Recent Posts

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10
41
எனக்கு சின்ன வயசுல இருந்தே maths ரொம்ப பிடிக்கும்.... காரணம் class ல கவனிச்சாலே போதும் தனியா நிறைய படிக்க வேண்டியது இல்ல... அதனாலேயே எல்லா maths டீச்சரும் ரொம்ப பிடிக்கும்...

     இந்த வரிசையில சேராமா ... என் பேச்சு, எண்ணம், செயல்ல பல மாற்றத்த ஏற்படுத்துனது என் தமிழ் ஐயா தான்...

     9 ஆம் வகுப்பு படிக்கும் போது தான் ரமணன் ஐயா எனக்கு தமிழ் ஆசிரியராக வந்தார். முறுக்கு மீசை, கம்பீர நடை, தெளிவான பேச்சு, எப்போதும் வேட்டி சட்டை, மாணவர்களை கையாளுவதில் அலாதி நேர்த்தி. பேசவே தெரியாத மாணவனையும் தெள்ள தெளிவாக பேச செய்யும் ஞான செருக்கு...

      பொதுவாக பாடத்தை மட்டும் எடுக்கும் ஆசியர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர். வாரத்திற்கு இரு தொடர்ச்சியான பாடவேளைகளில் தமிழ் இலக்கிய மன்றம்... அதில் பட்டிமன்றம், கவிதை படைப்பு, பொது தலைப்பில் பேசுவது என்று தமிழின் சுவையை மாணவர்களை ருசிக்க வைத்தவர்... என்னை முதல் கவிதை எழுத வைத்ததும் என் தமிழ் ஆசானே...

       வகுப்பில் அனைவர் முன்னிலையில் பேச வைத்தவர். தமிழ் உச்சரிப்பை நெறி படுத்தியவர். எண்ணங்களை எழுத்துகளாய் மாற்ற கற்று கொடுத்தவர். பாட புத்தகங்களைத் தவிர்த்து பிற புத்தகங்களை வாசிக்க பழக்கியவர். தமிழ் இலக்கணத்தைப் புரிந்து கற்க செய்தவர். தமிழுக்கே உரித்தான கம்பீரத்தை போதித்தவர்

       தமிழ் வகுப்பு என்றால் நாங்க ஆங்கிலம் கலவாத தமிழ்ல தான் பேசியே ஆகணும்.... மீறி பேசிட்டா ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் 100 திருக்குறள் எழுதனும்... நா 500 திருக்குறள் வரை ஒரு தடவ எழுதியிருக்கேன்... பாடம் எடுக்கும் போது கொஞ்சம் கவனம் சிதறுதல் வந்தா கூட அவ்வளவு தான்.... திருக்குறள் எழுதனும்... இந்த கடினமான பயிற்சியின் பலனை இன்று பெறும் போதுதான் அருமை புரிகிறது.

        ஒவ்வொரு தமிழ் வகுப்பு ஆரம்பிக்கும் போதும் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு மூன்று செயல்பாடுகள் உண்டு.

1.  செய்தி வாசிப்பு- இது பார்த்து படிக்கிறது இல்ல.... காலையில செய்தி பார்த்து எழுதிட்டு, அத பார்க்காம வாசிக்கணும் .... அப்போ தெரியாது உண்மையாக செய்தி வாசிக்குறவங்க பார்த்து வாசிக்குறாங்கன்னு.

2. திருக்குறள் - கண்டிப்பா பாட புத்தகத்துல இருக்குற  திருக்குறள் சொல்ல கூடாது. முதல் திருக்குறள் புத்தகம் வாங்கியது அப்போது தான்.

3. இன்று ஒரு தகவல் - fm அ முதல் முறையா என்னை கேட்க வைத்தது... தினமும் காலையில 7 மணிக்கு வெறும் 5 நிமிடம் தான் அந்த நிகழ்ச்சி. அதுக்கு 6.30 கே (நடு ராத்திரி) எழுந்து குறிப்பு எடுக்க தயாராகிடனும்..

    கடின பயிற்சி தான் ஆனாலும் சிரிப்புக்கும் பஞ்சமில்லை. தமிழை  நகைச்சுவயோடும் கற்பிக்கும் சிறந்த ஆசான் எங்கள் தமிழ் ஐயா.... ஒரே ஒரு ஆண்டு மட்டும் தான் ரமணன் ஐயாவிடம் பயிலும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது... ஆனால் அந்த ஒரு வருடத்துலேயே பல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.

