Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31
*சளி, சைனஸ் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் பிரமர முத்திரை...*

*செய்முறை*

ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து,

மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும்.

இவ்வாறு தினமும் 15 முதல் 25 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

*பயன்கள்*

மனிதனது உடலில் உள்ள ஒவ்வாமை,

பயங்களைப் போக்கவல்ல அற்புத சக்தி கொண்டது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

தொற்றுகள் ஏற்படும்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படுகின்ற வயிற்றுக் கோளாறுகள்,

சளி, சைனஸ் போன்ற தொல்லைகளுக்கும் இது நிவாரணம் தரும்.



*சைனஸ்...*

மூக்கு, சைனஸ் (எலும்புக்குழிகள்), தொண்டை, சுவாசக்குழாய்கள், இவற்றின் உட்படை வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு உண்டாகும் தொற்று ஜலதோஷம்.

பல வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன. அவற்றில் முக்கியமானது ரைனோ வைரஸ் (Rhino virus). இதிலேயே நூறு வகை வைரஸ்கள் உள்ளன.

ரைனோ வைரஸ் தான் பெரும்பாலான ஜலதோஷத்திற்கு காரணம்.

மூக்கில் நுழைந்த வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்க 1 லிருந்து 30 எண்ணிக்கைகள் போதும். வைரஸ் பெருகி மூக்கின் பின் பக்கமாக, அடினாய்டுகளில் படியும். தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தோன்ற 1 லிருந்து 3 நாட்களாகும்.
உடலுக்குள் ஜலதோஷ வைரஸ்கள் நுழையும் வாசல் மூக்கு தான்.

கண்கள் வழியாகவும் கிருமிகள் நுழைந்து, கண்ணீரின் வடிகால்கள் வழியே மூக்கின் பின்பாகத்தை அடையும்.

ஜலதோஷம் வழக்கமாக வாட்டுவது 7 நாட்கள். சில சமயங்களில் 14 நாள்கள் வரை நீடிக்கும்.

சளி கெட்டியாக பச்சை நிறத்தில் ஒழுகினால், அதில் “இறந்த” வைரஸ், திசுக்கள், பாக்டீரியாக்கள் இருப்பதால், ஜலதோஷம் முடியப் போவதின் அறிகுறி.

முடிந்து விடாமல் தொடர்ந்தால் “சைனஸ்” தொற்றாக இருக்கலாம்.

ஒரு தடவை ஜலதோஷத்தால் தாக்கப்பட்டால் நோயாளி எந்த வைரஸ் தாக்கியதோ அதற்கு நோய் எதிர்ப்பு உடையவராகி விடுவார்.

விட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும் – குறிப்பாக குளிர்காலங்களில் காலையிலும், மாலையிலும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வரவும்.

ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்காமல் இருப்பது.
சிகிச்சை

ஜலதோஷத்திற்கு என்று தனிப்பட்ட மருந்து என்று ஏதும் கிடையாது

அறிகுறிகளின் உபாதையை குறைப்பதற்கும், சிக்கல்கள் வராமல் தடுக்க மட்டுமே மருந்துகள் தரப்படுகின்றன.

ஆன்டி – பையாடிக் மற்றும் ஆன்டி – வைரஸ் மருந்துகள் பலன் தராது தவிர இவற்றின் பக்க விளைவுகளும் அதிகம்.

*வீட்டு வைத்தியம்*

அடைபட்ட மூக்கை திறப்பதற்கு சிறந்த வழி ‘ஆவி பிடிப்பது’. ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் நீரை விட்டு, அதிலிருந்து எழும் நீராவியை நுகரவும். துவாலையால் முழு நீராவியும் முகத்தில் / மூக்கில் படுமாறு, தலையை மூடிக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் மூலிகைகள்  போட்டு நுகரலாம். வெங்காயம் அல்லது பூண்டை நசுக்கி போடலாம்.

சுக்கு, மிளகு, துளசி போன்றவற்றை சமஅளவு எடுத்து டீ ’ போல  பருகி வர ஜலதோஷம் விலகும். இதை தினம் (ஜலதோஷம் இருக்கும் போது) 2 (அ) 3 முறை எடுத்துக் கொள்ளலாம்.

