Recent Posts

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10
51
Hi RJ & DJ
இந்த வாரம் நான் விரும்பி கேட்ட பாடல் இடம் பெற்ற திரைப்படம்
என்றும் அன்புடன்
 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடக திரைப்படம் ஆகும்.
ஆர். பாக்கியநாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் முரளி, சித்தாரா, ஹீரா ராசகோபால் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மனோரமா, ஜனகராஜ், சின்னி ஜெயந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார்.

இப் படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
"சின்னஞ் சிறு" 
வாலி   எஸ். பி. பாலசுப்பிரமணியம்   
"துள்ளித் திரிந்ததொரு"     
ஆர். பாக்கியநாதன்   எஸ். பி. பாலசுப்பிரமணியம்   
"மஞ்சள் வெயில்" 
பிறைசூடன்   மனோ   
"நிலவு வந்தது" 
ஆர். பாக்கியநாதன்   மனோ,
எஸ். ஜானகி   
"பவர் போச்சுதா"     
வாலி   மனோ

எனக்கு பிடித்த பாடல்
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்

பிடித்த வரிகள்
நட்பின் அரட்டைகள் சில நாள்
நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கதில் திருனாள்
காதல் வேள்வி தனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வலைந்தேன்
உன்னை நினைத்திங்கு சிரிதேன்
உண்மை கதை தனை மறைதேன்

இந்த ஆண்டின்
இறுதி இசைத் தென்றல் நிகழ்ச்சியில்
நாம் பழைய நினைவுகளை நினைத்து பிறந்து இருக்கும் இந்த புத்தாண்டை வரவேற்று நமது FTC உறவுகள் உடன் இணைந்து இப்பாடலை மகிழ்ச்சியுடன் கேட்டு மகிழ்வோம்

இந்த பாடலை நமது FTC யில்
துள்ளி திரிந்து சேட்டை செய்யும்
Aradhana 19 க்கு புத்தாண்டு பரிசு சிறப்பு பாடலாக வழங்குகிறேன்


52
Hi
Movie: Beast
Song:Jolly o gymkhana
Lines:Athanaiyum ponaalum
Empty-aathan ninnalum
Padharaama irundhaa
Ada beast-u nee dhaanda

Polamburavan thamaasu
Edhuthu ninnaa nee maasu
Manasil onnu ninachaa
Adha nadathanum nanba – Confirm

I like this song because the lyrics are very motivating. It tells us to stay calm without getting confused, not to be afraid of anyone, and not to complain. It says that if you work boldly and confidently, without fear, you will definitely succeed. That motivation is the reason I like this song.
Thanku
LUMINOUS 💚🧡💛💜😇
53
இசை தென்றல் நிகழ்ச்சியை அருமையாக
தொகுத்து வழங்கும்  RJ AND DJ க்கு என் வாழ்த்துக்கள்


இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
ஷாருக்கான் மனிஷா நடித்த, மணிரத்னம் இயக்கத்தில் AR Rehman இசையில் வந்த உயிரே திரைப்படம்



இதில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் இனிமை

என்னுயிரே என்னுயிரே -  ஸ்ரீனிவாஸ் , சுஜாதா
பூங்காற்றிலே                   -உன்னிமேனன் , ஸ்வர்ணலதா
சந்தோஷ கண்ணீரே     - பெபி
தய்யா தய்யா                -  சுக்விந்தர், சுபா

இதில் எனக்கு பிடித்த பாடல்
எஸ். ஜானகி  பாடிய நெஞ்சினிலே நெஞ்சினிலே

ஒவ்வொரு பாடல்களும் வித்தியாசமா இனிமையா இருக்கும்
இது ஒரு வேற்றுமொழி படம்னு உங்கள்குக்கு எங்கேயும் தோன்றாது பாடல்கள் உட்பட

உங்களுக்கும் புடிக்கும்னு நம்புறேன்

எல்லா FTC நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


GOD BLESS YOU
54
ஹாய் இசைத்தென்றல் Team,
வருடத்தோட கடைசி நாள்ல ஒலிக்கப்போற, வருடத்தோட முதல் நாள் ரிப்பீட்ல ஒலிக்கப்போற இசைத்தென்றல் நிகழ்ச்சியில  முதலிடம் பிடிச்சது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

இசைத்தென்றல் RJ, DJ கடந்த வார இசைத்தென்றல் நிகழ்ச்சி வழக்கம் போல கலக்கிட்டீங்க. இசைத்தென்றல் டீம்க்கு அன்பும், நன்றிகளும்.

