Recent Posts

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10
41

இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை கழுவி எடுத்து , மிக்ஸியில் அரைத்து சாறாக்கி, அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால், அதில் ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து, அதில், ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து, கூடவே , இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து, சிறிது சுக்கு , மற்றும் ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்க வேண்டும்... அரிசியில் முருங்கை சாறு நன்றாக ஊறிவிடும். அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை காயவைத்து, சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி, தினந்தோறும் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை , கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும். இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம் அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்...

இந்த கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது..

L4,L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது.

இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது. அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் , உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும். அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது, L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய,

" disc prolapse " ஆவது ...

இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து முருங்கைக்கீரைதான்... அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து
கொண்டுள்ள இந்த முருங்கைக்கீரைக் கஞ்சியை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..

இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,
உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும். இடுப்பு வலி, முதுகு வலி குணமாகிவிடும்...
42

விமானத்தின் ஜன்னல்களைத் திறக்க முடிந்தால், நன்றாக இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். தலையை நீட்டி செல்ஃபி எடுக்கலாம். ஏன் நிரந்தரமாக மூடி வைத்திருக்கிறார்கள்?

குளிரூட்டப்படாத பேருந்துகளில் கட்டணம் குறைவு. அதைப்போல விமானத்தைக் குளிரூட்டாமல் கட்டணத்தைக் குறைத்தால் என்ன? இப்படிப்பட்ட வித்தியாசமான கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். பதில் தெரிய மேலும் படியுங்கள்.

நீர்மூழ்கி, ஆழங்களில் நீரின் அதிக அழுத்தத்தை சமாளிக்க வேண்டும் . ஆகாய விமானம் உயரங்களில் சந்திக்கும் பிரச்சினை என்ன தெரியுமா? குறைந்த காற்றழுத்தம்.. உயரத்தில் குறையும் அழுத்தம் வானத்தில் உயரே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் குறையும். கடல்மட்டத்தில் காற்றழுத்தம் 1 பார் (1 Bar) ஆக இருக்கும். 5 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றழுத்தம் பாதியாகக் குறைந்து ஏறக்குறை ½ பார் ஆக இருக்கும்.

10 கி.மீ. உயரத்தில் ஏறக்குறைய ¼ பார் ஆக மேலும் குறையும். ஏன் அழுத்தம் குறைகிறது?

பள்ளிக்கூட மைதானத்தின் தரையில் உங்களுடைய காலால் ஒரு வட்டம் வரைந்து அந்த வட்டத்தில் காற்றழுத்தத்தை அளப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த வட்டத்திற்கு நேர் மேலே பல கிலோமீட்டர்கள் உயரத்திற்கு உருளை வடிவில் காற்று நிற்பது போல் கற்பனை செய்து பாருங்கள். இந்த காற்று உருளையின் முழு எடையும் மைதானத்தில் உள்ள வட்டத்தை அழுத்திக் கொண்டிருக்கிறது. இந்த அழுத்தம் ஏறக்குறைய 1 பார் (கடல்மட்டத்தில் பள்ளி இருந்தால்). அந்த காற்று உருளையில் 5 கி.மீ. உயரத் தில் காற்றழுத்தத்தை அளந்தால் அழுத்தம் குறைவாக இருக்கும். ஏன்? மைதானத்தில் உள்ள வட்டத்தை அழுத்திய காற்று உருளையில், 5 கி.மீ. உயரம் இப்போது குறைந்திருக்கிறது. அந்த அளவுக்குக் காற்று உருளையின் எடை குறையும். இதனால் காற்றழுத்தம் குறையும்.

உயரத்தில் குறையும் அடர்த்தி:

உயரத்தில் காற்றழுத்தம் குறைவு. புவியீர்ப்பு விசையும் குறைவு. இதனால் காற்றின் அடர்த்தியும் குறைவு. அடர்த்தி குறைவதால் காற்றில் ஆக்சிஜனின் அளவும் குறையும். உங்கள் பள்ளி மைதானத்தில் ஒரு முறை நீங்கள் மூச்சை உள்ளிழுத்தால் எவ்வளவு ஆக்சிஜன் உங்கள் நுரையீரலுக்குச் செல்கிறதோ அதை விட குறைவான ஆக்சிஜனே, உயரமான மலையுச்சியில் நின்று கொண்டு நீங்கள் சுவாசித்தால் கிடைக்கும். இதனால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். தலைச்சுற்றல், மயக்கம் என உடல் உபாதைகள் தொடங்கும். மூளைக்கு ஆக்சிஜன் குறைவதால் முடிவெடுக்கும் திறன்குறையும். இன்னும் அதிக உயரங்களில் உயிரிழப்பும் ஏற்படக்கூடும்.

