Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31
மறக்க முடியாத teacherனா அது என் LKG tuition காலத்து கலா மிஸ் தான். LKG ல இருந்து 9th வரை நான் almost lifeல பாதி tuitionல தான் இருந்தேன்.

Schoolக்கு ஒரு tuition, வீட்டுக்கிட்ட இன்னொரு tuition, இப்படி rendu place. Reason பெரியதா எதுவும் இல்ல, நான் கொஞ்சம் vaalu nu, “engayachum adachi vachikanum” nu mummy, paati plan 😄

அந்த tuition lifeல கலா மிஸ் ரொம்ப special. Avanga graduate இல்ல, ஆனா LKG இருந்து 12th வரைக்கும் students எல்லாரையும் super ah handle பண்ணுவாங்க. Strict ஆ இருப்பாங்க… ஆனா அதுக்குள்ளே romba careவும் இருக்கும்.

Fridayனா class இல்ல, handwriting practice மட்டும். என் handwriting decentஆ இருக்கு என்றா, அது mostly கலா மிஸ் credit தான். தவறு பண்ணா கண்டிப்பாங்க, ஆனா  எப்படி correct பண்ணணும் nu calmஆ சொல்லி குடுப்பாங்க.

நான் பேசுறதுல first rank 😅… அதனால sema adi vaangi இருக்கேன். ஆனாலும் பேசுறது குறையல 😂. அதுக்குத்தான் என்ன leader ஆ வைச்சாங்க. யாரு பேசுறாங்கனு note பண்ணி சொல்லணும்… ஆனா நான் “deal” பண்ணுவேன் 🤭 pen, chocolate, sticker குடுத்தா name எழுத மாட்டேன். Periya class pasanga கூட என்ன பார்த்தா bayapaduvanga… எனக்கு romba jolly 😄

Lateஆ போனா கூட scold பண்ணாம, “saptiya?” nu கேட்டு tiffin குடுப்பாங்க. அந்த care… இன்னும் மறக்க முடியல. Avanga veetu coffee 😍 இன்னும் taste நினைவுல இருக்கு.

Sundayல கூட tuition இருக்கும்… literally என் childhood பாதி அங்கே தான் போச்சு. Ayudha poojai வந்தா snacks, birthdayனா notebooks, pen, chocolates, gifts—எப்பவும் something special.

Avanga oru teacher மட்டும் இல்ல… konjam strict amma, konjam akka மாதிரி. Small kids கிட்ட romba softஆ பேசுவாங்க… பெரியவங்களையும் handle பண்ணுவாங்க.

Honestly சொல்லணும்னா, நான் இப்ப teaching professionல இருக்கேனா அதுக்கு main reason கலா மிஸ் தான். “Teacherனா இப்படித்தான் இருக்கணும்” nu எனக்கு first idea குடுத்தது அவங்க தான்.

இப்பவும் ரொம்ப miss பண்ணுறேன்… 💜
Avanga strictness, care, love… எல்லாமே இன்னும் mindல freshஆ இருக்கு.love youuuu💙🧡💜 KALA  akkaaaaaa🌹🌹🌹🌹
34
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on April 03, 2026, 09:21:15 AM »
35
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on April 03, 2026, 09:16:59 AM »
36
Grade 6-ல நான் படிச்ச girls school-ல இருந்து திடீர்னு mixed school-க்கு எங்க அப்பா transfer வாங்கி கூட்டிட்டு போனார். மனசு முழுக்க பயத்தோடவும் ஏகப்பட்ட கலக்கத்தோடவும் புது கிளாஸ்க்குள்ள போன எனக்கு, அப்பா கையை பிடிச்சு கூட்டிட்டு போய் அறிமுகப்படுத்துன அந்த முதல் முகம் தான் - என் அன்பரசி டீச்சர்.

அழுத்தமான குரல், அழகான நேர்த்தியான சேலை, நீண்ட கூந்தல், அமைதியான முகம்னு எங்க அம்மாவோட 'cloning' மாதிரி இருந்த டீச்சரை பார்த்ததுமே எனக்கு 'பச்சக்குனு' பிடிச்சுருச்சு.