காலையிலும், இரவும் சூடான பாலில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி, சிறிதளவு சுக்கு, மிளகு, திப்பிலி தூள்கள் சேர்த்து பருகி வர ஜலதோஷம் குறையும்.

வெறும் பால் + மஞ்சள்பொடி அல்லது நீர் + மஞ்சள் பொடி கூட போதுமானது. பாலில் குங்குமப் பூ சேர்த்து பருகினாலும் நல்லது.

மூக்கில் சளி கொட்டினால் வெற்றிலைச் சாற்றில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தும்மலும் குறையும்.

இஞ்சிப்பொடி, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை – இவை ஒவ்வொன்றும் 1/2 தேக்கரண்டி எடுத்து, ஒரு சிட்டிகை கிராம்புப் பொடியுடன் சேர்த்து ஒரு கப் கொதி நீரில் இடவும். 10 நிமிடம் ஊறிய பின், வடிகட்டி நீரை குடிக்கவும். இதை தினம் 3 (அ) 4 தடவை குடிக்கலாம்.

நாம் வழக்கமாக பருகும் தேநீரில் 3 (அ) 4 துளிகள் இஞ்சிச் சாறு விட்டு குடிக்கலாம். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.

வெங்காயத்தின் ஒரு பெரிய துண்டை ஒரு கிண்ணத்தில் போட்டு, மிளகுப் பொடியை (ஒரு தேக்கரண்டி) தூவி இவற்றின் மேல் கொதிக்கும் நீரை விடவும். 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு இந்த நீரை இளம் சூட்டில் குடிக்கவும்.

சூடான அல்லது வெது வெதுப்பான நீரை அடிக்கடி குடிக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

இஞ்சி சாற்றுடன் சம அளவு தேன் கலந்து தினமும் 1/2 தேக்கரண்டி தினமும் இரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

துளசிச்சாறு + ஒரு கைப்பிடி ஆடாதொடை இலைகளின் சாறு தினமும் 1 தேக்கரண்டி வீதம் 3 நாட்களுக்கு சாப்பிடவும்.

ஆடாதொடை வேர் – 30 கிராம், துளசி இலைகள் 20 கிராம், சுக்கு 5 கிராமும் எடுத்து இவற்றை 1 லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும். கால் பாகமாக (250 மி.லி.) தண்ணீர் சுருங்கும் வரை காய்ச்சவும். இதில் 60 மி.லி. எடுத்து, தினம் 4 வேளை குடிக்கவும். இதை 3 நாட்கள் செய்யவும்.

அகஸ்திய ரசாயனம் – இதை இரண்டு வாரத்திற்கு உணவுக்கு பிறகு 1 தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

ஜலதோஷம் ஏற்பட்ட உடனேயே, விட்டமின் சி அதிக அளவு எடுத்துக் கொண்டால், ஜலதோஷத்தின் தீவிரம் குறையும். மறுபடியும் வருவதை தவிர்க்கலாம்.

32
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on December 02, 2025, 11:32:06 AM »
33
ஆன்மீகம் - Spiritual / Re: BIBLE VERSE of THE Day ✝️ 🙏
« Last post by MysteRy on December 02, 2025, 10:51:05 AM »
34
Step 1 — Install XAMPP
Installing  XAMPP Refer this link
https://friendstamilchat.in/forum/index.php?topic=56554.0

Step 2 — Download SMF
https://download.simplemachines.org/


Step 3 — When installing Simple Machines Forum (SMF) locally (or on a server), you must match the PHP version in your XAMPP (or other PHP environment) to what SMF requires — otherwise you will likely see installation or runtime errors.



Step 4 — Start XAMPP & Click Admin Button


Step 5 — Check XAMPP PHP Version



Step 6 — Extract SMF installer zip to XAMMP path



Step 7 — Create new user to acess db








Step 8 — Stat SMF Installer from browser







Step 9 — Take an  db backup



Step 10 — SMF Install Completed Test it from browser



35
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on December 02, 2025, 06:23:49 AM »
37
மழை…ஓர் நாள்

அது வானத்தின் கண்ணீரோ
இல்லை
வறண்ட பூமியின் ஆனந்த கண்ணீரோ

சில நேரம் மழை
சிறு புன்னகை போல
சிறு சிறு துளிகளாக மண்ணை
முத்தமிடும்

சில நேரம்
யாரோ தனது சோகத்தை
சிறுக சிறுக மேகமாய் சேமித்து வைத்து
ஓர்நாள் கொட்டி தீர்க்கிறதோ
மண் மேல் என தோன்றும்

