Recent Posts

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10
51
ரயில் பயணங்கள்...
   என் மனசுக்கு மிக மிக நெருக்கமான ஒரு இனிமையான பகுதி. நண்பர்கள் கூட்டம் ன்னு கூட சொல்ல முடியாது ஒரு பட்டாளமே கிடைச்ச அட்டகாசமான நாட்கள்...

      காலையில 6 மணி இருக்கும் கோழி கொக்கரக்கோன்னு கூவும் போது நாங்க ரயில்ல இருப்போம். பயண நேரம் காலையில 2.30 மணி நேரம் ( விரைவு ரயில் என்பதால்) மாலை 3 மணி நேரம்... தனியா பேருந்து பயணம் வேற உண்டு... பல மைல் தூரத்த தாண்டி தான் வேலை. ஆனாலும் இந்த ரயில் பயணம் எங்க எல்லோருக்குமே ஒரு குட்டி கல்லூரி காலம்னே சொல்லலாம். இதுல ஆட்டம் உண்டு, ஆரவாரம் உண்டு, குரங்கு சேட்டைகளும் உண்டு. மனசோர்வோ உடல் சோர்வோ நண்பர்கள் கூட்டத்துல காணாமலே போய்டும்....

அரக்க பறக்க ரயில பிடிக்க ஓடினா சில சமயம் tata காட்டிட்டு ரயில் ஓடிடும்...
சில நேரம் நிறுத்தி கூட ஏறிய அனுபவம் உண்டு.

ஒரு தடவை அப்படி தான் வழக்கம் போல நேரம் ஆகிடுச்சு... Train முன் பக்கம் தான் ஓடி போனேன்... ரயில் நகர்ந்து ரெண்டு பெட்டி என்னை தாண்டியும் போயாச்சு... ஆனாலும் அங்க இருந்த porter அண்ணா ஒருத்தங்க ரயில நிறுத்த guard கிட்ட signal காட்ட ரயில் வேகத்த கொஞ்சம் குறைச்சுடாங்க... அவங்களுக்கு தான் அது வேகம் கம்மி... எனக்கோ இன்னைக்கு ஒரு சம்பவம் நமக்கு இருக்குன்னு மனச  சாகசத்துக்கு தாயார் செஞ்சிட்டு, எனக்கு வேகமா தெரிஞ்ச ரயிலோட, ஒரு பெட்டியில ஒரே தாவு... நல்ல வேல நா வெளிய விழல.... புரிஞ்சுருக்கும்... ஆமாங்க விழுந்தது ரயில் உள்ள தான்... ஆனா வழக்கமா ஏறுரா பெட்டி இல்ல.... நமக்கு முக்கியம் விழாம இருக்கிறது கூட இல்ல... Close friends பாத்துட கூடாது.... அப்பாடா ன்னு எழுந்தா ஒரு நண்பர்... அவ்வளவு தான்.. அன்னைக்கு ரயில தலைப்பு செய்தி நான் தான்... மானம் போச்சு மரியாத போச்சு... சரி இதுவும் நம் வீர வரலாறு ன்னு எடுத்துகிட்டாசு...

இது எப்பவாது நடக்குற சாகசம் - ன்னா எப்பவும் நடக்குற சாகசம் ஒண்ணு இருக்கு.... அதுதான் நண்பர்களுக்கு இடம்பிடிக்குற தலையாய (தலை போற) சாகசம். அந்த ரயில்நிலையத்துல ஏறுறவர்களுக்கு இடம் பிடிச்சா பரவால்ல.. நாங்க தான் அடுத்த ரயில் நிலையத்துல ஏறப்போற எங்க நண்பர்களுக்கு இடம் பிடிப்போம்ல.... வழக்கமா வரவங்களுக்கு இவங்க இப்படி தான்னு ஓடிடுவாங்க... ஆனா புதுசா வரவங்ககிட்ட சண்டைபோட்டு இடத்த தக்க வைக்கிறது இருக்கே.... குழாயடி சண்டையில தண்ணீ பிடிக்குறதுக்கு சமம்...

