Recent Posts

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10
51
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on February 02, 2026, 10:51:39 AM »
52
என் உயிரில் ஒரு இடம் 💙

 இந்த காதலர் தினத்தில்,
ரோஜா வேணாம், சாக்லேட் உம் வேணாம்…
அவன் எல்லை இல்லாத பாசம்
எனக்கு போதும்.

இது பலர் நினைக்கும் காதல் இல்லை.
இது ஒரு புனிதமான,
ஆழ்ந்த காதல்.

என் வாழ்வில் ஒரு பூகம்பம் போல் நீ வந்தாய்.
நான் உன்னை தத்து எடுக்கவில்லை,
நீ தான் என்னை தத்து எடுத்தாய்.

நம் கண்கள் சேர்ந்த அந்த நொடியில்
என் மனதை பரித்து விட்டாய்.
நீ ஒரு மாயவனா ? 
நம் இருவரும் ஒரு நிமிடம் ஒன்றாக இணைந்தும் .

காதல் எவ்வளவு ஆழம் என உணர வைத்தாய்,
பாசம் அளவு இல்லாதது என காட்டினாய்.
பொறுப்பு என்ன  என்று  கற்று கொடுத்தாய்,
ஒருவித தாய்மை எனக்கு உணர்த்திநாய்

என் மகிழ்ச்சியை உன் வெற்றியாக கொண்டாடினாய்.
என் கண்ணீர், என் துன்பம்,
என் உள்ளில் இருக்கும் எல்லா நிறங்களும் நீ பார்த்துக் கொண்டாய்,
 ஒரு ஆதரவாக நின்றாய்

இந்த வருடங்கள் எப்படி கடந்துபோனது,
எனக்கும் தெரியவில்லை.

காலம் கடந்துபோனது ஏன் ?
உனக்கு வயது ஆனதும் நான் மறந்து விட்டேன்.
ஆனால் அதை இயற்கை மறக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு
நீ சோர்ந்து போகும் நிலையில்,
வாழ்க்கை நிரந்தரமல்ல என எனக்கு உணர்த்தினாய்.

நீ இல்லாமல் நான் என்ன செய்வேன் என
நினைத்து பார்க்க முடியாத நிலை.
என் நிழல் போல என்னை சுற்றி வருகிறாய்.
உன் விசுவாசத்திற்கு ஒரு எல்லையும் இல்லை.

உன் அன்புக்கு நான் தகுதி ஆனவளா என்று
தினமும் சிந்திக்கிறேன்.
எத்தனை காலங்கள் நான் காதலன் வருவான் என்று நான் காத்திருந்திருப்பேன் ?
அவன் காதலுக்காக ஏங்கிருப்பேன் .
ஆனால் உன்னுடைய எல்லையற்ற அன்பு எனக்கு இருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை.
உன்னை இன்னும் காதலிக்க, நேசிக்க, ரசிக்க,
இந்த வாழ்க்கை எனக்கு மறுபடியும் கற்று கொடுத்தது.
உன்னை இன்னும் அதிகமாக காதலிக்கிறேன்.

என் உயிரில் உள்ள வரை உன்னை நேசிப்பேன்.
என் உயிரில் இருக்கும் அந்த இடம்
உனக்கே மட்டுமே சொந்தம்.
நாலு காலில் ஓடும், என் அன்பே💙🐾
53
அவளிடம் நான்
பதில் எதிர் பார்த்து
காத்திருந்த நாள் இன்று!
ஆனால் அவளோ பதில்
அளித்துவிட்டாள் முன்னவே!

அவளின் பதிலை பார்த்ததும்
ஒரு நொடி என்னை நான் மறந்த நேரம்!
நான் கடிதம் எழுதும் முன்பே அவளிடமிருந்து பதில் வந்ததில்...
 திக்குத் தெரியாமல் திகைத்து நின்றேன்!


இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
உன் முகம் தான் வந்து செல்கிறதே!
கனவு என்று நினைத்தாலும்,
அந்த கனவே போதும்
என்கிறது என் மனது!
கனவில் கூட என் நினைவு
எல்லாம் உன்னிடம் என்றேன் !
என் உயிரே நீ என்றேன்!
பதிலுக்கு, ஒரு மௌனச் சிரிப்பால்..
என்  இதயத்தையும் திருடிச் சென்றாள் அந்த ராட்சசி!

என்னவளை ஏன் நான்
ராட்சசி என்றேன்?
அவளை அனுதினமும்
பார்க்க துடிக்கும்
என் இதயத்துடிப்பை
நிறுத்தி விட்டு சென்றவள்!
ராட்சசி இல்லாமல் என்னவென்று
நான் சொல்ல......

அவளை நேரில் கண்டதும்
நானும் அவளும் முதன் முதலில் பேசிய ஒரு வார்த்தை
 என்னவென்று நினைத்தால் இன்று கூட இனிக்கும்......
 அவள் சொன்ன அந்த 'Hello'..!

அதன் பின்பு  இருந்த
மெளன புன்னகையும் ....
அவளும் பேச துடித்தாள்!
நானும் பேச துடித்தேன்!
நாங்கள் பேசியது
"ஹலோ ஹலோ" என்ற
ஒரே வார்த்தை தான்....

அவளை நேரில்  கண்ட
ஒரு நொடியில் உலகமே
நின்று போனது....
என் மனதிடம் கேட்டேன்
ஏன் உலகமே நின்றது ? என்று
இதோ நிற்கிறாள் பாரு
இந்த பாவை....
இவளே உன் உலகம்
என்றது என் மனது!

அவளை ஏன் எனக்கு பிடித்தது?
இந்த ராட்சசியை எனக்கு
பிடிக்க காரணம் என்ன ?
என்று எனக்குள்ளே
இருக்கும் அவளின்
மனதிடம் கேட்டு பார்த்தேன்
அவளின் மனது சொன்னது
ஒரு வரை பிடிக்க வில்லை
என்றால் ஆயிரம் காரணம்
சொல்ல முடியும் என்னால் ....

அவளை ஏன் பிடித்தது?
எதற்காக பிடித்தது?
ஒரு காரணமும் எந்தக் கவிஞன் சொன்னாலும்
அது முற்றுப்பெறாத கவிதை என்றது அவள் மனது!

நாள் தோறும் அவளை
பார்க்க துடிக்கும்
அவளின் அவன் ...
என்றும் அவளே என் அழகிய ராட்சசி!

அனைவருக்கும் என் இனிய
காதலர் தின வாழ்த்துக்கள்.
ஐயோ இல்லை இல்லை ராட்சசி தின  நல்வாழ்த்துக்கள்...
54
ஓயாமல் அலை போல உரையாடியவனே...
கண்களில் நீர் தேங்கிய வேளையிலும்
இதழோரம் புன்னகை பூக்க செய்தவனே...

தீராத நினைவுகளை அள்ளி தந்தவனே
தனிமையின் வெற்றிடத்தை கவிதையாய் மொழிபெயர்த்தவனே
அலைபேசியின் ஒவ்வொரு ஒளிக்கீற்றிலும் மின்னியவனே

கைகோர்த்து பயணிக்க ஆசையைத் தூண்டியவனே
தோல் சாயும் தோழனாய் உடனிருப்பவனே
தாயின் ஸ்பரிசத்தை நினைவூட்டுபவனே...

நம்பிக்கை என்னும் நாங்கூரத்தால்
காதலை திடமாக பேணுபவனே
ஆயிரம் ஊடல் கொண்டாலும்
சிறுசொல்லில் அதை மறக்க செய்பவனே

இன்று
ஓடும் உன் கடிகாரத்தில்
எனக்கென்ற நிமிடங்கள்
குறைந்து தான் போனாலும்...
ஓயாமல் அலை போல்
இருந்த உரையாடல்
நடுகடலின் அலையாகி போனாலும்

என் தேடல் அனைத்தும்
உன் ஒற்றை சொல்லில்
ஒளிந்து கிடக்க -  உன்
கைப்பிடிக்குள் நாணமும் காணாமல் போக
முழுமையாக உன்னவள் ஆகிறேன்..
காதல் என்ற குமிழிக்குள்
55
நான்கு கண்கள் சந்தித்த அந்த முதல் நொடி,
நமது உலகம் ஒரு சிறு புன்னகையில் அடங்கி போனது..
நிழல் நிஜமாய் மாறிய அந்த திருநாள்
அக்னி சாட்சியாய் உன்னில் சரிபாதி ஆனேன்!!
முத்தங்களும், செல்ல சண்டைகளும்,
தீராத உரையாடல்களும்..
காதல் ஒரு மதுரமான கனவாக
நம்மை சுற்றி இருந்தது..!!!

