31
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 394
« Last post by Shreya on January 06, 2026, 11:19:50 AM » மண் வாசனை..!
சூரியன் உதிக்கும் முன்னே அவனோ
சுறுசுறுப்பாய் எழுந்து விடுவான்
ஊரே தூங்கும் நேரம்தான்
விழி திறந்து நடந்தோடுவான்..
அவன் சேற்றில் கை வைத்தால்தான்
நாம் சோற்றில் கை வைக்க முடியும்..
சொந்த நிலம் கூட இல்லையென்றாலும்
அந்த மண்ணையே தாயாய் மதிப்பான்..!
பகலெல்லாம் சூரியன் சுட்டெரிக்க
வியர்வைத் துளி நிலத்தில் விழ..
முதுகெலும்பு வளைந்தாலும்
ஏர் பிடித்து உழைத்தே நிற்பான்..!
மழை பொய்த்தால் ஒரு கவலை..
மழை கூடினால் ஒரு கவலை..
கடன் சுமை கழுத்தை நெரிக்க
கண்ணீர்த் துளிகள் மண்ணில் வடிகின்றன..!
இயற்கை ஒருபுறம் சோதிக்க,
மனிதர்கள் மறுபுறம் வதைக்க..
ரத்தமெல்லாம் வியர்வையாய் சிந்தும் இவன்
உலகுக்கே உணவளிப்பவன்..
இன்றும் ஏழ்மையில்
வாடுவது கொடுமையல்லவா?
நாள் முழுதும் உழைத்த நிலத்தில்
இன்று முத்துச்சரமாய் நெல் மணிகள்..
வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள்
வீடு வந்து சேரும் பொன்னாளே..!
பானை சுற்றிய மஞ்சள் கொத்து
நம் வாழ்வில் மங்கலம் சேர்க்கட்டும்..
புதிய அரிசியின் வாசனையில்
வறுமை விலகிப் போகட்டும்..!
கரும்பின் இனிப்பைப் போலவே
அவன் வாழ்க்கை மாறட்டும்..
விளைந்த பயிருக்கு நல்ல விலை
அதுவே விவசாயி காணும் பெரிய பொங்கல்..!
உழைக்கும் கரங்கள் உயரட்டும்
உழவர் திருநாள் சிறக்கட்டும்
பானையில் பொங்கல் பொங்கட்டும்
வானம் மும்மாரி பொழியட்டும்
மண் வாசனை எங்கும் பரவட்டும்
இனிதாய் மகிழ்ச்சி பெருகட்டும்..!
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!!!
சூரியன் உதிக்கும் முன்னே அவனோ
சுறுசுறுப்பாய் எழுந்து விடுவான்
ஊரே தூங்கும் நேரம்தான்
விழி திறந்து நடந்தோடுவான்..
அவன் சேற்றில் கை வைத்தால்தான்
நாம் சோற்றில் கை வைக்க முடியும்..
சொந்த நிலம் கூட இல்லையென்றாலும்
அந்த மண்ணையே தாயாய் மதிப்பான்..!
பகலெல்லாம் சூரியன் சுட்டெரிக்க
வியர்வைத் துளி நிலத்தில் விழ..
முதுகெலும்பு வளைந்தாலும்
ஏர் பிடித்து உழைத்தே நிற்பான்..!
மழை பொய்த்தால் ஒரு கவலை..
மழை கூடினால் ஒரு கவலை..
கடன் சுமை கழுத்தை நெரிக்க
கண்ணீர்த் துளிகள் மண்ணில் வடிகின்றன..!
இயற்கை ஒருபுறம் சோதிக்க,
மனிதர்கள் மறுபுறம் வதைக்க..
ரத்தமெல்லாம் வியர்வையாய் சிந்தும் இவன்
உலகுக்கே உணவளிப்பவன்..
இன்றும் ஏழ்மையில்
வாடுவது கொடுமையல்லவா?
நாள் முழுதும் உழைத்த நிலத்தில்
இன்று முத்துச்சரமாய் நெல் மணிகள்..
வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள்
வீடு வந்து சேரும் பொன்னாளே..!
பானை சுற்றிய மஞ்சள் கொத்து
நம் வாழ்வில் மங்கலம் சேர்க்கட்டும்..
புதிய அரிசியின் வாசனையில்
வறுமை விலகிப் போகட்டும்..!
கரும்பின் இனிப்பைப் போலவே
அவன் வாழ்க்கை மாறட்டும்..
விளைந்த பயிருக்கு நல்ல விலை
அதுவே விவசாயி காணும் பெரிய பொங்கல்..!
உழைக்கும் கரங்கள் உயரட்டும்
உழவர் திருநாள் சிறக்கட்டும்
பானையில் பொங்கல் பொங்கட்டும்
வானம் மும்மாரி பொழியட்டும்
மண் வாசனை எங்கும் பரவட்டும்
இனிதாய் மகிழ்ச்சி பெருகட்டும்..!
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!!!

Recent Posts