இயல்பாவே எனக்கு கதை, நாடகம்னா ரொம்ப பிடிக்கும். அதனால தானோ என்னவோ பாடங்களை கூட கதை மாதிரி சுவாரசியமா சொல்ற டீச்சர், என் மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டாங்க. அவங்க சொல்லிக்கொடுத்த விதம் எங்க மனசுல தமிழை மட்டும் விதைக்கல; பெண்ணியம், நம்ம மண்ணோட வரலாறு, புராணங்கள்னு எல்லாத்தையும் சேர்த்து தான் விதைச்சது. இப்ப நினைச்சாலும், அன்னைக்கு ரெட்டை பின்னல் போட்டுக்கிட்டு, கிளாஸ் ரூம்ல back bench-ல உட்கார்ந்து கண் இமைக்காம அவங்க சொல்ற சீறாப்புராணம், பாஞ்சாலி சபதம், ஷாஹினா கிழவி கதைகளை கேட்ட அந்த காலங்கள் அப்படியே மனக்கண் முன்னாடி வருது.

பாட நேரத்துல மட்டும் இல்லாம இலக்கண போட்டி, பேச்சு போட்டி, விபுலாநந்தர் தினம், தமிழ் தினம்னு ஏதாவது ஒரு சாக்குல ஸ்கூல் முடிஞ்ச அப்புறம் கூட டீச்சரோட நிறைய டைம் spend பண்ணுவேன். Weekend-ல டியூஷன் கிளாஸ்னு அவங்க வீட்ல தான் நானும் என் Friends  துவாரகா, யாதவனும் 'டேரா' போடுவோம். அவங்களோட மகன்களான ரெண்டு அன்பான தம்பிகள், அப்புறம் தமிழ்ல பெரிய ஆளுமையான அவங்க கணவர் (Sir), இவங்களோட நாங்க செலவழிச்ச அந்த தருணங்கள் ரொம்பவே நெருக்கமானது.

அவங்க என்கிட்டயும் என் நண்பர்கள்கிட்டயும் வெறும் ஆசிரியரா மட்டும் பழகல. எங்க திறமைகளை கண்டுபிடிச்சு அதை encourage பண்ற வழிகாட்டியா, என்ன பிரச்சனைனாலும் தயங்காம பேசக்கூடிய ஒரு தோழியா, வாழ்க்கையில சில இழப்புகள்ல நான் உடைஞ்சு நின்னப்போ அம்மாவோட இடத்துல இருந்து என்னை தாங்குன அரணா அவங்க இருந்திருக்காங்க. இன்னைக்கு நாங்க பிரண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா கூடி அரட்டை அடிச்சாலும், அதுல ஒரு தடவையாவது டீச்சரை பத்தின பேச்சு கண்டிப்பா வந்துடும்.

சொந்த பிள்ளைங்க மாதிரி எங்களோட வெற்றிகளை கொண்டாடுறதுலயும், எங்க ஆக்கங்களை பாராட்டுறதுலயும் அவங்களுக்கு நிகர் அவங்க தான். ஒரு தடவை நான் எழுதின 'சிவாஜி' பட விமர்சனத்தை, ஜூனியர் கிளாஸ் பசங்களுக்கெல்லாம் காட்டி பாராட்டுனாங்கனு பிற்காலத்துல அந்த பசங்க சொல்ல கேள்விப்பட்டப்போ எனக்கு ரொம்பவே ஆச்சரியமா, நெகிழ்ச்சியா இருந்தது.

வேலை காரணமா அவங்க வெளிநாட்டுக்கு போயிருந்தாலும், இன்னைக்கு அவங்ககிட்ட போன்ல பேசும்போதும் அதே "செல்லம்", "குட்டி"னு தான் கூப்பிடுவாங்க. அவங்ககிட்ட பேசும்போது தான் புரியுது, எனக்குள்ள இன்னும் அந்த ஸ்கூல் பொண்ணு அப்படியே வாழ்ந்துட்டு இருக்கான்னு!

