Recent Posts

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10
41

நான் பேச வரல....கேட்கவும் வரல..

சும்மா நின்னு
உன்னைப் பார்க்க தான் வந்தேன்..

உன் முன்னாடி நின்னா, என்ன கேட்கணும்னே
எனக்கே தெரியல..

ஒரு காலத்துல நிறைய கேள்விகள் இருந்தது.
உன்னைக் கேள்வி கேட்கவும்
செஞ்சிருக்கேன்.

ஏன்?
எப்படி?
இன்னும் எத்தனை நாள்?
எனக்கு மட்டும் தானா?
இப்படி எல்லாம்…

ஆனா இப்ப,
அந்த கேள்விகள் எல்லாம்
சோர்ந்து
மௌனமா மாறிடுச்சு...

கடந்து வந்த பாதை
ரொம்ப நீளம்...

திரும்பிப் பார்க்க
சக்தி இல்ல...தெம்பும் இல்ல...

சிரிச்ச முகத்தோட
வாழ பழகிட்டேன்.
வேற வழி இல்லாம.
உள்ளுக்குள்ள வலி இருந்தாலும்,
அது
என்னோட தனிப்பட்ட விஷயமா
மாறிடுச்சு...

சரணடையணும்னு தான் ஆசை.
முழுசா...

எதையும் பிடிச்சுக்காம.

“நீயே போதும்”

என்று சொல்லும் அளவுக்கு.
ஆனா
என் கைகளில்
கடமைகள் இருக்கு...

என் தோள்களில்
பொறுப்புகள் இருக்கு...

அதை இறக்கி வைக்க
இடமில்லை,நேரமில்லை, சில நேரம்
அனுமதியும் இல்லை.

அதனால தான்
உன் காலடியில் கூட
முழுசா உடைய முடியல....

என் கண்ணீர் இப்ப
சத்தம் போடாது.
மௌனத்துக்குள்ள
கரைய பழகிட்டுச்சு...

நான் உன் கிட்ட
எதுவும் கேட்கல... பதில் வேண்டாம்னு
நானே முடிவு பண்ணிட்டேன்.

சுகம் வேண்டாம்....அதிர்ஷ்டம் வேண்டாம்....
ஒரு நாள் கூட
சுமை குறையலன்னாலும்,
இந்த மூச்சு
நிக்காம இருக்க
பார்த்துக்கோ...


உன் மேல இருக்க நம்பிக்கை
இன்னும் போகல.
அது
கூச்சலில்லாம
உள்ளுக்குள்ள
உயிரோட இருக்கு...


இன்னும் நான்
உன்னை விட்டுப் போகல.
போவதுக்கும்
மனம் வரல...

இல்ல…
போறதுக்கு தான்
இடம் இருக்கா சொல்லு..?

கேள்விகள் முடிஞ்ச இடத்துல,
நான் இப்ப
நின்னுட்டு இருக்கேன்.
மௌனமா.
அமைதியா. அவ்ளோதான்...

அதுவே
என் வேண்டுதல்.
42


பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன், அருண் மொழி

மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி

ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ

ஆண் : வேதனை சொல்லிடும்
ராகத்திலே
வேகுதே என் மனம்
மோகத்திலே…ஏ

ஆண் : மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி

ஆண் : காதலில் தோற்றவர்
கதை உண்டு இங்கே ஆயிரம்
ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்ம்…

ஆண் : வேண்டாத பேச்சுக்கள்
ஏன்டா அம்பி

ஆண் : காதலும் பொய்யும் இல்லை
உண்மை கதை மண்ணில் ஆயிரம்
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : உன் காதல் சஸ்பென்ஸ்
என்ன அம்பி

ஆண் : காதல் செஞ்சா பாவம்
அந்த ஆதாம் காலத்தில்
ஆண் : எதுக்கு வீணா சோகம்
கதைய முடிடா நேரத்தில்

ஆண் : பூங்கிளி கைவரும்
நாள் வருமா…ஆ
பூமியில் சொர்கமும்
தோன்றிடுமா…ஆஅ…

ஆண் : மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி

ஆண் : காற்று விடும் கேள்விக்கு
மலர் சொல்லும் பதில் என்னவோ
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : வாசங்கள் பேசாத
பதிலா தம்பி..

ஆண் : மேகம் விடும் கேள்விக்கு
வெண்ணிலவின் பதில் என்னவோ
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : கடல் ஆடும் அலை கூட
பதில்தான் தம்பி..

ஆண் : அவளின் மௌனம் பார்த்து
பதை பதிக்கும் என் மனம்

பெண் : வேண்டாத எண்ணம் வரும்
காதல் திருமணம்

ஆண் : மோகமுள் நெஞ்சிலே
பாய்கிறதே..
என் மனம் அவள் மடி
சாய்கிறதே

ஆண் : மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி

ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ

ஆண் : வேதனை சொல்லிடும்
ராகத்திலே
வேகுதே என் மனம்
மோகத்திலே…ஏ…

ஆண் : மாலை என் வேதனை
கூட்டுதடி
காதல் தன் வேலையை
காட்டுதடி



43
எந்த உறவாக இருந்தாலும்
அன்பு இருந்தால் மட்டுமே
நீ  விலகி நின்றாலும்
உன்னைத்தேடி வரும்
44
GENERAL / Re: Joker's Short Messeges
« Last post by joker on January 19, 2026, 03:33:10 PM »
And the Joker Said
"When we understand that
each day isnot one more day,
but one less, we will start
giving more value to the things
that truly matter".
45
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 19, 2026, 12:53:59 PM »
46
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on January 19, 2026, 09:26:03 AM »
47
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on January 19, 2026, 05:53:47 AM »
49
Wallpapers - Own Creations / Re: Ungal Choice 11 Chatroom Stickers by Anoth
« Last post by Dream Girl on January 18, 2026, 07:34:04 PM »
Yes
50
கவிதைகள் / நட்பு 🤝🤙 (Padithathil Pidithathu 📖)
« Last post by MysteRy on January 18, 2026, 04:54:08 PM »


கண்டதும் கை குலுக்கி
கன நேரத்தில் காணாமல் போகும்
மின்னல் நட்பு..
 
சந்திப்பில் மட்டும் சரசமாடும்.. பிறகு சிந்திக்க மறந்து போகும்
தாமரை இலை மேல் தண்ணீர் நட்பு..

காரியம் முடிந்ததும்
வீரியம் குறைத்து விலகிப் போகும்
சந்தர்ப்பவாத நட்பு..

தூரத்தில் இருந்தாலும்
நெஞ்சின் ஓரத்தில் நினைந்து கசிந்துருகும்
ஓயாத அலை நட்பு..

 கூட இருந்தே கூடி மகிழ்ந்திருந்து
குழி தோண்டி புதைத்துப் போகும் கூடா நட்பு...

இன்பமிருக்க இணைந்திருக்கும்
துன்பம் வர தூரப் போகும்
துச்ச நட்பு..

நித்தியம் என்று சத்தியம் செய்யும்
புரிதலில் பிணக்கு கொண்டு பிரிந்து போகும்
புத்தி_கெட்ட நட்பு...

நட்பின் தொடக்கம் முதல்
நாடித் துடிப்பின் அடக்கம் வரை கூடி வரும்
உயிர் நட்பு...
Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10