Recent Posts

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10
51
   "பரத நாட்டிய கலையைப்
          போற்றுவோம்"

கலைகளில் மிகச் சிறந்தது
பரதநாட்டியம்!
காண்போரின் கண்களுக்கு
விருந்தளிக்க கூடியது
பரதநாட்டியம்!

ப-பாவம் ,ர-ராகம்,த-தாளம்
மூன்றையும் தன்னகத்தே
கொண்டது பரதநாட்டியம்
நவரசங்கள், முகபாவணைகள்
கொண்டு வந்து, தாளத்திற்கு ஏற்ப
ஆடிடுவர் பரத நாட்டியம்!

பண்டைய காலத்தில் உருவான
கலைகளில் ஒன்று பரதநாட்டியம்!
இன்றும் போற்றி பாதுகாக்கப்படும்
கலையும் இதுவே...
பார்வையாளர்களை கவர்ந்து பரவசப்படுத்தும் பரதநாட்டியம்!

உடல் அசைவுகளும்,
கை முத்திரைகளையும் சேர்த்தது
இந்த பரதநாட்டியம்
பாடல், நட்டுவாங்கம்,
இசைக்கருவிகளின் துணை கொண்டு
ஆடப்படும் பரதநாட்டியம்!
ஆண்,பெண் என்ற பாகுபாடின்றி
ஆடப்பட்டு வருகின்றது பரதம்!

நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள்,நகைகள் அணிந்து...
காலில் சலங்கை பூட்டி...
சிகை வண்ணமாக அலங்கரிக்கப்பட்டு
கூந்தல் பின்னலிடப்பட்டு
பூமாலைகள் சூட்டப்பட்டு
நுனியில் குஞ்சம் தொங்கவிடப்பட்டு...
ஆடிடுவர் இரசனையான பரதத்தினை...
பார்ப்போர் கண்களுக்கு
விருந்தளிக்கும் இந்த காட்சி....

சிந்தனைகளை சிதறவிடமால் ஒருங்கிணைந்து இறைவனோடு பேசும்மொழி பரதக்கலை!
இசைக்கலைஞர்கள் மேடையின்
ஒருபுறமாக அமர்ந்து இசைக்க,
நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடி மகிழ்விப்பது
நாட்டியக் கலையின் சிறப்பு!

பரதம் கற்பதற்கு சாதி ,மதம்,
இனம், மொழி எதுவும்
தேவை இல்லை....
மன ஒருமைப்பாடும், புன்னகையும்
போதுமே....
பரதத்தின் ஒவ்வொரு அசைவின்
பின்னால் ஒவ்வொரு
கருத்து புலப்படும்!

ஐந்து வயதில் என் தாத்தா
என் கால்களுக்கு சலங்கை சூட்டி ,
பரதம் ஆட வைத்து இரசித்தது தான்
என்னை பரத கலை கற்கத் தூண்டியது!
சிறுவயதில் கால் சலங்கையின்
" ஜல் ஜல்" ஒலியும்....
மிருதங்கத்தின் "தத் தகிட "
தாளக்கட்டு ஒலியும் என்னை
பரதம் ஆட வைத்தது
முக பாவனை நவரசத்துடன்...

பரதம் என்பது உடலுக்கு மட்டும்
உடற்பயிற்சி அல்லாமல்
மனதுக்கு புத்துணர்ச்சி தரும்
ஒரு அரிய கலை...
நாட்டியக்கலை பயில்வதால்
பெருகிடும் ஞாபக சக்தி!

சைவசமயத்தின் முழுமுதல்
கடவுளான சிவனின் நடராஜ "திருத்தாண்டவம்" சிறப்பிக்கின்றது
நாட்டிய கலையை...
பரதநாட்டியத்தை ஆடத்தொடங்கும்
முன் ஆடப்படுகிறது நமஸ்காரம்!