    இவ்வளவு இரணங்களத்துளையும் ஒரு குதூகலம் - ன்னு அப்போ அப்போ festival mode க்கு வேற போய்டுவோம்... பொங்கலோ, தீபாவளியோ கிறிஸ்துமசோ ராம்சனோ.... யார் யார் எத நல்லா சமையல் செய்வோமோ அத கொண்டு வந்து சோறு சோறு - ன்னு ஒரே கொண்டாட்டமா போகும்....

     ஆக மொத்ததுல என் ரயில் பயணங்கள் பல இனிமையான நினைவுகளோடு நிறைச்சு இருக்கு. இன்று வரை எங்க பயணம் நிக்காம whatsapp ல ஓடிக்கிட்டே இருக்கு
52
"என் நினைவலைகள்"

சிறு வயதில் வீட்டின் அருகில் ரயில் போகும் சத்தம் கேட்டு நேரத்தை கணித்த நாட்களும் உண்டு... தனியாக பயந்து பயந்து வேறு வழியின்றி ரயிலில் பயணித்த நாட்களும் உண்டு.... அப்போதெல்லாம் நினைத்ததில்லை அந்த நினைவுகளை ஒரு நாள் எண்ணி பார்க்க நேரிடும் என்று...

காலத்தின் கட்டாயமாய் சில தருணங்களில் தனிமையை துணையாக்கி ரயிலில் பயணிக்க நேர்ந்தது... அப்படி ஒரு முறை சென்னையை நோக்கிய ஒரு பயணத்தின் நினைவலைகள் இங்கே....

பணிக்காக சிலர்... புகுந்த வீட்டிற்கு செல்ல சிலர்... படிப்புக்காக சிலர்... இப்படி எண்ணற்ற கனவுகளை சுமந்த பலரை காண முடிந்தது.... இவ்வாறான இந்த ரயில் பயணத்தில்...பலரின் வாழ்க்கையை தொடங்கி வைத்த கதைகளும் உண்டு... சிலரின் வாழ்க்கையை முடித்து வைத்த கதைகளும் உண்டு..

சொந்த கதையை மறந்து இப்பயணங்களில் நான் ரசித்த இயற்கையும் இந்த ரயில் வண்டியும் வாழ்க்கையின் பல எதார்த்தங்களை யோசிக்க வைத்தது...

இயற்கையை ரசித்து மனம் இலகுவான தருணத்தில்..முன்னோக்கி சென்ற பயணத்தில்.. வெளியே இயற்கை அனைத்தும் பின்னோக்கி சென்ற காட்சி... இப்படி தானே என்ன நடந்தாலும் நம் வாழ்க்கை பயணம் முன்னோக்கி நகர்கிறது என்று மனது மௌன மொழியில் சொல்லாமல் சொன்னது....

இணைய மாட்டோம் என்று தெரிந்தும் பலரது பயணத்தை இனிமையாக்க உதவும் தண்டவாளங்கள்... ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு மாறினாலும் அந்த மாற்றத்தை பயணிப்போற்கு உணர்த்தாமல் தொடரும் பயணம்...
 
கரடு முரடான பாதயோ.. கும்மிருட்டான குகை வழிப்பாதையோ... மலைப்பிரதேசமோ.. எதுவாக இருந்தாலும் எந்தச்சலனமும் இன்றி முன்னேறிச்செல்லும் பயணம்..

சுற்றி இருந்த கூட்டத்தின் கூச்சலில் என் கனவுலகை விட்டு நினைவுலகிற்கு வந்தேன்... குடும்பமாக வந்த கும்பலில்.. கட்டு சோறு பரிமாற்றம்... வாசனை மூக்கை துளைக்க...கொஞ்சமா சாப்புடு கண்ணுன்னு குடும்ப தலைவி கூற... பயணத்தில் தெரியாத நபர் ஏதும் சாப்பிட குடுத்தால் வாங்கதீங்க ன்னு எங்கயோ எப்போதோ கேட்ட நினைவு.. இல்லீங்க அம்மா வேண்டாம் னு சொல்லிட்டு மீண்டும் இயற்கையை ரசிக்க தொடங்கினேன்... பாலத்தின் மீது பயணிக்கயில் வேகமும் குறைந்தது சத்தமும் மாறுபட்டது... இந்த பாலத்தை எப்படி கட்டி இருப்பாங்கனு என் மனது யோசிக்க தொடங்கியது...

