51
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-005 (நெஞ்சில் நின்ற திரைப்படம் - தமிழ் )
« Last post by Sethu on March 19, 2026, 10:57:40 PM »என் நெஞ்சில் நின்ற திரைப்படம் எதுன்னு பார்த்தீங்கன்னா 2012 ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படம். இந்தப் படம் சங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த் ,ஜீவா ஆகியோ நடிச்சிருப்பாங்க. இதுல மொத்தம் ஆறு பாடல்கள் இருக்கும் .பாடல்கள் மிக அருமையாக இருக்கும். இந்தப் படம், பொறியியல் கல்லூரி மாணவர்களின் நட்பு, கல்வி முறை மற்றும் வாழ்க்கையைப் பற்றியது. பாரி (விஜய்) என்ற புத்திசாலி மாணவன், தனது நண்பர்களான வெங்கட் (ஸ்ரீகாந்த்), செந்தில் (ஜீவா) ஆகியோரின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறான், இறுதியில் அவன் எங்கே போகிறான் என்பதுதான் கதை.
பாரி (விஜய்), வெங்கட், செந்தில் ஆகிய மூவரும் பொறியியல் கல்லூரியில் தோழர்களாகிறார்கள். கல்வியை மனப்பாடம் செய்து படிக்கும் முறையை எதிர்த்து, பாரி புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என்பதை நண்பர்களுக்கு உணர்த்துகிறான். இதுவே இந்த படம் என் என் மனதில் நின்றதற்கு முதல் காரணம்.பாரி தனது நண்பர்களின் பயம், குடும்ப அழுத்தம் மற்றும் காதல் சிக்கல்களைப் போக்கி, அவர்களை வாழ்க்கையில் சிறப்பாக வாழ ஊக்குவிக்கிறான். நண்பர்கள் என்றால் சேர்ந்து ஊர் சுற்றுவது மட்டுமில்லாமல் அவர்கள் வாழ்வில் முன்னேற ஊக்குவிப்பது தான் என்பதை இப்படம் கூறுகிறது .இதுவே இந்த படம் எனக்கு பிடிப்பதற்கு இரண்டாவது காரணம்.
கல்லூரி முடித்ததும், பாரி யாருக்கும் சொல்லாமல் மறைந்து விடுகிறான்.பல வருடங்களுக்குப் பிறகு, பாரியைத் தேடி வெங்கட் மற்றும் செந்தில் செல்கிறார்கள். இறுதியாக, பாரி ஒரு புதுமையான பள்ளியில் கற்பித்துக் கொண்டிருப்பதைக் கண்டறிகிறார்கள். பாரியின் உண்மையான பெயர் மற்றும் அவனது மறைந்த வாழ்க்கையின் பின்னணி தெரியவருகிறது. இந்த படத்துல நகைச்சுவை அப்புறம் நண்பர்களை என்கரேஜ் பண்றது அப்புறம் காதல் அப்படின்னு எல்லாம் கலந்து கொடுத்து இருப்பார் இயக்குனர் சங்கர்.
அப்புறம் இந்த படத்துல என் பிரண்ட போல யாரு மச்சான் இந்த சாங் வந்து எனக்கு ரொம்ப பிடிக்கும். 6 சாங்ஸ் இல் இது ரொம்ப சூப்பரா இருக்கும் .அப்புறம் பார்த்தீங்கனா நகைச்சுவை விஜய் ,ஸ்ரீகாந்த் ,ஜீவா இவங்க மூணு பேரும் ரொம்ப சூப்பரா நகைச்சுவை பண்ணி இருப்பாங்க .இந்த படத்துல விஜய் கிட்ட விஜயோட லவ்வர் கேப்பாங்க" உனக்கு யாரை பிடிக்கும் "என்று ,அப்ப விஜய் சொல்லுவாரு "எனக்கு முனி மாவ ரொம்ப பிடிக்கும்" என்று .அந்த காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் .