​வாழ்க்கை எனும் ஓட்டத்தில் ஏனோ திசை மாறினோம்,
மெல்ல மௌனங்கள் வளர்ந்து,
இமயம் போல் ஓர் இடைவெளி,
புரிதல்கள் குறைந்து பிரிவுகள் பெரிதாக தெரிந்தன..
வேண்டாம் இந்த பந்தம் என
இதயம் கதறிய தருணங்கள்
நாம் தொலைத்த காதல்,
மீண்டும் கிடைக்காதோ என ஏங்கினோம்..!!!

​ஆனால் காலத்தின் கரங்கள் நம்மை
மீண்டும் பிணைத்தன,
தவறுகளை மன்னித்து காயங்களை
மறைக்க கற்று கொண்டோம்..
அன்று பார்த்த இளமையை விட இன்று பேரழகனாய்,
மரணம் வரும் அந்த இறுதி நொடி வரை
உன் விரல் கோர்த்து,
உன் மார்பில் சாய்ந்தே கிடக்க ஆசை..
மறுபிறவி என்பது உண்மை என்றால்,
நீயே என் கணவன்...நான் உன் மனைவி..!!!

​காதலின் சிறப்பு என்ன தெரியுமா?
இளமையில் கொண்டாட்டமாக, இடையில் பாடமாக,
முதுமையில் ஒரு பெரும் வரமாக இருக்கும்!!
நீ துணை இருந்தால் என் இறுதி பயணம் கூட
திருவிழாவே!
முடிவே இல்லாத ஒரு பயணத்தில்,
முடிவே இல்லாத ஒரு காதலில்..
மூழ்கித் திக்குமுக்காடுவோம்..!!!

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!

56
 "உண்மைக்  காதல்"

வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாத உணர்வு காதல்!
இரு ஆழமான மனங்கள்
சம்பந்தப்பட்டு இணைவது காதல்!
நம்பிக்கை, மரியாதை தன்னகத்தே   
கொண்டது உண்மையான காதல்!

காதலர்களின் நம்பிக்கையால்
அதிகரிக்கும்  அவர்களது
அன்னியோன்யம்!
எந்த  எதிர்பார்ப்புமின்றி
தூய அன்பைக்  கொண்டது
புனிதமான காதல்!

காதலர்களிடையே ஒளிவு,
மறைவின்றி நேர்மை இருப்பின் 
அது உண்மையான காதல்!
இன்பம், வெற்றிகளை கொண்டாடுவதிலும்,
துன்பங்களில் தோள் கொடுப்பவர் ஆகவும்
அமைவது தான் உண்மையான காதல்!

உடல் ஈர்ப்புக்கு அப்பாற்பட்டு, உணர்வுபூர்வமான நெருக்கமானது உண்மையான காதல்!
காதலர்கள் விழி பார்வையால்
அவர்களின் மனதை அறிந்து கொண்டால் அது தான் உண்மையான காதல்!

தனது நேரத்தை ஒதுக்கி தொடர்பில் 
இருக்க வேண்டும் துணையுடன்....
சின்னச் சின்ன சண்டைகள்
வரவேண்டும் காதலர்களிடையே!
சீக்கிரம் சமாதானம் ஆகிட
வேண்டும் ஒற்றுமையாக....
அது தான் உண்மையான காதல்!
 
சாதி,மத,மொழி பேதமற்றது
உண்மைக் காதல்!
அந்தஸ்து, அதிகாரம் பார்க்காது
உண்மை காதல்!
ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு
இல்லாதது உண்மைக் காதல்!

