Recent Posts

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10
51
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on March 20, 2026, 07:38:58 AM »
52
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on March 20, 2026, 05:49:22 AM »
53
என் நெஞ்சில் நின்ற திரைப்படம் எதுன்னு பார்த்தீங்கன்னா 2012 ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படம். இந்தப் படம் சங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த் ,ஜீவா ஆகியோ நடிச்சிருப்பாங்க. இதுல மொத்தம் ஆறு பாடல்கள் இருக்கும் .பாடல்கள் மிக அருமையாக இருக்கும். இந்தப் படம், பொறியியல் கல்லூரி மாணவர்களின் நட்பு, கல்வி முறை மற்றும் வாழ்க்கையைப் பற்றியது. பாரி (விஜய்) என்ற புத்திசாலி மாணவன், தனது நண்பர்களான வெங்கட் (ஸ்ரீகாந்த்), செந்தில் (ஜீவா) ஆகியோரின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறான், இறுதியில் அவன் எங்கே போகிறான் என்பதுதான் கதை.

பாரி (விஜய்), வெங்கட், செந்தில் ஆகிய மூவரும் பொறியியல் கல்லூரியில் தோழர்களாகிறார்கள். கல்வியை மனப்பாடம் செய்து படிக்கும் முறையை எதிர்த்து, பாரி புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என்பதை நண்பர்களுக்கு உணர்த்துகிறான். இதுவே இந்த படம் என் என் மனதில்  நின்றதற்கு முதல் காரணம்.பாரி தனது நண்பர்களின் பயம், குடும்ப அழுத்தம் மற்றும் காதல் சிக்கல்களைப் போக்கி, அவர்களை வாழ்க்கையில் சிறப்பாக வாழ ஊக்குவிக்கிறான். நண்பர்கள் என்றால் சேர்ந்து ஊர் சுற்றுவது மட்டுமில்லாமல் அவர்கள் வாழ்வில் முன்னேற ஊக்குவிப்பது தான் என்பதை இப்படம் கூறுகிறது .இதுவே இந்த படம் எனக்கு பிடிப்பதற்கு இரண்டாவது காரணம்.

கல்லூரி முடித்ததும், பாரி யாருக்கும் சொல்லாமல் மறைந்து விடுகிறான்.பல வருடங்களுக்குப் பிறகு, பாரியைத் தேடி வெங்கட் மற்றும் செந்தில் செல்கிறார்கள். இறுதியாக, பாரி ஒரு புதுமையான பள்ளியில் கற்பித்துக் கொண்டிருப்பதைக் கண்டறிகிறார்கள். பாரியின் உண்மையான பெயர் மற்றும் அவனது மறைந்த வாழ்க்கையின் பின்னணி தெரியவருகிறது. இந்த படத்துல நகைச்சுவை அப்புறம் நண்பர்களை என்கரேஜ் பண்றது அப்புறம் காதல் அப்படின்னு எல்லாம் கலந்து கொடுத்து இருப்பார் இயக்குனர் சங்கர்.

அப்புறம் இந்த படத்துல என் பிரண்ட போல யாரு மச்சான் இந்த சாங் வந்து எனக்கு ரொம்ப பிடிக்கும். 6 சாங்ஸ் இல் இது ரொம்ப சூப்பரா இருக்கும் .அப்புறம் பார்த்தீங்கனா நகைச்சுவை விஜய் ,ஸ்ரீகாந்த் ,ஜீவா இவங்க மூணு பேரும் ரொம்ப சூப்பரா நகைச்சுவை பண்ணி இருப்பாங்க .இந்த படத்துல விஜய் கிட்ட விஜயோட லவ்வர் கேப்பாங்க" உனக்கு யாரை பிடிக்கும் "என்று ,அப்ப விஜய் சொல்லுவாரு "எனக்கு முனி மாவ ரொம்ப பிடிக்கும்" என்று .அந்த காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் .

