51
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 401
« Last post by VenMaThI on April 13, 2026, 10:17:00 PM »காதலிச்சு தான் கண்ணாலம் முடிச்சோம்
எப்போமே ஒண்ணா வாழணும்னு மனசுல நெனச்சோம்
என்ன சோதனை வந்தாலும் எதிர்த்திட துணிஞ்சோம்
ஜாடிக்கு ஏத்த மூடியா நாங்க இருவரும் எனஞ்சோம்....
என்னடா இவ்வளவு lateah எழும்புறா ன்னு மாமியாரும்
காப்பி தண்ணில சக்கர பத்தலேன்னு மாமனாரும்
ஆபீசுக்கு போக நேரம் ஆச்சு இன்னும் சமையல் முடியலைன்னு கொழுந்தனும்
குளிக்க இன்னும் சுடுதண்ணி போடலன்னு கொழுந்தியாளும்....
மாத்தி மாத்தி என் மேல் குற்றம் அடுக்க
அடுக்கலையில் சமையலுடன் நானும் அவிஞ்சுட்டு தான் இருந்தேன்..
எனக்கென்ன 10 கைகளா இருக்கு
சராசரி மனுஷி தானேன்னு மனசுல தோணுனாலும்
கட்டிக்கிட்ட மனுஷன நெனச்சு மனச தேத்திக்க தான் முடிஞ்சுது...
அன்று ஞாயிற்றுக்கிழமை.. எனக்கான...இல்லை இல்லை எங்களுக்கான நாள்..
அவசர அவசரமா எழுந்து.. என்
சுட்டிக்குட்டிய தூக்கி இடுப்புல போட்டு
அவனுக்கான பொருட்கள் அடங்கிய பைய தூக்கி தோளுல போட்டுட்டு
வாயா போலாம்ன்னு என் புருஷனயும் கூட்டிட்டு
என் அம்மா வீட்டுக்கு போனேன்
சுட்டிய அங்க விட்டுட்டு நானும் அவரும் வெளிய போனோம்
எது மாறினாலும் வாரத்துல இந்த ஒரு நாள்...
நானும் அவரும் மட்டுமே
என்பது மட்டுமே
மாறாமல் போகிறது என் வாழ்க்கையில்..
நாள் முழுதும் அவருடன் இன்பமாய் கழித்து
மாழைப்பொழுதில் மங்கிய குரலில் சொன்னேன்.. என்னால முடியலைங்க..
எல்லாரும் என்னையா பாடா படுத்துறாங்க..
சிறு நொடியும் சிந்திக்காமல்...
என் முகத்தை பார்த்து சிரித்தபடி
தன் கைகளை கொண்டு என் கண்ணங்களை வருடி
கொஞ்ச காலம் பொறுத்துக்கோ
எல்லாம் நாம நெனச்ச மாதிரி மாறும்...
முடியாத காலத்தில் நீ கவனிக்கும்போது என் பெற்றோரும்
தனக்கென ஒரு மனைவி வரும்போது என் தம்பியும்
அடுத்த வீட்டிற்கு மருமகளாய் போகையில் என் தங்கையும்
நான் புரிந்து கொண்டதை விடை அதிகமாய் உன்னை புரிந்து கொள்வார்கள்
அதுவரை எனக்காக பொறுத்திரு...
உனக்காக நானும் எனக்காக நீயும்
எதையும் தாங்கி முன்னேறி நடப்போம்ன்னு சொன்னாரு ...
"காலம் ஒரு நாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்" ன்னு
என்றோ யாரோ பாடிய பாடல் தூரமாய் எங்கோ இசைக்க ...
என் கண்களில் வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்தது
அவருக்கு பேரானந்தமாய் போனது....
எனக்கோ...
என் கவலைகள் எல்லாம் கருகி காற்றில் கறைந்து போனது....❤️❤️❤️❤️❤️
எப்போமே ஒண்ணா வாழணும்னு மனசுல நெனச்சோம்
என்ன சோதனை வந்தாலும் எதிர்த்திட துணிஞ்சோம்
ஜாடிக்கு ஏத்த மூடியா நாங்க இருவரும் எனஞ்சோம்....
என்னடா இவ்வளவு lateah எழும்புறா ன்னு மாமியாரும்
காப்பி தண்ணில சக்கர பத்தலேன்னு மாமனாரும்
ஆபீசுக்கு போக நேரம் ஆச்சு இன்னும் சமையல் முடியலைன்னு கொழுந்தனும்
குளிக்க இன்னும் சுடுதண்ணி போடலன்னு கொழுந்தியாளும்....
மாத்தி மாத்தி என் மேல் குற்றம் அடுக்க
அடுக்கலையில் சமையலுடன் நானும் அவிஞ்சுட்டு தான் இருந்தேன்..
எனக்கென்ன 10 கைகளா இருக்கு
சராசரி மனுஷி தானேன்னு மனசுல தோணுனாலும்
கட்டிக்கிட்ட மனுஷன நெனச்சு மனச தேத்திக்க தான் முடிஞ்சுது...
அன்று ஞாயிற்றுக்கிழமை.. எனக்கான...இல்லை இல்லை எங்களுக்கான நாள்..
அவசர அவசரமா எழுந்து.. என்
சுட்டிக்குட்டிய தூக்கி இடுப்புல போட்டு
அவனுக்கான பொருட்கள் அடங்கிய பைய தூக்கி தோளுல போட்டுட்டு
வாயா போலாம்ன்னு என் புருஷனயும் கூட்டிட்டு
என் அம்மா வீட்டுக்கு போனேன்
சுட்டிய அங்க விட்டுட்டு நானும் அவரும் வெளிய போனோம்
எது மாறினாலும் வாரத்துல இந்த ஒரு நாள்...
நானும் அவரும் மட்டுமே
என்பது மட்டுமே
மாறாமல் போகிறது என் வாழ்க்கையில்..
நாள் முழுதும் அவருடன் இன்பமாய் கழித்து
மாழைப்பொழுதில் மங்கிய குரலில் சொன்னேன்.. என்னால முடியலைங்க..
எல்லாரும் என்னையா பாடா படுத்துறாங்க..
சிறு நொடியும் சிந்திக்காமல்...
என் முகத்தை பார்த்து சிரித்தபடி
தன் கைகளை கொண்டு என் கண்ணங்களை வருடி
கொஞ்ச காலம் பொறுத்துக்கோ
எல்லாம் நாம நெனச்ச மாதிரி மாறும்...
முடியாத காலத்தில் நீ கவனிக்கும்போது என் பெற்றோரும்
தனக்கென ஒரு மனைவி வரும்போது என் தம்பியும்
அடுத்த வீட்டிற்கு மருமகளாய் போகையில் என் தங்கையும்
நான் புரிந்து கொண்டதை விடை அதிகமாய் உன்னை புரிந்து கொள்வார்கள்
அதுவரை எனக்காக பொறுத்திரு...
உனக்காக நானும் எனக்காக நீயும்
எதையும் தாங்கி முன்னேறி நடப்போம்ன்னு சொன்னாரு ...
"காலம் ஒரு நாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்" ன்னு
என்றோ யாரோ பாடிய பாடல் தூரமாய் எங்கோ இசைக்க ...
என் கண்களில் வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்தது
அவருக்கு பேரானந்தமாய் போனது....
எனக்கோ...
என் கவலைகள் எல்லாம் கருகி காற்றில் கறைந்து போனது....❤️❤️❤️❤️❤️

Recent Posts