எந்த சூழ்நிலையிலும் 
விலகிச் செல்லாது
உண்மைக் காதல்!
எதிர்ப்புகளை கூட இருந்து
எதிர்கொள்ளும் உண்மைக் காதல்!

காதல் ஜெயிக்கவில்லை என்று கோழைத்தனமான தற்கொலை
முயற்சிகளை  எடுக்காது
உண்மைக் காதல்!
காதலை ஜெயிக்க வைக்க
போராடும் உண்மைக் காதல்!

"ஒருத்தனுக்கு ஒருத்தி "
என்று இருப்பது உண்மை காதல்!
காதல் என்ற பெயரில் என்னென்னவோ பண்ணுகிறார்கள் இந்த காலம்!
"காதல்"என்ற புனிதமான சொல்லை
உன் சுயநலத்துக்காக களங்கடிக்காதே!

உண்மை காதலை மதிப்போம்!
உண்மை காதலர்களை போற்றுவோம்!
உண்மைக் காதலர்களை ஆதரிப்போம்!
உண்மையான காதலை வாழ வைப்போம்!

அனைத்து உண்மையான காதலர்களுக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...











57
ரோஜாவும் சாக்லேட்டும் கடந்த காதல்...
காதலர் தினம் வந்தாலே
ரோஜா மலருக்கு நாணம்,
சாக்லேட்டுக்கு இனிப்பு அதிகம்..
ஏனெனில்
அவை காதல் பேசப் போகும் நாள்.
சாதாரண நாளில்
ரோஜா வாசனை மட்டும்,
சாக்லேட் சுவை மட்டும்.
ஆனால்,
பிப்ரவரி 14
இரண்டும் இதயமாய் மாறும்.
ஜாதி,மதம்,
பணக்காரன்,ஏழை,
படித்தவன்,படிக்காதவன்
என்ற எந்தப் பாகுபாடும் இன்றி
அன்றொரு நாளில்
ரோஜாவும் சாக்லேட்டும்
இரு மனங்களில் கை கோர்க்கும்.
உயிரற்ற பொருள்கள் தான்
ரோஜாவும் சாக்லேட்டும்,
ஆனால்
உயிருள்ள இரு இதயங்களில்
உணர்வுகளை,பரிமாறிக் கொள்ளும்
உன்னத தூதர்கள்.
அதனால்தான்,காதலர் தினத்தில்
ரோஜாவும் சாக்லேட்டும்
ஒரே கையில்,ஒரே இதயத்தில்,
இணை பிரியாமல்
காதலாய் மலர்கின்றன.


