Recent Posts

Pages: 1 ... 7 8 [9] 10
81
பள்ளி விடுமுறை என்றாலே என் மனசு நேராக போகும் இடம்  பாட்டி வீடு.
அது ஒரு வீடு இல்லை… ஒரு தனி உலகம்.
விடுமுறை ஆரம்பமான உடனே பள்ளிப் பையை மறந்துவிட்டு பாட்டி வீட்டுக்குப் போய்விடுவேன். அங்கே வாழ்க்கை வேறு நிலை.
தாமதமாகத் தூங்கலாம்… தாமதமாக எழுந்துக்கொள்ளலாம்…
படி, இதைச் செய்யாதே, அப்படி செய்யாதே, என்ற கண்டிப்பு அதிகம் இருக்காது.
அந்த சுதந்திரமே அந்த நாட்களின் பெரிய சந்தோஷம்.
அங்கே எனக்கு நிறைய நண்பர்கள். காலையிலேயே கூட்டமாக விளையாடுவோம். சில நாட்களில் மீன் பிடிக்கச் சென்று மகிழ்ச்சியாக இருப்போம்.
ஆனால் அந்த மகிழ்ச்சிக்காக ஒருநாள் நல்ல அடி கூட வாங்கியிருக்கிறேன்😒
இப்போது நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
என் பாட்டி கையால் செய்யும் பால் கடும்பு… அது ஒரு இனிப்பு மட்டும் அல்ல அன்பின் வடிவம்.
அதை எனக்காகக் கொடுத்தால், நான் என்ன செய்வேன் தெரியுமா?
வெளியில் விளையாடும் நண்பர்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுத்துவிடுவேன்.
அவர்கள் சாப்பிட்டு இன்னும் எடுத்து வா, என்றால், எனக்குத்தான் வேண்டும் என்று சொல்லி மீண்டும் மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து அவர்களுக்கே கொடுத்து விடுவேன்.
ஒருநாள் அப்படியே “இன்னும் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தேன், திடீரென்று திரும்பிப் பார்த்தால் 🙄 பாட்டி பின்னால் நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எதற்குத்தான் இன்னும் வேண்டும் என்று கேட்டாய்? என்று கேட்டதும்… நல்ல கண்டிப்பு
அந்த நாளிலிருந்து இன்றுவரை பால் கடும்பு என்றாலே எனக்கு பயத்தோடு சேர்ந்த ஒரு நினைவு.
இன்னொரு சம்பவம்  நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது.
பாட்டி வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு பையன் தேர்வு முடிந்ததற்குப் பிறகு சட்டையில் மை தடவி விளையாடிக்கொண்டிருந்தான்.
நான் வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று அவன் சட்டையில் இருந்த பேனாவை எடுத்து அதிலிருந்த மையை அவன் முதுகில் ஊற்றிவிட்டேன்🙃
அவன் என்னைத் துரத்தினான். நான் ஓடிவந்து பாட்டி வீட்டில் ஒளிந்துக்கொண்டேன்.
அவன் வந்து அவள் எங்கே? என்று பாட்டியிடம் கேட்டான்.
என் பாட்டி காரணமே கேட்காமல் அதோ அலமாரி பின்னால் என்று சொல்லிவிட்டு அமைதியாகப் போய்விட்டார்கள்😑
அவன் என் ஜடையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டான்🤨
அந்த நேரத்தில் அவன் அம்மா வந்தார்கள்.
நான் உடனே அழுது, 🤕மாமி, இவன் அடிக்கிறான் என்று சொல்லி மாட்டிவிட்டேன்.
அவனுக்கு அங்கேயே நல்ல அடி.
என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே, அடிவாங்கிக் கொண்டு போனான். 😂
இப்போது அந்த எல்லா சம்பவங்களையும் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.
அதுதான் பாட்டி வீடு.
தவறு செய்தாலும் சின்னச் சின்ன சண்டைதான்… ஆனால் அன்பு மட்டும் மிகப் பெரியது.
விடுமுறை முடிந்து திரும்ப வர வேண்டிய நாள் மிகவும் கடினம்.
சிறிது கோபம்… சிறிது சோகம்… சில நேரங்களில் கண்ணீரும் கூட.
ஆனால் அந்த சிரிப்பு, அந்த சுதந்திரம், அந்த அன்பு , இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.
பாட்டி வீடு என்பது ஒரு இடம் அல்ல…
ஒரு உணர்வு.
என்றும் மறக்க முடியாத  நினைவுகள்.
எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகள்           💜💛💙🧡🧚‍♀️😍🍭 ஒளிமிகு LUMINOUS
82
அப்பம்மா வீடு

