Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31
Happy happy birthday yazhini
32
Happiee happieee returns of the day my sweet Chellam vairam thangam sweetheart dear darling.. apdi ellam solven naneichiyaa NOOO (pvt la konjikulam 😂😂) u are my one and only enneeemyyyyyyyyy 😈😈😈

En chella ennemy Iniku nee romba rombave happy aa irukanum and ipo mathume ila epayume than ♥️♥️ I wish uu all the happiness success luck, good moments .. everything u love ♥️♥️
Ethula arambikanum nu terila because avlo moments un kooda share panirken ♥️ even one year Kooda agula..

Nee vantha puthusula Enaku normal aa terinja oru person.. ( ipo abnormal agita 😂) ipo replace pana mudiyatha aalavuku irukra ♥️
my first moment with u, en memory padi...  Enaku un name uhm Yaazhnila name uhm confuse achuu.. athu unkitaye main la sonen.. fun aa 🙆‍♀️ athuve terilayaa nu vachu pichita enaye anike 😂
Ana apo la Irunthu than enaku terium enoda little ennemy en mela romba pasam and possesive aa iruka nu.. ♥️
Intha whole chat laye athigamana possesive vachirka aale nee than 😂ethana adi  chlm solita, hug panita nu .. but I don't mind 🫂epome nee en Chella enneemy naa ur Chella kirimii ♥️ i love this bond a lot.. athu epayume marunthuratha.. matavanga kooda pesuren nu unaya vidave Maten chlm.and athe pola insecure aa thonuchuna or sad aa ve irintha en pvt Unaku open aa Irukum always as usual 🫂🫂
Ennemyy unaya romba pudikum daa matavanga unaya kandukulaina kandukatha I will always be there for you ♥️ me snake naama ss rani and your loveruhh boy Ellam irukanga.. ♥️
I know u vanthu ennaya vida perya papa nu.. 😂 but Enaku  my little sister or kozhantha pola iruka. Advikk Akka nu solrathe 😂 comedy aa iruku enaku sila Neram
Un mela enaku rare aa possessive vanthurku but poiduthu vantha vegathulayee yenna nee epayume Ena vitu kuduthathe ila and pesama ponathum ila i'm always grateful for that love ♥️
Epo chat vanthalumee nama emoji potu nane wc pana marunthalum or delay panalum.. wc pani enaya kupduva.. tag pana than tag panra person la nee tag panulainalum pesura Enkita ♥️ i love uu for that unlimited love care.. Athukunu oru word Ellam Ila.. en Kita attitude or ego ve kathama vanthu vanthu pesura oru loveable jiven my lovely sweet..
Nama love emoji my favorite yarkagavum kuduthathe ila..athukagave Unaku nu kuduthuthen and I promise yarkitayum use Panula nu  :-X but song Ku mathume apo apo pothukuven ;D

you active aa irukumm bothu night la enkoodayum spike koodayyum vibe panuvom.. 🤭 namaku nu extra FM sema songs night time la calm aa ilaina comedy a apdiye Pogum..😂 or poison vachi elar profile ayum poison paniduvom 🤣🤣 Miss those moments ♥️ but ipo night la pradeepa polaye 😂 dice aa uruthi mute Agidra..
Vara poravanga Ellam avangale summa irunthalum neeya vambu ilupaaa🤣🤣 unmute panu solungaa nu or avanga sirichale Pothum  unmute ana odaney adipa 😂 ithula mam vanthu silent ahmm 🤣🤣🔪🔪  yarachu oruthara sola soludaa deii.
enaku athu Elam Semma fun ur mood status padichale siripu thanga mudiyathuu.. ithula sattam Ilama sirikrathu romba kashtam da deiii  night time la 😂😂 enaya paithiam ne fix agiduvanga.

