41
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391
« Last post by Shreya on December 16, 2025, 11:46:27 AM »தனிமையின் மொழி..!
இந்தத் தனிமை எனக்கு பரிசா?
இல்லை தண்டனையா?
சலனமற்ற இந்த இரவோ
ஆயிரம் ரகசியங்களுடன்
என் மனதைப் போல..!
மேனி சிலிர்க்கும் தென்றல் காற்று
அவன் வருகைக்காகக்
காத்திருக்கும் மௌனங்களில்
தேநீரின் ஆவியாய்
என் இறுதி சுவாசமாய் அவன்..!
நிலவே உன்னைப் போல
என் வாழ்விலும்
நிறைவு இல்லையோ?
நீயாவது சொல்
அவன் வருகிறானென்று..!
நான் கண்ட கனவுகள் யாவும்
நட்சத்திரங்கள் வந்து போவது போல்
மறைந்தனவோ இல்லை
கானல் நீராய் கரைந்தனவோ..!
எல்லோரும் உறங்கும் இந்த வேளையில்
என் பழைய நினைவுகள் மட்டும்
சத்தமின்றி சண்டையிட்டு
மொத்தமாய் கொள்கிறதே..!
அவன் தந்த அன்பின் சுவடுகள்
அவன் வராத இரவுகளிலும்
மனதில் தழும்பாய் பதிந்து
மறக்க மனம் மறுக்கின்றதே..!
இரவு விலகி
பொழுதே விடிந்தாலும்
அவன் நினைவுகள் மட்டும்
என்னுள்ளிருந்து விலகவே இல்லை..!
அவன் நினைவால் வாழ்பவளை
அதை அழிக்கும் சக்தி
காலத்திற்கும் கூட இல்லை
நிலவே நானோ இங்கு அழுகிறேன்
நீயோ அங்கு சிரிக்கிறாய்
என் ஏக்கம் ஒருபோதும் தீராதென..!
மௌனம் என்பது
ஒசையற்ற மரணமோ
உருகி காதலித்த என் மனதில்
அவனால் எழும் வினாக்கள்
எங்கே போனான் ?
என் மௌனத்தின் மொழியானவன்..!
நிலவே நீ தேய்பிறையாய் தேய்ந்தாலும்
வளர்பிறையாய் மீண்டும் வளர்கிறாய்
ஆனால் என்னவனின்
வருகைக்காகக் காத்திருக்கும்
இந்த பேதையின் வலிகள் எல்லாம்
இரவில் எழும் வானவில்லாய்
என் இரவுகளோடு மட்டுமே
மௌன மொழி பேசுகிறது..!
இந்தத் தனிமை எனக்கு பரிசா?
இல்லை தண்டனையா?
சலனமற்ற இந்த இரவோ
ஆயிரம் ரகசியங்களுடன்
என் மனதைப் போல..!
மேனி சிலிர்க்கும் தென்றல் காற்று
அவன் வருகைக்காகக்
காத்திருக்கும் மௌனங்களில்
தேநீரின் ஆவியாய்
என் இறுதி சுவாசமாய் அவன்..!
நிலவே உன்னைப் போல
என் வாழ்விலும்
நிறைவு இல்லையோ?
நீயாவது சொல்
அவன் வருகிறானென்று..!
நான் கண்ட கனவுகள் யாவும்
நட்சத்திரங்கள் வந்து போவது போல்
மறைந்தனவோ இல்லை
கானல் நீராய் கரைந்தனவோ..!
எல்லோரும் உறங்கும் இந்த வேளையில்
என் பழைய நினைவுகள் மட்டும்
சத்தமின்றி சண்டையிட்டு
மொத்தமாய் கொள்கிறதே..!
அவன் தந்த அன்பின் சுவடுகள்
அவன் வராத இரவுகளிலும்
மனதில் தழும்பாய் பதிந்து
மறக்க மனம் மறுக்கின்றதே..!
இரவு விலகி
பொழுதே விடிந்தாலும்
அவன் நினைவுகள் மட்டும்
என்னுள்ளிருந்து விலகவே இல்லை..!
அவன் நினைவால் வாழ்பவளை
அதை அழிக்கும் சக்தி
காலத்திற்கும் கூட இல்லை
நிலவே நானோ இங்கு அழுகிறேன்
நீயோ அங்கு சிரிக்கிறாய்
என் ஏக்கம் ஒருபோதும் தீராதென..!
மௌனம் என்பது
ஒசையற்ற மரணமோ
உருகி காதலித்த என் மனதில்
அவனால் எழும் வினாக்கள்
எங்கே போனான் ?
என் மௌனத்தின் மொழியானவன்..!
நிலவே நீ தேய்பிறையாய் தேய்ந்தாலும்
வளர்பிறையாய் மீண்டும் வளர்கிறாய்
ஆனால் என்னவனின்
வருகைக்காகக் காத்திருக்கும்
இந்த பேதையின் வலிகள் எல்லாம்
இரவில் எழும் வானவில்லாய்
என் இரவுகளோடு மட்டுமே
மௌன மொழி பேசுகிறது..!

Recent Posts