பரதநாட்டிய நிகழ்ச்சியை
நெறிப்படுத்திடுவார் "நட்டுவ ஆசான்"
வாயால் சொல்லும் சொற்கட்டுக் கோவைகள், கைத்தாள ஒலியினால் "நட்டுவாங்கம்" பண்ணி
பரத நாட்டியத்தை அரங்கேற்றிடுவார்
ஆசான்கள்...
அறுபத்து நான்கு கலைகளில்
ஒன்று நாட்டியக் கலை!

பரத நாட்டிய அரங்கேற்றம் 
ஒரு வாழ்நாள் மைல்கல்..
பரத நாட்டிய அரங்கேற்றம்
ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல..
பல்லாண்டுகள் நீண்ட
கடினப் பயிற்சியின் பலனாக
உருவாகும் ஒரு கலை விழா!
தாளம், பாவம், அசைவுகள்
அனைத்தும் ஒருங்கிணைந்து,
தமிழ் சொற்களின் உள் அர்த்தத்தை சிதைக்காமல் முகபாவங்களோடு வெளிப்படுத்துவது மிகக் கடினமான ஒன்று.
நீண்ட காலப் பயிற்சி, பொறுமை, அர்ப்பணிப்பு மூலமே சாத்தியமாகும்
பரத நாட்டிய அரங்கேற்றம்!

பரத நாட்டிய கலையை
நான் பயின்றது என் மனதுக்கு
மிகவும் மகிழ்ச்சி...
பரத நாட்டிய கலையைப் போற்றுவோம்!
வளரும் குழந்தைகள் பரத நாட்டிய கலையைப் பயில வழி வகுப்போம்!
52
பொதுப்பகுதி / Re: இன்றைய தினம்
« Last post by RajKumar on February 22, 2026, 07:19:03 PM »
*📖

`இன்று வரலாற்றில் — பிப்ரவரி 22 அன்று உலக வரலாற்றில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்ச்சிகள்:`
📍 1732 — அமெரிக்காவின் முதல் அரச தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்தார்.
📍 1819 — ஸ்பெயின் அமெரிக்காவுக்கு புளோரிடா பிரதேசத்தை விற்க ஒப்பந்தம் (Adams–Onís திரட்டு) கையெழுத்தாகியது.
📍 1797 — பிரிட்டன் தரையில் இறுதி வெளிவிவசாய படை நுழைவுத் தாக்குதல் பிஷ்‌கார்க் அருகே நிகழ்ந்தது.
📍 1847 — மெக்சிகோ போரில் புயனா விச்டா போர் நடந்தது, அமெரிக்க எரlogged் நாடகத்தில் முக்கியமான நோக்கம்.
📍 1959 — முதல் டைட்டோனா 500 வாகனப் பேரிடப் பந்தயம் நடந்தது.
📍 1974 — அமெரிக்கத் தலைநகர் நோய்டனில் சாமுவேல் பைக் ஒழுங்கற்ற விமான ஒழுங்கு முயற்சி தோல்வியுற்றது.
📍 1979 — செயின்ட் லூஷியா பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
📍 1980 — வெள்ளைக்கால விளையாட்டு ஒலிம்பிக்ஸில் “மிராக்கிள் ஆன் ஐஸ்” என அழைக்கப்படும் நிகழ்வு: அமெரிக்க ஹாக்கி அணி ஸோவியத் அணியை எதிர்த்து சாதனை வெற்றி பெற்றது.
📍 1997 — முதன்முறையாக டோலி என்ற بالغத்தில் உள்ள பசு கிளோன் செய்யப்பட்டது.
📍 2011 — நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சில் மிகப்பெரிய நிலநடுக்கம், பலர் காயமடைந்தனர்.
*🎉 பிற நினைவிக்கத்தக்க நிகழ்வுகள்*

📌 பிப்ரவரி 22 அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் பிறந்த நாள் என்றும், சில நாடுகளில் இதனை “Washington’s Birthday” அல்லது “Presidents’ Day” (அமெரிக்க தலைவர்களின் நாள்) என கொண்டாடுவர்.