கிழக்கு இலங்கையின் கரையோர பகுதியில் எங்க அப்பம்மா வீடு. விருந்தோம்பலுக்கு பெயர் போன மீன் பாடும் பூமி அது. அட metaphor ஆஹ் சொல்லலைங்க, நிஜமாவே அந்த கடற்கரை ஓரமா பௌர்ணமில போனோம்னா கடலலைகளோட மீன்கள் எழுப்புற சத்தம் பாடுற மாதிரி இனிமையா தான் இருக்கும்.

கடலுக்கும் எங்க வீட்டுக்கும் 100m தான் தூரம். ஆகஸ்ட் விடுமுறையில பெரியப்பா family சித்தப்பா family நாங்கன்னு எல்லாமே அங்க ஆஜர் ஆகிடணும்கிறது மீற முடியாத எங்க அப்பம்மாவோட அன்பு கட்டளை. சுருள் முடியும் கன்னக்குழியும் முகத்துல எபவுமே தவழும் ஒரு புன்னகையும் தான் எங்க அப்பம்மாவா நினச்சா உடனே mind கு வார எங்க அப்பாம்மாவோட விம்பம்.
சமையல் மட்டும் ,தான்  மட்டும் தான் பண்ணுவன்றது,எங்க அப்பம்மா சமரசமே பண்ண முடியாம அடம் பிடிக்கும் விஷயம்.இருக்கிற அவ்வளவு நாளும் ஒவ்வொரு வேளை சாப்பாட்டுலயும் மருமகள், மகன் மற்றும் பேரப்பிள்ளைங்க favourite dish அவங்க கையாலேயே பார்த்து பார்த்து செஞ்சு வச்சிடுவாங்க.செல்லம், குட்டி, தங்கம் அப்படின்ற வார்த்தைகளைத் தவிர பெயர் கூட சொல்லி கூப்பிட மாட்டாங்க எங்க அப்பம்மா. வீணை முதல் ஆங்கில இலக்கியம் வரை கற்றுத் தேர்ந்த ஆழ்ந்த அறிவும் அன்பும் கொண்ட பெண்மணி.

அம்மா, பெரியம்மா, சித்தி எல்லாம் இருந்து கதை பேசி கொண்டே ,அப்பம்மா சமையலுக்கு காய்கறிகள் வெட்டி கொடுப்பாங்க .

அப்பா, பெரியப்பா, சித்தப்பா இருந்து பூகோள அரசியல்ல இருந்து, cricket ஆன்மீகம் வரைக்கும் அலசி ஆராய்வாங்க.

நம்ம cousin gang ,வெளிநாட்ல இருந்து சித்தப்பா கொண்டு வந்த சின்ன வீடியோ  camera வச்சு அப்பவே short film எடுப்பம் . Battery போடுற guitar toy எங்க BGM source.பனங்கா  பணியாரத்துல இருந்து nestamalt வரைக்கும் advertisement  கூட நாங்க அப்பவே shoot பண்ணிருக்கோம். அதை மணல்ல பாய் விரிச்சு வெற்று சுவர்ல மல்டிமீடியா ப்ரொஜெக்டர்ல ப்ரொஜெக்ட் பண்ணி எல்லோருக்கும் இரவு telecast பன்றது எங்க பெருமிதம்னான பால்ய கால oscar moment .

வருஷத்துக்கு ஒரு தடவ வார மாமங்க திருவிழால விக்கிற மண்ணுல செய்ற சின்ன சட்டி முட்டி அடுப்பு விளையாட்டு பொருளை வைகோல் போட்டு உடையாம pack panni எனக்கு பரிசா தருவாங்க. முதல் பேர பிள்ளை என்றதால எனக்கு கிடைக்கும் சிறப்பு சலுகை அது

அப்பம்மா வீட்டை சுத்தி நிறைய முந்திரி மரம் இருக்கும். இரவின் அமைதியில ஓயாம கேட்கும் கடல் அலை சத்தம் பின்னணியில ,எங்க அப்பம்மா விறகடுப்பு மூட்டி சுடுமணல்ல முந்திரி வறுத்து உடைச்சு தர்ற முந்திரிக்கு எங்க ஸ்கூல்ல அவ்வளவு டிமாண்ட் இருக்கும்.