மொத்தத்துல, பக்கத்துல இல்லனாலும் எங்க நினைவுகள்ல நீங்க வாழ்ந்துட்டு தான் இருக்கீங்க. என் டீச்சர் அன்புக்கு மட்டும் இல்ல, அறிவுக்கும் அழகுக்கும் கூட அரசி தான். எப்ப "உங்களுக்கு பிடிச்ச teacher யாரு?"னு கேட்டாலும், யோசிக்காம நான் சொல்ற ஒரே பேரு - அன்பரசி டீச்சர் .



37
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (03-APR-2026) wishes 🎁 to our lovable friend ⭐ Mr. BLACK PANTHER ⭐ and wishes him Good Luck.


38
ஹாய் எஃப் டி சி நண்பர்களே இன்றைக்கு பார்த்தீங்கன்னா நம்ம நெஞ்சம் மறப்பதில்லை தலைப்புல எனக்கு பிடித்த ஆசிரியர் யார் என்று கேட்டால் நான் என்னோட மனைவி என்று தான் சொல்லுவேன். ஒரு மனிதனுக்கு கடவுள் என்று பார்த்தால் "மாதா பிதா குரு தெய்வம்மென்று சொல்லுவாங்க" அந்த அடிப்படையில் பார்த்தால் மனிதனின் வாழ்க்கையில் ஆசிரியர் ஒரு முக்கிய பங்காக இருக்காங்க.

    அந்த வகையில என்னோட மனைவியும் ஆசிரியர் என்பதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. அவங்க பள்ளிக்கூடத்தில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. என் மனைவி சொல்வது என்னவென்றால் "ஆசிரியர் என்பவர் கல்வியை கற்றுக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல ஒவ்வொரு மாணவருக்கும் ஒழுக்கம் என்பது அடிப்படை தேவை .அதன் பின்பு தான் கல்வி " என்பதை தெளிவாக சொல்லுவாங்க.

    அடுத்தபடியாக அவங்க சொல்வது என்னவென்றால் "நேரம் தவறாமை "என்பது நம் வாழ்க்கையில் ஒரு முக்கிபங்கு என நான் உணர்த்துவேன் மாணவர்களுக்கு. இதன் மூலம் மாணவர்களுக்கு பிற்காலத்தில் அலுவலகத்தில் குறித்த நேரத்தில் மணிக்குச் சென்று பணியை முடிக்க இந்த பழக்கம் உதவுகிறது என்று என்னிடம் கூறுவார் .இதையே எனக்கும் என் குழந்தைக்கும் எடுத்துக் கூறுவார் .

   பிறகு மாணவர்களிடம் ரொம்ப அன்பாகவும், மரியாதையாகவும் பழக வேண்டும் என்பதை தெளிவாக கூறுவார். பிறகு ஆசிரியர்கள் கல்வி மற்றும் கற்றுக் கொடுக்காமல் ,வாழ்க்கைக்கு தேவையான வாழ்வியல் பாடங்களை கற்றுக் கொடுப்பதன் மூலம் மாணவர்கள் சிறப்பாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து வாழ்வியல் பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவேன்என கூறுவார் .

   வகுப்பில் பலவீனமான மாணவர்களை படிக்க வைப்பதற்காக தெளிவான நோட்ஸ்களை இரவு ,பகல் பாராமல் எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று பலவீனமான மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவார் .அது மட்டுமா எனது குழந்தைக்கு தெளிவாக பாடங்களை கற்றுக் கொடுப்பார் .

   வரலாறு பாடம் யாருக்கு கடினமாக உள்ளது என்பதை அறிந்து அவர்களுக்கு மிகச் சிறப்பாக தெளிவு படுத்துவார். பள்ளியில் நடக்கும் பாட்டு போட்டி ,பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகிய போட்டியில் கலந்து கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துவார். ஏதாவது ஒரு மாணவர் பங்கேற்கவில்லை என்றால் அவர்களை ஊக்கப்படுத்தி அவரை போட்டிகளில் பங்கேற்க வைப்பது எனது மனைவியின் சிறப்பம்சம் .

