71
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-005 (நெஞ்சில் நின்ற திரைப்படம் - தமிழ் )
« Last post by Vethanisha on March 20, 2026, 10:27:37 PM »மீண்டும் ஒரு நெஞ்சம் மறப்பதில்லை
இருவர்
நான் ஒரு movie freak என்றே சொல்லலாம் . இந்த மொழி, அந்த மொழி என்று இல்லாமல் எல்லா படங்களையும் பார்ப்பேன்.
எனக்கு ரொம்ப பிடித்த ஒரு பொழுது போக்கு அப்பா கூட உட்காந்து படம் பாக்குறதுதான் .
பொதுவாக எனக்கு light-feel படங்கள்தான் மிகவும் பிடிக்கும். இல்லையெனில், நன்றாக சிரிக்க வைக்கும் comedy படங்களை அதிகமாக பார்ப்பேன்.
ஆனால் இந்த தலைப்பைப் பார்த்தவுடன், எனக்கு உடனே ஞாபகம் வருவது “இருவர்” படம் தான். முதல் தடவையாக இந்த படத்தை பார்த்த போது, உண்மையில் எனக்கு பெரிதாக எதுவும் புரியவில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தை பார்க்கும் போது, ஒவ்வொரு frame-மும் என்னை ஆச்சரியப்படுத்தியது.
ஒரு கனவுகளுடன் இருக்கும் நடிகர் மற்றும் ஒரு ஆட்சியாசை கொண்ட எழுத்தாளர் ; இவர்களின் நட்பு, உயர்வு, வீழ்ச்சி ஆகியவற்றை உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு மணிரத்னம் அவர்களின் கையில் ஒரு காவியமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தோடு வசனங்கள் புரட்சிகரமா எழுதி இருப்பாங்க சுஹாசினி மணிரத்னம் . சந்தோஷ் சிவன் அவர்களின் cinematography இந்த படத்தின் முதுகெலும்பு என்று சொல்லலாம்.
மோகன்லால் ஆனந்தன் கதாபாத்திரமாக வாழ்ந்தே இருப்பார். பல இடங்களில் அவரின் நளினமான முகபாவங்களும் நடிப்பும் நம்மை மிரள வைக்கும். ஒரு பெரிய தலைவரை நேரடியாக imitate செய்யாமல், அவரின் சாயல் மட்டும் கொண்டு நடித்திருப்பது ஒரு பெரிய முயற்சி.
இந்த படத்தின் முத்தாய்ப்பு கதாபாத்திரம் தமிழ்ச்செல்வன் தான். அப்போது பிரகாஷ் ராஜ் புதுமுகமாக இருந்தாலும், அவரின் அசுர நடிப்பு இந்த படத்தில் தெளிவாக தெரியும். இளமையின் அரசியல் தீவிரமும், வயதானபின் வரும் நிதானமும்
இரண்டையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு வலிமையான வசனம் (so powerful) ஒன்னு வரும் . ஆனந்தன் (மோகன்லால்) தமிழ்செல்வன் (பிரகாஷ் ராஜ்) அரசியல் பத்தி பேசுவாங்க , அப்போ ஆனந்தன் கேப்பாரு உங்க கைலே "செங்க்கோல் கிடைச்ச என்ன பண்ணுவீங்க" .. அதுக்கு தமிழ்செல்வன் தர பதிலும் (வறுமை ஒழிப்பு , இயலாமை ஒழிப்பு ) பின்னாடி வர bgm ம் , அந்த orange வண்ணத்துலே சூரிய அஸ்தமன frame ம் , இப்போ வரைக்கும் என் mind விட்டு அகலவே இல்ல. .
ஐஸ்வர்யா ராய் , கவுதமி , ரேவதி , நாசர் , நிழல்கள் ரவி ena , ஒரு நடிகர் பட்டாளமே இருப்பாங்க . ஒவ்வொருவரும் போட்டி போட்டு கதாபாத்திரங்களாவே வாழ்ந்து இருப்பாங்க.
இதற்கெல்லாம் மேலாக அழகு சேர்த்தவர் ஏ.ஆர். ரஹ்மான். அவரின் பின்னணி இசை உண்மையில் மாற்று இல்லாத ஒன்று. 60s, 70s காலத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளார். அவர் ஏன் “இசைப் புயல்” என்று அழைக்கப்படுகிறார் என்பதையும் நிரூபித்துள்ளார்.
உன்னோடு
நான் இருந்த ஒவ்வொரு
மணி துளியும் மரண
படுக்கையிலும் மறக்காது
கண்மணியே
தொன்னூறு
நிமிடங்கள் தொட்டணைத்த
காலம் தான் எண்ணுாறு
ஆண்டுகளாய் இதயத்தில்
கனக்குதடி..
இந்த கவிதை பிடிக்காத யாரேனும் இருக்காங்களா என்ன ❤️
அரசியல், நட்பு மற்றும் சினிமா பற்றிய ஒரு விசித்திரமான அறிவார்ந்த, உணர்ச்சி நிறைந்த மற்றும் கலை ரீதியாக துணிச்சலான படம், இதை ரசிக்க பொறுமை தேவைப்படும்; ஆனால் நுணுக்கமாக கவனித்தால் பெரும் அனுபவத்தை தரும்.