📌 1944 – ஆகா கான் அரண்மனையில் தேசிய துயரம்
சுதந்திரப் போராட்டத்தின் போது சிறையில் இருந்த கஸ்தூர்பா காந்தி (மகாத்மா காந்தியின் துணைவி) மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள ஆகா கான் அரண்மனை சிறைवासத்தின் போது உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
👉 இவர் பெண்கள் உரிமை, சுதந்திரப் போராட்டம், சமூகச் சேவைகளில் முக்கிய பங்கு வகித்தார்.

📌 1958 – இந்திய அரசியல் வரலாற்றில் இழப்பு
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போராட்டத் தலைவருமான அபுல் கலாம் ஆசாத் மறைந்தார்.
👉 இந்திய கல்வி அமைப்பை உருவாக்கிய முக்கிய சிந்தனையாளர். UGC, IIT போன்ற உயர்கல்வி அமைப்புகள் உருவாக இவரின் பங்கு பெரிது.

`🎂 பிறப்புகள்`
📌 1885 – தேசியத் தலைவர் பிறப்பு
ஜதீந்திர மோகன் செங்குப்தா (Jatindra Mohan Sengupta) பிறந்தார்.
👉 பெங்காளில் காங்கிரஸ் இயக்கத்தில் முக்கிய தலைவராக இருந்தார்; "Deshapriya" என அழைக்கப்பட்டார்

`⚰️ இறப்புகள்`

🔹 கஸ்தூர்பா காந்தி (1944)

மகாத்மா காந்தியுடன் சத்தியாகிரகப் போராட்டங்களில் பங்கேற்றவர்

பெண்களின் சமூக விழிப்புணர்வுக்கு முன்னோடி

இந்தியத் தாய்மையின் சின்னமாக மதிக்கப்படுபவர்

🔹 அபுல் கலாம் ஆசாத் (1958)

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்

இலவச கல்வி, தொழில்நுட்பக் கல்வி, IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு காரணமானவர்


53
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 22, 2026, 12:05:14 PM »

February 2026
#473   22.02.2026







- Socky
54
அருமையான கவிதை லூமினஸ். உண்மையை உரக்க சொல்லும் வரிகள். எந்நேரமும் ஒரே மனம் கொண்டிருத்தல் அரிய செயல்
ஆனால் அதுவே அறம் 💜✨🍀
55
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on February 22, 2026, 10:15:00 AM »
56
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on February 22, 2026, 06:32:08 AM »
57
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 397

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


58
சூழல் பல மாறினும்
சொல்லின் செம்மை மாறாதிருத்தல்
அதுவே மனிதன் காக்க வேண்டிய
மிக உயர்ந்த காவல்💜
கூட்டம் பெருகின்
பலர் முகம் மலரும்🤎
தனிமை வரின்
அதே முகம் திசை மாறும்.💙
அது உலகின் இயல்பு
அதை உணராத மனமே
துன்பம் கொள்ளும்.
நேற்றின் நட்பு
இன்றின் நிலைமையால் சாய்ந்திடின்,
அது நட்பு அன்று
நேரத்தின் நிழல்.💛
எந்நேரமும்
ஒரே மனம் கொண்டிருத்தல்
அரிய செயல்
ஆனால் அதுவே அறம்.🧡
நிலவு மேகத்தால் மறைந்தாலும்
அதன் ஒளி மாறாது💚
அதைப் போல
சூழ்நிலை மாறினாலும்
நம் இயல்பு மாறாதிருப்பதே
உயர்ந்த தத்துவம்.💙
ஏனெனில்
உண்மை என்பது
காலத்தோடு பயணித்தாலும்
நேரத்தோடு மாறாத ஒன்று.💯💐🕊🧘‍♀️🍭👍luminous
59
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 21, 2026, 10:14:10 PM »

February 2026
#472   21.02.2026







- Socky
60
joker  oru  sweet kadhala  apdiye oru cup tea la puthaichutinga ponga.      nice
Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10