       தமிழைக் கொண்டு எங்களை செதுக்கிய சிற்பி ரமணன் ஐயா... என்றும் என்னால் மறக்க முடியாத, மறக்க கூடாத அரும்பெரும் ஆசான்...
42


எனது சொந்த ஊரில்  நான் படித்த நியாபகங்கள்

 6th stz படிக்கும் போது புதிய ஆசிரியை வருகை

இப்போது போல அப்போதும் சேட்டை செய்யும் மாணவன்
நான்..

அருண்னும் நானும்  கிளோஸ் நண்பர்கள்

அருண் என்னிடம் டேய் ரஹ்மத்துல்லா  இன்னைக்கு புது, டீச்சர் வராங்களாம் சொல்ல..
 நான் அப்படியா!

ஹ்ம்ம்... பார்போம் யாரு நமக்கு டீச்சர் ஆ  வராங்கனு சொன்னேன்..

Good morning சொன்னபடி டீச்சர் கிளாஸ் ரூம்க்கு வந்தாங்க...
 
உடனே எல்லா  ஸ்டுடென்ட்ஸ்ம்
எழுந்து good morning teacher சொன்னோம்..
 எனக்கு ஆச்சர்யம்,,!!

இந்த அக்கா நம்ம வீட்டு   பக்கத்துல பார்த்த மாதிரி இருக்கு என்று நான் யோசித்தேன்..
 
என்  நண்பனிடம் டேய் அருண் என் வீட்டு பக்கத்துல  4வீடு தள்ளி இருக்காங்க இந்த அக்கா சொன்னேன்...

நண்பன் அருண்  வேகமா எழுந்து  டீச்சர் நீங்க இவன் வீட்டு பக்கத்துல இருக்கீங்களாம்னு சொல்லிட்டான்..

நான் அவன் சொன்ன உடனேயே study table la தலைய வச்சு மறைந்த மாதிரி இருந்தேன் ..

டேய் என்ன டா இப்டி உடனே டீச்சர் ட்ட  போட்டு குடுத்துட்ட கேட்டேன்..

அவன் உன்னை தான் டீச்சர் பார்க்குறாங்க அங்க பதில் சொல்லுனு சிரிப்போட உக்காந்து விழுந்து விழுந்து சிரிக்கிறன்...

எனக்கும் ஒன்னும் புரியல அப்படியே எழுந்தேன்..

டீச்சரின் பெயர் தன லட்சுமி..

தனம் அக்கா உங்களை எனக்கும் தெரியும் சொல்ல..

டீச்சர்.. அப்படியா இங்க வா சொல்ல..

நான் டீச்சர் table கிட்ட போனேன்

டீச்சர்..
எப்படி தெரியும் கேட்க..

உடனே எல்லா மாணவர்களும் சிரிக்கிறாங்க...

டீச்சர்.. Silent silent னு  sonna சில நிமிடம் கழித்து எல்லா மாணவர்களும் அமைதியா இருந்தாங்க....

டீச்சர்...
நீ சொல்லு எப்படி தெரியும்

நான் தனம் அக்கா என்ன தெரியலையா...

 டீச்சர் தெரியல சொல்லிட்டாங்க..

டீச்சர் யாரும் சும்மா சும்மா அவனை பார்த்து சிரிக்க கூடாது சொன்னாங்க...

எனக்கு ஒருபுறம் அழுகை வேற வர ஆரபிச்சுருச்சு..

அப்படியே study table la. தலையை மறச்சு  கண்ணை துடைத்தேன்..

டீச்சர் எல்லா மாணவர்கள் பெயரையும் கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க..

என்னை தவிர மற்ற எல்லாரும்  தன் பெயர்களை சொன்னார்கள் மாணவர்கள்...
 
டீச்சர்..
 அருண்னை பார்த்து உன் நண்பன் பேரை சொல்ல சொல்லு. சொன்னாங்க..

எனக்கு மனசு கஷ்டமா இருக்கு..
மனசுக்குள்ள நானே பேசுறேன்..
 என்ன டா ரஹ்மத்துல்லா வ. தெரியலனு சொல்லிட்டாங்க
அருண் டேய் எழுந்து பேரை சொல்லுனு சொன்னான்...

நானும் எழுந்தேன்
அக்கா மை நேம் இஸ் ரஹ்மத்துல்லா  சொன்னேன்...

டீச்சர்.. உனக்கு கொழுப்பா திரும்ப திரும்ப அக்கா சொல்லற சொன்னாங்க...

நான் வேகமா இல்லை டீச்சர்..மை நேம் இஸ் ரஹ்மத்துல்லா  சொன்னேன்..

டீச்சர்...
 இப்போ நீ குட் பாய் னு சொன்னாங்க...