taunami பேரலையில் எங்க வீடும் முந்திரி தோட்டமும் அழிஞ்சு போயிருந்தாலும் , எங்க வீட்டு கட்டிடத்தின் எச்சங்களும் அந்த வெண்ணிற மணலும்  , கடலலை சத்தமும் இன்னும் எங்க பள்ளி கால விடுமுறை நாட்களின் வாழ்வியலின் அடையாளமாய் இன்னைக்கும் நிலைச்சு நிக்குது.ஏன்னா சில கட்டிடங்கள் கற்களால கட்டப்பட்டதில்லை. நினைவுகளால கட்டப்பட்டது.
83

ஸ்கூல் டூர், சொந்தக்காரங்க வீடு, ஃப்ரெண்ட்ஸ் வீடுனு எங்கயும் விடாத எங்க ஸ்ட்ரிக்ட் அப்பாவ பத்தி முன்னாடியே தெரிஞ்சதாலயோ என்னமோ, கடவுள் பாவம் பாத்து எங்க அம்மாவை ஊட்டிலே பொறக்க வெச்சாங்க. அதனால வருஷத்துக்கு ஒரு முறை சம்மர் லீவ்ல அம்மம்மா வீட்டுக்கு போறதுதான் எங்க மிகப்பெரிய சந்தோஷமா இருந்துச்சு.
அம்மா வீட்டுக்கு போறத நெனச்சாலே மனசுக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கும்.
எப்போடா ஊட்டி போற டேட் வரும்னு நானும் அக்காவும் ஏக்கமா அம்மாவ தொல்லை பண்ணிட்டே இருப்போம்.

 காலையில அலாரம் அடிக்குறப்போ டெய்லி அம்மா கத்துனாலும் எந்திரிக்காத நாங்க, மொத ஆளா எந்திரிச்சு நிப்போம்.
எப்போவும் வேட்டியில சுத்துற அப்பா ஊட்டி போறப்போ மட்டும் பேண்ட் ஷர்ட் போட்டு செம்மையா இருப்பாரு ஹீரோ மாதிரி. அப்புறம் டக் டக்னு கிளம்பி குளிருல பஸ்க்கு வெயிட் பண்ணுவோம். இனி மைண்ட் ஃபுல்லா எப்போடா ஊட்டி போய் சேருவோம்னு இருக்கும்.  பாலக்காட்டுல இருந்து எடுத்த பஸ் கோயம்புத்தூர் ரீச் ஆகுறப்பவே தான் பொறந்த ஊரு காத்தடிச்ச சந்தோஷமும் எங்க அம்மா முகத்துல பாப்பேன்.

மேட்டுப்பாளையம் கடந்து நீலகிரி ஃபர்ஸ்ட் பெண்ட்ல இருந்தே நல்லா வேடிக்கை பாக்க ஸ்டார்ட் பண்ணுவேன். சைடுல மலையில இருந்து பஸ் விழுந்தா என்ன ஆகும்னு பயந்து பயந்து  வேடிக்கை பாப்பேன்.
வாட்டர் ஃபால்ஸ், ஃபாரஸ்ட், குரங்குனு சூப்பரா இருக்கும். ஹேர்பின் பெண்ட்ஸ்ல மட்டும் கண்ண மூடி கடவுள வேண்டிக்கிவேன். கைல எடுத்துட்டு போன ஸ்நாக்ஸ் பாதி சாப்பிட்டு பாதி கைல வெச்சு குரங்குக்கு போடுவேன்.  பார்லியார் வந்தாலே ஒரு சந்தோஷம்தான். போற வரைக்கும் எங்கயும் பஸ் நிக்காது, "என்ன வேணுமோ வாங்கிக்கோங்க"னு அப்பா குரல் கேட்டதும் போதும் நானும் அக்காவும் போட்டி போட்டு வாங்குவோம். அப்பா சூடா போண்டா, டீ வாங்கி தருவாரு.

