41
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 390
« Last post by KS Saravanan on December 08, 2025, 10:19:40 PM »அவளின் கண்கள்..!
ஆதவன் மறையும் நேரம்
வானம் மெல்ல குளிரும் தருணம்
மங்கையவள் மதியழகில் மயங்கி
மணாளன் மதிமயக்கம் கொண்டேன்..!
நிலவை காணவில்லை
இவள் ஒளியில் மறைந்ததேனோ
இரவில் ஒரு சூரியனாய்
கண்கள் கூச வைக்கிறாள்..!
ஆதவனும் விடைபெற்று செல்ல
என் நிழலும் எனை விட்டு விலக
அவள் கண்களின் ஒளி இருளை நீக்க
என் கண்களோ அவளிடம் கைதாகி
பதில் ஏதும் பேசாமல் மனம்
அவளை நோக்கி செல்கிறதே..!
வானத்து ரதியோ இவள்
பூமியின் தேவதையோ
இல்லை சுவர் இல்லா ஓவியமா
மின்னலாய் அவளின் பார்வை
வானவில் வர்ணமாக
நட்சத்திரங்களாய் மின்னுகிறாள்..!
அவள் கண்களின் மௌனமோ
ஆயிரம் வார்த்தைகள் பேசுதே
கடைக்கண் பார்வையால்
பாற்கடலும் பொங்குமே
அமுதம் அள்ளி தந்திட்டு
ஆனந்தமாய் இருக்குமே..!
நோக்குவர்மம் பயின்றவளாய்
மனதை அவள் வசமாக்கினால்
அவளின் நெற்றி பொட்டு மத்தியில்
என்னை கட்டி போட்டு வைக்கிறாள்..!
வில்லேந்திய புருவமோ
கண்களில் அம்பெய்தி நிற்குதே
கேடயம் ஏதும் இல்லாமல் நான்
வீழ்த்துவிட நினைக்கிறேன்..!
சத்தம் ஏதும் இல்லாமல்
நித்தம் என்னை கொள்கிறாள்
மடிந்து விழ எண்ணியே
மீண்டும் அவளை காண்கிறேன்
மூச்சி காற்றாய் மிதக்கிறேன்
அவள் நினைவை தாங்கியே
மறுஜென்மம் வேண்டுமே
மீண்டும் அவளால் வீழ்ந்திடவே..!
ஆதவன் மறையும் நேரம்
வானம் மெல்ல குளிரும் தருணம்
மங்கையவள் மதியழகில் மயங்கி
மணாளன் மதிமயக்கம் கொண்டேன்..!
நிலவை காணவில்லை
இவள் ஒளியில் மறைந்ததேனோ
இரவில் ஒரு சூரியனாய்
கண்கள் கூச வைக்கிறாள்..!
ஆதவனும் விடைபெற்று செல்ல
என் நிழலும் எனை விட்டு விலக
அவள் கண்களின் ஒளி இருளை நீக்க
என் கண்களோ அவளிடம் கைதாகி
பதில் ஏதும் பேசாமல் மனம்
அவளை நோக்கி செல்கிறதே..!
வானத்து ரதியோ இவள்
பூமியின் தேவதையோ
இல்லை சுவர் இல்லா ஓவியமா
மின்னலாய் அவளின் பார்வை
வானவில் வர்ணமாக
நட்சத்திரங்களாய் மின்னுகிறாள்..!
அவள் கண்களின் மௌனமோ
ஆயிரம் வார்த்தைகள் பேசுதே
கடைக்கண் பார்வையால்
பாற்கடலும் பொங்குமே
அமுதம் அள்ளி தந்திட்டு
ஆனந்தமாய் இருக்குமே..!
நோக்குவர்மம் பயின்றவளாய்
மனதை அவள் வசமாக்கினால்
அவளின் நெற்றி பொட்டு மத்தியில்
என்னை கட்டி போட்டு வைக்கிறாள்..!
வில்லேந்திய புருவமோ
கண்களில் அம்பெய்தி நிற்குதே
கேடயம் ஏதும் இல்லாமல் நான்
வீழ்த்துவிட நினைக்கிறேன்..!
சத்தம் ஏதும் இல்லாமல்
நித்தம் என்னை கொள்கிறாள்
மடிந்து விழ எண்ணியே
மீண்டும் அவளை காண்கிறேன்
மூச்சி காற்றாய் மிதக்கிறேன்
அவள் நினைவை தாங்கியே
மறுஜென்மம் வேண்டுமே
மீண்டும் அவளால் வீழ்ந்திடவே..!

Recent Posts

.jpg)

