Recent Posts

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10
51
‘கொல்லக் காட்டை வித்துட்டோம்ப்பா’
அம்மாவின் குறுஞ்செய்தி
மனதை அறுத்துக்கொண்டே இருந்தது.

சித்தப்பா சீர் செதுக்கி,
தூக்கி விட்ட
கழனிக் காடு

“எவ்வளவு கஷ்டம்னாலும் விவசாயத்த விட்டுராதய்யா”
பாட்டனின் சொல்லில்
வேர் பிடித்த சித்தப்பனின் வீராப்பு
நினைவுகளில் மின்னிச் சென்றது.

“சவுக்கு போடலாம் ம்மா,
அது பாட்டுக்கு கெடக்கும்… "
"ஆர்.எஸ். பதிய போட்டு விடுவோம் ம்மா,
அது பாட்டுக்கு கிடக்கும்”
“வேணாம்மா, வித்துறாத,
 நான் வேலைய விட்டுட்டு
கொய்யா தோட்டம் போடுவேன்…”

என் ஒவ்வொரு
வாய் சவடாலுக்கும்
கழனி மாடு மேயும் களை காடாகி கொண்டிருந்தது.

அவ்வளவுதான்.
முடிந்தது.

ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும்
சித்தப்பாவின் தலையிலும் தோளிலும்
சுமந்த வரப்பட்ட
உளுந்து மூட்டைகள், வாழைத் தார்கள்,
எள் ஆடி எடுத்த எண்ணெய்கள்,
கடலை சாக்குகள்
மண மணக்க நிறைந்திருந்த வீடது.

இனி உலுக்கிய புளிகள் எங்கே போகும்?

ராய முனீஸ்வரனுக்கு
உளுந்து அறுத்து ஆடி பட்ட சாகுபடிய
படையல் இட
ஆளுமில்லை.
ஊருமில்லை.
பேருமில்லை.

நட்ட மரமெல்லாம் இனி பட்டுப் போகும்.

“களையும் கருவேலமும் முளைச்சுக் கிடக்குற காட்டுக்கு
யாரோ பாசனம் பண்ணி பயிர் வைப்பாங்கல்ல?”
அம்மாவின் நியாயங்கள்,
நியாயங்கள்தான்.

சித்தப்பாவின் மெலிந்த கால்கள்
நினைவுக்கு வந்தது
உழைத்தே உழைத்தே தேய்ந்து போன கால்கள்,
சேற்றுப் புண்ணின் காய்ந்த தழும்புகள் நிறைந்த கால்கள்.
பாட்டனின் கால்களும்
முப்பாட்டனின் கால்களும்
நினைவுக்கு வந்தது.
எந்த நிலத்து சேற்றையும் அறியாத
என் கால்களை மெதுவாக தடவிக் கொண்டேன்.
மனக்குடையான் ராய முனீஸ்வரா
நெலத்த மட்டும்
எப்பவும் தழைக்க வச்சிருய்யா.
52


கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
என என்றோ ஒருவன் பாடினான் அன்று.. அனால்
கடவுளுக்கு மட்டுமே நீ தொழிலாளி
இப்பாரில் வாழும் மனிதருக்கெல்லாம்
என்றுமே நீ முதலாளி என
நான் பாட நினைக்கிறேன் இன்று....

இப்புவியில் வாழும் உயிர்களை
அன்னையின் கருவில் விதைப்பவன் இறைவன். எனில்
அந்த கரு வளர உணவை வழங்கும்
விவசாயியும் நமக்கு கடவுள் தானே??

பசியில் அழும் குழந்தைக்கு
புசிக்க உணவு தருபவள் தாயென்றால்..
உலகமே பசியாற்ற உணவளிக்கும் நீ
அந்த தாய்க்கும் மேலேன்றால் மிகையாகுமோ??

குழந்தைக்கு தன் குருதியை பாலாக ஊட்டும் அன்னை போல் - விளையும் பயிர்களுக்கு
தன் வியர்வையை பாலாக ஊட்டுபவன் நம் விவசாயி..
அடுத்தவர் பசியை போக்க - என்றுமே
தன் பசியை மறந்து உழைப்பவன் இந்த விவசாயி..

நெற்ககதிர்கள் தலையசைத்த பூமியில்
இன்று காற்றாலைகளின் அரசாங்கம்...
அரிசி விளைந்த பூமியில் இன்று
அடுக்குமாடி கட்டிடங்களின் ஆரவாரம்...

