Recent Posts

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10
41
பொதுப்பகுதி / Re: குறுந்தகவல் Raj
« Last post by RajKumar on January 21, 2026, 05:10:29 PM »
நிலைமை மாறினால்,
மகிழ்ச்சியாக
இருக்கலாம்
என்பது பொய்...,

மகிழ்ச்சியாக
இருந்தாலே,
நிலைமை மாறிவிடும்
என்பதே உண்மை...!!!

42
📢 முதுமையில் தனித்து விடப்படாமல், எவருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க இப்போதே இதைப் புரிந்து கொள்ளுங்கள்:
🫥⚖️ 01. நிலத் தகராறுகளில் தலையிடாதீர்கள்: பக்கத்து வீட்டுக்காரனுக்கு பாடம் புகட்டுகிறேன் என்று நீதிமன்ற வாசல்களில் தவவம் கிடக்காதீர்கள். வழக்கு முடிவதற்குள் நீங்கள் மண்ணுக்குள் போயிருக்கலாம். நீங்கள் போராடி வென்ற நிலத்தில் நீங்கள் அல்ல, வழக்கறிஞர்களே குடியேறுவார்கள்.

🫥🚗 02. பழைய வாகனங்கள் என்னும் சுமை: ஐந்து லட்சம் லாபம் என்று கருதி "செகண்ட் ஹேண்ட்" வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். சாலையில் ஓடுவதை விட அது கராஜில் இருக்கும் நேரம் அதிகமானால், நெஞ்சுவலி வாகனத்திற்கு அல்ல, உங்களுக்குத்தான் வரும்.

🫥🏠 03. சொத்துக்களை எழுதி வைக்க அவசரப்படாதீர்கள்: பிள்ளைகள் இப்போது "தெய்வங்கள்" போலத் தெரிந்தாலும், கடைசி சதம் வரை சொத்துக்களை எழுதித் தந்த பிறகு, அந்த வீட்டிலேயே நீங்கள் ஒரு "தேவையற்ற பொருளாக" மாறக்கூடும். பிள்ளைகள் கெட்டவர்கள் அல்ல, ஆனால் உலகம் கொடூரமானது. எதையும் கையில் வைத்துக்கொண்டே உயிர் விடுங்கள்.

🫥💰 04. கடைசி சேமிப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: 30 வருடங்கள் உழைத்துச் சேர்த்த ஓய்வூதியத் தொகையை (Pension) பிள்ளைகளின் தொழிலுக்காக கொடுத்துவிடாதீர்கள். இறுதியில் மருந்து வாங்குவதற்கும் அந்த பிள்ளைகளிடமே கையேந்த வேண்டிய நிலை வரலாம்.

🫥☝️ 05. பிள்ளைகளின் வீடுகளில் ஒட்டிக்கொண்டிருக்காதீர்கள்: "நமது பிள்ளைகள்தானே" என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள். அளவுக்கு மிஞ்சி நெருங்கினால் உங்கள் அன்பு அவர்களுக்கு "தொல்லையாக" மாறும். உங்களுக்கென ஒரு சிறு இடத்தைத் தேடிக்கொண்டு சுதந்திரமாக இருங்கள்.

🥰⛰️ 06. யாத்திரை செல்ல பிள்ளைகள் வரும் வரை காத்திருக்காதீர்கள்: "பிள்ளைகளுக்கு லீவு கிடைக்கும்போது என்னை அழைத்துச் செல்வார்கள்" என்று காத்திருக்காதீர்கள். அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது உங்களால் நடக்க முடியாமல் போகலாம். தெம்பு இருக்கும் காலத்திலேயே தனியாகவாவது பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள்.

