81
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)
« Last post by Yazhini on January 23, 2026, 06:45:25 AM » திருவிழா கொண்டாட்டம்:
அப்பா கடை நடத்திட்டு வந்ததால அதிகமா எங்கும் வெளிய போனது இல்ல.... ஆனா ஆண்டுக்கு ஒருமுறை மாதா கோயில் திருவிழாக்கு கூட்டிட்டு போவாங்க... Bus ல பயணம்.... சந்தோஷமா அம்மா அப்பா அக்கா கூட கிளம்பிடுவேன்... அங்க இருக்குற கடைங்க மற்றும் ராட்டினத்துக்காக.... எப்பவாது கிடைக்கும் வாய்ப்ப தவர விடலாமா??? கண்டிப்பா இல்ல...
அப்பா நேரா கோயில் குள்ள கூட்டிட்டு போயிடுவாங்க...ஆனா நம்ம மனசோ ரங்க ராட்டினதுல சுத்திட்டு இருக்கும். எப்போ டா கோயில விட்டு போவோம் ராட்டினத்துலன்னு ஏறுவோம் ன்னு இருக்கும்.
ஒரு வழியா திருப்பலி ஒண்ணு முடிஞ்சதும் வெளியே இருக்கும் திருவிழா கடைக்கு கூட்டிட்டு வருவாங்க... எத வாங்க எத விடன்னு மனசு அல்லோல் படும்... கண்ணு கடைய முழுசா ஆராஞ்சு வழக்கம் போல ஒரு முடி வச்ச பொம்மை ல போய் நின்னுடும்... கைக்கு வந்த பொம்மைக்கு என்ன என்ன hair style பண்ணலாம் ன்னு யோசிசுட்டே அடுத்து ராட்டினம் தான் 😁...
கூடை மாதிரி இருக்குற இருக்கை... அக்காவும் நானும் ஒண்ணா இருந்தோம். ரெண்டு சுத்து தான் சுத்திருக்கும், அம்மா ராட்டினம் போய்ட்டு வந்து ice cream சாப்டு ன்னு சொன்னத மீறி சாப்ட ice cream தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுசு... வயத்த பிரட்டிட்டு வர, சரியா மேல போகும் போது கீழ இருந்தவங்க தலையில அபிசேகம் தான்... பாவம் யார் பெத்த பிள்ளையோ... ராட்டினம் சுத்தி முடிச்சதும் அங்க ஏன் நிக்கிறேன்... இறங்குனதும் யார் கிட்டையும் மாட்டாம தப்பிச்சு அம்மா இருந்த இடத்துக்கு போயாச்சு.... அக்காவும் நானும் ஒரே மாதிரியான colour dress ... பாவம் அவ எனக்கு பதிலா மாட்டிகிட்ட... அக்கா இருக்கிறது அப்போ தான் நிம்மதியா இருத்தது... அப்பாட நம்ம தப்பிசோம் 😁
முடி வச்ச பொம்ம, நிறைய பலகாரம், கம்மல், வளையல் கொஞ்சம் பக்தி வருடா வருடம் இதே கத தான்... ஆனா அதுக்கு அப்புறம் ராட்டினம் போய்ட்டு வந்து தான் ice cream 🍨 - இது நகரத்துல திருவிழா ன்னா.... ஊர் பக்கம் கேக்கவே வேணாம்... ஆனா.....
முழு ஊருமே உறவுமுறைக்குள்ள இருந்தாலும் நகரத்துல பொறந்து வளர்ந்து எப்போவாது ஊருக்கு போற பசங்களுக்கு எல்லார்கிட்டயும் பழகிறது கொஞ்சம் கடினம் தான்... திருவிழா வ தொலைக்காட்சி குள்ள தான் பாக்க முடிது. பல பேர் திருவிழா பற்றி பக்கம் பக்கமா பேசும் போது மனசுக்குள்ள ஏக்கம் அலாதியா இருக்க தான் செய்யுது...