இருவர்
நான் ஒரு movie freak என்றே சொல்லலாம் . இந்த மொழி, அந்த மொழி என்று இல்லாமல் எல்லா படங்களையும் பார்ப்பேன்.
எனக்கு ரொம்ப பிடித்த ஒரு பொழுது போக்கு அப்பா கூட உட்காந்து படம் பாக்குறதுதான் .
பொதுவாக எனக்கு light-feel படங்கள்தான் மிகவும் பிடிக்கும். இல்லையெனில், நன்றாக சிரிக்க வைக்கும் comedy படங்களை அதிகமாக பார்ப்பேன்.
ஆனால் இந்த தலைப்பைப் பார்த்தவுடன், எனக்கு உடனே ஞாபகம் வருவது “இருவர்” படம் தான். முதல் தடவையாக இந்த படத்தை பார்த்த போது, உண்மையில் எனக்கு பெரிதாக எதுவும் புரியவில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தை பார்க்கும் போது, ஒவ்வொரு frame-மும் என்னை ஆச்சரியப்படுத்தியது.
ஒரு கனவுகளுடன் இருக்கும் நடிகர் மற்றும் ஒரு ஆட்சியாசை கொண்ட எழுத்தாளர் ; இவர்களின் நட்பு, உயர்வு, வீழ்ச்சி ஆகியவற்றை உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு மணிரத்னம் அவர்களின் கையில் ஒரு காவியமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தோடு வசனங்கள் புரட்சிகரமா எழுதி இருப்பாங்க சுஹாசினி மணிரத்னம் . சந்தோஷ் சிவன் அவர்களின் cinematography இந்த படத்தின் முதுகெலும்பு என்று சொல்லலாம்.
மோகன்லால் ஆனந்தன் கதாபாத்திரமாக வாழ்ந்தே இருப்பார். பல இடங்களில் அவரின் நளினமான முகபாவங்களும் நடிப்பும் நம்மை மிரள வைக்கும். ஒரு பெரிய தலைவரை நேரடியாக imitate செய்யாமல், அவரின் சாயல் மட்டும் கொண்டு நடித்திருப்பது ஒரு பெரிய முயற்சி.
இந்த படத்தின் முத்தாய்ப்பு கதாபாத்திரம் தமிழ்ச்செல்வன் தான். அப்போது பிரகாஷ் ராஜ் புதுமுகமாக இருந்தாலும், அவரின் அசுர நடிப்பு இந்த படத்தில் தெளிவாக தெரியும். இளமையின் அரசியல் தீவிரமும், வயதானபின் வரும் நிதானமும்
இரண்டையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு வலிமையான வசனம் (so powerful) ஒன்னு வரும் . ஆனந்தன் (மோகன்லால்) தமிழ்செல்வன் (பிரகாஷ் ராஜ்) அரசியல் பத்தி பேசுவாங்க , அப்போ ஆனந்தன் கேப்பாரு உங்க கைலே "செங்க்கோல் கிடைச்ச என்ன பண்ணுவீங்க" .. அதுக்கு தமிழ்செல்வன் தர பதிலும் (வறுமை ஒழிப்பு , இயலாமை ஒழிப்பு ) பின்னாடி வர bgm ம் , அந்த orange வண்ணத்துலே சூரிய அஸ்தமன frame ம் , இப்போ வரைக்கும் என் mind விட்டு அகலவே இல்ல. .
ஐஸ்வர்யா ராய் , கவுதமி , ரேவதி , நாசர் , நிழல்கள் ரவி ena , ஒரு நடிகர் பட்டாளமே இருப்பாங்க . ஒவ்வொருவரும் போட்டி போட்டு கதாபாத்திரங்களாவே வாழ்ந்து இருப்பாங்க.
இதற்கெல்லாம் மேலாக அழகு சேர்த்தவர் ஏ.ஆர். ரஹ்மான். அவரின் பின்னணி இசை உண்மையில் மாற்று இல்லாத ஒன்று. 60s, 70s காலத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளார். அவர் ஏன் “இசைப் புயல்” என்று அழைக்கப்படுகிறார் என்பதையும் நிரூபித்துள்ளார்.
உன்னோடு
நான் இருந்த ஒவ்வொரு
மணி துளியும் மரண
படுக்கையிலும் மறக்காது
கண்மணியே
தொன்னூறு
நிமிடங்கள் தொட்டணைத்த
காலம் தான் எண்ணுாறு
ஆண்டுகளாய் இதயத்தில்
கனக்குதடி..
இந்த கவிதை பிடிக்காத யாரேனும் இருக்காங்களா என்ன ❤️
அரசியல், நட்பு மற்றும் சினிமா பற்றிய ஒரு விசித்திரமான அறிவார்ந்த, உணர்ச்சி நிறைந்த மற்றும் கலை ரீதியாக துணிச்சலான படம், இதை ரசிக்க பொறுமை தேவைப்படும்; ஆனால் நுணுக்கமாக கவனித்தால் பெரும் அனுபவத்தை தரும்.

Recent Posts