😋🍲 07. சாப்பிட நினைப்பதை இன்றே சாப்பிடுங்கள்: உங்கள் துணைக்கு (மனைவி/கணவன்) பிடித்தமானதை இன்றே வாங்கிக் கொடுங்கள். இறந்த பிறகு சவப்பெட்டியின் அருகே சோற்றுத் தட்டை வைத்து "அவருக்கு இது ரொம்பப் பிடிக்கும்" என்று அழுவது ஒரு கேலிக்கூத்து!

🥰🛋️ 08. ஓய்வை உருவாக்கிக் கொள்ளுங்கள்: இறக்கும் வரை வேலைகளைக் குவித்து வைத்துக் கொள்ளாதீர்கள். காலை முதல் இரவு வரை ஓடிக்கொண்டே இருந்தால் இறுதியில் நீங்கள் வென்றது எதுவுமே இருக்காது. உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுங்கள்.

☝️✨️😴 09. தூக்கத்தைப் போன்ற மருந்து வேறில்லை: தேவையற்ற தூக்கமின்மையைக் குறைத்து, நிம்மதியாகத் தூங்குங்கள். நீங்கள் நோய்வாய்ப்படும்போது உங்கள் வலியை யாரும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், அதை நீங்கள் தனியாகவே அனுபவிக்க வேண்டும்.

🫥🌘 10. "தனியாக" வந்ததை மறக்காதீர்கள்: யாராவது ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பைக் குறைக்கப் பழகுங்கள். உங்கள் நிழல் கூட உங்களைக் கைவிடும் ஒரு நாள் வரும். இறப்பதும் தனியாகத்தான், அதனால் தனியாக மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி என்பது யாரோ தருவதல்ல, அது நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒன்று! ✨
43

 *இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்*.

பாத்து செஞ்ச  நம்ம உடம்பு ஒரு லாஜிக்!

டயரு தேயுது ரோட்டுல... ஆனா,
நம்ம பாதம் இரண்டு பாருங்க
நாடு சுற்றியும் தேய்மானம் இல்லை..
செருப்பு தான் அடிக்கடி பிஞ்சு போகுது,
ஆனா உள்ளங்கால் இன்னும் வழ வழப்பா இருக்குது!

உடம்புல முக்கால்வாசி தண்ணி இருக்கு,
ஆனா ஆயிரமாயிரம் ஓட்டை இருந்தும்
அரை சொட்டு கூட ஒழுகாம நிக்குது!

நூறு வாட்ஸ் பல்புக்கே வயரு சுவிட்ச் வாங்க வேணும்,
ஆனா பேட்டரி இல்லாமலே இதயம் துடிக்குது – அதுவும்
ரீசார்ஜ் இல்லாமலேயே ரிதமா அடிக்குது!

லட்சம் ரூபாய் கேமரா கூட மக்கர் பண்ணும்,சர்வீஸ் கேட்கும்!
நம்ம கண்ணு மட்டும் பளிச்சின்னு படத்தை பாக்க வைக்கும்.
 பாத்ததை பட்டுனு மூளைக்கு சொல்லும்

நாக்குல மைக்ரோஸ்கோப் எதுவுமே இல்லை,
சாப்பிடும் உணவுல உப்பு குறைஞ்சா – அது
சப்பு கொட்டி சண்டை போடும்
 
எப்பவோ தின்னது எல்லாம் செரிச்சு முழங்கை அளவு பிறந்த நம்மை முழுசா ஆக்கி முழங்க வைக்குது!

படிச்சதை எல்லாம் படிய வைக்குது, பட்டுனு பதில் சொல்லி பகுமானம் காட்டுது!

மிஷினுக்கு எல்லாம் சர்வீஸ் வேணும்,
நம்ம ரத்த ஓட்டத்துக்கு – எந்த
ஆயிலும் தேவையில்ல,
on off  எதுவும் தேவையில்ல!
தொடர் ஓட்ட சாதனை புரியும்!

