Recent Posts

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10
41
ஆன்மீகம் - Spiritual / Re: BIBLE VERSE of THE Day ✝️ 🙏
« Last post by MysteRy on November 25, 2025, 09:58:54 AM »
42
இசை தென்றல் / Re: இசை தென்றல் - 330
« Last post by test60 on November 25, 2025, 09:56:26 AM »
test
43
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on November 25, 2025, 09:35:18 AM »
44
வெளியே கரடுமுரடாக தெரியும்
அவளுள்தான் எத்தனை வெட்டுகளும் காயங்களும்...
சில வெட்டுகளும் பிளவுகளும்
அவள் கரம் மற்றும் பாதத்தில்
மட்டுமல்ல இதயத்திலும் தென்படுகிறது

மென்மையானவளை சிதைத்து துகள்களாக
சூழல் மாற்றினாலும் - தன்னை
மீண்டும் செதுக்கிகொள்ளும் கல்கி அவள்
தவறிழைத்து அதில் பயிலும்
கால நதியின் மாணவி அவள்...

அவளுள் நிகழும் மாற்றங்களை
யாராலும் கணிக்க முடியாது
ஏன் பலநேரங்களில் அவளாலும்
கணிக்க தான் இயலாது

அவளை உட்புகுந்து சிதைப்பவருக்கும்
சில நேரங்களில் புகலிடம் தரும்
புரியாத புதிர் அவள்...

வெட்டப்படுவோம் என்று அறிந்தே
பலிபீடத்தின் மேல் உறங்கும்
ஆட்டுக்குட்டி அவள்...

சில நேரங்களில் தன் சிறகுகளை
தானே கத்தரித்து கொள்ளும்
பறவை அவள்...

அனைத்திற்கும் ஒரு வட்டமிட்டு
அதனுள் மட்டும் வசிக்கும்
விசித்திரம் அவள்...

முழுமையாக சிதையும் முன்
சிலரை கரைசேர்த்து விட
தள்ளாடும் தோணி அவள்...

அவளின் சிரிப்பிலும் கண்ணீர் துளிகளின்
சாயல் உண்டு...

அவளே காலத்தின் பதுமை
முடிவடையா தேடல்
வழியறியா பயணம்
வண்ணமில்லா ஓவியம்
சூழலா கடிகாரம்
முழுமையடையா சிற்பம்...
45

Happy Birthdya My dear Pisasu Kutty Caesar


46
Wishes 🎁 To Our Lovable Friend ⭐ MS CANIM⭐Many More Returns Of The Day 🎉🥳🎈🎉🥳🎈


47
Wishes 🎁 To Our Lovable Friend ⭐ MR CAESAR⭐Many More Returns Of The Day
48

அவள் யார் ?

அவளின் மனது கல் போன்று இருந்தாலும்,
சிறிய உளியாய் நான் மாறி, அவளின் மனதில்
என் உருவத்தை சிற்பமாய் செதுக்குகின்றேன்!

அவள் தன் வீட்டின் கஷ்டம் போக்க வேலைக்கு போக ,
அங்கு படும் துயரங்களால் தான்
மனதை கல் ஆக்கி  கடந்து செல்கின்றாள்
தன் வீட்டின் நலனுக்காக !

அவள் கல்லாக தன்னை நினைத்தாலும்
கரைந்து கொண்டே போகிறாள்
வேலை சுமையின் காரணமாக!

அவள் கல்லாக நினைத்தாலும்,
சமூகத்தில் நடக்கும் துயரங்களினால்
அனு தினமும் பாதிக்கப்பட்டு , தினம் தோறும் அழுகிறாள் தனிமையில்
ஆறுதலுக்கு கூட அன்பு எனும் அரவணைப்பு இல்லாமல் !

அவள் வீட்டின் நலனுக்காக வேலை செல்கிறாள் என்று
புரிந்து கொள்ளாமல், அவளை நாள்தோறும் சிதைக்கின்ற
உறவுகளினால் கல் என இருந்தாலும்,
சிதறுகிறாள் சிறு துண்டுகளாய் உறவுகளின் சுடும் வார்த்தைகள்!

அவளின் மனதில் என்னைச் சிற்பமாய் செதுக்க நினைத்தேன்
ஆனால்  என் மனதையே  கல்லாக  மாற்றி அதில்
 அவள் உருவத்தை செதுக்கிவிட்டாள் அந்த அழகிய ராட்சசி!

அவள் நாள் தோறும்  என்னிடம் மட்டும்
சண்டை போடும் சண்டைக்காரி!

அவள் என் உள்ளே ஆவியாகப் புகுந்து
என்னுடன் பயணிக்கிறது
பயணத்தில் ஓர் ஒளியாய்!

தென்றல் காற்றும் கூட நுழைய முடியாத என்
இரும்பான மனதை அரை நொடிப் பார்வையால்
துளைத்து உள்ளே நுழைந்தவள் !

அவள் என்னிடம் தான் படும்  துன்பம் எல்லாம்
பகர்ந்து கொள்வாள் அனு தினமும்!
அவள் என்னை நினைக்காத நாளும் இல்லை,
நான் அவளை நினைக்காத நொடியும் இல்லை !
 
