Recent Posts

Pages: 1 ... 6 7 [8] 9 10
71
கேள்வியாக நிற்கும் அண்ணன்–தங்கை
ஒரு அண்ணன்…
ஒரு தங்கை…
இன்னும் உலகம் என்னவென்று
முழுசாக அறியாத
சின்னச் சின்ன பிஞ்சுகள்.
அவர்களுக்கான உலகம்
புத்தகம் இல்லை.
பள்ளி இல்லை.
அப்பாவும் அம்மாவும் தான்.
அந்த அப்பாவும் அம்மாவும்
காதலித்தவர்கள்.
வேறு மதம்…
ஆனால்
ஒரே மனிதம்.
இரண்டு வீடுகள்
ஒப்புதல் சொல்லவில்லை.
“நம்மால் மாற்ற முடியாத விஷயம்” என்று
மௌனமாகத் தள்ளிவிட்டு,
ஊரைவிட்டு ஒதுங்கி,
யாருக்கும் இடையூறு இல்லாமல்,அவர்கள்
அமைதியைத் தேடி
வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால்…
அமைதி சிலருக்கு
பொறுக்கவில்லை.
அரசியலுக்காக,
அதிகாரத்துக்காக,
மதத்தின் பெயரை
ஆயுதமாக மாற்றிய
சில குள்ள நரிகள்
அந்த வீட்டை ஆடின.
ஒரு இரவு…இருள்,கத்தல்கள்,ரத்தம்
இரு உயிர்கள் அணைந்தன.
அப்போது
ஒரு கேள்வி எழுந்தது.
மதம் காப்பாற்றப்பட்டதா?
ஜாதி உயர்ந்ததா?
இல்லை…
ஒரு அண்ணனும்
ஒரு தங்கையும் மட்டும்
அநாதைகளானார்கள்.
அந்த நாளிலிருந்து
அந்த அண்ணன், தங்கை
தெருவின் ஓரத்தில்
மனிதர்களை நோக்கி
கேள்வியாக
உட்கார்ந்திருந்தார்கள்.
“எதற்கு எங்கள் அப்பா அம்மா சாகணும்?”
பதில் இல்லை.
அமைதி மட்டும்.
ஒரு நாள் மழை.
சிக்னலில் நின்றிருந்த கார்கள்.
அந்த தங்கை
தன் அண்ணனின் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டு
ஓரமாய் நின்றாள்.
ஒரு கார் நின்றது.
உள்ளிருந்து
ஒரு அம்மா
தன் குழந்தையை
மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த காட்சியைப் பார்த்த
இந்தச் சின்னத் தங்கை
மழையில் நனைந்த
கண்களோடு
மெதுவாக சொன்னாள்
“நம்ம அம்மாவும்
நம்மள இப்படித்தான் பிடிப்பாங்க…மழை வரும்போது.”
தங்கை கேட்டாள்,
“அம்மா எங்க?”
அவன் பதில் சொல்லவில்லை.
அண்ணன்
தன் கையில் இருந்த
குட்டி குட்டி ரேகைகளை
அமைதியாகப் பார்த்தான்.
அந்த ரேகைகளில்
அப்பாவின் விரல்கள் மட்டும் இல்லை…
அவன் தூக்கிய நாட்கள் இருந்தது.
அம்மாவின் அரவணைப்பு மட்டும் இல்லை…
அவள் துடைத்த கண்ணீர் இருந்தது.
அந்த கைகளில்
ஒரு வீடு இருந்தது.
ஒரு உலகம் இருந்தது.
ஆனால்…
இப்போ
அந்த உலகம்
ஒரு மதத்தின் பெயரில்
மண்ணுக்குள் தள்ளப்பட்ட
மௌனக் கதையாக
மாறிப் போயிருந்தது.
அவர்கள் சாகவில்லை…
அவர்கள் சாகடிக்கப்பட்டார்கள்.
யாரால்?
மதத்தால்?
ஜாதியால்?
அரசியலால்?
இல்லை…
மனிதத்தை விட
அடையாளத்தை
பெரிதாக்கிய
மனங்களால்.
எப்போது மாறும் இந்த நிலை?
யார் மாற்றுவது?
நான் நினைத்தால் மாறுமா?
நீ நினைத்தால் மாறுமா?
ஒருவேளை…
அந்த மழையில்
எதையும் கேட்காமல் நின்ற அண்ணன், தங்கையின்
கண்களில் ஒரு நிமிடம்
நம் பார்வை
தடுமாறினால் போதும்…
நம் மனசுக்குள்ள
ஒளிந்து கிடக்கும்
மதமும்,
ஜாதியும்,
அடையாளங்களும்
மௌனமாக
உதிர ஆரம்பிக்கும்.
நாம் நினைத்தால்தான்......
அன்று முதல்
மதம் ஒரு அடையாளமாக
இருக்கும்.
மனிதம் மட்டும்
முதன்மையாக.