அப்புறம் பாத்தீங்கன்னா பிரண்ட்ஸ ஊக்குவிப்பாரு. விஜய் உங்களுக்கு புடிச்ச வேலையை செய்ங்க அப்படின்னு சொல்லுவாரு. இதன் மூலமா எனக்கு என்ன புரிஞ்சிச்சுன்னா எந்த ஒர்க்கும் இன்ட்ரஸ்ட் இல்லாம செஞ்சா முன்னேற முடியாது என்பதை ரொம்ப தெளிவா சொல்லி இருப்பார் .இயக்குனர் சங்கர் இது மாதிரி ரொம்ப நல்ல விஷயங்கள் இந்த படத்தில் இருப்பது தான் இந்த திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிச்சதாகவும் என் மனதில் நின்ற திரைப்படமாகவும் இருக்கிறது. இதை ஷேர் செய்ய வாய்ப்பு அளித்த  f t c  டீம்க்கும் நெஞ்சம் மறப்பதில்லை ப்ரோக்ராம்க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
54
   என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்  - கர்ணன்.
------------------------------------------------------------------------------------

தினமும் கதைசொல்லும் என் தாத்தாவின் மூலமாக கர்ணன் கதை கேட்டு இருக்கின்றேன்.  இதுவே என் மனதுக்கு பிடித்த கதாபாத்திரம்.

ஒரு நாள் எனக்கு கர்ணன் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது
1964 ஆம் ஆண்டு,  B. R. பந்துலு இயக்கத்தில், சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்த திரைப்படம். இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கவி வரிகள்  கண்ணதாசன்.  வசனம் சக்தி டி.கே. கிருஷ்ணசாமி.

செவி வழியே கேட்ட கதையை, திரையில் பார்க்கும் போதும் மனதில் ஆழமாக பதிந்தது.  இதை வெறும் கதையாக என்னால் பார்க்க முடியவில்லை. வாழ்க்கையை புரியவைக்கும் ஒரு பாடமாக தோன்றியது.

இதில் நிறைய வியக்க வைக்கும் காட்சி அமைப்புகள் இருந்தது.  இதன் போர்க் காட்சிகள் குருக்ஷேத்திரத்தில் படமாக்கப்பட்டன, அதில் நிஜமான நமது இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பல வீரர்கள் இடம்பெற்றனர் . மேலும் அதிகமான  யானைகள்,  குதிரைகள் பயன் படுத்தினார்களாம். 

இந்த திரைப்படத்தில் நடிப்பு, பாடல்கள் இருந்தாலும் என் மனதில் பதிந்தது வேறு.

1.  கர்ணன் : எல்லோராலும் நிராகரிக்க பட்ட ஒருவரின் வாழ்க்கையை புரிந்து கொள்ளமுடிகிறது.
2. குந்திதேவி :  விளையாட்டாக செய்யும் செயலின் விளைவை அவரே அனுபவிக்க வேண்டும்.
3. கர்ணன் : ஒருவனுடைய தகுதி தான்.... அவருடைய திறமைகளை மேடை ஏற்றுகிறது.
4. துரியோதனன் : நம்முள் இருக்கும் தீய குணங்களை தூண்டிவிடும் எவரையும் நம்பக்கூடாது.
5. கர்ணன் : தவறான மனிதர்களுக்கு துணை நிற்பது நம்மையும் தவறான பாதைக்கு அழைத்து செல்லும்.
6. கண்ணன் : நல்லவர்களை வஞ்சகத்தால் வீழ்த்தும் நல்லவனுமே பாவத்தை சுமக்கிறான் .
7. கர்ணன்/குந்தி: தேவை படும் போது கிடைக்காத பாசமும் அன்பும்.. என்றுமே வீண்தான்.
8. அர்ஜுனன் : ஒருவரின் திறமைகளை சூதால் களவாடிய பிறகும் அவருடன் மோதி வெற்றிகொள்வது தோல்விக்கு சமமே.
9. கர்ணன் : நாம் தர்மத்தின் வழியின் நின்றால், மனிதர்களும் தெய்வங்களும் நம்மை கைவிட்டாலும். தர்மம் நம்மை காத்து நிற்கும்.

இன்னும் நிறைய பாடங்களை சொல்லி கொண்டே போகலாம்.

எல்லோரும் இந்த திரைப்படத்தை.. கூடா நட்புக்கு உதாரணம் சொல்லுவாங்க. ஆனால் இது தன்னை நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரின் , சதியால் வீழ்ந்த மாவீரன் கர்ணனின் கதைன்னு தோணும்.

இந்த படத்தின் தாக்கத்தால், என் மனதில் தோன்றிய எண்ணங்களை சொல்ல நினைக்கின்றேன்.