சொந்த ஊர விட்டு நகரமையம் ஆகுதலின் பாதிப்புல இதுவும் ஒன்று 💔
நகர கூண்டு வாழ்க்கைக்கு ஜன்னல் வழி காற்று திருவிழா 😊😊
அப்பா கடை நடத்திட்டு வந்ததால அதிகமா எங்கும் வெளிய போனது இல்ல.... ஆனா ஆண்டுக்கு ஒருமுறை மாதா கோயில் திருவிழாக்கு கூட்டிட்டு போவாங்க... Bus ல பயணம்.... சந்தோஷமா அம்மா அப்பா அக்கா கூட கிளம்பிடுவேன்... அங்க இருக்குற கடைங்க மற்றும் ராட்டினத்துக்காக.... எப்பவாது கிடைக்கும் வாய்ப்ப தவர விடலாமா??? கண்டிப்பா இல்ல...
அப்பா நேரா கோயில் குள்ள கூட்டிட்டு போயிடுவாங்க...ஆனா நம்ம மனசோ ரங்க ராட்டினதுல சுத்திட்டு இருக்கும். எப்போ டா கோயில விட்டு போவோம் ராட்டினத்துலன்னு ஏறுவோம் ன்னு இருக்கும்.
ஒரு வழியா திருப்பலி ஒண்ணு முடிஞ்சதும் வெளியே இருக்கும் திருவிழா கடைக்கு கூட்டிட்டு வருவாங்க... எத வாங்க எத விடன்னு மனசு அல்லோல் படும்... கண்ணு கடைய முழுசா ஆராஞ்சு வழக்கம் போல ஒரு முடி வச்ச பொம்மை ல போய் நின்னுடும்... கைக்கு வந்த பொம்மைக்கு என்ன என்ன hair style பண்ணலாம் ன்னு யோசிசுட்டே அடுத்து ராட்டினம் தான் 😁...
கூடை மாதிரி இருக்குற இருக்கை... அக்காவும் நானும் ஒண்ணா இருந்தோம். ரெண்டு சுத்து தான் சுத்திருக்கும், அம்மா ராட்டினம் போய்ட்டு வந்து ice cream சாப்டு ன்னு சொன்னத மீறி சாப்ட ice cream தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுசு... வயத்த பிரட்டிட்டு வர, சரியா மேல போகும் போது கீழ இருந்தவங்க தலையில அபிசேகம் தான்... பாவம் யார் பெத்த பிள்ளையோ... ராட்டினம் சுத்தி முடிச்சதும் அங்க ஏன் நிக்கிறேன்... இறங்குனதும் யார் கிட்டையும் மாட்டாம தப்பிச்சு அம்மா இருந்த இடத்துக்கு போயாச்சு.... அக்காவும் நானும் ஒரே மாதிரியான colour dress ... பாவம் அவ எனக்கு பதிலா மாட்டிகிட்ட... அக்கா இருக்கிறது அப்போ தான் நிம்மதியா இருத்தது... அப்பாட நம்ம தப்பிசோம் 😁
முடி வச்ச பொம்ம, நிறைய பலகாரம், கம்மல், வளையல் கொஞ்சம் பக்தி வருடா வருடம் இதே கத தான்... ஆனா அதுக்கு அப்புறம் ராட்டினம் போய்ட்டு வந்து தான் ice cream 🍨 - இது நகரத்துல திருவிழா ன்னா.... ஊர் பக்கம் கேக்கவே வேணாம்... ஆனா.....
முழு ஊருமே உறவுமுறைக்குள்ள இருந்தாலும் நகரத்துல பொறந்து வளர்ந்து எப்போவாது ஊருக்கு போற பசங்களுக்கு எல்லார்கிட்டயும் பழகிறது கொஞ்சம் கடினம் தான்... திருவிழா வ தொலைக்காட்சி குள்ள தான் பாக்க முடிது. பல பேர் திருவிழா பற்றி பக்கம் பக்கமா பேசும் போது மனசுக்குள்ள ஏக்கம் அலாதியா இருக்க தான் செய்யுது...
சொந்த ஊர விட்டு நகரமையம் ஆகுதலின் பாதிப்புல இதுவும் ஒன்று 💔
நகர கூண்டு வாழ்க்கைக்கு ஜன்னல் வழி காற்று திருவிழா 😊😊

Recent Posts