சிலரது வாழ்க்கை
மழை இல்லாமல்
வறண்டு போகும்
சிலரது வாழ்க்கையிலோ
அளவுக்கு அதிகமாய்
அவர்களையே மூழ்கிட செய்யும்

மழை பெய்கையில்
குழந்தை மனது
பள்ளி விடுமுறையை எதிர்பார்க்கிறது
முற்றத்தில் தேங்கிய நீரில்
விளையாடி துள்ளி குதிக்கிறது

தாயின் மனமோ அதை ரசிக்கிறது
சூடாய் பஜ்ஜி பக்கோடா செய்து தர
முற்படுகிறது

தந்தைக்கோ
விடுமுறையில்லா நாளாக
குழந்தையாய் இருந்தபோது ரசித்ததை
அசைபோட்டு ஒரு பயணம்

விதை விதைத்து
மழைக்காக காத்திருக்கும்
விவசாயிக்கோ
மண்ணை மட்டுமல்ல
மனதையும் குளிர்விக்கும்

தினக்கூலி செய்பவருக்கோ
பட்டினியில் ஒரு நாள்
அழையா விருந்தாளியாய்
மழைநீர் வீட்டுக்குள்

அரசுக்கோ
திட்டமிடாத
மழை நீர் சேகரிப்பு குழி போல
சாலையெங்கும் தேங்கும் நீர்
அசம்பாவிதம் ஏதுமின்றி -வடிந்திட
அயராது உழைக்கும்

மழை விட்டு சென்ற
ஒவ்வொரு துளியிலும்
விதைகள் முளைக்கின்றன
மனிதரின் ஒவ்வொரு கண்ணீரிலும்
புதிய உறுதி முளைக்கிறது.

அளவோடு பெய்தால்
செழிப்பாய் வளரும் பயிர்கள்
அதிகமாய் பெய்தால்
அழிந்திடும் உயிர்கள்

அது மழைக்கு மட்டுமல்ல
மனித உணர்வுகளுக்கும் பொருந்தும்.
.


***Joker***

38
மழைத்துளியில் அவளின் நினைவு..!

காரிருள் மேகங்கள் ஒன்றாக கூடி
மனதின் ஓரத்தில் ஒளிந்திருந்த
நினைவுகளை எழுப்பி விட்டது மழை..!

காரிருள் குடைச்சிறகின் மீது
வெள்ளித் துளிகள் முத்தமிடும் நேரம்
உலகமே புதிதாய்த் தெரிகிறது..!

தென்றலாய் வீசும் குளிர் காற்று
மேனியை தழுவும் வேளையில்
என்னவளின் நினைவுகளில் என் மனதோ
ஆனந்த ராகம் பாடி மகிழ்கிறது..!
 
மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்ற
தோன்றிய அத்தனையும் அவளின்
நினைவுகளை சுமந்து கண்களில்
மழைத்துளிகளாக மண்ணில் விழுகிறது..!

மண்ணில் விழும் ஒவ்வொரு துளியும்
புதியதாய் முளைத்த புதுக்கவிதையாய்
மீண்டும் மீண்டும் தோன்றும் அவள்
என் மனதில் ஒரு வானவில்..!

மழையின் கீதமும் நனைந்த மண்வாசமும்
ஆழ் மனதின் கதவை திறக்க
கனவுகள் கண்முண்ணே காண
என்றும் புதிய மழைத்துளி அவள்..!

அடைமழையில் குடையின் கீழ் நின்றாலும்
மனது மட்டும் மழையில் நடமாட
காற்றோடு சேர்ந்து துள்ளி குதித்து
கவிதை வரிகளாக என்னிடம் அவள்..!

கருமேகம் காற்றில் கரைந்தாலும்
நீல வானம் மேற்கில் தோன்றினாலும்
தோகை மயிலின் நடனமாக
கார்குழலிசையாக என்றும் அவள்..!

மழை நின்ற பின்னும் கூட
இதயத்தில் சுவாசமாய் அவளின் நினைவு
படபடக்கும் பட்டாம்பூச்சியாய் 
என்றும் மனதில் பறக்கிறாள் அவள்..!

