Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on April 14, 2026, 02:59:50 PM »


Nikola Tesla envisioned a future where instant photographs could be transmitted wirelessly, decades ahead of his time. This groundbreaking idea highlights his extraordinary foresight and innovative thinking, paving the way for technologies that have become integral to modern communication and imaging.
32
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on April 14, 2026, 02:58:28 PM »


In the early 20th century, Nikola Tesla predicted a future where homes would be powered without the need for wires. His innovative ideas about wireless energy transmission laid the groundwork for modern advancements, showcasing his extraordinary foresight into the potential of technology to transform everyday living.
33


ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, தனது மகளிடம் சொன்னார்.

"கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக் கொண்டு கடைக்கு கிளம்பினார்.

அவர் திரும்பி வந்தபோது, ​​அவள் காரில் இல்லை. திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, ​​200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தை தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். நிம்மதி பெருமூச்சுடன் ஓடிச் சென்று அவள் முன்னால் நின்றார்.

" என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்.

"என்னைத் தடுக்காதீங்க அப்பா... இந்த பில்டிங்க்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு நினைக்கிறேன். போன ஜென்மத்துல நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுன்னு நினைக்கிறேன். இதைப்பத்தி எனக்கு தெரியணும்... நிறைய தெரியணும் " என கத்த ஆரம்பித்தாள்.

அப்பாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் திகைப்புடன் முன்னேறிக் கொண்டிருந்தாள்.

" கொஞ்சம் நில்லும்மா.." என கெஞ்சினார். ஆனால், அவள், அப்பா சொல்வதைக் கேட்காமல்.. அந்த கட்டிடத்தை நோக்கி சென்றாள்.

"அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு தெரியறவரைக்கும் நான் ஓயமாட்டேன்பா".

பொறுமையிழந்த அப்பா பளாரென்று மகளின் கன்னத்தில் அறை ஒன்றை விட்டார். கதிகலங்கி போய் நின்ற மகளிடம் சொன்னார். "இந்த லீவுல அம்மாவோடவும் பாட்டியோடவும் சீரியல்ஸ் பாத்து உன் மூளை இப்படி மழுங்கிப் போச்சு.... கொரோனாக்கு முன்னாடி நீ போன ஸ்கூல் தான் இது."

(கொரோனா நினைவலைகள்😏)
35
கவிதைகள் / நட்பு.. ( Paadithathil Piddithathu)
« Last post by MysteRy on April 14, 2026, 02:49:47 PM »


கண்டதும் கை குலுக்கி
கன நேரத்தில் காணாமல் போகும்
மின்னல் நட்பு..

சந்திப்பில் மட்டும் சரசமாடும்.. பிறகு சிந்திக்க மறந்து போகும்
தாமரை இலை மேல் தண்ணீர் நட்பு..

காரியம் முடிந்ததும்
வீரியம் குறைத்து விலகிப் போகும்
சந்தர்ப்பவாத நட்பு..

தூரத்தில் இருந்தாலும்
நெஞ்சின் ஓரத்தில் நினைந்து கசிந்துருகும்
ஓயாத அலை நட்பு..

 கூட இருந்தே கூடி மகிழ்ந்திருந்து
குழி தோண்டி புதைத்துப் போகும் கூடா நட்பு...

இன்பமிருக்க இணைந்திருக்கும்
துன்பம் வர தூரப் போகும்
துச்ச நட்பு..

நித்தியம் என்று சத்தியம் செய்யும்
புரிதலில் பிணக்கு கொண்டு பிரிந்து போகும்
புத்தி_கெட்ட நட்பு

நட்பின் தொடக்கம் முதல்
நாடித் துடிப்பின் அடக்கம் வரை கூடி வரும்
உயிர் நட்பு!
36
GENERAL / Ambedkar Jayanthi 2026 !
« Last post by சாக்ரடீஸ் on April 14, 2026, 02:40:40 PM »
April 14 - Equality Day

On this day, we remember B. R. Ambedkar 
the voice of equality and justice.

He rose against discrimination, stood for dignity, and gave a nation its backbone through the Constitution.

His words still guide us
"Educate - Agitate - Organize"

Let us carry forward his vision of a society built on equality, respect, and humanity.Celebrating Ambedkar Jayanti.



