41
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 395
« Last post by Thooriga on January 19, 2026, 10:27:47 PM »நான் பேச வரல....கேட்கவும் வரல..
சும்மா நின்னு
உன்னைப் பார்க்க தான் வந்தேன்..
உன் முன்னாடி நின்னா, என்ன கேட்கணும்னே
எனக்கே தெரியல..
ஒரு காலத்துல நிறைய கேள்விகள் இருந்தது.
உன்னைக் கேள்வி கேட்கவும்
செஞ்சிருக்கேன்.
ஏன்?
எப்படி?
இன்னும் எத்தனை நாள்?
எனக்கு மட்டும் தானா?
இப்படி எல்லாம்…
ஆனா இப்ப,
அந்த கேள்விகள் எல்லாம்
சோர்ந்து
மௌனமா மாறிடுச்சு...
கடந்து வந்த பாதை
ரொம்ப நீளம்...
திரும்பிப் பார்க்க
சக்தி இல்ல...தெம்பும் இல்ல...
சிரிச்ச முகத்தோட
வாழ பழகிட்டேன்.
வேற வழி இல்லாம.
உள்ளுக்குள்ள வலி இருந்தாலும்,
அது
என்னோட தனிப்பட்ட விஷயமா
மாறிடுச்சு...
சரணடையணும்னு தான் ஆசை.
முழுசா...
எதையும் பிடிச்சுக்காம.
“நீயே போதும்”
என்று சொல்லும் அளவுக்கு.
ஆனா
என் கைகளில்
கடமைகள் இருக்கு...
என் தோள்களில்
பொறுப்புகள் இருக்கு...
அதை இறக்கி வைக்க
இடமில்லை,நேரமில்லை, சில நேரம்
அனுமதியும் இல்லை.
அதனால தான்
உன் காலடியில் கூட
முழுசா உடைய முடியல....
என் கண்ணீர் இப்ப
சத்தம் போடாது.
மௌனத்துக்குள்ள
கரைய பழகிட்டுச்சு...
நான் உன் கிட்ட
எதுவும் கேட்கல... பதில் வேண்டாம்னு
நானே முடிவு பண்ணிட்டேன்.
சுகம் வேண்டாம்....அதிர்ஷ்டம் வேண்டாம்....
ஒரு நாள் கூட
சுமை குறையலன்னாலும்,
இந்த மூச்சு
நிக்காம இருக்க
பார்த்துக்கோ...
உன் மேல இருக்க நம்பிக்கை
இன்னும் போகல.
அது
கூச்சலில்லாம
உள்ளுக்குள்ள
உயிரோட இருக்கு...
இன்னும் நான்
உன்னை விட்டுப் போகல.
போவதுக்கும்
மனம் வரல...
இல்ல…
போறதுக்கு தான்
இடம் இருக்கா சொல்லு..?
கேள்விகள் முடிஞ்ச இடத்துல,
நான் இப்ப
நின்னுட்டு இருக்கேன்.
மௌனமா.
அமைதியா. அவ்ளோதான்...
அதுவே
என் வேண்டுதல்.

Recent Posts


