61
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 395
« Last post by Yazhini on January 19, 2026, 11:20:08 PM »கண்ணுக்கு தெரியாத தெய்வத்திடம்
நடமாடும் தெய்வத்தின் கையேந்தல்...
எதை எதிர் நோக்கி
இந்த யாசகன் கோலம்...
சுயநலமற்ற அந்த இதயத்தின்
உருக்கம் யாருக்காக...
நிச்சயம் அவளுக்காக அல்ல...
இடுப்பெலும்பு உடைய
தன் மக்களை ஈன்றவள்...
உதிரத்தை அமுதாக்கி
தன் சிசுவின் உயிரை வளர்த்தவள்.
ஞாயிற்று கிழமையும்
விடுமுறை அறியாதவள்...
தன் மழலையின் மகிழ்வுக்காக
கோமாளியாக உருமாறியவள்...
தன் பிணியிலும் ஓய்வின்றி
குழந்தைகளின் பசியாற்றியவள்....
பல பணிகளின் மத்தியிலும்
சோர்வின்றி சுழன்றவள்....
கந்தல் துணியாக
தன் தேகம் மாறினாலும்...
சுருக்கங்களின் அணிவகுப்பாக அவளின்
தோல் காட்சி அளித்தாலும்..
அவளின் இதய அரங்குகளில்
சுரக்கும் அன்பிலும்
ஒளியிழந்த கண்களில்
ஒளிர்ந்து மிளிரும் கருணையிலும்
ஓங்கி ஒலிக்கும் ஒரே
வேண்டுதல்
"இறைவா! என் புள்ளைங்கள
நல்லா வச்சுரு!
நோய் நொடி இல்லாம
நல்ல ஆரோக்கியத்த கொடு!
மனம் வாடாம சந்தோஷமா பாத்துக்கோ!"
என்ற தன் நிலையான வேண்டுதலை
யாசகமாக இறையிடம் வேண்டி
திரும்பி சென்றாள் முதியோர் இல்லத்திற்கு
நடமாடும் தெய்வத்தின் கையேந்தல்...
எதை எதிர் நோக்கி
இந்த யாசகன் கோலம்...
சுயநலமற்ற அந்த இதயத்தின்
உருக்கம் யாருக்காக...
நிச்சயம் அவளுக்காக அல்ல...
இடுப்பெலும்பு உடைய
தன் மக்களை ஈன்றவள்...
உதிரத்தை அமுதாக்கி
தன் சிசுவின் உயிரை வளர்த்தவள்.
ஞாயிற்று கிழமையும்
விடுமுறை அறியாதவள்...
தன் மழலையின் மகிழ்வுக்காக
கோமாளியாக உருமாறியவள்...
தன் பிணியிலும் ஓய்வின்றி
குழந்தைகளின் பசியாற்றியவள்....
பல பணிகளின் மத்தியிலும்
சோர்வின்றி சுழன்றவள்....
கந்தல் துணியாக
தன் தேகம் மாறினாலும்...
சுருக்கங்களின் அணிவகுப்பாக அவளின்
தோல் காட்சி அளித்தாலும்..
அவளின் இதய அரங்குகளில்
சுரக்கும் அன்பிலும்
ஒளியிழந்த கண்களில்
ஒளிர்ந்து மிளிரும் கருணையிலும்
ஓங்கி ஒலிக்கும் ஒரே
வேண்டுதல்
"இறைவா! என் புள்ளைங்கள
நல்லா வச்சுரு!
நோய் நொடி இல்லாம
நல்ல ஆரோக்கியத்த கொடு!
மனம் வாடாம சந்தோஷமா பாத்துக்கோ!"
என்ற தன் நிலையான வேண்டுதலை
யாசகமாக இறையிடம் வேண்டி
திரும்பி சென்றாள் முதியோர் இல்லத்திற்கு

Recent Posts