அப்போ தான் எனக்கு தெரிந்தது  பொது இடத்தில்...

யாரையும் அப்படி கூப்பிட கூடாது என்று தெரிந்து கொண்டேன்..

டீச்சர் தமிழ் பாடம் மற்றும் 6th std எங்க கிளாஸ் டீச்சர்
எங்களுக்கு..

டீச்சர்.. கிளாஸ் முடிந்து போகும் போது

மாணவர்களிடம்..
ரஹ்மத்துல்லா என் வீட்டு பக்கத்துல தான் இருக்கான்..
சொன்ன உடனே எனக்கு எண்ணற்ட்ற மகிழ்ச்சி..

அந்த தனம் டீச்சர்ரை இன்று அல்ல எப்பொழுதும் மறக்க மாட்டேன்..

எழுத்தும் & கல்வி அறிவித்தவன் இறைவனுக்கு சமம்..
 என்று பெரியோர்கள் சொல்வது போல்

தனம் டீச்சர் எல்லா மாணவர்களுக்கும்..

நல்ல கல்வியை சொல்லி தந்தாங்க..

இன்றும் எனது சொந்த ஊரான
திண்டுக்கல் (dindugal)
 நான் எப்போதெல்லாம் போறேண்ணோ அப்போதெல்லாம்..
தனம் அக்கா மற்றும்  அவங்க குடும்பத்தினரை
சந்தித்து பேசிட்டு தான் வருவோம்....

நானும் என் குடும்பதிணறும்..
43
பள்ளி படிப்பை முடிக்கும் வரை ஆசிரியர்கள் என்றாலே வெறுப்பு தான் என் மனதில். சிறு வயதில் திட்டுவதும் அடிப்பதும் சேட்டை பண்ணினால் வெளியே அனுப்புவதும் தான் என் நினைவில் இருக்கு.

அந்த வயதில் நானும் ஆசிரியர்களை புரிந்து கொண்டது இல்லை. அவர்கள் எப்படி என்னை அடிக்கலாம் நான் அங்கே போகமாட்டேன் வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்று உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறேன்.

 என்னோட அப்பா தான் ஆசிரியர்கள் உன்னோட எதிரி இல்லை உன்னை நல்வழியில் நடத்ததான் நினைப்பர். அப்பாவை யாராவது இப்படி திட்டினால் உன் மனது கஷ்டபடாதா அதுபோல தானே ஆசிரியர்களும் என்று புரிய வைத்தார்.

 பள்ளி படிப்பை முடித்தேன். இனி படி படி என்று தொல்லை பண்ண மாட்டார்கள் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தே கல்லூரியில் காலெடுத்து வைத்தேன்.

 முதல் நாளே HOD mam என் அப்பா பெயரை சொல்லி அவங்க பொண்ணு யாரு என்று கேட்கும்போது நான் எழும்பி நின்றேன். உன்னோட அப்பா எனக்கு friend தான் நல்லா படிச்சி அவர் பெயரை காப்பாற்று என்று சொன்னார். கடுப்போடு வீட்டிற்கு சென்று அப்பாவிடம் சண்டை போட்டேன். நீ அரியர் இல்லாமல் பாஸ்சானாலே போதுமென்றார்.

 சீனியர்ஸ் என்னை பார்த்தால் பக்கத்து காலேஜ் HOD sir மகள் என்று பேச வருவர். நான் போகும் போதும் வரும் போதும் கைகாட்டி அவர்களுக்குள் பேசுவர். அப்பாவினால் எனக்கு கிடைத்த மதிப்பை அன்றுதான் முதல் முறை பார்த்தேன். சீனியர்ஸ் நிறைய பேர் அவரிடம் tution படிப்பவர்களே. சார் நடத்தும் போது பாடங்கள் ஈசியா புரியும் என்று பலர் சொல்லி கேட்டிருக்கேன். நான் ஒரு நாள் கூட அவரிடம் பாடங்களில் சந்தேகம் கேட்டது இல்லை.

1st செமஸ்டரில் அவர் பாடத்தில் மட்டும் மார்க் கம்மியாக எடுத்தேன். நான் சொல்லி தருகிறேன்  என்றவரிடம் கஷ்டமான பாடத்தில் பாஸானதே பெரிது வீட்டிலும் படி என்று தொல்லை பண்ணாதிங்க என்று ஓடி விட்டேன். வீட்டில் பேசும் நேரங்களில் எனக்கே தெரியாமல் அவர் subjectஐ என் மனதில் ஏற்றினார். கஷ்டமான subject என்று நான் ஒதுக்கி வைத்ததை நல்ல மார்க் எடுத்து பாஸ்சாக வைத்தார்.

