Recent Posts

Pages: 1 ... 5 6 [7] 8 9 10
61
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 21, 2026, 10:14:10 PM »

February 2026
#472   21.02.2026







- Socky
62
joker  oru  sweet kadhala  apdiye oru cup tea la puthaichutinga ponga.      nice
63


பள்ளிவிடுமுறையும் பாட்டி வீடும்
==============================

Dear RJ,

மாணவர் விடுதியில் இருந்து.. நாங்கள் காலாண்டு, அரையாண்டு விடுமுறைக்கு எல்லாம் ஊருக்கு போவதில்லை. பள்ளி கோடை விடுமுறையில் மட்டுமே நாங்கள் ஊருக்கு போவோம்.

அந்த 2 மாத கோடை விடுமுறையில் தான் என்னுடைய பாட்டி வீட்டுக்கு செல்வோம். வருடத்துக்கு ஒருமுறைதான்  எல்லா சொந்தங்களையும் பார்ப்பேன்..

எங்களுக்கு லீவு ன்னு சொன்னதும் train க்கு ticket எல்லாம் book பண்ணி, கடைசி பரீட்சை அன்னிக்கு இரவே கிளம்பிவிடுவோம். ஊரில் அங்கே தயாராக இருக்கும் car ல எங்கள் பெட்டிபடுக்கை எல்லாம் ஏற்றி,  பாட்டியின் பண்ணை வீட்டிற்க்கு பறந்து போய்விடுவோம்.

அந்த இடம் சுற்றி ஊர் எல்லாம் இருக்காது.. வயலும் அந்த வயலில் வேலை செய்பவர்கள் மட்டுமே இருப்பர். நமக்கு மனுஷங்களா முக்கியமா... வயல்வெளியும்..  ஆடு மாடுகள் எல்லாம் கட்டி போட்டு வச்சு இருக்கும் அந்த தொழுவம் தான் பொழுது போக்கே..

பாட்டி வீட்டுக்கு போன முதல் நாளில் இருந்தே.. எங்களுக்கு ஜாலி தான்.. ஆனால் பாட்டிக்கு தான் தலைவலி..  summer ல தான் பருத்தி செடி பயிர் செய்து இருப்பாங்க.. நாங்க எல்லோரும் பருத்தி பிஞ்சு இனிப்பாக இருக்கும்ன்னு.. பிஞ்சுகளை எல்லாம் பறிச்சு மடி நிறைய கட்டிக்கிட்டு  வந்திருவோம்.. இது என்னோட ஆச்சிக்கு தெரியாமல்.. பருத்தி பிஞ்சுகளை எல்லாம் பன்றி மேயுது போல.. வேலியா போட்டுவிடுப்பா ன்னு அப்பாவியாக சொல்லும்... நாங்க மனசுக்குள்ளே சிரிச்சுக்குவோம்...

அந்த காட்டில் நிறைய கிணறு இருக்கும்.. பெரிய அண்ணா, மாமன்மாராகள் எல்லாம் எங்களை ஆளுக்கு ஒருவராக தெரிவு செய்து கொண்டு.. கிணற்றின் சுவரில் நின்று கொண்டு, எங்களை கிணற்றின் உள்ளே போடுவாராகள். பின் அவர்களின் எங்களின் பின்னே குதித்து காப்பாற்றி மேலே தூக்கிட்டு வருவாங்க.. செம ஜாலி ஆ இருக்கும்.. நான் நீச்சல் கத்துக்கிட்டதே இப்படி தான்...

ஆலமரங்கள் அங்கே நிறைய உண்டு. அதில் ஊஞ்சல் ஆடுகிறேன் என்று.. வேகமாக நான் முந்தி நீ முந்தின்னு மண்டையெல்லாம் ஒடைச்சு இருக்கோம். அங்கே எங்களுக்கு எதுவும் உடல்நிலை சரி இல்லை என்றால். என்னோட மாமன்மார்கள். ஜீப் எடுத்துட்டு town க்கு போய் doctor nurse எல்லோரையும் கூட்டிட்டு வந்துருவாங்க... ஒரு முறை நானும் கூட  கத்தரிக்காய் பாரவண்டிக்கு கீழே மாட்டி எலும்பை உடைச்சு இருக்கேன்..