   இதுபோல பள்ளிகளிலும் சரி வீட்டிலும் சரி இத்தகைய அறிவையும் ஒழுக்கத்தையும் கொடுத்த "எனது மனைவியே எனக்கு பிடித்த ஆசிரியர்" .இப்படி ஒரு வாய்ப்பு அளித்த எப் டி சி team kum நெஞ்சம் மறப்பதில்லை ப்ரோக்ராம்க்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி🙏🙏🙏
39
பிடித்த ஆசிரியர் பற்றி சொல்லனும்னா...

 எனக்கு அப்போ 8 வயசு இருக்கும். அவங்க மத்தவங்கள மாதிரி வெறும் பாடம் நடத்த மாட்டாங்க. அவங்க நாடகமும் சொல்லி கொடுப்பாங்க. எனக்கு இந்த ஆசிரியர முதல பிடிக்கவே பிடிக்காது ஏன்னா எல்லோர் முன்னாடியும் பேச பயம், யார்கிட்டேயும் பேசவும் மாட்டேன். ரொம்ப silent பொண்ணு நா..ஆனா விதி எனக்கு அந்த ஆசிரியர் கிடைக்கணும் ன்னு இருந்திருக்கு. அவங்க காலைல பாடமும் மதியம் நாடகமும் கத்து தந்தாங்க.  ஒரு 6 கதை கொடுத்தாங்க. ஒவ்வொரு கதை வரும் போதும் யாரு என்ன character வேணும் ன்னு கேட்டாங்க. ஒவ்வொரு student ம் இது வேணும் அது வேணும் ன்னு கேட்பாங்க. நாலாவது கதைல நா எதுவும் எடுக்கலையான்னு கேட்டு ஒரு கேரக்டர் கொடுத்தாங்க.

கொஞ்ச நாள் பிறகு ஒரு மதியம் எல்லா கதையும் படிச்சுட்டு இருந்தோம்.  நா இருந்த கதையில நிறைய கெட்ட வார்த்த இருந்துச்சு ன்னு ஆசிரியர் கவனிசாங்க. படிக்க படிக்க சரியா வரலான்னு அந்த கதைய வேணாம்னு எடுத்துட்டாங்க. எல்லோரும் சம்மதிசுடாங்க. என்னால வாய திறக்க முடியல.அவங்க சாதாரணமாக பேசுனாலே சத்தமா பேசுவாங்க, அதனாலேயே ஆசிரியர் திட்டுவாங்களோ ன்னு ஒன்னுமே சொல்லல. நா எந்த கதையிலும் இல்லன்னு யாரும் கவனிக்கல நானும் சொல்லல. யார்கிட்டையும் அதிகம் நா பேச மாட்டேன் அதனால என் மேல யாருக்கும் சந்தேகமும் வரல.

ஆனா ஒரு நாள் break time ல ரெண்டு பேரு எந்த கதையில நா இருக்கேன்னு கேட்டாங்க. தெரிஞ்சுட்டே தான் கேட்டாங்களா ன்னு தெரியல. நா பதில் சொல்ல முடியாம இருக்க break உம் முடிஞ்சு class க்கு போய்டோம். திடீர்னு class ல அவங்க ரெண்டு பேரும் நா பொத்தி பொத்தி வச்ச ரகசியத்த சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல, நடுங்கிருச்சி.
அவளவு தான் என் கதை முடிஞ்சுடுச்சு ன்னு நினைச்சேன். ஆனா என்ன teacher திட்டவே இல்ல. அது எனக்கு பெரிய அதிர்ச்சி எப்பவுமே திட்டுறவங்க திட்டலன்னு. வந்து சொல்லிருக்கலாமல.... அப்படின்னு அன்போடு தான் சொன்னாங்க. அப்போதுல இருந்து தான் எனக்கு அந்த டீச்சர பிடிச்சுது.

