Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
34
பயண கட்டுரைகள் - NATURE AND TRAVEL / Rome Bucket List
« Last post by MysteRy on March 10, 2026, 02:49:22 PM »
36
38

வேற்றுமையில் ஒற்றுமையா ?
==========================================

பூந்தோட்டத்தில் அடுக்கடுக்காய் பாத்திக்கட்டி
பல வித மலர்களை பத்தியம் போட்டு
மண்ணின் பதம் பார்த்து.. நீர் பாய்ச்சி..
பக்குவமாய் பயிர் வளர்த்தேன்...

நாட்கள் செல்ல செல்ல பூச்செடி..
பயிர்கள் யாவும் வளமுடன் செழித்து..
பல வண்ண வண்ண பூக்கள் மலர்த்திருக்க..
நானும் மனதினில் கர்வம் கொண்டேன்..

சரி,
இன்று நாம்..நம்ம தோட்டதை காணலாமென
எண்ணம் எழ, மனமகிவுடனே.. கிளம்பினேன்..
ஆனந்த பெருமிதம்.. என் மனதில்  ஊஞ்சல் ஆட.
ஒவ்வொரு பாத்தியாக மலர்ந்திருந்த மலர்களை பார்த்தேன்.

என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை..
அவ்வளவு கொள்ளைஅழகு வயல்முழுவதும்.
நடந்து வந்து கொண்டிருந்த பொழுது... என் பின்னே
யாரோ கிசுகிசுப்பது போல் ஓர் உணர்வு..

அங்கே திரும்பி பார்த்தேன்... அதிர்த்தேன்..
செந்நிற வண்ண மலர்களுக்கு இடையில்..
தன்னந்தனியான ஒற்றை வெண்ணிற மலர்..
கிசுகிசுப்பது மலர்களா? அருகினில் சென்றேன்..

செந்நிற மலர்களில் ஒன்று சொன்னது- நீ வேறு
நிறமானாலும்.. எங்களுடைய நீர்நிலத்தை ..
உனக்கு பங்கிட்டு கொடுத்து உதவி இருக்கின்றோம்..
பார்த்தாயா? என்றது சொன்னது செருக்குடனே..

வெண்ணிற மலரோ பதிலளித்தது-இது
உன்னால் அல்ல.. விவசாயியின் தவறால்..
அவரின் கவனசிதறலே..  நான் இங்கே..
உன் கருனை பேச்சு எனக்கு தேவையற்றது..

நம் கூடத்தில் ஒருவராக அரவணைத்து
கொண்டாலும்.. இதற்க்கு நன்றியில்லையே..
இம்மலர், நம் நல்ல மனதை புரிந்து கொள்ளாது..
இப்படி நம் மனம் புண்பட பேசுகிறதே.. எரிச்சலுற்றது..
 
நாற்றுகளின் தன்மையறியாது.. தவறாக..
பாத்தியில் நடவுசெய்தது என் தவறே.
மலர்களின் உரையாடலில்.. ஒன்றுமட்டும்
என் மனதை இரணமாய் கிழித்தது..

ஏதோ ஒரு காரணமாய், தன் இனம்விட்டு
தன் நிலம்விட்டு, இடம்பெயரும் மனிதர்களை..
நாம்  எங்கனம் நடத்துகின்றோம்.. யோசித்தேன்..
நம்முள் ஒருவராக.. நினைத்தோம்? அரவணைத்தோமா?

அந்நியர்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம் என்றே
இறுமாப்பில் இருக்கின்றோமே - செந்நிறமலர்போல..
வெண்ணிற மலரின் கூற்றுப்படி.. நம் எண்ணம் தவறல்லவா?
என் அழுகடைத்தே சிந்தனையை எண்ணி.. நாணி நின்றேன்

நம் எண்ணத்தை வளமுள்ளதாக மாற்றுவோம்...
வேற்றுமையில் பாகுபாடு, பிரிவுகள் இல்லா.. ஒற்றுமை காண்போம்...
நம் எண்ணத்தை தூய்மையாக்கி..  சமமாக வாழ்வோம்..
சமத்துவமே உயிர்நாடியாக வாழ்த்து காட்டுவோம் 

 
39
Happy Birthday my dear Sammandhi! May all your dreams come true and you achieve more success in life. Stay healthy, happy and blessed



Happy Birthday Raghu. May all your dreams come true and you achieve more success in life. Stay healthy, happy and blessed

40
(குழந்தை):
அம்மா! அதோ பாருங்களேன்
அழகிய சிவப்புத் தோட்டம்!
வானம் கூடக் கருப்பா இருக்கு
பூக்கள் மட்டும் ஏன் சிவப்பா இருக்கு?
​எண்ணிப் பார்த்தேன், முடியலைம்மா
ஏகப்பட்ட பூக்கள்!
ஒரே மாதிரித் தலை ஆட்டுது..
ஒரே மாதிரிச் சிரிக்குது!

​(அம்மா):
ஆமாம் கண்ணே..அது ஒரு கூட்டம்!
ஒரே மாதிரி இருப்பது தான் சுலபம்!
யார் என்ன சொன்னாலும்..அதை
தலையாட்டி ஏற்பது தான் வழக்கம்!

​(குழந்தை):
ஆனா அம்மா..அங்கே பாருங்களேன்
அதிசயம் ஒன்று தெரியுது!
சிவப்பு பூக்களுக்கு நடுவிலே
சிறு வெண்ணிறப் பூ ஒன்று மின்னுது!
​அம்மா..அந்தப் பூவுக்கு பயமில்லையா?
யாரும் அது கூட இல்லையே?
தனியா நிற்க வருத்தப்பட்டு
அது அழுதிடாதா அம்மா?

​(அம்மா):
இல்லை பாப்பா..கவனித்துப் பார்
அது அழுதுகொண்டு இருக்கவில்லை!
சிவப்புப் பூக்களுக்கு நடுவிலே
அது சிரித்துக் கொண்டு தான் இருக்கிறது!
​பறக்கும் அந்தப் பறவையை கேள்
அதற்கு அந்த வெண்பூவைத் தான் பிடிக்கும்!
ஏனென்றால்... ஆயிரம் பூக்கள் நடுவே
அது மட்டும் தான் தனித்து தெரியும்!

​(குழந்தை):
ஆமாம்மா... இப்பத்தான் புரியுது!
சிவப்புப் பூக்கள் எல்லாம் நிலத்தைப் பார்க்குது!
ஆனா அந்த வெள்ளைப்பூ மட்டும் தான்
அண்ணாந்து வானத்தை பார்க்குது!
​அம்மா..எனக்கும் ஒரு ஆசை!
எல்லோரும் ஒரு பக்கம் ஓடினாலும்
நான் மட்டும் அந்த வெண்பூவைப் போல
என் பாதையை நானே தேடிடுவேன்!

​(அம்மா):
ஆம் என் செல்லமே!
அடையாளம் தொலைத்த
ஆயிரம் சிவப்பு பூக்களை விட
அடையாளம் காட்டும் அந்த ஒரு வெண்மை
அழகு மட்டுமல்ல..அது தான் வலிமை!
தனித்து நின்றாலும் தலை நிமிர்ந்து நில்!
உன் புன்னகை தான் உனது அழகு!
வெள்ளைப்பூப் போல நீயும் மலர்ந்தால்
உன் வசமாகும் இந்த உலகம்!!!
Pages: 1 2 3 [4] 5 6 ... 10