சென்சார் இல்லாமலே தோலு உணருது,
கொசு கடிச்சா – கை
சரியான ஸ்பாட்டுக்கு தானே பாயுது

எல்லா சத்தத்தையும் காது பிரிச்சு மேயுது!
ஆனா பொண்டாட்டி கூப்பிட்டா மட்டும் – அது
ஏனோ கேட்காத மாதிரி நடிக்குது!

எண்ணி எண்ணி பார்த்தும் எண்ணி முடியல!
இறைவன் செஞ்ச மேஜிக் அளவில்லை

பார்த்து பார்த்து நாம் செய்ய முடியுமா

படைச்ச இறைவனுக்கு
நன்றி சொல்லி
பத்திரமா பாத்துக்குவோம்

தினமும் காலையில
எழுவது கூட எவ்வளவு
பெரிய மிராக்கிள்

 எல்லா படைப்பையும்
பார்த்து வியப்போம்!
பக்குவமா நடப்போம்!!
44


*குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை*
*உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க*

*ஓடியதென்ன*
*பூவிதழ் மூடியதென்ன*
*என் மனம் வாடியதென்ன*

*ஒரு மாலையிடவும்*
*சேலை தொடவும்*
*வேளை பிறந்தாலும்*

*அந்தி மாலை பொழுதில்*
*லீலை புரியும் ஆசை பிறக்காதோ*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன

பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன ...

*மேள தாளம் முழங்கும்*
*முதல் நாள் இரவு*
*மேனி மீது எழுதும்*
*மடல் தான் உறவு*

*தலையில் இருந்து பாதம்*
*வரையில் தழுவி கொள்ளலாம்*

அதுவரையில் நான்

*அதுவரையில் நான்*
*அனலில் மெழுகோ*
*அலை கடலில்தான்*
*அலையும் படகோ*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் தேடியதென்ன

என்னிடம் நாடியதென்ன

ஒரு மாலையிடவும்
சேலைத் தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ ...

*காற்று வந்து தொடத்தான்*
*கொடியே இருக்க*

*கடலில் வந்து விழத்தான்*
*நதியே பிறக்க*

இடையில் வந்து தடைகள்
சொல்ல எவரும் இல்லையே

பிறர் அறியாமல்

*பிறர் அறியாமல்*
*பழகும் போது*
*பயம் அறியாத இதயம் ஏது*

*வீணை மீது விரல்கள்*
*விழுந்தால் ராகம்*
*ராகம் நூறு ரகங்கள்*
*விளைந்தால் யோகம்*

உனது ராகம் உதயம் ஆகும்
இனிய வீணை நான்

*சுதி விலகாமல்*
*இணையும் நேரம்*
*சுவை குறையாமல்*
*இருக்கும் கீதம்*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன

என்னிடம் நாடியதென்ன

ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்
வேளை பிறந்தாலும்

அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ ....


படம் : *அழகே உன்னை ஆராதிக்கிறேன்*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்*
பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா*
45


*தலையைக் குனியும் தாமரையே*
*தலையைக் குனியும் தாமரையே*

*என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து*
*என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து*

தலையைக் குனியும் தாமரையே ...

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆ ஆ ஆ ஆ

*நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்*
*பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்*

பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்

*அமுதம் வழியும் இதழைத் துடைத்து*
*விடியும் வரையில் விருந்து நடத்து*

தலையைக் குனியும் தாமரை நான்

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

தலையைக் குனியும் தாமரையே ...

*காத்திருந்தேன் அன்பே*
*இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ*

*பூமகள் கன்னங்கள்*
*இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ*

ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா

*நீயொரு பொன் வீணை*
*அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா*

பூவை நுகர்ந்தது முதல் முறையா
ம்ம் ம்ம் ம்ம்ம்

வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையா
இது சரியா

சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆ ஆ ஆ ஆ

*பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து*
*உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி*

உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி

*இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்*
*புதிய அலைகள் கரையை உடைக்கும்*

தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

தலையைக் குனியும் தாமரையே ...



