Recent Posts

Pages: 1 ... 5 6 [7] 8 9 10
61
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on February 03, 2026, 01:14:00 PM »
62
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 03, 2026, 11:35:38 AM »

February 2026
#456   03.02.2026







- Socky

64
என்னவள் திட்டும் போதும்
கோபப்படும்போதும் என்னடா
வாழ்க்கை என்று தோணும்....
ஆனால் கொஞ்ச நேரத்துல வந்து
பேசும்போது வாழ்ந்தால்
இவ கூட தான் வாழனும்னு தோணும்
இதுதானே அன்பு
இது தானே காதல் !

என்னை தவிக்க விடும் அன்பு வேண்டாம் தவறவிடும் அன்பு வேண்டாம்
தவறாக புரிந்து கொள்ளும் அன்பு வேண்டாம் தடுமாற வைக்கும் அன்பு வேண்டாம்
என்னிடம் காலம் காலமாக காட்டும்
அன்பும் காதலும் போதுமடி....

புரியாதவர்களுக்குத்தான் ஆயிரம்
விளக்கம் வேண்டும்
புரிந்த என் காதலுக்கு
உன் சிரிப்பு ஒன்று போதும் ...
உன் எண்ணத்தை நான் அறிவேன்
என்னவளே!

எப்பொழுதும் என்னுடன் இரு என
உனக்காக ஏங்குவது
உன்னிடம் இருக்கும் சொத்து
சுகத்திற்காக அல்ல...
இந்த உலகில் நான் வாழ
மூச்சுக்காற்றை விட அதிகம்
தேவைப்படும்  உனது  அன்பும்
உனது காதலும் அதற்காகத்தான்!

காதலுக்குத் தெரியாது ஜாதி
காதலுக்கு தெரியாது மதம்
காதலுக்குத் தெரியாது இனம்
இவற்றையெல்லாம் கடந்து காதலை
காற்றாக சுவாசிப்போம்
வாழ்க அன்பு
வாழ்க  காதல்!

எத்தனை கஷ்டம் வந்தாலும்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும் என்
காதலியாக மட்டுமல்ல என் உயிராக...
65
​தொலைதூரக் காதல்....

பிரிவு என்பது வெறும் தூரம் மட்டுமல்ல,
அது நம் காதலைச் சோதிக்கும் ஒரு அக்னிப் பரீட்சை!

நீ இருக்கும் ஊரின் திசை நோக்கி
தினமும் என் கண்கள் மேய்கின்றன...

தூரத்து மேகமாவது உன்ல முகம் பார்த்து வருமா என்று!

​நூறு முறையாவது பார்த்து விடுகிறேன் - உன்
புகைப்படத்தை அல்ல,
நம் உரையாடல் நிறைந்த அந்தச் சிறு திரையை!

உன் குரல் கேட்கும் அந்தச் சில நிமிடங்கள் தான்
எனது முழு நாளுக்குமான உயிர்ச்சத்து!

​கண்களை மூடினால் நீ அருகில் இருப்பது போன்ற பிரமை,
கண்களைத் திறந்தால் தனிமையின் வெறுமை!

இருந்தும், இந்தத் தூரம் நம்மைப் பிரிக்கவில்லை,
மாறாக...
ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை
ஒவ்வொரு நொடியும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

அழகிய  கோபக்காரன்...

அதிகாரக் குரலில் நீ என்னை அதட்டும் போது - உன்
அன்பின் ஆழத்தை நான் ரகசியமாய் ரசிக்கிறேன்!

வார்த்தைகளில் நீ காட்டும் அந்தச் சின்னஞ்சிறு கோபம்,
வெறும் மேகமூட்டம் தான் என்று எனக்குத் தெரியும்...

ஏனெனில், அடுத்த நொடியே
மழைத்துளியாய் நீ பொழியும் பாசத்தில் நான் மொத்தமாய் நனைந்து போகிறேன்!

​உலகமே எதிர்த்தாலும் எனக்காக நீயே நிற்பாய்,

உன் கோபத்தின் பின்னால் இருப்பது வெறுப்பல்ல,
நான் தொலைந்து போய்விடக் கூடாதென்ற
ஒரு  அதீத பயம் கலந்த அக்கறை!

நீ முறைத்துப் பார்க்கும் போது வரும் பயத்தை விட,
நீ சமாதானம் செய்யும்போது காட்டும் அந்தக்
குறுஞ்சிரிப்பில் தான் என் உயிர் ஊசலாடுகிறது.

​உன் பிடிவாதங்களும், உன் அதிகாரங்களும்
எனக்குக் கிடைத்த வரங்கள்!

ஏனென்றால்... நீ கோபப்படும் ஒரே உரிமையும்,
நீ கொஞ்சும் ஒரே உயிரும் நான்..

​நான் தடுமாறும் போதெல்லாம், "நான் இருக்கிறேன்" என்று சொல்லாமல் சொல்லும் என் நம்பிக்கை நீ.

