Recent Posts

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10
42
FTC உறவுகளுக்கு வணக்கம், 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் எனது விருப்ப பாடல் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் ஒலிக்கும் ஆர்வத்தில்..

நான் தெரிவு செய்தபாடல்

"ஆலங்குருவிகளா.."

படம்: பக்ரீத் (2019)
பாடகர்: சித்ஶ்ரீராம்
இசை: டி. இமான்
பாடல் வரிகள்: மணி அமுதன்


"அன்ப தேட எடுத்தோமே பிறவி
தங்கம் தேடி பறக்காதே குருவி
இது புரிஞ்சா
கையில் எட்டாத எட்டாத சந்தோசம் எல்லாம்
உன் வீட்டில் உக்காருமே
கண்ணு கொட்டமா கொட்டாம கொட்டாரம் போட்டு
திக்காடி முக்காடுமே"

இந்த பாடலின் மெல்லிய இசையும் வரிகளும், வாழ்க்கையை தேடி ஓடி கலைத்த ஒருவருக்கு பெரிய ஆறுதலாகவும், அறிவுரையாகவும் அமைந்திருக்கும்..

இந்த வரிகள் அன்புதான் வாழ்க்கையின் உண்மையான செல்வம்,
அதை விட்டுப் பொருள், ஆசை, தங்கம் தேடி அலைந்து போக வேண்டாம்…
உன்னுடனே இருக்கிற தருணங்களில் கிடைக்கும் சந்தோஷம்
எங்கும் கிடைக்காத மிகப்பெரிய பொக்கிஷம் என்று சொல்லுகிறது

இந்த பாடல் எனக்கும் பெரும் ஆறுதல் கொடுக்கும் எனது விருப்ப பாடல், நீங்களும் கேட்டு மகிழுங்கள் ❤️

வாய்ப்புக்கும், FTCக்கும் நன்றிகள்.
[/b]
43

நெடுந்தின இடைவெளிக்குப் பிறகும்
என் உள்ளம் மறக்காத ஒரு இனிய நிழல் போல
‘கோவில் – காதல் பண்ணா’ என்ற அந்த மென்மையான பாடல்
இன்றும் என் இருதயத்தைக் கைகோர்த்துத் தழுவுகிறது.

கோவை கமலாவின் இனிய குரலும்,
வடிவேலுவின் நகைச்சுவைத் தொனியும்,
சிம்புவின் இளமைக் கலரியும் சேர்ந்து உருவான
அந்தச் சிற்ப பாடல், என் நினைவுகளில்
ஒவ்வொரு முறையும் புதிதாய் மலர்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை,
இதயம் துடிக்கும் தாளத்தோடு கலந்து
இசைத்தென்றல் மேடையில் மீண்டும்
ஒலிக்கப் போகிறது என்ற உணர்வே
என் உள்ளத்தில் ஓர் இனிய தீப்பொறியை ஏற்றுகிறது.

இந்தப் பாடல் என் விருப்பம் மட்டும் அல்ல,
என் நினைவுகள், என் உணர்வுகள், என் ரகசியமான புன்முறுவல்களை
மெதுவாக சொல்லித் தரும் என் உயிர் மொழி.
அதனால் தான்,
இந்தப் பாடலை என் வாழ்க்கையில் மிகச் சிறப்பான ஒருவருக்கு
இதயத்தின் ஆழத்தில் இருந்து அர்ப்பணிக்கிறேன்😍😍
44
Hi RJ & DJ

இந்த வாரம் நான் விரும்பி கேட்ட பாடல் இடம் பெற்ற திரைப்படம்
ரயில் பயணங்களில்
1981 ஆம் ஆண்டு வெளியான  திரைப்படமாகும்,
இது டி. ராஜேந்தர் எழுதி, இயக்கி, இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநாத் , ஜோதி , ராஜீவ் மற்றும் சிவரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. திரைக்கதையையும் மிக அழகாக அமைத்திருப்பார் டி.ராஜேந்தர். இந்த படம் அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் ஆனது.
இத்திரைப்படத்திற்கு விஜய டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.
   