படம் : *ஒரு ஓடை நதியாகிறது*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரி*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *இளையராஜா*
46
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும்  எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில்பட்டியில் ஒரு பாட்டி மூட்டையுடன் ஏறினார்.
கம்பார்ட்மென்டில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் சொன்னாள். "பேராண்டி நான் நாளை காலை 7 மணிக்கு விழுப்புரத்தில் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். அதிகாலை 4 .00 மணிக்கு இந்த ரயில் விழுப்புரத்தை சென்றடையுமாம். நான் தூங்கி விடுவேன் என்னை விழுப்புரத்தில் 4.00மணிக்கு எழுப்பி இறக்கி விட்டுவிடு. நான் எழுந்திருக்கவில்லை என்றாலும் குண்டுக்கட்டாக தூக்கி பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விடு. நான் விடிந்ததும் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபத்திற்கு சென்று விடுவேன். சிரமத்திற்கு மன்னித்துக் கொள். இந்த உதவியை மட்டும் எனக்காக செய்து விடு" என்றாள்.

அவன் சொன்னான் " பாட்டி இதென்ன உதவி.. கண்டிப்பாக நான் உங்களை விழுப்புரத்தில் இறக்கி விட்டு விடுகிறேன் அதற்காக உதவி என்று பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள்" என்றான். பாட்டியும் அவனை நம்பி நன்றாகத் தூங்கி விட்டாள்.

காலை ஏழு மணிக்கு எக்மோர் ஸ்டேசன் வந்ததும் அந்த பாட்டி குய்யோ முறையோ என்று கத்தி அந்த இளைஞனை திட்டுகிறாள். "நீ நல்லா இருப்பியா நாசமா போயிருவ. உன்னை நம்பி தானடா நான் தூங்கி விட்டேன்... முடியாது என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நான் தூங்காமல் இருந்திருப்பேன் அல்லது வேறு யாரிடமாவது சொல்லி இருப்பேனே , இப்போதே மணி ஏழாகி விட்டதே இனி நான் எப்படி பஸ் பிடித்து எத்தனை மணிக்கு விழுப்புரத்துக்குப் போவேன் முகூர்த்தம் முடிந்து விடுமே" என்று திட்டிக் கொண்டே இருந்தாள். பக்கத்திலிருந்தவர்கள் விசயத்தைக் கேள்விப்பட்டு அவர்களது பங்குக்கு அவர்களும் அவனை திட்டி சாத்துசாத்து என்று சாத்தினார்கள். அவன் இந்த திட்டையும் அடியையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் கேட்டார்கள் "ஏன்டா பாட்டியும் நாங்களும் உன்னை இந்த திட்டும் இப்படி அடித்துக் கொண்டிருக்கிறோம் நீ எதையும் பொருட்படுத்தாமல் அப்படி என்னத்தையடா யோசித்துக் கொண்டிருக்கிறாய்" என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் சொன்னான் "இந்தப் பாட்டியே என்னை இப்படித் திட்டுகிறதே இந்தப் பாட்டி என்று நினைத்து இன்னொரு பாட்டியை சொல்லச் சொல்ல கேட்காமல் அதிகாலை 4.00மணிக்கு தரதரவென்று இழுத்து விழுப்புரம் பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விட்டு வந்தேனே அந்த பாட்டி எப்படி திட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்... :) :)
47
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 21, 2026, 01:23:00 PM »
48
கவிதைகள் / Re: மைல்கல்
« Last post by joker on January 21, 2026, 12:14:59 PM »
மைல்கல் பற்றிய கவிதை அருமை சகோ
தொடர்ந்து எழுதுங்கள்
49
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on January 21, 2026, 12:04:15 PM »
50
Poooo ddddd kaateri.... Neee silent nuuu neeee yeeee sonaaa count illa dddd👊👊👊👊mathavangala sola solu ddddd KAATERI 🤣🤣🤣🙄
Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10