90
« Last post by PreaM on November 07, 2025, 10:07:01 PM »
அன்று கருவில் சுமந்த தாயே
இன்று கையில் சுமந்தாயே
உன் மடியில் என்னை தாலாட்டினாயே
தூக்கம் தொலைத்து தூங்க வைத்தாயே
என் அழுகை கண்டு பதறியதாயே
பசியறியா எனக்கு பாலூட்டினாயே
அம்மா என்றதும் ஆனந்தம் அடைந்தாயே
அன்பால் என்றும் அரவணைத்தாயே
பண்பை எனக்கு போதித்தாயே
பணிவோடு வாழ கற்று கொடுத்தாயே
முத்தமிட்டு முத்தமிட்டு அன்பை பொழிந்தாயே
என் மழலை மொழி கேட்டு முகம் மலந்தாயே
முத்தம் கேட்டு முத்தம் பெற்று
என்னோடு விளையாடிய தாயே
ஒரு கண்ணம் முத்தமிட்டல் மறு கண்ணம் முத்தமென்று
குழந்தையாய் மாறி மகிழ்ந்தாயே
என் தாயின் மகிழ்ச்சி எல்லாம்
நான் கொடுக்கும் முத்தமே...