 ஆசிரியர் தினத்தில் கை நிறைய பேனா சாக்லேட் புத்தகம் என்றுதான் வீட்டுக்கு வருவார். அந்த
சாக்லேட்களை சாப்பிடும்போது அதன் மதிப்பு தெரியவில்லை.  அழகிய பேனாக்களை எல்லாம் நான் எடுத்து கொள்வேன். அன்று அதனை ஒரு பரிசு பொருளாக மட்டுமே பார்த்தேன். இன்று இதை எழுதும்போது என் தந்தையின் திறமை மீது மாணவர்கள் கொண்ட மதிப்பை உணர்கிறேன்.

 என் வாழ்க்கையில் எத்தனையோ ஆசிரியர்கள் வந்து சென்றாலும் இந்த  தலைப்பை பார்த்ததும் என் மனதில் வந்தது என் அப்பா மட்டுமே.

தன் மகள் முதலிடத்தில் வர வேண்டும் என்று ஒருநாளும் கட்டாயபடுத்தியது இல்லை. ஒரு தோழனாக தட்டி கொடுத்தே என்னை காலேஜ் முடிக்க வைத்தார்.

எங்க கிராமத்தில் எங்கள் வீட்டை காலேஜ் வாத்தியார் வீடு என்றுதான் சொல்லுவார்கள். அவரிடம் ஒரு வார்த்தை கேட்டால் சரியாக இருக்கும் என்று சொல்லுவர். ஆசிரியராக இருந்த அவர் சரியான முடிவு சொல்லுவார் என்ற அவர்களின் நம்பிக்கையை இன்று புரிந்து கொண்டேன்.

 ஆசிரியர் பணியில் ஓய்வு பெற்றாலும் இன்னும் அவர் subject ல் ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்.

அப்பாவாக என் மனதில் இருந்தவரை ஒரு ஆசிரியராக அவர் நினைவுகளை மீட்டி பார்க்க வாய்ப்பு கொடுத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' program கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
44
இந்த வாரம் எனது விருப்ப பாடல்...
வரவு எட்டணா செலவு பத்தண்ணா 🕺💃
படம் : பாமா விஜயம்

Annual day ku pasanga dance pannum pothu namalaium ariyaama attam poda vaikura song... Intha songe Semma comdey a irukum. Kuzhanthai natchathirangal attagasama aatamm nadippu nu irukum...


45
Song: Thenmerku Paruvakatru
Movie: Karuthamma
Year: 1994
Music Director: A.R. Rahman
Pàdal varikal. vairamuthu
Yenaku piditha varigal
Vaanodum mannodum illaadha vannangal
Pennodum kannodum naan kaangiren
Thaalaatil illaadha sangeetha svarangal
Paaraatum un paatil naan ketkiren
Mazhaithuli enna thavam dhaan seithadho
Malar konda maarbodu thotaadudhae Ar sir fans ku dc panren tq ❤️❤️❤️
46
   
      வணக்கம் இசைத்தென்றல்,

     இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்...
     
     "அடி ராங்கி, ராங்கி ராங்கி... நீ போற என் உசுர வாங்கி..."
   
      இந்த பாடல் என்னுடைய ராங்கிக்காக விரும்பி கேட்கிறேன்...

     Movie : Saatai
     Singer : Santosh Hariharan, Anitha
     Lyrics  : Yugabharathi
     Music by : D. Imman
     Directed by : Anbazhagan

     எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இதோ...


     ஒறங்காம கெடக்கேனே நீ என்னத்துக்கு கண்ணுக்குள்ள நொழஞ்ச....
     தவறேதும் புரியாம நீ என்னத்துக்கு நெஞ்ச வந்து அறஞ்ச....
     அய்யோ பாடா படுத்துறியே, பாயா சுருட்டுறியே....

      மூடி வச்ச ஆசையெல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே....
      மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற...
      வெட்டி பையன் என்னகூட புத்தகமா மாத்துற...

      உறி போல குறி பாத்து
      என்ன சில்லு-சில்லா ஒடைக்கிறியே...
      என்ன நாரா கிழிக்கிறியே, நல்லா குழப்புறியே....

      என்றும் அன்புடன்,

      கணிதன்...
50
Hi rj & dj,


Song : Kanchana Mala song
Movie Name : Vandhaan Vendraan

Indha songla vara beats semmaya irkum... Inbetweenla vara male and female lyrics part semmaya irkum.... Dedicate to all music lovers ❤🎶
Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10