இந்த வார இசைத்தென்றல் நிகழ்ச்சியில நான் கேட்க விரும்பிய பாடல் சரோஜா திரைப்படத்திலிருந்து நிமிர்ந்து நில் பாடல்.

இந்த பாடலை கேட்க்கும்பொழுதே செம்ம எனர்ஜெடிக் feel கொடுக்கும். Pure motivation and energy booster இந்த பாட்டு.

திரைப்படம்: சரோஜா
பாடல்: நிமிர்ந்து நில்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்


இந்த லிரிக்ஸ் பிடிக்கும்னு குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி எல்லா வரிகளுமே உத்வேகத்தை அளிக்க கூடிய வரிகளாக இருக்கும் இந்த பாடல்ல.

'போன வழி மாறி போனாலே வாராது
போ உந்தன் புது பாதை போராடிடு
காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்று கரையேறி முன்னேறு'


இப்படி தத்துவமான, உத்வேகம் தரக்கூடிய வரிகளை கங்கை அமரன் எழுதியிருக்காரு.

இந்த பாடலை நான் FTC நண்பர்கள் எல்லாருக்காகவும் கேட்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  புதிய ஆண்டு புதிய நம்பிக்கைகளோடு தொடங்கட்டும்.
உங்கள் புதிய முயற்சிகள் எல்லாம் வெற்றியாக மாற வாழ்த்துகள்
 
55
விடை: மெழுகுவர்த்தி

அடுத்த புதிர்:
ஒற்றை கண் உடையவன் ஆனால் ஓடும் இடமெல்லாம் அடைத்துக் கொண்டே செல்கிறான். அவன் யார் 🤔 🤔
:
56
குறள் -     240

அதிகாரம்    புகழ்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பொருள்
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.
57
பொதுப்பகுதி / குறுந்தகவல் Raj
« Last post by RajKumar on December 25, 2025, 03:49:48 PM »
நீங்கள்
கடந்து
வந்த படிகளை
உடைக்காதீர்கள்...

ஒரு வேளை
இறங்குவதற்கு
அதே படிகள்
தேவைப்படலாம்...

விதி வலியது
காலம் மிகக் கொடியது..

58
கவிதைகள் / கிறிஸ்துமஸ் சாண்டா !
« Last post by joker on December 25, 2025, 01:15:31 PM »


குளிர் நுழைந்த இரவு,
விண்மீன்கள் மெல்ல மின்ன,
கிறிஸ்துமஸ் மணி
நகரத்தின் இதயத்தைத் தட்டியது.

அங்கே
ஒரு சாலையோர குடிசையில்
கிழிந்த போர்வைக்குள்
ஒரு சிறு இதயம் துடித்தது.

அவன் கண்களில் தூக்கம் இல்லை
ஆனால் கனவுகள் இருந்தன
பசித்த வயிற்றை விட
பெரிய கனவுகள்.

“சாண்டா வருவாரா?”
என்று அவன் தன் மனதை
மெல்லக் கேட்டுக்கொண்டான்,
பட்டியலில்லை அவனிடம்,
பொம்மைகளின் பெயர்களில்லை,
விலைச்சீட்டுகளும் இல்லை.

அவன் கேட்டது
ஒரு ஜோடி செருப்பு,
மழையில் நனைந்து
வெடித்து போன
தந்தையின்
பாதங்களை காப்பதற்கு.

ஒரு முழு உணவு,
அம்மாவின் கண்களில்
புன்னகை மலர.

ஒரு புத்தகம்,
வாசிக்க, கற்றுக்கொள்ள
வாழ்க்கையை புரிந்து கொள்ள.

அவன் வீட்டில்
ஜன்னல் இல்லை
ஆனால் வானமே
அவன் கூரை.

அந்த இரவில்
நகரம் தூங்கிக் கொண்டிருக்க,
பணக்கார வீடுகளில்
பொம்மைகள் சிரிக்க,
அந்த குடிசை முன்
ஒரு நிழல் நின்றது.

