42
« Last post by RajKumar on November 19, 2025, 11:58:16 PM »
Hi RJ & DJ
இந்த வாரம் நான் விரும்பி கேட்ட பாடல் இடம் பெற்ற திரைப்படம்
ரயில் பயணங்களில்
1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும்,
இது டி. ராஜேந்தர் எழுதி, இயக்கி, இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநாத் , ஜோதி , ராஜீவ் மற்றும் சிவரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. திரைக்கதையையும் மிக அழகாக அமைத்திருப்பார் டி.ராஜேந்தர். இந்த படம் அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் ஆனது.
இத்திரைப்படத்திற்கு விஜய டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.
வசந்தம் பாடி வர. எஸ். பி. பாலசுப்பிரமணியம்
வசந்த காலங்கள். பி. ஜெயச்சந்திரன்
அட யாரோ. எஸ். பி. பாலசுப்பிரமணியம்
நூலுமில்லை. டி. எம். சௌந்தரராஜன்
வசந்தம் பாடி வர. எஸ். ஜானகி
அமைதிக்கு பெயர் தான்" டி. எம். சௌந்தரராஜன்
எனக்கு பிடித்த பாடல்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
பி. ஜெயச்சந்திரன் பாடியது
பிடித்த வரிகள்
அனைத்து வரிகளும் அருமையாக இருக்கும்
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா…
உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…
நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து நடக்க…
நெளிகின்ற நளினம்…
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி…
குழல்கட்டை ஜாலம்…
பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி…
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி…
இதழ்கள் ஊருமடி இதழ் கல்