Recent Posts

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10
41
Hi IT Team!

Movie - Thunivu
Song - Chilla Chilla
Singers - Anirudh Ravichander, Vaisagh, Ghibran
Lyrics - Vaisagh


favourite lines:

"Ponadhellam pogattum da Theva illa tears"

"Pudichatha seiyuradhu Ennaikumae mass"

"Pinnala pesuravan Ellaam kilinja tire-u"

"Mathavana mattam thatti Mela vandhu no use"

This song ku  ajith sir super a dance panni irukiranga.intha songs la vara Lyrics romba motivational a irukku enakku.arumaiyana varikal.this song music elloraium dance panna vaikkum.this song motivational &vibe song.i like it.so my friends kuda this song a kettu vibe panna poren.

it program rj &dj ellorukkum en nanrigal.all rj &dj super a pannurenga.congratulations.nenga ippadi super a pannurathu than enakku it la song podanum nu thonuthu.eppo program keppen fm la nu wait pannuven.thanks it team.

Thanks

43
Hi RJ & DJ
இந்த வாரம் நான் விரும்பி கேட்ட பாடல் இடம் பெற்ற திரைப்படம்
என்றும் அன்புடன்
 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடக திரைப்படம் ஆகும்.
ஆர். பாக்கியநாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் முரளி, சித்தாரா, ஹீரா ராசகோபால் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மனோரமா, ஜனகராஜ், சின்னி ஜெயந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார்.

இப் படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
"சின்னஞ் சிறு" 
வாலி   எஸ். பி. பாலசுப்பிரமணியம்   
"துள்ளித் திரிந்ததொரு"     
ஆர். பாக்கியநாதன்   எஸ். பி. பாலசுப்பிரமணியம்   
"மஞ்சள் வெயில்" 
பிறைசூடன்   மனோ   
"நிலவு வந்தது" 
ஆர். பாக்கியநாதன்   மனோ,
எஸ். ஜானகி   
"பவர் போச்சுதா"     
வாலி   மனோ

எனக்கு பிடித்த பாடல்
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்

பிடித்த வரிகள்
நட்பின் அரட்டைகள் சில நாள்
நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கதில் திருனாள்
காதல் வேள்வி தனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வலைந்தேன்
உன்னை நினைத்திங்கு சிரிதேன்
உண்மை கதை தனை மறைதேன்

இந்த ஆண்டின்
இறுதி இசைத் தென்றல் நிகழ்ச்சியில்
நாம் பழைய நினைவுகளை நினைத்து பிறந்து இருக்கும் இந்த புத்தாண்டை வரவேற்று நமது FTC உறவுகள் உடன் இணைந்து இப்பாடலை மகிழ்ச்சியுடன் கேட்டு மகிழ்வோம்

இந்த பாடலை நமது FTC யில்
துள்ளி திரிந்து சேட்டை செய்யும்
Aradhana 19 க்கு புத்தாண்டு பரிசு சிறப்பு பாடலாக வழங்குகிறேன்


44
Hi
Movie: Beast
Song:Jolly o gymkhana
Lines:Athanaiyum ponaalum
Empty-aathan ninnalum
Padharaama irundhaa
Ada beast-u nee dhaanda

Polamburavan thamaasu
Edhuthu ninnaa nee maasu
Manasil onnu ninachaa
Adha nadathanum nanba – Confirm

I like this song because the lyrics are very motivating. It tells us to stay calm without getting confused, not to be afraid of anyone, and not to complain. It says that if you work boldly and confidently, without fear, you will definitely succeed. That motivation is the reason I like this song.
Thanku
LUMINOUS 💚🧡💛💜😇
45
இசை தென்றல் நிகழ்ச்சியை அருமையாக
தொகுத்து வழங்கும்  RJ AND DJ க்கு என் வாழ்த்துக்கள்


இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
ஷாருக்கான் மனிஷா நடித்த, மணிரத்னம் இயக்கத்தில் AR Rehman இசையில் வந்த உயிரே திரைப்படம்



இதில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் இனிமை

என்னுயிரே என்னுயிரே -  ஸ்ரீனிவாஸ் , சுஜாதா
பூங்காற்றிலே                   -உன்னிமேனன் , ஸ்வர்ணலதா
சந்தோஷ கண்ணீரே     - பெபி
தய்யா தய்யா                -  சுக்விந்தர், சுபா

இதில் எனக்கு பிடித்த பாடல்
எஸ். ஜானகி  பாடிய நெஞ்சினிலே நெஞ்சினிலே

ஒவ்வொரு பாடல்களும் வித்தியாசமா இனிமையா இருக்கும்
இது ஒரு வேற்றுமொழி படம்னு உங்கள்குக்கு எங்கேயும் தோன்றாது பாடல்கள் உட்பட

உங்களுக்கும் புடிக்கும்னு நம்புறேன்

எல்லா FTC நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


GOD BLESS YOU
46
ஹாய் இசைத்தென்றல் Team,
வருடத்தோட கடைசி நாள்ல ஒலிக்கப்போற, வருடத்தோட முதல் நாள் ரிப்பீட்ல ஒலிக்கப்போற இசைத்தென்றல் நிகழ்ச்சியில  முதலிடம் பிடிச்சது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

இசைத்தென்றல் RJ, DJ கடந்த வார இசைத்தென்றல் நிகழ்ச்சி வழக்கம் போல கலக்கிட்டீங்க. இசைத்தென்றல் டீம்க்கு அன்பும், நன்றிகளும்.

இந்த வார இசைத்தென்றல் நிகழ்ச்சியில நான் கேட்க விரும்பிய பாடல் சரோஜா திரைப்படத்திலிருந்து நிமிர்ந்து நில் பாடல்.

