41
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 400
« Last post by Thenmozhi on March 25, 2026, 12:06:04 AM »என் உயிர் தோழி
“ஓவியம் உயிராகிறது”
Ftcஇல் ரொம்ப நேசிப்பது
நான் உன்னை தான்!
Forum இல் என்னை உள் நுழைய
வைத்ததும் நீதான்!
நீ நவரச நாயகி!
ftcஇல் நீ எப்போதும்
ஜொலிப்பாய் வைரமாக!
நீ சாதாரண ஆள் கிடையாது
உன்னை கட்டி எழுப்பியது
பல பேரின் உழைப்பு!
371வது வாரத்தில் இணைந்து
கொண்டேன் கவிதைப்
பயணத்தில் உன்னுடன்..
இப்போ உன் பாசத்தால் பிரிய மனமின்றி
உன்கூட இருக்கின்றேன் ஒவ்வொரு
வாரமும் அன்பு தோழியாய்!
4சதம் நீ கண்ட வெற்றியை கண்டு
மிக்க மகிழ்ச்சி அடைகிறது என்மனம்!
உலகில் முதன்மையான மொழி
செம்மொழியான தமிழ் மொழி!
தேனிலும் இனிமையான தமிழ் மொழிக்கு
நீ முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு!
அழகியற்கலைகளில் ஒன்றான ஓவியக்கலையை
இரசிக்காதவர் யாருமிலர்!
வரைந்த ஓவியங்கள் எப்போதும்
எழுப்பி விடும் நம்மமுள் பல
எண்ணங்களை கவிதை எழுதுவதற்கு!
ஒவ்வொரு வாரமும் விதவிதமான
நிழற்படங்கள் வழங்கப்பட...
அழகான கவி வரிகளில்
வெவ்வேறு மொழி நடைகளில்
கவிஞர் ,கவிதாயினிகள் உயிர் கொடுக்க ...
வண்ணமயமாக வரையப்பட்ட கவிதைகளை
அழகாகத் தொகுத்து வழங்கிடுவர்
பண்பலையில் தொகுப்பாளர்கள்....
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியை
பண்பலையில் கேட்பதற்கு
காத்திருப்பார்கள் பல இரசிகர்கள்!
இந்நிகழ்ச்சியை கேட்கும் போது
கவிதை எழுதும் ஆசையை
எல்லோர்க்கும் தூண்டும் சக்தி
உன்னிடம் உண்டு தோழியே!
உன்னை பார்ப்பதற்கு ஒவ்வொரு
வாரமும் ஒரே நண்பர்கள் வருகிறார்கள்
என்பதற்காக கொண்டு வந்தனர்
விதிமுறைகளை....
புதிய நண்பர்கள் கூட இணைகிறார்கள்
இப்போ உன்னுடன்...
400 வாரங்களாக நீ பெற்ற
நண்பர்கள் ஏராளம்!
ஒரு வாரம் நீ வரவில்லை என்றால்
ஏனோ என் மனம் துடிக்கின்றது
எப்போ வருவாய் என்று...
உன் ஓவியத்தை பார்த்தவுடன்
என் மனதில் எழும் பல எண்ணங்கள்!
பத்தே நிமிடத்தில் எழுதிட தோணும்
எனக்குத் தெரிந்த கவி வரிகளில்...
நீ 400 வாரங்களாக வழங்கிய
ஓவியங்கள் அனைத்தும்
வித்தியாசமானவையும் தனித்துவமானவையுமே!
ஒவ்வொரு ஓவியத்துக்கும்
வித்தியாசமான கண்ணோட்டத்தில்
கவிஞர்கள் கவி வரைந்திடுவார்கள்!
உறவுகள்,காதல்,நீதி,சமத்துவம்,
கல்வி,கலைகள் என்று பல்வேறு
ஓவியங்களை வழங்குவதும்
பலபேர் உழைப்பே!
அந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுப்பது
கவிஞர்களோடு உழைப்பு!
கவிதைகள் எழுதவில்லை என்றாலும்
கவிஞர்களை ஊக்கப்படுத்துபவர்கள்
கொடுப்பதும் உழைப்பு!
கவிதைகளை தொகுத்து வழங்கும்
தொகுப்பாளர்கள் கொடுப்பதும் உழைப்பு!
பண்பலையில் தொகுத்து வழங்குவதற்கு
எடிட்டிங் செய்பவர் கொடுப்பதும் உழைப்பு!
எல்லோரும் கொடுத்த உழைப்பினால்
என்னுயிர் தோழி இன்று
400 வது வார வெற்றியை
சிகரம் தொட்டுவிட்டாள்!
இது தோழிக்கு மட்டுமல்ல
தமிழுக்கும் கிடைத்த வெற்றியே!
அழகிய கலையான ஓவியத்துக்கும்
கிடைத்த வெற்றி இது!
இந்த நிகழ்ச்சியை என் மனதை
மட்டும் அல்ல
பல நண்பர்களின் மனதுக்கு
ஆறுதலும் ,விருந்தும் அளிக்கின்ற
ஒரு நிகழ்வு!
கவிஞர்கள் அவர்களின் எண்ணங்கள் ,
உள்ளக் கிடக்கைகளை
அழகாக வெளிக் கொண்டு வர உதவும்
ஒரு நிகழ்வு "ஓவியம் உயிராகிறது"
உழைப்பே உயர்க! தமிழ் வாழ்க!
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி
வெற்றி நடை போடுக!
குறிப்பு:-இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்
நன்றிகளும் பாராட்டுக்களும்.
இன்னும் நீ பல வெற்றி காண என்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

Recent Posts


.gif)