அருகில் இருந்த இளைஞர் கூட்டம்... சங்கீத மழையில் நனையத் தொடங்கினர்... சிலர் பாடவும் சிலர் ஆடவும்.. சிலர் அதை ரசிக்கவும் என ஒரே கூச்சலும் கும்மாளமும்... இளையராஜா மெட்டமைத்த பாட்டுக்களை அவர்கள் பாட கூடவே என் உதடும் புன்முருவலுடன் அந்த பாட்டுகளை முனுமுனுத்தது..

இரவு நெருங்க அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்... எனக்கும் தூக்கம் சொக்கிய வேலையில்.. தனியா போற பத்திரமா இரு... கொண்டு போற பொருட்களை பத்திரமா பாத்துக்கோன்னு அம்மா சொன்னது நினைவில் வர... வந்த தூக்கத்தை சற்று பொறு என்று கூறி.. எவ்வளவோ முயன்றும் என்னை அறியாமல் அயர்ந்து உறங்கி போனேன்..


சலசலப்பாய் பல குரல்கள் ஒலிக்க அய்யயோ தூங்கிட்டோமே என்று அதிர்ச்சியில் எழுந்த நேரம்... அடுத்து சென்னைன்னு யாரோ சொல்ல.... எனக்கு என்ன காத்துட்டு இருக்கோ அடுத்தது என்ற கேள்வியோடு... மனதில் தேங்கி இருக்கும் பல நினைவுகளுடன் இந்த பயண நிகழ்வுகளையும் சேர்த்துக்கொண்டு ரயிலுக்கு பிரியாவிடை கொடுத்து இறங்கி செல்ல ஆயத்தமானேன்.....
53
Christmas-ku cake pannen nu
Enigma sonna odane,
“அடடா… நமக்கும் ஒரு slice luck-ah varum
ன்னு மனசுக்குள்ள
Oven preheat பண்ணி வைச்சேன்! 😄
கேக்காம இருந்த ஆசை
Sugar illa tea மாதிரி
கசப்பா இருந்தது…
ஒரு நாள் தைரியம் சேத்து,
“எனக்கும் ஒரு cake பண்ணித் தாங்க”ன்னு
Soft-ah கேட்டேன்.
ஆனா cake வரலை,
Cookies-um transit-ல காணோம்,
Hope மட்டும் cream இல்லாம
Flat-ஆ போச்சு!
Cake செய்யத் தெரிந்த Enigma-க்கு
என் chinna aasai
Oven-குள்ளே போனதா?
Illai adutha Christmas-க்கு
Fridge-ல reserve பண்ணிட்டாங்களா?
“Wait till next year”ன்னு
Calendar-ஏ சிரிக்குது,
Adutha varusam cake வருமா?
Illatti,
இந்த kelvi-யே
Annual Christmas Special-ஆ
Repeat ஆகுமா? 😄🎂

LUMINOUS 💚🧡💛💜😇
56
Movie Vaaname Ellai (1992)
Song :Nee Andavana
Singers : SP Balasubrahmanyam, KS Chithra
Lyrics : Vairamuthu
Star Cast : Anand Babu, Ramya Krishnan, Madhoo, Bhanupriya, Vishali Kannadasan, Rajesh and Babloo Prithviraj.
Music : Maragadha Mani (M. M. Keeravani)
Producer : Rajam Balachander, Pushpa Kandaswamy
Director : K. Balachander
Favourite song : nadodi mannargale song
Sogam eni ellai
Favourite lines:
mudiyaadha Yaathirai Mudigidra Velaiyil
muthangal Thandhu Nee Mullanai Selaiyil
nee Yenbadhu Yem Vaazhvil Varava Selava
mul Yenbadho Rojavil Urava Pagaya
kaalam Seidha Kolam Nee Inge Vandhadhu
kanneerodu Vandhu Kanneer Sendhadhu
Kulanthaiyin sirippil iraivanai kanpom  nanpargala
Thank you RJ
Thank you DJ
Thank you gab bro
57
கவிதைகள் / மௌனம் பேசும் துணை
« Last post by Luminous on December 25, 2025, 09:47:02 PM »
தனிமையே…
உன்னைச் சுமந்தே
என் சிரிப்பு வெளியே வருது,
உள்ளுக்குள்ள
மௌனம் மட்டும்
சத்தமா பேசுது.
யாரும் இல்லாத
இந்த இடைவெளியில்
என்னை நானே
மறுபடியும் சந்திக்கிறேன்.
உன்னால்தான் வலிக்கும்,
உன்னால்தான் புரியும்…
தனிமையே,
நீ தண்டனை இல்ல,
நீ ஒரு மௌனமான
பாடம்.
LUMINOUS 💜💛🧡💚😇
58
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on December 25, 2025, 09:07:35 PM »
#419
#December-25-2025