பத்து மாதம் கருவில் வளர்ந்தால் தான்
குழந்தை ஆரோக்கியமாய் இருக்குமாம்..அதுபோல்
பக்குவப்பட்ட காலத்தில் பொறுமையாய் அறுவடை செய்தால் தானே உணவும் ஆரோக்கியமானதாய் இருக்கும்??

குறுகிய காலத்தில் விளைச்சல் தரும்
விஞ்ஞான விளைச்சல் வேண்டாம்
நம் விளைநிலங்களை விலை பேசும்
அந்த விஞ்ஞான வளர்ச்சியே வேண்டாம் என்போம்..

உலகையே நம் உள்ளங்கையில்  அடக்க
அந்த விஞ்ஞானத்தால் முடியும்
ஆனால் நம் உள்ளங்கையில் உணவை அளிக்க
நம் விவசாயத்தால் மட்டுமே முடியும்

வாடிய பயிரை கண்டு வாடும்
விவசாயின் நிலை மாறவேண்டும்
விவசாயி படிக்க முடியுமா தெரியவில்லை - ஆனால்
பட்டதாரிகள் விவசாயிகளாய் மாறவேண்டும்..

படித்தால் தான் சோறு என்ற நிலை மாறவேண்டும்
சேற்றில் கால் பதித்தால் தான் சோறு
என்ற நிஜம் புரியவேண்டும்..

நெற்களமும் ஒரு போர்க்களமே
இயற்கையுடன் போரிட்டு
வருணனின் வரம் பெற்று
ஆரோக்கியமான விளைச்சல் கண்டு
அகமகிழ்வோடு அறுவடை செய்யும்
 ஒவ்வொரு விவசாயியும்  வீரனே

இந்த உலகின் பசி போக்க
இந்தா புசி என்று உணவளிக்கும்
விவசாயியை அரவணைப்போம்
விவசாயத்தை காப்போம்....




அனைவருக்கும் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் தின நல்வாழ்த்துகள்..🌾🌾



53
GENERAL / Re: Joker's Short Messeges
« Last post by joker on January 06, 2026, 08:29:54 PM »
If you are a person who has an addiction;
you are not the addiction itself.
This is a behaviour you can change.
Do not let it become your identity.
54
மஞ்சள் வெயில்
மண்ணில் சாயும் வேளையில்,
நிஜத்தின்
நிழல்களாய்  மனிதனும் மாடும்

ஏர் பிடித்த கைகள்
அரசரின் அரியணை காணாதவை,
ஆனால்
உலகின் பசியைத் தணிக்கும்
முதல் விரல்கள்

மண் கீறப்படுகிறது
வலியால் அல்ல,
நம்பிக்கையால்.
விதை விழுகிறது
இன்று அல்ல,
நாளை என்ற கனவோடு.

ஆனால்
உழுத பின்
அவனுக்கான
அங்கீகாரமோ ,
அவனின் வேர்வைக்கான
கூலியோ
கிடைக்கிறதா என்றால்
விடையாய்
கேள்விக்குறி?

சேற்றில்
கால்நடைகளின்
காலடி தடத்தில்
கடந்து போகிறது
பல தலைமுறைகள்

ஏர் ஓடும் பாதை போலத்தான்
மனித வாழ்க்கையும்,
நேராக இல்லை,
ஆனால்
வெற்றிக்கான அறுவடையில்
நிறுத்தமுமில்லை.

சுட்டு எரிக்கும் வெயில்
மழையோ வரமால்  சோதிக்கிறது,
பயிர் காத்திருக்கச் சொல்கிறது

இங்கு
வெற்றி ஆரவாரம் இல்லை
தோல்வி அறிவிப்பும் இல்லை
உழைப்பு மட்டும்
தினசரி வழிபாடு.

சூரியன் மறைகிறான்
ஆனால்
மீண்டும் உதிப்பான்
அதுபோல தான்
மனிதனின்
தன்னம்பிக்கையும்

ஏர் உழுதலும்
மனிதனின் வாழ்க்கையும்
ஒரு நாளின் கதையல்ல
அது
மண்ணில் எழுதப்படும்
முடிவில்லா நெடுங்கவிதை.

பொங்கல் நல் வாழ்த்துக்கள்


****JOKER****
55
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on January 06, 2026, 03:38:19 PM »
56
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒரு கதை உண்டு
ஆனால்
ஒரு உழவரின் கதை
மண்ணில் எழுதப்பட்ட வாழ்க்கை.
சில வரிகள்
சேற்றில் புதையும்
சில வரிகள்
நினைவுகளாய் மனதில் பதியும்.
அவர்கள்
இந்த உலகிற்கு தரும்
உணவே காலம்
எழுதும் ஓர் கவிதை.