Mute oru Pakkam Inonu nama game one dice vachuu ithula enakunu ethana ring 😍i think nee mathum than avlovum kuduthurpa nu.. ana poison Ada pavingalaa naa bathuku sivaney nu Irunthen 1000 + kuduthuthinga elaruma sernthu 👊


 Un status la enaku epome edham kuduthurka..  u prefer feu than me.. ( en melaye enaku possesive agirku koduma koduma )un koodaa spend pana time athu precious teriumaa.. en Kitaye enaya pathi porali solitu iruntha 😂😂  but it was fun and apo than our  bonding inum strong aa achu.. Iniku feu ilainalum always ur Kirimi kooda irupa... Irupen. Apo apo disappointing sanda nu vanthalume vitu poga maten ennemy ♥️
Night time la nee varum bothu athukulayee nee poidriya nu oru mari irukum athunalayee.. namaku Intha song suit agum " inum konjom neram iruntha than Enna.♥️♥️♥️" And u are right nama song athu.

Main la naa nee pradeepa drizzle VenMaThI spike auto Karan advikk  nu yaru irunthalume nama settai adangunathe Ila 🤣🤣 main uc kanukula speed aa Pogum one beka beka nu siripom ilaina adichipom... rendume bayangrama irukum Ethuku sirikrom adikrom nu ooruke terira aluvuku 😂😂
Yarachu aadu sikita pothume atha vachu adichu thovachu maduchu oda vaikra varaikum kalaipom 😂

Ana u a really talented girl naa soli than teriyanumnu ila ou pics vantha odaney poitu kavithai eluthuna and nenjam marapathilai la nice story ♥️
 but antha ticket edukama Poitu fine vanguniyee paaru vera level 😂😂🤣🤣🤣
Athayum thandi triple track challenge Semma combo 3 RJs uhm kalakutingaa well done  and u deserve that position 🏆
Deii ora oru request apo apo PGM la kalanthuko, voice podu nee payen ne nambiduven pola 😂 ponnu voice kethathum neeyaa nu shock aguren.😁😁

Apo apo beer 🍻 adika ennayum drizzle aa yum kupdra deii deiii 😂 vita wine shop Gali paniduva polaa. Nejamave nee oru adapavi than daa 😂 silent ye ila.
Aprom pasangaa Kita Chocolat aa Poitu thurudi sapduriye daa ayooooo 😂🤣🤣 pavom da antha pinji manasuu.
Night vantha rendu thing one nee enaku venum athunala unayaa poga solave Maten ana second thing ur health Drizzle  aruva eduthuthu varuvanga enaya Poitu unayaa Thunga sola Solvanga 🤣 🤣 namale Thunga mathom ithula namale advice panuvomaaa 😂 but nanumee thorathuven apo apo health is important ennemy ♥️ take care of yourself.

Nerya things mix pani marunthu wish paniten ithula ethana typo irukumo teachereyy vanthu poison potrathaa 😂


Once again happieeest bday da my Chella ennemyyyyy ♥️♥️ always be happy keep smiling always and loveeeeee uuu soooooooo muuuuuuch MY ENNEMYY 🥰🥰🥰🥰🥰♥️♥️♥️

34
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (20-Jan-2026) wishes 🎁 to our lovable friend ⭐ Ms. YAZHINI ⭐ and wishes her Good Luck.


35

ஒரு காலத்தில்
மனிதன்
தெய்வங்களைத் தேடவில்லை
ஒளியை மட்டுமே
வணங்கி வந்தான்.

இருள்
அவனுக்குப் பயம்,
அந்தப் பயத்தில்
பிறந்தது அவனின்
முதல் தெய்வம்
சூரியன்.

வெளிச்சம் இருந்தால்
பாதை தெரியும்,
வாழ்க்கை நகரும்,
நம்பிக்கை வளரும்.

பிறகு…

மனிதன்
உருவம் தேடி
வழிபாட்டை
நோக்கி நகர்ந்தான்.

கல்லில் மஞ்சள் பூசி,
மரத்தில் சிவப்பு துணி கட்டி,
மண்ணில் சிலை வடித்து,
அங்கே பிறந்தது
மக்களுக்கான தெய்வங்கள்.