வசந்தம் பாடி வர.      எஸ். பி. பாலசுப்பிரமணியம்   
வசந்த காலங்கள்.  பி. ஜெயச்சந்திரன்   
அட யாரோ.      எஸ். பி. பாலசுப்பிரமணியம்   
நூலுமில்லை.      டி. எம்.      சௌந்தரராஜன்   
வசந்தம் பாடி வர.     எஸ். ஜானகி   
அமைதிக்கு பெயர் தான்"   டி. எம். சௌந்தரராஜன்   

எனக்கு பிடித்த பாடல்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
பி. ஜெயச்சந்திரன் பாடியது

பிடித்த வரிகள்
அனைத்து வரிகளும் அருமையாக இருக்கும்

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா…
உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…
நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து நடக்க…
நெளிகின்ற நளினம்…
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி…
குழல்கட்டை ஜாலம்…
பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி…
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி…
இதழ்கள் ஊருமடி இதழ் கல்

45
Hey Team..

Song: Yeya en kottikkara
Film: Papanasam

Evlavu kashtam irunthalum the love between the couples epavumey sweet thaan..Athuvum muthukumar varigal la chancey illa avalavu azhaga paadirupanga..

Fav lines:

தட்டான் பூச்சி போல
வண்ணம் அள்ளி தாற
கண்ணில் இன்னும் வேற
ஏதோ சொல்லித் தாற
நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
நூலிழையில் தான் வழுக்கிட
பேசி பேசி இன்னும் பேசி
பேசா நிலை வருமோ..
46
Movie             :  Bison Kaalamaadan
Song              :  Rekka Rekka Song
Singers           :  Arivu and Vedan
Music Director    :  Nivas K Prasanna
Lyricist          :  Mari Selvaraj and Arivu


vedan and Arivu Voice la oru energic vibe Song ithu this song dedicated to all FTC friends


47

கல்யாண சோறு


நண்பன் கல்யாண நாள் வந்தாச்சு
வெள்ளை வேஷ்டி சட்டை கட்டி 
மண்டப வாசல்ல  வரிசையா நின்னாச்சு

மாப்பிள்ளை முகம் பாக்கணுமா? 
இல்ல சோறு சாப்பிடணுமா? 
மனசு கேட்ட கேள்விக்கு
நாக்கு பதில் சொல்லிடுச்சு 
சோறு தான் முதல்ல டா… 
மாப்பிள்ளை அப்புறம்தான்

கால் மண்டபத் திண்ணையில வச்சதும் 
சர்ர்ர்ர்ர்ன்னு ஓடுச்சு
சாப்பாடு பந்தி நோக்கி 
மேடையில பிரண்டோட அப்பாவும் ஐயரும் 
ஏதோ சண்டையில மூழ்கியிருக்க 
நமக்கென்னடா அங்க வேலை?ன்னு

கண்ணு நேரா பார்த்தது   
வெண்பொங்கல் மலை 
உளுந்தவடை கோபுரம் 
ஆனியன் ஊத்தப்பம்
மூணு வகை சட்னி
இட்லி மேகம் 
சாம்பார் ஆறு   
அடடாடா டா டா டா டா
பசி காதை கொய்ய 
மெனு பார்த்ததும் ஜொய்யா மாறிடுச்சு

இலை போட்டு உக்காந்ததும் 
ஒரு பிரண்டு கேட்டான் 
“டேய் அங்க என்ன டா பிரச்சனை ?” 
நாங்க சிரிச்சிக்கிட்டே சொன்னோம் 
“அட மூடிட்டு சாப்பிடுங்க ப்ரோ!” 

கொஞ்ச நேரத்துல பிரச்சனை முடிஞ்சது 
தாலி கட்டுற  நேரம் வந்துச்சு 
ஐயர் கை அசைக்க 
நாதஸ்வரம் கெட்டி மேளம் 
டும்… டும்… டும்முனு 
தாளம் அடிச்சது

நாங்க ஜன்னல் ஓரமா எட்டிப்பார்த்தோம் 
அப்போதான் இலையில 
சுட சுட கிச்சடி வந்து விழுந்துச்சு 
மறுபடியும் மனசு ஒரு கேள்வி கேட்டுச்சு 

தாலியா… கிச்சடியா? 
கிச்சடியா… தாலியா? 

