51
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 399
« Last post by Shreya on March 10, 2026, 11:10:57 AM »(குழந்தை):
அம்மா! அதோ பாருங்களேன்
அழகிய சிவப்புத் தோட்டம்!
வானம் கூடக் கருப்பா இருக்கு
பூக்கள் மட்டும் ஏன் சிவப்பா இருக்கு?
எண்ணிப் பார்த்தேன், முடியலைம்மா
ஏகப்பட்ட பூக்கள்!
ஒரே மாதிரித் தலை ஆட்டுது..
ஒரே மாதிரிச் சிரிக்குது!
(அம்மா):
ஆமாம் கண்ணே..அது ஒரு கூட்டம்!
ஒரே மாதிரி இருப்பது தான் சுலபம்!
யார் என்ன சொன்னாலும்..அதை
தலையாட்டி ஏற்பது தான் வழக்கம்!
(குழந்தை):
ஆனா அம்மா..அங்கே பாருங்களேன்
அதிசயம் ஒன்று தெரியுது!
சிவப்பு பூக்களுக்கு நடுவிலே
சிறு வெண்ணிறப் பூ ஒன்று மின்னுது!
அம்மா..அந்தப் பூவுக்கு பயமில்லையா?
யாரும் அது கூட இல்லையே?
தனியா நிற்க வருத்தப்பட்டு
அது அழுதிடாதா அம்மா?
(அம்மா):
இல்லை பாப்பா..கவனித்துப் பார்
அது அழுதுகொண்டு இருக்கவில்லை!
சிவப்புப் பூக்களுக்கு நடுவிலே
அது சிரித்துக் கொண்டு தான் இருக்கிறது!
பறக்கும் அந்தப் பறவையை கேள்
அதற்கு அந்த வெண்பூவைத் தான் பிடிக்கும்!
ஏனென்றால்... ஆயிரம் பூக்கள் நடுவே
அது மட்டும் தான் தனித்து தெரியும்!
(குழந்தை):
ஆமாம்மா... இப்பத்தான் புரியுது!
சிவப்புப் பூக்கள் எல்லாம் நிலத்தைப் பார்க்குது!
ஆனா அந்த வெள்ளைப்பூ மட்டும் தான்
அண்ணாந்து வானத்தை பார்க்குது!
அம்மா..எனக்கும் ஒரு ஆசை!
எல்லோரும் ஒரு பக்கம் ஓடினாலும்
நான் மட்டும் அந்த வெண்பூவைப் போல
என் பாதையை நானே தேடிடுவேன்!
(அம்மா):
ஆம் என் செல்லமே!
அடையாளம் தொலைத்த
ஆயிரம் சிவப்பு பூக்களை விட
அடையாளம் காட்டும் அந்த ஒரு வெண்மை
அழகு மட்டுமல்ல..அது தான் வலிமை!
தனித்து நின்றாலும் தலை நிமிர்ந்து நில்!
உன் புன்னகை தான் உனது அழகு!
வெள்ளைப்பூப் போல நீயும் மலர்ந்தால்
உன் வசமாகும் இந்த உலகம்!!!
அம்மா! அதோ பாருங்களேன்
அழகிய சிவப்புத் தோட்டம்!
வானம் கூடக் கருப்பா இருக்கு
பூக்கள் மட்டும் ஏன் சிவப்பா இருக்கு?
எண்ணிப் பார்த்தேன், முடியலைம்மா
ஏகப்பட்ட பூக்கள்!
ஒரே மாதிரித் தலை ஆட்டுது..
ஒரே மாதிரிச் சிரிக்குது!
(அம்மா):
ஆமாம் கண்ணே..அது ஒரு கூட்டம்!
ஒரே மாதிரி இருப்பது தான் சுலபம்!
யார் என்ன சொன்னாலும்..அதை
தலையாட்டி ஏற்பது தான் வழக்கம்!
(குழந்தை):
ஆனா அம்மா..அங்கே பாருங்களேன்
அதிசயம் ஒன்று தெரியுது!
சிவப்பு பூக்களுக்கு நடுவிலே
சிறு வெண்ணிறப் பூ ஒன்று மின்னுது!
அம்மா..அந்தப் பூவுக்கு பயமில்லையா?
யாரும் அது கூட இல்லையே?
தனியா நிற்க வருத்தப்பட்டு
அது அழுதிடாதா அம்மா?
(அம்மா):
இல்லை பாப்பா..கவனித்துப் பார்
அது அழுதுகொண்டு இருக்கவில்லை!
சிவப்புப் பூக்களுக்கு நடுவிலே
அது சிரித்துக் கொண்டு தான் இருக்கிறது!
பறக்கும் அந்தப் பறவையை கேள்
அதற்கு அந்த வெண்பூவைத் தான் பிடிக்கும்!
ஏனென்றால்... ஆயிரம் பூக்கள் நடுவே
அது மட்டும் தான் தனித்து தெரியும்!
(குழந்தை):
ஆமாம்மா... இப்பத்தான் புரியுது!
சிவப்புப் பூக்கள் எல்லாம் நிலத்தைப் பார்க்குது!
ஆனா அந்த வெள்ளைப்பூ மட்டும் தான்
அண்ணாந்து வானத்தை பார்க்குது!
அம்மா..எனக்கும் ஒரு ஆசை!
எல்லோரும் ஒரு பக்கம் ஓடினாலும்
நான் மட்டும் அந்த வெண்பூவைப் போல
என் பாதையை நானே தேடிடுவேன்!
(அம்மா):
ஆம் என் செல்லமே!
அடையாளம் தொலைத்த
ஆயிரம் சிவப்பு பூக்களை விட
அடையாளம் காட்டும் அந்த ஒரு வெண்மை
அழகு மட்டுமல்ல..அது தான் வலிமை!
தனித்து நின்றாலும் தலை நிமிர்ந்து நில்!
உன் புன்னகை தான் உனது அழகு!
வெள்ளைப்பூப் போல நீயும் மலர்ந்தால்
உன் வசமாகும் இந்த உலகம்!!!

Recent Posts