பிறகு…
மழைக்கு மாரியம்மன்,
திசைக்கு அய்யனார்,
நோய்க்கு கருப்பசாமி என
மனிதன்
தன் தெய்வங்களுக்கு
மனித உருவம் தந்தான்.

இவை
பயத்தால் வந்த
தெய்வங்கள் அல்ல,
இவை
நம்பிக்கையின் முகங்கள்.

“உருவம் ஏன்?”
என்று கேள்வி எழுந்த போது,
வழிபட
மனிதனுக்கு
ஒரு முகம் தேவைப்பட்டது.

அது தன்னைப் போல
உருவம் இருந்தால்
அன்பு கொள்வதற்கும்,
பயம் குறைவதற்கும்
எளிதாக இருக்கும் என்று
தன் முகத்தை
தெய்வங்களுக்கு தந்தான்.

“நமக்கு மேலே
ஒருவர் இருக்கிறார்”

என்ற எண்ணமே
அவனை
ஒழுக்கத்தின் பாதையில்
நடக்க வைத்தது.

அப்போதெல்லாம்
கோயில் இல்லை,
நன்கொடை இல்லை,
பூசாரி இல்லை.

மனிதனின்
இதயமே கருவறை,
மனிதனின்
பக்தியே பூஜை.

ஆனால் இன்று…

பெரிய கடவுள்களின்
வருகையால்
பக்தி
வணிகமாகிவிட்டது.

பணம் இருந்தால்
வழிபாடு,
இல்லையெனில்
அவமதிப்பு.

பக்திக்குள்
சாதி புகுந்தது,
கடவுள்கள் மனிதனை
பிரிக்கும் ஆயுதமானது.

மறந்துவிட்டோம்
மண்ணின் வாசம் கொண்ட
சிறு தெய்வங்களை.

மக்கள் தெய்வங்கள்
“நீ உயர்ந்தவன்”
“நீ தாழ்ந்தவன்”
என்று சொல்லவில்லை,
அவை சொன்னது
ஒன்றே ஒன்றுதான்
“நல்லவனாய் இரு.”

தெய்வங்களும், கடவுள்களும்
மனிதனால்
உருவாக்கப்பட்டவை,
அதை வைத்து
மனிதனை இழிவுபடுத்த
அவற்றை பயன்படுத்தாதே.

மூடநம்பிக்கை விட்டு
அறநெறி பிடித்து,
சுயஒழுக்கம் வளர்த்து
மனிதனே
மனிதனுக்கான
தெய்வமாக
மாறட்டும்.

நம்பிக்கை
ஒளியானால்
வாழ்வு பிரகாசிக்கும்
அதே நம்பிக்கை
மூடநம்பிக்கையானால்
முன்னேற்றம்
சிறைபடும்.

சூரியன்
தந்தையின் தோள்போல்
உலகம் முழுதும்
வெளிச்சம் சுமக்கும்.

பூமி
தாயின் மடிபோல்
எல்லா விதைகளையும்
அன்பாய் அணைக்கும்.

மழை
கருணையின் குரல்,
வறண்ட நெஞ்சங்களில்
உயிர் ஊற்றும்.

காற்று
உயிரின் மூச்சு,
கண்ணுக்குத் தெரியாமல்
உலகை தாங்கும்.

இந்த இயற்கையே
நமக்கான
உயர்ந்த
மக்கள் தெய்வங்கள்.

இயற்கை சீற்றம் கொண்டால்
உலகம் தாங்காது,
அதன் முன்
எந்த சக்தியும்
நிற்காது.

இயற்கையை வணங்குவோம்,
வாழ்வில் உயர்வு காணுவோம்.


36
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-002

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

“திருவிழா கொண்டாட்டம்”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠Starting next week onwards, participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.
37
கண்ணுக்கு தெரியாத தெய்வத்திடம்
நடமாடும் தெய்வத்தின் கையேந்தல்...
எதை எதிர் நோக்கி
இந்த யாசகன் கோலம்...
சுயநலமற்ற அந்த இதயத்தின்
உருக்கம் யாருக்காக...
நிச்சயம் அவளுக்காக அல்ல...

