Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31
Hi it team !

Song : Oona Oonam inke
Movie : Porkkaalam
Music : Deva
Singer : Deva
Lyricist : Vairamuthu

favourite lines:

"Ullam nalla irundhaa Oonam oru kurai illae
Ullam oona patta Udambirunthum payan illae"

"Rendu kaalu ullavano kedukkuraan
Silar oththa kaalil nalla vazhi nadakkuraan"

"Oonam ennada oonam Ada gyaanam thaanae venum Andha gyaanam vara venuminnaa
Manasu maara venum"

indha paadal mikavum arumaiyana thaththuvam mikka varikalil Vairamuthu write panni irukiranga.deva sir isaiyil avar voice la kekkum pothu mikavum good feel kodukkuthu.vadivelu sir fan nan.avar this movie nadithirukirar.nan this Movie paakkala.but this songs la niraiya karuththukkal irukkuthu.ippo maatru thiranaaligal nu solluvarkal.ivarkal evvalavo sathanai padaikirarkal intha ulagil.avarkalukku this song a dedicate pannuren.

Thanks





32
இசை தென்றல் / Re: இசை தென்றல் - 331
« Last post by Clown King on November 27, 2025, 08:17:45 PM »
s
33
Yes 🙂‍↕️
35
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on November 27, 2025, 11:30:31 AM »
36
*சளித்தொல்லை_குணமாக…*

பருவநிலை அடிக்கடி மாறி வருவதால் பலரும் சளித்தொல்லையினால் அவதிப்பட்டு வருவார்கள். சளி தொல்லை சிறியதாக இருந்தாலும் நமக்கு ஒருவித அசௌகரியத்தை தருகிறது.

👉சளி பிடித்தால் உடனே………

★தொண்டை வலி,

★தலைவலி

ஆகியவை சேர்ந்தே வரும். இத்தகைய சளித்தொல்லையிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி பார்ப்போம்.

 #சூடான_இஞ்சி_டீ

சளி பிடித்து இருக்கும் போது சற்று சூடான பானங்களை குடித்தால், நன்றாக இருக்கும். இஞ்சி சளித்தொல்லையை நீக்க வல்லது.

தேவையானவைகள்

▶️6-8 டேபிள் ஸ்பூன் புதிதாக துருவப்பட்ட இஞ்சி

▶️சிறிதளவு இலவங்கப்பட்டை (தேவைப்பட்டால்)

▶️எலுமிச்சை சாறு சிறிதளவு (தேவைப்பட்டால்)

▶️தேன் சிறிதளவு (தேவைப்பட்டால்)

▶️4 கப் சுடு தண்ணீர்

இந்த பொருட்களை சுடுதண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். தேவைப்படும் போது சூடு செய்து தினமும் மூன்று முறை பருக வேண்டும்.

மஞ்சள்_பொடி_மற்றும்_சுண்ணாம்பு

தலையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.

மஞ்சளையும், வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதில் தேவைக்கு தகுந்தது போல நீர் சேர்த்துக்கொள்ளலாம்.
இதனை நெற்றியிலும் மூக்கிலும் தடவ வேண்டும்.

சுண்ணாம்பு சேர்ப்பதால் புண்ணாகிவிடுமோ என்ற கவலை வேண்டாம். மஞ்சள் புண்ணாவதை தடுக்கும். இதனை தடவிய பின் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.

#நெஞ்சு_சளி_நீங்க

நெஞ்சு சளி நீங்க தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவினால் நெஞ்சு சளி குணமாகும்.


#கொள்ளு_பயிற

கரைக்கவே முடியாத நெஞ்சு சளியை கரைக்க, கொள்ளு சூப் குடிப்பது சரியான தீர்வாக இருக்கும்.

தேன்

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும் அப்படி உள்ளவர்கள், அடிக்கடி தேன் சாப்பிடலாம். தேனில் இருக்கும் விட்டமின் சி அடிக்கடி உண்டாகும் சளி தொல்லையிலிருந்து நம்மை காக்கும்.

