81
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 390
« Last post by Agalya on December 08, 2025, 10:19:50 PM »அவனின் அவள்
எங்கிருந்து ஆரம்பித்தது
எப்படி இது பயணித்தது?
இப்பொழுது எங்கு வந்து
நிற்கிறது என்பது இன்றுவரை
நான் கண்டறிய முடியாத கேள்விக்குறியாக உள்ளது
ஆனால் என்னால் உணர முடிந்தது ஒன்றே ஒன்று தான்
நான் மேகமாய்
மிதந்து கொண்டிருக்கிறேன்
உன்னை பார்த்த அந்த
நொடியில் இருந்து
ஏன் ?எதற்கு ? எப்படி ?
ஒருவேளை என் தாயின்
கண்ணில் இருக்கும்
ஈர்ப்பு சக்தியைப்போல்
உன் கண் இருப்பதனாலா ?
அல்லது மற்றவர் போல் அல்லாமல்
உன் கண்கள் என்னிடம் பேசிய
அந்த ரகசிய மொழியினாலா ?
எதில் வீழ்ந்தேன் ?
எப்படி வீழ்ந்தேன் ? என்பதை
கண்டறிவதற்காக ஒவ்வொரு முறையும்
உன் கண்ணை பார்க்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் விழுகிறேன்.
மஸ்காரா ,ஐஷாடோ
ஐலைனர், லென்ஸ் இத்தனை
ஒப்பனைகள் செய்து கொள்ளும் பெண்களுக்கு மத்தியில்
கண்மய்யை மட்டும் பூசி
அந்த முட்ட கண்ணை
உருட்டி உருட்டி
வசீகரிக்கிறாயே...
திரைப்பட வசனங்களில்
"கண்கள் பேசும்"
என்ற வசனங்கள் வரும் போது எல்லாம்
கண்கள் எப்படி பேசும்- என்று
நினைத்த ஆசாமி தான் நான்.
ஆனால் இன்றோ
கண்கள் பேசும் மொழிக்கு
வல்லமை அதிகம் என்பதை
ஒவ்வொரு நொடியும்
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்..
என் கோபக்காரியே
உன் உதட்டில் இருந்து
எத்தனை கோபமான சொற்கள் வந்தாலும்
உன் கண்களில் தெரியும்
அன்பையும் காதலையும் பற்றி கொண்டு
தான் உன்னோடு வாழ்கிறேனடி..
உன் கண் அசைவுகளில் இருக்கும்
பேரன்பின் சமுத்திரத்தில்
விழுந்த நான் எழ முடியாமல்
மீண்டும் மீண்டும் ஆழம் செல்கிறேன்
உன் காதல் பார்வையில் இருக்கும்
முத்துக்களை தேடி
என் கண்ணழகியே!
எங்கிருந்து ஆரம்பித்தது
எப்படி இது பயணித்தது?
இப்பொழுது எங்கு வந்து
நிற்கிறது என்பது இன்றுவரை
நான் கண்டறிய முடியாத கேள்விக்குறியாக உள்ளது
ஆனால் என்னால் உணர முடிந்தது ஒன்றே ஒன்று தான்
நான் மேகமாய்
மிதந்து கொண்டிருக்கிறேன்
உன்னை பார்த்த அந்த
நொடியில் இருந்து
ஏன் ?எதற்கு ? எப்படி ?
ஒருவேளை என் தாயின்
கண்ணில் இருக்கும்
ஈர்ப்பு சக்தியைப்போல்
உன் கண் இருப்பதனாலா ?
அல்லது மற்றவர் போல் அல்லாமல்
உன் கண்கள் என்னிடம் பேசிய
அந்த ரகசிய மொழியினாலா ?
எதில் வீழ்ந்தேன் ?
எப்படி வீழ்ந்தேன் ? என்பதை
கண்டறிவதற்காக ஒவ்வொரு முறையும்
உன் கண்ணை பார்க்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் விழுகிறேன்.
மஸ்காரா ,ஐஷாடோ
ஐலைனர், லென்ஸ் இத்தனை
ஒப்பனைகள் செய்து கொள்ளும் பெண்களுக்கு மத்தியில்
கண்மய்யை மட்டும் பூசி
அந்த முட்ட கண்ணை
உருட்டி உருட்டி
வசீகரிக்கிறாயே...
திரைப்பட வசனங்களில்
"கண்கள் பேசும்"
என்ற வசனங்கள் வரும் போது எல்லாம்
கண்கள் எப்படி பேசும்- என்று
நினைத்த ஆசாமி தான் நான்.
ஆனால் இன்றோ
கண்கள் பேசும் மொழிக்கு
வல்லமை அதிகம் என்பதை
ஒவ்வொரு நொடியும்
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்..
என் கோபக்காரியே
உன் உதட்டில் இருந்து
எத்தனை கோபமான சொற்கள் வந்தாலும்
உன் கண்களில் தெரியும்
அன்பையும் காதலையும் பற்றி கொண்டு
தான் உன்னோடு வாழ்கிறேனடி..
உன் கண் அசைவுகளில் இருக்கும்
பேரன்பின் சமுத்திரத்தில்
விழுந்த நான் எழ முடியாமல்
மீண்டும் மீண்டும் ஆழம் செல்கிறேன்
உன் காதல் பார்வையில் இருக்கும்
முத்துக்களை தேடி
என் கண்ணழகியே!

Recent Posts

.jpg)