தாலி அவன் தான் கட்டப்போறான் 
நாம கட்டப்போறதில்லையே 
ஆனா இந்த சுட சுட கல்யாண கிச்சடி? 
இன்னிக்குத்தான் கிடைக்கும் 
நாளைக்கு கிடைக்காது 
அதனால கிச்சடி தான் முக்கியம்
அவன் தாலி கட்டிக்கட்டும் 
நாம கிச்சடிய ஒரு கட்டு கட்டுவோமுன்னு
ஒரு புடி புடிச்சோம்
ஆனது ஆகட்டும் 
ஜீரணத்துக்கு ரெண்டு கிண்ணம் பாயாசம் 
குடிச்சிட்டு இலைய மடிச்சு வச்சோம் 

என்னதான் விதவிதமா சாப்பிட்டாலும் 
கல்யாண சோறு 
கல்யாண சோறு தான் பா…

48
கவிதைகள் / கல்யாணம் !
« Last post by joker on November 19, 2025, 03:02:53 PM »
கல்யாணம்

இரு மனங்கள் இணைந்தா
திருமணங்கள்
அரங்கேறுகிறது ?!

முன் பின் அறியாதவரோடு
பேசவே  தயங்கும் நாம்
ஆனால்
அவளோ
பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை என
தன் வாழ்க்கையையே
ஒப்படைக்கிறாள்

திருமண வயது எட்டிய
ஒவ்வொருவரின்
ஆசையின் துடிப்பு
வாழ்க்கையின் ரகசியம் அறிய
முதல் படி

சிலருக்கு அன்பின் பிறப்பிடம்
சிலருக்கு பகிர்ந்துகொள்ள கிடைத்த துணை
சிலருக்கு சோகத்தின் கொள்முதல் நிலையம்
சிலருக்கு ஆகவில்லையே என கவலை
சிலருக்கு ஆகிவிட்டதே என கவலை
விசித்திரமானது தான் திருமண பந்தம்

குடும்பத்திற்காக
வெளிநாட்டில் இருக்கும் கணவர்
வருடத்திற்கொருமுறை அவர் முகம் காண காத்திருக்கும்
குடும்பம்
தொழில்நுட்பம் வளர்ந்திருக்கலாம்
ஆனால்
அருகில் அணைத்து  உச்சிமுகர்ந்து கிட்டும்
முத்தம் தந்திடாது சுகம்
எக்காலம் ஆனாலும்

விலைமதிக்க முடியா
பாசங்கள் எல்லாம்
அலைபேசி தந்துவிடாது

பெண் பார்த்து
செய்திடும் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது
பொன் பார்த்து செய்திடும் திருமணம்
நரகத்திற்கான வாசலை திறந்துவிடுகிறது

பெண்ணை
மகிழ்ச்சியாய் வைத்திருந்தால்
சந்தோஷமாவது அவள் மட்டும் அல்ல
அவளை சுற்றியுள்ளவர்களையும்
குடும்பத்தையும் தான்

முள்ளுக்கு இடையே
இலைகளுக்கு நடுவே
மலரை தேடுகும் தேனீ போல
சோகத்தின் நடுவே
துன்பத்தின் இடையே
சிறுது
சிரித்து வாழவும்
கற்றுக்கொள்ளுங்கள்

பரஸ்பரம்
விட்டு கொடுங்கள்
ஜெயிப்பது
நீங்கள் தான்

சொர்க்கமும்
நரகமும்
நாம் வாழ்வதில் தான்
இருக்கிறது

விரல்கல் கோர்த்து கூட்டி செல்லுங்கள்
சொர்கத்தின் நுழைவாயில்
உங்களுக்காய் திறந்திருக்கும்



****Joker***
49
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on November 19, 2025, 11:58:11 AM »
50
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on November 19, 2025, 09:12:05 AM »
Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10