விமானத்தில் சுவாசம்:

பயணிகள் விமானம் ஏறக்குறைய 12 கி.மீ. உயரத்தில் பறக்கும். போர் விமானம் ஏறக்குறைய 15 கி.மீ. உயரத்தில் பறக்கும். பள்ளிக்கூட மைதானத்தில் நீங்கள் உணரும் காற்றழுத்தத்தில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு காற்றழுத்தத்தில், ஆக்சிஜன் குறைந்த காற்றில் எப்படி விமானப்பணிகளைப் பாதுகாப்பது? விமானப்படை விமானிகள்எப்படி போர்த்தொழில் புரிவது? அழுத்தமேற்றப்படும் காற்றுபயணிகள் விமானத்திலும் போர் விமானத்திலும் உள்ள விமான அறைகளில் அழுத்தமேற்றப்பட்ட காற்று நிரப்பப்பட்டிருக்கும். விமானம் 12 கி.மீ. உயரத்துக்கு மேல்பறந்தாலும் விமானத்திற்குள் ஏறக்குறைய பள்ளி மைதான காற்றழுத்தம் இருப்பதால் உங்களால் வித்தியாசத்தை உணர முடியாது. இந்த தொழில்நுட்பத்தை அறை அழுத்தமேற்றல் (Cabin Pressurization) என்பார்கள். இதற்காக விமான இன்ஜினில் இருந்து அழுத்தமேற்றப்பட்ட காற்று எடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. உள்ளே அதிக அழுத்தம், வெளியே குறைந்த அழுத்தம். காற்றுக்கசிவைத் தடுக்க விமானத்தின் ஜன்னல்கள் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கும். கதவும் இறுக மூடப்படும்.

உறைநிலையில் விமானம்:

தரையிறங்கிய விமானத்தின் வெளிப்பகுதியை தொட்டுப்பார்த்தால் சில்லிடும். ஏன்? உயரங்களில் காற்றின் அழுத்தம், அடர்த்தி போல வெப்பநிலையும் குறைவு. பயணிகள் விமானம் பறக்கும் உயரங்களில் வெளியே வெப்பநிலை -56 டிகிரி செல்சியஸ்.. உங்கள் வீட்டு குளிர்பதனப் பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் - 18 டிகிரி என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதனால் தான் அழுத்தமேற்றப்பட்ட காற்று குளிர்பதனம் செய்யப்பட்டு விமானத்தில் வழங்கப்படுகிறது. இல்லையெனில் பயணிகள் உறைந்து விடுவார்கள். விமானத்தின் ஜன்னல் மூடப்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
43
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on November 20, 2025, 11:55:20 AM »

44

`உங்களைச் சுற்றி இன்னமும் அழகோடு இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள்… மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் ஆனி ஃப்ராங்க்.

ஆனி ஃப்ராங்க், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனில் வாழ்ந்த யூதச் சிறுமி. இவரும் ஹிட்லரின் வதைமுகாமில் இறந்துபோனவர்களில் ஒருவர்தான். நாஜிப் படைகளுக்கு பயந்து, இரண்டாண்டுகள் ஓர் இடத்தில் ஒளிந்திருந்தபோது ஆனி எழுதிய `தி டயரி ஆஃப் எ யங் கேர்ள்’ நாட்குறிப்பு உலகப் பிரசித்தி பெற்றது. ஹிட்லரின் படையால் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளை வலி மிகுந்த வார்த்தைகளோடு விவரிக்கிறது அவருடைய நாட்குறிப்பு. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு `எந்த நேரமும் நம்மை அள்ளிக்கொண்டுபோய், வதை முகாமில் போட்டுவிடுவார்கள்’ என்கிற சூழ்நிலையில் ஆனி ஃப்ராங்க் எழுதுகிறார்… மகிழ்ச்சியாக இருங்கள் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதற்கு சில அறிகுறிகள் உள்ளன. அதற்கு முன்னால் சில விஷயங்களைப் பார்ப்போம்.

