை சேர்த்து பாதியாக வரும் வரை சுண்டக்காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதில் 25 மில்லி பன்னீர் சேர்த்து 3 வேளையாக குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகி வரும்.
10 கிராம் எடையில் ரோஜா இதழ்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடி கட்டி குடி நீராக்கி, சீனி சேர்த்து குடித்தால் பித்த நோய் கட்டுப்படும். இந்த குடிநீரால் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகி வரும்.
ரோஜா குல்கந்து அற்புத மருந்து பொருள். ரோஜா இதழ்களுடன் இரு மடங்கு எடையில் கற்கண்டு சேர்த்து பிசைந்து, சிறிது தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைத்தால் குல்கந்து ஆகிவிடும். இதை காலை, மாலையில் நெல்லிக்காய் அளவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வெள்ளைபடுதல் ஆகியவை குணமாகும். ஒரு மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக இரு வேளை சாப்பிட்டு வந்தால் இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை வலுப்பெறும். சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.
குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும். மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.
36
Cine News & Movie Reviews / Middle Class (2025) Movie Review:
« Last post by MysteRy on November 25, 2025, 10:11:19 AM »

Karl Marx (Munishkanth) works in water purifier sales company and his wife is Anbu Rani (Vijayalakshmi). At some point, Karl Marx receives the cheque for one crore from a person who was loyal to Marx's father but it goes missing. What happens further, is rest of the story.

Positives: Many relatable moments, Actors performance, Cinematography.

Drawbacks: Few dull moments in second half, Few background songs are irritating.

Verdict: Watchable once with little patience.
37
yes
38
Cine News & Movie Reviews / Mask (2025) Movie Review:
« Last post by MysteRy on November 25, 2025, 10:08:59 AM »

Velu (Kavin) is running the private detective agency in chennai. Bhumi (Andrea) is managing the NGO for girls but deals much more in background. At some point, these two people path are crossed due to the big money heist. What happens further, is rest of the story.

Positives: Many engaging moments, Actors performance, BGM, Cinematography.

Drawbacks: Love track, Few dull moments in second half.

Verdict: Watchable once with little patience.
39
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on November 25, 2025, 09:59:55 AM »
40
ஆன்மீகம் - Spiritual / Re: BIBLE VERSE of THE Day ✝️ 🙏
« Last post by MysteRy on November 25, 2025, 09:58:54 AM »
Pages: 1 2 3 [4] 5 6 ... 10