மேலும்_சில_இதர_வழிகள்…

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது.

இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம்.

இது ஒரு திரவ உணவு, சூடான சூப் வகையை சேர்ந்தது. இத சூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிக சிறந்த பலன்களை கொடுக்க வல்லது.

#தேவையான_பொருட்கள்

▶️சீரகம் – 1/2 டீஸ்பூன்

▶️இஞ்சி – 1 துண்டு

▶️பட்டை – சிறிதளவு

▶️வெள்ளை பூண்டு – 10 பற்கள்

▶️மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

▶️தனியா – கிராம்பு – 7

▶️தண்ணீர் – 750 ml

▶️உப்பு – தேவையான அளவு

 சூப் செய்முறை

குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும்.

பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.

10 நிமிடங்கள்

ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும். (குறிப்பு:- பிரஷர் குக்கர் உபயோகிக்க வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)

சூப் ரெடி

பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.

 இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்

மொத்த கலோரிகள்: 36 கலோரிகள்

மொத்த கொழுப்பு: 0.5 கிராம்

சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்

சோடியம்: 603 mg

மொத்த கார்போ ஹைடிரேட்: 3%

சளித்_தொல்லை

இந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும்.

இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.
37
ஆன்மீகம் - Spiritual / Re: BIBLE VERSE of THE Day ✝️ 🙏
« Last post by MysteRy on November 27, 2025, 10:55:38 AM »
38
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on November 27, 2025, 10:54:47 AM »
39
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on November 27, 2025, 05:35:00 AM »
40


ஒற்றை தாய்..
==========

அம்மா! என் அன்பு அன்னையே !
முன்பெல்லாம் நீதான்  என் முதல் எதிரி !
நான் எது வேண்டுமென கேட்டாலும்
ஒருமுறைக்கு பலமுறைகள் யோசித்து
அவசியமானத்தையே அனுமதித்தாய்!
என்னை செய்யாதே என தடுத்த செயலுக்காக
பலமுறைகள் உன்னை சாடியிருப்பேன்.

உண்ணும் உணவில் சில தடைகள்...
உடுத்தும் உடையில் விதிமுறைகள்..
உரையாடல் பொழுதில் சில திருத்தங்கள்..
உலகை ரசிக்க, நினைக்கையில் தடைகள்...
என் மனதில் கோபம் கொப்பளிக்க..
இவள் என்ன பைத்தியமா? நம்மை
ஏன் இப்படி கடுமையாக வாட்டுகிறாள்..
இவள் மனித இனம் தானே? நம்மை
ஏன் இப்படி கொடுமை செய்கிறாள்..

உன்னை பல நாட்கள் திட்டி தீர்த்தேன்..
இவள் என்ன மனுஷியா இல்லை கல்லா?

தந்தையில்லா எனை நீ ஆளாக்க..
உனது உன்னத அன்பை அடக்கி,
உனது தாய்மையை கல்லாக்கி..
உன் மனதினை, ஓர் ஆடவனாக்கி..
என்னை ஆளாக்கி இருக்கின்றாய்..
உன்னை தலை வணங்குகின்றேன் ... தாயே..

ஆனால் என் மனதில் 1000 வினாக்கள்..
இது தான் ஓர் ஒற்றை தாயின் உருவமா?.
இன்று என்னை இவ்வுலகம் மெச்சும்..
உன்னத மகளாக ஊருக்கு கொடுத்தாய்..-இதற்கு .
அம்மா! உன்னை மனதார மதிக்கிறேன்.

ஆனால் தாயே ..  ஒன்றை நீ மறந்துவிட்டாய்
அம்மா! உன் தாய்மையை கல்லாக்கி.
இந்த உலகுக்கு ஒரு நல்ல மகளை கொடுத்தாய்..
இதனால்  நீ உன் தாய்மையை இழந்தாய்..
நானோ என் அன்னையை இழந்தேன்...
இது விதியா? இல்லை இது தான் வாழ்க்கையா?
Pages: 1 2 3 [4] 5 6 ... 10