சமத்துவ நாள்

இன்று, B. R. Ambedkar அவர்களின் பிறந்தநாளை நினைவுகூர்கிறோம்.

சமத்துவம், சுயமரியாதை, மனித உரிமைகள்  இவற்றிற்காக வாழ்நாளை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்.

“கல்வி – எழுச்சி – ஒழுங்கமைப்பு”
என்ற அவரது வழிகாட்டுதல் இன்றும் நமக்கு ஒளி தருகிறது.

அவரின் கனவு சமத்துவமான சமூகத்தை உருவாக்குவது.அதை நாமே தொடர்ந்து நனவாக்குவோம்.

உன்னைத் தொட்டால் தீட்டு என்று சொல்லியவர்களின் முன்
புத்தியால் உலகத்தைத் தொட்டு உயர்ந்தவர்...கல்வியும் அதிகாரமும் தான் நமக்கான உரிமைகளை பெற்றுத் தரும் என்பதை உணர்த்திய மாமனிதர் .. அம்பேத்கர்



அம்பேத்கர் ஜெயந்தி நல்வாழ்த்துகள் !

Jai Bhim 🟦
37


அப்போது ஒரு நாய் ஒன்று அவர்களை நோக்கி குறைத்துக்கொண்டே வேகமாக ஓடி வந்தது. இதை கண்ட கணவன் அருகில் இருந்த மனைவியை தன் இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டார், கடிக்க வரும் நாய் தன்னை முதலில் கடிக்கட்டும் என்ற எண்ணத்தில்....

வேகமாக வந்த நாய் ஒரு நிமிடம் அவர்கள் முன்னால் நின்று குறைத்துவிட்டு பின் திரும்பிப் போய்விட்டது. உடனே கணவன் தன்னுடைய மனைவி தனது செயலை எண்ணி பாராட்டி அன்பு முத்தம் தருவார் என்று எண்ணியபடியே மனைவியை கீழே இறக்கி விட்டார்.

கீழே இறங்கிய மனைவி கணவனை நோக்கி, கேட்டாளே ஒரு கேள்வி..
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
"ஒரு நாய் கடிக்க வந்தால் குச்சியில் அடிச்சு, கல்லை வீசி நாயை துரத்தரவங்கள பார்த்து இருக்கேன். ஆனா... இப்பதான் மனைவியை தூக்கி வீசி எறிந்து நாயை துரத்த முயற்சி செய்பவரை முதன் முதலா பார்க்கிறேன்" என்று கோபத்துடன் கத்தினாள்.
😳😳😳😳
40
அன்பு காதலியாய் ஆசை மொழி பேசும்
எல்லையற்ற பாசம் காட்டும் என் அன்பானவளே

அருகில் இருந்தால் அரவணைப்பும்
தூரத்தில் இருந்தால் உன் நினைவும்
நீங்காத நினைவுகள் எப்போதும் இருக்கும் அன்பானவளே

என் இன்பத்திலும் துன்பத்திலும் சரிபாதி பகிர்ந்து
ஆறுதல் பேசும் உன் அன்பு வார்த்தைக்கு
இணை இவ்வுலகில் எதுவும் இல்லை அன்பானவளே

பல நேரங்களில் உன் மனதில் இருந்து வரும் அன்பு
ஆறுதலாய் என் மனக் காயங்களுக்கும்
இருக்கிறது அருமருந்தாக என் அன்பனாவளே

கண் மூடினால் கனவில் உன் நினைவும்
கண் திறந்து இருந்தால் என் உயிரில் நீ அன்பானவளே

அந்த நிலவு கூட மாதத்தில் பாதி நாள் தேயும்
கோடைகாலத்தில் நதி கூட நீர் இன்றி வற்றும்
ஆனால் உன் பாசக் கடலுக்கு
என்றென்றும் இல்லை அழிவு அன்பானவளே

ஆறுதல் தேடி எங்கெங்கோ அலைந்தேன்
கடைசியில் என் மனம் ஆறுதல்
பெற்றது உன் மடியில் அன்பானவளே

நீ என் அன்பானவள் என்றும் என் நினைவிலும்
உன் இதயத்திலும் நிலைத்து இருப்பேன்
உன் அன்பு காதலனாக காலம் முழுவதும்

Pages: 1 2 3 [4] 5 6 ... 10