LUMINOUS 😇💜✌🙏💐
72
கஷ்டங்கள் பல வந்தாலும்
கவலைகள் ஆயிரம் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி
சமாதானம் ஆகும் ஒரு புனித உறவு அண்ணன் தங்கை உறவு
என்பது மறுக்க  முடியாத
உண்மை தானே!

எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
என் அண்ணன் மடியில்
தலை வைத்து படுக்கும் போது
என் மனம் லேசாகவும் ,மகிழ்ச்சியாகவும் மாறும் அதிசயம் என்னுள் கண்டேன்!

அண்ணா என்றென்றும் எனக்கு
இன்னொரு தகப்பன் நீ தானே!
என் மீது அதிக அக்கறையும், பாசமும் என் அண்ணனிடம் மட்டுமே கிடைக்கும் என்பதை நான் அங்கு அறிவேன் அண்ணா!

பிறக்கும்போது உன்னை தெரிந்து இருந்தால் அம்மா என்று அழுவதற்கு பதில் அண்ணா என்று அழுது  இருப்பேனே...
அண்ணா அம்மா இல்லாத போது ஒரு தாயாக இருப்பவள் தங்கை தானே... தங்கைக்கு ஈடு இணை வேறு இல்லை
இந்த பூவுலகில் !

நான் தவறான பாதையில் செல்லும்போது, என் தலையில் ஒரு குட்டு  வைத்து ,அவ்வாறு  செல்லாதடா அண்ணா இவ்வாறு செல் என்று சொல்லும் என் தங்கை தாயாக மாறுகிறார் என்பது உண்மைதானே !

எவ்வளவு கஷ்டப் வந்தாலும்
என் அண்ணா என்று நீ
அழைக்கும் போது ....
உனது அண்ணா என்ற சொல் எனக்கு அமிர்தம் ஆகிறது தங்கையே!
 
அண்ணா என்றால் அன்பு !
அண்ணா என்றால் பாதுகாப்பு என்பதை இந்த பூவுலகில் வாழும் அனைத்து தங்கைகளுக்கும் தெரிந்த உண்மைதானே! வாழ்க அண்ணா தங்கை பாசம்!
வளர்க அண்ணா தங்கை உறவு!
73
                                                   பாச மலர்!!

உன் விரல் பிடித்து பள்ளி சென்ற
காலம் இன்றும் நினைவிருக்கிறது..
வீட்டுக்கு வந்ததும் ரிமோட்டிற்காக நாம்
செய்த யுத்தங்களும், கோபத்தில் நான்
கடித்த உன் கையில் பதிந்த பற்களின் தடமும்,
அதற்காக அம்மாவிடம் நான் வாங்கிய
அடிகளும்—இன்று இனிக்கும் நினைவுகள்!!