*  வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு  துணை நிற்க முயற்சி  செய்யணும் .
*  பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களை அவரின் எண்ணங்களை மாற்றனும்.
* நாம் கற்ற பாடங்களை (வித்தைகளை) நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* யாரையும் ஏமாற்றியோ பொய் சொல்லியோ நல்ல விஷயங்கள் கற்றுக்கொண்டால் அது நமக்கு உதவாது.
* நமக்கு நியாயமாக கிடைக்கும் விஷயங்கள், கண்டிப்பாக நம்மை வந்து சேரும் .
* பாசத்துக்கு ஏங்கும்.. எந்த உயிரையும் நம்ம கருணையோடு பார்த்து .. அரவணைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
* நம்ம எதை சாதிக்க நினைக்கின்றோமோ, அதை நம்ம திறமைகளால் வெல்ல வேண்டும். குறுக்கு வழியில் சாதிக்க நினைக்க கூடாது.
* நம் எண்ணங்களும் செயலும் நேர்மையாகவும்.. உண்மையாகவும் இருந்தால்,  அது நிச்சயம் நம்மை கைவிடாது,

இப்படி சொல்லி கொண்டே போகலாம். இப்பொழுதும் இந்த திரைப்படத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன்.

என் தாத்தா இன்று என்னுடன் இல்லையென்றாலும், அவர் என்னுள் விதைத்த கர்ணன்.. இன்னும் என் வாழ்க்கையில் உயிரோடு வாழ்கிறார்.
55
என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான அதே சமயம் என்னை ரொம்ப பாதிச்ச படம்னா அது கன்னத்தில் முத்தமிட்டால் தான். இவ்வளவு வருஷம் ஆனாலும் என்னால அழாம ஒரு தடவ கூட climax பார்க்க முடிஞ்சதில்ல.

போரின் வாசனையயும் துயரத்தையும் வெறும் வடிகட்டின தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமே மட்டுமே அறிஞ்ச childhood கொண்ட ஆள் நான். ஒரு போர் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வியலை எப்டி பதிக்குதுனு எனக்குள்ள முதன்முறையா ஆழமா பதிவு செஞ்ச படம் இது.

சிம்ரன்னா glamour and modern. மாதவன்னா சாக்லேட் ஹீரோ கனவு நாயகன்ற விம்பத்தை உடைச்ச படம் அது. முக்கிய கதாபாத்திரமான அமுதா எனும் கீர்த்தனா நடிப்பை பத்தி சொல்லவே வேணாம்.

சினிமா பத்தி ஆராய்ந்து பாக்ற பக்குவம் இல்லாத அந்த பள்ளிப்பருவத்தில கூட அமுதாவோட தவிப்பை நமக்குள்ள அப்டியே இறக்குற மாதிரி நடிப்பை வழங்கின keerthana இன்னும் நிறையவே பல திரைப்படங்கள் பண்ணி சினிமா உலகில் கொண்டாடபட்டுருக்க வேண்டியவங்கனு பல முறை நினச்சுருக்கன்.

அந்த படத்தோட speciality என்னோட வாழ்கையின் ஒவ்வொரு பருவத்தில பார்க்கும்போதும் அந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தோட என்னோட ஒன்றி போக முடிஞ்சுது.

பள்ளி பருவத்துல அமுதாவோட துடிப்பு, அம்மாவை தேடுற தவிப்பு, கேள்விகள் நிறைந்த அந்த பருவத்தை புரிஞ்சுக்க முடிஞ்சுது.

கல்லூரி பருவத்துல சமூக பிரச்சினைகள், ஒரு சிலர் பண்ணும் தவறுகளுக்காக அவங்க சார்ந்த முழு இனத்தையோ மதத்தையோ குறை சொல்றது நியாயம் இல்லனு மாதவனோட சிங்கள நண்பனா வர்ற பிரகாஷ்ராஜ் மூலம் சொல்ல வந்தத உணர முடிஞ்சுது.ஏன்னா கல்லூரி காலங்களில வீட்டை விட்டு வந்து தங்கிருக்க தனிமையில எனக்கு மனதளவுல ஆதரவு தந்த நணபர்கள்ல பல சகோதர மொழி பேசுற நண்பர்கள் இருந்துருக்காங்க

இப்ப maturity வந்த அப்புறம் ஒரு குழந்தை அம்மாவோட பாசத்துக்கு ஏங்குறதுக்கு சற்றும் குறைவில்லாதது தான் வளர்த்த பொண்ணு பெற்ற தாயை பார்த்தது போய்டுவளோ அப்டின்ற தவிப்பு அப்டிங்ரத உணர்த்தும் சிம்ரனோட இந்திரா கதாபாத்திரத்தின் மூலம் உணர முடியுது. பெற்ற பாசத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாதது வளர்த்த பாசம்.

