81
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-003 (பள்ளிவிடுமுறையும் பாட்டி வீடும்)
« Last post by Luminous on February 19, 2026, 11:36:47 PM »பள்ளி விடுமுறை என்றாலே என் மனசு நேராக போகும் இடம் பாட்டி வீடு.
அது ஒரு வீடு இல்லை… ஒரு தனி உலகம்.
விடுமுறை ஆரம்பமான உடனே பள்ளிப் பையை மறந்துவிட்டு பாட்டி வீட்டுக்குப் போய்விடுவேன். அங்கே வாழ்க்கை வேறு நிலை.
தாமதமாகத் தூங்கலாம்… தாமதமாக எழுந்துக்கொள்ளலாம்…
படி, இதைச் செய்யாதே, அப்படி செய்யாதே, என்ற கண்டிப்பு அதிகம் இருக்காது.
அந்த சுதந்திரமே அந்த நாட்களின் பெரிய சந்தோஷம்.
அங்கே எனக்கு நிறைய நண்பர்கள். காலையிலேயே கூட்டமாக விளையாடுவோம். சில நாட்களில் மீன் பிடிக்கச் சென்று மகிழ்ச்சியாக இருப்போம்.
ஆனால் அந்த மகிழ்ச்சிக்காக ஒருநாள் நல்ல அடி கூட வாங்கியிருக்கிறேன்😒
இப்போது நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
என் பாட்டி கையால் செய்யும் பால் கடும்பு… அது ஒரு இனிப்பு மட்டும் அல்ல அன்பின் வடிவம்.
அதை எனக்காகக் கொடுத்தால், நான் என்ன செய்வேன் தெரியுமா?
வெளியில் விளையாடும் நண்பர்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுத்துவிடுவேன்.
அவர்கள் சாப்பிட்டு இன்னும் எடுத்து வா, என்றால், எனக்குத்தான் வேண்டும் என்று சொல்லி மீண்டும் மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து அவர்களுக்கே கொடுத்து விடுவேன்.
ஒருநாள் அப்படியே “இன்னும் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தேன், திடீரென்று திரும்பிப் பார்த்தால் 🙄 பாட்டி பின்னால் நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எதற்குத்தான் இன்னும் வேண்டும் என்று கேட்டாய்? என்று கேட்டதும்… நல்ல கண்டிப்பு
அந்த நாளிலிருந்து இன்றுவரை பால் கடும்பு என்றாலே எனக்கு பயத்தோடு சேர்ந்த ஒரு நினைவு.
இன்னொரு சம்பவம் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது.
பாட்டி வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு பையன் தேர்வு முடிந்ததற்குப் பிறகு சட்டையில் மை தடவி விளையாடிக்கொண்டிருந்தான்.
நான் வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று அவன் சட்டையில் இருந்த பேனாவை எடுத்து அதிலிருந்த மையை அவன் முதுகில் ஊற்றிவிட்டேன்🙃
அவன் என்னைத் துரத்தினான். நான் ஓடிவந்து பாட்டி வீட்டில் ஒளிந்துக்கொண்டேன்.
அவன் வந்து அவள் எங்கே? என்று பாட்டியிடம் கேட்டான்.
என் பாட்டி காரணமே கேட்காமல் அதோ அலமாரி பின்னால் என்று சொல்லிவிட்டு அமைதியாகப் போய்விட்டார்கள்😑
அவன் என் ஜடையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டான்🤨
அந்த நேரத்தில் அவன் அம்மா வந்தார்கள்.
நான் உடனே அழுது, 🤕மாமி, இவன் அடிக்கிறான் என்று சொல்லி மாட்டிவிட்டேன்.
அவனுக்கு அங்கேயே நல்ல அடி.
என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே, அடிவாங்கிக் கொண்டு போனான். 😂
இப்போது அந்த எல்லா சம்பவங்களையும் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
அதுதான் பாட்டி வீடு.
தவறு செய்தாலும் சின்னச் சின்ன சண்டைதான்… ஆனால் அன்பு மட்டும் மிகப் பெரியது.
விடுமுறை முடிந்து திரும்ப வர வேண்டிய நாள் மிகவும் கடினம்.
சிறிது கோபம்… சிறிது சோகம்… சில நேரங்களில் கண்ணீரும் கூட.
ஆனால் அந்த சிரிப்பு, அந்த சுதந்திரம், அந்த அன்பு , இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.
பாட்டி வீடு என்பது ஒரு இடம் அல்ல…
ஒரு உணர்வு.
என்றும் மறக்க முடியாத நினைவுகள்.
எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகள் 💜💛💙🧡🧚♀️😍🍭 ஒளிமிகு LUMINOUS
அது ஒரு வீடு இல்லை… ஒரு தனி உலகம்.
விடுமுறை ஆரம்பமான உடனே பள்ளிப் பையை மறந்துவிட்டு பாட்டி வீட்டுக்குப் போய்விடுவேன். அங்கே வாழ்க்கை வேறு நிலை.
தாமதமாகத் தூங்கலாம்… தாமதமாக எழுந்துக்கொள்ளலாம்…
படி, இதைச் செய்யாதே, அப்படி செய்யாதே, என்ற கண்டிப்பு அதிகம் இருக்காது.
அந்த சுதந்திரமே அந்த நாட்களின் பெரிய சந்தோஷம்.
அங்கே எனக்கு நிறைய நண்பர்கள். காலையிலேயே கூட்டமாக விளையாடுவோம். சில நாட்களில் மீன் பிடிக்கச் சென்று மகிழ்ச்சியாக இருப்போம்.
ஆனால் அந்த மகிழ்ச்சிக்காக ஒருநாள் நல்ல அடி கூட வாங்கியிருக்கிறேன்😒
இப்போது நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
என் பாட்டி கையால் செய்யும் பால் கடும்பு… அது ஒரு இனிப்பு மட்டும் அல்ல அன்பின் வடிவம்.
அதை எனக்காகக் கொடுத்தால், நான் என்ன செய்வேன் தெரியுமா?
வெளியில் விளையாடும் நண்பர்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுத்துவிடுவேன்.
அவர்கள் சாப்பிட்டு இன்னும் எடுத்து வா, என்றால், எனக்குத்தான் வேண்டும் என்று சொல்லி மீண்டும் மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து அவர்களுக்கே கொடுத்து விடுவேன்.
ஒருநாள் அப்படியே “இன்னும் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தேன், திடீரென்று திரும்பிப் பார்த்தால் 🙄 பாட்டி பின்னால் நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எதற்குத்தான் இன்னும் வேண்டும் என்று கேட்டாய்? என்று கேட்டதும்… நல்ல கண்டிப்பு
அந்த நாளிலிருந்து இன்றுவரை பால் கடும்பு என்றாலே எனக்கு பயத்தோடு சேர்ந்த ஒரு நினைவு.
இன்னொரு சம்பவம் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது.
பாட்டி வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு பையன் தேர்வு முடிந்ததற்குப் பிறகு சட்டையில் மை தடவி விளையாடிக்கொண்டிருந்தான்.
நான் வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று அவன் சட்டையில் இருந்த பேனாவை எடுத்து அதிலிருந்த மையை அவன் முதுகில் ஊற்றிவிட்டேன்🙃
அவன் என்னைத் துரத்தினான். நான் ஓடிவந்து பாட்டி வீட்டில் ஒளிந்துக்கொண்டேன்.
அவன் வந்து அவள் எங்கே? என்று பாட்டியிடம் கேட்டான்.
என் பாட்டி காரணமே கேட்காமல் அதோ அலமாரி பின்னால் என்று சொல்லிவிட்டு அமைதியாகப் போய்விட்டார்கள்😑
அவன் என் ஜடையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டான்🤨
அந்த நேரத்தில் அவன் அம்மா வந்தார்கள்.
நான் உடனே அழுது, 🤕மாமி, இவன் அடிக்கிறான் என்று சொல்லி மாட்டிவிட்டேன்.
அவனுக்கு அங்கேயே நல்ல அடி.
என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே, அடிவாங்கிக் கொண்டு போனான். 😂
இப்போது அந்த எல்லா சம்பவங்களையும் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
அதுதான் பாட்டி வீடு.
தவறு செய்தாலும் சின்னச் சின்ன சண்டைதான்… ஆனால் அன்பு மட்டும் மிகப் பெரியது.
விடுமுறை முடிந்து திரும்ப வர வேண்டிய நாள் மிகவும் கடினம்.
சிறிது கோபம்… சிறிது சோகம்… சில நேரங்களில் கண்ணீரும் கூட.
ஆனால் அந்த சிரிப்பு, அந்த சுதந்திரம், அந்த அன்பு , இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.
பாட்டி வீடு என்பது ஒரு இடம் அல்ல…
ஒரு உணர்வு.
என்றும் மறக்க முடியாத நினைவுகள்.
எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகள் 💜💛💙🧡🧚♀️😍🍭 ஒளிமிகு LUMINOUS

Recent Posts





.png)