இந்த பாடலை கேட்க்கும்பொழுதே செம்ம எனர்ஜெடிக் feel கொடுக்கும். Pure motivation and energy booster இந்த பாட்டு.

திரைப்படம்: சரோஜா
பாடல்: நிமிர்ந்து நில்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்


இந்த லிரிக்ஸ் பிடிக்கும்னு குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி எல்லா வரிகளுமே உத்வேகத்தை அளிக்க கூடிய வரிகளாக இருக்கும் இந்த பாடல்ல.

'போன வழி மாறி போனாலே வாராது
போ உந்தன் புது பாதை போராடிடு
காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்று கரையேறி முன்னேறு'


இப்படி தத்துவமான, உத்வேகம் தரக்கூடிய வரிகளை கங்கை அமரன் எழுதியிருக்காரு.

இந்த பாடலை நான் FTC நண்பர்கள் எல்லாருக்காகவும் கேட்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  புதிய ஆண்டு புதிய நம்பிக்கைகளோடு தொடங்கட்டும்.
உங்கள் புதிய முயற்சிகள் எல்லாம் வெற்றியாக மாற வாழ்த்துகள்
 
47
விடை: மெழுகுவர்த்தி

அடுத்த புதிர்:
ஒற்றை கண் உடையவன் ஆனால் ஓடும் இடமெல்லாம் அடைத்துக் கொண்டே செல்கிறான். அவன் யார் 🤔 🤔
:
48
குறள் -     240

அதிகாரம்    புகழ்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பொருள்
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.
49
பொதுப்பகுதி / குறுந்தகவல் Raj
« Last post by RajKumar on December 25, 2025, 03:49:48 PM »
நீங்கள்
கடந்து
வந்த படிகளை
உடைக்காதீர்கள்...

ஒரு வேளை
இறங்குவதற்கு
அதே படிகள்
தேவைப்படலாம்...

விதி வலியது
காலம் மிகக் கொடியது..

50
கவிதைகள் / கிறிஸ்துமஸ் சாண்டா !
« Last post by joker on December 25, 2025, 01:15:31 PM »


குளிர் நுழைந்த இரவு,
விண்மீன்கள் மெல்ல மின்ன,
கிறிஸ்துமஸ் மணி
நகரத்தின் இதயத்தைத் தட்டியது.

அங்கே
ஒரு சாலையோர குடிசையில்
கிழிந்த போர்வைக்குள்
ஒரு சிறு இதயம் துடித்தது.

அவன் கண்களில் தூக்கம் இல்லை
ஆனால் கனவுகள் இருந்தன
பசித்த வயிற்றை விட
பெரிய கனவுகள்.

“சாண்டா வருவாரா?”
என்று அவன் தன் மனதை
மெல்லக் கேட்டுக்கொண்டான்,
பட்டியலில்லை அவனிடம்,
பொம்மைகளின் பெயர்களில்லை,
விலைச்சீட்டுகளும் இல்லை.

அவன் கேட்டது
ஒரு ஜோடி செருப்பு,
மழையில் நனைந்து
வெடித்து போன
தந்தையின்
பாதங்களை காப்பதற்கு.

ஒரு முழு உணவு,
அம்மாவின் கண்களில்
புன்னகை மலர.

ஒரு புத்தகம்,
வாசிக்க, கற்றுக்கொள்ள
வாழ்க்கையை புரிந்து கொள்ள.

அவன் வீட்டில்
ஜன்னல் இல்லை
ஆனால் வானமே
அவன் கூரை.

அந்த இரவில்
நகரம் தூங்கிக் கொண்டிருக்க,
பணக்கார வீடுகளில்
பொம்மைகள் சிரிக்க,
அந்த குடிசை முன்
ஒரு நிழல் நின்றது.

சிவப்பு உடை இல்லை,
தங்கத் தாடி இல்லை,
ஆனால் கண்களில்
கருணையின் ஒளி.

“நான் சாண்டா,”
என்று சொன்னார் அவர்,
“நீ நினைப்பது போல அல்ல,
நான் மனிதர்களின்
இதயங்களில் இருந்து வருகிறேன்.”

சிறுவன் நடுங்கினான்,
குளிரால் அல்ல,
நம்பிக்கையால்.

அந்த சாண்டா
பொம்மை தரவில்லை,
ஆனால் புத்தகம் தந்தார்.

பொன் தரவில்லை,
ஆனால் கல்வி தந்தார்.

அரண்மனை தரவில்லை,
ஆனால் கனவுகளை
வளர்க்க ஒரு பாதை தந்தார்.

“நாளை நீ
என் இடத்திற்கு வருவாய்,”
என்றார் அவர்,
“அங்கே
நீயும் ஒருநாள்
சாண்டாவாக மாறுவாய்.”

காலை வந்தது.
சூரியன் சிரித்தது.
சிறுவன் எழுந்தான்.

குடிசை அதேதான்,
போர்வை அதேதான்,
ஆனால்
அவன் உள்ளம் மாறியது.

பல ஆண்டுகள் கழித்து,
ஒரு பள்ளி திறந்தது,
அதன் வாசலில்
அவன்  நின்றான்
கற்பிப்பவனாக

கிறிஸ்துமஸ் வந்தால்,
அவன் குழந்தைகளிடம் சொல்வான்:
“சாண்டா
பரிசுகள் தருபவர் மட்டும் அல்ல,
நம்பிக்கை கொடுப்பவர்தான்.”

விண்மீன்கள் இன்னும் மின்னுகின்றன,
குடிசைகள் இன்னும் இருக்கின்றன,
ஆனால்
ஒரு கனவு நனவானால்,
ஒரு உலகம்
மாறத் தொடங்குகிறது.




***Joker***
Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10