எனக்கு புதுசா ஒன்னுக்கு ரெண்டு கதைல நடிக்கிற போல character கொடுத்தாங்க. எடுத்த உடனே நா தான் முதல பேசணும்... எனக்கு அது ஒரு சந்தோஷம். பிடிக்காத ஒரு விஷயத்த பிடிச்சு பண்ணேன்.

இதுல நா ரெண்டு பாடம் கத்துக்கிட்டேன்.
ஒண்ணு யாருமே கெட்டவங்க இல்லன்னு புரிஞ்சுது. Teacher கிட்ட சொன்னவங்க எனக்கு friends ஆகிட்டாங்க.

இன்னொன்னு எனக்கு இருந்த பயம் போச்சு. என்ன இருந்தாலும் இப்போ எல்லோர் முன்னாடியும் பேசுனா அடுத்த நிமிஷம் எல்லோரும் கடந்து போயிடுவாங்க. அதுக்கு ஏன் பயப்படனும் ன்னு ஒரு தைரியம். அந்த வயசுக்கு அந்த புரிதல கத்து தந்த என் ஆசிரியருக்கு நன்றி சொல்லிக்கிறேன்...
40
    என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆசிரியர் என்று சொன்னால் அது என் அன்பான அம்மா தான்.அம்மா  என் முதல் குரு.குழந்தைப்பருவத்தில் "அம்மா சொல்லு" "அப்பா சொல்லு " "அண்ணா சொல்லு" என   எனக்கு தாய்மொழி தமிழ் சொல்லித்தர ஆரம்பித்தாங்க.நான் மழலைமொழியில் தமிழ் பேசுவதை முதன்முறையாக கேட்டு இரசித்து புன்னகை பூத்திட்ட குரு அம்மாதான்.

  எங்கள் பாடசாலையில் ஆங்கில மொழிக்கல்வியே.இருந்தும் இடைவிடாது அம்மா கூறுவார் "தமிழ் மொழியை மதிக்கனும் மறக்ககூடாதுன்னு".குழந்தைப்பருவத்தில் தமிழ்மொழியில் தாலாட்டுப்பாடி என்னை தூங்கவைப்பார்.தமிழ் இலக்கியக் கதைகள், புராணக் கதைகள் என்று கூறிக்கிட்டே இருப்பாங்க.

    அம்மா ஸ்ரீலங்காவில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்திருந்தாங்க.எனக்கு தமிழ் எழுத்துக்கள் கற்றுத் தரும் போது நான் சொன்னது "அம்மா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது எங்க டீச்சருக்குத்தான் எல்லாம் தெரியும்".அப்போது அம்மா கூறுவாங்க "நான் எவ்வளவு பிள்ளைகளுக்கு படிப்பித்தேன்.என் பிள்ளை என்னைக்கேட்டு படிக்கவில்லை என்று ".அப்போ "ஹாஹா ஹாஹா"ன்னு சிரிப்பேன் அம்மா டீச்சரா இருந்தாங்களாம் என்று.

  "என்கிட்ட கேட்டு படிக்கிறாள் இல்லை" என்று சொல்லி அம்மா என்னை தமிழ் பாடசாலையில் சேர்த்துவிட்டார்.ஒவ்வொரு சனிக்கிழமை தவறாது பாடசாலைக்கு செல்வேன்.அங்கே தமிழ்ஆசிரியர் தமிழ் எழுத்துக்களை எழுதவைத்தார்.நான் அழகாக எழுதுவதைப் பார்த்து "யார் உனக்கு சொல்லிக் கொடுத்தாங்க "அப்படின்னு கேட்டாங்க.நானும் பெருமிதத்துடன் எங்க அம்மா என்று சொன்னேன்.தமிழ் ஆசிரியர் என்னைப் பாராட்டினார்.