இது மழையால் மட்டுமே அல்ல
என்மனவானில் அவள் ஒரு சூறாவளி
அவளின் பாச மழையில்
அடித்து செல்லபட்ட என்மனம்
அன்பெனும் கடலில் சேரும் நேரமிது..! :)
39
மெல்லிய சினுங்கல்களும் மிகை மிஞ்சிடும்
மனதோரத்து களிப்பில்..

வரும் பொழுது வாகை சூட ஏங்கிடும்
 மண்ணோடு மண்டியிட்ட மானிடனுக்கு..

மழலையும் ஸ்ருதி பாடிடும்
 அவ்வளவு அருமை
மண்ணோடு அடைக்களம் புகும்
சிறுதுளி மழைத்துளியில்.

மண்ணிற்கும் மனதிற்கும் புத்துணர்வாய்,
தாகம் தீர்க்கும் தீர்த்தமாய் ,
விவசாயிகளின் இதழ் ஓர
ஒரு சிறு புன்னகையின் காரணியாய் மழை.
உன்னால் இந்த பூமியும் குளிர்ந்து
 காற்றும் குளிர்ந்து
அந்த மாயாஜால வித்தையில் மனமும் குளிர்ந்திடும்..

மழைத்துளிகளை எவ்வளவு கொஞ்சிட எண்ணினாலும்
 அதன் சிறு துளியில் தன்னைக் காக்க
அதற்கான தடுப்பாய் குடை ஒன்றினை
ஏந்தாமலும் இருந்ததில்லை..

வரண்ட நிலத்தையும்
பசுமையாக்கும் சக்தியும் மழைக்கு உண்டு
அதுபோல் பசுமை பொங்கும் நிலத்தையும்
புதை குழியாக்கிடும் வல்லமையும் உண்டு..

அழகில் தானே ஆபத்து அதிகம் உண்டு அல்லவா??!

அரண்மணை வாயிலில்
பாதுகாப்புக்கென அமைக்கப்பட்ட அரண்களையும்
அரை நொடியில் அள்ளி வீசும் அளவிற்கு
ஒரு சிறு துளி ஒன்றிணைவதன் துயரும் எட்டிடும்.

இயற்கையோடு பலரையும் பிண்ணிப்பிணைத்திடும் மழையே, இயற்கையென்றால் ஆபத்தும் நிறைந்திருக்கும் என்பதை
 நிரூபிக்காமல் இல்லை
 

வாய் வார்த்தைகளால் மொழிந்திடவும் முடியவில்லை
 கண்ணீரால் கரைத்திடவும் இயலவில்லை
 எத்துனை சேதங்கள் எத்துனை உயிர்கள்..

பிராணிகளும்
மானிடங்களும்
பிணங்களாய் அள்ளப்பட்ட கொடூரம்..

பிஞ்சுகளின் அழகிய புகைப்படங்களும்
அடிக்கடி வலைத்தளங்களில் பரிமாறப்பட்டு
பலரின்  உள்ளத்தையும் உடைவுக்குள்ளாக்கிய கோரம்..

எதனை சொல்வது ?
எத்துனை சேதங்களை குறித்து நிற்பது...
ஓர் உயிருக்காய் பல உயிர்களின் போராட்டத்தையா??
 பல உயிர்கள் போராடினும் காக்க முடியாமல்
பரிபோன உயிர்களையா??
போதும் என்று சொல்லி இயற்கையோடு
கைகூப்பி நிற்கும் நிலையினை உருவாக்கி விட்டது.

திடீரென இடம்பெற்ற சீற்றம்
பல உயிர்களை  சூரையாடினாலும்
இன்னும் பல உயிர்களுக்கு பல்வேறு பாடத்தையும்
கற்றுக்கொடுக்கத்தான் செய்திருக்கிறது..

மனித நேயமும் இன்னும் பலரில் மாண்டு விடவில்லை
நேரம் வரும் போது புலப்படும் என்பதும்,
இயற்கையை இயற்கையாகவே கையாள்வது சிறந்தது
அதற்குள் செயற்கைகளை புகுத்தி வேடிக்கை பார்ப்பதும்
உகந்ததல்ல என்பதுவும் எமக்குணர்த்திய பாடங்களாகும்.[
40
   "உதவும் கரங்கள் குடை பேசுகிறேன்...."