ஒரு சமயங்களில் இலந்தை  பழம் பறிக்க போகிறேன் என்று காடுகளில் சுற்றி திரிந்து தொலைந்த போய்.. ஆச்சிக்கு  எதிரி பண்ணைக்காரங்க..   எல்லைக்கே போய்ட்டோம்.. அப்போ அங்கே இருந்த அண்ணா..  எங்களை கூட்டி வந்து  பண்ணையில பத்திரமா விட்டு இருக்காங்க.. ஹீஹீஹீ அப்புறமா  ஆச்சிகிட்டே வாங்கின அடி இன்னும் மறக்கலை..

கடைசியா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். எங்க gang ல ஒருத்தன் பாம்பு குட்டி போடுது வாங்க பாக்கலாம்ன்ன்னு கூட்டி போனாங்க.. நாங்களும் அவனோட போய்ட்டோம்.. அங்கே பார்த்த.. எவ்ளோ பாம்பு குட்டி.. அல்வா போல சூப்பர் இருந்துச்சு..  ஆள் ஆளுக்கு ஓடி ஓடி போய் குட்டிகளை பிடிச்சுட்டு இருதோம்..

எங்களுக்கு ரொம்ப நேரமா காணுமேன்னு.. எங்களை தேடிவந்த மாமாக்கு அதிர்ச்சி..  எங்க எல்லோரையும் எங்கே கிடந்த காஞ்ச மாறு வச்சு அடிச்சாரு பாருங்க..  பாம்பு பிடிக்கவ வந்தீங்க.. கொன்னுருவேன்.. ஒடுங்க.. ஐயோ அம்மா.. அடி.. செம அடி... நல்லவேளை அந்த பாம்பு குட்டி எல்லாம் தண்ணிப்பாம்பு குட்டியாம்..

இப்போ நான் சொன்னது எல்லாம் ஒரு வருட நினைவுகள் தான்.. அதிலும் நான் ரொம்பவே பார்த்து பார்த்து சொல்லி இருக்கேன்.. எல்லாம் அப்படியே சொன்ன.. Tinu இமேஜ் ரொம்ப damage ஆகிற கூட்டத்துல...  இத்துடன் என் நினைவுகளும் முற்றுப்புள்ளி வைக்கிறேன்..

நன்றி FTC Team 
 

64
கடகாரங்க பொண்ணு... உனக்கு என்ன பா....கடையில ஆச படுற எல்லாத்தையும் எடுத்து சாப்பிடலாம் என தோழிகள் பல முறை சொல்வார்கள்...

     மளிகை கடகாரங்களுக்குன்னு ஒரு சில தியாகம் இருந்தே ஆகணும். அதுல குடும்பத்துல எல்லோருமே பங்கு பெற தான்செய்யணும். அதுல முக்கியமானது வெளியூர் பிரயாணம் குடும்பமா போக முடியாது... என் நினைவுகளில் வெளியூர்ல இருக்கும் அம்மம்மா பெரியம்மா வீட்டுக்கு போனத விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போ இந்த நினைவுக்கூட கொஞ்சம் தான் என்னிடம் இருக்கு.
       
        புகை, வாகன சத்தம் நிறைஞ்ச நகரத்தோட ஓட்டத்தில் காணாம போன பச்சை பசேல் ன்னு வயல்கள பார்த்த போது மனசு நிறைய சந்தோஷம் எப்படி வந்து ஒட்டிகிச்சுன்னு தெரியல...
நெல்கதிர முதல் முறை பார்த்தது அப்போ தான். மரம் செடிகளை மட்டுமே பார்த்த எனக்கு அது ஒரு அதிசயம்... 🌾 அம்மாவிடம் " அம்மா பாருங்க குட்டி குட்டி மரம் காச்சிருக்கு" ன்னு சொல்ல அருகே இருந்தவங்க எதுக்கு சிரிக்குறாங்குனு கூட தெரியாம என்னோட உற்சாகத்துல இன்னும் அதிகமா சொல்லிட்டே இருந்தேன். அம்மா கஷ்டப்பட்டு தான் என் வாய்ய அடைச்சாங்க.

       அந்தோணியார் கோவில் முன்னாடி தான் அம்மம்மா வீடு. முதல் முறை அம்மம்மா வீட்டுக்கு போகும் போது கை நடுங்க விறகு அடுப்புல சோறு வடிச்சுட்டு இருந்தாங்க...எங்கள பாத்ததும் "ஏ மக்கா" ன்னு முகத்த தடவி நெட்ட எடுத்து, உச்சி முகர்ந்து நெற்றில முத்தம் கொடுத்தாங்க... சுருக்கம் நிறைஞ்ச அழகிய அன்பான கைகள், கண்கள்ல அவ்வளவு அன்பு. அது இன்னைக்கும் என் நினைவுல இருக்குற என் அம்மம்மாவோட நினைவு.

