Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
32
வணக்கம் RJs & DJs,

இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம்பெற்ற திரைப்படம்.



ஒரு நாள் ஒரு கனவு (2005)

இளமை, உணர்ச்சி, குடும்பம், காதல் எல்லாவற்றையும் மென்மையாக சொல்லிய ஒரு இனிய தமிழ் படம்.

நடிகர்கள்: ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால்
இயக்கம்: ஃபாசில்
இசை: இளையராஜா

கதை:

மாயாதேவி ஒரு அமைதியான, நேர்மையான பெண். சீனு ஒரு நல்ல மனம் கொண்ட இளைஞன். சிறிய புரிதல் பிழைகள், மனக்கசப்புகள், குடும்ப அழுத்தங்கள் இவர்களை பிரிப்பதாயினும், அவர்கள் இடையே உருவாகும் நம்பிக்கையும் உண்மையும் கதையை நெகிழ்வூட்டும் முடிவிற்கு அழைத்து செல்கிறது. எளிய கதை, அழகான உணர்ச்சிகள். அதுவே இந்த படத்தின் சிறப்பு.

இசையின் முக்கியத்துவம்:


இந்த படத்தின் உண்மையான உயிர் இளையராஜாவின் இசை. கதையின் உணர்ச்சிக்கு ஆழம் கொடுக்க, காதல் மற்றும் நெகிழ்ச்சியை மேலும் உயர்த்த, பாத்திரங்களின் உள்ளுணர்வை சொல்ல,
மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இசை இல்லாமல் இந்த படம் பாதியாகியும் உணர முடியாது, அவ்வளவு அழகாக ராஜா பின்னணி இசையால் கதையை தாங்குகிறார்.


இந்தப்படத்தில் எனது விருப்பப் பாடல்

“கஜுராவோ கனவிலோ” பாடல்

குரல்: ஹரிஹரன் மற்றும் ஷ்ரேயா கோஷல்
இசை: இளையராஜா
வரிகள்: பழனி பாரதி

இந்த பாடலில் காதலின் கனவுத்தன்மை, longing, மனதின் மென்மை all in one. ராஜாவின் இசை இதை ஒரு மாயாஜால அனுபவமாக மாற்றுகிறது.


இசைத் தென்றல் நிகழ்ச்சியின் RJக்களுக்கும் DJக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். FTCயின் அனைத்து நண்பர்களுக்கும், உணர்ச்சி மற்றும் காதலை மதிக்கும் அனைவருக்கும் இந்தப் பாடலை டெடிக்கேட் செய்கிறேன்.

இந்த இனிமையான பாடல் உங்கள் மனதையும் தொட்டு செல்லட்டும்

நன்றி.
34
hi..

Isai thendral team members anaivarukum en manamaarntha vazhthukal.. romba sirappa nigazhchiya kondu poreenga ..

intha varam naa kekka virumbum paadal amarkalam thiraipadathula irunthu


Padal - Satham illatha thanimai keten
padagargal - SPB matrum Sujatha mohan avargal

intha padal la vara anaithu varigalumey arumaiya than irukkum aana ennai migavum eertha varigal na athu ithan

இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன்
தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்


barathwaj avargalin isaiyila one of the best hit nu sollanum.. varigal vairamuthu..

manithanoda aazhamaana asaigal , aamaithi, anbu matrum nermai niraintha ulagathirkaana ekkathin velipaadu than intha paadal.

one of my all time fav.. i dedicate this song to myself.
36
Sangam na thalaivar irukkanum it na Evil irukkanum samyooo

Intha varam naan keka virumbum padam Mask



Naan keka virumbum paadal Vetri veerane song
 


ENAKKU pidicha lines
Asuran enbaargal
Arakkan enbaargal
Karuppan enbaargal
Adhu enga peru ma daa
Adangu enbaargal
En nilathulaye illada
Vilangugal udaithu thadagalai thagarthu
Vendru vaa vetri veernae


Gv prakash chumma adichi noruki iruparu song la
Pona varam rj mandakasayam taru maru takkali soru pannitinga dj Tejasvi nice editing



37


*அழகான ராட்சசியே*
*அடி நெஞ்சில்* *குதிக்கிறியே*

*முட்டாசு வாா்த்தையிலே*
*பட்டாசு வெடிக்கிறியே*

*அடி மனச அருவாமனையில்* *நறுக்குறியே*

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே

முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே

அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா

அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற
சுகம் சுகமா

கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே ...

