61
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-004 (என்னுயிர் தோழி)
« Last post by Sethu on March 06, 2026, 01:39:07 AM »எங்கள்ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் அதில் கண்ணன் செல்வம் அபிநயா பரமேஸ்வரி என எனக்கு நாலு நண்பர்கள் இருந்தாங்க எங்கள் ஊரில் இரண்டு பள்ளிக்கூடம் இருந்தது ஒன்று ஆரம்பப் பள்ளிக்கூடம் இரண்டாவது நடுநிலை பள்ளிக்கூடம் ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் இருக்கும் நடுநிலை பள்ளிக்கூடத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இருக்கும் நான் பயின்றது ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் எனது நண்பர்கள் பயின்றது நடுநிலை பள்ளிக்கூடத்தில் நான் எனது நண்பர்களை சந்தித்தது வகுப்பு 6 அந்த நாளிலிருந்து எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வோம் பள்ளிக்கு செல்வதாக இருக்கட்டும் விளையாடுவதாக இருக்கட்டும் , எல்லாம் ஒன்றாகத்தான் செய்வோம் பள்ளி முடிந்தவுடன் சாயங்கால நேரம் விளையாட ஆரம்பிப்போம் அப்போது ஒளிந்து பிடித்து விளையாடுவது பச்சை குதிரை தாண்டுவது குண்டு விளையாடுவது போன்ற எண்ணற்ற விளையாட்டுகளை விளையாண்டு மகிழ்வோம் அப்பொழுது எனது தோழிகள் நான் வெற்றி பெறுவதற்காக எனக்கு கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் நானும் எனது தோழிகள் ஆரவாரம் செய்வதை கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பேன் விளையாட்டுகளிலும் வெற்றியை பெறுவேன் பிறகு விளையாட்டு முடிந்தவுடன் எங்கள் வீட்டு மாடியில் சென்று நானும் எனது நண்பர்களும் ஆசிரியர் கொடுத்த வீட்டு பாடங்களை செய்ய ஆரம்பிப்போம் அப்பொழுது எனக்குத் தெரியாத புரியாத பாடங்களை எனது தோழிகள் எனக்கு சொல்லித் தருவார்கள் பிறகு நிலா சோறு சாப்பிட ஆரம்பிப்போம் எனது தோழிகள் வீட்டில் இருக்கும் உணவுகளை எடுத்து வருவார்கள் நான் எனது வீட்டில் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டு போவேன் நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து உணவுகளை ஷேர் செய்து சாப்பிடுவோம் அந்த நினைவு இன்னும் என் மனதில் நிலைத்து நின்றிருக்கிறது அந்தக் அந்தக் காலம் இனி வராதா என்ற ஏக்கம் என்னுள் இருக்கிறது இவ்வாறு மூன்று ஆண்டுகள் போனது ஒன்பதாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊருக்கு தான் செல்ல வேண்டும் அந்த ஊர் எங்கள் கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் காட்டு வழிப் பாதையில் நடந்து சென்று தான் பள்ளிக்கூடம் போக வேண்டும் அப்போது எங்களுக்கு துணையாக எனது தோழிகளும் தோழிகளுக்கு துணையாக நாங்களும் செல்வோம் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஓடக்கரையில் இருக்கும் பனை மரத்தில் ஏறி நுங்குகளை வெட்டி நானும் எனது தோழர்களும் தோழியும் உண்டு மகிழ்வோம் எனது தோழிகள் இருவரும் நன்றாக படியக்கூடியவர்கள் நான் கொஞ்சம் படிக்க மாட்டேன் நான் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணி இருக்கேன்னா அதற்கு என் தோழிகள் தான் காரணம் எனக்கு புரியாத பாடங்களை எல்லாம் புரிய வைத்து பாடங்களில் இருக்கும் மிக முக்கியமான கொஸ்டின் எல்லாம் சொல்லி படிக்க வைத்து என்னை பாஸ் செய்ய வைத்தது என் தோழிகள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை பிறகு 11-ம் வகுப்பு 12ஆம் வகுப்பு எனக்குள் வந்த சேட்டை இந்த மாதிரி சேட்டை எல்லாம் பண்ண கூடாது என்று எனக்கு புரிய வைத்து என்னையும் அவர்களுடன் கூட்டிச் சென்றது எனது தோழிகள்தான் இவர்கள் எனது உயிர் தோழிகள் மட்டும் அல்ல என்னால் மறக்க முடியாத தோழிகளும் கூட ❤️❤️❤️❤️

Recent Posts