68
« Last post by Rahmathulla on April 14, 2026, 12:36:56 AM »
என்றும் உன் நினைவில்
என்னவள் என்றுமே தனித்துவமானவள்..
அவள் சிரிப்பினை விரும்பும் நான்..
அவள் பேச்சை ரசிக்கும் நான்..
அவள் குணா அதிசயங்களை
விரும்பி அவளிடம் நாள் தோறும் பேசி நாளும் என் மனம் ஒரு போதும் அழுத்ததிலை..
என்னவள் மீது அளவு கடந்த பாசம்..
அவள் கண்ணீர் விட கூடாது என்று நினைக்கும் நான்..
ஒரு நாள் என் கோப குணத்தில் அவள் அழுகைக்கு நான் காரணம் ஆனேன்..
என்று என்னும் போது என் மனதில் நீங்கா பாரம்..
இன்று அவள் என் பக்கத்தில் இல்லை..
மனம் உருகி வருந்துகிறேன்..
இருப்பினும் ஏனோ அவள் மனம் மாறி பேசவில்லை..
என்னவள் தேடி தேடி கிடைத்த நல்ல உள்ளமும் நீ தான்..
இனி தேடினாலும் கிடைக்காத நல்ல உறவுவும் நீ தான்..
என்னவளுடன் பேச ஏன் எனக்கு இத்தனை ஆசை..
என்று தெரியவில்லை..
என் ஒட்டுமொத்த உலகமாய் ஒரே பார்வையில் இருப்பவளும் என்னவள் தான்..
நிஜத்தில் என்னவளே தொலைத்து விட்டேன்..
என்றும் உன் நினைவுகளுடன்
ப்ரியமுடன்
ரஹ்மத்துல்லா