உங்கள் அன்பை
நீங்கள் எங்களிடம் பகிர்ந்துகொள்ளும் போது,
எங்களுக்கும் விழாவே… 🌹🍫
ஆனால் காதலர்களே,
ஒரு கேள்வி…
ஒரு சிறு மாற்றம்…
ஒரு பெரிய அர்த்தம்…
இந்த காதல் தினத்தில்
ஒரு முறை
ரோஜாவை மணக்க விடாமல்,
சாக்லேட்டை இனிக்க விடாமல்,
உங்கள் காதலை
முதியோர் இல்லத்தின் வாசலில்
வைத்து பார்ப்பீர்களா?
ஏன் அங்கே?
என்று கேட்டால் ,
கேளுங்கள்…இதயம் திறந்து கேளுங்கள்.
இன்று,காதலர்களாக நிற்கும் நீங்கள்
நாளை கணவன்,மனைவி,
நாளை மறுநாள் பெற்றோர்,
மெதுவாக…மெதுவாக…
“முதியவர்கள்” ஆகி விடுவீர்கள்.
அப்போது உங்களுக்கும் தேவைப்படும் ....
ஒரு பார்வை, ஒரு வார்த்தை,
ஒரு அரவணைப்பு.
அந்த நேரத்தில்
இந்த உலகம் உங்களுக்கு
ஒரு தனிமை இல்லமாக
மாறிவிடக் கூடாதல்லவா?
அதற்காகத்தான்
காதலர் தினத்திலேயே
உங்களை அங்கே வரச் சொல்கிறோம்.
அங்கே சென்றால் தான் புரியும் ,
வயதான கண்களில் ஒளி குறைந்தாலும்,
பாசம் மட்டும் என்றும் குறையாதது என்று.
அவர்கள் எதிர்பார்ப்பது
ஆடம்பர வாழ்க்கை , அழகிய உடைகள்,
சுவை மிகுந்த உணவுகள் அல்ல.
அவர்களின் ஆசை ஒன்றே…
“நான் சின்ன வயதில்
என் குழந்தையை அரவணைத்தேன்,
என் மூப்பிலும்,அதே குழந்தை
என்னை அரவணைக்க வேண்டும்”
என்ற மௌன வேண்டுகோள்.
அதனால் காதலர்களே,
ஒரு வேண்டுகோளாக,
உங்களிடம் கேட்கிறோம் .
இந்த காதல் தினத்தை
ஒரு முறை , அங்கே கொண்டாடுங்கள்.
அப்போது தான், வயதான காலத்தில்
என்ன தேவை, என்ன எதிர்பார்ப்பு
என்று இப்போதே புரிந்துகொண்டால்,
திருமணத்திற்குப் பிறகு
பெற்றோரை தனிமையில் விட்டுவிட மாட்டீர்கள் அல்லவா?
காதல் என்றால்
ரோஜாவும் சாக்லேட்டும் மட்டும் அல்ல…
அது காலம் கடந்தும்
தொடரும் பாசம்.
💖 இனிய காதலர் தின வாழ்த்துகள் 💖

LUMINOUS 😇💜🙏💐😇
58
நான் உன்னை
முதல்ல பார்த்தது
கண்களால இல்லை,
ஒரு notification-ல்தான்.

உன் “hi”
எந்த poetry-யையும் விட
என்னை அமைதியிழக்கச் செய்தது.
அன்றிலிருந்து
என் கைபேசி
என் இதயத்தோட
ஒரு extension ஆ மாறிடிச்சி

நம் காதல் வளர்ந்தது
“online” என்ற ஒரு பச்சை புள்ளி எரிகிறதா
என பார்த்து பார்த்து அனுப்பும் குறுஞ்செய்தியில்

முதன் முதலில் உன்னை பார்த்தது
உன் DP.
முதல் உரையாடல்
துடிக்கும் இதயம் அல்ல
“typing…” என்று மினுமினுக்கும்
மூன்று புள்ளிகள்

நேரம் கிடைக்காத உலகத்தில்
நாம் ஒருவருக்கொருவர்
“time” கொடுக்க முயன்றோம்.
Metro-வில் நின்றபடி,
Traffic-ல் சிக்கியபடி,
Meeting நடுவே மறைவாக
“miss you” அனுப்பியபடி.

நீ அருகில் இல்லாத இரவுகளில்
உன் குரல்
Voice note-ஆக வந்து
என் தனிமையைத் தழுவியது.

நான் அருகில் இல்லாத நாட்களில்
என் presence
Blue tick-ஆக உன் திரையில் உறங்கியது.

நாம் சண்டை போட்டோம்
கோபமாக இல்லை,
Seen-இல் விடப்பட்ட
நம் மௌனம்

மன்னிப்பு கேட்டோம்
வார்த்தைகளால் இல்லை
ஒரு emoji-யால் 🙂

இந்த காதல்
பூக்கள் கொடுத்து வளர்க்கப்படவில்லை,
Data pack-களாலும்
Late night calls-களாலும்
காத்துக் கொள்ளப்பட்டது

ஆனால்
இந்த வேகமான யுகத்தில்
காதல் மட்டும்
இன்னும் மெதுவாகத்தான் இருந்தது.
Reply வர காத்திருக்கும் அந்த நிமிடங்கள்,
“Call pannalama?” என்று
உள் மனம் நடுங்கும் தருணங்கள்.

நாம் ஒருவருக்கொருவர்
Perfect அல்ல,
ஆனாலும்
“Available” ஆக இருந்தோம்.
Busy வாழ்க்கையிலும்
“I’m here” என்று சொல்லும் அளவுக்கு.