   அம்மா என்னை அழைத்துச்செல்ல பாட சாலைக்கு வரும் போது, தமிழ் ஆசிரியர் கூறினார் "உங்கமகள் நல்லா எழுதுறாங்க" என்று.அம்மா பதிலளிப்பதற்கு முன்னதாக நானே முந்திக்கிட்டு சொன்னேன் "எங்க அம்மா தமிழ் டீச்சர்தான் என்று".அப்படியா என்று ஆசிரியர் கேட்க அம்மா கண்கள் ஆனந்தக் கண்ணீரில் மிதந்தன.

    ஒருநாள் தமிழ் பாடசாலையில் கவிதை போட்டி இடம்பெற்றது.அம்மாவிடம் கேட்டு எதுவும் கற்றுக்கிட்டு போகவில்லை.என்னோட நண்பர்கள் எல்லாரும் மனனம் செய்துவிட்டு வந்திருந்தாங்க.அதைக் கேட்டு என்மனதில் ஒரு பதற்றம்.நானும் அம்மாவைக் கேட்டு ரெடி பண்ணிட்டு வந்திருக்கலாம்.. என் மனதில் எண்ணஅலைகள்..
கவிதைக்கு வழங்கப்பட்ட தலைப்பு "அன்பு".
எனக்குத் தெரிந்த கவிவரிகளில் எழுதினேன்.தயக்கத்தில் அம்மாவிடம் எதுவும் கூறவில்லை.அக்கவிதைக்கு எனக்கு முதலிடம் கிடைத்தது.அப்போது தான் புரிந்து கொண்டேன் அம்மா சொன்ன தமிழ்மொழியின் பெருமை.

   என் அண்ணாவுக்கு தமிழ் கற்பதில் ஆர்வம் குறைவு.அம்மா புத்தகம் முழுவதும் வாசித்து தமிழ் சொல்லிக் கொடுத்துட்டு இருப்பாங்க.அண்ணா டிவி பார்த்துகிட்டு இருப்பாங்க .அம்மா நடுவுல கேள்வி கேட்பாங்க அண்ணா கிரகிக்கிறானா? என்று பார்ப்பதற்காக.அண்ணா பதில் கூற மாட்டான். அதற்கான பதிலை நான் உடனே கூறுவேன்.அண்ணாக்கு அடியும் எனக்கு பாராட்டும் கிடைக்கும்.இதைப் பார்த்து அப்பா சொல்லுவாங்க "என்னோட  பொண்ணு படிக்குது உன்பையன் படிக்கிறான் இல்லன்னு".அம்மாக்கு இது வேற கோபத்தை கொண்டு வரும்.எனக்கு இதெல்லாம் பார்க்க சந்தோசமாக இருக்கும்.

   அம்மா கொடுத்த தமிழ் அறிவும், ஊக்கமும் தான் என்னை தமிழ் மொழியில் டிப்ளோமோ கற்று முடிக்க வைத்தது.தமிழில் நன்றாக பேச வைத்தது.தமிழ் நிகழ்வுகளில் பங்குபெற வைத்தது.அம்மா தன் சிரமம் பார்க்காமல் தமிழ் மொழிப் போட்டிகளில் என்னை கலந்து கொள்ள வைப்பாங்க.இப்படி ஒரு தமிழ் குரு எனக்கு அமைந்தது பெருமையே..

   அம்மா எனக்கு சமய விழுமியங்கள்,தமிழ் கலாச்சாரம்,வாழ்க்கைத் தத்துவங்கள் சொல்லிக் கொடுத்த அன்பான ஆசான்.அம்மா சொல்லிக் கொடுத்த தமிழ்தான் இன்று என்னை ftcயில் இவ்வளவு தமிழ் பேச உத்வேகமாக இருக்கின்றது.அன்னையும் நீயே!அஞ்ஞான இருளை நீக்கி மெஞ்ஞான ஒளியைத் தந்த என் ஆசானும் நீயே!

   உன்னை என் வாழ்க்கையில் "மறக்க முடியாத ஆசிரியர்" என்று நினைவு கூறுவதில் பெருமை கொள்கின்றாள் உங்கள் "அன்பு மகள்" "சிறந்த தமிழ்மாணவி" தேன்மொழி..

Pages: 1 2 3 [4] 5 6 ... 10