Recent Posts

Pages: 1 ... 7 8 [9] 10
81
இசை தென்றல் / இசை தென்றல் - 341
« Last post by MaiVizhi on March 11, 2026, 11:57:44 PM »


Movie: Annakodi
Song: Pothivacha Asathan
Singer: G. V. Prakash Kumar, Prashanthini
Music: G. V. Prakash Kumar
Lyricist: Arivumathi

Recently addicted... Last week oru short film le this song keten
Aprm tha search pani keten whole song... First time keten.. Inum kete eruken
Avalo pidichathu..



83


அதிக கடவுள் பக்தி உள்ளவர்கள், அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருபவர்கள் பலரும் கையில் காப்புக் கயிறு கட்டியிருப்பார்கள். ஆனால், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை யாரும் அவ்வளவு எளியதாக அறிந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அதில் அறிவியல் உண்மைகள் பல அடங்கியிருக்கிறது. அந்த ரகசியங்களை இங்கு தெரிந்து கொள்வோம்:

நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும். இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள்.

நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

நம்மில் பலர் மஞ்சள், கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறங்களில் கயிறு கட்டுவது வழக்கம்.


இது தீய சக்தியை நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிலர் தங்கள் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, செம்பு என உலோகங்களில் காப்பு செய்து அணிந்து கொள்வார்கள். ஆனால் பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் கட்டுவது என்பதுதான் அறிவியல் ரீதியாக சரியான ஒன்று.

இவை மூன்றும் மந்திர ஒளியில் இருந்து உருவாகும் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆகையால் இத்தகைய கயிறை நமது கையில் கட்டிக்கொண்டு மந்திரத்தை உச்சரித்தால், அந்த மந்திரத்திற்கான முழு பலனையும் பெறலாம். அதோடு இவை நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை என்று அறியப்பட்டுள்ளது.

பட்டு நூலினால் ஆன காப்பு கயிறு அணிவதால் பலன் உண்டாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிந்து கொள்ளலாம். நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.

சிவப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம்.இதை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.


ஆரஞ்சு அல்லது காவி நிறக்கயிறு மணிக்கட்டில் கட்டுவதால் புகழ், அதிகாரம் சேரும். இத்தகைய காப்பு கயிறை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது சிறப்பு.

மேலும், நாயுருவி, சீதெவி செங்கழுநீர், அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி குளிசத்தில் (தாயத்து) அடைத்து அணிவார்கள். காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவார்கள்.

இதுவும் ஒரு வகையில் தீய சக்திகளிடமிருந்து நம்மை காப்பதே ஆகும். நாகரிகம் முற்றி வரும் இக்காலத்தில் பட்டையாக திருநீரு அணிய தயங்குபவர்கள் காசிக்கயிறு, அம்மன் கயிறு போன்ற காப்பு கயிறுகளை அணிந்து, கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் இடுப்பில் அணிவித்து தீய சக்திகளிடமிருந்து காத்துக்கொள்ளலாம்.

மேலும் வாழ்வில் எல்லாம் தேவைப்படும் காரியங்களும் ஒரு சிறிய கயிற்றில் சாதிக்கலாம். மாந்திரீக, ஜோதிடம், வைத்தியம் போன்ற பல்வேறு கலைகளில் பிரதானமாக மறைக்கப்பட்டு கையாளப்படுகிறது.
84


காலையில் அரசனை போலவும், இரவில் ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும் என்பது முன்னோர்கள் கூறிய அறிவுரை. இன்றைய வாழ்வியல் முறையில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. காலை உணவைப் பலரும்
சாப்பிடுவதில்லை; இரவு உணவைத் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது தவறுவதில்லை என்னும் நிலை உருவாகிவிட்டது. சரி இரவு உணவை அதிகமாக எடுத்துக் கொண்டால் விளையும் ஆபத்துகளைக் காண்போம்.

இரவு நீண்ட நேரம் கண் விழிக்கும் போது,மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. மன அழுத்தத்தைக் குறைக்க ஏதாவது சாப்பிடலாமா? என்று தோன்றும். அதுபோன்ற வேளையில் இனிப்பு மற்றும் துரித உணவுகளையே மனம் விரும்பும். இதை சுகர் க்ரேவிங் என்று அழைப்பார்கள். அதாவது நேரம் தவறி ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு, தொப்பை, வளர்சிதை மாற்றங்கள், மன அழுத்தம், முடி உதிர்வு, மாதவிடாய் கோளாறுகள் போன்ற பக்க விளைவுகள் உண்டாகும்.

நூற்றுக்கு 15 சதவீதம் மக்கள் இரவு உணவு மோக நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்கர்களுக்கு மட்டுமே இருந்து வந்த இந்த நோய் தற்போது இந்தியர்களிடமே பெரிதாகக் காணப்படுகிறது.