எப்ப கேட்டாலும் மனதுக்கு அமைதியை குடுக்குற “வெள்ளை பூக்கள்” பாடலும், தாய் மற்றும் தகப்பனின் அன்பின் ஒட்டுமொத்த வெளிப்பாடான “தெய்வம் தந்த பூவே” பாடலும், காதல் வரும் தருணத்தை இதுக்கு மேல அழகா சொல்ல முடியுமா அப்டினு நினைக்க வைக்குற “சட்டென நனைந்தது நெஞ்சம்” பாடலும் A. R. Rahman-இன் magical diary ல மறக்க முடியாத பக்கங்கள். ragging time ல பாட சொன்னா எனக்கிருக்கது 2 choice தான் ஒன்னு ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே இன்னொன்னு ஒரு தெய்வம் தந்த பூவே.

முடிவாக…
இந்த படம் எனக்கு ஒரு சினிமா அனுபவம்னு மட்டும் இல்ல; வாழ்க்கையை வேற கோணத்துல பார்க்க கற்றுக்கொடுத்த ஒரு பயணம். ஒவ்வொரு தடவையும் பார்க்கும்போது புதிய உணர்ச்சிகளையும் புதிய புரிதல்களையும் கொடுக்கிற ஒரு உயிரோட படைப்பு. சில படங்கள் நம்ம மனசுல நிக்காது… நம்ம வாழ்க்கையோடே கலந்து போயிடும் — எனக்காக அந்த பட்டியலின் முதல் இடத்துல நிக்குறது “கன்னத்தில் முத்தமிட்டால்” தான்.
56
ஹாய் இசைத்தென்றல் RJ,

வணக்கம், இந்த வாரம் இடம் கிடைக்குமான்னு தெரியல, முயற்சி முந்திரியை தரும்னு ஒரு மஹான் சொல்லி இருக்காரு, யாருன்னு தேடாதீங்க அது நான் தான். கடந்த வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சிய சகோதரி தேன்மொழி ரொம்ப அருமையா தொகுத்து வழங்கியிருந்தாங்க. அவங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும். சகோதரி தேஜஸ்வி அற்புதமா எடிட் பண்ணியிருந்தாங்க, அவங்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும். இசைத்தென்றல் நிகழ்ச்சியை இடைவிடாது தொகுத்து வழங்கும் சகோதரி டீனுவிற்கு அன்பு கலந்த நன்றியும், பாராட்டுக்களும்.

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்
With Love திரைப்படத்துலிருந்து எதுக்கு தான் இந்த காதல் பாடல்.

சமீபத்துல இந்த படம் பார்த்துல இருந்து ரீபீட் மோட்ல ஓடிட்டு இருக்கு இந்த படத்தோட பாடல்கள். என்னோட ரெண்டு செல்லாக்குட்டிகள் வேற பாடல்ல இருக்காங்க. பாட்டு பாடின யுவன், இசையமைச்ச ஷான் ரோல்டன், வேற என்ன வேணும், Bliss Bliss mode தான். சோக பாட்ட கூட ரசிச்சு கேட்க வைக்கிற magicians வேற என்ன சொல்ல? இந்த பாடலை யுவன்  & ஷான் ரோல்டன் ரசிகர்கள் எல்லாருக்காகவும் கேட்கிறேன்.

57
வணக்கம் , இசை தென்றல் post போட்டு கொஞ்சம் காலம் ஆச்சு . சரி இன்னைக்கு போற்றலாம்னு வந்துருக்கேன் . இந்தவாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்

பாடல் : இல்லையுதிர் காலம் என்றால்
படம் : அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது.
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி, பாபி,
ரீட்டா, ரேஷ்மி, ரஞ்சித் மற்றும் நவீன்
மாதவ்
இசை : யுவன்

ரொம்ப ரொம்ப cute ஆன ஒரு பாடல்.
Chorus மாறி எடுத்துருப்பாங்க.

நான் பள்ளியிலே படிக்கும்போது இந்த பாடலே ஒரு போட்டிக்கு எடுத்து பாடி இருக்கோம். ஆகவே என் மனதுக்கு நெருக்கமான பாடல்களில் இதுவும் ஒன்று

எல்லா வரிகளும் பிடிக்கும். ஆனா கீழே உள்ள வரி போட்டியிலே என்னோடே portion , ஆக எனக்கு special ஆன வரிகள் இதுதான்

காட்டுக்கு ஒரு நாள் வருவான்
அவள் கண்களை கைகளில் தொடுவான்
காதல் முத்தம் தருவான்
அவள் சாபம் நீங்க செய்வான்
காட்டு தேரில் வருவான் பாருங்க
ஒரு காதல் பூத்த கதையை கேளுங்க

வாய்ப்புக்கு நன்றி
Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10