அவளின் கரம் பிடித்த அந்த நொடி
கனவாக இருந்தாலும் ,என் மனத்தில் காலத்தினாலும் அழியாதது!
அழகிய வண்ணங்களால் ஆன
வானவில்லிலிருந்து  இறங்கி வந்த தேவதை அவளே!

அவள் இடைவிடாது என்னை வம்பு பண்ணும் சிறு பிள்ளையும் அவளே!
அவளை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை !
என் வார்த்தை கூட அவள் பெயராக மாறி போனது !
அவள் யார்? அவள் தான் என்னவள்!!
49
Friends Tamil Chat Team Conveys 🎁 Birthday (25-Nov-2025) wishes 🎁 to our lovable friend ⭐ Mr. CAESAR ⭐ and wishes him Good Luck.


50
தியாகம்

தன்னை இழந்து மற்றவர் இன்புற்று இருக்க வாழும் வாழ்க்கை   இவ்வகை வாழ்க்கை இன்றைய சமுதாயத்திற்கு பொருந்துமா எல்லோராலும் கேட்கப்பட வேண்டிய ஒரு கேள்வி

மெழுகுவத்தி தன்னை உருக்கி நான் சுற்றி இருக்கும் இடத்திற்கு வெளிச்சத்தை கொடுக்கின்றது
இதே போல பல மனிதர்களை நாம் இப்ப பிரபஞ்சத்தில் காண முடியும்

கரப்பான் பூச்சிகள் இரண்டு வகைகளில் உண்டு ஒன்று முட்டையிடும் மற்றொரு வகையோ குட்டியை தன் வயிற்றில்  சுமந்து அது பிறக்கும் போது தன் வயிற்றறை கிழித்துக்கொண்டு தன் உயிரை தியாகம் செய்து தன் குட்டியை இவ்வுலகிற்கு கொடுக்கின்றது இது பல உயிரினங்களுக்கு பொருந்தும் இது தன் சந்ததியினை தடையின்றி வாழ வழி செய்கிறது

எத்தனையோ குடும்பங்களில் முதலாய் பிறந்தவன் தன் உடன் பிறந்தவள் திருமண வாழ்க்கை அமைவதற்காக காத்திருந்தேன் தன் வாழ்வை தியாகம் செய்திருப்பதை பார்த்திருக்கின்றோம்

எத்தனையோ சீமந்த பொத்திரிகள் குடும்பச் சுமையை தன் தலையில் சுமந்து தன்னுடைய தமக்கைக்கும் தனையனுக்கும்  குலதெய்வமாக வாழ்ந்திருக்கின்றார்கள்

இலக்கியங்களை பார்க்கும் போது அண்ணன் மட்டுமல்ல தம்பிக்களும் தியாக உள்ளங்கள் ஆக படைத்திருக்கின்றார்கள் கும்பகர்ணன் தன் அண்ணனுக்காக தன் உயிரை தியாகம் செய்தவன் லட்சுமணன் அண்ணனுக்காக தன் ராஜ வாழ்க்கையைத் துறந்து அண்ணனுடன் கைகோர்த்து துறவறம் புரிந்தவன் இவற்றில் கூட ரத்த பாசம் உண்டாகும் ஆனால் கர்ணனோ நட்புக்காக தன் உயிரை தியாகம் செய்து தியாகத்தின் திரு உருவமாக நின்றான்

மேலே கண்டதோ உறவு பாசம் நட்ப ஆனால் தமிழில் மேல் காதல் கொண்டு இறைவன் மேல் காதல் கொண்டு தன் இளமையையே தியாகம் செய்த அவ்வை பாட்டியை மறந்திட முடியுமா மணிமேகலையை இலக்கியத்திலிருந்து எடுத்துதான் விட முடியுமா வ உ சிதம்பரம் பிள்ளையை மறக்க முடியுமா தன் சொத்துக்கள் அனைத்தையும் நம் தாய் திருநாட்டிற்காக தியாகம் செய்த அந்த நல்ல ஆத்மாவை

மேற்கூறியவை அனைத்தும் நம் செவிகளால் மற்றும் எழுத்து வடிவமாகவே காணப்பெற்றோம்

நானோ என் இதயத்தால் என் கண்களால் தியாகச் செம்மலை என் அன்னையின் உருவில் கண்டேன்
இதை வளர்த்த அன்னை அம்மா என்று அழைப்பேன் என் அம்மா ஒரு விதிவிலக்கு மாற்றான் தாய் பிள்ளைகளான எங்களை தன் பிள்ளையாக பாவித்த தன் அண்ணன் எத்தனை அழைத்தபோதும் எங்களுக்காக எங்கள் உடன் இருந்து தன் வாழ்வை தியாகம் செய்தால் நான் கண் கண்ட என் தியாகச் செம்மல் என் அன்னையே


விடையை உங்களிடமே விடுகிறேன்  இப்பொழுதுள்ள சமுதாயத்தில் இப்படிப்பட்ட தியாக உள்ளங்களை காண முடியுமா
முடியும் எத்தனையோ தியாக உள்ளங்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்
இவ்வுலகம் அதன் வழியே இயங்கிக் கொண்டிருக்கின்றது இன்றளவும் ...


Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10