`என்னப்பா… சாதாரண இன்கம் அண்ட் எக்ஸ்பெண்டிச்சர் கணக்கு… அக்கவுன்டன்ஸியில பால பாடம்… அதை டேலி பண்ண முடியலை உனக்கு…’ கடிந்துகொள்கிறார் மேனேஜர். ஒரு கணக்கு உதவியாளராக இருக்கும் நாம் சுருங்கிப்போகிறோம்.

`தெனோமும்தானே வாங்கிட்டு வர்றே… சர்க்கரை போடாம காபி வாங்கிட்டு வரத் தெரியாது?’ எரிந்து விழுகிறார் அதிகாரி. ஒரு ப்யூனாக நாம் கூனிக் குறுகி நிற்கிறோம்.

அலுவலகம் போகும் அவசரம்… ஏற்கெனவே தாமதம்… வழியில் நின்று போகிறது இருசக்கர வாகனம். எவ்வளவு உதைத்தும் கிளம்பாமல் அடம்பிடித்து நிற்கிறது. சிக்னலில் சின்னா பின்னப்பட்டு, வண்டியை உருட்டிக்கொண்டு போனால், இருக்கிற ஒரே ஒரு மெக்கானிக் ஷாப்பும் ஷட்டவுண்.. ஒரு சராசரி சென்னைவாசியான நாம் பதைபதைத்து, என்ன செய்வதென்று அறியாமல் ரோட்டில் நிற்கிறோம்…

இவையெல்லாம் சிறிய பிரச்னைகள்… தீர்த்துவிடக்கூடியவை. உண்மையில், எவ்வளவு பெரிய சிக்கலாக, கஷ்டமாக இருந்தாலும்கூட அவையும் தீர்க்கக்கூடியவையே. என்ன… அவற்றுக்கான வழிமுறைகள் மட்டும் மாறுபடலாம். `எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குது?’, `நான் என்ன பாவம் செஞ்சேன்… என்னை இந்தப் பாடுபடுத்துறியே சாமி…’, `இதெல்லாம் ஒரு பொழைப்பா… ச்சீ… நாய் பொழைப்பு…’, `என்னால முடியலை…’ இப்படியெல்லாம் சாதாரண மனிதர்களாக புலம்பிப் புலம்பி மருகிப்போகிறோம். `உனக்கும் கீழே உள்ளவர் கோடி…’ என்ற கண்ணதாசனின் வரிகளை ரசிக்க முடிகிற நம்மால், அதைக் கடைப்பிடிக்க முடிவதில்லை. தேவையற்ற, எளிதில் தூக்கியெறியக்கூடிய விஷயங்களை எல்லாம் மூளையில் ஏற்றிக்கொண்டு, அன்றாடம் நொந்து திரிவதே நம் வாழ்க்கை முறையாகிவிட்டது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… பின்வரும் 10 அறிகுறிகள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் தெரிகின்றனவா என ஒப்பிட்டுப் பாருங்கள்… பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள்.

இனி 10 அறிகுறிகள்…


1.தலைக்கு மேல இருக்கு கூரை… போதாதா பாஸ்?

இருக்க வீடில்லாமல், ஒண்ட ஒரு குடிசைகூட இல்லாமல் நடைபாதையில், ஊருக்கு வெளியே மரத்தடியில், கோயில் சுற்றுப் பகுதிகளில், ரயில்வே ஸ்டேஷனில், பெரிய பேருந்து நிறுத்தங்களில் இரவு வாழ்க்கையை நடத்துகிறவர்கள் இந்தியாவில் லட்சக்கணக்கானோர். `இந்தியக் குடிமகன்’ என்கிற அங்கீகாரம் இல்லாமல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அடையாளங்கள் இல்லாமல் இருப்பவர்கள் அவர்கள். வெளுத்து வாங்குகிற வெய்யிலோ, அடித்துப் பெய்கிற மழையோ நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. குடியிருக்க வாடகைக்கோ, சொந்தமாகவோ ஒரு வீடு என்று இருக்கிறதுதானே… நீங்கள் பாக்கியவான் சார்… இயற்கை, உங்களை ஆதரித்துக் கொண்டிருக்கிறது.