*சூாியன ரெண்டு துண்டு*
*செஞ்சு கண்ணில் கொண்டவளோ*
*ஓ ஓ*

*சந்திரன* *கள்ளுக்குள்ள*
*ஊர வெச்ச* *பெண்ணிவளோ*
*ஓ ஓ*

ராத்திாிய தட்டித்தட்டி
கெட்டி செஞ்சி மையிடவோ
ஓ ஓ

மின்மினிய கன்னத்துல
ஒட்ட வெச்சுக் கைதட்டவோ
ஓ ஓ

துறவி என்னத் தொலைச்சிபுட்ட தூக்கம்
இப்ப தூரமய்யா தலைக்கு
வெச்சி நான் படுக்க அழுக்கு
வேட்டி தாருமய்யா

*தூங்கும் தூக்கம் கனவா*

கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே ...


சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சோ்ந்து ஆடும் புள்ள
புளியம் பூவே

சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சோ்ந்து ஆடும் புள்ள
மகிழம் பூவே ...

*தேன் கூட்டப் பிச்சி பிச்சி*
*எச்சி வெக்க* *லட்சியமா*
*ஓ ஓ*

*காதல் என்ன கட்சி விட்டுக்*
*கட்சி மாறும் காாியமா*
*ஓ ஓ*

பொண்ணு சொன்னா தலைகீழா
ஒக்கிப்போட முடியுமா
ஓ ஓ

*நான் நடக்கும் நிழலுக்குள்*
*நீ வசிக்க சம்மதமா*

*நீராக நானிருந்தால்*
*உன் நெத்தியில நானிறங்கி*

*கூரான உன் நெஞ்சில்*
*குதிச்சி அங்க குடியிருப்பேன்*

*காடா வீணா போனேன்*

கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா

உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற
சுகம் சுகமா ...


படம் : *முதல்வன்*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஹரிணி*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *ஏ.ஆர்.ரகுமான்
38
பொதுப்பகுதி / வெள்ளை சீனி
« Last post by RajKumar on December 03, 2025, 04:22:09 PM »


இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது...

இந்த வெள்ளைச் சீனியை
எப்படித் தயார் செய்கிறார்கள்
என்கிற விபரத்தை நீங்கள்
தெரிந்து கொள்ள வேண்டும்

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய பயன்படுத்தும் ரசயான‌ப் பொருட்களைப் பார்ப்போம்...

🌹 கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்...

🌹பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல்
70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது...
இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது....

🌹இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்....

🌹102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது...

🌹 அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப்
பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த
சாறு கிடைக்கிறது....

🌹சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது...

🌹மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது...

🌹இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது....

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது....

ஆலைகளில் தயாரான வெள்ளைச் சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இதனால் உங்களுக்கு
 சர்க்கரை வியாதியோ,ரத்த அழுத்தமோ, இதய நோயோ வராது....

அன்றாடம் உபயோகித்து
பழகி விட்ட நமக்கு
ஒரே அடியாக இந்த வெள்ளைச் சீனியை விடுவது என்பது அவ்வளவு எளிதல்ல...
ஆனாலும் தவிர்த்துக் கொள்வோம்...
40



குடையும்  நானும்

அன்றொருநாள் அந்திசாயும் நேரம் ஆசையாய் அப்பாவுடன் நடந்து நான் போகையிலே
சில்லென வீசிய காற்று சற்று
சீறிப்பாய்ந்த உணர்வு..