இடுப்பெலும்பு உடைய
தன் மக்களை ஈன்றவள்...
உதிரத்தை அமுதாக்கி
தன் சிசுவின் உயிரை வளர்த்தவள்.
ஞாயிற்று கிழமையும்
விடுமுறை அறியாதவள்...

தன் மழலையின் மகிழ்வுக்காக
கோமாளியாக உருமாறியவள்...
தன் பிணியிலும் ஓய்வின்றி
குழந்தைகளின் பசியாற்றியவள்....
பல பணிகளின் மத்தியிலும்
சோர்வின்றி சுழன்றவள்....

கந்தல் துணியாக
தன் தேகம் மாறினாலும்...
சுருக்கங்களின் அணிவகுப்பாக அவளின்
தோல் காட்சி அளித்தாலும்..
அவளின் இதய அரங்குகளில்
சுரக்கும் அன்பிலும்
ஒளியிழந்த கண்களில்
ஒளிர்ந்து மிளிரும் கருணையிலும்

ஓங்கி ஒலிக்கும் ஒரே
வேண்டுதல்
"இறைவா! என் புள்ளைங்கள
நல்லா வச்சுரு!
நோய் நொடி இல்லாம
நல்ல ஆரோக்கியத்த கொடு!
மனம் வாடாம சந்தோஷமா பாத்துக்கோ!"


என்ற தன் நிலையான வேண்டுதலை
யாசகமாக இறையிடம் வேண்டி
திரும்பி சென்றாள் முதியோர் இல்லத்திற்கு
38
வேண்டாத தெய்வங்களை  வேண்டி விட்டேன்
வேண்ட  வந்தேனம்மா உன்னிடத்தில்
காணாத கஷ்டங்கள் கண்டேனம்மா
கண்களில் நீர்வழிய நின்றேனம்மா

தீராத வேதனை என்னிடத்தில்
தீர்த்து வையடி இந்த பெண்னிடத்தில்
வேதனை நீ தந்த சோதனையா
நீ சோதிக்க நான் என்ன பாதகியா

பட்ட கஷ்ட்டம் எல்லாம் போதுமம்மா
கண் திறந்தென்னை பாரும் அம்மா
கல்லான உன்னைக் காண வந்தேன்
சொல்லாலே சோகம் தீர்க்க வந்தேன்

உன் சோதனையால் வாழ்வு வேதனையே
சோறும் தண்ணியும் இறங்கலையே
விரதம் இருந்து வேண்டி வந்தும்
என் வேதனை  இன்னும் தீரலையே

கையேந்தி வேண்டி நிற்கின்றேன் பாரம்மா
காது கொடுத்து கொஞ்சம்  கேளம்மா
உன் கண்களை திறந்து பாரம்மா
நீ கருணை கொஞ்சம் காட்டம்மா
39
கண்கள் மூடி புலம்ப உகந்தவன் நீ

யாரும் அரியா ரகசியம் சொல்ல ஏற்றவன் நீ

கோபப்பட்டு திட்ட உரிமையானவன் நீ

கொஞ்சி விளையாடி ஆசையை தீர்க்க குழந்தை நீ

என்னை நல்வழி படுத்தும் ஆசன் நீ

நீ இருக்கிறாய் என்று பலர் நீ இல்லை என்று சிலர்

இருகிறாயோ இல்லையோ நான் அறியேன் எனக்கு நீ வேண்டும் இறைவனே

அழும்போது நான் சாயும் தோள் உன்னுடையது

நான் குழம்பும் நேரத்தில் பிறக்கும் தெளிவு நீ

நான் ஆணவம் கொள்ளும் நேரம் என் ஆணவம் அழிப்பவன் நீ

 நீயே என் உற்ற தோழன்
அறிவு மிக்க ஆசான்
அன்பு காட்டும் அன்னை
அனுபவம் தரும் தந்தை
கோபிதுகொள்ளும் குழந்தை
அனைத்து நீ

 சொன்னதும் மனதின் குறை திர்ப்பவன்

இந்த புலம்பலும் கேட்டு பதிலும் தந்தான் அதையும் சொல்கிறேன்
 
இந்த பூமியில் பசி எதற்கு?