2. வயிறு நிறைய சாப்பிட்டாச்சு:

சோமாலியா… இன்னும் பல ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்குக்கூட சாப்பிட ஒன்றும் கிடைப்பதில்லை. வெறும் மண்ணைத் தின்று வயிறு வீங்கித் திரியும் குழந்தைகளை நெட்டில் பார்த்திருக்கிறீர்களா? அந்தத் துயரம் நமக்கு வேண்டாம்… இன்று காலை டிபன், மதியம் லஞ்ச், இரவு டின்னர் எல்லாம் உங்களுக்கு உத்தரவாதம்தானே… நீங்கள் இயற்கையால் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள்.


3. இதயம் ஆரோக்கியமாக துடிச்சுக்கிட்டு இருக்கு… அப்புறம் என்ன?

`ராத்திரி படுத்தாரு… காலையில எந்திரிக்கலை… தூக்கத்துலயே உயிர் போயிடுச்சு…’ என்பது பாமரர் புலம்பல். உறக்கத்தில் இதயத் துடிப்பு நின்றுபோனதால்அவர் இறந்திருப்பார் என்பதே உண்மை. காலை எழுந்தது முதல் இரவு படுத்து உறங்கும் வரை உங்கள் இதயம் உங்களுக்காக ஒத்துழைத்து, விடாமல், சரியாகத் துடித்துக் கொண்டிருக்கிறதுதானே… பிறகென்ன… உங்களை இயற்கை, அரவணைத்துக் காக்கிறது என்று அர்த்தம்.


4. மத்தவங்களுக்கு நல்லது நினைச்சோம்..

பேருந்தில் பயணம். சிக்னல். இடதுபக்கம், தன்னை அந்தப் பக்கம் அழைத்துப் போய் யாராவது சேர்க்க மாட்டார்களா… என்ற பரிதவிப்போடு நிற்கிறார் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி. `அய்யய்யோ… நாம மட்டும் இந்த பிளாட்ஃபார்ம் ஓரமா இருந்திருந்தா, அவரைக் கொண்டுபோய் அந்தப் பக்கம் விட்டிருக்கலாமே..!’ என நினைக்கிறீகளா? இது போதும்… இந்த நல்ல சிந்தனை உங்களுக்கு இருப்பது பெரிய விஷயம். இயற்கை, உங்களைக் கைவிடாது..


5. குடிக்க சுத்தமான தண்ணி கிடைச்சுது..

தண்ணீர்… இதற்காக ராஜஸ்தான் எல்லாம் போக வேண்டாம். நம் மாநிலத்தில் இருக்கும் பல ஊர்களில் தண்ணீர் பஞ்சம். நல்ல தண்ணீருக்கு, தாக வேட்கையில் உலகின் பல நாடுகளில் அலையோ அலை என்று அலைகிறார்கள் பாஸ்… இது உண்மை. வீட்டில் காசுகொடுத்து ஃபிக்ஸ் செய்த ஆர்.ஓ வாட்டரோ, 30 ரூபாய் கொடுத்து வாங்கும் மினரல் வாட்டரோ, அலுவலகத்தில் அளவில்லாமல் குடிக்க தண்ணீரோ… ஏன்… குறைந்தபட்சம் கார்ப்பரேஷன் தண்ணீரையாவது நீங்கள் குடிக்கிறீர்கள்தானே! இயற்கை, உங்களை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது.


6. யாரோ ஒருத்தருக்கு உங்க மேல ரொம்ப அக்கறை...

`நல்லா இருக்கீங்களா...?’, `சாப்டீங்களா..?’, `பார்த்துப் போங்க..’, `வண்டியில போகும்போது ஜாக்கிரதைப்பா’, `உடம்பு சரியில்லைன்னா லீவு போட்டுட்டு டாக்டர்கிட்ட போக வேண்டியதுதானே’, `என்ன வேலையா இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிட்டுடணும்’… இது போன்ற வாசகங்களில் ஏதாவது ஒன்றையாவது இன்று நீங்கள் கேட்டீர்களா? இதற்குப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உற்றமும் சுற்றமும் சூழ வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை (அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி) பிறகென்ன… இயற்கை உங்கள் மீது பெருங்கருணையோடு இருக்கிறது.