இரவு உணவு மோகம் கொலஸ்ட்ரால் கூடுவதுடன் 300 கலோரி அளவில் உடலில் சேர்கிறது. நல்ல தூக்கமும் கெடுகிறது. தொப்பை இன்னும் நன்றாக வளர்கிறது. இந்நேரத்தில் அதிகம் சாப்பிட்டால் வலிப்பு நோயும் பலருக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்

நம்மில் பலருக்கு இரவு படுத்ததும் தூக்கம் வருவதில்லை. நாம் களைப்படையும் அளவு பயிற்சி, உழைப்பு செய்திருந்தால் நாம் மிகவும் சோர்வடைந்திருந்தால் தூக்கம் நம் கண்களைத் தேடும். ஆனால் நாம் பல மணி நேரம் கணினி முன்பு அமர்ந்தே இருப்பதால் கண்கள் வறட்சி அடைந்து தூக்கம் எளிதாக வருவதில்லை. எனவே இரவு நேரம் நிம்மதியாக தூங்க வேண்டுமெனில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். படுக்கச் செல்லும் முன்பு தொழில்நுட்ப சாதனங்களைத் தவிர்த்து விடுங்கள். இரவு பசித்தாலும் பழ வகைகளைச் சேர்த்துக் கொள்ளவும். முருங்கை சூப், முருங்கை கீரை வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
85
Cine News & Movie Reviews / Vadam (2026) Movie Review:
« Last post by MysteRy on March 11, 2026, 10:37:29 AM »


Vetrivel (Vimal), who has many enmities, falls in love with Devaki (Sanashka Sri) when she requests to train her bull for the competion. What happens further, is rest of the story.

Positives: Few good engaging moments, Actors performance in parts, BGM.

Drawbacks: Dragging second half.

Verdict: Watchable once as a time pass after released in OTT.
86
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on March 11, 2026, 10:31:07 AM »
87
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on March 11, 2026, 04:23:23 AM »
88
Happy Birthday Brothers Lonely Warrior and Raghu29
89
தனித்துவத்தின் அழகு

அதிகாலைப் பொழுதின் அமைதியில்,
ஆயிரம் வண்ணங்கள் கண்விழிக்கும் வேளையில்,
செந்நிறக் கடலெனப் பூத்துக் கிடக்கும் - இத்
துலிப் மலர்களின் அணிவகுப்பில் ஒரு அதிசயம்!

வானில் சிறகடிக்கும் அந்தத் தனிப்பறவை,
தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்ததல்ல;
தனக்கான பாதையைத் தானே செதுக்கி,
உயரப் பறக்கும் தன்னம்பிக்கை அது!

கீழே, சிவப்புக் கம்பளம் விரித்தாற்போல்,
ஒரே நிறத்தில் ஒரு கோடி மலர்கள்...
அவற்றின் நடுவே அந்த ஒரு வெள்ளை ரோஜா,
அமைதியாகச் சொல்லும் ஒரு ரகசியம்!

"கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்து போகாதே,
தனித்துத் தெரியத் தயங்கவும் செய்யாதே!
உன் தனித்தன்மையே உனது அடையாளம்,
அதுவே உன் வாழ்வின் உன்னதப் பிரகாசம்!"

சிவப்பின் ஆதிக்கத்தில் வெண்மை தொலைவதில்லை,
அது அங்கே தான் இருப்பதை உரக்கச் சொல்கிறது...
சில நேரங்களில் தனியாக இருப்பது தவறு அல்ல…
தனக்கான இடத்தில் தானாக இருப்பதுதான் உண்மையான அழகு…

வானில் பறக்கும் அந்த பறவையும்
மண்ணில் மலரும் அந்த வெள்ளை ரோஜாவும்
ஒரே உண்மையை நினைவூட்டுகின்றன—
“ஒவ்வொருவருக்கும் ஒரு தனி பாதை உண்டு…

"தனித்திரு... உன் தனித்துவத்துடன் மிளிர்!"

90
♦️🚨 *20 வகையான பாட்டி வைத்தியம்*

♦️ நெஞ்சு சளி
♦️ தலைவலி
♦️ தொண்டை கரகரப்பு
♦️ தொடர் விக்கல்
♦️ வாய் நாற்றம்
♦️ உதட்டு வெடிப்பு
♦️ அஜீரணம்
♦️ குடல்புண்
♦️ வாயு தொல்லை
♦️ வயிற்று வலி
♦️ மலச்சிக்கல்
♦️ சீதபேதி
♦️ பித்த வெடிப்பு
♦️ மூச்சுப்பிடிப்பு
♦️ சரும நோய்
♦️ தேமல்
♦️ மூலம்
♦️ தீப்புண்
♦️ மூக்கடைப்பு
♦️ வரட்டு இருமல்

🚨 *1. நெஞ்சு சளி*

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

🚨 *2. தலைவலி*

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு,
2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

🚨 *3. தொண்டை கரகரப்பு*

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

🚨 *4. தொடர் விக்கல்*

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

🚨 *5. வாய் நாற்றம்*

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

🚨 *6. உதட்டு வெடிப்பு*

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

🚨 *7. அஜீரணம்*

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

🚨 *8. குடல்புண்*

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

🚨 *9. வாயு தொல்லை*

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

🚨 *10. வயிற்று வலி*

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

🚨 *11. மலச்சிக்கல்*

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

🚨 *12. சீதபேதி*

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

🚨 *13. பித்த வெடிப்பு*

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

🚨 *14. மூச்சுப்பிடிப்பு*

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

🚨 *15. சரும நோய்*

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

🚨 *16. தேமல்*

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

🚨 *17. மூலம்*

கரணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

🚨 *18. தீப்புண்*

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

🚨 *19. மூக்கடைப்பு*

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

🚨 *20. வரட்டு இருமல்*

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

Pages: 1 ... 7 8 [9] 10