​உலக வரைபடத்தில் நான் தொலைந்து போனாலும், உன் இதயத்தின் முகவரியில் நான் என்றும் பத்திரமாக இருப்பேன்.

​ஒரு சிறு வேண்டுதல்
​காலங்கள் மாறலாம், நம் தலைமுடி நரைக்கலாம்,
ஆனால் உன் கைகளை கோர்த்துக்கொண்டு நடக்கும்
அந்த முதல் நாள் சிலிர்ப்பு மட்டும் எனக்கு என்றும் வேண்டும்.

என் கண்ணீருக்கு முதல் துடைப்பவனாகவும்,
என் சிரிப்பிற்கு முதல் காரணமாகவும் நீ மட்டுமே இருக்க வேண்டும்.
​இந்த ஜென்மம் போதாது உன்னை நேசிக்க...

இன்னொரு பிறவி இருந்தால், அங்கேயும் உனக்காகவே
முன்பதிவு செய்து காத்திருப்பேன் என் அன்பே!
​என்றும் உன்னவள்...
66
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 02, 2026, 03:05:05 PM »

February 2026
#455   02.02.2026







- Socky

67
நீளும் கவிதை - காதல்

சிருஷ்டியில் உருவான
ஏதேன் தோட்டத்து
ஆதாம் ஏவாள்
காதலை சிருஷ்டித்தனர்
ஆதாமின் முதல் இதய துடிப்பே காதல்
ஏவாளின் முதல் பார்வையில் மலர்ந்த உணர்வே காதல்

காலங்கள் கடந்தாலும்
காதல் உறைந்தே நின்றிருந்தது

பார்வையற்றவளின் மனதை படித்த
வாலண்டைனின் முதல் கடிதமே
காதல்.
காதலை வாழ வைத்து காதலில் மடிந்து என்றென்றுமாய் காதலை
வாழவைத்த வாலண்டைனின்
தியாகமே காதல்

ரோமியோ ஜூலியட்டின்
மரணத்தை வென்றதும் காதல் தான்
அமராவதியின் மௌனத்தில்
வாழ்ந்ததும் காதல் தான்

விதியும் சதியும் பிரித்தபோதெல்லாம்
வென்றிருந்தது காதல் தான்.
போரில் வீழ்ந்தாலும்
மரணத்தில் இணைந்த
அந்தோனி கிளியோபாட்ராவின்
வீழ்ச்சியும் காதல் தான்
புதைந்தாலும் மாண்டாலும்
சலீமின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டே இருந்ததும்
அனார்கலியின் காதல் தான்.

காலம் காதலை உருவாக்கியது
காதல் மனிதனை உருவாக்கியது
உலகம் கற்றுக்கொண்ட முதல் பாடமே
காதல் தான்.
உயிர்களுக்கு மொழியாய் வந்தது காதல்
பசியில் பகிர்ந்து கொண்டது காதல்
பயத்தில் துணிந்து நிற்க வைத்தது காதல்
மொழி கடந்து மதம் கடந்து
சாதி கடந்து
வாழும் மனிதமே காதல்.
காதல் வெற்றி பெற வேண்டியதில்லை
வாழ்ந்து காட்டுதலே அதன் வெற்றி
மனிதனை மனிதாக்கும்
உண்மையே காதல்
ஆதலால் காதல் செய்வீர்
68
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on February 02, 2026, 10:51:39 AM »
69
என் உயிரில் ஒரு இடம் 💙

 இந்த காதலர் தினத்தில்,
ரோஜா வேணாம், சாக்லேட் உம் வேணாம்…
அவன் எல்லை இல்லாத பாசம்
எனக்கு போதும்.

இது பலர் நினைக்கும் காதல் இல்லை.
இது ஒரு புனிதமான,
ஆழ்ந்த காதல்.

என் வாழ்வில் ஒரு பூகம்பம் போல் நீ வந்தாய்.
நான் உன்னை தத்து எடுக்கவில்லை,
நீ தான் என்னை தத்து எடுத்தாய்.

நம் கண்கள் சேர்ந்த அந்த நொடியில்
என் மனதை பரித்து விட்டாய்.
நீ ஒரு மாயவனா ? 
நம் இருவரும் ஒரு நிமிடம் ஒன்றாக இணைந்தும் .

காதல் எவ்வளவு ஆழம் என உணர வைத்தாய்,
பாசம் அளவு இல்லாதது என காட்டினாய்.
பொறுப்பு என்ன  என்று  கற்று கொடுத்தாய்,
ஒருவித தாய்மை எனக்கு உணர்த்திநாய்

என் மகிழ்ச்சியை உன் வெற்றியாக கொண்டாடினாய்.
என் கண்ணீர், என் துன்பம்,
என் உள்ளில் இருக்கும் எல்லா நிறங்களும் நீ பார்த்துக் கொண்டாய்,
 ஒரு ஆதரவாக நின்றாய்

இந்த வருடங்கள் எப்படி கடந்துபோனது,
எனக்கும் தெரியவில்லை.