7. மன்னிச்சுட்டீங்க… மன்னிச்சுட்டீங்க....

சகிப்புத் தன்மை இருக்கிறதா உங்களுக்கு? அப்படியானால், நீங்கள் வரம் வாங்கி வந்தவர்கள் என்று அர்த்தம். கனமான செருப்பணிந்த ஒருவர், பேருந்து நெரிசலில் உங்கள் காலை மிதித்துவிட்டு, ‘சாரி’ என்ற ஒற்றை வார்த்தையோடு நகர்ந்திருக்கலாம்... நீங்கள் எதிர் வார்த்தை பேசாமல் நின்றிருப்பீர்கள். ஆடி, சித்திரை மாதங்களில் வீட்டுக்கு நேர் எதிரே கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் இருந்து சத்தமாக அம்மன் பாடல் கேட்பதாக இருக்கலாம்… `ஒரு வாரம்தானே…’ என்கிற ரீதியில் உங்கள் அன்றாடப் பணிகளை இரைச்சலுக்கு மத்தியில் நகர்த்தியிருக்கலாம்… இவ்வளவு ஏன்… பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சக ஊழியர் கேட்கும் அர்த்தமற்ற, அபத்தமான கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் நிதானமாக, சரியாக பதில் சொல்பவராக இருக்கலாம்… இதுபோல எது வேண்டுமானாலும் இருக்கட்டும்… நீங்கள் பொறுமை காக்கிறீர்களா? உங்களுக்கு மன்னிக்கும் மனப்பான்மை அதிகம் என எடுத்துக்கொள்ளலாம். இயற்கை, உங்களுக்கு என்றென்றும் துணை நிற்கும்.


8. உடுத்த உடை இருக்கு..

`கபாலி’ போல கோட், சூட்கூட வேண்டாம். அலுவலகத்துக்கோ, வேறு பணிகளுக்கோ, வெளியில் செல்லவோ அணிந்து செல்ல உங்களிடம் கண்ணியமான தோற்றம் தரும் உடைகள் இருக்கின்றனவா? அதுகூட வேண்டாம் பாஸ்… மானத்தை மறைக்கிற உடை உங்களிடம் உண்டுதானே… நீங்கள் அதிர்ஷ்டசாலி.. இயற்கை, உங்களை மனதார நேசிக்கிறது என்று பொருள்.


9. நம்பிக்கை இருக்குல்ல..?

இந்த மாத, வார, அன்றாட சேல்ஸ் டார்கெட்டோ, ப்ராஜக்ட்… எதுவாகவும் இருக்கட்டும். `இது என்ன பெரிய மலையா? நான் கில்லி… முடிச்சிடுவேன்ல?’ என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அன்றாடப் பாடை விடுங்கள்… எப்படியாவது சமாளித்து வாழ்க்கையை ஓட்ட முடியுமென்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அது கூட வேண்டாம்… அடுத்த வேளை உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை… இவையெல்லாம் உத்தரவாதமாகக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அப்படிப் போடுங்க! இந்த நம்பிக்கை போதும்… இயற்கை, உங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ளும்.


10. மூச்சுவிட முடியுது:

`ஏ யப்பா… என்னா பொல்யூஷன்..’ அங்கலாய்ப்பதை விடுவோம். நடமாடும் போதோ, அமர்ந்திருக்கும் போதோ, உறங்கும்போதோ காற்று சீராக உள்ளே வந்தும் போயும்… நீங்கள் நன்றாக சுவாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே… மூச்சு என்பது வெறும் காற்று சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை சார். அது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். எதையும் எதிர்கொள்ள நீங்கள் திராணியோடு இருக்கிறீர்கள்… உங்களால் எதையும் சமாளிக்க முடியும் என்கிற தைரியத்தைக் கொடுக்க உயிர் உங்கள் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இயற்கை, இன்னும் பன்னெடுங்காலம் உங்களை பத்திரமாக வைத்திருக்கும்.
45

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப் படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.
வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.

ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்து அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.

1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது. அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.