இங்கிலாந்து நாட்டில் ஓர் அற்புதமான கட்டடம் தான் எனது பிறப்பிடம்!
இயந்திரம் மூலம் எலும்புகளாக கம்பிகளும்,என் தோலாக கறுப்பு துணியினால் போர்த்தி வடிவமைக்கப்பட்டேன்!-என்
இரும்புக் கால்கள் தான் மானிடன் கரம் பற்றும் உன்னத அங்கம்!
இணைபிரியாத நண்பர்களாக பல வண்ணங்களில் ஜொலித்தவாறு வண்டியில் ஏற்றப்பட்டோம்!

எமது வருகைக்காக காத்திருந்தார்கள் வர்த்தகர்கள்!
எங்களை பணம் கொடுத்து வாங்கி,பத்திரமாய் கண்ணாடி அலமாரிகளில் அடுக்கி வைத்தார்கள்!
என் கறுப்பு அழகில் மயங்கிய தேவதை என்னை அவள் வீட்டுக்கு அழைத்தாள்!
எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், என் நண்பர்களை பிரியும் துக்கத்துடனும் சென்றேன்!

அவள் என்னை செல்லமாக " குடை" என அழைத்து ,வீட்டில் உள்ள எல்லோருக்கும் காண்பித்து மகிழ்ந்தாள்!
அந்த அரக்கி அடுத்த நாளே என்னை ஒரு மூலையில் போட்டுவிட்டு,வேலைக்குப் போக தயாரானாள்!
அங்குமிங்குமாக என் மனம் அலை பாய்ந்தது!
அழுதேன் என் தனிமையை எண்ணி!

முழங்கியது இடி,வானம் இருண்டு மழை சோ....எனப் பொழிந்தது!
முணு முணுத்தவாறே "என் குடை எங்கே?"ஓடி வருகிறாள் அந்த அரக்கி!
முழித்தவாறே அவளுடன் பயணிக்கத் தொடங்கினேன்!
முதன் முதலாக என் மேனியில் பட்டுத் தெறித்தன முத்தான மழைத்துளிகள்!
முற்றுமுழுதாக நான் நனைந்து என் தேவதையை காப்பாற்றினேன்!

என் மேனியில் பட்டு வழிந்தோடும் மழைநீரை இரசித்தேன்!
எட்டி வானத்தைப் பார்க்கும் போது ஏழு வர்ணங்களில் வானவில்லை இரசித்தேன்!
எட்டுத்திசையிலும் எல்லோர் கைகளிலும் என் நண்பர்களைப் பார்த்து இரசித்தேன்!
என் காதுகளில் ஒலித்த வானிலை அறிக்கை " தொடர்ந்து கனமழை" என்பதை இரசித்தேன்!
என்னை இனி தேவதை தனிமையில் விட்டுச்செல்ல மாட்டாள் என மகிழ்ச்சியில் சிரித்தேன்!

என் அன்புத் தோழன் மழை ,ஏனென்றால் அவன் வரும்போது தான் சந்தோசமாக நான் வெளியில் நடமாடுவேன்!
என் தோழன் சிலவேளை என்மீது கோபம் கொள்வான் ,சீக்கிரமாக கடலை அடைய நான் தடுக்கிறேன் என்று!
என் எலும்புகளை உடைத்தெறிவான் கூடா நட்பு புயலுடன் சேர்ந்து!

கடவுள் முதல் காதலர்கள் வரை..
மன்னர் முதல் மகளீர் வரை..
குழந்தை முதல் முதியவர் வரை..
சிறு வர்த்தகத்திற்கு கூரையாக ..
வீடு இல்லாதவனுக்கு புகலிடமாக
வெயில்,மழை இரண்டிலும் காப்பாற்றுவது
"குடை "நாங்கள் தானே !

என் படைப்பின் அர்த்தம் புரிந்து பெருமிதம் கொள்கிறேன்!
என்னை விரித்து பயன்படுத்தும் போது என்னை நேசியுங்கள்!
எனக்குள்ளும் ஒரு அழகிய ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது....
என்னை உடைத்து எறியாதீர்கள்....ஏனெனில் உதவும் கரங்கள் நாங்கள்...






Pages: 1 2 3 [4] 5 6 ... 10