காலம் கடந்துபோனது ஏன் ?
உனக்கு வயது ஆனதும் நான் மறந்து விட்டேன்.
ஆனால் அதை இயற்கை மறக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு
நீ சோர்ந்து போகும் நிலையில்,
வாழ்க்கை நிரந்தரமல்ல என எனக்கு உணர்த்தினாய்.

நீ இல்லாமல் நான் என்ன செய்வேன் என
நினைத்து பார்க்க முடியாத நிலை.
என் நிழல் போல என்னை சுற்றி வருகிறாய்.
உன் விசுவாசத்திற்கு ஒரு எல்லையும் இல்லை.

உன் அன்புக்கு நான் தகுதி ஆனவளா என்று
தினமும் சிந்திக்கிறேன்.
எத்தனை காலங்கள் நான் காதலன் வருவான் என்று நான் காத்திருந்திருப்பேன் ?
அவன் காதலுக்காக ஏங்கிருப்பேன் .
ஆனால் உன்னுடைய எல்லையற்ற அன்பு எனக்கு இருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை.
உன்னை இன்னும் காதலிக்க, நேசிக்க, ரசிக்க,
இந்த வாழ்க்கை எனக்கு மறுபடியும் கற்று கொடுத்தது.
உன்னை இன்னும் அதிகமாக காதலிக்கிறேன்.

என் உயிரில் உள்ள வரை உன்னை நேசிப்பேன்.
என் உயிரில் இருக்கும் அந்த இடம்
உனக்கே மட்டுமே சொந்தம்.
நாலு காலில் ஓடும், என் அன்பே💙🐾
70
அவளிடம் நான்
பதில் எதிர் பார்த்து
காத்திருந்த நாள் இன்று!
ஆனால் அவளோ பதில்
அளித்துவிட்டாள் முன்னவே!

அவளின் பதிலை பார்த்ததும்
ஒரு நொடி என்னை நான் மறந்த நேரம்!
நான் கடிதம் எழுதும் முன்பே அவளிடமிருந்து பதில் வந்ததில்...
 திக்குத் தெரியாமல் திகைத்து நின்றேன்!


இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
உன் முகம் தான் வந்து செல்கிறதே!
கனவு என்று நினைத்தாலும்,
அந்த கனவே போதும்
என்கிறது என் மனது!
கனவில் கூட என் நினைவு
எல்லாம் உன்னிடம் என்றேன் !
என் உயிரே நீ என்றேன்!
பதிலுக்கு, ஒரு மௌனச் சிரிப்பால்..
என்  இதயத்தையும் திருடிச் சென்றாள் அந்த ராட்சசி!

என்னவளை ஏன் நான்
ராட்சசி என்றேன்?
அவளை அனுதினமும்
பார்க்க துடிக்கும்
என் இதயத்துடிப்பை
நிறுத்தி விட்டு சென்றவள்!
ராட்சசி இல்லாமல் என்னவென்று
நான் சொல்ல......

அவளை நேரில் கண்டதும்
நானும் அவளும் முதன் முதலில் பேசிய ஒரு வார்த்தை
 என்னவென்று நினைத்தால் இன்று கூட இனிக்கும்......
 அவள் சொன்ன அந்த 'Hello'..!

அதன் பின்பு  இருந்த
மெளன புன்னகையும் ....
அவளும் பேச துடித்தாள்!
நானும் பேச துடித்தேன்!
நாங்கள் பேசியது
"ஹலோ ஹலோ" என்ற
ஒரே வார்த்தை தான்....

அவளை நேரில்  கண்ட
ஒரு நொடியில் உலகமே
நின்று போனது....
என் மனதிடம் கேட்டேன்
ஏன் உலகமே நின்றது ? என்று
இதோ நிற்கிறாள் பாரு
இந்த பாவை....
இவளே உன் உலகம்
என்றது என் மனது!

அவளை ஏன் எனக்கு பிடித்தது?
இந்த ராட்சசியை எனக்கு
பிடிக்க காரணம் என்ன ?
என்று எனக்குள்ளே
இருக்கும் அவளின்
மனதிடம் கேட்டு பார்த்தேன்
அவளின் மனது சொன்னது
ஒரு வரை பிடிக்க வில்லை
என்றால் ஆயிரம் காரணம்
சொல்ல முடியும் என்னால் ....

அவளை ஏன் பிடித்தது?
எதற்காக பிடித்தது?
ஒரு காரணமும் எந்தக் கவிஞன் சொன்னாலும்
அது முற்றுப்பெறாத கவிதை என்றது அவள் மனது!

நாள் தோறும் அவளை
பார்க்க துடிக்கும்
அவளின் அவன் ...
என்றும் அவளே என் அழகிய ராட்சசி!

அனைவருக்கும் என் இனிய
காதலர் தின வாழ்த்துக்கள்.
ஐயோ இல்லை இல்லை ராட்சசி தின  நல்வாழ்த்துக்கள்...
Pages: 1 ... 5 6 [7] 8 9 10