’ஏ’ பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ’பி’ பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ‘சி’ பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக ‘டி’ பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது ‘டி’ பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.

மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது. 1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.

டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.)

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.

ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் “நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon’s Grotto)” என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் “உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.

ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ “பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை” என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. ’வீடியோ கேம்’களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.

சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும். அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.
46


*காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல*
*வீட்டுகிளி கேட்டுக்கொள்ள*

*ஒட்டி வந்த தாளமே*
*கொட்டும் கெட்டி மேளமே*

*தொட்டணைக்க வேணுமே*
*பட்டு கிளி நாணுமே*

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள

ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே

தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே ...

*மனசுல திறந்தது மணிக்கதவு*
*மரகத பதுமையை இனி தழுவு*

இடையில விழுந்தது இள மனசு
இருக்கிற சுகமது பல தினுசு

*நாளெல்லாம் ராகம்*
*பாடுதே தேகம்*

*வாழ்வெல்லாம் யோகம்*
*வாழ்த்துதே யாவும்*

*விதவிதமா விருந்து வச்சு*
*விழிவழியே மருந்து வச்சு*

*விரல் தொட அதில் பல*
*சுகம் வரும் பொழுதாச்சு*

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள

ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே

தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ...

*விழியிலே தெரியுது புது கணக்கு*
*விடியற வரையிலும் அது எனக்கு*

தடைகளை கடந்தது மலையருவி
தனிமையை மறந்தது இளம் குருவி

*தேகமே தேனாய்*
*தேடினேன் நானா*
*மோகம்தான் வீணா*
*மூடுதே தானா*

*தொடத்தொடதான் தொடர்கதையா*
*படப் படத்தான் பல சுவையா*

*அடிக்கடி மயங்குற*
*வயசிது தெரியாதா*

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள

ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே

தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள

ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே

தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே ...

💫💕💕💕💕💕💫

படம் : *சின்ன மாப்ளே*
பாடகர் : *மனோ & சுவர்ணலதா*
பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா *
47

ஈரோடு மாவட்டம் தலையநல்லூரில் மிகவும் பழமையான பொன்காளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டம் தலையநல்லூரில் பொன்காளியம்மன் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் அம்மன், வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து வளமான வாழ்க்கையை வழங்குபவளாக திகழ்கிறாள். இந்த ஆலயத்தில் சிற்ப சாஸ்த்திர முறைப்படி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், பூத மண்டபம், நிருத்த மண்டபம், ராஜ மண்டபம் அமைந்துள்ளன. மேலும் வானளாவிய விமானத்துடன் சக பரிவார தெய்வங்களாகிய விநாயகர், மாதேஸ்வரன், வண்ணார கருப்பணன் சாமி, பரிவார மூர்த்திகள், பாம்பாட்டி சித்தர் ஆகிய தெய்வங்களும் இங்கு அருளாட்சி செய்கிறார்கள்.

இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் பொன்காளி அம்மன் தன் தலையில் கிரீடமாக அக்னி ஜுவாலையையும், காதில் தோடாக ராகு-கேதுக்களையும் அணிந்திருக்கிறாள். மேலும் தன்னுடைய எட்டு கரங்களிலும் சூலம், டமருகம், கட்கம், கேடயம், பட்சி, கிண்ணம், கண்டம், அக்னியை தாங்கியிருக்கிறாள். அதோடு அசுரன் ஒருவனை காலில் மிதித்த கோலமாகவும், உதட்டில் புன்னகையுடன் அன்னையின் திருக்காட்சி இருக்கிறது. கொங்குநாட்டில் உள்ள கூறைகுல, விளையன் குல, கொங்கு வேளாளர்களின் குலதெய்வமாக இந்த பொன்காளியம்மன் திகழ்கிறாள். இந்த ஆலயத்தில் வருடந்தோறும் பங்குனி மாதம், அமாவாசை முடிந்து வரும் முதல் செவ்வாய்க்கிழமையில் பூச்சாட்டு விழா நடைபெறுகிறது. பொன்காளி அம்மனின் உற்சவரை, சிவகிரி வேலாயுத சுவாமி திருக்கோவிலில் இருந்து அழைத்து வந்து, உற்சவத் திருவிழா நடத்துவார்கள். உற்சவக் காலங்களில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், கிராமத்தை அமைதிப்படுத்துவதே ‘கிராம சாந்தி’ ஆகும். விழா யாவும் மங்களகரமாக, நிறைவுடன் நடப்பதற்காகவும், தெய்வங்கள் கிராமத்தில் இருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டியும் தெய்வங்களுக்கும், ஆச்சாரியார்களுக்கும் குலகுரு காப்பு அணிவிப்பார்.

காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், பச்சை விரதம், அம்மனை அழைத்து வருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். முப்பாட்டு பேழையை அலங்காரம் செய்து பச்சை மாவை விளக்காக வைத்து, பசுநெய் விட்டு திரிபோட்டு தீபம் ஏற்றுவார்கள். இத்தீபத்திற்கு ‘முப்பாட்டு மாவிளக்கு’ என்று பெயர். பேழை மூடியை சிவப்பு வண்ணத்துணி கொண்டு போர்த்தி, இதில் அம்மன் பூஜைக்குத் தேவையான தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இளநீர், தென்னம்பாளை ஆகியவை வைத்து பூவில் அலங்காரம் செய்வார்கள். இதற்கு ‘படைக்களம்’ என்று பெயர்.

மதுரை பாளையக்காரர் ஆட்சிக்கு முன்பு இருந்தே, இத்திருக்கோவிலின் ஆகம கிரியா பாரம்பரிய மிராசுப்படி, சிவகிரி ஆதீனமாக இருப்பவர்கள் உற்சவ கிரியைகளை நடத்தி வருகிறார்கள். அம்மன் ஆலயத்தில் உள்ள இரட்டை சிம்ம வாகனத்தின் பின்புறம், இரண்டு குதிரை துள்ளல் பிடிப்பார்கள். ஒன்று கூறைகுலத்தாரும், மற்றொன்றை விளையன் குலத்தாரும் பிடிப்பார்கள். இரண்டு குதிரையும் தலை அசைத்ததும் தேர்த்திருவிழா தொடங்கும். ‘மூணே முக்கால் நாழிகையில் நாலே முக்கால் தேர்’ என்ற பழமொழியுடன் அமைந்தது தேர்த் திருவிழா. மூணே முக்கால் என்பது கால அளவையும், நாலே முக்கால் என்பது தேரின் உயர அளவையும் குறிக்கும்.

தேர் புறப்படும் முன்னர் லட்சக் கணக்கான பக்தர்கள், கையில் தீப்பந்தம் ஏந்தி தேருடன் பவனி வருவார்கள். தேரில் கூறைகுல, விளையன்குல குலகுரு சிவகிரி ஆதீனம், பொன்காளி அம்மனுடன் தேரில் அமர்ந்து வருவார். குல தெய்வத்தையும், குல குருவையும் ஒருங்கே தரிசனம் செய்யும் வாய்ப்பும் அருளாசியும் அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும். ஏந்தி செல்லும் தீப்பந்தங்கள், தேரின் முன்வடமாகவும், பின்வடமாகவும் காட்சி தரும். இந்த ஆயிரம் ஆயிரம் தீவட்டியுடன் அம்மன் செல்லும் அற்புதத்தைக் காண கண்கள் கோடி வேண்டும்.

தேர்த் திருவிழா முடிந்தவுடன், காவல்தெய்வம் வண்ணாரக் கருப் பணன் சுவாமிக்கு பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறும். விழா யாவும் மங்கள நிறைவு பெற்றதை முன்னிட்டு பக்தர்கள் மஞ்சள் நீராடல் நடத்துவார்கள். திருவிழாவின் போது மட்டும் அம்மனுக்கு வெண்பட்டு ஆடையை அணிவிப்பார்கள். திருக்கோவிலின் முன்பு பாம்பாட்டி சித்தர் உருவம் உள்ளது. இதில் பல்லி சகுனம் சொல்லும். திருக்கோவிலில் பூச் சகுனம் பார்க்கும் வழக்கமும் இருக்கிறது. திருவிழா காலங்களில் இந்த சகுனங்கள் பார்ப்பது இல்லை.