THE JOURNAL OF MINDFULNESS

"A tiring journey often comes from a lack of comfort, not distance."

WORD OF THE DAY

Obdurate - Stubborn, Refusing to change one’s opinion or attitude.

- socky
59

வணக்கம் இசை தென்றல்!

எனக்கு மிகவும் பிடித்த பாடல் " ஒவ்வொரு பூக்களுமே  சொல்கிறதே "

இந்த ஏன் பிடிக்கும் என்றால், ஒவ்வொரு வரியும் அருமை.
இப் பாடலை கேட்க கேட்க ஒரு உற்சாகம் பிறக்கும், நம்பிக்கை எழும்.
இப்பாடலில் இந்த வரி தான் சிறந்தது என்று சொல்ல முடியாது, எல்லா வரிகளும் சிறந்த வரிகள் தான்.

இப் பாடலை என் தோழிக்காக இசைக்க வேண்டுகிறேன்.


படம் : ஆட்டோகிராப்
பாடல் ஆசிரியர்  : பா. விஜய்
பாடகி : கே.எஸ். சித்ரா🎙🙏
இசை அமைப்பாளா் : பரத்வாஜ்🎻🎸🙏
இயக்குனர்: சேரன்


பாடல் வரிகள் இதோ...

ஒவ்வொரு பூக்களுமே ..ஏஏ
சொல்கிறதே
வாழ்வென்றால்
போராடும் போர்க்களமே..
ஒவ்வொரு விடியலுமே ..ஏஏ
சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று
வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும்
நம் வாழ்வில்🎸🎸
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நா..ளில்🎸🎸
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு🎸
மலையோ
அது பனியோ
நீ மோதி விடு..🎸
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது..
என்ன இந்த வாழ்கையென்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தா..ங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தா..ங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்..
மனமே ஓ மனமே

நீ மாறிவிடு..🎸
மலையோ
அது பனியோ
நீ மோதி விடு..🎸

ஒவ்வொரு பூக்களுமே..ஏஏ
சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும்
போர்க்களமே...

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு..
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா.. உன் மனதை கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு..🎸
மலையோ அது பனியோ
நீ மோதி விடு..🎸


ஒவ்வொரு பூக்களுமே..ஏஏ
சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும்
போர்க்களமே..
ஒவ்வொரு விடியலுமே ..ஏஏ
சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று
வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்
நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நா..ளில்
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு..🎸
மலையோ
அது பனியோ
நீ மோதி விடு..🎸


என்றும் அன்புடன்,

உங்கள்
கணிதன்... KANITHAN...

60
Hi IT Team!

Movie - Thunivu
Song - Chilla Chilla
Singers - Anirudh Ravichander, Vaisagh, Ghibran
Lyrics - Vaisagh


favourite lines:

"Ponadhellam pogattum da Theva illa tears"

"Pudichatha seiyuradhu Ennaikumae mass"

"Pinnala pesuravan Ellaam kilinja tire-u"

"Mathavana mattam thatti Mela vandhu no use"

This song ku  ajith sir super a dance panni irukiranga.intha songs la vara Lyrics romba motivational a irukku enakku.arumaiyana varikal.this song music elloraium dance panna vaikkum.this song motivational &vibe song.i like it.so my friends kuda this song a kettu vibe panna poren.

it program rj &dj ellorukkum en nanrigal.all rj &dj super a pannurenga.congratulations.nenga ippadi super a pannurathu than enakku it la song podanum nu thonuthu.eppo program keppen fm la nu wait pannuven.thanks it team.

Thanks

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10