Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31
கவிதைகள் / நான் பதியும் இடம்
« Last post by Luminous on December 13, 2025, 08:17:03 PM »
கவிதை எழுதத் தெரிந்தது
எனக்கு பெருமையல்ல
அதை
எங்கு பதிய வேண்டும் என்று
தெரியாமல் இருந்ததே
என் மௌனப் போராட்டம்.

இப்போது,
எங்கு பதிய வேண்டும் என்பதை
கற்றுக்கொண்டேன்.
அதனால்
நான் பதியும் இடம்
கவிதையின் தளமாக மாறினால்,
அது ஆணவமல்ல.

அது
தேர்ந்தெடுத்த உயரமல்ல
வீழ்ந்துகொண்டே
அளந்த ஆழம்.

சிலருக்கது
சிறு ஆணவமாகத் தோன்றலாம்
ஆனால்
அடி சருக்கும் என்று
தெரிந்தபடியே
நான் முன்னே வைக்கிறேன் என் பாதங்களை.

ஏனெனில்,
வீழ்வதற்குப் பயந்தவன்
கவிதை எழுதமாட்டான்
வீழ்ந்தபின்பும்
எழுந்து நிற்பவனே
கவிதையாய் மாறுவான்.

இது ஆணவமல்ல,
முயற்சியின்
அடையாளம்.
LUMINOUS 💗✌💯
32
கவியின் வரிகளில் கூர்மையும் ஆழமும்
தெளிவாகப் புலப்படுகிறது,

அண்ணா
33
நாம் சொல்வது பிறரைச் சேர வேண்டும் எனில் எனில் அதற்கான அறிவையும் இடத்தையும் நாம் அடைய வேண்டும் என்று உணர்த்தியவர் ! உலகம் வியக்கும் கல்வியாளன் ..  Jai beem !

Super poem mappie 🤩
34
Rombha azhaga irukku Sago... Padikavum rasikavum 🌛
35

"சாதாரணத்தின் இருவேறுபாடு”
நான் 🙋‍♀️
நீ சொல்லுவாய் என்ற நம்பிக்கையில்
சாதாரணமென விட்டுச் சென்றேன்…🤷‍♀️

நீயோ 🙋‍♂️
சொல்ல வேண்டுமென்ற பொறுப்பை
சாதாரணமென விட்டுவிட்டாய்…🤷‍♂️

இரண்டும் ஒரே சொல்லே தான் — சாதாரணம்🤔
ஆனால்
ஒன்றில் நம்பிக்கை பேசுகிறது,💯💜
மற்றொன்றில் உதாசீனம் மௌனம் காக்கிறது.✌
LUMINOUS 🧘‍♀️
36
GENERAL / Re: Joker's Short Messeges
« Last post by joker on December 13, 2025, 02:16:30 PM »
I stopped explaining myself when
i realized people only understand
from their level of perception
37
சிலரோடு ஒப்பிடும்போது
வெற்றியடைகிறோம்

சிலரோடு ஒப்பிடும்போது
தோல்வியடைகிறோம்

எவரோடும் ஒப்பிடாதபோது
மட்டுமே மகிழ்ச்சியடைகிறோம்
நிரந்தரமாக
38
ஓர் அழகிய நிலவொளியில்
காதலின்
மெல்லிய உரையாடல்களில்
சிக்கிப் பின்னிக்கிடக்கும் வேளையில்
யாரோ ஒளிந்து நோக்குவது போல
ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு
புன்னகையால் பதிலளித்து கொண்டிருக்க
வெட்கத்தால் என்னை அணைத்துக்கொள்ளும்
அவள்

உன் மயக்கும் பார்வைகளிலும்
பாரிஜாத மலரின் மணம்
பொழியும் உடலுக்குள்
இழுத்தணைக்கும் போது
எரியும் ஆசைகளை
மெல்ல விளக்குகிறேன்

தூரத்தில் ஒலிக்கும்
அழகிய பாடலின்
இரு வரிகளோடு
இருவரின் சுவாசங்களும் மெல்ல
காற்றில் கலந்து கொண்டிருந்தன

எத்தனை முறை கண்டும்
மீண்டும் மீண்டும் காண துடிக்கும்
நிலவை போல அவள் முகம்
என்னருகில்

சிறு இடைவெளி அளித்து
இருளுக்குள் மெல்ல மூழ்கும் வானம்
நேரமாயிற்று என
என்னவள் என்னை பிரியும் நேரம்

மேகத்தினூடே மெல்ல
எட்டிப்பார்க்கும் நிலவு போல
தூரத்தில் சென்ற என்னவள் மெல்ல
திரும்பி பார்க்கையில்
ஆத்ம திருப்தியின்
அமைதியான
புன்னகை
நிலைத்திருந்தது
மனதில்



****Joker****

39
General Wallpapers / Re: Sky Pics 🌄🌅 and Nature Pics🌿🌳
« Last post by Ishaa on December 13, 2025, 01:51:12 PM »
Good morning -
 the unexpected moment is always sweeter
40
கவிதைகள் / Re: ❤️❤️ திமிர் ❤️❤️
« Last post by joker on December 13, 2025, 12:27:39 PM »
பல பெண்களின் மனதின் வெளிப்பாடு அழகிய கவிதையாய்

"என்னால் முடியும்" என்ற எண்ணம் என் கரங்களை பற்றிக்கொண்டது

தொடர்ந்து எழுதுங்கள்
Pages: 1 2 3 [4] 5 6 ... 10