பொன்காளியம்மனை ராகுகாலம், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் வழிபாடு செய்தால், இல்வாழ்க்கையில் எல்லாவித சிறப்பும் ஏற்படும். மேலும், திரு மணம், குழந்தைபாக்கியம் மற்றும் சகல செல்வங்களையும் வாரி வழங்குவதில் இந்த அன்னைக்கு நிகர் அவள் தான்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம், சிவகிரி அருகே அமைந்திருக்கிறது தலையநல்லூர். ஈரோட்டில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் சிவகிரி அமைந்துள்ளது.
48

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

துவரம் பருப்பு:
இதில் புரத சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு:
விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

பச்சை பயறு:
புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து குறைய உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை: கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு:
இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும்.

சுண்டல்: கொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம். உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கடலைப் பருப்பு:
ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் இதய நோய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

சிவப்பு காராமணி:
பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும். இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.

தட்டை பயறு:
தட்டை பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உளுத்தம் பருப்பு: இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.
49
*திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்*


 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இரத்த உறைதலை கட்டுப்படுத்துகிறது, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளன, உடல் எடை இழக்க உதவுகிறது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, மேலும் செரிமானத்திற்கும் உதவுகிறது.
திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Eating Grapes):
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (Increases Immunity):
திராட்சையில் வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்கள் உள்ளன, இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
இரத்த உறைதலைக் கட்டுப்படுத்துகிறது (Regulates Blood Clotting):
திராட்சையில் உள்ள சில பொருட்கள் இரத்த உறைதலை கட்டுப்படுத்த உதவுகின்றன.
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants that fight cancer):
திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
எடை இழப்புக்கு உதவுகிறது (Helps in Weight Loss):
திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடை இழக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது (Improves Skin Health):

50

கேசரி, பாயாசம், பொங்கல் இவற்றில் எல்லாம் நாம் தேடி தேடி முந்திரி பருப்பை சாப்பிடுவோம். அவற்றின் பழத்தைப் பற்றி கேள்விபட்டிருக்கக் கூட மாட்டோம். முந்திரிப் பருப்பு என்னவோ நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். ஆனால், அதன் பழத்தை நம்மால் அந்த அளவுக்கு விரும்பி சாப்பிட முடியாது. ஏனெனில், அதை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு தன்மையை ஏற்படும். ஆனாலும் அதை சாப்பிட சில வழிகள் உள்ளன. மேலும் அதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. வாருங்கள் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

* ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அதை விட 5 மடங்கு அதிகமாக வைட்டமின் சி ஒரு பழத்தில் உள்ளது என்பதை கேள்விபட்டிருக்கிறீர்களா? அதுதான் முந்திரிப் பழம். இனி 5 ஆரஞ்சு பழத்துக்கு பதில் ஒரு முந்திரிப் பழத்தை சாப்பிடலாமே.

* முந்திரிப் பழத்துக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும் தன்மையும் உள்ளது. இவை நகங்கள், பற்களை உறுதிப்படுத்துகின்றன. மேலும், ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாட்டை குணப்படுத்துகிறது.

* முந்திரிப் பழத்தில் புரதம், பீட்டா கரோட்டீன், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. டானின் எனும் வேதிப்பொருள் உள்ளதால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.

* முந்திரிப் பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அழுகிவிடும். இதன் காரணமாகவே இந்தியாவில் சாப்பிடுவதற்காக அதிகம் விற்பனையாவதில்லை. நசுங்கிய அல்லது அழுகிய பழங்கள் விலங்குகளுக்கு உணவுக்காக வழங்கப்படுகின்றன. ஆனால், பிரேசிலில் முந்திரிப் பழ ஜுஸ் மிக பிரபலமானது.

* முந்திரிப் பழம் சாப்பிடும் போது கரகரப்பு தன்மையை ஏற்படுத்தாமலிருக்க அதனை நீராவியில் சற்று வேக வைத்தோ அல்லது உப்பு நீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். இத்தனை குணங்களை கொண்ட முந்திரிப் பழம், இதயத்தை தலைகீழாகப் பார்த்தால் எப்படி இருக்கும், அந்த வடிவில் இருக்கும். இனிமேல் முந்திரிப் பருப்பை மட்டும் இல்லை முந்திரிப் பழத்தையும் ருசித்து சாப்பிடலாம்.
Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10