உழவரின் கதைகள்
படிப்பதற்கு மட்டும் அல்ல
உணர்வுகளை உணர்ந்து
வாழ வேண்டியவை
சில வரிகள்
சோகமாய் கண்ணீராய் சிந்தும்
சில வரிகள்
நெருடலாய் நெருப்பாய் வழியும்
ஆனால்
சில வரிகள்
சிந்தனையின் விதையாக
நம்முள் வளர செய்யும்
வாழ்க்கையின் ஓட்டத்தை மாற்றும்.

எத்தனை கதைகள்
நம் வாழ்வில்
கடந்து வந்திருந்தாலும்
வேறு எந்தக் கதையோடும்
ஒப்பீடு செய்ய முடியாமல்
சிறந்த கதையாக
வெகு சில கதைகள் உண்டு
அதில் என்றும் நிலைத்து நிற்பது
உழவரின் கதை.

தொழில்நுட்பம்
விண்ணைத் தொட்டாலும்
ஒரு துளி உணவையும்
உருவாக்க முடியாது.
உழவன் சேற்றில்
கால் வைக்காமல்
நாம் சோற்றில்
கை வைக்க முடியாது.

மண்ணோடு பேசும்
உழவரின் விரல்களில்
எத்தனை கனவுகள்
எத்தனை ஆசைகள்
மழையில் நனைய
தவறிய விதைகளும்
உழவரின் வேர்வையில்
உயிர் பெறும்.

உணவுக்கு “உ” என்ற
முதல் எழுத்து வந்ததே
உழவனின் உழைப்பிலிருந்துதான்
உழைப்பின் முதல் எழுத்து
உழவனின் முதல் அடையாளம்
அதுவே அந்த “உ”

தை முதல் நாள் வந்தால்
பானையில் கொதிப்பது
வெறும் நெல் விதை அல்ல
அது உழவரின் நம்பிக்கை
அது உழவரின் மகிழ்ச்சி
அது மாடுகளின் மணியோசை
அது மண்ணின் வாசனை
எல்லாம் ஒன்றாக
பொங்கி வருவதால்தான்
அது பொங்கல்.

நாற்று நடும்
கைகளில்தான்
நம் வாழ்வின்
எதிர்காலம் இருக்கிறது
என்பதை மறக்காமல்
உழவரின் உழைப்புக்கு
நன்றியும் வணக்கமும்
செலுத்துவோம்.

உழவர் வாழ்க
மண் வளம் பெறுக
மனிதக் கதைகளில்
மிக அழுத்தமான கதை
உழவரின் கதையாக
என்றும் பொங்கி நிற்கட்டும்.

இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்
இனிய உழவர் தின நல்வாழ்த்துகள்
57
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 06, 2026, 01:18:40 PM »
58
GENERAL / 🍊 Choose round, evenly shaped oranges
« Last post by MysteRy on January 06, 2026, 11:47:33 AM »



A balanced shape usually indicates that the fruit has developed well and is packed with juice inside. Irregular shapes can sometimes mean less flavor or uneven ripening.

⚖️ Pick the heavier ones
When two oranges are the same size, always go for the heavier one. Extra weight is a sign that it’s loaded with juice and will taste fresher and sweeter.

🌟 Check the skin
The peel should be firm, smooth, and have a vibrant color. This shows that the orange is ripe and full of flavor. Avoid fruit with wrinkled or dull skin, as it may be old or dry.

🚫 Avoid light or spongy fruit
If the orange feels too light for its size or slightly spongy when pressed, it’s likely lacking juice inside and won’t taste as good.
59
                                       மண் வாசனை..!

சூரியன் உதிக்கும் முன்னே அவனோ
சுறுசுறுப்பாய் எழுந்து விடுவான்
ஊரே தூங்கும் நேரம்தான்
விழி திறந்து நடந்தோடுவான்..

அவன் சேற்றில் கை வைத்தால்தான்
நாம் சோற்றில் கை வைக்க முடியும்..
சொந்த நிலம் கூட இல்லையென்றாலும்
அந்த மண்ணையே தாயாய் மதிப்பான்..!

பகலெல்லாம் சூரியன் சுட்டெரிக்க
வியர்வைத் துளி நிலத்தில் விழ..
முதுகெலும்பு வளைந்தாலும்
ஏர் பிடித்து உழைத்தே நிற்பான்..!