      பிறகு கருப்பட்டி காபி போட்டு குடிச்சுட்டு அக்கா, பெரியம்மா வழி அண்ணா, நானு மூணு பேரும் கோவில் முன்னாடி மணல்ல செம்ம ஆட்டம்... கால் வலிக்க வலிக்க விளையாட்டு. பாக்குறவங்க கொடுக்கர் பேத்தியா ன்னு கேக்கும் போது தான் தெரிஞ்சுது என் தாத்தாவோட பட்ட பேரு.

      பனங்கிழங்கு, பதனி, ஏணிப்படி மிட்டாய் எல்லாம் ஒரு கட்டு கட்டுனோம்... விடுமுறைய விளையாட்டோட கழிச்சுட்டு கிளம்பும் போது சீலைல முடிஞ்ச பைசா எடுத்து பாசமா கொடுத்து கன்னத்த வருடி வழி அனுப்பி வச்சாங்க...

       ஒரு சில தொடுதல் நம் வாழ்க்கையோடு பினஞ்சு இருக்கும். அத நினைக்கும் போது எல்லாம் பசுமை மாறாமல் நிலைச்சு இருக்கும் ....
பல வருடம் கழித்து தூசிதட்டி இந்த நினைவுகளை எழுப்பிய ' நெஞ்சம் மறப்பதில்லை ' க்கு மிக்க நன்றி ❤️ ❤️
65
எல்லோரும் மாதிரிதான் நாங்களும், எப்போடா ஸ்கூல் லீவு விடுவாங்கன்னு காத்திருக்க gang, ஆனா ஒரே ஒரு வித்தியாசம் நாங்க வேற ஊருக்கு போய் பாட்டிய பாக்க முடியாது. ஏன்னா நாங்க இருந்த அதே ஊர்ல தான் பாட்டி வீடும், அப்புறம் என்ன ஹாப்பினஸ் தனியான்னு கேட்குறீங்களா, அங்க தான் இருக்கு டிவிஸ்ட்டு. ஊர்ல இருந்து என் ரெண்டு மாமாவோட பசங்க, பொண்ணுங்க எல்லாரும் லீவுக்கு பாட்டி வீட்டுக்கு வந்துடுவாங்க. அப்புறம் என்ன, அட்டகாசம் தான்.

காலைலேயே என்னையும் தங்கச்சியயும் டிவிஸ் 50ல ஏத்திக்கிட்டு போயிட்டு பாட்டி வீட்டுல தள்ளிவிட்டுட்டு அம்மா வேலைக்கு போயிருவாங்க. நம்மளவ விட நம்மளோட லீவ அதிகம் எஞ்சாய் பண்ணது அவங்க தான்னு அப்போ புரியல, இப்போ புரியுது. நாங்க 6 பேரு எங்களுக்கு பயம்னா என்னான்னே தெரியாது. பாட்டி வீடு அல்லோலப்படும். ரெண்டு பேர வச்சிக்கிட்டே இந்த அம்மா அப்பாக்கெல்லாம் சமாளிக்க முடியல எங்க 6 பேர வச்சிக்கிட்டு எப்படி தான் எங்க தாத்தா பாட்டி சமாளிச்சாங்களோ தெரியல.

எங்க பாட்டி வீட்டுல வெளியே திண்ணைல ஆரம்பிச்சு, முற்றம் பின்வாசல்ன்னு பெரிய வீடு எங்களுக்குன்னே அமைஞ்ச மாதிரி இருக்கும். இந்த பக்கத்துக்கும் அந்த பக்கத்துக்கும் எங்க ஓட்டத்துல ஜூராசிக் பார்க் படத்துல டயனோசர்ங்க ஓடி வருமே அந்த மாதிரி வீடே அதிரும். பெரிய டார்ஸான்னு நினைப்பு திண்ணை மேல் கூரைல ஒரு சட்டத்துல கயிற மாட்டி இந்த திண்ணைல இருந்து அடுத்த திண்ணைக்கு 'ஏயேஆஆ ஆஏஏஏ' ன்னு கத்திக்கிட்டே தாவுவோம். என்னைக்கு அந்த சட்டம் முறிஞ்சு விழும்ன்னு வீட்டுல எல்லாரும் காத்துக்கிட்டு இருந்த மாதிரியே தோணும்.