அதுக்கு மேல நல்ல தூக்கம் போட்டு, அப்புறம் வரும் பாருங்க ஒரு சில்லு காத்து, பிரிட்ஜ் டோர் ஓபன் பண்ண மாதிரி! . குன்னூர் கிட்ட போறப்போ "எஸ்! ஊட்டிக்கு இன்னும் கொஞ்ச நேரத்துலனு துள்ளி குதிப்போம். ஹில்ஸ்னால ரொம்ப ஸ்லோவா ஓல்ட் இளையராஜா சாங்ஸ் போட்டு போகும். ஐயோ அந்த ஃபீல்!

வீடு வந்ததும் ஓடி போய் அம்மம்மா, அச்சச்சாவ பாத்து அவங்க ஹோட்டல்ல ஸ்பெஷலான ஒரு வெஜ் பப்ஸ் சூடா சாப்பிட்டாதான் நிம்மதியாவே இருக்கும்.போன உடனே சுட சுட வெச்ச சாதம், எங்க தோட்டத்துல விளைஞ்ச கேரட் போட்டு வெச்ச பருப்பு, கிழங்கு காய வெச்சு வறுத்த வத்தல்னு அந்த டேஸ்ட் எப்போவும் எச்சில் ஊறும். எங்க வருகைக்கு காத்திருக்குற எங்க பிரண்ட்ஸ்க்கு  குடுக்க கிண்ணத்துல பாட்டி போட்டு தர சிப்ஸ்ஸோட ஓடுவோம். சுத்தி உள்ள எஸ்டேட், தைல ஷெட், ஷூட்டிங் ஸ்பாட், ரோஸ் கார்டன்னு நாங்க பிரண்ட்ஸோட அலைஞ்சு திரியாத காடே இல்ல. நாள் போறதும் தெரியாது.

சந்தோஷத்தோட கடைசி நாட்கள். நாளைக்கு ஃபர்ஸ்ட் பஸ் பாலக்காட்டுக்கு. கண்ணுல கண்ணீர், கோவம், "நான் வரல"னு கத்தி பாட்டிய கட்டி புடிச்சு அழுதத நெனைக்குறப்போ அந்த காலத்துக்கு போயிடுவேன். அதே தூக்கம் இல்லாத ராத்திரி. விடியாம இருக்காதா? வயிறு வலின்னு சொல்லலாமா? பஸ் கேன்சல் ஆகாதா? அப்பா மனசு மாறி ஒரு நாள் கூட கிடக்காதானு நைட் ஃபுல்லா அழுதுட்டே போகும். பாட்டி "நல்லா படிக்கணும், நாங்க வரோம் ஊருக்கு, நெக்ஸ்ட் லீவ்க்கே தாத்தாவ அனுப்பி கூப்ட்டு வரேன்"னு எல்லாம் ஆறுதல் சொன்னாலும் கண்ணீர் நிக்காது. "பஸ்ல ஏதும் வாங்கி சாப்டுக்கோ"னு தாத்தா குடுக்குற 50 ரூபா, அதுக்கு மூல்யம் (மதிப்பு) அதிகம். போறப்போ ரசிச்ச எல்லா விஷயமும் பாக்காமலேயே தான் ரிட்டன் வருவேன்.

அடுத்த வருஷம் லீவ்க்கு போலாமேனு மனச தேத்தி ஸ்கூல் போக ரெடி ஆவேன். இன்னைக்கு எல்லாம் மாறி போச்சு. நான் நெனைச்சா தனியா இன்னைக்கு 3 ஹவர்ஸ்ல ஊட்டிக்கு போலாம், இருந்தும் போக தோணாதப்போ தான் புரிஞ்சது... நான் ஏங்குனது ஒரு பயணமோ சுற்றுலாவோ அல்ல, என் அம்மம்மா அச்சச்சாவோட அளவில்லா பாசத்துக்குனு. அதனாலதான் அவங்க இல்லாத அந்த வீட்டுக்கு போக என் மனம் விரும்பவில்லை.


84
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on February 19, 2026, 04:17:51 PM »

February 2026
#470   19.02.2026







- Socky
85
General Videos / Re: Mindset is everything!
« Last post by Ninja on February 19, 2026, 02:42:27 PM »
86
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on February 19, 2026, 09:17:40 AM »
87
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on February 19, 2026, 06:14:30 AM »
88
Happy happy birthday samyoooo
89
Wish You Many More Happy Returns Of The Day Aadhini Sis❤️🎂💐

90
 
   Wish you many more happy returns of day dear
Pages: 1 ... 7 8 [9] 10