சிவப்பு உடை இல்லை,
தங்கத் தாடி இல்லை,
ஆனால் கண்களில்
கருணையின் ஒளி.

“நான் சாண்டா,”
என்று சொன்னார் அவர்,
“நீ நினைப்பது போல அல்ல,
நான் மனிதர்களின்
இதயங்களில் இருந்து வருகிறேன்.”

சிறுவன் நடுங்கினான்,
குளிரால் அல்ல,
நம்பிக்கையால்.

அந்த சாண்டா
பொம்மை தரவில்லை,
ஆனால் புத்தகம் தந்தார்.

பொன் தரவில்லை,
ஆனால் கல்வி தந்தார்.

அரண்மனை தரவில்லை,
ஆனால் கனவுகளை
வளர்க்க ஒரு பாதை தந்தார்.

“நாளை நீ
என் இடத்திற்கு வருவாய்,”
என்றார் அவர்,
“அங்கே
நீயும் ஒருநாள்
சாண்டாவாக மாறுவாய்.”

காலை வந்தது.
சூரியன் சிரித்தது.
சிறுவன் எழுந்தான்.

குடிசை அதேதான்,
போர்வை அதேதான்,
ஆனால்
அவன் உள்ளம் மாறியது.

பல ஆண்டுகள் கழித்து,
ஒரு பள்ளி திறந்தது,
அதன் வாசலில்
அவன்  நின்றான்
கற்பிப்பவனாக

கிறிஸ்துமஸ் வந்தால்,
அவன் குழந்தைகளிடம் சொல்வான்:
“சாண்டா
பரிசுகள் தருபவர் மட்டும் அல்ல,
நம்பிக்கை கொடுப்பவர்தான்.”

விண்மீன்கள் இன்னும் மின்னுகின்றன,
குடிசைகள் இன்னும் இருக்கின்றன,
ஆனால்
ஒரு கனவு நனவானால்,
ஒரு உலகம்
மாறத் தொடங்குகிறது.




***Joker***
59
எல்லா முடிவுகளும்
பிரச்சனையின்
அழுத்தத்தில் தானாய் வெளிவரும்.
பிரச்சனைகள்
மேலோட்டமாய் இருக்கும்போது
எடுக்கப்படும் முடிவுகள்
சிலசமயம்
இன்னொரு பிரச்சனையாகிவிடும்.
60
*புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்

எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம்.

ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிந்தால் நீங்க இனி இத விட்டு வைக்க மாட்டீங்க..! முக்கியமாக, எள்ளு சாப்பிடறதால புற்றநோய் வராமல்இருக்குமாம். அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..!

*முன்னோர்களின் பாதை..!*
எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை... இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம்.

*எள்ளு- உயிர் காக்கும் நண்பன்..!*
இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே. நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.

*எதிர்ப்பு சக்தி கொண்ட எள்..!*
எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம். இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

*காரணம் என்ன..?*
இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

*தாய்லாந்தின் ஆராய்ச்சி..!*
தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டது. அதில் கருப்பு எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம் 'Sesamin' தான்.

*Sesamin அப்படினா என்ன..?*
Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

*பெண்களுக்கு எப்படி..?*
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோயிற்கும்..!
மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

*கருப்பா..?வெள்ளையா..?*
எந்த எள் அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள் பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

அட, இதுக்கூடவா..?
நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் இரும்பு சத்து, வைட்டமின் - A & Bஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்..

*அழுக்குகளை வெளியேற்ற*
எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். எவ்வளவு சாப்பிடலாம்..? தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும்.

*உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது*.

உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பதால் ஏற்படும் நன்மைகள்.

🍀*1. *ஆரோக்கிய இதயம்*
 நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

*🍀2.* *நீரிழிவு*
 நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

*🍀3.* *வலுவான எலும்புகள்*
 நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

🍀*4. *செரிமான பிரச்சனை*
 மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

*🍀5.* *சுவாசக் கோளாறு*
 நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

*🍀6.* *இரத்த அழுத்தம்*
 நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

🍀*7. *பளிச் பற்கள்*
 தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

*🍀8.* *புற்றுநோய்*
 நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

🍀9. *அழகான சருமம்*
 நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

🍀10. *புரோட்டீன்*
 எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான்.

🍀நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப் பொருள்.

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10