இன்பம் இருக்கையில் துன்பம் எதற்கு?

தாய் இருக்கையில் தாரம் எதற்கு?

நல்லவர் இருக்கையில் தீயவர் எதற்கு?

அவன் சொன்ன பதில்

பசியே பூமியின் சுழற்சிக்கு காரணம்.பசி இல்லையேல் உழைபில்லை மாற்றம் இல்லை எதுவும் இல்லை

இன்பத்தின் சுவை அறிய துன்பத்தின் வடுக்கள் தேவை

ஆணின் தலை சாய்ந்து அழ தேவைப்பட்ட இடம் அன்னை மடி அவள் போன பின் தாரதின் தோள்

முழுமையான நல்லவர் தீயவர் யாரும் இல்லை  நல்ல குணம் அதிகம் உள்ளவர் தீய குணத்தை கட்ட தீய குணம் கொண்டோர்

கண்ணீரோடு புலம்பி கண்ணீர் துடைத்து மனம் தேரும் போது கண்ணாடி கூட கடவுளே....
40
 கல்லும் கடவுளும் நடுவே ஒரு அம்மை                                                                                                                         கல்லில் செதுக்கிய
அம்மையின் காலடியில்
கண்ணீரை மறைத்துக்
கைகளைக் கூப்பும்
இன்னொரு அம்மை…

கணவன் என்ற நிழல்
குடிக்குள் கரைந்து போன நாளிலிருந்து
விடியலை வாங்க
இரவுகளைக் கடன் வாங்கியவள்.
கை குழந்தைகளாய் இருந்த
அவள் பிள்ளைகள்
இன்று புத்தக சுமையுடன்
பள்ளி வாசல் கடக்க
அவள் தோள்கள் தான்
பாலம் ஆனது.

வீட்டு வேலை,
எங்கே கிடைக்குமோ அங்கே வேலை,
காயும் கைகளில்
கனவு மட்டும்
உலராமல் வைத்தவள்.
“தனி பெண்” என்ற சொல்லால்
சமூகம் எறியும்
கூர்மையான பார்வைகள்,
வார்த்தைகள்,
மௌன அவமானங்கள்...
எல்லாவற்றையும்
பிள்ளைகளின் புன்னகைக்காக
விழுங்கிக் கொண்டவள்.

படிக்காத குறை
வாழ்க்கையில் வலியாக மாறினாலும்,
“என் பிள்ளைகள்
அதே வலியை
சுமக்கக் கூடாது”
என்ற வெறி ஆசை
அவள் மூச்சாகி நிற்கிறது.
அதனால்தான்
கோவிலின் இருட்டில்
விளக்கின் முன்
அவள் மண்டியிடுகிறாள்...
“துர்கையே… காளியே…
அநியாயத்தை அழிக்கும்
உன் தைரியத்தின்
ஒரு துளி போதும் தாயே.
தனி பெண்ணாக
இந்த சமூகத்தில்
மானத்தோடு
என் குடும்பத்தோடு
நான் வாழ
அருள் தா...

பாரதி கண்ட
புதுமைப் பெண்ணின்
உறுதியையும்,
தெளிவையும்,
தன்னம்பிக்கையையும்
என் மனத்தில் விதை.”

அவள் வேண்டுதல்
ஆண்களுக்கு எதிரல்ல..
கொடூர குணம் கொண்ட
சிலருக்கே.
நல்ல மனம் கொண்ட
ஆண்களையும்
அவள் மனம்
வணங்கத் தவறவில்லை.

இவள் கதையல்ல இது…
தெய்வம் சில நேரம்
சிலையிலிருந்து இறங்கி
அம்மாவாக உழைக்கும்
உண்மை.
    LUMINOUS 💜🧡💛💐😇
Pages: 1 2 3 [4] 5 6 ... 10