மழை வரும் போலயே என்று
அப்பாவின் வாய் சொல்லி மூடவில்லை
வருணை பகவான் பெய் என ஆணையிட்டார் போலும்
பத்து எட்டு பாஞ்சு நடந்து ஒரு கடையின் ஓரம்
மழைக்காய் ஒதுங்கிய தருணம்

அப்பா அந்த குடை அழகா இருக்குப்பா...
கூறிய நொடியில் அந்த குடையை
பேரம் பேசி வாங்கிவிட்டார் என் அப்பா
அன்று முதல் என்னுடன் பயணித்த அக்குடை...

பள்ளி செல்லும் பருவத்தில்
"புள்ள வெயில்ல காஞ்சு கருவாடா போய்டும் குடை புடிச்சுக்கோ'ன்னு அம்மா சொல்ல
பள்ளிப் பருவம் முடியும் வரை என் பையில் பயணித்தது புத்தகங்களோடு அந்த குடையும்....

கல்லூரி செல்லும் காலத்திலோ
'மழையில நெனஞ்சா  சளியும் காச்சாலும் வந்து அவஸ்த்தை படுவேன்மா'ன்னு சொல்லி
கல்லூரியிலும் பட்டம் வாங்க
என்னுடன் பயணித்தது அந்த குடை...

மனதில் என்ன பாதிப்போ தெரியவில்லை
பக்குவமாய் பாதுகாத்தேன் என்றுமே அந்த குடையை
பெண்ணின் திருமணத்தில் சம்பிரதாயமாக வந்த பொருட்களின் இடையில்
மறவாமல் என் குடையையும் அனுப்பியிருந்தார் என் அப்பா..

பிள்ளைகள் பெற்று பல வருடங்கள் ஓடினாலும்
ஓயாமல் என்னுடன் என்றும் இருந்தது - என் குடை
ஒய்யாரமாய் ஒரு மாலையில் ஓய்வெடுக்க
ஓரக்கண்ணில் பட்டது என் குடை..

வாழ்க்கையை நோக்கி ஓடிய நாட்களில்
அக்குடையை நான் வருத்தியது தெரியாமலேயே போனது எனக்கு
கைப்பிடி உடைந்து.. கம்பி எல்லாம் கழண்டு விழ
நல்ல நேரம் பார்க்கிறது போலும்..

வெயிலிலும் மழையிலும் பயணிக்கயிலே
என் அழகையும் ஆரோக்கியத்தையும் காத்த
என் குடையின் கருந்துணி
கலையற்று... கிழிந்து போக என்னிடம்  அனுமதி கேட்டது

"என்னால் முடிந்தவரை என் மனசாச்சிக்கு தெரிஞ்ச வரை
உன்னை நான் பாதுகாத்தேன்
எனக்கும் வயசாகி போச்சு
என்னை தூக்கி எறிந்து..என் இடத்தில்
வேறு ஒரு குடையை வாங்கி வை' என்று சொல்லாமல் சொன்னது என் குடை

நம் வாழ்க்கையும் இப்படித்தானே?
என்று என் மனசும் சொல்லாமல் சொல்லியது

என்ன தான் ஓடாய் உழைத்தாலும்
என்ன தான் பாசமழை பொழிந்தாலும்
நமக்கும் வயசாகும் காலம் வரும்
நம்மையும் தூக்கி எறியும் நாள் வரும்

நான் தான் என்பதெல்லாம்
என்றுமே நிலைக்காது
நம் இடம் என்றும் வெறுமையாய் போகாது
காலப்போக்கில் அதை நிரப்ப
வேறொருவர் என்றுமே வருவார்
என்பதை மனதில் கொண்டு

இருக்கும் இந்த நொடி மட்டுமே நிச்சயம்
அந்த நொடியை இன்பமாய் கழிப்போம்
அடுத்தவரை காக்கும் குடை போல்
இயன்றவரை பிறருக்கு உதவியாய் இருப்போம்...


இன்புற்று இரு
பிறரையும் இன்பமுறச்செய்......

Pages: 1 2 3 [4] 5 6 ... 10