நீ “online” வரும்போது
என் மனசும்
தானா active ஆகும்.
நீ “offline” போகும்போது
என் நாள்
pause ஆகும்.

இந்த உலகம்
Fast forward-ல ஓடினாலும்,
நீ இருக்குற இடத்துல
என் மனசு மட்டும்
Still-ஆ நிக்குது.

இந்த modern life-ல
real  ஆ எனக்கு
கிடைத்த பொக்கிஷம்
நீ தான்
.


****Joker"""
59

காதலர் தினம்
என்ற ஒரு சொல் கேட்டாலே
மனம் தன்னிச்சையாக
மென்மையாய் மாறுகிறது
சொற்களின் சத்தம் குறைந்து
உணர்வுகள் மட்டுமே
பேசத் தொடங்குகிறது
அந்த நொடிதான்
காதலின் தொடக்கம்

பார்க்கும் முன்பே
நம்பச் சொல்லும்
ஒரு உணர்வு

தொட்டுப் பார்க்காமலே
உள்ளுக்குள் பதியும்
ஒரு உலகம்

அதுதான் காதல்

சிரிப்புக்குள் கண்ணீரையும்
கண்ணீருக்குள் சிரிப்பையும்
ஒளித்து வைக்கும்
உணர்வுகளின் மொழி

ஒருதலைக் காதலில்
உரிமை இல்லாத
அக்கறைகள் வாழும்
'சாப்பிட்டியா'
'என்ன பண்ற' என்று
கேட்க முடியாத மனம்
அந்த மௌனத்திலேயே
அன்பை முழுதாய்ச் சொல்லி விடும்
எல்லாமுமாய் இருந்தும்
எதுவுமே ஆக முடியாத
அந்த வலியும்
காதலின் ஒரு தூய வடிவமே

பெண்ணின் காதல்
கூட்டத்தின் நடுவிலும்
ஒரே முகத்தைத் தேடும் தேடல்
ஒரு குரலுக்காக
ஒரு செய்திக்காக
மனம் நாள் முழுதும் காத்திருக்கும்
இல்லாதபோது
அவனின் நினைவுகள்
அவளுக்கு அதிகமாய்
அவள் காதலின் ஆழத்தைச்
சொல்லித் தரும்

ஆணின் காதல்
சொல்லாத அழுகைகளை
உள்ளுக்குள் சேமித்து வைக்கும் அமைதி
கரைந்து போன அகம்பாவம்
உனக்குள் மறைந்திருந்த
குழந்தையை வெளிக்கொண்டு வரும்
அந்த நிமிடம்
நீ சொன்னா சரி என
தன்னை முழுதாய் ஒப்படைத்து
அமைதியிலே நிற்கும்
ஒரு கம்பீரம்

காதல் தோல்வி என்றால்
காதல் பொய்யானது அல்ல
சேர முடியாத நேரங்களின்
மௌனத்தின் தீர்ப்பு
பிரிவும் கூட
ஒரு விதமான காதல்தான்
என்று புரியும் போது
வலி அர்த்தமாகிறது

ஆனால்

எல்லாவற்றுக்கும் மேலாக
ஒரு உண்மை இருக்கின்றது
யாருக்காகவும்
நம்மை முழுதாகத்
தொலைக்காமல்
நம்மை நாமே
அன்புடன் அணைத்துக்
கொள்வதுதான்
உண்மையான காதல்

ஏனென்றால்
 
உலகமே விலகினாலும்
நாம் நம்மோடு இருந்தால்
அந்த self love தான்
எல்லா காதல்களுக்கும்
முடிவும் !
முழுமையும் !

பொழிவதில் அழகு
ஒன்று மழை
மற்றொன்று காதல்

அதனால்
காதல் பொழிவோம்
சக மனிதர்களுக்கு
சக மனிதர்களாக

அனைவருக்கும்
காதலர் தின நல்வாழ்த்துகள் !

60
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 01, 2026, 02:32:58 PM »

February 2026
#454   01.02.2026







- Socky

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10