மழை பொய்த்தால் ஒரு கவலை..
மழை கூடினால் ஒரு கவலை..
கடன் சுமை கழுத்தை நெரிக்க
கண்ணீர்த் துளிகள் மண்ணில் வடிகின்றன..!

இயற்கை ஒருபுறம் சோதிக்க,
மனிதர்கள் மறுபுறம் வதைக்க..
ரத்தமெல்லாம் வியர்வையாய் சிந்தும் இவன்
உலகுக்கே உணவளிப்பவன்..
இன்றும் ஏழ்மையில்
வாடுவது கொடுமையல்லவா?

நாள் முழுதும் உழைத்த நிலத்தில்
இன்று முத்துச்சரமாய் நெல் மணிகள்..
வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள்
வீடு வந்து சேரும் பொன்னாளே..!

பானை சுற்றிய மஞ்சள் கொத்து
நம் வாழ்வில் மங்கலம் சேர்க்கட்டும்..
புதிய அரிசியின் வாசனையில்
வறுமை விலகிப் போகட்டும்..!

கரும்பின் இனிப்பைப் போலவே
அவன் வாழ்க்கை மாறட்டும்..
விளைந்த பயிருக்கு நல்ல விலை
அதுவே விவசாயி காணும் பெரிய பொங்கல்..!

உழைக்கும் கரங்கள் உயரட்டும்
உழவர் திருநாள் சிறக்கட்டும்
பானையில் பொங்கல் பொங்கட்டும்
வானம் மும்மாரி பொழியட்டும் 
மண் வாசனை எங்கும் பரவட்டும்
இனிதாய் மகிழ்ச்சி பெருகட்டும்..!


இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!!!
60
STORIES / The Ant and the Flooded Path
« Last post by MysteRy on January 06, 2026, 10:23:41 AM »


One bright morning, after a heavy night of rain, little Antara the Ant set out to return to her anthill after a long day of foraging. She had found crumbs big enough to feed her family for days, and her heart was filled with pride. But as she reached the path leading home, her tiny heart sank — the familiar trail had turned into a stream. The heavy rain had flooded her way.

The once-dry soil was now muddy and slippery. The twigs that once guided her steps were floating away. For a moment, Antara stood still, staring at the rushing water.

“Oh no,” she murmured, “how will I ever cross this?”

She thought of turning back, but the thought of her hungry siblings waiting at home gave her courage. “No,” she said firmly, “there must be a way.”

Antara began to look around. A few leaves had fallen nearby, floating gently on the water. She climbed onto one, and to her surprise, it carried her! Slowly, she paddled with her antennae, pushing her little boat from one leaf to another, balancing her food on her back.

But then, she reached a spot where the leaves could go no farther. The water grew deeper, and the leaves began to drift away. Antara quickly jumped onto a nearby pebble that poked out of the water. She tested it — it was firm. Then she looked ahead and saw another pebble a short distance away.

“Perfect!” she said. One pebble at a time, she hopped, creating her own bridge across the flooded path.

It took patience. Once, she slipped and almost lost her crumb, but she caught it just in time. Bit by bit, she reached the dry side of the path.

When she finally stood before her anthill, drenched but victorious, the other ants rushed out to greet her. “Antara, you made it! How did you cross the flood?” they asked.

Antara smiled, shaking off a drop of water from her feeler. “When the path is blocked,” she said, “make a new one. The storm may flood the way, but it cannot stop the determined heart.”

That night, the colony feasted on the crumbs she brought. And from that day on, whenever it rained and the ground was wet, the young ants would whisper to each other, “Remember Antara — the ant who made boats from leaves and bridges from pebbles.”

***
Moral Lesson:

This story is for you, dear reader — the one who often feels like giving up when life floods your path. Like the ant, you may meet obstacles that seem too strong, too sudden, or too unfair. But remember: no good thing comes easily. Greatness is not found on dry and easy roads — it is discovered when you choose to build bridges over the waters that block your way.

Every leaf the ant used, every pebble she stepped on, represents courage, patience, and faith in the face of difficulty. The flood did not stop her; it only revealed her strength.

So when trials and temptations come your way, do not despair. Use what you have — your wisdom, your creativity, your determination — and keep moving forward. For those who endure the storm with faith and courage will one day stand on solid ground, stronger and wiser than before.


Message:
The flooded path is not your end; it is the test that shapes your greatness.
Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10