அப்புறம் பாத்தீங்கன்னா பிரண்ட்ஸ ஊக்குவிப்பாரு. விஜய் உங்களுக்கு புடிச்ச வேலையை செய்ங்க அப்படின்னு சொல்லுவாரு. இதன் மூலமா எனக்கு என்ன புரிஞ்சிச்சுன்னா எந்த ஒர்க்கும் இன்ட்ரஸ்ட் இல்லாம செஞ்சா முன்னேற முடியாது என்பதை ரொம்ப தெளிவா சொல்லி இருப்பார் .இயக்குனர் சங்கர் இது மாதிரி ரொம்ப நல்ல விஷயங்கள் இந்த படத்தில் இருப்பது தான் இந்த திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிச்சதாகவும் என் மனதில் நின்ற திரைப்படமாகவும் இருக்கிறது. இதை ஷேர் செய்ய வாய்ப்பு அளித்த f t c டீம்க்கும் நெஞ்சம் மறப்பதில்லை ப்ரோக்ராம்க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
பாரி (விஜய்), வெங்கட், செந்தில் ஆகிய மூவரும் பொறியியல் கல்லூரியில் தோழர்களாகிறார்கள். கல்வியை மனப்பாடம் செய்து படிக்கும் முறையை எதிர்த்து, பாரி புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என்பதை நண்பர்களுக்கு உணர்த்துகிறான். இதுவே இந்த படம் என் என் மனதில் நின்றதற்கு முதல் காரணம்.பாரி தனது நண்பர்களின் பயம், குடும்ப அழுத்தம் மற்றும் காதல் சிக்கல்களைப் போக்கி, அவர்களை வாழ்க்கையில் சிறப்பாக வாழ ஊக்குவிக்கிறான். நண்பர்கள் என்றால் சேர்ந்து ஊர் சுற்றுவது மட்டுமில்லாமல் அவர்கள் வாழ்வில் முன்னேற ஊக்குவிப்பது தான் என்பதை இப்படம் கூறுகிறது .இதுவே இந்த படம் எனக்கு பிடிப்பதற்கு இரண்டாவது காரணம்.
கல்லூரி முடித்ததும், பாரி யாருக்கும் சொல்லாமல் மறைந்து விடுகிறான்.பல வருடங்களுக்குப் பிறகு, பாரியைத் தேடி வெங்கட் மற்றும் செந்தில் செல்கிறார்கள். இறுதியாக, பாரி ஒரு புதுமையான பள்ளியில் கற்பித்துக் கொண்டிருப்பதைக் கண்டறிகிறார்கள். பாரியின் உண்மையான பெயர் மற்றும் அவனது மறைந்த வாழ்க்கையின் பின்னணி தெரியவருகிறது. இந்த படத்துல நகைச்சுவை அப்புறம் நண்பர்களை என்கரேஜ் பண்றது அப்புறம் காதல் அப்படின்னு எல்லாம் கலந்து கொடுத்து இருப்பார் இயக்குனர் சங்கர்.
அப்புறம் இந்த படத்துல என் பிரண்ட போல யாரு மச்சான் இந்த சாங் வந்து எனக்கு ரொம்ப பிடிக்கும். 6 சாங்ஸ் இல் இது ரொம்ப சூப்பரா இருக்கும் .அப்புறம் பார்த்தீங்கனா நகைச்சுவை விஜய் ,ஸ்ரீகாந்த் ,ஜீவா இவங்க மூணு பேரும் ரொம்ப சூப்பரா நகைச்சுவை பண்ணி இருப்பாங்க .இந்த படத்துல விஜய் கிட்ட விஜயோட லவ்வர் கேப்பாங்க" உனக்கு யாரை பிடிக்கும் "என்று ,அப்ப விஜய் சொல்லுவாரு "எனக்கு முனி மாவ ரொம்ப பிடிக்கும்" என்று .அந்த காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் .
அப்புறம் பாத்தீங்கன்னா பிரண்ட்ஸ ஊக்குவிப்பாரு. விஜய் உங்களுக்கு புடிச்ச வேலையை செய்ங்க அப்படின்னு சொல்லுவாரு. இதன் மூலமா எனக்கு என்ன புரிஞ்சிச்சுன்னா எந்த ஒர்க்கும் இன்ட்ரஸ்ட் இல்லாம செஞ்சா முன்னேற முடியாது என்பதை ரொம்ப தெளிவா சொல்லி இருப்பார் .இயக்குனர் சங்கர் இது மாதிரி ரொம்ப நல்ல விஷயங்கள் இந்த படத்தில் இருப்பது தான் இந்த திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிச்சதாகவும் என் மனதில் நின்ற திரைப்படமாகவும் இருக்கிறது. இதை ஷேர் செய்ய வாய்ப்பு அளித்த f t c டீம்க்கும் நெஞ்சம் மறப்பதில்லை ப்ரோக்ராம்க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

Recent Posts