​கடைக்குச் செல்லச் சொன்னால் நீ அசையமாட்டாய்;
உன் வேலையையும் நானே செய்தபோது பொங்கிய
ஆத்திரம், உன் மௌனமான பாசத்தை
உணர்ந்தபோது கரைந்து போனது.
நண்பர்களுக்கெல்லாம் நீ “ஹிட்லர்”!
என் முதல் காதலை நீ மிரட்டி முடித்தபோது
கோபம் வந்தாலும், அதன் பின்னால்
இருந்த உன் அக்கறையை உணர்ந்தேன்!!

​கல்லூரி செல்லும் வழியில் பிரேக் ஒயர் அறுந்தபோது,
வெறும் கையால் அதைப் பிடித்து விபத்தில் இருந்து
நம்மை மீட்ட உன் சமயோசித புத்தியைக்
கண்டு மிரண்டு போனேன்..
என்னை கிண்டல் செய்தவனைத் தேடிச் சென்று நீ கொடுத்த பதிலடியில்தான், "அண்ணா" என்ற சொல்லின் பலம் புரிந்தது!!

​அம்மா உனக்கு ஊட்டி விட்டபோது பொறாமைப்பட்டு
நானும் சண்டையிட்டிருக்கிறேன்,
“அவன் மட்டும் தான் உனக்கு புள்ளையா?” என்று..
தெருவே கைதட்டிய உன் முதல் நடனமும்,
என் உடையைச் சரி செய்த உன் தகப்பன்
அக்கறையும் என் பெருமிதங்கள்!!

நீ வாங்கித் தந்த அந்த 1100 மொபைலும்,
செக் செய்த உன் பயமும்,
அக்கா திருமண மேடையில் நீ பாடிய அந்த
நொடிகளும் என் வாழ்வின் அழகான பக்கங்கள்!!

இன்றும் உன் நினைவுகளைத் தாங்கியபடி
என் அலமாரியில் இருக்கிறது நீ தந்த முதல் புடவை!
​விபத்தில் கை ஒடிந்து வந்த உன்னை வண்டியில்
வைத்து அழைத்துச் சென்றபோது,
“தங்கச்சி நல்லா ஓட்டுறியே” என நீ சொன்ன
அந்த ஒற்றைப் பாராட்டு இன்றும் என் நினைவில்!!

பழைய பிளாக் காரில் பயணித்த அதே சுகம்
இன்றும் உன் புதிய காரில் மாறவே இல்லை..
சின்னச் சண்டையில் நீ என்னைப் புரியவில்லை
என்ற ஆதங்கத்தில் உயிரை விடத் துணிந்தேனே..
அது உன்மேல் இருந்த கோபமல்ல, உன்
அன்பு குறைந்துவிடுமோ என்ற பயம்!!

​முதன்முதலில் உன்னைப் பிரிந்தபோது, உன் கண்களில்
வழிந்த கண்ணீரில் என் உயிர் பிரிந்தது..
இன்று நாம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில்
இருந்தாலும், உன் மார்பில் சாய்ந்து அழுது
தீர்க்கத் துடிக்கிறது என் இதயம்!!

எத்தனை காலமானாலும் உன் தங்கை
என்றும் உன் அன்புக்காக ஏங்கும் அந்தச்
சின்னப் பெண் தான்!!!
74
Wallpapers - Own Creations / Re: OP Art - 2026
« Last post by Ninja on January 26, 2026, 10:14:46 PM »
75
Many More Happy returns of the day dear friend 🎂🎂🎂🎂🎂🎂🎂🌹🌹🌹🌹🌹🌹
77

கட்டற்ற கடலும் இல்லை,
கவ்வி செல்ல மீனும் இல்லை;
குத்தும் குளிரில்
எதிர் திசையில் நடந்த
பென்குயினுக்கு
கனவில் இருந்ததெல்லாம்
ஏதுமற்ற
பனி அடர்ந்த அந்த மலைகள் தான்
தன்னை புரிந்து கொள்ளும் வீடு போல


அடுத்த தலைப்பு : தனிமை
78
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 26, 2026, 07:01:57 PM »
80
Happy birthday bro... Always stay blessed 💜


Pages: 1 ... 6 7 [8] 9 10