50
« Last post by Clown King on November 18, 2025, 08:53:45 PM »
இணைந்த கைகள்
இணைந்த கைகள் மட்டுமல்ல நெஞ்சமும் கூட
இரு நெஞ்சம் மட்டும் அல்ல இரு வீட்டார் உறவுகளும் கூட
எத்தனை கனவுகள் எத்தனை என்ன ஓட்டங்கள் எத்தனை விதமான பரபரப்பு எத்தனை விதமான எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஒன்று கூடும் இந்த இரு கைகள் இணையும் போது
கரம் பிடித்தவளும் கரம் கொடுத்தவனும் இல்வழக்கையை தொடங்கும் நாள் அனைவரது ஆசீர்வாதங்களும் வாழ்த்து மடல்களும் குவிந்து உலகிற்கு உரக்கச் சொல்லும் நாள் நாங்கள் எங்கள் வாழ்க்கையை தொடங்குகிறோம் என்று
இவளுக்கு இவன் என்றும் இவனுக்கு இவள் என்றும் கடவுள் தீர்மானித்து எழுதி வைத்த நாள் இந்த இரு கைகளும் இணையும் நாள்
இதோ இதுவும் என் வாழ்வில் நடந்தேறியது
என் வாழ்க்கை துணையாய் அல்ல என் வாழ்க்கையாகவே வந்தவள் என் கரம்பிடித்தவள் என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் என் பிறப்பிற்கு நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்போது வாழும் வாழ்க்கைக்கும் அச்சாரமாய் துணை நின்றவளாய் எனக்கு
வாழ்வை தந்தாய்
காற்றாற்று வெள்ளம் போல் சென்ற என் வாழ்க்கை நெறிப்படுத்தி
அழகிய நதியாய் மாற்றினாய்
திக்குத் தெரியாத சென்ற என்னை
உன் வாழ்வில் சேர்த்து அடையாளம் தந்தாய் என் வாழ்விற்கு
கோவக்காரன் திமிரு பிடித்தவன் என்று தூற்றிய வாய்கள்
நீ வந்த பிறகே எனக்கும் மனிதன் என்ற அங்கீகாரம் கொடுத்தனர்
தரிசு நிலம் போல் இருந்த என் வாழ்க்கை உன் வரவால்
என் வாழ்வில் பயிர் தழைக்கச் செய்தாய்
பாலைவனமாய் இருந்த என் வாழ்வு
சோலை வனமாய் மாறியது
உன் வரவால் இன்பம் தழைக்கச் செய்தாய் ஒவ்வொரு நொடியும்
உன் உதிரம் கொண்டு அழகான இரண்டு உயிருள்ள ஓவியங்களை தந்து எனையும் ஆண்மகன் ஆக்கினாய்
நிலையான வாழ்வை தந்தாய்
அமிர்தம் போன்ற சுவையை தந்தாய்
என் வாழ்விலும் தென்றலை தழுவச் செய்தாய்
நினைத்துப் பார்த்தோம் இருவரும்
இதே அன்பும் பாசமும் என்றும்
நிலைத்திருக்க வேண்டும் என்று
உன் அன்பிலும் பாசத்திலும் கண்டேன் இவ்வுலகை
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆன்றோர் வாக்கு நான் ஏதோ ஒரு பிறவியில் செய்த நற்செயல் நீ எனக்கு வாழ்க்கை துணையாய் கிடைத்தாய் அந்தக் கடவுளும் எனக்கு வரம் தந்தார் தந்த கடவுள் கண்ணையும் மூடிக்கொண்டார் இருப்பினும் இல் வாழ்க்கையை நல் வாழ்க்கையாய் உன்னோடு தந்ததற்கு ஆயிரமாயிரம் கோடி நன்றிகள் கடவுளுக்கு ...