ஒருத்தர்கொருத்தர் சளைச்சவங்க இல்ல நாங்க. தக்கிளியூண்டு வண்டு மாதிரி இருந்துகிட்டு பக்கத்துவிட்டுல இருந்த இளந்தாரி பயல, 'டேய் குரங்கு மூஞ்சா'ன்னு கூப்பிட்டு வம்பிழுத்து, அவன் அம்மாவ கூட்டிட்டு வந்துட்டான் பஞ்சாயத்துக்கு. அவங்ககிட்ட தாத்தா பாட்டி சண்டை போட்டு/சமாதானம் பண்ணி அனுப்பி வச்சாலும் எங்களுக்கு தெரியும் ஆஹா நமக்கு இருக்குடின்னு முருங்ககுச்சிய ஒடச்சிட்டு பாட்டி வரும்போதே ஓட்டம் எடுப்போம்.

எங்க அம்மா ஹாஸ்பிடல்ல இருந்து எடுத்துட்டு வர்ர additional syringeலாம் எங்க போகும்னு நினைக்கிறீங்க? எங்க கசின்ஸ் ஊர்ல இருந்து வாங்கிட்டு வர்ர டெடிபியருக்கு தான். Syringeல தண்ணிய fill பண்ணி அந்த டெடிக்கு ஏத்தி ஏத்தி, சொத சொதன்னு ஆக்கி, அந்த பொம்மைக்கு உயிர் இருந்திருந்தா செத்தே போயிருக்கும். செவனேன்னு இருக்கலாம் ஆனா நாங்க இருக்க மாட்டோம், ஆஸ்திரேலியால இருந்து அம்மாக்கு ஆசையா ப்ரண்ட் வாங்கி கொடுத்த கங்காரு பொம்மை கழுத்தறுத்து ஆபிரேஷன் பண்ணி சாகடிச்சிருக்கோம்.

இப்போ புரியுது அப்போலாம் எங்களோட அம்மா அப்பா இந்த குட்டி குளவாரிங்க தொல்ல தாங்க முடியாம தான் தாத்தா பாட்டி வீட்டுல கொண்டு போயிட்டு தள்ளிவிட்டுருக்காங்கன்னு. ஆனா என்ன சேட்டை பண்ணினாலும் தாங்க கூடிய சக்தி தாத்தா பாட்டிக்கு தான் இருந்திருக்கு. காலைலயும் சரி, ராத்திரியிலயும் சரி வீட்டுக்கு வெளியே பெரிய அரசமரத்தடிக்கு கீழ ரெண்டு கயித்து கட்டில போட்டு சுத்தி உட்கார வச்சி கவள சோறு உருட்டிக்கொடுப்பாங்க பாட்டி. அதுவும் சிலசமயம் காலைல பழைய சோற பிழிஞ்சு உருட்டி அதுல சுண்ட வச்ச பழைய குழம்ப ஊத்தி ஊட்டி விடுவாங்க பாருங்க, தேவாமிர்தமா இருக்கும்.

அரசமர இலைல தாத்தா பீப்பீ செஞ்சு கொடுப்பாங்க, தாத்தவோட கதைகளுக்கு நாங்க எல்லாருமே மகுடிக்கு ஆடுற பாம்பா சுருண்டுடுவோம். அதெல்லாம் ஒரு காலம்னு சொன்னாலும், அந்த காலம் திரும்பி வராதுன்னு தெரிஞ்சாலும் மனசு ஏங்குறதை தவிர்க்க முடியல. கசிஸ்குள்ள இப்பவும் நாங்க நெருக்கமா இருக்க காரணம் எப்பவும் எங்கள பிணைப்போட கட்டி போட்ட எங்க பாட்டி வீடுங்கறதை மறுக்கவே முடியாது.
66
General Videos / Re: Mindset is everything!
« Last post by Ninja on February 21, 2026, 10:51:11 AM »
67
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on February 21, 2026, 06:51:34 AM »
68
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on February 21, 2026, 05:57:30 AM »
69
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 20, 2026, 10:59:31 PM »

February 2026
#471   20.02.2026







- Socky
70
Rules & Admin Notice / Chat Nickname CHANGE Log
« Last post by Forum on February 20, 2026, 10:39:31 PM »

20-02-2026
Friendly Heart nickname changed as Phoenix
Pages: 1 ... 5 6 [7] 8 9 10